Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

Students can Download 9th Tamil Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

Question 1.
வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்குத் தரப்பட வேண்டும் – அறிஞர் அண்ணா
உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே! – கதே
இவை போன்ற பொன்மொழிகள் எழுதி வகுப்பறையில் படித்துக் காட்டுக.
Answer:
புத்தகம் பற்றிய பொன் மொழிகள்

  • தொட்டுப் பார்த்தால் காகிதம்
    படித்துப் பார்த்தால் ஆயுதம்
  • புத்தகமே நம்மைச் சீர்திருத்தும் நண்பன்.
  • உலகின் மூலை முடுக்குகளுக்கெல்லாம்
    போக விரும்பினால் ஒரு நூலகத்துக்குச் செல் – டெஸ்கார்ட்ஸ்
  • கைத்துப்பாக்கிகளை விடப் பெரிய ஆயுதம் புத்தகமே – லெனின்
  • உடலுக்கு உடற்பயிற்சி போல் மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு – சிக்மண்ட் ஃபிராய்ட்
  • புது வாழ்வைத் தேடுகிறீர்களா? ஒரு புதிய புத்தகத்தை வாசிக்கத் தொடங்குங்கள் – இங்கர்சால்
  • நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலை சிறந்த நண்பன். – ஆபிரகாம் லிங்கன்
  • எந்தப் புத்தகத்தையும் படிக்காத புத்தகம் என்று சொல்லாதீர்கள்; படிக்க வேண்டிய புத்தகம் என்று சொல்லுங்கள் – விவேகானந்தர்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

Question 2.
சீர்காழி இரா.அரங்கநாதன் அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்ட் 9-ஆம் நாள் தேசிய நூலக நாளாகக் கொண்டாடப்படுவதன் காரணத்தை அறிக.
Answer:
தேசிய நூலக நாள் – காரணங்கள்

  • இந்தியாவைச் சேர்ந்த கணிதவியலாளரும் நூலகவியலாளருமான சீர்காழி இராமாமிர்தம் ரங்கநாதன் (சீர்காழி. இரா.அரங்கநாதன்] 09.08.1892 – ல் பிறந்தார். இவரது பிறந்த தினம் “தேசிய நூலக நாள்” ஆகும்.
  • இந்திய நூலகவியலின் தந்தை என அறியப்படும் இவர், நூலகவியலின் ஐந்து விதிகளை அறிமுகம் செய்தவர். கோலன் என்னும் நூற்பகுப்பாக்க முறையை உருவாக்கியவர்.
  • நூலகவியலின் சிந்தனைகளுக்காக உலக அளவில் பல பரிசுகளைப் பெற்ற பெருந்தகையாளர். இந்திய அரசு இவருக்குப் பத்ம ஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.
  • இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் நூலகத்துறை பேராசிரியராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.
  • நூலகவியலின் உயர்பட்டங்களை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட “இந்திய
    லகவியல் பள்ளியில்” பணியாற்றினார்.
  • வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள், உயர்தர நூலகங்களில் உறுப்பினராகவும், உயர்பதவிகளையும் பெற்றிருந்தார்.
  • ஐதராபாத்தில் உள்ள “நகர நடுவ நூலகத்தில்” இவரது உருவப் படம் வைக்கப்பட்டுள்ளது.
  • 27.09.1972ல் பெங்களுரில் இறுதிநிலை அடைந்த, சீர்காழி இரா. அரங்கநாதனின் மேற்கூறிய பெருமைகளே, அவரது பிறந்தநாளை “தேசிய நூலக தினமாக” கொண்டாடு வதற்கான காரணங்கள் ஆகும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

Question 3.
நூலகத்தில் கவிதை, கதை முதலிய நூல்களை நூலாசிரியர் வரிசையிலும் நூலின் அடையாளக் குறியீட்டு எண் அடிப்படையிலும் எவ்வாறு தேடுவது என்பதைத் தெரிந்துகொள்க.
Answer:

  • அகரவரிசையில் நூலாசிரியர் பெயர் அறிந்து கொள்ள வேண்டும்.
  • நூல்களின் அடையாளக் குறியீட்டு எண்களையும் தெரிந்து கொண்டு தேடுதல் வேண்டும்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சரியான கூற்றினைத் தெரிவு செய்க.
அ) ‘ஆ’ என்பது எதிர்மறை இடைநிலை.
ஆ) வீட்டிற்கோர் புத்தகசாலை என்பது அண்ணாவின் மேடைப்பேச்சு.
இ) வில்லுப்பாட்டு ஓர் இலக்கிய வடிவம்.
1. ஆ, இ சரி; அ தவறு
2. அ, இ, சரி; ஆதவறு
3. மூன்றும் சரி
4. மூன்றும் தவறு
Answer:
3) மூன்றும் சரி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

குறுவினா

Question 1.
நீங்கள் மிகவும் விரும்பிப் படித்த நூல்கள் யாவை?
Answer:

  • உலக அறிவைத் தரக்கூடிய பொது அறிவு நூல்கள்.
  • அறநூலாம் திருக்குறள்.
  • விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைக் கூறும் அறிவியல் நூல்கள்.
  • வீரர்கள், தியாகிகள், கவிஞர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்.

நெடுவினா

Question 1.
நூலகம், நூல்கள் ஆகியன குறித்து அண்ணாவின் வானொலி உரையில் வெளிப்படுகின்ற கருத்துகள் யாவை?
Answer:
முன்னுரை:
மனிதனின் சிந்தனையைத் தூண்டுவது நூல்களே. இசையைப் போல மனதைப் பண்படுத்துவதும் நூல்களே எனில் மிகையாகாது. “வீட்டிற்கோர் புத்தகசாலை” என்னும் அண்ணாவின் வானொலி உரை மூலம், நூலகம், நூல்கள் குறித்து வெளிப்படும் கருத்துகள் குறித்து பார்ப்போம்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

நூலகம்:
ஒரு நாட்டின் நிலை, உலக நிலைக்கேற்ப வளரவேண்டும் எனில் வீட்டு நிலை மாற வேண்டும். வீட்டிற்கோர் புத்தகசாலை [நூலகம்] வேண்டும். ஒரு நாட்டை உலகம் மதிப்பது அந்நாட்டு மக்களின் மனவளத்தைக் கண்டே ஆகும். நல்ல மனவளம் தருவது நூலகமே .

“வீட்டிற்கோர் புத்தகசாலை” என்ற இலக்கினை நடைமுறைப்படுத்தினால் நமது சந்ததி நல்ல மனவளம் பெறுவர். நாடும் நலமும் வளமும் பெறும்.

வீட்டில் அலங்காரப் பொருட்களுக்கு போகப் பொருள்களுக்கு முக்கியத்துவம் தரும் நிலை மாறவேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் புத்தகசாலைக்கு இடம் தரப்பட வேண்டும். உணவும் உடையும் எவ்வாறு அடிப்படைத் தேவையோ அதைப் போலவே, நூலகமும் அடிப்படைத் தேவையாகும்.

நூல்கள் :
நாட்டை அறிய, உலகை அறிய, ஏன் ஒருவன் தன்னை அறிய ஏடுகள் (நூல்) வேண்டும். நிபுணத்துவம் தரும் ஏடுகள்தான் என்பதன்று, அடிப்படை அறிவை, உண்மையை உணர்த்தும் நூ ல்களையாவது கற்க முனையுங்கள்.

பூகோள, சரித ஏடுகள் இருத்தல் வேண்டும். வீட்டிற்கோர் “திருக்குறள்” கட்டாயம் வேண்டும்.
சங்க இலக்கியங்களின் சாரத்தைத் தீட்டித்தரும் நூல்களும் இருக்க வேண்டும். கற்க வேண்டும்.
விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பற்றிய முக்கியமான தரவுகளைத் தரும் நூல்கள் படித்திடல் வேண்டும்.

  • நாட்டு விடுதலைக்கு உழைத்தவர்கள்
  • மக்களின் மனமாசு துடைத்தவர்கள்
  • தொலைதேசங்களைக் கண்டவர்கள்
  • வீரர்கள், விவேகிகள் வாழ்க்கை

ஆகிய நூல்கள் இருத்தல் வேண்டும் என்கிறார் பேரறிஞர் அண்ணா .

முடிவுரை :
கேட்டினை நீக்கிட வீட்டிலே புத்தகசாலை அமைப்போம்.

“புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண்டில்
புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்”

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

என்ற பாவேந்தர் கூற்றுப்படி புத்தகசாலை அமைப்போம், புத்தகம் வாசித்துப் புதுவாழ்வு பெறுவோம்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன் என்றவர்……………..
அ) அறிஞர் அண்ணா
ஆ) காந்தியடிகள்
இ) ஆபிரகாம் லிங்கன்
ஈ)வின்சென்ட் சர்ச்சில்
Answer:
இ) ஆபிரகாம் லிங்கன்

Question 2.
அண்ணா நூற்றாண்டை நினைவுபடுத்தும் வகையில் தமிழக அரசு உருவாக்கியது …………
அ) நூலகம்
ஆ) அருங்காட்சியகம்
இ) நினைவில்லம்
ஈ) பூங்கா
Answer:
அ) நூலகம்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

Question 3.
வீட்டிற்கோர் புத்தக சாலை என்பது அண்ணாவின் ………… ஆகும்.
அ) தொலைக்காட்சி உரை
ஆ) இலக்கியச் சொற்பொழிவு
இ) வானொலி உரை
ஈ) அரசியல் மேடைப் பேச்சு
Answer:
இ) வானொலி உரை

Question 4.
தென்னகத்துப் பெர்னாட்ஷா என்றழைக்கப்பட்டவர் ………..
அ) காமராஜர்
ஆ) தந்தை பெரியார்
இ) அறிஞர் அண்ணா
ஈ) திரு.வி.க
Answer:
இ) அறிஞர் அண்ணா

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

Question 5.
அண்ணா நூற்றாண்டு நூலகம் உருவாக்கப்பட்ட ஆண்டு
அ) 2010
ஆ) 2012
இ) 2014
ஈ) 2013
Answer:
அ) 2010

Question 6.
நடுவண் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்ட ஆண்டு
அ) 2006
ஆ) 2008
இ) 2009
ஈ) 2010
Answer:
இ) 2009

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

Question 7.
இருமொழிச்சட்டத்தை உருவாக்கியவர் யார்?
அ) காமராஜர்
ஆ) மு.கருணாநிதி
இ) அறிஞர் அண்ணா
ஈ) எம்.ஜி.ஆர்
Answer:
இ) அறிஞர் அண்ணா

Question 8.
பொருத்தமான விடையைத் தேர்க.
அ) உலகின் மிகப் பெரிய நூலகம் – 1. சரசுவதி மகால் நூலகம்
ஆ) இந்தியாவின் மிகப் பெரிய நூலகம் – 2. கன்னிமரா நூலகம்
இ) தமிழ் நூல்கள் அதிகமாக உள்ள நூலகம் – 3. தேசிய நூலகம், கொல்கத்தா
ஈ) ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்கும் நூலகம்- 4. லைப்ரரி ஆப் காங்கிரஸ், அமெரிக்கா
அ) 1, 4, 3, 2
ஆ) 4, 3, 2, 1
இ) 4, 2, 3,1
ஈ) 3, 2, 4, 1
Answer:
ஆ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

Question 9.
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம்………………..
அ) சரசுவதி மகால்.
ஆ) கன்னிமரா.
இ) தேசிய நூலகம், கொல்கத்தா.
ஈ) நடுவண் நூலகம், திருவனந்தபுரம்.
Answer:
ஈ) நடுவண் நூலகம், திருவனந்தபுரம்

குறுவினா

Question 1.
அறிஞர் அண்ணாவின் படைப்புகளில் இரண்டினைக் கூறுக.
Answer:

  • சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்
  • இன்ப ஒளி

Question 2.
அறிஞர் அண்ணா இதழாசிரியராகப் பணியாற்றிய இதழ்களின் பெயரினைக் குறிப்பிடுக.
Answer:

  • ஹோம்ரூல்
  • திராவிட நாடு
  • ஹோம்லேண்ட்
  • மாலை மணி
  • நம்நாடு
  • காஞ்சி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.4 விட்டிற்கோர் புத்தகசாலை

Question 3.
அறிஞர் அண்ணா துணையாசிரியராகப் பணியாற்றிய இதழ்களின் பெயரினைக் குறிப்பிடுக.
Answer:

  • குடியரசு
  • விடுதலை

சிறுவினா

Question 1.
அண்ணாவின் புகழ்பெற்ற மொழிகள் சிலவற்றைக் குறிப்பிடுக?
Answer:

  • மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு .
  • கத்தியைத் தீட்டாதே, உன்றன் புத்தியைத் தீட்டு
  • இளைஞர்கள் உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முனைகள்
  • நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
  • சட்டம் ஒரு இருட்டறை – அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு.
  • பெயர்ப்பகுபதம், வினைப்பகுபதம் என்று இருவகைப்படும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

Students can Download 9th Tamil Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

Question 1.
இன்றைய சாதனைப் பெண்மணிகள் என்னும் தலைப்பில் தொகுப்பேடு உருவாக்குக.
Answer:
சாதனைப் பெண்மணிகள்:
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற பெண்மணிகள், பலசோதனைகளைக் கடந்து சாதனை செய்து பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி ஆனவர்கள்.

இந்திரா காந்தி:
இந்திரா பிரியதர்ஷினி, இந்தியாவின் இரும்புப் பெண்மணி. நாட்டின் பிரதமராக, எதிர்க்கட்சி தலைவராக இருந்த பொழுது பல விமர்சனங்கள், பல தடைகள் வந்தாலும், தயங்காது துணிச்சலான பல முடிவுகளை எடுத்து பாரத நாட்டை உயரச் செய்தவர்.

அன்னை தெரசா:
கருணையின் மறு உருவம் இவர். அமைதிக்கான “நோபல்” பரிசினையும், இந்திய நாட்டின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருதையும் பெற்றவர். அநாதைகள், ஆதரவற்றவர்கள், நோயாளிகள் என அனைவருக்காகவும் தம் வாழ்வை அர்ப்பணித்த அன்பின் திரு உருவம். அகிலமே “அன்னை ” எனக் கொண்டாடிய பெருமைக்குரியவர்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

எம். எஸ். சுப்புலெட்சுமி:
இசைத் துறையில் உலகப்புகழ் பெற்றவர். ஐ.நா மன்றத்தில் இசைக்கச்சேரி நடத்திய முதல் இந்தியப் பெண்மணி. பக்திப் பாடல்கள், கீர்த்தனைகள், திரை இசைப் பாடல்கள் என அனைத்து இசைவடிவிலும் முத்திரைபதித்த கலைமாமணி இவர்.

இந்திரா நூயி:
உலகின் முன்னணி உணவு மற்றும் குளிர்பான நிறுவனமான, “பெப்சிகோ”வின் தலைமைச் செயல் அதிகாரி. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உருவாக்கியுள்ள ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள இந்திய வம்சாவளி சார்ந்த தமிழ்ப் பெண்.

ப்ரித்தி பட்டேல்:
குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 44 வயதான இவர் இங்கிலாந்து அமைச்சரவையில் சர்வதேச வளர்ச்சித் துறை மந்திரியாகப் பொறுப்பேற்றுள்ளார்.

கியாரா நர்கின்:
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுமி. 16 வயதே ஆனவர். ஆரஞ்சுப் பழத்தோலை உறிஞ்சு பொருளாகப் பயன்படுத்துவது மூலம் நிலத்தில் நீரைத் தக்க வைத்து, வறட்சிக் காலத்திலும் விளைச்சலைப் பெறலாம் எனக் கண்டறிந்தார். இவர் சமர்ப்பித்த “தண்ணீர் இல்லாப் பயிர்கள் இனி இல்லை ” என்ற ஆய்வுக்கு 50,000 டாலர் பரிசாகப் பெற்றார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

ஸ்டெஃபி கிராஃப்:
டென்னிஸ் வீராங்கனை, உலகெங்கும் உள்ள பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி ஆனவர், 22 கிராண்ட்ஸ்லாம், ஒரு ஒலிம்பிக் தங்கப் பதக்கம், கிராண்ட் பிரீ பட்டங்கள் பல பெற்றவர். தற்போது போர்களால் பாதிக்கப்படும் நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு ஆதரவு அளித்து காத்து வருகிறார்.

செரீனா வில்லியம்ஸ் :
அதிரடியாக ஆடும் டென்னிஸ் வீராங்கனை. நான்கு ஒலிம்பிக்கில் தங்கம் வென்று ஸ்டெஃபிகிராஃபின் சாதனையை முறியடித்தவர்.

ஜே. கே. ரவுலிங் :
வறுமைச்சூழல், சமூகத்தின் நிராகரிப்புகள் இவைகளையெல்லாம் தாண்டி, “ஹாரி பாட்டர்” கதை எழுதி வெற்றி பெற்றவர். உலகப் புகழ் பெற்ற பெண்மணி.

மாணவர்களே, இச்சாதனைப் பெண்மணிகளின் புகைப் படங்களையும் திரட்டி, இத்தகவல்களுடன் தொகுப்பேடு தயாரித்துக் கொள்ளுங்கள்.

மேலும், கல்பனா சாவ்லா, மேரிகோம், சானியா மிர்சா, ஸ்குவாஷ் தீபிகா, டாக்டர் சாந்தா என பல சாதனையாளர்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

Question 2.
கல்வி குறித்த சிறப்புத் தொடர்கள், பொன் மொழிகளைத் திரட்டிக் கட்டுரை வரைக.
Answer:
தொடர்கள்

  • கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
  • கைப்பொருள் தன்னின் மெய்பொருள் கல்வி
  • கல்வி கரையில கற்பவர் நாள் சில
  • கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு
  • கல்வியழகே அழகு

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

பொன்மொழிகள்

  • கற்ற கல்வியும் பெற்ற செல்வமும் கடைசி மூச்சு வரை பிறருக்குக் கொடுக்கத்தான்.
  • எடுத்தால் குறைவது செல்வம், கொடுத்தால் வளர்வது கல்வி.
  • கல்வி ஓர் அணிகலன், அணிந்தால் அழகு தரும், அணிவித்தால் சிறப்பினைத் தரும்.

கல்வியின் சிறப்பு

முன்னுரை:
“வெள்ளத்தல் அழியாது வெந்தழலால் வேகாது”
எதனாலும் அழிக்க முடியாத விழுச்செல்வமாம் கல்வியின் சிறப்புகளாவன.

சென்ற இடமெல்லாம் சிறப்பு:
கல்வியெனும் கேடில்லாத செல்வத்தைப் பெற்றவன் எங்கு, எவ்விடம் சென்றாலும் சமூ கத்தால் மதிக்கப்படுகிறான். கற்றவனுக்கு எல்லா ஊரும் சொந்த ஊரே, எல்லா நாடும் சொந்த நாடேயாகும். இதனையே பொய்யாப் புலவனும்,

“யாதானும் நாடாமால் ஊராமல் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு” என்றார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

மெய்ப்பொருள் கல்வி:
உலகப் பொருள்களாகிய வீடு, செல்வம், பொன், நிலம் இவையாவும் பருப்பொருள்கள். கள்வனால் களவாடப்படும், வெள்ளத்தால் நெருப்பால் அழியும். ஆனால் கல்வி நுண் பொருளாம் மெய்ப்பொருள் ஆகும். கள்வனால், பகைவனால் கொள்ளப்படாது. கொடுக்க கொடுக்க வளருமேயன்றி குறைவுபடாது. எனவே கல்வி மெய்ப் பொருளாகும்.

நிற்க அதற்குத் தக:
ஒருவன் தான் எவ்வளவு கல்வி கற்றாலும் அதனைச் செயல் வடிவில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அவன் கற்ற கல்வியின் பயன் கிடைக்கும். கற்ற கல்வியின் வழி நடக்கவில்லையெனில் பயன் இல்லை என்பதை.

“கற்க கசடற கற்பவை கற்ற பின்
நிற்க அதற்குத் தக” என்ற வள்ளுவன் வழி விளங்கிக் கொள்ளலாம்.

கண்ணுடையோர் கற்றோர்:
முகத்தின் கண்ணானது கற்றவருக்குரிய அடையாளமாகக் கூறப்படுகிறது. கல்வியறிவைப் பெற்றவனே கண்ணுடையவன். அதனைப் பெறாதவனின் கண்கள் கண் எனப்படுவதில்லை. அவை முகத்தின் புண்களே ஆகும்.

“கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்”

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

கற்பவனே வாழ்பவன்:
மனிதன் ஆயுள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். “கற்க மறுப்பவன் வாழ மறுப்பவன் ஆகிறான்”. கல்விக்காக உயிர் கொடுத்தோர் மரணிப்பதிலலை. அதாவது கற்பவர் நாள் சிலவாக இருந்து அவர்கள் உடல் அழியலாம். ஆனால் அவர் கற்ற, கற்றுக் கொடுத்த கல்வி உலகம் அழியும் வரை நிலைத்திருக்கும். எனவே கற்பவன், கல்விக்காக உயிர் கொடுப்பவன் என்றும் வாழ்கிறான்.

முடிவுரை:
ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வியானது அப்பிறவிக்கு மட்டுமின்றி ஏழேழு பிறவிக்கும் உடன் இருந்து வாழ வைக்கும்.

“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி யொருவர்க்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து”.

பாடநூல் வினாக்கள்

குறுவினா

Question 1.
சாரதா சட்டம் எதற்காக இயற்றப்பட்டது?
Answer:

  • பெண் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத்திருமணம்.
  • அதனைத் தடுக்கும் நோக்கத்தில் 1929ம் ஆண்டு சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

சிறுவினா

Question 1.
சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை எழுதுக.
Answer:
பெண்பாற் புலவர்கள் :

  • ஔவையார்
  • நக்கண்ணையார்
  • ஒக்கூர் மாசாத்தியார்
  • காக்கைப்பாடினியார் ஆதிமந்தியார்
  • வெள்ளிவீதியார் வெண்ணிக்குயத்தியார்
  • நப்பசலையார் பொன்முடியார்
  • காவற்பெண்டு
  • அள்ளூர் நன்முல்லையார் ஆகியோர் ஆவார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

Question 2.
இன்றைய பெண்கல்வி என்னும் தலைப்பில் வில்லுப்பாட்டு வடிவில் பாடல் எழுதுக?
Answer:

இன்றைய பெண்கல்வி

குழுத்தலைவர் ! ஊதாங்குழலை எடுக்கும் பெண்ணே
நீ எழுதுகோலை எடுக்கவேணும், கையிலே….
மற்றோர் : ஆமா கையிலே….
குழுத்தலைவர் ! ஓடு, செங்கல் செய்யும் பெண்ணே , ஏடெடுத்து நீ போகணும்….
மற்றோர் : ஆமா … போகணும்.
குழுத்தலைவர் – சிந்திக்கும் மூளை உனக்கு வேண்டும்.
அம்மா…. நீ நிந்தையைப் பொறுத்துக்கோ
அம்மா… நீ உன் திறமையைக் காட்டு அம்மா…
மற்றோர் ! ஆமா… திறமையைக் காட்டு அம்மா…
குழுத்தலைவர் – முடியாது பெண்ணாலே என்ற கேலியினை விரட்டி அடித்து முடித்துக் காட்டு
அம்மா நீ … முடித்துக் காட்டு அம்மா ….
மற்றோர் ! ஆமா… முடித்துக் காட்டு…

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

குழுத்தலைவர் – செல்லம்மா நீ செல் அம்மா பள்ளிக்கு… பட்டம் பெறு அம்மா சட்டம் செய்.
அம்மா… நாடே உன்னை வணங்கட்டும் அம்மா…
மற்றோர் : ஆமா… நாடே உன்னை வணங்கட்டும் அம்மா…

Question 3.
மருத்துவர் முத்துலெட்சுமியின் சாதனைகளைக் குறிப்பிடுக.
Answer:
மருத்துவர் முத்துலெட்சுமியின் சாதனைகள்:

  • 1886-ல் பிறந்த முத்துலெட்சுமி அவர்கள் பல சாதனைகளுக்கும், போற்றுதலுக்கும் உரியவர்.
  • தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்.
  • இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராகவும், சென்னை மாநகராட்சியின் முதல் துணை
  • மேயராகவும், சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் ஆவார்.
  • அடையாற்றில் 1930-ல் அவ்வை இல்லம், 1952ல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.
  • தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், இருதாரத்தடைச்சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேற காரணமாக இருந்துள்ளார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

Question 4.
நீலாம்பிகை அம்மையாரின் தமிழ்ப்பணியின் சிறப்பைக் குறித்து எழுதுக.
Answer:
தமிழ்ப்பணியின் சிறப்பு:

  • நீலாம்பிகை அம்மையார் மறைமலையடிகளின் மகள் ஆவார். தந்தையைப் போலவே தனித்தமிழ்ப் பற்றுடையவர்.
  • இவரது தனித்தமிழ் கட்டுரை, வடசொல் – தமிழ் அகரவரிசை, முப்பெண்மணிகள் வரலாறு, பட்டினத்தடிகள் பாராட்டிய மூவர் ஆகிய நூல்களை எழுதி தமிழ்ப் பணியாற்றியுள்ளார்.
  • மேலும், இவருடைய நூல்கள் தனித்தமிழில் எழுத விரும்புவோர்க்கு மிகவும் பயனுள்ளனவாக விளங்குகின்றன.

நெடுவினா

Question 1.
நீங்கள் அறிந்த சாதனைப் பெண்கள் குறித்த செய்திகளை விவரிக்க.
Answer:
முன்னுரை:
நிலைத்த புகழுடைய கல்வியாலும் சாதனைகளாலும், பல தடைகளைத் தாண்டிப் பல பெண்மணிகள் சாதனை புரிந்து அழியாப் புகழ் பெற்றுள்ளனர். அவர்களுள் சிலரைப் பற்றி அறிந்து கொள்வோம்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

பண்டித ரமாபாய்:
1858 -ஆம் ஆண்டு முதல் 1922 – ஆம் ஆண்டு வரை வாழ்ந்த இவர் சமூகத் தன்னார்வலர். பல தடைகளை மீறிக் கல்வி கற்றுப் பண்டிதராகியவர். பெண்களின் உயர்வுக்குத் துணை நின்றவர், “பெண்மை என்றால் உயர்வு” என்பதற்குச் சான்றாவார்.

ஐடாஸ் சோபியா:
1870 முதல் 1960 வரை வாழ்ந்தவர். பெண்கள் மருத்துவராவதை மருத்துவ உலகமே விரும்பாத காலத்தில் மருத்துவம் கற்றதோடு, தமிழகத்திற்கு வந்து மருத்துவராகி வேலூர் கிறிஸ்தவ மிஷன் மருத்துவமனையை நிறுவியவர்.

மூவலூர் இராமாமிர்தம் :
1883 முதல் 1962 வரை வாழ்ந்த இவர், தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி, எழுத்தாளர், அரசியல் செயல்பாட்டாளர், தேவதாசி ஒழிப்புச்சட்டம் நிறைவேற துணைநின்றவர். இவரைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு மகளிர் திருமண உதவித் தொகையை இவரின் பெயரில் வழங்கி வருகிறது.

சாவித்திரிபாய் பூலே :
1831 முதல் 1897 வாழ்ந்தவர். 1848 ம் ஆண்டு பெண்களுக்கென தொடங்கப்பட்ட பள்ளியில், ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரே நாட்டின் முதல் பெண் ஆசிரியர் ஆவார்.

மலாலா :
பாகிஸ்தானில் ஒடுக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு, பெண் கல்வி வேண்டுமெனப் பன்னிரண்டு வயதிலே போராட்டக்களத்தில் இறங்கிய வீரமங்கை ஆவார்.

முடிவுரை :
இன்று பல்துறைகளிலும் சிறப்புற்று விளங்க, முன்பே வழிகாட்டிய இவர்கள் அனைவருமே சாதனைப் பெண்மணிகளே

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

“புவி வளம் பெறவே புதிய உலகம் நலம்பெறவே வாழியவே பெண்மை வாழியவே”

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
அடையாற்றில் புற்றுநோய் மருத்துவமனை நிறுவப்பட்ட ஆண்டு ……… நிறுவியவர் …….
அ) 1982, ரமாபாய்
ஆ) 1952, முத்துலெட்சுமி
இ) 1960, ஐடாஸ் சோபியா ஸ்கட்டர்
ஈ) 1970, சிவகாமி
Answer:
ஆ) 1952, முத்துலெட்சுமி

Question 2.
“முடியாது பெண்ணாலே” என்ற மாயையினை முடக்க எழுந்தவர் ………
அ) அறிஞர் அண்ணா
ஆ) அம்பேத்கர்
இ) தந்தை பெரியார்
ஈ) காமராஜர்
Answer:
இ) தந்தைபெரியார்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

Question 3.
“பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோ” என இடி முழக்கம் செய்தவர் யார்?
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கவிமணி
ஈ) நாமக்கல் கவிஞர்
Answer:
ஆ) பாரதிதாசன்

Question 4.
ஹண்டர்குழு அமைக்கப்பட்ட ஆண்டு ………..
அ) 1972
ஆ) 1952
இ ) 1872
ஈ) 1882
Answer:
ஈ) 1882

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

Question 5.
80 ஆயிரம் குழந்தைகள் கல்வி பெற உதவியாய் இருந்தவர்
அ) ரமாபாய்
ஆ) முத்துலெட்சுமி
இ) சாவித்திரிபாய் பூலே ஈ)கைலாஷ் சத்யார்த்தி
Answer:
ஈ) கைலாஷ் சத்யார்த்தி

Question 6.
“பட்டினத்தார் பாராட்டிய மூவர்” என்ற நூலை இயற்றியவர்
அ) இராஜேஸ்வரி அம்மையார்
ஆ) காரைக்கால் அம்மையார்
இ) நீலாம்பிகை அம்மையார்
ஈ) சிவகாமி அம்மையார்
Answer:
இ) நீலாம்பிகை அம்மையார்

Question 7.
ஈ.வெ.ரா – நாகம்மை இலவசக்கல்வி உதவித்திட்டம் ………. உரியது.
அ) பட்டமேற்படிப்பிற்கு
ஆ) பட்டய மேற்படிப்பிற்கு
இ) பொறியியல் படிப்பிற்கு
ஈ) மருத்துவ படிப்பிற்கு
Answer:
அ) பட்டமேற்படிப்பிற்கு

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

Question 8.
கோத்தாரி கல்விக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு ………. ஆகும்.
அ) 1972
ஆ) 1951
இ) 1964
ஈ) 1965
Answer:
இ) 1964

குறுவினா

Question 1.
தமிழின் பொற்காலம் எனப் புகழப்படும் காலம் எது?
Answer:

  • பாட்டாகிய பத்துப்பாட்டும், தொகையாகிய எட்டுத் தொகையும் உருவான காலம்.
  • தமிழுணர்வு வளர்ந்து, உயர்ந்திருந்த காலமாகிய சங்க காலமே பொற்காலம் எனப் புகழப்படும் காலம் ஆகும்.
    “பாட்டும் தொகையும் உருவான காலம்
    ஊட்டும் தமிழுணர்வு உயர்ந்திருந்த காலம்”

Question 2.
பெண்கல்வி மேம்பாட்டிற்கு ஆங்கில அரசு செய்தது என்ன?
Answer:
பெண் கல்வி மேம்பாட்டிற்காக ஆங்கில அரசு, 1882 ல் ஹண்டர் குழுவை அமைத்து, முதன்முதலில் பெண் கல்விக்குப் பரிந்துரை செய்து சட்டம் இயற்றியது. அறிக்கையும் வெளியிட்டது.

அந்த அறிக்கையின் படி, மராட்டிய மாநிலத்தில் ஜோதிராவ்பூலே, சாவித்ரிபாய் பூலே இணையர் முதன் முதலில் பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கினார்கள்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

Question 3.
எவற்றையெல்லாம் தாயாகக் கருதுகிறோம்?
Answer:
நாடு, நதி, மொழி, புவி முதலியவற்றைத் தாயாகக் கருதுகிறோம்.

Question 4.
சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் சிறப்பினை எடுத்தியம்புக.
Answer:

  • பெண்ணுணர்வினைப் பாடலில் தந்தனர்.
  • தூது சென்றனர்.
  • துயரைத் தீர்த்தனர்
  • ஓதும் தமிழால் உயர்வைப் பெற்றனர்.

Question 5.
பக்தி இயக்கம் வளர்ந்த காலத்தில் இறைவனுக்குப் பாமாலை சூட்டியவர்கள் யார்?
Answer:

  • காரைக்கால் அம்மையார்
  • ஆண்டாள்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

Question 6.
ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் – குறிப்பு வரைக.
Answer:
பெண்கள் மருத்துவராவதை மருத்துவ உலகமே விரும்பாத காலத்தில், தமிழகத்திற்கு வந்து, மருத்துவராகி வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர்தான் ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் ஆவார்.

Question 7.
மராட்டிய மாநிலத்தில் முதன் முதலாகப் பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கியவர்கள் யார்?
Answer:

  • ஜோதிராவ் பூலே
  • சாவித்திரிபாய் பூலே

சிறுவினா

Question 1.
முற்காலத்தில் பெருமை பெற்ற பெண்கள் பற்றிக் குறிப்பிடுக.
Answer:

  • சமண மதம், புத்தமதம் வளர்ந்த காலத்தில் மணிமேகலை கற்றறிந்த பெண்ணாகவே இருந்தாள்.
  • பக்தி இயக்கம் வளர்ந்த காலத்தில் காரைக்காலம்மையார், ஆண்டாள் முதலிய பெண்கள் இறைவனுக்குப் பாமாலை சூடும் ஆற்றல் பெற்றிருந்தார்கள்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.1 கல்வியில் சிறந்த பெண்கள்

Question 2.
ஈ.த இராஜேஸ்வரி அம்மையார் குறிப்பு வரைக?
Answer:

  • இராஜேஸ்வரி அம்மையார் 1906 முதல் 1955 வரை வாழ்ந்தவர்.
  • தமிழ், இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கினார்.
  • திருமந்திரம், தொல்காப்பியம், கைவல்யம் போன்ற நூல்களில் உள்ள அறிவியல் உண்மைகள்
  • குறித்துப் பல சொற்பொழிவுகள் ஆற்றினார்.
  • சூரியன், பரமாணுப்புராணம் போன்ற அறிவியல் நூல்களை எழுதியுள்ளார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.2 குடும்ப விளக்கு

Students can Download 9th Tamil Chapter 5.2 குடும்ப விளக்கு Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 5.2 குடும்ப விளக்கு

கற்பவை கற்றபின்

கற்பவை கற்றபின்

Question 1.
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் – பாரதி
மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம்
செய்திடல் வேண்டுமம்மா…. – கவிமணி
பெண்எனில் பேதை என்ற எண்ணம்
இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்
உருப்படல் என்பது சரிப்படாது – பாவேந்தர்

இவை போன்ற பெண்மையைப் போற்றும் கவிதை அடிகளைத் திரட்டுக.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.2 குடும்ப விளக்கு - 1
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.2 குடும்ப விளக்கு - 2
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.2 குடும்ப விளக்கு

Question 2.
ஆணுக்கும் சமையல் செய்யத் தெரிந்திருப்பதன் பயன் குறித்து வகுப்பறையில் கலந்துரையாடி அதன் கருத்துகளைத் தொகுக்க.
Answer:
மாணவர்களே!
நம் பாடப்பகுதியான குடும்ப விளக்கில், தலைவி பேசும் பொழுது, ஆண்களும் சமையல் பணியை ஏற்றுக் கொள்ளும் நாள் நன்னாள் என்றாள் அல்லவா…

அதன் அடிப்படையில் ஆண்களுக்குச் சமையல் செய்யத் தெரிந்தால் என்னென்ன பயன் என்பது குறித்துக் கலந்துரையாடுங்கள். நாங்கள் கேட்டு மகிழ்கிறோம்.

கலந்துரையாடுபவர்கள்
(நாதன், அமுதா, இனியா, முகிலன்)

அமுதா : நாதா; இப்போது தான் பள்ளிக்கு வருகிறாயா? ஏன் தாமதம்…

நாதன் : அவசர வேலையின் நிமித்தமாக என் அம்மா ஊருக்குச் சென்று விட்டார்கள். கடையில் உணவு வாங்கி வரத் தாமதமாகி விட்டது.

இனியா : என்ன? உன் அம்மா ஊருக்குச் சென்று விட்டார்களா? கடையிலா உணவு வாங்கினாய்.

நாதன் : ஆமாம் இனியா! நான், என் தந்தை, என் அண்ணன் மூவருமே ஆண்கள் அல்லவா! அதனால் வீட்டில் சமையல் இல்லை.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.2 குடும்ப விளக்கு

முகிலன் : என்னடா இது! மூவருக்கும் ஒன்றுமே தெரியாதா?

நாதன் : தெரியாது முகிலா; தேநீர் முதல் உணவு வரை கடையில் தான்!

முகிலன் : இதோ! பார் என் அம்மாவுக்கும் இன்று உடல் நிலை சரியில்லை. காலையிலே மருத்துவமனை சென்று விட்டார். நானும் என் தந்தையும் தான் சமையல் செய்தோம்.

இனியா : அப்படியா! முகிலா

முகிலன் : ஆமாம் இனியா! வேலை செய்தே என் அம்மா மிகவும் சோர்ந்து உடல் நலம் குன்றிவிட்டார்கள். அதனால் என் தந்தை, முகிலா! நீயும் நானும் அம்மாவுக்கு சற்று ஓய்வு கொடுப்போம். அவர்கள் நிதானமாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று வரட்டும் என்றார்.

அமுதா : எப்படி சமைத்தீர்கள்?

முகிலன் : காலையிலே அப்பா கடைக்குச் சென்று கீரை வாங்கி வந்தார். அவர் சோறு சமைக்கும் முன் நான் கீரையைச் சுத்தம் செய்து, அதனைச் சமைப்பதற்குத் தேவையான வெங்காயம் போன்றவற்றை உரித்துக் கொடுத்து நான் பள்ளிக்குப் புறப்படச் சென்றேன். அப்பா அம்மாவைவிட வேகமாகச் சமைத்து விட்டார். சத்துள்ள உணவும் கிடைத்தது. கடைக்குச் செல்லும் அலைச்சல், பணம், நேரம் எல்லாம் மிச்சம்.

நாதன் : நானும் ஒரு காணொளியில் பார்த்தேன். சமையல் தெரியும் ஆண்களுக்குக்கலையுணர்வும், தன்னம்பிக்கையும் அதிகம் என்றும்; ஆண்கள் சமையல் கற்றுக் கொள்வதால் வீட்டில் சமத்துவம் வளரும்; எல்லோருக்கும் ஒருவர் மேல் ஒருவர்க்கு அக்கறை கூடும்; வீணான செலவுகள் தவிர்க்கப்படும்; கடையில் உணவை வாங்கி உண்பதால் ஏற்படும் உடல் நலக் கேடுகளைத் தவிர்க்கலாம் என்றும் அந்தக் காணொளி விளக்கியது. முகிலா…..

முகிலன் : நாதன் ; இனி நம் வீட்டில் நம் அன்னை உடல் நலக் குறைவுற்றாலோ, ஊருக்குச் சென்றாலோ நம் தேவைக்கு நம் தந்தை, நம் சகோதரர்கள் இணைந்து சமைக்க முயற்சிப்போம்…..

அமுதா, : நல்ல முடிவு நண்பர்களே வீடும், நாடும் நலம் பெற சமையல் உட்பட எல்லாப்

இனியா… பணிகளையும் இரு பாலரும் இணைந்தே செய்வோம்…

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.2 குடும்ப விளக்கு

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பொருத்தமான விடையைத் தேர்க.
அ) சிறுபஞ்ச மூலம் – 1. காப்பிய இலக்கியம்
ஆ) குடும்ப விளக்கு – 2. சங்க இலக்கியம்
இ) சீவக சிந்தாமணி – 3. அற இலக்கியம்
ஈ) குறுந்தொகை – 4. தற்கால இலக்கியம்
க) அ – 3, ஆ – 4, இ – 1, ஈ – 2
உ) அ – 2, ஆ – 3, இ – 1, ஈ – 4
ங) அ – 3, ஆ – 1, இ – 4, ஈ – 2
ச) அ – 4, ஆ – 1, இ – 2, ஈ – 3
Answer:
க) அ- 3, ஆ – 4, இ – 1, ஈ – 2

குறுவினா

Question 1.
தலைவியின் பேச்சில் வெளிப்படுகின்ற பாடுபொருள் யாது?
Answer:

  • குடும்ப விளக்கின் தலைவியின் பேச்சில்,
  • பெண்ணுக்கு விடுதலை வேண்டுமெனில் கல்வி வேண்டும்;
  • பெண் ஒளிர வேண்டுமெனில் கல்வி வேண்டும்;

நாட்டின்வழக்கத்தை மாற்ற வேண்டுமெனில் கல்விவேண்டும் என்று “பெண்கல்விவேண்டும்” என்பதையே பாடுபொருளாகக் கொண்டு தலைவி பேசி, தன் கருத்தை வெளிப்படுத்துகிறாள்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.2 குடும்ப விளக்கு

சிறுவினா

Question 1.
சமைப்பது தாழ்வா? இன்பம் சமைக்கின்றார் சமையல் செய்வார்.
அ) இன்பம் சமைப்பவர் யார்?
ஆ) பாவேந்தர் கூற்றுப்படி சமைப்பது தாழ்வா?
Answer:
அ) இன்பம் சமைப்பவர்
உணவைச் சமைப்பவரே, அதனை அன்புடன் படைப்பது மூலம் (பரிமாறுவது மூலம்)
இன்பத்தையும் சமைப்பவர் ஆவார்.

ஆ) சமைப்பது தாழ்வா : உணவைச் சமைத்துத் தருவது உயிரை உருவாக்குவது போன்றதாகும். எனவே பாவேந்தர் கூற்றுப்படி சமையல் தாழ்வாகாது.

நெடுவினா

Question 1.
குடும்ப விளக்கு நூலில் தலைவி பேச்சில் வெளிப்படும் பெண்கல்விக்கான கருத்துகளை இன்றைய சூழலுடன் ஒப்பிட்டு எழுதுக.
Answer:
முன்னுரை:
பாரதிதாசன் இயற்றிய குடும்ப விளக்கு என்னும் நூலில், குடும்பத்தலைவி தன் உள்ளக்கருத்துகளை வெளிப்படுத்தும் போது, பெண்கல்வி குறித்த கருத்துகளையும் வெளிப்படுத்துகிறார். அவ்வாறு தலைவி கூறும், கருத்துகளும், இன்றைய சூழலையும் பார்ப்போம்.

தலைவியின் பேச்சு:
கல்வி இல்லாத பெண்கள் பண்படாத உவர்நிலம் போன்றவர்கள்; அங்கு பயனற்ற புல் விளைந்திடலாம். அறிவார்ந்த புதல்வர்கள் உருவாவதில்லை. கல்வியறிவு பெற்ற பெண்கள், பண்பட்ட நன்செய் நிலம் போன்றவர்கள். அவர்கள் மூலமே சிறந்த அறிவார்ந்த மக்கள் உருவாகின்றனர்.

பெண்கல்வி இல்லாததினால், இன்று உலகம் ஆண்களின் கட்டுப்பாட்டில் நலிந்து போனதால், பெண்களுக்கு விடுதலை பறிபோனது.

கல்வியறிவு இல்லாத பெண், மின்னல் போல் ஒளிரும் அழகு பெற்றவளாயினும், அவள் வாழ்வு ஒளிர்வதில்லை .

“கல்வி இல்லா மின்னாள்
வாழ்வில் என்றும் மின்னாள்”

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.2 குடும்ப விளக்கு

சமைக்கும் பணி, தாய்மார்களுக்கே உரியது எனும் வழக்கத்தினைக் கண் இமைக்கும் நேரத்தில் நீக்க வேண்டுமாயின் பெண்களுக்கு எப்போதும் கல்வி வேண்டும்.

இன்றைய சூழல் :
கல்வி கற்ற பெண் குடும்பத்தலைவியாய் இருப்பதால், பட்டங்களும், பதவிகளும் பெறும் மக்கட்பேறு இல்லந்தோறும் காணப்படுகிறது.

துறைதோறும்:
வானூர்தியைச் செலுத்துதல் விண்கலத்தில் செல்லுதல், மருத்துவர், எனப் பல்வேறு துறைகளிலும், உலகை அளத்தல், மாக்கடலை அளத்தல் என அனைத்துத் துறைகளிலும் ஆணுக்கு நிகராக பெண்ணும் இடம்பெறுகிறாள், செயலாற்றும் திறன் உடையவளாய் இருக்கிறாள் என்பதை மறுக்க இயலாது.

“வானூர்தி செலுத்தல் வைய
மாக்கடல் முழுது மளத்தல்
ஆனஎச் செயலும் ஆண்பெண்
அனைவர்க்கும் பொதுவே” ஆகிவிட்டது.

சமையல்பணி :
சமைப்பதும், வீட்டு வேலைகளைச் சலிப்பில்லாமல் செய்வதும் பெண்களுக்கு உரியது என்ற நிலை மாறிவருகிறது. ஆண்களும் அதனைத் தாழ்வாக எண்ணாது ஏற்று நடத்தும் காலம் வந்து கொண்டிருக்கிறது எனில் மிகையாகாது.

குடும்ப விளக்கு தலைவிபேசும், கால கட்டத்தை விட ‘பெண்கல்வி’ இன்று பல மடங்கு வளர்ந்திருக்கிறது.

முடிவுரை:

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்”
என்ற பாரதியின் கனவு வரிகள் நனவாகிக் கொண்டு தான் இருக்கின்றது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.2 குடும்ப விளக்கு

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
உணவினை ஆக்கல் மக்கட்கு ……….. அன்றோ
அ) உயிர் ஆக்கல்
ஆ) உயிர் அழித்தல்
இ) உணவாக்கல்
ஈ) உணவழித்தல்
Answer:
அ) உயிர் ஆக்கல்

Question 2.
கல்வியை உடைய பெண்கள் …………… ஆவார்.
அ) உவர் நிலம்
ஆ) பண்படாத நிலம்
இ) திருந்திய கழனி
ஈ) கிணற்றுத் தவளை
Answer:
இ) திருந்திய கழனி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.2 குடும்ப விளக்கு

Question 3.
மலர்க்கை என்பதன் இலக்கணக்குறிப்பு யாது?
அ) பண்புத்தொகை
ஆ) வினைத்தொகை
இ) உருவகம்
ஈ) உவமைத்தொகை
Answer:
ஈ) உவமைத்தொகை

Question 4.
உணவினை ஆக்கல் மக்கட்கு உயிர் ஆக்கல் அன்றோ – இவ்வடியில் உள்ள நயம் யாது?
அ) அடி மோனை
1) அ – சரி
ஆ) அடி எதுகை
2) இ, ஈ – சரி
இ) சீர் இயைபு
3) நான்கும் சரி
ஈ) அடி இயைபு
4) நான்கும் தவறு
Answer:
1) அ – சரி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.2 குடும்ப விளக்கு

Question 5.
பொருத்துக:
அ) தணல் – 1 சமைக்கும் கலன்
ஆ) தாழி – 2 செய்க
இ) இயற்றுக – 3 சொல்லல்
ஈ) நவிலல் – 4. நெருப்பு
Answer:
அ4 ஆ1, இ2, ஈ3

Question 6.
“உம்மைத்தொகை” அமைந்துள்ள சொல்லைத் தேர்ந்தெடு.
அ) வில்வாள்
ஆ) பணமும் படையும்
இ) மலரும்
ஈ) ஆண்க ளும்
Answer:
வில்வாள்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.2 குடும்ப விளக்கு

Question 7.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற பாரதிதாசனின் நூல் எது?
அ) குடும்ப விளக்கு
ஆ) இருண்ட வீடு
இ) அழகின் சிரிப்பு
ஈ) பிசிராந்தையார் நாடகம்
Answer:
ஈ) பிசிராந்தையார் நாடகம்

Question 8.
குடும்ப உறவுகள் ………… என்னும் நூலால் பிணைந்துள்ளது.
அ) கோபம்
ஆ) அன்பு
இ) அடக்கம்
ஈ) கவலை
Answer:
ஆ) அன்பு

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.2 குடும்ப விளக்கு

Question 9.
குடும்ப விளக்கு ………….. பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.
அ) 4
ஆ) 6
இ) 5
ஈ) 7
Answer:
இ) 5

Question 10.
பாரதிதாசன் படைப்புகளில் பொருந்தாததைக் கண்டறி.
அ) பாண்டியன் பரிசு
ஆ) பொன்னியின் செல்வன்
இ) அழகின் சிரிப்பு
ஈ) இருண்ட வீடு
Answer:
ஆ) பொன்னியின் செல்வன்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.2 குடும்ப விளக்கு

குறுவினா

Question 1.
குடும்ப விளக்கின் பாடுபொருளாக அமைவன யாவை?
Answer:

  • குடும்ப விளக்கு, குடும்ப உறவுகள் அன்பு என்னும் நூலால் பிணைந்துள்ளதை உணர்த்துகிறது.
  • கற்ற பெண்ணின் குடும்பமே பல்கலைக்கழகமாக மிளிரும் என்பதைக் காட்டுகிறது.

Question 2.
பாரதிதாசனின் படைப்புகள் யாவை?
Answer:

  • பாண்டியன் பரிசு
  • அழகின் சிரிப்பு
  • இருண்ட வீடு
  • குடும்ப விளக்கு

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.2 குடும்ப விளக்கு

Question 3.
எச்செயல்கள் இருபாலர்க்கும் பொதுவானது என்கிறது குடும்ப விளக்கு.
Answer:
வானூர்தியைச் செலுத்துதல், உலகையும் கடலையும் அளத்தல் போன்ற எந்தச் செயலும் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது என்கிறது குடும்ப விளக்கு.

Question 4.
தலைவி எவற்றைப் பொருத்தமற்றவை என்கிறாள்?
Answer:
சமைப்பது, வீட்டு வேலைகளைச் சலிப்பில்லாமல் செய்வது போன்றவை பெண்களுக்கே உரியவை என்று கூறுவது பொருத்தமற்றது என்கிறாள் தலைவி.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.2 குடும்ப விளக்கு

சிறுவினா

Question 1.
பாரதிதாசன் குறிப்பு வரைக.
Answer:

  • பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம்.
  • இவர் பாரதியின் கவிதை மீதுகொண்ட ஈர்ப்பினால் பாரதிதாசன் என்று தம்பெயரை மாற்றிக் கொண்டார்.
  • பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, தமிழயக்கம் உள்ளிட்டவை இவரது படைப்புகள்.
  • இவர் இயற்றிய கவிதைகள் அனைத்தும் பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்’ என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.
  • இவரது பிசிராந்தையார் நாடக நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.2 குடும்ப விளக்கு

Question 2.
குடும்ப விளக்கு நூலின் ஐந்து பகுதிகள் யாவை?
Answer:

  • ஒருநாள் நிகழ்ச்சி
  • விருந்தோம்பல்
  • திருமணம்
  • மக்கட்பேறு
  • முதியோர் காதல்

முதலிய ஐந்து பகுதிகளைக் கொண்டது குடும்ப விளக்கு.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 The Middle Ages

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf History Chapter 6 The Middle Ages Text Book Back Questions and Answers, Important Questions, Notes.

Tamilnadu Samacheer Kalvi 9th Social Science Solutions History Chapter 6 The Middle Ages

Samacheer Kalvi 9th Social Science The Middle Ages Text Book Back Questions and Answers

I. Choose the correct answer:

Question 1.
_______ was the old religion of Japan.
(a) Shinto
(b) Confucianism
(c) Taoism
(d) Animism
Answer:
(a) Shinto

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 The Middle Ages

Question 2.
_______ means great name-lord.
(a) Daimyo
(b) Shogun
(c) Fujiwara
(d) Tokugawa
Answer:
(a) Daimyo

Question 3.
The Arab General who conquered Spain was__________
(a) Tariq
(b) Alaric
(c) Saladin
(d) Mohammad the Conqueror
Answer:
(a) Tariq

Question 4.
Harun-al-Rashid was the able emperor of ____________.
(a) Abbasid dynasty
(b) umayyad dynasty
(c) Sassanid dynasty
(d) Mongol dynast
Answer:
(a) Abbasid dynasty

Question 5.
feudalism centred around _________
(a) vassalage
(b) slavery
(c) serfdom
(d) land
Answer:
(a) vassalage

II. Fill in the blanks:

  1. ______ were the original inhabitants of Japan.
  2. ______ was the original name of Japan.
  3. _______ was the original name of Medina.
  4. _______ were the barbarians posing a threat to the Chinese in the north.
  5. ________established Ottoman supremacy in the Balkans.

Answer:

  1. Aious
  2. yamoto
  3. madinat-un-nabi
  4. Mongols
  5. Mohammad II

III. Find out the correct statement

Question 1.
(i) ChengizKhan was an intolerant person in religion.
(ii) Mongols destroyed the city of Jerusalem
(iii) Crusades weakened the Ottoman Empire
(iv) Pope Gregory succeeded in making King Henry IV to abdicate the throne by means of Interdict
(a) (i) is correct
(b) (ii) is correct
(c) (ii) and (iii) are correct
Answer:
(d) (iv) is correct

Question 2.
(i) Mangu Khan was the Governor of China.
(ii) Mongol court in China impressed Marco Polo.
(iii) The leader of Red Turbans was Hung Chao.
(iv) Mongols established their rule in China in the name of Yuan dynasty
(a) (i) is correct
(b) (ii) is correct
(c) (ii) and (iv) are correct
(d) (iv) is correct
Answer:
(c) (ii) and (iv) are correct

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 The Middle Ages

Question 3.
(i) Boyang and Changon were built during the Sung dynasty.
(ii) Peasant uprisings led to the collapse of the Tang dynasty.
(iii) Seljuq Turks were a tribe of Tartars.
(iv) Mongols established their rule in China in the name of the Yuan dynasty
(a) (i) is correct
(b) (ii) is correct
(c) (iii) is correct
(d) (iv) is correct
Answer:
(ii), (iii) and (iv) are correct

Question 4.
Assertion (A): Buddhism went to China from India
Reason (R): The earliest Indian inhabitants in China were the followers of Buddhism
(a) A is correct; R is wrong
(b) Both A & R are wrong
(c) Both A & R are correct
(d) A is the wrong R is irrelevant to A
Answer:
(a) A is correct; R is wrong

Question 5.
Assertion (A): The fall of Jerusalem into the hands of Seljuk Turks led to the Crusades. Reason (R): European Christian pilgrims were denied access to Jerusalem.
(a) A is correct; R is not the correct explanation of A
(b) A and R are correct
(c) A and R are wrong
(d) A is correct, R is the correct explanation of A
Answer:
(d) A is correct, R is the correct explanation of A

IV. Match the following:

  1. Red Turbans – (i) Kamakura
  2. Seljuk Turks – (ii) Mohammad II
  3. First Shogunate – (iii) City of Arabian Nights
  4. Baghdad – (iv) Chu Yuan Chang
  5. Capture of Constantinople – (v) Central Asia

Answer:

  1.  – (iv)
  2. – (v)
  3. – (i)
  4. – (iii)
  5. – (ii)

V. Answer the following briefly:

Question 1.
The Great Wall of China.
Answer:

  1. The Great Wall of China was built between the 8th and 7th centuries B.C. to protect themselves from enemies of the North.
  2. During the Chin (Qin) Dynasty, the separate walls were connected and consequently from east to west for about the wall stretched about 5000 kilometers.
  3. One of the Seven Wonders of the world is the Great wall of China.
  4. Now it is 6,700 kilometers in length.

Question 2.
Impact of Crusades.
Answer:

  1. Crusades ended the feudal relations.
  2. Increasing demand for products of the East led to the expansion of trade.
  3. Venice, Genoa, and Pisa emerged as important commercial centers in the Mediterranean region
  4. Constantinople ceased to be the middle man in the trade between the East and the West.
  5. Pope and Papacy lost their prestige.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 The Middle Ages

Question 3.
How was Feudalism organized in the Middle Ages?
Answer:

  1. The king was at the head of the feudal regime.
  2. Next to him were the great nobles, known as dukes, counts, earls.
  3. The relationship was one of a vassal.
  4. The nobles in turn had vassals of their own, dividing and distributing their fief to lesser nobles called viscounts or barons.
  5. Last in this order were the knights, whose fiefs could not be divided.
  6. At the bottom were the villeins or serfs.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 The Middle Ages
Question 4.
Write about the two instruments used by the Medieval Pope to assert his authority.
Answer:
The two instruments used by the Medieval Pope to assert his authority were
(a) Excommunication
(b) Interdict.

(a) Excommunication:

  1. Excommunication means depriving a person of all the privileges of a Christian.
  2. He was denied the right to sacraments in Church.
  3. His or her body could not be buried in the consecrated ground.

(b) Interdict:

  1. Interdict means was to deny the benefits of religion to a ruler’s subject.
  2. It was intended to kindle their resentment against him.

VI. Answer all the questions given under each caption.

Question 1.
Shogunate in Japan
(a) Name the two Daimyo families that fought for power in Japan.
(b) Who emerged successful in the fight?
(c) What was the title given by the Emperor to the victorious?
(d) Where was the capital of the first Shogunate established?
Answer:
(a) Tara and Minamoto.
(b) Yoritomo emerged successful in the fight.
(c) In A.D 1192, the emperor gave him the high sounding title of Sei-i-tai-Shogun, which means the Barbarian-subduing-Great-General
(d) Yoritomo established his military capital at Kamakura.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 The Middle Ages

Question 2.
Rule of Abbasids
(a) Who were Abbasids?
(b) What was the title assumed by Abbasid Caliph?
(c) Where did they have their new capital?
(d) In whose period was the Abbasid Empire at the height of its glory?
Answer:
(a) The branch which descended from Prophet Mohammad’s uncle Abbas were called Abbasids.
(b) Abbasid Caliph assumed the title of “The Commander of the Faithful”
(c) The capital was shifted from Damascus to Baghdad in Iraq.
(d) The Abbasid Empire was at the height of its glory during the reign of Harun-al-Rashid.

VII. Answer the following in detail:

Question 1.
Write about crusades and its impact.
Answer:

  1. The Pope and the Church called upon all the Christian peoples of Europe to march to the rescue of the “holy city” (Jerusalem).
  2. The Crusaders had to fight against the Seljuq Turks who controlled those parts.
  3. The struggle between Christianity and Islam beginning in 1095 continued for nearly 200 years and is called the Crusades.
  4. The Crusades did not achieve the desired end.
  5. Jerusalem continued to remain in Ottoman hands for another 700 years.

Impact of Crusades:

  1. Crusades ended the feudal relations. Many of the nobles who went to East to take part in the Crusades either stayed too long a period or did not return.
  2. The serfs took advantage of their absence to break away from their bondage to the soil. Increasing demand for products of the East led to expansion of trade.
  3. Venice, Genoa and Pisa emerged as important commercial centres in the Mediterranean region.
  4. The elimination of powerful nobles had its influence in strengthening the monarchy in France and England.
  5. One notable outcome of Crusades was the loss of prestige suffered by Pope and Papacy.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 The Middle Ages

Question 2.
Who were the Mongols? How did they rule China?
Answer:

  1. Mongols were nomads from the Steppes of Asiatic Russia.
  2. They were herdsmen but experts in warfare.
  3. Their remarkable chief, Chengiz Khan.
  4. In China after the Sung Dynasty , the Mongols established their rule in the name of Yuan dynasty.
  5. Mangu Khan became the Great Khan in 1252.
  6. Kublai Khan was appointed the Governor of China.
  7. The Mongol presence from one end of Eurasia to the other played a key role in spreading Chinese technological advances to the less developed societies in the west.
  8. Marco Polo, a foreigner was very much impressed seeing the Mongol court in Beijing,
  9. But the peasants were suffering due to poverty.
  10. There were revolts of religious sects and secret societies.
  11. Finally, the leader of “Red Turbans” Chu Yuan Chang took the Mongol capital Beijing and proclaimed himself emperor in 1369.

Activities for Students

Question 1.
In an outline map of Europe, the students are to sketch the extern of Ottoman Empire at height of its glory.
Answer:
Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 The Middle Ages

Samacheer Kalvi 9th Social Science The Middle Ages Additional Important Questions and Answers

I. Choose the correct answers

Question 1.
The centreal or high Middle Ages witnessed ______
(a) rapid development
(b) territorial expansion
(c) urban growth
(d) all of the above
Answer:
(d) all of the above

Question 2.
Seljuq Turks came from ________
(a) Central America
(b) Central Asia
(c) Central Australia
(d) Central Europe
Answer:
(b) Central Asia

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 The Middle Ages

Question 3.
Li Yuan belong to ________ dynasty
(a) Tang
(b) Sui
(c) Sung
(d) Ming
Answer:
(a) Tang

Question 4.
Trade and industry flourished during the reign of ________ dynasty
(a) Shogun
(b) Yuan
(c) Sung
(d) Ming
Answer:
(c) Sung

Question 5.
In ceramics _____ excelled
(a) Japan
(b) Arabia
(c) Spain
(d) China
Answer:
(d) China

Question 6.
Shotuku Taishi was the leader of _________
(a) Soga
(b) Fujiwaras
(c) Daimyos
(d) Shogunate
Answer:
(a) Soga

Question 7.
Hideyoshi was a _________
(a) Noble
(b) Trader
(c) Peasant
(d) Warrior
Answer:
(c) Peasant

Question 8.
General Tang was a / an ______
(a) Chinese
(b) Japanese
(c) Roman
(d) Arab
Answer:
(d) Arab

Question 9.
After conquering Egypt, the Ottomans assumed the title of _________
(a) King
(b) Caliph
(c) Emperor
(d) Raja
Answer:
(b) Caliph

Question 10.
The theory of sacraments increased the power of the _________
(a) Commoners
(b) Emperor
(c) Nobler
(d) Clergy
Answer:
(d) Clergy

II. Find out the correct statement

Question 1.
(i) Sung dynasty was overthrown by the Seljuq Turks
(ii) China followed Japan in all walks of life.
(iii) Kamakura Shogunate was founded by a military general.
(iv) Abbasids ruled from Baghdad.
(a) (i), (ii) are correct
(b) (iii) and (iv) are correct
(c) (iii) is correct
(d) (iv) is correct
Answer:
(b) (iii) and (iv) are correct

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 The Middle Ages

Question 2.
(i) Feudal System involved lords and vassals.
(ii) Seljuq Turks took over the holy city of Jerusalem.
(iii) Ummayads ruled from Damascus.
(iv) Saracenic architecture was developed by the Arabs.
(a) (i) is correct
(b) (ii), (iii) are correct
(c) (iii) and (iv) are correct
(d) (i), (ii), (iii) and (iv) are correct
Answer:
(d) (i), (ii), (iii) and (iv) are correct]

Question 3.
Assertion (A): Iron and Steel industries became highly organized.
Reason (R): The quantity of iron, China produced in 1078 A.D., exceeded 114,000 tons,
(a) A is correct; R is wrong
(b) Both A & R are wrong
(c) Both A & R are correct
(d) A is wrong R is irrelevant to A
Answer:
(c) Both A & R are correct

Question 4.
Assertion (A): Many pious Christians began to resent Pope’s intrusion into state affairs.
Reason (R): Pope Innocent III forced King John to recognize England and Ireland as fiefs of the papacy.
(a) A is correct; R is not the correct explanation of A
(b) A & R are correct
(c) A & R are wrong
(d) A is correct, R is the correct explanation of A
Answer:
(d) A is correct, R is the correct explanation of A

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 The Middle Ages

Question 5.
Statement (i): Kyoto was replaced by Tokyo as Capital.
Statement (ii): Arab physicians and surgeons earned a great reputation.
(a) (i) is correct
(b) (i) and (ii) are wrong
(c) (i) and (ii) are correct
(d) (i) is wrong, (ii) is correct
Answer:
(c) (i) and (ii) are correct

III. Fill in the blanks

  1. Seljuq Turks were a tribe of _______ from Central Asia
  2. Hung Ch’ao and his followers brought downfall to _____ empire
  3. Chu Yuan Chang was the leader of ______
  4. Japan remained in _______ for many centuries.
  5. During the Tang dynasty, there were constant contacts between China and ______
  6. Fujiwara family emperors in later years retired to _______
  7. The title Sei-i-tai-Shogun meant _______
  8. Kamakura Shogunate was followed by _______ Shogunate.
  9. Abu Bakr and Omar laid the foundation for an _______ Empire.
  10.  Islam advocated simplicity and _______
  11. The two sects of Islam were and _______
  12. The arches, the pillars, and the minarets and domes represented _______ architecture.
  13. Umayyads were overthrown by _______
  14. The Arabs had a scientific spirit of _______
  15. Chengiz Khan was a great _______
  16. The Ottomans conquest Constantinople in _______
  17. Fief was a _______ given to someone by their lord.
  18. New elements like ______ and _____ were included in Chiristian theology

Answer:

  1. Tartars
  2. Tang
  3. Red Turbans
  4. isolation
  5. Japan
  6. Monasteries
  7. The Barbarian-subduing-Great-General
  8. Ashikaga
  9. Islamic
  10. Equality
  11. Sunnis and Shias
  12. Saracenic
  13. Abbasids
  14. Inquiry
  15. Military genius
  16. 1453
  17. Piece of land
  18. Theory of Priesthood and Theory of Sacraments

IV. Match the following

  1. Mongol court – (i) Tokyo
  2. Kyoto – (ii) Damascus
  3. Ummayads – (iii) Beijing
  4. Abbasids – (iv) Venice
  5. Commercial centres – (v) Baghdad

Answer:

  1. – (iii)
  2. – (i)
  3. – (ii)
  4. – (v)
  5. – (iv)

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 The Middle Ages

V. Answer all questions given under each heading

Question 1.
Middle Ages
(a) Which period is named as Middle Ages?
(b) What is meant by early Middle Ages?
(c) Explain the Central or high Middle Ages.
(d) What represented the later Middle Ages?
Answer:
(a) Historians call the period between the end of the Roman Empire in 476 A.D. and the capture of Constantinople by the Turks in 1453 A.D. as the Middle Ages
(b) In the early Middle Ages, Christianity, followed by Islam, began to establish themselves as dominant religions of continental Europe.
(c) The central or high Middle Ages witnessed rapid development, marked by territorial
expansion, demographic and” urban growth, and the restructuring of secular and ecclesiastical institutions.
(d) The later Middle Ages was represented by the feudal system. This was followed by a period of decline and decay.

Question 2.
Tang dynasties
(a) Name the two Capital Cities built by Tang dynasties.
(b) How were the aristocratic class counter balanced?
(c) Mention the sources of revenue.
(d) Who led a mutiny and what was the result?
Answer:
(a) Tang dynasty built the two Capital cities Boyang and Chang-on.
(b) Scholar officials, trained in Confucius Philosophy, were appointed to counterbalance the landowning aristocratic class.
(c) Mention the sources of revenue.

  • Land was divided into small peasant holdings.
  • As a result, the agricultural surplus went to the state as taxes.
  • State monopoly of salt, and tea added to its revenues.

(d) A mutiny was led by a frontier general An Lu-shan, which led to years of turmoil. The imperial authority was very much reduced during this period.

Question 3.
Great wall of China
(a) When was the Great wall of China built?
(b) Why was it built?
(c) Mention the contribution of Chin (Qin) Dynasty towards the Great Wall of China.
(d) How long is it now?
Answer:
(a) Between 8th and 7th centuries B.C. (BCE), the warring states in China built defensive walls.
(b) It was built to protect themselves from enemies from the north.
(c) During Chin (Qin) Dynasty, the separate walls were connected and consequently the wall stretched from east to west for about 5000 kilometres. This wall, considered to be one of the wonders of the world, served to keep nomadic tribes out.
(d) Now it is 6,700 kilometres in length.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 The Middle Ages

Question 4.
Sung Dynasty
(a) What sounded death knell to Tang empire?
(b) What happened to the empire?
(c) What about the achievements of the Sung Dynasty?
(d) What was the end of the Sung Dynasty?
Answer:
(a) The rebellion of hard-pressed peasantry under the leadership of Hung Ch’ao dealt a death knell to Tang empire.
(b) The empire split into five rival states, until it was reunited under the Sung Dynasty.
(c) Trade and industry flourished. Iron and steel industries became highly organized. It was a period of great prosperity to the landowning class, officials and rich merchants.
(d) The peasants that suffer alone to poverty. Before any internal crisis could develop, there were two external invasions from the north that ended the Sung dynasty.

Question 5.
Yuan Dynasty
(a) Who formed the Yuan Dynasty?
(b) Who was Mangu Khan?
(c) Who was appointed as the Governor of China?
(d) Who captured the Mangoi Capital in 1369?
Answer:
(a) The Mongols established their rule in China with the name of Yuan Dynasty.
(b) Mangu Khan became the Great Khan in 1252.
(c) Kublai Khan was appointed as Governor of China.
(d) The leader of “Red Turbans” Chu Yuan Chang took the Mongol capital Beijing and proclaimed himself emperor in 1369.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 The Middle Ages

Question 6.
Kamakura Shogunate
(a) Who were called Kamakura Shogunate?
(b) Who were samurai?
(c) What was the end of the Kamakura Shogunate?
(d) Name the new line of Shogunate which came into power.
Answer:
(a) Yoritomo established his military capital at Kamakura. Therefore, the first Shogunate was called the Kamakura Shogunate.
(b) The government was a feudal military Shogunate government administered by samurai or warriors.
(c) The decline of the ruling dynasty started and in 1338 A.D. the Kamakura Shogunate ended.
(d) A new line of Shogunate canie into power was Ashikaga Shogunate that lasted for 235 years.

Question 7.
Islam
(a) How did Islam have a great appeal to the people of the world?
(b) Explain the term Hijrat?
(c) Who laid the foundation for Islamic empire?
(d) What happened to the city of Jerusalem?
Answer:
(a) Islam gave a message of brotherhood. Mohammad laid stress on the equality of all those who were Muslims. This message of equality and brotherhood had great appeal not only for the Arabs but to people in other parts of the world.
(b) When faced with persecution in his place of birth, Mohammad and his followers moved to the city of Yethrib (Medina). The flight of Mohammad from Mecca in 622 AD (CE) is called Hijrat in Arabic.
(c) Abu Bakr and Omar who succeeded Prophet Mohammad as Khalif or Caliph laid the foundation for an Islamic Empire.
(d) Jerusalem, the holy city of Jews and Christians, was won by the Arabs.

Question 8.
Umayyad dynasty
(a) How long did the Umayyad rule?
(b) Name their Capital.
(c) What type of new achievement did the Umayyad introduced ?
(d) By whom were the Umayyad over thrown?
Answer:
(a) Umayyads ruled for about 100 years.
(b) Damascus was their capital.
(c) They developed a new style of architecture known as Saracenic architecture. The arches, the pillars, and the minarets and domes came to India later and blended with Indian ideas.
(d) Umayyads were thrown by Abbasids.

Question 9.
Crusades
(a) What is meant by Crusades?
(b) What resulted in Crusades?
(c) How long was Jerusalem in Ottoman hands?
(d) What was the end of Abbasid Empire?
Answer:
(a) The struggle between Christianity and Islam beginning in 1095 continued for nearly 200 years and is called the Crusades.
(b) The Christian pilgrims to the holy city of Jerusalem were put to a lot of hardships by the Turks. This resulted in Crusades.
(c) Jerusalem continued to remain in Ottoman hands for another 700 years.
(d) The destruction of Baghdad in 1258 A.D. by the Mongols, put an end to the Abbasid Empire.

Question 10.
Feudalism
(a) Wo was the head of the feudal regime?
(b) What is meant by fief?
(c) Who formed the socio-political structure?
(d) What was the role played by the merchants and artisans?
Answer:
(a) The king was at the head of the feudal regime.
(b) Fief was a piece of land given to someone by their lord, to whom they had a duty to provide particular services in return.
(c) The Bishops, Abbots and Cardinals and the Church came under this socio-political structure.
(d) The merchants and artisans formed guilds and groups. In course of time they became wealthy enough to defy even the nobles and the kings. This development led to the end of feudal system.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 The Middle Ages

Question 11.
The Huns
(a) What happened to Europe after the collapse of Roman empire?
(b) Who involved North-East Asia?
(c) Mention the names of two well known Hun rulers in India?
(d) Who ended the rule of the Huns in India?
Answer:
(a) Europe fragmented into multiple small Germanic kingdoms after the collapse of Roman Empire.
(b) The Huns (white), a fierce and warlike people from Central Asia, invaded Northeast India.
(c) Toramana and Mihirakula were the two well known Hun rulers in India.
(d) Yasodharman of Malwa is credited to have ended the rule of Huns in India around 528 A.D.

Question 12.
The Chalukyas
(a) When did the Chalukyas kingdom exist?
(b) Write about Khusrau II?
(c) Name the capital of the Chalukya kingdom.
(d) What is remarked by Hiuen Tsang, the Chinese traveller, about the Chalukyas?
Answer:
(a) The Chalukya kingdom existed contemporaneously with the rule of Sassanid dynasty in
Persia.
(b) Khusrau II, the last great king of Sassanid dynasty had a close relationship with the Tang dynasty in China, and the Chalukya ruler Pulakesin II. They exchanged ambassadors.
(c) Badami was their capital.
(d) According to Hiuen Tsang, ‘they are warlike and proud-spirited, grateful for favours and revengeful for wrongs’

VI. Answer the following briefly:

Question 1.
Iron and Steel industries became highly organised in China – Prove.
Answer:

  1. Iron and Steel industries became highly organised.
  2. The quantity of iron China produced in 1078 A.D. exceeded 114,000 tons (England produced only 68,000 tons even in 1788).
  3. China excelled in ceramics and porcelain-making.
  4. This technique was not known to Europe for another 700 years.
  5. Gun powder was in use by 1044.

Question 2.
What was the impact of the Ming empire on China?
Answer:

  1. The Ming Empire, which replaced the Mongol empire, consciously discouraged industry and foreign trade in order to concentrate on agriculture.
  2. This resulted in China lagging’behind in the 16th century. Other parts of Eurasia, building on the techniques of the Chinese, began to march ahead.

Question 3.
How did Japan get its name?
Answer:

  1. Japan’s name was given by a Chinese Emperor.
  2. In a message sent by the Chinese Emperor, the Emperor of Japan was addressed as Tai- Nyih-Pung-Kok, meaning Great Sun-Rise-Kingdom.
  3. The Japanese thought that this sounded better than Yamato.
  4. So they began calling their country “Dai Nippon”- the land of the Rising Sun.
  5. Nippon became Japan.

Question 4.
Who were called Saracens?
Answer:

  1. The Arabs easily overran many regions.
  2. Led by the General Tariq, the Arabs, after conquering Morocco and Africa, crossed into Europe.
  3. They took Spain and ruled for many hundreds of years.
  4. The Arabs, until then largely nomads from the deserts, became the rulers of a mighty empire.
  5. They were called Saracens.

Question 5.
What is mentioned by Nehru about Baghdad in his “Glimpses of World History” ?
Answer:

  1. Baghdad- a city known as the city of Arabian Nights, ‘was a vast city of palaces and public offices and schools and colleges, and great shops and parks and gardens.
  2. The merchants carried on a vast trade with the East and West.
  3. Visitors came to Baghdad from all over the world, especially learned men and students and artists.

Question 6.
Who were Mongol?
Answer:

  1. Mongols were nomads.
  2. They came into Europe from the steppers of Asiatic Russia.
  3. They were herdsmen.
  4. They were experts in warfare.
  5. They remarkable leader was Chengiz Khan.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 6 The Middle Ages

Question 7.
Write about Chengiz Khan.
Answer:

  1. Mongols’ remarkable leader was Chengiz Khan.
  2. He was a great military genius.
  3. His religion was Shamanism, a worship of the “Everlasting Blue Sky”.
  4. Mongols’ hold over Russia for about 300 years made Russia technologically backward from the rest of Europe until the end of Middle Ages.

Question 8.
How was Ottoman supremacy established?
Answer:

  1. When the Seljuq Turks weakened, the Ottomans extended their power.
  2. They captured Bulgaria and Serbia, and made Adrianople their capital.
  3. The conquest of Constantinople in 1453 A.D. by Mohammad II, helped establish Ottoman supremacy in the Balkans, Black Sea and the Middle East.
  4. After conquering Egypt, they assumed the title of Caliph. They became a major player in the international power politics of the day.

Question 9.
During the later Middle Ages what developments did Christianity undergo?
Answer:

  1. Christianity underwent many significant developments during the later Middle Ages.
  2. The most important were in matters of doctrine and religious practices.
  3. New elements were included in Christian theology like theory of priesthood and the theory
    of sacraments.
  4. Excommunication and Interdict were the two instruments used against those who defied the Church.

VII. Answer the following in detail:

Question 1.
Write about Feudalism.
Answer:

  1. Feudalism was bom out of chaos and disorder in the society.
  2. Under Feudalism the king was the head of the feudal regime.
  3. Immediately after him were the great nobles, known as dukes, counts, earls.
  4. The relationship was one of a vassal.
  5. The nobles in turn had vassals of their own, dividing and distributing their fief to lesser nobles called viscounts or barons.
  6. Last in this order were the knights, whose fiefs cannot be divided.
  7. At the bottom were the villeins or serfs.
  8. In the feudal system which centred around vassalage, there was no idea of equality or freedom.
  9. There were only rights and obligations.
  10. The Bishops, Abbots and Cardinals and the Church came under this socio-political structure.
  11. The nobility and the clergy did not do any physical work only peasants and artisans were taxed.
  12. They new class traders formed guilds, became wealthy enough to defy even the nobles and the kings.
  13. This development led to the end of Feudalism.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.3 சிறுபஞ்சமூலம்

Students can Download 9th Tamil Chapter 5.3 சிறுபஞ்சமூலம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 5.3 சிறுபஞ்சமூலம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.3 சிறுபஞ்சமூலம்

Question 1.
பூக்காமலே காய்க்கும் மரங்கள், விதைக்காமலே முளைக்கும் விதைகள் எவையெனக் கேட்டறிந்து வகுப்பறையில் கூறுக.
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 5.3 சிறுபஞ்சமூலம் - 1

Question 2.
மூவாது மூத்தவர், காணாது கண்டவர்
இவை போல நயம் அமைந்த தொடர்களை உருவாக்குக.
Answer:
மூவாது மூத்தவர்
வாராது வந்தவர்
தேடாது கிடைத்தவர்

காணாது கண்டவர்
பெறாஅது பெற்றவர்
சூடாது சூடியவள்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
கீழ்க்காண்பவற்றுள் உணர்ச்சித் தொடர் எது?
அ) சிறுபஞ்சமூலத்தில் உள்ள பாடல்கள் பெரும்பாலும் மகடூஉ முன்னிலையில் அமைந்துள்ளன.
ஆ) இந்திய நூலகவியலின் தந்தையென அறியப்படுபவர் யார்?
இ) என்னண்ணே ! நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை!
ஈ) வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடத்தைப் புத்தகசாலைக்குத் தருக.
Answer:
இ) என்னண்ணே ! நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை!

Question 2.
பூவாது காய்க்கும், மலர்க்கை அடிக்கோடிட்ட சொற்களுக்குரிய இலக்கணம் யாது?
அ) பெயரெச்சம், உவமைத்தொகை
ஆ) எதிர்மறைப் பெயரெச்சம், உருவகம்
இ) வினையெச்சம், உவமை
ஈ) எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை
Answer:
ஈ) எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை.

குறுவினா

Question 1.
மூவாது மூத்தவர் – நூல் வல்லார் – இத்தொடர் உணர்த்தும் பொருளைக் குறிப்பிடுக.
Answer:
இத்தொடரின் பொருளாவது, நன்மை, தீமை உணர்ந்த நூல்வல்லோர், வயதில் இளையோராக இருப்பினும் மூத்தவரோடு வைத்து எண்ணத்தக்கவர் ஆவார்.

சிறுவினா

Question 1.
விதைக்காமலே முளைக்கும் விதைகள்- இத்தொடரின் வழிச் சிறுபஞ்சமூலம் தெரிவிக்கும் கருத்துகளை விளக்குக.
Answer:
விதைக்காமலே முளைக்கும் விதை:

  • • கழனியிலே பாத்தி அமைத்து, விதை விதைக்காமலே தானே முளைத்து வரும் விதைகளும் உள்ளன.
  • தானே முளைப்பதுடன் உயிர்களுக்குப் பயனும் நல்குவன.
  • அதைப்போலவே, அறிவுடைய மேதையரும் பிறர் உணர்த்தாமலே, எதையும் தாமே உணர்ந்து உயரிய செயலாற்றுவதோடு, பிறருக்கும் பயன் நல்கி பெருமையுறுவர்.
    “விதையாமை நாறுவ வித்து உள; மேதைக்கு
    உரையாமை செல்லும் உணர்வு.”

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
“விதையாமை நாறுவ” நாறுவ என்பதன் பொருள் யாது?
அ) கெடாதிருத்தல்
ஆ) முதுமையடையாது இருத்தல்
இ) முளைப்ப
ஈ) இளைப்ப
Answer:
இ) முளைப்ப

Question 2.
உரையாமை என்பதன் இலக்கணக் குறிப்பு யாது?
அ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஆ) வினையாலணையும் பெயர்
இ) பெயரெச்சம்
ஈ) எதிர்மறைத் தொழிற்பெயர்
Answer:
ஈ) எதிர்மறைத் தொழிற்பெயர்

Question 3.
சிறுபஞ்சமூலம் இயற்றியவர் …………….
அ) பூதஞ்சேதனார்
ஆ) கணிமேதாவியார்
இ) கபிலர்
ஈ) காரியாசான்
Answer:
ஈ) காரியாசான்

Question 4.
காரியாசானின் ஆசிரியர் …………….
அ) மாங்குடி மருதனார்
ஆ) மாக்காயனார்
இ) கணிமேதாவியார்
ஈ) பூதஞ்சேதனார்
Answer:
ஆ) மாக்காயனார்

Question 5.
சிறுபஞ்சமூலம் பாடல்கள் ஒவ்வொன்றிலும் இடம் பெறும் கருத்துகள் ………….. ஆகும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) ஐந்து
ஈ) ஆறு
Answer:
இ) ஐந்து

Question 6.
சிறுபஞ்சமூலம் ……………. நூல்க ளுள் ஒன்று.
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) பதினெண்கீழ்க்கணக்கு
ஈ) பதினெண்மேற்கணக்கு
Answer:
இ) பதினெண்கீழ்க்கணக்கு

Question 7.
தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து தோன்றியவை ………….. ஆகும்.
அ) காப்பியங்கள்
ஆ) சிற்றிலக்கியங்கள்
இ) மறுமலர்ச்சி இலக்கியங்கள்
ஈ) நீதிநூல்கள்
Answer:
ஈ) நீதிநூல்கள்

Question 8.
சரியான கூற்றினைத் தேர்க
1) காரி என்பது இயற்பெயர் ஆகும்.
2) ஆசான் என்பது மரபின் அடிப்படையில் அமைந்த பெயர்.
அ) 1 சரி, 2 தவறு
ஆ) 2 சரி, 1 தவறு
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
Answer:
அ) 1 சரி, 2 தவறு

Question 9.
பாரதியார் ………….. வயதிலேயே அரசவையில் கவிதை எழுதினார்.
அ) 10
ஆ) 12
இ) 11
ஈ) 14
Answer:
இ) 11

Question 10.
16 வயதிலே படைத்தளபதி ஆனவர் யார் …………..
அ) அலெக்சாண்டர்
ஆ) நெப்போலியன்
இ) அகஸ்டஸ்
ஈ) அக்பர்
Answer:
அ) அலெக்சாண்டர்

Question 11.
பொருத்தமான விடையைத் தேர்க.
1. வள்ளலார் – 16 வயதில் தந்தையின் போர்ப்படை தளபதி
2. பாரதி – 15 வயதில் பிரெஞ்சு இலக்கியக்கழகத்துக்குத் தமது கவிதைகளை அனுப்பியவர்.
3. விக்டர்ஹியூகோ – 11 வயதில் அரசவையில் கவிதை எழுதி பட்டம் பெற்றவர்
4. அலெக்சாண்டர் – 10 வயதிற்குள்ளாகவே சொற்பொழிவாளர்.
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 2, 1, 4
இ) 4, 3, 1, 2
ஈ) 2, 3, 1, 4
Answer:
அ) 4, 3, 2, 1

Question 12.
பைசா நகர கோபுரத்தின் விளக்கைக் குறித்து ஆராய்ந்தவர்
அ) நியூட்டன்
ஆ) தாமஸ் ஆல்வா எடிசன்
இ) கலீலியோ
ஈ) விக்டர் ஹியூகோ
Answer:
இ) கலீலியோ

குறுவினா

Question 1.
சிறுபஞ்சமூலத்தின் பாடல்கள் எவ்வகையில் வாழ்வியல் உண்மைகளை எடுத்துக்காட்டுகின்றன?
Answer:

  • நன்மை தருவன
  • தீமை தருவன
  • நகைப்புக்கு உரியன
    என்னும் வகையில் வாழ்வியல் உண்மைகளைச் சிறுபஞ்சமூலத்தின் பாடல்கள் எடுத்துக்காட்டுகின்றன.

Question 2.
“சிறுபஞ்சமூலம்” என்பதன் பொருள் யாது? அது எவற்றைக் குறிக்கும்?
Answer:

  • சிறுபஞ்சமூலம் என்பதற்கு “ஐந்து சிறிய வேர்கள்” என்பது பொருள் ஆகும்.
  • கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகியவற்றின் வேர்களைக் குறிக்கும்.

Question 3.
மூத்தவரோடு வைத்து எண்ணத்தக்கவர் யார்?
Answer:
நன்மை, தீமைகளை நன்குணர்ந்தவர்; வயதில் இளையவராக இருந்தாலும், அவர் மூத்தவரோடு வைத்து எண்ணத் தக்கவரே ஆவார்.

Question 4.
பிறர் உணர்த்தாமல் எதையும் தாமே உணர்ந்து கொள்பவரைப் பற்றி சிறுபஞ்சமூலம் குறிப்பிடுவது யாது?
Answer:
பாத்தி அமைத்து விதை விதைக்காமலே, தாமே முளைத்து வளரும் விதைகளும் உள்ளன. அதைப் போலவே மேதையரும் பிறர் உணர்த்தாமல் எதையும் தாமே உணர்ந்து கொள்வர்.

சிறுவினா

Question 1.
சிறுபஞ்சமூலம் குறிப்பு வரைக.
Answer:

  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று சிறுபஞ்சமூலம்.
  • சிறுபஞ்சமூலம் என்பதற்கு ஐந்து சிறிய வேர்கள் என்பது பொருள்.
  • அவை கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகியன
  • இவ்வேர்களால் ஆன மருந்து உடலின் நோயைப் போக்குகின்றன.
  • அதுபோலச் சிறுபஞ்சமூலம் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துகள்
  • மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன.
  • இந்நூலின் ஆசிரியர் காரியாசான்.

Question 2.
காரியாசான் – குறிப்பு வரைக.
Answer:

  • சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் காரியாசான்,
  • மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர்.
  • காரி என்பது இயற்பெயர்.
  • ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் அமைந்தபெயர்.
  • மாக்காரியாசான் என்று பாயிரச் செய்யுள் இவரைச் சிறப்பிக்கிறது.

Question 3.
எடுத்துக்காட்டு உவமையணி – விளக்குக.
Answer:
அணிவிளக்கம் : ஒரு செய்யுளில் உவமைத் தொடரும், உவமேயத் தொடரும் அமைந்து, உவம உருபு மறைந்து வருமாயின் அஃது எடுத்துக்காட்டு உவமை அணி ஆகும்.
சான்று : “விதையாமை நாறுவ வித்து உள; மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு”
உவமைத்தொடர் : விதையாமை நாறுவ வித்து உள.
உவமேயத்தொடர் : மேதைக்கு உரையாமை செல்லும் உணர்வு
உவம உருபு : (அது போல) மறைந்து வருதல்
பொருத்தம் : விதை விதைக்காமல் தானே முளைத்து வரும் விதைகள் உள்ளன. அது போல
மேதையரும் பிறர் உணர்த்தாமல் தாமே உணர்ந்து செயலாற்றுவர்.
இப்பாடலில் “உவமஉருபு” மறைந்து வந்துள்ளதால் எடுத்துக்காட்டு உவமையணிக்குச் சான்றாகிறது.

பாடலின் பொருள்

அறிவுடையார் தாமே உணர்வார்

பூக்காமலே சில மரங்கள் காய்ப்பதுண்டு. அவற்றைப் போல இளையவரான போதும், நன்மை தீமைகளை நன்குணர்ந்து செய்யும் இயல்புடையவர்கள் மூத்தவரோடு வைத்து எண்ணத்தக்கவர் ஆவார்.

பாத்தி அமைத்து, விதை விதைக்காமலே, தானே முளைத்து வளரும் விதைகளும் உள்ளன. அதைப் போலவே அறிவிற் சிறந்த மேதையரும் பிறர் உணர்த்தாமலே, எச்செயலையும் தாமே உணர்ந்து செய்து கொள்ளும் செயல்வல்லோராய் இருப்பர்.

“பூவாது காய்க்கும் மரம் போல
விதையாது முளைக்கும் வித்து போல”

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள்

Students can Download 9th Tamil Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள்

கற்பவை கற்றபின்

Question 1.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள் - 13
Answer:
1. வல்லினம் வருமா
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள் - 1
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள் - 2

2. வல்லினம் இடலாமா
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள் - 3

3. எது சரி? எது தவறு? காரணம் கூறுக.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள் - 4

4. கீழ்க்காணும் தொடர்களில் வல்லினம் மிகும் , மிகா இடங்களைக் கண்டறிந்து அதற்கான இலக்கணம் அறிக.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள் - 5

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள்

மொழியை ஆள்வோம்

படித்துச் சுவைக்க.

மயில்பொறியை வானத்தில் பறக்க வைத்தோம்
மணிபல்லவத் தீவிற்குப் பறந்து சென்றோம்
குயில்மொழியாம் கண்ணகியை அழைத்துச் செல்லக்
குன்றுக்கு வானவூர்தி வந்த தென்றே
உயில் போன்று நம்முன்னோர் எழுதி வைத்த
உண்மைகளான அறிவியலின் அற்பு தத்தைப்
பயில்கின்ற காப்பியத்தில் படித்த தெல்லாம்
பார்தன்னில் நனவாகக் காணுகின்றோம்! …………….- பாவலர் கருமலைத்தமிழாழன்

மொழிபெயர்க்க:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள் - 6

Bottle xylophone, Make music with bottles.
You will need: 6 glass bottles, Wooden spoon, Wter, Food coloring.

  • Fill one bottle with water, then fill each other bottle with slightly less than the bottle next to it.
  • Add some food coloring to help you to see the different levels of water.
  • Tap the bottles with the end of a wooden spoon. Can you play a tune?

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள்

Water music
Hitting the bottles with the spoon makes them vibrate and produce a sound. The more the bottle vibrates, the higher the note will be. The more water in a bottle, the less it vibrates, so less water means higher notes.
கண்ணாடிப் புட்டிகளாலான இசைக்கருவி.
கண்ணாடி புட்டிகள் மூலம் இசையை உருவாக்குதல்.

தேவையான உபகரணங்கள்:

  • ஆறு கண்ணாடி புட்டிகள்
  • மரத்தாலான கரண்டி ஒன்று
  • தண்ணீர்
  • உணவுப்பொருளுக்குப் பயன்படும் வண்ணப்பொடி

செய்முறை:

  • முதல் புட்டியில் முழுவதுமாக தண்ணீ ரை நிரப்பு. அடுத்தடுத்து வரும் புட்டிகளில் சற்று குறைவாக நிரப்பிக் கொள்.
  • உணவுப் பொருளுக்குப் பயன்படுத்தப்படும் வண்ணப் பொடியை தண்ணீரில் கலந்து கொண்டு, ஒவ்வொரு புட்டியிலும் வேறுபட்ட அளவில் தண்ணீர் நிரப்பியிருப்பதை அறிந்துகொள் (பார்த்துக்கொள்)
  • இப்போது மரத்தாலான கரண்டியின் அடிப்பாகத்தைக் கொண்டு புட்டிகளில் தட்டினால், இசையை உன்னால் உருவாக்க முடியும்.

தண்ணீர் இசையாகிறதா?

  • மரக்கரண்டியின் அடிப்பாகத்தால் புட்டிகளைத் தட்டும் போது ஏற்படும் அதிர்வுகளால் ஒலி ஏற்படுகிறது.
  • புட்டிகளில் நிறைய நீர் இருந்தால் குறைவான அதிர்வுகளும், குறைவான நீர் உள்ள புட்டிகளில் நிறைய அதிர்வுகளும் ஏற்படும். ஒலியின் அளவுகள் வேறுபட்டு வரும்பொழுது, அதற்கேற்ப இசையும் (Tune) மாறுபட்டு ஒலிக்கும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள்

பின்வரும் பத்தியில் இடம்பெற்றுள்ள பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை எழுதுக.
நாக்குதான் ஐம்புலன்களிலேயே ரொம்ப வீக்கு! அதற்கு நான்கு ஆதார ருசிகள்தாம் தெரியும். எலுமிச்சையின் புளிப்பு, சர்க்கரையின் தித்திப்பு, காபியின் கசப்பு, உப்பு. இவை தவிர ஸேவரி என்று சொல்கிற டேஸ்ட் எல்லாம் இந்த நான்கு ஆதார ருசிகளின் கலப்புதான். இந்த ருசிகளைத் தொட்டு அறிய நாக்கில் வெவ்வேறு இடங்கள் உண்டு. தித்திப்பு – நுனி நாக்கு, உப்பு – பரவலாக, குறிப்பாக நுனியில். கசப்பு – உள்நாக்கு. புளிப்பு, ஸேவரி – நாக்கின் வலது – இடது புறங்கள்! ஒரு சராசரி மனிதனுடைய நாக்கில் 9,000 சுவை அரும்புகள் உண்டு. அலட்டல் வேண்டாம். குழந்தையின் நாக்குடன் ஒப்பிடும்போது இது ஒன்றுமே இல்லை. ஏதாவது மருந்தை நாக்கில் தொட்டால் குழந்தைகள் என்னமாக எக்ஸ்பிரஷன் காட்டுகின்றன! சுவைக்கு வாசனையும் சேரவேண்டும். இரண்டும் ஒத்துழைத்தால்தான் பாதாம் அல்வா, ஐஸ்க்ரீம போன்றவற்றை ரசிக்க முடியும். மூக்கைப் பிடித்துக் கொண்டு ஐஸ்க்ரீம் சாப்பிட்டுப் பாருங்கள். ஜில்லென்று இருக்கும். அவ்வளவே. கூடவே சூடும், உணவின் தோற்றமும் முக்கியம். மூக்குக்கு மொத்தம் ஏழு வாசனைகள். கற்பூர வாசனை, பெப்பர்மிண்ட் வாசனை, மலர்களின் வாசனை, மஸ்க் என்னும் அரபுசேக் செண்ட் வாசனை, ஈத்தர் அல்லது பெட்ரோல் வாசனை, அழுகிய முட்டை வாசனை, காட்டமான அமில வாசனை. இந்த ஏழு வாசனைகளின் கலப்புகளால் நம்மால் ஆயிரக்கணக்கான வாசனைகளை உணர முடிகிறது. (ஏன்? எதற்கு? எப்படி? – சுஜாதா)
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள் - 7

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள்

கதையைப் படித்து உரையாடலாக மாற்றுக.

ஒரு சிப்பி, இன்னொரு சிப்பியிடம் சொன்னது – ‘ஐயோ, என்னால் வலி தாங்க முடியவில்லையே’. ‘ஏன்? என்னாச்சு?’ என்று விசாரித்தது இரண்டாவது சிப்பி.
‘எனக்குள் ஏதோ ஒரு கனமான உருண்டை , பந்து உருள்வதுபோல் இருக்கிறது. ரொம்ப வலி.’

இதைக் கேட்டதும் இரண்டாவது சிப்பிக்கு மிகுந்த மகிழ்ச்சி. பெருமையுடன் நெஞ்சு நிமிர்த்தி, ‘ஆகா! நான் எந்த வலியும் இல்லாமல், நலமாக இருக்கிறேன்’ என்றது உற்சாகமாக.

இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு நண்டு, இரண்டாவது சிப்பியிடம் சொன்னது- ‘உனக்கு எந்த வலியும் இல்லை என்பது உண்மையாக இருக்கலாம். வலியைத் தாங்க விரும்பாத நீ, எப்பொழுதும் இப்படியே வெறுமையாகக் கிடக்க வேண்டியதுதான். ஆனால், இப்போது சிரமப்படுத்தும் அந்த வலி, இன்னும் சில நாள்களில், ஓர் அழகான முத்தாக உருவெடுக்கும். அது பெருமை தேடித்தரும்.’

Answer:

உரையாடல்

(கடற் கரையோரம் அலையிலிருந்து மீண்டு வந்தன இரண்டு சிப்பிகள்)
சிப்பி 1: வலி தாங்கமுடியவில்லையே? என்ன செய்வது என்று தெரியவில்லை.
சிப்பி 2: ஏன்? என்ன ஆச்சு; நேற்று நன்றாகத் தானே இருந்தாய்; இன்றைக்கு என்ன ஆனது?
சிப்பி 1: என் வயிற்றுக்குள் ஏதோ கனமான உருண்டை பந்து உருளுவது போல இருக்கிறது. அதனால் தாங்க முடியாத வலி….
சிப்பி 2: எனக்கு எந்த வலியும் இல்லை! நல்ல வேளை எனக்கு எந்தத் தொந்தரவும் இல்லை! நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
(அடுத்த அலையிலிருந்து கரையில் மீண்டு நின்றது ஒரு நண்டு)
நண்டு: (2வது சிப்பியிடம்) அந்த சிப்பி வலியால் துடிக்கிறது. உனக்கு எந்த வலியும் இல்லை ;
“நன்றாக இருக்கிறேன்” என்று சொல்கிறாய்? வலியைத் தாங்க விருப்பமில்லை என்கிறாய். வலியைத் தாங்கத் தயராக இல்லை என்கிறாய்? அப்படி என்றால் நீ வெறுமையாகக் கிடக்க வேண்டியது தான்.
சிப்பி 2: ஏன் வலி வந்தால் என்ன வாகும்? எனக்குக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன.
நண்டு: அந்த நண்டுக்கு வலி சிரமப்படுத்தும். ஆனால் சில நாள்களில் அதன் வயிற்றிலிருந்து ஒரு அழகான முத்தாக வெளிவரும். அந்த முத்து எல்லோருக்கும் பெருமை தேடித்தரும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள்

செய்து கற்க.

Question 1.
செய்தித்தாள்களில் இடம்பெற்றுள்ள ஒரு வாரத்திற்குரிய அறிவியல் செய்திகளைப் படித்துக் குறிப்பெடுக்க.
Answer:
நாள்: 14.4.18
சனிக்கிழமை

தினமணி

சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து புதிய செயலி உருவாக்கிய திண்டுக்கல் மாணவர்களுக்கு முதல்பரிசு.

சமூகப் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களைப் பொதுமக்களிடம் எளிதாகக் கொண்டு செல்வதற்கான புதிய செயலி மற்றும் இணைய முகவரி உருவாக்கி இருக்கின்றனர் மாணவர்கள்.

நாள்: 14.4.18
சனிக்கிழமை

தி இந்து
மம்மி பூனை

எகிப்தில் பூனை கடவுளின் ஒரு வடிவம். அரசர் குடும்பத்தைப் போலவே பூனைகளையும் பாடம் பண்ணிக் காத்துவந்தனர். பிரமிடுகளிலுள்ள சுவற்றில் புனிதப் பூனைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இதுபற்றி பிரபல சூழலியல் எழுத்தாளர். சு. தியோடர் பாஸ்கரன் கட்டுரையில் தெரிவித்திருக்கிறார்.

நாள்: 13.4.18
வெள்ளிக்கிழமை

தினமணி

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். I ஐ செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம். செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி.41. ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா ஆராய்ச்சி மைய ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து அதன் தலைவர் சிவன் கூறினார்.

(இதுபோன்று, அன்றாடச் செய்தித்தாள்களில் வெளியாகும் அறிவியல் செய்திகளைத் தொடர்ந்து படித்துக் குறிப்பெடுத்துக் கொள்க)

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள்

Question 2.
அங்காடியில் வாங்கிய உணவுப் பொருளின் உருவாக்க நாள், முடிவு நாள், உறையில்
அச்சடிக்கப்பட்ட உணவுப்பொருளின் ஆற்றல், குறியீட்டுப் பட்டை (Barcode) ஆகியவற்றின் விவரங்களைக் கொண்டு உணவுப் பொருளின் உண்மைத்தன்மையை எப்படி அறிவது?
Answer:
நாம் அங்காடிக்குச் சென்று, உணவுப்பொருள், குளிர்பானங்கள், அழகுசாதனப் பொருள்கள் போன்றவற்றை வாங்கும்போது, அதன் உறைகளிலோ அல்லது மேல் அட்டைப் பெட்டியிலோ குறியீட்டு பட்டை (Barcode) அமைந்திருக்கும், அதன் உண்மைத் தன்மையை ஆராயும் முறை. குறியீட்டுப் பட்டை இடம் பெற்றிருக்கும் பகுதியை கணினியுடன் கூடிய ஒளிக் கதிர் மூலம் வருடும் போது (Scanning) அப்பொருளின்

  • எடை • விலை • உற்பத்தி செய்த இடம்
  • நாள் எந்த நாள் வரை பயன்படுத்தலாம் (முடிவு நாள்)
  • அப்பொருளில் அடங்கியிருக்கும் பிறபொருள்களின் அளவு, தன்மை, உற்பத்தி உரிமம் போன்ற அனைத்து விபரங்களும் திரையில் தெரியவரும்.  இம்முறையில் தான் ஒரு பொருளை வாங்கும்பொழுது ஆராய்ந்து வாங்குதல் வேண்டும்.

நயம் பாராட்டுக.

பொங்கியும் பொலிந்தும் நீண்ட புதுப்பிடர் மயிர்சி லிர்க்கும்
சிங்கமே! வான வீதி திகுதிகு எனஎ ரிக்கும்
மங்காத தணற்பிழம்பே! மாணிக்கக் குன்றே! தீர்ந்த
தங்கத்தின் தட்டே! வானத் தகளியிற் பெருவி ளக்கே!
கடலிலே கோடி கோடிக் கதிர்க்கைகள் ஊன்றுகின்றாய்
நெடுவானில் கோடி கோடி நிறைசுடர்க் கைகள் நீட்டி
இடைப்படு மலையோ காடோ இல்லமோ பொய்கை ஆறோ
அடங்கநின் ஒளிஅ ளாவ அமைந்தனை! பரிதி வாழி! ……………..- பாரதிதாசன்.
Answer:
பாரதிதாசனார் 29.4.1891 இல் புதுவையில் பிறந்தார். இவர் பெற்றோர் கனகசபை; இலக்குமி அம்மாள். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம். பாரதியார் புதுவையில் வாழ்ந்த போது, அவருடன் நட்புக் கொண்டு, அவர் மீது கொண்ட அன்பு காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் எனப் புனைந்து கொண்டார்.

இவர் குடும்பவிளக்கு, இருண்ட வீடு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, கண்ணகி புரட்சிக் காப்பியம் முதலான தொண்ணூற்றுக்கும் மேலான நூல்களை இயற்றியுள்ளார்.

பாடலின் மையக்கருத்து:
இயற்கையை வருணித்துப் பாடுவதில் வல்லவர். இப்பாடலில், சூரியனை பல்வேறு வடிவங்களில் வருணித்துப்பாடுகிறார். உலகெங்கும் இருளைப் போக்கி தன் ஒளி அளாவ சுடர்க்கைகள் நீட்டி ஊன்றுகின்றது.

பாடலின் திரண்டகருத்து:
கடலுக்குள்ளிருந்து பொங்கிப் பொழிந்து பிடரிமயிர் சிலிர்க்க வரும் சிங்கம் போல வருகிறாய் நீ! வானத்தில் திகுதிகு என எரிக்கும் தணற்பிழம்பே! மாணிக்கக் குன்றே! தங்கத் தட்டே! வானத் தகளியற் பெரு விளக்கே!

கடலில் உன் கோடிக் கைகளை ஊன்றுகின்றாய் நெடுவானில் சுடர்க்கைகளை நீட்டுகிறாய். இடையில் தென்படுகின்ற மலை, காடு, இல்லம், பொய்கை, ஆறு அத்துணையிலும் உன் ஒளி அளாவுகின்றது. கதிரவனே! நீ வாழ்க.

நயம்:
பாடவந்த பொருள் பற்றி மட்டும் பாடாமல் செய்யுளுக்கேயுரிய பல்வேறு நயங்களையும் உடன் அமைத்துப் பாடியிருக்கிறார்.

எதுகை நயம்:
அடிதோறும் சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரப் பாடுவது எதுகை நயம் ஆகும்.

எடுத்துக்காட்டு:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள் - 10

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள்

கவிஞர் அடிதோறும் எதுகை நயம் அமைத்துச் செய்யுளுக்குச் சொல்லழகு ஊட்டியிருக்கிறார்.

மோனை நயம்:
அடிதோறும் சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை ஆகும்.
காட்டுக்கு அழகு யானை
பாட்டுக்கு அழகு மோனை என்பது போல மோனைத் தொடர்களை அமைத்துப் பாடியிருக்கிறார்.

எடுத்துக்காட்டு:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள் - 11

அணி நயம்:
வனிதைக்கு மணி அழகு
செய்யுளுக்கு அணி அழகு – என்றாற் போல கவிஞர்கள் தாம் சொல்ல வந்த பொருளைச் சுவைஞர்களின் இன்பத்திற்கேற்பப் பயன்படுத்துவார்கள்.
பாரதிதாசன் பரிதியைப்(சூரியனை) பல்வேறு உருவகங்களாகக் காட்சிப் படுத்துகிறார். எனவே இச்செய்யுளில் உருவக அணி பயின்றுவந்துள்ளது.

எடுத்துக்காட்டு:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள் - 12

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள்

இயைபு நயம்:
பாட்டுக்கு ஓசையின்பம் தருவது இயைபுநயம். இப்பாடலில் கவிஞர், அடிதோறும் இறுதிச் சீர் ஒன்றிணைய இயைபு நயம் அமைய இயைத்துப் பாடியிருக்கிறார்.

எடுத்துக்காட்டு:
மயிர்சிலிர்க்கும், என எரிக்கும், குன்றே, பெருவிளக்கே
இவ்வாறாகப் பல்வேறு நயங்களை அமைத்துப் பரிதியின் சுடரை விளக்கிக் காட்டுகிறார். பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் மாலைக் கால வருணணை போன்று இப்பாடல் அமைந்து விளங்குகிறது.

மொழியோடு விளையாடு

குழுவில் விளையாடுக.

  • நான்கு மாணவர்கள் கொண்ட குழுக்களாக எண்ணிக்கைக்கு ஏற்பப் பிரிந்து கொள்க.
  • முதல் மாணவர் ஒரு சொல்லைத் தொடங்குக.
  • அதனோடு தொடர்புடைய ஒரு சொல்லை இரண்டாம் மாணவர் கூறுக.
  • இப்படியே நான்கு மாணவர்களும் கூறிய சொற்களைக் கொண்டு ஒரு தொடர் அமைக்க.

எ.கா.
மாணவர் 1 : கணினி
மாணவர் 2 : அறிவியல்
மாணவர் 3 : தமிழ்
மாணவர் 4 : மொழி

சொல்லப்பட்ட சொற்கள்: கணினி, அறிவியல், தமிழ், மொழி
தொடர்: அறிவியல், கணினித் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஈடுகொடுத்துத் தமிழ் மொழி வளர்ந்து வருகிறது.
Answer:

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள் - 8

மாணவர்களே இவ்வாறாக உங்கள் நண்பர்களுடன் விளையாடும்போது உங்கள் மொழி அறிவு வளரும்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள்

அகராதியில் காண்க.
இமிழ்தல், இசைவு, துவனம், சபலை, துகலம்
Answer:
இமிழ்தல் – இனிதாதல், ஒலித்தல், கக்குதல்
இசைவு – இணக்கம், சம்மதி, பொருத்து தகுதி, ஏற்றது, உடன்பாடு, ஓட்டம்
துவனம் – அக்கினி, நெருப்பு
சபலை – இலக்குமி, திப்பிலி, நா, மின்னல், வேசி
துகலம் – பங்கு

ஒரு சொல்லால் தொடரின் இரு இடங்களை நிரப்புக. (விலங்கு, எழுதி, அகல், கால், அலை)

அ) எண்ணெய் ஊற்றி ……………. விளக்கு ஏற்றியவுடன், இடத்தைவிட்டு அகல்
ஆ) எனக்கு  ……………. பங்கு பிரித்துக் கொடுக்க வா! கீழே ஈரம்: பார்த்து உன் கால் ஐ வை.
இ) கைப்பொருளைக் கடல்  ……………. யில் தொலைத்துவிட்டு, கரையில் தேடி அலைந்தால் கிடைக்குமா?
ஈ) வீட்டு  ……………. ஆன நாயுடன் விளையாடுவது மகிழ்ச்சி தரும்; வெளியில் அதனைக் கழுத்து  ……………. உடன் மட்டுமே பிடித்துச் செல்ல வேண்டும்.
உ) எழுத்தாணிகொண்டு  ……………. தமிழை, ஏவுகணையில் எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்.
Answer:
அ) எண்ணெய் ஊற்றி அகல் விளக்கு ஏற்றியவுடன், இடத்தைவிட்டு அகல்
ஆ) எனக்கு கால் பங்கு பிரித்துக் கொடுக்க வா! கீழே ஈரம்: பார்த்து உன் கால் ஐ வை.
இ) கைப்பொருளைக் கடல் அலை யில் தொலைத்துவிட்டு, கரையில் தேடி அலைந்தால் கிடைக்குமா?
ஈ) வீட்டு விலங்கு ஆன நாயுடன் விளையாடுவது மகிழ்ச்சி தரும்; வெளியில் அதனைக் கழுத்து விலங்கு உடன் மட்டுமே பிடித்துச் செல்ல வேண்டும்.
உ) எழுத்தாணிகொண்டு எழுதிய தமிழை, ஏவுகணையில் எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள்

ஒரு தொடரில் இருவினைகளை அமைத்து எழுதுக.

குவிந்து – குவித்து; சேர்ந்து – சேர்த்து; பணிந்து – பணித்து; பொருந்து – பொருத்து; மாறு – மாற்று.
(எ.கா) விரிந்தது – விரித்தது
அ) மழைக்காற்று வீசியதால், பூவின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது.
ஆ) ……………………………………………………………………………………………………
ஈ) ……………………………………………………………………………………………………
உ) ……………………………………………………………………………………………………
ஊ) ……………………………………………………………………………………………………
Answer:
அ) மழைக்காற்று வீசியதால், பூவின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது.
ஆ) ஆற்றில் அடித்து வந்த மணல் குவிந்தது; வாங்கிய மணலை வீட்டுக்கு முன்பு குவித்து வைத்தோம். கையில் காசு சேர்ந்தது; சேர்ந்த காசுகளைச் சிறுசேமிப்பில் சேர்த்து வைத்தோம்.
ஈ) ஆசிரியர் சொல்லுக்கு மாணவர்கள் பணிந்து நடந்தனர். விடுமுறையில் இன்னின்ன பாடங்களைப் படித்து வருமாறு பணித்திருக்கிறார்.
உ) பின்வரும் சொற்களைப் பின்குறித்த பிறசொற்களோடு பொருந்துமாறு பொருத்திக் காட்டுக.
ஊ) பிறருடைய தீயவழியில் இருந்து நீ மாறு; அவர்களை உன் வழிக்கு மாற்று.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள்

காட்சியைக் கண்டு கவினுற கருத்தளிக்க.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள் - 14
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள் - 9

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள்

செயல்திட்டம்

மின்சார சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு முழக்கத்தொடர்களை எழுதி வகுப்பறையிலும் பள்ளியிலும் காட்சிப்படுத்துக.
Asnwer:
மின்சார சேமிப்புப் பற்றிய முழக்கத் தொடர்கள்:

1. மின் இயந்திரங்களைத் தவிர்ப்போம்
மின்சாரம் சேமிப்போம் – நம்
ஆரோக்கியத்தையும் காப்போம்.
2. மின்சார சேமிப்பு மின்சார உற்பத்திக்குச் சமமாகும்.
3. நீராதாரம் பெருக்குவோம் மின்
உற்பத்தியையும் பெருக்குவோம்.
4. ஆள் இல்லா அறைகளில்
மின் விசிறி இயக்காதீர்.
5. மின்சார சிக்கனம்
தேவை இக்கணம்.
6. குழல் விளக்கையும்
குண்டு விளக்கையும்
தவிர்ப்போம்.
மின்சாரம் சேமிப்போம்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள்

நிற்க அதற்குத்தக….

என் பெற்றோர் மகிழுமாறு நான் செய்ய வேண்டியது

1. என் வீட்டின் நிலையறிந்து, தேவையறிந்து பொருள்கள் வாங்குவது.
2. அலைபேசிப் பயன்பாட்டினைப் பத்து நிமிடங்களுக்கு மேல் நீட்டிக்காமல் இருப்பது.
3. தொலைக்காட்சி பார்ப்பதைக் குறிப்பிட்ட நேரமாகக் குறைத்துக் கொள்வது.
4. முயற்சி செய்தால் முடியும், என் வேலையை நானே செய்து தருவேன்.
5. என் தங்கையோடு போட்டிபோடாமல் ஆண், பெண் வேறுபாடின்றி உரிமையைச் சமமாகப் பெற செய்வேன்.
6. நான் குடியிருக்கும் தெருவில் குப்பைக் கூளங்கள் தேங்காதவாறு பார்த்துக் கொண்டு பிறர்க்கு முன்மாதிரியாக நடந்து கொள்வேன்.
Answer:
1. என் வீட்டின் நிலையறிந்து, தேவையறிந்து பொருள்கள் வாங்குவது.
2. அலைபேசிப் பயன்பாட்டினைப் பத்து நிமிடங்களுக்கு மேல் நீட்டிக்காமல் இருப்பது.
3. தொலைக்காட்சி பார்ப்பதைக் குறிப்பிட்ட நேரமாகக் குறைத்துக் கொள்வது.
4. …………………………………………………………………………………………………………………………………………………………………….
5. …………………………………………………………………………………………………………………………………………………………………….
6. …………………………………………………………………………………………………………………………………………………………………….

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள்

கலைச்சொல் அறிவோம்

ஏவு ஊர்தி – Launch Vehicle
பதிவிறக்கம் – Download
ஏவுகணை – Missile
பயணியர் பெயர்ப் பதிவு – PNR (Passenger Name Record)
கடல்மைல் – Nautical Mile
மின்னணு இயந்திரங்கள் – Electronic devices
காணொலிக் கூட்டம் – Video Conference

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள்

பாடநூல் வினாக்கள்

சிறுவினா

Question 1.
வல்லினம் இட்டும் நீக்கியும் எழுதுவதன் இன்றியமையாமையை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
Answer:
செடிகொடி என்பதற்கும்
செடிக்கொடி என்பதற்கும் வேறுபாடு உண்டு.
செடிகொடி என்னும் தொடருக்கு செடியும் கொடியும் என்பது பொருள்
செடிக்கொடி என்னும் தொடரானது செடியில் ஏறியுள்ள
கொடி என்றே பொருள்.
செடி கொடி என்று எழுதும் போது செடி + உம் கொடி + உம் எனப் பிரித்து எழுதுவது ‘உம்’ என்ற சொல் தொக்கி வருவதால் உம்மைத்தொகை எனப்படும்.
உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது.

எழுத்துகள் – எழுத்துக்கள் – இவற்றில் எது சரி?
இதே போல கருத்துக்கள், வாக்குக்கள், வாழ்த்துக்கள் விளக்குக்கள் இவற்றில் வரும் வல்லினம் மிகுமா?
விகுதிப் புணர்ச்சியில், கருத்து + கள் (விகுதி) வல்லெழுத்துக்குப்பின் வரும் வலி மிகுவதற்கு இலக்கணத்தில் எந்த விதியும் இல்லை.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.5 வல்லினம் மிகா இடங்கள்

வல்லெழுத்து (க், ச், த், ப்) ஏன் மிக வேண்டும்?
பொருளைத் தெளிவாகவும் சரியாகவும் உணர்வதற்கும் தமிழ்மொழிக்கே உரிய இன்னோசையை வெளிப்படுத்துவதற்கும் இன்றியமையாது வேண்டப்படுகிறது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.4 விண்ணையும் சாடுவோம்

Students can Download 9th Tamil Chapter 4.4 விண்ணையும் சாடுவோம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 4.4 விண்ணையும் சாடுவோம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.3 உயிர்வகை

Question 1.
பி.எஸ்.எல்.வி. (PSLV) பற்றியும் ஜி.எஸ்.எல்.வி. (GSLV) பற்றியும் செய்திகளைத் திரட்டி விளக்கப் படத்தொகுப்பு உருவாக்குக.
Answer:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, ‘இஸ்ரோ ‘ சார்பில், பி.எஸ்.எல்.வி (PSLV)., மற்றும் ஜி.எஸ்.எல்.வி (GSLV)., ரக ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன.

தகவல் தொடர்புக்கு பயன்படும், ‘ஜிசாட் 6 ஏ’ செயற்கைக்கோள், ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம், நேற்று மாலை, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப் பட்டது.

இந்த செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, நேற்று மாலை, 4:56 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி.,- எப் 8′ என்ற, ராக்கெட் மூலமாக, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள, ஆறாவது, ‘கிரயோஜெனிக் இன்ஜின்’ உதவியுடன், விண்ணில் செலுத்தப்பட்ட, ‘ஜிசாட் 6 ஏ’ செயற்கைக்கோள், ஏவப்பட்ட, 17:50 நிமிடங்களில், பூமியில் இருந்து, 170 கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. தற்போது செலுத்தப்பட்ட ராக்கெட், ஜி.எஸ்.எல்.வி., ரகத்தில், 12வது ராக்கெட். ‘ஜிசாட் 6 ஏ’ செயற்கைக்கோளின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள். இதில், மொபைல் போன் தகவல் தொடர்புக்கு பயன்படும் சக்தி வாய்ந்த, ‘எஸ் மற்றும் சி பேண்ட் டிரான்ஸ்பாண்டர்கள்’ பொருத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து, இஸ்ரோ தலைவர் சிவன் கூறியதாவது:

ஜிசாட் 6 ஏ வெற்றிகரமாக ஏவப்பட்டது, மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே ஏவப்பட்ட, ‘ஜிசாட் 6′ செயற்கைக்கோளுடன், இதுவும் இணைந்து செயல்பட்டு, தகவல் தொடர்புக்கு வழிவகுக்கும். தற்போது செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட், இரண்டாம் நிலையில் செல்லும்போது, உந்து சக்தியை அதிகப்படுத்தவும், மின் காந்த அலைகளால் ராக்கெட்டை பாதுகாக்கவும் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு, சோதனையிடப்பட்டது. அந்த தொழில்நுட்பங்கள், வெற்றிகரமாக செயல்பட்டன.

இந்த ஆண்டில், 10 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த உள்ளோம். குறிப்பாக, ‘சந்திராயன் 2′ செயற்கைக்கோள் உட்பட, பூமி ஆய்வு, அறிவியல், நில அளவிடுதல், தகவல் தொடர்பு, மனிதர்களை விண்ணிற்கு அனுப்புவதற்கான சோதனை உள்ளிட்ட பிரிவுகளில் செயற்கைக்கோள்கள் & விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

Question 2.
வகுப்புத் தோழர் ஒருவரை அறிவியல் அறிஞராக அமரச்செய்து வகுப்பறையில் கற்பனையாக நேர்காணல் ஒன்றை நிகழ்த்துக.
Answer:
கற்பனை நேர்காணல்

வகுப்புத் தோழர் அருண்’ என்பவரை அறிவியல் அறிஞராக அமரச்செய்து ‘மாலா’ காணும் நேர்காணல்.

மாணவர்களே, நம் வகுப்புத் தோழன் ‘அருண்’ தான் நம் முன் அமர்ந்திருக்கும் அறிவியல் அறிஞர். அவரை நம் சார்பில் “மாலா”வாகிய நான் காணும் இந்த நேர்காணலுக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்

மாலா : வணக்கம்! திரு. அருண் அவர்களே.
அருண் : வணக்கம்! மாலா மற்றும் உங்களுடன் அமர்ந்திருக்கும் மாணவர்களுக்கும் வணக்கம்!
மாலா : ஐயா, அறிவியல் அறிஞராகிய உங்களுக்கு என்வாழ்த்துகள் உங்கள் இளமைக்காலம், கல்வி குறித்துக் கூறுங்களேன்.
அருண் : என் சொந்த ஊர் மதுரை மாவட்டத்தில் உள்ள சிற்றூராகிய மேலூர். என் பெற்றோர் தினக் கூலியாகத்தான் வேலை செய்தார்கள். நான் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழ்வழியில் தான் படித்தேன். பிறகு எனக்கு விருப்பமான பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்து புரிந்து பயின்று இந்த நிலைக்கு வந்துள்ளேன்.

மாலா : சிறிய வயதில் உங்கள் எதிர்கால நோக்கம் என்னவாக இருந்தது ஐயா!
அருண் : பெரிதாக ஒன்றும் இல்லை. நன்றாக படிக்க வேண்டும். பெற்றோர் கஷ்டத்தைத் தீர்க்க வேண்டும் என்பதே.
மாலா : உங்கள் பணியில் ஆரம்ப கால நிகழ்வுகள் பற்றிக் கூறுங்களேன்.
அருண் : பணிக்கு சேர்ந்த புதிதில் சற்று பயத்துடனேதான் ஒவ்வொரு பணியையும்
செய்வேன். ஒரு பணி நிறைவு பெற்ற பின் என் மூத்த அறிவியல் அறிஞரிடம்
பாராட்டு பெற்றால் தான் மகிழ்ச்சியாக இருக்கும்.
மாலா : அப்படிப்பட்ட மகிழ்ச்சியான தருணத்தை நினைவுகூர்ந்து எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

அருண் : ஒரு செயற்கைகோள் ஏவுதளத்தில் எப்படிப்பட்ட மென்பொருள் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய ஆய்வில் இரவு, பகலாக முயன்று ஒரு செயலியை உருவாக்கி அதனை பயன்படுத்தும் முறையும் உருவாக்கினேன். அப்போது அனைவரது பாராட்டையும் பெற்றதோடு பதவி உயர்வும் பெற்றேன். அது என் வாழ்வில் மகிழ்ச்சியான தருணமாய் அமைந்தது.
மாலா : செயற்கைக்கோள் தொழில் நுட்பத்தால் நாட்டுக்கு ஏற்படும் பயன்கள் யாவை?

அருண் : ஒவ்வொரு ஆண்டும் பயிர் உற்பத்தி பற்றி கணித்துக் கூறுகிறோம்.
நிலத்தில் எந்த இடத்தில் நீரின் அளவு எவ்வளவு என்பதை செயற்கைக்கோள் மூலம் அறிகிறோம். கடல் பகுதியில் எந்தெந்த இடங்களில் மீன்கள் உள்ளன என்பதை தெரிவிக்கிறோம். திறன் பேசி, தானியங்கி, பணஇயந்திரம் மற்றும் பிற இணையச் செயல்கள் அனைத்திற்கும் செயற்கைக்கோள் பயன்படுகின்றன.
மாலா : நீங்கள் மேன்மேலும் சாதனை புரிய வாழ்த்துகள் ஐயா! நன்றி! வணக்கம்!
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.4 விண்ணையும் சாடுவோம் - 1

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
விடை வரிசையைத் தேர்க.
அ) இது செயற்கைக்கோள் ஏவு ஊர்தியின் செயல்பாட்டை முன்கூட்டியே கணிக்கும். ஆ) இது கடல் பயணத்துக்காக உருவாக்கப்பட்ட செயலி
i) நேவிக், சித்தாரா
ii) நேவிக், வானூர்தி
iii) வானூர்தி, சித்தாரா
iv) சித்தாரா, நேவிக்
Answer:
iv) சித்தாரா, நேவிக்

குறுவினா

Question 1.
செயற்கைக் கோள் ஏவு ஊர்தியில் பொருந்தும் செயலியைப் பற்றி திரு. சிவன் கூறுவது யாது?
Answer:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 1982 ஆம் ஆண்டுதான் வேலையில் சேர்ந்தார். திரு. சிவன் 1983 ஆம் ஆண்டு முதல் முதலில் பி.எஸ்.எல்.வி (Polar Satellite Launch Vehicle) திட்டத்தை தொடங்க மைய அரசு இசைவு தந்தது.

அங்கு பணிபுரியும் அறிவியலாளர்கள் அனைவருக்குமே இத்திட்டப்பணி புதிதுதான். ஆனால் சிவன் அவர்கள் இரவு பகலாக முயற்சி செய்து ஒரு செயலியை உருவாக்கினார். அது சித்தாரா என்ற ழைக்கப்பட்ட து. (SITARA – Software for Integrated Trafectory Analysis with Real Time Applications)

இது செயற்கைக் கோள் ஏவு ஊர்தி பற்றிய முழுவிவரங்களையும் மின்னியக்க முறையில் (Digital) சேகரிக்கும்.

சிறுவினா

Question 1.
மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதில் செயற்கைக்கோளின் பங்கு யாது?
Answer:
மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதில் செயற்கைக்கோளின் பங்கு மகத்தானது ஆகும். ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்தின் மூலம் எவ்வளவு விளைச்சல் கிடைக்கும் என்பதைக் கணித்து அரசின் கவனத்துக்குத் தெரியப் படுத்தப்படுகிறது. இதைப் பயன்படுத்தி அரசால் அதற்கேற்ற திட்டங்களை வகுத்து மக்களுக்கு பயன்படுத்த முடிகிறது.

நிலத்தில் எந்த இடத்தில் நீரின் அளவு எவ்வளவு இருக்கும் என்பதைச் செயற்கைக்கோள் மூ லம் கண்டுபிடித்ததை மக்களுக்கு பயனுள்ள வழியில் செய்யமுடிகிறது.

கடல் பகுதியில் எந்தெந்த இடங்களில் மீன்கள் அதிகமாகக் கிடைக்கும் என்று மீனவர்களுக்குச் சொல்ல பயன்படுத்தப்படுகிறது.

மக்கள் பயன்படுத்தும் இணையவழிச் சேவைகளுக்கு செயற்கைக்கோள் இவ்வாறாகப் பயன்படுகிறது.

நெடுவினா

Question 1.
இந்திய விண்வெளித் துறை பற்றிய செய்திகளை விவரிக்க.
Answer:
இது, இந்திய அரசின் முதன்மை தேசிய விண்வெளி முகமை ஆகும். இதன் தலைமையகம், இந்தியாவில், பெங்களூருவில் நீயூஸல் சாலையில் ‘அன்தரீஷ் பவன்’ என்ற பெயரில் உள்ளது. இதன் முதன்மை விண்வெளி நிலையம் சதீஸ்தவன் விண்வெளிமையம். இதன் தலைவராக திரு கே. சிவன், 14.1.2018 அன்று முதல் பொறுப்பேற்று செயலாற்றி வருகிறார். இவர், நாகர்கோவில், வல்லங் குமாரவிளை கிராமத்தில் பிறந்தவர். எம்.ஐ.டி யில் சேர்ந்து எம்.இ., பட்டம் பெற்று விக்ரம் சாராபாய் நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றி வந்தார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உலகின் மிகப் பெரும் விண்வெளி ஆய்வு மையங்களில் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதன் முதன்மை நோக்கமாக விண்வெளி தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும் அவற்றை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்துவதும் ஆகும். இந்நிறுவனம், 1975 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ‘ஆரியப்பட்டா’ அமைக்கப்பட்டு சோவியத் ஒன்றியத்தால் விண்ணேற்றப்பட்டது.

இதற்குக் காரணமானவர் விக்ரம் சாராபாய் ஆவார். 1980 இல் இந்தியாவில் கட்டமைக்கப்பெற்ற ஏவுதளம் SLV3 மூலமாக முதல் செயற்கைக் கோள் ‘ரோகினி’ ஏவப்பட்டது. இந்நிறுவனத்தின் சாதனையாக 2008 ஆம் ஆண்டில் நிலவை நோக்கிய இந்தியாவின் முதற்பயணமாக “சந்திராயன்-1” ஏவப்பட்டது.

1957 ஆம் ஆண்டு முதலே ரஷ்யா உட்பட பல நாடுகள் செயற்கைக் கோள்களை ஏவியிருக்கின்றன. அவற்றை எல்லாம் இராணுவத்துக்கு மட்டுமே பயன்படுத்தினார்கள். வல்லரசு நாடுகள் அவற்றின் ஆற்றலைக் காண்பிக்கவே, இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தின. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நம்நாட்டு அறிவியலாளர் டாக்டர் விக்ரம் சாராபாய் இந்தத் தொழில்நுட்பம் மக்களுக்கு எவ்வாறு பயன்படும் என்றே சிந்தித்தார்.

இந்திய ஏவுகணை நாயகன் அப்துல் கலாம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் செயற்கைக்கோள் திட்ட இயக்குநர், வளர்மதி, மங்கள்யான் செயற்கைக்கோள் திட்ட இயக்குநர் அருணன் சுப்பையா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தற்போதைய தலைவர் …………………
அ) மாதவன் நாயர்
ஆ) மயில்சாமி அண்ணாதுரை
இ) சிவன்
ஈ) வளர்மதி
Answer:
இ) சிவன்

Question 2.
‘ஆர்யபட்டா’ என்ற இந்திய முதல் செயற்கைக்கோளை ஏவுவதற்கு காரணமானவர் ………………..
அ) விக்ரம் சாராபாய்
ஆ) விஸ்வேஸ்வரய்யா
இ) கிரண்குமார்
ஈ) ராதாகிருஷ்ணன்
Answer:
அ) விக்ரம் சாராபாய்

Question 3.
திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் ஆய்வு மையம்……………….
அ) பாபா அணு ஆராய்ச்சி மையம்
ஆ) இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம்
இ) சதீஷ் தவன் விண்வெளி ஏவுதள மையம்
ஈ) விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்
Answer:
ஈ) விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்

Question 4.
இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவர் யார்?
அ) கே.ஆர். நாராயணன்
ஆ) திருமதி. பிரதீபா பாட்டில்
இ) ஆர். வெங்கட்ராமன்
ஈ) ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்
Answer:
ஈ) ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்

Question 5.
‘மங்கள்யான்’ திட்ட இயக்குநர் ……
அ) சிவன்
ஆ) இராதாகிருஷ்ணன்
இ) அருணன் சுப்பையா
ஈ) வளர்மதி
Answer:
இ) அருணன் சுப்பையா

Question 6.
இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
Answer:
விக்ரம் சாராபாய்

Question 7.
இந்திய ஏவுகணை நாயகன் என்று போற்றப்படுபவர் யார்?
Answer:
ஏ.பி.ஜே. அப்துல்கலாம்

Question 8.
2015-ல் தமிழக அரசின் அப்துல்கலாம் விருதைப் பெற்ற முதல் அறிவியல் அறிஞர் யார்?
Answer:
வளர்மதி

Question 9.
சர்.சி.வி. இராமன் நினைவு அறிவியல் விருதைப் பெற்றவர் யார்?
Answer:
மயில்சாமி அண்ணாதுரை

Question 10.
சந்திராயன் -1 நிலவின் புறவெளியை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டது. (சரியா,தவறா)
Answer:
சரி

Question 11.
இஸ்ரோவின் ஒன்பதாவது தலைவராகப் பதவியேற்றவர் யார்?
Answer:
சிவன்

Question 12.
இதுவரை இந்தியாவுக்காக செலுத்தப் பட்டுள்ள செயற்கைக்கோள்கள் எத்தனை?
Answer:
45

Question 13.
கடலில் மீன்கள் அதிகம் உள்ள பகுதியை மீனவர்களுக்கு தெரியப்படுத்தும் செயலி எது?
Answer:
நேவிக்

குறுவினா

Question 1.
ஏவுகணை நாயகன் – அப்துல்கலாம் குறித்துக் கூறுக.
Answer:

  • இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய இந்திய அறிவியலாளர். தமிழ்நாட்டின் இராமேசுவரத்தைச் சேர்ந்தவர்.
  • ஏவுகணை, ஏவுகணை ஏவு ஊர்தித் தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாம் காட்டிய ஈடுபாட்டினால்mஅவர் இந்திய ஏவுகணை நாயகன்’ என்று போற்றப்படுகின்றார்.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்திலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் விண்வெளிப் பொறியாளராகப் பணியாற்றினார்.
  • இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்றவர். இவர் தம் பள்ளிக் கல்வியைத் தமிழ் வழியில் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Question 2.
மயில்சாமி அண்ணாதுரை – குறித்து எழுதுக.
Answer:

‘இளைய கலாம்’ என்று அன்புடன் அழைக்கப்படும் மயில்சாமி அண்ணாதுரை கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம், கோதவாடி என்னும் சிற்றூரில் பிறந்தவர். மேல்நிலை வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் தமிழ்வழியில் படித்தவர். இதுவரை 5 முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளார்.

1982ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியில் சேர்ந்த இவர் தற்போது இயக்குநராகப் பணிபுரிகிறார்.

நம் நாடு நிலவுக்கு முதன் முதலில் அனுப்பிய ஆய்வுக்கலம் சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர். சந்திரயான்-2 திட்டத்திலும் பணியாற்றி வருகிறார்.

சர்.சி.வி.இராமன் நினைவு அறிவியல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். தமது அறிவியல் அனுபவங்களை, கையருகே நிலா என்னும் நூலாக எழுதியுள்ளார்.

Question 3.
‘அருணன் சுப்பையா’ குறித்துக் கூறுக.
Answer:

  • இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் அறிவியலாளரும், திட்ட இயக்குநரும் ஆவார்.
  • திருநெல்வேலி மாவட்டத்தின் ஏர்வாடி அருகில் உள்ள கோதைசேரி என்னும் ஊரைச் சேர்ந்த வர்.
  • இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்று, 1984இல் திருவனந்தபுரத்திலுள்ள விக்ரம் சாராபாய் விண்வெளிமையத்தில் பணியில் சேர்ந்து, தற்போது பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரிகிறார்.
  • 2013இல் மங்கள்யான் செயற்கைக்கோளை உருவாக்கிய இந்தியாவின் செவ்வாய் சுற்றுகலன் திட்டத்தின் திட்ட இயக்குநராக இருக்கின்றார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.3 உயிர்வகை

Students can Download 9th Tamil Chapter 4.3 உயிர்வகை Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 4.3 உயிர்வகை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.3 உயிர்வகை

Question 1.
அ) தட்டான் பூச்சி தாழப்பறந்தால் தப்பாமல் மழை வரும்.
ஆ) வானில் பறக்குது குதிரை
பறக்கப் பறக்க வால் குறையும் குதிரை – அது என்ன?
Answer:
விமானம்

இவை போன்ற அறிவியல் செய்திகள் கொண்ட பழமொழிகள், விடுகதைகளைப் படித்தும் கேட்டும், அவற்றின் அறிவியல் அடிப்படையை வகுப்பறையில் கலந்துரையாடுக.

அறிவியல் சார்ந்த பழமொழிகள் விடுகதைகள்

விடுகதைகள்

1. செல்லும் இடமெல்லாம் நானும் வருவேன், கையிலும் வைக்கலாம், பையிலும் வைக்கலாம், நானின்றி இன்று மனித உயிர்கள் இல்லை. நான் யார்?
Answer:
அலைபேசி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.3 உயிர்வகை

2. காற்றுப் புக முடியாத இடத்திலும் நான் புகுவேன். எங்கெங்கு சென்றாலும் அங்குள்ள தன்மையை செய்தியாகப் புகைப்படமாக அனுப்புவேன். ஆராய உகந்தவன். நான் யார்?
Answer:
செயற்கைக்கோள்

பழமொழிகள்

1. அறிவை மேம்படுத்துவது அறிவியல்.
2. அறிவியல் இல்லாத ஆன்மீகம் முடமாகும்.
3. ஆறாவது அறிவே அறிவியல்.
4. அறிவியல் அறிவை மேம்படுத்தும்; அறிவு வாழ்வை மேம்படுத்தும்.
5. இன்றைய அறிவியலே நாளைய தொழில்நுட்ப வளர்ச்சி.

Question 2.
‘விமான நிலையத்தில் நான்’ – கற்பனையாகக் கதை ஒன்றினை எழுதுக.
Answer:

விமான நிலையத்தில் நான்
(கற்பனைக் கதை)

அன்று காலையில் இருந்தே எனக்குள் ஒரே பரபரப்பு… இனம் புரியாத குதூகலம் என மனதுக்குள் கொஞ்சம் மகிழ்ச்சி பதற்றம் என ஒரு மாதிரியான உணர்வுகள் வந்து போய்க் கொண்டிருந்தன.
ஏன் தெரியுமா. நான் முதன் முதலில் விமான நிலையம் சென்று விமானத்தில் ஏறி சுற்றுலா செல்லப் போகிறேன் குடும்பத்தில் எல்லோரும் என்னைப் போன்றே இருந்தனர்.

என் தந்தை, என் பெரிய சகோதரர் எல்லாரும் முன்பே விமானத்தில் பயணம் செய்து இருக்கிறார்கள். நான் மட்டும் தான் முதன்முதலில் விமானத்திலும் பயணம் செய்ய போகப் போகிறேன் விமான நிலையத்துக்குள்ளும் செல்லப் போகிறேன்.

புறப்படும் வேளை வந்தது …… ஆர்வத்துடன் அவரவர் பயணச் சுமைகளுடன் வாகனத்தில் ஏறினோம். வாகனம் விரைந்து சென்றது விமான நிலையம் நோக்கி……

குறிப்பிட்ட எல்லை வரைதான் வாகனத்தை அனுமதித்தார்கள் உள்ளே மெதுவாக படபடப்புடன் நுழைந்தேன்…..

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.3 உயிர்வகை

ஒலி பெருக்கியில் அறிவிப்பு ஒரு புறம். மின் எழுத்துகளில் அறிவிப்பு பலகைகள் ஒரு புறமாய் ஆரவாரமாய் இருந்தது.

நுழைவுவாயிலைக் கடந்தேன்… சோதனையிடுவதற்கு அழைத்தார்கள் அனுமதிக்கப்படாத பொருள்கள் நாம் வைத்திருந்தால் அவற்றை அப்புறப்படுத்தி விடுகிறார்கள்.

எங்கள் விமானம் வருவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்பே சென்று விட்டோம். ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு நிகழ்வும் என்னை மிகவும் ஆச்சரியப் படுத்துவதாய் இருந்தது.

திடீரென்று விமானநிலையத்தில் பரபரப்பு …… செய்தியாளர்கள் தடதடவென ஓடி வந்தனர். என்னவென்று விசாரித்தால் தற்பொழுது வந்து தரை இறங்கிய விமானத்தில் இருந்து பிரபல தமிழ் கவிஞர் ஒருவரும், அரசியல் தலைவர் ஒருவரும் வருகிறார்களாம்…. அவர்களுள் அரசியல் தலைவரை நேர் காணல் செய்வதற்காக செய்தியாளர்கள் ஓடிவந்தனர்…. அதனையும் கண்டு களித்தேன்……

நாங்கள் பயணம் செய்ய வேண்டிய விமானம் வருவதற்கான அறிவிப்பு வந்தது, ஓடு தளத்தில் நின்ற விமானத்தில் ஏறுவதற்கான ஆயத்தப் பணிகளாக முதலில் எங்கள் கூடுதல் சுமைகளை எடுத்தனர்.
பின்னர் வாகனத்தில் எங்களை ஏறச்செய்து, பிரம்மாண்டமான ஓடுதளத்தில் கம்பீரமாக நின்ற விமானத்தின் அருகில் கொண்டு நிறுத்தினார்கள்.

வாகனத்தில் இருந்து இறங்கி விமானத்தில் விமானப்பணிப் பெண்ணின் இனிய வரவேற்போடு விமானத்துக்குள் ஏறி அவரவர் இருக்கையில் அமர்ந்து…. மிகுந்த மகிழ்ச்சியுடன் பயணம் செய்தோம்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.3 உயிர்வகை

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடு நாவே இவ்வடிகளில் அதனோடு என்பது எதைக் குறிக்கிறது?
அ) நுகர்தல்
ஆ) தொடு உணர்வு
இ) கேட்டல்
ஈ) காணல்
Answer:
ஆ) தொடு உணர்வு

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.3 உயிர்வகை

குறுவினா

Question 1.
மூன்றறிவதுவே அவற்றோடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே – இவ்வடிகளில் தொல்காப்பியர் குறிப்பிடும், மூவறிவு, நான்கறிவு, ஐந்தறிவு உயிர்கள் யாவை?
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.3 உயிர்வகை - 1
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.3 உயிர்வகை - 2

சிறுவினா

Question 1.
அறிவையும் உயிரினங்களையும் தொல்காப்பியர் எவ்வாறு தொடர்பு படுத்துகிறார்?
Asnwer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.3 உயிர்வகை - 3

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
அ) ஈரறிவு உயிர் – சிப்பி, நத்தை
ஆ) நான்கறிவு உயிர் – நண்டு, தும்பி
இ) ஐந்தறிவு உயிர் – புல், மரம்
ஈ) மூவறிவு உயிர் – கரையான், எறும்பு
Answer:
இ) ஐந்தறிவு உயிர் – புல், மரம்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.3 உயிர்வகை

Question 2.
பொருந்தாதனைத் தேர்ந்தெடு.
அ) சுவைத்தல்
ஆ) உறங்குதல்
இ) நுகர்தல்
ஈ) கேட்டல்
Asnwer:
ஆ) உறங்குதல்

Question 3.
சரியானதைத் தேர்ந்தெடு.
i) தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் நூல் தொல்காப்பியம்.
ii) தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்கள் உண்டு.
iii) தொல்காப்பியத்தில் அகம், புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகள் விளக்கப்பட்டுள்ளன.
iv) கடைச்சங்கக் காலத்தில் இயற்றப்பட்டது தொல்காப்பியம்.
அ) i, ii, iii, iv – நான்கும் சரி.
ஆ) i, ii, iii-சரி, iv-தவறு.
இ) i, ii – சரி, iii, iv – தவறு.
ஈ) i, ii-தவறு iii, iv-சரி.
Answer:
ஆ) i, ii, iii-சரி, iv-தவறு.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.3 உயிர்வகை

Question 4.
தொல்காப்பியத்தில் உள்ள இயல்கள் …………
அ) 30
ஆ) 33
இ) 24
ஈ) 27
Answer:
ஈ) 27

Question 5.
ஆறறிவு உடைய உயிரினம் …………..
அ) நத்தை
ஆ) மனிதன்
இ) விலங்கு
ஈ) தும்பி
Answer:
ஆ) மனிதன்

Question 6.
தமிழ்மொழியில் கிடைத்த முதல் இலக்கண நூல் எது?
Answer:
தொல்காப்பியம்

Question 7.
தொல்காப்பியத்தின் அதிகாரங்கள் யாவை?
Answer:
எழுத்து, சொல், பொருள்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.3 உயிர்வகை

Question 8.
தொல்காப்பியத்தின் மொத்த இயல்கள் யாவை?
Answer:
27

Question 9.
எழுத்துகள் பிறக்கும் இடங்களை உடற் கூற்றியல் அடிப்படையில் விளக்கும் நூல் எது?
Answer:
தொல்காப்பியம்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.3 உயிர்வகை

Question 10.
ஈரறிவு உயிர்களுக்குச் சான்று.
Answer:
சிப்பி, நத்தை

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.2 ஓ, என் சமகாலத் தோழர்களே

Students can Download 9th Tamil Chapter 4.2 ஓ, என் சமகாலத் தோழர்களே Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 4.2 ஓ, என் சமகாலத் தோழர்களே

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.2 ஓ, என் சமகாலத் தோழர்களே

Question 1.
அறிவியல் செய்திகளை வெளிப்படுத்தும் கவிதைகளைத் தொகுத்து வகுப்பறையில் படித்துக் காட்டுக.
Answer:
அ) நீர்நின் றிளகிற் றிதுவேண்டா
– சீவகசிந்தாமணி (காந்தருவதத்தை இலம்பகம்)

அறிவியல் செய்தி:
மரத்தில் செய்யப்படும் வீணையே இன்னிசை எழுப்ப ஏற்றது. மரத்தின் ஈரத்தன்மைக்கு ஏற்ப அதில் மோதும் ஒலி அலைகளின் அதிர்வெண்ணும் வேறுபடும். சீவகன், தத்தை கொடுத்த யாழினை ஆராயும் போது, நீரில் இருந்து ஊறிய மரத்தால் செய்யப்பட்ட யாழில், அதிர்வெண் வேறுபட்டு சமச்சீரற்று காணப்படும் என்பதால் “நீர்நின் றிளகிற் றிதுவேண்டா” என்றான்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.2 ஓ, என் சமகாலத் தோழர்களே

ஆ) “அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி” – ஔவையார்
“ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்” – கம்பர்
அறிவியல் செய்தி:
அணுவைப் பிளக்கவும், சேர்க்கவும் முடியும் என்ற இன்றைய அறிவியலை நம் கவிஞர்கள் அன்றே தம் கவிதைகளில் கூறியுள்ளனர். அணுசேர்ப்பும், அணுப்பிரிப்பும் பற்றிய கருத்துகள் அன்றே அரும்பியுள்ளன.

இ) “அகல்வயல் பொழிந்தும்…….
உறுமிடத் துதவா உவர்நிலம்…….” – புறநானூறு பரணர்
“பயவாக் களரணையர் கல்லாதவர்” – திருவள்ளுவர்
அறிவியல் செய்தி:
எவ்வளவு மழை பொழிந்தாலும் “களர்நிலம்” என அழைக்கப்படும் உவர்நிலம் எதற்கும் உதவாது என்ற மண்ணியல் அறிவியலைக் கூறுகிறது.
இவ்வாறு நம் தமிழ்ப் புலவர்கள் இயற்றிய கவிதைகள் பல, நமக்கு அறிவியல் செய்திகளைக் கூறுவதாக உள்ளன என்பதை மறுக்க இயலாது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.2 ஓ, என் சமகாலத் தோழர்களே

Question 2.
விமானமும் ஏவுகணையும் பேசிக்கொள்வது போல ஓர் உரையாடலைக் குழுவாகச் சேர்ந்து உருவாக்குக.
Answer:
விமானமும் – ஏவுகணையும் பேசுவதுபோல உரையாடல்
விமானம் : வணக்கம்! ஏவுகணை அவர்களே!
ஏவுகணை : வணக்கம்! வணக்கம்!
விமானம் : ஐயா உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி
ஏவுகணை : எனக்கும் மகிழ்ச்சி
விமானம் : என் பெயர் விமானம். நான், மக்களை நாடுவிட்டு நாடு செல்ல உதவும் பொருட்டு
வானில் பறப்பேன். அதனால் என்னை வானூர்தி என்றும் அழைப்பர்.
ஏவுகணை : அப்படியா! நான் அதற்கும் மேலே பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் மேலே சென்று செயற்கைகோள்களை அதனதன் பாதையில் நிறுத்துவேன்.
விமானம் : அப்படியா கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதே. என்னை இயக்க விமானி துணை விமானி எல்லாம் இருப்பார்கள். உங்களை இயக்க……
ஏவுகணை : ஆளெல்லாம் இருக்கமாட்டார்கள். ஏவு ஊர்தியில் என்னை நிறுத்தி, இரண்டு மூன்று நாள்களுக்கு முன்னதாகவே எண்நிலை (count down) தொடங்கி கண்காணித்து, குறிப்பிட்ட நேரம் வந்தவுடனே என்னை மிக வேகமாக ஏவி விடுவார்கள். நானே குறிப்பிட்ட இடத்திற்கு சென்று விடுவேன்.
விமானம் : என்னை பூமியில் இருந்து கண்காணிப்பது போல் உங்களையும் கண்காணிப்பார்களா!
ஏவுகணை : ஆம்! என்னையும் கண்காணித்துக் கொண்டேதான் இருப்பார்கள்.
விமானம் : நன்றி!!
ஏவுகணை : நன்றி!!

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.2 ஓ, என் சமகாலத் தோழர்களே

Question 3.
பாடலில் அமைந்துள்ள தொடைநயங்களை எழுதுக:
கிளிக்கு றெக்கை இருக்கும் வரைக்கும்
கிழக்கு வானம் தூரமில்லை
முளைக்கும் விதைகள் முளைக்கத் துடித்தால்
பூமி ஒன்றும் பாரமில்லை .
Answer:
தொடைநயங்கள் :

  1. கிளிக்கு, கிழக்கு – முதல் எழுத்து ஒன்றிவந்து “ மோனை நயம்” உள்ளது.
  2. முளைக்கும் – முளைக்கத்
    இதில், முதல் எழுத்து ஒன்றிவந்து “சீர் மோனை” நயமும்
    இரண்டாம் எழுத்து ஒன்றி வந்து “சீர் எதுகை” நயமும் இடம் பெற்றுள்ளது.
  3. தூரமில்லை – பாரமில்லை
    இதில் “மில்லை” என்னும் இறுதி சீர் ஒன்றி வந்து “இயைபுத் தொடை” நயம் அமைந்துள்ளது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.2 ஓ, என் சமகாலத் தோழர்களே

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பின்வரும் தொடர்களைப் படித்து ‘நான் யார் என்று கண்டுபிடிக்க.
அறிவியல் வாகனத்தில் நிறுத்தப்படுவேன்.
எல்லாக் கோளிலும் ஏற்றப்படுவேன்.
இளையவர் கூட்டம் என்னை ஏந்தி நடப்பர்.
அ) இணையம்
ஆ) தமிழ்
இ) கணிணி
ஈ) ஏவுகணை
Answer:
ஆ) தமிழ்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.2 ஓ, என் சமகாலத் தோழர்களே

குறுவினா

Question 1.
கூட்டுப் புழுவை எடுத்துக்காட்டிக் கவிஞர் உணர்த்தும் கருத்துக்களை எழுதுக.
Answer:
பொறுமை, அடக்கம் என்னும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும். கூட்டுப்புழுவாக இருந்து தான் பின்னாளில் பட்டுப்பூச்சியாய்க் கோலம் கொள்ளும் எனக் கவிஞர் குறிப்பிடுகிறார்.

சிறுவினா

Question 1.
‘என் சமகாலத் தோழர்களே“ கவிதையில் கவிஞர் விடுக்கும் வேண்டுகோள் யாது?
Answer:
அறிவியல் என்னும் வாகனத்தின் மீது நம்மை ஆளும் தமிழ்மொழியை நிறுத்துங்கள். பழங்கால மன்னர்களுள் ஒருவன் கரிகாலன். அவனது பெருமைகளையும் சிறப்புகளையும் கணிப்பொறிக்குள்ளே பதிவு செய்து வையுங்கள்.

அடுத்தவர் ஏவுகின்ற திசையில் நோக்கமில்லாமல் செல்லும் அம்பைப்போல் இருந்த மக்கள் இனத்தை மாற்றுங்கள். ஏவுகணை செலுத்துவதிலும் தமிழை எழுதி எல்லாக் கோளிகளிலும் ஏற்றிச் செலுத்துங்கள் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுக்கிறார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.2 ஓ, என் சமகாலத் தோழர்களே

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பட்டுப் பூச்சியாய் உருப்பெறுவது
அ) தேனீ
ஆ) வண்டு
இ) கூட்டுப்புழு
ஈ) ஈசல்
விடை:
இ) கூட்டுப்புழு

Question 2.
அறிவை மறந்ததாக …… இருக்கக் கூடாது.
அ) உணர்ச்சி
ஆ) வேகம்
இ) செயல்
ஈ) பண்பாடு
விடை:
அ) உணர்ச்சி

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.2 ஓ, என் சமகாலத் தோழர்களே

Question 3.
கழனிகள் சுமக்க வேண்டியது ……
அ) கதிர்கள்
ஆ) வெம்பிய பழங்கள்
இ) வறண்ட தாவரம்
ஈ) அழுகிய பொருள்கள்
விடை:
அ) கதிர்கள்

Question 4.
காட்டும் பொறுமை அடக்கம் என்னும் கட்டுப்பாட்டைக் கடவாதீர் – இவ்வடியில் “பொறுமை அடக்கம்” என்பதன் இலக்கணக் குறிப்பு தருக.
விடை:
உம்மைத் தொகை

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.2 ஓ, என் சமகாலத் தோழர்களே

Question 5.
2003-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற வைரமுத்துவின் நூல் எது?
விடை :
கள்ளிக்காட்டு இதிகாசம்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.1 இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும்

Students can Download 9th Tamil Chapter 4.1 இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 4.1 இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 4.1 இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும்

Question 1.
வங்கியில் இணையவழிச் சேமிப்புக் கணக்குத் தொடங்கும் நடைமுறையை எழுதுக:
Answer:
நாம் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தால் வங்கிக்கு நேரில் சென்று தான் நம்முடைய பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இயலும். இணையவழி சேமிப்புக் கணக்கு இருந்தால் மற்ற பணிகளைச் செய்து கொண்டிருக்கும் போதே வங்கிப் பணிகளையும் செய்து கொள்ளலாம். இணையவழி சேமிப்புக் கணக்கு:

முதலில் நாம் எந்த வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கிறோமோ? அந்த வங்கிக்குரிய செயலியை (APP) முதலில் நம் கணினியிலோ அல்லது அலைபேசியிலோ பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும், பின்னர் மின் அஞ்சல் முகவரி (E-Mail ID) ஒன்றும், கடவு வார்த்தை (Password) ஒன்றும் உருவாக்குதல் வேண்டும்.

பெயர்
வங்கிக் கணக்கு எண் :
வங்கிக் கிளை :
வங்கி குறியீட்டு எண் :

என மேற்கூறிய அனைத்தையும் குறிப்பிட்டு, இணையவழி (Net Banking) மூலம் வங்கி சேமிப்புக் கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம்.

Question 2.
உங்கள் குடும்பத்தினருடன் வெளியூர் சென்ற தொடர்வண்டிப் பயணத்திற்கு இணையத்தில்
எவ்வாறு முன்பதிவு செய்தீர்கள்? அதன் வழிமுறைகளை அனுபவத்தில் (அ) கேட்டறிந்து வகுப்பறையில் வழங்குக.
Answer:
நாங்கள் கடந்தவாரத்தில் கோவையில் இருந்து சென்னைக்கு நீலகிரி விரைவு தொடர்வண்டியில் (வண்டி எண் 12672) இரவு 20.30 மணிக்கு முன்பதிவு செய்தோம். இரண்டாம் வகுப்பு (S – 6, 45, 46, 47, 48) தூங்கும் வசதி உள்ள பெட்டியில் இரண்டு நடுப்படுக்கை, இரண்டு கீழ்படுக்கை முன்பதிவு செய்து தானியக்கப் பண இயந்திர அட்டை மூலம் பணம் செலுத்தி கைபேசியில் வந்த குறுஞ்செய்தியை பயணச்சீட்டு பரிசோதகரிடம் காண்பித்து சுகமான பயணம் மேற்கொண்டோம்.

இணையத்தில் தொடர்வண்டிப் பயணத்திற்கு முன்பதிவு செய்தல்:

  • மாணவர்களே! நாம் பயணம் செய்ய திட்டமிடும் பொழுதே, பயணத்திற்கான சீட்டை இணையவழியில் பதிவு செய்து கொள்ளலாம்.
  • இன்றைய காலக்கட்டத்தில் இணையதளத்தில் பயணச் சீட்டை பதிவு செய்வது மிகவும் எளிது. நம் நேரமும், பெருமளவு மிச்சமாகும்.
  • பயணம் மேற்கொள்ள வேண்டிய ஊருக்கு உங்கள் ஊரில் இருந்து செல்லும் தொடர் வண்டிகளை அறிந்து கொண்டு, அவற்றின் நேரங்களையும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
  • பயணம் செய்ய விரும்பும் நாளில் எந்த தொடர்வண்டியில், எந்த பெட்டியில் இருக்கை வசதி மற்றும் படுக்கை வசதியுடன் இருக்கும் காலியிடங்களை அறிந்து கொள்ள வேண்டும். அவற்றை அறிய முனையும் போதே பயணச் சீட்டுக்கான தொகையும் அறிந்து கொள்ளலாம்.
  • பின்னர் வங்கி அட்டைகளின் உதவியுடன், பயணச் சீட்டிற்கான தொகையைச் செலுத்தி முன்பதிவு செய்து கொண்டோம் எனில், சற்று நேரத்தில் நமது அலைபேசிக்கு குறுஞ்செய்தியும், அச்செய்தியில் நமக்கான இருக்கை எண், புறப்படும் நேரம் போன்றவை வந்துவிடும்.
  • மின் அஞ்சலில் பயணச்சீட்டும் வந்துவிடுகிறது. நாம் பயணம் செய்யும் பொழுது, குறுஞ்செய்தியையும், நம்முடைய அடையாள அட்டை ஏதேனும் ஒன்றைக் காட்டி சுகமான பயணத்தை மேற்கொள்ளலாம்.
  • களைப்பின்றி பயணம் செய்ய இணையவழி பதிவு முறையே சிறந்ததாகும்.

Question 3.
விரலியில் (Pendrive) உள்ள பாடல்களையும், எழுத்துக் கோப்புகளையும் (Document) கணினியில் நுழைந்து உறைகளில் (Folder) இட்டுச் சேமிப்பதைச் செய்து பார்த்துத் தெரிந்து கொள்க.
Answer:
‘விரலி’ என்ற வார்த்தை Pendrive என்ற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கம் ஆகும்.
விரலியில் உள்ள பாடல்கள் எழுத்துக் கோப்புகளை கணினியில் சேமிக்கும் முறை:

  • முதலில் விரலியை அதன் பகுதியில் நுழைத்தல் வேண்டும்.
  • கணினித் திரையில் குறியீடு ஒன்று தோன்றும்.
  • அந்தக் குறியீட்டை இயக்கும் போது, விரலியில் உள்ள செய்திகளை எந்தப் பகுதியில் சேமிக்க வேண்டும், தனி உறை வேண்டுமா என்று திரையில் தோன்றும்.
  • கோப்புகள் உள்ள பகுதியில் சேமிக்க வேண்டுமென்றாலும் குறிப்பிட்ட கோப்புப் பகுதியை இயக்கி அதனுடன் சேமித்துக கொள்ளலாம்.
  • தனியாக ஒரு உறையை உருவாக்கியும் சேமித்துக் கொள்ளலாம்.
  • திரையின் முகப்புப் பகுதியில் உறையை உருவாக்கி வைத்துக் கொண்டோம் என்றால் விரலி மூலம் நாம் சேமித்த செய்திகள் பாடல்கள், எழுத்துக் கோப்புகளை உடனடியாக இயக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • இதுவே விரலியில் உள்ளனவற்றை கணினியில் சேமிக்கும் முறையாகும்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
கீழ்க்காணும் மூன்று தொடர்களுள்
அ) இருந்த இடத்திலிருந்தே பயணச்சீட்டு எடுப்பதை எளிதாக்கிய மிகப் பெரிய இந்திய நிறுவனம் இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் ஆகும்.
ஆ) வங்கி அட்டை இல்லை என்றால் அலைபேசி எண், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றைக் கொண்டு பணம் செலுத்துதல் இயலாது.
இ) திறன் அட்டைகள் என்பவை குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக வழங்கப்பட்டவைகும்.
i) அ, ஆ ஆகியன சரி; இ தவறு
ii) அ, இ ஆகியன சரி; ஆ தவறு
iii) அதவறு; ஆ, இ ஆகியன சரி
iv) மூன்றும் சரி
Asnwer:
ii) அ, இ ஆகியன சரி; ஆ தவறு

Question 2.
தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?
அ) தேசியத் திறனாய்வுத் தேர்வு
ஆ) ஊரகத் திறனாய்வுத் தேர்வு
இ) தேசியத் திறனாய்வுத் தேர்வ
ஈ) மூன்றும் சரி
Asnwer:
ஆ) ஊரகத் திறனாய்வுத் தேர்வு

குறுவினா

Question 1.
இணைய வழியில் இயங்கும் மின்னணு இயந்திரங்கள் எவையேனும் ஐந்தினைக் குறிப்பிடுக.
Answer:
இணையவழியில் இயங்கும் மின்னணு இயந்திரங்கள்

  1. தொலைநகல் இயந்திரம் (Fax)
  2. தானியக்கப் பண இயந்திரம் (Automated Teller Machine)
  3. அட்டை பயன்படுத்துதல் இயந்திரம் (Swiping Machione)
  4. தமிழக அரசின் நியாய விலைக் கடை திறனட்டைக் கருவி (TNePDS)
  5. இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழக இணைய வழி பதிவு (Indian Railway Catering and Tourism Corporation)

சிறுவினா

Question 1.
பள்ளி மாணவர்களுக்கான தமிழக அரசின் இணையவழிச் சேவைகளை எழுதுக.
Answer:

  • தமிழக அரசு ஆண்டு தோறும் பல கல்வி உதவி தொகை தேர்வுகளை நடத்துகின்றன.
  • 8ம் வகுப்பு மாணவர்களுக்கு – தேசியத்திறனாய்வு மற்றும் கல்வி உதவித் தொகைத் தேர்வு (NMMS)
  • 9ம் வகுப்பு கிராம பள்ளி மாணவர்களுக்கு – ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST)
  • 10ம் வகுப்பு மாணவர்களுக்கு – தேசியத்திறனாய்வு தேர்வு (NTSE) நடத்தப்படுகின்றது. அவற்றில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே இணையத்தின் சேவையைப் பெறலாம் ஹ
  • 10 மற்றும் 12 ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு, அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செய்யப்பட வேண்டிய பதிவு, ஆண்டுதோறும் அவர்கள் படித்த பள்ளிகளிலேயே இணையத்தின் வழியாகச் செய்யப்பட்டு வருகிறது.
    அரசின் விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி ஆகியவற்றைப் பெற
  • மாணவர்களின் விவரங்கள் இணையத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

நெடுவினா

Question 1.
அன்றாட வாழ்வில் நீங்கள் பயன்படுத்தும் இரண்டு இணையவழிச் சேவைகள் பற்றி விரிவாகத் தொகுத்து எழுதுக.
Answer:
தற்காலத்தில் பேருந்து முன்பதிவு, விமான முன்பதிவு தங்கும் விடுதிகள் முன்பதிவு ஆகியவற்றை இணையம் மூலமாக மேற்கொள்ளப் பலமுகமைகள் உள்ளன. இது பலருக்கு வேலைவாய்ப்பையும் தருகிறது. பெரு நகரங்களில் திரைப்படங்களுக்கு இருக்கைகள் முன்பதிவு செய்வதுகூட இணையம் மூலம் நடைபெறுகின்றது. அரசுக்குச் செலுத்த வேண்டிய சொத்துவரி, தண்ணீர் வரி, ஆகியன இணைய வழியில் செலுத்தப்படுகின்றன. இச்சேவைகளில் ஒன்று பயணச்சீட்டு வழங்குவதையும் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்வதையும் பயனுள்ள வகையில் செய்து வருகிறது. இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக்கழகம். மற்றொன்று தானியக்கப் பண இயந்திரம்.

இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழக இணைய வழிப் பதிவு (IRCTC – INDIAN RAILWAY CATERING AND TOURISM CORPORATION) :
மக்கள் தொகை மிகுந்த இந்தியா போன்ற நாடுகளில் வரிசையில் நிற்பது நேரவிரயம். இதனைக் குறைப்பதுடன் இருந்த இடத்திலிருந்தே பயணச் சீட்டு எடுப்பதை எளிதாக்கிய மிகப்பெரிய அமைப்பு இந்நிறுவனம் ஆகும். பயணம் செய்ய வேண்டிய நாளில் ஊர்களுக்குச் செல்லும் தொடர்வண்டிகளையும் அவற்றின் நேரங்களையும் பயணம் செய்ய விரும்பும் பெட்டி வகைகளையும் அதற்குரிய தொகையையும் காண்பிக்கிறது. வங்கி அட்டைகளின் உதவியுடன் தெகையைச் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். மின்னஞ்சலில் பயணச்சீட்டு வந்து விடுகிறது. நமது அலைபேசிக்குக் குறுஞ்செய்தியும் வந்து விடுகிறது. 2002 ஆம் ஆண்டு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது ஒரு நிமிடத்திற்கு 1500 பயணச் சீட்டுகள் பதிவு செய்யவும் ஒரே நேரத்தில் மூன்று இலட்சம் பயனர்கள் இணைய வழிச் சேவையைப் பயன்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தானியக்கப் பண இயந்திரம் (Automated Teller Machine) :
இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியாளரான ஜான் ஷெப்பர்டு பாரன் (John Sheperd Barron) என்பவர் தலைமையிலான குழுவொன்று பார்க்லேஸ் வங்கிக்காக இலண்டனில் 1967 ஜுன் 27 இல் தானியக்கப் பண இயந்திரத்தை நிறுவியது.

வங்கியில் வழங்கப்பட்ட காசோலையைக் கொண்டு தான் அப்போது பணம் எடுக்கப்பட்டது. அந்தக் காசோலையில் உள்ள குறியீடுகளை இயந்திரம் படித்துப் புரிந்து கொண்டு பணத்தைத் தள்ளும். அதற்குப்பின் வாடிக்கையாளரின் ஆறிலக்கக் கடவுச்சொல் (Password) தருமாறு மேம்படுத்தப்பட்டது. வங்கிகளின் அட்டைகளில் தனிப்பட்ட அடையாள எண்ணை உருவாக்கித் தானியக்கப் பண இயந்திரத்தில் பயன்படுத்தத் தொடங்கினர்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
முதன்முதலில் ஒளிப்படியை எடுத்தவர் …………………
அ) அலெக்சாண்டர் பெயின்
ஆ) கிரகாம்பெல்
இ) செஸ்டர் கார்ல்சன்
ஈ) சாமுவேல் மோர்சு
Answer:
இ) செஸ்டர் கார்ல்சன்

Question 2.
கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்தவர் …………
அ) ஹாங்க் மாக்னஸ்கி
ஆ) ஈஸ்ட்ம ன்
இ) தாமஸ் ஆல்வா எடிசன்
ஈ) சென்கின்சு
Answer:
அ) ஹாங்க் மாக்னஸ்கி

Question 3.
தானியக்கப் பண இயந்திரத்தை நிறுவியவர் ……..
அ) செஸ்டர் கார்ல்சன்
ஆ) ஸ்டீபன் ஹாக்கின்ஸ்
இ) ஸ்டீவ் ஜாப்ஸ்
ஈ) ஜான் ஷெப்பர்டு பாரன்
Answer:
ஈ) ஜான் ஷெப்பர்டு பாரன்

Question 4.
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
அ) நியாய விலைக் கடை – திறனட்டைக் கருவி
ஆ) வருகைப் பதிவு – ஆளறி சோதனைக் கருவி
இ) பொருள் வாங்க – கட்டை தேய்ப்பி இயந்திரம்
ஈ) போக்குவரத்து முன்பதிவு – எழுதுபொருள்கள்
Answer:
ஈ) போக்குவரத்து முன்பதிவு – எழுதுபொருள்கள்

Question 5.
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
அ) டிம் பெர்னெர்ஸ் லீ – வையக விரிவு வலை
ஆ) ஆட்ரியன் ஆஷ்ஃபீல்டு – கடவுச்சொல் அட்டை
இ) மைக்கேல் ஆல்ட்ரிச் – இணைய வணிகம்
ஈ) ஜியோவான்னி காசில்லி – சீரோகிராபி
Answer:
ஈ) ஜியோவான்னி காசில்லி – சீரோகிராபி

Question 6.
தொலைநகல் சேவை முதன்முதலில் எந்த இரு நகரங்களுக்கு இடையில் அறிமுகமானது?
அ) பெர்லின் – ஆம்ஸ்டர்டாம்
ஆ) ஸ்டாக்ஹோம் – வியன்னா
இ) பாரிஸ் – லியான்
ஈ) இலண்டன் – பாரிஸ்
Answer:
இ) பாரிஸ் – லியான்

நிரப்புக

Question 1.
குறுஞ்செய்தியின் வருகைக்குப் பின் தந்தி விடைபெற்றுக்கொண்டது. (சரியா, தவறா)
Answer:
சரி

Question 2.
தானியக்கப் பண இயந்திரத்தை முதன்முதலில் நிறுவிய நாடு எது? எந்த ஆண்டு நிறுவியது?
Answer:
இலண்டன் நகரில் (இங்கிலாந்து) 1967 ஜுன் 27ல்.

Question 3.
இணைய வணிகத்தை கண்டுபிடித்தவர் யார்? எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?
Answer:
மைக்கேல் ஆல்ட்ரிச், 1979.

குறுவினா

Question 1.
ஒளிப்படி இயந்திரம் – குறிப்பு எழுதுக.
Answer:

  • நியூயார்க்கைச் சேர்ந்த செஸ்டர் கார்ல்சன் கந்தகம் தடவிய துத்தநாகத் தட்டைக் கொண்டு 1938-ல் உலகின் முதல் ஒளிப்படியை எடுத்தார்.
  • சீரோகிராஃபி என்னும் உலர் எழுத்து முறை இயந்திரம் இவரால் உலகிற்கு அறிமுகப்படுத்தப் பட்டது.
  • இதுவே ஜெராக்ஸ் என்ற பெயரில் நிலைத்துவிட்டது.

சிறுவினா

Question 1.
தானியக்கப் பண இயந்திரம் – குறிப்புத் தருக.
Answer:
இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியாளரான ஜான் ஷெப்பர்டு பாரன் (John Sheperd Barron) என்பவர் தலைமையிலான குழுவொன்று பார்க்லேஸ் வங்கிக்காக இலண்டனில் 1967 ஜுன் 27 இல் தானியக்கப் பண இயந்திரத்தை நிறுவியது.

வங்கியில் வழங்கப்பட்ட காசோலையைக் கொண்டு தான் அப்போது பணம் எடுக்கப்பட்டது. அந்தக் காசோலையில் உள்ள குறியீடுகளை இயந்திரம் படித்துப் புரிந்து கொண்டு பணத்தைத் தள்ளும். அதற்குப்பின் வாடிக்கையாளரின் ஆறிலக்கக் கடவுச்சொல் (Password) தருமாறு மேம்படுத்தப்பட்டது.

வங்கிகளின் அட்டைகளில் தனிப்பட்ட அடையாள எண்ணை உருவாக்கித் தானியக்கப் பண இயந்திரத்தில் பயன்படுத்தத் தொடங்கினர்.

Question 2.
இந்தியத் தொடர் வண்டி இணைய வழிப் பதிவு – விளக்குக.
Answer:
மக்கள் தொகை மிகுந்த இந்தியா போன்ற நாடுகளில் வரிசையில் நிற்பது நேரவிரயம். இதனைக் குறைப்பதுடன் இருந்த இடத்திலிருந்தே பயணச் சீட்டு எடுப்பதை எளிதாக்கிய மிகப்பெரிய அமைப்பு இந்நிறுவனம் ஆகும்.

பயணம் செய்ய வேண்டிய நாளில் ஊர்களுக்குச் செல்லும் தொடர்வண்டிகளையும் அவற்றின் நேரங்களையும் பயணம் செய்ய விரும்பும் பெட்டி வகைகளையும் அதற்குரிய தொகையையும் காண்பிக்கிறது.

வங்கி அட்டைகளின் உதவியுடன் தொகையைச் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மின்னஞ்சலில் பயணச்சீட்டு வந்து விடுகிறது. நமது அலைபேசிக்குக் குறுஞ்செய்தியும் வந்து விடுகிறது.

2002 ஆம் ஆண்டு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது ஒரு நிமிடத்திற்கு 1500 பயணச் சீட்டுகள் பதிவு செய்யவும் ஒரே நேரத்தில் மூன்று இலட்சம் பயனர்கள் இணைய வழிச் சேவையைப் பயன்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.