Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1 நிகழ்கலை

Students can Download 10th Tamil Chapter 6.1 நிகழ்கலை Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 6.1 நிகழ்கலை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1. நிகழ்கலை

Question 1.
நீங்கள் அறிந்த நிகழ்கலைகளை தனியாகவோ குழுவாகவோ வகுப்பறையில் நிகழ்த்துக.
Answer:
(மாணவர் செயல்பாடு)

Question 2.
நீங்கள் வாழும் பகுதியிலுள்ள நிகழ்கலைக் கலைஞர்களை நேர்முகம் கண்டு, அவற்றைத் தொகுத்து வகுப்பறையில் படித்துக் காட்டுக.
Answer:
நிகழ்கலைக் கலைஞர்களிடம் நேர்காணலின் போது நான் கேட்ட சில வினாக்களுக்கு அவர்கள் அளித்த பதிலை நான் இப்போது உங்களுக்கு படித்துக் காட்டுகிறேன்.

கலைஞர்களே! இன்றைய காலக் கட்டத்தில் உங்களது கலைத்தொழில் எந்த அளவிற்கு சிறப்பாக உள்ளது என நான் கேட்ட போது அவர்கள் கூறிய செய்தியானது நாங்கள் மிகவும் தொழிலில் நலிவடைந்துள்ளோம். ஆகவே வறுமை நிலையில் இருக்கிறோம் என்றனர். எப்போதாவது இத்தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தை மட்டுமே நம்பினால் வாழ்க்கை. ஆகவே இத்தொழிலை விட்டு விட்டு வேறு தொழிலில் ஈடுபடலாம் என்று கருதுகிறோம் எனக் கூறினர்.

மேலும் இக்கலையை நிகழ்த்துவதற்கான ஆடை, ஆபரணங்களின் செலவும் அதிகமாக உள்ளது. அரசும் மக்களும் எங்கள் கலையை ஊக்குவித்து வாய்ப்பளித்தார்களேயானால் இக்கலையை அழியாமல் பாதுகாக்க முடியும் என்றார் மற்றொரு கலைஞர்.

இவ்வாறு வேதனையடையும் நிகழ்கலை கலைஞர்களின் கலையை ஆதரித்து, அவர்களுக்கும் வாய்ப்பளித்து அவர்களை வாழ வைப்போம். கலையைப் பாதுகாப்போம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1. நிகழ்கலை

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத்தொடர் எது?
அ) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்.
ஆ) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது.
இ) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது. ஈ) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்.
Answer:
இ) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது.

Question 2.
கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா எது?
அ) கரகாட்டம் என்றால் என்ன?
ஆ) கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்?
இ) கரகாட்டத்தின் வேறுவேறு வடிவங்கள் யாவை?
ஈ) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?
Answer:
ஈ) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1. நிகழ்கலை

குறுவினா

Question 1.
“நேற்று நான் பார்த்த அர்ச்சுனன் தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிழ்ந்தேன்!” என்று சேகர் என்னிடம் கூறினான். இக்கூற்றை அயற்கூற்றாக மாற்றுக.
Answer:
நேற்று நான் பார்த்த அர்ச்சுனன் தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனையும், சிறந்த நடிப்பையும், இனிய பாடல்களையும் நுகர்ந்து மகிழ்ந்ததாக சேகர் என்னிடம் கூறினான்.

சிறுவினா

Question 1.
படங்கள் வெளிப்படுத்தும் நிகழ்த்துகலை குறித்து இரண்டு வினாக்களையும் அவற்றுக்கான விடைகளையும் எழுதுக.
அ) காலில் சலங்கை அணிந்து ஆடும் நிகழ்கலை ஏதேனும் இரண்டு கூறுக. ஒயிலாட்டம், தேவராட்டம்.
ஆ) கரகாட்டம் என்றால் என்ன? கரகம் என்பது, பித்தளைச் செம்பையோ சிறிய குடத்தையோ தலையில் வைத்துத் தாளத்திற்கு ஏற்ப ஆடுதல் ஆகும்.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1. நிகழ்கலை - 2

நெடுவினா

Question 1.
நெகிழிப் பைகளின் தீமையைக் கூறும் பொம்மலாட்டம் உங்கள் பள்ளியின் ஆண்டு விழாவில் நிகழ்த்தப்படுகிறது. அதற்குப் பாராட்டுரை ஒன்றினை எழுதுக.
Answer:
பாராட்டுரை
இன்றைய நம் பள்ளியின் ஆண்டு விழாவிற்கு வருகைத் தந்து பொம்மலாட்ட நிகழ்ச்சியை நடத்தித் தந்த குழுவினருக்குப் பள்ளியின் சார்பாக வணக்கம்.

நெகிழியானது பயன்படுத்துவதற்கு எளிதாக இருந்தாலும், நம் மண்ணின் வளத்தைக் குன்றச் செய்து நிலத்தடி நீர் குறைவதை, மிக அழகாக பொம்மலாட்டம் மூலம் எடுத்துரைத்ததற்குப் பாராட்டுகள்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1. நிகழ்கலை

மழைநீர் பூமிக்குள் நுழைய விடாமல் தடுக்கும் நெகிழியைப் பற்றியும், மரங்களில் நெகிழிப் பைகள் சிக்குவதால் பாதிக்கும் ஒளிச்சேர்க்கையைப் பற்றியும் பாடல் வாயிலாக எடுத்துரைத்தீர்கள். மிகவும் அருமையாக இருந்தது. பாராட்டுகள்.
மட்காத நெகிழிகளை மழைநீர் அடித்துச் செல்வதால் நீர் மாசு அடைவதையும், நெகிழிப் பைகளில் தேநீர், குளிர்பானம் போன்ற உணவுப்பொருட்கள் வாங்குவதால் மனிதனுக்குப் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படுவதையும் பொம்மலாட்டம் மூலம் நிகழ்த்தினீர்கள். பாராட்டுகள்.

நெகிழிப் பைகளை எரிக்கும்போது ஏற்படும் நச்சு வாயு காற்றையும் மாசுபடுத்துவதைத் தங்களது இனிய குரலால் பாடி, எங்களைப் பரவசமடையச் செய்தீர்கள். பாராட்டுகள்.

நெகிழியைத் தவிர்த்தல் :
மேற்கண்ட தீமைகள் ஒழிந்திட நெகிழியைத் தவிர்ப்போம் என்ற உறுதிமொழியை நாம் அனைவரும் ஏற்போம்.
தமிழர்களின் மிகப்பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று பொம்மலாட்டம். இது பொழுதுபோக்குக் காட்சிக்கலை ஆகும். இது பொழுதுபோக்குக் காட்சியாக மட்டுமல்லாமல் கல்வியறிவு, மக்களிடையே காணப்படும் அறியாமையைப் பாடல் வழியாக போக்குவதற்கு நல்ல கலையாக விளங்குகிறது. குறைந்த நேரத்தில் அதிக செலவில்லாமல் இக்கலை வடிவம் வாயிலாக நம் பள்ளியின் ஆண்டு விழாவில் பொம்மலாட்ட நிகழ்ச்சியை நடத்திய கலைக்குழுவுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

நெகிழிப் பைகளால் ஏற்படும் தீமையைப் பொம்மலாட்டம் வாயிலாக நிகழ்த்தி எங்கள் நெஞ்சத்தை நெகிழச் செய்த அனைவருக்கும் வணக்கம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1. நிகழ்கலை

Question 2.
நிகழ்கலை வடிவங்கள் அவை நிகழும் இடங்கள் – அவற்றின் ஒப்பனைகள் – சிறப்பும் பழமையும் – இத்தகைய மக்கள் கலைகள் அருகி வருவதற்கான காரணங்கள் – அவற்றை வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன இவை குறித்து நாளிதழுக்கான தலையங்கம் எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1. நிகழ்கலை - 3
முன்னுரை:
ஆயக்கலைகள் 64 என்பர் சான்றோர். ஆனால் அவை இன்று நம்மிடையே பல்வேறு சூழலால் குறைந்து வருகின்றன.

நிகழ்கலையின் வடிவங்கள்:
பொதுவாக நிகழ்கலை, அவை நிகழும் இடங்கள் ஊரில் பொதுமக்கள் கூடும் இடம், கோயில் போன்ற இடங்களில் நடைபெறும். இவ்வகை கலைகள் பல்வேறு வழிகளில் ஆடல் பாடல்களோடு நடைபெறும். சான்றாக கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், தெருக்கூத்து போன்றன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1. நிகழ்கலை

ஒப்பனைகள் :

  • கரகாட்டம் – ஆண், பெண் வேடமிட்டு ஆடுதல்
  • மயிலாட்டம் – மயில் வடிவ கூண்டுக்குள் உடலை மறைத்தல்
  • ஒயிலாட்டம் – ஒரே நிறத்துணியை முண்டாசு போலக்கட்டுதல், காலில் சலங்கை, கையில் சிறுதுணி
  • தேவராட்டம் – வேட்டி, தலையிலும் இடுப்பிலும் சிறு துணி, எளிய ஒப்பனை.

சிறப்பும், பழைமையும் :
வாழ்வியல் நிகழ்வில் பிரிக்க முடியாத, மகிழ்ச்சி தருகின்ற, கவலையைப் போக்குகின்ற, போன்ற சிறப்புகளை நிகழ்கலை மூலம் அறிய முடிகிறது.
பொம்மலாட்டம், கையுறைப் பாவைக்கூத்து, தெருக்கூத்து போன்ற இக்கலைகள் எல்லாம் நம்முன்னோர் காலத்தில் இருந்த பழமை வாய்ந்த கலைகளாகும்.

குறைந்து வருவதற்கான காரணங்கள் :
நாகரிகத்தின் காரணமாகவும், கலைஞர்களுக்குப் போதிய வருமானம் இல்லாத காரணத்தாலும், திரைத்துறை வளர்ச்சியினாலும் இக்கலைகள் குறைந்து வருகின்றன.

வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன :
நம் இல்லங்களில் நடைபெறும் விழாக்களில் நல்ல வாழ்வியல் தொடர்பான நிகழ்கலைகளை நடத்தி, கலைகளையும், கலைஞரையும் பாராட்டுவோம். இப்பெரிய செயலில் ஊடகம் மற்றும் செய்தித்தாள் ஆகியவை முழுமையாக இணைத்துக் கொண்டால் நம் கலைகள் நிலைபெற்று நிற்கும்.

முடிவுரை:
நாமும் நிகழ்கலைகளைக் கற்று, கலைகளை அழியாமல் காப்போம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1. நிகழ்கலை

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சரியான விடை வரிசையைத் தேர்ந்தெடு.
i) கரகாட்டம் – 1. உறுமி எனப்படும் தேவதுந்துபி
ii) மயிலாட்டம் – 2. தோலால் கட்டப்பட்ட குடம், தவில் சிங்கி, டோலாக், தப்பு
iii) ஒயிலாட்டம் – 3. நையாண்டி மேளம்
iv) தேவராட்டம் – 4. நையாண்டி மேள இசை, நாகசுரம், தவில், பம்பை
அ) 4, 3, 2, 1
ஆ) 1, 2, 3, 4
இ) 3, 4, 1, 2
ஈ) 2, 1, 4, 3
Answer:
அ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1. நிகழ்கலை

Question 2.
பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
i) மயிலாட்டம் – 1. கரகாட்டத்தின் துணை ஆட்டம்
ii) ஒயிலாட்டம் – 2. கம்பீரத்துடன் ஆடுதல்
iii) புலியாட்டம் – 3. வேளாண்மை செய்வோரின் கலை
iv) தெருக்கூத்து – 4. தமிழரின் வீரத்தைச் சொல்லும் கலை
அ) 4, 1, 3, 2
ஆ) 3, 4, 2, 1
இ) 1, 2, 4, 3
ஈ) 4, 3, 1, 2
Answer:
இ) 1, 2, 4, 3

Question 3.
தேவராட்டத்தில் எத்தனை கலைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பது மரபு?
Answer:
அ) மூன்று முதல் பதின்மூன்று
ஆ) எட்டு முதல் பத்து
இ) பத்து முதல் பதின்மூன்று
ஈ) எட்டு முதல் பதின்மூன்று
Answer:
ஈ) எட்டு முதல் பதின்மூன்று

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1. நிகழ்கலை

Question 4.
சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாதக் கூறுகளாகத் திகழ்பவை யாவை?
அ) நிகழ்கலைகள்
ஆ) பெருங்கலைகள்
இ) அருங்கலைகள்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) நிகழ்கலைகள்

Question 5.
கரகாட்டத்தை வேறு எவ்வாறு அழைக்கலாம்?
அ) குட ஆட்டம்
ஆ) கும்பாட்டம்
இ) கொம்பாட்டம்
ஈ) செம்பாட்டம்
Answer:
ஆ) கும்பாட்டம்

Question 6.
கரகாட்டத்திற்கு இசைக்கப்படும் இசைக்கருவிகள் …………………..
i) நையாண்டி மேள இசை
ii) நாகசுரம்
iii) தவில்
iv) பம்பை
அ) i, ii – சரி
ஆ) i, ii, iii – சரி
இ) நான்கும் சரி
ஈ) iii – சரி
Answer:
இ) நான்கும் சரி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1. நிகழ்கலை

Question 7.
கரகாட்டம் நிகழ்த்துதலில் எத்தனை பேர் நிகழ்த்த வேண்டும்?
அ) 12
ஆ) 2
இ) 24
ஈ) வரையறை இல்லை
Answer:
ஈ) வரையறை இல்லை

Question 8.
“நீரற வறியாக் கரகத்து” என்ற பாடலடியில் கரகம் என்ற சொல் இடம்பெறும் நூல் ……………………
அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) கலித்தொகை
ஈ) நற்றிணை
Answer:
ஆ) புறநானூறு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1. நிகழ்கலை

Question 9.
சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய…………………. வகை ஆடல்களில் ‘குடக்கூத்து’ என்ற ஆடலும் குறிப்பிடப்படுகிறது.
அ) பத்து
ஆ) பதினொரு
இ) ஏழு
ஈ) எண்
Answer:
ஆ) பதினொரு

Question 10.
குடக்கூத்து என்பது, …………………………
அ) மயிலாட்டம்
ஆ) கரகாட்டம்
இ) பொம்மலாட்டம்
ஈ) ஒயிலாட்டம்
Answer:
ஆ) கரகாட்டம்

Question 11.
கரகாட்டத்தின் துணையாட்டம் …………………….
அ) மயிலாட்டம்
ஆ) ஒயிலாட்டம்
இ) காவடியாட்டம்
ஈ) தேவராட்டம்
Answer:
அ) மயிலாட்டம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1. நிகழ்கலை

Question 12.
காவடியாட்டம் – இச்சொல்லில் ‘கா’ என்பதன் பொருள் …………………
அ) சோலை
ஆ) பாரந்தாங்கும் கோல்
இ) கால்
ஈ) காவல்
Answer:
ஆ) பாரந்தாங்கும் கோல்

Question 13.
இருமுனைகளிலும் சம எடைகளைக் கட்டிய தண்டினைத் தோளில் சுமந்து ஆடுவது…………….
அ) கரகாட்டம்
ஆ) மயிலாட்டம்
இ) காவடியாட்டம்
ஈ) ஒயிலாட்டம்
Answer:
இ) காவடியாட்டம்

Question 14.
மச்சக்காவடி, சர்ப்பக்காவடி, பூக்காவடி, தேர்க்காவடி, பறவைக்காவடி என்று எதன் அடிப்படையில் அழைக்கின்றனர்?
அ) அமைப்பு
ஆ) நிறம்
இ) அழகு
ஈ) வடிவம்
Answer:
அ) அமைப்பு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1. நிகழ்கலை

Question 15.
இலங்கை, மலேசியா உள்ளிட்ட புலம்பெயர் தமிழர் வாழும் பிற நாடுகளிலும் ஆடப்படுவது…………….
அ) கரகாட்டம்
ஆ) மயிலாட்டம்
இ) ஒயிலாட்டம்
ஈ) காவடியாட்டம்
Answer:
ஈ) காவடியாட்டம்

Question 16.
ஒயிலாட்டம் ஆடுவோரின் வரிசை எண்ணிக்கை …………………
அ) இரண்டு
ஆ) நான்கு
இ) ஆறு
ஈ) எட்டு
Answer:
அ) இரண்டு

Question 17.
தேவராட்டம் என்பது யார் மட்டுமே ஆடும் ஆட்டம்?
அ) ஆண்கள்
ஆ) பெண்கள்
இ) சிறுவர்கள்
ஈ) முதியவர்கள்
Answer:
அ) ஆண்கள்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1. நிகழ்கலை

Question 18.
தேவராட்டம், ………. ஆடிய ஆட்டம் எனப் பொருள் கொள்ளப்படுகிறது.
அ) வானத்துத் தேவர்கள்
ஆ) விறலியர்
இ) பாணர்கள்
ஈ) அரசர்கள்
Answer:
அ) வானத்துத் தேவர்கள்

Question 19.
உறுமி எனப் பொதுவாக அழைக்கப்படுவது…………….
அ) தேவதுந்துபி
ஆ) சிங்கி
இ) டோலக்
ஈ) தப்பு
Answer:
அ) தேவதுந்துபி

Question 20.
தேவதுந்துபி என்னும் இசைக்கருவி பயன்படுத்தும் ஆட்ட வகை ………………………
அ) கரகாட்டம்
ஆ) மயிலாட்டம்
இ) தேவராட்டம்
ஈ) சேவையாட்டம்
Answer:
இ) தேவராட்டம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1. நிகழ்கலை

Question 21.
தேவராட்டம் எவ்வகை நிகழ்வாக ஆடப்படுகின்றது?
அ) அழகியல்
ஆ) நடப்பியல்
இ) சடங்கியல்
ஈ) வாழ்வியல்
Answer:
இ) சடங்கியல்

Question 22.
தேவராட்டம் போன்றே ஆடப்பட்டு வருகின்ற கலை…………………………..
அ) மயிலாட்டம்
ஆ) காவடியாட்டம்
இ) சேவையாட்டம்
ஈ) ஒயிலாட்டம்
Answer:
இ) சேவையாட்டம்

Question 23.
சேவையாட்டக் கலைஞர்கள் இசைத்துக்கொண்டே ஆடும் இசைக்கருவிகளைக் கண்டறிக.
i) சேவைப்பலகை
ii) சேமக்கலம்
iii) ஜால்ரா
அ) i, ii – சரி
ஆ) ii, iii – சரி
இ) i, iii – சரி
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1. நிகழ்கலை

Question 24.
எந்தப் பண்புகளைக் கொண்டு நிகழ்த்திக்காட்டும் கலை பொய்க்கால் குதிரையாட்டம் ஆகும்?
அ) போலச் செய்தல்
ஆ) இருப்பதைச் செய்தல்
இ) மெய்யியல்
ஈ) நடப்பியல்
Answer:
அ) போலச் செய்தல்

Question 25.
புரவி ஆட்டம், புரவி நாட்டியம் என்ற பெயர்களில் அழைக்கப்படும் ஆட்டம்?
அ) மயிலாட்டம்
ஆ) ஒயிலாட்டம்
இ) பொய்க்கால் குதிரையாட்டம்
ஈ) காவடியாட்டம்
Answer:
இ) பொய்க்கால் குதிரையாட்டம்

Question 26.
பொய்க்கால் குதிரையாட்டம் யாருடைய காலத்தில் தஞ்சைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது?
அ) சோழர்
ஆ) நாயக்கர்
இ) மராட்டியர்
ஈ) ஆங்கிலேயர்
Answer:
இ) மராட்டியர்

Question 27.
இராஜஸ்தானில் கச்சிகொடி என்றும் கேரளத்தில் குதிரைக்களி என்றும் அழைக்கப்படுவது?
அ) காவடியாட்டம்
ஆ) மயிலாட்டம்
இ) ஒயிலாட்டம்
ஈ) பொய்க்கால் குதிரையாட்டம்
Answer:
ஈ) பொய்க்கால் குதிரையாட்டம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1. நிகழ்கலை

Question 28.
பாடல்கள் பயன்படுத்தாத ஆட்ட வகை……………….
அ) கரகம்
ஆ) பொய்க்கால் குதிரை
இ) காவடி
ஈ) மயில்
Answer:
ஆ) பொய்க்கால் குதிரை

Question 29.
பொய்க்கால் குதிரையாட்டத்திற்கு இசைக்கப்படும் இசைக்கருவிகளைக் கண்டறிக.
i) நையாண்டி மேளம்
ii) நாகசுரம்
iii) தவில்
iv) டோலக்
அ) i, ii – சரி
ஆ) iii, iv – சரி
இ) iii – மட்டும் தவறு
ஈ) நான்கும் சரி
Answer:
அ) i, ii – சரி

Question 30.
தப்பு என்பது……………….
அ) தோற்கருவி
ஆ) துளைக்கருவி
இ) நரம்புக்கருவி
ஈ) தொழிற்கருவி
Answer:
அ) தோற்கருவி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1. நிகழ்கலை

Question 31.
“தகக தகதகக தந்தத்த தந்தக்க
என்று தாளம்
பதலை திமிலைதுடி தம்பட்ட மும் பெருக”
– என்ற தப்பாட்ட இசை குறித்துப் பதிவு செய்யும் நூலாசிரியர், நூல்?
அ) அண்ணாமலையார், காவடிச்சிந்து
ஆ) அருணகிரிநாதர், திருப்புகழ்
இ) திருநாவுக்கரசர், தேவாரம்
ஈ) இளங்கோவடிகள், சிலப்பதிகாரம்
Answer:
ஆ) அருணகிரிநாதர், திருப்புகழ்

Question 32.
பறை என்று அழைக்கப்படும் ஆட்டம்……………….
அ) தப்பாட்டம்
ஆ) மயிலாட்டம்
இ) ஒயிலாட்டம்
ஈ) கரகாட்டம்
Answer:
அ) தப்பாட்டம்

Question 33.
……………….குறிப்பிடும் கருப்பொருள்களில் ஒன்றாகப் பறை இடம் பெறுகிறது.
அ) அகத்தியம்
ஆ) தொல்காப்பியம்
இ) நன்னூல்
ஈ) யாப்பருங்கலம்
Answer:
ஆ) தொல்காப்பியம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1. நிகழ்கலை

Question 34.
சொல்லுவது போன்றே இசைக்கவல்ல தாளக் கருவி……………….
அ) பறை
ஆ) தவில்
இ) டோலக்
ஈ) உறுமி
Answer:
அ) பறை

Question 35.
தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது………………..
அ) கரகாட்டம்
ஆ) காவடியாட்டம்
இ) புலி ஆட்டம்
ஈ) ஒயிலாட்டம்
Answer:
இ) புலி ஆட்டம்

Question 36.
……………….தெருக்கூத்து அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாகவும் இருக்கிறது.
அ) காளி
ஆ) மாரி
இ) சர்க்கை
ஈ) திரௌபதி
Answer:
ஈ) திரௌபதி

Question 37.
நிகழ்த்தப்பட்ட இடத்தை அடிப்படையாகக் கொண்ட கலை……………….
அ) புலி ஆட்டம்
ஆ) காவடியாட்டம்
இ) தெருக்கூத்து
ஈ) குடக்கூத்து
Answer:
இ) தெருக்கூத்து

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1. நிகழ்கலை

Question 38.
களத்துமேடுகளில் நிகழ்த்தப்பட்டது எது?
அ) புலி ஆட்டம்
ஆ) காவடியாட்டம்
இ) குடக்கூத்து
ஈ) தெருக்கூத்து
Answer:
ஈ) தெருக்கூத்து

Question 39.
தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்……………….
அ) ந. முத்துசாமி
ஆ) பேரா. லூர்து
இ) வானமாமலை
ஈ) அ.கி. பரந்தாமனார்
Answer:
அ) ந. முத்துசாமி

Question 40.
நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள் என்றவர்……………….
அ) ந. முத்துசாமி
ஆ) சங்கரதாசு சுவாமிகள்
இ) பரிதிமாற்கலைஞர்
ஈ) தி.வை. நடராசன்
Answer:
அ) ந. முத்துசாமி

Question 41.
கலைஞாயிறு என்று அழைக்கப்பட்டவர்……………….
அ) தேவநேயப் பாவாணர்
ஆ) ந. முத்துசாமி
இ) தியாகராஜ பாகவதர்
ஈ) எம்.எஸ். சுப்புலட்சுமி
Answer:
ஆ) ந. முத்துசாமி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1. நிகழ்கலை

Question 42.
கூத்துப்பட்டறை ந. முத்துசாமிக்கு இந்திய அரசு வழங்கிய விருது……………….
அ) பத்ம ஸ்ரீ
ஆ) அர்ஜூனா
இ) பத்மபூஷண்
ஈ) பாரத ரத்னா
Answer:
அ) பத்ம ஸ்ரீ

Question 43.
தமிழ்நாடு அரசு ந. முத்துசாமிக்கு வழங்கிய விருது……………….
அ) கலைமாமணி
ஆ) நாடகமாமணி
இ) வ.உ.சி. விருது
ஈ) கம்பன் விருது
Answer:
அ) கலைமாமணி

Question 44.
வேளாண்மை செய்வோரின் கலையாக இருந்து வருவது……………….
அ) காவடியாட்டம்
ஆ) புலி ஆட்டம்
இ) தேவராட்டம்
ஈ) தெருக்கூத்து
Answer:
ஈ) தெருக்கூத்து

Question 45.
அர்ச்சுனன் தபசு எனப்படுவது……………….
அ) பொருள் வேண்டி நிகழ்த்தப்படுவது
ஆ) மழை வேண்டி நிகழ்த்தப்படுவது
இ) அருள் வேண்டி நிகழ்த்தப்படுவது
ஈ) அமைதி வேண்டி நிகழ்த்தப்படுவது
Answer:
ஆ) மழை வேண்டி நிகழ்த்தப்படுவது

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1. நிகழ்கலை

Question 46.
கதகளி போன்று செவ்வியல் கலையாக ஆக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் கலை
அ) மயிலாட்டம்
ஆ) ஒயிலாட்டம்
இ) தெருக்கூத்து
ஈ) குடக்கூத்து
Answer:
இ) தெருக்கூத்து

Question 47.
தமிழ் இலக்கியங்களில் பாவைக் குறித்த செய்திகள் காணப்படும் கால எல்லை
அ) சங்ககாலம், பதினெட்டாம் நூற்றாண்டு
ஆ) சங்கம் மருவிய காலம், பதினேழாம் நூற்றாண்டு
இ) காப்பியக்காலம், பதினாறாம் நூற்றாண்டு
ஈ) சங்ககாலம், பதினைந்தாம் நூற்றாண்டு
Answer:
அ) சங்ககாலம், பதினெட்டாம் நூற்றாண்டு

Question 48.
மரப்பாவையைப் பற்றிக் குறிப்பிடும் நூல்……………….
அ) திருக்குறள்
ஆ) நாலடியார்
இ) அகநானூறு
ஈ) புறநானூறு
Answer:
அ) திருக்குறள்

Question 49.
தோற்பாவைக் கூத்து பற்றிய செய்திகளைக் குறிப்பிடுவன……………….
i) திருவாசகம்
ii) பட்டினத்தார் பாடல்கள்
அ) i – சரி
ஆ) ii – சரி
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
Answer:
இ) இரண்டும் சரி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1. நிகழ்கலை

Question 50.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் புகழ்மிக்க மையப் பகுதியில் காணப்படும் தெருவின் பெயர்……………….
அ) இராச சோழன் தெரு
ஆ) வன்னி தெரு
இ) ராசேந்திர சோழன் தெரு
ஈ) கம்பன் தெரு
Answer:
அ) இராச சோழன் தெரு

Question 51.
மலேசியாவில் “இராச சோழன் தெரு” உள்ளதைப் பற்றிக் குறிப்பிடும் மலர்……………….
அ) முதலாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்
ஆ) இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்
இ) நான்காம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்
ஈ) ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்
Answer:
ஈ) ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்

குறுவினா

Question 1.
நிகழ்கலை என்றால் என்ன?
Answer:
சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாக் கூறுகளாகத் திகழ்பவை |நிகழ்கலைகள்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1. நிகழ்கலை

Question 2.
இலக்கியத்தில் கரகத்தின் பங்கு யாது?
Answer:
புறநானூறு : ‘
நீரற வறியாக் கரகத்து’ என்னும் புறநானூற்றுப் பாடலடியில் கரகம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

சிலப்பதிகாரம் :
மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களில் ஒன்று ‘குடக்கூத்து’ எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1. நிகழ்கலை

Question 3.
தமிழகத்தில் கரகாட்டம் நிகழ்த்தப்படும் மாவட்டங்கள் யாவை?
Answer:

  • திருநெல்வேலி
  • திண்டுக்கல்
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • திருச்சி
  • கோயம்புத்தூர்

Question 4.
மயிலாட்டம் என்றால் என்ன?
Answer:

  • மயில் வடிவுள்ள கூட்டுக்குள் ஒருவர் தன் உருவத்தை மறைத்துக் கொண்டு நையாண்டி மேளத்திற்கு ஏற்ப ஆடும் ஆட்டமே மயிலாட்டம்.
  • கரகாட்டத்தின் துணையாட்டம் மயிலாட்டமே.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1. நிகழ்கலை

Question 5.
மயிலாட்டத்தில் பின்பற்றப்படும் அசைவுகள் யாவை?
Answer:

  • ஊர்ந்து ஆடுதல்
  • தாவியாடுதல்
  • மிதந்து ஆடுதல்
  • இருபுறமும் சுற்றியாடுதல்
  • இறகை விரித்தாடுதல்
  • அகவுதல்
  • தலையைச் சாய்த்தாடுதல்
  • தண்ணீர் குடித்துக் கொண்டே ஆடுதல்

Question 6.
காவடியாட்டம் என்றால் என்ன?
Answer:

  • ‘கா’ என்பதன் பொருள் பாரந்தாங்கும் கோல்.
  • இருமுனைகளிலும் சம எடைகளைக்கட்டிய தண்டினைத் தோளில் சுமந்து ஆடுவது காவடியாட்டம்.

Question 7.
காவடியின் அமைப்புக்கேற்ப அவை எந்தெந்தப் பெயர்களில் அழைக்கப்படுகின்றன?
Answer:

  • மச்சக்காவடி
  • தேர்க்காவடி
  • சர்ப்பக்காவடி
  • பறவைக்காவடி
  • பூக்காவடி

Question 8.
காவடியாட்டம் ஆடப்படும் நாடுகள் எவை?
Answer:
இலங்கை , மலேசியா உட்பட தமிழர் வாழும் பிற நாடுகள்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1. நிகழ்கலை

Question 9.
ஒயிலாட்டம் என்றால் என்ன?
Answer:

  • ஒரே நிறத்துணியை முண்டாசு போலக் கட்டுதல்.
  • காலில் சலங்கையை அணிதல்.
  • சிறு துணியை இசைக்கேற்ப வீசி ஒயிலாக ஆடும் குழு ஆட்டம்.
  • கம்பீரத்துடன் ஆடுதல் தனிச்சிறப்புடையது.

Question 10.
ஒயிலாட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் இசைக் கருவிகள் யாவை?
Answer:
தவில், தப்பு, சிங்கி, தோலால் கட்டப்பட்ட குடம், டோலக்

Question 11.
தேவராட்டம் என்றால் என்ன?
Answer:

  • வானத்துத் தேவர்கள் ஆடிய ஆட்டம் எனப் பொருள் கொள்ளப்படுகிறது.
  • இது ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டம்.

Question 12.
தேவராட்டத்திற்குரிய இசைக்கருவி குறித்து எழுதுக.
Answer:

  • தேவராட்டத்திற்குரிய இசைக்கருவி தேவதுந்துபி.
  • இதன் பொதுவான பெயர் உறுமி.

Question 13.
தேவராட்டத்திற்குரிய உடை மற்றும் அலங்காரம் குறித்து எழுதுக.
Answer:
உடை :

  • இடையிலும் தலையிலும் சிறுதுணி கட்டுவர்.
  • வேட்டி அணிந்திருப்பர்.

அலங்காரம் :

  • கால்களில் சலங்கை அணிவர்.
  • எளிய ஒப்பனை செய்து கொள்வர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1. நிகழ்கலை

Question 14.
சேவையாட்டம் என்றால் என்ன?
Answer:
தேவராட்டம் போன்றே ஆடப்பட்டு வருகின்ற கலை சேவையாட்டம்.

இசைக்கருவிகள் :

  • சேவைப்பலகை, சேமக்கலம், ஜால்ரா.
  • இசைச்சார்பு கலையாகவும், வழிபாட்டுக் கலையாகவும் உள்ளது.

Question 15.
பொய்க்கால் குதிரையாட்டத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் யாவை?
Answer:

  • புரவி ஆட்டம்
  • கச்சி கொடி (இராஜஸ்தான்)
  • புரவி நாட்டியம்
  • குதிரைக்களி (கேரளா)

Question 16.
தப்பாட்டம் என்றால் என்ன? அதற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் யாவை?
Answer:
தப்பு :
தப்பு என்ற தோற்கருவியை இசைத்துக் கொண்டே, அதன் இசைக்கேற்ப ஆடும் ஆட்டமே தப்பாட்டம்.

வேறு பெயர்கள் :

  • தப்பாட்டம், தப்பு, தப்பட்டை, பறை.
  • ‘தப் தப்’ என ஒலிப்பதால் தப்பாட்டம் எனப் பெயர் பெற்றது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1. நிகழ்கலை

Question 17.
தப்பாட்டம் நிகழ்த்தப்படும் இடங்களைக் கூறுக.
Answer:

  • கோவில் திருவிழா
  • விளம்பர நிகழ்ச்சி
  • திருமண விழா
  • விழிப்புணர்வு முகாம்
  • இறப்பு

Question 18.
‘பறை’ குறிப்பு வரைக.
Answer:

  • பறை – தமிழிசைக் கருவி.
  • பறை என்பதற்குப் பேசு என்பது பொருள்.
  • பேசுவதை இசைக்கப்படும் தாளக்கருவி பறை.

கருப்பொருள் :
தொல்காப்பியர் குறிப்பிடும் கருப்பொருள்களில் ஒன்று பறை.

Question 19.
தப்பாட்டத்திற்குரிய ஆட்டக் கூறுகள் யாவை?
Answer:

  • வட்டமாக ஆடுதல்
  • உட்கார்ந்து எழுதல்
  • குதித்துக் குதித்து ஆடுதல்
  • நடையாட்டம்
  • இரண்டு வரிசையாக எதிர் எதிர் திசையில் நின்று ஆடுதல்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1. நிகழ்கலை

Question 20.
புலியாட்டம் என்றால் என்ன?
Answer:

  • தமிழரின் வீரத்தை சொல்லும் கலையாகத் திகழ்வது புலியாட்டம்.
  • பாட்டும் வசனமும் இல்லாத ஆட்டங்களில் ஒன்று.
  • புலியைப் போன்று கறுப்பும் மஞ்சளுமான வண்ணக் கோடுகளையிட்டுத் துணியால் ஆன வாலை இடுப்பில் கட்டி ஆடுவர்.

Question 21.
புலியாட்டத்திற்குரிய அசைவுகளைக் கூறுக.
Answer:

  • புலியைப் போல நடத்தல்
  • எம்பிக் குதித்தல்
  • பதுங்குதல்
  • நாக்கால் வருடுதல்
  • பாய்தல்
  • பற்கள் தெரிய வாயைப் பிளந்து உறுமுதல்.

Question 22.
தெருக்கூத்து – குறிப்பு வரைக.
Answer:
ஆடுகளம் :
திறந்த வெளியை ஆடுகளமாக்கி ஆடை, அணி ஒப்பனையுடன் தெருச்சந்திப்புகளிலும் களத்து மேடுகளிலும் நடத்தப்படும் நடனம்.

ஒருங்கிணைப்பு :
இசை, வசனம், ஆடல், பாடல், மெய்ப்பாடுகளுடன் கதையை ஒருங்கிணைத்து வழங்குவர்.

Question 23.
கூத்துப்பட்டறை ந. முத்துசாமி பெற்ற விருதுகள் யாவை?
Answer:

  • இந்திய அரசின் தாமரைத்திரு விருது. (பத்மஸ்ரீ)
  • தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1. நிகழ்கலை

Question 24.
‘அருச்சுனன் தபசு’ – குறிப்பு வரைக.
Answer:
மழை வேண்டி நிகழ்த்தப்படும் தெருக்கூத்தை அருச்சுனன் தபசு என்பர்.

Question 25.
தோற்பாவைக் கூத்து என்றால் என்ன?
Answer:

  • தோலால் ஆன பாவையைக் கொண்டு நிகழ்த்தும் கலையாதலால் தோற்பாவை எனப் பெயர் பெற்றது.
  • தோலில் செய்த வெட்டு வரைபடங்களை விளக்கின் ஒளி ஊடுருவும் திரைச்சீலையில் பொருத்துவர்.
  • கதைக்கேற்ப மேலும் கீழும், பக்கவாட்டிலும் அசைத்துக் காட்டி உரையாடியும் பாடியும் காட்டுவது தோற்பாவைக் கூத்து.

Question 26.
தோற்பாவைக் கூத்து எவ்வடிவில் மாற்றம் பெற்றுள்ளது?
Answer:
கையுறைப் பாவைக்கூத்து, பொம்மலாட்டம்.

Question 27.
கரகாட்டத்தில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள் யாவை?
Answer:
நையாண்டி மேளம், தவில், நாகசுரம், பம்பை.

Question 28.
கரகாட்டத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் யாவை?
Answer:
கரகம், கும்பாட்டம், குடக்கூத்து.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1. நிகழ்கலை

சிறுவினா

Question 1.
பொய்க்கால் குதிரையாட்டம் என்னும் நிகழ்கலை குறித்து நீங்கள் அறிந்தவற்றை எழுதுக.
Answer:

  • “போலச் செய்தல்” பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக் காட்டும் கலைகளில் பொய்க்கால் குதிரையாட்டமும் ஒன்று.
  • மரத்தாலான பொய்க்காலில் நின்றுகொண்டும் குதிரைவடிவுள்ள கூட்டை உடம்பில் சுமந்துகொண்டும் ஆடும் ஆட்டமே பொய்க்கால் குதிரையாட்டம்.
  • அரசன், அரசி வேடமிட்டு ஆடப்படும் இவ்வாட்டம், ‘புரவி ஆட்டம்’, ‘புரவி நாட்டியம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
  • இவ்வாட்டம் இராஜஸ்தானில், ‘கச்சிக்கொடி’ என்றும் கேரளத்தில், ‘குதிரைக்களி’ என்றும் அழைக்கப்படுகிறது.

Question 2.
கூத்துப்பட்டறை ந. முத்துசாமி குறித்தெழுதுக.
Answer:

  •  தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர் தான் கூத்துப்பட்டறை ந.முத்துசாமி.
  • “நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்” என்றார்.
  • இவர் தமிழ்நாட்டின் வழிவழி நாடகமுறையான கூத்துக்கலையின் ஒப்பனை முறை, கதை சொல்லும் முறைகளையும் எடுத்துகொண்டு புதுவிதமான நாடகங்களை உருவாக்கினார்.
  • நாடகத்தில் பயன்படுத்தும் நேரடி இசைமுறையை அறிமுகம் செய்து இசையிலும் மாற்றங்களை நிகழ்த்தினார்.
  • இவரின் நாடகங்கள் பெரும் சமூக அரசியல் மாற்றங்களைப் பேசின.
    இவர் இந்திய அரசின் தாமரைத்திரு விருதையும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். நெடுவினா

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1. நிகழ்கலை

Question 1.
மூன்று நிகழ்கலை கலைஞர்களை நேர்முகம் கண்டு அவர்களது கருத்துகளையும் அவர்களது மறுவாழ்விற்கான வழிமுறைகளாக நீங்கள் கருதுவனவற்றையும் குறிப்பிட்டு எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1. நிகழ்கலை - 1
அறிமுகம்:
நிகழ்கலை கலைஞர்களில் கரகாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் ஆகியவற்றை நிகழ்த்திக்காட்டும் கலைஞர்களை நேரில் கண்டு, அவர்களின் வாழ்வியல் சூழல்களையும், கலை நிலையையும் குறித்துக் கேட்டறிந்தேன்.

கலைகள்:
நாட்டார் வழக்காறுகளை ஆழமாக ஆய்வு செய்த நா.வானமாமலை கூற்றுப்படி, தமிழ்நாட்டில் ஏறக்குறைய 1,026 கலைகள் இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் அவை இன்றைக்கு ஒவ்வொன்றாக மறைந்து வருவதோடு, எளிதில் எண்ணிவிடக் கூடிய அளவில் குறைந்துவிட்டதையும் அறிய முடிகிறது.

பெரியசவால்:
நிகழ்கலை கலைஞர்கள் சிறுசிறு குழுக்களாக ஒருங்கிணைக்கப்படாமல் எல்லா மாவட்டங்களிலும் இருக்கிறார்கள் என்பதையும், எப்போதாவது கிடைக்கின்ற வாய்ப்பினைப் பயன்படுத்தி நிகழ்கலைகளை நிகழ்த்தினாலும், அதனால் வாழ்வை நடத்துவதற்குப் போதுமான வருமானம் கிட்டுவதில்லை. இதனால் வறுமையில் சிக்கியுள்ள பெரும்பாலான கலைஞர்களை வேறுபணிகளை நாடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தொலைக்காட்சி மற்றும் நவீன மின்னணு ஊடகங்கள் கோலோச்சுகின்ற இக்காலக்கட்டத்தில் நாட்டுப்புறக்கலைகளும், அவற்றை நிகழ்த்துகின்ற கலைஞர்களும் பெரிய சவால்களை எதிர்காக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1. நிகழ்கலை

காப்பாற்றுதல்:
நிகழ்கலைகளை நிகழ்த்துவதற்கான ஆடை, ஆபரணங்கள் செலவும் அதிகமாக உள்ளது. அரசும் மக்களும் தங்கள் கலைகளை ஊக்குவித்து, வாய்ப்பளித்து, வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதமாய் உதவினால் மட்டுமே கலைகளையும், கலைஞர்களையும் காப்பாற்ற முடியும் என்பது அம்மூன்று கலைஞர்களின் ஒருமித்த குரலில் வெளிப்பட்டது.

அரசின் உதவி:
தமிழகமெங்கும் உள்ள கலைஞர்களை ஒவ்வொரு கலையின் அடிப்படையிலும் ஆவணப்படுத்தி அவர்களுக்கு முறையான அங்கீகாரம் வழங்குவது மிகவும் தேவையான ஒன்றாகும். நிகழ்கலைகளை மீட்டுருவாக்கம் செய்கின்ற வகையில், கிராமம் கிராமமாகத் தேடிச் சென்று கலைகள் பற்றிய தகவல்களைச் சேகரித்து ஆவணப்படுத்த வேண்டும். கலைக்குழுக்களை அரசுத்துறையில் முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும். எல்லாக் கலைஞர்களுக்கம் அடையாள அட்டை வழங்கி ஊக்குவிப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

செய்ய வேண்டுவது:
நிகழ்கலைகளை ஆவணப்படுத்துவதற்கும், கலைகள் குறித்த வகுப்புகள், கருத்தரங்குகள், விவாதங்கள், உரையாடல் நடத்தவும் நிகழ்கலைகளுக்கான தனிப்பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு, நிகழ்கலைகளுக்கான கலைஞர்கள் உருவாக்கப்பட வேண்டும்.

அரசின் சார்பில் நிகழ்கலைகளுக்கென்று தனிவிழாக்கள் நடத்தப்பட வேண்டும். பள்ளி, கல்லூ ரிகளிலும் நிகழ்கலைகளை நடத்திட வேண்டும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.1. நிகழ்கலை

நிறைவு:
தமிழரின் பண்பாட்டு அடையாளங்களாக விளங்கும் நிகழ்கலைகளையும், கலைஞர்களையும் ஆதரித்துக் காக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழனுக்கும் உரியது என்பது திண்ணம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Students can Download 10th Tamil Chapter 3.1 விருந்து போற்றுதும்! Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 3.1 விருந்து போற்றுதும்!

கற்பவை கற்றபின்

Question 1.
வீட்டில் திண்ணை அமைத்த காரணம், விருந்தினர் பேணுதல், தமிழர் பண்பாட்டில் ஈகை, பசித்தவர்க்கு உணவிடல் இவை போன்ற செயல்கள் குறித்து உங்கள் வீட்டிலுள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து வந்து கலந்துரையாடல் செய்க.
Answer:
அமுதன் : வீட்டில் திண்ணை அமைத்ததற்கான காரணம் என்ன என்று கேட்டு வந்தாயா?
மதி : கேட்டேன். வழிப்போக்கர்கள் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர் என்று அப்பா கூறினார்.
அமுதன் : விருந்தினர் பேணல் குறித்து உன் வீட்டார் உனக்கு கூறிய செய்தி யாது?
மதி : வணக்கம் கூறி வரவேற்றல், அமர வைத்தல், தண்ணீர் கொடுத்தல், உணவு உண்ணச்செய்தல் ஆகியவையே விருந்தினர் பேணும் முறையாகும் என்றனர்.
அமுதன் : ஈகை என்றால் என்ன என்பது பற்றி கேட்டாயா?
மதி : தமிழர் பண்பாட்டில் ஈகை குறித்தும் இலக்கியங்கள் கூறுகின்றன. பாரி என்ற குறுநில
மன்னன் முல்லைக்குத் தேர் கொடுத்ததாகவும் பேகன் என்பவன் மயிலுக்குப் போர்வை கொடுத்தான் என்பதையும் நாம் பாடநூலில் படித்திருக்கிறோம் அல்லவா? அதுதான் ஈகை என்றனர்.
அமுதன் : ‘பசித்தவர்க்கு உணவிடல்’ குறித்து உன் பெற்றோர் கூறிய செய்திகளை எனக்கும் கூறு.
மதி : “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்கிறது இலக்கியம். பசித்துயரால் வாடுபவருக்கு உணவளிப்பது அவருக்கு புத்துயிர் வந்தது போன்றிருக்கும் என்று அம்மா கூறினார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Question 2.
“இட்டதோர் தாமரைப்பூ
இதழ்விரித் திருத்தல் போலே
வட்டமாய்ப் புறாக்கள் கூடி
இரையுண்ணும் ………………” –

பாரதிதாசனார் இவ்வாறாகக் கவிதைகளில் பதிவு செய்யப்பட்டுள்ள பகிர்ந்துண்ணல் குறித்துப் பேசுக.
Answer:
வணக்கம்.
கிடைத்த இரையைப் பகிர்ந்துண்ணும் பொருட்டு புறாக்கள் வட்டமாய் அவ்விரையைச் சுற்றி கூடி நின்றன. இக்காட்சியானது இதழ் விரிந்திருக்கின்ற தாமரை மலரைப் போன்று காட்சியளிப்பதாக கவிஞர் உவமித்துள்ளார்.

மு.வரதராசனார் இயற்றிய குறட்டை ஒலி’ என்ற சிறுகதையில் ஓர் ஏழைத்தாய்தன்குழந்தைக்கு ஊட்ட வேண்டிய பாலால் பட்டினி கிடந்த நாய்க்குட்டிகளுக்கு ஊட்டுகிறாள். ஓர் ஏழைத்தாயின் வறுமையிலும் பகிர்ந்துண்ணும் தாய்மைப் பண்பு இக்கதையில் புலப்படுத்தப்பட்டுள்ளது.

இக்காலத்தில் பகிர்ந்துண்ணும் வழக்கம் அதிகமாக மனிதர்களிடம் காணப்படுவதில்லை. அன்றாடம் நாம் காணும் ஐந்தறிவு உயிரினமாகிய காக்கை கூட தனக்குக் கிடைத்த சிறிதளவு இரையையும் தன் இனத்தோடு பகிர்ந்து உண்ணும் பொருட்டு கரைந்து தன் இனத்தை அழைத்து உண்கிறது. இத்தகைய உயிரினங்களின் செயல்களைக் கண்டாவது மனிதர்கள் பகிர்ந்துண்ணும் பழைய பண்பாட்டை நிலை நிறுத்த வேண்டும். அப்போதுதான் பசிப்பிணி நீங்கும் என்று சொல்லி என்னுரையை நிறைவு செய்கின்றேன்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பின்வருவனவற்றுள் முறையான தொடர்.
அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.
ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.
இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.
ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.
Answer:
இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.

Question 2.
விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை.
அ) நிலத்திற்கேற்ற விருந்து
ஆ) இன்மையிலும் விருந்து
இ) அல்லிலும் விருந்து
ஈ) உற்றாரின் விருந்து
Answer:
ஆ) இன்மையிலும் விருந்து

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

குறுவினா

Question 1.
‘தானியம் ஏதும் இல்லாதநிலையில்விதைக்காகவைத்திருந்ததினையை உரலில் இட்டுக்குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி’ என்பது இலக்கியச் செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.
Answer:
விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றாகக் கருதமுடியாது.

ஏனென்றால், இனிய சொற்களும், நல்ல உபசரிப்பும் இல்லாமல் செல்வத்தால் செய்யும் விருந்தோம்பலை யாரும் ஏற்கமாட்டார்கள். எனவே, செல்வத்தைவிட விருந்தோம்பலுக்கு இனியச் சொற்களும் நல்ல உபசரிப்பும், மனமும் இருந்தால் போதும் என்பது என் கருத்தாகும்.

சிறுவினா

Question 1.
புதிதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர்.
திருவிழாக் காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காண முடிகிறது.
இப்படியாகக் காலமாற்றம், தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துகளை எழுதுக.
Answer:

  • அன்றைய காலத்தில் வழிப்போக்கர்களே விருந்தினராகப் போற்றப்பட்டனர்.
  • காலமாற்றத்தால் நாகரிகம் என்னும் பெயரால், வழிப்போக்கர்களுக்கு விருந்தளிப்பது மறைந்து, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மட்டுமே விருந்தளிக்கும் நிலையைத்தான் இன்று காணமுடிகின்றது.
  • வழிப்போக்கர்களுக்கும், ஏழைகளுக்கும் கோவில் மற்றும் அன்னசத்திரங்கள் விருந்திட்டு வருகின்றன.
  • விருந்தினர் என்று சொல்லி கயவர்கள் இன்று மக்களை ஏமாற்றுவதால் புதியவர்களை விருந்தினர்களாகப் போற்றப்படுவது இல்லை.
  • இன்றைய சமுதாயத்தில் தன்னலம் மேலோங்கியதால் விருந்தென்னும் பொதுநலம் குறைந்து வருகின்றது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

நெடுவினா

Question 1.
உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்! - 1
முன்னுரை :
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்! - 2
என்ற குறட்பா வந்த விருந்தினரைப் பேணிப் போற்றி, இனி வரும் விருந்தினரை எதிர்பார்த்து இருப்பவனை வானவர்கள் போற்றும் சிறப்பு விருந்தினனாவான் என்கின்றது. வந்த விருந்தையும் வரும் விருந்தையும் சிறப்புடன் செய்வது இல்லத்தார் கடமையாகும்.

இனிது வரவேற்றல் :
வீட்டிற்குவந்த உறவினர்களிடம் வாருங்கள், அமருங்கள், நலமா? நீர் அருந்துங்கள், குடும்பத்தினர் அனைவரும் நலமா? என சில வார்த்தைகளைக் கூறி முகமலர்ச்சியுடன் விருந்தினரை வரவேற்றேன்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

உணவு உபசரிப்பு :

  • • வீட்டிற்கு வந்த விருந்தினருக்கு அவர்கள் விரும்பும் அறுசுவை உணவைத் தயார் செய்து அவரை உணவு உண்ண வருமாறு இன்முகத்துடன் அழைத்து, அமர வைத்தேன்.
  • தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது மரபு. ஆகவே தமிழ்ப் பண்பாடு மறையாதிருக்க தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவிட்டேன்.
  • உண்பவரின் இடப்பக்கம் வாழை இலையின் குறுகலான பகுதியும், வலப்பக்கம் விரிந்த பகுதியும் வருமாறு வாழையிலையை விரித்தேன்.
  • வாழை இலையின் இடது ஓரத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலான அளவில் சிறிய உணவு வகைகளை வைத்தேன்.
  • வாழை இலையின் வலது ஓரத்தில் காய்கறி, கீரை, கூட்டு முதலான அளவில் பெரிய உணவு வகைகளையும் நடுவில் சோறும் வைத்தேன்.
  • உண்பவர் மனமறிந்து அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளை மீண்டும் மீண்டும் பரிவுடன் பரிமாறினேன்.

அன்பு வெளிப்பாடு :

  • ஒரு குவளையில் நீரைக் கொண்டு வந்தேன். அதைக் கொண்டு அவர் அருகில் வைக்கப்பட்ட வெற்றுப்பாத்திரத்தில் அவர் கைகழுவுமாறு நீர் ஊற்றினேன்.
  • பிறகு கைகளைத் துடைப்பதற்குத் துண்டினை அளித்தேன்.
  • உணவு உண்டு எழுந்தவருக்கு ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு வைத்தேன். அவர் அதை மகிழ்வுடன் உண்டார்.
  • உணவுண்டவரிடம் திருப்தியாக உண்டீர்களா? என விசாரித்து, வீட்டில் உள்ள
  • உணவுப் பொருட்கள் சிலவற்றையும் கொடுத்து வீட்டில் உள்ளவர்களுக்குக் கொடுக்குமாறு கூறி, ஏழடி வரை அவருடன் சென்று வழியனுப்பிவைத்தேன்.

முடிவுரை:
விருந்தினர் பேணுதல் தமிழர் மரபு ஆகும். அதனை அன்போடும் அருளோடும் செய்தல் நனிசிறப்பாகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
வரிசைப்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு.
i) விருந்தே புதுமை – 1. செயங்கொண்டார்
ii) இல்லறவியல் – 2. இளங்கோவடிகள்
iii) சிலப்பதிகாரம் – 3. தொல்காப்பியர்
iv) கலிங்கத்துப்பரணி – 4. திருவள்ளுவர்
அ) 1, 2, 3, 4
ஆ) 4, 3, 2, 1
இ) 4, 3, 1, 2
ஈ) 3, 4, 2, 1
Answer:
ஈ) 3, 4, 2, 1

Question 2.
மினசோட்டா தமிழ்ச்சங்கம் அமைந்துள்ள இடம் எது?
அ) அமெரிக்கா
ஆ) இலங்கை
இ) மொரிசியஸ்
ஈ) மலேசியா
Answer:
அ) அமெரிக்கா

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Question 3.
தொல்காப்பியர் விருந்து என்பதை என்னவென்று கூறியுள்ளார்?
அ) தொன்மை
ஆ) புதுமை
இ) இளமை
ஈ) முதுமை
Answer:
ஆ) புதுமை

Question 4.
“………தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை ”
– என்று குறிப்பிடும் நூல் எது? இது யாருடைய கூற்றாக அமைகிறது?
அ) கம்பராமாயணம், சீதை
ஆ) சிலப்பதிகாரம், கண்ணகி
இ) நளவெண்பா , தமயந்தி
ஈ) சீவகசிந்தாமணி, காந்தருவதத்தை
Answer:
ஆ) சிலப்பதிகாரம், கண்ண

Question 5.
“பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவான யாவையே” – என்று குறிப்பிடும் நூல்?
அ) கம்பராமாயணம்
ஆ) பெரிய புராணம்
இ) சிலப்பதிகாரம்
ஈ) மணிமேகலை
Answer:
அ) கம்பராமாயணம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Question 6.
“அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்று நள்ளிரவிலும் உணவிடும் குடும்பத் தலைவியின் விருந்தோம்பலைச் சிறப்பித்துக் கூறும் நூல்.
அ) குறுந்தொகை
ஆ) அகநானூறு
இ) நற்றிணை
ஈ) புறநானூறு
Answer:
இ) நற்றிணை

Question 7.
‘காலின் ஏழடிப் பின் சென்று’ என விருந்தினரை வழியனுப்பும் தமிழரின் இயல்பைக் குறிப்பிடும் நூல்
அ) சிறுபாணாற்றுப்படை
ஆ) பெரும்பாணாற்றுப்படை
இ) பொருநராற்றுப்படை
ஈ) கூத்தராற்றுப்படை
Answer:
இ) பொருநராற்றுப்படை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Question 8.
“விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல” – இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல்?
அ) கம்பராமாயணம்
ஆ) கலிங்கத்துப்பரணி
இ) முக்கூடற்பள்ளு
ஈ) பெரியபுராணம்
Answer:
ஆ) கலிங்கத்துப்பரணி

Question 9.
“குரல் உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து சிறிது புறப்பட்டன்றோ இலள்” என்று புறநானூறு காட்சிப்படுத்தும் கருத்து?
அ) தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து விருந்தினர்க்கு உணவளித்தாள் தலைவி.
ஆ) உணவுக்காக வைத்திருந்த தானியத்தை விதைப்பதற்குத் தலைவனிடம் தந்தாள் தலைவி.
இ) குழந்தையின் பசியைப் போக்க விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்துச் சமைத்துத் தந்தாள் தலைவி.
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து விருந்தினர்க்கு உணவளித்தாள் தலைவி.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Question 10.
தலைவன் விருந்தளிக்க அடகும் பணையமும் வைத்த பொருட்கள் யாவை?
அ) பழையவாள், கருங்கோட்டுச் சீறியாழ்
ஆ) புதியவாள், நெடுங்கோட்டுப் பெரியாழ்
இ) பழையவாள், நெடுங்கோட்டுப் பெரியாழ்
ஈ) புதியவாள், கருங்கோட்டுச் சீறியாழ்
Answer:
அ) பழையவாள், கருங்கோட்டுச் சீறியாழ்

Question 11.
அன்று விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து, பின் சமைத்துச் சிவனடியாருக்கு விருந்து படைத்தவர் யார்? இக்காட்சி இடம் பெறும் நூல் எது?
அ) சாக்கியநாயனார், பெரிய புராணம்
ஆ) இளையான்குடி மாறநாயனார், பெரிய புராணம்
இ) காரைக்கால் அம்மையார், அற்புத திருவந்தாதி
ஈ) சுந்தரர், திருத்தொண்டத்தொகை
Answer:
ஆ) இளையான்குடி மாறநாயனார், பெரியபுராணம்

Question 12.
நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் கொடுத்தவையாகச் சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுபவை எவை?
அ) குழல் மீன் கறியும் பிறவும்
ஆ) ஆரல் மீன் கறியும் உப்பும்
இ) உப்பும் முத்தும் ஈ) மீன் கறியும் நண்டும்
Answer:
அ) குழல் மீன் கறியும் பிறவும்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Question 13.
“இலையை மடிப்பதற்கு முந்தைய
வினாடிக்கு முன்பாக
மறுக்க மறுக்க
பரிமாறப்பட்ட கூடுதல் இட்லியில்
நீண்டு கொண்டிருந்தது
பிரியங்களின் நீள் சரடு” – என்னும் கவிதைக்கு உரியவர் யார்?
அ) அம்சப்பிரியா
ஆ) பா.விஜய்
இ) சிநேகன்
ஈ) நா. முத்துக்குமார்
Answer:
அ) அம்சப்பிரியா

Question 14.
“பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீ ரோ”- என்று குறிப்பிடும் நூல் எது?
அ) நற்றிணை
ஆ) குறுந்தொகை
இ) பதிற்றுப்பத்து
ஈ) பரிபாடல்
Answer:
ஆ) குறுந்தொகை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Question 15.
“மருந்தே ஆயினும் விருந்தோடு உண்” என்று பாடியவர் யார்? நூல் எது?
அ) ஔவையார், ஆத்திச்சூடி
ஆ) ஔவையார், கொன்றைவேந்தன்
இ) குமரகுருபரர், நீதிநெறி விளக்கம்
ஈ) வள்ளலார், ஜீவகாருண்ய ஒழுக்கம்
Answer:
ஆ) ஔவையார், கொன்றைவேந்தன்

Question 16.
அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடும் விழா
அ) வாழையிலை விருந்து விழா
ஆ) இறைச்சி உணவு விருந்து விழா
இ) வேட்டி சேலை உடுத்தும் விழா
ஈ) நவதானிய விழா
Answer:
அ) வாழையிலை விருந்து விழா

Question 17.
திருக்குறளில் விருந்தோம்பல் அதிகாரம் இடம்பெறும் இயல்
அ) இல்லறவியல்
ஆ) பாயிரவியல்
இ) அரசியல்
ஈ) துறவறவியல்
Answer:
அ) இல்லறவியல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Question 18.
விருந்தினரைப் போற்றிப் பேணல் பழந்தமிழர் மரபு என்பதை உணர்த்தியவர்.
அ) திருவள்ளுவர்
ஆ) தொல்காப்பியர்
இ) இளங்கோவடிகள்
ஈ) செயங்கொண்டார்
Answer:
இ) இளங்கோவடிகள்

Question 19.
கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளவர்
அ) கம்பர்
ஆ) தொல்காப்பியர்
இ) இளங்கோவடிகள்
ஈ) செயங்கொண்டார்
Answer:
அ) கம்பர்

Question 20.
இளையான்குடி மாறநாயனாரின் விருந்தளிக்கும் திறன் பற்றிக் குறிப்பிடும் நூல்?
அ) பெரிய புராணம்
ஆ) நற்றிணை
இ) பொருநராற்றுப் படை
ஈ) கம்பராமாயணம்
Answer:
அ) பெரிய புராணம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Question 21.
பொருத்துக.
1. விருந்தே புதுமை – அ) திருவள்ளுவர்
2. மோப்பக் குழையும் அனிச்சம் – ஆ)தொல்காப்பியர்
3. மருந்தே ஆயினும் விருந்தொடு உண் – இ) இளங்கோவடிகள்
4. விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை – ஈ) ஔவையார்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Question 22.
விருந்தோம்பல் பற்றிய 17ஆம் நூற்றாண்டுச் சுவரோவியம் காணப்படுமிடம்
அ) சிதம்பரம்
ஆ) மதுரை
இ) மாமல்லபுரம்
ஈ) திருச்சி
Answer:
அ) சிதம்பரம்

Question 23.
விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே படைத்த புலவர்
அ) ஒளவையார்
ஆ) திருவள்ளுவர்
இ) கபிலர்
ஈ) கம்பர்
Answer:
ஆ) திருவள்ளுவர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Question 24.
“காலின் ஏழடிப் பின் சென்று” – என்னும் பொருநராற்றுப்படை உணர்த்தும் செய்தி
அ) விருந்தினரின் காலைத் தொட்டு வணங்கினர்
ஆ) விருந்தினரை ஏழு அடி வரை நடந்து சென்று வழியனுப்பினர்.
இ) எழுவர் விருந்தினரின் பின் சென்று வழியனுப்பினர்.
ஈ) ஏழுநாள்கள் விருந்தளித்துப் பின் விருந்தினரை வழியனுப்புவர்.
Answer:
ஆ) விருந்தினரை ஏழு அடி வரை நடந்து சென்று வழியனுப்பினர்.

Question 25.
“வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரெனவே புளித்த மோரும்” – எனப் பாடியவர்
அ) ஔவையார்
ஆ) தொல்காப்பியர்
இ) கம்பர்
ஈ) திருவள்ளுவர்
Answer:
அ) ஒளவையார்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

குறுவினா

Question 1.
விருந்தோம்பல் என்றால் என்ன?
Answer:
தம் வீட்டிற்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று, உண்ண உணவும் இடமும்
கொடுத்தல், அவர்களிடம் அன்பு பாராட்டுதல் இவையே விருந்தோம்பல் எனப்படும்.

Question 2.
உலகம் நிலைத்திருக்கிறதற்கான காரணங்கள் எவையென இளம்பெருவழுதி குறிப்பிட்டுள்ளார்?
Answer:

  • தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை.
  • அமிழ்தமே கிடைத்தாலும் தாமே உண்ணாது, பிறருக்குக் கொடுக்கும் நல்லோர் உள்ளதால் உலகம் நிலைத்திருக்கிறது.

Question 3.
‘உணவிடும் நல்லியல்பு குடும்பத் தலைவிக்கு உண்டு’ என்பதைக் குறித்து நற்றிணை குறிப்பிடும் செய்தி யாது?
Answer:

  • விருந்தோம்பல் என்பது பெண்களின் சிறந்த பண்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
  • நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்பத் தலைவிக்கு உண்டு.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Question 4.
இன்மையிலும் விருந்தோம்பல் குறித்து புறநானூறு எவ்வாறு காட்சிப்படுத்துகிறது?
Answer:

  • வீட்டிற்கு வந்தவர்க்கு வறிய நிலையிலும் எவ்வழியேனும் முயன்று விருந்தளித்து மகிழ்ந்தனர் நம் முன்னோர்.
  • தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தி எடுத்து விருந்தினருக்கு உணவளித்தாள் தலைவி.

Question 5.
வாளையும் யாழையும் பணையம் வைத்து விருந்தளிக்கப்பட்ட செய்தியைக் கூறு.
Answer:
பழைய வாள் :
நேற்று வந்த விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் இரும்பினால் செய்த பழைய வாளை அடகு வைத்தான் தலைவன்

சீறியாழ் :
இன்றும் விருந்தினர் வந்ததால் தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Question 6.
இளையான்குடி மாறநாயனார் சிவனடியார்க்கு விருந்தளித்த நிகழ்வை எழுது.
Answer:
இளையான்குடி மாறநாயனாரின் வீட்டிற்கு வந்த சிவனடியார்க்கு விருந்தளிக்க அவரிடம் தானியம் இல்லை. தானியமில்லாததால் அன்று விதைத்துவிட்டு வந்த விதை நெல்லை அரித்துச் சமைத்து விருந்து படைத்தார்.

Question 7.
நெய்தல் நிலத்தவரின் விருந்தளிப்பு குறித்துச் சிறுபாணாற்றுப்படை வழியே செய்தியைக் கூறு.
Answer:
நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர்.

Question 8.
பழந்தமிழர் விருந்தை எதிர்கொள்ளும் தன்மைப் பற்றி குறுந்தொகை கூறும் செய்தி யாது?
Answer:
இல்லத்தின் பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர், உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா? என்று கேட்கும் வழக்கம் பழந்தமிழரிடையே இருந்ததைக் குறுந்தொகை கூறுகிறது.

Question 9.
இல்ல விழாக்கள் யாவை?
Answer:

  • திருமணத்தை உறுதி செய்தல்
  • பிறந்தநாள்
  • திருமணம்
  • புதுமனை புகுவிழா
  • வளைகாப்பு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Question 10.
மினசோட்டா தமிழ்ச் சங்க ‘வாழையிலை விருந்து விழாவில்’ வைக்கப்படும் உணவுகள் யாவை?
Answer:

  • முருங்கைக்காய் சாம்பார்
  • வெண்டைக்காய் கூட்டு
  • மோர்க்குழம்பு
  • தினைப்பாயாசம்
  • வேப்பம்பூ ரசம்
  • அப்பளம்

Question 11.
யாருடைய ஆட்சி காலத்தில் மிகுதியான சத்திரங்கள் கட்டப்பட்டன?
Answer:
நாயக்கர், மராட்டியர்.

Question 12.
“காலின் ஏழடிப் பின் சென்று” – இப்பாடலடி உணர்த்தும் செய்தி யாது?
Answer:

  • பண்டையத் தமிழர் வீட்டிற்கு வந்த விருந்தினர் திரும்பிச் செல்லும் போது வழியனுப்பும் விதம்.
  • வழியனுப்பும் போது அவர்கள் செல்ல இருக்கின்ற நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேர் வரை ஏழு அடி நடந்து சென்று வழியனுப்பினர்.

Question 13.
விருந்து பற்றி எடுத்துரைக்கும் தமிழ்நூல்கள் யாவை?
Answer:

  • தொல்காப்பியம்
  • புறநானூறு
  • திருக்குறள்
  • நற்றிணை
  • சிலப்பதிகாரம்
  • குறுந்தொகை
  • கம்பராமாயணம்
  • கொன்றை வேந்தன்
  • கலிங்கத்துப்பரணி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Question 14.
விருந்து பற்றி எடுத்துரைக்கும் சங்க இலக்கிய நூல்கள் எவை?
Answer:
புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை.

Question 15.
விருந்து பேணுவதற்காக எவற்றையெல்லாம் தலைவன் பணையம் வைத்ததாகப் புறநானூறு கூறுகின்றது?
Answer:
இரும்பினால் செய்யப்பட்ட பழைய வாள், கருங்கோட்டுச் சீறி யாழ்.

Question 16.
விருந்தினர் என்பவர் யார்? (அல்லது) விருந்தே புதுமை – பொருள் விளக்கம் தருக.
Answer:
விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தில் கருதுகின்றனர். உறவினர் வேறு, விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். இதனையே தொல்காப்பியர் ‘விருந்தே புதுமை’ என்கிறார்.

Question 17.
விருந்து மற்றும் விருந்தோம்பல் பற்றிக் குறிப்பிடும் புலவர்கள் யாவர்?
Answer:

  • தொல்காப்பியர்
  • கம்பர்
  • திருவள்ளுவர்
  • செயங்கொண்டார்
  • இளங்கோவடிகள்
  • ஔவையார்

Question 18.
மோப்பக் குழையும் அனிச்சம் உவமை கொண்டு வள்ளுவர் வலியுறுத்தும் கருத்து யாது?
Answer:
முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதாகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Question 19.
“விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” என்று கண்ணகி வருந்தக் காரணம் யாது?
Answer:
கோவலனைப் பிரிந்து வாழும் கண்ணகி அவனைப் பிரிந்ததை விட விருந்தினரைப் போற்ற முடியாத நிலையை எண்ணி வருந்துகிறாள்.

Question 20.
தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை எது?
Answer:
தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை ஆகும்.

Question 21.
உலகம் நிலைபெற்றிருக்கக் காரணம் யாது?
Answer:
அமிழ்தமே கிடைத்தாலும் தாமே உண்ணாது பிறருக்கும் கொடுத்து மகிழ்வர் நல்லோர். அத்தகையவர்களால் தான் உலகம் இன்றும் நிலைபெற்று இருக்கின்றது.

Question 22.
“அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும்” தொடர் விளக்கம் தருக.
Answer:
தொடர் இடம்பெறும் நூல் : நற்றிணை
தொடர் விளக்கம் : நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நற்பண்பு குடும்பத்தலைவிக்கு உண்டு.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Question 23.
“பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீரோ” தொடர் விளக்கம் தருக.
Answer:
தொடர் இடம்பெறும் நூல் : குறுந்தொகை
தொடர் விளக்கம் : இல்லத்தில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர், உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளனரா? என்று கேட்கின்றனர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

சிறுவினா

Question 1.
இன்மையிலும் விருந்தோம்பல் குறித்து இலக்கியங்கள் கூறும் செய்திகளைக் கூறு.
Answer:

  • வீட்டிற்கு வந்தவருக்கு வறிய நிலையிலும் எவ்வழியிலேனும் முயன்று விருந்தளித்தனர் பழந்தமிழர் என்று புறநானூறு கூறுகிறது.
  • தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து விருந்தளித்தாள் தலைவி. இன்று வந்த விருந்தினருக்கு விருந்தளிக்க கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்தான் தலைவன்.
  • இளையான்குடி மாறநாயனார் தன் வீட்டிற்கு வந்த சிவனடியார்க்கு விருந்தளிக்க, அன்று விதைத்து விட்டு வந்த நெல்லை அரித்து விருந்து படைத்ததைப் பெரிய புராணம் மூலம் அறியலாம்.

Question 2.
உற்றாரோடு நின்ற விருந்து குறித்து எழுதுக.
Answer:

  • • சங்க காலத்தில் அரசனாயினும் வறியோராயினும் விருந்தினர்களைப் போற்றினர்.
  • கால மாற்றத்தினால் புதியவர்களை வீட்டிற்குள் அழைத்து உணவளிப்பது குறைந்தது.
  • விருந்து புரப்பது குறைந்ததால் நாயக்கர் மராத்தியர் காலத்தில் மிகுதியான சத்திரங்கள் வழிப்போக்கர்களுக்காகக் கட்டப்பட்டன.
  • புதியவர்களைவிருந்தினராய் ஏற்பது குறைந்து ஓரளவு தெரிந்தவர்களை மட்டுமே விருந்தினர்களாய் ஏற்ற னர்.
  • படிப்படியாக உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரையே விருந்தினர்களாகப் போற்றும் நிலைக்கு மாறினர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Question 3.
விருந்தோம்பல் அன்றும் இன்றும் எவ்வாறு உள்ளது என வேறுபடுத்திக் காட்டுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்! - 3

Question 4.
மினசோட்டா ‘வாழையிலை விருந்து விழா’ பற்றி எழுதுக.
Answer:

  • அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கம் வாழையிலை விருந்து விழா’வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
  • தமிழர்களின் பாரம்பரிய உணவுகளைக் கொண்டு விருந்து வைக்கின்றனர்.
  • முருங்கைக்காய் சாம்பார், மோர்க்குழம்பு, வேப்பம்பூ ரசம், வெண்டைக்காய்க் கூட்டு, தினைப்பாயாசம், அப்பளம் எனச் சுவையாகத் தமிழர் விருந்து கொடுக்கின்றனர்.
  • அங்கு வாழும் தமிழர்கள் பலரும் இந்த விருந்தில் பங்கேற்றுச் சிறப்பிக்கின்றனர்.  தொடர்ந்து பல பண்பாட்டு நிகழ்வுகளையும் நிகழ்த்தி வருகின்றனர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Question 5.
வாழை இலை விருந்து, ‘உணவு பரிமாறும் முறை’ குறித்து எழுது.
Answer:

  • தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது நம் மரபாகக் கருதப்படுகிறது.
  • உண்பவரின் இடப்பக்கம் வாழையிலையின் குறுகிய பகுதியும், வலப்பக்கம் இலையின் விரிந்த பகுதியும் வர வேண்டும்.
  • இலையின் இடது ஓரத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலானவைகளையும், சிறிய உணவு வகைகளையும் வைத்தனர்.
  • இலையின் வலது ஓரத்தில் காய்கறி, கீரை, கூட்டு முதலான உணவு வகைகளை வைப்பர். நடுவில் சோறு வைத்து எடுத்துண்ண வசதியாகப் பரிமாறுவர்.

பரிவுடன் பரிமாற்றம் :
விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளைப் பரிவுடன் பரிமாறும் வழக்கத்தை நம் முன்னோர்கள் செய்தனர்.

Question 6.
வாழை இலையில் உண்பதால் ஏற்படும் நன்மைகள் யாவை?
Answer:

  • வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்ட நாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும்.
  • வாழை இலை ஒரு கிருமிநாசினி. அது உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது.
  • வாழை இலையில் தொடர்ந்து உண்பவர்களுக்கு நோய் தாக்குவதில்லை.
    தோல் பளபளப்பாகும்; பித்தம் தணிக்கும்.
  • வயிற்றுப் புண் ஆற்றும்; பசியைத் தூண்டும்.

Question 7.
காலமாற்றம், தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த உங்கள் கருத்துகள் மூன்றினை எழுதுக.
Answer:

  • புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைக்கப்பட்டிருந்த நிலை இக்காலத்தில் இல்லை.
  • அறிமுகமில்லாத புதியவர்களை விருந்தினர்களாக ஏற்பதுவும் இல்லை
  • திருமணம், வளைகாப்பு போன்ற இல்லவிழாக்கள் திருமணக்கூடங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

நெடுவினா

Question 1.
விருந்தோம்பல் பண்பாடு பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக. (அல்லது) விருந்து மற்றும் விருந்தோம்பல் பற்றித் தமிழ் இலக்கியங்கள் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்! - 4
முன்னுரை :
விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தினர் கருதுகின்றனர். உறவினர் வேறு விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். விருந்தே புதுமை’ என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.

விருந்து போற்றும் திருக்குறள்:
திருவள்ளுவர் விருந்தோம்பல்’ என்ற ஒரு அதிகாரத்தையே படைத்துள்ளார். இல்லறம் புரிவது விருந்தோம்பல் செய்யும் பொருட்டே என்கின்றார். முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை ‘மோப்பக்குழையும் அனிச்சம் ….’ என்ற குறளில் குறிப்பிடுகின்றார்.

தமிழர் மரபு ‘விருந்தோம்பல்’:
கோவலன் பிரிந்ததை விட விருந்தினரைப் போற்ற முடியாத நிலையை எண்ணி கண்ணகி வருந்துகின்றாள் என்பது மூலம் விருந்து தமிழர் மரபு என்கிறார் இளங்கோவடிகள். கம்பரும் செயங்கொண்டாரும் விருந்தைத் தமிழர் மரபாகப் போற்றினர்.

விருந்தறம்:
அமிழ்தமே கிடைத்தாலும் தமிழர் தனித்து உண்ணமாட்டார் என்பதைப் புறநானூறு கூறுகின்றது. விருந்தினர் நடு இரவில் வந்தாலும் இன்முகத்துடன் தமிழர் வரவேற்பர் என்கிறது நற்றிணை. பழைய வாளும் யாழும் பணையம் வைத்து விருந்து போற்றப்பட்டதைப் புறநானூறு கூறுகிறது. “மருந்தே ஆயினும் விருந்தொடு உண்” என்கிறார் ஔவையார். வாழை இலையில் விருந்து படைப்பதைத் தமிழர் அவசியமாகக் கொண்டிருந்தனர்.

முடிவுரை:
காலந்தோறும் தமிழர்களின் அடையாளமாக விளங்கும் உயர்பண்பாக விளங்கும் விருந்தோம்பலைப் போற்றிப் பெருமிதம் கொள்வோம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

Question 2.
வீட்டில் திண்ணை அமைத்த காரணம், விருந்தினர் பேணுதல், தமிழர் பண்பாட்டில் ஈகை – பசித்தவருக்கு உணவிடல் – இவை போன்ற செயல்கள் அன்றும் இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பதை அழகுற விவரித்து எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்! - 5

முன்னுரை:
தம் வீட்டுக்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று உண்ண உணவும் இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல். விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தினர் கருதுகின்றனர். உறவினர் வேறு, விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். விருந்தே புதுமை’ என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.

வீட்டில் திண்ணை :
புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர். ஆனால் இன்று வீட்டுக்குத் திண்ணை வைத்துக் கட்டுவதுமில்லை அறிமுகமில்லாத புதியவர்களை விருந்தினர்களாக ஏற்பதுவும் இல்லை . இருப்பினும் திருவிழாக் காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காண முடிகிறது.

விருந்தினரைப் பேணுதல்:
திருமணத்தை உறுதி செய்தல், திருமணம், வளைகாப்பு, பிறந்த நாள், புதுமனை புகுவிழா போன்றவற்றை இல்ல விழாக்களாகவே கொண்டாடினர். அப்போது மிகுதியான விருந்தினர்களை வரவேற்று உணவளித்து மகிழ்ந்தனர். அந்த இல்ல விழா நாட்களில் அப்பகுதி வாழ் மக்களும் வெளியூர் விருந்தினர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தனர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

காலப் போக்கில் வீட்டில் நடைபெற்ற விழாக்கள் திருமணக்கூடங்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டன. பண்பாட்டு மாற்றமாக இன்று சில இடங்களில் விருந்தினர்களை வரவேற்பது முதல் பந்தியில் உபசரித்து வழியனுப்பும் வரை திருமண ஏற்பாட்டாளர்களே’ செய்யும் விருந்தோம்பல் நடைபெறுவதைக் காண முடிகிறது.

தமிழர் பண்பாட்டில் ஈகை:
கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார்.

‘பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவன யாவையே’
– கம்பராமாயணம், 1:2:36.

நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என்கிறது சிறுபாணாற்றுப்படை.

இளையான்குடி மாறநாயனாரின் வீட்டுக்கு வந்த சிவனடியார்க்கு விருந்தளிக்க அவரிடம் தானியமில்லை எனவே, அன்று விதைத்து விட்டு வந்த நெல்லை அரித்து வந்த பின் சமைத்து விருந்து படைத்த திறம் பெரிய புராணத்தில் காட்டப்படுகிறது. வள்ளல்கள் பலரும் மிகுந்த ஈகைக்குணத்துடன் விளங்கியதை இலக்கியங்கள் வழி அறிய முடிகிறது.

பசித்தவருக்கு உணவிடல்:
இல்லத்தில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர், உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா? என்று கேட்கும் வழக்கம் இருந்ததை,

‘பலர்புகு நாவில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீரோ!’

– என்ற குறுந்தொகை (118) அடிகள் புலப்படுத்துகின்றன.

மணிமேகலை பசிப்பிணியைப் போக்க மேற்கொண்ட முயற்சியிலும்’, இராமலிங்க அடிகள் ‘வடலூரில் அணையா அடுப்பை ஏற்படுத்தி பெரும் உதவி புரிந்தமை’ இன்னும் தொடர்வதை பசிப்பிணியை நீக்குவதற்கான செயல்களில் முதன்மையானதாகக் குறிப்பிடலாம். இன்றைய நிலையில் பல்வேறு திருக்கோயில்களில் அன்னதானம் வழங்குவதைத் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

விருந்தினர் அன்றும் இன்றும்:
சங்க காலத்திலிருந்தே அரசராயினும் வறியோராயினும் விருந்தினர்களைப் போற்றினர். கால மாற்றத்தில் புதியவர்களாகிய விருந்தினர்களை வீட்டுக்குள் அழைத்து உணவிடுவது குறைந்தது. விருந்து புரப்பது குறைந்ததால் சத்திரங்கள் பெருகின. நாயக்கர், மராட்டியர் ஆட்சிக் காலங்களில் மிகுதியான சத்திரங்கள் வழிச் செல்வோர்க்காகக் கட்டப்பட்டன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

புதியவர்களான விருந்தினர்களை ஏற்பது குறைந்துவிட்ட காலத்தில், ஓரளவு தெரிந்தவர்களை மட்டுமே விருந்தினர்களாக ஏற்றனர். படிப்படியாக உற்றார் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரையே விருந்தினர்களாகப் போற்றும் நிலைக்கு மாறினர்.

நிறைவுரை:
பண்டைத்தமிழர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் விருந்தோம்பல்பண்பாடு செழித்திருந்தது. அந்த உயரிய தமிழ்ப் பண்பாடு இன்றைய தமிழர்களிடம் பல்வேறு முறைகளில் பின்பற்றப்படுகிறது. காலந்தோறும் தமிழர்களின் அடையாளமாக விளங்கும் உயர்பண்பான விருந்தோம்பலைப் போற்றிப் பெருமிதம் கொள்வோம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் – பொது

Students can Download 10th Tamil Chapter 4.5 இலக்கணம் – பொது Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 4.5 இலக்கணம் – பொது

கற்பவை கற்றபின்

Question 1.
கீழ்க்காணும் தொடர்களில் வழுவமைதி வகைகளை இனங்கண்டு எழுதுக.
அ) அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார்.
ஆ) “இந்தக் கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அனைவரும் ஏற்பர்” என்று கூறினான்.
இ) சிறிய வயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம்.
ஈ) செல்வன் இளவேலன் இந்தச் சிறுவயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்திருக்கிறார்.
Answer:
அ) அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார்.
கால வழுவமைதி.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

ஆ) “இந்தக் கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அனைவரும் ஏற்பர்” என்று கூறினான்.
இட வழுவமைதி.

இ) சிறிய வயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம்.
கால வழுவமைதி.

ஈ) செல்வன் இளவேலன் இந்தச் சிறுவயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்திருக்கிறார்.
பால் வழுவமைதி.

Question 2.
அடைப்புக் குறிக்குள் உள்ளவாறு மாற்றுக.
அ) தந்தை, “மகனே! நாளை உன்னுடைய தோழன் அழகனை அழைத்து வா!” என்று சொன்னார்.
(ஆண்பாற் பெயர்களைப் பெண்பாற் பெயர்களாக மாற்றி எழுது)
ஆ) அக்கா நேற்று வீட்டுக்கு வந்தது. அக்கா புறப்படும்போது அம்மா வழியனுப்பியது. (வழுவை வழாநிலையாக மாற்றுக)
இ) “இதோ முடித்துவிடுவேன்” என்று செயலை முடிக்கும் முன்பே முன்னர் கூறினார். (வழாநிலையை வழுவமைதியாக மாற்றுக)
ஈ) அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை. (படர்க்கையை முன்னிலையாக, முன்னிலையைத் தன்மையாக, தன்மையைப் படர்க்கையாக மாற்றுக)
உ) குழந்தை அழுகிறான் பார். (வழுவை வழாநிலையாக மாற்றுக).
Answer:
அ) தந்தை, “மகனே! நாளை உன்னுடைய தோழன் அழகனை அழைத்து வா!” என்று சொன்னார்.
(ஆண்பாற் பெயர்களைப் பெண்பாற் பெயர்களாக மாற்றி எழுது)
தாய், “மகளே! நாளை உன்னுடைய தோழி அழகியை அழைத்து வா” என்று சொன்னாள்.

ஆ) அக்கா நேற்று வீட்டுக்கு வந்தது. அக்கா புறப்படும்போது அம்மா வழியனுப்பியது. (வழுவை வழாநிலையாக மாற்றுக)
அக்கா நேற்று வீட்டிற்கு வந்தாள். அக்கா புறப்படும்போது அம்மா வழியனுப்பினார்(னாள்).

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

இ) “இதோ முடித்துவிடுவேன்” என்று செயலை முடிக்கும் முன்பே முன்னர் கூறினார். (வழாநிலையை வழுவமைதியாக மாற்றுக)
“இதோ முடித்துவிட்டேன்” என்று செயலை முடிக்கும் முன்னர் கூறினார்.

ஈ) அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை. (படர்க்கையை முன்னிலையாக, முன்னிலையைத் தன்மையாக, தன்மையைப் படர்க்கையாக மாற்றுக)
நீ என்னிடமும் அவனிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை.

உ) குழந்தை அழுகிறான் பார். (வழுவை வழாநிலையாக மாற்றுக).
குழந்தை அழுகிறது பார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

மொழியை ஆள்வோம்

மொழி பெயர்க்க.

Malar: Devi, switch off the lights when you leave the room.
Devi: Yeah, we have to save electricity.
Malar : Our nation spends a lot of electricity for lighting up our streets in the night.
Devi: Who knows? In future our country may launch artificial moons to light our night time sky!
Malar: I have read some other countries are going to launch these types of illumination satellites near future.
Devi: Superb news! If we launch artificial moons, they can assist in disaster relief by beaming light on areas that lot power!
Answer:

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 5
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 6

வல்லின ஒற்றை இட்டும் நீக்கியும் எழுதுக.

காகத்திற்கு காது உண்டா? அதற்கு காது கேட்குமா?
எல்லா பறவைகளுக்கும் காது உண்டு. செவி துளைகள் இறகுகளால் மூடி இருக்கும். மற்றபடி பாலூட்டிகளில் உள்ளதுபோல் புறசெவிமடல் இருக்காது. காகத்திற்கு காது உண்டு. காதுக் கேட்கும் பறவைகளுக்கு பார்த்தல், கேட்டல் உணர்வு நன்றாக வளர்ச்சிப் பெற்று இருக்கும். சுவைத்தல் உணர்வுக் குறைவாகவும் நுகர்தல் உணர்வு இல்லையென்றேக் கூறலாம்.
யுரேகா! யுரேகா! – அறிவியல் வெளியீடு.
Answer:
காகத்திற்குக் காது உண்டா ? அதற்குக் காது கேட்குமா?

எல்லாப் பறவைகளுக்கும் காது உண்டு. செவித்துளைகள் இறகுகளால் மூடி இருக்கும். மற்றபடி பாலூட்டிகளில் உள்ளதுபோல் புறச்செவிமடல் இருக்காது. காகத்திற்குக் காது உண்டு, காதுக் கேட்கும் பறவைகளுக்குப் பார்த்தல், கேட்டல் உணர்வு நன்றாக வளர்ச்சி பெற்று இருக்கும். சுவைத்தல் உணர்வு குறைவாகவும் நுகர்தல் உணர்வு இல்லையென்றே கூறலாம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

கொடுக்கப்பட்டுள்ள இருசொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.

அ) இயற்கை – செயற்கை
எ.கா : பாதைதெரியாத இயற்கைக்காடுகளில் பயணிக்கச்செயற்கைக்கருவிகள் பயன்படுகின்றன.

ஆ) கொடு – கோடு
இராகவன் தன் நண்பன் கொடுத்த அளவுகோலைக் கொண்டு கோடு வரைந்தான்.

இ) கொள் – கோள்
கோள்களின் இயக்கம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

ஈ) சிறு – சீறு
சிறு பொந்துக்குள் இருந்து பாம்பு சீறுவதைக் கண்டேன்.

உ) தான் – தாம்
இராமன், “தான் தான் குற்றவாளி” என்று தாமே ஒப்புக் கொண்டான்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

ஊ) விதி – வீதி
கண்ணனின் தலைவிதி அவனை வீதியில் நிறுத்தியது.

பத்தியைப் படித்துப் பதில் தருக.

பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல ஊழிக்காலங்கள் கடந்து சென்றன. புவி உருவான போது நெருப்புப் பந்து போல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர் புவி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாகிய ஆற்றல் மிகுந்து செறித்து திரண்டு இப்படியாக (வெள்ளத்தில் மூழ்குதல்) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உயிர்கள் தோன்று நிலைபெறும் படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.

வினாக்கள் :
1. பத்தியில் உள்ள அடுக்குத் தொடர்களை எடுத்து எழுதுக.
2. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?
3. பெய்த மழை – இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.
4. இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?
5. உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிர் கருதுவன யாவை?
Answers:
1. மீண்டும் மீண்டும்.
2. தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது.
3. பெய்மழை.
4. பருப்பொருள்கள் சிதறுதல் (பெரு வெடிப்புக் கொள்கை).
5. நிலம், நீர், காற்று, நெருப்பு.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

கட்டுரை எழுதுக.

தலைப்பு – விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 7

முன்னுரை :
ஆணுக்குப் பெண் சரிசமம்’ என்ற கருத்தை மெய்ப்பிக்கும் வண்ணம் விண்வெளியில் கால்பதித்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர் கல்பனா சாவ்லா. அவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பிறப்பு :

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 8

  • 01.07.1961 அன்று இந்தியாவில் உள்ள ஹரியானா மாநிலத்தில் பிறந்தார்.
  • பெற்றோர் – பனாரஸ் லால் சாவ்லா (தந்தை), சன்யோகிதா தேவி (தாய்).
  • பஞ்சாபிக் குடும்பத்தைச் சார்ந்தவள்.
  • ‘கல்பனா’ என்றால் ‘கற்பனை’ என்று பொருள்.
  • இவருக்குச் சுனிதா மற்றும் தீபா என்ற இரு சகோதரிகளும் சஞ்சய் என்ற சகோதரனும் இருக்கின்றனர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

கல்வி :

கர்னலில் உள்ள தாகூர் அரசுப் பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார். 1982-இல் சண்டிகரில் உள்ள “பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றாள். 1984-இல் அமெரிக்காவில் உள்ள “டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம்” பெற்றாள். 1988-இல் விண்வெளிப் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

விண்வெளிப் பயணம் :

  • நாசா ஆராய்ச்சிக் கூடத்தில் “ஓசெர்செட் மேதொட்ஸ் இன்க் இல்” துணைத்தலைவராக பொறுப்பேற்றார்.
  • 1995-இல் நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார்.
  • 1997 ஆம் ஆண்டு கொலம்பிய விண்வெளி ஊர்தியான STS-87ல் முதல் விண்வெளி பயணத்தைத் தொடங்கினார்.
  • 372 மணி நேரம் விண்வெளியிலேயே இருந்து சாதனை படைத்தார்.

கொலம்பியா விண்கல நிகழ்வு :

  • 16.01.2003ல் அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ் – 107 (STS – 107) விண்ணில் செலுத்தப்பட்டது.
  • இந்த விண்கலத்தில் சாவ்லா உட்பட ஏழு பேர் பயணித்தனர்.
  • பதினாறு நாட்கள் ஆய்வை முடித்துவிட்டு திரும்பிய போது, அமெரிக்காவின் டெக்ஸாஸ் வான் பரப்பில் அவ்விண்கலம் வெடித்துச் சிதறியது.
  • சாவ்லா உட்பட ஏழு பேரும் பலியாகினர்.

விருதுகளும் அங்கீகாரங்களும் :

  • இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க தமிழக அரசாங்கம் “கல்பனா சாவ்லா” விருதினை 2004 ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது.
  • நாசா ஸ்பேஸ் பிளைட் மெடல்.
  • நாசா டிஸ்டிங்குவிஷ்ட் சர்வீஸ் மெடல்.
  • நியூயார்க்கில் உள்ள ஒரு தெருவிற்குக் “கல்பனா (way)” எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

முடிவுரை :

பெண்ணினத்திற்கே பெருமை சேர்ந்தவர் கல்பனா.
“கனவுகளைக் கண்டு அந்தக் கனவுகளை நனவாக்குவதற்கு விடா முயற்சியோடும் முழுமனதோடும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்” என்ற உண்மையை உலகிற்கு உணர்த்திச் சென்ற வீரப்பெண்ணை நாமும் போற்றுவோம்.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 9

நயம் பாராட்டுக.

நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
நேர்ப்பட வைத்தாங்கே
குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு
கோல வெறிபடைத்தோம்;
உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்
ஓட்டி மகிழ்ந்திடுவோம்;

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு
பாடுவதும் வியப்போ ? – பாரதியார்
தலைப்பு : இயற்கை
ஆசிரியர் : பாரதியார்

திரண்ட கருத்து :
வாழைக்கு அழகு குருத்து
செய்யுளுக்கு அழகு திரண்ட கருத்து நிலா, விண்மீன், காற்று ஆகிய இவற்றையெல்லாம் செம்மையுற்ற ஏற்படுத்தி வைத்து, அவற்றிலெல்லாம் தோய்ந்துள்ளது. திருவருளாகிய அமுதரசம். அந்த அமுதரசத்தைப் பருகி, அழகிய உன்னத நிலைக்கு யாம் உள்ளானோம். உலவுகின்ற மனமாகிய சிறுபறவையை எங்கெங்கும் செலுத்திக் களிப்படைவோம். பலாச்சுளை ஏற்றப்பட்ட வண்டியை ஒரு வண்டானது ரீங்காரம் செய்து வட்டமிடுவது ஆச்சரியகரமானதா என்ன?

தொடை நயம் :
தொடையற்ற பாட்டு
நடையற்றுப் போகும்
செய்யுளில் எதுகை, மோனை, இயைபு, முரண் ஆகிய உறுப்புகளால் தொடுக்கப்படுவது தொடை.

மோனை நயம் :
மோனையற்ற பாட்டு
சேனையற்ற நாடு
செய்யுளில் அடிதோறும் அல்லது சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை எனப்படும். சான்று: குலாவும், குழம்பைக், குடித்தொரு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

எதுகை நயம் :
வீரத்துக்கு அழகு வேங்கை
பாட்டுக்கு அழகு எதுகை
முதல் எழுத்து அளவொத்து இருக்க இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது எதுகை எனப்படும்.

சான்று:

அடி எதுகை:
நிலாவையும்
குலாவும்
உலாவும்
பலாவின்

அணி நயம் :
கோவிலுக்கு மணி அழகு
செய்யுளுக்கு அணி அழகு
இப்பாடலில் இயல்பு நவிற்சி அணி இடம் பெற்றுள்ளது.

மொழியோடு விளையாடு

தொடரைப் படித்து விடையைக் கண்டறிக.
(சோறு, கற்றல், கரு, பூவில், எழுத்து)
1. நூலின் பயன் படித்தல் எனில், கல்வியின் பயன்………….
2. விதைக்குத் தேவை எரு எனில், கதைக்குத் தேவை ………………
3. கல் சிலை ஆகுமெனில், நெல் ………….  ஆகும்.
4. குரலில் இருந்து பேச்சு எனில், விரலில் இருந்து ………….
5. மீன் இருப்பது நீரில், தேன் இருப்பது ………….
Answer:
1. நூலின் பயன் படித்தல் எனில், கல்வியின் பயன் கற்றல்.
2. விதைக்குத் தேவை எரு எனில், கதைக்குத் தேவை கரு.
3. கல் சிலை ஆகுமெனில், நெல் சோறு ஆகும்.
4. குரலில் இருந்து பேச்சு எனில், விரலில் இருந்து எழுத்து.
5. மீன் இருப்பது நீரில், தேன் இருப்பது பூவில்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

குறிப்பைப் பயன்படுத்தி விடை தருக.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 13
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 10

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

அகராதியில் காண்க.

அவிர்தல், அழல், உவா, கங்குல் , கனலி
Answer:
அவிர்தல் – ஒளி செய்தல், பீரல், விரிதல், பாடம் செய்தல்.
அழல் – உட்டணம், எருக்கு, கள்ளி, கேட்டை நாள், கொடுவேலி, செவ்வாய், தீ, நரகம், வெப்பம், பொறாமை, அழுதல்.
உவா – அமாவாசி, இளமை, இளையோன், கடல், நிறைவு, பூரணை, யானை, வாலிபன்,
உகாமரம்.
கங்குல் – இரவு, இருள், பரணி நாள்.
கனலி – கள்ளி, கொடுவேலி, கரியன், நெருப்பு, சூரியன்.

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 14
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 11

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

செயல்திட்டம்

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள் சில இயங்கி வருகின்றன. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் ரோபோக்களை உருவாக்கும் நிறுவனங்கள் சில உலகினில் இருக்கின்றன. அவற்றைப் பற்றிய படங்களுடன் குறிப்பு எழுதி வருக.
Answer:
செய்தி -1 :

  • ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனே பெப்பர்.
  • இது உலக அளவில் விற்பனையாகும் ஒரு ரோபோ.
  • வீட்டுக்கு, வணிகத்துக்கு, படிப்புக்கு என்று மூன்று வகை ரோபோக்கள் கிடைக்கின்றன.
  • இவை மனிதனின் முகபாவனைகளிலிருந்து உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுகின்றன.
  • பெப்பரை வரவேற்பாளராகவும், பணியாளராகவும் வீடுகளிலும் வணிக நிறுவனங்களிலும் உணவு விடுதிகளிலும் பயன்படுத்துகிறார்கள்.

செய்தி – 2 :
2016இல் ஐ.பி.எம். நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுக்கணினியானவாட்சன், சில நிமிடங்களில் இரண்டு கோடித் தரவுகளை அலசி, நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

செய்தி – 3 :

  • ஹாங்காங் நகரத்தின் ஹான்சன் ரோபோட்டிக்ஸ் நிறுவனம் உருவாக்கிய சோபியா என்னும் இயந்திரப் பெண்ணுக்கு சௌதி அரேபியாவில் குடியுரிமை வழங்கியிருக்கிறார்கள்.
  • இதனுடைய உரையாடல்களும், முகபாவனைகளும் மனிதர்களைப் போன்றிருந்தன.

கலைச்சொல் அறிவோம்

மீநுண் தொழில்நுட்பம் – Nanotechnology
விண்வெளித் தொழில்நுட்பம் – Space Technology
உயிரித் தொழில்நுட்பம் – Biotechnology
விண்வெளிக் கதிர்கள் – Cosmic Rays
புறஊதாக் கதிர்கள் – Ultraviolet Rays
அகச்சிவப்புக் கதிர்கள் – Infrared Rays

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

நிற்க அதற்குத் தக

தொலைக்காட்சி நிகழ்வுகளையே பார்த்துக் கொண்டிருக்கும் தம்பி;
திறன் பேசியிலேயே விளையாடிக் கொண்டிருக்கும் தங்கை;
காணொலி விளையாட்டுகளில் மூழ்கியிருக்கும் தோழன்;
எப்போதும் சமூக ஊடகங்களில் இயங்கியபடி இருக்கும் தோழி;

இவர்கள் எந்நேரமும் நடப்புலகில் இருக்காமல் கற்பனை உலகில் மிதப்பவர்களாக இருக்கிறார்கள்! இவர்களை நெறிப்படுத்தி நடைமுறை உலகில் செயல்பட வைக்க நீங்கள் செய்யும் முயற்சிகளைப் பட்டியல் இடுக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 12

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 15
Answer:

  • கபடி, சதுரங்கம் போன்ற விளையாட்டுகளை விளையாடச் செய்வேன்.
  • கோலி, பம்பரம் போன்ற விளையாட்டுகளை விளையாடச் செய்வேன்,
  • நூலகத்திற்கு அழைத்துச் செல்வேன்.
  • சமூகசேவை செய்ய பழக்குவேன்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
குலசேகர ஆழ்வார் ‘வித்துவக் கோட்டம்மா’ என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.
பூனையார் பால் சோற்றைக் கண்டதும் வருகிறார். ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே
அ) மரபு வழுவமைதி, திணை வழுவமைதி
ஆ) இட வழுவமைதி, மரபு வழுவமைதி
இ) பால் வழுவமைதி, திணை வழுவமைதி
ஈ) கால வழுவமைதி, இட வழுவமைதி
Answer:
இ) பால் வழுவமைதி, திணை வழுவமைதி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

குறுவினா

Question 1.
வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன் – இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?
Answer:
கோடையில் பள்ளி விடுமுறை என்பதால் ஆரல்வாய்மொழிக்குச் செல்லத் திட்டமிட்டிருக்கும் உறுதித்தன்மை நோக்கி காலவழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக இத்தொடர் அமைகிறது.

Quesiton 2.
“சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்கமாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார் – இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக.
Answer:
சீசர் எப்போதும் என் சொல் பேச்சைக் கேட்கும். புதியவர்களைப் பார்த்துக் குரைக்குமே தவிர கடிக்காது என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினான்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

சிறுவினா

Question 1.
நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது. வாழைத் தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது; தந்தை என்னிடம், “இலச்சுமி கூப்பிடுகிறாள், போய் பார்” என்றார். ‘இதோ சென்றுவிட்டேன்” என்றவாறே அங்குச் சென்றேன். துள்ளிய குட்டியைத் தடவிக்கொடுத்து, “என்னடா விளையாட வேண்டுமா?” என்று கேட்டு அவனை அவிழ்த்துவிட்டேன். என் தங்கை அங்கே வந்தாள், அவளிடம், “நீயும் இவனும் விளையாடுங்கள்” என்று கூறினேன். அவிழ்த்து விடப்பட்ட இலச்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள்.

இப்பத்தியிலுள்ள வழுக்களைத் திருத்தியும் வழுவமைதிகளைப் பட்டியலிட்டும் எழுது.
Answer:
திருத்தப்பட்ட வழுக்கள் :

  • நேற்றிரவு பெய்த மழை தொட்டியை நிறைத்தது.
  • வாழைத் தோட்டத்தில் கன்றுடன் நின்றிருந்த மாடு கதறியது.
  • துள்ளிய கன்றைத் தடவிக்கொடுத்த…..

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 1

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) தன்மை வினைகள் – 1. நடந்தாய், வந்தீர்
ஆ) முன்னிலை வினைகள் – 2. நீர், நீங்கள்
இ) படர்க்கை வினைகள் – 3. வந்தேன் வந்தோம்
ஈ) முன்னிலை பெயர்கள் – 4. வந்தான், சென்றான்
அ) 1, 2, 3, 4
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 1, 4, 2
ஈ) 2, 4, 1, 3
Answer:
இ) 3, 1, 4, 2

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 2.
பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) மருதன் – 1. பலர்பால்
ஆ) பெண்கள் – 2. ஒன்றன்பால்
இ) யானை – 3. ஆண்பால்
ஈ) பசுக்கள் – 4. பலவின்பால்
அ) 4, 3, 1, 2
ஆ) 3, 1, 2, 4
இ) 2, 4, 1, 3
ஈ) 4, 1, 3, 2
Answer:
ஆ) 3, 1, 2, 4

Question 3.
பால் என்பது ……………. உட்பிரிவு ஆகும்.
அ) திணையின்
ஆ) திணையின்
இ) காண்டத்தின்
ஈ) படலத்தின்
Answer:
ஆ) திணையின்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 4.
உயர்திணையின் பிரிவுகள் ………………
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
ஆ) மூன்று

Question 5.
அஃறிணையின் பிரிவுகள் ………………
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
அ) இரண்டு

Question 6.
இடம் ……………….. வகைப்படும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
Answer:
ஆ) மூன்று

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 7.
பொருத்திக் காட்டுக.
i) நான், யான், நாம், யாம் – 1. தன்மை வினைகள்
வந்தேன், வந்தோம் – 2. தன்மைப் பெயர்கள்
iii) நீ, நீர், நீவிர், நீங்க ள் – 3. முன்னிலை வினைகள்
iv) நடந்தாய், வந்தீர், சென்றீர்கள் – 4. முன்னிலைப் பெயர்கள்
அ) 2, 1, 4, 3
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 4, 3,1
ஈ) 3, 4, 2, 1
Answer:
அ) 2, 1, 4, 3

Question 8.
பொருத்திக் காட்டுக.
i) அவன் – தன்மை வினை
ii) பறந்தன – 2. முன்னிலை வினை
iii) நடந்தாய் – 3. படர்க்கை வினை
iv) வந்தேன் – 4. படர்க்கைப் பெயர்
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 1, 3
ஈ) 3, 4, 2, 1
Answer:
அ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 9.
பொருத்திக் காட்டுக.
i) செழியன் வந்தது – 1. கால வழு
ii) கண்ண கி உண்டான் – 2. இட வழு
iii) நீ வந்தேன் – 3. பால் வழு
iv) நேற்று வருவான் – 4. திணை வழு
அ) 4,3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 1, 3
ஈ) 2, 1, 3, 4
Answer:
அ) 4,3, 2, 11

Question 10.
ஒரு விரலைக் காட்டிச் சிறியதோ? பெரியதோ என்று கேட்பது……………….. வழு.
அ) விடை
ஆ) வினா
இ) மரபு
ஈ) கால
Answer:
ஆ) வினா

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 11.
கண்ணன் எங்கே இருக்கிறார் என்ற வினாவிற்குக் கண்ணாடி பைக்குள் இருக்கிறது என்று கூறுவது ……………. வழு.
அ) பால்
ஆ) வினா
இ) விடை
ஈ) மரபு
Answer:
இ) விடை

Question 12.
தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோட்டம் என்று கூறுவது ……………….. வழு.
அ) பால்
ஆ) வினா
இ) விடை
ஈ) மரபு
Answer:
ஈ) மரபு

Question 13.
பொருத்திக் காட்டுக.
i) என் அம்மை வந்தாள் – 1. பால் வழுவமைதி
ii) கத்துங் குயிலோசை என்றன் காதில் விழ வேண்டும் – 2. கால வழுவமைதி
iii) குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் – 3. மரபு வழுவமைதி
iv) வாடா ராசா மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது – 4. திணை வழுவமைதி
அ) 4, 3, 2, 1
ஆ) 2, 3, 1, 4
இ) 4, 2, 3, 1
ஈ) 3, 4, 1, 2
Answer:
அ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 14.
மாறன் என்பான் தன்னைப் பற்றிப் பிறரிடம் கூறும்போது, “இந்த மாறன் ஒரு நாளும் பொய் கூறமாட்டான் என்று கூறுவது ………………
அ) பால் வழுமமைதி
ஆ) திணை வழுவமைதி
இ) இட வழுவமைதி
ஈ) மரபு வழுவமைதி
Answer:
இ) இட வழுவமைதி]

Question 15.
பொருத்துக.
1. வீரன், அண்ணன், மருதன் – அ) பெண்பால்
2. மகள், அரசி, தலைவி – ஆ) பலர்பால்
3. மக்கள், பெண்கள், ஆடவர் – இ) ஒன்றன்பால்
4. யானை, புறா, மலை – ஈ) ஆண்பால்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
விடை :
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Question 16.
பொருத்துக.
1. நீ வந்தேன் – அ) இட வழாநிலை
2. நீ வந்தாய் – ஆ) இட வழு
3. நேற்று வருவான் – இ) கால வழாநிலை
4. நேற்று வந்தான் – ஈ) கால வழு
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 17.
பொருத்துக.
1. என் அம்மை வந்தாள் என்று மாட்டைக் கூறுவது – அ) பால் வழுவமைதி
2. வாடா இராசா, வாடா கண்ணா என மகளைத் தாய் அழைப்பது – ஆ) இடவழுவமைதி
3. இந்த மாறன் ஒரு நாளும் பொய் கூறமாட்டான் என மாறன் பிறரிடம் சொல்வது இ) கால வழுவமைதி
4. குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் – ஈ) திணைவழுவமைதி
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

குறுவினா

Question 1.
திணை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
திணை இரண்டு வகைப்படும். அவை: உயர்திணை, அஃறிணை.

Question 2.
பால் என்றால் என்ன? அதன் வகைகளைக் கூறு.
Answer:
பால் என்பது திணையின் உட்பிரிவு. பால் ஐந்து வகைப்படும். அவை:
ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 3.
உயர்திணைக்குரிய பால்கள் எத்தனை? அவை யாவை?
Answer:
உயர்திணைக்குரியப் பால்கள் மூன்று. அவை: ஆண்பால், பெண்பால், பலர்பால்.

Question 4.
அஃறிணைக்குரிய பால் பகுப்புகள் எத்தனை? அவை யாவை?
Answer:
அஃறிணைக்குரியப் பால் பிரிவுகள் இரண்டு. அவை: ஒன்றன்பால், பலவின்பால்.

Question 5.
உயர்திணைக்குரிய பால் பகுப்புகளைக் கூறுக.
Answer:

  • வீரன், அண்ணன், மருதன் – ஆண்பால் (ஒரு ஆணை மட்டும் குறிக்கும்)
  • மகள், அரசி, தலைவி – பெண்பால் (ஒன்றுக்கு மேற்பட்ட நபரைக் குறிக்கும்)
  • மக்கள், பெண்கள், ஆடவர் – பலர்பால் (ஒன்றுக்கு மேற்பட்ட நபரைக் குறிக்கும்)

Question 6.
அஃறிணைக்குரிய பால் பகுப்புகளைக் கூறுக.
Answer:

  • அஃறிணையில் ஒன்றனை மட்டும் குறிப்பது ஒன்றன்பால். எ.கா: யானை, புறா, மலை
  • அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால். எ.கா: பசுக்கள், மலைகள்.

Question 7.
இடம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
இடம் மூன்று வகைப்படும். அவை: தன்மை, முன்னிலை, படர்க்கை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 8.
வழு – வழா நிலை இவற்றிற்கிடையே உள்ள வேறுபாடுகளைக் கூறுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 2

Question 9.
வழு எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
வழு ஏழு வகைப்படும். அவை:
திணை வழு, பால் வழு, இட வழு , கால வழு, வினா வழு, விடை வழு, மரபு வழு.

Question 10.
வழுவமைதி என்றால் என்ன?
Answer:
இலக்கண முறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக் கொள்ளப்படுவது வழுவமைதி ஆகும்.

Question 11.
வழுவமைதி எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
வழுவமைதி ஐந்து வகைப்படும். அவை:
திணை வழுவமைதி, பால் வழுவமைதி, இட வழுவமைதி, கால வழுவமைதி, மரபு வழுவமைதி.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 12.
திணை வழுவமைதிக்குச் சான்று தந்து அதற்கான காரணத்தைக் கூறுக.
Answer:
எ.கா : “என் அம்மை வந்தாள்” என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது திணை வழு.
காரணம் : உவப்பின் காரணமாக அஃறிணை உயர்திணையாகக் கொள்ளப்பட்டது.

Question 13.
பால் வழுவமைதிக்குச் சான்று தந்து அதற்கான காரணத்தைக் கூறுக.
எ.கா : “வாடா ராசா, வாடா கண்ணா ” என்று தன் மகளைப் பார்த்துக் கூறுவது பால் வழுவமைதி.
காரணம் : உவப்பின் காரணமாக பெண்பால் ஆண்பாலாகக் கொள்ளப்பட்டது.

Question 14.
இட வழுவமைதிக்குச் சான்று தந்து அதற்கான காரணத்தைக் கூறுக.
Answer:
எ.கா : மாறன் என்பான் தன்னைப் பற்றி பிறரிடம் கூறும்போது, “இந்த மாறன் ஒரு நாளும் பொய் கூற மாட்டான்” எனக் கூறுதல்.
காரணம் : தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவதால் இடவழுவமைதி ஆயிற்று.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 15.
கால வழுவமைதிக்குச் சான்று தந்து அதற்கான காரணத்தைக் கூறுக.
Answer:
எ.கா : குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார். (வருவார் என்பதே சரி)
காரணம் : குடியரசுத் தலைவர் நாளை வருவார் என அமைதல் வேண்டும். வருகையின் உறுதித் தன்மை காரணமாக கால வழுவமைதியாக ஏற்றுக் கொள்கிறோம்.

Question 16.
மரபு வழுவமைதிக்குச் சான்று தந்து அதற்கான காரணத்தைக் கூறுக.
Answer:
எ.கா : “கத்துங் குயிலோசை என்றன் காதில் விழ வேண்டும்”-பாரதியார்.
(குயில் கூவும் – மரபு) காரணம் : குயில் கூவும் என்பது மரபு. பாரதியார் மகாகவி, அவர் குயில் கத்தும் என்று கூறியதால்
வழுவாயினும் மரபு வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

Question 17.
வீரன், அண்ண ன், மருதன் ஆகிய சொற்கள் எவ்வகைத் திணை எவ்வகைப் பால் எனக் குறிப்பிடுக.
Answer:

  • திணை : உயர்திணை
  • பால் : ஆண்பால்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 18.
மகள், அரசி, தலைவி ஆகிய சொற்கள் எவ்வகைத் திணை எவ்வகைப் பால் எனக் குறிப்பிடுக.
Answer:

  • திணை : உயர்திணை
  • பால் : பெண்பால்

Question 19.
மக்கள், பெண்கள், ஆடவர் ஆகிய சொற்கள் எவ்வகைத் திணை எவ்வகைப் பால் எனக் குறிப்பிடுக.
Answer:

  • திணை : உயர்திணை
  • பால் : பலர்பால்

Question 20.
யானை, புறா, மலைஆகிய சொற்கள் எவ்வகைத் திணை எவ்வகைப் பால் எனக் குறிப்பிடுக.
Answer:

  • திணை : அஃறிணை
  • பால் : ஒன்றன்பால்

Question 21.
பசுக்கள், மலைகள் ஆகிய சொற்கள் எவ்வகைத் திணை எவ்வகைப் பால் எனக் குறிப்பிடுக.
Answer:

  • திணை : அஃறிணை
  • பால் : பலவின்பால்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Question 22.
வழா நிலை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
வழாநிலை ஏழு வகைப்படும். அவையாவன:

  1. திணை வழாநிலை,
  2. பால் வழாநிலை,
  3. இடவழாநிலை,
  4. காலவழாநிலை,
  5. வினாவழாநிலை,
  6. விடைவழாநிலை,
  7. மரபுவழாநிலை

Question 23.
“நான் தேர்வில் தேர்ச்சியடைந்து விட்டேன்” என்று தேர்வு முடிவுகள் வெளிவரும் முன்பு கூறும் வழுவமைதி யாது?
Answer:
கால வழுவமைதி; நம்பிக்கையின் அடிப்படையில் கூறப்படுவது.

சிறுவினா

Question 1.
மூவிடப் பெயர்களைப் பெயர்/வினை அடிப்படையில் எடுத்துக்காட்டுடன் பட்டியலிடுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 3

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது

Qeuestion 2.
செழியன் வந்தது
கண்ணகி உண்டான்
நீ வந்தேன்
நேற்று வருவான்.
ஒரு விரலைக் காட்டிச் ‘சிறியதோ? பெரியதோ? என்று கேட்டல்.
கண்ணன் எங்கே இருக்கிறார்? என்ற வினாவிற்குக் கண்ணாடி பைக்குள் இருக்கிறது என்று விடையளித்தல். தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோட்டம் என்று கூறுதல் – இத்தொடர்களில் உள்ள வழு எவ்வகை வழு எனவும் வழுவை நீக்கியும் பட்டியலிடுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 இலக்கணம் - பொது - 4

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

Students can Download 10th Tamil Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

கற்பவை கற்றபின்

Question 1.
“அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத் திறன். ஏனெனில் அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பவற்றோடு முடிந்து விடுகிறது. கற்பனைத் திறனோ இந்த ஒட்டு மொத்தப் பேரண்டத்தையும் அளப்பது. இன்று நாம் அறிந்திருப்பதை மட்டுமன்று; இனி நாம் அறிந்து கொள்ளப் போவதையும் உள்ளடக்கியது” – ஐன்ஸ்டைன்.
“வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது. நிச்சயம் என் ஆராய்ச்சியில் நான் வெல்வேன். அதன்மூலம் மனித இனம் தொடர வழி வகுப்பேன்” – ஸ்டீபன் ஹாக்கிங்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

இவ்விருவரின் கூற்றுகளைப் பாடப்பகுதி உணர்த்தும் கருத்துகளோடு ஒப்பிட்டு உரையாடுக.
Answer:
மணி: அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத் திறன் என அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டைன் கூறியுள்ளாரே. அதைப் பற்றிய காரணம் என்னவாக இருக்கும்?
முகில்: அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பதோடு முடிந்து விடுகிறது. கற்பனைத் திறனோ இந்த ஒட்டு மொத்தப் பேரண்டத்தையும் அளந்து விடுகிறது. இன்று நாம் அறிந்திருப்பதை மட்டுமன்று; இனி நாம் அறிந்து கொள்ளப் போவதையும் உள்ளடக்கியது.
மணி: ஐன்ஸ்டைனது E = MC2 கோட்பாட்டை யாரும் ஏற்றுக் கொள்ளாததற்கான காரணம் இதுவாக இருக்குமோ?
முகில்: ஆம்! ஐன்ஸ்டைன் ஈர்ப்பலைகள் குறித்த முடிவுகளைக் கணிதச் சமன்பாடுகள் மூலம் கோட்பாடுகளாகச் சொன்னார். அவரது கோட்பாடுகளை அறிவுத்திறனுடன் கற்பனையையும் சேர்த்து யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. 100 ஆண்டுகளுக்குப் பின் ஈர்ப்பலைகள் இருப்பதை உலகம் கண்டு கொண்டது.
மணி: ‘வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும் வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது’ என்று ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன?

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

முகில்: ஆம் ஹாக்கிங்கின் கூற்றுக்கு அவரே சிறந்த உதாரணமாக இருக்கிறார்கள்.
மணி: எப்படி?
முகில்: 1963 ஆம் ஆண்டு பக்கவாதம் என்னும் நரம்பு நோயால் பாதிக்கப்பட்ட போது அவருக்கு வயது 21. மருத்துவர்கள் இவர் சில நாட்கள் மட்டுமே உயிரோடிருப்பார் என்றனர். ஆனால் மருத்துவ உலகமே மிரண்டு போகும்படி 53 ஆண்டுகள் இயங்கினார். 1985 இல் மூச்சுக்குழல் தடங்களால் பேசும் திறனை இழந்தார். எஞ்சியது கன்னத்தின் தசையசைவும் கண் சிமிட்டலும் மட்டுமே.
மணி: ஹாக்கிங்கின் உடல் நலக் குறைவிற்கும் தன்னம்பிக்கைக்கும் உள்ள தொடர்பு யாது?
முகில்: ஹாக்கிங் அவருடைய கன்னத்து அசைவுகள் மூலம் தன் கருத்தை தட்டச்சு செய்து வெளிப்படுத்தினார். கருந்துளை பற்றி ஆராய்ச்சி செய்து தன் கோட்பாடுகளை விண்மீன் இயக்கத்தோடு ஒப்பிட்டு உலகம் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கினார். 1988ஆம் ஆண்டு இவர் இயற்றிய காலத்தின் சுருக்கமான வரலாறு’ என்ற நூல் நாற்பது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அந்நூல் ஒரு கோடி படிகளுக்கு மேல் விற்பனையாகி உள்ளது.
மணி: கருந்துளைப் பெருவெடிப்பு ஆகியன பற்றிய அரிய உண்மைகள் அந்நூலில் உள்ளன. அறிவுத் தேடலில் உடல், உள்ளத் தடைகளைத் தகர்த்த மாமேதை ஸ்டீபன் ஹாக்கிங்.
முகில்: உண்மைதான். அவர்கூறியதத்துவத்திற்கு அவரேசிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்திருக்கிறார். இத்தகைய அறிஞர்களைப் பற்றிய செய்திகளை விளக்கிய தங்களுக்கு மிக்க நன்றி!

Question 2.
கருந்துளைச் சார்ந்த செய்தியை அறிவியல் இதழ் ஒன்றிற்குக் குறுங்கட்டுரையாக எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை - 3
முன்னுரை :
நமது பால்வீதியில் கோடிக்கணக்கான விண்மீன்கள் ஒளிர்கின்றன. அவற்றுள் நம் ஞாயிறும் ஒன்று விண்மீன்களின் ஆயுள் கால முடிவில் நிகழும் நிகழ்வுகளைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

விண்மீன் சுருக்கம் :
ஒரு விண்மீனின் ஆயுள் கால முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை கூடுகிறது. அதனால் விண்மீன் சுருங்கத் தொடங்குகிறது. விண்மீன் சுருங்கச் சுருங்க அதன் ஈர்ப்பாற்றல் உயர்ந்து கொண்டே சென்று அளவற்றதாகிறது. ஜான் வீலர் கருத்து கருந்துளை என்ற சொல்லையும் கோட்பாட்டையும் முதன் முதலில் வெளியிட்டவர் ஜான்வீலர். சுருங்கிய விண்மீனின் ஈர்ப்பெல்லைக்குள் செல்கிற எதுவும் ஏன் ஒளியும் கூட ஈர்க்கப்படும். இவ்வாறு உள்சென்ற எதுவும் வெளிவர முடியாததனால் இதனைக் கருந்துளை என்றார் ஜான் வீலர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

ஹாக்கிங் கதிர்வீச்சு :
சில நேரங்களில் உண்மை பொய்யையும் மிஞ்சுவதாக அமைகிறது. கருந்துளைப் பற்றிய உண்மைகளும் அப்படியே. ஹாக்கிங் மேற்கொண்ட கருந்துளை ஆராய்ச்சி முடிவு ஹாக்கிங் கதிர்வீச்சு’ என அழைக்கப்படுகிறது.

கருந்துளைக் கோட்பாடு :
கருந்துளையினுள் செல்லும் எந்த ஒன்றும் தப்பித்து வெளியே வர முடியாது. கருந்துளையின் ஈர்ப்பு எல்லையிலிருந்து கதிர்வீச்சுகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கருந்துளை உண்மையிலேயே கருப்பாக இருப்பதில்லை. கருந்துளையில் இருந்து ஒரு கட்டத்தில் கதிர் வீச்சும் அணுத்துகள்களும் கசியத் தொடங்கி இறுதியில் கருந்துளை வெடித்து மறைந்து விடும். இக்கோட்பாடுகளை ஹாக்கிங் கோட்பாடுகளாக வெளியிடாமல் விண்மீன் இயக்கத்தோடு ஒப்பிட்டு விளக்கியதால் உலகம் கருந்துளைக் கோட்பாட்டை எளிதில் புரிந்து கொண்டது.

முடிவுரை :
அண்டவெளியில் காணப்படும் கருந்துளை அழிவு ஆற்றல் என்று கருதப்பட்டது. ஆனால் ஹாக்கிங், கருந்துளைப் படைப்பின் ஆற்றல் என்று நிரூபித்தார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

நெடுவினா

Quesiton 1.
“அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் ‘விண்வெளிப் பயணம்’ என்னும் தலைப்பில் கற்பனைக் கதை ஒன்று எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை - 1
அறிமுகவுரை:
இலக்கியங்களில் நிலவிய அறிவியல் கோட்பாடுகளையும் நம்பிக்கைகளையும் அறியும் பொருட்டு நானும், எம் வகுப்பு மாணவர்களும், ஆசிரியர்கள் சிலரோடு ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப் பயணம் மேற்கொண்டோம்.

பேரண்டம்:
பேரண்டப் பெருவெடிப்பு, கருந்துளைகள் பற்றியதான ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஆராய்ச்சிகள் முக்கியமானவை. இப்பேரண்டம் பெருவெடிப்பினால் உண்டானதே என்பதற்கான சான்றுகளைக் கணிதவியல் அடிப்படையில் எங்களுக்கு விளக்கினார். ‘இப்புவியின் படைப்பில் கடவுள் போன்ற ஒருவர் பின்னணியில் இருந்தார்’ என்பதை மறுத்தார். பிரபஞ்சத்தை இயக்க வைக்கும் ஆற்றலாகக் கடவுள் என்ற ஒருவரைக் கட்டமைக்க வேண்டியதில்லை’ என்றார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

விண்மீன்கள்:
விண்வெளியில் பால்வீதியில் எங்கள் விண்வெளி ஓடம் சுற்றிக் கொண்டிருந்தது. அப்போது ஹ ாக்கின், ‘நமது பால் வீதியில் கோடிக்கணக்கான விண்மீன்கள் ஒளிருகின்றன. அவற்றுள் ஞாயிறும் ஒன்று. ஒரு விண்மீனின் ஆயுள் கால முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை கூடுகிறது. அதனால் விண்மீன் சுருங்கத் தொடங்குகிறது. விண்மீன் சுருங்கச் சுருங்க அதன் ஈர்ப்பாற்றல் உயர்ந்து கொண்டே சென்று அளவற்றதாகிறது என்று விளக்கினார்.

கதிர்வீச்சும் துகளும்:
“சில நேரங்களில் உண்மையானது புனைவை விடவும் வியப்பூட்டுவதாக அமைகிறது. அப்படி ஓர் உண்மைதான் கருந்துளைகள் பற்றியதும் என்பதை அறிந்து கொண்டோம். எப்படியெனில், கருந்துளையினுள் செல்லும் எந்த ஒன்றும் தப்பித்து வெளியே வர முடியாது. கருந்துளையின் ஈர்ப்பு எல்லையிலிருந்து கதிர்வீச்சுகள் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. கருத்துளை உண்மையிலேயே கருப்பாக இல்லை என்பதை நேரில் கண்டோம். அப்போது ஹாக்கிங், கருந்துளையிலிருந்து ஒரு கட்டத்தில் கதிர்வீச்சும் அணுத்துகள்களும் கசியத் தொடங்கி இறுதியில் வெடித்துவிடும் என்றார்.

முன்னர் அண்டவெளியில் காணப்படும் கருந்துளை அழிவு ஆற்றல் என்று கருதப்பட்டது. ஆனால் கருந்துளை என்பது படைப்பின் ஆற்றல் என்று எங்களிடம் ஹாக்கிங் விளக்கினார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

திரும்புதல்:
விண்வெளி ஓடம் பூமிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது பல வடிவிலான விண்கற்கள் மற்றும் தொலைவில் தூசுகள் போன்ற பால்வீதிகளையும் கண்டு அதனைப் பற்றிய சில கருத்துகளைப் பேசிக் கொண்டே பூமியை வந்தடைந்தோம். எங்களை வரவேற்க பலரும் கூடி வந்திருந்தனர்.

நிறைவுரை:
விண்வெளிப் பயணம் மேற்கொண்ட எங்களை வரவேற்றுப் பாராட்டி, வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்நிகழ்வுகள் அனைத்தும் எம் வாழ்வில் மறக்க முடியாதவையாகவே இருக்கின்றன.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகம் நிறுவப்பட்ட ஆண்டு…………………..
அ) 1978
ஆ) 1988
இ) 1972
ஈ) 1982
Answer:
ஆ) 1988

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

Question 2.
பெரியார் அறிவியல் தொழில்நுட்பக் கழகத்திலுள்ள காட்சிக் கூடங்கள்…………………..
அ) 8
ஆ) 9
இ) 10
ஈ) 15
Answer:
இ) 10

Question 3.
தற்காலத்தின்…………………..என்று புகழப்படுபவர் ஸ்டீபன் ஹாக்கிங்.
அ) விடிவெள்ளி
ஆ) நம்பிக்கை மனிதன்
இ) ஐன்ஸ்டைன்
ஈ) அரிஸ்டாட்டில்
Answer:
இ) ஐன்ஸ்டைன்

Question 4.
ஸ்டீபன் ஹாக்கிங் இங்கிலாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆண்டு வயது…………………..
அ) 1963, 21
ஆ) 1965, 23
இ) 1961, 19
ஈ) 1959, 17
Answer:
அ) 1963, 21

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

Question 5.
ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு ஏற்பட்ட நோய்…………………..
அ) காலரா
ஆ) தொழு நோய்
இ) பக்கவாதம்
ஈ) காய்ச்ச ல்
Answer:
இ) பக்கவாதம்

Question 6.
ஸ்டீபன் ஹாக்கிங் மூச்சுக்குழாய்த் தடங்கலால் பேசும் திறனை இழந்த ஆண்டு…………………..
அ) 1963
ஆ) 1983
இ) 1985
ஈ) 1973
Answer:
இ) 1985

Question 7.
பக்கவாதம் என்னும் நரம்பு நோய்ப் பாதிப்புடன் ஸ்டீபன் ஹாக்கிங் மேலும் இயங்கிய ஆண்டுகள்…………………..
அ) 23
இ) 43
ஆ) 21
ஈ) 53
Answer:
ஈ) 53

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

Question 8.
இப்பேரண்டம் பெருவெடிப்பினால் உருவானதே என்பதற்கான சான்றுகளை………………….. அடிப்படையில் ஸ்டீபன் ஹாக்கிங் விளக்கினார்.
அ) புவியியல்
ஆ) கணிதவியல்
இ) புள்ளியியல்
ஈ) வானியல்
Answer:
ஆ) கணிதவியல்

Question 9.
இப்புவியின் படைப்பில் கடவுள் என்ற ஒருவர் பின்னணியில் இருந்தார் என்பதை ஸ்டீபன் ஹாக்கிங்…………………..
அ) ஏற்றுக் கொண்டார்
ஆ) ஆய்வுக்கு உட்பட்டது என்றார்
இ) மறுத்தார்
ஈ) உலகம் முழுவதும் பரப்பினார்
Answer:
இ) மறுத்தார்

Question 10.
பிரபஞ்சத்தை இயக்க வைக்கும் ஆற்றலாகக் கடவுள் என்ற ஒருவரைக் கட்டமைக்க வேண்டியதில்லை என்று கூறியவர்…………………..
அ) ஸ்டீபன் ஹாக்கிங்
ஆ) வேர்ட்ஸ்வொர்த்
இ) அரிஸ்டாட்டில்
ஈ) கார்ல் மார்க்ஸ்
Answer:
அ) ஸ்டீபன் ஹாக்கிங்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

Question 11.
கருந்துளை என்ற சொல்லையும் கோட்பாட்டையும் முதலில் பயன்படுத்தியவர்…………………..
அ) ஸ்டீபன் ஹாக்கிங்
ஆ) ஜான் வீலர்
இ) வேர்டுஸ்மித்
ஈ) வாட்சன்
Answer:
அ) ஸ்டீபன் ஹாக்கிங்

Question 12.
ஸ்டீபன் ஹாக்கிங்கின் முன்னோடிகள்…………………..
i) ஜன்ஸ்டைன்
ii) நியூட்ட ன்
iii) கிரிகோர் மெண்டல்
அ) i, ii – சரி
ஆ) ii, ii – சரி
இ) மூன்றும் சரி
ஈ) மூன்றும் தவறு
Answer:
அ) i, ii – சரி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

Question 13.
நியூட்டன், ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோர் கணக்கியல் துறையின் லூகாசியன் பேராசிரியர் என்ற மதிப்பு மிகுந்த பதவியை வகுத்த பல்கலைக்கழகம்…………………..
அ) கொலம்பியா
ஆ) ஆக்ஸ்போர்டு
இ) கேம்பிரிட்ஜ்
ஈ) டிரான்ஸ்போர்டு
Answer:
இ) கேம்பிரிட்ஜ்

Question 14.
ஈர்ப்பலைகள் குறித்த முடிவுகளைக் கணிதச் சமன்பாடுகள் மூலம் கோட்பாடுகளாகச் சொன்னவர்
அ) ஐன்ஸ்டைன்
ஆ) ஜான் வீலர்
இ) ஸ்டீபன் ஹாக்கிங்
ஈ) சார்லஸ் டார்வின்
Answer:
அ) ஐன்ஸ்டைன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

Question 15.
ஐன்ஸ்டைன் காலத்தில் ………….. என்னும் கோட்பாட்டை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
அ) E = mc2
ஆ) F = cm2
இ) E = cm2
ஈ) F = mc2
Answer:
அ) E = mc2

Question 16.
ஐன்ஸ்டைன் ஈர்ப்பலைகள் இருப்பதாகக் கூறியதை உலகம் ……………………  ஆண்டுகளுக்குப் பின் கண்டு கொண்டது.
அ) 100
ஆ) 200
இ) 150
ஈ) 250
Answer:
அ) 1001

Question 17.
ஸ்டீபன் ஹாக்கிங் விளக்கிய கருந்துளைக் கோட்பாட்டை உலகம் எளிதில் புரிந்து கொள்ளக் காரணம்
அ) கணிதச் சமன்பாடுகள் மூலம் கோட்பாடுகளாகச் சொன்னதால்
ஆ) விண்மீன் இயக்கத்தோடு ஒப்பிட்டுக் கூறியதால்
இ) பருப்பொருள்களோடு ஒப்பிட்டுக் கூறியதால்
ஈ) பெருவெடிப்பைச் சான்று காட்டியதால்
Answer:
ஆ) விண்மீன் இயக்கத்தோடு ஒப்பிட்டுக் கூறியதால்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

Question 18.
அமெரிக்காவின் உயரிய விருதான அதிபர் விருதினைப் பெற்றவர் …………………….
அ) ஸ்டீபன் ஹாக்கிங்
ஆ) அன்னை தெரசா
இ) ஹெலன் ஹெல்லர்
ஈ) கிரிகோல் மெண்டல்
Answer:
அ) ஸ்டீபன் ஹாக்கிங்

Question 19.
ஸ்டீபன் ஹாக்கிங் பெற்றுள்ள விருதுகளைக் கண்டறிக.
i) ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விருது
ii) உல்ஃப் விருது
iii) காப்ளி பதக்கம்
iv) அடிப்படை இயற்பியல் பரிசு
அ) i, ii – சரி
ஆ) i, ii, iii – சரி
இ) i, iv – சரி
ஈ) நான்கும் சரி
Answer:
ஈ) நான்கும் சரி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

Question 20.
கலீலியோவின் நினைவு நாளில் பிறந்து, ஐன்ஸ்டைனின் பிறந்த நாளில் இறந்தவர் …………………….
அ) நியூட்டன்
ஆ) ஹெலன் கெல்லர்
இ) ஸ்டீபன் ஹாக்கிங்
ஈ) கிரிகோர் மெண்டல்
Answer:
இ) ஸ்டீபன் ஹாக்கிங்

Question 21.
ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய நூல்களுள் ‘காலத்தின் சுருக்கமான வரலாறு’ என்ற நூல்……………..மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
அ) 30
ஆ) 40
இ) 50
ஈ) 70
Answer:
ஆ) 40

Question 22.
ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய ‘காலத்தின் சுருக்கமான வரலாறு’ வெளிவந்த ஆண்டு……………………..
அ) 1972
ஆ) 1976
இ) 1982
ஈ) 1988
Answer:
ஈ) 1988

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

Question 23.
பெருவெடிப்பு, கருந்துளை ஆகியவை பற்றிய அரிய உண்மைகளைப் பொதுமக்களிடையே பரப்பி, ஒரு கோடிப் படிகளுக்கு மேல் விற்பனையான நூல்…………
அ) காலத்தின் சுருக்கமான வரலாறு
ஆ) ஞாலத்தின் சுருக்கமான வரலாறு
இ) ஹாக்கிங்கின் தத்துவங்கள் ஈ) பெருவெடிப்பும் கருந்துளையும்
Answer:
அ) காலத்தின் சுருக்கமான வரலாறு

Question 24.
“கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை
திரு மாவியல் நகர்க் கருவூர் முன்துறை” என்று குறிப்பிடும் நூல்?
அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) கலித்தொகை
ஈ) பரிபாடல்
Answer:
அ) அகநானூறு

Question 25.
“திரு மாவியல் நகர்க் கருவூர் முன்துறை” என்பதில் குறிப்பிடப்படும் மாவட்டம்
அ) கரூர்
ஆ) பெரம்பலூர்
இ) தஞ்சாவூர்
ஈ) திருச்சி
Answer:
அ) கரூர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

Question 26.
………………. இல் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா நாயகர் என்ற சிறப்பை ஸ்டீபன் ஹாக்கிங் பெற்றார்.
அ) 2010
ஆ) 2005
இ) 2007
ஈ) 2012
Answer:
ஈ) 2012

Question 27.
ஸ்டீபன் ஹாக்கிங் பங்கேற்ற தொலைக்காட்சித் தொடர்கள்
i) அடுத்த தலை முறை
ii) முந்தைய தலை முறை
iii) பெருவெடிப்புக் கோட்பாடு
iv) சிறுவெடிப்புக் கோட்பாடு
அ) i, ii – சரி
ஆ) i, iii – சரி
இ) iii, iv – சரி
ஈ) நான்கும் சரி
Answer:
ஆ) i, ii – சரி

Question 28.
ஸ்டீபன் ஹாக்கிங் சூடான காற்று நிரம்பிய பலூனில் வானில் பறந்து தனது………….. ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
அ) 40
ஆ) 50
இ) 60
ஈ) 70
Answer:
இ) 60

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

Question 29.
ஸ்டீபன் ஹாக்கிங் ………………. என்ற விமானத்தில் பூஜ்ஜிய ஈர்ப்பு விசைப் பயணத்தை மேற்கொண்டு எடையற்ற தன்மையை உணர்ந்தார்.
அ) போயிங் 725
ஆ) போயிங் 726
இ) போயிங் 727
ஈ) போயிங் 729
Answer:
இ) போயிங் 727

Question 30.
அறிவுத் தேடலில் உடல், உள்ளத் தடைகளைத் தகர்த்த மாமேதை…………………………
அ) ஸ்டீபன் ஹாக்கிங்
ஆ) எடிசன்
இ) நியூட்டன்
ஈ) மேரி கியூரி
Answer:
அ) ஸ்டீபன் ஹாக்கிங்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

Question 31.
தலை விதிதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என நம்புபவர்களைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புதான் வருகிறது. விதிதான் தீர்மானிக்கிறது என்றால் சாலையைக் கடக்கும் போது ஏன் இருபுறமும் பார்த்துக் கடக்கிறார்கள்? என்று கூறியவர் ……………
அ) அரிஸ்டாட்டில்
ஆ) பெர்னாட்ஷா
இ) ஸ்டீபன் ஹாக்கிங்
ஈ) டெமாதனிஸ்
Answer:
இ) ஸ்டீபன் ஹாக்கிங்

Question 32.
அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத்திறன் என்று கூறியவர்
அ) ஐன்ஸ்டைன்
ஆ) நியூட்டன்
இ) ஸ்டீபன் ஹாக்கிங்
ஈ) எடிசன்
Answer:
அ) ஐன்ஸ்டைன்

Question 33.
வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது. நிச்சயம் என் ஆராய்ச்சியில் நான் வெல்வேன். அதன் மூலம் மனித இனம் தொடர வழி வகுப்பேன் என்று கூறியவர் ………..
அ) ஐன்ஸ்டைன்
ஆ) நியூட்டன்
இ) ஸ்டீபன் ஹாக்கிங்
ஈ) எடிசன்
Answer:
இ) ஸ்டீபன் ஹாக்கிங்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

கூடுதல் வினா

நெடுவினா

Question 1.
“விண்ணைத் தாண்டிய நம்பிக்கை” கதையினைச் சுருக்கி எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை - 2
முன்னுரை:
உண்மையைக் கண்டறியும் அறிவியல் கொள்கை போற்றுதலுக்குரியது ஆகும். தன்னால் எந்த இயக்கமும் செய்ய இயலாத நிலையிலும், அறிவியலின் உண்மைகளைச் சொன்ன ஒருவர் ஸ்டீபன் ஹாக்கிங். அவரின் பாராட்டுக்குரிய செயல்களைக் காண்போம்.

தளராத நம்பிக்கை :
21ஆம் அகவையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார் ஹாக்கிங். மருத்துவ உலகமே மிரண்டு போகுமளவு மேலும் 53 ஆண்டுகள் இயங்கினார். மூச்சுக்குழாய் தடங்களால் பேச்சை இழந்தார். பேசும் திறனை இழந்தபோதும் கன்னத்தசை அசைவு, கண் சிமிட்டல் மூலம் தன் கருத்துகளைக் கணினியில் தட்டச்சு செய்து வெளிப்படுத்தினார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.4 விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை

ஹாக்கிங் கதிர்வீச்சு:
பேரண்டப் பெருவெடிப்பினால் உருவானதே இந்தப் புனித பூமி ஆகும். ஸ்டீபன் ஹாக்கிங் அமெரிக்க அறிவியல் அறிஞர் ஜான் வீலரின் கருந்துளைக் கோட்பாட்டை ஆராய்ச்சி செய்தார். கருந்துளையில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சும் அணுத்துகள்களும் இறுதியில் வெடித்து மறையும். கருந்துளைக்குள் செல்லும் எந்த ஒன்றும் தப்பித்து வெளிவர இயலாது. இந்த ஆராய்ச்சியின் முடிவே ‘ஹாக்கிங் கதிர்வீச்சு’ எனப்படுகிறது.

சிறப்புகள்: அமெரிக்காவின் உயரிய விருதான அதிபர் விருது, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விருது, உல்ப் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றார். 2012 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா நாயகர் என்ற சிறப்பைப் பெற்றார்.

முடிவுரை:
“பூ ஒற்றைக் காலில் நிற்பதால் ஊனம் என்று கருதுவதில்லை ” அதுபோல, தன் உடல் இயலாமையைப் பொருட்படுத்தாமல் சாதனைப்பூவாகி அறிவியல் உலகில் திகழ்ந்த ஹாக்கிங்கே நமக்குத் தன்னம்பிக்கைப் பாடம் எனலாம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Students can Download 10th Tamil Chapter 4.3 பரிபாடல் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 4.3 பரிபாடல்

கற்பவை கற்றபின்

Question 1.
பரிபாடல் இசைப்பாடல் ஆகும். பாடப்பகுதியின் பாடலை இசையுடன் பாடி மகிழ்க.
Answer:
(மாணவர் செயல்பாடு)

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Question 2.
பரிபாடல் காட்டும் பெருவெடிப்புக் காட்சியைப் படங்களாக வரைந்து பொருத்தமான செய்திகளுடன் வழங்குக.
Answer:
இந்த அண்டப் பெருவெளியில் நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன. இப்பால் வீதிகள் தூசுகள் போன்று தோன்றும் இப்பிரபஞ்சம் உருவாக பெருவெடிப்புக் கொள்கையே காரணம். இந்த பெருவெடிப்புக் கொள்கைக்கு முன் எதுவுமே இல்லா பெருவெளி மட்டுமே இருந்தது.

இன்றைய அறிவியல் கொள்கைகளின்படி இந்த பிரபஞ்சமானது கிட்டத்தட்ட பதினான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த பெருவெடிப்பும் என்ற ஒரு சம்பவத்துடனே தோற்றம் பெற்றதாக நம்பப்படுகிறது. இவ்வாறு பெருவெடிப்பு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு பிரபஞ்சத்தின் தோற்றத்தினை விளக்கும் முறையினைப் பெருவெடிப்புக் கொள்கை என்கிறோம். இதைப் பரிபாடல் எதுவுமே இல்லாத பெருவெளியில் அண்டத் தோற்றத்துக்கு காரணமான கரு பேரொலியுடன் தோன்றியது என்கிறது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல் - 1

பெருவெடிப்பிற்குப் பின் உருவமில்லாத காற்று முதலான பூதங்களின் அணுக்களுடன் வளர்கின்ற வானம் முதலிய பூதங்கள் உருவாகின. அந்த அணுக்களின் ஆற்றலால் பருப்பொருள் சிதறின. இதனால் நெருப்புப் பந்து போல பூமி உருவாகியது. தொடர்ந்து பெய்த மழை வெள்ளத்தால் பூமி மூழ்கியது. பின்னர் இப்புவி உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கித் தந்ததாலும், சூழல் மாற்றத்தாலும் உயிர்கள் தோன்றி நிலைபெற்றன எனப் பரிபாடல் குறிப்பிட்டுள்ளது. இப்பிரபஞ்சமானது விரிவடைந்து கொண்டே செல்கின்றது என்பதனை 1929ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளரான எட்வின் ஹப்பிள் கண்டறிந்துள்ளார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பரிபாடல் அடியில் ‘விசும்பும் இசையும்’ என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?
அ) வானத்தையும் பாட்டையும்
ஆ) வானத்தையும் புகழையும்
இ) வானத்தையும் பூமியையும்
ஈ) வானத்தையும் பேரொலியையும்
Answer:
ஈ) வானத்தையும் பேரொலியையும்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

குறுவினா

Question 1.
உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல் வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.
Answer:
நிலம், நீர், காற்று, வானம், நெருப்பு.

நெடுவினா

Question 1.
நம் முன்னோர் அறிவியல் கருத்துகளை இயற்கையுடன் இணைத்துக் கூறுவதாகத் தொடங்குகின்ற பின்வரும் சொற்பொழிவைத் தொடர்ந்து நிறைவு செய்க.
பேரன்பிற்குரிய அவையோர் அனைவருக்கும் வணக்கம்! இன்று இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுடன் அறிவியலை நான்காம் தமிழாகக் கூறுகின்றனர். ஆதிகாலந்தொட்டு இயங்கி வரும் தமிழ் மொழியில் அறிவியல் என்பது தமிழர் வாழ்வியலோடு கலந்து கரைந்து வந்துள்ளதை இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். அண்டத்தை அளந்தும், புவியின் தோற்றத்தை ஊகித்தும் கூறும் அறிவியல் செய்திகள் இலக்கியங்களில் உள்ளன.
சங்க இலக்கியமான பரிபாடலில்……. பூமியின் தோற்றம் குறித்து சொல்லப்பட்டுள்ளது.
Answer:

  •  எதுவுமே இல்லாத பெருவெளியில் அண்டத் தோற்றத்துக்குக் காரணமான கரு பேரொலியுடன் தோன்றியது.
  • உருவமில்லாத காற்று முதலான பூதங்களின் அணுக்களுடன் வளர்கின்ற வானம் என்னும் முதல் பூதங்கள் உருவாகின.
  • அந்த அணுக்களின் ஆற்றல் கிளர்ந்து பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல காலங்கள் கடந்தது.
  • பின்னர் பூமி குளிரும்படியாகத் தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது.
  • மீண்டும் மீண்டும் நிறை வெள்ளத்தில் இப்பெரிய புவி மூழ்கி உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றியது.
  • இச்சூழல் மாற்றத்தினால் உயிர்கள் தோன்றி நிலை பெற்று வாழ்கின்றன.
  • புவி உருவாகிய நிகழ்வை அறிவியல் அறிஞர்கள் கண்டறியும் முன்பே நம் தமிழர் கண்டறிந்தனர் என்பது தமிழருக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியும் பெருமைக்குரிய செயலுமாகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

இலக்கணக் குறிப்பு.

ஊழ்ஊழ் – அடுக்குத் தொடர்
வளர் வானம் – வினைத்தொகை
செந்தீ – பண்புத்தொகை
வாரா (ஒன்றன்) – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
தோன்றி, மூழ்கி – வினையெச்சங்கள்
கிளர்ந்த – பெயரெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல் - 2

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடு.
1. தண்பெயல் – வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த
2. ஆர் தருபு – செறிந்து திரண்டு
3. பீடு – குளிர்ந்த மழை
4. ஈண்டி – சிறப்பு
அ) 1, 3, 2, 4
ஆ) 3, 2, 4, 1
இ) 4, 2, 1, 3
ஈ) 3, 1, 4, 2
Answer:
ஈ) 3, 1, 4, 2

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Question 2.
இதுவரைக்கும் நமக்குக் கிடைத்துள்ள பரிபாடல் நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?
அ) 24
ஆ) 34
இ) 44
ஈ) 54
Answer:
அ) 241

Question 3.
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
அ) பரிபாடல்
ஆ) முல்லைப் பாட்டு
இ) நாலடியார்
ஈ) மூதுரை
Answer:
அ) பரிபாடல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Question 4.
‘விசும்பில் ஊழி’ எனத் தொடங்கும் பரிபாடலை எழுதியவர்.
அ) நக்கீரர்
ஆ) மருதனார்
இ) கீரந்தையார்
ஈ) ஓதலாந்தையார்
Answer:
இ) கீரந்தையார்

Question 5.
பரிபாடல் “ ……………….. ” என்னும் புகழுடையது.
அ) நற்பரிபாடல்
ஆ) புகழ் பரிபாடல்
இ) ஓங்கு பரிபாடல்
ஈ) உயர் பரிபாடல்
Answer:
இ) ஓங்கு பரிபாடல்

Question 6.
சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல் …………………
அ) நற்றிணை
ஆ) முல்லைப்பாட்டு
இ) பட்டினப் பாலை
ஈ) பரிபாடல்
Answer:
ஈ) பரிபாடல்

Question 7.
பரிபாடலில் எழுபது பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளவர்கள் ………………………
அ) புலவர்கள்
ஆ) வரலாற்று ஆய்வாளர்கள்
இ) இலக்கிய ஆய்வாளர்கள்
ஈ) உரையாசிரியர்கள்
Answer:
ஈ) உரையாசிரியர்கள்

Question 8.
எட்வின் ஹப்பிள் என்பவர்………………….
அ) அமெரிக்க மருத்துவர்
ஆ) பிரெஞ்சு ஆளுநர்
இ) அமெரிக்க வானியல் அறிஞர்
ஈ) போர்ச்சுக்கீசிய மாலுமி
Answer:
இ) அமெரிக்க வானியல் அறிஞர்

Question 9.
எட்வின் ஹப்பிள் ………………..இல் நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன என்று நிரூபித்தார்.
அ) 1921
ஆ) 1821
இ) 1924
ஈ) 1934
Answer:
இ) 19241

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Question 10.
“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும்.
சிறிய ஆகப் பெரியோன் தெரியின்” – என்று குறிப்பிடும் நூல்?
அ) பரிபாடல்
ஆ) கலித்தொகை
இ) பெருமாள் திருமொழி
ஈ) திருவாசகம்
Answer:
ஈ) திருவாசகம்

Question 11.
பொருத்திக் காட்டுக.
i) ஊழ் ஊழ் – 1. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
iii) வளர் வானம் – 2. பண்புத்தொகை
iii) செந்தீ – 3. வினைத்தொகை
iv) வாரா – 4. அடுக்குத் தொடர்
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 2, 1
இ) 2, 4, 1, 3
ஈ) 4, 2, 1, 3
Answer:
அ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Question 12.
பொருத்திக் காட்டுக.
i) விசும்பு – 1. சிறப்பு
ii) ஊழி – 2. யுகம்
iii) ஊழ் – 3. வானம்
iv) பீடு – 4. முறை
அ) 3, 2, 4, 1
ஆ) 4, 3, 2, 1
இ) 1, 2, 3, 4
ஈ) 3, 4, 1, 2
Answer:
அ) 3, 2, 4, 1

Question 13.
‘கிளர்ந்த’ என்னும் சொல்லைப் பிரிக்கும் முறை ………………
அ) கிளர்ந்து + அ
ஆ) கிளர் + த் + த் + அ
இ) கிளர் + ந் + த் + அ
ஈ) கிளர் + த்(ந்) + த் + அ
Answer:
ஈ) கிளர்+த்(ந்)+த்+அ

Question 14.
முதல் பூதம் எனப்படுவது ………………..
அ) வானம்
ஆ) நிலம்
இ) காற்று
ஈ) நீர்
Answer:
அ) வானம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Question 15.
“கரு வளர் வானத்து இசையில் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்”
– இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள இலக்கிய நயம்?
அ) எதுகை
ஆ) மோனை
இ) இயைபு
ஈ) அந்தாதி
Answer:
அ) எதுகை

Question 16.
முதல் பூதம் …………..
அ) வானம்
ஆ) நிலம்
இ) நீர்
ஈ) காற்று
Answer:
அ) வானம்

Question 17.
பரிபாடலில் புவிக்குக் கூறப்பட்ட உவமை ……………………..
அ) நெருப்புப் பந்து
ஆ) உருவம் இல்லாத காற்று
இ) வெள்ளம்
ஈ) ஊழி
Answer:
அ) நெருப்புப் பந்து

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Question 18.
“விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல” – இவ்வடியில் அமைந்துள்ள பெரும்பான்மை நயம் ……………….
அ) எதுகை
ஆ) மோனை
இ) முரண்
ஈ) இயைபு
Answer:
ஆ) மோனை

Question 19.
நெருப்புப்பந்தாய் வந்து குளிர்ந்தது ……………
அ) பூமி
ஆ) காற்று
ஈ) நீர்
Answer:
அ) பூமி

Question 20.
“விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல” – இவ்வடியில் ‘விசும்பு’ என்னும் சொல்லின் பொருள் ………………….
அ) வானம்
ஆ) காற்று
இ) யுகம்
ஈ) முறை
Answer:
அ) வானம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Question 21.
“விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல” – இவ்வடியில் ‘ஊழி’ என்னும் சொல்லின் பொருள் ………………….
அ) வானம்
ஆ) காற்று
இ) யுகம்
ஈ) முறை
Answer:
இ) யுகம்

Question 22.
“விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல” – இவ்வடியில் ‘ஊழ்’ என்னும் சொல்லின் பொருள் ……………………
அ) வானம்
ஆ) காற்று
இ) யுகம்
ஈ) முறை
Answer:
ஈ) முறை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Question 23.
1300ஆண்டுகளுக்கு முன் திருஅண்டப்பகுதி பற்றிக் கூறியவர் ……………………
அ) மாணிக்கவாசகர்
ஆ) கீரந்தையார்
இ) பெருஞ்சித்திரனார்
ஈ) கபிலர்
Answer:
அ) மாணிக்கவாசகர்

Question 24.
“தண்பெயல் தலைஇய ஊழியும்” இதில் ‘குளிர்ந்த மழை’ என்னும் பொருள் தரும் சொல் ……………………
அ) தண்பெயல்
ஆ) தலை
இ) இய
ஈ) ஊழி
Answer:
அ) தண்பெயல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

குறுவினா

Question 1.
சங்க இலக்கிய நூல்கள் மூலம் நீவீர் அறிந்து கொள்ளும் செய்தி யாது?
Answer:

  • ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கை முறை,
  • அறிவாற்றல்,
  • சமூக உறவு,
  • இயற்கையைப் புரிந்து கொள்ளும் திறன்.

Question 2.
பரிபாடல் நூல் குறிப்பு வரைக.
Answer:

  • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று பரிபாடல் – அகம் புறம் சார்ந்த நூல்.
  • இந்நூல் “ஓங்கு பரிபாடல்” என்னும் புகழுடையது.
  • சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல்.
  • உரையாசிரியர்கள் எழுபது பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர்.
  • 24 பாடல்களே கிடைத்துள்ளன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Question 3.
அண்டப்பகுதி குறித்து மாணிக்கவாசகர் குறிப்பிடும் செய்தி யாது?
Answer:

  • அண்டப்பகுதியின் உருண்டை வடிவம் ஒப்பற்ற வளமான காட்சியும் ஒன்றுடன் ஒன்று ஈர்ப்புடன் நூறுகோடிக்கும் மேல் விரிந்து நின்றன.
  • கதிரவனின் ஒளிக்கற்றையில் தெரியும் தூசுத்துகள் போல அவை நுண்மையாக இருக்கின்றன.

Question 4.
பால்வீதி குறித்து எட்வின் ஹப்பிள் நிரூபித்துக் கூறிய செய்தியை எழுது.
Answer:

  • அண்டப் பெருவெளியில் நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால் வீதிகள் உள்ளன.
  • வெளியே எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன.
  • வெளியே நின்று அதைப் பார்த்தோமெனில் சிறுதூசி போலக் கோடிக்கணக்கான பால்வீதிகள் தூ சுகளாகத் தெரியும்.

Question 5.
பூமி வெள்ளத்தில் மூழ்கக் காரணம் என்ன?
Answer:
தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது.

Question 6.
“மீண்டும் பீடு உயர்பு ஈண்டி , அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும்” – தொடர் பொருள் விளக்குக.
Answer:
மீண்டும் மீண்டும் நிறைவெள்ளத்தில் மூழ்குதல் நடந்த இப்பெரிய உலகத்தில், உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றியது, அச்சூழலில் உயிர்கள் தோன்றி நிலை பெறும்படியான ஊழிக்காலம் வந்தது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Question 7.
“விசும்பில் ஊழி ஊழ்” என்பதில் விசும்பு, ஊழி, ஊழ் ஆகிய சொற்களின் பொருள் யாது?
Answer:

  • விசும்பு – வானம்
  • ஊழி – யுகம்
  • ஊழ் – முறை

சிறுவினா

Question 1.
அண்டப் பெருவெளி குறித்து மாணிக்கவாசகர் மற்றும் எட்வின் ஹப்பிள் ஆகியோர் மூலம் அறியப்படும் செய்தி யாது?
Answer:
மாணிக்கவாசகர் கூற்று :

  • அண்டப் பகுதியின் உருண்டை வடிவம், ஒப்பற்ற வளமான காட்சியும் ஒன்றுடன் ஒன்று ஈர்ப்புடன் நூறு கோடிக்கும் மேல் விரிந்து நின்றன.
  • “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்” என்னும் திருவாசகப் பாடலில் மேற்கண்ட செய்தியை 1300 ஆண்டுகளுக்கு முன் மாணிக்கவாசகர் குறிப்பிட்டுள்ளார்.

எட்வின் ஹப்பிள் கூற்று :

  • அண்டப் பெருவெளியில் நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன.
  • வெளியே நின்று அதைப் பார்த்தோமெனில் சிறு தூசி போலக் கோடிக்கணக்கான பால்வீதிகள் தூசுகளாகத் தெரியும்.
  • மேற்கண்ட செய்தியை அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் 1924 இல் நிரூபித்தார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

Question 2.
“மீண்டும் பீடு உயர்பு ஈண்டி , அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும்” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம் :
இவ்வடிகள் பரிபாடலில் கீரந்தையார் பாடலில் இடம்பெறுகின்றது.

பொருள்:
உயிர்கள் தோன்றி நிலைபெறுதல்.

விளக்கம் :
மீண்டும் மீண்டும் நிறைவெள்ளத்தில் மூழ்குதல் நடந்த இப்பெரிய உலகத்தில், உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றியது, அச்சூழலில் உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியான
ஊழிக்காலம் வந்தது.

Question 3.
பால்வீதிகள் கண்டுபிடிப்பில், “எட்வின் ஹப்பிளுக்கு முன்னோடி மாணிக்கவாசகர்” என்பதை நிரூபிக்க.
Answer:
எட்வின் ஹப்பிள்:
நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன. வெளியில் நின்று பார்த்தால் , சிறு தூசி போல கோடிக்கணக்கில் பால்வீதிகள் தூசுகளாகத் தெரியும். இதனை 1924 இல் அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் நிரூபித்தார்.

மாணிக்கவாசகர்:
1300 ஆண்டுகளுக்கு முன் திருவாசகத்தில் மாணிக்கவாசகர் திரு அண்டப்பகுதியில்,

“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
…………………. ………………….
சிறிய ஆகப் பெரியோன் தெரியின்”

– என்ற அடிகள் பால்வீதிகள் பற்றிய கருத்துகளைக் கூறுகின்றது. இல்லத்துள் நுழையும் கதிரவனின் ஒளிக் கற்றையில் தெரியும் தூசுத் துகள்போல பால்வீதிகள் நுண்மையாக இருக்கின்றன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.3 பரிபாடல்

பால்வீதிகள் கண்டுபிடிப்பில், “எட்வின் ஹப்பிளுக்கு முன்னோடி மாணிக்கவாசகர்” என்பதை அறியமுடிகின்றது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 1.3 இரட்டுற மொழிதல்

Students can Download 10th Tamil Chapter 1.3 இரட்டுற மொழிதல் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 1.3 இரட்டுற மொழிதல்

கற்பவை கற்றபின்

Question 1.
அ) காலை நேரம் ஒரு நிகழ்ச்சிக்காகத் தொடர்வண்டியில் வந்து இறங்கினார் தமிழறிஞர் கி.வா. ஜகந்நாதன். அவரை மாலையிட்டு வரவேற்றனர். அப்போது கி.வா.ஜ., “அடடே! காலையிலேயே மாலையும் வந்துவிட்டதே!” என்றார். எல்லோரும் அந்தச் சொல்லின் சிலேடைச் சிறப்பை மிகவும் சுவைத்தனர்.

ஆ) இசை விமரிசகர் சுப்புடுவின் விமரிசனங்களில் நயமான சிலேடைகள் காணப்படும். ஒரு முறை ஒரு பெரிய வித்துவானுடைய இசைநிகழ்ச்சியை விமர்சனம் செய்யும் போது அவர் குறிப்பிட்டது: “அன்று கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல், குரலிலும் கம்மல்.”

இ) தமிழறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதன் பல் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்ற நண்பர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தபோது “இவர் பல்துறை வித்தகர்” என்று குறிப்பிட்டார்.

இவைபோன்ற பல சிலேடைப் பேச்சுகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அவற்றைத் தொகுத்துச் சொல்நயங்களைப் பதிவு செய்து கலந்துரையாடுக.
Answer:
ஆசிரியர் : இன்று வகுப்பிற்கு புதிதாக வந்த மாணவன் எங்கே?
மாணவன் : இதோ, உள்ளேன் ஐயா. (மாணவன் வகுப்பின் கடைசி இருக்கையிலிருந்து கூறுகிறான்)
ஆசிரியர் : உன் பெயர் என்ன?
மாணவன் : கவியரசன்.
ஆசிரியர் : அப்படியானால் உனக்கு இருக்க வேண்டிய நீண்ட வாலையும் கூர்மையான நகங்களையும் காணவில்லையே.
[மாணவர்கள் அனைவரும் காரணம் புரியாமல் சிரிக்கின்றனர். அதற்கு ஆசிரியர் கூறிய விளக்கம் பின்வருமாறு அமைந்தது.] ‘கவி என்றால் குரங்கு என்று இன்னொரு பொருளும் உண்டு. ஆகவேதான் நீ குரங்குகளின் அரசனானால் உன் வாலையும், கூரிய நகங்களையும் எங்கே என்றேன்’ என விளக்கினார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 1.3 இரட்டுற மொழிதல்

Question 2.
மொழியின் சிறப்புகளைப் பாடும் கவிதைகளுள் உங்களுக்குப் பிடித்தவற்றை வகுப்பறையில் படித்துக்காட்டுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 1.3 இரட்டுற மொழிதல் - 4

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘மெத்த வணிகலன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது
அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்
ஈ) வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்
Answer:
அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 1.3 இரட்டுற மொழிதல்

குறுவினா

Question 1.
தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.
Answer:
ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது இரட்டுற மொழிதல் அணி என்பர். இதனை சிலேடை அணி என்றும் அழைப்பர்.
எ.கா: சீனிவாசன் பாற்கடலில் துயில் கொள்கிறான்.

– இத்தொடர் எவ்வித மாற்றமுமின்றி இரண்டு விதமான பொருளைத் தருகிறது.

  • சீனியில் (சர்க்கரை) வாசம் செய்யும் எறும்பு பாலில் இறந்து மிதக்கிறது.
  • சீனிவாசகனாகிய திருமால் பாற்கடலில் துயில் கொள்கிறார்.

சிறுவினா

Question 1.
தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 1.3 இரட்டுற மொழிதல் - 3

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘தமிழ், ஆழி இரண்டுக்கும் பொருள்படும் படியான’ – இரட்டுற மொழிதலணி அமைய பாடிய ஆசிரியர் யார்?
அ) தேவநேயப் பாவாணர்
ஆ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
இ) தமிழழகனார்
ஈ) எழில் முதல்வன்
Answer:
இ) தமிழழகனார்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 1.3 இரட்டுற மொழிதல்

Question 2.
கடல் தரும் சங்குகளின் வகைகள் எத்தனை?
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
ஆ) மூன்று

Question 3.
கடல் தன் அலையால் எதைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது?
அ) மணல்
ஆ) சங்கு
இ) கப்பல்
ஈ) மீனவர்கள்
Answer:
ஆ) சங்கு

Question 4.
முத்தினையும் அமிழ்தினையும் தருவதாகச் சந்தக்கவிமணி தமிழழகனார் குறிப்பிடுவது எதை?
அ) மூங்கில்
ஆ) கடல்
இ) மழை
ஈ) தேவர்கள்
Answer:
ஆ) கடல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 1.3 இரட்டுற மொழிதல்

Question 5.
தமிழ் அணிகலன்களாகப் பெற்றவை எவை?
அ) சங்க இலக்கியங்கள்
ஆ) ஐம்பெருங்காப்பியங்கள்
இ) ஐஞ்சிறு காப்பியங்கள்
ஈ) நீதி இலக்கியங்கள்
Answer:
ஆ) ஐம்பெருங்காப்பியங்கள்

Question 6.
இரட்டுறமொழிதல் அணியின் வேறுபெயர் யாது?
அ) வேற்றுமை அணி
ஆ) பிறிதுமொழிதல் அணி
இ) சொற்பொருள் பின்வருநிலையணி
Answer:
ஈ) சிலேடை அணி

Question 7.
ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது எது?
அ) இரட்டுறமொழிதல் அணி
ஆ) வேற்றுமை அணி
இ) உவமை அணி
ஈ) உருவக அணி
Answer:
அ) இரட்டுறமொழிதல் அணி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 1.3 இரட்டுற மொழிதல்

Question 8.
சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் என்ன?
அ) சண்முகமணி
ஆ) சண்முகசுந்தரம்
இ) ஞானசுந்தரம்
ஈ) ஆறுமுகம்
Answer:
ஆ) சண்முகசுந்தரம்

Question 9.
தமிழழகனார் எத்தனை சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்?
அ) பத்து
ஆ) பன்னிரண்டு
இ) பதினான்கு
ஈ) பதினாறு
Answer:
ஆ) பன்னிரண்டு

Question 10.
முத்தமிழ் துய்ப்பதால் என்னும் பாடல் இடம் பெற்றுள்ள தொகுப்பு யாது?
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) சிற்றிலக்கியங்கள்
ஈ) தனிப்பாடல் திரட்டு
Answer:
ஈ) தனிப்பாடல் திரட்டு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 1.3 இரட்டுற மொழிதல்

குறுவினா

Question 1.
ஐம்பெருங்காப்பியங்கள் யாவை?
Answer:
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.

Question 2.
கடலிலிருந்து கிடைக்கும் பொருட்கள் யாவை?
Answer:

  • முத்தும், அமிழ்தமும் கிடைக்கிறது.
  • வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகள் கிடைக்கிறன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 1.3 இரட்டுற மொழிதல்

Question 3.
தமிழ்மொழி குறித்து தமிழழகனார் கூறிய செய்தி யாது?
Answer:

  • தமிழ் இயல், இசை, நாடகம் முத்தமிழாய் வளர்ந்தது.
  • முதல், இடை, கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது.
  • ஐம்பெருங் காப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது.
  • சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது.

Question 4.
இரட்டுற மொழிதல் அணி என்றால் என்ன? அதன் வேறுபெயர் யாது?
Answer:

  • ஒரு சொல்லோ சொற்றொடரோ இருபொருள்பட வருவது இரட்டுறமொழிதல் அணி எனப்படும்.
  • வேறுபெயர் – சிலேடை அணி.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 1.3 இரட்டுற மொழிதல்

Question 5.
சிலேடைகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
சிலேடைகள் இரண்டு வகைப்படும். அவை:

  • செம்மொழிச் சிலேடை
  • பிரிமொழிச் சிலேடை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம்

Students can Download 10th Tamil Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.5 பாய்ச்சல்

Question 1.
பண்டைத் தமிழரின் திணைநிலை வாழ்க்கை முறையையும் இன்றைய தமிழரின் வாழ்க்கை முறையையும் ஒப்பிட்டு ஒவ்வொருவர் கருத்தையும் பதிவு செய்து பொதுக் கருத்தை அறிக.
Answer:
பதிவு செய்யப்பட்ட கருத்துகள் கருத்து – 1:
காலங்கள் பல கடந்தாலும் தெய்வநம்பிக்கையும் சடங்குகளும் பெருமளவில் மாறாமல் உள்ளன. மக்களிடம் சாதி வெறியும் சாதி வேறுபாடும் நீங்கியுள்ளது. மக்கள் அனைவரும் சமம் என்ற நிலைக்குத் தகுதிபடுத்தப்பட்டுள்ளனர்.

கருத்து – 2:
உணவு முறையில் இன்று பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இயற்கையான தானியங்கள் மற்றும் பயிறு வகை உணவுப் பொருட்கள் பெரும்பாலும் உணவில் சேர்க்கப்படுவதில்லை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.5 பாய்ச்சல்

கருத்து – 3:
தங்களுக்கெனக் குறித்த பண், யாழ், பறை ஆகியவற்றைப் பண்டைத் திணை நில தமிழர் பயன்படுத்தியதைப் போல இன்று யாரும் பயன்படுத்தவில்லை. அவரவர் விருப்பமான இசையை இசைப் பள்ளிகளுக்குச் சென்று கற்றுக் கொள்கின்றனர்.

கருத்து – 4:
திணை நிலத்திற்கேற்ப தொழில்கள் இன்று பெருமளவில் நடைபெறவில்லை. இயற்கையின் விளையாட்டால் இன்று மருதநில தொழில்களும், நெய்தல் நில தொழில்களும் மிகவும் நலிவடைந்துள்ளன. மேலும் அதிக வருமானம் பெறுவதற்காகவும் கல்வியறிவு பெற்று வருவதால் உயர் பதவியில் உள்ள வேலைகளைத் தேடி நகரங்களுக்கு மக்கள் இடம்பெயர்ந்து செல்கின்றனர்.

கருத்து – 5:
இயற்கைச் சூழலும், நாகரிக வளர்ச்சியும், காலச் சூழலும் எல்லா நிலைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தினாலும் பண்டைய மரபு மாறாது வாழ்கின்றனர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.5 பாய்ச்சல்

மொழியை ஆள்வோம்

மொழிபெயர்ப்பு:

Koothu

Therukoothu is, as its name indicates, a popular form of theatre performed in the streets. It is performed by rural artists. The stories are derived from epics like Ramayana, Mahabharatha and other ancient Puranas. There are more songs in the play with dialogues improvised by the artists on the spot. Fifteen to twenty actors with a small orchestra forms a koothu troupe. Though the orchestra has a singer, the artists sing in their own voices. Artists dress themselves with heavy costumes and bright makeup. Koothu is very popular among rural areas.
Answer:
தமிழாக்கம் :

கூத்து

தெருக்கூத்து அதன் பெயருக்கு ஏற்றாற்போல் தெருவில் நடக்கும் ஒரு மிகச் சிறந்த கலை. இதில் கிராமப்புற கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். இதன் கதைகள் பழங்காவியமான இராமாயணம், மகாபாரதம் மற்றும் பழைய புராணங்களில் இருந்து எடுக்கப்படுகிறது. இதில் பழைய பாடல்களை உரையாடலுடன் கலைஞர்கள் உருவாக்குகிறார்கள். பதினைந்து முதல் இருபது கலைஞர்கள் சிறிய இசைக்குழுவாக சேர்ந்ததுதான் தெருக்கூத்து கூட்டம். இசைக்குழுவில் பல பாடல்கள் இருந்தபோதும் கலைஞர்கள் தங்கள் குரலிலேயே பாடுவார்கள். கலைஞர்கள் மிகச் சிறந்த உடையலங்காரமும் ஒப்பனையும் செய்திருப்பர். கிராமப் புறங்களில் கூத்துமிகவும் பிரபலமானது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.5 பாய்ச்சல்

தொடர்களை அறிவோம், தொடர்ந்து செய்வோம்.

Question 1.
ஒரு தனிச்சொற்றொடரில் ஓர் எழுவாயோ பல எழுவாய்களோ இருந்து ஒரு பயனிலையைக் கொண்டு அமையும்.
Answer:
எ.கா: அ) மேரி பேருந்திற்காகக் காத்திருந்தார்.
ஆ) மேரியும் கனகாவும் பேருந்தில் ஏறினர்.

Question 2.
தொடர் சொற்றொடர், ஒன்றுக்கும் மேற்பட்ட பயனிலையைக் கொண்டு இருக்கும்.
Answer:
எ.கா: அ) இனிய நிலா பேச்சுப் போட்டியில் பங்கேற்றார்; வெற்றி பெற்றார்; பரிசைத் தட்டிச் சென்றார்.
ஆ) அன்வர் அரங்கத்திற்கு வந்து நாடகம் பார்த்து, மகிழ்ச்சி அடைந்தார்.

Question 3.
கலவைச் சொற்றொடரில் கருத்து முழுமை பெற்ற ஒரு முதன்மைத் தொடரும் கருத்து முழுமை பெறாத துணைத் தொடர்களும் கலந்து வரும்.
Answer:
எ.கா: அ) மழை கொட்டிக் கொண்டிருந்தாலும் பகலவன் பள்ளிக்கு நடந்து வந்தான்.
பகலவன் பள்ளிக்கு நடந்து வந்தான் – முதன்மைத் தொடர்
மழை கொட்டிக் கொண்டிருந்தாலும் – துணைத் தொடர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.5 பாய்ச்சல்

தொடர்களை அடைப்புக் குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக.

எ.கா: அழைப்பு மணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார்.
(தனிச் சொற்றொடர்களைக் கலவைச் சொற்றொடர்களாக மாற்றுக)
அழைப்பு மணி ஒலித்ததால், கயல்விழி கதவைத் திறந்தார்.

Question 1.
இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தினார். அவற்றைப் புத்தக அடுக்கங்களில் அடுக்கி வைத்தார். புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்.
Answer:
(தொடர் சொற்றொடராக மாற்றுக) இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தி, புத்தக அடுக்கங்களில் அடுக்கி, புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்.

Question 2.
ஒயிலாட்டத்தில் குழுவினர் ஒரே நிறத் துணியை முண்டாசு போலக் கட்டிக்கொண்டு, காலில் சலங்கை அணிந்து கொண்டு, கையில் ஒரு சிறு துணியை இசைக்கேற்ப வீசியும் ஆடுவர்.
Answer:
(தனிச் சொற்றொடர்களாக மாற்றுக.) ஒயிலாட்டக் குழுவினர் ஒரே நிறத் துணியை முண்டாசு போலக் கட்டிக் கொள்வர். காலில் சலங்கை அணிந்து கொள்வர். கையில் ஒரு சிறு துணியை இசைக்கேற்ப வீசியும் ஆடுவர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.5 பாய்ச்சல்

Question 3.
கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கினார். கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.
Answer:
(கலவைச் சொற்றொடராக மாற்றுக) கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கியதால் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.

Question 4.
ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றவுடன், அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது.
Answer:
(தனிச் சொற்றொடர்களாக மாற்றுக) ஓடிக் கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றது. அதனால் அறையில் உள்ளவர்களின் பேச்சு தடைபட்டது.

பிறமொழிச் சொற்களைத் தமிழ்ச்சொற்களாக மாற்றுக.

புதிர்:

உங்களிடம் ஏழு கோல்டு பிஸ்கட் உள்ளது. அதில் ஒன்று மட்டும் எடை குறைவானது. உங்களிடம் உள்ள ஒரு தராசை இரு முறைகள் மட்டுமே யூஸ் பண்ணி வெயிட் குறைந்த கோல்டு பிஸ்கட்டைக் கண்டுபிடிக்கவும்.
Answer:
தராசின் இரண்டு தட்டுகளிலும் மூன்று மூன்று கோல்டு பிஸ்கட்டுகளை வையுங்கள். இரண்டு தட்டுகளும் ஈக்வலாக இருந்தால், கையில் மிச்சம் உள்ள பிஸ்கட்டே வெயிட் குறைவானது. பட் ஆனால், ஒரு பக்க தராசுத் தட்டு உயர்ந்தால் அதில் உள்ள மூன்று பிஸ்கட்களில் ஒன்று வெயிட் குறைவானது. அந்த மூன்று பிஸ்கட்டுகளை மட்டும் எடுத்துவைத்துக்கொள்ளுங்கள். இரண்டு தட்டுகளிலும் ஒரு ஒரு பிஸ்கட்டைப் போட்டு இதே எக்ஸ்பெரிமெண்ட்டைரிப்பீட் செய்து ஆன்சரைக் கண்டுபிடியுங்கள்! ஆல் தி பெஸ்ட்!
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் - 1

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.5 பாய்ச்சல்

நாட்டுப்புறப் பாடலுக்கேற்ற சூழலை எழுதுக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் - 2

வண்டுகளை ஈர்க்கும் வாசனையில்
பூக்களிடம் வசப்படுவது மனிதர்களே!
பூச்சியைக் கவரும் வண்ணங்களில்
பூக்களிடம் விழுவது மனிதர்களே!
அழகைக் கொண்டு பூ கவருகையில்
அப்பூக்களிடம் பணிவது மனிதர்களே!

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.5 பாய்ச்சல்

கட்டுரை எழுதுக.

உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் - 3

முன்னுரை:
எங்கள் ஊரில், அரசுப் பொருட்காட்சி, திலகர் திடலில் நடைபெற்றது. அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்தேன். அங்கே நான் கண்டு மகிழ்ந்த நிகழ்வுகளைக் குறித்து இக்கட்டுரை மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நுழைவுச்சீட்டு:
பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. பத்து வயதிற்குட்பட்டவர்களுக்கு ரூ.30ம் பத்து வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.50ம் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. நாங்கள் நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டு உள்ளே சென்றோம்.

பல்துறைக் கண்காட்சி அரங்கங்கள்:
வனத்துறை அரங்கத்தின் உள்ளே சென்று பார்த்தபோது வனத்தையும் வனவிலங்குகளையும் பாதுகாப்பது எப்படி என்பதை அறிந்து கொண்டேன். கல்வித்துறை அரங்கத்தின் உள்ளே கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் கல்வியின் சிறப்பு குறித்து பல்வேறு செய்திகள் அச்சிடப்பட்டு ஒட்டிவைக்கப்பட்டிருந்தது. போக்குவரத்துத் துறையினர் சாலை விதிகளைக் கடைபிடிப்பதால் சாலை விபத்துக்களைத் தவிர்க்கலாம் என்ற விழிப்புணர்ச்சி கருத்துகளைத் தெரிவித்தன. மேலும் சில போக்குவரத்துக் குறியீடுகளுக்கான விளக்கங்களும் அளிக்கப்பட்டன. காவல்துறை, பொதுப்பணித் துறை, மீன் வளத்துறை, வேளாண்துறை போன்று பல்வேறு துறை சார்ந்த அரங்கங்களின் உள்ளே சென்று அரிய பல தகவல்களை அறிந்து கொண்டேன்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.5 பாய்ச்சல்

அங்காடிகள்:
வீட்டு உபயோகப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் எனப் பல்வேறு பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கிக் கொள்ளும் அளவுக்கு பல்வேறு அங்காடிகள் இருந்தன. தேவையான சில பொருட்களை மட்டும் நான் வாங்கிக் கொண்டேன். உணவு அங்காடிக்குச் சென்று டெல்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜி, பனிக்கூழ் முதலியவற்றை வாங்கி உண்டேன்.

இராட்டினம்:
மயக்கம் தந்தாலும் மனதை மயக்கும் இராட்டினங்களைச் சுழலும் முறையை வியப்புடன் பார்த்தேன். இராட்சச இராட்டினம், குவளை இராட்டினம், டிராகன் இராட்டினம் எனப் பல்வேறு இராட்டினங்களைக் கண்டு மகிழ்ந்தேன்.

பிற பொழுதுபோக்கு அம்சங்கள்:
பேய்வீடு, பாதாளக் கிணறு, முப்பரிமாண திரையரங்கம், மீன்காட்சி சாலை, பனிவீடு எனப் பல்வேறு அரங்கங்கள் இருந்தன. இப்பொழுதுபோக்கு அரங்கங்களுக்குத் தனித்தனியே கட்டணம் வசூலிக்கப்பட்டது.

முடிவுரை:
பல மணி நேரமாக சுற்றிப்பார்த்த களைப்பு ஒருபுறம் இருந்தாலும் அங்கே சுற்றிப்பார்த்த மகிழ்ச்சி மிகுதியுடன் வீடு திரும்பினேன்.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் - 4

மொழியோடு விளையாடு

தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக.

1. வானம் …………………….. தொடங்கியது. மழைவரும் போலிருக்கிறது.
2. அனைவரின் பாராட்டுகளால், வெட்கத்தில் பாடகரின் முகம் …………………….
3. ……………………. மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.
4. கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் ……………………. புல்வெளிகளில் கதிரவனின் …………………….வெயில் பரவிக் கிடக்கிறது.
5. வெயிலில் அலையாதே; உடல் …………………….விடும்.
Answer:
1. வானம் கருக்கத் தொடங்கியது. மழைவரும் போலிருக்கிறது.
2. அனைவரின் பாராட்டுகளால், வெட்கத்தில் பாடகரின் முகம் சிவந்தது.
3. வெள்ளை மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.
4. கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் பச்சை புல்வெளிகளில் கதிரவனின் மஞ்சள் வெயில் பரவிக் கிடக்கிறது.
5. வெயிலில் அலையாதே; உடல் கருத்து விடும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.5 பாய்ச்சல்

பொருத்தமானவற்றைச் சொற்பெட்டியில் கண்டு எழுதுக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் - 5

1. விரட்டாதீர்கள் – பறவைக்கு மரம் வீடு
வெட்டாதீர்கள் – மனிதருக்கு அவை தரும்  …………………..

2. காலை ஒளியினில் மலரிதழ்  …………………..
சோலைப் பூவினில் வண்டினம்  …………………..

3. மலை முகட்டில் மேகம்  ………………….. அதைப்
பார்க்கும் மனங்கள் செல்லத்  …………………..

4. வாழ்க்கையில்  ………………….. மீண்டும் வெல்லும் – இதைத்
தத்துவமாய்த்  ………………….. கூத்து சொல்லும்.

5. தெருக்கூத்தில் நடிகருக்குக் கைதட்டலே  …………………… – அதில்
வரும்காசு குறைந்தாலும் அதுவே அவர் …………………..
Answer:
1. விரட்டாதீர்கள் – பறவைக்கு மரம் வீடு
வெட்டாதீர்கள் – மனிதருக்கு அவை தரும் மரவீடு.

2. காலை ஒளியினில் மலரிதழ் அவிழும்.
சோலைப் பூவினில் வண்டினம் கவிழும்.

3. மலை முகட்டில் மேகம் தங்கும். அதைப்
பார்க்கும் மனங்கள் செல்லத் தயங்கும்.

4. வாழ்க்கையில் தோற்பவை மீண்டும் வெல்லும் – இதைத்
தத்துவமாய்த் தோற்பாவை கூத்து சொல்லும்.

5. தெருக்கூத்தில் நடிகருக்குக் கைதட்டலே விருது. – அதில்
வரும்காசு குறைந்தாலும் அதுவே அவர் விருந்து.

அகராதியில் காண்க.

தால் – தாலாட்டு, தாலு, பிள்ளைக் கவியுறுப்பில் ஒன்று, நாக்கு.
உழுவை – ஒருவித மீன், புலி, தும்பிலி
அகவுதல் – அழைத்தல், ஆடல், கூத்தாடல்
ஏந்தெழில் – மிக்க அழகு, மிகு வனப்பு
அணிமை – சமீபம், அருகு, நுட்பம், நுண்மை .

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.5 பாய்ச்சல்

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் - 20
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் - 6

செயல்திட்டம்

பல்வேறு நிகழ்கலைகளின் ஒளிப்படங்களைத் தொகுத்து வகுப்பறையில் கண்காட்சி அமைக்க. (மாணவர் செயல்பாடு)

நிற்க அதற்குத் தக

அரசின் பொங்கல் விழாவில் சிற்றூர்க் கலைகளைக் காட்சியாக்கியிருக்கிறார்கள். ஒருபுறம் திரைகட்டித் தோற்பாவைக் கூத்து நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இன்னொருபுறம் பொம்மலாட்டம் ஆடிக்கொண்டிருந்தனர். சற்று நடந்தால் தாரை தப்பட்டை முழங்க ஒயிலாட்டம் ஆடியவாறு மண்ணின் மக்கள்…. இக்கலைகளை நீங்கள் நண்பர்களுடன் பார்த்தவாறும் சுவைத்தவாறும் செல்கிறீர்கள்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.5 பாய்ச்சல்

இக்கலைகளைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் மேன்மேலும் பரவலாக்கவும் நீங்கள் செய்ய விருப்பனவற்றை வரிசைப்படுத்துக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் - 21
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் - 7

கலைச்சொல் அறிவோம்

  • Aesthetics – அழகியல், முருகியல்
  • Terminology – கலைச்சொல்
  • Artifacts – கலைப் படைப்புகள்
  • Myth – தொன்மம்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்
அ) முல்லை , குறிஞ்சி, மருத நிலங்கள்
ஆ) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
ஈ) மருதம், நெய்தல், பாலை நிலங்கள்
Answer:
இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.5 பாய்ச்சல்

குறுவினா

Question 1.
காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள முதற்பொருள், கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் - 8

Question 2.
கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருள்களைத் திருத்தி எழுதுக.
உழவர்கள் மலையில் உழுதனர்.
முல்லைப்பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
Answer:

  • உழவர்கள் வயலில் உழுதனர்.
  • நெய்தல்பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர்கள் கடலுக்குச் சென்றனர். (அல்லது) தாழைப்பூச் செடியைப் பார்த்தவாரே பரதவர்கள் கடலுக்குச் சென்றனர்.
  • முல்லைப்பூச் செடியைப் பார்த்தவாறே இடையர்கள் காட்டுக்குச் சென்றனர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.5 பாய்ச்சல்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் சரியான விடை வரிசையைத் தேர்ந்தெடு.
i) குறிஞ்சி – 1. பேரூர், மூதூர்
ii) முல்லை – 2. பட்டினம், பாக்கம்
iii) மருதம் – 3. சிறுகுடி
iv) நெய்தல் – 4. குறும்பு
v) பாலை – 5. பாடி, சேரி
அ) 3, 4, 1, 2, 5
ஆ) 4, 3, 1, 5, 2
இ) 3, 2, 5, 1, 4
ஈ) 3, 5, 1, 2, 4
Answer:
ஈ) 3, 5, 1, 2, 4

Question 2.
பொருத்தமான விடையைக் கண்டறிக.
i) குறிஞ்சி – 1. வற்றிய சுனை, கிணறு
ii) முல்லை – 2. மனைக்கிணறு, பொய்கை
iii) மருதம் – 3. காட்டாறு
iv) நெய்தல் – 4. அருவிநீர், சுனைநீர்
v) பாலை – 5. மணற்கிணறு, உவர்க்கழி
அ) 4, 3, 2, 5, 1
ஆ) 5, 4, 1, 2, 3
இ) 4, 3, 5, 1, 2
ஈ) 3, 4, 5, 2, 1
Answer:
அ) 4, 3, 2, 5, 1

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.5 பாய்ச்சல்

Question 3.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) முல்லை – வரகு, சாமை
ஆ) மருதம் – செந்நெல், வெண்ணெல்
இ) நெய்தல் – தினை
ஈ) பாலை – சூறையாடலால் வரும் பொருள்
Answer:
இ) நெய்தல் – தினை

Question 4.
முல்லை நிலத்திற்குரிய பெரும்பொழுதினைத் தேர்ந்தெடு.
அ) கார்காலம்
ஆ) குளிர்காலம்
இ) முன்பனி
ஈ) பின்பனி
Answer:
அ) கார்காலம்

Question 5.
ஐந்திணைகளுக்கு உரியன ……………
i) முதற்பொருள்
ii) கருப்பொருள்
iii) உரிப்பொருள்
அ) i – சரி
ஆ) ii – சரி
இ) மூன்றும் சரி
ஈ) iii – மட்டும் சரி
Answer:
இ) மூன்றும் சரி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.5 பாய்ச்சல்

Question 6.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. கடலும் கடல் சார்ந்த இடமும்
ii) முல்லை – 2. வயலும் வயல் சார்ந்த இடமும்
iii) மருதம் – 3. காடும் காடு சார்ந்த இடமும்
iv) நெய்தல் – 4. மலையும் மலை சார்ந்த இடமும்
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 3, 1
ஈ) 3, 4, 2, 1
Answer:
அ) 4, 3, 2, 1

Question 7.
மணலும் மணல் சார்ந்த இடமும் – எத்திணைக்குரியது?
அ) குறிஞ்சி
ஆ) முல்லை
இ) நெய்தல்
ஈ) பாலை
Answer:
ஈ) பாலை

Question 8.
பொழுது எத்தனை வகைப்படும்?
அ) இரு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஆறு
Answer:
அ) இரு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.5 பாய்ச்சல்

Question 9.
பொருத்திக் காட்டுக.
i) கார்காலம் – 1. மாசி, பங்குனி
ii) குளிர்காலம் – 2. மார்கழி, தை
iii) முன்பனிக்காலம் – 3. ஐப்பசி, கார்த்திகை
iv) பின்பனிக்காலம் – 4. ஆவணி, புரட்டாசி
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 3,1
ஈ) 3, 4, 2, 1
Answer:
அ) 4, 3, 2, 1

Question 10.
இளவேனிற் காலத்துக்குரிய மாதங்கள் ……………
அ) ஆவணி, புரட்டாசி
ஆ) சித்திரை, வைகாசி
இ) ஆனி, ஆடி
ஈ) மார்கழி, தை
Answer:
ஆ) சித்திரை, வைகாசி

Question 11.
ஆனி, ஆடி முதலான மாதங்கள் ……………
அ) கார்காலம்
ஆ) குளிர்காலம்
இ) இளவேனிற்காலம்
ஈ) முதுவேனிற்காலம்
Answer:
ஈ) முதுவேனிற்காலம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.5 பாய்ச்சல்

Question 12.
பொருத்திக் காட்டுக.
i) காலை – 1. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
ii) நண்ப கல் – 2. பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை
iii) எற்பாடு – 3. காலை 10 மணி முதல் 2 மணி வரை
iv) மாலை – 4. காலை 6 மணி முதல் 10 மணி வரை
அ) 4, 3, 2, 1|
ஆ) 2, 1, 3, 4
இ) 4, 3, 1, 2
ஈ) 2, 1, 4, 3
Answer:
அ) 4, 3, 2, 1

Question 13.
இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை உள்ள சிறுபொழுது ……………
அ) எற்பாடு
ஆ) மாலை
இ) யாமம்
ஈ) வைகறை
Answer:
இ) யாமம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.5 பாய்ச்சல்

Question 14.
வைகறைக்குரிய கால நேரம்……………
அ) இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
ஆ) காலை 6 மணி முதல் 10 மணி வரை
இ) காலை 10 மணி முதல் 2 மணி வரை
ஈ) இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை
Answer:
அ) இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை

Question 15.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. கார்காலம்
ii) முல்லை – 2. குளிர்காலம், முன்பனிக்காலம்
iii) மருதம், நெய்தல் – 3. இளவேனில், முதுவேனில், பின்பனி
iv) பாலை – 4. ஆறு பெரும்பொழுதுகள்
அ) 2, 1, 4, 3
ஆ) 4, 1, 3, 2
இ) 4, 3, 1, 2
ஈ) 2, 4, 3, 1
Answer:
அ) 2, 1, 4, 3

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.5 பாய்ச்சல்

Question 16.
நண்பகல் எத்திணைக்குரிய சிறுபொழுது?
அ) குறிஞ்சி
ஆ) முல்லை
இ) நெய்தல்
ஈ) பாலை
Answer:
ஈ) பாலை

Question 17.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. வைகறை
ii) முல்லை – 2. எற்பாடு
iii) மருதம் – 3. யாமம்
iv) நெய்தல் – 4. மாலை
அ) 3, 4, 1, 2
ஆ) 4, 3, 2, 1
இ) 1, 2, 3, 4
ஈ) 3, 2, 1, 4
Answer:
அ) 3, 4, 1, 2

Question 18.
திணைகளுக்குரிய தெய்வத்தைப் பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. கொற்றவை
ii) முல்லை – 2. வருணன்
iii) மருதம் – 3. இந்திரன்
iv) நெய்தல் – 4. திருமால்
v) பாலை – 5. முருகன்
அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 3,1
இ) 3, 2, 4, 5, 1
ஈ) 1, 2, 3, 4, 5
Answer:
அ) 5, 4, 3, 2, 1

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.5 பாய்ச்சல்

Question 19.
திணைகளுக்குரிய மக்களைப் பொருத்திக் காட்டுக.
i) வெற்பன் – 1. குறிஞ்சி
ii) தோன்றல் – 2. முல்லை
iii) ஊரன் – மருதம்
iv) சேர்ப்ப ன் – 4. நெய்தல்
v) எயினர் – 5. பாலை
அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 3, 1
இ) 3, 5, 4, 1, 2
ஈ) 1, 2, 3, 4, 5
Answer:
ஈ) 1, 2, 3, 4, 5

Question 20.
பொருத்திக் காட்டுக.
i) புலி – 1. பாலை
ii) மான் – 2. நெய்தல்
iii) எருமை – 3. மருதம்
iv) முதலை – 4. முல்லை
v) வலியிழந்த யானை – 5. குறிஞ்சி
அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 3, 1
இ) 2, 1, 4, 5, 3
ஈ) 4, 2, 3, 1, 5
Answer:
அ) 5, 4, 3, 2, 1

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.5 பாய்ச்சல்

Question 21.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. குரவம், பாதிரி
ii) முல்லை – 2. தாழை
iii) மருதம் – 3. தாமரை, செங்கழுநீர்
iv) நெய்தல் – 4. தோன்றி
v) பாலை – 5. காந்தள்
அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 1, 3
இ) 2, 3, 4, 1, 5
ஈ) 3, 1, 4, 2, 5
Answer:
அ) 5, 4, 3, 2, 1

Question 22.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. அகில், வேங்கை
ii) முல்லை – 2. கொன்றை, காயா
iii) மருதம் – 3. காஞ்சி
iv) நெய்தல் – 4. புன்னை , ஞாழல்
v) பாலை – 5. இலுப்பை
அ) 1, 2, 3, 4, 5
ஆ) 2, 3, 1, 5, 4
இ) 3, 4, 2, 1, 5
ஈ) 5, 4, 3, 2, 1
Answer:
அ) 1, 2, 3, 4, 5

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.5 பாய்ச்சல்

Question 23.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. கடற்காகம்
ii) முல்லை – 2. காட்டுக் கோழி, மயில்
iii) மருதம் – 3. நாரை, நீர்க்கோழி, அன்னம்
iv) நெய்தல் – 4. கிளி, மயில்
v) பாலை – 5. புறா, பருந்து
அ) 4, 2, 3, 1, 5
ஆ) 5, 4, 3, 2, 1
இ) 4, 3, 1, 5, 2
ஈ) 3, 4, 2, 5, 1
Answer:
அ) 4, 2, 3, 1, 5

Question 24.
விளரி யாழ் எத்திணைக்கு உரியது?
அ) குறிஞ்சி
ஆ) மருதம்
இ) நெய்தல்
ஈ) பாலை
Answer:
இ) நெய்தல்

Question 25.
பொருத்திக் காட்டுக.
i) குறிஞ்சி – 1. துடி
ii) முல்லை – 2. மீன் கோட்பறை
iii) மருதம் – 3. மணமுழா
iv) நெய்தல் – 4. ஏறுகோட்பறை
v) பாலை
5. தொண்டகம்
அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 1, 3
இ) 3, 4, 5, 2, 1
ஈ) 3, 5, 1, 2, 4
Answer:
அ) 5, 4, 3, 2, 1

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.5 பாய்ச்சல்

Question 26.
செவ்வழிப்பண், பஞ்சுரப்பண் முதலியனவற்றுக்குரிய திணைகள் முறையே
அ) நெய்தல், பாலை
ஆ) குறிஞ்சி, முல்லை
இ) மருதம், நெய்தல்
ஈ) மருதம், பாலை
Answer:
அ) நெய்தல், பாலை

Question 27.
முல்லை நிலமக்களின் உணவுப் பொருள்கள்
அ) வெண்நெல், வரகு
ஆ) மலைநெல், திணை
இ) வரகு, சாமை
ஈ) மீன், செந்நெல்
Answer:
இ) வரகு, சாமை

குறுவினா

Question 1.
பொருள் இலக்கணம் குறிப்பு வரைக.
Answer:

  • பொருள் என்பது ஒழுக்க முறை.
  • தமிழர் வாழ்வியல் ஒழுக்கங்களை அகம், புறம் என வகுத்தனர்.
  • இவற்றைப் பற்றிக் கூறுவதே பொருள் இலக்கணம்.

Question 2.
அகத்திணை என்றால் என்ன?
Answer:
அன்புடைய தலைவன் தலைவி இடையிலான உறவு நிலைகளைக் கூறுவது அகத்திணை ஆகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.5 பாய்ச்சல்

Question 3.
அன்பின் திணைகள் எத்தனை? அவை யாவை?
Answer:
அன்பின் திணைகள் ஐந்து. அவை:
குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல், பாலை.

Question 4.
அகத்திணைக்குரிய பொருள்கள் எத்தனை? அவை யாவை?
Answer:
அகத்திணைக்குரிய பொருள்கள் மூன்று. அவை:
முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்.

Question 5.
முதற்பொருளாவது யாது?
Answer:
நிலமும் பொழுதும் முதற்பொருள் ஆகும்.

Question 6.
ஐவகை நிலங்களின் அமைவிடங்களைக் கூறுக.
Answer:

  • குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த இடமும்
  • முல்லை – காடும் காடு சார்ந்த இடமும்
  • வயலும் வயல் சார்ந்த இடமும்
  • நெய்தல் – கடலும் கடல் சார்ந்த இடமும்
  • பாலை – சுரமும் சுரம் சார்ந்த இடமும்

Question 7.
பொழுது எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
பொழுது இரண்டு வகைப்படும் அவை: பெரும்பொழுது, சிறுபொழுது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.5 பாய்ச்சல்

Question 8.
பெரும்பொழுதிற்குரிய கூறுகள் எத்தனை? அவை யாவை?
Answer:
பெரும்பொழுதிற்குரிய கூறுகள் ஆறு. அவை:
கார்காலம், குளிர்காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனிற் காலம், முதுவேனிற் காலம்.

Question 9.
சிறுபொழுதிற்குரிய கூறுகள் எத்தனை? அவை யாவை?
Answer:
சிறுபொழுதிற்குரிய கூறுகள் ஆறு. அவை:
காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை.

Question 10.
எற்பாடு பிரித்து பொருள் எழுதுக.
Answer:
எல் + பாடு = எற்பாடு
எல் – சூரியன்
பாடு – மறையும் நேரம்
பொருள் – சூரியன் மறையும் நேரம்.

Question 11.
கருப்பொருள் என்றால் என்ன?
Answer:
ஒவ்வொருநிலத்திற்கும் உரிய தெய்வம் முதலாகத்தொழில் வரையில் தனித்தனியே குறிப்பிடப்படுவது கருப்பொருள்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.5 பாய்ச்சல்

Question 12.
உரிப்பொருள் என்றால் என்ன?
Answer:
கவிதைகளில் கருப்பொருளின் பின்னணியில் அமைத்துப் பாடப்படுவது உரிப்பொருள்.

Question 13.
ஐவகை நிலத்திற்குரிய தெய்வங்களின் பெயர்களைக் கூறு.
Answer:
குறிஞ்சி – முருகன்
முல்லை – திருமால்
மருதம் – இந்திரன்
நெய்தல் – வருணன்
பாலை – கொற்றவை

Question 14.
ஐவகை நிலத்திற்குரிய பறைகளைக் கூறு.
Answer:
குறிஞ்சி – தொண்டகப் பறை
முல்லை – ஏறுகோட்பறை
மருதம் – மணமுழா, நெல்லரிகிணை
நெய்தல் – மீன் கோட்பறை
பாலை – துடி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.5 பாய்ச்சல்

Question 15.
ஐவகை நிலத்திற்குரிய யாழ், பண் எவை என எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் - 9

Question 16.
ஐவகை நிலத்திற்குரிய மரம், பூ ஆகியவற்றை எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் - 10

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.5 பாய்ச்சல்

Question 17.
ஐவகை நிலத்திற்குரிய மக்கள் யாவர்?
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் - 11

Question 18.
ஐவகை நிலத்திற்குரிய விலங்குகள் மற்றும் பறவைகள் எவை எனக் கூறுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் - 12

Question 19.
ஐவகை நிலத்திற்குரிய தொழில்கள் யாவை?
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் - 13

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.5 பாய்ச்சல்

Question 20.
ஐவகை நிலத்திற்குரிய நீரை எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் - 14

Question 21.
ஐவகை நிலத்திலிருந்து கிடைக்கும் உணவுப் பொருள்கள் யாவை?
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் - 15

Question 22.
ஐவகை நிலத்திற்குரிய ஊர்களைக் குறிப்பிடுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் - 16

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.5 பாய்ச்சல்

சிறுவினா

Question 1.
பெரும்பொழுதிற்குரிய கூறுகளை எழுதி, அக்காலத்திற்கான மாதங்களையும் எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் - 17

(1 ஆண்டின் 12 மாதங்களும் இரண்டிரண்டு மாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. (12/2 = 6)

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.5 பாய்ச்சல்

Question 2.
சிறுபொழுதிற்குரிய கூறுகளையும் அதற்குரிய நேர அளவுகளையும் குறிப்பிடுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் - 18
(1 நாளின் 24 மணி நேரமும் நான்கு நான்கு மணி நேரமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. (24/4=6)

Question 3.
ஐந்திணைக்கும் உரிய பெரும்பொழுதுகள் சிறுபொழுதுகளை எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 அகப்பொருள் இலக்கணம் - 19

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.2 காசிக்காண்டம்

Students can Download 10th Tamil Chapter 3.2 காசிக்காண்டம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 3.2 காசிக்காண்டம்

கற்பவை கற்றபின்

Question 1.
நெடுநாளாகப் பார்க்க எண்ணியிருந்த உறவினர் ஒருவர் எதிர்பாராத வகையில் உங்கள் வீட்டிற்கு வருகிறார். நீங்கள் அவரை எதிர்கொண்டு விருந்து அளித்த நிகழ்வினை விரிவாக ஒரு பத்தியளவில் எழுதிப் படித்துக் காட்டுக.
Answer:
உறவினரை வியந்து உரைத்து நல்லச் சொற்களை இனிமையாகப் பேசி முகமலர்ச்சியுடன் அவர்களை நோக்கினேன். வீட்டிற்குள் வருக! வருக! என்று வரவேற்றேன். அவர் எதிரில் நின்று முகமும் மனமும் மலரும்படி உணவருந்திச் செல்லுங்கள் எனக் கூறி உணவு சமைத்து, தலைவாழை இலையில் உணவிட்டேன். அவர் அருகிலேயே அமர்ந்து கொண்டேன். அவர் விடை பெற்றுச் செல்லும் போது வாயில் வரை பின் தொடர்ந்து சென்று அவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்பினேன்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.1 விருந்து போற்றுதும்!

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
காசிக்காண்டம் என்பது…………………..
அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறு பெயர்
இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
Answer:
இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

குறுவினா

Question 1.
விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
Answer:

  • வாருங்கள் ஐயா, வணக்கம்!
  • அமருங்கள்.
  • நலமாக இருக்கிறீர்களா?
  • தங்கள் வரவு நல்வரவு

இலக்கணக் குறிப்பு.

நன்மொழி – பண்புத்தொகை
வியத்தல், நோக்கல், எழுதுதல், உரைத்தல், செப்பல், இருத்தல், வழங்கல் – தொழிற்பெயர்கள்
வருக – வியங்கோள் வினைமுற்று

பகுபத உறுப்பிலக்கணம்.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.2 காசிக்காண்டம் - 1

இலக்கணக் குறிப்பு.

வந்து – வினையெச்சம்
நன்முகமன் – பண்புத்தொகை
பொருந்து – வினையெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.2 காசிக்காண்டம் - 2
வந்து – வா(வ) + த(ந்) + த் + உ
வா – பகுதி (வ) எனக் குறுகியது விகாரம்
த் – சந்தி (ந்) ஆனது விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
உ – வினையெச்ச விகுதி

பலவுள் தெரிக

Question 1.
காசிக்காண்டத்தை இயற்றியவர் யார்? அ) துளசிதாசர்
ஆ) அதிவீரராம பாண்டியர்
இ) ஔவையார்
ஈ) பெருஞ்சித்திரனார்
Answer:
ஆ) அதிவீரராம பாண்டியர்

Question 2.
காசிக்காண்டத்தின் இல்லொழுக்கம் பற்றிய பகுதி எத்தனையாவது பாடல்?
அ) பதினான்காவது
ஆ) பதினாறாவது
இ) பதின்மூன்றாவது
ஈ) பதினேழாவது
Answer:
ஈ) பதினேழாவது

Question 3.
முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர்?
அ) அதிவீரராம பாண்டியர்
ஆ) கிள்ளிவளவன்
இ) செங்குட்டுவன்
ஈ) இரண்டாம் புலிகேசி
Answer:
அ) அதிவீரராம பாண்டியர்

Question 4.
அதிவீரராம பாண்டியரின் பட்டப்பெயர்
அ) சீவலபேரி பாண்டி
ஆ) சீவலமாறன்
இ) மாறவர்மன்
ஈ) மாறன்வழுதி
Answer:
ஆ) சீவலமாறன்

Question 5.
அதிவீரராம பாண்டியர் இயற்றாத நூலைக் கண்டறிக.
அ) நைடதம்
ஆ) வாயு சம்கிதை
இ) திருக்கருவை அந்தாதி
ஈ) சடகோபர் அந்தாதி
Answer:
ஈ) சடகோபர் அந்தாதி

Question 6.
பொருத்திக் காட்டுக.
i) நன்மொழி – 1. பெயரெச்சம்
ii) வியத்தல் – 2. வியங்கோள் வினைமுற்று
iii) வருக – 3. தொழிற்பெயர்
iv) உரைத்த – 4. பண்புத்தொகை
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 2, 1
இ) 2, 1, 3, 4
ஈ) 4, 2, 1, 3
Answer:
அ) 4, 3, 2, 1

Question 7.
உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தம் ஆகும் – என்று குறிப்பிடும் நூல் எது?
அ) சீவக சிந்தாமணி
ஆ) விவேக சிந்தாமணி
இ) மணிமேகலை
ஈ) நளவெண்பா
Answer:
ஆ) விவேக சிந்தாமணி

Question 8.
‘அருகுற’ என்பதன் பொருள் என்ன?
அ) அருகில்
ஆ) தொலைவில்
இ) அழிவில்
ஈ) அழுகிய
Answer:
அ) அருகில்

Question 9.
முகமன் எனப்படுவது ……………………
அ) ஒருவரை நலம் வினவிக்கூறும் விருந்தோம்பல் சொற்கள்
ஆ) ஒருவரை எதிர்த்துப் பேசும் சொற்கள்
இ) பெரியோர்களின் கருத்துகளை வரவேற்கும் சொற்கள்
ஈ) மன்னரும் அமைச்சரும் உரையாடும் சொற்கள்
Answer:
அ) ஒருவரை நலம் வினவிக்கூறும் விருந்தோம்பல் சொற்கள்

Question 10.
விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கத்தின் பண்புகள் எத்தனை?
அ) எட்டு
ஆ) ஒன்பது
இ) ஆறு
ஈ) பத்து
Answer:
ஆ) ஒன்பது

Question 11.
வெற்றிவேற்கை என்னும் நூலின் ஆசிரியர் ……………………
அ) அதிவீரராம பாண்டியர்
ஆ) கரிகாலன்
இ) பாரி
ஈ) பாண்டியன் நெடுஞ்செழியன்
Answer:
அ) அதிவீரராம பாண்டியர்

Question 12.
நறுந்தொகை என்னும் நூலின் ஆசிரியர் ……………………
அ) அதிவீரராம பாண்டியர்
ஆ) கரிகாலன்
இ) பாரி
ஈ) பாண்டியன் நெடுஞ்செழியன்
Answer:
அ) அதிவீரராம பாண்டியர்

Question 13.
நறுந்தொகை என்று அழைக்கப்படும் நூல் எது?
அ) கொன்றைவேந்தன்
ஆ) காசிக்கலம்பகம்
இ) வெற்றிவேற்கை
ஈ) காசிக்காண்டம்
Answer:
இ) வெற்றிவேற்கை

Question 14.
பொருந்தாதவற்றைக் கண்டறிக.
அ) நைடதம்
ஆ) விவேகசிந்தாமணி
இ) வெற்றிவேற்கை
ஈ) காசிக்காண்டம்
Answer:
ஆ) விவேகசிந்தாமணி

குறுவினா

Question 1.
காசிக்காண்டம் நூல் குறிப்பு வரைக.
Answer:

  • காசி நகரத்தின் பெருமைகளைக் கூறுகிற நூல் காசிக்காண்டம்.
  • துறவு, இல்லறம், பெண்களுக்குரிய பண்புகள், வாழ்வியல் நெறிகள், மறுவாழ்வில் அடையும் நன்மைகள் ஆகியவற்றைப் பாடுவதாக அமைந்துள்ளது.

Question 2.
அதிவீரராம பாண்டியர் இயற்றிய நூல்கள் யாவை?
Answer:
காசிக்காண்டம், நைடதம், லிங்க புராணம், வாயுசம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்மபுராணம், வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை.

Question 3.
“முகமன்” என்னும் சொல் உணர்த்தும் செய்தி யாது?
Answer:
ஒருவரை நலம் வினவிக் கூறும் விருந்தோம்பல் சொல்லாகும்.

Question 4.
“பொருந்து மற்று அவன் தன் அருகுற இருத்தல்” – தொடர் பொருள் விளக்கம் தருக.
Answer:
தொடர் இடம்பெறும் நூல் : காசிக்காண்டம்
தொடர் விளக்கம் : விருந்தினர் அருகிலேயே விருந்து மேற்கொள்பவர் அமர்ந்து கொள்ளுதல்.

சிறுவினா

Question 1.
அதிவீரராம பாண்டியர் குறிப்பு வரைக.
Answer:
பெயர் : அதிவீரராம பாண்டியன்
சிறப்பு : கொற்கையின் அரசர் தமிழ்ப் புலவராகவும் திகழ்ந்தார்.
பட்டப் பெயர் : சீவலமாறன்
இயற்றிய நூல்கள் : காசிக்காண்டம், நைடதம், லிங்க புராணம், வாயு சம்கிதை, திருக்கருவை அந்தாதி, கூர்ம புராணம், வெற்றிவேற்கை என்றழைக்கப்படும் நறுந்தொகை.’

Question 2.
விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கம் குறித்து காசிக்காண்டம் குறிப்பிடும் செய்தி யாது?
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 3.2 காசிக்காண்டம் - 3

  • விருந்தினராக ஒருவர் வந்தால், அவரை எதிர்கொண்டு வியந்து உரைத்தல் வேண்டும்.
  • நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல் வேண்டும்.
  • முகமலர்ச்சியுடன் அவரை நோக்கி, வீட்டிற்குள் வருக’ என்று வரவேற்று, அவர் எதிரில் நின்று, அவர் முன் மனம் மகிழும்படி பேசுதல் வேண்டும்.
  • அவர் அருகிலேயே அமர்ந்து கொண்டு, அவர் விடை பெற்றுச் செல்லும் போது, வாயில்வரை பின் தொடர்ந்து செல்லல் வேண்டும்.
  • வந்தவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல் வேண்டும். மேற்கண்ட செயல்கள் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கமாக காசிக்காண்டத்தில் கூறப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Students can Download 10th Tamil Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

கற்பவை கற்றபின்

Question 1.
இன்றைய செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகளைச் செய்தித்தாளிலோ இணையத்திலோ கண்டு அட்டவணையாகத் தருக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு - 3

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 2.
கொடுக்கப்படுகின்ற எல்லாவற்றையும் உள்ளீடு செய்து, தேவைப்படும் வேளையில் வெளிப்படுத்துவதில், இன்று மூளைக்கு இணையாகத் தொழில்நுட்பமும் முன்னேறியுள்ளது.
Answer:
இக்கருத்தையும், படத்தையும் ஒப்புநோக்கிக் கலந்துரையாடுக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு - 4

யாழினி : கொடுக்கப்படுகின்ற எல்லாவற்றையும் உள்ளீடு செய்து, தேவைப்படும் வேளையில் வெளியிடுவதில் இன்று மூளைக்கு இணையாகத்தொழில் நுட்பமும் முன்னேறியுள்ளது
என்பதைப் பற்றி உன் கருத்து என்ன?
பைந்தமிழ் : இன்றைய தேவைகளை விரைவில் பூர்த்தி செய்ய பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவே பயன்படுகிறது. இவ்வுலகை மிகுதியாக ஆளக்கூடிய ஒரு தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவே.
யாழினி : இன்றைய மின்னணுப் புரட்சிக்குக் காரணம் என்ன?
பைந்தமிழ் : எந்த ஒரு தொழில் நுட்பமும் ஒரே நாளில் வந்து விடுவதில்லை . 1980களில் ஒவ்வொருவருக்குமான தனி நபர் கணினிகளின் வளர்ச்சியும் இணையப் பயன்பாட்டின் பிறப்புமே இம்மாற்றத்திற்குக் காரணம்.

யாழினி : மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பற்றி உன்னுடைய கருத்து யாது?
பைந்தமிழ் : ‘கல்விசார் புரட்சி’ என்பதே என் கருத்து. நாம் ஒரு நூலைத் தேடி எடுத்து அதில் நாம் தேடும் சொற்களைக் கண்டு பிடிப்பதற்கு காலவிரயம் ஏற்படும். ஆனால் திறன் பேசியோ கணினியோ நாம் சொல்லச் சொல்லத்தன் அகண்டதரவுகளில் உள்ள கோடிக்கணக்கான சொற்களுடன் ஒப்பிட்டுச் சரியான சொல்லைக் கால் நொடிக்கும் குறைவான நேரத்தில் தேர்ந்தெடுத்துத் திரையில் காண்பிக்கிறது. கல்விசார் தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இத்தொழில் நுட்பம் மிகவும் பயனுடையதாக அமையும். நன்றி!

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
தலைப்புக்கும் குறிப்புக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
தலைப்பு : செயற்கை நுண்ணறிவு
குறிப்புகள் : கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது. திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிப்பது.
அ) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
ஆ) குறிப்புகளுக்குத் தொடர்பில்லாத குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இ) தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
ஈ) குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.
Answer:
அ) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 2.
பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
அ) துலா
ஆ) சீலா
இ) குலா
ஈ) இலா
Answer:
ஈ) இலா

குறுவினா

Question 1.
வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக.
Answer:
எ.கா: செயற்கை நுண்ணறிவால் இயங்கும் போக்குவரத்து ஊர்திகள்

  • செயற்கை நுண்ணறிவால் இயங்கும் இயந்திர மனிதன் (Robo-ரோபோ)
  • செயற்கை நுண்ண றிவால் இயங்கும் திறன்பேசி (Smart Phone)

சிறுவினா

Question 1.
இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.
Answer:

  • இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்தவில்லை.
  • அது மனிதனுக்குரியத் தேவைகளை மட்டுமே மேம்படுத்தி இருக்கிறது.
  • அறிவியலால் இன்று மனிதன் மனிதனாக வாழவில்லை .
  • இயந்திரம் மனிதனாகிவிட்டது. மனிதன் இயந்திரம் ஆகிவிட்டான்.
  • மனிதநேயத்தையும் அன்பையும் இரக்கத்தையும் இன்றைய மனிதனிடம் பார்க்க முடியவில்லை.
  • பணிகளால் அவன் எந்திரத்தைப் போல ஓடிக்கொண்டே உள்ளான்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 2.
மனிதர்களின் மூளையைப் போன்றது, செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினியின் மென்பொருள். மனிதனைப் போலவே பேச, எழுத, சிந்திக்க இத்தொழில்நுட்பம் மேம்படுத்தப்படுகிறது. இதனால் மனித குலத்துக்கு ஏற்படுகிற நன்மைகளைப் பற்றி அறிவியல் இதழ் ஒன்றுக்கு ‘எதிர்காலத் தொழில்நுட்பம்’ என்ற தலைப்பில் எழுதுக.
Answer:

எதிர்காலத் தொழில்நுட்பம்

உயிரினங்களில் மனிதரை உயர்த்திக்காட்டுவது அவர்களின் சிந்தனை ஆற்றலே! அந்தச் சிந்தனைக்குத் தொழில்நுட்பமும் துணை செய்கிறது. திறன்பேசிகளில் இயங்கும் உதவு மென்பொருள் கண்ணுக்குப் புலப்படாத மனிதனைப் போல நம்முடன் உரையாடி உதவி செய்கிறது.

நாம் சொல்கிறவர்களுக்குத் தொலைபேசியில் அழைப்பு விடுக்கும். நாம் திறக்க கட்டளையிடுகிற செயலியைத் திறக்கும். நாம் கேட்பதை உலாவியில் தேடும். நாம் விரும்பும் அழகான கவிதைகளை இணையத்தில் தேடித்தரும். எந்தக்கடையில் எது விற்கும் என்று சொல்லும். படிப்பதற்கு உரிய நூல்களைப் பட்டியலிடும். நாம் எடுத்த ஒளிப்படங்களைப் பற்றி பட்டியலிடும்.

எதிர்காலத்தில் நம் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோரை விடவும் உதவு மென்பொருள் நம்மை நன்கு அறிந்திருக்கும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

நெடுவினா

Question 1.
ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறைகொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்றுவிடுமா? இக்கருத்துகளை ஒட்டிச் “செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள்” பற்றி ஒரு கட்டுரை எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு - 1
முன்னுரை:
ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறைகொள்ளும் வெறும் வணிகத்துடன் அது நின்றுவிடாது. செயற்கை நுண்ணறிவின் வெளிப்பாடுகள் இனி மிகுதியாக இருக்கும்.

ஊர்திகளை இயக்குதல் :

எதிர்காலத்தில் நாம் இயக்கும் ஊர்திகளைச் செயற்கை நுண்ணறிவு கொண்டு இயக்கப்படும்.

  • இத்தகைய ஊர்திகள் ஏற்படுத்தும் விபத்து குறையும்.
  • போக்குவரத்து நெரிசல் இருக்காது.
  • பயண நேரம் குறையும்.
  • எரிபொருள் மிச்சப்படும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

மனிதர்களிடம் போட்டி :
மென்பொருள்கள், கவிதைகள், கதைகள், விதவிதமான எழுத்து நடைகள் போன்றவற்றைக் கற்றுக் கொண்டு மனிதர்களிடம் போட்டியிட்டாலும் வியப்பதற்கில்லை.

கல்வித்துறை :
கல்வித்துறையில் இத்தொழில்நுட்பத்தைப் பல விதங்களில் பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.

பிற செயல்பாடுகள் :

  • விடுதிகளில், வங்கிகளில், அலுவலகங்களில் தற்போது மனிதன் அளிக்கும் சேவையை இயந்திர மனிதன் செய்யும்.
  • நம்முடன் உரையாடுவது, ஆலோசனை வழங்குவது, பயண ஏற்பாடு செய்து தருவது, தண்ணீர் கொண்டு வந்து தருவது, குழந்தைகளுக்குப் பொம்மை கொண்டு வந்து தருவது, குழந்தைகளுக்கு வேடிக்கைக் காட்டுவது எனப் பலவற்றையும் செய்யும் நிலை வரும்.

வேலை வாய்ப்புகளில் மாற்றம் :
வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றத்தை எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு கொண்டு வரும்.

இயந்திர மனிதனிடம் குழந்தை :
எதிர்காலத்தில் இயந்திர மனிதனிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு அலுவலகம் செல்லும் பெற்றோரைப் பார்க்க முடியும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

தோழனாய் இயந்திர மனிதன் :
வயதானவர்களுக்கு உதவிகள் செய்தும், அவர்களுக்கு உற்ற தோழனாய்ப் பேச்சுக் கொடுத்தும் பேணும் இயந்திர மனிதர்களை நாம் பார்க்க முடியும்.

உயிராபத்தை விளைவித்தல் :

  • செயற்கை நுண்ணறிவுள்ள இயந்திர மனிதர்களால், மனிதர் செய்ய இயலாத அலுப்புத் தட்டக்கூடிய கடினமான செயல்களையும் செய்ய முடியும்.
  • மனித முயற்சியில் உயிராபத்தை விளைவிக்கக் கூடிய செயல்களையும் செய்ய முடியும்.

வணிக வாய்ப்புகள் :

பெருநிறுவனங்கள் தங்கள் பொருள்களை உற்பத்தி செய்யவும் சந்தைப்படுத்தவும், புதிய வணிக வாய்ப்புகளைச் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்திக் கொடுக்கும்.

முடிவுரை:

செயற்கை நுண்ணறிவு சாதனங்களால் மனிதனின் வேலைப்பளு குறைந்துள்ளது. கால விரயம் தடுக்கப்பட்டுள்ளது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) மின்ன ணுப் புரட்சி – 1. Browser
ஆ)செயல்திட்ட வரைவு – 2. Data
இ) உலாவி – 3. Computer Program
ஈ) தரவு – 4. Digital Revolution
அ) 1, 4, 3, 2
ஆ) 4, 1, 2, 3
இ) 4, 3, 2, 1
ஈ) 2, 4, 1, 3
Answer:
இ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 2.
பொருந்தாத இணையைக் கண்டறிக.
அ) பெப்பர் ஜப்பான் சாப்ட் வங்கி
ஆ) வாட்சன்
ஐ.பி.எம். நிறுவனம்
இ) இலா – பாரத ஸ்டேட் வங்கி
ஈ) பெப்பர்
புற்றுநோயைக் கண்டுபிடித்தது
Answer:
ஈ) பெப்பர் – புற்றுநோயைக் கண்டுபிடித்தது

Question 3.
சீன நாட்டில் சூவன்சௌ துறைமுக நகரில் கட்டப்பட்ட கோயில்…………………………
அ) சிவன் கோயில்
ஆ) பெருமாள் கோயில்
இ) முருகன் கோயில்
ஈ) பிள்ளையார் கோயில்
Answer:
அ) சிவன் கோயில்

Question 4.
உயிரினங்களில் மனிதரை உயர்த்திக்காட்டுவது அவர்களின்…………………………
அ) சிந்தனை ஆற்றல்
ஆ) செல்வம்
இ) வாழ்நாள்
ஈ) ஆற்றல்
Answer:
அ) சிந்தனை ஆற்றல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 5.
…………………………களில் ஒவ்வொருவருக்குமான தனி நபர் கணினிகளின் வளர்ச்சியும், இணையப் பயன்பாட்டின் பிறப்பும் இன்றைய மின்னணுப் புரட்சிக்குக் காரணமாயின.
அ) 1970
ஆ) 1960
இ) 1980
ஈ) 1950
Answer:
இ) 1980

Question 6.
இவ்வுலகை மிகுதியாக ஆளக்கூடிய ஒரு தொழில் நுட்பம்…………………………
அ) செயற்கை நுண்ணறிவு
ஆ) மென்பொருள்
இ) மீத்திறன் நுண்ண றிவு
ஈ) முகநூல், புலனம் போன்றவை
Answer:
அ) செயற்கை நுண்ணறிவு

Question 7.
இயல்பான மொழிநடையை உருவாக்குதல் என்னும் மென்பொருளின் பெயர்…………………………
அ) வேர்டுஸ்மித்
ஆ) வேர்டுபீட்டர்
இ) வேட்ஸ்வொர்த்
ஈ) வேர்ல்டுஸ்மித்
Answer:
அ) வேர்டுஸ்மித்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 8.
வேர்டுஸ்மித் என்பதைத் தமிழில் ………………………… என்று அழைப்பர்.
அ) எழுத்தாளி
ஆ) எழுத்தாணி
இ) எழுத்தோவியம்
ஈ) குரலாளி
Answer:
அ) எழுத்தாளி

Question 9.
இதழியலில் செயற்கை நுண்ணறிவு செய்துள்ள குறிப்பிடத்தகுந்த மாற்றங்களில் ஒன்று…………………………
அ) இயல்பான மொழிநடை
ஆ) கடினமான மொழிநடை
இ) தாய்மொழிநடை
ஈ) உலக மொழிகள் இணைப்பு
Answer:
அ) இயல்பான மொழிநடை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 10.
2016 இல் நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்த ஐ.பி.எம். நிறுவனத்தின் கணினியின் பெயர்…………………………
அ) வாட்சன்
ஆ) வேர்டுஸ்மித்
இ) ஸ்டீவ்ஸ்மித்
ஈ) பெப்பர்
Answer:
அ) வாட்சன்

Question 11.
செயற்கை நுண்ணறிவுக் கணினியான வாட்சன் சில நிமிடங்களில் ………………………… தரவுகளை அலசி, நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது.
அ) இருபதாயிரம்
ஆ) இரண்டு இலட்சம்
இ) இரண்டு கோடி
ஈ) இருபது கோடி
Answer:
இ) இரண்டு கோடி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 12.
…………………………உதவியாளர்களை ‘இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் என்று பாரதியார் மெச்சுவதுபோல் மெச்சிக்கொள்ளலாம்.
அ) மெய்நிகர்
ஆ) பொய் நிகர்
இ) செயற்கை
ஈ) முதன்மை
Answer:
அ) மெய்நிகர்

Question 13.
இவ்வுலகை இதுவரை…………………………ஆண்டு கொண்டிருக்கிறது; இனிமேல் ………………………… தான் ஆளப்போகிறது.
அ) மென்பொருள், செயற்கை நுண்ணறிவு
ஆ) செயற்கை நுண்ணறிவு, மென்பொருள்
இ) நுண்ண றிவு, முகநூல்
ஈ) முகநூல், புலனம்
Answer:
அ) மென்பொருள், செயற்கை நுண்ணறிவு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 14.
செயற்கை நுண்ணறிவின் மிகுதியான வளர்ச்சியால் ………………………… தேவை கூடியுள்ளது.
அ) மெய்நிகர் உதவியாளர்களின்
ஆ) தரவு அறிவியலாளர்களின்
இ) உதவியாளர்களின்
ஈ) அறிவியலாளர்களின்
Answer:
ஆ) தரவு அறிவியலாளர்களின்

Question 15.
ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன்…………………………
அ) வாட்சன்
ஆ) பெப்பர்
இ) சோபியா
ஈ) வேர்டுஸ்மித்
Answer:
ஆ) பெப்பர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 16.
உலக அளவில் அதிகம் விற்பனையாகும் ரோபோ…………………………
அ) வாட்சன்
ஆ) பெப்பர்
இ) இலா
ஈ) சோபியா
Answer:
ஆ) பெப்பர்

Question 17.
பெப்பர் ரோபோக்களின் மூன்று வகையினுள் பொருந்தாததைக் கண்டறிக.
அ) வீட்டுக்குப் பயன்படுவது
ஆ) வணிகத்துக்குப் பயன்படுவது
இ) படிப்புக்குப் பயன்படுவது
ஈ) நாட்டுக்குப் பயன்படுவது
Answer:
ஈ) நாட்டுக்குப் பயன்படுவது

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 18.
இந்தியாவின் பெரிய வங்கி…………………………
அ) இந்தியன் வங்கி
ஆ) பாரத ஸ்டேட் வங்கி
இ) கனரா வங்கி
ஈ) பரோடா வங்கி
Answer:
ஆ) பாரத ஸ்டேட் வங்கி

Question 19.
‘இலா’ என்ற உரையாடு மென்பொருளை உருவாக்கியது…………………………
அ) ஐ.பி.எம். நிறுவனம்
ஆ) பாரத ஸ்டேட் வங்கி
இ) ஹான்சன் ரோபோட்டிக்ஸ் நிறுவனம்
ஈ) சாப்ட் வங்கி
Answer:
ஆ) பாரத ஸ்டேட் வங்கி

Question 20.
இதழியலில் இயல்பான மொழிநடையை உருவாக்கும் மென்பொருள்…………………………
அ) வாட்சன்
ஆ) வழிகாட்டி வரைபடம்
இ) வேர்டுஸ்மித் (எழுத்தாளி)
ஈ) பெப்பர்
Answer:
இ) வேர்டுஸ்மித் (எழுத்தாளி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 21.
தகவல்களைக் கொடுத்தால், அழகான சில கட்டுரைகளை உருவாக்கும் மென்பொருள்…………………………
அ) வாட்சன்
ஆ) வழிகாட்டி வரைபடம்
இ) வேர்டுஸ்மித் (எழுத்தாளி)
ஈ) பெப்பர்
Answer:
இ) வேர்டுஸ்மித் (எழுத்தாளி)

Question 22.
2016 இல் ஐ.பி.எம். நிறுவனத்தின் நுண்ண றிவுக் கணினி…………………………
அ) வாட்சன்
ஆ) வழிகாட்டி வரைபடம்
இ) வேர்டுஸ்மித் (எழுத்தாளி)
ஈ) பெப்பர்
Answer:
அ) வாட்சன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 23.
50க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் இயந்திர மனிதர்களைப் பணியமர்த்தியுள்ள நாடு…………………………
அ) இந்தியா
ஆ) சீனா
இ) அமெரிக்கா
ஈ) ஜப்பான்
Answer:
ஆ) சீனா

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 24.
செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு…………………………
அ) வன்பொருள்
ஆ) மென்பொருள்
இ) இயந்திர மனிதன்
ஈ) கணினி
Answer:
ஆ) மென்பொருள்

Question 25.
“இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்” என்று பாடியவர்…………………………
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கவிமணி
ஈ) வைரமுத்து
Answer:
அ) பாரதியார்]

Question 26.
‘இலா’ மென்பொருள் ஒரு விநாடிக்கு உரையாடும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை…………………………
அ) பத்தாயிரம்
ஆ) ஆயிரம்
இ) ஐயாயிரம்
ஈ) பத்து
Answer:
அ) பத்தாயிரம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 27.
சாப்ட் வங்கி உருவாக்கிய நாடு…………………………
அ) இந்தியா
ஆ) சீனா
இ) அமெரிக்கா
ஈ) ஜப்பான்
Answer:
ஈ) ஜப்பான்

Question 28.
பெப்பர் என்பது ஒரு…………………………
அ) வன்பொருள்
ஆ) மென்பொருள்
இ) இயந்திர மனிதன்
ஈ) கணினி
Answer:
இ) இயந்திர மனிதன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 29.
ஜப்பானில் வரவேற்பாளராகவும் பணியாளராகவும் உள்ள இயந்திர மனிதன்
அ) வாட்சன்…………………………
ஆ) இலா
இ) வேர்டுஸ்மித் (எழுத்தாளி)
ஈ) பெப்பர்
Answer:
ஈ) பெப்பர்

Question 30.
ஜப்பானில் வீடுகளிலும் வணிக நிறுவனங்களிலும் உணவுவிடுதிகளிலும் பயன்பாட்டில் உள்ள இயந்திர மனிதன்…………………………
அ) வாட்சன்
ஆ) இலா
இ) வேர்டுஸ்மித் (எழுத்தாளி)
ஈ) பெப்பர்
Answer:
ஈ) பெப்பர்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 31.
காண்டன் நகர் அமைந்துள்ள நாடு…………………………
அ) இந்தியா
ஆ) சீனா
இ) அமெரிக்கா
ஈ) ஜப்பான்
Answer:
ஆ) சீனா

Question 32.
தமிழ்க் கல்வெட்டு காணப்படும் பிற நாடு…………………………
அ) ஆஸ்திரேலியா
ஆ) சீனா
இ) அமெரிக்கா
ஈ) ஜப்பான்
Answer:
ஆ) சீனா

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 33.
பண்டையத் தமிழர் அடிக்கடி வணிகத்திற்காகச் சென்று வந்த சீன நகர்…………………………
அ) காண்டன்
ஆ) சூவன்சௌ
இ) குப்லாய்கான்
ஈ) பெய்ஜிங்
Answer:
ஆ) சூவன்சௌ

Question 34.
சீனப்பேரரசர் அ) காண்டன்…………………………
ஆ) சூவன்சௌ
இ) குப்லாய்கான்
ஈ) பெய்ஜிங்
Answer:
இ) குப்லாய்கான்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 35.
சீனாவில் சிவன் கோவில் கட்டிய சீனப்பேரரசர்…………………………
அ) காண்டன்
ஆ) சூவன்சௌ
இ) குப்லாய்கான்
ஈ) பெய்ஜிங்
Answer:
இ) குப்லாய்கான்

Question 36.
பொருத்துக.
1. பெப்பர் – அ) கட்டுரை உருவாக்கும் மென்பொருள்
2. எழுத்தாளி – ஆ) இயந்திர மனிதன்
3. இலா – இ) நுண்ணறிவுக் கணினி
4. வாட்சன் – ஈ) வாடிக்கையாளர்களுடன் உரையாடும் மென்பொருள்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 37.
ஸ்மார்ட்போன் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்…………………………
அ) திறன் பேசி
ஆ) தொலைபேசி
இ) அலைபேசி
ஈ) செல்பேசி
Answer:
அ) திறன் பேசி

Question 38.
…………………… தொழிற்புரட்சியின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் அறிவும் நம்மை வளப்படுத்த உதவும்.
அ) மூன்றாவது
ஆ) நான்காவது
இ) ஐந்தாவது
ஈ) இரண்டாவது
Answer:
ஆ) நான்காவது

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

குறுவினா

Question 1.
மின்னணுப் புரட்சிக்கான காரணங்களைக் கூறுக.
Answer:

  • 1980களில் ஒவ்வொருவருக்குமான தனிநபர் கணினிகளின் வளர்ச்சி.
  • இணையப் பயன்பாட்டின் பிறப்பு. இவையே இன்றைய மின்னணுப் புரட்சிக்கான காரணங்களாகும்.

Question 2.
‘வேர்டுஸ்மித்’ குறிப்பு வரைக.
Answer:

  • இதழியலில் மொழிநடையை உருவாக்கும் மென்பொருளின் பெயர் வேர்டுஸ்மித்.
  • இதற்கு ‘எழுத்தாளி’ என்று பெயர்.
  • இதில் தகவல்களைக் கொடுத்தால் மட்டும் போதும்; சில நொடிகளிலேயே அழகான கட்டுரையை உருவாக்குகின்றன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 3.
‘வாட்சன்’ குறிப்பு வரைக.
Answer:

  • 2016ல் ஐ.பி.எம். நிறுவனத்தின் செயற்கை நுண்ண றிவுக் கணினி வாட்சன்.
  • சில நிமிடங்களில் இரண்டு கோடித் தரவுகளை அலசி, நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது.

Question 4.
செயற்கை நுண்ணறிவு நமக்கு எப்படி அறிமுகமாகிறது?
Answer:

  • சமூக ஊடகங்கள்.
  • மின்னணுச் சந்தைகள்.
    இவற்றின் மூலம் செயற்கை நுண்ணறிவு நமக்கு அறிமுகமாகிறது.

Question 5.
செயற்கை நுண்ணறிவு குறித்த தொழில்நுட்ப வரையறையைக் கூறுக.
Answer:
செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு செயல்திட்ட வரைவு.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 6.
செயற்கை நுண்ணறிவின் பொதுவான பணி யாது?
Answer:
மனிதனால் முடியும் செயல்களையும் அவன் கடினம் என்று கருதும் செயல்களையும் செய்யக்கூடியது செயற்கை நுண்ணறிவு.

Question 7.
சீனாவில் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் இயந்திர மனிதனின் செயல்பாடுகளைக் கூறுக.
Answer:

  • மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் குரலையும் முகத்தையும் அடையாளம் கண்டு அவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்கின்றன.
  • சீன மொழியின் வெவ்வேறு வட்டார வழக்குகளையும் கூட அவை புரிந்து கொண்டு பதில் அளிக்கின்றன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 8.
‘இலா’ என்னும் மென்பொருள் குறித்து எழுதுக.
Answer:

  • பாரத ஸ்டேட் வங்கி இலா’ என்னும் உரையாடு மென்பொருளை உருவாக்கியுள்ளது.
  • ஒரு விநாடிக்குப் பத்தாயிரம் வாடிக்கையாளர்களுடன் உரையாடும்.
  • அவர்களுக்கான சேவையை இணையம் மூலம் அளிக்கிறது.

Question 9.
இலா (ELA) என்பதன் ஆங்கில விரிவாக்கத்தை எழுதுக.
Answer:
ELA – Electronic Live Assistant

Question 10.
செயற்கை நுண்ணறிவின் சிறப்பு யாது?
Answer:

  • செயற்கை நுண்ணறிவு பொதிந்த இயந்திரங்களுக்கு ஓய்வு தேவையில்லை.
  • செயற்கை நுண்ணறிவால் பார்க்கவும் கேட்கவும் புரிந்து கொள்ளவும் முடியும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

சிறுவினா

Question 1.
‘பெப்பர்’ குறிப்பு வரைக.
Answer:

  • ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனே பெப்பர்.
  • இது உலக அளவில் விற்பனையாகும் ஒரு ரோபோ.
  • வீட்டுக்கு, வணிகத்துக்குப், படிப்புக்கு என மூன்று வகை ரோபோக்கள் உள்ளன.
  • இவை மனிதரின் முகபாவனைகளிலிருந்து உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுகின்றன.
  • பெப்பரை வரவேற்பாளராகவும் பணியாளராகவும் வீடுகளிலும் வணிக நிறுவனங்களிலும் உணவு விடுதிகளிலும் பயன்படுத்துகிறார்கள்.

Question 2.
செயற்கை நுண்ணறிவு குறித்த தொழில் நுட்ப வரையறையைக் கூறி விளக்குக.
Answer:
வரையறை :
செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு மென்பொருள் அல்லது கணினிச் செயல்திட்ட வரைவு எனலாம்.

வடிவமைப்பு :
ஒலிப்படங்கள், எழுத்துகள், கானொலிகள், ஒலிகள் போன்றவற்றிலிருந்து கற்றுக் கொள்ளும் மென்பொருளை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைக்கின்றனர்.

முடிவெடுக்கும் திறன் :
இந்த மென்பொருள் அறிவைக் கொண்டு தனக்கு வரும் புதிய புதிய சூழ்நிலைகளில் மனிதரைப் போல தானே முடிவெடுக்கும் திறனுடையது.

சிறப்பு :
செயற்கை நுண்ணறிவு பொதிந்த இயந்திரங்களுக்கு ஓய்வு தேவையில்லை. செயற்கை நுண்ணறிவால் பார்க்கவும் கேட்கவும் புரிந்து கொள்ளவும் முடியும். மனிதனால் முடியும் செயல்களையும் அவன் கடினம் என்று கருதும் செயல்களையும் செய்யக்கூடியது செயற்கை நுண்ணறிவு.

Question 3.
மெய்நிகர் உதவியாளர் பற்றி விவரி.
Answer:
உதவு மென்பொருள் :
திறன் பேசியில் இயங்கும் உதவு மென்பொருள் கண்ணுக்குப் புலப்படாத மனிதனைப் போல நம்முடன் உரையாடி சில உதவிகளைச் செய்கிறது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

செயல்பாடுகள் :

  • இம்மென்பொருள் நாம் சொல்லுகிறவர்களுக்குத் தொலைபேசி அழைப்பு விடுக்கும்.
  • நாம் திறக்கக் கட்டளையிடுகிற செயலியைத் திறக்கும்.
  • நாம் கேட்பதை உலாவியில் தேடும். நாம் விரும்பும் அழகான கவிதையை இணையத்தில் தேடித் தரும். எந்தக் கடையில் எது விற்கும் என்றும் சொல்லும்.
  • படிப்பதற்கு உரிய நூல்களைப் பட்டியலிடும்.
  • நாம் எடுத்த ஒளிப்படங்களைப் பற்றிக் கருத்துரைக்கும்.

எதிர்காலத்தில் :
எதிர்காலத்தில் நம் நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோரை விடவும் இது போன்ற மெய்நிகர் உதவியாளர் நம்மை நன்கு அறிந்திருக்கும்.

Question 4.
ஒளிப்படக்கருவியில் செயற்கை நுண்ணறிவு குறித்து சுருக்கி வரைக.
Answer:

  • சில உயர்வகைத் திறன் பேசியின் ஒளிப்படக்கருவி, செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தைக் கொண்டிருக்கிறது.
  • கடவுச் சொல்லும் கைரேகையும் கொண்டு திறன்பேசியைத் திறப்பது பழமையானது.
  • உரிமையாளரின் முகத்தை அடையாளம் கண்டு திறப்பது இன்றைய தொழில்நுட்பம்.
  • படம் எடுக்கும் காட்சியை அடையாளம் கண்டு அதற்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது.
  • திறன் பேசியில் உள்ள ஒளிப்படக் கருவியில் எடுக்கும் படங்களை மெருகூட்ட இத்தொழில் நுட்பம் உதவுகிறது.

பயன்கள் :
காணொலிகளைத் தொகுக்கும் மென்பொருள்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பம் பயன்படுகிறது. நேரம் வீணாவது தவிர்க்கப்படுகிறது.

Question 5.
செயற்கை நுண்ணறிவின் பொதுவான கூறுகளை விளக்குக.
Answer:

  • நம்மை அறியாமலேயே நம் வாழ்க்கையையும், வணிகத்தையும் வளப்படுத்துகிறது.
  • இத்தொழில் நுட்பத்தைக் கண்டு அச்சப்படுபவர்களின் அலறல்களை நாம் எதிர்கொள்வதே முதல் அறை கூவல்.
  • ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புகளும் அறிமுகமாகும் போது புதிய வடிவில் மாற்றம் பெறுகின்றன.
  • மனித இனத்தைத் தீங்குகளிலிருந்து காப்பாற்றி, உடல் நலத்தைப் பேணுகிறது.
  • கொடிய நோய்களைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்தல், மருத்துவரைப் போல பரிந்துரை செய்தல் போன்ற மேற்கண்ட செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 6.
நீவிர் அறிந்த செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு மூன்றினை எழுதுக.
Answer:

  • கண்காணிப்புக் கருவியில் பொதிந்திருக்கும் செயற்கை நுண்ணறிவு பலவிதங்களில் உதவியாக இருக்கின்றது.
  • வழிகாட்டி வரைபடமாகத் திறன் பேசியிலிருந்து செயற்கை நுண்ணறிவு
  • பயணம் செய்பவர்களுக்கு வழிகாட்டுகிறது.
  • செயற்கை நுண்ணறிவைக் கொண்ட இயந்திரம் மனிதர்களுடன் சதுரங்கம் முதலான விளையாட்டுகளை விளையாடுகிறது.
  • கண் அறுவை மருத்துவம் செய்கிறது.
  • சமைக்கிறது.
  • சில புள்ளிகளை வைத்துப் படம் வரைகிறது.

Question 7.
முக்காலக் கல்வியறிவு குறித்து எழுதுக.
Answer:
முந்தைய கல்வியறிவு :
ஒரு காலத்தில் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு எழுதப் படிக்கத் தெரிந்த கல்வியறிவே போதுமானதாக இருந்தது. ஆனால் இன்று, கல்வியறிவுடன் மின்னணுக் கல்வியறிவையும் மின்னணுச் சந்தைப்படுத்துதலையும் அறிந்திருத்தல் வேண்டும். இது வாழ்க்கையை எளிதாக்கவும் வணிகத்தில் வெற்றியடையவும் உதவுகிறது.

எதிர்காலக் கல்வியறிவு :
எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவும் நான்காவது தொழிற் புரட்சியின் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் அறிவுமே நம்மை வளப்படுத்தும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

Question 8.
சீன நாட்டில் அமைந்துள்ள தமிழ்க் கல்வெட்டு குறித்து எழுதுக.
Answer:
சூவன்சௌ துறைமுக நகர் :
சீன நாட்டில் காண்டன் நகருக்கு வடக்கே 500 கல் தொலைவில் உள்ளது. சூவன்சௌ துறைமுக நகர். தமிழ் வணிகர் :
சூவன்சௌ துறைமுக நகருக்குத் தமிழ் வணிகர் அடிக்கடி வந்து சென்றனர்.

சிவன் கோவில் :

  • தமிழர்களின் வரவு காரணமாக சீனாவில் சிவன் கோவில் கட்டும்படியாக அந்நாட்டு மன்னர் குப்லாய்கான் ஆணையிட்டார்.
  • இம்மன்னரது ஆணைப்படி இக்கோவில் கட்டப்பட்டது எனத் தமிழ்க் கல்வெட்டு ஒன்று இக்கோவிலில் உள்ளது.
  • இக்கோயிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நெடுவினா

Question 1.
செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினி, மென்பொருள், இயந்திர மனிதன் குறித்த செய்திகளைத் தொகுத்தெழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு - 2
முன்னுரை:
செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு மென்பொருள் அல்லது கணினிச் செயல்திட்ட வரைவு ஆகும். இது பொதிந்த இயந்திரங்களுக்கு ஓய்வு தேவையில்லை.

வேர்டுஸ்மித்:

  • இதழியலில் மொழிநடையை உருவாக்கும் மென்பொருளின் பெயர் வேர்டுஸ்மித்.
  • இதற்கு எழுத்தாளி என்று பெயர்.
  • இதில் தகவல்களைக் கொடுத்தால் மட்டும் போதும்; சில நொடிகளிலேயே அழகான கட்டுரையை உருவாக்குகின்றன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

இலா:

  • பாரத ஸ்டேட் வங்கி இலா’ என்னும் உரையாடு மென்பொருளை உருவாக்கியுள்ளது.
  • ஒரு விநாடிக்குப் பத்தாயிரம் வாடிக்கையாளர்களுடன் உரையாடும்.
  • அவர்களுக்கான சேவையை இணையம் மூலம் அளிக்கிறது.

வாட்சன்:

  • 2016ல் ஐ.பி.எம். நிறுவனத்தின் செயற்கை நுண்ண றிவுக் கணினி வாட்சன்.
  • சில நிமிடங்களில் இரண்டு கோடித் தரவுகளை அலசி, நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது.

பெப்பர்:

  • ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனே பெப்பர்.
  • இது உலக அளவில் விற்பனையாகும் ஒரு ரோபோ.
  • வீட்டுக்கு, வணிகத்துக்குப், படிப்புக்கு என மூன்று வகை ரோபோக்கள் உள்ளன.
  • இவை மனிதரின் முகபாவனைகளிலிருந்து உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுகின்றன.
  • பெப்பரை வரவேற்பாளராகவும் பணியாளராகவும் வீடுகளிலும் வணிக நிறுவனங்களிலும் உணவு விடுதிகளிலும் பயன்படுத்துகிறார்கள்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 செயற்க்கை நுண்ணறிவு

முடிவுரை:
இன்று அங்கும் இங்குமாய் இருக்கும் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு, நாளை உலகம் முழுவதும் அனைத்துத் துறைகளிலும் பயன்படும் என்பதில் ஐயமில்லை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

Students can Download 10th Tamil Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 10th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

கற்பவை கற்றபின்

வண்ணமிட்ட தொகைநிலைத் தொடர்களை வகைப்படுத்துக.

Question 1.
அன்புச்செல்வன் திறன் பேசியின் தொடுதிரையில் படித்துக்கொண்டிருந்தார்.
Answer:
அன்புச்செல்வன் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
தொடுதிரை – வினைத்தொகை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

Question 2.
அனைவருக்கும் மோர்ப்பானையைத் திறந்து மோர் கொடுக்கவும்.
Answer:
மோர்ப் பானை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
மோர் கொடுக்கவும் – இரண்டாம் வேற்றுமைத் தொகை

Question 3.
வெண்டைக்காய்ப் பொரியல் மோர்க்குழம்புக்குப் பொருத்தமாக இருக்கும்.
Answer:
வெண்டைக்காய்ப் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
மோர்க்குழம்பு – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

Question 4.
தங்க மீன்கள் தண்ணீர்த் தொட்டியில் விளையாடுகின்றன.
Answer:
தங்கமீன்கள் – உவமைத்தொகை
தண்ணீர்த் தொட்டியில் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

மொழியை ஆள்வோம்

தமிழில் மொழிபெயர்த்துத் தலைப்பிடுக.

The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark. The milky clouds start their wandering. The colourful birds start twitting their morning melodies in percussion. The cute butterflies dance around the flowers. The flower’s fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.
Answer:

இயற்கை

பொன்னான கதிரவன் நாள்தோறும் காலையில் எழுந்து அதன் ஒளிக்கதிர்களை வீசி, இருளை மறையச் செய்யும், பால் போன்ற மேகங்கள் சுற்ற ஆரம்பித்துவிடும். வண்ணப் பறவைகள் இதமான சூழ்நிலையைத் தன் இறகுகளை அடிப்பதன் மூலம் உருவாக்கும். அழகான வண்ணத்துப் பூச்சி மலர்களைச் சுற்றி ஆடும். பூக்களின் நறுமணம் தென்றல் காற்றை நிரப்பும். அந்தக் காற்று அனைத்து
இடங்களிலும் பரவி ஒரு புத்துணர்வான சூழ்நிலையை உருவாக்கும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க.

இன்சொல், எழுகதிர், கீரிபாம்பு, பூங்குழல் வந்தாள், மலை வாழ்வார், முத்துப்பல்
Answer:
எ.கா: இன்சொல் – பண்புத்தொகை
இனிமையான சொல் கூறுதல் சான்றோர்க்கு அழகு.

1. எழுகதிர் – வினைத்தொகை
மனித வாழ்க்கை எழுகதிர் போன்றது.

2. கீரிபாம்பு – உம்மைத்தொகை
கலாவும் மாலாவும் கீரியும் பாம்பும் போல எப்பொழுதும் பகைமையோடு வாழ்கின்றனர்.

3. பூங்குழல் வந்தாள் – அன்மொழித்தொகை
பூ போன்ற கூந்தலையுடைய (குழல்) பெண் வந்தாள்

4. மலை வாழ்வார் – ஏழாம் வேற்றுமைத் தொகை
குறிஞ்சி நில மக்கள் மலையின் கண் வாழ்வார்.

5. முத்துப்பல் – உவமைத்தொகை
மாலாவின் முத்துப்பல் மேலும் அவளுக்கு அழகு சேர்க்கிறது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

செய்திகளைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

பூக்களைப் பற்றிய அரிய இலக்கியச் செய்திகள்
பூ உண்டு, ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் காண்பதற்கு அரியனவாய் இருக்கும் மலர்கள், ஆல மலர்; பலா மலர்.

மலர் உண்டு; பெயரும் உண்டு; ஆனால் இதுதான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில் இருக்கும் மலர்கள் : சுள்ளி மலர், பாங்கர் மலர்.
அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள் : அத்தி, ஆலம், கொழிஞ்சி, பலா.

பயன்பாடு, நாற்றம், மக்களது விருப்பில் இடம் பெறாமை, பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவையாவன : நெருஞ்சி, எருக்கு, பூளை, குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை.

இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும். மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒருவகை அரிசி தோன்றும். இது மூங்கில் அரிசி எனப்படும்.
– கோவை. இளஞ்சேரன்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

Question 1.
மலர் உண்டு; பெயரும் உண்டு – இரண்டு தொடர்களையும் ஒரு தொடராக்குக.
Answer:
மலருக்குப் பெயர் உண்டு.

Question 2.
அரும்பாகி மொட்டாகிப் பூவாகி…. என்பதை ஒத்து அமைந்துள்ள தொடரைக் கண்டறிக.
Answer:
அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள்.

Question 3.
நீங்கள் அறிந்த இரு பூக்களின் பெயர்களையும் அதன் பயன்களையும் எழுதுக.
Answer:
முருங்கைப்பூ:
இப்பூவைக் கசாயம் செய்து வாரம் இருமுறை குடிக்கவும். குடித்துவர நீரழிவு நோய், நரம்புத்தளர்ச்சி நோய் நீங்கும். நினைவு ஆற்றல் பெருகும்.

எருக்கம் பூ:
எருக்கம் பூவைக் காய வைத்து பொடி செய்து புண்களில் பூச விரைவில் குணமாகும். கால் வீக்கம் குறைய இப்பூவை எண்ணெயில் வதக்கிக் கட்ட வீக்கம் நீங்கும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

Question 4.
அரிய மலர் – இலக்கணக் குறிப்புத் தருக.
Answer:
குறிப்புப் பெயரெச்சம்

Question 5.
தொடரில் பொருந்தாப் பொருள் தரும் மயங்கொலி எழுத்துகளைத் திருத்துக.
Answer:
இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மறத்தின் மீதேறி அவற்றைப் பரித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மனத்தை ஏற்றும். இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை, கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப்பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

வாழ்த்துமடல் எழுதுக.

மாநில அளவில் நடைபெற்ற “மரம் இயற்கையின் வரம்” எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
Answer:

திருநெல்வேலி,
12-03-2020.

அன்புள்ள நண்பன் அரசுக்கு,
உன் உயிர் நண்பன் எழுதுவது. நலம் நலமறிய ஆவல்,
நேற்றைய நாளிதழில் ‘மரம் இயற்கையின் வரம்’ என்ற தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் பங்குகொண்டு முதல் பரிசு பெற்றதைக் கண்டு மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினோம். நாளிதழிலும் அக்கட்டுரை வெளிவந்திருந்தது. அதனைப் படித்துப் பார்த்தோம்.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள் - 1

என்று நீ எழுதிய சொற்கள் விழிப்படையச் செய்துவிட்டது. நாங்களும் எங்கள் பகுதியில் மரங்களை நட்டு இயற்கை வளத்தைப் பாதுகாக்கும் செயல்களில் ஈடுபட ஆரம்பித்து விட்டோம்.

நீயும் இதுபோன்ற பல்வேறு போட்டிகளில் பங்குகொண்டு உலகளாவிய சாதனைகளைப் பெற்று வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமைத் தேடித்தர மனதார உன்னை வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு,
உன் உயிர் நண்பன்,
க. தமிழ்ம ணி .

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள் - 2

பாரதியின் வசனநடை – சிட்டுக்குருவி

சிறியதானியம் போன்ற மூக்கு; சின்னக்கண்கள்; சின்னத்தலை; வெள்ளைக் கழுத்து; அழகிய மங்கல வெண்மை நிறமுடைய பட்டுப்போர்த்த வயிறு; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப்போர்த்த முதுகு; சிறிய தோகை; துளித்துளிக் கால்கள்; இத்தனையும் சேர்த்து ஒரு பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே பிடித்து விடலாம். இவ்விதமான உடலைச் சுமந்து கொண்டு என் வீட்டிலே இரண்டு உயிர்கள் வாழ்கின்றன. அவற்றில் ஒன்று ஆண் மற்றொன்று பெண்.
இது போன்று உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒன்றைப் பற்றி வசனநடையில் எழுதுக.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

மயில்

உறுதி மிக்க மூக்கு; விதையொத்த கண்கள்; சின்னத்தலை; கரும்பச்சை மற்றும் கருநீல நிறமுடைய பட்டுப்போர்த்த வயிறு; கருமை, சாம்பல் மற்றும் செந்நிறம் கலந்த பட்டுப்போர்த்த முதுகு; நீண்ட அழகிய பல வண்ணத்தாலான தோகை; பனங்கிழங்கையொத்த கால்கள்; இத்தனையும் சேர்த்து ஒருவர் கையிலே பிடிப்பது மிகவும் அரிது. இவ்விதமான உடலைச் சுமந்து கொண்டு என் வீட்டுத் தோட்டத்திற்கு இரண்டு, உயிர்கள் வந்து போகின்றன. அவற்றில் ஒன்று ஆண் மயில் மற்றொன்று பெண் மயில்.

மொழியோடு விளையாடு

சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க.

Question 1.
முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்; நீக்காவிட்டாலும் வாசனை தரும்.
Answer:
நறுமணம்

Question 2.
பழமைக்கு எதிரானது – எழுதுகோலில் பயன்படும்.
Answer:
புதுமை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

Question 3.
இருக்கும்போது உருவமில்லை – இல்லாமல் உயிரினம் இல்லை.
Answer:
காற்று

Question 4.
நாலெழுத்தில் கண் சிமிட்டும் – கடையிரண்டில் நீந்திச் செல்லும்.
Answer:
விண்மீன்

Question 5.
ஓரெழுத்தில் சோலை – இரண்டெழுத்தில் வனம்.
Answer:
காடு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

நயமிகு தொடர்களைப் படித்து ஏற்ற தலைப்புகளை எடுத்தெழுதுக.

Question 1.
கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது. வானம் இருண்டது. வாடைக் காற்று வீசியது.
Answer:
காற்றின் பாடல்

Question 2.
புவி சிலிர்த்து, மண்ணிலிருந்து சின்னஞ்சிறு மொட்டு முகிழ்த்தது; அச்செடியை வரவேற்கும் விதமாகப் பக்கத்துச் செடிகள் தலையாட்டி மகிழ்கின்றன.
Answer:
மொட்டின் வருகை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

Question 3.
சோலைக்குள் சத்தமில்லாமல் வீசியது தென்றல்; பூக்கள் அதன் வருகையை உணர்ந்து நறுமணத்துடன் வரவேற்கின்றன. பூவாசம் கலந்த தென்றலில் வண்டுகள் மிதந்து சென்று மலர்களில் அமர்கின்றன.
Answer:
மிதக்கும் வாசம்.

Question 4.
இரவின் இருளமைதியில் இரைச்சலாய்ச் சில சுவர்க்கோழிகள். வறண்ட வானத்தின் இருண்ட புழுக்கம்; மழைக்கு ஏங்கும் புவி வெப்பப் பெருமூச்சு விடும்; கசகசத்த உயிரினங்கள்.
Answer:
உயிர்ப்பின் ஏக்கம்.

Question 5.
நின்றுவிட்ட மழை தரும் குளிர்; சொட்டுச் சொட்டாக விளிம்புகளிலிருந்தும் மரங்களிலிருந்தும் விழும் மழைநீர்பட்டுச் சிலிர்க்கும் உயிரினம்.
Answer:
நீரின் சிலிர்ப்பு.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

Question 6.
குயில்களின் கூவலிசை. புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும். இலைகளின் அசைவுகள், சூறைக்காற்றின் ஆலோலம்.
Answer:
வனத்தின் நடனம், மிதக்கும் வாசம், காற்றின் பாடல், மொட்டின் வருகை, உயிர்ப்பின் ஏக்கம், நீரின் சிலிர்ப்பு.

அகராதியில் காண்க.

அகன்சுடர், ஆர்கலி, கட்புள், கொடுவாய், திருவில்
Answer:
அகன்சுடர் – (அகல் என்பதன் திரிபு) அகல்சுடர், அகன்ற சுடர்.
ஆர்கலி – கடல், மழை, வெள்ளம், பேரொலி, ஆரவாரம்.
கட்புள் – ஓர் புலவன்.
கொடுவாய் – ஒரு மிருகம், பழிச்சொல், புலி, குறளை, வளைந்த வாய்.
திருவில் – இந்திரவில்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள் - 3

நிற்க அதற்குத் தக

வானொலி அறிவிப்பு

ஜல் புயல் சென்னைக்குத் தென்கிழக்கே 150 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இன்று இரவு சென்னைக்கும் நெல்லூருக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

புயலின்போது

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள் - 4

மேற்கண்ட அறிவிப்பைக் கேட்ட நீங்கள், உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றும் வகையில் செய்யும் செயல்களை வரிசைப்படுத்தி எழுதுக.

  • புயலின் போது வெளியே செல்ல மாட்டோம்.
  • தொலைபேசி மின்சாதனங்கள் பயன்படுத்துவதைத் தவிர்ப்போம்.
  • மாடியில் இருப்பதைத் தவிர்த்துத் தளப் பகுதியிலேயே குடும்பத்தினரோடு தங்குவேன்.
  • காற்றடிப்பது நின்றாலும் வானொலி அறிவிப்பைக் கேட்டு அதற்கேற்ப செயல்படுவோம்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

கலைச்சொல் அறிவோம்

  • Storm – புயல்
  • Tempest – பெருங்காற்று
  • Sea Breeze – கடற்காற்று
  • Tornado – சூறாவளி
  • Land Breeze – நிலக்காற்று
  • Whirlwind – சுழல்காற்று

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘பெரிய மீசை’ சிரித்தார் – வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?
அ) பண்புத்தொகை
ஆ) உவமைத்தொகை
இ) அன்மொழித்தொகை
ஈ) உம்மைத்தொகை
Answer:
அ) பண்புத்தொகை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

குறுவினா

Question 1.
தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைச்சொற்களை விரித்து எழுதுக. தொடரில் அமைக்க.
Answer:
தண்ணீ ர் குடி

  • தண்ணீரைக் குடி (இரண்டாம் வேற்றுமைத் தொகை)
  • மிகுந்த தாகத்தினால் தண்ணீரைக் குடித்தேன்.

தயிர்க்குடம்

  • தயிரை உடைய குடம் (இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை)
  • கமலா தயிர்க்குடத்திலிருந்து தயிரை ஊற்றினாள்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

சிறுவினா

Question 1.
தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி, வரும் வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள்.
இப்பகுதியில் உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு விரித்து எழுதுக.
Answer:
மல்லிகைப்பூ

  • இரு பெயரொட்டுப் பண்புத்தொகை.
  • மல்லிகை என்னும் பூ (மல்லிகை – சிறப்புப் பெயர், பூ – பொதுப் பெயர்)

பூங்கொடி

  • உவமைத் தொகை
  • பூ போன்ற கொடி

தண்ணீர்த் தொட்டியில்

  • இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
  • தண்ணீரை ஊற்றும் தொட்டி

குடிநீர் நிரப்பினாள்

  • இரண்டாம் வேற்றுமைத் தொகை
  • குடிநீரை நிரப்பினாள்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
தொகை நிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
அ) இரண்டு
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஆறு
Answer:
ஈ) ஆறு

Question 2.
கீழ்க்காணும் சொற்களில் உம்மைத்தொகை அல்லாத சொல் எது?
அ) தேர்ப்பாகன்
ஆ) அண்ண ன் தம்பி
இ) வெற்றிலை பாக்கு
ஈ) இரவு பகல்
Answer:
அ) தேர்ப்பாகன்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

Question 3.
‘மதுரை சென்றார்’ – இத்தொடரில் அமைந்துள்ள வேற்றுமைத்தொகை எவ்வகை வேற்றுமைத் தொகைக்குப் பொருந்தும்?
அ) மூன்றாம் வேற்றுமைத் தொகை
ஆ) நான்காம் வேற்றுமைத் தொகை
இ) ஐந்தாம் வேற்றுமைத் தொகை
ஈ) ஆறாம் வேற்றுமைத் தொகை
Answer:
ஆ) நான்காம் வேற்றுமைத் தொகை

Question 4.
பொருத்துக.
1. மதுரை சென்றார் – அ) வினைத்தொகை
2. வீசு தென்றல் – ஆ) பண்புத்தொகை
3. செங்காந்தள் – இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
4. மார்கழித் திங்கள் – ஈ) நான்காம் வேற்றுமைத் தொகை
அ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
ஆ) 1.ஈ 2.இ 3.ஆ 4.அ
இ) 1.ஈ 2.ஆ 3.அ 4.இ
ஈ) 1.ஈ 2.இ 3.அ 4.ஆ
Answer:
அ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

Question 5.
பொருத்துக.
1. உவமைத்தொகை – அ) முறுக்கு மீசை வைத்தார்
2. உம்மைத்தொகை – ஆ) மலர்க்கை
3. அன்மொழித்தொகை – இ) வட்டத்தொட்டி
4. பண்புத்தொகை – ஈ) அண்ணன் தம்பி
அ) 1.ஆ 2.ஈ. 3.அ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.இ 3.அ 4.ஈ
ஈ) 1.இ 2.ஈ 3.அ 4.ஆ
Answer:
அ) 1.ஆ 2.ஈ 3.அ 4.இ

Question 6.
பண்புத்தொகை அல்லாத ஒன்று அ) செங்காந்தள்
ஆ) வட்டத்தொட்டி
இ) இன்மொழி
ஈ) கொல்களிறு
Answer:
ஈ) கொல்களிறு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

Question 7.
காலம் கரந்த பெயரெச்சம்
அ) வினைத்தொகை
ஆ) பண்புத்தொகை
இ) உவமைத்தொகை
ஈ) உம்மைத்தொகை
Answer:
அ) வினைத்தொகை

Question 8.
வேற்றுமையுருபு அல்லாதது
அ) ஐ, ஒடு
ஆ) கு, இன்
இ) ஆகிய, ஆன
ஈ) அது, கண்
Answer:
இ) ஆகிய, ஆன

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

Question 9.
பொருந்தாத இணையைக் கண்டறிக
அ) வினைத்தொகை – தேர்ப்பாகன்
ஆ) பண்புத்தொகை – இன்மொழி
இ) உம்மைத்தொகை – தாய் சேய்
ஈ) அன்மொழித்தொகை – சிவப்புச்சட்டை பேசினார்
Answer:
அ) வினைத்தொகை – தேர்ப்பாகன்

Question 10.
‘மலர் போன்ற கை’ இதில் ‘மலர்’ என்பது ………………….. ‘போன்ற’ என்பது ……………… ‘கை’ என்பது…………………..
அ) உவம உருபு – உவமை – உவமேயம்
ஆ) உவமை – உவம உருபு – உவமேயம்
இ) உவமேயம் – உவமை – உவம உருபு
ஈ) இவற்றுள் ஏதுமில்லை
Answer:
ஆ) உவமை – உவம உருபு – உவமேயம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

Question 11.
சிறப்புப் பெயர், பொதுப்பெயர் ஆகியன வரும் தொகைச்சொல்
அ) பண்புத்தொகை
ஆ) வினைத்தொகை
இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
ஈ) உம்மைத்தொகை
Answer:
இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை

Question 12.
மார்கழித் திங்கள், சாரைப்பாம்பு ஆகிய சொற்களில் இடம்பெறும் பொதுப்பெயர்கள் எவை?
அ) மார்கழி, சாரை
ஆ) திங்கள், பாம்பு
இ) மார்கழி, பாம்பு
ஈ) திங்கள், சாரை
Answer:
ஆ) திங்கள், பாம்பு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

Question 13.
‘செங்காந்தள்’ – இப்பண்புத்தொகைச் சொல்லில் மறைந்து வரும் உருபு
அ) ஆன
ஆ) ஆகிய
இ) போன்ற
ஈ) ஐ
Answer:
ஆ) ஆகிய

Question 14.
‘இன்மொழி’ – இப்பண்புத்தொகைச் சொல்லில் மறைந்து வரும் உருபு
அ) ஆன
ஆ) ஆகிய
இ) போன்ற
ஈ) இன்
Answer:
அ) ஆன

Question 15.
‘மதுரை சென்றாள்’ – இவ்வேற்றுமைத்தொகைச் சொல்லில் இடம்பெறும் வேற்றுமை உருபு
அ) கு
ஆ) கண்
இ) ஆல்
ஈ) அது
Answer:
அ) கு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

Question 16.
கரும்பு தின்றான் – இத்தொடர் …………………………….. வேற்றுமைத்தொடர்.
அ) இரண்டாம்
ஆ) மூன்றாம்
இ) நான்காம்
ஈ) ஆறாம்
Answer:
அ) இரண்டாம்

Question 17.
நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகைக்கான சொல்
அ) தேர்ப்பாகன்
ஆ) தமிழ்த்தொண்டு
இ) கரும்பு தின்றான்
ஈ) மதுரை சென்றார்
Answer:
ஆ) தமிழ்த்தொண்டு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

Question 18.
பொருத்திக் காட்டுக.
i) வீசு தென்றல் – 1. உம்மைத் தொகை
ii) செங்காந்தள் – 2. உவமைத்தொகை
iii) மலர்க்கை – 3. பண்புத்தொகை
iv) தாய்சேய் – 4. வினைத்தொகை
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 2, 1, 3
ஈ) 2, 3, 4, 1
Answer:
அ) 4, 3, 2, 1

Question 19.
இருபெயரொட்டுப் பண்புத்தொகைக்கான சொல்
அ) மலர்க்கை
ஆ) அண்ண ன் தம்பி
இ) மார்கழித்திங்கள்
ஈ) தேர்ப்பாகன்
Answer:
இ) மார்கழித்திங்கள்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

Question 20.
பொருத்துக.
i) இன்மொழி – 1. உவமைத்தொகை
ii) தாய்சேய் – 2. வினைத்தொகை
iii) முத்துப்பல் – 3. உம்மைத் தொகை
iv) வருபுனல் – 4. பண்புத்தொகை
அ) 1, 2, 3, 4
ஆ) 3, 4, 2, 1
இ) 4, 3, 2, 1
ஈ) 4, 3, 1, 2
Answer:
ஈ) 4, 3, 1, 2

Question 21.
சிவப்புச்சட்டை பேசினார் – அடிக்கோடிட்ட சொல்லுக்கான தொகையின் வகை எது?
அ) பண்புத்தொகை
ஆ) உவமைத்தொகை
இ) அன்மொழித்தொகை
ஈ) உம்மைத்தொகை
Answer:
அ) பண்புத்தொகை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

குறுவினா

Question 1.
சொற்றொடர் என்றால் என்ன? எ.கா. தருக.
Answer:

  • சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தரும்.
  • இது தொடர் அல்லது சொற்றொடர் எனப்படும்.
    எ.கா: நீர் பருகினான்.

Question 2.
தொகைநிலைத் தொடர் என்றால் என்ன?
Answer:

  • பெயர்ச் சொல்லும் வினைச்சொல்லும் சேரும் தொடர்.
  • இடையில் வேற்றுமை உருபுகளோ, வினை பண்பு முதலியவற்றின் உருபுகளோ மறைந்து வரும்.
  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் நிற்கும்.
    எ.கா: கரும்பு தின்றான்.

Question 3.
தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும். அவை:

  • வேற்றுமைத்தொகை
  • வினைத்தொகை
  • பண்புத்தொகை
  • உவமைத்தொகை
  • உம்மைத்தொகை
  • அன்மொழித்தொகை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

Question 4.
வேற்றுமை உருபுகள் எத்தனை? அவை யாவை?
Answer:
வேற்றுமை உருபுகள் ஆறு. அவை: ஐ, ஆல், கு, இன், அது, கண்.

Question 5.
வேற்றுமைத்தொகை என்றால் என்ன? எ.கா தருக.
Answer:
ஒரு தொடரில் வேற்றுமை உருபுகளில் ஏதேனும் ஒன்று மறைந்து வந்து பொருள் தரும். எ.கா: மதுரை சென்றார் – மதுரைக்குச் சென்றார்.

Question 6.
உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை என்றால் என்ன? எ.கா. தருக.
Answer:
ஒருஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வரும். எ.கா: தேர்ப்பாகன்.
தேரை ஓட்டும் பாகன். ஐ – உருபு; ஓட்டும் – பயன்.
இதுவும் வேற்றுமைத் தொகையே.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

Question 7.
பண்புத்தொகையைச் சான்றுடன் விளக்குக.
Answer:

  • அளவு, நிறம், வடிவம், சுவை ஆகியவற்றை உணர்த்தும்.
  • பண்புப்பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும். இடையில் ‘மை’ என்னும் பண்பு விகுதி மறைந்து வரும்.
  • ஆகிய, ஆன என்னும் பண்பு உருபுகள் மறைந்து வரும்.
    எ.கா: செங்காந்தள், வட்டத்தொட்டி.

Question 8.
இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்றால் என்ன? சான்று தருக.
Answer:

  • சிறப்புப் பெயர் முன்னும் பொதுப் பெயர் பின்னுமாக வரும்.
  • இடையில் ஆகிய என்னும் பண்பு உருபு தொக்கி வரும்.
    எ.கா: மார்கழித் திங்கள்.

Question 9.
உவமைத்தொகை என்றால் என்ன? எடுத்துக்காட்டு தந்து விளக்குக.
Answer:
உவமைக்கும் உவமேயத்திற்கும் இடையில் உவம உருபு மறைந்து வரும்.
எ.கா: மலர்க்கை . உவமை – மலர், உவமேயம் – கை, உவம உருபு – போன்ற.
மலர் போன்ற கை எனப் பொருள் படும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

Question 10.
உம்மைத்தொகை என்றால் என்ன? சான்று தந்து விளக்குக.
Answer:
இருசொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் ‘உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து வரும். எ.கா: தாய்சேய், அண்ண ன் தம்பி.
தாயும் சேயும், அண்ணனும் தம்பியும் என விரிந்து பொருளை உணர்த்துகின்றன.

Question 11.
அன்மொழித்தொகை என்றால் என்ன?
Answer:
வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகை நிலைத் தொடர்களில் அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தரும்.
எ.கா: முறுக்கு மீசை வந்தார்.
முறுக்கு மீசையை உடையவர் வந்தார் எனத் தொகை நிலைத்தொடர் அல்லாத வேறு சொல் மறைந்து நின்று பொருள் தருகிறது.

Question 12.
உம்மைத்தொகை எத்தனை அளவுப் பெயர்களைத் தொடர்ந்து வரும்? அவை யாவை?
Answer:
உம்மைத்தொகை நான்கு அளவுப் பெயர்களைத் தொடர்ந்து வரும். அவை:

  • எண்ண ல்
  • நீட்டல்
  • எடுத்தல்
  • முகத்தல்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

Question 13.
இடைச்சொல் மறைந்து வரும் தொகைச் சொற்கள் எவை?
Answer:

  • வேற்றுமைத் தொகை
  • இருபெயரொட்டுப் பண்புத்தொகை
  • வினைத்தொகை
  • உவமைத்தொகை
  • பண்புத்தொகை
  • அன்மொழித்தொகை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.5 தொகைநிலைத் தொடர்கள்

Question 14.
வினைத்தொகையைச் சான்றுடன் விளக்குக.
Answer:
காலம் கரந்த பெயரெச்சம். காலம் காட்டும். இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்கும். வினைப்பகுதியைத் தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லைப் போல் நடக்கும். எ.கா: வீசு தென்றல் என்பது, வீசிய தென்றல் வீசுகின்ற தென்றல் வீசும் தென்றல் என முக்காலத்திற்கும் பொருந்தும்.