Samacheer Kalvi 6th English Guide Term 1 Prose Chapter 2 When the Trees Walked

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th English Guide Pdf Term 1 Prose Chapter 2 When the Trees Walked Text Book Back Questions and Answers, Summary, Notes.

   

Tamilnadu Samacheer Kalvi 6th English Solutions Term 1 Prose Chapter 2 When the Trees Walked

6th English Guide When the Trees Walked Text Book Back Questions and Answers

Warm Up (Text Book Page No. 108)

B. Discuss the Answer.

1. What are the children doing? Describe their activities.
Answer:
The children were playing and spending time happily under the banyan tree. They were playing, swinging, climbing the tree.

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore

2. Would you like to be in their place? If so what would you enjoy the most?
Answer:
Yes, I like to be in the place and enjoy the pleasant nature and play with my friends.

Section – I

Discuss and Answer (Text Book Page No. 112)

Answer the following questions:

1. When did the garden become a happy place for the author?
Answer:
The garden became a happy place for the author when his grandfather joined him.

2. What are the two reasons the author gives for the plants moving towards grandfather?
Answer:
One reason the author gives for the plants moving towards grandfather may be light and warmth. The other reason may be that the plants wanted to be near grandfather.

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore

3. Why does the writer think that the peepul tree is a great show off?
Answer:
Even when there is no breeze, their road-chested, slim-waisted leave will spin like tops determined to attract your attention and invite you into the shade.

Section -II

Discuss and Answer (Text Book Page No. 114)

1. Why do we need trees? List four reasons that Grandfather gives.
Answer:
We are planting trees for the forest and for the animals and birds. They live there and need more food and shelter. So the trees help them. Besides men need trees. We need trees to keep the desert away, to attract rain, to prevent the banks of the river from being washed away, for fruit and flowers, leaf and seed. We need timber too.

2. Why did the author help his Grandfather plant trees?
Answer:
The thought of a world without trees became a sort of nightmare to the author and so he helped his Grandfather in his tree-planting with greater enthusiasm.

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore

3. What made Grandfather plant saplings on the rocky island?
Answer:
Grandfather saw a dry river-bed on a small rocky island. The river-beds are completely dry in summer but flooded during the monsoon rains. To make that rocky island a forest he planted saplings and cuttings.

Section – III

Discuss and Answer (Text Book Page No. 116)

1. What did Grandmother feel about trees growing in the house?
Answer:
Grandmother felt that trees growing in the house made it look like a roof brought down by jungle.

2. Why did the author leave town?
Answer:
The Second World War came and so the author left the town.

3. How did my Grandfather’s dream come true?
Answer:
The island became a small green paradise.

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore

4. Describe what the author saw when he went back to the island.
Answer:
When the author went back to the island, it was like a small green paradise. He saw red blooms of the coral blossom. Then he saw squirrels living in the trees and a koel, a crow pheasant, etc, The trees seem to know the author. They seemed to beckon him nearer. So he saw a green forest on that island.

Read and Understand (Text Book Page No. 117)

A. Tick the most appropriate option.

1. According to the author the tendril was moving towards grandfather because of it ………………………….
a) needed light and warmth.
b) did not like light and warmth.
c) wanted to be near Grandfather.
d) wanted to escape from the winter.
Answer:
c) wanted to be near Grandfather

2. Grandmother had wanted the peepul tree cut down because of …………………………
a) she did not like trees.
b) she wanted to grow flowers.
c) it was an old tree.
d) it was knocking down the bricks of the outhouse.
Answer:
d) it was knocking down the bricks of the outhouse

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore

3. Grandfather helped grandma out with the gardening because he ………………………….
a) liked gardening.
b) wanted to grow flowers to attract butterflies.
c) wanted to beautify the garden.
d) wanted to make the house green.
Answer:
b) wanted to grow flowers to attract butterflies

4. The author did not want to plant saplings in the forest because ………………………….
a) no one would come to see them.
b) it was dangerous to enter the forest.
c) it would not be of any use to them.
d) no one would appreciate them.
Answer:
a) no one would come to see them

5. Grandfather felt planting trees would help the forest because ………………………….
a) he wanted to make the view beautiful.
b) the river-bed was dry.
c) animals and birds in the forest would love him.
d) the animals and birds would find it easier to live.
Answer:
d) the animals and birds would find it easier to live

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore

6. When the author returned from England to Dehradun, he found Grandfather’s dream had come true because of the ………………………….
a) old house had changed
b) river was full.
c) trees had red flowers
d) forest covered the island.
Answer:
d) forest covered the island

B. Read the story on your own. Discuss in a group and complete the story map below. (Text Book Page No. 118)
Samacheer Kalvi 6th English Guide Term 1 Prose Chapter 2 When the Trees Walked 2
Answer:
Samacheer Kalvi 6th English Guide Term 1 Prose Chapter 2 When the Trees Walked 3

C. Work in groups of five. Tell the story in ten sentences.

You can begin the story like this:
The author’s Grandfather served in the Indian Forest Service.
After his retirement he built
Now continue the story. Each one should say one sentence.
Answer:

  • Grandfather built a bungalow and planted trees around it.
  • During the rains grandfather walked into the jungle and planted cuttings and saplings.
  • They found a small rocky island and grandfather planted plants to improve the view.
  • During the second world war, the author was sent to a boarding school.
  • Some years later, the author returned and saw the island.
  • He looked around and noticed a beautiful small green paradise.

D. Write a summary based on the story map.

Grandfather built a bungalow and planted trees around it. During the rains grandfather walked into the jungle and planted cuttings and saplings. They found a small rocky island and grandfather planted plants to improve the view. During the second world war, the author was sent to a boarding school. Some years later, the author returned and saw the Island. He looked around and noticed a beautiful small green paradise.

Vocabulary (Text Book Page No. 119)

E. Look at the words in the boxes. Match the words to make as many new words as possible. One is done for you. Eg. outhouse.
Samacheer Kalvi 6th English Guide Term 1 Prose Chapter 2 When the Trees Walked 4
Answer:

New Words
out root outhouse
river wall river bed
water garden waterfall
flower body flower garden
sun hill sunshine
aerial bed aerial root
busy sill busy body
window house window sill
foot shine foothill
compound fall compound wall

F. Look at the words in the box. Make new words by adding ‘ly’ wherever possible. It will not be possible with all the words.
Samacheer Kalvi 6th English Guide Term 1 Prose Chapter 2 When the Trees Walked 5

Answer:
lonely, vigorously, constantly, completely, strongly, unlikely, greatly, immediately, broadly

G. Look at the words in the box. Fill the wheel with their antonyms. All the words begin with ‘S’ and are from the text.
Samacheer Kalvi 6th English Guide Term 1 Prose Chapter 2 When the Trees Walked 6
Answer”
Samacheer Kalvi 6th English Guide Term 1 Prose Chapter 2 When the Trees Walked 7

  • hard × soft
  • fat × slim
  • weak × strong
  • big × small
  • fast × slow
  • hide × show
  • rough × smooth
  • dull × smart

Listening

H. Listen to your teacher read out what happened to Nandhu. Some of the statements given below are correct. Tick them (0). (Listening text is on page -157)

  • The truck went over a stone. (✗)
  • The box fell out of a truck. (✓)
  • The brass lamp was in the truck. (✗)
  • Nandhu wanted to play with the lamp. (✓)
  • It was like the lamp Nandhu had at home. (✗)
  • Nandhu pressed a button. (✓)

Speaking

I. Take something from your school bag. Describe it in three sentences. Ask the class to find out the thing you have described. (Text Book Page No. 120)

I take something from your school bag
I took out a hard device.
It was handy.
We use it for contacting others immediately.
Answer:
Computer

J. Discuss in groups of five. Make a story about the comic strip. Then share it in the class.
Samacheer Kalvi 6th English Guide Term 1 Prose Chapter 2 When the Trees Walked 8

Answer:
A boy and girl are planting a tree.
It started growing and became a tree.
The girl and the boy used to swing in the tree.
They took rest sitting under the tree.
One day a young man cut the tree.
When he grew old, he left very sorry for his foolishness about cutting.

Use Grammar (Text Book Page No. 121)

K. Tick the right option to fill in the blanks.

1. …………………. a beautiful flower!
a) How
b) Wow
c) What
d) Hurrah
Answer:
c) What

2. …………………. play football?
a) You can
b) Can you
c) Have you
d) You could
Answer:
b) Can you

3. …………………. did you go yesterday?
a) Which
b) Where
c) What
d) Who
Answer:
b) Where

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore

4. …………………. us go for a walk.
a) Shall
b) May
c) Let
d) Can
Answer:
c) Let

5. …………………. like to play hide and seek.
a) He
b) She
c) I
d) Muthu
Answer:
c) I

L. Look at the punctuation of these sentences. Why are they punctuated differently? Discuss in class.

1. One always felt like drawing close to him.
Answer:
Statement

2. But no one ever comes here!
Answer:
Exclamatory

3. Who’s going to see them?
Answer:
Question

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore

4. Come here.
Answer:
Statement

M. Work in pairs and say the sentences to each other. Do you hear any difference in the way it is spoken? Discuss and share with the class. Discuss the difference in the meaning of the sentence.

1. This is a banyan tree.
Answer:
It is a statement. It says that the tree is a banyan tree.

2. Is this a banyan tree?
Answer:
It is a question about the tree. It asks if the tree is a banyan tree.

3. What a beautiful banyan tree!
Answer:
It is an exclamation about the tree. It expresses that it is a beautiful banyan tree.

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore

4. Look at this banyan tree.
Answer:
It is an imperative sentence asking the person to look at this banyan tree.

N. Read these sentences from the story carefully. Do they give commands or requests or make statements? Write ‘C’ for command and ‘R’ for request and ‘S’ for a statement.

1. The tendril moved towards grandfather.
Answer:
(S)

2. I want a roof over my head.
Answer:
(S)

3. Please do not cut trees.
Answer:
(R)

4. We spent the whole day planting saplings.
Answer:
(S)

5. Will you please remove the trees growing on the wall?
Answer:
(R)

6. There was a forest on the Island.
Answer:
(S)

Samacheer Kalvi 9th English Guide Prose Chapter 2 I Can’t Climb Trees Anymore

7. Go to the river bed.
Answer:
(C)

8. The Island was a green paradise.
Answer:
(S)

9. Grow more trees to protect nature.
Answer:
(C)

10. Grandfather’s dream had come true.
Answer:
(S)

Writing

O. Look at the picture and write a paragraph using the clues in the picture.
Samacheer Kalvi 6th English Guide Term 1 Prose Chapter 2 When the Trees Walked 9

GROW AND PROTECT TREES

Trees help man, birds, and animals in many ways. They are home to different birds and insects. They give us medicine. They give fruits and provide shade. They help us build houses. Trees bring rain and prevent soil erosion and landslides. Trees take in carbon dioxide and give out Oxygen. So we get pure air to live. The trees keep the temperature.

Creative Writing

Look at the picture and write a story.
If you cut down trees Your children will pay the fees
Samacheer Kalvi 6th English Guide Term 1 Prose Chapter 2 When the Trees Walked 10

This picture tells us the importance of growing trees. Man cuts trees not knowing about its consequences in the future. Once a man lived near the forest. He began cutting the trees one by one. Finally, there were no trees. He passed away. His children found no trees and no birds. The atmosphere was very hot. Without trees, there won’t be any life. So they realized the foolishness of their parents. They started planting the trees.

When the Trees Walked Summary in English

The story is about how the author’s grandfather was very much interested in planting a number of trees. The author’s grandfather along with the others, plants many trees on a small island. During the Second World War, the author was sent away to a boarding school and later his grandparents shifted to England. The author too shifted England. The author returned back to that Island near Dehradun, He actually finds that Island turned out to be green. So, he understands the meaning of walking trees which actually means that the trees they planted got multiplied and serve a great purpose for the living beings.

When the Trees Walked Summary in Tamil

எழுத்தாளரின் தாத்தா பல மரங்களை வளர்ப்பதில் எவ்வளவு ஆர்வமாக இருந்தார் என்பது தான் கதை. ஆசிரியரின் தாத்தா மற்றொருவருடன் ஒரு சிறிய தீவில் பல மரங்களை நட்டுள்ளார். இரண்டாவது உலகப்போரின்போது ஆசிரியர் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப்பட்டார். பின்னர் அவரது பெரிய பெற்றோர் இங்கிலாந்திற்கு மாற்றப்பட்டனர். ஆசிரியரும் இங்கிலாந்திற்கு மாற்றப்பட்டார். ஆசிரியர் மீண்டும் டெஹ்ராடனுக்கு அருகில் உள்ள அந்த தீவுக்குத் திரும்பினார். தீவு பசுமையாக மாறியதை அவர் உண்மையில் காண்கிறார். எனவே, நடைபயிற்சி மரங்களின் அர்த்தத்தை அவர் புரிந்து கொள்கிறார். அதாவது உண்மையில் அவர்கள் நடப்பட்ட மரங்கள் பெருகின. மேலும் உயிரினங்களுக்கு பெரும் பங்காற்றி சேவை செய்கின்றன.

When the Trees Walked About the Author in English

Ruskin Bond is an award-winning Indian author of more than 500 books, short stories, essays, and novels. He writes poetry and books for children as well as adults. He lives with his adopted family in Landour, in Mussoorie, India. He was awarded the Padma Shri in 1999 and Padma Bhushan in 2014

When the Trees Walked About the Author in Tamil

ரஸ்கின் பாண்ட் 500க்கும் மேற்பட்ட புத்தகங்கள், சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் நாவல்களை எழுதி, இந்திய விருது பெற்றவர். அவர் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கவிதை மற்றும் புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் தனது வளர்ப்பு குடும்பத்துடன் இந்தியாவின் முசோரியில் உள்ள லேண்டூரில் வசித்து வருகிறார். அவருக்கு 1999இல் பத்மஸ்ரீ விருதும், 2014இல் பத்மபூஷண் விருதும் வழங்கப்பட்டது.

Samacheer Kalvi 6th English Guide Book Back Answers Solutions

Subject Matter Experts at SamacheerKalvi.Guide have created Tamil Nadu State Board Samacheer Kalvi 6th English Book Answers Solutions Guide Pdf Free Download are part of Samacheer Kalvi 6th Books Solutions.

   

Let us look at these TN State Board New Syllabus Samacheer Kalvi 6th Std English Guide Pdf of Text Book Back Questions and Answers Term 1, 2, 3, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, and revise our understanding of the subject.

Samacheer Kalvi 6th English Book Solutions Guide Pdf Free Download

Tamilnadu State Board Samacheer Kalvi 6th English Book Back Answers Solutions Guide Term 1, 2, 3.

Samacheer Kalvi 6th English Book Back Answers

Samacheer Kalvi 6th English Book Solutions Term 1

Samacheer Kalvi 6th English Prose

Samacheer Kalvi 6th English Poem

Samacheer Kalvi 6th English Supplementary

Samacheer Kalvi 6th English Book Solutions Term 2

Samacheer Kalvi 6th English Prose

Samacheer Kalvi 6th English Poem

Samacheer Kalvi 6th English Supplementary

Samacheer Kalvi 6th English Book Solutions Term 3

Samacheer Kalvi 6th English Prose

Samacheer Kalvi 6th English Poem

Samacheer Kalvi 6th English Supplementary

Samacheer Kalvi 6th English Play

We hope these Tamilnadu State Board Samacheer Kalvi Class 6th English Book Solutions Answers Guide Pdf Free Download will help you get through your subjective questions in the exam.

Let us know if you have any concerns regarding TN State Board New Syllabus Samacheer Kalvi 6th Standard English Guide Pdf of Text Book Back Questions and Answers, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, drop a comment below and we will get back to you as soon as possible.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.4 அணி இலக்கணம்

Students can Download 6th Tamil Chapter 9.4 அணி இலக்கணம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

   

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 9.4 அணி இலக்கணம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.4 அணி இலக்கணம்

Question 1.
பின்வரும் பாடலைப் படித்து இதில் அமைந்துள்ள அணியைக் குறிப்பிடுக.
ஆறு சக்கரம் நூறு வண்டி
அழகான ரயிலு வண்டி
மாடு கன்னு இல்லாமத்தான்
மாயமாத்தான் ஓடுது
உப்புப் பாரம் ஏத்தும் வண்டி
உப்பிலிப் பாளையம் போகும் வண்டி.
Answer:
இயல்பு நவிற்சி அணி.

மதிப்பீடு

குறுவினா

Question 1.
உள்ளதை உள்ளவாறு கூறும் அணியின் பெயர் யாது?
Answer:
உள்ளதை உள்ளவாறு கூறும் அணியின் பெயர் இயல்பு நவிற்சியணி.

Question 2.
உயர்வு நவிற்சி அணி என்பது யாது?
Answer:
ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது உயர்வு நவிற்சி அணி ஆகும்.

சிந்தனை வினா

Question 1.
நீங்கள் மிகவும் விரும்பிப் பார்த்த இடம் ஒன்றினை இயல்பு நவிற்சியாகவும் உயர்வு நவிற்சியாகவும் விவரிக்க.
Answer:
இயல்பு நவிற்சி : கன்னியாகுமரி தமிழ்நாட்டின் ஓர் முக்கிய ஊராகும். இங்கு வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவை இணைகின்றன. இது ஒரு சுற்றுலாத் தலம். இங்கு விவேகானந்தர், காமராசர், காந்தியடிகள் ஆகியோருக்கு நினைவு மண்டபம் உள்ளது. 133 அடி திருவள்ளுவர் சிலை உள்ளது. இங்கு மகாத்மா காந்தியின் சாம்பல்(அஸ்தி கரைக்கப்பட்டது.

உயர்வு நவிற்சி :
(i) கன்னியாகுமரி இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய ஊராகும். இங்கு மட்டும்தான் வங்காள விரிகுடா கடலும், அரபிக்கடலும், இந்திய பெருங்கடலும் சங்கமிக்கிறது.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.4 அணி இலக்கணம்

(ii) இது இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஒரு சுற்றுலாத் தலமாகும்.

(iii) இங்கு உலகப் புகழ்பெற்ற விவேகானந்தர் நினைவு மண்டபம் பார்ப்பதற்கே பிரமிப்பாக இருக்கும். அந்தளவிற்கு அழகாக இருக்கிறது. வானை முட்டும் அளவிற்கு 133 அடியில் திருவள்ளுவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.

(iv) இங்குதான் இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் சாம்பல் (அஸ்தி கரைக்கப்பட்டது. காந்தியடிகளுக்கும், காமராசருக்கும் புகழ்பெற்ற நினைவு மண்டபங்கள் உள்ளது. இவை எல்லாம் கன்னியாகுமரியின் பெருமை ஆகும்.

மொழியை ஆள்வோம்

பேசுக :

Question 1.
உங்கள் மீது அதிகம் அன்பு செலுத்துபவர்கள் யார்? நீங்கள் யார்யார் மீது அன்பு வைத்திருக்கிறீர்கள்? காரணம் கூறுக.
Answer:
(i) என் மீது அதிகம் அன்பு செலுத்துபவர் என் அம்மா.
(ii) அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா என என் உறவினர்கள் அனைவர் மீதும் அன்பு வைத்திருக்கிறேன்.

காரணம் :
நான் ஒரு கூட்டுக்குடும்பத்தில் வாழ்கின்றேன். எனக்கு நினைவு தெரியும் போதிலிருந்தே என் வீட்டில், தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா என அனைவரும் இருக்கின்றனர். என் நல்லது கெட்டது இவற்றில் எதுவானாலும் என்னோடு

சேர்ந்து மகிழவும் செய்வர் வருந்தவும் செய்வர். எனக்கு நேர்வதை அவர்களுக்கு நேர்ந்ததாக உணர்வர்.

எனக்கு ஏதாவது தேவை என்றால் நான் யாரிடம் வேண்டுமானாலும் கேட்பேன். என் தேவைகள் உடனே பூர்த்தியாகும். அதுமட்டுமின்றி என் வயதில் உள்ள மாமா, அத்தை பிள்ளைகள், பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகள் அனைவருமே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து பழகுவோம். அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

Question 2.
நீங்கள் ஒருவருக்குப் பரிசு கொடுக்க விரும்பினால் யாருக்குக் கொடுப்பீர்கள்? என்ன கொடுப்பீர்கள்? எதற்காகக் கொடுப்பீர்கள்?
Answer:
(i) என் நண்பனுக்குப் பரிசு கொடுப்பேன்.
(ii) புத்த கம்.
(iii) எனக்கும் என் நண்பனுக்கும் புத்தகம் வாசிப்பது மிகவும் பிடிக்கும். மற்றப் பரிசுகள் காட்சிப் பொருளாக மட்டுமே இருக்கும். ஆனால் புத்தகம் அறிவுப் பொருளாக இருக்கும். புத்தகத்தைப் படித்து அதனால் பெறுகின்ற அறிவை எக்காலத்திலும் மறக்கவியலாது. எனவே, புத்தகத்தை மட்டுமே பரிசாகத் தருவேன்.

Question 3.
பின்வரும் தலைப்புகளுள் ஒன்று பற்றி மூன்று மணித்துளிகள் பேசுக.
அ) பொதுநலம்
ஆ) சமூகத்தொண்டு
Answer:
அ) பொதுநலம்:
சுயநலமற்ற நலமே பொதுநலம். சுயநலம் என்பது நம்முடன் பிறந்தது. அதனை யாரும் நமக்குக் கற்றுத்தர வேண்டிய அவசியமில்லை. அது நம் உணர்வோடு கூடியதாக இருக்கும். நமக்கு நம் வீட்டில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்துப் பழகும் வழக்கம் இருந்தாலே பொதுநலம் வளரும். தன்னலமற்றவராய் வாழ்ந்து இறந்தும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பலர். அவர்களுடைய வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் தங்கள் சுக துக்கங்களுக்கு இடம் கொடாமல் பிறர் நலனை மட்டுமே கருதி வாழ்ந்துள்ளனர் என்பது தெளிவாகும்.

பொதுநலம் நாடுபவர்கள் சுயநலமற்றவர்களாகத்தான் இருப்பார்கள் என்று கூறவியலாது. ஏனெனில் அவர்களிடம் பத்து சதவிகிதமாவாது சுயநலம் இருக்கும். வள்ளுவர். “குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்கக் கொளல்” என்று கூறியுள்ளார். ஒருவருடைய குணத்தை ஆராயும் போது அவற்றுள் எக்குணம் மேலோங்கி இருக்கின்றதோ அதனை வைத்து அவர் மதிப்பிடப்படுவார்.

அதுபோல்தான் சுயநலமும், பொதுநலமும், சுயநலக்காரர்கள் நூறு சதவிகிதம் சுயநலத்துடன் இருப்பர். பொதுநலக்காரர்கள் பெரும்பான்மை பொதுநலமும், சிறுபான்மை சுயநலமும் உடையவர்களாக இருப்பர். நாணயத்திற்கு இருபக்கம் போன்றதது தான் இச்சுயநலமும் பொதுநலமும்.

தன்னம்பிக்கை எவரிடம் அதிகமாகக் காணப்படுகிறதோ அவரிடம் பொதுநலம் அதிகமாகக் காணப்படும். சமுதாயத்திற்குச் செய்யப்படுகின்ற உதவியே பொதுநலம். பொதுநலம் என்பது பிறரைப் பார்த்து வருவது. பிறர் சொல்லித் தெரிவது. உணர்வோடு தொடர்புடையதாக இருக்கும். மற்றவர்களுக்கு நாம் செய்கின்ற சேவைகள், உதவிகள் எல்லாமே பொதுநலமாகும். கண்தானம், இரத்ததானம், உறுப்புதானம் : என இவையெல்லாமே பொதுநலம்தான். மனிதநேயம் எங்கெல்லாம் வளர்கிறதோ அங்கே பொதுநலம் மலர்கிறது.

பொதுநலம் என்பது சுயநலமற்றது. சாதி மதம் பாராதது, ஏழை எளியவர் எனக் கருதாது. பிறருக்காக உழைப்பது, மற்றவர்களுக்கு உதவி செய்வது, பிறரை அரவணைப்பது, ஏழைக் குழந்தைகளைக் கொஞ்சுதல் அவர்களுக்குத் தேவையானவற்றை அளிப்பது இவையெல்லாம் பொதுநலம்தான். பொதுநலம் உடையவரிடம் இருக்க வேண்டியது இனிமை, எளிமை, பொறுமை, பொதுமை ஆகிய பண்புகளாகும். இப்பண்புகளில் சிறந்தவர்கள் நோய்நொடிகளற்று நிம்மதியாக வாழ்வார்கள்.

‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்றார் அப்பர் பெருமான். அவரன்றோ பொதுநலத்தின் முன்னோடி. ‘கடமையைச் செய் பலனை எதிர்பாராதே’ என்பதைப் போல் பொதுநலம் அமைய வேண்டும். பொது நலத்தில் நம் உலகத்திற்கே முன்னோடியாக வாழ்பவர்கள் விவசாயிகள்தான். உலகமே அவர்களின் உழைப்பில்தான் வாழ்கிறது என்றால் அது மிகையாகாது.

அவசர சிகிச்சைக்கான ஊர்தி பொதுநலம் கருதியே இயங்குகிறது. பொதுநலனில் அக்கறை கொள்ள வேண்டும் என்பதால் சுயநலச் சிந்தனை இல்லாமல் இருக்கக்கூடாது. பொதுநலம் காப்பவர்கள் சூரியன், சந்திரன் போன்றும் காற்றும் மழையும் போன்று அனைவருக்கும் பொதுவாக இருந்து செயலாற்ற வேண்டும்.

ஆ) சமூகத் தொண்டு :
பல குடும்பங்கள் சேர்ந்தது சமூகம், சமுதாயம் என அழைக்கப்படுகிறது. அந்த சமுதாயம் மேம்படவும், மக்களின் வாழ்வு மேம்படவும், பலரும் முயல்கின்றனர். குழு அடிப்படையிலும் தனிப்பட்ட முறையிலும் தொண்டு செய்கின்றனர். அவ்வாறு மக்களுக்குச் செய்யும் தொண்டு மகேசனுக்குச் செய்யும் தொண்டாக எண்ணி செயலாற்றுகிறார்கள். நாம் செய்யும் செயல்களை நம் கடமை என எண்ணிச் செயல்படவேண்டும்.

“உயிர் இனங்களுக்குச் செய்யும் தொண்டு ஆண்டவனுக்குச் செய்யும் தொண்டாகும். நடமாடும் கடவுளர்களாகிய மக்களுக்கு ஒன்றைச் செய்தால் அது கோயிலில் உள்ளவர்க்குச் செய்யும் தொண்டாகும்” என்பது திருமூலரின் கருத்து. இவ்வாறு மக்களினத்திற்குச் செய்யும் தொண்டே மகத்தானது.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.4 அணி இலக்கணம்

தற்போது வளர்ந்து வரும். இணையச் செயல்பாடுகளால் சமூகத்தொண்டு செய்வது மிகவும் எளிதாகிவிட்டது. புலனம் குழு, முகநூல் போன்றவற்றின் மூலம் பல சேவைகளைச் செய்யவியலும். தற்போதுள்ள தேவைகள் என்று சிந்தித்தால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நெகிழிப் பொருட்கள் பயன்பாடுகளைத் தவிர்த்தல், ஏரி, குளங்கள் தூர் வாருதல், காடுகள் அழிப்பதைத் தடுத்தல், விவசாய நிலங்களை விற்காமல் பார்த்துக் கொள்ளுதல், ஆங்காங்கு மரக்கன்றுகள் நடுதல் போன்றவையாகும். இளைஞர்கள் இவற்றைச் சரிசெய்வதற்கு அரசு உதவியோடும், பொதுமக்கள் துணையோடும் செயலாற்ற வேண்டும்.

கல்வி, சுகாதாரம், விவசாயம் இவையனைத்தும் மக்களின் அவசிய தேவைகள் ஆகும். இத்தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். வழி இல்லாத ஊருக்கு வழி அமைத்தல், ஊரைத் தூய்மை செய்தல், தூய்மை பற்றி மக்களுக்கு எடுத்துத் கூறுதல், உடல் நலத்துடன் வாழ்வதற்குரிய வழிகளை எடுத்துக் கூறுதல், விழாக் காலங்களில் கூட்டத்தை நெறிப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். எப்பொழுதும் எவ்வுதவியும் செய்வதற்குத் தயாராய் இருக்க வேண்டும்.

சமூகத் தொண்டினை ஈடுபாட்டுடன் செய்து வந்தால் நிச்சயமாக ஒவ்வொரு கிராமமும் சிறந்து விளங்கும். துன்பத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். திறந்த மனமும் அளவற்ற ஆற்றலும் உள்ளவர்களாய் எதையும் துணிச்சலோடும் தன்னம்பிக்கையோடும் எதிர்கொண்டு செயலாற்ற வேண்டும். உன்னத இலட்சியத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கத் துணிந்து தொண்டாற்ற வேண்டும். நாட்டைப் பாதுகாப்போம். உயர்த்துவோம்.

அகர வரிசைப்படுத்துக

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.4 அணி இலக்கணம் 1

1. அன்பு
2. ஆடு
3. இரக்கம்
4. ஈதல்
5. உயிர்
6. ஊக்கம்
7. எளிமை
8. ஏது
9. ஐந்து
10. ஒழுக்கம்
11. ஓசை
12. ஔ வை

கீழ்க்காணும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கவிதை எழுதுக

அ) அன்பு
ஆ) நட்பு
இ) உதவி

அ) அன்பு :
கேட்டுப் பெறுவதல்ல அன்பு
கேட்காமலே பெறுதல் சிறப்பு
அன்பு பேச்சில் மட்டும்
போதுமா? செயலில் வேண்டாமா?
பகையைப் போக்கிடும் அன்பு
வெற்றியைத் தந்திடும் அன்பு
கண்களில் அன்பைக் காட்டு
கண்முன் கடவுளே நிற்பார்.

ஆ) நட்பு :
காயத்திற்கு மருந்தாகும்
அழியாச் சுவடாகும்
தவற்றைச் சுட்டிக்காட்டும்
குறைகளைத் திருத்தும்
தனிமையை இனிமையாக்கும்
சோர்வில் உற்சாகமூட்டும்
நீயில்லையேல் நான்
மழைக் கானா நிலமாய்
வாடி வருந்துவேன்.

இ) உதவி :
கல்லாதார்க்குக் கல்வியைக் கொடு
இல்லாதார்க்குப் பொருளைக் கொடு
கைகொடுக்கும் கையாய் இருந்திடு
கார்மேகத்தைப் போல் இருந்திடு
உயர்ந்தோர் தாழ்ந்தோர் பார்க்காதே
உதவி செய்வதில் தயங்காதே
பிறர்க்கு விதைக்கும் விதையைத்தான் – நீ
அறுவடை செய்வாய் மறவாதே!

பத்தியைப் படித்துக் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்க

அரசர் ஒருவர் தன் மக்களிடம் ‘அமைதி’ என்றால் என்ன என்பதை விளக்கும் வகையில் ஓவியமாக வரைந்து கொடுப்பவர்களுக்கு மிகச்சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை வெளிப்படுத்தும் வகையில் பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்குக் கொண்டு வந்தனர். அரசர் ஒவ்வொரு ஓவியமாகப் பார்த்துக் கொண்டே வந்தார். அழகிய மலையின் அடிவாரத்தில் ஓர் ஏரி இருப்பது போல் ஓவியம் ஒன்று இருந்தது.

அது மிகவும் சிறப்பாக இருந்தது. பார்த்த உடனே பறிக்கத் தூண்டும் வகையில் மலர்களின் ஓவியம் ஒன்று இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியைத் தங்களுக்குத் தோன்றியபடி ஓவியத்தில் வெளிப்படுத்தி இருந்தனர். ஓர் ஓவியத்தில் ஒரு மலைமேல் இருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியின் படம் வரையப்பட்டிருந்தது. அதிலேயே இடியோடு மழை கொட்டிக் கொண்டு இருந்தது. சற்று உற்றுப் பார்த்தால் அருவியின் கீழே இருந்த மரம் ஒன்றில் பறவைக் கூட்டில் பறவை ஒன்று தனது குஞ்சுகளோடு இருந்தது.

“இந்த ஓவியத்தை வரைந்தது யார்?” என்று அரசர் கேட்டார். அந்த ஓவியர் வந்தார். “இந்த ஓவியத்தில் அமைதி எங்கே இருக்கிறது?” என்றார் அரசர். அதற்கு ஓவியர் “மன்னா பிரச்சினையும் போராட்டமும் ஆரவாரமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அன்று. இவை எல்லாம் இருக்கும் இடத்தில் இருந்தும், எதற்கும் கலங்காமலும், தன்னை எதுவும் பாதிக்கவிடாமலும் உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி” என்றார்.

Question 1.
அமைதி என்றவுடன் உங்கள் மனதில் தோன்றுவது என்ன?
Answer:
அமைதி என்றவுடன் என் மனதில் தோன்றுவது “தேவையற்ற பேச்சைத் தவிர்த்து, அவசிய வேலைகளை மட்டும் செய்து பிறரைத் துன்புறுத்தாமல் இருப்பதே அமைதி”. மற்றும் அமைதி என்றால் தியானம் நினைவிற்கு வரும். அன்னை தெரசா நினைவிற்கு வருவார்.

Question 2.
இக்கதையில் அமைதி எங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது?
Answer:
பிரச்சனையும் போராட்டமும் ஆரவாரமும் இருக்கும் இடத்தில் இருந்தும், எதற்கும் கலங்காமலும், தன்னை எதுவும் பாதிக்கவிடாமலும் உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி என்று இக்கதையில் கூறப்படுகிறது.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.4 அணி இலக்கணம்

Question 3.
நீங்கள் இந்த ஓவியப் போட்டியில் பங்கு பெற்று இருந்தால் என்ன ஓவியம் வரைந்து இருப்பீர்கள்?
Answer:
ஓர் அழகான பெரிய கோவில், அங்குள்ள கருவறை, மண்டபம், தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்குப் பொரி வாங்கிப் போடுவது போன்ற காட்சி. இக்காட்சியை ஓவியமாக வரைந்து இருப்பேன்.

Question 4.
இக்கதைக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று தருக.
Answer:
எங்கே அமைதி?

மொழியோடு விளையாடு

கட்டங்களில் உள்ள சொற்களைக் கொண்டு தொடர்கள் உருவாக்குக.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.4 அணி இலக்கணம் 2
இவை போன்று மூன்று காலங்களையும் காட்டும் சொற்றொடர்களை அமைக்க.
1. நேற்று எங்கள் ஊரில் மழை பெய்தது.
2. இன்று எங்கள் ஊரில் மழை பெய்கிறது.
3. நாளை எங்கள் ஊரில் மழை பெய்யும்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.4 அணி இலக்கணம் 3

1. நேற்று என் பாட்டி பாடம் சொல்லிக்கொடுத்தார்.
2. இன்று என் பாட்டி பாடம் சொல்லிக்கொடுக்கிறார்.
3. நாளை என் பாட்டி பாடம் சொல்லிக்கொடுப்பார்.

கட்டங்களில் மறைந்துள்ள அணிகலன்களின் பெயர்களை எழுதுக

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.4 அணி இலக்கணம் 4

எ.கா. கம்ம ல்
அணிகலன்களின் பெயர்கள் :
1. கம்மல்
2. கடுக்கன்
3. சூளாமணி
4. மோதிரம்
5. சிலம்பு
6. வளையல்

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள்

1. நான் எல்லாரிடமும் அன்பு காட்டுவேன்.
2. உறுப்பு தானத்தின் இன்றியமையாமையை எனக்குத் தெரிந்தவர்களிடம் எடுத்துச் சொல்வேன்.
3. பிறருக்கு என்னால் இயன்ற உதவியைச் செய்வேன்.
4. பிற உயிர்களைத் துன்புறுத்த மாட்டேன்.
5. எப்போதும் மனிதநேயத்துடன் நடந்து கொள்வேன்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.4 அணி இலக்கணம்

கலைச்சொல் அறிவோம்

1. மனிதநேயம் – Humanity
2. கருணை – Mercy
4. நோபல் பரிசு – Nobel Prize
3. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை – Transplantation
5. சரக்குந்து – Lorry

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.3 முடிவில் ஒரு தொடக்கம்

Students can Download 6th Tamil Chapter 9.3 முடிவில் ஒரு தொடக்கம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

   

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 9.3 முடிவில் ஒரு தொடக்கம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.3 முடிவில் ஒரு தொடக்கம்

Question 1.
“முடிவில் ஒரு தொடக்கம்” உங்கள் உள்ளத்தில் ஏற்படுத்திய தாக்கத்தினைப் பகிர்க.
Answer:
ஹிதேந்திரனின் உண்மைக்கதையைப் படித்தபோது என் மனம் வருந்தியது. இக்கதையைத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் கூறி என் மனக்காயத்தைப் போக்கினேன். இதுபோல் எவருக்கும் நேரக்கூடாது என்று இறைவனிடம் வேண்டினேன். உடல் உறுப்பு தானம் அளிப்பதனைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.

Question 2.
முதலுதவி பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவற்றுள் சிலவற்றையேனும் அறிந்து கொள்க.
Answer:
(i) பாம்பு கடித்தல் : பாம்பு கடிக்கப்பட்டவரை சமதரையில் படுக்க வைக்க வேண்டும். கடித்த இடத்தில் துணியைக் கட்டவும் விஷம் உடலில் ஏறாமல் இருக்கும். துணியைச் சுற்றும்போது மேலிருந்து கீழாகச் சுற்ற வேண்டும்.

(ii) மின்சாரம் தாக்கினால் : மின்னோட்டத்தை நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட நபரை மின் தொடர்பிலிருந்து அகற்ற வேண்டும். மின்சாரம் பாய்ந்தவரை அவசரப்பட்டுத் தொடக்கூடாது.

(iii) குழந்தைகளுக்கு அடிப்பட்டால் செய்ய வேண்டியவை : பனிக்கட்டியை அடிப்பட்ட இடத்தில் வைக்க வேண்டும். அடிப்பட்ட இடத்தில் அட்டையை இரு பக்கமும் வைத்துக் கட்ட வேண்டும்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.3 முடிவில் ஒரு தொடக்கம்

சிந்தனை வினா

Question 3.
ஹிதேந்திரனின் உண்மைக் கதையைப் படித்தபின் நீங்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழி யாது?
Answer:
ஹிதேந்திரனின் உண்மைக் கதையைப் படித்தபின் நான் எடுத்துக்கொண்ட உறுதிமொழி என் இறப்புக்குப் பின் என்னுடைய உடல் உறுப்புகள் பிறருக்கு உதவும்படி செய்வதற்கு முறைப்படி என்ன செய்யவேண்டுமோ அவற்றைச் செய்வேன். என் நண்பர் உறவினர்களிடம் உடல் உறுப்பு தானம் செய்வது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.

மதிப்பீடு

சிறுவினா

Question 1.
“முடிவில் ஒரு தொடக்கம்” என்ற தலைப்பின் காரணம் குறித்துக் கூறுக.
Answer:
‘முடிவில் ஒரு தொடக்கம்’ என்ற தலைப்பின் காரணம் :
(i) உலகில் தோன்றுகின்ற எல்லாவற்றிற்கும் மறைவு என்பது உண்டு. தாவரங்கள்கூட தன் அழிவினால் நமக்கு நன்மையைத் தருகின்ற மரங்களை வெட்டுகிறோம். அதன் வேர் முதல் நுனி வரை நாம் பயன்படுத்துகிறோம்.

(ii) ஆனால் மனிதர்கள் இறந்தால் எதற்கும் பயன்படுவதில்லை . இதற்கு மாறாக இப்பாடத்தில் ஹிதேந்திரனின் இறப்பு ஒரு சிறுமியின் வாழ்வைக் காப்பாற்றியுள்ளது.

(iii) ஹிதேந்திரனின் இறப்பு ஒரு முடிவாகும். அச்சிறுமிக்கு ஹிதேந்திரனின் இதயத்தைப் பொருந்தியதால் அந்த இதயம் உயிர்பெற்று தன் இயக்கத்தைத் தொடங்குகிறது.

(iv) ஹிதேந்திரனின் உடலில் நின்றுபோன இதயத்தின் செயல்பாடு அச்சிறுமியின் உடலில் தொடங்கிற்று. எனவே முடிவில் ஒரு தொடக்கம் என்ற தலைப்பு சரியாகப் பொருந்துகிறது.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.3 முடிவில் ஒரு தொடக்கம்

Question 2.
இக்கதைக்குப் பொருத்தமாக மற்றொரு தலைப்பு இடுக.
Answer:
தொடரும் இயக்கம்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.2 மனிதநேயம்

Students can Download 6th Tamil Chapter 9.2 மனிதநேயம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

   

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 9.2 மனிதநேயம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.2 மனிதநேயம்

Question 1.
நாளிதழ்களில் வந்துள்ள மனிதநேயம் பற்றிய செய்திகளைச் சேகரித்துக் கூறுக.
Answer:
‘கஜா’ புயல் பாதித்த மக்களுக்கு ஜெகத்ரட்சகனின் ரேலா மருத்துவமனை உதவி டாக்டர்கள் மூலம் மருந்து வினியோகம், சென்னை , நவ.-26-2018.

முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகனின் டாக்டர் ரேலா மருத்துவமனை தேசிய கல்லீரல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பாலாஜி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 25பேர் கொண்ட மருத்துவக்குழு ‘கஜா’ புயல் நிவாரண மருத்துவச் சேவைக்காக கடந்த 22ந்தேதி சென்னையில் இருந்து நாகை மாவட்டம் சென்றனர். 23-ந்தேதி தலைஞாயிறு, புஷ்பவனம் மற்றும் வெள்ளைப்பாளையம் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 700 பேருக்குச் சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு உள்ளது.

24-ந்தேதி தீவுக் கிராமமான வண்டல் கிராமத்துக்குப் படகு மூலம் சென்று 600 பேருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டு உள்ளது. 25-ந்தேதி அரவேற்காடு பகுதிகளில் நடந்த மருத்துவ முகாமில் சுமார் 450 பேர் சிகிச்சைப் பெற்றுள்ளனர்.

மேற்கண்ட தகவல் டாக்டர் ரேலா மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதநேயத்தோடு செய்த இச்சேவையை அங்குள்ள மக்கள் பாராட்டினர்.

பட்டுக்கோட்டை அருகே மூதாட்டியின் உயிரைக் காப்பாற்றிய வாலிபர்கள், பட்டுக்கோட்டை, நவ.-1-2018.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை காசாங்குளம் மேல்கரை காசி விசுவநாதர் கோவில் முன்பு கடந்த பல நாட்களாக சின்னப்பொண்ணு வயது 65) என்ற மூதாட்டி பிச்சை எடுத்து வந்தார். நேற்று முன்தினம் அந்த மூதாட்டி தனது கை, கால்கள் கழுவுவதற்காக அங்குள்ள கோவில் குளத்தில் இறங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர், குளத்திற்குள் தவறி விழுந்தார். இதைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கரையில் போட்டனர்.

அப்போது அங்கு வந்த பட்டுக்கோட்டை அண்ணாநகரைச் சேர்ந்த விக்னேஷ்(23) ஹானஸ்ட்ராஜ்(26) ஆகிய இருவரும் அந்த மூதாட்டியை மீட்டு, மோட்டார் சைக்கிளில் ஏற்றி சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். உரிய நேரத்தில் சிகிச்சைக்கு கொண்டு சென்றால் அந்த மூதாட்டி உயிர் பிழைத்தார். இதற்குக் காரணமான வாலிபர்களைப் பொதுமக்கள் பாராட்டினர்.

Question 2.
எவரேனும் ஒருவருக்கு நீங்கள் உதவி செய்த அனுபவத்தைக் கூறுக.
Answer:
அப்பா என்னிடம் பிறந்த நாள் பரிசாக என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு நான் “அன்னை ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று அங்கு உள்ளவர்களுக்கு ஒருநாள் உணவுக்கு பணம் கொடுக்கலாம். அதுமட்டும் இல்லாமல் அவர்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டால் அங்கே இருக்கிறவங்களுக்கு ஆறுதலாக இருக்கும்” என்றேன். அப்பாவும் சரி என்று சம்மதித்தார். நாங்களும் அவ்வில்லத்திற்குச் சென்று உதவிகளைச் செய்தோம். இந்நிகழ்வு என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக உள்ளது.

Question 3.
ஒற்றுமையாக வாழும் பண்பே சிறந்தது என்பது பற்றி நண்பர்களுடன் கலந்துரையாடுக.
Answer:
எழில் : ஜெயஸ்ரீ. வணக்கம், நலமாக இருக்கிறாயா?
ஜெயஸ்ரீ : நான் நலம், நீ எப்படி இருக்கிறாய்?
எழில் : நானும் நலமாகவே இருக்கிறேன்.
ஜெயஸ்ரீ : நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ என்ன செய்ய வேண்டும்?
எழில் : பண்பாக இருக்க வேண்டும்.
ஜெயஸ்ரீ : எப்படி?
எழில் : எல்லோரையும் மதிக்க வேண்டும். யாரையும் குறை கூறக்கூடாது. மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
ஜெயஸ்ரீ : அப்புறம்!
எழில் : ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க வேண்டும்.
ஜெயஸ்ரீ : அதுமட்டுமல்ல எழில், ஒருவருக்கொருவர் அன்பு, பாசம் காட்ட வேண்டும்.
எழில் : ஆமாம்! சரியாகச் சொன்னாய்.
ஜெயஸ்ரீ : பண்பை வெளிப்படுத்தினால் நாம் எப்போதும் ஒற்றுமையாக வாழலாம்.
எழில் : ஒற்றுமையாக வாழ்வோம் வா!

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல்
அ) மனித வாழ்க்கை
ஆ) மனித உரிமை
இ) மனித நேயம்
ஈ) மனித உடைமை
Answer:
இ) மனித நேயம்

Question 2.
தம் பொருளைக் கவர்ந்தவரிடமும் …………….. காட்டியவர் வள்ளலார்.
அ) கோபம்
ஆ) வெறுப்பு
இ) கவலை
ஈ) அன்பு
Answer:
ஈ) அன்பு

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.2 மனிதநேயம்

Question 3.
அன்னை தெரசாவிற்கு ………….. க்கான நோபல் பரிசு’ கிடைத்தது
அ) பொருளாதாரம்
ஆ) இயற்பியல்
இ) மருத்துவம்
ஈ) அமைதி
Answer:
ஈ) அமைதி

Question 4.
கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம்
அ) குழந்தைகளைப் பாதுகாப்போம்
ஆ) குழந்தைகளை நேசிப்போம்
இ) குழந்தைகளை வளர்ப்போம்
ஈ) குழந்தைகள் உதவி மையம்
Answer:
அ) குழந்தைகளைப் பாதுகாப்போம்

பொருத்துக

1. வள்ளலார் – நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்
2. கைலாஷ் சத்யார்த்தி – பசிப்பிணி போக்கியவர்
3. அன்னை தெரசா – குழந்தைகள் உரிமைக்குப் பாடுபட்டவர்
Answer:
1. வள்ளலார் – பசிப்பிணி போக்கியவர்
2. கைலாஷ் சத்யார்த்தி – குழந்தைகள் உரிமைக்குப் பாடுபட்டவர்
3. அன்னை தெரசா – நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்

சொற்றொடரில் அமைத்து எழுதுக

1. மனிதநேயம் – காந்தியடிகள், மனிதநேயமே சிறந்தது என்று கூறியுள்ளார்.
2. உரிமை – நாட்டு மக்கள் தங்கள் வாழ்க்கையை உரிமையுடனும் மகிழ்வுடனும் வாழ வேண்டும்.
3. அமைதி – அமைதியான சூழலில்தான் நம் சிந்தனை புத்துணர்ச்சி பெறும்.
4. அன்புசெய்தல் – அனைத்து உயிர்களிடத்திலும் நாம் அன்பு செய்தல் வேண்டும்.

குறுவினா

Question 1.
யாரால் உலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது?
Answer:
மனிதநேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

Question 2.
வள்ளலார் பசிப்பிணியை நீக்க என்ன செய்தார்?
Answer:
வள்ளலார் மக்களின் பசிப்பிணியை நீக்க தம் பெருமுயற்சியால் வடலூரில் சத்திய தருமச்சாலையைத் தொடங்கி எல்லாருக்கும் உணவளித்தார். இவரின் மனிதநேயச் செயல் வடலூரில் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Question 3.
அன்னை தெரசா கண்ணீர் விடக் காரணம் யாது?
Answer:
(i) சாலையோரத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவரை அன்னை தெரசா பார்த்தார். தன் முகத்தைத் துணியால் மூடியபடியும், ஒரு கையில் பூனைக் குட்டியையும் வைத்திருந்தாள். அம்மூதாட்டியின் கைகளில் விரல்கள் இல்லை.

(ii) மனம் கலங்கியவராய் அம்மூதாட்டியைத் தொட்டுத் தூக்கினார். “சாலை ஓரத்தில் படுத்திருப்பது ஏன்?” எனக் கேட்டார்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.2 மனிதநேயம்

(iii) “என்னைத் தொடாதீர்கள், என் நோய் உங்களுக்கும் தொற்றிக்கொள்ளும். என் உறவினர்களே என்னை வெறுத்து விலக்கிவிட்டனர். என்னுடன் பேசுவதில்லை. என்னைக் கண்டாலே விலகி ஓடுகின்றனர். இந்தப் பூனை மட்டுமே என்னுடன் இருக்கிறது” என அழுதார் மூதாட்டி. இதைக்கேட்ட அன்னை தெரசா கண்ணீர் விட்டார்.

சிறுவினா

Question 1.
கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெறத் தூண்டுகோலாக அமைந்த இளமைக்கால நிகழ்வு யாது?
Answer:
கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெறத் தூண்டுகோலாக அமைந்த இளமைக் கால நிகழ்வு:
(i) இவர் சிறுவயதில் தினமும் பள்ளிக்கூடம் செல்லும்பொழுது சாலையோரத்தில் ஒரு சிறுவனைக் காண்பார். அவன் தன் தந்தையுடன் அமர்ந்து வேலை செய்து கொண்டு இருப்பான். ஏன் அந்தச் சிறுவன் தன்னைப் போல் பள்ளிக்கு வரவில்லை என்ற கேள்வி அவர் உள்ளத்தில் உறுத்திக்கொண்டே இருந்தது.

(ii) தன் ஆசிரியரிடமும் பெற்றோரிடமும் இக்கேள்வியைக் கேட்டார். “பணம் இல்லாததால் அச்சிறுவன் பள்ளிக்கு வரவில்லை. வீட்டின் உணவுத் தேவையை நிறைவு செய்யப் பணம் வேண்டும். எனவே அவன் பணம் ஈட்ட வேலை பார்க்கிறான்.” என்ற பதில் கிடைத்தது. அந்தப் பதில் அவருக்கு மிகுந்த மன வருத்தத்தைக் கொடுத்தது.

(iii) அவருடைய மனிதநேயம் பிற்காலத்தில் அவரைப் பள்ளி செல்லாத குழந்தைகள் மேல் பரிவு கொள்ள வைத்தது. இந்த இளமைக்கால நிகழ்வு கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெறத் தூண்டுகோலாக அமைந்தது.

சிந்தனை வினா

Question 1.
அன்னை தெரசாவின் மனிதநேயம் பற்றிய வேறு ஒரு நிகழ்வினை அறிந்து எழுதுக.
Answer:
அன்னை தெரசாவின் மனிதநேயம் பற்றி வேறு ஒரு நிகழ்வு :
ஒருநாள் அன்னை தெரசா வீட்டின் வாசற்படியில் நோயால் ஒரு பெண் மயங்கிக் கிடந்தாள். அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும், கால தாமதத்தால் அந்தப் பெண் இறக்க நேரிட்டாள். இந்தக் கோர சம்பவத்தால் அன்னை தெரசா “சிறிய அளவில் மருத்துவமனை” ஆரம்பிப்பது என முடிவு செய்தார்.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. இல்லாதவர்க்குக் கொடுத்து மகிழ்வதே ……………….
2. பசி என்று வந்தவர்க்கு …………………. உணவிட வேண்டும்.
3. தீமை செய்தவர்க்கும் …………….. செய்ய வேண்டும்.
4. ஆதரவற்றவர்களை அன்புடன் ……………….. வேண்டும்.
5. ‘தமக்கென முயலா நோன்றாள்’ – இவ்வரிகள் இடம் பெற்ற நூல் ………………
6. “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பாடியவர் ………………
7. “வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல” என்று கூறியவர் …………………
8. “உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள். உலகம் அழகானது” எனக் கூறியவர் ………………….
9. குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமைக்காக நாடு கடந்து பரப்புரை ஆற்றியவர் ………………….
10. வள்ளலார் சத்திய தருமச்சாலையைத் தொடங்கிய இடம் …………………
11. அன்பு இருக்கும் இடத்தில் ………………… இருக்கும்.
Answer:
1. ஈகை
2. வயிறார
3. நன்மை
4. அரவணைக்க
5. புறநானூற
6. வள்ளலார்
7. அன்னை தெரசா
8. கைலாஷ் சத்யார்த்தி
9. கைலாஷ் சத்யார்த்தி
10. வடலூர்
11. மனிதநேயம்

வினாக்கள் :

Question 1.
மனிதநேயம் என்றால் என்ன?
Answer:
மனிதன் தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ வேண்டும். அவ்வாறு வாழ்வதற்கு அருள், பொறுமை, பரிவு, நன்றி உணர்வு, இன்சொல் பேசுதல் போன்றவை தேவை. எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துதல் வேண்டும். அதுவே மனிதநேயம் ஆகும்.

Question 2.
மனிதநேயம் பற்றிக் கூறும் புறநானூற்று வரிகளை எழுதுக.
Answer:
“தமக்கென முயலா நோன்றாள் – பிறர்க்கென
முயலுநர் உண்மையானே”
இப்புறநானூற்று வரிகள் உணர்த்தும் பொருள் : மனித நேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழ் எண்கள் அறிவோம் :

(மேற்கண்ட சொற்களை நன்றாகப் படித்து எழுத்துக்களை நினைவில் வைக்க)

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.2 மனிதநேயம் 1

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.2 மனிதநேயம்

“வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” – வள்ளலார்

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை. – அன்னை தெரசா

குழந்தைகளைத் தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம். உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள். உலகம் அழகானது. – கைலாஷ் சத்யார்த்தி

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.1 ஆசிய ஜோதி

Students can Download 6th Tamil Chapter 9.1 ஆசிய ஜோதி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

   

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 9.1 ஆசிய ஜோதி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.1 ஆசிய ஜோதி

Question 1.
நீங்கள் மிகவும் விரும்பும் தாவரங்கள், பறவைகள், விலங்குகளின் பெயர்களைப் பட்டியலிடுக.
Answer:
(i) விரும்பும் தாவரங்கள் : மல்லிகைக் கொடி, ரோசாச் செடி, மருதாணி, முருங்கை மரம், வாழை மரம், தென்னை மரம், ஆலமரம், தூதுவளை, பிரண்டை .

(ii) விரும்பும் பறவைகள் : காகம், சிட்டுக்குருவி, குயில், குருவி, தேன்சிட்டு, புறா, காடை, தூக்கணாங்குருவி, மரங்கொத்திப் பறவை, கொக்கு, நாரை

(iii) விரும்பும் விலங்குகள் : நாய், பூனை, பசு, ஆடு, யானை, குதிரை, காளை மாடு, புள்ளிமான், முயல்.

Question 2.
உங்களைப்போல் பிறரையும் நேசியுங்கள் – என்னும் தலைப்பில் பேசுக.
Answer:
‘தன்னைப் போல் பிறரை நினை’ என்பது எவ்வளவு கருத்தாழம் பொருந்தியது? 9 இத்தொடர் கூறுவதை அனைவரும் பின்பற்றி வாழ்ந்தோமேயானால் நாடு நலம் பெறும். நாம் மற்றவரிடம் எதை எதிர்பார்க்கிறோமோ அவ்வாறு மற்றவர்களிடம் நாம் நடந்து கொள்ள வேண்டும்.

இன்னா செய்தார்க்கும் இனியவற்றையே செய்ய வேண்டும் என்பது வள்ளுவம். ‘பகைவனுக்கருள்வாய் என் நெஞ்சே’ என்கிறார் பாரதிதாசன். ‘உன்னை வருந்தியவரையும் a நேசி’ என்று இயேசு கிறித்து கூறியுள்ளார். இவற்றையெல்லாம் நம் மனதில் நிறுத்தி , அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டும். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியவர் . வள்ளலார். அதனாலன்றோ அவர் சத்திய தருமச் சாலையை ஏற்படுத்தினார்.

ஒரு சிறுகதையைப் பார்க்கலாம். கடுமையான கோடைக்காலத்தில் ஒரு குரு மரத்தடியில் உறங்கிக் கொண்டிருந்தார். உடனிருந்த சீடன் குருவிற்கு விசிறிவிட்டான். குருவும் நன்றாக உறங்கினார். சீடன் சிறிது நேரத்திற்குப் பிறகு களைத்துப் போனான். அப்படியே அவனும் உறங்கி விட்டான். குரு விழித்தெழுந்தபோது சீடனுக்கு வியர்த்திருந்ததைப் பார்த்தார். அவர் சீடனுக்கு விசிறினார். குளிர்ந்த காற்று பட்டதும் சீடன் சட்டென்று எழுந்து பார்த்தான். குரு தனக்கு விசிறி விடுவதைப் பார்த்துப் பதற்றமுற்றான்.

“குருவே என்ன செயல் செய்கிறீர்கள்? நீங்கள் எனக்கு விசிறி விடுவதா?” என்று கேட்டான். “அமைதியாய் இரு; பதற்றப்படாதே! நீயும் என்னைப் போல் ஓர் உயிர்தான். எனக்கு வியர்த்தபோது நீ விசிறினாய், உனக்கு வியர்த்தபோது நான் விசிறினேன். இதில் எவ்வித மரியாதைக் குறையும் இல்லை” என்று பொறுமையுடனும் அடக்கத்துடனும் கூறினார். தன்னைப்போல் பிறரை நேசிப்பதனைப் பற்றி சீடன் உணர்ந்தான்.

பிறர் நம்மை மதிக்க வேண்டும். அன்பு செலுத்த வேண்டும் என்று நினைப்பது நம் அனைவரின் விருப்பம். பிறரிடம் நாம் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். பிறரை நேசிப்போம், அன்பால் இணைவோம்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல்
அ) ஜீவ ஜோதி
ஆ) ஆசிய ஜோதி
இ) நவ ஜோதி
ஈ) ஜீவன் ஜோதி
Answer:
ஆ) ஆசிய ஜோதி

Question 2.
நேர்மையான வாழ்வை வாழ்பவர்
அ) எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர்
ஆ) உயிர்களைத் துன்புறுத்துபவர்
இ) தம்மை மட்டும் காத்துக்கொள்பவர்
ஈ) தம் குடும்பத்தையே எண்ணி வாழ்பவர்
Answer:
அ) எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர்

Question 3.
ஒருவர் செய்யக் கூடாதது
அ) நல்வினை
ஆ) தீவினை
இ) பிறவினை
ஈ) தன்வினை
Answer:
ஆ) தீவினை

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.1 ஆசிய ஜோதி

Question 4.
எளிதாகும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) எளிது + தாகும்
ஆ) எளி + தாகும்
இ) எளிது + ஆகும்
ஈ) எளிதா + ஆகும்
Answer:
இ) எளிது + ஆகும்

Question 5.
பாலையெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பாலை + யெல்லாம்
ஆ) பாலை + எல்லாம்
இ) பாலை + எலாம்
ஈ) பா + எல்லாம்
Answer:
ஆ) பாலை + எல்லாம்

Question 6.
இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) இன்உயிர்
ஆ) இனிய உயிர்
இ) இன்னுயிர்
ஈ) இனிமைஉயிர்
Answer:
இ) இன்னுயிர்

Question 7.
மலை+எலாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) மலை எலாம்
ஆ) மலையெலாம்
இ) மலையெல்லாம்
ஈ) மலை எல்லாம்
Answer:
ஆ) மலையெலாம்

குறுவினா

Question 1.
அரசனாலும் செய்ய முடியாத செயல் எது?
Answer:
அரசனாலும் செய்ய முடியாத செயல் :
இறந்த உடலுக்கு உயிர் கொடுத்து எழுப்புவது அரசனாலும் செய்ய முடியாத செயல்.

Question 2.
எறும்பு எதற்காகப் பாடுபடுகிறது?
Answer:
எறும்பு தன் உயிரைக் காத்துக் கொள்ளப் பாடுபடுகிறது. .

Question 3.
ஒருநாளும் விட்டுச் செல்லாதது எது?
Answer:
ஒருவர் செய்த நன்மையும் தீமையும் ஒருநாளும் அவரை விட்டுச் செல்லாது.

Question 4.
உலகம் முழுமையையும் எப்போது ஆளமுடியும்?
Answer:
நேர்மையான, இரக்க மனம் கொண்டிருக்கும் ஒருவராலேயே இந்தப் பரந்த உலகத்தை ஆள முடியும்.

சிறுவினா

Question 1.
எல்லா உயிர்களும் மகிழ்வோடு வாழப் புத்தர்பிரான் கூறும் அறிவுரைகள் யாவை?
Answer:
எல்லா உயிர்களும் மகிழ்வோடு வாழப் புத்தர்பிரான் கூறும் அறிவுரைகள் :
(i) தீய செயல்களைச் செய்யாதீர்கள். பிற உயிர்களைக் கொல்லும் செயலைச் செய்யாதீர்கள்.

(ii) இந்தப் பூமியை மகிழ்ச்சியற்றதாக மாற்றிடும் எண்ணத்தை உங்களைவிட்டு நீக்குங்கள். இங்கு மக்களோடு சேர்ந்து மற்ற உயிர்களும் மகிழ்வோடு வாழ வழி
செய்யுங்கள்.

சிந்தனை வினா

Question 1.
பறவைகளும், விலங்குகளும் சுதந்திரமாக வாழ வேண்டும் எனில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
Answer:
பறவைகளும் விலங்குகளும் சுதந்திரமாக வாழ நாம் செய்ய வேண்டுவன : சுற்றுச்சூழல் என்பது இயற்கையாக அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்று. இது பறவை, தாவரம், விலங்கு மட்டுமின்றி மனிதனையும் சார்ந்ததாகும். பறவைகள், விலங்குகள் மனித வாழ்க்கையோடு ஒன்றியது. ஒன்றையொன்று சார்ந்து இருப்பவை. அப்படிப்பட்ட பறவைகள், விலங்குகள் வாழ நாம் வழி வகை செய்ய வேண்டும்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.1 ஆசிய ஜோதி

(i) இவற்றின் வாழ்விடங்களான காடுகளை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும். சனில்

(ii) பறவைகளைப் பிடித்துக் கூண்டுக்குள் அடைக்காமல் அவற்றைச் சிறகடித்து வானில் பறக்கவிட வேண்டும்.

(iii) பறவை, விலங்குகளை வேட்டையாடக் கூடாது.

(iv) விலையுயர்ந்த பட்டுப்புடவைக்காகப் பல பட்டுப் புழுக்களை அழிக்கிறோம். அவற்றைச் செய்யக் கூடாது.

(v) வீட்டு விலங்குகளிடம் அன்பாகப் பழக வேண்டும்.

(vi) சிறு தெய்வங்களுக்குக் காவு கொடுப்பதற்காக ஆடு, கோழி, சேவல் போன்றவை அழிக்கப்படுகிறது. அதனைத் தடுக்க வேண்டும்.

(vii) வண்டி இழுக்கப் பயன்படுத்தும் குதிரை, காளைமாடு ஆகியவற்றிற்குச் சரியான தீவனங்கள், நீர் போன்ற உணவுப் பொருட்களைக் கொடுக்க வேண்டும்.

(viii) பறவைகளைப் பாதுகாக்க மொட்டை மாடிகளில் நீர் வைத்தல், தானியங்களைப் போட்டு வைத்தல், போன்றவற்றைச் செய்யலாம்.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :
1. தலைசிறந்த பண்புகளுள் ஒன்று ………………………..
2. உலக உயிர்கள் இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பியவர்களுள் ஒருவர் ……………..
3. அரச வாழ்வைத் துறந்து நள்ளிரவில் அரண்மனையை விட்டு வந்தவர் …………………….
4. ………….. மன்னனின் யாகத்துக்காக ஆடுகள் கொண்டு செல்லப்பட்டன.
5. வலியால் துடித்த ஆட்டுக்குட்டியைத் தோளில் சுமந்து சென்றவர் ……………
6. புத்தர் நாடெங்கும் …………….. தடுத்து நிறுத்தினார்.
7. தேசிக விநாயகனார் பெற்ற பட்டம் ……………………
8. ‘லைட் ஆஃப் ஆசியா’ என்னும் நூலை ஆங்கில மொழியில் எழுதியவர் …………….
9. ஆசிய ஜோதி ………………..’ என்னும் ஆங்கில மொழி நூலைத் தழுவி எழுதப்பட்டது.
10. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் ……………….
11. ‘லைட் ஆஃப் ஆசியா’ என்னும் ஆங்கில மொழி நூலைத் தமிழில் எழுதியவர் ……………………
Answer:
1. இரக்கம்
2. புத்தர்
3. புத்தர் பிரான்
4. பிம்பிசாரர்
5. புத்தர்
6. உயிர்க்கொலையைத்
7. கவிமணி
8. எட்வின் அர்னால்டு
9. லைட் ஆஃப் ஆசியா
10. ஆசிய ஜோதி
11. கவிமணி தேசிக விநாயகனார்

விடையளி :

Question 1.
நேர்மையான வாழ்வு பற்றி புத்தர் கூறிய உரை யாது?
Answer:
எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் கொள்பவரே நேர்மையான வாழ்வு வாழ்பவர். இந்த மறைபொருளை அறியாதவர் பிற உயிர்களை வருத்தித் தாமும் துன்புறுவர்.

Question 2.
“தீயசெயல் என்று கருதுகிறீர்களா?” என்று புத்தர் வினவும் செயல் யாது?
Answer:
“ஆடு காடு, மலை எல்லாம் மேய்ந்து வருகிறது. அது தன் குட்டி வருந்திடும் வகையில் பாலை அவற்றிற்குக் கொடுப்பதை விடுத்து மக்களுக்குத் தருகிறது. இச்செயல் தீயசெயல் என்று கருதுகிறீர்களா?” என்று புத்தர் வினவுகிறார்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.1 ஆசிய ஜோதி

நூல் வெளி
தேசிக விநாயகனார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர். முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். கவிமணி என்னும் பட்டம் பெற்றவர்.

ஆசிய ஜோதி, ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது. இந்நூல் புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.6 திருக்குறள்

Students can Download 6th Tamil Chapter 8.6 திருக்குறள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

   

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 8.6 திருக்குறள்

மதிப்பீடு

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.6 திருக்குறள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
ஏழைகளுக்கு உதவி செய்வதே ………………… ஆகும்.
அ) பகை
ஆ). ஈகை
இ) வறுமை
ஈ) கொடுமை
Answer:
ஆ) ஈகை

Question 2.
பிற உயிர்களின் …………….. க் கண்டு வருந்துவதே அறிவின் பயனாகும்.
அ) மகிழ்வை
ஆ) செல்வத்தை
இ) துன்பத்தை
ஈ) பகையை
Answer:
இ) துன்பத்தை

Question 3.
உள்ளத்தில் …………….. இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்.
அ) மகிழ்ச்சி
ஆ) மன்னிப்பு
இ) துணிவு
ஈ) குற்றம்
Answer:
ஈ) குற்றம்

இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக

Question 1.
வறியார்க்கொன்று ஈகைமற்று ஈவதே எல்லாம்
குறியெதிர்ப்பை உடைத்து நீரது.
Answer:
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.6 திருக்குறள்

Question 2.
எனைத்தானும் யார்க்கும் எஞ்ஞான்றும் மனத்தானாம்
மாணாசெய் தலை யாமை.
Answer:
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.

குறுவினா

Question 1.
அறிவின் பயன் யாது?
Answer:
பிற உயிரின் துன்பத்தைத் தமது துன்பம் போல் கருதுவதே அறிவின் பயன் ஆகும்.

Question 2.
பிற உயிர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும்?
Answer:
தம்மிடம் இருப்பவற்றைப் பிற உயிர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துக் காப்பாற்ற வேண்டும்.

Question 3.
ஈகை பற்றிய வள்ளுவரின் கருத்து யாது?
Answer:
இல்லாதவர்க்குத் தருவதே ஈகை ஆகும். மற்றவை எல்லாம் பயனை எதிர்பார்த்துச் செய்பவை அகும்.

பின்வரும் நிகழ்வைப் படித்து அதற்குப் பொருத்தமான திருக்குறள் எதுவெனக் காண்க

நிறைமதி அவளுடைய தோழிகளுடன் பூங்காவிற்குச் சென்றாள். அங்குள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தாள். நண்பகல் நேரத்தில் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து தான் கொண்டு வந்திருந்த உணவைத் தோழிகளுடன் பகிர்ந்து உண்டாள். அவர்களின் அருகே பறவைகள் பறந்து வந்தன. தன்னிடம் இருந்த உணவைப் பறவைகளுக்கும் அளித்தாள்.

1. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

2. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.

3. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.6 திருக்குறள்
Answer:
3. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

கலைச்சொல் அறிவோம்

1. அறக்கட்டளை – Trust
2. தன்னார்வலர் – Volunteer
3. இளம் செஞ்சிலுவைச் சங்கம் – Junior Red Cross
4. சாரண சாரணியர் – Scouts & Guides
5. சமூக சேவகர் – Social Worker

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.5 பெயர்ச்சொல்

Students can Download 6th Tamil Chapter 8.5 பெயர்ச்சொல் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

   

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 8.5 பெயர்ச்சொல்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.5 பெயர்ச்சொல்

Question 1.
கீழ்க்காணும் பத்தியைப் படித்து அதில் இடம் பெற்றுள்ள இடுகுறி, காரணப் பெயர்களை அறிந்து எழுதுக.
நீர் வற்றிப்போன குளத்தில் செந்தாமரை, ஆம்பல், கொட்டி, நெய்தல் முதலான கொடிகளும் வாடியிருந்தன. நீர் நிரம்பி இருந்தவரை ஊர் மக்களும், விலங்குகளும் மரங்கொத்தி போன்ற பறவைகளும் பயன்படுத்தி மகிழ்ந்த குளம் அது. காலை நேரம் சூரியன் காய்ந்து கொண்டிருந்தது. இப்போது அக்குளத்தைக் கண்டு கொள்வார் யாருமில்லை
Answer:
இடுகுறிப் பெயர் :
(i) குளம்
(ii) ஆம்ப ல்
(iii) கொட்டி
(iv) நெய்தல்
(v) சூரியன்

காரணப் பெயர் :
(i) மரங்கொத்தி
(ii) செந்தாமரை

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
இடுகுறிப்பெயரை வட்டமிடுக.
அ) பறவை
ஆ) மண்
இ) முக்காலி
ஈ) மரங்கொத்தி
Answer:
ஆ) மண்

Question 2.
காரணப்பெயரை வட்டமிடுக.
அ) மரம்
ஆ) வளையல்
இ) சுவர்
ஈ) யானை
Answer:
ஆ) வளையல்

Question 3.
இடுகுறிச்சிறப்புப் பெயரை வட்டமிடுக.
அ) வயல்
ஆ) வாழை
இ) மீன்கொத்தி
ஈ) பறவை
Answer:
ஆ) வாழை

குறுவினா

Question 1.
பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
Answer:
பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை
(i) பொருட்பெயர்
(ii) இடப்பெயர்
(iii) காலப்பெயர்
(iv) சினைப்பெயர்
(v) குணப்பெயர்
(vi) தொழிற்பெயர்

Question 2.
இடுகுறிப்பெயர் என்றால் என்ன?
Answer:
நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதாமல் இட்டு வழங்கிய பெயர் இடுகுறிப்பெயர் ஆகும். (எ.கா.) மண், மரம், காற்று.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.5 பெயர்ச்சொல்

Question 3.
காரணப்பெயர் என்றால் என்ன?
Answer:
நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதி இட்டு வழங்கிய பெயர் காரணப்பெயர் ஆகும். (எ.கா.) நாற்காலி, கரும்பலகை.

சிறுவினா

Question 1.
அறுவகைப் பெயர்ச்சொற்களை எழுதுக.
Answer:
அறுவகைப் பெயர்ச்சொற்கள் :
(i) பொருட்பெயர் – மயில், பறவை
(ii) இடப்பெயர் – தெரு, பூங்கா
(iii) காலப்பெயர் – நாள், ஆண்டு
(iv) சினைப்பெயர் – இலை, கிளை
(v) பண்புப்பெயர் – செம்மை, நன்மை
(vi) தொழிற்பெயர் – ஆடுதல், நடித்தல்.

சிந்தனை வினா

Question 1.
இடுகுறிப்பெயர், காரணப்பெயர் ஆகியவற்றின் பெயர்க்காரணத்தைக் கூறுக.
Answer:
இடுகுறிப்பெயர் – பெயர்க்காரணம் : நம் முன்னோர்கள் எந்தக் காரணமும் கருதாமல் ஒரு பொருளுக்குக் குறியீடாக இட்டு வழங்கியவை இடுகுறிப்பெயர்கள் ஆகும். இவ்வகைப் பெயர்களுக்குக் காரணம் அறிய இயலாது. இடுகுறிப்பெயர் இரண்டு வகைப்படும்.

(i) இடுகுறிப் பொதுப்பெயர் : காரணம் ஏதுமின்றி, பொதுத்தன்மை கருதி ஒரு பொருளுக்கு இட்டு வழங்கப்படுவதால் இடுகுறிப் பொதுப்பெயராயிற்று.
(எ.கா.) மரம், பழம்

(ii) இடுகுறிச் சிறப்புப்பெயர் : காரணம் ஏதுமின்றி, சிறப்புத்தன்மை கருதி ஒரு பொருளுக்கு இட்டு வழங்கப்படுவதால் இடுகுறிச் சிறப்புப் பெயராயிற்று.
(எ.கா.) தென்னை , வாழை

காரணப்பெயர் – பெயர்க்காரணம் : நம் முன்னோர்கள் காரணம் கருதி ஒரு பொருளுக்குப் பெயர் இட்டதனால் காரணப் பெயராயிற்று. இவை ஒரு காரணத்தின் அடிப்படையில் வழங்கிய பெயர்களாக இருக்கும். காரணப் பெயர் இரண்டு வகைப்படும். (எ.கா) நாற்காலி, கரும்பலகை.

(i) காரணப் பொதுப்பெயர் : குறிப்பிட்ட காரணமுடைய எல்லா வகைப் பொருள்களையும் பொதுவாகக் குறிப்பதால் காரணப் பொதுப்பெயர் என்று பெயர் பெறும். (எ.கா.) பறவை, அணி.

(ii) காரணச் சிறப்புப்பெயர் : குறிப்பிட்ட காரணமுடைய எல்லா வகைப் பொருள்களுள் ஒன்றை மட்டும் சிறப்பாகக் குறிப்பதால் காரணச் சிறப்புப் பெயர் என்று பெயர் பெறும். (எ.கா.) வளையல், மரங்கொத்தி.

மொழியை ஆள்வோம்

பேசுக
Question 1.
உங்கள் பகுதிகளில் செயல்படும் தொண்டு நிறுவனங்கள் குறித்துப் பேசுக.
Answer:
அவையோர்க்கு வணக்கம். நான் தொண்டு நிறுவனங்கள் பற்றிப் பேசவிருக்கிறேன்… இந்நிறுவனங்கள் சமூகத்தில் நிலவும் இன்னல்களைத் தீர்ப்பதற்கு ஏற்படுத்தப்பட்டவை ஆகும். மக்களுக்குப் பல வகைகளில் இவை உதவி புரிகின்றன.

முதலில் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் பற்றிக் கூறுகிறேன். இது இந்திய அரசினால் நிறுவப்பட்ட சேவையாகும். இச்சேவை பாலர் கல்வி மற்றும் முதன்மையான சுகாதார பராமரிப்பு போன்றவற்றை ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களுக்கு வழங்குகிறது. இச்சேவை அங்கன்வாடி மையங்கள் மூலம் மிகச் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இச்சேவை 1975 அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. நோய்த்தடுப்பு, கூடுதல் ஊட்டச்சத்து, சுகாதார சோதனை, பரிந்துரை சேவைகள், முன்பள்ளி அல்லாத முறையான கல்வி, ஊட்டச்சத்து மற்றும் சுகாதார தகவல் ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன.

இதுபோன்று தனியார் சேவை நிறுவனங்களும் உள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கான சுயதொழில் தொடங்குவதற்கு உதவி செய்கின்றன. மூக்குக் கண்ணாடி வழங்குதல், பெண்களுக்கான சுயதொழில் உதவி, கல்விக்கான உதவி, நலிவுற்றோருக்கான தற்செயல் நிவாரணம் அளித்தல் போன்ற சேவைகளை வழங்குகின்றன. ஒரு சில தொண்டு நிறுவனங்கள் இலவச மருத்துவ முகாம், இலவச கண் பரிசோதனை இரத்ததான முகாம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி ஏழை எளியோருக்கு உதவுகின்றன.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.5 பெயர்ச்சொல்

எங்கள் பகுதியில் உள்ள சமூக நிறுவனம் மரம் நடுவிழா, நிழற்குடை அமைப்பு, போன்றவற்றைச் செவ்வனே செய்து வருகின்றன. உடல் உறுப்பு தானம் செய்வது பற்றி விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்துகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பல நன்மை தரும் அறச்செயல்களைச் செய்து இந்நிறுவனங்கள் மக்களுக்கு உதவிகள் புரிகின்றன.

குறிப்புகளைக் கொண்டு கதை எழுதுக

Question 1.
நாய்க்குட்டி – குழிக்குள் – கத்தும் சத்தம் – முகிலன் – முதலுதவி – பால் – தூங்கியது – வாலாட்டியது.
Answer:
குறிப்புகளைக் கொண்டு கதை எழுதுதல் :
முகிலன் ஒருமுறை வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது நாய்க்குட்டி ஒன்று கத்தும் சத்தம் கேட்டது. எங்கிருந்து சத்தம் வருகிறது என்று சுற்றிச் சுற்றிப் பார்த்தான். சாலையோரத்தில் இருந்த குழிக்குள் நாய்க்குட்டி ஒன்று விழுந்து கிடந்தது. மேலே ஏறுவதற்கு இயலாததால் கத்திக் கொண்டிருந்தது. முகிலன் அப்பள்ளத்தில் இறங்கி அந்நாய்க்குட்டியைத் தூக்கினான்.

அதற்கு முதலுதவி செய்தான். அதற்குக் கொஞ்சம் பால் ஊற்றினான். அந்நாய்க்குட்டி பாலைக் குடித்துவிட்டு சோர்வில் தூங்கியது. கொஞ்ச நேரத்தில் கண் விழித்துப் பார்த்தது. முகிலனைப் பார்த்து வாலாட்டியது. இக்கதையின் மூலம் உயிர்களிடத்தும் இரக்கம் காட்ட வேண்டும் என்பதை உணரலாம்.

அகராதியைப் பயன்படுத்தி பொருள் எழுதுக

1. கருணை
2. அச்சம்
3. ஆசை

அகராதி :
1. கருணை – இரக்கம்
2. அச்சம் – பயம்
3. ஆசை – விருப்பம்

கீழ்க்காணும் பெயர்ச் சொற்களை அகரவரிசையில் எழுதுக

Question 1.
பூனை, தையல், தேனி, ஓணான், மான், வௌவால், கிளி, மாணவன், மனிதன், ஆசிரியர், பழம்
Answer:
அகரவரிசை :
1. ஆசிரியர்
2. ஓணான்
3. கிளி
4. தேனி
5. தையல்
6. பழம்
7. பூனை
8. மனிதன்
9. மாணவன்
10. மான்
11. வௌவால்.

பின்வரும் வாக்கியங்களில் உள்ள அறுவகைப் பெயர்களை எடுத்து எழுதுக

Question 1.
கைகள் இரண்டும் பிறர்க்கு உதவவே எனச் சான்றோர் கருதினர்.
Answer:
(i) கைகள் – சினைப்பெயர்
(ii) சான்றோர் – பொருட்பெயர்

Question 2.
அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூலின் பயனாகும்.
Answer:
அடைதல் – தொழிற்பெயர்.

Question 3.
அறிஞர்களுக்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்.
Answer:
அடங்கல் – தொழிற்பெயர்.

Question 4.
நீதிநூல் பயில் என்கிறார் பாரதியார்.
Answer:
நீதிநூல் – பொருட்பெயர்

Question 5.
மாலை முழுதும் விளையாட்டு.
Answer:
மாலை – காலப்பெயர்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.5 பெயர்ச்சொல்

Question 6.
அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்.
Answer:
மேலோர் – பொருட்பெயர்.

பின்வரும் பாடலைப் படித்து, அடிக்கோடிட்ட சொல் எவ்வகைப் பெயர் என்பதை எழுதுக

1. விடியலில் துயில் எழுந்தேன். – விடியல் – காலப்பெயர்
2. இறைவனைக் கை தொழுதேன். – கை – சினைப்பெயர்
3. புகழ்பூத்த மதுரைக்குச் சென்றேன் –  மதுரை – இடப்பெயர்
4. புத்தகம் வாங்கி வந்தேன். – புத்தகம் – பொருட்பெயர்
5. கற்றலைத் தொடர்வோம் இனி. – கற்றல் – தொழிற்பெயர்
6. நன்மைகள் பெருகும் நனி.  – நன்மைகள் – பண்புப்பெயர்

மொழியோடு விளையாடு

கட்டங்களில் உள்ள வார்த்தைகளைக் கொண்டு தொடர்களை அமைக்க.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.5 பெயர்ச்சொல் 1
Answer:
1. தீதும் நன்றும் பிறர்தர வாரா.
2. யாதும் ஊரே யாவரும் கேளிர்.
3. வாய்மையே வெல்லும்.

சொற்றொடரை முறையாக வரிசைப்படுத்துங்கள்

1. சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினாள்.
2. மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள்.
3. சிறைச்சாலைக்குச் சென்று உணவிட்டாள்.
4. அமுதசுரபியைப் பெற்றாள்.
5. ஆதிரையிடம் சென்று முதல் உணவைப் பெற்றாள்.
Answer:
1. மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள்
2. அமுதசுரபியைப் பெற்றாள்.
3. ஆதிரையிடம் சென்று முதல் உணவைப் பெற்றாள்.
4. சிறைச்சாலைக்குச் சென்று உணவிட்டாள்.
5. சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினாள்.

ஒலி வேறுபாடறிந்து வாக்கியத்தில் அமைத்து எழுதுக

1. அரம் – அறம்
அரம் – கூர்மையான கருவி – இரும்பைத் தேய்த்துக் கூர்மையாக்குவதற்கு அரம் பயன்படும்.
அறம் – தர்மம் – பழந்தமிழர்கள் அறச்செயல்களில் சிறந்து விளங்கினர்.

2. மனம் – மணம்
மனம் – உள்ளம் – பிறருக்கு உதவி செய்வதற்கு மனம் வேண்டும்.
மணம் – வாசனை – மல்லிகை மணம் மிக்க மலர்.

இருபொருள் தருக

(எ.கா) ஆறு
ஆறு – நதி
ஆறு – எண்
1. திங்கள்
திங்கள் – கிழமை, மாதம், நிலவு

2. ஓடு
ஓடு – ஓடுதல், வீட்டின் கூரையாகப் பயன்படுவது

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.5 பெயர்ச்சொல்

3. நகை
நகை – அணிகலன், புன்னகை

புதிர்ச் சொல் கண்டுபிடி

Question 1.
இச்சொல் மூன்றெழுத்துச் சொல். உயிர் எழுத்துகள் வரிசையில் முதல் எழுத்து இச்சொல்லின் முதல் எழுத்து. வல்லின மெய் எழுத்துகளின் வரிசையில் கடைசி எழுத்து இச்சொல்லின் இரண்டாம் எழுத்து. வாசனை என்னும் பொருள்தரும் வேறு சொல்லின் கடைசி எழுத்து இச்சொல்லின் மூன்றாம் எழுத்து. அஃது என்ன?
Answer:
அறம்.

கட்டத்தில் உள்ள சொற்களைக் கொண்டு தொடர்கள் உருவாக்குக மாலையில்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.5 பெயர்ச்சொல் 2
Answer:
1. மாலையில் விளையாடுவோம்.
2. பிறருக்கு உதவி புரிவோம்.
3. பெரியோரை வணங்குவோம்.
4. நூல்பல கற்போம்.
5. உடற்பயிற்சி செய்வோம்.
6. அதிகாலையில் எழுவோம்.

செயல் திட்டம்

Question 1.
நீங்கள் சேவை செய்ய விரும்பும் பணிகளைப் பட்டியலிடுக.
Answer:
நாங்கள் சேவை செய்ய விரும்பும் பணிகள் :
(i) இலவசமாகக் கல்வி கற்பித்தல்.
(ii) ஊனமுற்றோர்க்கு உதவுதல்.
(iii) விடுமுறை நாட்களில் வரும் திருவிழா மற்றும் பண்டிகைக் காலங்களில் போக்குவரத்துக் காவலர்களுக்கு உதவுதல்.
(iv) வாரத்திற்கு ஒருமுறை நான் வசிக்கும் தெரு மற்றும் நகரை நண்பர்களுடன் சேர்ந்து சுத்தப்படுத்துதல்.

(v) சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையில் நெகிழிப் பயன்பாடுகளின் மூலம் வரும் தீமைகள் பற்றியும் மரங்களினால் வரும் நன்மைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.

(vi) மக்களின் நலன்கள் மேம்படுவதற்கான செயல்களைச் செய்வேன்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.5 பெயர்ச்சொல்

Question 2.
உயர்ந்த குறிக்கோளை அடைந்து வெற்றி பெற்ற சாதனையாளர்கள் தொகுப்பு ஒன்றைத் தயாரிக்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள்
1. உணவை வீணாக்க மாட்டேன்.
2. நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.
3. பயணம் செய்யும் போது தேவைப்படுவோருக்கு எழுந்து இடம் தருவேன்.
4. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவேன்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.4 பாதம்

Students can Download 6th Tamil Chapter 8.4 பாதம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

   

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 8.4 பாதம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.4 பாதம்

Question 1.
தனக்குப் பெரும் வருமானத்தைத் தந்த காலணியைத் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென மாரி நினைத்தது ஏன்? வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:
மாணவன் 2 : மாரி ஏழ்மையில் வாழும் ஒரு தொழிலாளி. அவரிடம் செல்வம் இல்லையென்றாலும் நேர்மை இருந்தது. அதனால் அவர் அவ்வாறு நினைத்தார்.

மாணவன் 1 : அந்தக் காலணியை வைத்து அவர் பெரும் பணம் சம்பாதித்து உள்ளார். அதேபோல் சம்பாதித்துக் கொண்டு நிம்மதியாக இருந்திருக்கலாமே?

மாணவன் 2 : பிறர் பொருளைத் தான் வைத்திருக்கக்கூடாது என்று எண்ணி, அந்தக் காலணிக்கு உரியவர் சிறுமி எனவும், குழந்தையின் மனம் வருந்தும் எனக்கூட எண்ணியிருக்கலாம்.

மாணவன் 1 : அதுவும் சரிதான். சிறுமி வளர்ந்து விட்டால் அந்தக் காலணி அவளுக்குப் பொருந்தாது. பிறகு அது வீணாகவே இருக்கும் எண்ணி இருப்பார்.

மாணவன் 2 : மாரி மனசாட்சிக்குப் பயந்தும், பிறர் பொருளைத் தாம் வைத்திருக்கக்கூடாது என்றும் அந்தக் காலணியை வைத்துப் பெரும்பொருள் ஈட்டியதாலும் அவருடைய மனம் வருந்தியது. விசித்திரக் காலணியாய் இருந்ததால்தான் அவர் திரும்ப அச்சிறுமியிடம் ஒப்படைக்க எண்ணினார்.

Question 2.
மீண்டும் வந்த பெண்ணுக்குக் காலணி பொருந்தாதது ஏன்?
Answer:
மாரி அந்தக் காலணியின் விசித்திரத் தன்மையை அந்தப் பெண்ணிடம் கூறினார். அவள் அதனைக் கண்டு கொள்ளாமல், ஆச்சரியமின்றித் தலையாட்டி விட்டுச் சென்றாள். அந்தக் காலணியைப் பற்றி அவள் அறிந்திருந்தும் அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டாள். மாரியிடம் இருந்திருந்தால் அவர் இன்னும் பொருள் ஈட்டியிருப்பார். ஓர் ஏழைக்கு உதவிய அந்தக் காலணியை அப்பெண் பெற்றுக் கொண்டதால் அவளுக்கு அந்தக் காலணி பொருந்தவில்லை.

மதிப்பீடு

Question 1.
பாதம் கதையைச் சுருக்கி எழுதுக.
Answer:
முன்னுரை :
மாரி என்பவர் காலணி தைக்கும் ஒரு தொழிலாளி. அவர் பசியால் வாடிக்கொண்டிருந்தார். திடீரென ஒரு விசித்திரக் காலணியின் மூலம் செல்வந்தர் ஆனார். ஆனாலும் அவர் மனம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. அவற்றை விளக்கும் கதையைக் காண்போம்.

வெறிச்சோடிய தெரு :
மாரி என்றைக்கும் போல் தியேட்டர் வாசலில் உட்கார்ந்திருந்தார். விடாமல் காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது. டீ குடிப்பதற்குக் கூட பணம் இல்லை. மழையில் எவரேனும் காலணி தைக்கக் கொடுத்தால் பணம் கிடைக்கும். டீ குடிக்கலாம் என எண்ணினார். தெரு வெறிச்சோடி இருந்தது. அவரும் ஒரு மரமும் எட்டுப் பழைய செருப்புகளும் மட்டும் இருந்தன.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.4 பாதம்

சிறுமியின் காலணி :
தியேட்டரின் வலப்புறச் சந்தில் இருந்து சிறுமியொருத்தி மீனைப்போலச் சுழன்று அவர் அருகில் வந்து ஒரு காலணியைக் கொடுத்துத் தைத்து வைக்கும்படிக் கூறிவிட்டுச் சென்றாள். அந்தக் காலணி இளம் சிவப்பு நிறத்தில் வெல்வெட் தைத்துப் பூ வேலை கொண்டதாய் இருந்தது. அந்தக் காலணியில் ஏதோ பெயரிடப்படாத நறுமணம் வீசியது. காலணியைத் தைத்து முடித்துவிட்டு அச்சிறுமிக்காகக் காந்திருந்தார். இரண்டு ரூபாய் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தார். அச்சிறுமி இரவு வரை வரவேயில்லை. மழை பெய்வதால் வரவில்லை என எண்ணியவராய் அந்தக் காலணியை வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.

மாரியின் ஏமாற்றம் :
அடுத்த நாள் மாரி அந்தக் காலணியைத் துடைத்து, தனது நீலநிற விரிப்பில் வைத்துவிட்டு வேலையைத் தொடங்கினார். அன்றும் அந்தச் சிறுமி வரவில்லை. மறந்துவிட்டாளா? இல்லை யாரிடம் கொடுத்தோம் எனத் தெரியாமல் அலைகிறாளா? என்று எண்ணியபடி அன்றும் அக்காலணியை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். இப்படியே. பல நாட்கள் கழிந்தன.

மாரியின் மனைவி :
மாரியின் மனைவி ஓர் இரவில் அந்தக் காலணியைக் கண்டாள் அதன் வசீகரம் அவளை ஈர்த்தது. அதனைப் போட்டுப் பார்த்தாள். அளவில் சிறியதாக இருந்தாலும் அவளுக்குச் சரியாக இருந்தது. மற்றொரு காலணியைத் தேடிப் பையைக் கொட்டினாள். சப்தம் கேட்டு மாரி வந்து பார்த்தார். மனைவியின் வலக்காலில் இருந்த அந்தக் காலணியைப் பார்த்தார். மனைவியைத் திட்டி விட்டு காலணியை எடுத்துப் பார்த்தார் கிழியவில்லை. சிறுமியின் காலணி மனைவிக்குப் பொருந்தியதை எண்ணி வியந்தார். அவருக்கும் அந்தக் காலணியின் மீது ஆசை ஏற்பட்டதால் தன் வலக்காலை அதனுள் நுழைத்துப் பார்த்தார். அவருக்கும் பொருந்தியது. இது விசித்திரமாய் இருந்தது. அவரால் யோசிக்க முடியவில்லை. உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பையில் போட்டுக் கொண்டார்.

காலணியின் விசித்திரம் :
மறுநாள் மாரி அவருடன் தொழில் செய்பவரிடம் இந்தக் காலணியின் விசித்திரம் பற்றிக் கூறினார் அவரும் போட்டுப் பார்த்தார் பொருத்தமாக இருந்தது. இச்செய்தி நகர் முழுவதும் பரவியது சிறியவர் முதல் முதியவர் வரை அந்தக் காலணி அனைவருக்கும் பொருந்தியது. அதனைக் காலில் அணிந்தால் மேகத்துணுக்குகள் காலடியில் பரவுவது போலவும் பனியின் மிருது படர்வது போலவும் இருப்பதாகப் பலர் கூறினர். கோடைக்காலம் வந்தது அந்தக் காலணியை அணிந்து பார்த்தவர்கள் அவர்களாகவே பணம் கொடுத்தனர். அப்பணத்தில் இரண்டு பசு வாங்கினார். வீடு கட்டினார் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்தார். இந்நிலையிலும் அச்சிறுமியை அவர் தேடிக் கொண்டேதான் இருந்தார்.

முப்பது வருடப் பயணம் :
மாரி வருவதற்கு முன்பாகவே பலர் வந்து மரத்தடியில் காத்திருப்பார்கள். காலணியை அணிந்து பார்ப்பார்கள் முகத்தில் சந்தோஷம் பீறிடும். கலைந்து போவார்கள் முப்பது வருடம் கடந்தது. ஒரு நாள் இரவு மாரி வீடு திரும்பும்போது அக்காலணியைத் திருட முனைந்த இருவர் தடியால் அடித்தனர். காலணி திருடு போகவில்லை . தலையில் பட்ட அடியால் அவர் பலவீனமானார். அன்றிலிருந்து வெளியில் செல்லவில்லை பார்வையாளர்கள் அவர் வீடு தேடி வந்து சென்றனர். அவருடைய மனதில் மட்டும் அச்சிறுமியினால் நாம் வளர்ந்தோம். இறப்பதற்குள் அவளைப் பார்க்க வேண்டுமே’ என வேதனையுற்றார்.

மீண்டும் வந்த சிறுமி :
ஒரு மழை இரவில் பார்வையாளர்கள் வந்து சென்றதும் மத்திய வயதில் ஒரு பெண் நனைந்தபடி நின்றிருந்தாள். அவள் தணிவான குரலில் சொன்னாள். “வெகு தாமதமாகிவிட்டது எனது காலணியைத் தைத்துவிட்டீர்களா இல்லையா?” என்றாள். அவளை அடையாளம் கண்டு கொண்டார் மாரி “வலது காலணியை தைக்கக் கொடுத்தது நினைவிருக்கிறதா?” என்றாள். மாரி தன்னிடம் இருந்த காலணியைக் காட்டினார். “இந்தக் காலணி உலகின் எல்லாப் பாதங்களுக்கும் பொருந்துகிறது” என்று கூறினார்.

சிறுமியின் செயல் :
சிறுமி ஆச்சரியமின்றித் தலையாட்டி விட்டு தன்னிடம் இருந்த நாணயம் எதையோ கூலியாகக் கொடுத்துவிட்டுக் காலணியைப் பெற்றுக் கொண்டாள். அவள் யார் என அறிவதற்காக மாரி அவளிடம் யார் எனக் கேட்ட கேள்விக்குப் பதில் கூறாமல் சென்றுவிட்டாள். அவள் இரு காலணிகளையும் தரையிலிட்டுக் காலில் அணிய முயன்றாள். அவள் கொண்டு வந்த இடது காலணி பொருந்தியது தைத்து வாங்கின வலது காலணி பொருந்தவில்லை சிறியதாக இருந்தது.

சிந்தனை வினா

Question 1.
மாரிக்குக் கிடைத்தது போன்ற காலணி உங்களுக்குக் கிடைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
Answer:
மாரிக்குக் கிடைத்தது போன்ற காலணி எனக்குக் கிடைத்தால் மாரியைப் போலவே நானும் பலர் அணிவதற்கு அக்காலணியைக் கொடுத்திருப்பேன். அவரைப் போலவே பணம் வசூலித்திருப்பேன். ஏழை எளிய மக்களுக்குக் கொடுத்து உதவுவேன். கல்வி கற்க வசதியில்லாதவர்களுக்குப் பணம் கொடுத்து உதவுவேன். ஆதரவற்றவர்களுக்கு உதவி புரிவேன்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.4 பாதம்

Question 2.
பாதம் என்னும் கதையின் மூலம் நீங்கள் அறிந்து கொண்ட கருத்து யாது?
Answer:
பாதம் என்னும் கதையின் மூலம் நான் அறிந்து கொண்டது:
ஏழ்மையிலும் நேர்மை, செய்ந்நன்றி மறவாமல் மனசாட்சியின் படி வாழ்தல்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.3 பசிப்பிணி போக்கிய பாவை

Students can Download 6th Tamil Chapter 8.3 பசிப்பிணி போக்கிய பாவை Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

   

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 8.3 பசிப்பிணி போக்கிய பாவை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.3 பசிப்பிணி போக்கிய பாவை

Question 1.
பசிப்பிணி போக்கிய பாவை நாடகத்தை வகுப்பில் நடித்துக் காட்டுக.
Answer:
பசிப்பிணி போக்கிய பாவை என்னும் நாடகத்தை வகுப்பில் மாணவர்கள் தாங்களாகவே அதில் வரும் கதாபாத்திரங்களில் வேடமிட்டு நடித்துக் காட்ட வேண்டும்.

Question 2.
பசிப்பிணி போக்கிய பாவை என்னும் நாடகத்தைக் கதை வடிவில் சுருக்கி எழுதுக.
Answer:
பசிப்பிணி போக்கிய பாவை என்னும் நாடகத்தின் கதை வடிவம் :
மணிமேகலா தெய்வம் மணிமேகலையை, எங்குப் பார்த்தாலும் வெண்மணல் குன்றுகள், பூத்துக் குலுங்கும் செடிகொடிகள், அடர்ந்த மரங்கள் இடையே பொய்கைகள் என மனதை மயக்கும் காட்சிகள் கொண்ட மணிபல்லவத்தீவிற்குக் கொண்டுவந்து சேர்த்தது. அந்த மணிபல்லவத் தீவையும் அதிலுள்ள புத்தபீடிகையையும் காவல் செய்து வரும் தீவதிலகை மணிமேகலையைச் சந்திக்கிறாள். மேலும், அவள் மணிமேகலையிடம் ”பெருமை மிக்கவர்கள் மட்டுமே இத்தீவிற்கு வந்து இந்தப் புத்த பீடிகையை வணங்க முடியும். நீ அந்தப் பெருமையைப் பெற்றிருக்கிறாய். இன்னும் நீ அறிய வேண்டியது ஒன்று உண்டு என்று கூறினாள்.

மணிமேகலை “அஃது என்ன அம்மா?” என்று வினவினாள். இந்தத் தீவில் பூக்கள் நிறைந்து இருக்கும் பொய்கை ஒன்று உள்ளது. “இப்பொய்கை பசுவின் முகம் போன்று அமைந்து இருப்பதால் கோமுகி என்று பெயர் பெற்றது. வைகாசித் திங்கள் முழுநிலவு நாளில் அப்பொய்கை நீரின் மேல் ஓர் அரிய பாத்திரம் தோன்றும். அஃது ஆபுத்திரன் கையிலிருந்த ‘அமுதசுரபி’ என்னும் பாத்திரம் ஆகும். அந்தப் பாத்திரத்தில் இட்ட உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் வளர்ந்து கொண்டே இருக்கும். அதனைக் கொண்டு எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் உணவு அளிக்கலாம். அந்தப் பாத்திரம் தோன்றும் வைகாசி முழுநிலவு நாள் இன்றுதான்.” என்று தீவதிலகை மணிமேகலையிடம் கூறினாள்.

இவர்கள் உரையாடிக் கொண்டிருக்கும்போதே பொய்கையின் நீருக்கு மேல் அப்பாத்திரம் தோன்றியது. மணிமேகலை அதனை வணங்கிக் கையில் எடுத்தாள். தீவதிலகை, மணிமேகலையிடம் “மணிமேகலையே! உயிர்களின் பசிபோக்கும் அமுதசுரபியை நீ பெற்றுள்ளாய். இனி இவ்வுலக உயிர்களுக்குப் பசி இல்லாமல் போகும்படி உணவு வழங்கி உயர்வு பெறுவாயாக!” என்று கூறினாள்.

மணிமேகலை தீவதிலகையை வணங்கி அமுதசுரபியுடன் விடைபெற்று பூம்புகாருக்குத் திரும்பினாள். ஆதிரையிடம் உணவு பெறச் சென்றாள்.

ஆதிரையின் வீட்டு வாயிலில் அமுதசுரபியுடன் நின்றாள். ஆதிரை மணிமேகலையைப் பார்த்து “யார் நீங்கள்?” என்றாள். மணிமேகலை, “இவ்வூரில் வாழ்ந்த கோவலன், மாதவி ஆகியோரின் மகள் நான். உங்களின் சிறப்பை அறிந்து இப்பாத்திரத்தில் உணவு பெற வந்தேன்” என்று கூறினாள்.

ஆதிரை “ஓ! நீங்கள் தான் மணிமேகலையா? உங்கள் பெற்றோரைப் பற்றி அறிவேன். உங்களை இன்று தான் காண்கிறேன். இஃது என்ன பாத்திரம்? மிகவும் அழகாக இருக்கிறதே!” என்றாள். மணிமேகலை “இது அள்ள அள்ளக் குறையாமல் உணவு வழங்கும் ‘அமுதசுரபி’” என்றும், தனக்கு இப்பாத்திரம் கிடைத்த வரலாற்றையும் கூறினாள்.

அமுதசுரபியின் சிறப்பை அறிந்த ஆதிரை “இதைக் கொண்டு என்னசெய்வீர்கள் என்று கேட்டாள். அதற்கு மணிமேகலை அன்பிற்குரிய ஆதிரையே, ஏழை மக்களின் பசியைப் போக்குவதே மேலான அறம். உணவு கொடுத்தவர்களே உயிரைக் கொடுத்தவர்கள் என்பதை உணர்ந்துள்ளேன். அதனால் இந்தப் பாத்திரத்தில் இருக்கும் உணவைப் பசியால் வாடும் மக்களுக்கு எல்லாம் வழங்கப் போகின்றேன் என்று கூறினாள்.

அதனைக் கேட்ட ஆதிரை, “உங்கள் அறம் செழிக்கட்டும். மக்களின் பசிநோய் ஒழியட்டும். இதோ இப்போதே அமுதசுரபியில் நான் உணவை இடுகிறேன்” என்று கூறிவிட்டு உணவிட்டாள். மணிமேகலை அமுதசுரபியைக் கொண்டு, உடல் குறையுற்றோர், பிணியாளர், ஆதரவு அற்றோர் ஆகியோருக்கு உணவு அளித்தாள். பின்னர்ப் பூம்புகாரில் உள்ள சிறைச்சாலைக்குச் சென்று அங்கு உள்ளவர்களுக்கும் உணவிட்டாள்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.3 பசிப்பிணி போக்கிய பாவை

மணிமேகலை உணவிட்டதும் அப்பாத்திரத்தில் இருந்த உணர்வு குறையவேயில்லை என்பதை மன்னரிடம் சிறைக்காவலர் தெரிவித்தனர். மன்னன் வியப்புடன் “அப்படியா? அப்பெண்ணை அழைத்து வா” என்று ஆணையிட்டார்.

மணிமேகலை மன்னரைச் சந்தித்தாள். அப்பாத்திரத்தைப் பற்றி மன்னர் வினவினார். மணிமேகலை அமுதசுரபி கிடைத்த வரலாற்றைக் கூறினாள். மன்னர், “மாதவம் செய்தவளே! இந்த உலக மக்களின் பசிப்பிணி தீர்க்கும் பாங்குடைய அறத்தைச் செய்கிறாய். நான் உனக்குச் செய்ய வேண்டிய உதவி ஏதேனும் இருக்கிறதா? என்று கேட்டார்.

மணிமேகலை “சிறையில் உள்ளவர்கள் திருந்தி வாழ வழி காண வேண்டும். சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாற வேண்டும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டுவன, எவை நன்மைகள் எவை தீமைகள் என்பவற்றை எல்லாம் தக்க அறிஞர்களைக் கொண்டு சிறையில் உள்ளவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். மேலும் அவர்களுக்குப் பெற்றோரை மதித்தல், முதியோரைப் பேணல், உறவினர்களை அரவணைத்தல் போன்றவற்றை வலியுறுத்தும் அறநெறிக் கல்வியை அளிக்க வேண்டும். இதுவே என் வேண்டுகோள் மன்னா?” என்று கூறினாள். மன்னரும் உன் வேண்டுகோள் அனைத்தையும் நடைமுறைப்படுத்த ஆணையிடுகிறேன். நீ வாழ்க! உன் அறம் வளர்க! என்று கூறினார்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு ……………….
அ) இலங்கைத் தீவு
ஆ) இலட்சத் தீவு
இ) மணிபல்லவத் தீவு
ஈ) மாலத் தீவு
Answer:
இ) மணிபல்லவத் தீவு

Question 2.
மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண் …………….
அ) சித்திரை
ஆ) ஆதிரை
இ) காயசண்டிகை
ஈ) தீவதிலகை
Answer:
ஆ) ஆதிரை

சொற்றொடரில் அமைத்து எழுதுக

அ) செடிகொடிகள் – செடிகொடிகள் வளர்ப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு.
ஆ) முழுநிலவு நாள் – முழுநிலவு நாள் பௌர்ணமி என்று அழைக்கப்படும்.
இ) அமுதசுரபி – அமுதசுரபி அள்ள அள்ளக் குறையாமல் கொடுத்துக் கொண்டே இருக்கும்.
ஈ) நல்ல றம் – இல்லறம் சிறக்க ஒவ்வொருவரும் நல்லறச் செயல்களைச் செய்ய

குறுவினா
Question 1.
அமுதசுரபியின் சிறப்பு யாது?
Answer:
அமுதசுரபியில் இட்ட உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் வளர்ந்து கொண்டே இருக்கும். அதனைக் கொண்டு எத்தனைப் பேருக்கு வேண்டுமானாலும் உணவு அளிக்கலாம்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.3 பசிப்பிணி போக்கிய பாவை

Question 2.
மணிமேகலை மன்னரிடம் வேண்டியது யாது?
Answer:
மணிமேகலை மன்னரிடம் வேண்டியது :
(i) சிறைச்சாலையில் தண்டனை பெற்றுள்ளவர்கள் திருந்தி வாழ வழிகாண வேண்டும்.
(ii) சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாற வேண்டும்.

சிறுவினா

Question 1.
மணிபல்லவத்தீவு எவ்வாறு காட்சி அளித்தது?
Answer:
மணிபல்லவத்தீவில் எங்குப் பார்த்தாலும் வெண்மணல் குன்றுகள் இருந்தன. பூத்துக் குலுங்கும் செடிகொடிகள், அடர்ந்த மரங்கள், இடையே பொய்கைகள் ஆகியன இருந்தன. மனதை மயக்கும் காட்சிகளைத் தந்தது.

Question 2.
“கோமுகி” என்பதன் பொருள் யாது?
Answer:
(i) மணிபல்லவத்தீவில் பூக்கள் நிறைந்து விளங்கும் பொய்கைக்குப் பெயர் கோமுகி.
(ii) ‘கோ’ என்றால் பசு. முகி’ என்றால் முகம்.
(iii) பசுவின் முகம் போன்று அமைந்து இருப்பதால் அந்தப் பொய்கை கோமுகி எனப் பெயர் பெற்றது.

சிந்தனை வினா

Question 1.
அறச்செயல்கள் என்று நீங்கள் எவற்றை எல்லாம் கருதுகிறீர்கள்?
Answer:
அறச்செயல்கள் :
(i) உயர்ந்த நற்குணங்களுடன் எல்லோரிடத்திலும் அன்புடன் பழகுதல்.
(ii) அனைத்து உயிர்களிடத்திலும் கருணையுடன் இருத்தல்.
(iii) நல்லவர்களிடம் கொள்ளும் நட்பு.
(iv) அறநூல்களில் கூறப்பட்ட ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தல்.
(v) எளியோருக்கு ஈதல்.
(vi) எளியோரையும் நல்ல முறையில் உபசரித்தல்.
(vii) ஐம்புலன்களையும் அடக்கி நல்வழியில் செலுத்துதல்.
(vii) ஏழைகளுக்குத் தகுந்த உதவி செய்தல், உணவளித்தல், உவகையுடன் தானமளித்தல்.
(ix) பணிவுடன் நடந்து கொள்ளுதல்.
(x) எந்நிலையிலும் உண்மையைப் போற்றுதல்.
(xi) பசித்தோர்க்கு உணவளித்தல்.
(xii) தீய வழியில் செல்லாமல் இருத்தல்.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :
1. “தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச்செகத்தினை அழித்திடுவோம்.” என்று பாடியவர் ………………..
2. மணிமேகலை …………………. நகரைச் சேர்ந்த வள்.
3. மணிபல்லவத் தீவைப் பாதுகாப்பவள் …………..
4. பசுவின் முகம் போன்று அமைந்த பொய்கையின் பெயர் ………………..
5. கோமுகி நீரின் மேல் தோன்றும் அரிய பாத்திரத்தின் பெயர் ……………
6. அமுதசுரபி தோன்றும் நாள் ……………….. திங்கள் ………………… நாள்.
7. உயிர்களின் பசிபோக்கும் பாத்திரம் …………………
8. கோவலன், மாதவி ஆகியோரின் மகள் ………………………….
9. அமுதசுரபியில் முதலில் உணவை இட்டவள் …………….
10. வாழ்க்கைக்கு அறம் சொன்னவர் ………….
Answer:
1. பாரதியார்
2. பூம்புகார்
3. தீவதிலகை
4. கோமுகி
5. அமுதசுரபி
6. வைகாசித், முழுநிலவு
7. அமுதசுரபி
8. மணிமேகலை
9. ஆதிரை
10. வள்ளுவர்

விடையளி :

Question 1.
தீவதிலகை யார்?
Answer:
(i) தீவதிலகை மணிபல்லவத் தீவில் வாழ்பவள்.
(ii) அவள் அந்தத் தீவையும் அதிலுள்ள புத்த பீடிகையையும் காவல் செய்து வருபவள்.

Question 2.
அமுதசுரபி பற்றி எழுதுக.
Answer:
(i) அமுதசுரபி ஓர் அரிய பாத்திரம். இது கோமுகியின் மேல் வைகாசித் திங்கள் முழு – நிலவு நாளில் தோன்றும்.
(ii) அஃது ஆபுத்திரன் கையிலிருந்தது.
(iii) அந்தப் பாத்திரத்தில் இட்ட உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் வளர்ந்து கொண்டே இருக்கும். அதனைக் கொண்டு எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் உணவு அளிக்கலாம்.
(iv) இப்பாத்திரத்தைப் பெற்றவள் மணிமேகலை.
(v) இப்பாத்திரத்தில் முதலில் உணவிட்டவள் ஆதிரை.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.3 பசிப்பிணி போக்கிய பாவை

Question 3.
ஆதிரையிடம் அமுதசுரபியைப் பற்றி மணிமேகலை கூறியது யாது?
Answer:
மணிமேகலை ஆதிரையிடம் இந்தப் பாத்திரம் அள்ள அள்ளக் குறையாமல் உணவு வழங்கும் அமுதசுரபி ஆகும் என்றும், இதனைக் கொண்டு பசியால் வாடும் மக்களுக்கு எல்லாம் உணவு வழங்கப் போகிறேன் என்றும் கூறினாள்.

Question 4.
மணிமேகலை எவருக்கெல்லாம் உணவிட்டாள்?
Answer:
மணிமேகலை அமுதசுரபியைக் கொண்டு, உடல் குறையுற்றோர், பிணியாளர், ஆதரவற்றோர் ஆகியோருக்கு உணவு அளித்தாள். பின்னர்ப் பூம்புகாரில் உள்ள
சிறைச்சாலைக்குச் சென்று அங்கு உள்ளவர்களுக்கும் உணவிட்டாள்.

Question 5.
மன்னரிடம் மணிமேகலை விடுத்த வேண்டுகோள் யாது?
Answer:
வாழ்க்கைக்கு அறம் சொன்ன வள்ளுவர் வாழ்ந்த நாடு இது. புத்தர் பிறந்து அறம் போதித்த பூமி இது. எவை நன்மைகள் எவை தீமைகள் என்பவற்றை எல்லாம் தக்க அறிஞர்களைக் கொண்டு சிறையில் உள்ளவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். மேலும் அவர்களுக்குப் பெற்றோரை மதித்தல், முதியோரைப் பேணல், உறவினர்களை அரவணைத்தல் போன்றவற்றை வலியுறுத்தும் அறநெறிக் கல்வியை அளிக்க வேண்டும். இதுவே மணிமேகலை மன்னரிடம் விடுத்த வேண்டுகோள் ஆகும்.