Samacheer Kalvi 12th History Guide Chapter 6 தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th History Guide Pdf Chapter 6 தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th History Solutions Chapter 6 தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்

12th History Guide தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
முகலாயர் காலத்தில் அலுவலக மற்றும் நீதிமன்ற மொழியாக விளங்கியது எது? (மார்ச் 2020 )
அ) உருது
ஆ) இந்தி
இ) மராத்தி
ஈ) பாரசீகம்
Answer:
ஈ) பாரசீகம்

Samacheer Kalvi 12th History Guide Chapter 6 தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்

Question 2.
பின்வரும் சமூக, சமயச் சீர்சிருத்த நிறுவனங்களை அவை தோற்றுவிக்கப்பட்டதன் கால அடிப்படையில் வரிசைப்படுத்துக.
1. அனைத்து இந்திய முஸ்ஸிம் லீக்
2. அனைத்திந்திய இந்து மகா சபை
3. ஆரிய சமாஜம்
4. பஞ்சாப் இந்து சடை

அ)1,2,3,4
ஆ) 2,1,4,3
இ) 2,4,3,1
ஈ) 4,3,2,1
Answer:
ஆ) 2,1,4,3

Question 3.
லண்டன் பிரிவிக் கவுன்சிலில் இடம்பெற்ற முதல் இந்தியர் ………….
அ) ரஹமத்துல்லா சயானி
ஆ) சர் சையது அகமது கான்
இ) சையது அமீர் அலி
ஈ) பஃருதீன் தயாப்ஜி
Answer:
இ) சையது அமீர் அலி

Samacheer Kalvi 12th History Guide Chapter 6 தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்

Question 4.
கூற்று : 1870இல் வங்காள அரசாங்க ஆணை இஸ்லாமிய தொழில்வல்லுநர் குழுக்களிடையே ஐயங்களை ஏற்படுத்தியது.
காரணம் : அவ்வாணை உருது மொழி பாரசீக அரபி எழுத்து முறைக்குப் பதிலாக இந்தியைக் கொண்டு வந்தது.
அ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
ஆ) கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
Answer:
அ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

Question 5.
சரியான கூற்றுகளைக் கண்டுபிடிக்கவும்.
கூற்று I : ஆரம்பகால தேசியவாதிகளில் சிலர் தேசியவாதத்தை இந்துமத அடித்தளத்தில் மட்டுமே உருவாக்க முடியும் என நம்பினர்
கூற்று II : இந்து மகாசபை போன்ற அமைப்புகள் எடுத்த முயற்சிகள், அன்னிபெசண்ட் அம்மையாரால் நடத்தப்பட்ட பிரம்மஞான சபையால் வலுப்பெற்றது.
கூற்று III: ஆரிய சமாஜத்தின் சுத்தி மற்றும் சங்காதன் நடவடிக்கைகளில் காங்கிரஸ் பங்கேற்றது இந்து-முஸ்லிம்களிடையே பிரிவை உண்டாக்கியது.
அ) i மற்றும் ii
ஆ) i மற்றும் iii
இ )ii மற்றும் ii
ஈ) அனைத்தும்
Answer:
ஈ) அனைத்தும்

Samacheer Kalvi 12th History Guide Chapter 6 தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்

Question 6.
இரு நாடு கொள்கையை முதன்முதலில் கொண்டு வந்தவர் …….
அ) இராஜாஜி
ஆ) ராம்சே மெக்டோனால்டு
இ)முகமது இக்பால்
ஈ) சர்வாசிர் ஹசன்
Answer:
ஈ) சர் வாசிர் ஹசன்

Question 7.
1937 இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது
அ)12 மாகாணங்கள்
ஆ) 7 மாகாணங்கள்
இ)5 மாகாணங்கள்
ஈ) 8 மாகாணங்கள்
Answer:
ஆ) 7 மாகாணங்கள்

Question 8.
காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்த நாளினை முஸ்லிம் லீக் மீட்பு நாளாக கொண்டாடியது.
அ) 22 டிசம்பர், 1940
ஆ) 5 பிப்ரவரி, 1939
இ) 23 மார்ச், 1937
ஈ) 22 டிசம்பர், 1939
Answer:
ஈ) 22 டிசம்பர், 1939

Question 9.
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

பட்டியல் I பட்டியல் II
அ அன்னிபெசண்ட் 1 அலிகார் இயக்கம்
ஆ சையது அகமது கான் 2. தயானந்த சரஸ்வதி
இ கிலாபத் இயக்கம் 3 பிரம்மஞான சபை
ஈ சுத்தி இயக்கம் 4 அலி சகோதரர்கள்

Samacheer Kalvi 12th History Guide Chapter 6 தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் 1
Answer:
அ) 3 1 4 2

Samacheer Kalvi 12th History Guide Chapter 6 தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்

Question 10.
பின்வரும் கூற்றுகளிலிருந்து சரியானவற்றைத் தேர்வு செய்க.
i) அலிகார் இயக்கத்தைத் தோற்றுவித்த சர் சையது அகமது தொடக்கத்தில் காங்கிரசை ஆதரித்தார்.
ii) 1909இல்தோற்றுவிக்கப்பட்ட பஞ்சாப் இந்துசபையானது இந்துமதவகுப்புவாத அரசியலுக்கு அடித்தளமிட்டது.

அ) கூற்று (i) மற்றும் (ii) சரி
ஆ) கூற்று (i) சரி (ii) தவறு
இ) கூற்று (i) தவறு (ii) சரி
ஈ) கூற்று (i) மற்றும் (ii) தவறு
Answer:
ஈ) கூற்று (i) மற்றும் (ii) தவறு

Question 11.
எப்போது முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை நாளை அனுசரித்தது?
அ) 25 டிசம்பர், 1942
ஆ) 16 ஆகஸ்ட், 1946
இ)21 மார்ச், 1937
ஈ) 22 டிசம்பர், 1939
Answer:
ஆ) 16 ஆகஸ்ட், 1946

Question 12.
வேவல் பிரபுவிற்குப் பின்னர் பதவியேற்றவர்
அ) லின்லித்கோ
ஆ) பெதிக் லாரன்ஸ்
இ) மௌண்ட்பேட்டன்
ஈ) செம்ஸ்ஃபோர்டு
Answer:
இ) மௌண்ட்பேட்டன்

Question 13.
கூற்று : பிரிட்டிஷ் அரசாங்கம் வகுப்புவாதத்தை வளர்க்கவும் பரப்பவும் பின்பற்றியது தனித்தொகுதிக் கொள்கையாகும்.
காரணம் : மக்கள் இரண்டு தனித்தொகுதிகளாக பிரிக்கப்பட்டதால் வகுப்புவத அடிப்படையிலேயே வாக்களித்தனர். ( மார்ச் 2020 )
அ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
ஆ) கூற்று சரி, காரணம் தவறு
இ) கூற்று மற்றும் காரணம் தவறு
ஈ) கூற்று சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
Answer:
ஈ) கூற்று சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

Samacheer Kalvi 12th History Guide Chapter 6 தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்

Question 14.
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

அ இந்துமத மறுமலர்ச்சி 1 M.S.கோல்வாக்கர்
ஆ கலீஃபா பதவி ஒழிப்பு 2 ஆரிய சமாஜம்
இ லாலா லஜபதி ராய் 3 1924
ஈ ராஷ்டிரிய சுயசேவா சங்கம் 4 இந்து-முஸ்லிம் மாகாணங்களாக பஞ்சாப் பிரித்தல்

Samacheer Kalvi 12th History Guide Chapter 6 தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் 2

Answer:
ஈ) 2 3 4 1

II. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
கௌராஷினி சபை பற்றி குறிப்பு வரைக?
Answer:
கௌராஷினி சபைகள்:

  • கௌராஷினி சபைகள் பசு பாதுகாப்பு சங்கள் எனப்படும்.
  • மிகவும் போர்க்குணம் கொண்டவையாக மாறின
  • பசுக்களின் விற்பனை அல்லது பசுக்கொலையில் சங்கங்களின் பலவந்தமான தலையீடு இருந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.
  • பஞ்சாப்பை சேர்ந்த பசுப் பாதுகாவலர்கள் மத்திய மாகாணத்தின் கௌராஷினி சபா செயல்பாட்டாளர்கள்.

Question 2.
இந்து-முஸ்லிம்களிடையே பிரிவினை ஏற்படக் காரணமான ஆரிய சமாஜத்தின் இரண்டு இயக்கங்கள் யாவை?
Answer:
இந்து, முஸ்லிம்களிடையே பிரிவினை ஏற்படக் காரணமாக ஆர்ய சமாஜத்தின் இரண்டு இயக்கங்கள் சுத்தி – மற்றும் சங்கதன் ஆகும்.

Question 3.
ஆகாகான் தலைமையிலான முஸ்லிம் லீக் முன் வைத்த கோரிக்கைகள் என்ன?
Answer:

  • பம்பாயிலிருந்து சிந்துப் பகுதியைத் தனியாகப் பிரிப்பது. *
  • பலுச்சிஸ்தானையும் அதன் எல்லைகளையும் சீர்திருத்துவது.
  • பஞ்சாபிலும் வங்காளத்திலும் மக்கள் தொகை அடிப்படையில் பிரிதிநிதித்துவம்.
  • மத்தியச் சட்டமன்றத்தில் முஸ்லிம்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு.

Question 4.
1923இல் வாரணாசியில் நடைபெற்ற ஆறாவது இந்து மகாசபை மாநாட்டைப் பற்றி குறிப்பு எழுதுக.
Answer:

  • 1923 ஆகஸ்டில் வாரணாசியில் நடைபெற்ற இந்து மகாசபையின் ஆறாவது மாநாட்டில் 968 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
  • அவர்களில் 56.7 விழுக்காட்டினர் ஐக்கிய மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.
  • ஐக்கிய மாகாணம், பஞ்சாப், டெல்லி, பீகார் ஆகியவை86.8 விழுக்காட்டுப் பிரதிநிதிகளை அனுப்பிவைத்தன.
  • சென்னை பம்பாய், வங்காளம் ஆகிய மூன்றும் 6.6 விழுக்காடு பிரதிநிதிகளை மட்டுமே அனுப்பிவைத்தன.

Samacheer Kalvi 12th History Guide Chapter 6 தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
1921இல் நடைபெற்ற மலபார் கலகத்தைப் பற்றிய காந்தியடிகளின் கருத்து என்ன ?
Answer:

  • 1921இல் நடைபெற்ற குருதி கொட்டிய மலபார் கிளர்ச்சியின்போது அங்கு முஸ்லிம் விவசாயிகள் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் இந்து நிலபிரபுக்களுக்கு எதிராகவும் களமிறங்கியது.
  • இந்து மகா சபை தன்னுடைய பிரச்சாரத்தை புதுப்பிக்க காரணமாயிற்று \
  • அடிப்படையில் அது ஒரு விவசாயக் கிளர்ச்சியாக இருந்தாலும் தீவிர மத உணர்வுகள் கோலோச்சின.
  • காந்தியடிகள் இந்நிகழ்வை இந்து முஸ்லிம் மோதலாகவே மதிப்பிட்டார்.
  • மலபாரில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு முஸ்லிம் தலைவர்கள் பொது மன்னிப்புக் கேட்க வேண்டுமென
    காந்தியடிகள் கோரிக்கை விடுத்தார்.

Question 2.
இஸ்லாமியர்களுக்காக மத்தியில் முதலில் அமைக்கப்பட்ட அரசியல் கட்சியின் நோக்கங்களை எழுதுக.
Answer:
அனைத்து இந்திய முஸ்லீம் லீக்கின் நோக்கங்கள்:

  • இந்திய முஸ்லீம்கள், பிரிட்டிஷ் அரசிடம் உண்மையுடனும் நன்றியுடனும் நடந்து கொள்ள வேண்டுமென்ற உணர்வை அவர்களிடம் ஏற்படுத்துதல்.
  • இந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்து அரசுக்கு எழும் தவறான கருத்துக்களை நீக்குதல்
  • இந்திய முஸ்லிம்களின் விருப்பங்கள் அரசியல் உரிமைகள் ஆகியவற்றை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல்.
  • தங்களது தேவைகள், உயர்ந்த லட்சியங்களை கண்ணியமான முறையில் அரசுக்கு தெரிவித்தல்
  • இந்திய முஸ்லிம்கள் மற்ற இனத்தவரிடம் எவ்விதபகைமை பாராட்டுவதையும் முன்விரோதம்கொள்வதையும் தடுத்தல் ஆகியவையாகும்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 6 தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்

Question 3.
1909 ஆம் ஆண்டின் மின்டோ -மார்லி சீர்த்திருத்தங்களின் முக்கியத்துவத்தைக் கூறுக.
Answer:
1909 ஆம் ஆண்டின் மின்டோ -மார்லி சீர்த்திருத்தங்களின் முக்கியத்துவம்:

  • அரசபிரதிநிதிகளின் நிர்வாகத்தில் இந்தியருக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.
  • மைய சட்ட சபையையும் மாநில சட்ட சபையையும் விரிவு படுத்தப்பட்டன.
  • வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அங்கீகரிக்கப்பட்டது. தனித்தொகுதிகள் முஸ்லீமுக்கு வழங்கப்பட்டன.
  • தேர்தல் நடந்த முதன் முறையாக அனுமதி அளிக்கப்பட்டது.

Question 4.
வகுப்புவாதம் ஒரு கருத்தியலாக எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
Answer:

  • பிரிட்டிஷ் இந்திய அரசுவகுப்புவாதத்தை வளர்ப்பதற்கும் பரப்புதற்கும் தனித்தொகுதி என்னும் முதன்மையான நுட்பத்தை நடைமுறைப்படுத்தியது.
  • வகுப்புவாதம் என்பது “பிறமதத்தாரோடு பொருள் சார்ந்த பிரச்சனைகளிலும் கூட விரோத போக்கோடு சண்டையிடும் வகையில் ஒரு மதத்தினரை உருவாக்குவது.
  • நேருவின் கூற்றுப்படி வகுப்புவாதம் என்பது பிற்போக்குவாதிகள் நவீன உலகத்திற்கும் பொருந்தாத காலாவதியான ஒரு கருத்தை கொண்டிருப்பது என்பதாகும்.
  • மற்றொரு அறிஞர் வகுப்புவாதம் என்பது ஒரு குழு குறுகிய நோக்கில் மற்ற குழுக்கள் அல்லது அரசாங்கத்திடமிருந்து வரும் எதிர்ப்பை மடைமாற்றம் செய்யும் நோக்கத்துடன் அணிதிரட்டும் திட்டமிட்ட முயற்சியே ஆகும்.

Question 5.
1927ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டின் முன்மொழிவுகள் யாவை?
Answer:
1927 மார்ச் 20இல் டெல்லியில் முஸ்லிம்களின் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் வைத்த 4 முன்மொழிகள் :

  • பம்பாயிலிருந்து சிந்து பகுதியைத் தனியாக பிரிப்பது.
  • பலுசிஸ்தானையும் அதன் எல்லைகளையும் சீர்திருத்துவது
  • பஞ்சாபிலும் வங்காளத்திலும் மக்கள் தொகை அடிப்படையில் பிரதிநிதித்துவம்.
  • மத்திய சட்டமன்றத்தில் முஸ்லீம்களுக்கு 33 விழுக்காடுகள் இட ஒதுக்கீடு ஆகியவையாகும்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 6 தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்

IV. விரிவான விடையளிக்கவும்

Question 1.
பிரிட்டிஷ் இந்தியாவில் வகுப்புவாதத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்க.
Answer:
பிரிட்டிஷ் இந்தியாவின் வகுப்பு வாதத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி:

  • ஆரம்பகால தேசியவாதிகள் சிலர் தேசியவாதத்தை இந்துமத அடித்தளத்தில் மட்டுமே உருவாக்கமுடியும் என்று நம்பினர்.
  • 1875 இல் நிறுவப்பட்ட ஆரிய சமாஜத்தின் மூலம் அரசியலில் இந்து மறுமலர்ச்சிக்கான குரல் ஒலிக்கத் தொடங்கியது. ஆரிய சமாஜம் இந்து மதத்தின் உயரியத் தன்மைகளை உறுதியுடன் முன்வைத்தது.
  • வடஇந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தோன்றிய பசு பாதுகாப்புத் கழகங்கள் இந்து வகுப்புவாதம் வளர்வதற்கு ஊக்கமளித்தன.
  • ஆரிய சமாஜம் போன்ற நிறுவனங்கள் எடுத்த முயற்சிகள் 1891 முதல் அன்னிபெசண்ட் அம்மையாரால் வழிநடத்தப்பட்ட பிரம்மஞான சபையின் மூலம் வலுப்பெற்றன.

முஸ்லிம் உணர்வின் எழுச்சி:

  • சர்வபள்ளி கோபால் குறிப்பிடுவது போல, மறுபுறம் இஸ்லாம் அலிகார் இயக்கத்தின் வழியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.
  • பிரிட்டிஷார் அலிகார் கல்லூரியை ஏற்படுத்தி சையது அகமதுகானுக்கு ஆதரவளித்ததும் முஸ்லிம் தேசியக்கட்சி தோன்றவும், முஸ்லிம் அரசியல் கருத்தியல் தோன்றவும் உதவியது.
  • வாகாபி இயக்கம் வர்காபிகள் இஸ்லாமை அதனுடைய ஆதித்தூய்மைக்கு அழைத்துச் செல்லவும் அதன் உயிரை உருக்குலைத்துக் கொண்டிருப்பதாக அவர்கள் கருதிய சில மூடப்பழக்கங்களை முடிவுக்கு கொண்டுவரவும் விரும்பினர்.
  • வாகாபிகளில் தொடங்கி கிலாபத்காரர்கள் வரையானோர் அடிமட்டச் செயல்பாடுகளில் காட்டிய செயற்முனைப்பு முஸ்லிம்களை அரசியல் மயமாக்குவதில் முக்கியப் பங்காற்றியது.

Question 2.
ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கை இந்திய தேசியத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? (மார்ச் 2020)
Answer:
கூட்டு இந்திய அடையாளம் ஒன்று உருவாவதைத் தடுப்பதே பிரிட்டிஷாரின் நோக்கமாக இருந்ததால், இந்தியர்களின் ஒருங்கிணைப்பு முயற்சிகளை முறியடிக்கத் தொடங்கினர்.

  • பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பிரித்தாளும் கொள்கையைக் கையாண்டது.
  • பம்பாய் – கவர்னர் எல்பின்ஸ்டோன், “பழைய ரோமானிய இலட்சியமான ‘Divide et Impera’ (பிரித்தாளுதல்) என்பது நமதாக வேண்டும்” என்று எழுதினார்.
  • வகுப்புவாதக் கலவரங்கள் நாட்டின் ஆளுகைக்குச் சவாலாக இருக்கும் என்று தெரிந்திருந்தபோதிலும் பிரிட்டிஸ் அரசாங்கம், வகுப்புவாத கருத்தியல் சார்ந்த அரசியலுக்கும் சட்டப்பூர்வ அங்கீகாரத்தையும், கௌரவத்தையும் வழங்கியது.
  • அனைத்துக் கட்சிகளும் இத்தகைய குறுங்குழுவாத அணுகுமுறையைப் பின்பற்றியதால் வடஇந்தியாவில்
    இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கிடையே பகைமைவளர்ந்தது. இதன் தாக்கம்நாட்டின் பிறபகுதிகளிலும் காணப்பட்டது.
  • 19ஆம் நூற்றாண்டின் கடைசி பதிற்றாண்டுகளில் ஏராளமான இந்து-முஸ்லிம் கலவரங்கள் வெடித்தன. 1882 இல் ஜீலை – ஆகஸ்டில் தென்னிந்தியாவில் கூட ஒரு பெருங்கலகம் சேலத்தில் நடைபெற்றது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 6 தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்

Question 3.
இந்து தேசியம், இஸ்லாமிய தேசியம் மற்றும் இந்திய தேசியம் ஆகியவை இந்திய பிரிவினைக்கு சமபங்காற்றியது எவ்வாறு?
Answer:

  • கல்வி கற்ற மேல்வகுப்பு இந்துக்கள் தேசிய உணர்வு பெற்று எழுந்தனர்.
  • இதனை விரும்பாத ஆங்கிலேயர்கள் நடுத்தர வர்க்க முஸ்லீம்களை காங்கிரஸின் வளர்ச்சியை தடுக்க ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டனர்.
  • இது இந்து-முஸ்லீம் இனவாதத்தை தூண்டியது.

இந்து தேசியம்:

  • ஆரம்பகால தேசியவாதிகள் சிலர் தேசிய வாதத்தை இந்துமத அடித்தளத்தில் மட்டுமே உருவாக்க முடியும் என எண்ணினர்.
  • 1875இல் நிறுவப்பட்ட ஆரிய சமாஜத்தின் மூலம் அரசியலில் இந்து மறுமலர்ச்சிக்கான குரல் ஒலிக்கத் தொடங்கியது.
  • ஆரிய சமாஜம் இந்து மதத்தின் உயரிய தன்மைகளை எடுத்துரைத்தது.
  • வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தோன்றிய பசு பாதுகாப்பு கழகங்கள் இந்து வகுப்புவாதம் வளர்வதற்கு ஊக்கம் அளித்தது.
  • இந்து தேசியவாதிகளில் ஒருவராகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அன்னிபெசன்ட் அம்மையார் தனது கருத்துக்களை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். “பண்டைய மதங்களை புத்துயிர்ப்பு செய்து
    வலுப்படுத்தி உயர்த்துவதே இந்தியர்களின் முதற்பணி”.
  • இது கடந்த காலப் பெருமையுடன் ஒரு புதிய சுயமரியாதையையும், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையையும், தேச பற்றுடன் கூடிய வாழ்வின் ஒரு பேரலையாகவும் நாட்டை புனரமைப்பதற்கான தொடக்கமாகவும் உருவாக்கப்படவேண்டும் என இந்து தேசியம் அமைவதற்கான ஊக்கம் கொடுத்தார்.

இஸ்லாமிய தேசியம் :

  • இஸ்லாம் அலிகார் இயக்கத்தின் வழியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.
  • பிரிட்டிஷார் அலிகார் கல்லூரியை ஏற்படுத்த சையது அகமதுகானுக்கு ஆதரவளித்ததும் முஸ்லீம் தேசிய கட்சி தோன்றவும் உதவியது.
  • வாகாபி இயக்கம் இந்து முஸ்லீம் உறவில் விரிசலை ஏற்படுத்தியது.
  • வாகாபிகளில் தொடங்கி கிலாபத்காரர்கள் வரையானோர் அடிமட்ட செயல்பாடுகளில் காட்டிய செயற்முனைப்பு முஸ்லீம்களை அரசியல்மயமாக்குவதில் முக்கிய பங்காற்றியது.

இந்திய தேசியம்:

  • இந்திய தேசிய காங்கிரஸ், தேசிய வாதம் மற்றும் சமயச்சார்பின்மையில் உறுதியாக இருந்த போதிலும் அதனுடைய உறுப்பினர்கள் இந்து வகுப்புவாத அமைப்புகளில் செயல்படுவதைத் தடுக்க முடியவில்லை.
  • ஆரிய சமாஜத்தின் “சுத்தி” மற்றும் “சங்கதன்” நடவடிக்கைகளில் காங்கிரஸ்காரர்களின் பங்கேற்பு இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களை பிளவுபடுத்தியது.
  • இருப்பினும் நிறைய காங்கிரஸ்காரர்கள் இந்து அமைப்புகளில் ஈடுபட்டாலும் காங்கிரஸ் தலைமை சமயச்சார்பற்றதாகவே விளங்கியது.
  • இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது கூட்டத்தில் பசுவதை குற்றமென அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என காங்கிரஸ்காரர்கள் சிலர் வற்புறுத்திய போது காங்கிரஸ் தலைமை அதனை ஏற்கவில்லை. இவ்வாறாக இந்து தேசியம், முஸ்லீம் தேசியம் மற்றும் இந்திய தேசியம் என இந்திய பிரிவினைக்கு பங்கெடுத்துக் கொண்டது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 6 தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்

V. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

1. 1875லிருந்து இந்தியாவில் நடைபெற்ற இந்து-முஸ்லிம் கலகங்களைத் தொகுத்து எழுதுக.
2. மதம் பொதுவெளிக்கு வரலாமா? – என்பது குறித்து விவாதம் செய்க.

12th History Guide தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் Additional Questions and Answers

1. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
அலிகள் இயக்கத்தின் நிறுவனர் ………………
அ) சையத் அமீர் அலி
ஆ) சையது அகமதுகான்
இ) முகமது அலி ஜின்னா
ஈ) லால் சந்த்
Answer:
ஆ) சையது அகமதுகான்

Samacheer Kalvi 12th History Guide Chapter 6 தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்

Question 2.
காங்கிரஸ் முதல் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ……
அ) 27
ஆ) 72
இ) 92
ஈ) 29
Answer:
ஆ) 72

Question 3.
காங்கிரஸ் முதல் கூட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லீம் எத்தனை பேர்?
அ) 12
ஆ) 8
இ) 4
ஈ) 2
Answer:
ஈ) 2

Question 4.
பஞ்சாப் இந்துசபாவின் முதன்மை தகவல் தொடர்பாளர் ………….
அ) தயானந்த சரஸ்வதி
ஆ) அன்னிபைசன்ட்
இ) லால் சந்த்
ஈ) ஜவஹர்லால் நேரு
Answer:
இ) லால் சந்த்

Samacheer Kalvi 12th History Guide Chapter 6 தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்

Question 5.
“இந்து முஸ்லீம் வகுப்புவாதம் நடுத்தர மக்களிடையே எழுந்த மோதல்களின் விளையே” என கூறியவர் ……
அ) மோதிலால் நேரு
ஆ) கமலா நேரு
இ) ஜவஹர்லால் நேரு
ஈ) மகாத்மாகாந்தி
Answer:
இ) ஜவஹர்லால் நேரு

Question 6.
1915 இந்துகளின் முதல் அகில இந்திய மாநாடு நடைபெற்ற இடம் ……
அ) டெல்லி
ஆ) டேராடூர்
இ) ஹரித்துவார்
ஈ) பம்பாய்
Answer:
இ) ஹரித்துவார்

Samacheer Kalvi 12th History Guide Chapter 6 தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்

Question 7.
“பழைய ரோமானிய இலட்சியமான ‘Divide et Impera’ (பிரித்தளுதல்) என்பது நமதாக வேண்டும்” என எழுதியவர் ……………..
அ) பம்பாய் கவர்னர் எல்பின்ஸ்டன்
ஆ) சென்னை ஆளுநர் வெலிங்டன்
இ) வங்காள கவர்னர் வில்லியம் பெண்டிங்
ஈ) கர்சன்பிரபு
Answer:
அ) பம்பாய் கவர்னர் எல்பின்ஸ்டன்

Question 8.
அகில இந்திய இந்து மகாசவையின் தமையிடமாகிறது.
அ) டேராடூன்
ஆ) ஹரித்துவார்
இ) சென்னை
ஈ) மும்பை
Answer:
அ) டேராடூன்

Question 9.
இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் தூதுவர் என சரோஜினியால் புகழாரம் சூட்டப்பட்டவர் …………………..
அ) சர்சையது அகமுதுகான்
ஆ) முகமது அலி ஜின்னா
இ) லாலா லஜபதிராய்
ஈ) ராஜாஜி
Answer:
ஆ) முகமது அலி ஜின்னா

Question 10.
கூற்று : வாகாபி இயக்கம் இந்து-முஸ்லிம் உறவில் விரிசிலை ஏற்படுத்தியது.
காரணம் : வாகாபிகள் இஸ்லாமை அதனுடைய ஆதித்தூய்மைக்கு அழைத்தும் செல்லவும், அதன் உயிரை உடுக்குலைத்துக் கொண்டிருப்பதாக அவர்கள் கருதிய சில மூட பழக்கங்களை முடிவுக்கு கொண்டுவரவும் விரும்பினர்.
i) கூற்று சரி, காரணம் தவறு
ii) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்
iii) கூற்று தவறு, காரணம் சரி.
iv) கூற்றுக்கு காரணம் சரியான விளக்கம் இல்லை
Answer:
ii) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்

Samacheer Kalvi 12th History Guide Chapter 6 தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்

II. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
இந்து தேசிய வாதிகளில் ஒருவராக அன்னிபெசன்ட் அம்மையார் கூறிய கருத்துக்கள் யாவை?
Answer:

பண்டைய மதங்களைப் புத்துயிர்ப்பு செய்து வலுப்படுத்தி, உயர்த்துவதே இந்தியர்களின் முதற்பணி ஆகும்.

இது கடந்தகாலப் பெருமையுடன், ஒரு புதிய சுய மரியாதையையும், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையையும், ஒரு தவிர்க்க இயலாத விளைவாகவும் தேச பற்றுடன் கூடிய வாழ்வின் ஒரு பேரலையாகவும், நாட்டை புணாமைப்பதற்கான தொடக்கமாகவும் உருவாக்கப்பட வேண்டும் “என அன்னிபெசன்ட் அம்மையார் தனது கருத்தாக கூறியுள்ளார்.

Question 2.
வகுப்பு வாதத்தை தடுப்பதில் காங்கிரசும் அரசாங்கமும் தோல்விகண்டது எவ்வாறு?
Answer:

  • இந்திய தேசிய காங்கிரஸ் தேசியவாதம் மற்றும் சமயச் சார்பின்மையில் உறுதியாக இருந்த போதிலும் அதனுடைய உறுப்பினர்கள் இந்து வகுப்புவாதி அமைப்புகளில் செயல்படுவதை தடுக்க இயலவில்லை.
  • பிரிட்டிஷ் அரசாங்கம் பசுபாதுகாப்பு சங்கங்களை சட்டத்திற்கு புறம்பானவை என அறிவிக்கத்தவறியதும் வகுப்பு வாதத்திற்கு காரணமானவர்களை கைது செய்யத்தவறியதும் மக்களிடம் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தின.
  • பிரிட்டிஷார் வேண்டுமென்றே வகுப்புவாத பிரச்சினையில் காங்கிரஸ்காரர்களை, இந்து வகுப்புவாதம் மற்றும் மறுமலர்ச்சியாளர்களோடு இணைத்து காட்டுவதன்மூலம் வட இந்தியாவில் முஸ்லிம்களிடையே காங்கிரஸ் எதிர்ப்புணர்வுகளை ஏற்படுத்தின.

Samacheer Kalvi 12th History Guide Chapter 6 தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்

Question 3.
1946ல் கிரிப்ஸ்தூதுக்குழுவின் திட்டவரைவுயாது?
Answer:
கிரிப்ஸ்தூதுக்குழுவின் திட்டம்:

  • மூன்றடுக்கு கொண்ட கூட்டாட்சி முறையை பரிந்துரைத்தது.
  • இக்கூட்டாட்சிமுறையில் டெல்லியில் உள்ள மத்திய அரசாங்கம் ஒருங்கிணைப்பாளராகவும் வெளியுறவு விவகாரங்கள், தகவல்தொடர்பு பாதுகாப்பு மற்றும் ஒன்றிய விவகாரங்களுக்கு மட்டுமான நிதிவழங்குதல் ஆகிய குறைந்தபட்ச வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டதாகவும் இருக்கும்.
  • இத்துணைக்கண்டத்தின் மாகாணங்கள் 1) இந்துக்கள் பெருபாண்மையாக உள்ள பகுதி 2) ஐக்கிய மாகாணம் 3) முஸ்லிம்கள் அதிகமாக உள்ள எல்லைப்புற மாகாணங்கள் என பிரிக்கப்படும் என்பனவையாகும்.

Question 4.
முஸ்லிம் லீக்கின் “நேரடி நடவடிக்கை நாள்” என்பது யாது?
Answer:

  • காங்கிரஸ் தலைவர்களும் ஜின்னாவும் அமைச்சரவைத் தூதுக்குழு திட்டத்தை ஏற்றுக்கொண்டனர்.
  • ஆனால் பலவாரங்கள் நடைபெற்ற இரகசிய பேச்சுவார்த்தைக்குப்பின் ஜீலை 29, 1946ல் முஸ்லிம்லீக் அமைச்சரவை தூதுக்குழு திட்டத்தை நிராகரிப்பதாக அறிவித்தது.
  • இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் “இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்” ஆகஸ்ட் 16 அன்று நேரடி நடவடிக்கை நாளில் ஈடுபடவும் அழைப்பு விடுத்தது.
  • கல்கத்தாவில் நான்கு நாட்கள் கலவரங்களும் கொலைகளுமே நடந்தேறின. ஆயிரக்கனக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டன.
  • இதுவரை நாட்டை பிரிவினை செய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துவந்த காந்தியடிகள் முஸ்லிம் லீகின் பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்றார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 6 தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
இந்திய தேசிய காங்கிரஸ் சமய சார்பற்றதாகவே இருந்தது என்பதை நிருபி
Answer:

  • ஆரிய சமாஜம் போன்ற இந்து அமைப்புகளால் நிறைய காங்கிரஸ்காரர்கள் ஈடுபட்ட போதிலும் காங்கிரஸ் தலைமை சமய சார்பற்றதாகவே இருந்தது.
  • இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது கூட்டத்தில் பசுவதையை குற்றமென அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என சில காங்கிரஸ்காரர்கள் முயற்சி செய்த போதிலும் காங்கிரஸ் தலைமை அத்தீர்மானத்தை ஏற்கவில்லை.
  • ஒரு குறிப்பிட்ட இனத்தைப் பாதிக்கும் தீர்மானம் முன்மொழியப்படும்போது அந்த வகுப்பைச் சார்ந்த உறுப்பினர்கள் எதிர்த்தால் எதிர்க்கும் உறுப்பினர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் அத்தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது என்ற முடிவுக்கு காங்கிரஸ் வந்திருக்கிறது.

Question 2.
அலிகார் இயக்க நிறுவனரானசர் சையது அகமதுகாளின் செயல்பாட்டை விளக்குக.
Answer:

  • சர் சையது அகமதுகான் ஆரம்பத்தில் காங்கிரஸ் காரத்.
  • இந்துக்களால் ஆளப்படும் நாட்டில் சிறுபான்மையினரான முஸ்லீம்களுக்கு தக்க உதவிகள் கிடைக்க என்று எண்ணிகாங்கிரஸ் ஆதரவை விலக்கினார்.
  • வட இந்தியாவில் பெரும்பான்மையான முஸ்லீம்கள் இவரது வழியைப் பின்பற்றினர்.
  • பிரிட்டிஷ்அரசாங்கத்தோடு இணக்கமாகசெயல்படுவதன் மூலம் தனது இணத்திற்கு அரசாங்கத்திடமி பெரும் பங்கினை பெற்றுத்தர இயலும் என எண்ணினார்.
  • சர் சையது அகமதுகான் லண்டன் பிரிவு கவுன்சிலிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியரான கை அமீர் அலி போன்ற முஸ்லீம் தலைவர்கள் காங்கிரஸ் என்பது இந்து அமைப்பாக பிரதிபலிக்கும் வாதிட்டனர்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 6 தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்

Question 3.
“அகண்ட இந்துஸ்தான்” – குறிப்பு தருக.
Answer:

  • 1924ல் பஞ்சாப் மாகாணம் இந்து முஸ்லிம் மாகாணங்களாகப் பிரிக்கப்பட வேண்டும் என லாலா லஜபதிராய்’ கூறினார்.
  • அரசியல் களத்தில் இந்து மத மறுமலர்ச்சிக்கு ஆதரவான சக்திகளைப் பிரதிநிதித்துவப் படுத்திய இந்து மகாசபை அகண்ட இந்துஸ்தான்” என்னும் முழுக்கத்தை முன்வைத்தது.
  • இது முஸ்லீம் லீக்கின் தனித்தொகுதிக் கோரிக்கைக்கு எதிராக வைக்கப்பட்டதாகும்.

Question 4.
பிரிவினவாத தேசியத்தின் வளர்ச்சி குறித்த தனது மனவேதனையைகாந்தி எவ்வாறு வெளிபடுத்தினர்?
Answer:

  • “தனி மனிதர்களின் எண்ணிக்கையைப் போலவே பல மதங்கள் உள்ளன. ஆனால் தேசியத்தின் ஆன்மா குறித்த விழிப்புணர்வுள்ளவர்கள் மற்றவர்களின் மதங்களில் தலையிட மாட்டார்கள்.
  • தங்கள் நாட்டை உருவாக்கிய இந்துக்கள் சீக்கியர்கள், முகமதியர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் ஆகிய அனைவரும் நாட்டின் சக மனிதர்களே.
  • தங்களுடைய நலன்களுக்காக அவர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்ததாக வேண்டும்.
  • உலகத்தின் எந்த ஒரு பகுதியிலும் ஒரு நாட்டுரிமையும் ஒரு மதமும் ஒரே பொருளைத் தருகிற வார்த்தைகளாக இல்லை.

இந்தியாவில் அவ்வாறு எப்போதுமே இருந்தது இல்லை என பிரிவினைவாத தேசிய வளர்ச்சி குறித்து தனது மன வேதனையை மகாத்மாகாந்தி வெளிப்படுத்தினார்.

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.6

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Maths Guide Pdf Chapter 7 Applications of Differential Calculus Ex 7.6 Textbook Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Maths Solutions Chapter 7 Applications of Differential Calculus Ex 7.6

Question 1.
Find the absolute extrema of the following functions on the given closed interval.
(i) f(x) = x² – 12x + 10; [1, 2]
(ii) f(x) = 3x4 – 4x³; [-1, 2].
(iii) f(x)= 6x\(\frac { 4 }{ 3 }\) – 3x\(\frac { 1 }{ 3 }\); [-1, 1]
(iv) f(x) = 2 cos x + sin 2x; [0, \(\frac { π }{ 2 }\) ]
Solution:
(i) f(x) = x² – 12x + 10;
f'(x) = 2x – 12
f'(x) = 0 ⇒ 2x – 12 = 0
x = 6 ∉ (1, 2)
Now, Evaluating f(x) at the end points x = 1, 2
f(1) = 1 – 12 + 10 = -1
f(2) = 4 – 24 + 10 = -10
Absolute maximum f(1) = -1
Absolute minimum f(2) = -10

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.6

(ii) f(x) = 3x4 – 4x3
f'(x) = 12x3 – 12x2
f'(x) = 0 ⇒ 12x2(x – 1) = 0
⇒ x = 0 or x = 1
[Here x = 0, 1 ∈ [-1, 2]]
Now f (-1) = 4
f(0) = 0
f(1) = -1
f(2) = 16
so absolute maximum = 16 and absolute minimum = -1
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.6 1
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.6 2

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.6

Question 2.
Find the intervals of monotonicities and hence find the local extremum for the following functions:
(i) f(x) = 2x³ + 3x² – 12x
(ii) f(x) = \(\frac { x }{ x-5 }\)
(iii) f(x) = \(\frac { e^x }{ 1-e^x }\)
(iv) f(x) = \(\frac { x^3 }{ 3 }\) – log x
(v) f(x) = sin x cos x+ 5, x ∈ (0, 2π)
Solution:
(i) f(x) = 2x³ + 3x² – 12x
f'(x) = 6x² + 6x – 12
f'(x) = 0 ⇒ 6(x² + x – 2) = 0
(x + 2)(x – 1) = 0
Stationary points x = -2, 1
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.6 3
Now, the intervals of monotonicity are
(-∞, -2), (-2, 1) and (1, ∞)
In (-∞, -2), f'(x) > 0 ⇒ f(x) is strictly increasing.
In (-2, 1), f'(x) < 0 ⇒ f(x) is strictly decreasing.
In (1, ∞), f'(x) > 0 ⇒ f(x) is strictly increasing.
f(x) attains local maximum as f'(x) changes its sign from positive to negative when passing through x = -2.
Local maximum
f(-2) = 2 (-8) + 3 (4) – 12 (-2)
= -16 + 12 + 24 = 20
f(x) attains local minimum as f'(x) changes its sign from negative to positive when passing through x = 1.
∴ Local minimum f(1) = 2 + 3 – 12 = -7

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.6

(ii) f(x) = \(\frac { x }{ x-5 }\)
f'(x) = \(\frac { (x-5)(1)-x(1) }{ (x-5)^2 }\) = –\(\frac { 5 }{ (x-5)^2 }\)
f'(x) = 0, which is absured
But in f(x) = \(\frac { x }{ x-5 }\)
The function is defined only when x < 5 or x > 5
∴ The intervals are (-∞, 5) and (5, ∞)
In the interval (-∞, 5), f'(x) < 0
In the interval (5, ∞), f'(x) < 0
∴ f(x) is strictly decreasing in (-∞, 5) and (5, ∞)
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.6 4
When x = 0, f(x) becomes undefined.
∴ x = 0 is an excluded value.
∴ The intervals are (-∞, 0) ∪ (0, ∞) in – (-∞, ∞), f'(x) > 0
∴ f(x) is strictly increasing in (- ∞, ∞) and there is no extremum.

(iv) f(x)= \(\frac { x^3 }{ 3 }\) – log x
f'(x) = x² – \(\frac { 1 }{ x }\)
f'(x) = 0 ⇒ x³ – 1 = 0 ⇒ x = 1
The intervals are (0, 1) and (1, ∞).
i.e., when x > 0, the function f(x) is defined in the interval (0, 1), f'(x) < 0
∴ f(x) is strictly decreasing in (0, 1) in the interval (1, ∞), f'(x) > 0
∴f(x) is strictly increasing in (1, ∞)
f(x) attains local minimum as f'(x) changes its sign from negative to positive when passing through x = 1
∴ Local minimum
f(1) = \(\frac { 1 }{ 3 }\) – log 1 = \(\frac { 1 }{ 3 }\) – 0 = \(\frac { 1 }{ 3 }\)

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.6

(v) f(x) = sin x cos x + 5, x ∈ (0, 2π)
f'(x) = cos 2x
f'(x) = 0 ⇒ cos 2x = 0
Stationary points
x = \(\frac { π }{ 4 }\), \(\frac { 3π }{ 4 }\), \(\frac { 5π }{ 4 }\), \(\frac { π }{ 4 }\) ∈x = (0, 2π)
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.6 5
In the interval (0, \(\frac { π }{ 4 }\)), f'(x) > 0 ⇒ f(x) is strictly increasing.
In the interval (\(\frac { π }{ 4 }\), \(\frac { 3π }{ 4 }\)), f'(x) < 0 ⇒ f(x) is strictly decreasing.
In the interval (\(\frac { 3π }{ 4 }\), \(\frac { 5π }{ 4 }\)), f'(x) > 0 ⇒ f(x) is strictly increasing.
In the interval (\(\frac { 5π }{ 4 }\), \(\frac { 7π }{ 4 }\)), f'(x) < 0 ⇒ f(x) is strictly decreasing.
In the interval (\(\frac { 7π }{ 4 }\), 2π), f'(x) > 0 ⇒ f(x) is strictly increasing.
f'(x) changes its sign from positive to negative when passing through x = \(\frac { π }{ 4 }\) and x = \(\frac { 5π }{ 4 }\)
∴ f(x) attains local maximum at x = \(\frac { π }{ 4 }\) and \(\frac { 5π }{ 4 }\)
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.6 6
f'(x) changes its sign from negative to positive when passing through x = \(\frac { 3π }{ 4 }\) and x = \(\frac { 7π }{ 4 }\)
∴ f(x) attains local maximum at x = \(\frac { 3π }{ 4 }\) and x = \(\frac { 5π }{ 4 }\)
Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.6 7

Samacheer Kalvi 12th Maths Guide Chapter 7 Applications of Differential Calculus Ex 7.6

Read More:

KOTAKBANK Pivot Point Calculator

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.12

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Business Maths Guide Pdf Chapter 2 Integral Calculus I Ex 2.12 Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Business Maths Solutions Chapter 2 Integral Calculus I Ex 2.12

Choose the most suitable answer from the given four alternatives:

Question 1.
∫\(\frac { 1 }{x^3}\) dx is
(a) \(\frac { -3 }{x^2}\) + c
(b) \(\frac { -1 }{2x^2}\) + c
(c) \(\frac { -1 }{3x^2}\) + c
(d) \(\frac { -2 }{x^2}\) + c
Solution:
(b) \(\frac { -1 }{2x^2}\) + c
Hint:
∫\(\frac { 1 }{x^3}\) dx = ∫x-3 dx = [ \(\frac { x^{-3+1} }{-3+1}\) ] + c
= (\(\frac { x^{-2} }{-2}\)) + c = \(\frac { -1 }{2x^2}\) + c

Question 2.
∫2x dx is
(a) 2x log 2 + c
(b) 2x + c
(c) \(\frac { 2^x }{log 2}\) + c
(d) \(\frac { log 2 }{2^x}\) + c
Solution:
(c) \(\frac { 2^x }{log 2}\) + c
Hint:
∫2x dx = ∫ax dx = \(\frac { a^x }{log a}\) + c

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.12

Question 3.
∫\(\frac { sin 2x }{2 sin x}\) dx is
(a) sin x + c
(b) \(\frac { 1 }{2}\) sin x + c
(c) cos x + c
(d) \(\frac { 1 }{2}\) cos x + c
Solution:
(a) sin x + c
Hint:
∫\(\frac { sin 2x }{2 sin x}\) dx = ∫\(\frac { 2sin x cos x }{2 sin x}\) dx
= ∫cos x dx
= sin x + c

Question 4.
∫\(\frac { sin 5x-sin x }{cos 3x}\) dx is
(a) -cos 2x + c
(b) -cos 2x – c
(c) –\(\frac { 1 }{4}\) cos 2x + c
(d) -4 cos 2x + c
Solution:
(a) -cos 2x + c
Hint:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.12 1

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.12

Question 5.
∫\(\frac { log x}{x}\) dx, x > 0 is
(a) \(\frac { 1 }{2}\) (log x)² + c
(b) –\(\frac { 1 }{2}\) (log x)²
(c) \(\frac { 2 }{x^2}\) + c
(d) \(\frac { 2 }{x^2}\) – c
Solution:
(a) \(\frac { 1 }{2}\) (log x)² + c
Hint:
∫\(\frac { log x}{x}\) dx, x > 0
∫ tdt = [ \(\frac { t^2 }{2}\) ] + c
= \(\frac { (log x)^2 }{2}\) + c
let t = log x
\(\frac { dt }{dx}\) = \(\frac { 1 }{x}\)
dt = \(\frac { 1 }{x}\) dx

Question 6.
∫\(\frac { e^x }{\sqrt{1+e^x}}\) dx is
(a) \(\frac { e^x }{\sqrt{1+e^x}}\) + c
(b) 2\(\sqrt{1+e^x}\) + c
(c) \(\sqrt{1+e^x}\) + c
(d) ex\(\sqrt{1+e^x}\) + c
Solution:
(b) 2\(\sqrt{1+e^x}\) + c
Hint:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.12 2

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.12

Question 7.
∫\(\sqrt { e^x}\) dx is
(a) \(\sqrt { e^x}\) + c
(b) 2\(\sqrt { e^x}\) + c
(c) \(\frac { 1 }{2}\) \(\sqrt { e^x}\) + c
(d) \(\frac { 1 }{2\sqrt { e^x}}\) + c
Solution:
(b) 2\(\sqrt { e^x}\) + c
Hint:
∫\(\sqrt { e^x}\) dx
= ∫\(\sqrt { e^x}\) dx = ∫(ex)1/2 dx = ∫ ex/2 dx
= \(\frac { e^{x/2} }{1/2}\) + c = 2ex/2 + c
= 2(ex)1/2 + c = 2\(\sqrt { e^x}\) + c

Question 8.
∫e2x [2x² + 2x] dx
(a) e2x x² + c
(b) xe2x + c
(c) 2x²e² + c
(d) \(\frac { x^2e^x }{2}\) + c
Solution:
(a) e2x x² + c
Hint:
∫e2x (2x² + 2x) dx
Let f(x) = x²; f'(x) = 2x and a = 2
= ∫eax [af(x),+ f ’(x)] = eax f(x) + c
= ∫e2x (2x² + 2x) dx = e2x (x²) + c

Question 9.
\(\frac { e^x }{e^x+1}\) dx is
(a) log |\(\frac { e^x }{e^x+1}\)| + c
(b) log |\(\frac { e^x+1 }{e^x}\)| + c
(c) log |ex| + c
(d) log |ex + 1| + c
Solution:
(d) log |ex + 1| + c
Hint:
∫\(\frac { e^x }{e^x+1}\) dx
= ∫\(\frac { dt }{t}\)
= log |t| + c
= log |ex + 1| + c
take t = ex + 1
\(\frac { dt }{dx}\) = ex
dt = ex dx

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.12

Question 10.
∫\(\frac { 9 }{x-3}-\frac { 1 }{x+1}\) dx is
(a) log |x – 3| – log|x + 1| + c
(b) log|x – 3| + log|x + 1| + c
(c) 9 log |x – 3| – log |x + 1| + c
(d) 9 log |x – 3| + log |x + 1| + c
Solution:
(c) 9 log |x – 3| – log |x + 1| + c
Hint:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.12 3

Question 11.
∫\(\frac { 2x^3 }{4+x^4}\) dx is
(a) log |4 + x4| + c
(b) \(\frac { 1 }{2}\) log |4 + x4| + c
(c) \(\frac { 1 }{2}\) log |4 + x4| + c
(d) log |\(\frac { 2x^3 }{4+x^4}\) + c
Solution:
(b) \(\frac { 1 }{2}\) log |4 + x4| + c
Hint:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.12 4

Question 12.
∫\(\frac { dx }{\sqrt{x^2-36}}\) is
(a) \(\sqrt{x^2-36}\) + c
(b) log |x + \(\sqrt{x^2-36}\)| + c
(c) log |x – \(\sqrt{x^2-36}\)| + c
(d) log |x² + \(\sqrt{x^2-36}\)| + c
Solution:
(b) log |x + \(\sqrt{x^2-36}\)| + c
Hint:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.12 5

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.12

Question 13.
∫\(\frac { 2x+3 }{\sqrt{x^2+3x+2}}\) dx is
(a) \(\sqrt{x^2+3x+2}\) + c
(b) 2\(\sqrt{x^2+3x+2}\) + c
(c) \(\sqrt{x^2+3x+2}\) + c
(d) \(\frac { 2 }{3}\) (x² + 3x + 2) + c
Solution:
(b) 2\(\sqrt{x^2+3x+2}\) + c
Hint:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.12 6

Question 14.
\(\int_{0}^{4}\) (2x + 1) dx is
(a) 1
(b) 2
(c) 3
(d) 4
Solution:
(b) 2
Hint:
\(\int_{0}^{4}\) (2x + 1) dx
= [2(\(\frac { x^2 }{2}\)) + x]\(_{0}^{1}\) = [x² + x]\(_{0}^{1}\)
= [(1)² + (1)] – [0] = 2

Question 15.
\(\int_{2}^{4}\) \(\frac { dx }{x}\) is
(a) log 4
(b) 0
(c) log 2
(d) log 8
Solution:
(c) log 2
Hint:
\(\int_{2}^{4}\) \(\frac { dx }{x}\)
\(\int_{2}^{4}\) \(\frac { dx }{x}\) = [log |x|]\(_{0}^{1}\) = log |4| – log |2|
= log[ \(\frac { 4}{2}\) ] = log 2

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.12

Question 16.
\(\int_{0}^{∞}\) e-2x dx is
(a) 0
(b) 1
(c) 2
(d) \(\frac { 1 }{2}\)
Solution:
(d) \(\frac { 1 }{2}\)
Hint:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.12 7

Question 17.
\(\int_{-1}^{1}\) x³ ex4 dx is
(a) 1
(b) 2\(\int_{0}^{1}\) x³ ex4
(c) 0
(d) ex4
Solution:
(c) 0
Hint:
\(\int_{-1}^{1}\) x³ ex4 dx
Let f (x) = x³ex4
f(-x) = (-x)² e(-x)4
= -x² ex4
f(-x) = -f(x)
⇒ f(x) is an odd function
∴ \(\int_{-1}^{1}\) x³ ex4 dx = 0

Question 18.
If f(x) is a continuous function and a < c < b, then \(\int_{a}^{c}\) f(x) dx + \(\int_{c}^{b}\) f(x) dx is
(a) \(\int_{a}^{b}\) f(x) dx – \(\int_{a}^{c}\) f(x) dx
(b) \(\int_{a}^{c}\) f(x) dx – \(\int_{a}^{b}\) f(x) dx
(c) \(\int_{a}^{b}\) f(x) dx
(d) 0
Solution:
(c) \(\int_{a}^{b}\) f(x) dx

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.12

Question 19.
The value of \(\int_{-π/2}^{π/2}\) cos x dx is
(a) 0
(b) 2
(c) 1
(d) 4
Solution:
(b) 2
Hint:
\(\int_{-π/2}^{π/2}\) cos x dx
Let f(x) = cos x
f(-x) = cos (-x) = cos (x) = f(x)
∴ f(x) is an even function
\(\int_{-π/2}^{π/2}\) cos x dx = 2 × \(\int_{0}^{π/2}\) cos x dx
= 2 × [sin x]\(_{0}^{-π/2}\) = 2 [sin π/2 – sin 0]
= 2 [1 – 0] = 2

Question 20.
\(\int_{-π/2}^{π/2}\) \(\sqrt {x^4(1-x)^2}\) dx
(a) \(\frac { 1 }{12}\)
(b) \(\frac { -7 }{12}\)
(c) \(\frac { 7 }{12}\)
(d) \(\frac { -1 }{12}\)
Solution:
(a) \(\frac { 1 }{12}\)
Hint:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.12 8

Question 21.
If \(\int_{0}^{1}\) f(x) dx = 1, \(\int_{0}^{1}\) x f(x) dx = a and \(\int_{0}^{1}\) x² f(x) dx = a², then \(\int_{0}^{1}\) (a – x)² f(x) dx is
(a) 4a²
(b) 0
(c) a²
(d) 1
Solution:
(b) 0
Hint:
\(\int_{0}^{1}\) (a – x)² f(x) dx
= \(\int_{0}^{1}\) [a² +x² – 2ax] f(x) dx
= \(\int_{0}^{1}\) a² + f (x) dx + \(\int_{0}^{1}\) x² f (x) dx – 2a\(\int_{0}^{1}\) x f(x) dx
= a²(1) + a² – 2a(a) – 2a² – 2a² = 0

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.12

Question 22.
The value of \(\int_{2}^{3}\) f(5 – x) dx – \(\int_{2}^{3}\) f(x) dx is
(a) 1
(b) 0
(c) -1
(d) 5
Solution:
(b) 0
Hint:
\(\int_{2}^{3}\) f(5 – x) dx – \(\int_{2}^{3}\) f(x) dx
Using the property
= \(\int_{2}^{3}\) f(x) dx = \(\int_{a}^{b}\) f(a + b – x) dx
= \(\int_{2}^{3}\) f (5 – x) – \(\int_{2}^{3}\) f (5 – x) dx
= 0

Question 23.
\(\int_{0}^{4}\) (√x + \(\frac { 1 }{√x}\)), dx is
(a) \(\frac { 20 }{3}\)
(b) \(\frac { 21 }{3}\)
(c) \(\frac { 28 }{3}\)
(d) \(\frac { 1 }{3}\)
Solution:
(c) \(\frac { 28 }{3}\)
Hint:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.12 9

Question 24.
\(\int_{0}^{π/3}\) tan x dx is
(a) log 2
(b) 0
(c) log √2
(d) 2 log 2
Solution:
(a) log 2
Hint:
\(\int_{0}^{π/3}\) tan x dx
= ∫tan x dx
= ∫\(\frac { sin x }{cos x}\) dx
= -∫\(\frac { -sin x }{cos x}\) dx
= -log |cos x| + c
= log sec x + c
= [log (sec x)]\(_{0}^{π/3}\)
= log [(sec π/3) – log (sec 0)]
= log (2) – log (1)
= log 2 – (0) = log 2

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.12

Question 25.
Using the factorial representation of the gamma function, which of the following is the solution for the gamma function Γ(n) when n = 8
(a) 5040
(b) 5400
(c) 4500
(d) 5540
Solution:
(a) 5040
Hint:
\(\Upsilon\) (8) = 7! = 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1 = 5040

Question 26.
Γ(n) is
(a) (n – 1)!
(b) n!
(c) n Γ (n)
(d) (n – 1) Γ(n)
Solution:
(a) (n – 1)!
Hint:
Γ(n) = Γ(n – 1) + 1 = (n – 1)!

Question 27.
Γ(1) is
(a) 0
(b) 1
(c) n
(d) n!
Solution:
(b) 1
Hint:
\(\Upsilon\) (1) = 0! = 1

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.12

Question 28.
If n > 0, then Γ(n) is
(a) \(\int_{0}^{1}\) e-x xn-1 dx
(b) \(\int_{0}^{1}\) e-x xⁿ dx
(c) \(\int_{0}^{∞}\) ex x-n dx
(d) \(\int_{0}^{∞}\) e-x xn-1 dx
Solution:
(d) \(\int_{0}^{∞}\) e-x xn-1 dx

Question 29.
Γ(\(\frac { 3 }{2}\))
(a) √π
(b) \(\frac { √π }{2}\)
(c) 2√π
(d) \(\frac { 3 }{2}\)
Solution:
(b) \(\frac { √π }{2}\)
Hint:
\(\Upsilon\) (3/2) = \(\frac { 2 }{2}\) \(\Upsilon\) [ \(\frac { 3 }{2}\) ]
= \(\frac { 3 }{2}\) √π

Question 30.
\(\int_{0}^{∞}\) x4 e-x dx is
(a) 12
(b) 4
(c) 4!
(d) 64
Solution:
(b) \(\frac { √π }{2}\)
Hint:
\(\int_{0}^{∞}\) x4 e-x dx
= ∫xⁿ e-ax dx = \(\frac { n! }{a{n+1}}\)
= \(\frac { 4! }{(1)^{n+1}}\)
= \(\frac { 4! }{(1)^5}\)
= 4!

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.12

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th History Guide Pdf Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th History Solutions Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

12th History Guide இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
1947இன் இறுதியில் கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் ரஷ்யாவின் செல்வாக்கிலிருந்து விடுபட்டிருந்த ஒரே நாடு …………….
அ. கிழக்கு ஜெர்மனி
ஆ. செக்கோஸ்லோவாக்கியா
இ. கிரீஸ்
ஈ. துருக்கி
Answer:
ஆ. செக்கோஸ்லோவாக்கியா

Question 2.
கூற்று : ஸ்டாலின் சர்ச்சிலை ஒரு போர் விரும்பி என விமர்சித்தார்.
காரணம் : கம்யூனிசத்திற்கு எதிராக மேற்கு ஐரோப்பிய நாடுகள் கூட்டு சேர வேண்டுமென சர்ச்சில் முன்னதாக அழைப்பு விடுத்திருந்தார்.
அ. கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ. கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
இ. கூற்று சரி. காரணம் தவறு.
ஈ. கூற்று தவறு. காரணம் சரி.
Answer:
ஆ. கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 3.
பனிப்போர்’ எனும் சொல்லை உருவாக்கியவர்
அ. பெர்னாட் பரூச்
ஆ. ஜார்ஜ் ஆர்வெல்
இ. ஜார்ஜ் கென்னன்
ஈ. சர்ச்சில்
Answer:
ஆ. ஜார்ஜ் ஆர்வெல்

Question 4.
கூற்று : மார்ஷல் திட்டத்தை “டாலர் ஏகாதிபத்தியம் ” என சோவியத் வெளியுறவுத் துறை அமைச்சர் இகழ்ந்தார்.
காரணம் : சோவியத்தின் கண்ணோட்டத்தில் மார்ஷல் திட்டமென்பது அமெரிக்காவின் செல்வாக்கைப் பரப்புவதற்கான சூழ்ச்சியே ஆகும்.
அ. கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ. கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
இ. கூற்று சரி. காரணம் தவறு.
ஈ. கூற்று தவறு. காரணம் சரி.
Answer:
அ. கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

Question 5.
மார்ஷல் உதவித் திட்டத்தின் குறிக்கோள் …………………….
அ. ஐரோப்பியப் பொருளாதாரத்தை மறுகட்டுமானம் செய்வது
ஆ. முதலாளித்துவத் தொழில் முயற்சிகளைப் பாதுகாப்பது
இ. ஐரோப்பாவில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவுவது
ஈ. சோவியத் ரஷ்யாவிற்கு எதிராக இராணுவக் கூட்டமைப்பை உருவாக்குவது
Answer:
அ. ஐரோப்பியப் பொருளாதாரத்தை மறுகட்டுமானம் செய்வது

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 6.
ட்ரூமன் கோட்பாடு …………… பரிந்துரைத்தது
அ. கம்யூனிசம் பரவுவதைத் தடுப்பதற்கான நிதியுதவி
ஆ. காலனிகளிலுள்ள கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவது
இ. கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது
ஈ. அமெரிக்கத் தளபதியின் தலைமையின் கீழ் ஐ.நா சபைக்கு நிரந்தரப் படையை உருவாக்குவது
Answer:
அ. கம்யூனிசம் பரவுவதைத் தடுப்பதற்கான நிதியுதவி

Question 7.
கீழ்க்காண்பனவற்றை காலவரிசைப்படி ஒழுங்கு செய்யவும்.
1) வார்சா உடன்படிக்கை
2) சென்டோ
3) சீட்டோ
4) நேட்டோ
அ) 4 2 3 1
ஆ) 1 3 2 4
இ) 4 3 21
ஈ) 1 2 3 4
Answer:
அ) 4 2 3 1

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 8.
……………. பாக்தாத் உடன்படிக்கையின் குறிக்கோளாக இருந்தது.
அ. மத்திய கிழக்கில் இங்கிலாந்தின் தலைமையைப் பாதுகாப்பது
ஆ. அப்பகுதி சார்ந்த எண்ணை வளங்களைச் சுரண்டுவது
இ. கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கைத் தடுப்பது
ஈ. ஈராக் அரசை வலிமை குன்றச் செய்வது
Answer:
இ. கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கைத் தடுப்பது

Question 9.
லெபனானில் அமெரிக்கா தலையிட்டதை ………….. எதிர்த்தது
அ. துருக்கி
ஆ. ஈராக்
இ. இந்தியா
ஈ. பாகிஸ்தான்
Answer:
ஆ. ஈராக்

Question 10.
“மூன்றாம் உலகம் ” எனும் பதத்தை உருவாக்கியவர் …………… ஆவார்.
அ. ஆல்பிரட் சாவே
ஆ. மார்ஷல்
இ. மோலோடோவ்
ஈ. ஹாரி ட்ரூமன்
Answer:
அ. ஆல்பிரட் சாவே

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 11.
பொருத்திப் பார்த்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் சரியானதைத் தேர்வு செய்க

அ. இந்தோனேசியா 1. ஜவகர்லால் நேரு
ஆ எகிப்து 2. டிட்டோம்
இ. கானா 3. குவாமி நுக்ருமா
ஈ.யுகோஸ்லோவியா- 4. கமால் அப்துல் நாசர்
உ. இந்தியா 5. சுகர்னோ

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 16

Answer:
இ) 5 4 3 2 1

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 12.
அணிசேரா இயக்கத்தின் முதல் உச்சி மாநாடு ………….. ல் நடைபெற்றது
அ. பெல்கிரேடு
ஆ. பெய்ஜிங்
இ. பாண்டுங்
Answer:
அ. பெல்கிரேடு

Question 13.
கூற்று : பன்னாட்டு சங்கம் ஒரு தோல்வி என்பதை இரண்டாம் உலகப்போர் நிரூபித்தது.
காரணம் : மற்றொரு போர் ஏற்படாவண்ணம் தடுக்க ஒரு சக்திவாய்ந்த அமைப்பை உருவாக்க இது வேண்டியதன் அவசியத்தை தலைவர்கள் உணர்ந்தனர்.
அ. கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ. கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
இ. கூற்று சரி. காரணம் தவறு.
ஈ. கூற்று தவறு. காரணம் சரி.
Answer:
அ. கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

Question 14.
ஐக்கிய நாடுகள் சபை 1945 அக்டோபர் 24இல் ……………. உருவானது.
அ. 100 உறுப்பினர்களுடன்
ஆ. 72 உறுப்பினர்களுடன்
இ. 51 உறுப்பினர்களுடன்
ஈ. 126 உறுப்பினர்களுடன்
Answer:
இ. 51 உறுப்பினர்களுடன்

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 15.
பின்வரும் கூற்றுகளில் எக்கூற்றுகள் சரியானவை?
கூற்று I : ஐக்கிய நாடுகள் சபையின் தோற்றம் பனிப்போரின் தொடக்கத்துடன் ஒருங்கே நடைபெற்றது.
கூற்று II : பனிப்போர் காலக்கட்டத்தில், போர்கள் நிகழாமல் தடுப்பதில் ஐ.நா சபை முக்கிய பங்காற்றியது.
கூற்று III: பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்கள் தொடர்புடைய பிரச்சனைகளில் ஐ.நா சபை மௌனமான பார்வையாளராகவே இருந்தது. ‘
அ. I,II
ஆ. II,III
இ. I, III
ஈ. மேற்கூறப்பட்ட அனைத்தும்
Answer:
ஈ. மேற்கூறப்பட்ட அனைத்தும

Question 16.
சூயஸ் கால்வாய் செங்கடலை இணைக்கிறது.
அ. ஏடன் வளைகுடாவுடன்
ஆ. காம்பே வளைகுடாவுடன்
இ. மத்தியதரைக் கடலுடன்
ஈ. அரபிக் கடலுடன்
Answer:
இ. மத்தியதரைக் கடலுடன்

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 17.
ஐ.நா சபையின் முதல் பொதுச் செயலாளர் டிரிக்வே ………….. வை சேர்ந்தவராவார்.
அ. பர்மா
ஆ. ஜப்பான்
இ. சிங்கப்பூர்
ஈ. நார்வே
Answer:
ஈ. நார்வே

Question 18.
கூற்று : 2017இல் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியே செல்வதாக (Exit) அறிவித்தது.
காரணம் : பிரிட்டனின் வெளியேற்றம் பிரெக்ஸிட்’ (Brexit) என அழைக்கப்படுகிறது.
அ. கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ. கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
இ. கூற்று சரி. காரணம் தவறு.
ஈ. கூற்று தவறு. காரணம் சரி.
Answer:
அ. கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

Question 19.
கிளாஸ்நாஸ்ட் குறிப்பது …………………..
அ. ஒளிவுமறைவற்ற வெளிப்படைத் தன்மையை
ஆ. சோவியத் கம்யூனிச கட்சியை ஜனநாயகப் படுத்தப்படுவதை
இ. சோவியத் ஐக்கிய பாராளுமன்றம் மறுகட்டமைப்புச் செய்யப்படுவதை
ஈ. பொதுவுடைமைத் தத்துவத்திற்குப் புத்துயிர் அளிப்பதை
Answer:
ஆ. சோவியத் கம்யூனிச கட்சியை ஜனநாயகப் படுத்தப்படுவதை

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 20.
சோவியத் யூனியன் …………………. இல் சிதறுண்ட து.
அ. நவம்பர் 17, 1991
ஆ. டிசம்பர் 8, 1991
இ. மே 1. 1991
ஈ. அக்டோபர் 17, 1991
Answer:
ஆ. டிசம்பர் 8, 1991

II. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகியவற்றின் உளவு நிறுவங்களைக் குறிப்பிடவும்.
Answer:

  • அமெரிக்கா உளவு நிறுவனம் CIA – மத்திய புலனாய்வு முகமை) – 1247இல் நிறுவப்பட்டது.
  • சோவியத் யூனியன் உளவு நிறுவனம் KB – சோவியத் யூனியன் உளவு நிறுவனம் 1954ல் நிறுவப்பட்டது.

Question 2.
கம்யூனிசத்தைக் கட்டுக்குள் வைத்தல் எனும் கோட்பாட்டை விளக்குக

Answer:

  • அமெரிக்க குடியரசுத் தலைவர் ஹாரி. எஸ். டரூமன் “எந்த நாட்டை கொள்கையினால் மேலாதிக்கம் செலுத்தப்படுகிறதோ அந்நாடுகளுக்குப் பொருளாதாரம் ராணுவ உதவிகளை வழங்கப் போவதாக அறிவித்தார்.
  • இது அமெரிக்காவின் “கம்யூனிசத்தைக் கட்டுக்குள் வைத்தல்” எனரும் கோட்பாட்டை வரையறை செய்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 3.
ஐ.நா சபையில் நிறைவேற்றப்பட்ட “அமைதிக்காக இணைகிறோம்” எனும் தீர்மானத்தின் சிறப்பினைக் குறிப்பிடவும்.
Answer:

  • அமெரிக்காவின் முயற்சியால் ஐக்கிய நாட்டு பொது அவை “அமைதிக்காக இணைகிறோம்” எனும் தீர்மானத்தை நிறைவேற்றியது.
  • பாதுகாப்பு அவையானது நெருக்கடிகளில் உடன்பாடு எட்டப்படாமல் போனால் பொது அவை ராணுவத்தைப் பயன்படுத்தும் என பரிந்துரை செய்தது.
  • சோவியத் யூனியன் இது சட்டத்திற்கு புறம்பானது என எண்ணியது.

Question 4.
‘கோமிங்பார்ம்’ குறித்து நீங்கள் அறிவதென்ன?
Answer:

  • சோவியத் யூனியனில் கோமிங்பார்ம் எனும் அமைப்பு
  • ஐரோப்பிய நாடுகளின் அனைத்து கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் இதில் அங்கம் வகித்தனர்.
  • இந்த அமைப்பு கம்யூனிஸ்ட் அல்லாத நாடுகளுடனான வணிக உறவுகளை தடுக்க முயன்றது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 5.
பனிப்போர் காலகட்டத்தைச் சேர்ந்த மறைமுக’ போர்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.
Answer:

  • பனிப்போர் காலகட்டத்தில் நடைபெற்ற மறைமுக போர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு- கொரியப் போர், வியட்நாம் போர் ஆகும்.
  • வட கொரியா மற்றும் வட வியட்நாம் கம்யூனிச அரசுகளுக்கு சோவியத் யூனியன் ஆதரவளித்தது.
  • தென் கொரியாவுக்கும், தென் வியட்நாமுக்கும் அமெரிக்கா ஆதரவு அளித்தது.
  • இந்நிகழ்வு இருபெரும் வல்லரசுகளுக்கிடையே இருந்த பனிப்போரை எடுத்துக்காட்டுகிறது.

Question 6.
ஹங்கேரியச் சிக்கலின் பின்னணி யாது?
Answer:

  • ஸ்டாலின் ஆட்சியின் போது ஹங்கேரி பிரதமராக நியமிக்கப்பட்ட ரகோசி 1953ல் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
  • இம்ரே நெகி என்பவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவருக்கு அரசாங்க ஆதரவு இல்லை.
  • அறிவார்ந்த மக்களால் ரகோசிக்கு நடத்தப்பட்ட கிளர்ச்சி 1956ல் அவர் பதவி விலகிய பின்னும் நீடித்து தேசிய எழுச்சியானது.
  • இம்ரே நெகி ஒரு கூட்டணி ஆட்சியை நிறுவினார். கிளர்ச்சி தொடரவே ரஷ்யா ஹங்கேரிக்கு படைகளை அனுப்பி கிளர்ச்சியை ஒடுக்கியது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 7.
ஷூமன் திட்டம் என்றால் என்ன?
Answer:

  • பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் சமரசம் ஏற்பட்டால் அது இரு நாடுகளுக்கு நன்மை என்றார் ஷீமன்.
  • இரு நாடுகளின் நிலக்கரி எக்கு கூட்டு உற்பத்தியை உயர்மட்ட ஆணையம் மூலம் நிர்வகிக்கப்பட வேண்டும் என முன்மொழிந்தார்.
  • பொருளாதார ஒருங்கிணைப்புக்கான திட்டம் பரஸ்பர ஆர்வத்தை உருவாக்கி இரு நாடுகளையும் இணைத்தது.
  • இதுவே ஷீமன் திட்டம் ஆகும்.

Question 8.
பிரெஸ்த்ட்ரோகியா கோட்பாட்டின் பொருட்சுருக்கதைக் கூறுக.
Answer:

  • சோவியத் அதிபர் கோர்பசேவ் பிரெஸ்தட்ரோகியா பற்றி அறிவித்தார்.
  • இதில் அரசியல் பொருளாதார மறு கட்டமைப்பின் அவசியத்தை விளக்கினார்.
  • இதன் மூலம் கோர்பசேவ் சோவியத் யூனியனிலுள்ள பல நிறுவனங்களின் மீதிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தினார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
அமெரிக்காவால் கட்டுப்படுத்தப்பட்ட நேட்டோவுக்கான பதில் நடவடிக்கையே சோவியத் ரஷ்யாவின் வார்சா உடன்படிக்கை விளக்குக.
Answer:

  • மேற்கு ஜெர்மனி நேட்டோ அமைப்பில் உறுப்பினரானதால் சோவியத் ரஷ்யா எதிர்வினை ஆற்றியது. – சோவியத் யூனியனும் அதன் நட்பு நாடுகளும் பரஸ்பர நட்பு பரஸ்பர உதவி எனும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
  • போலந்து தலைநகர் வார்சாவில் கையெழுத்தானதால் இது வார்சா உடன்படிக்கை எனப்பட்டது.

Question 2.
ஐ.நா சபையின் சாசனம் முடிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பல்வேறு கட்டங்கள் குறித்து எழுதுக..
Answer:

  • டம்பர்கள் ஒக்ஸ் மாளிகையில் அமெரிக்கா, சோவியத், சீனா, இங்கிலாந்து நாடுகள் ஒன்றுக்கூடி உலக அமைப்புக்கான ஒரு செயல்திட்டத்தை உருவாக்கினர்.
  • மாஸ்கோ பிரகடனம் பன்னாட்டு சங்கத்துக்கு பதில் வேறு உலக அமைப்பு உருவாக்கப்பட அங்கீகாரம் அளித்தது.
  • சான் பிரான்சிஸ்கோ மாநாட்டில் இது தொடர்பான விவாதங்கள் நிறைவுற்று ஐ.நா. சாசனம் இறுதி செய்யப்பட்டது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 3.
நேட்டோ உருவாக்கப்பட்டதின் பின்னணியைக் கண்டறியவும்.
Answer:

  • அமெரிக்காவுடன் நட்புறவு கொண்டிருந்தாலும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்பின்மையை உணர்ந்தன.
  • செக்கோஸ்லோவாக்கியாவில் கம்யூனிஸ்டுகள் வெற்றி அவர்கள் அச்சத்தை அதிகமாக்கியது.
  • இதனால் மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஒரு கூட்டுப்பாதுகாப்புத் தீர்வு காண விருப்பம் கொண்டன.
  • இப்பின்னணியில்தான் நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டது.

Question 4.
சூயஸ் கால்வாய் சிக்கல் குறித்து சுருக்கமாக வரைக
Answer:

  • 1956ல் எகிப்து அதிபர் நாசர் சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கினார்.
  • இக்கால்வாய் முன்னர் ஆங்கிலோ பிரெஞ்சு கால்வாய் கழகம் என்னும் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.
  • இதனால் இஸ்ரேல், பிரிட்டன், பிரான்ஸ் படைகள் எகிப்து மீது படையெடுத்து சீனாய் தீபகற்பம் மற்றும் செய்த் மீது தாக்கின.
  • ஐ.நா. கண்டனத்தையடுத்து இந்நாடுகள் போரை நிறுத்தி படைகளை விலக்கிக் கொள்ள முடிவு செய்தன. நாசர் வெற்றியாளரானார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 5.
நேட்டோவைப் போல ஏன் சீட்டோ (SEATO) பிரபலமடையவில்லை ?
Answer:

  • சீட்டோ ஆசிய பசிபிக் பகுதியில் நோட்டோவின் பிரதிநிதியாக அமைந்தது.
  • பிலிப்பைன்ஸ் தாய்லாந்து மட்டும் இதில் சேர மற்ற நாடுகள் பங்கேற்க மறுத்தன.
  • சீட்டோ ஒரு ஆலோசனை மன்றமாக மட்டுமே செயல்பட்டது.
  • இதனால் சீட்டோ புகழ்பெறவில்லை .

IV. விரிவான விடையளிக்கவும்

Question 1.
அணிசேரா இயக்கத்தின் இலக்குகளையும் நோக்கங்களையும் கோடிட்டுக் காட்டவும்.
Answer:

  • அணிசேரா இயக்கத்தை முன்னெடுத்தவர்கள், 1955ஆம் ஆண்டு பாண்டுங் மாநாட்டில் கீழே குறிப்பிடப்பட்டவற்றை இயக்கத்தின் இலக்குகளாகவும், நோக்கங்களாகவும் நிர்ணயம் செய்தனர்.
  • அடிப்படை மனித உரிமைகளை மதித்தல். ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் கொள்கைகளையும் நோக்கங்களையும் மதித்தல்.
  • அனைத்து நாடுகளின் இறையாண்மையையும் அவற்றின் எல்லைப்பரப்பு ஒருமைப்பாட்டையும் மதித்தல்.
  • சிறியவை, பெரியவை என்றில்லாமல் அனைத்து இனங்களும், அனைத்து நாடுகளும் சமம் என அங்கீகரித்தல்.
  • அடுத்த நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாமலும் குறுக்கீடு செய்யாமலும் இருத்தல்.
  • ஐ.நா சபையின் சாசனத்திற்கு இணங்க ஒவ்வொரு நாடும் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையைப் பெற்றுள்ளதை மதித்தல்.
  • வல்லரசு நாடுகளில் ஏதாவது ஒன்றின் குறிப்பிட்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக கூட்டுப்பாதுகாப்பு உடன்படிக்கைகளைப் பயன்படுத்தாதிருத்தல்.
  • எந்த நாடாக இருந்தாலும் அதன் அரசியல் சுதந்திரம், எல்லைப்பரப்பு ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு அச்சத்தை ஏற்படுத்தும், இராணுவ நடவடிக்கைகள், வலியச் சென்று தாக்குதல் போன்ற நடவடிக்கைகளைத் தவிர்த்தல்.
  • அனைத்துப் பன்னாட்டுப் பிரச்சனைகளுக்கும் அமைதியான வழியில் தீர்வு காணப்படவேண்டும்.
  • பரஸ்பர அக்கறை, ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துதல்.
  • நீதி மற்றும் பன்னாட்டு கட்டுப்பாடுகளுக்கு மதிப்பளித்தல்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 2.
அரபு-இஸ்ரேலிய முரண்பாட்டின் தோற்றத்தை விவாதிக்கவும். தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்வுகள் எவ்வாறு இரு நாடுகளுக்கிடையே 1967இல் பெரும் போர் ஏற்படக் காரணமாயிற்று என்பதை விளக்கவும்.
Answer:

  • 1947 நவம்பரில் பாலஸ்தீனத்தை அராபியர் நாடு, யூதர்கள் நாடு என இரண்டாகப் பிரிப்பதற்கு ஐ.நா. சபை வாக்களித்து முடிவு செய்த உடனேயே பாலஸ்தீனத்தில் அராபியர்களுக்கும் பார்களுக்கும் இடையே போர் மூண்டது.
  • பாலஸ்தீனத்திலிருந்து ஆங்கிலப்படைகள் வெளியேறிய பின்னா இஸ்ரேல் தன்னை சுதந்திர நாடாக அறிவித்தது.
  • இஸ்ரேல் ஐ.நா.. சபை அரசியல் முடிவுகள் எடுப்பதில் ஓரளவே ஈடுபாடு கொண்டது.
  • ஐ.நா. சபையின் அமைதிகாக்கும் படை எகிப்து-இஸ்ரேல் எல்லையில் முகாமிட்டிருந்தது.
  • 1966 வாககில அமெரிக்கா இஸ்ரேலுக்கு புதிய ரக போர் விமானங்களையும் ஏவுகலைகளையும் வழங்கத் தொடங்கியது.
  • அடுத்து வந்த சில மாதங்களில் இஸ்ரேலுக்கும் அதைச் சுற்றியுள்ள அரபு நாடுகளுக்குமிடையே பதட்டம் அதிகரித்தது.
  • ஐ.நா. வின் படைகள் ஒட்டுமொத்தமாக எகிப்திலிருந்து விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.
  • இதனைத் தொடர்ந்து 1967 மே 23இல் எகிப்து டைரன் கடலிடுக்கு வழியாக இஸ்ரேலின் கப்பல்கள் பயணப்படுவதற்குத் தடைவிதித்தது.
  •  ஜூன் மாதத் தொடக்கத்தில் இஸ்ரேல் எகிப்தைத் தாக்கியது. கெய்ரோ நகரின் விமானத் தளங்களிலிருந்த விமானப்படை விமானங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன.
  • 6ம் நாள் போரின் முடிவில் பாலஸ்தீனியர்கள் மீதமிருந்த பகுதிகளான மேற்குக்கரை, காஜா முனை மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகியவற்றைக் கைப்பற்றியதோடு, சிரியாவின் கோலன் குன்றுப் பகுதிகளையும் எகிப்தின் சினாய் பகுதிகளையும் இஸ்ரேல் கைப்பற்றிக் கொண்டது.
  • பாலஸ்தீனியர்கள் வெளியேறக் கட்டாயப்படுத்தப்பட்டனர். ஒரு மில்லியனுக்கும் அதிகமானமோர் இன்றும் இஸ்ரேலின் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றனர்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 3.
“பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் தொடர்பு கொண்டுள்ள பிரச்சனைகளில் ஐ.நா சபை மௌனமான பார்வையாளராகவே இருந்தது “பனிப்போர் காலத்து அனுபவங்களின் வாயிலாக இக்கூற்றை விளக்கமாக எடுத்துரைக்கவும்.
Answer:

  • 1945 முதல் 1991 வரையிலான காலப்பகுதியில் வல்லரசுகளின் வெளியுறவுக் கொள்கையை பனிப்போரே வரையறை செய்தது.
  • அமெரிக்கா தனது பொருட்களுக்கான திறந்தவெளி சந்தையை மேம்படுத்தவும் கம்யூனிசத்தை கட்டுப்படுத்தவும் விரும்பியது.
  • மற்றொரு புறத்தில் சோவியத் யூனியன் கம்யூனிசத்தைப் பரப்பவும். நட்பு நாடுகளுடன் நட்புணர்வைப் மேம்படுத்தவும் விரும்பியது.
  • இவ்விரு சக்திகளும் ஆறு முக்கிய உத்திகளைக் கையாண்டன. அவை பொருளாதார உதவி. இராணுவ ஒப்பந்தம், உளவறிதல், பரப்புரை செய்தல், நேரடியாக மோதாமை, போரின் விளிம்புவரை செல்லுதல் ஆகியன.
  • மேற்காணும் அனைத்தும் உலகின் இருபெரும் வல்லரசுகள் நிகழ்த்திய போதும் ஐ.நா. பாதுகாப்பு சபை கண்டிக்க இயலாமல் மௌன பார்வையாளராகவே இருந்ததை உலகம் கண்டது.

Question 4.
போரிஸ் யெல்ட்சினின் அரசியல் வளர்ச்சியைக் குறிப்பாக சோவியத் யூனியனின் வீழ்ச்சியில் அவர் வகித்த பங்கின் மீது கவனம் குறித்து விவரிக்கவும்.
Answer:

  • போரிஸ் யெல்ட்சின் (1931 – 2007) 1961இல் பொதுவுடைமைக் கட்சியின் முழுநேர ஊழியரானார்.
  • எழுபதுகளில் பரவலாக அறியப்பட்டவரான இவர் கட்சியில் முக்கியப் பதவிகளை வகிக்கத் தொடங்கினார்.
  • கோர்பசேவ் பதவிக்கு வந்த பின்னர் அவர் மாஸ்கோ கட்சி அமைப்பிலுள்ள ஊழல்களைக் களைவதற்காக போரிஸ் யெல்ட்சினை தேர்ந்தெடுத்தார்.
  • 1986இல் யெல்ட்சின் பொலிட்பீரோவின் உறுப்பினராக உயர்த்தப்பட்டார்.
  • விரைவில் அவர் மாஸ்கோவின் மேயராக நியமிக்கப்பட்டார்.
  • கட்சி கூட்டங்கள் சீர்திருத்தப் பணிகள் மிக மெதுவாக நடைபெறுவதாக இவர் விமர்சனம் செய்ததால் கோர்பச்சேவின் எதிர்ப்பைச் சம்பாதித்தார்.
  • நிர்வாகம் ஜனநாயகப் படுத்தப்பட வேண்டும், பொருளாதாரம் சீர்திருத்தப்பட வேண்டும் எனும் கருத்துக்களை அவர் முன்வைத்ததால் சோவியத் வாக்காளர்களிடையே பிரபலமானார்.
  • 1989 மார்ச்சில் சோவியத் யூனியனின் புதிய பாராளுமன்றமான மக்கள் பிரதிநிதிகள் சபையில் ஒரு இடத்தைப் பெறுவதில் வெற்றி பெற்றார்.
  • ஓராண்டுக்குப் பின்னர், 1990 மே 29இல் கோர்பச்சேவின் விருப்பத்திற்கு எதிராக சோவியத் பாராளுமன்றம் யெல்ட்சினை ரஷ்ய குடியரசின் தலைவராகத் தேர்ந்தெடுத்தது.
  • இவரே சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் 1991இல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவரானார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

V. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. ஐக்கிய நாடுகள் சபை தினத்தன்று (அக்டோபர் 24) மாணவர்களை ஒரு மாதிரி பொது சபை அமர்வை நடத்தச் செய்து இப்பாடத்தில் விவரிக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு பிரச்சனை குறித்து விவாதம் நடத்தச் செய்யலாம்.
2. மாணவர்களை இரு அணிகளாகப் பிரித்து முதலாளித்துவத்தை ஆதரித்தும் எதிர்த்தும் பட்டிமன்ற நிகழ்ச்சி நடத்தலாம்.
3. ஐக்கிய நாடுகள் சபை 1948 டிசம்பர் 10இல் வெளியிட்ட மனித உரிமைப் பிரகடன சாசனத்தை ஆசிரியர்களும் மாணவர்களும் ஆய்வு செய்யலாம்.

12th History Guide இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் Additional Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
சோவியத் யூனியனின் வீழ்ச்சியைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது.
அ. முதல் உலகப்போர்
ஆ. 2ம் உலகப்போர்
இ. பனிப்போர்
ஈ. கொரியப் போர்
Answer:
இ. பனிப்போர்

Question 2.
இரண்டாம் உலகப்போரில் திட்டமிடப்பட்ட இன அழிப்பில் நாஜிக்களால் கொல்லப்பட்ட ஐரோப்பிய யூதர்கள்
அ. 6 ஆயிரம் பேர் –
ஆ. 6 மில்லியன் பேர்
இ. 6 கோடி பேர்
ஈ. 6 லட்சம் பேர்
Answer:
ஆ. 6 மில்லியன் பேர்

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 3.
சர்ச்சிலை போர் விரும்பி என விமர்சித்தவர்
அ. லெனின்
ஆ. ஸ்டாலின்
இ. குருச்சேவ்
ஈ. 2 ஆம் நிக்கோலஸ்
Answer:
ஆ. ஸ்டாலின்

Question 4.
“விலங்கு பண்ணை ” எனும் நூலின் ஆசிரியர்
அ. பெர்னார்டு பரூச்
ஆ. டவுன்ஷென்ட்
இ. ஜார்ஜ் ஆர்வெல் –
ஈ. எஸ். ட்ரூமன்
Answer:
இ. ஜார்ஜ் ஆர்வெல்

Question 5.
கூற்று : மார்ஷல் திட்டத்திற்கு பயனளிக்கும் வகையில் சோவியத் ரஷ்யா கோமின்பார்ம் எனும்
அமைப்பு 1947 செப்டம்பரில் உருவாக்கியது.
காரணம் : கம்யூனிஸ்ட் அல்லாத நாடுகளுடனான வணிக உறவுகளைத் தடுக்க முயன்ற இவ்வமைப்பு உறுப்பு நாடுகளிடையே கருத்தியல் ரீதியிலான, பொருட்கள் சார்ந்த தொடர்புகளை உருவாக்க முயன்றது. அ. கூற்று சரி. காரணம் தவறு
ஆ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை .
இ. கூற்று தவறு. காரணம் சரி.
ஈ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
Answer:
ஈ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 6.
(IA எனபது …………………..
அ. சோவியத் உளவு நிறுவனம்
ஆ. அமெரிக்க உளவு நிறுவனம்
இ. இங்கிலாந்து புலன் விசாரணை அமைப்பு
ஈ. பாகிஸ்தான் உளவு நிறுவனம்
Answer:
ஆ. அமெரிக்க உளவு நிறுவனம்

Question 7.
பாண்டுங் மாநாட்டின் கொள்கைகளின் அடிப்படையில் நடைபெற்ற முதல் மாநாடு நடைபெற்ற இடம்.
அ. டெல்லி
ஆ. பாண்டுங்
இ. பெல்கிரேடு
ஈ. டாக்கா
Answer:
இ. பெல்கிரேடு

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 8.
கீழ் காண்பவனவற்றை காலவரிசைப்படி ஒழுங்கு செய்யவும்.
1. வியட்நாமியப் போர்
2. கொரியப் போர்
3. ஐக்கிய நாடுகள் சபை
4. இரண்டாம் உலகப்போர்
அ. 12 3 4
ஆ. 2 3 41
இ. 3 412
ஈ. 4 3 21
Answer:
ஈ. 4 3 2 1

Question 9.
மார்ஷல் திட்டத்திற்கு டாலர் ஏகாதிபத்தியம் என கேலிப் பெயர் சூட்டியவர்.
அ. ஜோசப் ஸ்டாலின்
ஆ. மோலோ டோவ்
இ. லெனின்
ஈ. குரூச்சேவ்
Answer:
ஆ. மோலோ டோவ்

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 10.
பொருத்திப் பார்த்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் சரியானதைத் தேர்வு செய்க

அ. அணிசேரா மாநாடு 1. சோவியத் ரஷ்யா
ஆ. இரண்டாம் உலகப்போர் 2. இரும்புத்திசை
இ. சர்ச்சில் கூறியது 3. பாண்டுங் மாநாடு
ஈ. மோலோவ் திட்டம் 4. ஐ.நா. சபை

அ. 4 3 21
ஆ. 3 4 21
இ. 3 412
ஈ. 213 4
Answer:
ஆ. 3 4 2 1

Question 11.
கிரீஸில் உள்நாட்டுப் போர் வெடித்த ஆண்டு …………..
அ. 1941
ஆ. 1942
இ. 1944
ஈ. 1945
Answer:
ஈ. 1945

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 12.
“மைக்” என பெயரிடப்பட்ட முதல் ஹைட்ரஜன் அணு குண்டை சோதனை வெடித்து பரிசோதனை செய்த நாள் ……………………
அ. 1955 நவம்பர் 22
ஆ. 1952 நவம்பர் 1
இ. 1952 நவம்பர் 22
ஈ. 1955 நவம்பர் 1
Answer:
ஆ. 1952 நவம்பர் 1

Question 13.
சோவியத் யூனியன் தனது முதல் குண்டை வெடித்து பரிசோதனை செய்த நாள் ……………………
அ. 1955 நவம்பர் 22
ஆ. 1955 நவம்பர் 1
இ. 1955 டிசம்பர் 5
ஈ. 1955 டிசம்பர் 22
Answer:
அ. 1955 நவம்பர் 22

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

II. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
நீண்ட தந்தி – குறிப்பு தருக.
Answer:

  • 1946 பிப்ரவரி 22இல் மாஸ்கோவில் இருந்தவரும் அமெரிக்க விவகாரங்களுக்குப் பொறுப்பு வகித்தவருமான ஜார்ஜ் கென்னன் அமெரிக்க அரசாங்கத்திற்கு 8,000 வார்த்தைகள் கொண்ட தந்தி ஒன்றை அனுப்பினார்.
  • இது நீண்ட தந்தி என்று அழைக்கப்படுகிறது
  • இந்த தந்தியில் முதலாளித்துவ உலகத்துடன் நீண்டகால, அமைதியான சமாதான சகவாழ்வை மேற்கொள்ளும் வாய்ப்பை சோவியத் யூனியன் பார்க்கவில்லை என உறுதியாகக் கூறி, உலக நாடுகளில் கம்யூனிசம் “விரிவாக்கத்தை கட்டுப்படுத்துவது” சிறந்த உத்தியாக இருக்கமுடியும்

Question 2.
பனிப்போர் தொடக்கத்திற்கான குறீயிடு யாது?
Answer:

  • மேற்கத்திய சக்திகள் 1949 ஆகஸ்ட் மாதத்தில் ஜெர்மனி கூட்டாட்சி குடியரசை உருவாக்கியது. இது மேற்கு ஜெர்மனி என்று அழைக்கப்பட்டது.
  • 1949 அக்டோபரில் சோவியத் ரஷ்யா ஜெர்மன் ஜனநாயக குடியரசை உருவாக்கின. இது கிழக்கு ஜெர்மனி என்று அழைக்கப்பட்டது.
  • இவ்வாறு ஜெர்மனி பிரிக்கப்பட்டதே பனிப்போர் தொடக்கத்தின் குறியீடு ஆகும்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 3.
ட்ரூமன் கோட்பாடு என்பது என்ன?
Answer:

  • அமெரிக்க குடியரசுத் தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன் “எந்த நாடுகளில் கம்யூனிச கொள்கையினால் மேலாதிக்கம் செலுத்தப்படுகிறதோ அந்நாடுகளுக்குப் பொருளாதார மற்றும் ராணுவ உதவிகளை வழங்கப்போவதாக உறுதியளித்தார்.
  • இது கம்யூனிசத்தைக் கட்டுப்படுத்தும் வரையறை செய்தது. இது ட்ரூமன் கோட்பாடு எனப்படுகிறது.

Question 4.
மோலோ டோவ் திட்டம் பற்றி கூறுக.
Answer:
1949இல் சோவியத் ரஷ்யா மோலோடோவ் எனும் பெயரில் தனது பொருளாதாரத் திட்டத்தை முன்வைத்து, சோவியத் யூனியன், அதனை சார்ந்த நாடுகள் ஆகியவற்றின் பொருளாதாரக் கொள்கைகளை ஒருங்கிணைப்பதற்காகக் கோமிகன் என்ற பரஸ்பர பொருளாதார உதவிக்குழு’ எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 5.
வார்சா உடன்படிக்கை ஏன் ஏற்படுத்தப்பட்டது?
Answer:

  • மேற்கு ஜெர்மனி நேட்டோ அமைப்பில் உறுப்பினரானதை ஒரு நேரடி பயமுறுத்தலாகப் பார்த்த சோவியத் ரஷ்யா எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
  • 1955 மே மாதத்தில் சோவியத் யூனியனும் அதன் ஏழு ஐரோப்பிய நட்பு நாடுகளும் பரஸ்பர நட்பு,  ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவி ஒப்பந்தம் எனும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
  • போலந்தின் தலைநகரான வார்சாவில் இது கையெழுத்திடப்பட்டதால் இது வார்சாஉடன்படிக்கை எனப் பெயரிடப்பட்டது.

Question 6.
போரின் விளிம்பு வரை செல்தல் – விளக்கம் தருக.
Answer:

  • போரின் விளிம்பு வரை செல்வதென்பது, ஒரு நிகழ்வு, தனக்குச் சாதகமாக முடிய வேண்டும் என்பதற்காக ஆபத்தான நிகழ்வுகளை உண்மையான போர் நடைபெறுவதற்கான விளிம்பு வரை நகர்த்திச் செல்வதாகும்.
  • பன்னாட்டு அரசியலில், வெளியுறவுக் கொள்கைகளில், இராணுவ உத்திகளில் இது இடம் பெற்றுள்ளது.
  • இது அணு ஆயுதப்போர் குறித்த அச்சத்தையும் உள்ளடக்கியதாகும்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 7.
ஐ.நா. சபையின் அங்கங்கள் யாவை?
Answer:

  • பொது சபை
  • பாதுகாப்பு சபை
  • பொருளாதார மற்றும் சமூக அவை
  • தர்மகர்த்தா அவை
  • பன்னாட்டு நீதிமன்றம் மற்றும் ஐ.நாவின் தலைமைச் செயலகம் ஆகியவை ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய அங்கங்கள் ஆகும்.

Question 8.
ஐ.நா. சபையின் முக்கிய சிறப்பு நிறுவனங்களை கூறுக.
Answer:
ஐ.நா. சபை 15 சிறப்பு நிறுவனங்களை கொண்டுள்ளது. அவற்றில்

  • பன்னாட்டு தொழிலாளர் சங்கம் (ILO)
  • உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO)
  • பன்னாட்டு நிதியம் (IMF)
  • ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு (யுனெஸ்கோ – UNESCO)
  • உலக சுகாதார அமைப்பு (WHO)
  • உலக வங்கி ஆகியவை சில முக்கியமான நிறுவனங்களாகும்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 9.
ஐ.நா. சபை சாசனத்தின் முகவுரை கூறுவது யாது?
Answer:
போர்கள் மனிதர்களின் மனங்களிலிருந்து தொடங்குவதால் அம்மனிதர்களின் மனங்களில்தான் அமைதிக்கான பாதுகாப்புகளும் கட்டப்பட வேண்டும் என்று ஐ.நா. சபை சாசனத்தின் முகவுரையில்
கூறப்பட்டுள்ளது.

Question 10.
பாலஸ்தீன விடுதலை இயக்கம் பற்றி கூறுக.
Answer:

  • 1964க்கு முன்பு இரகசிய எதிர்ப்பியக்கங்களாக செயல்பட்ட பல்வேறு பாலஸ்தீனக் குழுக்களை ஒருங்கிணைப்பதற்காக பாலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO) 1964இல் உருவாக்கப்பட்டது.
  • 1967 ஜூனில் நடைபெற்ற அரபு-இஸ்ரேல் போருக்குப் பின்னர் இவ்வமைப்பு முக்கியத்துவம் பெற்றது.
  • 1990களில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அடியெடுத்து வைப்பதற்கு முன்பு 1980கள் முடிய PLO இஸ்ரேலுடன் நீண்ட நெடிய தற்காப்பு கொரில்லாப் போர்களில் ஈடுபட்டிருந்தது.
  • யாசர் அராபத் இவ்வமைப்பின் மகத்தான தலைவர்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 11.
ஐரோப்பிய மாமன்றத்தில் கோர்பசேவ் நிகழ்த்திய உரையைப் பற்றி கூறுக.
Answer:

  • 1989 ஜூலை மாதத்தில் ஐரோப்பிய மன்றத்தில் உரை நிகழ்த்துகையில் கோர்பச்சேவ் தனக்கு முன்னர் அதிபராக இருந்த பிரஷ்னேவின் கோட்பாடுகளை நிராகரித்தார்.
  • மேலும் “நட்பு நாடுகளோ, கூட்டு சேர்ந்திருக்கும் நாடுகளோ அல்லது எந்த நாடுகளாக இருந்தாலும் அந்நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவது அல்லது அவற்றின் இறையாண்மையைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது அனுமதிக்க முடியாது” என்று கூறினார்.

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
1945 முதல் 1991 வரையிலான காலப்பகுதியில் வல்லரசுகளின் வெளிறவுக் கொள்கைகளைப் பனிப்போரே வரையறை செய்தது – விளக்குக.
Answer:

  • அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா ஆகிய இரண்டுமே நிரந்தரமான போருக்குத் தயாராக இருந்தன.
  • அமெரிக்கா தனது பொருட்களுக்கான திறந்தவெளி சந்தையை மேம்படுத்தவும் பொதுவுடைமைப் பரவலைக் கட்டுப்படுத்தவும் விரும்பியது.
  • சோவியத் ரஷ்யா பொதுவுடைமைத் தத்துவத்தைப் பரப்பவும், தன் கோட்பாடுகளுடன் இணைந்து சென்று நட்புணர்வைப் பேணவும் கற்றுக் கொண்டன.
  • தங்களது குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கு இவ்விரு சக்திகளும் பொருளாதார உதவி, இராணுவ ஒப்பந்தங்கள், பரப்புரை செய்தல், உளவறிதல், நேரடியாக மோதாமல், மறைமுகப் போர் அல்லது போரின் விளிம்பு வரை செல்லல் ஆகிய உத்திகளை கையாண்டன.
  • இதன் மூலம் 1945 முதல் 1991 வரை வல்லரசுகளின் வெளியுறவுக் கொள்கைகளைப் பனிப்போரே வரையறை செய்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 2.
நேட்டோ (NATO) அமைப்பைப் பற்றி கூறுக. (அல்லது) வட அட்லாண்டிக் ஒப்பந்தம் பற்றி விளக்கு.
Answer:

  • அமெரிக்கா, இத்தாலி, கனடா, ஐஸ்லாந்து, டென்மார்க், நார்வே, அயர்லாந்து மற்றும் போர்த்துக்கல் ஆகிய நாடுகளும் கிரேட் பிரிட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, லக்சம்பர்க் ஆகிய பிரஸ்ஸல்ஸ் ஒப்பந்த நாடுகளும் இணைந்து நேட்டோ (NATO) அமைப்பை உருவாக்கின.
  • இவ்வமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள் அனைத்தும் தங்களில் யாராவது ஒருவர் தாக்கப்பட்டால் அத்தாக்குதல் அனைவர் மேலும் தொடுக்கப்பட்ட தாக்குதலாகக் கருதுவதற்கு ஒத்துக்கொண்டன.
  • மேலும் அந்நாடுகள் தங்கள் படைகளை நேட்டோவின் கூட்டுத் தலைமையின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்தன.

Question 3.
வார்சா உடன்படிக்கையின் உறுப்பு நாடுகள் யாவை? உடன்படிக்கையின் நோக்கங்கள் பற்றி விவரி.
Answer:
வார்சா உடன்படிக்கையின் உறுப்பு நாடுகள்:
சோவியத் யூனியன் அல்பேனியா, போலந்து, ருமேனியா, ஹங்கேரி, கிழக்கு ஜெர்மனி, செக்கோஸ்லோவாக்கியா மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகளே வார்சா உடன்படிக்கை உறுப்பு நாடுகளாகும்.
நோக்கம்:

  • உறுப்பு நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு வெளிநாட்டுப் படைகளால் தாக்கப்படுமேயானால் ஏனைய உறுப்பு நாடுகள் தாக்கப்பட்ட நாட்டைப் பாதுகாக்க உதவிக்கு வர வேண்டும் என இவ்வொப்பந்தம் கூறுகிறது.
  • சோவியத் யூனியனைச் சேர்ந்த மார்ஷல் இவான் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்ட ராணுவம் உருவாக்கப்பட்டது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 4.
தென் கிழக்கு ஆசிய நாடுகளின் உடன்படிக்கை அமைப்பை பற்றி விவரி.
Answer:
சீட்டோ (SEATO):

  • 1954 செப்டம்பரில் அமெரிக்கா, பிரான்ஸ், கிரேட் பிரிட்டன், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உடன்படிக்கை என்னும் இவ்வமைப்பு ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் நேட்டோவின் பிரதியாக அமைந்ததாகும்.
  • இவ்வுடன்படிக்கையின் தலைமையிடம் பாங்காங்.
  • சீட்டோ ஒரு ஆலோசனை மன்றமாக மட்டுமே செயல்பட்டது.
  • உள்நாட்டு ஆபத்துக்களை அந்தந்த நாடுகளே எதிர் கொள்ளவேண்டும்.
  • ஆனால் சீட்டோ அமைப்பானது நேட்டோ அமைப்பை போல செல்வாக்குப் பெற்ற அமைப்பாக இல்லை.

Question 5.
நேருவின் பஞ்சசீல கொள்கையை விவரி.
Answer:
நேருவின் பஞ்சீலக் கொள்கை:

  • நாடுகளிடையே இறையாண்மை, எல்லைப்பரப்பு குறித்த பரஸ்பர மரியாதை
  • பரஸ்பரம் ஆக்கிரமிப்பு இல்லாத நிலை
  • பரஸ்பரம் ஒரு நாடு மற்றொன்றின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமலிருத்தல்
  • சமத்துவம் மற்றும் பரஸ்பர நன்மை
  • சமாதான சகவாழ்வு

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 6.
பாலஸ்தீன பிரச்சனையும் இஸ்ரேல் எனும் புதிய நாடு உருவானதைப் பற்றியும் விவரி.
Answer:

  • இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் யூதர்கள் தங்களுக்கு பாலஸ்தீனத்தில் ஒரு தாயகம் வேண்டுமெனக் கோரினர்.
  • அராபியர்கள் இதை எதிர்த்தனர்.
  • அப்பிரச்சனை ஐ.நா. சபையின் முன் வைக்கப்பட்டது. 1947 மே மாதம் ஐ.நா. சபையின் பொது சபை தீர்மானமொன்றை நிறைவேற்றியது.
  • அதன் மூலம் பாலஸ்தீன பிரச்சனை குறித்து விசாரித்து பரிந்துரைகள் வழங்க ஐ.நா. சபையின் பாலஸ்தீனத்திற்கான சிறப்பு குழுவொன்றை அமைத்தது.
  • பாலஸ்தீனம் இரு நாடுகளாகப் பிரிக்கப்பட வேண்டுமெனவும், பெரும்பான்மை அராபியர்கள், யூதர்கள் குடியேறுவதற்கான நிலங்களை ஒப்படைக்க வேண்டுமெனவும் இக்குழு பரிந்துரை செய்தது.
  • அரபியர்களுக்கு 45 விழுக்காடு நிலங்களைக் கொண்ட நாடும் 55 விழுக்காடு நிலப்பரப்பைக் கொண்ட யூத நாடும் உருவாகும் நிலை ஏற்பட்டது. இதன்படி 1948 மே 14இல் இஸ்ரேல் எனும் புதிய நாடு உருவாக்கப்பட்டது.

Question 7.
கொரிய போரில் ஐ.நா.வின் செயல்பாட்டை விளக்குக.
Answer:

  • கொரியா 1945இல் இரண்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது.
  • தொழிற்சாலை நிறைந்த வடக்கு மண்டலத்தை சோவியத் ரஷ்யா கைப்பற்றியது.
  • வேளாண்மை நிலங்களைக் கொண்ட தென்பகுதி அமெரிக்க கட்டுப்பாட்டில் வந்தது.
  • ஐ.நா. மேற்பார்வை தேர்தலில் தென் கொரியாவில் சிங்மேன் ரீ என்பவர் குடியரசுத் தலைவரானார்.
  • வடகொரியாவில் கிம் இல் சுங் தலைமையில் சோவியத் அரசு கம்யூனிச அரசை உருவாக்கியது. அதன்பிறகு அமெரிக்க, ரஷ்யப் படைகள் விலகின. தென்கொரிய குடியரசுத் தலைவர் கொரியாவை ஒன்றிணைப்பதே தனது குறிக்கோள் என அறிவித்தார்.
  • ஆனால் 1950 ஜூன் 25இல் வடகொரியப் படைகள் தென்கொரியா மீது வெளிப்படையாக போர் தொடங்கியது.
  • உடனடியாக ஐ.நா. பொது சபை கூடி உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது.
  • 1953 ஜூலையில் போர் நிறுத்த உடன்பாடு கையெழுத்தானதோடு கொரியப் போர் முடிவுக்கு வந்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 8.
ஒற்றை ஐரோப்பியச் சட்டம் (SEA) பற்றி நீ அறிவது யாது?
Answer:

  • 1987 ஜூலை 1இல் நடைமுறைக்கு வந்த ஒற்றை ஐரோப்பிய சட்டம் ஐரோப்பிய பொருளாதார சமுதாய
    நோக்கத்தின் எல்லைகளை விரிவடையச் செய்தது.
  • இச்சட்டத்தின்படி ஒவ்வொரு உறுப்பு நாட்டிற்கும் அதன் மக்கட்தொகையின் அடிப்படையில் பல வாக்குகள் வழங்கப்பட்டன.
  • ஒரு சட்டம் நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் வாக்கு தேவை.
  • இப்புதிய செயல்முறை ஐரோப்பிய பாராளுமன்றத்தின் அதிகாரத்தை அதிகரிக்கச் செய்தது.
  • இது 1952 முதல் நடைமுறைக்கு வந்தது.
  • பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட மசோதாக்கள் அமைச்சர் குழுவின் ஒட்டுமொத்த ஒப்புதலைப் பெற்றால் சட்டமாக்கப்படலாம்.

Question 9.
ஐரோப்பிய ஒன்றியம் எவ்வாறு உருவாக்கப்பட்டது? இதன் சிறப்புகளை கூறுக.
Answer:

  • ஐரோப்பிய பொருளாதார சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒன்றிணைந்து 1991 டிசம்பரில்
  • மாஸ்ட்ரிட்க் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
  • இதன் விளைவாக 1993இல் ஒற்றைச்சந்தையுடன் கூடிய ஐரோப்பிய ஒன்றியம் நிறுவப்பட்டது.
  • இவ்வுடன்படிக்கை ஒரே ஐரோப்பியப் பணமான யூரோ உருவாக்கப்படுவதற்கு வழிவகுத்தது.
  • 2017இல் பிரிட்டன் இவ்வமைப்பிலிருந்து வெளியேறியது.
  • தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் 28 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
  • இதன் தலைமையகம் பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்சில் அமைந்துள்ளது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 10.
மிகையில் கோர்பச்சேவால் உருவாக்கப்பட்ட கிளாஸ்நாஸ்ட் கோட்பாட்டை கூறி அது எவ்வாறு சோவியத் யூனியன் சிதைவுக்கு காரணமாயிற்று என்பதை விளக்குக.
Answer:
கிளாஸ்நாஸ்ட் கோட்பாடு:
சோவியத் யூனியனின் நிர்வாகக் கட்டமைப்பை ஜனநாயகப்படுத்துவற்காக கோர்பசேவால் உருவாக்கப்பட்ட கோட்பாடே கிளாஸ்நாஸ்ட் கோட்பாடு ஆகும்.
கோட்பாட்டின் தன்மை:

  • சோவியத் யூனியனின் அரசியல் கட்டமைப்பில் பல அடிப்படை மாற்றங்கள் நிகழ்ந்தன.
  • கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரம் குறைக்கப்பட்டது.
  • சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க தேர்தல் முறை கொண்டு வரப்பட்டது.
  • அரசு அலுவலர்கள் விமர்சனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டனர்.
  • செய்திகளை சுதந்திரமாகப் பரப்புவதற்கு கிளாஸ்நாஸ்ட் மூலம் ஊடகங்களுக்கு அனுமதி.
  • பேச்சு சுதந்திரம், கருத்து கூறும் சுதந்திரம் பெற்றனர்.

விளைவு:
இக்கோட்பாடுகள் சோவியத் யூனியனில் புரட்சிகர தாராளவாத அலைகளை உருவாக்கிய அதே சமயத்தில், அவையே சோவியத் யூனியனின் சிதைவுக்கும் காரணமாயிற்று.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

IV. விரிவான விடையளிக்கவும்

Question 1.
கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனி உருவான விதத்தை விவரி.
Answer:
ஜெர்மனி மண்டங்களாகப் பிரிக்கப்படல்:
யால்டா மற்றும் போட்ஸ்டாம் மாநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முடிவின்படி பெர்லினைத் தலைநகராகக் கொண்ட ஜெர்மனி – அமெரிக்க மண்டலம், இங்கிலாந்து மண்டலம், பிரெஞ்சு மண்டலம் மற்றும் சோவியத் ரஷ்யா மண்டலம் என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
மண்டலங்கள் இணைப்பு:

  • 1948இன் தொடக்கத்தில் மூன்று மேற்கு மண்டலங்களும் ஒருங்கிணைக்கப்பட்டது.
  • மார்ஷல் திட்டத்தின் காரணமாக அப்பகுதி வேகமாக முன்னேறியது.

சோவியத் ரஷ்ய நெருக்கடி:

  • மேற்கு பொலினுக்கும் மேற்கு ஜெர்மானியப் பகுதிகளுக்கும் இடையிலான தொடர்புகள் சோவியத் ரஷ்யாவை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. 1948 ஜூனில் மேற்கு பெர்லினுக்கும் மேற்கு ஜெர்மனிக்கும் இடையிலான அனைத்து சாலை, ரயில் போக்குவரத்துகளை சோவியத் யூனியன் துண்டித்தது.
  • 1949 மே மாதத்தில் சோவியத் ரஷ்யா நிலவழித் தொடர்புகள் மீதான தடையை நீக்கியது. அதன்பின் பிரச்சனையும் தீர்ந்தது.

ஜெர்மனி கிழக்கு மேற்காக பிரிதல்:

  • மேற்கத்திய சக்திகள் 1949 ஆகஸ்டில் ஜெர்மனி கூட்டாட்சிக் குடியரசை உருவாக்கியது.
  • இது மேற்கு ஜெர்மனி என அழைக்கப்பட்டது.
  • 1949 அக்டோபரில் சோவியத் ரஷ்யா ஜெர்மன் ஜனநாயகக் குடியரசை உருவாக்கின. இது கிழக்கு ஜெர்மனி என அழைக்கப்பட்டது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Question 2.
அரபு – இஸ்ரேல் போர் பற்றியும், இதில் ஐ.நா. வின் தலையீட்டைப் பற்றியும் கட்டுரை வரைக.
Answer:
அரபு – இஸ்ரேல் போர் ஏற்படக் காரணம்:

  • 1947 நவம்பரில் பாலஸ்தீனத்தை அராபியர் நாடு, யூதர்கள் நாடு என இரண்டாகப் பிரிப்பதற்கு ஐ.நா. சபை வாக்களித்து முடிவு செய்தது. இதனால் பாலஸ்தீனத்தில் அராபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே போர் மூண்டது.
  • பாலஸ்தீனத்திலிருந்து ஆங்கிலப்படைகள் வெளியேறிய பின்னர் 1948 மே 15ல் இஸ்ரேல் தன்னை சுதந்திர நாடாக அறிவித்தது.

ஐ.நா. சபை அறிவிப்பும் பாலஸ்தீனிய அகதிகளும்:

  • ஐ.நா. சபையின் பொதுக்குழு 1947-48 போரில் அகதிகளான பாலஸ்தீனியர்களுக்கு தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும், ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு பெறவும் உரிமை உண்டு என்று தீர்மானம் நிறைவேற்றியது.
  • இதனால் போரும் முடிவுக்கு வந்தது. ஐ.நா. சபை அரசியல் முடிவுகள் எடுப்பதில் ஓரளவே ஈடுபாடு கொண்டது.
  • ஐ.நா. சபையின் அமைதிகாக்கும் படை எகிப்து-இஸ்ரேல் எல்லையில் முகாமிட்டிருந்தது.

அமெரிக்காவும் இஸ்ரேலும்:

  • 1966 வாக்கில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு புதிய ரக போர் விமானங்களையும் ஏவுகணைகளையும் வழங்கத் தொடங்கியது.
  • அதன் விளைவாக அடுத்து வந்த சில மாதங்களில் இஸ்ரேலுக்கும் அதைச் சுற்றியுள்ள அரபு நாடுகளுக்குமிடையே பதட்டம் அதிகரித்தது.
  • சிரியா கடற்கரைக்குச் சற்றுதொலைவில் அமெரிக்காவின் 6வது கப்பற்படை நிலை கொண்டது.

எகிப்து:

  • எகிப்தியப் பகுதிக்குள் இருந்த ஐ.நா.வின் படைகளையும், பார்வையாளர்களையும் இஸ்ரேலிய எல்லைக்கு அனுப்பும்படி எகிப்திய அதிபர் நாசர் கூறினார்.
  • ஐ.நா. சபை படைநகர்வு குறித்து அவர் கேட்க இயலாது என நாசருக்கு பதில் தெரிவித்தது.
  • 1967 மே 23இல் எகிப்து டைரன் கடலிடுக்கு வழியாக இஸ்ரேலின் கப்பல்கள் பயணப்படுவதற்குத் தடைவிதித்தது.

இஸ்ரேல்-எகிப்து போர்:

  • ஜூன் மாதத் தொடக்கத்தில் இஸ்ரேல் எகிப்தைத் தாக்கியது. கெய்ரோ நகரின் விமானத்தளங்களிலிருந்த விமானப்படை விமானங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன.
  • ஆறாம் நாள் போரில் மேற்குக்கரை, காஜா முனை மற்றும் கிழக்கு ஜெருசலேம், சிரியாவின் கோலன் குன்றுப் பகுதி, எகிப்தின் சினாய் பகுதிகளையும் இஸ்ரேல் கைப்பற்றியது. பாலஸ்தீனியர்கள் வெளியேறக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
  • ஒரு மில்லியனுக்கும் அதிகமான மோர் இன்னும் இராணுவக்கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 1

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 2

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 3

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 4

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 5

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 6

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 7

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 8

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 9

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 17

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 11

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 12

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 13

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 14

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

Samacheer Kalvi 12th History Guide Chapter 15 இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் 15

Samacheer Kalvi 12th History Guide Chapter 5 ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th History Guide Pdf Chapter 5 ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th History Solutions Chapter 5 ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம்

12th History Guide ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
அ) 1920
ஆ) 1925
இ) 1930
ஈ) 1935
Answer:
ஆ) 1925

Question 2.
கல்பனா தத் எதனுடன் தொடர்புடையவர்?
அ) ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷன்
ஆ) வங்காள சபை
இ) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
ஈ) இந்தியக் குடியரசு இராணுவம்
Answer:
ஈ) இந்தியக் குடியரசு இராணுவம்

Samacheer Kalvi 12th History Guide Chapter 5 ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம்

Question 3.
பின்வருவனவற்றைப் பொருத்துக.
அ. கான்பூர் சதி வழக்கு – 1.அடிப்படை உரிமைகள்
ஆ. மீரட் சதி வழக்கு – 2. சூரியா சென்
இ. சிட்டகாங் ஆயுதக் கிடங்கு – 3. 1929
ஈ. இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி மாநாடு 4. 1924

அ)1,2,3,4
ஆ) 2,3,4,1
இ) 3,4,1,2
ஈ) 4,3.2.1
Answer:
ஈ) 4,3,2,1

Question 4.
கீழ்க்காண்பவர்களில் 64 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு சிறையில் உயிரிழந்தவர் யார்?
அ) புலின் தாஸ்
ஆ) சச்சின் சன்யால்
இ)ஜதீந்திரநாத் தாஸ்
ஈ) பிரித்தி வதேதார்
Answer:
இ) ஜதீந்திரநாத் தாஸ்

Question 5.
பின்வரும் கூற்றுகளில் பொருளாதாரப் பெரும் மந்தம் குறித்துச் சரியானவை.
i) இது வட அமெரிக்காவில் ஏற்பட்டது
ii) வால் தெருவில் ஏற்பட்ட வீழ்ச்சியானது பெரும் மந்தத்தை விரைவுபடுத்தியது.
iii) பெரும் மந்தம் வசதி படைத்தவர்களை மட்டுமே பாதித்தது
iv) விலை வீழ்ச்சி அடைந்ததால் பெரும் மந்தத்தின் போது சிறப்பான வாழ்க்கை முறையை தொழிலாளர்கள்
அனுபவித்தனர்.
அ) i மற்றும் ii
ஆ) i, ii மற்றும் iii
இ) மற்றும் iv
ஈ) i, iii மற்றும் iv
Answer:
அ) i மற்றும் ii

Samacheer Kalvi 12th History Guide Chapter 5 ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம்

Question 6.
முதலாவது பருத்தித் தொழிற்சாலை பம்பாயில் தொடங்கப்பட்ட ஆண்டு
அ)1852
ஆ) 1854
இ) 1861
ஈ) 1865
Answer:
ஆ) 1854

Question 7.
கொடுக்கப்பட்ட குறிப்புகளை கொண்டு சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
i) “ChittagongArmoury Raiders Reminiscences” எனும் நூல்கல்பனாதத் என்பவரால் எழுதப்பட்டது.
ii) கல்பனா தத்தாய்நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் தாங்கி போராடினார்
iii) கல்பனாதத் பேரரசருக்கு எதிராகப் போர் தோடுத்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டார்.
அ) மட்டும்
ஆ) 1 மற்றும் ii
இ) ii மற்றும் iii
ஈ) அனைத்தும்
Answer:
ஈ) அனைத்தும்

Question 8.
முதலாவது பயணிகள் இரயில் 1853 இல் எந்த இடங்களுக்கு இடையே ஓடியது?
அ.  மதராஸ் – அரக்கோணம்
ஆ.  பம்பாய் – பூனா
இ. பம்பாய் – தானே
ஈ. கொல்கத்தா – ஹூக்ளி
Answer:
இ) பம்பாய தானே

Samacheer Kalvi 12th History Guide Chapter 5 ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம்

Question 9.
கல்கத்தாவில் முதலாவது சணல் ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு ………
அ)1855
ஆ) 1866
இ) 1877
ஈ) 1888
Answer:
அ) 1855

Question 10.
பின்வருவோரில் கான்பூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்டவர் யார்?
அ) எம்.என்.ராய்
ஆ) பகத் சிங்
இ)எஸ்.ஏ.டாங்கே
ஈ) ராம் பிரசாத் பிஸ்மில்
Answer:
அ) எம்.என்.ராய்

Question 11.
கான்பூர் சதி வழக்குக் குறித்த பின்வரும் எந்த கூற்றுகள் சரியானவை?
i) சணல் மற்றும் பருத்தி தொழிற்சாலைகளில் தொழிற்சங்கங்கள் தோன்றின.
ii) இவ்வழக்கில் கம்யூனிஸ்ட்களும் தொழிற்சங்கவாதிகளும் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
iii) இவ்வழக்கு நீதிபதி H.E.ஹோம்ஸ் என்பவரின் முன்பாக விசாரணைக்கு வந்தது.
iv) விசாரணைமற்றும் சிறைத்தண்டனையானது இந்தியாவில் காங்கிரஸ் நடவடிக்கைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

அ) i, ii மற்றும் iii
ஆ) i, iii மற்றும் iv
இ) ii, iii மற்றும் iv|
ஈ) i, ii மற்றும் iv
Answer:
ஈ) i, ii மற்றும் iv

Samacheer Kalvi 12th History Guide Chapter 5 ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம்

II. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க கிரேட் பிரிட்டனால் அனுப்பப்பட்ட மூன்று ஆங்கில கம்யூனிசவாதிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
Answer:
இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டியமைக்க உதவுவதற்கென பிரிட்டானிய கம்யூனிஸ்ட் கட்சியால் அனுப்பிவைக்கப்பட்ட கம்யூனிஸ்ட்டுகள்.

  1. பிலிப் ஸ்ப்ராட்
  2. பான் ப்ராட்லி
  3. லெஸ்டர் ஹட்சின்சன் ஆகியோர் ஆவார்.

Question 2.
மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞரை அடையாளப்படுத்துக.
Answer:
கே.எஃப் நாரிமன், எம்.சி.சக்லா போன்ற புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடினர்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 5 ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம்

Question 3.
புகழ்பெற்ற கோரக்பூர் நீதிபதியான H.E. ஹோம்ஸ் பற்றி நீவிர் அறிவது யாது?
Answer:
அமர்வு நீதிபதி H.E. ஹோம்ஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இவர் கோரக்பூர் அமர்வு நீதிபதியாக பணியாற்றிய போது சௌரிசௌரா வழக்கில் தொடர்பு கொண்டவர்களாக குற்றம் சாட்டப்பட்ட 172 விவசாயிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்து பிரசித்தி பெற்றவர்.

Question 4.
இரண்டாவது லாகூர் சதி என்றறியப்படும் நிகழ்வு யாது?
Answer:

  • ராஜகுரு, சுகதேவ். ஜஹீந்திரநாத் தாஸ் ஆகியோருடன் பகத்சிங்கும் மேலும் 21 பேரும் கைது செய்யப்பட்டு, “சாண்டர்ஸ் கொலை” தொடர்பான விசாரணைக்கு ஆளாக்கப்பட்டனர்.
  • இந்த வழக்கு இரண்டாவது லாகூர் சதி வழக்கு என்று அறியப்படுகிறது.
  • இதில் ஜஹிந்திரநாத் தாஸ் என்பவர் சிறையின் மோசமான நிலை, பாரபட்சமான நடவடிக்கைகளை எதிர்த்து 64 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு, சிறையிலேயே மரணமடைந்தார்.

Question 5.
இந்தியாவின் நவீன தொழிற்சாலையின் தந்தை என ஜே.என். டாடா அழைக்கப்பட காரணம் என்ன ?
Answer:

  • ஜே.என்.டாடா என்கிற ஜாம்ஷெட்ஜி நுஸவர்வஞ்சி டாடா பரோடாவில் உள்ள நல்சாரி என்ற இடத்தில் ஒரு பார்சி வணிக குடும்பத்திலிருந்து வந்தவர்.
  • இந்தியாவின் முதல் வெற்றிகரமான தொழிலதிபர் இவர் என்பதால், “இந்திய நவீனத் தொழிலகங்களின் தந்தை” என அழைக்கப்படுகிறார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 5 ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம்

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
சிட்டகாங் ஆயுதப் படைத் தாக்குதலை நடத்த சூரியாசென் எவ்வாறு திட்டமிட்டார்?
Answer:

  • சூரியா சென்னின் புரட்சிக் குழுவான இந்தியக் குடியரசு இராணுவம் சிட்டகாங்கை கைபற்ற மறைந்திருந்து தாக்கும் கொரில்லா பாணி தாக்குதலை நடத்த திட்டமிட்டனர்.
  • 1930 ஏப்ரல் 18 அன்று இரவில் சிட்டகாங் படைத்தளம் தாக்கி தகர்க்கப்பட்டது.
  • மாகாணத்தின் பிற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தும் முகமாக ரயில்வே தகவல்தொடர்பு வலை பின்னல்களை துண்டிக்கும் பொருட்டு தந்தி, அலுவலகங்கள், படைத்தளங்கள், காவல்துறை முகாம்கள் போன்றவைகளை தகர்த்தனர்.
  • காலனிய நிர்வாகத்திற்கு நேரடியாக சவால் விடுக்கும் நோக்குடன் அது நடந்தேறியது.

Question 2.
டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO) பற்றி குறிப்பு எழுதுக.
Answer:

  • 1907ல் பீகாரில் உள்ள சாகிநகரில் டாடா குழுமத்தால் டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO) முதன்முதலில் சுதேசி இயக்கத்தின் ஒரு நிகழ்வாக அமைக்கப்பட்டது.
  • இந்தத்துறையில் உள்ள மற்ற முயற்சியாளர்களை விட டாடா மிக உன்னத நிலையை அடைந்துள்ளது.
  • அதன் உற்பத்தி 1912-13ல் 31,000 டன்னிலிருந்து 1917-18ல் 1,81000 டன்னாக அதிகரித்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 5 ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம்

Question 3.
தென்னிந்தியாவில் தொழிற்சங்கங்களின் வளர்ச்சிக்காகச் சிங்காரவேலர் ஆற்றிய பங்களிப்புக் குறித்து எழுதுக.
Answer:

  • சிங்காரவேலர் இளமைகாலத்தில் புத்தமதத்தை தழுவினார், பிறகு இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து செயல்பட்டார்.
  • எனினும் சில காலத்திற்குப்பிறகு அவர் புரட்சிகர தேசியவாத பாதையை தேர்ந்தெடுத்தார்.
  • திரு.வி.கல்யாண சுந்தரத்துடன் இணைந்து தென்னிந்தியாவில் பல தொழிற்சங்கங்களை தோற்றுவித்தார்
  • 1923 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாள் முதன் முறையாக நாட்டில் மேதினத்தை கொண்டாடினார்.
  • 1928ல் தென்னிந்திய ரயில்வே வேலை நிறுத்தத்தை (பொன்மலை, திருச்சிராப்பள்ளி) ஏற்பாடு செய்ததில் இவர் முக்கியப் பங்கு வகித்தள் அதற்காக தண்டனை பெற்றார்.

IV. விரிவான விடையளிக்கவும்

Question 1.
பகத்சிங்கின் புரட்சிகர தேசியவாதம் மற்றும் புரட்சிகர நடவடிக்கைகள் எவ்வாறு அவரைத் தூக்கு மேடைக்கு இட்டுச் சென்றது? (மார்ச் 2020)
Answer:
பகத்சிங்கின் பின்புலம்:

  • தேசியவாதத்தின் ஓர் ஒப்பற்ற நிலையைப் பகத்சிங் பிரதிநிதித்துவப் படுத்துகிறார். அவருடைய புரட்சிகர
    தேசியவாத நிலைப்பாடு, ஒரு தனித்த வழி என்ற அளவில் ஒட்டுமொத்த விடுதலை இயக்கத்தின் லட்சியங்களுக்காகப் பெரிதும் பாராட்டப்படுகிறது.
  • பகத்சிங்கின் 14ஆம் வயதில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்தது. அவர் தனது இளமைக் காலம் முதலாகவே, நவ்ஜவான் பாரத் சபா, ஹிந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேஷன் ஆகிய அமைப்புகளில் தன்னை இணைத்துக்கொண்டார்.
  • 1929 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி மத்திய சட்டமன்றத்தில் வீசிய குண்டுகள் எவரையும் கொல்லவில்லை. ஆங்கிலேயர்களின் கொடுங்கோன்மைச் சட்டங்களுக்கு எதிரான ஒரு போராட்டச்
    செயலாக புரட்சியாளர்களால் அது கருதப்பட்டது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 5 ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம்

Question 2.
1919 – 1939 ஆம் ஆண்டுகளுக்கிடையில் காலனி ஆதிக்க இந்தியாவில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சியினைப் பற்றி எழுதுக.
Answer:

  • பிரிட்டிஷ் வணிகக் கொள்கையானது உள்நாட்டுத் தொழிற்துறையைப் பெரும் எண்ணிக்கையாக்கியது.
  • முதல் உலகப்போரின் போதும் பொருளாதாரப் பெருமந்தம் போன்ற சில எதிர்பாராத சந்தர்ப்பங்கள் காரணமாகவும் இந்தியாவில் தொழில்துறை விரிவாக்கம் ஏற்பட்டது. –
  • போர்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதி உற்பத்தி தொழில்களின் வளர்ச்சியை பாதித்துள்ளது.
  • ஆச்சிரியத்தக்க வகையில் இந்திய தொழில்களின் வளர்ச்சி சிறப்பாக இருந்தது.
  • 1923-24இல் ஒரு சிறிய தடுமாற்றத்திற்குப் பிறகு, நெசவுத் தொழில் சிறப்பாக செயல்படத் தொடங்கியது.
  • 1929-30ல் இந்தியாவால் 44 சதவீதம் வெளியில் இருந்து நுகர்வு செய்யப்பட்ட பருத்திப் பொருட்கள் 1933-34இல் பெருமந்த நிலைக்குப் பிறகு, 20.5 சதவீதமாகக் குறைந்துவிட்டது.
  • வளர்ச்சி அடைந்த ஏனைய இரண்டு தொழில்கள் சர்க்கரை உற்பத்தியும் சிமெண்ட் உற்பத்தியுமாகும்.
  • போர்களுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில் கப்பல் தொழிலும் வளர்ச்சியைக் கண்டது. இந்தியா நீராவிக்
    கப்பல் கம்பெனி லிமிடெட் (1919) ஏனையவற்றிற்கு முன்னோடியாக இருந்தது. –
  • 1939இல், அவர்கள் பிரிட்டிஷாரின் பம்பாய் நீராவிக் கப்பல் நிறுவனத்தையும் வாங்கிவிட்டனர்.
  • இரண்டாம் உலகப்போருடன் ஒரு புதிய கட்ட உற்பத்தி துவங்கி. அது இயந்திர உற்பத்தி, விமானப் போக்குவரத்து. ரயில் பெட்டி, ரயில் எஞ்சின் உற்பத்தி மற்றும் பலவற்றிற்கான உற்பத்தித் தொழில்களாய் விரிவடைந்தது.

Question 3.
பொருளாதாரப் பெரும் மந்தம் ஏற்பட்ட போது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் லட்சியங்கள் வெளிப்படுத்துவதில் இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி மாநாட்டின் முக்கியத்துவத்தை ஆய்வு செய்க.
Answer:

  • இந்திய தேசிய காங்கிரஸ், புரட்சியாளர்களின் வன்முறைச் செயல்களுக்கு மாறாக, வன்முறையற்ற போராட்டங்களுக்கு மக்களை அணி திரட்டியது.
  • தனது சட்டமறுப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக காங்கிரஸ் குத்தகை செலுத்தா மற்றும் வரிசெலுத்தாப் போராட்டத்தைக் கடைபிடித்தது.
  • பெருமந்த அழுத்தத்தினால் ஏற்பட்ட சமூக- பொருளாதாரத் தேவைகள் கராச்சியின் காங்கிரஸ் அமர்வில் தீவிரமாய் பேசப்பட்டது.
  • விடுதலைப் போராட்டம் ஒரு புதிய வடிவம் பெற்றது. விவசாயிகள் கிசான் சபா எனப்படும் விவசாயிகள் சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டும் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இணைந்து கொண்டும் தங்களது பெரிய அளவிலான ஈடுபாட்டை சுதந்திரப் போராட்டக்களத்தில் உயர்த்தினர்.
  • நேருவின் தலைமையின் கீழ் வந்த காங்கிரஸ் சமூக மற்றும் பொருளாதார நீதி அடிப்படையில் ஒரு சமத்துவ சமூகத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தது.
  • 1931 மார்ச்சில் நடந்த கராச்சி அமர்வு சர்தார் வல்லபாய் படேல் தலைமையில் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகளில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய தோடல்லாமல் சுதந்திர இந்தியாவின் பொருளாதார கொள்கை பற்றிய ஒரு பார்வையை வழங்கியது.
  • அடிப்படை உரிமைகள் தீர்மானத்தை மேலோட்டமாய் பார்த்தால் கூட பிரிட்டிஷாரால் நமது அடிப்படை உரிமைகள் எப்படியெல்லாம் மறுக்கப்பட்டுள்ளது என்பது தெரியும்.
  • அதனால்தான் அடிப்படை உரிமைகள் தீர்மானத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது.
  • கொடூரமான சட்டங்கள் போட்டும், அடக்குமுறைகளைக் கையாண்டும் மக்களின் சுதந்திரத்தைக் காலனியரசு நசுக்கியது.
  • சுதந்திர இந்தியாவில் இந்திய தேசிய காங்கிரஸ் தான் வழங்க உறுதி அளித்துள்ள உரிமைகள் பட்டியலில் காந்தியக் கொள்கைகளும் நேருவின் சோசலிஷப் பார்வைகளும் இடம் பெற்றன.

Samacheer Kalvi 12th History Guide Chapter 5 ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம்

12th History Guide ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் Additional Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
எம்.சிங்கார வேலர் இளமைகாலத்தில் …………… மதத்தை தழுவினார்.
அ) இந்து
ஆ) ஜைன சமயம்
இ) புத்தமதம்
ஈ) கிறித்துவம்
Answer:
இ) புத்தமதம்

Question 2.
ஆங்கிலேய அரசினால் கொடுக்கப்பட்ட அனைத்து கம்யூனிஸ்ட் சதி வழக்குகளிலும் பெரிதும் புகழ்பெற்றதும்……………………..
அ) கான்பூர் சதி வழக்கு
ஆ) மீரட்சதிவழக்கு
இ) லாகூர் சதி வழக்கு
ஈ) பெஷாவர் சதிவழக்கு
Answer:
ஆ) மீரட்சதிவழக்கு

Samacheer Kalvi 12th History Guide Chapter 5 ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம்

Question 3.
பொருத்துக.
1. கான்பூர் வதிவழக்கு 1. 1929
2 2வது லாகூர் சதிவழக்கு 2. 1922
3 மீரட் சதிவழக்கு 3. 1924
4 பெஷாவர் சதிவழக்கு 4. 1930
அ) 3,4,1,2
ஆ) 3,1,2,4
இ) 1,2,3,4
ஈ) 4, 3, 2, 1
Answer:
அ) 3,4,1,2

Question 4.
ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி நடை பெற்ற ஆண்டு ………….
அ) 1917
ஆ) 1927
இ) 1919
ஈ) 1922
Answer:
அ) 1917

Question 5.
1931 – 1936 க்கு இடைப்பட்ட காலத்தில் மாகானத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளில் உயிருந்து ………….. ஆக உயர்ந்த து. அ)7
ஆ) 9
ஆ) 9
இ) 11
ஈ) 13
Answer:
இ) 11

Samacheer Kalvi 12th History Guide Chapter 5 ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம்

Question 6.
நாட்டில் முதன் முதலில் மே தினம் கொண்டாடப்பட்ட ஆண்டு …………
அ) 1921 மே 1
ஆ) 1922 மே 1
இ) 1923 மே 1
ஈ) 1924 மே 1
Answer:
இ) 1923 மே 1

Question 7.
பகத்சிங் சட்டமன்றத்தில் குண்டு வீசிய நிகழ்வு நடைபெற்ற நாள் ……………
அ) 1928 ஏப்ரல் 8
ஆ) 1929 ஏப்ரல் 8
இ) 1929 ஜீலை 8
ஈ) 1927 பிப்ரவரி 18
Answer:
ஆ) 1929 ஏப்ரல் 8

Question 8.
டாடா நீர் மின் சத்தி நிறுவனம் உதயமான ஆண்டு ……….
அ) 1908
ஆ) 1910
இ) 1912
ஈ) 1914
Answer:
ஆ) 1910

Samacheer Kalvi 12th History Guide Chapter 5 ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம்

Question 9.
தாய்நாட்டை காப்பதற்காக விடுதலை போரில் ஆயுதம் தாங்கிய இளம் பெண்
அ) கஸ்தூரி பாய்
ஆ) கல்பனா தத்
இ) ஜான்சிராணி
ஈ) டாக்டர். முத்துலெட்சுமி
Answer:
ஆ) கல்பனா தத்

II. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
புரட்சிகர தேசிய வாதக்குழு பற்றி அறிவது யாது?
Answer:

  • இந்தியாவில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் ஒரு புதிய புரட்சிகர தேசியவாத சகாப்தம் தோன்ற வழிவகுத்தது.
  • 1921 ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தேசியவாதக் குழுவினர் பெஷாவருக்கு வந்தனர். ரஷ்ய கம்யூனிஸ்ட் இயக்கத்தினரான போல்ஷ்விக்குகள் வந்துள்ளனர் என்று குற்றம் சாட்டி அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்னர்.
  • 1922, 1927 ஆம் ஆண்டுகளுக்கிடையில் அவர்கள் மீது தொடர்ச்சியாக ஐந்து சதி வழக்குகள் தொடுக்கப்பட்டன.

Question 2.
‘கம்யூனிஸ்ட்டுகளின் பாதுகாப்புகுழு’ ஏன் ஏற்படுத்தப்பட்டது?
Answer:
ஆங்கிலேயர்களால் குற்றம் சாட்டப்பட்ட கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவாக வாதாட வழக்கறிஞர்களை அமர்த்தவும், நிதி திரட்டவும் ‘கம்யூனிஸ்ட்டுகளின் பாதுகாப்புக் குழு’ உருவாக்கப்பட்டது.

Question 3.
கான்பூர் சதி வழக்கில் சிறை தண்டனை பெற்றோர் யாவர்?
Answer:
கான்பூர் சதிவழக்கில் முசாபர் அகமது, சவுகது உஸ்மாகி, நளினி குப்தா, எஸ்.ஏ.டாங்கே ஆகியோர் நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அனுபவிப்பதற்காக சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 5 ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம்

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
பொருளாதாரப் பெருமந்தத்தின் போது தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சியைப் பற்றி கூறுக
Answer:

  • சென்னை மாகாணத்தில் தொழில்துறை வளர்ச்சி கனிசமாக இருந்தது.
  • கோயம்புத்தூரில் 1896ல் ஸ்டேன்ஸ் மில் (கோயம்புத்தூர் நூற்பு மற்றும் நெசவு ஆலை) நிறுவப்பட்ட பின் வேறு எந்த ஆலைகளும் வரவில்லை .
  • பொருளாதாரப் பெருமந்தத்தால் ஏற்பட்ட நிலத்தின் விலை வீழ்ச்சி, குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்கள், குறைந்த வட்டி விகிதத்தில் கடன் போன்றவை கோயம்புத்தூரில் ஜவுளித்துறையின் விரிவாக்கத்திற்கு வழிவகுத்தனர்.
  • 1929-37 களில் கோயம்புத்தூரில் 29 ஆலைகள் மற்றும் விதை நீக்கும் தொழிற்சாலைகள் தோன்றின.
  • 1932ல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மதுக்கரை என்ற இடத்தில் சிமெண்ட் தொழிற்சாலை தொடங்கப்பட்டது.
  • 1931 நமக்கு இடையில் சர்க்கரை ஆலைகள் உலிருந்து 11 ஆக உயர்ந்தது.
  • இதே காலத்தில் அரிசி ஆலைகள், எண்ணெய் ஆலைகள் மற்றம் சினிமா நிறுவனங்களின் பெருக்கமும் அதிகரித்தது.

Question 2.
இந்தியாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவானது எவ்வாறு?
Answer:

  • இந்தியாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை கட்டி அமைக்க உதவுவதற்காக பிரிட்டானிய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிலிப் ஸ்ப்ராட், பான் ப்ராட்லி, லெஸ்டர் ஹட்சின்சன் ஆகிய மூவரும் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர்
  • கான்பூர் சதிவழக்கின் விசாரனையின் போது மேற்கூறிய மூவரும், சில தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
  • இது புரட்சிகர தேசிய வாதத்தின் உணர்வை மழுங்கடிப்பதற்கு பதிலாக கம்யூனிஸ்ட்களின் நடவடிக்கைகளுக்கு உத்வேகமாக அமைந்தது.
  • 1925 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவெங்கிலும் இருந்துவந்த பல்வேறு கம்யூனிஸ்ட்டு குழுக்களின் மாநாடு பம்பாயில் நடந்தேறியது. இந்த மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து M.சிங்கார வேலர் கலந்து கொண்டார்.
  • அங்குதான் பம்பாயைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய மண்ணில் முறைப்படியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி’ நிறுவப்பட்டது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 5 ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம்

Question 3.
‘கல்பனா தத்’ என்னும் வீரப் பெண்மணிபற்றிய குறிப்பு தருக.
Answer:

  • 1920களின் பிற்பகுதியில் கல்பனா தத் என்னும் ஓர் இளம் பெண் சிட்டகாங் ஆயுதப்படைத் தளத்தை துணிகரமாகத் தாக்கியதன் மூலம் இளம் நெஞ்சங்களில் தேசபத்தியை கனன்ஹழச் செய்தவர்.
  • ஆணாதிக்கமாக்க இச்சமூகத்தில் தாய்நாட்டைக் காப்பதற்காய் இளம் பெண்களின் பிரதிநிதியாய் விடுதலைப்போரில் ஆயுதம் தாங்கி கல்பனா தத் பங்கேற்றார்.
  • புரட்சிகர சிட்டகாங் இயக்கத்தில் தீவிரமாய் பங்கேற்றதினால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.

IV. விரிவான விடையளிக்கவும்

Question 1.
மீரட் சதி வழக்கின் விசாரணையும், தண்டனையும் பற்றி ஆய்க.
Answer:
விசாரணை:

  • மீரட்சதி வழக்கில் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக ஒரு தேசிய மீரட் சிறைவாசிகளின் பாதுகாப்புக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது.
  • கே.எஃப். நாரிமன், எம்.சி. சுக்லா போன்ற புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வாதாடினர்.

தேசியதலைவர்கள் வருகை:
மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு போன்ற தேசியத் தலைவர்கள் கூடச் சிறைக்குச் சென்று குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பார்த்துவிட்டு வந்தனர். நமது சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வழக்கின் முக்கியத்துவத்தை காட்டுகின்றன.

தீர்ப்பு :

  • 1929 ஆம் ஆண்டில் நடைபெற்ற கைது நடவடிக்கைகளுக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் 1933 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் நாள் மீரட் அமர்வு நீதிமன்றம் கடுமையான தீர்ப்பை வழங்கியது.
  • 27 பேர் தண்டிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

கம்யூனிச சித்தாந்த பரவல்:
இச்செய்தி செய்தித்தாள்களின் மூலம் வெளியாகி இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் கம்யூனிசச் சித்தாந்தம் செயல்பாடுகள் ஆகியவற்றை அறிந்து கொண்டனர். தீர்ப்புக்கு எதிராக கிளர்ச்சிகள் வெடித்தன.

சர்வதேச அழுத்தம்:

  • ரோமன் ரோலண்ட், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்றவர்கள் கூட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.
  • தேசிய, சர்வதேச அழுத்தங்களின் காரணமாக, அவர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து 1933ஆம் ஆண்டு ஜூலை மாதம் தண்டனை வெகுவாகக் குறைக்கப்பட்டது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 5 ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம்

Question 2.
கம்யூனிஸ்ட்களின் செயல்பாடுகளையும், அரசின் ஒடுக்குமுறையையும் விவரி.
Answer:
கம்யூனிஸ்ட்களின் செயல்பாடுகள்:

1929ஆம் ஆண்டின் மீரட் சதி வழக்குதான் அனேகமாக, ஆங்கிலேய அரசினால் தொடுக்கப்பட்ட அனைத்து கம்யூனிஸ்ட் சதி வழக்குகளிலும் பெரிதும் புகழ்பெற்றதாகும்.

1920களின் பிற்பகுதி ஏராளமான தொழிலாளர் எழுச்சிகளைக் கண்டது.

தொழிற்சங்க நடவடிக்கைகள் பற்பல நகர்ப்புறங்களுக்குப் பரவி, தொழிலாளர் வேலை நிறுத்தங்களை ஏற்படுத்தியது. இந்தக் காலக்கட்டம் முழுவதிலும் உழைப்பாளி வர்க்கத்தை ஒருங்கிணைப்பதில் கம்யூனிஸ்டுகள் முக்கியப் பாத்திரத்தை வகித்தனர்.

1927ஆம் ஆண்டு பிப்ரவரியிலும் செப்டம்பரிலும் நடைபெற்ற காரக்பூர் ரயில்வே பணிமனை வேலை நிறுத்தங்கள், 1928ஆம் ஆண்டு ஜனவரி, ஜூலை மாதங்களுக்கிடையில் நடைபெற்ற லில்லுவா ரயில் பணிமனை வேலைநிறுத்தம், 1929ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வங்காளத்தின் சணல் ஆலைகளில் நடைபெற்ற பல்வேறு வேலை நிறுத்தங்கள், 1928ஆம் ஆண்டு ஜூலையில் திருச்சிராப்பள்ளியின் பொன்மலை பணிமனையில் வேலை நிறுத்தம், 1928 ஏப்ரலில் பம்பாயில் நடந்தேறிய ஜவுளித் தொழிலாளர் வேலை நிறுத்தம் ஆகியன குறிப்பிட்டுச் சொல்லத்தக்கச் சில வேலை நிறுத்தங்கள் ஆகும்.

அரசு ஒடுக்குமுறை:

  • 1928 ஆம் ஆண்டின் தொழிற்தகராறுகள் சட்டம், 1928ஆம் ஆண்டின் பொதுமக்கள் பாதுகாப்பு மசோதா ஆகிய இரு கொடுஞ்சட்டங்களை இயற்றியது.
  • தொழிலாளர்கள், விவசாயிகள் மத்தியில் வலுவான கம்யூனிஸ்ட் செல்வாக்கு நிலவுவது கண்டு அரசு கவலை கொண்டது.
  • பம்பாய், கல்கத்தா, பஞ்சாப், பூனா, ஒருங்கிணைந்த பிரதேசங்கள் போன்ற பிரிட்டிஷ் இந்தியாவின் பகுதிகளிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் 32 முன்னோடிச் செயல்பாட்டாளர்களைக் கைது செய்தது.
  • அவர்களில் பெரும்பாலானோர் தொழிற்சங்கச் செயல்பாட்டாளர்கள்.
  • அவர்களில் குறைந்தபட்சம் 8 பேர் இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்தவர்கள்.
  • இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியமைக்க உதவுவதற்கென பிரிட்டானிய கம்யூனிஸ்ட் கட்சியால் அனுப்பி வைக்கப்பட்ட பிலிப் ஸ்ப்ராட், பான் ப்ராட்லி, லெஸ்டர் ஹட்சின்சன் ஆகிய பிரிட்டானிய கம்யூனிஸ்டுகள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Commerce Guide Pdf Chapter 22 The Negotiable Instruments Act, 1881 Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Commerce Solutions Chapter 22 The Negotiable Instruments Act, 1881

12th Commerce Guide The Negotiable Instruments Act, 1881 Text Book Back Questions and Answers

I. Choose the Correct Answers

Question 1.
Negotiable Instrument Act was passed in the year …………..
a) 1981
b) 1881
c) 1994
d) 1818
Answer:
b) 1881

Question 2.
Negotiable Instrument is freely transferable by delivery if it is a …………..  instrument.
a) Order
b) Bearer
c) both a & b
d) None of the above
Answer:
b) Bearer

Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881

Question 3.
The transferee of a Negotiable Instrument is the one ……………………
a) Who transfer the instrument
b) On whose name it is transferred
c) Who enchases it
d) None of the above
Answer:
b) On whose name it is transferred

Question 4.
The number of parties in a bill of exchange is
a) 2
b) 6
c) 3
d) 4
Answer:
c) 3

Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881

Question 5.
Section 6 of the Negotiable Instruments Act 1881 deals with
a) Promissory Note
b) Bills of exchange
c) Cheque
d) None of the above
Answer:
c) Cheque

Question 6.
………………..  cannot be a bearer instrument.
a) Cheque
b) Promissory Note
c) Bills of exchange
d) None of the above
Answer:
a) Cheque

Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881

Question 7.
When crossing restrict further negotiation
a) Not negotiable crossing
b) General Crossing
c) A/c payee crossing
d) Special crossing
Answer:
a) Not negotiable crossing

Question 8.
Which endorsement relieves the endorser from incurring liability in the event of dishonor
a) Restrictive
b) Facultative
c) Sans recourse
d) Conditional
Answer:
b) Facultative

Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881

Question 9.
A cheque will become stale after …………. months of its date
a) 3
b) 4
c) 5
d) 1
Answer:
a) 3

Question 10.
Document of title to the goods excludes
a) Lorry receipt
b) Railway receipt
c) Airway bill
d) Invoice
Answer:
d) Invoice

II. Very Short Answer Questions

Question 1.
What is meant by Negotiable Instrument?
Answer:
A negotiable instrument is a document which entitles a person to a certain sum of money and which is transferable from one person to another by mere delivery or by endorsement and delivery.

Question 2.
Define Bill of Exchange.
Answer:

  • “A Bill of Exchange is an instrument in writing containing an unconditional order, signed by the maker, directing a certain person to pay a certain sum of money only to or to the order of a certain person or to the bearer of the instrument”.
  • Negotiable Instrument Act -1881, Sec – 5.

Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881

Question 3.
List three characteristics of a Promissory Note.
Answer:
Characteristics of a Promissory Note:

  1. A promissory note must be in writing.
  2. The promise to pay must be unconditional.
  3. It must be signed by the maker.

Question 4.
Define Cheque.
Answer:

  • A cheque is a printed instrument issued by Commercial Banks to its customers for making and receiving payments. [To withdraw self and to pay others]
  • The person who draws a cheque is called – “Drawer”.
  • The Bank on whom the cheque is drawn is called – “Drawee”.
  • The person who receives payment on the cheque is called – “Payee”.

Question 5.
Define Endorsement.
Answer:
“When the maker or holder of a negotiable instrument signs the name, otherwise that as such maker for the purpose of negotiation, on the back or face thereof, or on a slip of paper annexed thereto.”

Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881

III. Short Answer Questions

Question 1.
Explain the Characteristics of Negotiable Instrument.
Answer:
A negotiable instrument is transferable from one person to another without any formality, such as affixing stamp, registration, etc. When the instrument is held by the holder in due course in the process of negotiation, it is cured of all defects in the instrument with respect to ownership. Though a bill, a promissory note, or a cheque represents a debt, the transferee is entitled to sue on the instrument in his own name in case of dishonour, without giving notice to the debtor that he has become its holder.

Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881

Question 2.
Distinguish between Negotiability and Assignability. (NON)
Answer:

No. Basis of Difference

Negotiability Assignability

1. Nature of title

In case of negotiation, the transferee can get a better title than that of transfer or provided he takes the instrument for bonafide and for value. In the case of an assignment, the assignee [Transferee] cannot get a better title than that of the assignor. [Transferor].
       2. Ownership In case it is payable to Bearer – mere delivery.
In case it is payable in order – Endorsement and delivery and easy to transfer.
The transfer of legal title takes place by means of a separate document and after complying with the necessary legal formalities.
      3. Notice Notice is not necessary for the holder to claim the payment from debtors. The assignee must give notice to the debtors.

Question 3.
What are the characteristics of a Bill of Exchange?
Answer:
Characteristics of a Bill of Exchange:

  1. A bill of exchange is a document in writing.
  2. The document must contain an order to pay.
  3. The order must be unconditional.
  4. The instrument must be signed by the person who draws it.
  5. The name of the person on whom the bill is drawn must be specified in the bill itself.

Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881

Question 4.
Distinguish between Bill of Exchange and Promissory Note. (UNDI)
Answer:

No. Basis of Difference

Bill of Exchange

Promissory Note

1. Undertaking It contains an unconditional order. It contains an unconditional undertaking.
2. Number of Parties There are three parties:

  • Drawer [maker]
  • Drawee
  • Payee
There are two parties:

  • Maker
  • Payee
3. Drawer of the instrument A creditor draws a Bill on the debtor. A debtor executes a promotion in favour of a creditor.
4. Identify the parties Both Drawer and payee can be one and the same person. The maker himself can not be the payee because the same person cannot be both the promisor and promisee.

Question 5.
Discuss the two different types of the crossing.
Answer:
General Crossing:
According to section 123 of the Negotiable Instruments Act, 1881,
“Where a cheque bears across its face an addition of the words “and company” or any abbreviation thereof between two transverse parallel lines simply, either with or without the words “not negotiable” that addition shall be deemed a crossing and the cheque shall be deemed to be crossed generally”.

Special Crossing:
According to section 124 of the Negotiable Instruments Act, 1881
“Where a cheque bears across its face an addition of the name of a banker with or without the word “not negotiable” that addition shall deem a crossing and the cheque shall be deemed to be crossed specially”.

Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881

IV. Long Answer Questions

Question 1.
Mention the presumptions of Negotiable Instruments.
Answer:
Presumptions of Negotiable Instrument:

  1. Every negotiable instrument is presumed to have been drawn and accepted for consideration.
  2. Every negotiable instrument bearing, a date is presumed to have been made or drawn on such a date.
  3. It is presumed to have been accepted within a reasonable time after the date and before its maturity.
  4. The transfer of a negotiable instrument is presumed to have been made before maturity.
  5. When a negotiable instrument has been lost, it is presumed to have been duly stamped.
  6. The holder of a negotiable instrument is presumed to be a holder in due course.

Question 2.
Distinguish between cheque and Bill of Exchange. (DOGS AND VP)
Answer:

No. Basis of Difference

Bill of Exchange

Cheque

1. Drawn A Bill of Exchange can be drawn on any person including Banker. A Cheque can be drawn from a specified Banker.
2. On dishonour On dishonour there is a practice of Noting and protesting. No such things on dishonour.
3. Grace days 3 grace days are allowed to calculate the maturity date. Grace days are not allowed.
4. Stamping Sufficiently stamped. Need not be stamped.
5. Acceptance Acceptance by the drawee is necessary. Does not require any acceptance.
6. Notice Notice of dishonour is necessary. Notice of dishonour is not necessary.
7. Discounting It can be discounted. It cannot be discounted.
8. Validity A Bill made payable to the bearer on demand is void. A Cheque drawn payable to the bearer on demand is valid.
9. Payability It is payable on demand It is payable after a specified period.

Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881

Question 3.
Discuss in detail the features of a cheque. (SAUDI PP)
Answer:
A cheque is a negotiable instrument drawn on a particular banker.
Features:
(i) Instrument in Writings:
A cheque or a bill or a promissory note must be an instrument in writing. Though the law does not prohibit a cheque from being written in pencil, bankers never accept it because of risks involved. Alternation is quite easy but detection is impossible in such cases.

(ii) Unconditional Orders:
The instrument must contain an order to pay money. It is not necessary that the word ‘order’ or its equivalent must be used to make the document a cheque. It does not cease to be a cheque just because the world ‘please’ is used before the word pay. Further, the order must be unconditional.

(iii) Drawn on a Specified Banker Only:
The cheque is always drawn on a specified banker. A cheque vitally differs from a bill in this respect as latter can be drawn on any person including a banker. The customer of a banker can draw the cheque only on the particular branch of the bank where he has an account.

(v) A Certain Sum of Money Only:
The order must be for payment of only money. If the banker is asked to deliver securities, the document cannot be called a cheque. Further, the sum of money must be certain.

(v) Payee to be Certain:
The cheque must be made payable to a certain person or to the order of a certain person or to the bearer of the instrument. The word, a person includes corporate bodies, local authorities, associations, holders of the office of an institution etc.

(vi) Signed by the Drawer:
The cheque is to be signed by the drawer. Further, it should tally with the specimen signature furnished to the bank at the time of opening the account.

Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881

Question 4.
What are the requisites for a valid endorsement? (BAD NEWS D)
Answer:
If an endorsement is to be valid, it must possess the following requisites:

  1. The endorsement is to be made on the face of the instrument or on its back.
  2. When there is no space for making further endorsements a piece of paper can be attached
  3. Endorsement for only a part of the amount of the instrument is invalid.
  4. The endorsement is complete only when delivery of the instrument is made.
  5. Signing in block letters does not constitute a regular endorsement.
  6. If the payee is an illiterate person, he can endorse it by affixing his thumb impression on the instrument.

Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881

Question 5.
Explain the different kinds of endorsement.
Answer:
1. Blank or General Endorsement:
Without writing anything on the backside of the instrument, the endorser affixing his sign only.
Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881 1

Question 2.
Full or special Endorsement:
Answer:
If the Endorser adds a direction to pay the amount mentioned, to or to the order of a specified person.

Other forms:

  • Raaja in favour of Nehan.
  • Nehan or order of Raaja.
  • Please exchange Nehan – Raaja.

Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881

Question 3.
Conditional or Qualified Endorsement:
Answer:
The endorsee’s right to receive money is subject to the fulfilment of a particular event (condition).
Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881 3
Other forms:

  • Pay to Preetha if she marries Yashwanth.
  • Pay to Hasan on completion of the house building.

Question 4.
Restrictive Endorsement:
Answer:
When endorsement restricts or prohibits further negotiability of the instrument, by added the word “ONLY” after the endorsee’s name.
Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881 4
Other forms:
Raaja in favour of Nehan.

Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881

Question 5.
Sans recourse Endorsement:
Answer:

  • It is an Endorsement which limits the liability of the endorser.
  • The effect of this endorsement is, to render the endorser free from all liability to any subsequent holder.
    Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881 5

Other forms:
Pay to Nehan sans recourse.

Question 6.
Sans Frais Endorsement:
Answer:

  • ‘Sans Frais’ means without expense to me. [Noting charges]
  • The Endorser does not want any expenses to be incurred in his account on the instrument.

Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881 6

Question 7.
Facultative Endorsement:
Answer:
It is an Endorsement, whereby, the Endorser waives some of his rights on the instrument.
Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881 7

Question 8.
Partial Endorsement:
Answer:

  • It is an Endorsement that seeks to transfer only a part of the payments under the instrument.
  • It is not valid.

Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881 8

Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881

12th Commerce Guide The Negotiable Instruments Act, 1881 Additional Important Questions and Answers

I. Choose the Correct Answers
Question 1.
Number of parties to a cheque is………………..
a) 2
b) 3
c) 4
d) 6
Answer:
b) 3

Question 2.
Number of parties to a Promissory Note are …………….
a) 5
b) 3
c) 1
d) 2
Answer:
d) 2

Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881

Question 3.
A bill of exchange drawn on a specified banker is
(a) promissory note
(b) cheque
(c) hundi
(d) share
Answer:
(b) cheque

Question 4.
Section ……….. defined a Bill of Exchange.
a) 1
b) 3
c) 5
d) 7
Answer:
c) 5

Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881

Question 5.
Section …………. defined a cheque.
a) 4
b) 5
c) 6
d) 7
Answer:
c) 6

Question 6.
……………….. days will be given to Bill of Exchange as Grace Days.
a) 3
b) 4
c) 8
d) 9
Answer:
a) 3

Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881

Question 7.
A person who wants to transfer the instrument has to sign on the back is called …………..
a) Endorsee
b) Endorser
c) Indorseum
d) Indorsee
Answer:
b) Endorser

Question 8.
A piece of paper that can be attached to an instrument to sign is called ……………
a) Allonge
b) Stamp
c) Sticker
d) All of these
Answer:
a) Allonge

Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881

Question 9.
Pay to Nehan, if he got 595 marks in +2 Exam is an example for ……………. endorsement.
a) Blank
b) Full or Special
c) Condition
d) Restrictive
Answer:
c) Condition

Question 10.
Pay to Noohu or Bearer is an example for ……………… instrument
a) Bearer
b) Order
c) Inland
d) Foreign
Answer:
a) Bearer

Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881

Question 11.
Pay to Nathifa or order is an example for ………………. instrument.
a) Order
b) Bearer
c) Foreign
d) Inland
Answer:
a) Order

Question 12.
Two transverse parallel lines are not essential in …………………… crossing.
a) General
b) Special
c) Double
d) All of these
Answer:
b) Special

Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881

Question 13.
IFSC is a ………….. character code.
a) 10
b) 11
c) 12
d) 13
Answer:
b) 11

Question 14.
Pick the odd one out.
a) RTGS
b) NEFT
c) IFSC
d) MNC
Answer:
d) MNC

Question 15.
Pick the odd one out.
a) Promissory Note
b) Bills of Exchange
c) Commodity Exchange
d) Cheque
Answer:
c) Commodity Exchange

Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881

II. Match the following.

Question 1.

List – I

List – II

i. General Endorsement 1. Pay to Nusrath only
ii. Full Endorsement 2. Pay Noman if he returns in 3 months
iii. Conditional Endorsement 3. Pay Nehan
iv. Restrictive Endorsement 4. Nathifa – simply signed

Answer :
a) (i) 4, (ii) 3, (iii) 2, (iv) 1

III. Very Short Answer Questions

Question 1.
Define Cheque.
Answer:
“Cheque is a bill of exchange, drawn on a specified banker and not expressed to be payable otherwise than on-demand”. – NEGOTIABLE INSTRUMENT ACT -1881, SEC – 6.

Question 2.
Define Promissory Note. [Pronote]
Answer:
“A Promissory Note is an instrument in writing, containing an unconditional promise or undertaking, signed by the maker to pay a certain sum of money only to or to the order of a certain person, or to the bearer of the instrument”. -NEGOTIABLE INSTRUMENT ACT-1881, SEC-4.

Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881

Question 3.
Give a Specimen of Cheque.
Answer:

Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881 10

Question 4.
Draw a specimen of the Bill of Exchange.
Answer:
Specimen of a Bill of Exchange
Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881 11

Question 5.
Show a Specimen of a Promissory Note. [Pronote]
Answer:
Specimen of a Promissory Note
Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881 12

Question 6.
What is Endorsement?
Answer:

  • A person who wants to transfer his Negotiable Instrument has to put his signature on the backside of the instrument is called “Endorsement”.
  • A person who signs on the backside of the instrument is called “Endorser”.
  • A person to whom the instrument is endorsed is called “Endorsee”.

Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881

Question 7.
What is crossing and what are its types?
Answer:

  • Drawing two parallel transverse lines on the left top corner of a cheque is called “Crossing”.
  • Types:
    • General Crossing
    • Special crossing

Question 8.
Do you think that drawing following the two lines is crossing? If No, Why?

Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881 13

  • No. the above drawing two lines are not crossing.
  • Because drawing two transverse parallel lines is crossing.

Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881

IV. Short Answer Questions

Question 1.
What is the significance of crossing?
Answer:

  • A crossed cheque should not be paid across the counter.
  • If a crossed cheque has been stolen and collected for the party not entitled to it, the person for whom it has been collected can be easily traced.
  • Crossing ensures the safety and prevents payment into the wrong hands.

Question 2.
Give Specimens of General Crossing and Special Crossing.
Answer:
Specimen of General Crossing:
Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881 14

Specimen of Special Crossing :
Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881 15

Question 3.
Why emergency holidays are declared under the Negotiable – Instruments Act?
Answer:

  • Where the maturity date of the negotiable instrument falls on a notified public holiday, it is to be paid on a preceding day.
  • Where emergency holidays are declared for reasons like the Death of a leader in power, natural calamities, strike, election day etc., day should be made an emergency holiday.
  • So, the negotiable instruments maturing on the emergency holiday can be paid on the next working day.

Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881

Question 4.
What is ‘MICR’ Cheque?
Answer:

  • Magnetic Ink Character Recognition – MICR – code is character recognition technology used mainly by the banking industry to ease processing and clearance of cheques and other documents.
  • It is found at the bottom of the cheque.
  • It includes Bank code, Bank Account Number, Amount and a control indicator.
  • It prevents the crime of printing counterfeit cheques or documents using technology.
  • The Magnetic Ink will help to discover fake documents.

Question 5.
What is the IFSC code?
Answer:

  • Indian Financial System Code – IFSC code is an – alphanumeric code which facilitates EFT in India.
  • This code uniquely identifies each bank branch participating in the two main Payment and settlement systems in India.

Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881

Question 6.
When there is no space in negotiable Instrument for making further endorsement) how can it be endorsed?
Answer:
When there is no space for making further endorsements a piece of paper can be attached to the negotiable instrument for this purpose, is This piece of paper is called’Allonge’.

Question 7.
If the payee is illiterate, how can he endorse a negotiable instrument?
Answer:

  • If the payee is an illiterate person, he can endorse it by affixing his thumb impression on the instrument.
  • But it must be duly attested by somebody who should give his full address thereon.

Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881

V. Long Answer Questions

Question 1.
Explain the various types of Negotiable Instruments.
Answer:
Bearer Instrument:
Cheque or Bill of Exchange or Promissory Note is payable to bearer is called “Bearer Instrument”.
(e.g) Pay to Nathifa or Bearer.

Order Instrument:
Cheque or Bill of Exchange or Promissory Note is payable to order is called “Order Instrument”.
(e.g) Pay to Nathifa or order
(or)
Pay to the order of Nathifa.

Ambiguous Instrument:

  • The written document is not clearly mentioned whether it is Bills of Exchange or Promissory Note. It is called “Ambiguous Instrument”.
  • (e.g) ‘A’ draws a Bill on ‘B’ who is a fictitious (imaginary) person and transfer it to ‘C’. Time Instrument:
  •  It is payable sometime in the future.
  • (e.g) After three months pay to Nathifa.

Inland Instrument:
A cheque or Bill of Exchange or Promissory Note is an inland instrument subject to the following conditions.

Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881 16

Foreign Instrument:
An instrument which is not an inland instrument is called a “Foreign Instrument”.

Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881 16

Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881

Question 2.
Find out the type of Instrument and the reason?
Answer:
(a) Bill drew payable to Nathifa or Bearer:

  • It is Bearer Instrument.
  • Reason it is payable to Nathifa or Bearer.

(b) Bill drew in London upon a merchant in Chennai and accepted and payable in Bangalore:

  • It is a Foreign Instrument.
  • Reason it is drawn in London.

(c) Bill drawn in Delhi upon a merchant in London and accepted and payable in London:

  • It is a Foreign Instrument.
  • Reason it is accepted and payable in London.

(d) Bill drawn in London on a merchant in Agra and endorsed in Delhi:

  • It is a Foreign Instrument.
  • It is drawn in London.

(e) A Bill was drawn by Bajaj Auto Agent on Bajaj Auto Ltd :

  • It is an Inland Instrument.
  • It is drawn in India.

(f) Bill drawn by Noohu on Nehan (an imaginary person) and endorsed to Nathifa:

  • It is an Ambiguous Instrument.
  • Reason it is drawn on a fictitious (imaginary) person.

(g) Raja gives a blank cheque to Stephen or gives an updated cheque to Stephen:
It is an Inchoate Instrument.

(h) Maran signs stamped and blank promissory Note and keep it locked in his drawer:

  • It is an Inchoate Instrument.
  • Reason it is blank and not presented.

(i) Satheesh promise to pay Ashwin ₹ 5000 after 3 months :

  • It is a Time Instrument.
  • Reason it is payable after 3 months (future).

(j) Shruthika who needs funds, draws a Bill on Nusrath who accepted and discounted the bill with her banker and on due date remits the requisite amount to Nusrath :

  • It is an Accommodation Instrument.
  • Reason it is drawn, accepted without consideration.

(k) No document is attached to the title of goods :
It is clean Bill. Reason no document is attached to the title of goods.

Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881

Question 3.
Classify the following endorsement with reasons.
Answer:
(i) No other words except Sycd’s signature :

  • It is Blank or General Endorsement.
  • Reason No other words except Syed’s signature.

(ii) Pay Shahul.
(iii) Pay to Shahul or order.
(iv) Pay to Shahul or order for the account of Siva.

  • It is Full or Special Endorsement.
  • Reason directions to pay to or to the order of a specified person.

(v) Pay to Hameed only :

  • It is Restrictive Endorsement.
  • Reason it is restricted to transfer.

(vi) Pay to Justin order being the unpaid residue of the bill.
(vii) Pay to Sam or order on safe receipt of goods :

  • It is conditional or Qualified Endorsement.
  • Reason it is subject to fulfilment of a particular event, [condition]

(viii) Pay to Navitha Sans Recourse, (without recourse to me)

  • 11 is Sans Recourse Endorsement.
  • Reason – it limits the liability of the endorser.

(ix) Pay to Athivya notice of dishonour dispensed with.

  • It is Faculative Endorsement.
  • Reason notice of dishonour is waived.

Samacheer Kalvi 12th Commerce Guide Chapter 22 The Negotiable Instruments Act, 1881

Question 4.
Distinguish between Cheque and Promissory Note. OPS CD CD
Answer:

No.Basis of Difference

Cheque

Promissory Note

1.Order A cheque contains an order to pay the money. A promissory Note contains an undertaking (promise) to pay the money.
2.Parties There are three parties to a cheque
i) Drawerii) Draweeiii) Payee
Only two parties.
(i) Maker(ii) Payee
3.Stamping It need not be stamped. It must be stamped.
4.Crossed A cheque can be crossed. It cannot be crossed.
5.Discounting It cannot be discounted. It can be discounted with a banker.
6.Creditor The Drawer of a cheque is a creditor. The maker of a pronote is a Debtor.
7.Days of Grace No Grace days allowed. Three grace days allowed.

Samacheer Kalvi 12th History Guide Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th History Guide Pdf Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th History Solutions Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்

12th History Guide காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
காந்தியடிகளின் அரசியல் குரு யார்?
அ) திலகர்
ஆ) கோகலே
இ) W.C. பானர்ஜி
ஈ) M.G. ரானடே
Answer:
ஆ) கோகலே

Samacheer Kalvi 12th History Guide Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்

Question 2.
தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய காந்தியடிகள் தனது வெற்றிகரமான முதலாவது சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கிய இடம்
அ) கேதா
ஆ) தண்டி
இ) சம்பரான்
ஈ) பர்தோலி
Answer:
இ) சம்பரான்

Question 3.
சைமன் கமிஷன் காங்கிரஸால் ஏன் புறக்கணிக்கப்பட்டது?
அ) சைமன் குழு அறிக்கையில் இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்குவது குறித்த பரிந்துரை இல்லை
ஆ) சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அளிக்கவில்லை.
இ) அக்குழுவில் இந்தியர்கள் இடம்பெறவில்லை
ஈ) அது முழுச் சுதந்திரத்திற்கான வாக்குறுதியைக் கொண்டிருக்கவில்லை.
Answer:
இ) அக்குழுவில் இந்தியர்கள் இடம்பெறவில்லை.

Question 4.
இந்தியாவின் மூவர்ணக்கொடி எப்போது ஏற்றப்பட்டது?
அ) டிசம்பர் 31, 1929
ஆ) மார்ச் 12, 1930
இ) ஜனவரி 26, 1930
ஈ) ஜனவரி 26, 1931
Answer:
அ) டிசம்பர் 31, 1929

Samacheer Kalvi 12th History Guide Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்

Question 5.
1923இல் மோதிலால் நேரு மற்றும் சி.ஆர். தாஸ்-ஆல் தோற்றுவிக்கப்பட்ட கட்சியின் பெயர் என்ன?
அ) சுயராஜ்யக் கட்சி
ஆ) கதார் கட்சி
இ) சுதந்திராக் கட்சி
ஈ) கம்யூனிஸ்ட் கட்சி
Answer:
அ) சுயராஜ்யக் கட்சி

Question 6.
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.
அ. நாமசூத்ரா இயக்கம் – 1. வடமேற்கு இந்தியா
ஆ. ஆதிதர்ம இயக்கம் – 2 (தென்னிந்தியா
இ. சத்யசோதக் இயக்கம் – 3. கிழக்கிந்தியா
ஈ. திராவிட இயக்கம் – 4 மேற்கு இந்தியா
Samacheer Kalvi 12th History Guide Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் 1
Answer:
அ) 3 1 4 2

Question 7.
ஒத்துழையாமை இயக்கத்தின் பல்வேறு நிலைகளைக் கால வரிசைப்படுத்துக.

  1. அமிர்தசரஸ் நகரில் பிரிட்டிஷ் படையால் ஆயுதம் ஏந்தாத மக்கள் மீது கொடிய தாக்குதல் நடத்தப்பட்டது.
  2. நீதிமன்ற விசாரணை இன்றி எவரையும் சிறையில் அடைக்க ரௌலட் சட்டம் கொண்டு வரப்பட்டது.
  3. சௌரி சௌரா வன்முறைச் சம்பவம் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை விலக்கிக் கொள்ள வழிவகுத்தது.
  4. கல்கத்தாவில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழையாமை என்ற காந்தியடிகளின் முன்மொழிவை ஏற்றுக் கொண்டது.

அ) 2 1 4 3
ஆ) 1,3,2,4
இ) 2,4,1,3
ஈ) 3,2,4,1
Answer:
அ) 2 1 4 3

Samacheer Kalvi 12th History Guide Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்

Question 8.
பின்வரும் எந்த ஒன்று சரியாகப் பொருந்தவில்லை ?
அ) பஞ்சாப் துணை ஆளுநர் – 1. ரெஜினால்டு டையர்
ஆ) தலித் – பகுஜன் இயக்கம் – 2. டாக்டர். அம்பேத்கர்
இ) சுயமரியாதை இயக்கம் – 3. ஈ.வெ.ரா. பெரியார்
ஈ) சத்தியாகிரக சபை – 4. ரௌலட் சட்டம்
Answer:
ஈ) சத்தியாகிரக சபை – 4. ரௌலட் சட்டம்

Question 9.
பின்வரும் நிகழ்வுகளைச் சரியான காலவரிசைப்படி அமைத்து கொடுக்கப்பட்டுள்ள விடைகளிலிருந்து சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.
i) கேதா சத்தியாகிரகம்
ii) சம்பரான் இயக்கம்
iii) பிராமணரல்லாதார் இயக்கம்
iv) வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம்
அ) ii, iii, i, iv
ஆ) iii, ii, i, iv
இ) ii, i, iv, iii
ஈ) ii, i, iii, iv
Answer:
ஈ) ii, i, iii, iv

Question 10.
பின்வருவனவற்றுள் எது, எவை சரியானவை அல்ல.
i) காந்தியடிகள் அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்தை நிறுவினார்.
ii) வல்லபாய் படேல் ஒரு வழக்கறிஞர்.
iii) சைமன் குழுவினை முஸ்லீம் லீக் வரவேற்றது.
iv) இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில் காந்தியடிகள் கலந்து கொண்டார்.
அ) iமட்டும்
ஆ) 1 மற்றும் iv|
இ) ii மற்றும் iii
ஈ) iii மட்டும்
Answer:
ஈ) iii மட்டும்

Question 11.
ஒத்துழையாமை இயக்கம் உள்ளடக்கியவை.
அ) பள்ளி மற்றும் கல்லூரிகளைப் புறக்கணித்தல்
ஆ) அரசு வழங்கிய பட்டங்களைத் திருப்பியளித்தல்
இ) உண்ணாவிரதங்கள் கடைப்பிடிப்பதை எதிர்த்தல்
ஈ) அரசுக்கு எதிரான சதிவேலைகளில் ஈடுபடுதல்
அ) அ மற்றும் ஆ
ஆ) ஆ மற்றும் இ
இ) அ மற்றும் ஈ ‘
ஈ) இ மற்றும் ஈ
Answer:
அ) அ மற்றும் ஆ

Samacheer Kalvi 12th History Guide Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்

Question 12.
கூற்று : பி.ஆர். அம்பேத்கர் மஹத் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார்.
காரணம் : அவர் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களை ஒருங்கிணைக்க முயன்றார்.
அ) கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று சரி. காரணம் கூற்றை வளக்கவில்லை
இ) கூற்று சரி, காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு, காரணம் சரி.
Answer:
இ) கூ சரி, காரணம் தவறு.

Question 13.
கூற்று : 1919இல் இந்தியக் கவுன்சில் சட்டம் மற்றும் ரௌலட் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
காரணம் : இது மிதவாத தேசியவாதிகளை அரவணைத்து தீவிர தேசியவாதிகளைத் தனிமைப்படுத்தும் பிரிட்டிஷாரின் கொள்கையின் ஒரு பகுதியாகும்.
அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .
இ) கூற்று சரி, காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. காரணம் சரி.
Answer:
இ) கூற்று சரி, காரணம் தவறு

Question 14.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள தலைவர்களில் சுயராஜ்ய கட்சியுடன் தொடர்பில்லாத தலைவர் யார்?
அ) ராஜாஜி
ஆ) சித்தரஞ்சன் தாஸ்
இ) மோதிலால் நேரு
ஈ) சத்யமூர்த்தி
Answer:
அ) ராஜாஜி

Question 15.
காந்தியடிகளின் தண்டி யாத்திரை பயணம் சென்றடைந்த ஆண்டு
அ) ஏப்ரல் 6, 1930
ஆ) மார்ச் 6, 1930
இ ) ஏப்ரல் 4, 1939
ஈ) மார்ச் 4, 1930
Answer:
அ) ஏப்ரல் 6, 1930

Samacheer Kalvi 12th History Guide Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்

II. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
இந்தியா வந்த வேல்ஸ் இளவரசர் எவ்வாறு வரவேற்கப்பட்டார்?
Answer:

  • இந்தியாவின் பல நகரங்களுக்கு 1921இல் வேல்ஸ் இளவரசர் மேற்கொண்ட பயணமும் புறக்கணிக்கப்பட்டது.
  • இந்திய மக்களின் விசுவாச உணர்வை வேல்ஸ் இளவரசரின் பயணம் தூண்டும் என்று எதிர்பார்த்த காலனி ஆதிக்க அரசின் கணக்கு தவறாகப் போனது.

Question 2.
காந்தியடிகளின் சம்பரான் சத்தியாகிரகத்தின் போது உடன் சென்ற உள்ளூர் தலைவர்கள் யாவர்?
Answer:
ராஜேந்திர பிரசாத், மஜாருல் ஹக், ஆச்சார்ய கிருபாளினி, மஹாதேவ தேசாய் போன்ற உள்ளூர் தலைவர்களுடன் காந்தியடிகள் விரிவான விசாரணை மேற்கொண்டார்.

Question 3.
இந்தியப் பணியாளர் சங்கம் ஏன் தோற்றுவிக்கப்பட்டது?
Answer:

  • பல்வேறு சாதி, பிரதேசங்கள், மதங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த இந்தியர்களுக்கு நலப்பணிகளில் பயிற்சி வழங்க “இந்திய பணியாளர் சங்கத்தை” 1905ல் கோபால கிருஷ்ண கோகலே நிறுவினார்.
  • நிவாரணப்பணி, கல்வி அறிவூட்டல் மற்றும் இதர சமூகக் கடமைகளில் உறுப்பினர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

Question 4.
பகிஷ்கிரித் ஹிதகர்னி சபா குறித்து எழுதுக. (மார்ச் 2020)
Answer:
பகிஷ்கிரித் ஹிதகர்னி :

  • டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் அவர்களால் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது. நம்
  • இது தனித்துவிடப்பட்டவர்களின் நலனுக்கான அமைப்பாகும்.
  • இதன் மூலம் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களின் மீது விதிக்கப்பட்ட திறன் ஆ குறைபாடுகளைக் களைவதற்காக அயராது பாடுபட்டார்.

Question 5.
தேசியவாதிகளால் ரௌலட் சட்டம் ஏன் எதிர்க்கப்பட்டது?
Answer:

  • மத்திய சட்டப் பேரவையின் ஒவ்வொரு உறுப்பினரும் மசோதாவை எதிர்த்த நிலையில் 1919 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரௌலட் சட்டத்தை அரசு நிறைவேற்றியது.
  • இச்சட்டம் “எந்தவித நீதிமன்ற விசாரணையுமின்றி எவரையும் சிறையில் அடைக்க அரசுக்கு அதிகாரம் அளித்தது”.
  • இதனை காந்தியடிகளும் மற்ற தேசியவாதிகள் அனைவரும் எதிர்த்தனர்.

Question 6.
பி.ஆர். அம்பேத்கரால் வழி நடத்தப்பட்ட மஹத் சத்தியாகிரகம் பற்றி அறிவது என்ன?
Answer:
மஹத் சத்தியாக்கிரகம்:

  • ஊருணிகள் மற்றும் கிணறுகளில் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தர வேண்டிய அடிப்படை உரிமைகளை மீட்டுத் தர மஹத் சத்தியாகிரகம் என்ற அமைப்பைத் தொடங்கினார்.
  • அம்பேத்கரின் அறிவாற்றல் மற்றும் பொது நடவடிக்கைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.

Samacheer Kalvi 12th History Guide Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்

Question 7.
காந்தி – இர்வின் ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது எது?
Answer:
1931 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காந்தி விடுதலை செய்யப்பட்டவுடன் ஆங்கில அரசப் பிரதிநிதி இர்வின், காந்திஜியை அழைத்துப் பேசினார். இதன் விளைவாக காந்தி – இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டது. சத்தியாகிரகம் கைவிடப்பட்டது. அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசு இசைந்தது.

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்து குறிப்பு எழுதுக.
Answer:

  • 1919 ஏப்ரல் 13-இல். அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் பகுதியில் நிராயுதபாணிகளான மக்கள் திரள் மீது மிகக் கொடுமையான அரசியல் குற்றங்கள் இழைக்கப்பட்டன.
  • சத்தியபால், சாய்புதீன் கிச்லு ஆகியோரைக் கைது செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான வகையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக இரண்டாயிரத்துக்கும் அதிகமான மக்கள் போராட்டக்களத்தில் குழுமியிருந்தனர்.
  • பஞ்சாபின் துணை நிலை ஆளுநராக மைக்கேல் ஓ டையரும், ராணுவக் கமாண்டராக ஜெனரல் ரெஜினால்டு டையரும் பதவி வகித்தனர்.
  • ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியிருந்த இடத்திற்கு ஒரே ஒரு குறுகிய வாயில் மட்டுமே இருந்தது. அங்கு சிக்கிக் கொண்ட மக்களைக் குறி வைத்து எந்திரத் துப்பாக்கிகளில் குண்டுகள் தீரும் வரை சுடுமாறு ஜெனரல் டையர் உத்தரவிட்டார்.
  • அரசு தகவல்களின்படி உயிரிழப்புகள் 379 என்ற எண்ணிக்கையில் இருந்த போதிலும் உண்மையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்திருக்கக்கூடும்.
  • ராணுவச் சட்டம் பஞ்சாப் முழுவதும் அமல்படுத்தப்பட்ட நிலையில் மக்கள் சொல்ல முடியாத அளவுக்கு துயரங்களை சந்தித்தனர்.

Question 2.
மாகாணங்களில் இரட்டையாட்சி முறை பற்றி எழுதுக.
Answer:

  • 1919 ஆம் ஆண்டு மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்திருத்தம் அரசின் ஒவ்வொரு துறையிலும் அதிக இந்தியர்களைச் சேர்த்தது.
  • படிப்படியாக பொறுப்பாட்சி வழங்கும் நோக்கத்துடன் மாநிலங்களில் இரட்டை ஆட்சியை ஏற்படுத்தியது.
  • மாநில அதிகாரங்கள் மாற்றப்பட்ட துறைகள், ஒதுக்கப்பட்ட துறைகள் எனப் பிரிக்கப்பட்டன.

Samacheer Kalvi 12th History Guide Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்

Question 3.
பூனா ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் யாது? (மார்ச் 2020 )
Answer:

  • 1932 செப்டம்பரில் தாழ்த்தப்பட்ட இனத் தலைவரான டாக்டர் அம்பேத்காரும், காந்திஜியும் பூனாவில் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டனர். இதுவே பூனா ஒப்பந்தம் எனப்படுகிறது.
  • இதன்படி இந்துக்கள் அனைவரும் இணைந்து தேர்தலில் போட்டியிட ஒப்புக் கொண்டனர். ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டது.

Question 4.
பிராமணரல்லாதார் இயக்க தலைவர்கள் காலனி அரசாங்கத்தைக் கையாள்வதில் தொடக்ககால தேசியவாதிகள் கடைப்பிடித்த அதே யுக்தியினை கையாண்டனர். விவரி.
Answer:

  • இந்தியாவின் கீழ்த்தட்டு மக்கள் விழிப்புணர்வு பெற்ற தேசியவாதிகளால் கூறிய தாராளமய ஜனநாயக கருத்துக்களை அறிந்து கொள்ள முடியவில்லை.
  • சுயமரியாதை இயக்கம், சமூகநீதி சார்ந்து அடிப்படை மாற்றம் கோரும் இயக்கங்கள், பகுஜன் இயக்கம் செயல்பட்டன.
  • இதனை தீவிர தன்மையுடன் அடிப்படை மாற்றம் விழைவோர் இந்த இயக்கங்களை எதிர்த்தனர்.
  • பிரிட்டிஷார், தேசவிரோத சக்திகள் போன்றவற்றிற்கு கைத்தடிகள் என்று இந்த இயக்கங்களைச் சிலர் குறிப்பிட்டனர்.
  • காலனி அரசுக்கு எதிராகப் பூர்வாங்க தேசியவாதத் தலைவர்கள் எந்த மாதிரியான உத்தியைப் பயன்படுத்தினார்களோ அதே மாதிரியான உத்தியைப் பிராமணர் அல்லாத இயக்கத்தின் பூர்வாங்கத் தலைவர்களும் பின்பற்றத் தொடங்கினர்.

Question 5.
மாற்றத்தை விரும்புவர்கள் – மாற்றத்தை விரும்பாதவர்கள் – வேறுபடுத்துக.
Answer:
மாற்றத்தை விரும்புபவர்கள் :

  • சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு ஆகியோர் தீவிர அரசியலுக்கு திரும்ப வேண்டும் என்றும், தேர்தல் அரசியலில் ஈடுபடுவது என்றும் விரும்பினார்கள்.
  • சீர்த்திருத்தம் பெற்ற சட்டப்பேரவையைக் கைப்பற்றி தேசியவாத உணர்வூட்டி அதன் செயல்பாடுகளை முடக்கும் ஆற்றலைத் தேசியவாதிகள் வெளிப்படுத்தினர்.
  • இக்குழு சுயராஜ்யம் வேண்டுவோர் மற்றும் மாற்றம் வேண்டுவோர் என அழைக்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் சத்தியமூர்த்தியும் இணைந்தார்.

மாற்றத்தை விரும்பாதவர்கள் :

  • சட்டப்பேரவை நுழைவை எதிர்த்த மற்றொரு குழு காந்திய வழியை பின்பற்றி மக்களை ஒன்று திரட்டும் பணிகளில் ஆர்வம் காட்டியது.
  • இந்த குழுவுக்கு இராஜகோபாலாச்சாரி, வல்லபாய் படேல், இராசேந்திர பிரசாத் ஆகியோர் தலைமை ஏற்றனர். எந்த மாற்றா கா என்று இந்த அணி வலியுறுத்தியது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்

Question 6.
பிரதம அமைச்சர் ராம்சே மக்டோனால்டின் வகுப்புவாத அறிக்கையைப் பற்றி எழுதுக.
Answer:

  • இரண்டாம் வட்டமேசை மாநாட்டின் போது காந்தியடிகள் மற்றும் அம்பேத்கார் இடையே தனித் தொகுதிகள் பற்றிய கருத்தில் நடந்த பேச்சுக்கள் தோல்வி அடைந்தன.
  • பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்டு இதில் தலையிட்டு முடிவெடுக்க, 1932 ஆகஸ்டில் வகுப்பு வாரித் 1 தொகுதி ஒதுக்கீடுகள் குறித்து பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. அம்பேத்காரின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டன.

Question 7.
மூன்று வட்டமேசை மாநாடுகளின் முடிவின் தோல்விக்குப்பிறகு ஏன் காங்கிரஸ் தடை செய்யப்பட்டது?
Answer:

  • வட்டமேசை மாநாடுகளுக்குப் பிற பல போராட்டங்கள் நடைபெற்றன. 1940 காங்கிரஸ் தனிநபர் அறப்போரை அறிவித்தது.
  • 1942ல் இந்திய ராணுவ வீரர்களின் ஆதரவை பெரும்பொருட்டு கிரிப்ஸ் தூதுக்குழு ஒன்று வந்தன.
  • கிரிப்ஸ் தூதுக்குழு அறிக்கையில் டொமினியன் அந்தஸ்து மற்றும் பாகிஸ்தான் பற்றிய செய்தி இடம் பெறாததால் காங்கிரசும், முஸ்லீம் லீக்கும் கிரிப்ஸ் தூதுக்குழு அறிக்கையை ஏற்கவில்லை.
  • 1942 காங்கிரஸ் “வெள்ளையனே வெளியேறு” இயக்கம் துவங்கியது.
  • காந்தியினுடைய கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் ஆங்கிலேயருக்கு எதிராக “வெள்ளையனே வெளியேறு” ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
  • காந்திஜியும் பிறதலைவர்களும் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் சட்ட விரோதமான இயக்கம் என்று தடை செய்யப்பட்டது.

IV. விரிவான விடையளிக்கவும்

Question 1.
ஒத்துழையாமை இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் சூழலையும் அதன் விளைவுகளையும் விவரி. (மார்ச் 2020)
Answer:

  • கிலாபத் மாநாட்டில், காந்தியடிகளின் வற்புறுத்தலின் பேரில் 1920 ஆகஸ்டு 31 முதல் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
  • 1920 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் சிறப்பு அமர்வில் காலனி ஆதிக்க அரசுடன் ஒத்துழையாமையைக் கடைபிடிப்பது என்ற காந்தியடிகளின் யோசனைகளை ஏற்றுக்கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • கிலாபத் மற்றும் பஞ்சாப் குறைகள் சரிசெய்யப்பட்டு தன்னாட்சி அரசு நிறுவப்படும் வரை இந்த ஒத்துழையாமையைக் கடைபிடிக்க உறுதி ஏற்கப்பட்டது.
  • பள்ளிகள், கல்லூரிகள், நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள், சட்டப்பேரவைகள், அந்நியப் பொருட்களைப் புறக்கணித்தல், அரசு வழங்கிய பட்டங்களையும் விருதுகளையும் திரும்ப ஒப்படைப்பது ஆகியன ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்க்கப்பட்டன.
  • தேசியப்பள்ளிகள், பஞ்சாயத்துகள் ஆகியன அமைக்கப்பட்டு சுதேசிப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படும்.
  • வரிகொடா இயக்கம், சட்டமறுப்பு இயக்கம் போன்ற பல இயக்கங்களை இந்தப் போராட்டத்தில் இணைக்க முடிவு செய்யப்பட்டது.
  • மொழி சார்ந்த மாகாண காங்கிரஸ் கமிட்டிகளை அங்கீகரித்து அமைப்பதற்கு ஒரு முக்கியத் தீர்மானம் நாக்பூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
  • இதனால் பெரும் எண்ணிக்கையிலானப் பணியாளர்கள் இந்த இயக்கத்தில் சேர்ந்தனர்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்

Question 2.
ஒத்துழையாமை இயக்கத்திலிருந்து சட்டமறுப்பு இயக்கம் எவ்வழிகளில் மாறுபட்டிருந்தது?
Answer:
ஒத்துழையாமை இயக்கம்:

  • 1920 ஆம் ஆண்டு சாத்வீக முறையில் ஒத்துழையாமை இயக்கத்தை காந்திஜி தொடங்கினார். இதன்படி மக்கள் பதவிகளை துறக்க வேண்டும்.
  • வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களைப் புறக்கணிக்க வேண்டும். மாணவர்கள் பள்ளிகளை தவிர்க்க வேண்டும்.
  • பட்டதாரிகள் பட்டங்களை துறக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

ஒத்துழையாமை இயக்கத்தின் செயலாக்கம்:

  • அயல் நாட்டு துணிகள் எரிக்கப்பட்டன.
  • நாடு முழுவதும் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டன.
  • ஆங்கில அரசால் வழங்கப்பட்ட பட்டங்களையும் கௌரவப் விருதுகளையும் மக்கள் தூக்கி எறிந்தனர்.

சட்டமறுப்பு இயக்கம் :

  • ஒத்துழையாமை இயக்கத்திலிருந்து இது மாறுபட்டதாக இருந்தது.
  • சட்டத்தின் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்க ஆங்கிலேய ஆட்சியாளர் முடிவு செய்தனர்.
  • இதனை எதிர்த்து சட்டமறுப்பு போராட்டத்தை காந்திஜி தொடங்கினார். எ.கா. உப்பு வரி, இயற்கையாக கிடைக்கும் கடல் நீரை காய்ச்சி எடுக்கும் உப்பு உற்பத்தியில் ஆங்கிலேய அரசின் ஏகபோக உரிமை மற்றும் உப்பின் மீது விதித்த வரி ஆகியவற்றை காந்தி எதிர்த்தார்.
  • அரசின் கொள்கைகளை எதிர்க்க சட்டமறுப்பியக்கம் மேற்கொள்ளப்பட்டது.
  • இதன்படி 1930, ஏப்ரல் மாதத்தில் காந்திஜி தலைமையில் தண்டியாத்திரையும் தமிழ்நாட்டில் ராஜாஜியின் தலைமையில் வேதாரண்யம் யாத்திரையும் அடைந்து ஆங்கிலேய உப்பு வரி சட்டத்தை மீறினர்.

Question 3.
இந்திய விடுதலைப் போரில் மகாத்மா காந்தியடிகளின் பங்கினை மதிப்பிடுக.
Answer:
காந்தியின் பங்கு :
இந்திய விடுதலைப் போரில் மூன்றாவது கட்டம் பொருத்தமாகக் காந்தி ஊழி அல்லது சகாபதம் என அழைக்கப்படுகிறது.

மக்கள் இயக்கமாக மாற்றுதல் :

  • மகாத்மா காந்தி தேசிய இயக்கத்தை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றினார்.
  • அவர் எளிய மனிதர். அவருடைய செயலாற்றும் முறை நடைமுறை வாழ்க்கையில் மற்ற மக்களைத் தன்னைப் பின்பற்றும்படிச் செய்தார்.

இந்து – முஸ்லீம் ஒற்றுமைக்கும் பாடுபடுதல் :

  • இந்து முஸ்லீம் ஒற்றுமைக்குப் பாடுபட்ட அவர் கிலாபத் இயக்கத்தை ஆதரித்தார்.
  • இவை இரண்டையுைம் நம் நாட்டுக்கே உரித்தாக்கினார்.
  • காந்திஜி தன்னுடைய குறிக்கோள்கள் வெற்றியடையப் பட்டினி அறப்போரைக் கடைப்பிடித்த வரியா வெற்றிகளை அடைந்தார்.

அறப்போர் மூலம் வெற்றி:

  • மக்கள் பயன்படுத்தும் மிகச் சாதாரணமான பொருளாகிய உப்புக் கூட அவருக்கு வலியைப் அரசியல் ஆயுதமாயிற்று.
  • அவருடைய உப்பு அறப்போரின் மூலம் அவர் உலகத்திற்கு ஓர் உண்மையை நிரூபித்தார்.

மக்களின் உண்மையான பிரதிநிதி:

  • காந்தி – இர்வின் ஒப்பந்தம் இந்திய வரலாற்றில் இந்திய தேசிய இயக்கத்தில் மற்ற ஆகும் இந்தியப் பாமர மக்களின் உண்மையான பிரதிநிதி என்று அவர் கருதப்பட்டார்.
  • சர்ச்சில் அவரை அரை ஆடை அணிந்த பக்கிரி’ என்று செய்த கேலி எடுபடவில்லை.

சமுதாயச் சீர்திருத்தம் :
உலகின் எந்த வல்லமைச் சக்தியும் எவ்வளவு முறை சிறையில் வைத்தும் அவருடைய தீர்க்கமான முடிவுகளை அசைக்க முடியவில்லை. அவர் இந்தியப் பெண்களின் விடுதலைக்காகவும் பாடுபட்டார். தீண்டாமையை ஒழிக்க அரும்பாடுப்பட்டார்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்

Question 4.
டாக்டர். அம்பேத்கரின் கல்விப் பணி குறித்து, குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதிக்காக அவரின் செயலூக்கத்தை முதன்மைப்படுத்தி விளக்குக.
Answer:
ஆரம்ப கல்வி :

  • எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்த அம்பேத்கர் கல்வி உதவித்தொகை பெற்று 1912-இல் பட்டதாரி ஆனார்.
  • பரோடா அரசரின் கல்வி உதவித்தொகை பெற்ற அவர் அமெரிக்கா சென்று பட்ட மேற்படிப்புப் பட்டத்தையும், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
  • சட்டம் மற்றும் பொருளாதார படிப்புக்களுக்காக அவர் லண்டன் சென்றார்.
  • 1916இல் மானுடவியல் தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு  இந்தியாவின் சாதிகள் என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரையைச் சமர்ப்பித்தார்.
  • இந்திய வாக்காளர்களுக்கு வாக்குரிமை பெற வயது மற்றும் தகுதி பற்றி தகவல் சேகரித்து வந்த சவுத்பொரோ குழுவுடன் கலந்துரையாட வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தது.’
  • தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தனித்தொகுதிகள் மற்றும் இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
  • இடஒதுக்கீடு பெறப்பட்ட இடங்களில் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தால் அவர்கள் தங்களின் உண்மையான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க முடியும்.
  • வாய் பேச முடியாதவர்களின் தலைவர் (மூக் நாயக்) என்ற பத்திரிக்கை தனது கருத்துகளை வெளிப்படுத்துவதற்காகவும், தனித்துவிடப்பட்டவர்களின் நலனுக்கான அமைப்பு (பஹிஷ்கிரித் ஹிடாகரினி சபை) என்ற அமைப்பைத் தனது செயல்பாடுகளுக்காகவும் அவர் தொடங்கினார்.
  • ஊருணிகள் மற்றும் கிணறுகளில் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு தரவேண்டிய அடிப்படை உரிமைகளை மீட்டுத்தர “மஹத் சத்தியாகிரகம்” என்ற அமைப்பைத் தொடங்கினார். அம்பேத்கரின் அறிவாற்றல் மற்றும் பொது நடவடிக்கைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.

V. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
காந்தியடிகளின் சகாப்தம் குறித்த நிகழ்வுகளின் காலக்கோடு ஒன்றை உருவாக்கவும்.
Answer:
Samacheer Kalvi 12th History Guide Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் 2
Samacheer Kalvi 12th History Guide Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் 3

Samacheer Kalvi 12th History Guide Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்

2. தற்போதைய சமூக அரசியல் மற்றும் பொருளாதார சூழலில் காந்தியடிகளின் இணக்கத்தை விவாதம் செய்.

12th History Guide காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் Additional Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்

Question 1.
இந்திய பணியாளர் சங்கத்தை நிறுவியவர் …………..
அ) திலகர்
ஆ) தாகூர்
இ)கோபாலகிருஷ்ண கோகலே
ஈ) மகாத்மா காந்தி
Answer:
ஆ) தாகூர்

Question 2.
இந்திய பணியாளர் சங்கம் நிறுவப்பட்ட ஆண்டு ……………..
அ) 1902
ஆ) 1905
இ) 1908
ஈ) 1907
Answer:
ஆ) 1905

Samacheer Kalvi 12th History Guide Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்

Question 3.
அரசின் பஞ்சகால விதியின் படி, பயிர்சாகுபடி சராசரியாக – சதவீதத்திற்கு குறைவாக இருந்தால் பயிரிடுவோர் முழுநிலவரி ரத்துக்கு தகுதி பெறுவர்.
அ) 15 சதவீதம்
ஆ) 25 சதவீதம்
இ) 35 சதவீதம்
ஈ) 20 சதவீதம்
Answer:
ஆ) 25 சதவீதம்

Question 4.
‘சத்ய ஜோதக் சமாஜ்’ இயக்கத்தை தோற்றுவித்தவர்……………………
அ) கந்து கூரி
ஆ) ஜோதிபா பூலே
இ) ஈ.வே. ராமசாமி
ஈ) B.R. அம்பேத்கார்
Answer:
ஆ) ஜோதிபா பூலே

Question 5.
‘குலாம்கிரி’ என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டவர் ……………………
அ) கோபாலகிருஷ்ண கோகலே
ஆ) பாலகங்காதர திலகர்
இ) இராஜாராம் மோகன்ராய்
ஈ) ஜோதிபா பூலே
Answer:
ஈ) ஜோதிபா பூலே

Question 6.
1929 லாகூர் காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் ……………………
அ) மோதிலால் நேரு
ஆ) ஜவஹர்லால் நேரு
இ) லால்பகதூர் சாஸ்திரி
ஈ) தாகூர்
Answer:
ஆ) ஜவஹர்லால் நேரு

Samacheer Kalvi 12th History Guide Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்

Question 7.
வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் தொடங்கி நாள்………………….
அ) 1930 ஏப்ரல் 13
ஆ) 1930 ஏப்ரல் 31
இ)1930 மார்ச் 28
ஈ) 1930 ஏப்ரல் 28
Answer:
அ) 1930 ஏப்ரல் 13

Question 8.
காந்தி – இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தான நாள்………………………..
அ) 1931 பிப்ரவரி 5
ஆ) 1931 மார்ச் 5
இ) 1931 பிப்ரவரி 28
ஈ) 1931 ஏப்ரல் 5
Answer:
ஆ) 1931 மார்ச் 5

Question 9.
எது – எவை சரியாக பொருந்தியுள்ளது?
அ. அம்பேத்கார் – கொலம்பியா பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம்
ஆ. 2வது வட்டமேசை மாநாடு – அம்பேத்கார்
இ. ராஜாஜி – வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம்
ஈ. 1931 மார்ச் 15 – காந்தி – இர்வின் ஒப்பந்தம்

அ) அ மற்றும் ஆ
ஆ ) ஆ மற்றும் இ
இ) அ மற்றும் ஈ
ஈ) அ மற்றும் இ
Answer:
ஈ) அ மற்றும் இ

Question 10.
மீரட் சதி வழக்கு பதியப்பட்ட ஆண்டு……………………
அ) 1929
ஆ) 1930
இ) 1932
ஈ) 1933
Answer:
இ) 1932

Samacheer Kalvi 12th History Guide Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்

II. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
“சத்யாகிரகி” வரையறு.
Answer:

  • ஒரு சத்யாகிரகி தனது மனதில் அமைதியை நிலைநிறுத்த வேண்டும்.
  • தவறு செய்தவரை வெறுக்கக்கூடாது.
  • எதிர்ப்பின் பாதையில் ஒரு சத்யாகிரகி சிரமங்களை ஏற்றுக் கொள்வார்.
  • அவரது நடவடிக்கையில் வெறுப்புணர்வுக்கு இடமில்லை .
  • அஹிம்சையும் உண்மையும் அச்சமற்றவர்களின் ஆயுதங்களாக விளங்கும்.

Question 2.
சம்பரான் இயக்கம் பற்றி கூறுக.
Answer:

  • சம்பரானில் இருந்த விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று இந்திய மக்களை ஒருங்கிணைக்கும் முதல் முயற்சியை காந்தியடிகள் மேற்கொண்டார்.
  • பீகாரின் சம்பரான் மாவட்ட விவசாயிகள் நீலச்சாயத்தை கட்டாயம் பயிரிட வேண்டும் என்றும் அதனை வர்த்தகர்கள் கூறும் விலைக்கே விற்க வேண்டும் எனவும் கூறப்பட்டனர்.
  • இது விவசாயிகளை வறுமையின் பிடியில் சிக்க வைத்தது.
  • காந்தியடிகளையும் உறுப்பினராகக் கொண்ட ஒரு குழு விசாரித்து அறிக்கை சமர்ப்பித்தது.
  • ஐரோப்பிய வர்த்தகர்களின் கட்டுப்பாட்டிலிருந்து சம்பரான் விவசாயிகள் மீட்கப்பட்டனர். வர்த்தகர்கள் படிப்படியாக சம்பரானைவிட்டே வெளியேறிவிட்டனர்.

Question 3.
“லாகூர் காங்கிரஸ்” மாநாட்டின் முக்கியத்துவம் பற்றி கூறுக.
Answer:

  • முழுமையான சுதந்திரம் அடைவது என்பதை குறிக்கோளாகக் கொண்டு
  • 1929ல் லாகூர் காங்கிரஸ் மாநாடு ஜவஹர்லால் நேரு தலைமையில் கூட்டப்பட்டது. * 1929 டிசம்பர் 31ல் லாகூரில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.
  • ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் நாளை விடுதலை நாளாகக் கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டது.
  • சட்டமறுப்பு இயக்கம் காந்தியடிகளின் தலைமையில் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்

Question 4.
வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் – குறிப்பு தருக.
Answer:

  • தமிழ்நாட்டில் ராஜாஜி தலைமையில் உப்பு சத்தியாகிரக யாத்திரை வேதாரண்யம் நோக்கி நடந்தது.
  • திருச்சிராப்பள்ளியில் தொடங்கி 150 மைல்கள் தொலைவில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தின் கரையோர கிராமமான வேதாரண்யம் வரை இந்த நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
  • 1930 ஏப்ரல் 13ல் இருந்தே ஆரம்பித்த இந்த நடைபயணம் ஏப்ரல் 28ல் முடிவடைந்தது.
  • வேதாரண்யம் இயக்கம் உண்மையில் தென்னிந்திய மக்களைத் தட்டியெழுப்பிக் காலனி ஆதிக்க ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் பங்கேற்கத் தூண்டியது.

Question 5.
சௌரி சௌரா நிகழ்ச்சி பற்றி கூறுக.
Answer:

  • உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் மாவட்டத்தில் அமைந்த சௌரி சௌரா கிராமத்தில். சுமார் 3000 விவசாயிகள் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளாயினர்.
  • இதனால் கோபமுற்ற மக்கள் அவ்வூர் காவல் நிலையத்தை தாக்கி தீக்கிரையாக்கினர். இச்சம்பவத்தில் சுமார் 22 காவல் துறையினர் உயிரிழந்தனர்.

இதுவே சௌரி சௌரா நிகழ்ச்சி எனப்படுகிறது.’

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
“தண்டியாத்திரை” என்பது என்ன?
Answer:

  • லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் அரசின் உப்பு வரியை எதிர்க்க – பாகர் படத்த முடிவு செய்யப்பட்டது.
  • அதன்படி காந்திஜி தலைமையில் சபர்மதி ஆசிரமத்திலிருந்து குஜராத் கடற்காை ஓரம் உள்ள 375 கி.மீ. தொலைவில் உள்ள தண்டி கடற்கரைக்கு பாத யாத்திரையாக சென் உப்பகாய்ச்ச முடிவு செய்யப்பட்டது.
  • வந்தே மாதரம் என்ற உணர்வோடு 25 நாட்கள். 78 தொண்டர்களுடன் பார பாதிரையாக சென்று 1930 ஏப்ரல் 6ஆம் நாள் கையளவு உப்பு எடுக்கார் உட்பக்கு வரி செலுத்தும் பட்டால் விரி, பாமயாக்கினார். இதுவே “தண்டியாத்திரை” எனப்படும்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்

Question 2.
அம்பேத்காரின் கட்சி அரசியலைப் பற்றி விவரி.
Answer:

  • சுதந்திர தொழிலாளர் கட்சியை 1937லும், பட்டியல் இனத்தவர் கூட்டம் 1942 ம் அம்பேத்கார் துவங்கினார்.
  • இவரது போராட்டங்களை அங்கீகரித்த காலனி அரசு தனது ஆதரவை சமன்படுத்த அம்பேத்காரின் சேவைகளை பயன்படுத்தியது.
  • 1942ல் பாதுகாப்புத் துறை ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், பிறகு அரசப்பிரதிநிதியின் அமைச்சராகவும் இடம் பிடித்தார்.
  • சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசன வரைவுக் குழு தலைவராகி அம்பேத்கார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • சுதந்திரம் பெற்ற பிறகு நேரு அமைச்சரவையில் அவர் அமைச்சராக இடம் பெற அழைக்கப்பட்டார்.

IV. விரிவான விடையளிக்கவும்

Question 1.
வட்ட மேசை மாநாடுகள் பற்றி விவரிக்க.
Answer:
அ) முதல் வட்டமேசை மாநாடு:

  • தொழிற்கட்சி இங்கிலாந்தில் ஆட்சிக்கு வந்ததும் அதன் முயற்சியால் 1930 ஆம் ஆண்டு நவம்பர் 12ம் நாள் முதல் வட்ட மேசை மாநாடு இலண்டனில் நடைபெற்றது.
  • டொமினியன் அந்தஸ்து வழங்க உறுதி அளிக்கப்படாததால் காங்கிரஸ் முதல் வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்கவில்லை.
  • இம்மாநாட்டில் படிப்படியாக சுயஆட்சி இந்தியாவிற்கு வழங்கலாம் என பிரிட்டிஷ் பிரதம மந்திரி அறிக்கை விடுத்தார்.

ஆ) இரண்டாம் வட்டமேசை மாநாடு:

  • 1931 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டாம் வட்டமேசை மாநாடு நடைபெற்றது.
  • காந்திஜி காங்கிரசின் பிரதிநிதியாக சென்றார்.
  • சுயாட்சி பற்றி ஏதும் கூறப்படாததால் இம்மாநாடு தோல்வியுற்றது.
  • மீண்டும் சட்ட மறுப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இ) மூன்றாம் வட்டமேசை மாநாடு:

  • 1932ல் மூன்றாம் வட்டமேசை மாநாடு நடைபெற்றது.
  • இந்திய பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளாததால் இம்மாநாடு தோல்வியில் முடிந்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்

Question 2.
சுயராஜ்ஜியக் கட்சி மற்றும் அதன் செயல்பாடுகளை விவரி.
Answer:
சுயராஜ்ஜியக் கட்சியின் தோற்றம்:

  • சௌரி சௌரா நிகழ்ச்சியில் 22 காவல் துறையினர் உயிர் துறந்ததைக் கண்டு வருத்தமுற்ற காந்திஜி, ஒத்துழையாமை இயக்கத்தை கைவிட்டார். நாடெங்கிலும் குழப்பநிலை ஏற்பட்டது.
  • காந்திஜியும் மற்ற தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். மக்கள் எழுச்சி தடைப்பட்டது.
  • மக்கள் எழுச்சியை ஊக்குவிக்கும் நோக்குடன் அலிப்பூர் சிறையில் இருந்த சி.ஆர்.தாஸ் மற்றும் மோதிலால் நேரு ஆகியோர் முயற்சியில் சுயராஜ்ஜிய கட்சி உருவாயிற்று.

சுயராஜ்ஜியக் கட்சியின் நோக்கம்:

  • தேர்தலில் போட்டியிட்டு வென்று, சட்டமன்றத்தில் இந்தியர்களும் இடம் பெற வேண்டும். –
  • ஆங்கில அரசின் நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ய வேண்டும் என்பதே சுயராஜ்ஜியக் கட்சியின் நோக்கமாகும்.

செயல்பாடு:

  • மத்திய சட்ட பேரவை தேர்தலில் 101 இடங்களில் 42 இடங்களில் வெற்றி பெற்றது.
  • காலனி ஆதிக்க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் விரோதச் சட்டங்களைத் தீவிரமாக எதிர்ப்பதிலும் வெற்றி கண்டனர்.
  • காலம் செல்ல செல்ல அவர்களுடைய முயற்சிகளும் ஊக்கமும் குறைந்தது. –
  • பிரிவினைவாத சிந்தனைபோக்கு அவர்களை ஆட்டிப்படைத்தது. வகுப்புக் கலவரங்கள் நடந்தன. சுயராஜ்ஜியக் கட்சியும் பிரிவினைவாதத்தால் பாதிப்படைந்தது. 1925ல் சி.ஆர்.தாஸ் இறந்தவுடன் சுயராஜ்ஜியக் கட்சியும் மறைந்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th History Guide Pdf Chapter 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th History Solutions Chapter 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம்

12th History Guide இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
தென்னிந்தியாவில் தன்னாட்சி இயக்கம் யாரால் துவக்கப்பட்டது? (மார்ச் 2020)
அ) திலகர்
ஆ) அன்னிபெசன்ட்
இ) பி.பி. வாடியா
ஈ) எச்.எஸ். ஆல்காட்
Answer:
ஆ) அன்னிபெசன்ட்

Samacheer Kalvi 12th History Guide Chapter 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம்

Question 2.
பின்வருவனவற்றுள் அன்னிபெசன்ட் பற்றிய சரியான கூற்று எது?
1. கர்னல் எச்.எஸ். ஆல்காட்டிற்குப் பிறகு பிரம்மஞான சபையின் உலகளாவிய தலைவராக அன்னிபெசன்ட்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2. 1914இல் அவர் காமன்வீல் என்ற வாராந்திரியை தொடங்கினார்.
3. 1915ஆம் ஆண்டு “How India Wrought for Freedom” என்ற தலைப்பிலான புத்தகத்தைப் பதிப்பித்தார்.

அ) 1 மற்றும் 2
ஆ) 2 மற்றும் 3
இ) 1 மற்றும் 3
ஈ) 1, 2 மற்றும் 3
Answer:
அ) 1 மற்றும் 2

Question 3.
கூற்று : ஜின்னாவை இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் தூதர் என்று சரோஜினி அம்மையார் அழைத்தார்.
காரணம் : லக்னோ ஒப்பந்தத்தின் தலைமைச் சிற்பி ஜின்னா ஆவார்.
அ) கூற்று சரி. காரணம் கூற்றிற்கான விளக்கமல்ல.
ஆ) கூற்று சரி. காரணம் கூற்றிற்கான விளக்கம்.
இ) கூற்று தவறு. காரணம் சரி
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
Answer:
ஆ) கூற்று சரி. காரணம் கூற்றிற்கான விளக்கம்

Question 4.
பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் யாரால் நிறுவப்பட்டது?
அ) மகாத்மா காந்தியடிகள்
ஆ) மதன்மோகன் மாளவியா
இ) திலகர்
ஈ) பி.பி. வாடியா
Answer:
ஆ) மதன்மோகன் மாளவியா

Samacheer Kalvi 12th History Guide Chapter 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம்

Question 5.
1916ஆம் ஆண்டு லக்னோ மாநாட்டின் முக்கியத்துவம் (மார்ச் 2020 )
அ) முஸ்லீம் லீக் எழுச்சி
ஆ) காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் தற்காலிக இணைப்பு
இ) முஸ்லீம் லீக்கின் தனித்தொகுதி கோரிக்கையை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது
ஈ) காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக்கின் கூட்டமர்வில் ஜின்னாவின் எதிர்மறை போக்கு
Answer:
ஆ) காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் தற்காலிக இணைப்பு

Question 6.
பின்வருவனவற்றைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் பொருத்துக .
அ கதார் கட்சி – i. 1916
ஆ நியூ இந்தியா – ii .1913
இ |தன்னாட்சி இயக்கம் – iii. 1909
ஈ |மிண்டோ -மார்லி சீர்திருத்தம் iv. 1915
அ) ii, iv, i, iii
ஆ) iv, i, ii, iii
இ) i, iv, iii, ii
ஈ) ii, iii, iv. i
Answer:
அ) ii, iv, i, iii

Question 7.
“Indian Unrest” என்ற புத்தகத்தின் ஆசிரியர்
அ) லாலா லஜபதிராய்
ஆ) வேலண்டைன் சிரோலி
இ) திலகர்
ஈ) அன்னிபெசண்ட்
Answer:
ஆ) வேலண்டைன் சிரோலி

Samacheer Kalvi 12th History Guide Chapter 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம்

Question 8.
கதார் கட்சி யாரால் நிறுவப்பட்டது?
அ) லாலா லஜபதிராய்
ஆ) ஏ.சி. மஜும்தார்
இ) லாலா ஹர்தயாள்
ஈ) சங்கர்லால் பாங்கர்
Answer:
இ) லாலா ஹர்தயாள்

Question 9.
அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் முதல் தலைவர் யார்?
அ) பி.பி. வாடியா
ஆ) ஜவஹர்லால் நேரு
இ) லாலா லஜபதிராய்
ஈ) சி.ஆர். தாஸ்
Answer:
இ) லாலா லஜபதிராய்

II. சுருக்கமான விடையளிக்கவும்

Question 1.
1903 – 1914 ஆகிய கால கட்டங்களில் தேசிய இயக்கம் வளர்ந்து வருவதைக் கட்டுப்படுத்த ஆங்கில அரசு மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகள் என்ன?
Answer:

  • தேசியவாதிகளின் நடவடிக்கைகள் பற்றியத் தகவல்களை இரகசியமாகச் சேகரிப்பதற்காக 1903இல் கர்சன் பிரபு குற்ற உளவுத்துறையை உருவாக்கினார்.
  • பத்திரிக்கைகள் (குற்றங்களுக்குத் தூண்டும்) சட்டம் (1908)
  • வெடி பொருட்கள் சட்டம் (1908)
  • இந்திய பத்திரிகைகள் சட்டம் (1910)
  • தேசத்துரோக கூட்டங்கள் தடுப்புச்சட்டம் (1911) ஆகிய சட்டங்கள் இயற்றப்பட்டன.
  • வெளிநாடுகளில் இருந்த சில புரட்சியாளர்களின் நுழைவுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வெளிநாட்டினர் அவசரச்சட்டம் 1914இல் இயற்றப்பட்டது.
  • கூட்டங்கள், தேசத் துரோக பிரசுரங்களைப் பிரச்சாரத்துக்காக அச்சிடுவது
  • சுற்றுக்கு விடுவது ஆகியவற்றைத் தடுப்பது, சந்தேகத்துக்கிடமானவர்களைக் கைது செய்வது என காலனி ஆதிக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம்

Question 2.
கிலாஃபத் இயக்கம் துவங்குவதற்கான பின்னணி என்னவாக இருந்தது?
Answer:

  • கலீபா மற்றும் இசுலாமிய புனிதத் தலங்களின் பொறுப்பாளராகத் துருக்கிய சுல்தான் விளங்கினார்.
  • போருக்குப் பிறகு துருக்கியின் நிலையைப் பலவீனப்படுத்த முடிவு செய்த பிரிட்டன் செவ்ரெஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • கலீபாவின் ஆளுமையை முடிவுக்குக் கொண்டு வர கலீபாவின் அதிகாரத்தைத் துண்டாடுவது இசுலாம் மீதான பெரும் தாக்குதலாகக் கருதப்பட்டது.
  • உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்கள் கலீபாமீது அனுதாபம் கொண்டார்கள் அதனால் இந்நடவடிக்கையை எதிர்க்க முடிவு செய்தனர்.
  • மௌலானா முகமது அலி, மெளலானா சௌஹத் அலி என்ற முஸ்லீம் சகோதரர்கள் கிலாபத் இயக்கத்தைத் தொடங்கினர்.

Question 3.
அன்னிபெசண்ட் அம்மையாரால் வெளியிடப்பட்ட புத்தகம் மற்றும் வாராந்திரப் பத்திரிக்கைகளின் , பெயர்களைக் கூறுக.
Answer:

  • அன்னிபெசண்ட் அம்மையார் 1914இல் “தி காமன்வீல்” என்ற வாரந்திரியை தொடங்கினார்.
  • 1915இல் “இந்தியா எவ்வாறு விடுதலைப் போரை முன்னெடுத்துச் சென்றது” என்ற தலைப்பிலான புத்தகத்தைப் பதிப்பித்தார்.
  • 1915 ஜூலை 14இல் “நியூ இந்தியா” என்ற தினசரியைத் தொடங்கினார்.
  • “தன்னாட்சி என்பது நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சபைகள் மூலமாகவும் அவர்கள் சபைக்கு கடமைப்பட்டவர்களாகவும் விளங்க நடைபெறும் ஆட்சியாகும்”.

Question 4.
1915ஆம் ஆண்டு இந்தியப் பாதுகாப்புக்கான சட்டம் பற்றி விவரிக்கவும்.
Answer:
இந்திய பாதுகாப்புச் சட்டம்:

  • முதல் உலகப்போரின் போது தேசியவாத மற்றும் புரட்சிகர நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த இச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
  • இது இந்தியப் பாதுகாப்பு ஒழுங்குமுறைகள் சட்டம் என்று குறிப்பிடப்பட்டது. இதில் மூன்று ஆணையர்கள் கொண்ட சிறப்புத்தீர்ப்பாயம்
  • சந்தேகத்துக்கு இடமானவர்கள் மீது வழக்குத் தொடர இச்சட்டம் அனுமதி அளித்தது.
  • இச்சட்டத்தை மீறுவோருக்கு மரண தண்டனை விதிப்பது, வாழ்நாள் முழுவதற்கும் நாடு கடத்துவது. 10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்க தீர்ப்பாயத்துக்கு இச்சட்டம் அதிகாரமளித்தது.
  • வழக்கு விசாரணை காமிரா மூலம் பதிவு செய்யப்பட்டு முடிவுகள் மேல்முறையீட்டுக்குத் தகுதி இல்லாததாகவும் இருந்தன.

Samacheer Kalvi 12th History Guide Chapter 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம்

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
தன்னாட்சி இயக்கத்தின் இரட்டைக் குறிக்கோள்களை பற்றி விவாதிக்கவும்.
Answer:
தன்னாட்சி இயக்கத்தின் இரட்டைக் குறிக்கோள்கள்: ஒன்று திலகர் தலைமையிலும் மற்றொன்று பெசன்ட் அம்மையார் தலைமையிலும் என 1916இல் நாட்டில் இரண்டு தன்னாட்சி இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

  • பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவில் தன்னாட்சியை ஏற்படுத்துவது
  • தாய்நாடு பற்றிய பெருமையுணர்வை இந்திய மக்களிடையே ஏற்படுத்துவது ஆகியன அந்த இரண்டு குறிக்கோள்களாகும்.

Question 2.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அத்தியாயமாக கதார் இயக்கம் கருதப்படுவது ஏன்?
Answer:

  • இந்தியாவில் புரட்சிகர தேசிய செயல்பாட்டுக்கு உகந்த நிலைமைகளை முதல் உலகப்போர் உருவாக்கியது காதர் இயக்கம் அவற்றின் வெளிப்பாடுகளில் ஒன்றாகும்.
  • 1916 அக்டோபரில் இம்பீரியல் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்து மற்றும் முஸ்லீம் உறுப்பினர்கள்லாலாஹர்தயாள் 1913இல் நிறுவினார். இந்த அமைப்புகாதர்கட்சி என்று அழைக்கப்பட்டது.
  • இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காதர் இயக்கம் மிக முக்கிய அத்தியாயமாகும்.
  • கோமகடமரு என்று பெயரிடப்பட்ட கப்பல் இந்தியாவில் இருந்து குடியேறியவர்களுடன் கனடாவில்
  • இருந்து திரும்பியது. * இந்தியா திரும்பியவுடன் பிரிட்டிஷ் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் அந்தக் கப்பலில் இருந்த பல் பயணிகள் கொல்லப்பட்டனர் அல்லது கைது செய்யப்பட்டனர்.
  • இந்த நிகழ்வு இந்திய தேசிய இயக்கத்திற்கு ஆழமான வடுவை ஏற்படுத்தியது.

Question 3.
1920 மார்ச்சில் நடைபெற்ற பாரிஸ் அமைதி மாநாட்டில் கிலாஃபத் இயக்கத்தின் சார்பாக முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்ன?
Answer:
1920 மார்ச் மாதம் பாரீசில் முகமது அலி கிலாபத் இயக்கத்தின் கோரிக்கைகளைத் தூதாண்மை அதிகாரிகளிடையே சமர்ப்பித்தார்.

  • துருக்கியின் சுல்தான் கலீபாவாக இடையூறின்றித் தொடர வேண்டும். *
  • இசுலாமியப் புனிதத் தலங்கள் சுல்தானிடம் ஒப்படைக்கப்பட்டு அவர் அதனைக் கட்டுப்படுத்த வேண்டும்.
  • சுல்தானிடம் போதுமானப் பகுதிகள் தரப்பட்டு இசுலாமிய மதத்தைப் பாதுகாக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.
  • ஜாசிரத்-உல்-அரப் (அராபியா, சிரியா, ஈராக், பாலஸ்தீனம்) ஆகியன இவரின் இறையாண்மையின் கீழிருக்க வேண்டும்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம்

Question 4.
சென்னை தொழிற்சங்கத்தின் தாக்கம் மற்றும் முக்கியத்துவம் என்ன?
Answer:

  • 1917ஆம் ஆண்டின் போல்ஷ்விக் புரட்சியின் வெற்றி இந்திய தொழிலாளர்களின் மீது தாக்க, ஏற்படுத்தியது.
  • இந்தியாவில் 1918இல் முதன்முறையாக பி.பி.வாடியா அவர்களால் மதராஸ் தொழில் ட நிறுவப்பட்டது.
  • பக்கிங்ஹாம், பெரம்பூர் கர்நாடிக் மில் ஆகியவற்றின் தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்பட்டதன் காரணமாக இந்தத் தொழிற்சங்கம் முக்கியமாக ஏற்பட்டது.
  • மதிய உணவுக்கு குறுகிய கால இடைவெளி, தொழிலாளர்கள் மீது ஐரோப்பிய உதவியாளர்கள் அடிக்கடி நடத்தியத் தாக்குதல்கள், போதுமான ஊதியம் வழங்காதது ஆகியன இந்தத் தொழிற்சங்கம் அமையக் காரணமாக அமைந்தன.
  • ஒட்டுமொத்தமாக பேரம் பேசுவதைப் பின்பற்றி வகுப்புப் போராட்டத்துக்குத் தொழிற்சங்கம் சார்ந்த கொள்கைகளை ஒரு ஆயுதமாக பயன்படுத்தத் தொழிற்சங்கம் முனைந்தது.
  • கல்கத்தா மற்றும் பம்பாயில் இந்தியக் கடற்படை வீரர்கள் சங்கம், பஞ்சாப் பத்திரிகை ஊழியர்கள் சங்கம்,
    பம்பாய் ரயில்வே பணியாளர்கள் சங்கம், எம்.எஸ்.எம். ரயில்வே ஊழியர் சங்கம், அஞ்சல் பணியாளர்கள் சங்கம், துறைமுகப் பொறுப்புக் கழக ஊழியர் சங்கம், ஜாம்ஷெட்பூர் தொழிலாளர் சங்கம், ஜாரியாவில் இந்திய
    நிலக்கரிச் சுரங்க ஊழியர்கள் சங்கம் என பல்வேறு ரயில்வேக்களின் ஊழியர் சங்கங்கள் உருவாக்கப்பட்டன.
  • 1920 அக்டோபர் 30இல் 1,40,854 உறுப்பினர்களைக் கொண்ட 64 தொழிற்சங்கங்களை பம்பாயில் சந்தித்து லாலா லஜபதி ராயின் தலைமையில் அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸை (AITUC) நிறுவினர்.

IV. விரிவான விடையளிக்கவும்

Question 1.
லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்துக.
Answer:
(மார்ச் 2020 ) லக்னோ ஒப்பந்தம் அல்லது காங்கிரஸ் லீக் ஒப்பந்தம் என்று பிரபலமாக அழைக்கப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக்-ஐ ஒன்றிணைப்பதில் அன்னிபெசன்ட் அம்மையாரும் திலகரும் முக்கியப் பங்காற்றினார்கள்.

  • நிர்வாகம் மற்றும் நிதி விஷயங்களில் மத்திய கட்டுப்பாட்டில் இருந்து மாகாணங்கள் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்.
  • மத்திய மற்றும் மாகாண சட்டமேலவைகளின் உறுப்பினர்களில் 4/5 பங்கு நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், 1/5 பங்கு நபர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
  • மாகாண மற்றும் மத்திய சட்டப் பேரவைகளின் 4/5 உறுப்பினர்கள் பரந்துபட்ட வாக்குப்பதிவின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
  • மத்திய நிர்வாக சபை உட்பட நிர்வாக சபை உறுப்பினர்களில் 1/2 பங்கு நபர்கள் அந்தந்த சபைகளின் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர்களாக இருக்க வேண்டும்.

மாகாண சபைத் தேர்தல்களில் முஸ்லீம்களுக்கு தனித்தொகுதிகள் வழங்க காங்கிரசும் ஒப்புக்கொண்டது. இந்து மற்றும் சீக்கிய சிறுபான்மையினருக்கு சில இடங்கள் வழங்கப்பட்ட பஞ்சாப் மற்றும் வங்காளம் தவிர அனைத்து மாகாணங்களிலும் அவர்களுக்கு சாதகமாக முன்னுரிமைகளை வழங்கவும் காங்கிரஸ் ஒப்புக்கொண்டது. கிலாபத் இயக்கம் மற்றும் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றில் இந்து-முஸ்லீம் ஒத்துழைப்புக்கு இந்த ஒப்பந்தம் வழியமைத்தது.

தங்களது சபைகள் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு ஏற்ப மாகாண மற்றும் மத்திய அரசுகள் நடக்க கடமைப்பட்டுள்ளன. கவர்னர் ஜெனரல் அல்லது சபைகளின் ஆளுநர்கள் வீட்டோ அதிகாரம் பெறும் பட்சத்தில் அந்தத் தீர்மானம் ஓராண்டுக்கும் குறைவான இடைவெளியில் மீண்டும் நிறைவேற்றப்படும் பட்சத்தில் அது செயல்பாட்டுக்கு வரும்.

இந்திய அரசுக்கும் வெளியுறவு அமைச்சருக்கும் உள்ள உறவுகளும் தன்னாட்சி (டொமினியன்) தகுதியுடைய பகுதியின் காலனி செயலருக்கும், இந்தியாவுக்கும் உள்ள உறவுகளும் ஒத்திருக்கவேண்டும். ஏகாதிபத்திய அரசு அலுவல்களுடன் தொடர்புடைய எவரும் சமநிலை பெற்றிருக்க வேண்டும். இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கும் விடுதலை இயக்கத்துக்கும் லக்னோ ஒப்பந்தம் வழிவகுத்தது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம்

Question 2.
திலகர் மற்றும் அன்னிபெசன்ட் ஆகியோரின் கீழ் துவக்கப்பட்ட தன்னாட்சி இயக்கங்களின்
செயல்பாடுகளை விளக்குக.
Answer:
(அ) திலகரின் தன்னாட்சி இயக்கம்:

  • 1916 ஏப்ரலில் பெல்காமில் நடந்த பம்பாய் மாகாண மாநாட்டில் இது நிறுவப்பட்டது. பம்பாய் நகரம் உட்பட மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய மாகாணங்கள், பெரார் ஆகிய பகுதிகளில் திலகரின் தன்னாட்சி இயக்கம் செயல்படும்.
  • திலகரின் இயக்கத்துக்கு ஆறு கிளைகள் ஒதுக்கப்பட்டன. அன்னிபெசன்ட் அம்மையாரின் இயக்கத்துக்கு இந்தியாவின் எஞ்சிய அனைத்துப் பகுதிகளும் ஒதுக்கப்பட்டன.
  • தன்னாட்சி குறித்த கோரிக்கைகளை தமது உரைகள் மூலம் திலகர் பிரபலப்படுத்தினார்.
  • மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் பிரபலமடைந்திருந்த அவரது இயக்கம், 1917 ஏப்ரலில் 14 ஆயிரம் உறுப்பினர்களில் இருந்து 1918இன் தொடக்கத்தில் 32 ஆயிரம் உறுப்பினர்களாக அதிகரித்தது.
  • தன்னாட்சி பற்றிய கொள்கைகளை பரப்பியதற்காக 1916 ஜூலை 23 தமது அறுபதாவது பிறந்த நாளில் திலகர் கைது செய்யப்பட்டார்.

(ஆ) பெசன்ட் அம்மையாரின் தன்னாட்சி இயக்கம்:

  • காங்கிரஸ் கட்சியிடமிருந்து எந்த அறிகுறியும் தென்படாத காரணத்தால் 1916ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மதராஸில் தன்னாட்சி இயக்கத்தை அன்னிபெசன்ட் தொடங்கினார்.
  • கான்பூர், அலாகாபாத், பனாரஸ் (வாரணாசி), மதுரா, காலிகட், அகமதுநகர் ஆகிய இடங்களில் இந்த இயக்கத்தின் கிளைகள் அமைந்தன. இந்தியா முழுவதும் தீவிரப் பயணம் மேற்கொண்டு தன்னாட்சி குறித்த கருத்தை அவர் பரவச் செய்தார்.
  • இந்தியாவின் விசுவாசத்தின் விலை இந்தியாவின் விடுதலை என்று அவர் அறிவித்தார். காங்கிரஸ் கட்சியின் செயல்படாத நிலை குறித்து அதிருப்தி அடைந்த மிதவாத காங்கிரசார் தன்னாட்சி இயக்கத்தில் இணைந்தனர்.
  • ஜவஹர்லால் நேரு, முகம்மது அலி ஜின்னா, பி. சக்கரவர்த்தி, ஜிதேந்திரலால் பானர்ஜி, சத்யமூர்த்தி, கலிக்குஸ்மான் ஆகியோர் இந்த இயக்கத்தில் உறுப்பினர்களாகத் தங்களை இணைத்துக் கொண்டதிலிருந்து இந்த இயக்கத்தின் பிரபலத்தை அறிய முடியும்.

Question 3.
மலபார் மாப்பிள்ளை கிளர்ச்சியின் காரணங்கள் மற்றும் துயர விளைவுகளைப் பற்றி விவாதிக்கவும்.
Answer:
மலபார் மாப்பிள்ளை :

  • கிலாபத் விஷயம் பல பிரிவினராலும் பலவாறாக எடுத்துரைக்கப்பட்டது.
  • உத்தரப்பிரதேசத்தில் இருந்த முஸ்லீம்கள் கிலாப் (எதிர்ப்பு) என்ற அர்த்தமுடைய உருது மொழி வார்த்தையை நிர்வாகத்திற்கு எதிரான பொதுக் கிளர்ச்சியின் அடையாளமாகப் பயன்படுத்தினார்கள்.
  • இவ்வாறே மலபாரைச் சேர்ந்த மாப்பிள்ளைகள் இதனை நிலப்பிரபுக்களுக்கு எதிரான கிளர்ச்சியாக உருமாற்றம் செய்தனர். ‘
  • தொழிலாளர்கள் இயக்கத்தை அடக்கும் நோக்கத்தோடு பணமுதலாளிகளின் துணையோடு அரசு தொழிலாளர்களைக் கீழ்நிலையில் வைத்திருக்க அனைத்து வழிகளிலும் முயன்றது.
  • வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோரைக் கைது செய்தனர், அவர்களின் வீடுகளைத் தீயிட்டுக் கொளுத்தினர்.

Samacheer Kalvi 12th History Guide Chapter 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம்

V. செயல்பாடு (மாணவர்களுக்கானது)

1. தற்கால சமூகப் பிரிவுகள் ஒழுங்கமைக்கப்படுவதற்குத் தொழிற்சங்கங்கள் ஏன் முக்கியமானவை என விவாதம் செய்தல்.
2. குழுச் செயல்பாடு: முக்கிய கூட்டமைப்பு மற்றும் தொழில் சங்கங்களை அடையாளங்கண்டு அவைகளின் நடவடிக்கைகளைப் பதிவு செய்தல்.

12th History Guide இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் Additional Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்

Question 1.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் 1916ல் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களுக்கிடையே கையெழுத்தான ஒப்பந்தம் அ) லக்னோ ஒப்பந்தம்
ஆ) லாகூர் ஒப்பந்தம்
இ) செவ்ரேஸ் ஒப்பந்தம்
ஈ) தன்னாட்சி இயக்கம்
Answer:
அ) லக்னோ ஒப்பந்தம்

Question 2.
1915ல் ‘நியூ இந்தியா’ பத்திரிக்கையை ஆரம்பித்தவர்.
அ) பாரதியார்
ஆ) வ.உ.சி.
இ) அன்னிபெசன்ட் அம்மையார்
ஈ) திலகர்
Answer:
இ) அன்னிபெசன்ட் அம்மையார்

Question 3.
‘இந்தியக் கிளர்ச்சி’ என்ற புத்தகத்தின் ஆசிரியர்.
அ) R.C. மஜும்தார்
ஆ) லாலா லஜபதிராய்
இ) ரவீந்தரநாத் தாகூர்
ஈ) வேலண்டைன் சிரோலி
Answer:
ஈ) வேலண்டைன் சிரோலி

Samacheer Kalvi 12th History Guide Chapter 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம்

Question 4.
மிண்டோ -மார்லி சீர்த்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்ட ஆண்டு
அ) 1909
ஆ) 1919
இ) 1929
ஈ) 1939
Answer:
ஈ) 1939

Question 5.
வெளிநாட்டினர் அவசரச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
அ) 1912
ஆ) 1914
இ) 1916
ஈ) 1918
Answer:
ஆ) 1914

Question 6.
…… தலைமையில் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசை (AITUC) உருவாக்கப்பட்டது.
அ) பாலகங்காதர திலகர்
ஆ) லாலா லஜபதிராய்
இ) பிபின் சந்திரபால்
ஈ) அன்னிபெசன்ட்
Answer:
ஆ) லாலா லஜபதிராய்

Samacheer Kalvi 12th History Guide Chapter 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம்

Question 7.
ரௌலட் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
அ) 1917
ஆ) 1918
இ) 1919
ஈ) 1920
Answer:
இ) 1919

Question 8.
பின்வருவனவற்றை கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் பொருத்துக.
i. ரௌலட் சட்டம் – 1920
ii. AITUC – 1908
iii. போல்ஷ்விக் புரட்சி – 1919
iv. வெடிப்பொருட்கள் சட்டம் – 1917
அ) ii, i, iv, iii
ஆ) iii, i, ii, iv
இ) ii, iv, i, iii
ஈ) iv, ii, i, iii
Answer:
இ) ii, iv, i, iii

Samacheer Kalvi 12th History Guide Chapter 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம்

Question 9.
1903ல் CID (குற்ற உளவுத்துறை)யை உருவாக்கியவர்
அ) கானிங் பிரபு
ஆ) கர்சன் பிரபு
இ) மவுண்ட்பேட்டன்
ஈ) வெல்லிங்டன் பிரபு
Answer:
ஆ) கர்சன் பிரபு

Question 10.
“இந்து-மூஸ்லீம் ஒற்றுமையின் தூதர்” என்று சரோஜினியால் அழைக்கப்பட்டவர் .
அ) சவுகத் அலி
ஆ) திலகர்
இ) மகாத்மா காந்தி
ஈ) முகமது ஜின்னா
Answer:
ஈ) முகமது ஜின்னா

II. சுருக்கமாக விடையளிக்கவும்

Question 1.
தன்னாட்சி இயக்கத்தின் வீழ்ச்சியைப் பற்றி கூறுக.
Answer:

  • “இந்திய கிளர்ச்சி” என்ற புத்தகத்தின் ஆசிரியர் வேலன்டைன் சிரோலிக்கு எதிராக தாம் தொடுத்த
    அவதூறு வழக்கை நடத்துவதற்காக 1918 செப்டம்பரில் திலகர் பிரிட்டனுக்குச் சென்றார்.
  • உத்தேசிக்கப்பட்ட மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்களை பெசன்ட் ஏற்றுக் கொண்டார்.
  • இதன்பிறகு தன்னாட்சி இயக்கம் வீழ்ச்சி கண்டது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம்

Question 2.
மகாத்மா காந்தி தனது பொது நல சேவைக்காக பெற்ற பதக்கங்கள் யாவை?
Answer:

  • தென்னாப்பிரிக்காவில் ஆற்றிய மனிதாபிமானப் பணிகளுக்காக காந்தியடிகளுக்கு கெய்சர்-இ-ஹிந்த் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
  • 1906ல் ஆம்புலன்ஸ் படையில் ஒரு அதிகாரியாக அவரது சேவையைப் பாராட்ட ஜூலு போர் வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டது.
  • 1899-1900ல் போயர் போரின் போது தூக்குப்படுக்கை கொண்டு செல்வோர் படையில் இந்திய ஆர்வலர்களின் துணைக் கண்காணிப்பாளராக சேவைபுரிந்தமைக்காக போயர் போர் வெள்ளிப் பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது.

Question 3.
மகாத்மா காந்தி தான் பெற்ற பதக்கங்களை திருப்பி கொடுத்ததற்காக அவர் கூறிய காரணங்கள் யாவை?
Answer:

  • கடந்த ஒரு மாதகாலமாக நடந்த நிகழ்வுகளை பார்க்கும் போது கிலாபத் இயக்க விஷயத்தில் ஏகாதி மத்திய அரசு,
  • நேர்மையற்ற, நியாயமற்ற வகையிலும் மற்றும் கிரிமினல் போலவும் நடந்து
  • தங்கள் நேர்மையற்றத் தன்மையைப் பாதுகாக்கத் தவறுக்கு மேல் தவறு செய்தன.
  • இத்தகைய அரசு மீதான மதிப்பையோ அல்லது அன்பையோ என்னால் இருப்பு வைக்க இயலவில்லை.
  • ஆதலால் அனைத்து பதக்கங்களையும் திருப்பி ஒப்படைக்கிறேன் என கூறினார்.

III. குறுகிய விடையளிக்கவும்

Question 1.
தன்னாட்சி இயக்கத்தின் முக்கியத்துவம் யாது?
Answer:

  • காந்தியடிகளின் சத்தியாகிரக இயக்கங்கள் தொடங்கப்படுவதற்கு வழிவகுக்கும் வகையில் மக்களை ஒன்று திரட்ட தன்னாட்சி இயக்கங்கள் களம் அமைத்தன.
  • காந்தியடிகளின் சத்தியாக்கிரகப் போராட்டங்களில் ஈடுபட்டோர் பலர் தன்னாட்சி இயக்க உறுப்பினர்கள்.
  • இந்த இயக்கத்தின் மூலமாக அமைக்கப்பட்ட கட்டமைப்புகளைக் காந்திய போராட்டங்களைப் பரப்புவதற்கு அவர்கள் பயன்படுத்தினர்.
  • அனைத்துவித பிரிவுகளையும் தாண்டி காங்கிரஸ், முஸ்லீம் லீக், பிரம்ம ஞான சபையாளர்கள், தொழிலாளர் அமைப்பினர் என பலதரப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட முதல் இந்திய அரசியல் இயக்கமாக தன்னாட்சி இயக்கம் விளங்கியது.

Samacheer Kalvi 12th History Guide Chapter 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம்

Question 2.
லக்னோ ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் யாது?
Answer:

  • இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கும், விடுதலை இயக்கத்துக்கும் லக்னோ ஒப்பந்தம் வழிவகுத்தது.
  • லக்னோ ஒப்பந்தத்தின் தலைமை சிற்பியான ஜின்னாவை “இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் தூதர்” என்று சரோஜினி அம்மையார் அழைத்தார்.
  • லக்னோ உடன்படிக்கையானது காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக்கில் இருந்த படித்த வகுப்பினர் ஒரு பொதுவான குறிக்கோளுடன் இணைந்து செயல்பட முடியும் என்பதை நிரூபித்தது.

IV. விரிவான விடையளிக்கவும்

Question 1.
தொழிலாளர் இயக்கத்தின் எழுச்சியினை விவரி.
Answer:
இயந்திரங்களின் அறிமுகம்:
இயந்திரங்களின் அறிமுகம், உற்பத்திக்கான புதிய முறைகள், சில பெரிய மாநகரங்களில் தொழிற்சாலைகளின் பெருக்கம் ஆகியவை காரணமாக ஊதியம் ஈட்டுவோர் “தொழிற்சாலை பணியாளர்” என்ற புதிய வர்க்கம் தோன்றின.

பணியாளர்களின் பணிவு:
இந்தியாவில் பெரும்பாலும் கிராமங்களை சேர்ந்த தொழிற்சாலைப் பணியாளர்கள் முடிவில் மிக பணிவுடனும் முறைசாராமலும் இருந்தனர்.

பணியாளர்கள் நலன் காக்க குரல் எழுப்புதல் :
பம்பாயின் சோரப்ஜி, ஷபூர்ஜி மற்றும் என்.எம். லோக்காண்டே வங்காளத்தின் சசிபாத பானர்ஜி ஆகியோர் தொழிற்சாலை பணியாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக தங்களின் குரல்களை எழுப்பினர்.

தொழிலாளர் பிரச்சனை:
தொழிலாளர்கள் தங்களுக்குள் சண்டையிட ஆரம்பித்ததால் தொழிலாளர்களின் நலன் காக்க தொழிற்சங்கங்கள் உருவாக்கப்பட்டன.

விழிப்புணர்வு:
ரஷ்ய போல்ஷ்விக் கட்சி புரட்சியின் வெற்றி, வகுப்பு பேதம் பற்றிய விழிப்புணர்வும், அறிவார்ந்த சிந்தனையும் இந்திய தொழிலாளர்களின் மத்தியில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தின.

உலகப்போரின் தாக்கம்:
போரால் ஏற்பட்ட பொருளாதார சிரமங்கள் காரணமாக ஏற்பட்ட தொழில் வீழ்ச்சி, வேலை கொடுப்போர் மற்றும் வேலை செய்வோருக்கிடையே பெரிய இடைவெளி, பல்வேறு நாடுகள் பங்கேற்புடன் சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆகியன இந்திய தொழிலாளர்களிடையே பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது.

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Miscellaneous Problems

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Business Maths Guide Pdf Chapter 2 Integral Calculus I Miscellaneous Problems Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Business Maths Solutions Chapter 2 Integral Calculus I Miscellaneous Problems

Question 1.
∫\(\frac { 1 }{\sqrt{x-1}-\sqrt{x+3}}\) dx
Solution:
∫\(\frac { 1 }{\sqrt{x+2}-\sqrt{x+3}}\) dx
Conjugating the Denominator
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Miscellaneous Problems 1

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Miscellaneous Problems

Question 2.
∫\(\frac { dx }{2-3x-2x^2}\)
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Miscellaneous Problems 2

Question 3.
∫\(\frac { dx }{e^x+6+5e^{-x}}\)
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Miscellaneous Problems 3

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Miscellaneous Problems

Question 4.
∫\(\sqrt { 2x^2-3}\) dx
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Miscellaneous Problems 4

Question 5.
∫\(\sqrt { 9x^2+12x+3}\) dx
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Miscellaneous Problems 5
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Miscellaneous Problems 6

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Miscellaneous Problems

Question 6.
∫(x + 1)² log x dx
Solution:
∫udv = uv – ∫vdu
∫(x + 1)² log x dx
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Miscellaneous Problems 7

Question 7.
∫log (x – \(\sqrt { x^2-1}\)) dx
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Miscellaneous Problems 8
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Miscellaneous Problems 9

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Miscellaneous Problems

Question 8.
\(\int_{0}^{1}\) \(\sqrt { x(x-1)}\) dx
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Miscellaneous Problems 10

Question 9.
\(\int_{-1}^{1}\) x² e-2x dx
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Miscellaneous Problems 11

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Miscellaneous Problems

Question 10.
\(\int_{0}^{3}\) \(\frac { xdx }{\sqrt {x+1} + \sqrt{5x+1}}\)
Solution:
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Miscellaneous Problems 12

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Miscellaneous Problems

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.5

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Business Maths Guide Pdf Chapter 2 Integral Calculus I Ex 2.5 Text Book Back Questions and Answers, Notes.

Check More: INDUSTOWER Pivot Point Calculator

Tamilnadu Samacheer Kalvi 12th Business Maths Solutions Chapter 2 Integral Calculus I Ex 2.5

Question 1.
Integrate the following with respect to x.
xe-x
Solution:
= ∫xe-x dx = ∫udv
∫udv = uv – u1v1 + u11 v2 ………
∫xe-x dx = (x) (-e-x) – (1) e-x + c
= -xe-x – e-x + c
= -e-x (x + 1) + c
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.5 1

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.5

Question 2.
x³e3x
Solution:
= ∫x³e3x dx = ∫udv
∫udv = uv – u1v1 + u11 v2 – u111 v3 ………
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.5 2

Question 3.
log x
Solution:
∫log x dx = ∫udv
∫udv = uv – ∫vdu
∫log x dx = (log x) (x) – ∫(x) (\(\frac { dx }{x}\)) + c
= x log x – ∫dx + c
= x log x – x + c
= x(log x – 1) + c
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.5 3

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.5

Question 4.
x log x
Solution:
∫x log x dx = ∫udv
∫udv = uv – ∫vdu
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.5 4

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.5

Question 5.
\(\sqrt { 1-sin 2x }\)
Solution:
xⁿ log x
∫xⁿ log x dx = ∫udv
∫udv = uv – ∫vdu
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.5 5

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.5

Question 6.
x5 e
Solution:
∫x5 e dx = ∫x x4 e dx
Let t = x²
\(\frac { dt }{dx}\) = 2x
dt = 2xdx
xdx = \(\frac { dt }{2}\)
∫x x4 e dx = ∫t² et (\(\frac { dt }{2}\))
Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.5 6

Samacheer Kalvi 12th Business Maths Guide Chapter 2 Integral Calculus I Ex 2.5