Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th History Guide Pdf Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th History Solutions Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

11th History Guide ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி Text Book Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
பிரபாகர வர்த்தனர் தனது மகள் ராஜ்யஸ்ரீயை ……………….. என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.
அ) கிரகவர்மன்
ஆ) தேவகுப்தர்
இ) சசாங்கன்
ஈ) புஷ்ய புத்திரர்
Answer:
அ) கிரகவர்மன்

Samacheer Kalvi 11th History Guide Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

Question 2.
ஹர்ஷர் கன்னோசியின் அரியணையை ………. இன் அறிவுரையின் படி ஏற்றுக் கொண்டார்.
அ) கிரகவர்மன்
ஆ) அவலோகிதேஷ்வர போதிசத்வர்
இ) பிரபாகரவர்த்த னர்
ஈ) போனி
Answer:
ஆ) அவலோகிதேஷ்வர போதிசத்வர்

Question 3.
………………. என்பவர் அயலுறவு மற்றும் போர்கள் தொடர்பான அமைச்சர் ஆவார்.
அ) குந்தலா
ஆ) பானு
இ) அவந்தி
ஈ) சர்வாகதா
Answer:
இ) அவந்தி

Samacheer Kalvi 11th History Guide Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

Question 4.
கீழ்க்கண்டவற்றுள் ஹர்ஷரால் எழுதப்பட்ட நூல் எது?
அ) ஹர்ஷ சரிதம்
ஆ) பிரியதர்சிகா
இ) அர்த்த சாஸ்திரா
ஈ) விக்ரம ஊர்வசியம்
Answer:
ஆ) பிரியதர்சிகா

Samacheer Kalvi 11th History Guide Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

கூடுதல் வினாக்கள்

Question 1.
வர்த்தன வம்சத்தை நிறுவியவர் யார்?
அ) பிரபாகரவர்த்தனர்
ஆ) இராஜ்யவர்த்தனர்
இ) புஷ்யபூபதி
ஈ) ஹர்ஷர்
Answer:
இ) புஷ்யபூபதி

Question 2.
ஹர்ஷவர்த்த னரின் முதல் தலைநகரம் ……………………
அ) கன்னோசி
ஆ) பெஷாவர்
இ) தானேஸ்வரம்
ஈ) டெல்லி
Answer:
இ) தானேஸ்வரம்

Samacheer Kalvi 11th History Guide Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

Question 3.
இராஜ்யவர்த்தனரை நயவஞ்சகமாக கொன்ற அரசன்…………………
அ) சசாங்கன்
ஆ) இரண்டாம் புலிகேசி
இ) வேதகுப்தன்
ஈ) கிரகவர்மன்
Answer:
அ) சசாங்கன்

Question 4.
யுவான் சுவாங் எழுதிய நூல் ………………………..
அ) சியூகி
ஆ) மயூகி
இ) ஸ்ருதி
ஈ) டான்ங்
Answer:
அ) சியூகி

Question 5.
ஹர்சரைத் தோற்கடித்த சாளுக்கிய அரசர்………………..
அ) முதலாம் புலிகேசி
ஆ) இரண்டாம் புலிகேசி
இ) 2ம் சந்திர குப்தர்
ஈ) சமுத்திரகுப்தர்
Answer:
ஆ) இரண்டாம் புலிகேசி

Samacheer Kalvi 11th History Guide Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

Question 6.
ஹர்ஷர் பௌத்த மதத்தை தழுவக் காரணமானவர்
அ) பிரபாகரவர்த்தனர்
ஆ) இராஜ்யவர்த்தனர்
இ) சிசுபாலர்
ஈ) இராஜ்யஸ்ரீ
Answer:
ஈ) இராஜ்யஸ்ரீ

Question 7.
சீனப்பயணி யுவான் சுவாங் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் தங்கி இருந்தார்.
அ) 8
ஆ) 10
இ) 16
ஈ) 13
Answer:
இ) 16

Question 8.
தற்போதைய நில அஸ்ஸாம் நிலப்பகுதி பண்டைய காலத்தில் ……………… எனப்பட்டது.
அ) ராஜகிருகம்
ஆ) காமரூபம்
இ) சுவர்ணா
ஈ) தாம்ரப்தி
Answer:
ஆ) காமரூபம்

Question 9.
ஹர்ஷர் தனது தலை நகரத்தை தானேஸ்வரத்திலிருந்து ……………………. மாற்றினார்.
அ) கன்னோசி
ஆ) மதுரா
இ) பரியாகை
ஈ) கயா
Answer:
அ) கன்னோசி

Samacheer Kalvi 11th History Guide Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

Question 10.
பான்ஸ்கரா கல்வெட்டில் இடம்பெற்றுள்ள கையொப்பம்
அ) யுவான் சுவாங்
ஆ) ஹர்ஷர்
இ) பாணம்
ஈ) தந்திதுர்கா
Answer:
ஆ) ஹர்ஷர்

Question 11.
ஹர்ஷர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீனப்பயணி ………………
அ) பாகியான்
ஆ) கிட்சிங்
இ) யுவான்-சுவாங்
ஈ) அ-வுங்
Answer:
இ) யுவான்-சுவாங்

Question 12.
நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் ……………….
அ) தர்மபாலர்
ஆ) முதலாம் குமாரகுப்தர்
இ) விஷ்ணுகுப்தர்
ஈ) முதலாம் சந்திரகுப்தர்
Answer:
ஆ) முதலாம் குமாரகுப்தர்

Question 13.
ஹர்ஷர் காலத்தில் விவசாயிகளாலும், வணிகர்களாலும் பணமாக செலுத்தப்பட்ட வரி ……………….
அ) பலி
ஆ) பகா
இ) ஸ்மிருதி
ஈ) ஹிரண்யா
Answer:
ஈ) ஹிரண்யா

Samacheer Kalvi 11th History Guide Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

Question 14.
……………… பீகாரில் விக்ரம சீலா என்னும் பௌத்த மடத்தை நிறுவினார்.
அ) தேவபாலர்
ஆ) கோபாலர்
இ) விக்ரமபாலர்
ஈ) தர்மபாலர்
Answer:
ஈ) தர்மபாலர்

Question 15.
பயணிகளின் இளவரசர் என அறியப்பட்டவர் …………
அ) பாகியான்
ஆ) கட்சிங்
இ) யுவான்சுவாங்
ஈ) வுங்
Answer:
இ) யுவான்சுவாங்

Question 16.
ஹர்ஷ சரிதம் என்ற நூலை எழுதியவர் ……………
அ) ஹர்ஷ ர்
ஆ) ஹரிசேனர்
இ) பாணர்
ஈ) பாலர்
Answer:
இ) பாணர்

Question 17.
ஹர்ஷர் ஐந்தாண்டுகளுக்கு ஒருமறை கூட்டிய பௌத்த மதக் கூட்டம் என்பது …………..
அ) மந்திர பரிஷத்
ஆ) ஹரிசரின் நீதிபரிபாலன சபை
இ) மகா மோட்ச பரிஷத்
ஈ) ஹர்சான் அரசபை
Answer:
இ) மகா மோட்ச பரிஷத்

Question 18.
ராஷ்டிர கூட அரசர்களில் தலை சிறந்தவர் ………..
அ) முதலாம் கிருஷ்ண ர்
ஆ) இரண்டாம் கிருஷ்ணர்
இ) மூன்றாம் கிருஷண்ர்
ஈ) தந்தி துர்க்கர்
Answer:
இ) மூன்றாம் கிருஷண்ர்

Samacheer Kalvi 11th History Guide Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

Question 19.
கவிராஜ மார்க்கம் என்ற கன்னட நூலை எழுதியவர்………………..
அ) ஹரிபத்ரர்
ஆ) அமர கோஷர்
இ) அமோகவர்ஷர்
ஈ) ஜெய சேனர்
Answer:
இ) அமோகவர்ஷர்

Question 20.
இராஜேந்திர சோழரின் படையை கங்கையை கடக்க முடியாதபடி தடுத்தவர்…………………
அ) கோபாலர்
ஆ) தர்மபாலர்
இ) மஹிபாலர்
ஈ) தேவபாலர்
Answer:
இ) மஹிபாலர்

Question 21.
தவறான இணையை கண்டறிக.
(i) குந்தலா – குதிரைப்படைத் தலைவர்
(ii) சிம்மானந்தா – படைத்தளபதி
(iii) பாணு – ஆவணப்பதிவாளர்கள்
(iv) சர்வகதர் – அரச தூதுவர்கள்
Answer:
(iv) சர்வகதர் – அரச தூதுவர்கள்

Question 22.
ஹர்ஷர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மகாமோட்ச பரிஷத்” என அழைக்கப்பட்ட கூட்டத்தை கூட்டிய இடம் ………. மார்ச் 2019
அ)வாதாபி
ஆ) பிரயாகை
இ)கன்னோசி
ஈ) பாடலிபுத்திரம்
Answer:
ஆ) பிரயாகை

Samacheer Kalvi 11th History Guide Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

II. குறுகிய விடையளி.

Question 1.
ஹர்ஷப் பேரரசு குறித்து அறிய உதவும் கல்வெட்டுச் சான்றுகள் யாவை?
Answer:
ஹர்ஷரை பற்றிய அறிய உதவும் கல்வெட்டு சான்றுகள்.

  • மதுபன் செப்புப் பட்டய குறிப்புகள்
  • சோன் பட்டு செப்பு முத்திரைக் குறிப்புகள்
  • பன்ஸ் கெரா செப்பு பட்டய குறிப்புகள் (iv) நாளந்தா களிமண் முத்திரை குறிப்புகள்

Question 2.
ஹர்ஷர் எவ்வாறு கன்னோசியின்
மன்னரானார்?
கன்னோசியின் அரசராக ஹர்ஷர்.

  • கன்னோசியின் முக்கியமானவர்கள் தங்களது அமைச்சரான போனியின் அறிவுரைப்படி ஹர்ஷரை அரியணையில் அமர அழைப்பு விடுத்தார்.
  • தயக்கம் காட்டிய ஹர்ஷர் அவலோகி தேஷ்வர போதிசத்வரின் அறிவுரையின்படி ராஜ்புத்திரர், சிலாத்யா ஆகிய பட்டங்களுடன் ஆட்சியதிகாரத்தை ஏற்றுக்கொண்டார்.
  • ஹர்ஷரின் ஆட்சியின் கீழ் தானேஸ்வரமும், கன்னோசியும் ஒன்றாக இணைந்தன
  • பின்னர் ஹர்ஷர் தனது தலைநகரைக் கன்னோசிக்கு இடம் மாற்றிக் கொண்டார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

Question 3.
முதலாம் மகிபாலரின் சிறப்புகள் குறித்து கலந்துரையாடுக.
Answer:

  • இரண்டாம் விக்ரமபாலரின் மகன் முதலாம் மஹிபாலர்.
  • பொது.ஆ. 1020-1025 ஆண்டுகளுக்கிடையில்
    தென் பகுதியைச் சேர்ந்த சோழ மன்னர் இரோஜேந்திர சோழன் வட இந்தியாவிற்கு படையெடுத்துச் சென்றது மஹிபாலரின் காலத்தில்
    மிக முக்கியமான நிகழ்வாகும்.
  • எனினும் மிக முக்கியமான படையெடுப்பு கங்கையை கடக்க முடியாதபடி முதலாம் மஹிபாலரால் தடுக்கப்பட்டது.
  • முதலாம் மஹிபாலர் சாரநாத், நாளந்தா, புத்த கயா ஆகிய இடங்களில் புனித வழிபாட்டுத் தலங்களை உருவாக்கியதுடன் பலவற்றை சீரமைக்கவும் செய்தார்.

Question 4.
தக்கோலப் போரின் முக்கியத்துவம் குறித்துக் கூறுக.
Answer:

  • ராஷ்டிர கூட ஆட்சியாளர்களில் கடைசி அரசர் மூன்றாம் கிருஷ்ணர் ஆவார். அவர் ஆட்சிக்கு வந்தவுடன் தனது மைத்துனர் பதுங்கரின் துணையுடன் சோழ அரசின் மீது படையெடுத்தார்.
  • பொ.ஆ. 943ல் காஞ்சிபுரமும், தஞ்சாவூரும் கைப்பற்றப்பட்டன.
  • ஆற்காடு, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தொண்டை  மண்டலமும் அவரது கட்டுப்பாட்டில் வந்தது.
  • பொ.ஆ. 949ம் ஆண்டில் ‘தக்கோலம்’ என்ற இடத்தில் நடந்த போரில் ராஜாத்திய சோழன் தலைமையில் திரண்ட சோழர் படை தோற்கடிக்கப்பட்டது.

Question 5.
பால வம்ச ஆட்சியின் போது நாளந்தா பல்கலைக்கழகத்தின் முக்கியத்துவத்தை விவரி.
Answer:

  • பாலர் வம்ச ஆட்சியினர் பௌத்த மதத்திற்கு பெரும் ஆதரவாளராக விளங்கினார்..
  • சுவர்ண தீபத்தை ஆண்ட சைசேந்திர வம்சத்து அரசரான பாலபுத்ர தேவரால் நாளந்தாவில் கட்டப்பட்ட பௌத்த மடாயலத்தைப் பராமரிப்பதற்காக ஐந்து கிராமங்களை தேவபாலர்
    கொடையாக வழங்கினார்.
  • அவரது ஆட்சியில் நாளந்தா பௌத்த மதக் கொள்கைகளைப் போதிக்கும் முதன்மையான மையமாகத் தழைத்தோங்கியது.

Samacheer Kalvi 11th History Guide Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

கூடுதல் வினாக்கள்

Question 1.
சாளுக்கிய அரசர் இரண்டாம் புலிகேசியைப் பற்றி கூறுக.
Answer:

  • ஹர்ஷர் தனது ஆட்சியதிகாரத்தை தெற்கில் தக்காணப் பகுதிக்கு விரிவுபடுத்த முனைந்தார்.
  • தக்காணத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சாளுக்கிய அரசர் இரண்டாம் புலிகேசி ஹர்ஷரைத் தோற்கடித்தார்.
  • ஹர்ஷரை வெற்றி கொண்டதன் நினைவாகப் புலிகேசி “பரமேஷ்வரர்” என்ற பட்டத்தை பெற்றார்.
  • புலிகேசியின் தலைநகரான வாதாபியில் காணப்படும் கல்வெட்டுக் குறிப்புகள் இந்த
    வெற்றிக்கு சான்றாக விளங்குகின்றன.

Question 2.
ஹர்ஷரது பேரரசின் எல்லைகள் யாவை?

Answer:

  • ஹர்ஷர் நாற்பத்தோரு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அவரது ஆட்சிப் பகுதி, ஜலந்தா, காஷ்மீர், நேபாளம், வல்லபி ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • வங்காளத்தை ஆண்ட சசாங்கன் ஹர்ஷருடன் பகைமை கொண்டிருந்தார்
  • ஹர்ஷரது பேரரசு அஸ்ஸாம், வங்காளம், பிகார், கன்னோசி, மாளவம், ஒரிசா, பஞ்சாப், காஷ்மீர், நேபாளம், சிந்து ஆகிய பகுதிகளைக் கொண்டிருந்தது.
  • அவரது உண்மையான ஆளுகை கங்கை, யமுனை ஆகிய நதிக்களுக்கிடையில் அமைந்திருந்த பிரதேசத்தைத் கடந்து செல்லவில்லை

Samacheer Kalvi 11th History Guide Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

Question 3.
அரசுக்கு சொந்தமான நிலம் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தது?
Answer:

அரசுக்குச் சொந்தமான நிலம் நான்கு பாங்களாகப் பிர்க்கப்பட்டிருந்தது.
பாகம் – 1 – அரசு விவகாரங்களை நடைமுறை படுத்தவதற்காக
பாகம் – 2  – அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு ஊதியம் வழங்குவதற்கானது,
பாகம் – 3 – அறிவில் சிறந்தவர்களுக்கு வெகுமதி அளிக்கப்பட்டது
பாகம் – 4 – மத நிறுவனங்களின் அறச் செயல்களுக்கு அளிப்பதற்கானது.

Question 4.
யுவான்-சுவாங் கன்னோசியைப் பற்றி கூறுவது யாது?
Answer:
கன்னோசி பற்றிய யுவான்-சுவாங்கின் குறிப்பு.

  • கன்னோசியின் கம்பீரமான தோற்றம் அதன் கவின் மிகு கட்டிடங்கள், அழகிய பூங்காக்கள், அரிய பொருள்களின் இருப்பிடமாக விளங்கிய அருங்காட்சியகம் ஆகியன குறித்து அவர் விவரித்துள்ளார்.
  • அங்கு வாழ்ந்த மனிதர்களின் பொலிவான தோற்றம், அவர்கள் அணிந்திருந்த விலை உயர்ந்த ஆடைகள், கல்வி மற்றும் கலைகளின்பால் அவர்கள் கொண்டிருந்த நாட்டம் ஆகியவை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
  • யுவான்-சுவாங்கின் கூற்றுப்படி, பெரும்பாலான நகரங்கள் வெளிப்புற மதில்களையும் உட்புற நுழைவாயில்களையும் கொண்டிருந்தன.
  • வசிப்பிட இல்லங்களும், மாடங்களும் மரத்தால் செய்யப்பட்டு சுண்ணாம்புக் கலவையால் பூசப்பட்டிருந்தன.

Question 5.
ஹிரண்ய கர்ப்பம் என்றால் என்ன?
Answer:

  • ஹிரண்ய கர்ப்பம் என்றால் தங்கக் கருப்பை என்று பொருள்.
  • இதற்கான மதச் சடங்குகளை மதகுருமார்கள்
    விரிவாக நடத்துவார்கள்.
  • கருப்பையிலிருந்து வெளிவரும் நபர் அதிக ஆற்றல் கொண்ட உடலை பெற்றவராக, மறுபிறப்பெடுத்தவராக அறிவிக்கப்படுவார்.
  • சாதவாகன வம்சத்து அரசரான கௌதமிபுத்ர சதகர்ணி என்பவர் சத்திரிய அந்தஸ்தை அடைவதற்கு ஹிரண்யகர்ப்பச் சடங்கை நடத்தினார்.

III. சிறுகுறிப்பு வரைக.

Question 1.
ஹர்ஷருக்கும் சீனாவிற்கும் இடையே நிலவிய உறவு.
Answer:
ஹர்ஷரின் சீன உறவு:

  • ஹர்ஷர் சீனாவுடன் நேசமான உறவைக் கொண்டிருந்தார்.
  • அவரது சமகால டான்ங் பேரரசர் டாய் சுங், பொ.ஆ. 643ஆம் ஆண்டிலும் அடுத்து 647ஆம் ஆண்டிலும் ஹர்ஷரது அரசவைக்கு தனது தூதுக்குழுவை அனுப்பினார்.
  • இரண்டாவது முறை வந்த போது ஹர்ஷர் அண்மையில் இறந்திருந்ததை சீனத் தூதுவர் அறிந்தார்.
  • ஹர்ஷருக்குப் பிறகு ஆட்சியதிகாரம் தகுதியற்ற ஒரு நபரால் கைப்பற்றப்பட்டதை அறிந்த சீனத் தூதர் அபகரித்த அரசனை அகற்றும் பொருட்டுப் படை திரட்ட நேபாளத்திற்கும் அஸ்ஸாமிற்கும் விரைந்தார்.
  • பின்னர் அந்த அரசன் சிறைப்பிடிக்கப்பட்டுச் சீனாவிற்கு கொண்டு செல்லப்பட்டார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

Question 2.
ஹர்ஷருடைய குற்றவியல் நீதித்துறையின் முக்கியத்துவம்.
Answer:

  • குற்றவியல் சட்டங்கள் கடுமையானதாக இருந்தன. இச்சட்டங்களை விசாரித்து நீதி வழங்க மீமாம்சகர்கள் எனப்பட்டோர் நியமிக்கப்பட்டனர்.
  • நாடு கடத்தப்படுவதும், உடல் உறுப்புகள் வெட்டப்படுவதும் வழக்கமான தண்டனைகளாக இருந்தன.
  • கடும் சோதனைகளின் அடிப்படையிலான வழக்கு விசாரணை நடைமுறையில் இருந்தது.
  • சட்ட மீறல்களுக்கும் அரசனுக்கும் எதிராக சதி செய்வதற்கும் ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

Question 3.
எல்லோரா மற்றும் எலிஃபெண்டாவின் நினைவுச்சின்னங்கள். மார்ச் 2019)
Answer:
எல்லோரா:

  • எல்லோராவில் நமது கருத்தைக் கவரும் அமைப்பு என்பது ஒரே கல்லில் செலுக்கப்பட்ட கைலாசநாதர் கோயிலாகும். எட்டாம் நூற்றாண்டில் முதலாம் கிருஷ்ணரின் காலத்தில் அமைக்கப்பட்ட இக்கோயில் ஒரே பாறையைக்
    குடைந்து உருவாக்கப்பட்டதாகும்.
  • தசாவதார பைரவர், கைலாச மலையை ராவணன் அசைப்பது, நடனமாடும் சிவன் விஷ்ணுவும் லஷ்மியும் இசையில் லயித்திருப்பது எனக் கற்பலகைகளால் செதுக்கப்பட்ட சிற்பங்கள் சார்ந்த சான்றுகளாகும்.

எலிஃபண்டாவின்:

  • எலிஃபண்டாவில் குகையில் உள்ள நடராஜர், சதாசிவம் ஆகிய சிற்பங்கள் அர்த்த நாதஸ்வரர் மகஷமூர்த்தி ஆகியோரது சிலைகள் புகழ்பெற்ற சிற்பங்களாகும்.
  • இவற்றுள் மகேஷமூர்த்தியின் (சிவன்) மூன்று
    முகங்கள் கொண்ட 25 அடி உயரமுள்ள மார்பளவுச் சிலை இந்தியாவில் உள்ள கவின்மிகு சிற்பங்களுள் ஒன்றாகும்.
  • கைசாலநாதர் கோயிலின் வெளித் தாழ்வாரத்திலும், எல்லோராவில் உள்ள கோவிலின் விதானத்திலும், கூரையிலும் தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள் இன்றளவும் சிறப்புறக் காட்சி தருகின்றன.

Samacheer Kalvi 11th History Guide Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

Question 4.
ராஷ்டிரகூடர்கள் கன்னட இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பு.
Answer:

  • ராஷ்டிரகூட ஆட்சியாளர்கள் கல்வி யைப்  போற்றினார்கள். அவர்களது ஆட்சிக்காலத்தில் கன்னட இலக்கியங்கள் பெரும் வளர்ச்சி கண்டன.
  • முதலாம் அமோகவர்மர், கவிராஜமங்கலம் எனும் கன்னட நூலை இயற்றினார்.
  • ஜீனசேனர் சமணர்களின் ஆதிபுராணத்தை எழுதினார்.
  • பழங்கால கன்னட இலக்கியத்தின் மூன்று ரத்தினங்களாக போற்றப்பட்ட (1) கவிச்சக்கரவர்த்தி, (2) பொன்னா , (3) ஆதிகவி பம்பா
  • கவிச்சக்கரவர்த்தி ரன்னா ஆகியோர்களை ஆதரித்தார்.

Question 5.
ராஷ்டிரகூடர்கள் சமண மதத்திற்கு அளித்த ஆதரவு.
Answer:

  • ராஷ்டிர கூட ஆட்சிக்காலத்தில் சிவ வழிபாடும், விஷ்ணு வழிபாடும் செல்வாக்கு பெற்று விளங்கின.
  • முதலாம் அமோக வர்ஷர், நான்காம் இந்திரர், இரண்டாம் கிருஷ்ணர், மூன்றாம் இந்திரர் போன்ற பிற்கால அரசர் சமண மதத்திற்கு ஆதரவு அளித்தனர்.
  • இக்காலத்தில்தான் “ஜீனசேனர்” சமணர்களின் ஆதிபுராணத்தை எழுதினார். “குணபத்திரர்” சமணர்களின் மஹாபுராணத்தை எழுதினார். இவ்வாறு ஆதரவைக் கொடுத்தனர்.

கூடுதல் வினாக்கள்

Question 1.
ஹர்ஷரின் முக்கிய நிர்வாக அதிகாரிகளை பற்றி கூறுக.
Answer:

  • அவந்தி – அயலுறவு மற்றும் போர் விவகாரங்களுக்கான அமைச்சர்
  • சிம்மானந்தா – படைத்தளபதி
  • குந்தலா – குதிரைப்படைத் தலைவர்
  • ஸ்கந்த குப்தர் – யானைப் படைத்தலைவர்
  • திர்கத்வஜர் – அரச தூதுவர்கள்
  • பானு – ஆவணப் பதிவாளர்கள்
  • மஹாபிரதிஹரர் – அரண்மனைக் காவலர்களின் தலைவர்
  • சர்வகதர் – உளவுத் துறை அதிகாரி

Question 2.
யுவான் சுவாங்க பற்றி குறிப்பு எழுதுக? மார்ச் 2019
Answer:

  • “பயணிகளின் இளவரசன்” புகழ்படும் யுவான் சுவாங் ஹர்ஷரின் ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்.
  • பொ.ஆ. 612ல் பிறந்த யுவான் சுவாங் தனது இருபதாம் வயதில் துறவு புரிந்தார்.
  • அவர் இந்தியாவில் தங்கியிருத்போது, வட இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் பல்வேறு புனிதத் தலங்களைப் பார்வையிட்டார்.
  • நாளந்தா பல்கலைக்கழகத்திலும் பயின்றார்.
  • புத்தர் மீதான யுவான் சுவாங்கின் ஆழமான பற்றும் பௌத்த மதத்தில் அவருக்கு இருந்த பரந்த அறிவும் ஹர்ஷரின் பாராட்டுக்குரியதாக இருந்தன.
  • புத்தர் நினைவு சின்னங்களாக 150 பொருட்கள் தங்கத்திலும், வெள்ளியிலும், சந்தனத்திலும் ஆன் புத்தரின் உருவச்சிலைகள் 657 தொகுதிகள் கொண்டி அரிய கையெழுத்து பிரதிகள் ஆகியவற்றை யுவான் சுவாங் இந்தியாவிலிருந்து எடுத்துச்சென்றார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

IV. விரிவான விடை தருக.

Question 1.
ஹர்ஷரின் வடஇந்தியப் படையெடுப்புகள் குறித்து விவரி. (மார்ச் 2019)
Answer:
வர்த்தன மரபின் மிகவும் புகழ் பெற்ற மன்னராக இருந்தவர். ஹர்ஷவர்த்தனர் ஆவார். ஹர்ஷரின் தகப்பனார் பிரபாக வர்த்தனார். இறந்ததும் அவரது மூத்த மகன் இராஜ்யவர்த்தனர் ஆட்சி பொறுப்பேற்றார். இந்நிலையில் கௌட அரசன் பூரங்கனால் இராஜ்யவர்த்தனர் நயவஞ்சமாக கொல்லப்பட்டார். பிறகு ஹர்ஷவர்த்தனர் தானேஸ்வரத்தின் மன்னராக பொறுப்பேற்றார்.

பொ.ஆ. 606ல் ஹர்ஷர் பதவி ஏற்றதும் தன்னுடைய சகோதரி விவகாரத்தில் கவனம் செலுத்தினார் அவரது முதல் படையெடுப்பு தேவகுப்தனுக்கு எதிராக அமைந்தது.

தேவகுப்தன் போரில் கொல்லப்பட்டார். தீக்குளிக்கும் நிலையில் இருந்த தனது சகோதரியை காப்பாற்றி அழைத்து வந்தார். பின் கன்னோசி அமைச்சர் போனியின் அறிவுரை படி தன் தலைநகரை கன்னோசிக்கும் மாற்றினார்.

பின் பேரரசு ஒன்றை உருவாக்கும் பொருட்டு பின்வரும் பொருட்டு பின்வரும் அரசர்களுக்கு சரணடையவோ அல்லது எதிர்த்து போரிடவோ வாய்ப்பினை அளித்து இறுதி எச்சரிக்கை ஒன்றை அனுப்பினார்.

  • வங்கத்தை ஆண்ட கௌட அரசன் சசாங்கன்.
  • வல்லபியை ஆண்ட மைத்ரகர்கள்.
  • புரோச் பகுதியை ஆண்ட கூர்ஜரர்கள்
  • தக்காணத்தை ஆண்ட சாளுக்கிய அரசன்
    இரண்டாம் புலிகேசி
  • சிந்து, நேபாளம், காஷ்மீர், மகதம், ஒடிசா ஆகிய பகுதிகளை ஆண்ட அரசர்கள்.

ஹெர்ஷரின் உடனடித் தேவை தன்னுடைய சகோதரனைக் கொன்ற சசாங்கனை பழிவாங்குவதாக இருந்தது. ஹர்ஷருக்கும் சசாங்கத்துக்கும் இடையே நடந்த போர் குறித்து விவரங்கள் தெரியவில்லை . எனினும் சசாங்கன் இறந்த பிறகே கௌடப் பேரரசை ஹர்ஷர் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

ஹர்ஷருக்கும் மைத்ரகர்களுக்கும் இடையில் நிலவி வந்த பகையை ஹர்ஷரின் மகளுக்கும் துருவபட்டருக்கும் நடந்த திருமண உறவின் மூலம் முடிவிற்கு வந்தது. பின்னர் வல்லபி அரசு ஹர்ஷரின் ஆட்சியின் கீழ் கூட்டணி துணை அரசாக மாறியது.

Question 2.
ஹர்ஷரின் சமயக்கொள்கை பற்றி விளக்கம் தருக.
Answer:
சிவ வழிபாட்டிலிருந்து பௌத்தராக மாறுதல் :

  • ஹர்ஷர் சிவ வழிபாடு செய்பவராகவே இருந்துள்ளார்.
  • ஆனால் அவரது சகோதரி ராஜ்யஸ்ரீ, பௌத்த துறவி யுவான் சுவாங் ஆகியோரின் செல்வாக்கினால் ஹர்ஷர் பௌத்த மதத்தை தழுவினார்.
  • பௌத்த மதத்தில் மகாயானப் பிரிவை பின்பற்றினார். ஆனாலும் அவர் எல்லா மதங்களையும் ஆதரித்தவர்.

பௌத்த மாநாடுகள்: ஹர்ஷர் பொ.ஆ. 643ல் இரண்டு பௌத்த மதக்கூட்டங்களைக் கூட்டினார். முதலாவது கன்னோசியிலும் 2வது பிரயாகையிலும் கூட்டப்பட்டது. |

கன்னோசியில் பௌத்த மாநாடு :

  • காமரூப அரசன் பாஸ்கரவர்மன் உட்பட 20 அரசர்கள் பங்கு கொண்டனர்.
  • பௌத்தம், சமணம், வேதம் கற்றோர் என பல மாநிலத்தைச் சேர்ந்த அறிஞர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.
  • புத்தரின் மூன்று அடி உயர தங்கத்தாலான சிலை ஒன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
  • ஊர்வலத்தில் பாஸ்கரவர்மன் உள்ளிட்ட அரசர்களும் ஹர்ஷரும் கலந்து கொண்டனர்.

பிரயாகையில் பௌத்த மதக் கூட்டம்

  • ஹர்ஷர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் ‘மகாமோட்ச பரிஷத்” என அழைக்கப்பட்ட மதக்கூட்டத்தை பிரயாகையில் கூட்டினார்.
  • தான் சேகரித்த செல்வத்தை பௌத்த மதத்தினர் – வேத அறிஞர்கள், ஏழைகள் ஆகியோருக்கு பகிர்ந்த ளித்தனர்.
  • கூட்டம் நடந்த நான்கு நாட்களும்
    புத்த துறவிகளுக்கு எண்ணற்ற பரிசு பொருட்களை வழங்கினார்.

யுவான் சுவாங்கின் கூற்று

  • ஹர்ஷர் காலத்தில் மக்களுக்கு முழுமையான வழிபாட்டுச் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது.
  • வேறுபட்ட மதங்களைப் பின்பற்றுவோர் மத்தியில் சமூக நல்லிணக்கம் நிலவியது.
  • ஹர்ஷர் புத்த பிட்சுகளையும் வேதம் கற்ற அறிஞர்களையும் சமமாக பாவித்து கொடைகளையும் சமமாகப் பகிர்ந்தளித்தார் என யுவான் சுவாங் பதிவு செய்துள்ளார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

Question 3.
வட இந்தியாவின் நிலை குறித்த யுவான் சுவாங்கின் கருத்துகள் யாவை?
Answer:
ஹர்ஷர் ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த யுவான் – சுவாங் தனது குறிப்புகளில் வட இந்தியாவின் நிலையைக் குறித்து தனது கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்.

  1. சாதி அமைப்பு முறை
  2. பெண்கள் நிலை
  3. மக்களின் வாழ்க்கைமுறை
  4. உணவுப் பழக்கங்கள்
  5. கல்வி

1. சாதி அமைப்பு முறை:

  • இந்து சமூகத்தில் சாதி முறை வலுவாக காலூன்றியிருந்தது.
  • யுவான் சுவாங்கின் கூற்றுப்படி சமுதாயத்தில் நான்கு பிரிவினருக்கான தொழில்கள் முற்காலத்தில் இருந்தது போலவே தோன்றின.
  • மக்கள் பிறரை வஞ்சிக்காமல் நேர்மையுடன் நடந்து கொண்டனர்.
  • கசாப்பு கடையினர், மீனவர், நடனக்காரர்கள், துப்புரவு பணியாளர் ஆகியோர் நகரத்திற்கு வெளியே வசித்தனர்.
  • பல்வேறு சாதி அமைப்பு காணப்பட்ட போதிலும் சமுதாயப் பிரிவினர்களிடையே மோதல்கள் எதுவும் நிகழவில்லை .

2. பெண்கள் நிலை:

  • பெண்கள் முகத்திரை அணியும் வழக்கம் இருந்தது. எனினும் உயர் வகுப்பினர் மத்தியில் முகத்திரை அணியும் வழக்கம் காணப்படவில்லை என யுவான்சுவாங் தன் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
  • உடன்கட்டை ஏறும் வழக்கம் (சதி) இருந்திருக்கிறது. பிரபாகரவர்த்தனரின் மனைவி யசோமதிதேவி தன் கணவன் இறந்த பிறகு உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துக் கொண்டார்.

3. வாழ்க்கை முறை:

  • மக்கள் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தனர். பருத்தி பட்டினாலான வண்ண வண்ண ஆடைகளை அணிந்தனர்.
  • மெல்லிய ஏக துணிகளைத் தயாரிக்கும் கலை செம்மை பெற்றிருந்தது. ஆண்கள், பெண்கள் என இருசாராரும் தங்கம், வெள்ளி அணிகலன்களைப் பயன்படுத்தினர்.
  • மோதிரங்கள், காப்புகள், பதக்கங்கள் அணியும் பழக்கம் இருந்திருக்கிறது. பெண்கள் அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தினர்.

4. உணவு பழக்க வழக்கங்கள்:

  • இந்தியாவிலும் மரக்கறி உணவுப் பழக்கத்தைக் கொண்டிருந்ததாக புவான் – சுவாங் தனது குறிப்பில் கூறியுள்ளார்.
  • சமையலில் வெங்காயம், பூண்டு ஆகியவை அரிதாகவே பயன்படுத்தப்பட்டன. உணவுத் தயாரிப்பில் சர்க்கரை, பால், நெய், அரிசி ஆகியவற்றின் பயன்பாடு சாதாரணமாக வழக்கத்தில் இருந்தது.
  • சில நேரங்களில் மீனும், ஆட்டிறைச்சியும் உண்ட னர்.

5. கல்வி :

  • மடாலயங்களில் கல்வி போதிக்கப்பட்டது.
  • கற்றல் என்பது மதம் சார்ந்த ஒன்றாக இருந்தது.
  • வாய்மொழியாகவே வேதங்கள் கற்பிக்கப்பட்டன. அவை ஏட்டில் எழுதப்படவில்லை .
  • சமஸ்கிருதமே கற்றிருந்தோரின் மொழியாக இருந்தது. கல்வி கற்கும் வயது 9 முதல் 30 வரையாகும்.
  • ஒழுக்கமும் அறிவுத் திறனும் கொண்ட சாதுக்களையும் பிட்சுகளையும் மக்கள் பெரிதும் மதித்தனர். யுவான் சுவாங் மேற்கண்டவாறு வட இந்தியாவின் நிலை குறித்த தனது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

Samacheer Kalvi 11th History Guide Chapter 8 ஹர்ஷர் மற்றும் பிரதேச முடியரசுகளின் எழுச்சி

Question 4.
பௌத்த மதத்திற்கு பாலர்கள் ஆற்றிய பங்களிப்பு என்ன?
Answer:
பாலர்களின் அரசு கிழக்கு வங்காளத்தில் அமைந்திருந்தது. முதல் மன்னர் கோபாலர், அடுத்து ஆட்சிக்கு வந்தவர் அவரது மகன் தர்ம பாலர் (பெ.ஆ.770-815).
தர்மபாலரும் பௌத்தமும் :

  • பௌத்த மதத்தின் பெரும் ஆதரவாளராக இருந்தார்.
  • பீகாரில் பாகல்பூர் மாவட்டத்தில் விக்ரமசீலா என்னும் பௌத்த மடாலயத்தை நிறுவினார். அது பௌத்த மத கோட்பாட்டை போதிக்கும் சிறந்த
    மையமாக உருவானது.
  • சோமபுரியில் பெரிய பௌத்த விகாரம் ஒன்றும் பீகார் – ஓடாண்டபுரியில் ஒரு பௌத்த மடாலயத்தையும் கட்டினார்.
  • ஹரிஷ்பத்ரர் என்ற பௌத்த மத எழுத்தாளரையும் ஆதரித்தார்.

தேவபாலரும் பௌத்தமும்:

  • பௌத்த மதத்திற்கு பெரும் ஆதரவாளராய் இருந்தார்.
  • சுவர்ணதீப அரசன் பாலபுத்ர தேவரால் நாளந்தாவில் கட்டப்பட்ட பௌத்த மடாலயத்தை பராமரிப்பதற்காக 5 கிராமங்களை தேவபாலர் கொடையாக வழங்கினார்.
  • இவரது ஆட்சியில் நாளந்தா பௌத்தமதக் கொள்கைகளை போதிக்கும் முதன்மையான மையமாகத் திகழ்ந்தது.

பாலர் வம்சத்து அரசர்கள் பௌத்த மதத்தின் மகாயானப்பிரிவை ஆதரித்தனர். பௌத்த மத தத்துவ ஞானியான ஹரிபத்ரர் தர்மபாலருக்கு ஆன்மீக குருவாக விளங்கினார்.

பாலர் வம்ச ஆட்சி காலத்தில் வங்காளம் பௌத்தமாக மடாலயங்களின் இருப்பிடங்களுள் ஒன்றாக விளங்கியது.

Question 5.
ராஷ்டிரகூடர்களின் சிறப்புகள் யாவை?
Answer:
இராட்டிரகூட முதல் மன்னர் தந்தி கர்க்கர் இவருக்குப்பின் முதலாம் கிருஷ்ணர் மூன்றாம் கோவிந்தன் அமோகவர்ஷர் போன்ற சிறந்த மன்னர்கள் ஆட்சி செய்தனர். இவர்களது கால இலக்கியம், கலை, கட்டிடக்கலை சிறப்பு வாய்ந்ததாகும்.

இலக்கியம் : இவர்களது காலத்தில் கல்வி நிலையம் மேம்பட்டு இருந்தது.

  • முதலாம் அமோகவர்ஷன் “கவிராஜ மங்களம் ” என்னும் கன்னட நூலை இயற்றினார். இது கன்னடத்தில் இயற்றப்பட்ட முதல் மொழியியல்
    நூலாகும்.
  • ஜூனசேனர் என்பவர் சமணர்களின் ஆதிபுராணத்தை இயற்றினார்.
  • மூன்றாம் கிருஷ்ணர் கன்னட இலக்கியத்தின் மூன்று ரத்தினங்களாக போற்றப்பட்ட

கவிசக்ரவர்த்தி பொன்னா
ஆதிகவிபம்பா
கவிச்சக்ரவர்த்திரன்னா
ஆகியோர்களை ஆதரித்தார்,

கட்டிடக்கலை :
ராஷ்டிர கூடர்கள் கட்டிடக் கலைக்கும் சிற்பக்கலைக்கும் வியத்தகு பங்களிப்பை வழங்கியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள எல்லோரா, எலிஃபண்டா குடவரைக் கோயில்கள் இவர்களது கலைத்திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

எல்லோரா :

  • எல்லோரா குடவரைக் கோயில் சமண, பௌத்த மற்றும் இந்து மத சின்னங்களுக்கான கலை நுட்பத்தைக் கொண்டுள்ளது.
  • இங்கு முதலாம் அமோக வர்ஷர் கட்டிய ஐந்து சமணக்குகைக் கோயில்கள் உள்ளன.
  • மேலும் இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கைலாச நாதர் கோயில் நம் கண்ணைக் கவரும் அமைப்பாகும்.

எலிபாண்டா :

  • எலிபாண்டாவின் பிரதானக் கோயில் எல்லோரா கோயிலை விட சிறந்தாகும்.
  • இங்குள்ள “மகேஷ்மூர்த்தியின்” மூன்று முகங்கள் கொண்ட 25 அடி உயரமுள்ள மார்பளவு சிலை இந்தியாவில் உள்ள கவின்மிகு சிற்பங்களுள் ஒன்றாகும்.
  • இதுபோன்று இன்னும் ஏராளமாக உள்ளது. இவ்வாறு இராஷ்டிரக் கூடர்கள் கட்டிடக் கலைக்கு செய்த தொண்டு அளவிட முடியாததாகும்.

Leave a Reply