Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்துமொழியும் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

Question 1.
உங்கள் வீட்டில் பயன்படுத்தும் பேச்சு வழக்குத் தொடர்களுக்கு இணையான எழுத்து வழக்குத் தொடர்களை எழுதி வருக.
Answer:
(எ.கா.) பேச்சுமொழி – அம்மா பசிக்கிது எனக்குச் சோறு வேணும்.
எழுத்துமொழி – அம்மா பசிக்கின்றது. எனக்குச் சோறு வேண்டும்.

1. பேச்சுமொழி – வூட்டுக்கு போகனும்.
எழுத்துமொழி – வீட்டிற்குப் போக வேண்டும்.

2. பேச்சுமொழி – வவுறு நிறையா சாப்புடு
எழுத்துமொழி – வயிறு நிறைய சாப்பிடு.

3. பேச்சுமொழி – இன்னிக்கு காத்தால வாங்கிட்டு வந்தே
எழுத்துமொழி – இன்றைக்குக் காலையில் வாங்கி வந்தேன்.

4. பேச்சுமொழி – தண்ணி கொண்டா
எழுத்துமொழி – தண்ணீர் கொண்டு வா.

Question 2.
பேசும் போது சிலநேரங்களில் சொற்களின் இறுதியில் உகரம் சேர்ந்து ஒலிப்பது உண்டு. ‘ஆ’ என்னும் எழுத்து இகரமாக மாறுவது உண்டு. அவ்வாறு ஒலிக்கும் சொற்களை எழுதி அவற்றுக்கு இணையான எழுத்த வழக்குச் சொற்களையும் எழுதுக.
Answer:
(எ.கா) சொல்லு – சொல், நில்லு – நில், வந்தியா – வந்தாயா?, சாப்டியா – சாப்பிட்டாயா?
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்துமொழியும் 1

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
மொழியின் முதல்நிலை பேசுதல் …………………. ஆகியனவாகும்.
அ) படித்தல்
ஆ) கேட்டல்
இ) எழுதுதல்
ஈ) வரைதல்
Answer:
ஆ) கேட்டல்

Question 2.
ஒலியின் வரிவடிவம் …………… ஆகும்.
அ) பேச்சு
ஆ) எழுத்து
இ) குரல்
ஈ) பாட்டு
Answer:
ஆ) எழுத்து

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

Question 3.
தமிழின் கிளைமொழிகளில் ஒன்று …………………
அ) உருது
ஆ) இந்தி
இ) தெலுங்கு
ஈ) ஆங்கிலம்
Answer:
இ) தெலுங்கு

Question 4.
பேச்சுமொழியை …………………… என்றும் கூறுவர்
அ) இலக்கிய
ஆ) உலக
இ) நூல்
ஈ) மொழி
Answer:
ஆ) உலக

சரியா தவறா என எழுதுக.

1. மொழி காலத்திற்கேற்ப மாறுகிறது.
2. எழுத்துமொழி காலம் கடந்தும் நிலைத்து நிற்கிறது.
3. பேசுபவரின் கருத்திற்கு ஏற்ப உடனடிச் செயல்பாட்டிற்கு உதவுவது எழுத்துமொழி.
4. எழுத்துமொழியில் உடல்மொழிக்கு வாய்ப்பு அதிகம்.
5. பேச்சுமொழி சிறப்பாக அமையக் குரல் ஏற்றத் தாழ்வு அவசியம்.
Answer:
1. சரி
2. சரி
3. சரி
4. தவறு
5. சரி

ஊடகங்களை வகைப்படுத்துக.

வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், நூல்கள், திரைப்படம், மின்னஞ்சல்
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்துமொழியும் 4

குறு வினா

Question 1.
மொழின் இருவடிவங்கள் யாவை?
Answer:

  1. பேச்சுமொழி
  2. எழுத்துமொழி

Question 2.
பேச்சுமொழி என்றால் என்ன?
Answer:
வாயினால் பேசப்பட்டு பிறரால் உணரப்படுவது பேச்சுமொழி ஆகும்.

Question 3.
வட்டாரமொழி எனப்படுவது யாது?
Answer:
இடத்திற்கு இடம் பேச்சுமொழி மாறுபடும். மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் பேச்சுமொழி மாறுபடும். இவ்வாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை வட்டார மொழி என்பர்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

சிறு வினா

Question 1.
பேச்சுமொழிக்கும் எழுத்துமொழிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளுள் நான்கனை விளக்குக.
Answer:
Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்துமொழியும் 3

Question 2.
கிளைமொழிகள் எவ்வாறு உருவாகின்றன?
Answer:
(i) ஒரே மொழியைப் பேசும் மக்கள் வெவ்வேறு இடங்களில் வாழ்கின்றனர்.

(ii) வாழும் இடத்தின் நில அமைப்பு, இயற்கைத்தடைகள் போன்றவற்றின் காரணமாக அவர்கள் பேசும் மொழியில் சிறிது சிறிதாக மாற்றம் ஏற்படும்.

(iii) அவர்களுக்கு இடையே உள்ள தொடர்பு குறையும் போது இம்மாற்றங்கள் மிகுதியாகிப் புதிய மொழியாகப் பிரியும். அதுவே ‘கிளைமொழி’ என்பர்.

(iv) கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய திராவிட மொழிகள் தமிழிலிருந்து பிரிந்து சென்ற கிளைமொழி ஆகும்.

சிந்தனை வினா

Question 1.
இலக்கியங்கள் காலம் கடந்தும் அழியாமல் வாழ்வதற்கு என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?
Answer:
(i) இலக்கியங்கள் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்பர். இலக்கியங்கள் தாம் தோன்றிய காலச் சூழலைக் காட்டுவதாலும் பண்பாடு, நாகரிகம், சமூக வாழ்க்கை ஆகியவற்றைக் காட்டுவதாலும் அவை அழியாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

(ii) வாழ்வோடு இணைந்த சுவை கொண்டு இலக்கியங்கள் படைக்கப்படுவதாலும் நீதிநெறிகளை முன்வைப்பதாலும் இன்றும் இலக்கியங்கள் எழுத்து வடிவில் இருப்பதாலும் இலக்கியங்கள் காலம் கடந்தும் அழியாமல் வாழ்கின்றன.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பேசுவதும் கேட்பதும் மொழியின் ……………….. நிலை
அ) முதல்
ஆ) இரண்டாம்
இ) மூன்றாம்
ஈ) நான்காம்
Answer:
அ) முதல்

Question 2.
வாயினால் பேசப்பட்டு பிறரால் உணரப்படுவது ………………. ஆகும்.
அ) எழுத்துமொழி
ஆ) பேச்சுமொழி
இ) இலக்கிய மொழி
ஈ) செய்கை மொழி
Answer:
ஆ) பேச்சுமொழி

Question 3.
கண்ணால் கண்டு உணருமாறு வரிவடிவமாக எழுதப்பட்டுப் படிக்கப்படுவது ………………..
அ) எழுத்துமொழி
ஆ) பேச்சுமொழி
இ) இலக்கிய மொழி
ஈ) செய்கை மொழி
Answer:
அ) எழுத்துமொழி

Question 4.
எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் மொழியின் …………… நிலை
அ) முதல்
ஆ) இரண்டாம்
இ) மூன்றாம்
ஈ) நான்காம்
Answer:
ஆ) இரண்டாம்

Question 5.
நேரில் காண இயலாத நிலையில் செய்தியைத் தெரிவிக்க உதவுவது
அ) எழுத்து மொழி
ஆ) பேச்சுமொழி
இ) இலக்கிய மொழி
ஈ) செய்கை மொழி
Answer:
அ) எழுத்து மொழி

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

Question 6.
மனிதனின் சிந்தனை காலம் கடந்தும் வாழ்வதற்குக் காரணம்
அ) எழுத்துமொழி
ஆ) பேச்சுமொழி
இ) இலக்கிய மொழி
ஈ) செய்கை மொழி
Answer:
அ) எழுத்துமொழி

Question 7.
மொழியின் உயிர் நாடியாக விளங்குவது
அ) எழுத்துமொழி
ஆ) பேச்சுமொழி
இ) இலக்கிய மொழி
ஈ) செய்கை மொழி
Answer:
ஆ) பேச்சுமொழி

Question 8.
பேச்சுமொழியில் ‘குழந்தையை நல்லாக் கவனிங்க என்று கூறும்போது ‘கவனி என்னும் சொல்தரும் பொருள்
அ) பேணுதல்
ஆ) கவனித்துச்செல்
இ) பாதுகாப்புப் பொருள்
ஈ) பாருங்கள்
Answer:
அ) பேணுதல்

Question 9.
‘நான் பறவையைப் பார்த்தேன் – இத்தொடர் ‘பறவையைப் பார்த்தது யார்?’ என்ற வினாவாக அமையும் போது அழுத்தம் கொடுக்கவேண்டிய சொல் எது?
அ) பறவை
ஆ) நான்
இ) பார்த்தது
ஈ) யார்
Answer:
ஆ) நான்

Question 10.
மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்கள்……….. என்பர்.
அ) எழுத்துமொழி
ஆ) பேச்சுமொழி
இ) இலக்கிய மொழி
ஈ) வட்டார மொழி
Answer:
ஈ) வட்டார மொழி

Question 11.
பொருந்தாதவற்றைத் தேர்ந்தேடுக்க.
அ) தமிழ் – கிளை மொழி
ஆ) கன்னடம் – கிளை மொழி
இ) மலையாளம் – கிளை மொழி
ஈ) தெலுங்கு – கிளை மொழி
Answer:
அ) தமிழ் – கிளை மொழி

Question 12.
பொருத்துக
1. தமிழ் – அ) இரட்டை வழக்கு
2. கன்னடம் – ஆ) நல்லாச் சாப்ட்டான்
3. வட்டார மொழி – இ) கீது
4. பேச்சு வழக்கு – ஈ) கிளை மொழி

அ) 1- அ, 2 – ஈ, 3-இ, 4-ஆ
ஆ) 1- ஈ, 2-ஆ, 3-இ, 4- அ
இ) 1- ஈ, 2 – இ, 3-அ, 4-ஆ
ஈ) 1- அ, 2-இ, 3-ஆ. 4-ஈ
Answer:
அ) 1- அ, 2 – ஈ, 3-இ, 4-ஆ

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. உலக வழக்கு , செய்யுள் வழக்கு பற்றிக் குறிப்பிடுபவர் ………………..
2. இரட்டை வழக்கு மொழி ………………..
3. எழுத்துமொழியில் பெரும்பாலும் ………………. பேணப்படுகின்றது.
4. ஒருமொழி உயிர்ப்போடு வாழ …………………….. யும், காலம் கடந்து வாழ்வதற்கு ……………….. யும் தேவைப்படுகின்றன.
5. ‘எளிய நடையில் தமிழ் நூல் எழுதிடவும் வேண்டும்’ என்று பாடியவர் ………………….
Answer:
1. தொல்காப்பியர்
2. தமிழ்
3. மொழித்தூய்மை
4. பேச்சுமொழி, எழுத்துமொழி
5. பாவேந்தர் பாரதிதாசன்.

குறுவினா

Question 1.
இரட்டை வழக்கு மொழி என்றால் என்ன? சான்று தருக.
Answer:
பேச்சுமொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அஃது இரட்டை வழக்கு மொழி ஆகும்.
சான்று : தமிழ் மொழி

Question 2.
குழந்தைகளுக்குத் தாய்மொழியும் பிறமொழியும் எவ்வாறு அறிமுகமாகின்றன?
Answer:
(i) கேட்டல், பேசுதல் என்னும் முதல் நிலையிலேயே குழந்தைகளுக்குத் தாய்மொழி அறிமுகமாகிறது.

(ii) படித்தல், எழுதுதல் என்னும் இரண்டாம் நிலையில் குழந்தைகளுக்குப் பிறமொழிகள் அறிமுகமாகிறது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

Question 3.
பேச்சுமொழி, எழுத்துமொழி என்பத்ை தொல்காப்பியர் எச்சொற்களால் குறிப்பிடுகிறார்?
Answer:

  1. பேச்சுமொழி – உலக வழக்கு,
  2. எழுத்துமொழி – செய்யுள் வழக்கு

Question 4.
தமிழில் இருந்து பிரிந்து சென்ற கிளைமொழிகள் யாவை?
Answer:

  1. கன்னடம்,
  2. தெலுங்கு,
  3. மலையாளம்

Question 5.
பேச்சுமொழி, எழுத்து மொழி என்னும் இரு கூறுகளையும் கொண்ட மொழி எது?
Answer:
தமிழ் மொழி.

Question 6.
பழமையும் புதுமையும் நிறைந்து சிறந்த மொழி எது?
Answer:
தமிழ் மொழி.

Question 7.
மொழி என்பது யாது?
Answer:
தனது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்துவதற்கு மனிதனால் உருவாக்கப்பட்டதே மொழி என்பர்.

Question 8.
பேச்சுமொழியின் சிறப்புக்கூறுகள் யாவை?
Answer:
பேசுபவனின் உடல்மொழி, ஒலிப்பதில் ஏற்ற இறக்கம் ஆகியனவும் பேச்சுமொழியின் சிறப்புக் கூறுகள் ஆகும்.

Question 9.
ஊடகங்கள் சிலவற்றைக் குறிப்பிடுக.
Answer:

  1. வானொலி
  2. தொலைக்காட்சி
  3. நாளேடுகள்

Question 10.
திருத்தமான தமிழை எங்கெங்குப் பயன்படுத்த வேண்டும்?
Answer:
திருத்தமான தமிழையே ஊடகங்களிலும் இலக்கியங்களிலும் பயன்படுத்த வேண்டும்

சிறு வினா

Question 1.
பேச்சு மொழி, எழுத்துமொழி, வட்டார வழக்கு ஆகியவற்றை விளக்கி சான்று தருக.
Answer:
பேச்சு மொழி : வாயினால் பேசப்பட்டு பிறரால் உணரப்படுவது பேச்சுமொழி ஆகும். உணர்வுகளை எளிதாக வெளிப்படுத்தும். கருத்தை வெளிப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. பேசுபவனின் உடல்மொழி, ஒலிப்பதில் ஏற்ற இறக்கம் ஆகியனவும் பேச்சுமொழியின் சிறப்புக்
கூறுகள் ஆகும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

சான்று : குழந்தையை நல்லாக் கவனிங்க.

எழுத்துமொழி : பேச்சு மொழிக்கு நாம் தந்த வடிவமே எழுத்துமொழி – கண்ணால் கண்டு உணருமாறு வரிவடிவமாக எழுதப்பட்டுப் படிக்கப்படுவது எழுத்துமொழி. ஒரு மொழியானது நீண்ட காலம் நிலைபெற எழுத்து மொழியே காரணம்.

சான்று : நன்றாகச் சாப்பிட்டான்.

வட்டார வழக்கு : இடத்திற்கு இடம் பேச்சுமொழி மாறுபடும். மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் பேச்சுமொழி மாறுபடும். இவ்வாறு மாறுபடும் ஒரே
மொழியின் வெவ்வேறு வடிவங்களை வட்டாரமொழி என்பர்.

சான்று : ‘இருக்கிறது’ என்ற சொல்லை இருக்கு’, ‘கீது’ என வழங்குவது.

நெடு வினா

Question 1.
பேச்சுமொழியில் சொற்பொருள் வேறுபாடுகள் குறித்து எழுதுக.
Answer:
(i) பேசப்படும் சூழலைப் பொறுத்து பேச்சுமொழியில் பொருள் வேறுபடும்.

(ii) எடுத்துக்காட்டாகக் ‘குழந்தையை நல்லாக் கவனிங்க’ என்று கூறும்போது ‘கவனி’ என்னும் சொல் பேணுதல் என்னும் பொருளைத் தருகின்றது. ‘நில்’, ‘செல்’, கவனி’ என்பதில் கவனி’ என்னும் சொல் கவனித்துச் செல் என்னும் பாதுகாப்புப் பொருளைத் தருகின்றது.

(iii) ஒலிப்பதன் ஏற்ற இறக்கமும் பொருள் வேறுபாட்டைத் தரும்.

(iv) எடுத்துக்காட்டாக என்னால் போக முடியாது’ என்னும் தொடர் ஓங்கி ஒலிக்கும் போது மறுப்பையும், மென்மையாக ஒலிக்கும் போது இயலாமையை உணர்த்துகின்றது.

(v) தொடரில் எச்சொல்லுக்கு அழுத்தம் கொடுக்கிறோமோ அதற்கேற்ப பேச்சுமொழியின் சொல் வேறுபடுகின்றது.

(vi) எடுத்துக்காட்டாக ‘நான் பறவையைப் பார்த்தேன்’ என்னும் தொடரில் ‘நான்’ என்னும் சொல்லுக்கு அழுத்தம் கொடுத்தால், பறவையைப் பார்த்தது யார்?’ என்னும் வினாவுக்கு விடையாக அமையும்.

(vii) ‘பறவையை’ என்னும் சொல்லுக்கு அழுத்தம் கொடுத்தால், ‘நீ எதைப் பார்த்தாய்?’ என்னும் வினாவுக்கு விடையாக அமையும்.

(viii) ‘பார்த்தேன்’ என்னும் சொல்லுக்கு அழுத்தம் கொடுத்தால், ‘நீ பறவையை என்ன செய்தாய்?’ என்னும் வினாவுக்கு விடையாக அமையும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.2 ஒன்றல்ல இரண்டல்ல

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 1.2 ஒன்றல்ல இரண்டல்ல Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 1.2 ஒன்றல்ல இரண்டல்ல

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.2 ஒன்றல்ல இரண்டல்ல

Question 1.
தமிழுக்குக் கொடை கொடுத்த வள்ளல்கள் பற்றி எழுதுக.
Answer:
தமிழ் இலக்கியங்கள் தோன்ற உதவிய வள்ளல்களைத் தமிழுக்குக் கொடை கொடுத்த வள்ளல்கள் எனலாம்.
(i) அதியன் (ஔவைக்கு உதவியவன்)
(ii) யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை (ஐங்குறு நூறுதொகுப்பித்தவன்)
(iii) பூரிக்கோ (குநற்தொகையைத் தொகுப்பித்தவன்)
(iv) பன்னாடு தந்த மாறன் வழுதி (நற்றிணையைத் தொகுப்பித்தவன்)
(v) பாண்டியன் உக்கிரப்பெருவழுதி (அகநானூறு தொகுப்பித்தவன்)
(vi) சடையப்ப வள்ளல் (கம்பராமாயணம் எழுத உதவியவர்)
(vii) சீதக்காதி, அபுல் காசிம் (சீறாப்புராணம் எழுத உதவியவர்)
(viii) சந்திரன் சுவர்க்கி (நளவெண்பா எழுத உதவியவர்)

Question 2.
தமிழில் உள்ள பல்வேறு இலக்கிய வடிவங்களின் பெயர்களைப் பட்டியலிடுக.
Answer:
1. கீழ்க்க ணக்கு
2. மேல்கணக்கு
3. அறஇலக்கியம்
4. பெருங்காப்பியம்
5. சிறு காப்பியம்
6. சிறுகதை
7. மரபுக்கவிதை
8. புதுக்கவிதை
9. புதினம்
10. நாட்டுப்புற இலக்கியம்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம் ……………
அ) கலம்பகம்
ஆ) பரிபாடல்
இ) பரணி
ஈ) அந்தாதி
Answer:
இ) பரணி

Question 2.
வானில் ……………….._கூட்டம் திரண்டால் மழை பொழியும்
அ) அகில்
ஆ) முகில்
இ) துகில்
ஈ) துயில்
Answer:
ஆ) முகில்

Question 3.
‘இரண்டல்ல’ என்னும் சொல்லைப் பார்த்து எழுதக்கிடைப்பது ………………
அ) இரண்டு + டல்ல
ஆ) இரண் + அல்ல
இ) இரண்டு + இல்ல
ஈ) இரண்டு + அல்ல
Answer:
ஈ) இரண்டு + அல்ல

Question 4.
‘தந்துதவும்’ என்னும் சொல்லைப் பார்த்து எழுதக்கிடைப்பது ……………..
அ) தந்து + உதவும்
ஆ) தா + உதவும்
இ) தந்து + தவும்
ஈ) தந்த + உதவும்
Answer:
அ) தந்து + உதவும்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.2 ஒன்றல்ல இரண்டல்ல

Question 5.
ஒப்புமை+ இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது
அ) ஒப்புமை இல்லாத
ஆ) ஒப்பில்லாத
இ) ஒப்புமையில்லாத
ஈ) ஒப்புஇல்லாத
Answer:
இ) ஒப்புமையில்லாத

குறுவினா

Question 1.
தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாகக் கவிஞர் கூறுவன யாவை?
Answer:

  1. தமிழ்நாட்டில் வீசும் தென்றலில் தேன் மணம் கமழும்.
  2. சுவைமிகுந்த பழங்களும் தங்கம் போன்ற தானியக் கதிர்களும் விளையும்.
  3. தமிழ்நாட்டின் நன்செய் நிலவளம் ஒன்றிரண்டல்ல பலவாகும்.

Question 2.
‘ஒன்றல்ல இரண்டல்ல’ – பாடலில் இடம்பெற்றுள்ள வள்ளல்கள் குறித்த செய்திகளை எழுதுக.
Answer:
(i) முல்லைக்குத் தேர் தந்த வள்ளல் வேள்பாரி.
(ii) புலவரின் சொல்லுக்குத் தன் தலையையே தரத் துணிந்தவன் குமண வள்ளல்.

சிறுவினா

Question 1.
தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?
Answer:
(i) பகைவரை வென்று பாடுவது பரணி இலக்கியம்.
(ii) பரிபாடல், கலம்பக நூல்கள், எட்டுத்தொகை, திருக்குறள், சங்க இலக்கியங்கள் – ஆகியன தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுகிறார்.

சிந்தனை வினா

Question 1.
தமிழில் அற இலக்கியங்கள் மிகுதியாகக் காரணம் யாது?
Answer:

  1. சங்ககாலத்தின் இறுதிப்பகுதி ஆடம்பரமும் ஆரவாரமும் மிக்கது.
  2. கலை என்ற பெயரில் ஒழுக்கக்கேடுகள் தலைதூக்கின.
  3.  தமிழகத்தின் அகப்புற ஒழுக்கங்கள் பாதுகாக்கப்படாமல் ஒதுக்கப்பட்டன.
  4. குழப்பமான அச்சூழலில் நீதியும் அறமும் தேவைப்பட்டது.
  5. எனவே, தமிழில் அறஇலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றின.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பகைவரை வென்றதைப் பாடும் இலக்கியம்
அ) பரிபாடல்
ஆ) பரணி
இ) சங்க இலக்கியங்கள்
ஈ) திருக்குறள்
Answer:
ஆ) பரணி

Question 2.
பொருத்துக.
1. பகைவரை வென்றதைப் பாடுவது – அ) பரிபாடல்
2. இசைப்பாடல் – ஆ) பரணி
3. வான்புகழ் கொண்டது – இ) சங்க இலக்கியங்கள்
4. அகம், புறம் மெய்ப்பொருளாகக் கொண்டது – ஈ) திருக்குறள்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.2 ஒன்றல்ல இரண்டல்ல

அ) 1- ஆ 2-அ 3- ஈ 4-இ
ஆ) 1-ஈ 2- அ 3-ஆ 4- இ
இ) 1-ஆ 2-அ 3- இ 4-ஈ
ஈ) 1-அ 2-இ 3-ஆ 4- ஈ
Answer:
அ) 1- ஆ 2-அ 3- ஈ 4-இ

Question 3.
பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர்
அ) பாரதியார்
ஆ) கவிமணி
இ) சுரதா
ஈ) உடுமலை நாராயணகவி
Answer:
ஈ) உடுமலை நாராயணகவி

Question 4.
தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர்
அ) பாரதியார்
ஆ) கவிமணி
இ) சுரதா
ஈ) உடுமலை நாராயணகவி
Answer:
ஈ) உடுமலை நாராயணகவி

Question 5.
தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ்பெற்ற கவிஞர்
அ) பாரதியார்
ஆ) கவிமணி
இ) சுரதா
ஈ) உடுமலை நாராயணகவி
Answer:
ஈ) உடுமலை நாராயணகவி

Question 6.
முல்லைக்குத் தேர் தந்து புகழ்பெற்றவன் ………………
அ) வேள்பாரி
ஆ) குமணன்
இ) அதியமான்
ஈ) பேகன்
Answer:
அ) வேள்பாரி

Question 7.
புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தவன் ……………..
அ) வேள்பாரி
ஆ) குமணன்
இ) அதியமான்
ஈ) பேகன்
Answer:
ஆ) குமணன்

Question 8.
இசைப்பாடல் இலக்கியம்
அ) பரிபாடல்
ஆ) பரணி
இ) சங்க இலக்கியங்கள்
ஈ) திருக்குறள்
Answer:
அ) பரிபாடல்

Question 9.
அகம், புறம் மெய்ப்பொருளாகக் கொண்ட இலக்கியம்
அ) பரிபாடல்
ஆ) பரணி
இ) சங்க இலக்கியங்கள்
ஈ) திருக்குறள்
Answer:
இ) சங்க இலக்கியங்கள்

Question 10.
வான்புகழ் கொண்ட இலக்கியம்
அ) பரிபாடல்
ஆ) பரணி
இ) சங்க இலக்கியங்கள்
ஈ) திருக்குறள்
Answer:
ஈ) திருக்குறள்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.2 ஒன்றல்ல இரண்டல்ல

Question 11.
தானியக் கதிருக்குக் கூறப்பட்ட உவமை
அ) கனி
ஆ) தென்றல்
இ) பொன்
ஈ) தேன்
Answer:
இ) பொன்

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ஒன்றல்ல இரண்டல்ல பாடலின் ஆசிரியர் …………………….
2. தமிழ்நாடு நிலவளமும் நீர்வளமும் மட்டுமின்றி …………………… வளமும் …………………… வளமும் நிரம்பியது.
3. தமிழக மன்னர்களும் வள்ளல்களும் ………………….. மிக்கவர்களாக விளங்கினர்.
4. ‘கவிச்சொல்லுக்கு’ என்ற சொல்லில் ‘கவி’ என்பதன் பொருள் ……………………..
5. முல்லைக்குத் தேர் கொடுத்தான் ……………………..
Answer:
1. உடுமலை நாராயண கவி
2. பொருள், அருள்
3. கொடைத்திறன்
4. புலவன்
5. வேள்பாரி

குறு வினா

Question 1.
”வான்முகிலினும் புகழ்படைத்த உபகாரி” என்ற பாடலடியில் இடம் பெறும் ‘முகில்’ ‘உபகாரி’ ஆகிய சொற்களின் பொருள் யாது?
Answer:
1. முகில் – மேகம்
2. உபகாரி – வள்ளல்

Question 2.
தமிழ்நாட்டிலுள்ள வளங்கள் யாவை?
Answer:

  1. நில வளம்
  2. நீர் வளம்
  3. பொருள் வளம்
  4. அருள் வளம்

Question 3.
தமிழ்மொழியிலுள்ள வளங்கள் யாவை?
Answer:

  1. இலக்கிய வளம்
  2. இலக்கண வளம்

Question 4.
தமிழகத்தில் கொடைத்திறன் மிக்கவர்களாகத் திகழ்ந்தவர்கள் யாவர்?
Answer:

  1. மன்னர்கள்
  2. வள்ளல்கள் மழை

Question 5.
மேகத்தை விடப் புகழ்பெற்றவன் யார்? அவன் செயல் யாது?
Answer:
(i) மழை மேகத்தை விடப் புகழ்பெற்றவன் : வள்ளல் வேள்பாரி.
(ii) அவன் செயல் : முல்லைக் கொடி படர்வதற்குத்தன் விலை உயர்ந்த தேரைக் கொடுத்தல்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.2 ஒன்றல்ல இரண்டல்ல

Question 6.
எங்குத் தேன் மணம் கமழும்?
Answer:
தமிழகத்தில் வீசும் தென்றல் காற்றில் தேன் மணம் கமழும்.

Question 7.
நன்செய் நிலம் என்றால் என்ன?
Answer:
ஆற்றுநீர், குளத்துநீர், கிணற்றுநீர் ஆகிய நீர்வள ஆதாரங்களைக் கொண்டு ஓர் ஆண்டுக்கு மூன்று போகங்கள் வரை வேளாண்மை செய்யும் நிலத்தொகுதி நன்செய் நிலம் எனப்படுகின்றது.

Question 8.
நன்செய் நிலப்பயிர்கள் யாவை?
Answer:
நெல், வாழை, கரும்பு.

சிறு வினா:

Question 1.
உடுமலை நாராயண கவி – குறிப்பு வரைக.
Answer:
இயற்பெயர் : நாராயணசாமி
காலம் : 25.9.1899 – 23.5.1981
சிறப்புப்பெயர் : பகுத்தறிவுக் கவிராயர்
பணி : தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியர், நாடக எழுத்தாளர்
சிறப்புகள் : கலைமாமணி பட்டம், 31.12.2008ல் இந்திய அஞ்சல் துறை இவரின் அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது. உடுமலைப் பேட்டையில் சிலை மற்றும் மணிமண்டபத்தைத் தமிழக அரசு நிறுவியுள்ளது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.2 ஒன்றல்ல இரண்டல்ல

சொல்லும் பொருளும்

1. ஒப்புமை – இணை
2. அற்புதம் – விந்தை
3. முகில் – மேகம்
4. உபகாரி – வள்ளல்
5. சொல்ல – கூற
6. தென்றல் – தெற்கிலிருந்து வீசும் காற்று
7. கவி – கவிஞன் (அல்லது) புலவன்
8. அருள் – இரக்கம்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.1 எங்கள் தமிழ்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 1.1 எங்கள் தமிழ் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 1.1 எங்கள் தமிழ்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.1 எங்கள் தமிழ்

Question 1.
“எங்கள் தமிழ்” – பாடலை இசையுடன் பாடி மகிழ்க.
Answer:
அருள்நெறி அறிவைத் தரலாகும்
அதுவே தமிழன் குரலாகும்
பொருள்பெற யாரையும் புகழாது
போற்றா தாரையும் இகழாது
கொல்லா விரதம் குறியாகக்
கொள்கை பொய்யா நெறியாக
எல்லா மனிதரும் இன்புறவே
என்றும் இசைந்திடும் அன்பறமே
அன்பும் அறமும் ஊக்கிவிடும்
அச்சம் என்பதைப் போக்கிவிடும்
இன்பம் பொழிகிற வானொலியாம்
எங்கள் தமிழெனும் தேன்மொழியாம் – நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

Question 2.
பின்வரும் நாமக்கல் கவிஞர் பாடலைப் படித்துச் சுவைக்க.
Answer:
கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தியத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவீர்!… (கத்தியின்றி …)
கண்ட தில்லை கேட்ட தில்லை
சண்டை யிந்த மாதிரி
பண்டு செய்த புண்ணி யந்தான்
பலித்த தேநாம் பார்த்திட… (கத்தியின்றி….)

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
‘நெறி’ என்னும் சொல்லின் பொருள் …………………..
அ) வழி
ஆ) குறிக்கோள்
இ) கொள்கை
ஈ) அறம்
Answer:
அ) வழி

Question 2.
‘குரலாகும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………
அ) குரல் + யாகும்
ஆ) குரல் + ஆகும்
இ) குர + லாகும்
ஈ) குர + ஆகும்
Answer:
ஆ) குரல் + ஆகும்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.1 எங்கள் தமிழ்

Question 3.
வான் + ஒலி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………..
அ) வான்ஒலி
ஆ) வானொலி
இ) வாவொலி
ஈ) வானலி
Answer:
ஆ) வானொலி

நயம் அறிக

1. ‘எங்கள் தமிழ்’ பாடலில் முதல் எழுத்து ஒன்று போல் வரும் மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
(எ.கா.)
ருள்நெறி – கொல்லா – ல்லா
துவே – கொள்கை – ன்றும்

2. ‘எங்கள் தமிழ்’ பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்று போல் வரும் எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
(எ.கா.)
ருள் – கொல்லா – அன்பும்
பொருள் – எல்லா – இன்பம்

3. ‘எங்கள் தமிழ்’ பாடலில் இறுதி எழுத்து ஒன்று போல் வரும் இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.
(எ.கா.)
ரலாகும் – புகழாது – ஊக்கிவிடும்
குரலாகும் – இகழாது – போக்கிவிடும்

குறு வினா

Question 1.
தமிழ் மொழியின் பண்புகளாக நாமக்கல் கவிஞர் கூறுவன யாவை?
Answer:
(i) நம் தாய்மொழி தமிழ், அருள் வழிகள் நிரம்பிய அறிவைத் தரும்

(ii) கொல்லாமையைக் குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு, எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.

(iii) நம் தமிழ்மொழி அனைவரிடமும் அன்பு மற்றும் அறத்தைத் தூண்டும். அஃது அச்சத்தைப் போக்கி இன்பம் தரும்.

Question 2.
தமிழ்மொழியைக் கற்றவரின் இயல்புகளை எழுதுக.
Answer:
(i) தமிழ்மொழியைக் கற்றோர், பொருள் (செல்வம்) பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார்.

(ii) தம்மைப் போற்றாதவரையும் இகழ்ந்து பேசமாட்டார்.

சிறு வினா

Question 1.
எங்கள் தமிழ் பாடலில் நாமக்கல் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
(i) நம் தாய்மொழி தமிழ், அருள் வழிகள் நிரம்பிய அறிவைத் தருகின்றது. அதுவே தமிழ் மக்களின் குரலாகவும் விளங்குகிறது.

(ii) தமிழ்மொழியைக் கற்றோர், பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார். தம்மைப் போற்றாதவரையும் இகழ்ந்து பேசமாட்டார்.

(iii) கொல்லாமையைக் குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு, எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.

(iv) நம் தமிழ்மொழி அனைவரிடமும் அன்பு மற்றும் அறத்தைத் தூண்டும். அஃது அச்சத்தைப் போக்கி இன்பம் தரும். எங்கள் தமிழ்மொழி தேன் போன்ற மொழியாகும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.1 எங்கள் தமிழ்

சிந்தனை வினா

Question 1.
கவிஞர் தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார்?
Answer:
தேன் இனிமையானது; தூய்மையானது; சுவைமிக்கது; இன்பம் கொடுப்பது. அதைப் போல இனிமையானது, தூய்மையானது, சுவைமிக்கது, இன்பம் கொடுப்பது தமிழ். எனவே கவிஞர் தமிழைத் தேனுடன் ஒப்பிடுகிறார்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பொருத்துக.
1. விரதம் – அ) வழி
2. நெறி – ஆ) நோன்பு
3. குறி – இ) தருகின்ற
4. பொழிகிற – ஈ) குறிக்கோள்

அ) 1-ஆ 2-அ 3-ஈ 4-இ
ஆ) 1-இ 2-அ 3-ஈ 4-ஆ
இ) 1-ஆ 2-ஈ 3-ஆ 4-இ
ஈ) 1-ஈ 2- அ 3-ஆ 4-இ
Answer:
அ) 1-ஆ 2-அ 3-ஈ 4-இ

Question 2.
நாமக்கல் கவிஞர் என்றழைக்கப்படுபவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) வெ.இராமலிங்கனார்
ஈ) கவிமணி
Answer:
இ) வெ.இராமலிங்கனார்

Question 3.
காந்தியக் கவிஞர் என்றழைக்கப்படுபவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) வெ.இராமலிங்கனார்
ஈ) கவிமணி
Answer:
இ) வெ.இராமலிங்கனார்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.1 எங்கள் தமிழ்

Question 4.
நாமக்கல் கவிஞர் படைப்புகள் அல்லாத ஒன்று
அ) மலைக்கள்ளன்
ஆ) என்கதை
இ) சங்கொலி
ஈ) காந்திபுராணம்
Answer:
ஈ) காந்திபுராணம்

Question 5.
“அருள்நெறி அறிவைத் தரலாகும்
அதுவே தமிழன் குரலாகும்” என்று பாடியவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) வெ.இராமலிங்கனார்
ஈ) கவிமணி
Answer:
இ) வெ.இராமலிங்கனார்

Question 6.
“பொருள்பெற யாரையும் புகழாது
போற்றாதாரையும் இகழாது” – இவ்வடிகளில் அமைந்த முரண் சொற்கள்
அ) பொருள் – போற்றா
ஆ) யாரையம் – தாரையும்
இ) பொருள் – பெற
ஈ) புகழாது – இகழாது
Answer:
ஈ) புகழாது – இகழாது

Question 7.
“கொல்லா விரதம் குறியாகக்
கொள்கை பொய்யா நெறியாக” – இவ்வடிகளில் ‘நோன்பு’ என்னும் பொருள் தரும் சொல் எது?
அ) கொல்லா
ஆ) விரதம்
இ) குறி
ஈ) நெறி
Answer:
ஆ) விரதம்

Question 8.
“கத்தியின்றி இரத்த மின்றி
யுத்தமொன்று வருகுது” – இவ்வடிகளைப் பாடியவர்
அ) வெ.இராமலிங்கனார்
ஆ) பாரதிதாசன்
இ) கவிமணி
ஈ) பாரதியார்
Answer:
அ) வெ.இராமலிங்கனார்

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. தமிகத்தின் முதல் அரசவைக் கவிஞர் …………….
2. உலகமொழிகளில் தொன்மையானது ………………….
3. ‘எங்கள் தமிழ்’ என்னும் தலைப்பில் கவிதை இடம்பெறும் நூல் ……………………
4. மலைக் கள்ளன் , சங்கொலி , என் கதை என்னும் நூல்களை எழுதியவர் …………………..
5. வெ.இராமலிங்கனாரை ……………….. என்றும் அழைப்பர் …………………
6. நம் அனைவரிடமும் அன்பு மற்றும் அறத்தைத் தூண்டும். …………………..
7. எங்கள் தமிழ்மொழி ……………….போன்ற மொழியாகும்
8. விடுபட்ட சீர்களை நிரப்புக.
…………… அறிவைத் தரலாகும்.
அதுவே_ ………….. குரலாகும்
Answer:
1. கவிஞர் வெ.இராமலிங்கனார்.
2. தமிழ்மொழி
3. நாமக்கல் கவிஞர் பாடல்கள்
4. கவிஞர் வெ.இராமலிங்கனார் .
5. நாமக்கல் கவிஞர்
6. தமிழ்மொழி
7. தேன்
8. அருள்நெறி, தமிழன்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.1 எங்கள் தமிழ்

குறு வினா

Question 1.
நாமக்கல் கவிஞர், ‘காந்தியக் கவிஞர்’ என அழைக்கக் காரணம் யாது?
Answer:
காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப் பின்பற்றியதால் நாமக்கல் கவிஞர், ‘காந்தியக் கவிஞர்’ என அழைக்கப்படுகிறார்.

Question 2.
நாமக்கல் கவிஞரின் பன்முகத் தன்மையினை எழுதுக.
Answer:

  1. தமிழறிஞர்
  2. கவிஞர்
  3. விடுதலைப் போரட்ட வீரர்

Question 3.
நாமக்கல் கவிஞரின் படைப்புகள் சிலவற்றைக் கூறுக.
Answer:

  1. மலைக்கள்ளன்
  2. சங்கொலி
  3. என் கதை
  4. நாமக்கல் கவிஞர் பாடல்கள்

சிறு வினா

Question 1.
தமிழின் சிறப்புகள் சிலவற்றை எழுதுக.
Answer:

  1. உலக மொழிகளில் தொன்மையானது தமிழ்மொழி.
  2. மென்மையும் இனிமையும் வளமையும் உடையது.
  3. வாழ்வுக்குத் தேவையான அன்பையும் அறத்தையும் கூறுவது.
  4. காலச்சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்று, என்றும் இளமையோடு திகழ்கிறது.

Question 2.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் – குறிப்பு வரைக
Answer:
(i) இயற்பெயர் : இராமலிங்கனார்

(ii) சிறப்புப்பெயர்: நாமக்கல் கவிஞர், காந்தியக்கவிஞர்.

(iii) சிறப்பு : தமிழறிஞர், கவிஞர், விடுதலைப்போராட்ட வீரர், தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர்.

(iv) படைப்புகள் : மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என்கதை, சங்கொலி

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.1 எங்கள் தமிழ்

சொல்லும் பொருளும்

ஊக்கிவிடும் – ஊக்கப்படுத்தும்
குறி – குறிக்கோள்
பொருள் – செல்வம், நற்செயல்
அறம் – நற்செயல்
விரதம் – நோன்பு
பொழிகிற – தருகின்ற
அருள் – இரக்கம்
அச்சம் – பயம்
போக்கி – நீக்கி