Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு

குறுவினா

Question 1.
வளருங் காவில் முகில்தொகை ஏறும் – பொன்
மாடம் எங்கும் அகிற்புகை நாறும் – அடிக்கோடிட்ட தொடர் குறிப்பிடுவது என்ன?
Answer:

  • ‘சோலையில் மேகக்கூட்டம் ஏறும்’ என்பது பொருள். அதாவது, தென்கரை நாட்டின் மரங்கள் உயர்ந்து வளர்ந்த சோலைகளில், மேகக்கூட்டம் தங்கிச் செல்லும் என்பதாகும்.
  • மரங்கள் நிறைந்த இடத்தில் மழை பொழியும் என்னும் குறிப்பை, இதன்மூலம் அறியமுடிகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு

கூடுதல் வினா

Question 2.
‘பள்ளு’ – குறிப்பு வரைக.
Answer:

  • ‘உழத்திப் பாட்டு’ என அழைக்கப்படும் பள்ளு, தொண்ணூற்றாறு வகைச் சிற்றில் குதியங்களுள் ஒன்று.
  • கலிப்பா, கலித்துறை, சிந்து ஆகிய பா வகைகளால் பாடப்படுகிறது.
  • உழவர், உழத்தியர் வாழ்வில் நிகழும் நிகழ்ச்சிகளை, எளியநடையில் நயம்படக் கூறுகிறது.

Question 3.
‘புலன்’ எனத் தொல்காப்பியம் எதனைக் கூறுகிறது?
Answer:
பாமர மக்களுக்கு முதன்மை அளித்து உருவாக்கப்பட்ட இலக்கிய வகைகளான குறவஞ்சி, பள்ளு முதலானவற்றைத் தொல்காப்பியம் ‘புலன்’ எனக் குறிப்பிடுகிறது.

Question 4.
இளைய பள்ளி ‘காக்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளவை எவை?
Answer:

  • தென்கரை நாட்டை முருகன் கைவேலும், ஊர்தியான மயிலும் காக்கும்.
  • நாட்டை மன்னனின் செங்கோல் ஆட்சி பாதிகாக்கும் என, இளைய பள்ளி குறிப்பிட்டுள்ளாள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு

சிறுவினா

Question 1.
“சலச வாவியில் செங்கயல் பாயும்” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம் : திருமலை முருகன் பள்ளுவில், வடகரை நாட்டின் வளத்தைக் கூறும்போது, ‘சலச வாவியில் செங்கால் பாயும்’ என்று, பெரியவன் கவிராயரால் கூறப்படுகிறது.

பொருள் : நீர் நிறைந்த தாமரைத் தடாகத்தில், செம்மையான கயல்மீன்கள் துள்ளிப்பாய்ந்து, விளையாடும் என்பது பொருளாகும்.

விளக்கம் : வடகரை நாடு நீர் நில வளம் மிக்கது. அங்குத் தாமரை நிறைந்த குளத்தில், கயல் மீன்கள் அக்கமின்றித் துள்ளிப் பாய்ந்து விளையாடும்; மீனைப் பிடித்துண்ண வந்து சங்கிலியில் அமர்ந்துள்ள உள்ளான் பறவை, வண்டுகளின் இசையில் மயங்கி, வாலை ஆட்டியபடி அமர்ந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் வடகரை நாட்டின் நீர், நிலவளம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு

கூடுதல் வினா

Question 2.
திருமலை முருகன் பள்ளு’ – குறிப்பு எழுதுக.
Answer:
பண்புளிப்பட்டணம், திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்திற்கு அருகிலுள்ள ஊர். இதனைப் ‘பண்பை ‘ எனவும், ‘பண்பொழில்’ எனவும் அழைப்பர். இவ்வூரிலுள்ள சிறுகுன்று திருமலைக் குன்று.

இத்திருமலைக் குன்றில் எழுந்தருளியுள்ள முருகக்கடவுளைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, பெரியவன் கவிராயர் என்பவரால் பாடப்பட்டது, ‘திருமலை முருகன் பள்ளு’.

கலித்துறை, கலிப்பா, சிந்து முதலான பாவகைகளால் பாடப்பட்ட இந்நூல், பள்ளிசை’ எனவும், ‘திருமலை அதிபர் பள்ளு’ எனவும் வழங்கப்படுகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு

நெடுவினா

Question 1.
‘திருமலை முருகன் பள்ளு’ கூறும் வடகரை, தென்கரை நாட்டுப் பாடல்கள்வழி இயற்கை வளங்களை விவரிக்க.
Answer:
திருமலை முருகன் பள்ளு கூறும் வடகரை நாட்டுவளம் :
வடகரை நாட்டில் மலரில் மொய்க்கும் வண்டுகள், ‘இந்தளம்’ என்ற பண்ணை ரீங்காரமிட்டுப் பாடும். வண்டின் இசைகேட்டு வாய்க்காலில் மதகுகளிடையே கட்டப்பட்ட சங்கிலியில், மீனைப் பிடித்து உண்பதற்காக வந்த உள்ளான் பறவை, வாலை ஆட்டிக்கொண்டு அமர்ந்திருக்கும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு

தாமரைத் தடாகத்தில் மீன்கள் துள்ளிப் பாய்ந்து விளையாடும், முத்துகளை ஈன்ற வெண்மையான சங்குகள் பரவிக் காணப்படும். மின்னலையொத்த பெண்கள், பெய் என்றால் மழை பெய்யும். உள்ளங்கை ஏந்தி இரந்து உண்ணும் இயல்புடைய முனிவர்கள் கூறும் வார்த்தைகள் மெய்யாகும். இத்தன்மை கொண்ட திருமலையில், புலவர்கள் போற்றுகின்ற திருமலைச் சேவகன் வீற்றிருக்கின்றார்.

திருமலை முருகன் பள்ளு கூறும் தென்கரை நாட்டுவளம் :
தென்கரை நாட்டின் நீண்டு வளர்ந்த சோலையில், மேகக் கூட்டங்கள் தங்கி செல்லும். இந்நாட்டில் உள்ள பொன்னாலான மாடமாளிகைகளில், அகில்புகையின் நறுமணம் பாடிக்கொண்டே இருக்கும். இம்மாளிகைகளை மயில்களும் கார்கால மேகங்களும் சூழ்ந்து காக்கும். செங்கோலைக் கொண்ட மன்னர், தென்கரை நாட்டை நீதி தவறாமல் காவல் காப்பர். இளைய பெண்கள், பொன்னாலான அரங்கில் நடித்து விளையாடி மகிழ்ந்திருப்பர்.

இங்குள்ள குளங்களின் அலைகள், முத்துகளை ஏந்தி வரும்; பலவலைகள், கரைகளில் மோதும்பொழுது முத்துகள் சிதறி வெடிக்கும். இத்தன்மை கொண்ட குற்றாலத்தில் வண்டுகள் மொய்க்கும் கொன்றைமலரைச் சூடிய தென்னாடுடைய சிவபெருமானாகிய குற்றாலநாதர் வீற்றிருக்கின்றார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு

இலக்கணக்குறிப்பு

செங்கயல், வெண்சங்கு – பண்புத்தொகைகள்.
அகில்புகை, முகில்தொகை – ஆறாம் வேற்றுமைத்தொகைகள்.
கொன்றை சூடு – இரண்டாம் வேற்று மத்தொகை.

இந்துளம் பாடும், வந்துளம் ஆடும், கயல் பாயும், சங்கயல் மேயும், பெய்யெனப் பெய்யும், செய்யெனச் செய்யும், முகில்தொகை ஏறும், புகை நாறும், கொண்டலும் காக்கும், மண்டலங் காக்கும், அரங்கில் நடிக்கும், தரங்கம் வெடிக்கும் – ‘செய்யும் என்னும் வாய்ப்பாட்டு வினைமுற்றுகள்.

போற்றும் திருமலை. ஒளருங்காவில், சூடும் ஐயன் – பெயரெச்சங்கள்.
மஞ்சையும் கொண்டலும் – எண்ணும்மை.
ஏற்பவர் – வினையாலணையும் பெயர்.
மடை இடங்கணி, வாவித்தரங்கம் – ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைகள்.
ஈன்ற சங்கு – பெயரெச்சம்.
எந்தி வெடிக்கும் – வினையெச்சம்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு

உறுப்பிலக்கணம்

1. ஈன்ற – ஈன் + ற் + அ
ஈன் – பகுதி, ற் – இறந்தகால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.

2. அலர்ந்து – அலர் + த் (ந்) + த் + உ
அலர் – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
உ – வினையெச்ச விகுதி.

3. ஆடுகம் – ஆடு + க் + அம்
ஆடு – பகுதி, க் – சந்தி, அம் – தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி.

4. விரைந்து – விரை + த் (ந்) + த் + உ
விரை – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
உ – வினையெச்ச விகுதி.

5. ஆடும் – ஆடு + உம்
ஆடு – பகுதி, உம் – பெயரெச்ச விகுதி.

6. பெய்யும் – பெய் + ய் + உம்
பெய் – பகுதி, ய் – சந்தி, உம் – பெயரெச்ச விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு

7. போற்றும் – போற்று + உம்
போற்று – பகுதி, உம் – பெயரெச்ச விகுதி.

8. நடிக்கும் – நடி + க் + க் + உம்
நடி – பகுதி, க் – சந்தி, க் – எதிர்கால இடைநிலை, உம் – பெயரெச்ச விகுதி.

9. காக்கும் – கா + க் + க் + உம்
கா – பகுதி, க் – சந்தி, க் – எதிர்கால இடைநிலை, உம் – பெயரெச்ச விகுதி

10. வெடிக்கும் – வெடி + க் + க் + உம்
வெடி – பகுதி, க் – சந்தி, க் – எதிர்கால இடைநிலை, உம் – பெயரெச விகுதி.

11. ஏந்தி – ஏந்து + இ
ஏந்து – பகுதி, இ – வினையெச்ச விகுதி.

புணர்ச்சி விதி

1. செங்கயல் – செம்மை + கயல்
ஈறுபோதல்” (செம் + கயல்), “முன்நின்ற மெய் தந்தல்” – (செங்கயல்)

2. அளியுலாம் – அளி + உலாம்
“இஈ ஐவழி யவ்வும்” (அளி + ய் + உலாம் )
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” – (அளியுலாம்)

3. வெண்சங்கு – வெண்மை + சங்கு
“ஈறுபோதல்” (வெண்சங்கு)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு

4. திருமலைச்சேவகன் – திருமலை) + சேவகன்
“இயல்பினும் விதியினும் என்ற உயிர்முன் கசதப மிகும்” (திருமலைச்சேவகன் )

5. மண்டலங்காக்கும் – மண்டலம் + காக்கும்
“மவ்வீறு ஒற்று நாமைக்கு இனமாத் திரியும்” (மண்டலங்காக்கும்)

பலவுள் தெரிக (கூடுதல் வினாக்கள்)

Question 1.
‘தரளம் என்ற சொல்லின் பொருள் ………….
அ முத்து
ஆ) பவளம்
இ) மாணிக்கம்
ஈ) வைடூரியம்
Answer:
அ) முத்து

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு

Question 2.
சாளு’ என்ற இலக்கிய வடிவத்தின் வேறுபெயர்………………..
அ) கவிப் பாட்டு
ஆ) இயற்கைப் பாட்டு
இ) உழத்திப் பாட்டு
ஈ) வயல் பாட்டு
Answer:
இ) உழத்திப் பாட்டு

Question 3.
‘திருமலை முருகன் பள்ளு’ நூலை இயற்றியவர்………………..
அ) அழகிய பெரியவன்
ஆ) பெரியவன் கவிராயர்
இ) வில்வரத்தினம்
ஈ) திரிகூடராசப்பர்
Answer:
அ) அழகிய பெரியவன்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு

Question 4.
திருமலை முருகன் பள்ளுக்கு வழங்கும் வேறு பெயர்கள்……………………
அ) பள்ளிசை குறவஞ்சி
ஆ) திருமலை அதிபர் பள்ளு குறத்திப்பாட்டு
இ) திருமலை முருகன் பள்ளு, பள்ளிசை
ஈ) முக்கூடற்பள்ளு, பள்ளிசை
Answer:
இ) திருமலை முருகன் பள்ளு, பள்ளிசை

Question 5.
‘வட ஆரியநாடு’ என வழங்கப் பெறுவது…………..
அ) குற்றாலம்
ஆ) பண்பை
இ) பண்புளிப்பட்டணம்
ஈ) திருமலை
Answer:
ஈ) திருமலை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு

Question 6.
‘தென் ஆரியநாடு’ என வழங்கப்பட்டது…………….
அ) திருமலை
ஆ) பண்பொழில்
இ) பேரணாம்பட்டு
ஈ) குற்றாலம்
Answer:
ஈ) குற்றாலம்

Question 7.
‘திருமலை முருகன் பள்ளு’வில் ‘திருமலை’ எனக் குறிப்பிடப்படுவது………………
அ) குற்றாலம்
ஆ) தென் ஆரியநாடு
இ) வட ஆரியநாடு
ஈ) திருநெல்வேலி
Answer:
இ) வட ஆரியநாடு

Question 8.
பொருத்துக
i) இந்துளம் – 1. மயில்
ii) இடங்கணி – 2. ஒருவகைப் பண்
iii) தரளம் – 3. சங்கிலி
iv) மஞ்ஞை – 4. முத்து
அ) 2, 3, 4, 1
ஆ) 3, 4, 2, 1
இ) 4, 3, 2, 1
ஈ) 2, 1, 4, 3
Answer:
அ) 2, 3, 4, 1

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு

Question 9.
வளருங்காவில் முகில்தொகை ஏறும் – பொன்
மாடம் எங்கும் அகிற்புகை நாறும்
குளிரும் மஞ்ஞையும் தொடைலும் காக்கும்
கோல்முறை மன்னர் மண்டலங் காக்கும் – இயைபுத் தொடையைத் தெரிவு செய்க.

அ) வளரும் காவில்ல – முகில்தொகை
ஆ) மாடம் எங்கு – அகில்புகை
இ) ஏறும் நாறும் – காக்கும் காக்கும்
ஈ) குளிரும் மஞ்ஞையும் – கொண்டலும் மண்டலம்
Answer:
இ) ஏறும் நாறும் – காக்கும் காக்கும்

Question 10.
முஞ்ஞை ‘ என்பது …………….. குறிக்கும்.
அ) வண்டை
ஆ) சேவலை
இ) மயிலை
ஈ) உள்ளான் பறவையை
Answer:
இ) மயிலை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு

Question 11.
‘இந்தளம்’ என்பது……………..
அ) ஒருவகைப் பண்
ஆ) வண்டு
இ) மயில்
ஈ) உள்ளான் பறவை
Answer:
அ) ஒருவகைப் பண்

Question 12.
‘அளி’ என்பது …………… குறிக்கும்.
அ) முத்தை
ஆ) வண்டை
இ) சோலையை
ஈ) உள்ளானை
Answer:
ஆ) வண்டை

Question 13.
பொருத்துக.
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு - 1
Answer:
1-இ, 2-உ, 3-ஈ, 4-அ

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு

Question 14.
பொருத்துக.
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு - 2
Answer:
1-ஈ, 2-உ, 3-அ, 4-ஆ

Question 15.
பொருத்துக
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு - 3
Answer:
1-உ, 2-இ, 3-ஈ, 4-அ

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

குறுவினா

Question 1.
உயிரெழுத்து, பன்னிரண்டு, திருக்குறள், நாலடியார் – இச்சொற்களில் எவ்வகை ஈற்றெழுத்துகள் அமைந்துள்ளன?
Answer:

  • உயிரெழுத்து (த் + உ), பன்னிரண்டு (ட் உ); உயிர் எழுத்து (குற்றியலுகர) ஈறு.
  • திருக்குறள், நாலடியார் – மெய்எழுத்து ஈறு.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

கூடுதல் வினாக்கள்

Question 2.
புணர்ச்சி என்பது யாது?
Answer:
நிலைமொழியும் வருமொழி மான் இருசொற்கள் இணைவது புணர்ச்சி எனப்படும்.

Question 3.
சொல்லுக்கு இறுதியில் வாராத எழுத்துகள் எவை?
Answer:
க், ச், ட், த், ப், ம் என்னும் வல்லின மெய்களும், ‘ங்’ என்னும் மெல்லின மெய்யும் சொல்லுக்கு இறுதியில் வாரா.

Question 4.
இலக்கணவகைச் சொற்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:

  • இலக்கணவகைச் சொற்கள், நான்கு வகைப்படும்.
  • அவை வயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்.

Question 5.
பெயரையும் வினையையும் சார்ந்துவரும் சொற்கள் எவை?
Answer:

  • இகடைச்சொற்களும் உரிச்சொற்களும் தனித்து வாரா;
  • பெயர்ச்சொற்களையும் வினைச்சொற்களையும் சார்ந்து வரும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

Question 6.
குற்றியலுகர எழுத்துகள் யாவை?
Answer:
வல்லின மெய்களின்மேல் ஊர்ந்த கு, சு, டு, து, பு, று என்னும் ஆறு எழுத்துகளும் குற்றியலுகர எழுத்துகள் எனப்படும்.

Question 7.
குற்றியலுகர நிலைமொழி என்பதை விளக்குக.
Answer:
குற்றியலுகரத்தை ஈற்றில் பெற்ற சொல், வருமொழியோடு புணரும்போது, ‘குற்றியலுகர நிலைமொழி’ எனப்படும்.
எ – கா : பாக்கு + இல்லை – பாக்கில்லை. இதில் ‘பாக்கு’ என்பது குற்றியலுகர நிலைமொழி.

சிறுவினா

Question 1.
மொழிமுதல், மொழியிறுதி எழுத்துகள் யாவை? ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டுத் தருக.
Answer:

மொழிமுதல் வரும் எழுத்துகள் : பன்னிரண்டு உயிர் எழுத்துகளும், க், ங், ச், ஞ், த், ந், ப், ம், ய், வ் என்னும் பத்து மெய்யெழுத்துகள் உயிரெழுத்துகளோடு சேர்ந்தும் மொழிக்கு முதலில் வரும்.

எ – கா : அன்பு (அ), ஆடு (ஆ), இலை (இ) ஈகை (ஈ) உரல் (உ), ஊசி (ஊ) எருது (எ), ஏணி (ஏ) ஐந்து (ஐ) ஒன்று (ஒ) ஓணான் (ஓ) ஔவை (ஔ) என, உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு முதலில் வரும்.

(க்+அ) கலம், (ங்+அ) ஙனம், (ச்+அ) சங்கு , (ஞ்+அ) ஞமலி, (த்+அ) தமிழ், (ந்+அ) நலம்,
(ப்+அ) பழம், (ம்+அ) மலர், (ய் +அ) யவனம், (வ்+அ) வளம் என, மெய் எழுத்துகள் பத்தும் மொழிக்கு முதலில் வரும்.

மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள் : உயிர் எழுத்துகள் பன்னிரண்டும், ஞ், ண், நாம், ன், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் பதினொரு மெய்யெழுத்துகளும், (கு, சு, டு, து, ன் என்னும் ) குற்றியலுகரம் ஒன்றும் ஆக இருபத்து நான்கு எழுத்துகள், மொழிக்கு இறுதியில் வரும்.

எ – கா : பல (அ), பலா (ஆ), கிளி (இ), தேனீ (ஈ), தரு (உ), பூ (ஊ) (எ. ஒரே (ஏ), தளை (ஐ), (ஒ), பலவோ (ஓ), கௌ (ஔ) என, உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு இறுதியில் வரும்.

உரிஞ் (ஞ்), மண் (ண்), வெரிந் (ந்), பழம் (ம்), அறன் (ன்), மெய் (ய), அவர் (ர்), அவல் (ல்), அவ் (வ்), தமிழ் (ழ்), அவள் (ள்) என, மெய்யெழுத்துகள் பதினொன்று மொழிக்கு இறுதியில் வரும்.

பாக்கு (கு), பஞ்சு (சு), எட்டு (டு), பந்து (து), சால்பு (பு), கயிறு (று) எனக் குற்றியலுகர எழுத்துகள் மொழிக்கு இறுதியில் வரும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

பலவுள் தெரிகள்

Question 1.
மொழிமுதல் எழுத்துகளின் அடிப்படையில் முலையா னதைக் கண்டுபிடிக்க.
அ) அன்னம், கிண்ண ம்
ஆ டமாரம், இங்ஙனம்
இ) ரூபாய், இலட்சாதிபதி
ஈ) றெக்கை, அங்ஙனம்
Answer:
அ) அன்னம், கிண்ணம்

கூடுதல் வினாக்கள்

Question 2.
மொழி முதலில் வரும் தமிழ் எழுத்துகள் எத்தனை?
அ) பன்னிரண்டு
ஆ) பதினெட்டு
இ) இருபத்து நான்கு
ஈ) இருபத்து இரண்டு
Answer:
ஈ) இருபத்து இரண்டு

Question 3.
மொழி இறுதில் வரும் தமிழ் எழுத்துகள் எத்தனை?
அ) பன்னிரண்டு
ஆ) பதினெட்டு
இ) இருபத்து நான்கு
ஈ) இருபத்து இரண்டு
Answer:
இ) இருபத்து நான்கு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

Question 4.
பெரம முதலில் வரும் மெய்யெழுத்துகள்………………
அ) க ச் ட் த் ற்
ஆ) ங் ஞ் ண் ந் ம் ன்
இ) யர் ல் வ் ழ் ள்
ஈ) க் ங் ச் ஞ் த் ம் ய் வ்
Answer:
ஈ) க் ங் ச் ஞ் த்ம்ய்வ்

Question 5.
மொழி இறுதியில் வரும் மெய்யெழுத்துகள் ……………
அ) ய் ர் ல் வ் ழ் ள்
ஆ) க் ச் ட் த் ப் ற்
இ) ஞ் ண் ந் ம் ன் ய் ர் ல் வ் ழ் ள்
ஈ) க் ச் த் ம் ய் ஞ் ங்
Answer:
இ) ஞ் ண் ந் ம் ன் ய் ர் ல் வ் ழ் ள்

Question 6.
தவறான இணையைத் தெரிவு செய்க.
அ) கயல் + விழி – பெயர் + பெயர்
ஆ) தமிழ் + கற்றாள் – பெயர் + வினை
இ) வந்தாள் +மகாலட்சுமி – வினை +வினை
ஈ) தொழுதனர் +மக்கள் – வினை + பெயர்
Answer:
இ) வந்தாள் +மகாலட்சுமி – வினை+வினை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

இலக்கணத் தேர்ச்சிகொள்

Question 1.
தவறான இணையைத் தேர்வு செய்க.
அ) மொழி + ஆளுமை – உயிர் + உயிர்
ஆ) கடல் + அலை – உயிர் + மெய்
இ) தமிழ் + உணர்வு – மெய் + உயிர்
ஈ) மண் + வளம் – மெய் + மெய்
Answer:
ஆ) கடல் + அலை – உயிர் + மெய்

Question 2.
கீழ்க்காணும் குறிப்புகளில் பொதிந்துள்ள மேடைப்பேச்சில் சிறந்து விளங்கிய தமிழறிஞர்களின் பெயர்களைக் கண்டறிக.
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள் - 1

அ) சென்னை மாகாணத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்த முதல்வர் (3)
Answer:
அறிஞர் அண்ணா

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

ஆ) தொழிலாளர்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர் (10)
Answer:
திரு. வி. கலியாணசுந்தரனார்

இ) “உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே” என்று பாடியவா (6)
Answer:
பாரதிதாசன்

ஈ) பொதுவுடைமைக் கொள்கையின் முன்னோடிகளில் ஒருவர் (6)
Answer:
ஜீவானந்தம்

Question 3.
பேச்சுவழக்கை எழுத்துவழக்காக மாற்றுக.
அ) காலங்காத்தால எந்திரிச்சு படிச்சா ஒரு தெளிவு கெடைக்கும்.
Answer:
அதிகாலையில் எழுந்திருந்து படித்தால் ஒரு தெளிவு கிடைக்கும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

ஆ) முயற்சி செஞ்சா அதுக்கேத்த பயன் வராம போவாது..
Answer:
முயற்சி செய்தால் அதற்கேற்ற பயன் வராமல் போகாது

இ) காலத்துக்கேத்த மாரி புதுசு புதுசா மொழி வடிவத்த பாத்தனும்
Answer:.
காலத்திற்கேற்ற மாதிரி புதிது புதிதாக மொழி வடிவத்தை மாற்ற வேண்டும்.

ஈ) ஒவ்வொருத்தரும் பேசிக்கிட்டிருக்கும்போது எல்லாத்தையும் கவனமா பதிய வைக்கனும்.
Answer:
ஒவ்வொருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது, எல்லாவற்றையும் கவனமாகப் பதியவைக்க வேண்டும்.

உ) தேர்வெழுத வேகமாப் போங்க, தெரங்கழிச்சி போனா பதட்டமாயிரும்.
Answer:
தேர்வெழுத வேகமாகப் போர்கள், நேரம் கழித்துப் போனால் பதற்றமாகிவிடும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

Question 4.
வினாக்கள்

அ) மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள் எத்தனை? அவை யாவை?
Answer:
மொழிக்கு முதல் வரும் எழுத்துகள் இருபத்திரண்டு. அவை உயிரெழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகளில் க், ச், த், ப், ங், ஞ், ந், ம், ய், வ் என்னும் பத்து ஆக இருபத்திரண்டு.
எ – டு :

i) அன்பு, ஆடு, இலை, ஈகை, உரல், ஊசி, எருது, ஏணி, ஐந்து, ஒன்று, ஓணாண், ஔவை – இவை
உய முதல் எழுத்துகளாக அமைந்தன.

ii) கலம், ஙனம், சங்கு, ஞமலி, தமிழ், நலம், பழம், மலர், யவனம், வளம் – இச்சொற்களில் மெய்கள்
முதலில் நிற்பதால் மெய்முதலாகும்.
“பன்னீ ருயிரும் கசதந பமவய
ஞங ஈரைந்து உயிர்மெய் மொழிமுதல்” என்பது நன்னூல் நூற்பா (102)].

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

ஆ) மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள் எத்தனை? எடுத்துக்காட்டுத் தருக.
Answer:
மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள் இருபத்து நான்கு. அவை, உயிரெழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகளில் ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய பதினொன்று, குற்றியலுகரம் ஒன்று ஆக இருபத்து நான்கு ஆகும்
எ – டு : i) தமிழ் – ஈற்றெழுத்து ‘ழ்’ மெய்யீறு.
ii) கிளி – ஈற்றெழுத்து ‘ளி’ (ள் + இ); எனவே, உயிரீறு.
iii) ஆறு – ஈற்றெழுத்து ‘று’, குற்றியலுகரம்; எனவே, குற்றியலுகர ஈறு.

“ஆவி ஞணநமன யரலவ ழளமெய்
சாயும் உகரம் நாலாறும் ஈறே” என்பது நன்னூல் நூற்பா (107)].
(ஆவி – உயிரெழுத்து. சாயும் உகரம் – குற்றியலுகரம்.)

இ) உயிரீறு, மெய்யீறு – விளக்குக.
Asnwer:
உயிரீறு : சொல்லின் (நிலைமொழியின்) இறுதியில் உயிரெழுத்து அமைவது உயிரீறு.
எ-கா : அருவி (வ்+இ), மழை (ழ்+ஐ) – இ, ஐ என்னும் உயிர் எழுத்துகள் ஈறுகளாக அமைந்தன.
மெய்யீறு : சொல்லின் (நிலைமொழியின்) இறுதியில் மெய் எழுத்து அமைவது மெய்யீறு.
எ – கா : தேன் (ன்), தமிழ் (ழ்) – ன், ழ் என்னும் மெய் எழுத்துகள் ஈறுகளாக அமைந்தன்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

ஈ) உயிர்முதல், மெய்ம்முதல் – எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answer:
உயிர்முதல் : சொல்லுக்கு (வருமொழியின்) முதலில் உயிர் எழுத்து வருவது கார் முதல் ஆகும். எ – கா : அம்மா (அ), ஆடு (ஆ), ஐவர் (ஐ), ஔவையார் (ஔ) – முதலில் உயிர் எழுத்துகள் வந்ததால் உயிர் முதலாகும்.

மெய்ம்முதல் : சொல்லுக்கு (வருமொழியின்) முதலில் க், ச், த், ப், ங், ஞ், ந், ம், ய், வ் என்னும் பத்து எழுத்துகளில் ஒன்று, முதலில் வருவது மெய்ம்முதலாகும்.
எ – கா : கதவு (க் + அ = க), சங்கு (ச் + அ = ச), பந்து ( + அ = ப) – என, மெய்யெழுத்துகள் முதலில் வந்தன.

உ) குரங்குக்குட்டி – குற்றியலுகரப் புணர்ச்சியை விளக்குக.
Answer:
குரங்கு + குட்டி = குரங்குக்குட்டி. ‘குரங்கு என்னும் நிலைமொழியின் இறுதியில் ‘கு’ குற்றியலுகரமாக அமைந்தது. ‘குட்டி’ என்னும் வருமொழியில் ‘க்’ வல்லினமெய் வந்தது. இப்புணர்ச்சியில், ‘இருபெயரொட்டுப் பண்டுத்தொகையில் வல்லினம் மிகும்’ என்னும் விதிப்படி, ‘குரங்குக்குட்டி’ எனப் புணர்ந்தது. (“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்”
என்னும் விதிப்படி புணர்ந்ததாகவும் கொள்ளலாம்.)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

ஊ) ‘ங்’ என்னும் மெய் எவ்வாறு சொல்லுக்கு முதலில் வரும்?
Answer:
‘ங்’ என்னும் மெய், அகரத்துடன் சேர்ந்து (ங் + அ ) ‘ங’ எனச் சொல்லுக்கு முதலில் ‘ஙனம்’ (விதம்) என வரும்.
இச்சொல்லும், சுட்டெழுத்துகள், வினா எழுத்துகளுடன் இணைந்தே வரும்.
எ – கா : அங்கனம். இங்ஙனம், உங்ஙனம், எங்ஙனம், யாங்ஙனம்.

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்

“தமிழ் இலக்கிய வரலாற்றில், கம்பருக்குப் பின்னர், ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்தபின், வாராது வந்துதிக்க புலமைக் கதிரவன்” எனத் தமிழறிஞர்கள் போற்றிய தென்மொழிப் பெரும்புலவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார் ஆவார். திருச்சிராப்பள்ளி அருகில் உள்ள அதவத்தூர் என்னும் ஊரில் பிறந்த இவர், திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராக விளங்கினார்.

‘மீனாட்சிசுந்தரனார், தமிழறிஞர்களைத் தேடிக் கண்டு, வழிபட்டு, செவிதிறந்து கற்றார். திருவாவடுதுறை மடத்தின் தலைவர் சுப்பிரமணிய தேசிகர், சென்னைத் தாண்டவராயர், திருத்தணிகை விசாகப் பெருமாள் ஆகியோரிடம் பூக்கள் தோறும் சென்று தேனுண்ணும் வண்டுபோல் பாடம் கற்றார்.

அவர் இயற்றிய சேக்கிழார் பிள்ளைத்தமிழ் என்ற நூல், அவருடைய பெருமையை என்றும் உணர்த்தும். தல புராணங்கள் பாடுவதில் சிறந்தவர். யமக அந்தாதி, திரிபந்தாதி, வெண்பா அந்தாதிகள் ஆகியவற்றை உருவாக்கிப் புகழ் பெற்றார். மாலை, கோவை, கலம்பகம், பிள்ளைத்தமிழ் ஆகியவற்றைப் பாடிப் பெருமை அடைந்தார். உ.வே. சாமிநாதர், தியாகராசர், குலாம்காதிறு நாவலர் போன்றோர், இவரின் மாணவர்கள். மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரனார் அவர்களின் புகழ், தமிழ் உள்ளவரையிலும் வாழும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

Question 1.
தமிழிலக்கிய வரலாற்றில் புலமைக் கதிரவன் – இத்தொடரில் புலமைக் கதிரவன் என்பதற்கு இலக்கணக்குறிப்புத் தருக.
Answer:
புலமைக் கதிரவன் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை.

Question 2.
மேற்கண்ட பத்தியில் இடம்பெற்றுள்ள உவமை, உருவகத் தொடர்களைக் கண்டறிக.
Answer:
புலமைக் கதிரவன் – உருவகத் தொடர்.
(பூக்கள்தோறும் சென்று தேனுண்ணும்) வண்டுபோல் – உவமைத்தொடர்.

Question 3.
மீனாட்சிசுந்தரனார் தலபுராணங்கள் பாடுவதில் சிறந்தவர் – விடைக்கேற்ற வினாவை அமைக்க.
Answer:
மீனாட்சிசுந்தரனார் எவற்றைப் பாடுவதில் வல்லவர்?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

Question 4.
பத்தியில் மொழிமுதல் எழுத்துகளைக்கொண்டு அமைந்த சொற்களுள் எவையெவை வடமொழிச் சொற்கள் எனச் சுட்டுக.
Answer:
மகாவித்துவான், தலபுராணம், தேசிகர், யமகம், அந்தாதி, கலம்பகம்.

Question 5.
விளங்கினார் – பகுபத உறுப்பிலக்கணம் எழுதுக.
Answer:
விளங்கினார் – விளங்கு + இன் + ஆர்
விளங்கு – பகுதி, இன் – இறந்தகால இடைநிலை, ஆர் – பலர்பால் விலை மாற்று விகுதி.

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. மீனாட்சி சுந்தரனார், பூக்கள் தோறும் சென்று தேனுண்ணும் வண்டு போலப் பாடம் கற்றார்.
வினா : மீனாட்சி சுந்தரனார் எவ்வாறு பாடம் கற்றார்?

2. மீனாட்சி சுந்தரனார், தலபுராணங்கள் பாடுவதில் வல்லவர்
வினா : மீனாட்சி சுந்தரனார் எவற்றைப் பாடுவதில் வல்லவர்?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

தமிழாக்கம் தருக

1. The Pen is mightier than the Sword.
Answer:
எழுதுகோலின் முனை, வாளின் முனையைவு வலிமையானது.

2. Winners don’t do different things, wey do things differently.
Answer:
வென்றோர், வேறுபட்ட செயல்களைச் செய்வதில்லை; அவர்கள் செயல்களை வேறுவிதமாகச்
செய்வார்கள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

3. A picture is worth a thousand words.
Answer:
ஒரு படம் என்பது, ஆயில் வார்த்தைகளைவிட மதிப்புள்ளது.

4. Work while you work and play while you play.
Answer:
உழைக்க வேண்டிய நேரத்தில் உழை! விளையாட வேண்டிய நேரத்தில் விளையாடு!

5. Knowledge rules the world.
Answer:
அறிவே உலகை ஆளுகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

பிறமொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்துக:

வாடகை – குடிக்கூலி
மாதம் – திங்கள்
போலீஸ் – காவலர்
ரிச்சயம் – உறுதி
உத்திரவாதம் – உறுதி
சந்தோஷம் – மகிழ்ச்சி
சம்பளம் – ஊதியம்
ஞாபகம் – நினைவு
வருடம் – ஆண்டு
தேசம் – நாடு

வித்தியாசம் – வேறுபாடு
உற்சாகம் – பூரிப்பு
விசா – நுழைவு இசைவு
பாஸ்போர்ட் – கடவுச்சீட்டு
கம்பெனி – நிறுவனம்
பத்திரிகை – நாளிதழ்
கோரிக்கை – வேண்டுதல்
யுகம் – ஊழி
ராச்சியம் – மாநிலம், நாடு
சரித்திரம் – வரலாறு

முக்கியத்துவம் – முதன்மை
சொந்தம் – உறவு
சமீபம் – அருகில்
தருணம் – உரியவேளை
பந்து – உறவினர்
அலங்காரம் – ஒப்பனை
இலட்சணம் – அழகு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

அனுபவம் – பட்டறிவு
நட்சத்திரம் – விண்மீன்
ஜனங்கள் – மக்கள்
பௌத்திரன் – பெயரன்
நமஸ்காரம் – வணக்கம்
கும்பாபிஷேகம் – குடமுழுக்கு
ஆசீர்வதித்தல் – வாழ்த்துதல்
சம்பிரதாயம் – மரபு
ஜாஸ்தி – மிகுதி
விஷயம் – செய்தி

நாஷ்டா – சிற்றுண்டி
அங்கத்தினர் – உறுப்பினர்
அபூர்வம் – புதுமை
ஆராதனை – வழிபாடு
உபயோகம் – பயன்
அபிஷேகம் – திருமுழுக்கு
ஜென்ம நட்சத்திரம் – பிறந்தநாள்
சிரஞ்சீவி – திருநிறை செல்வன்

கீழ்க்காணும் நிகழ்ச்சிநிரலினைப் படித்து நாளிதழில் செய்தியாக வெளியிட வேண்டி முதன்மை ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.
Answer:
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள் - 2

அனுப்புநர் :
மாணவர் இலக்கிய மன்றத் தலைவர்
அரசு மேல்நிலைப் பள்ளி,
சென்னை – 600 001.

பெறுநர் :
முதன்மை ஆசிரியர்,
தினமணி நாளிதில்
சென்னை – 600 002.

ஐயா, எம் பள்ளியில் டைபெற இருக்கும் திங்கள் கூடுகை நிகழ்வு குறித்த செய்தி அனுப்பியுள்ளேன். அதனை வெளியிட்டு உதவுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

உங்கள்
வேலன்
(மாணவர் தலைவர்)

கைலத் திங்கள் வார இறுதி வெள்ளிக்கிழமை அன்று, அரசு மேனிலைப் பள்ளியில் பிற்பகல் 2. மணிக்கு ‘அரியன கேள் புதியன செய்’ என்னும் அமைப்பின் திங்கள் கூடுகை நிகழ்வு, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குகிறது. மாணவர் இலக்கியச்செல்வன், 2.35 மணிக்கு வரவேற்புரை நிகழ்த்துகிறார். தலைமை ஆசிரியர் திரு. எழிலன் அவர்கள், ‘புலம்பெயர் தமிழரின் வாழ்க்கை ‘ என்னும் தலைப்பில், 2.50 மணிக்குச் சிறப்புரை நிகழ்த்துவார். 3.45 மணிக்கு மாணவர் ஏஞ்சலின் நன்றியுரை கூறிமுடித்தவுடன், 4.00 மணிக்கு நாட்டுப் பண்ணுடன் கூடுகை நிகழ்வு நிறைவு பெறும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

பத்தியினைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க

‘தமிழ்’ என்ற சொல் தமிழர்க்கு இனிமையானது. இனிமையும் நீர்மையும் தமிழெனல்’ ஆகும் என்று, பிங்கல நிகண்டு குறிப்பிடுகிறது. ‘தமிழ்’ என்ற சொல்லை இனிமை, பண்பாடு, அகப்பொருள் என்னும் பொருள்களிலும் வழங்கியுள்ளனர்.

“அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்” என்ற புறநானூற்றுப் பாடலடியில், ‘தமிழ்’ எனும் சொல், மொழி, கவிதை என்பவற்றைத் தாண்டிப் “பல்கலைப் புலமை” என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. “தமிழ்கெழு கூடல்” என்றவிடத்திலும், “கலைப்புலமை ” என்ற பொருளிலே ஆளப்பட்டுள்ளது. கம்பன், “தமிழ் தழீஇய சாயலவர்” என்னும் இடத்து, ‘தமிழ்’ என்பதற்கு அழகும் மென்மையும் பொருளாகின்றன.

தேவாரம் போன்ற பக்தி இலக்கியங்களில், ‘தமிழ்’, பாட்டு என்னும் பொருளில் ஆளப்படுகிறது. ஞானசம்பந்தன் சொன்ன ‘தமிழ் இவை பத்துமே’, ‘மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்’ என்பன எடுத்துக்காட்டுகளாகும். முப்பது பாட்டுகளாலான திருப்பாவையை ஆண்டாள், ‘தமிழ்மாலை’ என்றே குறிப்பது இங்கு எண்ணத்தகும். (‘பண்பாட்டு அசைவுகள்’ – தொ. பரமசிவன்)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

Question 1.
தமிழ் என்னும் சொல்லுக்குரிய பல்வேறு பொருள்கள் யாவை?
Answer:
இனிமை, பண்பாடு, அகப்பொருள் அழகு, மென்மை, பாட்டு என்பன, தமிழ் என்னும் சொல்லுக்குரிய பல்வேறு பொருள்கள்.

Question 2.
பத்தியில் உள்ள அளபெடைகளைக் கண்டறிக.
Answer:
அதூஉம் – செய்யுளிசை அளபெடை, தழீஇய – சொல்லிசையளபெடை.

Question 3.
தமிழ் என்றவுடன் உங்கள் மனத்தில் தோன்றுவதை ஒரு வரியில் குறிப்பிடுக.
Answer:
“தமிழுக்கு அமுதென்று பேர்”

Question 4.
திருப்பாவைக்கு ஆண்டாள் குறிப்பிடும் பெயர் யாது?
Answer:
தமிழ்மாலை.

Question 5.
பத்தியின் மையக்கருத்திற்கேற்ப ஒரு தலைப்பிடுக.
Answer:
காலந்தோறும் தமிழ்.

மொழியோடு விளையாடு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

Question 1.
எண்ணங்களை எழுத்தாக்குக.
Answer:
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள் - 3

வானத்தில் பறந்தென்ன
வண்ணத்தில் சிறந்தென
சொட்டும் நீரின்றி
சொகுசாக வாழ முடியுமா?

Question 2.
தொடரில் உள்ள சொற்களை ஒழுங்குபடுத்தி இரண்டு சொற்றொடர்களாக்குக.
எ – கா : ஓர் பயிர் பறவை வள வேண்டும் அழகான தண்ணீர் மயில்
அ) மயில் ஓர் அழகான பறகை ஆ) பயிர் வளரத் தண்ணீர் வேண்டும்.
i) பள்ளிக்கூடம் எல்லாம் தருபவை ஒவ்வொரு கலைகள் குழந்தையும் போக வேண்டும் மகிழ்ச்சி
Answer:
ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கூடம் போகவேண்டும்.
கலைகள் எல்லாம் மகிழ்ச்சி தருபவை.

ii) நிலவு வீசுவுதால் தெற்கிலிருந்து மாலை தென்றல் மகிழ்விக்கும் எனப்படுகிறது மனத்தை.
Answer:
மாலை நிலவு மனத்தை மகிழ்விக்கும்.
தெற்கிலிருந்து வீசுவதால் தென்றல் எனப்படுகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

iii) நேர் செய்யாவிட்டாலும் செய்த தீமை மறக்கக்கூடாது நன்மை செய்யக்கூடாது உதவியை.
Answer:
பிறர் செய்த உதவியை, நன்மையை மறக்கக்கூடாது.
நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யக்கூடாது.

iv) நேற்று ஏன் வந்த பையன் பக்கத்தில் யார் இருக்கவில்லை தெரியுமா?
Answer:
நேற்று வந்த பையன் யார் தெரியுமா?
ஏன் பக்கத்தில் இருக்கவில்லை?

v) கோசல மக்கள் நாடு ஒரு மகிழ்ச்சியாக சிறந்த வாழ்ந்த நாடு வந்தனர்.
Answer:
கோசல நாடு ஒரு சிறந்த நாடு.
மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வாந்தனர்.

Question 3.
வேர்ச்சொற்களை எடுத்துக்காட்டில் உள்ளவாறு தொடர்களாக மாற்றுக.
அ) வா ஆ) பேசு இ) தா ஈ) ஓடு உ) பாடு
Answer:
எ – கா : அ. வா – வேர்ச்சொல்.
அருணா, வீட்டுக்கு வந்தாள். (வினைமுற்று)
அங்கு வந்த பேருந்தில், அனைவரும் ஏறினர். (பெயரெச்சம்)
கருணாகரன், மேடையில் வந்து நின்றார். (வினையெச்சம்)
என்னைப் பார்க்க வந்தவர், என் தந்தையின் நண்பர். (வினையாலணையும் பெயர்)

ஆ) பேசு – வேர்ச்சொல்
அவள் பேசினாள். (வினைமுற்று)
அவள் பேசிய மொழி இனிமையாக இருந்தது. (பெயரெச்சம்)
அவள் பேசி முடித்தாள். (வினையெச்சம்)
மேடையில் பேசியவளைப் பார்த்தேன். (வினையாலணையும் பெயர்)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

இ) தா – வேர்ச்சொல்
அண்ணன் தந்தான். (வினைமுற்று)
அண்ண ன் தந்த பரிசு. (பெயரெச்சம்)
அண்ணன் தந்து சென்றான். (வினையெச்சம்)
அண்ண னிடம் தந்தவன் யாவன்? (வினையாலணையும் பெயர்)

ஈ) ஓடு – வேர்ச்சொல்
நான் வேகமாக ஓடினேன். (வினைமுற்று)
வேகமாக ஓடிய பையன் யார்? (பெயரெச்சம் )
அவன் ஓடிக் களைத்தான். (வினையெச்சம்)
அங்கே ஓடியவனைப் பார்த்தாயா? (வினையாலணையும் பெயர்)

உ. பாடு – வேர்ச்சொல்
சீதை பாடுகிறாள். (வினைமுற்று)
சீதை பாடிய பாட்டு. (பெயரெச்சம்)
சீதை பாடி முடித்தாள் (வினையெச்சம்)
மேடையில் பாடியவள் எள் (வினையாலணையும் பெயர்)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள் - 4

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.5 மொழி முதல், இறுதி எழுத்துகள்

கலைச்சொல் அறிவோம்

அழகியல் – Aesthetics
புத்தக மதிப்புரை – Book Review
இதழாளர் – Journalist
புலம் பெயர்தல் – Migration
கலை விமர்சகர் – Art Critic
மெய்யியலாளர் – Philosopher

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.2 ஏதிலிக்குருவிகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 2.2 ஏதிலிக்குருவிகள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 2.2 ஏதிலிக்குருவிகள்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.2 ஏதிலிக்குருவிகள்

குறுவினா

Question 1.
ஏதிலியாய்க் குருவிகள் எங்கோ போயின – தொடரின் பொருள் யாது?
Answer:

  • மரங்கள் வெட்டப்பட்டதால், காடுகள் அழிந்து போயின.
  • மழை பெய்யவில்லை. மண்வளம் குன்றியது.
  • இயற்கைச்சூழலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டதால், வாழ்வதற்கான சூழல் இல்லாததால், ஆதரவற்றனவாய்க் குருவிகள், இருப்பிடம் தேடி அலைந்தன.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.2 ஏதிலிக்குருவிகள்

கூடுதல் வினாக்கள்

Question 2.
‘அழகிய பெரியவன்’ – குறிப்பு வரைக.
Answer:

  • அழகிய பெரியவன், வேலூர் மாவட்டம் பேரணாம்பட் சேர்ந்தவர். இயற்பெயர் அரவிந்தன்.
  • அரசுப் பள்ளி ஆசிரியர்; நாவல், சிறுகதை, கவிதை கட்டுரை படைப்பவர்.
  • ‘தகப்பன் கொடி’ புதினத்திற்குத் தமிழக அரசின் விருது பெற்றவர்.
  • குறடு, நெரிக்கட்டு, உனக்கும் எனக்குமான சொல், அரூப நஞ்சு, மீள்கோணம், பெருகும் வேட்கை ஆகியன, இவர் படைப்புகள்.

Question 3.
‘ஏதிலிக்குருவிகள்’ காட்சிப்படுத்தும் அவலம் யாது?
Answer:

  • இயற்கைச் சூழலே உயிர்களின் இருப்பை முடிவு செய்கிறது.
  • இயற்கைக்கும் மனிதர்க்குமான தொப்புள்கொடி மழைத்துளிகள்.
  • முதல்துளி விழுகையில், உயர்கள் மலர்கின்றன.
  • ‘ஏதிலிக்குருவிகள்’ கவிதை, சூழலியல் மாற்றத்தால் நிகழ்கிற அவலத்தைக் காட்சிப்படுத்துகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.2 ஏதிலிக்குருவிகள்

சிறுவினா

Question 4.
காற்றில் ஆடும் புல் வீடுகளுக்கு அழகிய பெரியவன் தரும் ஒப்பீடு யாது? ஏன்?
Answer:

  • சிற்றூர்களால் கூரை வேய்ந்த வீடுகள் இருந்த காலத்தில், நீர்வளம் கரைபுரண்டது; மரங்கள் நிறைந் திருந்தன; அவற்றில் குருவிகள் கூடுகட்டி வாழ்ந்தன.
  • தூக்கணாங் குருவிகள் கட்டிய கூடுகள், புல் வீடுகளாய்க் காற்றில் அசைந்தன; அவை, தூக்கணாங் குருவிகளின் வீடுகளாகும்.
  • இன்று மண்வளம் குறைந்தது; தாய்மடி சுரக்காததால், அதில் வாழ்ந்த உயிரினங்கள் மறைந்து போயின என்பதை, அழகிய பெரியவன் ஒப்பீடு செய்கிறார்.

கூடுதல் வினா

Question 1.
‘ஏதிலிக்குருவிகள்’ கவிதையால் பெறப்படும் செய்தி யாது?
Answer:

  • ஊரில், இன்று குருவிகளையும் கூடுகளையும் பார்க்க இயலவில்லை. முன்பு அடைமழை என்றால் ஆற்றில் நீர் புரளும். கரைகளில் நின்ற நெடுமரங்களில் பறவைகள் குரலெழுப்பும்.
  • நடந்து போகும் வழிகளில் தூக்கணாங் குருவிகளின் கூடுகள், புல் வீடுகளாய்க் காற்றில் ஆடும். சிட்டுக் குருவிகள் மூங்கில் கிளைகளில் அமர்ந்து, சுழித்தோடும் நீருடன் பாடிக்கொண்டிருக்கும்.
  • இன்றோ, மரங்கள் வெட்டுண்டன; வானமோ பொய்த்தது; மண்ணோ மறுகிவிட்டது. குருவிகள் வாழ வழியின்றி அகதிகளாய் எங்கோ போய்விட்டன என்பதே கவிதைச் செய்தியாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.2 ஏதிலிக்குருவிகள்

இலக்கணக்குறிப்பு

பார்க்க – வினையெச்சம்
மழைக்காலம் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
நெடுமரம் – பண்புத்தொகை

உறுப்பிலக்கணம்

1. பார்க்க – பார் + க் + க் + அ
பார் – பகுதி, க் – சந்தி, க் – எதிர்கால இடைநிலை, அ – வினையெச்ச விகுதி.

2. சுரந்த – சுர + த் (ந்) + த் + அ
சுர – பகுதி, த் – சந்தி ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
அ – பெயரெச்ச விகுதி.

3. பொய்த்தது – பொய் + த் + த் + அ + து
பொய் – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, அ – சாரியை,
து – ஒன்றன்பால் வினைமுற்று விகுதி.

4. மறுகியது – மறுகு + இ (ன்) + ய் + து
மறுகு – பகுதி, இன் – இறந்தகால இடைநிலை, ‘ன’ கரம் புணர்ந்து கெட்டது,
ய் – உடம்படுமெய் சந்தி, து – ஒன்றன்பால் வினைமுற்று விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.2 ஏதிலிக்குருவிகள்

புணர்ச்சி விதிகள்

1. மழைக்காலம் – மழை + காலம்
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிரம் (பழைக்காலம்)

2. கரையெல்லாம் – கரை + எல்லாம்
“இ ஈ ஐ வழி யவ்வும்” (கரை + ய் + எல்லாம்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே (கரையெல்லாம்)

3. நெடுமரம் – நெடுமை + மரம்
“ஈறுபோதல்” (நெடுமரம்)

4. வழியெல்லாம் – வழி + எல்லாம்
“இ ஈ ஐ வழி யவ்வும்” (வழி + ய் + எல்லாம்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்று பது இயல்பே” (வழியெல்லாம்)

5. காலமது – காலம் + அது)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (காலமது)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.2 ஏதிலிக்குருவிகள்

பலவுள் தெரிக

Question 1.
பொருத்தமான இலக்கிய வடிவம் எது?
அ) ஏதிலிக் குருவிகள் – மரபுக் கவிதை
ஆ) திருமலை முருகன் பள்ளு – சிறுகதை
இ) பானை டாக்டர் – குறும் புதினம்
ஈ) ஐங்குறுநூறு – புதுக்கவிதை
Answer:
இ) யானை டாக்டர் – குறும் புதினம்

கூடுதல் வினா

Question 2.
கீழுள்ளவற்றைப் பொருத்தி விடை காண்க.
அ) ஏதிலிக்குருவிகள் – 1. பேயனார்
ஆ) திருமலை முருகன் பள்ளு 2. ஜெயமோகன்
இ) ஐங்குறு நூறு – 3. அழகிய பெரியவன்
ஈ) யானை டாக்டர் – 4. பெரியவன் கவிராயர்
i) 1 3 4 2
ii) 1 2 4 3
iii) 3 4 1 2
iv) 3 2 1 4
Answer:
iii) 3 4 1 2

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.2 ஏதிலிக்குருவிகள்

Question 3.
அழகிய பெரியவன் இயற்பெயர்……………..
அ) ராசேந்திரன்
ஆ) ராசகோபாலன்
இ) அரவிந்தன்
ஈ) வில்வரத்தினம்
Answer:
இ) அரவிந்தன்

Question 4.
அழகிய பெரியவன் ஊர் ……………
அ) யாழ்ப்பாணம் கொக்குவில்
ஆ) ஈரோடு மாவட்ட மேட்டுப் புதூர்
இ) வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு
ஈ) சென்னிகுளம் கழுகுமலை
Answer:
இ) வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.2 ஏதிலிக்குருவிகள்

Question 5.
அழகிய பெரியவனின் தமிழக அரசு விருது பெற்ற நூல் …………………
அ) குறடு
ஆ) நெறிக்கட்டு
இ) வடக்குவீதி
ஈ) தகப்பன் கொடி
Answer:
ஈ) தகப்பன் கொடி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.4 ஆறாம் திணை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 1.4 ஆறாம் திணை Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 1.4 ஆறாம் திணை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.4 ஆறாம் திணை

நெடுவினா

Question 1.
தமிழர் வாழ்வோடும் புலம்லெர் நிகழ்வுகளோடும் அ.முத்துலிங்கத்தின் திணைப்பாகுபாடு எவ்வாறு
இணைக்கப்படுகிறது? (அல்லது) புலம் பெயர்ந்த வலியையும் வாழ்வையும் ஆறாம் திணை வாயிலாக நீவிர் அறிவதைத் தொகுத்து எழுதுக.
Answer:
அகதிகள் முகாம் வாரிக்கை :
இலங்கை, மவண்லவினியாவில் வாடகை வீட்டில் வாழ்ந்த தமிழ்க் குடும்பம் ஒன்று, இனக் கலவரத்தின்போது வீட்டுக்காரரான சிங்களவரால் அன்று இரவு காப்பாற்றப்பட்டு, மறுநாள் அகதிகள் முகாமுக்குச் சென்றது. அங்கே யாரோ அணிந்த மேல்சட்டையை மட்டும் ஒருவர் மாற்று உடையாகப் பெற்றார். தன் அக்காகத் தட்டு ஏந்தி நின்றபோது, இப்படி ஒருகணம் தம் வாழ்வில் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என முடிவு செய்து, உறுதியாக இருந்துள்ளார். பலவருடம் பல தேசங்களில் சுற்றி அலைந்துள்ளார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.4 ஆறாம் திணை

பலம் பெயர்தல் காரணம் :
புலம்பெயர்தல் என்பது, புதிதன்று. சங்ககாலத்தில் ஐந்நிலத்தில் வாழ்ந்த தமிழர், புலம்பெயர்ந்து வாழ்ந்ததை, இலக்கியங்களில் காணமுடிகிறது. அவர்கள் உயிர்க்காகவும், பொருள் தேடவும் புலம்பெயர்ந்தபோதும், ‘வெஞ்சின வேந்தன் பகை அலைக் கலங்கி வாழ்வோர் போகிய பேரூர்பாழ்’ எனத் தனிமகனார் பாடியுள்ளார். அக்காலத்தில் அரசனின் சீற்றத்திற்கு அஞ்சிப் புலம்பெயர்ந்ததுபோலச் சமீப காலங்களில் தம்மைப் போன்றோர் புலம் பெயர நேரிட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தீய சிந்தனையைச் சாக அடித்தவர்கள் :
கனடாவுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்கள், சில வருடங்களில் தமிழ்ப் பத்திரிகைககள் தொடங்கி, கோரிக்கைகள் வெற்றி பெறாதநிலையில் நிரந்தர வேலையும் அடுத்தவேளை உணவும் நிச்சயமில்லா நிலையிலும், தங்கள் புதுவாழ்வைப் பதிவு செய்கின்றனர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.4 ஆறாம் திணை

புலம்பெயர்ந்தோர் சாதனை :
புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறை தமிழைக் கைவிடும் என்ற குற்றச்சாட்டைப் பொய்யாக்கி, கணினி யுகத்தில் தமிழ்கற்று உயர் இலக்கியங்களைப் படைத்துத் தமிழை உலக அரங்கில் முன்னிறுத்துகிறார்கள். நியூசிலாந்திலிருந்து அலாஸ்காவரை புலம் பெயர்ந்த தமிழர்கள், பத்துலட்சம் பேர் வாழ்கிறார்கள். கனடாவில் மட்டும் மூன்று லட்சம் தமிழர்கள். ஒருகாலத்தில் சூரியன் மறையாத பிரிட்டிஷ் ராச்சியம் என்று சொன்னதுபோல், இன்று ‘சூரியன் மறையாத தமிழ்ப்புலம்’ என்று, புலம் பெயர்ந்த தமிழர்கள் தோற்றுவித்துள்ளனர்.

கனடாவில் சாலை ஒன்றுக்கு வன்னி வீதி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இப்பெயரை மாற்றவோ, சிதைக்கவோ முடியாது. 2012முதல் ஆண்டுதோறும் ஜனவரி 14ஆம் நாள், தமிழர் பாரம்பரிய நாள் எனப் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. இவை ஈழத் தமிழரின் புலம்பெயர்ந்த வரலாற்றை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும்.

ஆறாம் திணையும் ஆறுமணிக் குருவியும் :
ஆசிரியரின் ஈழத்துக் கொக்குவில் கிராமத்தில் காகமும் ஆறுமணிக் குருவியும் இருந்தன. காகம் பறக்க இரண்டு மைல் தூரமே எல்லை. ஆறுமணிக் குருவி, இமயத்தைக் கடந்தும் சென்று தரும்புமாம். ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்கள், இந்த ஆறுமணிக் குருவிபோல, அவர்களுக்கு பொலை கிடையாது. இனி அந்தத் தமிழர்களின் புலம், பனியும் பனிசார்ந்த நிலமும். அதுவே ஆறாம்திணை என, அ. முத்துலிங்கம் பாகுபடுத்திக் கூறியுள்ளது சிறப்பாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 1.3 நன்னூல் பாயிரம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 1.3 நன்னூல் பாயிரம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

குறுவினா

Question 1.
பாயிரம்’ பற்றி நீங்கள் அறியும் கருத்து யாது?
Answer:
நூலை உருவாக்கும் ஆசிரியரின் சிறப்பையும், அந்நூல் வழங்கும் கருத்து வளத்தையும் தொகுத்து, நூல் முகப்பில் வைக்கும் முறை பற்றிப் பேசுவது பாயிரமாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

கூடுதல் வினாக்கள்

Question 2.
பவணந்தி முனிவர் – குறிப்புத் தருக.
Answer:

* ‘நன்னூல்’ என்னும் தமிழ் இலக்கண நூலை இயற்றியவர் பவணந்தி முனிவர்.
* தம்மை ஆதரித்த சிற்றரசன் சீயகங்கனின் வேண்டுதலால், இந்நூலைப் பாடியதாகப் பாயிரம் கூறுகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

Question 3.
பாயிரம் எதற்கு உதவுகிறது?
Answer:
நூலைப்பற்றித் தெரிந்துகொள்வதற்கும், நூலைப் புரிந்துகொள்வதற்கும், நூலின் சிறப்பை உணர்ந்து விருப்பத்துடன் கற்பதற்கும் பாயிரம் உதவுகிறது.

Question 4.
பாயிரத்தின் வேறு பெயர்கள் யாவை?
Answer:
முகவுரை, பதிகம், அணிந்துரை, நூல்முகம், புறவுரை, தந்துரை, புணர்ந்துரை என்பன, பாயிரத்தின் வேறு பெயர்கள்.

Question 5.
நன்னூல் எழுத்ததிகாரப் பகுதிகள் யாவை?
Answer:
எழுத்தியல், பதவியல், உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல், உருபுப் புணரியல் என்னும் ஐந்தும், நன்னூல் எழுத்ததிகாரப் பகுதிகளாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

Question 6.
நன்னூல் சொல்லதிகாரம் உணர்த்தும் பகுதிகள் எவை?
Answer:
பெயரியல், வினையியல், பொதுவியல், இடையியல், உரியியல் என்னும் ஐந்தும், நன்னூல் சொல்லதிகாரம் உணர்த்தும் பகுதிகளாகும்.

Question 7.
எது சிறந்த நூலாக மதிக்கப்படாது?
Answer:
ஆயிரம் முகத்தைப் பெற்றிருந்தாலும், பல்வேறு துறைசார்ந்த செய்திகளை விரிவாகப் பெற்றிருந்தாலும், அந்த நூலுக்குப் பாயிரம் இல்லை என்றால், அது சிறந்த ந வராக மதிக்கப்படாது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

சிறுவினா

Question 1.
நூல் ஒன்றின் முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக நன்னூல் எவற்றைக் குறிப்பிடுகிறது?
Answer:
நூலின் இயல்பு, ஆசிரியர் இயல்பு, கற்பிக்கும் முறை, மாணவர் இயல்பு, கற்கும் முறை, நூலாசிரியர்
பெயர், நூல் பின்பற்றிய வழி, நூல் வழங்கப்படுகின்ற நிரப்பு, நூலின் பெயர், யாப்பு, நூலில் குறிப்பிடப்படும் கருத்து, நூலைக் கேட்போர், நூலைக் கற்பதனால் பெறுகின்ற பயன் ஆகியன, முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக, நன்னூல் குறிப்பிடுகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

நெடுவினா

Question 1.
நன்னூல் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் வாயிலாக அறியலாகும் செய்திகளைத் தொகுத்துரைக்க.
Answer:
பாயிரம் :
நூலை உருவாக்கும் ஆசிரியரின் திறம் வாயும், அந்நூல் வழங்கும் கருத்து வளத்தையும் தொகுத்து நூல் முகப்பில் வைக்கும் முறை பற்றிப் பேசுவது பாயிரமாகும். பாயிரம் (1) பொதுப்பாயிரம், ம சிறப்புப் பாயிரம் என இருவகைப்படும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

(i) பொதுப்பாயிரம் :
எல்லா நூல்களின் முன்பிலும் பொதுவாக உரைக்கப்படுவது, பொதுப்பாயிரம் எனப்படும்.

நூலின் இயல்பு, ஆசிரியரின் இயல்பு, கற்பிக்கும் முறை
மாணவரின் இயலபு கற்கும் முறை என்னும் ஐந்தையும் கூறுவது, பொதுப்பாயிரம் ஆகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

(ii) சிறப்புப்பாயிரம் :
தனிப்பட்ட பல நூல்களுக்கு மட்டும் சிறப்பாகக் குறிப்பிடப்படுவது, சிறப்புப்பாயிரம் எனப்படும்.
நூல் சிரியரின் பெயர்
நூல் பின்பற்றிய வழி
நூல் வழங்கப்படுகின்ற நிலப்பரப்பு;
நூலின் பெயர்; தொகை, வகை, விரி என்பவற்றுள் இன்னதில் இயற்றப்பட்டது என்னும் யாப்பு;
நூலில் குறிப்பிடப்படும் கருத்து; 5நூலைக் கற்பதனால் பெறுகின்ற பயன்;
இவற்றுடன் நூல் இயற்றப்பட்ட காலம்; அரங்கேற்றப்பட்ட அவைக்களம்;
இயற்றப்பட்ட காரணம் ஆகியவற்றைச் சேர்த்துக் கூறுவதும் ஆகிய எல்லாச் செய்திகளையும் செம்மையாகத் தெரிவிப்பது, சிறப்புப் பாயிரத்தின் இலக்கணம் ஆகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

இலக்கணக் குறிப்பு

மாநகர் – உரிச்சொற்றொடர்
காட்டல், கோடல் – தொழிற்பெயர்கள்
கேட்போர், நுவல்வோன், கொள்வோன், ஆக்கியோன் – வினையாலணையும் பெயர்கள்
ஐந்தும் – முற்றும்மை
அமைதோள் – உவமைத்தொகை
மாடக்கு – ‘அத்து’ச் சாரியை தொக்கி நின்றது
ஆடமை (ஆடு அமை) – வினைத்தொகை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

உறுப்பிலக்கணம்

1. வைத்தார் – வை + த் + த் + ஆர்.
வை – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

2. கொள்வோன் – கொள் + வ் + ஓன்.
கொள் – பகுதி, ‘வ்’ – எதிர்கால இடைநிலை, ஓன் – ஆண்பால் வினை சற்று விகுதி.

3. நின்ற – நில் (ன்) + ற் + அ.
நில் – பகுதி ‘ல்’, ‘ன்’ ஆனது விகாரம், அ – பெயயெச்ச விகுதி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

4. ஏற்றி – ஏற்று + இ
ஏற்று – பகுதி, இ – வினையெச்ச விகுதி.

புணர்ச்சி விதிகள்

1. அணிந்துரை – அணிந்து + உரை “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” (அணிந்து + உரை)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்ரே’ அணிந்துரை )

2. பொதுச்சிறப்பு – பொது + சிறப்பு
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (பொதுச்சிறப்பு)

3. பயனோடு – பயன் + ஓடு
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே (பயனோடு)

4. முன்னுரை – முன் + உரை
“தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்” (முன்ன் + உரை)
“உடல்மேல் உயிர்த்து ) ஒன்றுவது இயல்பே” (முன்னுரை )

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

5. நூன்முகம் – நூல் + முகம்
“லள வேற்றுமையில் மெலிமேவின் னணவும் ஆகும்” (நூன்முகம்)

6. நூற்பெயர் – நூல் + பெயர்
“லௗ வேற்றுமையில் வலிவரின் றடவும் ஆகும்” (நூற்பெயர்)

7. நன்னூல் – நன்மை + நூல்
நறுபோதல்” – நன் + நூல், “னலமுன் றனவும் ஆகும் தநக்கள்” (நன் + னூல்)

8. தந்துரை – தந்து + உரை
“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” (தந்த் + உரை)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தந்துரை )

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

9. பொதுப்பாயிரம் – பொது + பாயிரம்
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (பொதுப்பாயிரம்)

பலவுள் தெரிக

Question 1.
பாயிரம் இல்லது ……………. அன்றே
அ) காவியம்
ஆ) பனுவல்
இ) பாடல்
ஈ) கவிதை
Answer:
ஆ) பனுவல்

Question 2.
நன்னூலின் ஆசிரியர்………………
அ) தொல்காப்பியர்
ஆ) அகத்தியர்
இ) பவணந்தி முனிவர்
ஈ) திருவள்ளுவர்
Answer:
இ) பவணந்தி முனிவர்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

Question 3.
நன்னூல் கூறும் இலக்கண வகை ………………..
அ) எழுத்து, பொருள்
ஆ) சொல், பொருள்
இ) யாப்பு, சொல்
ஈ) எழுத்து, சொல்
Answer:
ஈ) எழுத்து, சொல்

Question 4.
நன்னூலைப் பவணந்தி முனிவர், ………………..வேண்டுதலால் இயற்றினார்.
அ) பாரிவள்ளல்
ஆ) சீதக்காதி
இ) சீயகங்கன்
ஈ) சடையப்பர்
Answer:
இ) சீயகங்கன்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

Question 5.
நன்னூல் விளக்கும் இலக்கண வகைகளின் எண்ணிக்கை
அ) 4
ஆ) 3
இ) 5
ஈ) 2
Answer:
ஈ) 2

Question 6.
நூலுக்கு முகத்தைப் போன்று இருப்பதால், ……………………… எனப்பட்டது.
அ) முகவுரை
ஆ) புனைந்துரை
இ) புறவுரை
ஈ) அணிந்துரை
Answer:
அ) முகவுரை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

Question 7.
நூலில் சொல்லிய பொருள் அல்லாதவற்றைத் தந்து உரைப்பது …………..
அ) முகவுரை
ஆ) நான்முகம்
இ) தந்துரை
ஈ) புறவுரை
Answer:
இ) தந்துரை

Question 8.
எல்லாவகை நூல்களுக்கும் அழகு சேர்ப்பது …………….
அ) அணிந்துரை
ஆ) தந்துரை
இ) சிறப்புரை
ஈ) பதிகம்
Answer:
அ) அணிந்துரை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

Question 9.
நூலின் முதன்மையான கருத்துகளைத் தொகுத்துக் கூறுவதால் ……………….எனப்பட்டது.
அ) முகவுரை
ஆ) தந்துரை
இ) பதிகம்
ஈ) அணிந்துரை
Answer:
இ) பதிகம்

Question 10.
நூலுக்கு அணியாக அமைவது………………..
அ) முகவுரை
ஆ) நூன்முகப்பு
இ) புனைந்துரை
ஈ) அணிந்துரை
Answer:
ஈ) அணிந்துரை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

Question 11.
நூலின் கருத்தோடு அதன் வரலாற்றையும் எடுத்துரைப்பது………………..
அ) தந்துரை
ஆ) அணிந்துரை
இ) புறவுரை
ஈ) பதிகம்
Answer:
இ) புறவுரை

Question 12.
மாடங்களுக்கு அழகு தருவது ……………………..
அ) நகரங்கள்
ஆ) மகளிர்
இ) ஓவியங்கள்
ஈ) வண்ணங்கள்
Answer:
இ) ஓவியங்கள்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

Question 13.
பெரிய நகாங்களுக்கு அழகு சேர்ப்பவை ………………
அ) மாடங்கள்
ஆ) நகரங்கள்
இ) வண்ணங்கள்
ஈ) கோபுரங்கள்
Answer:
கோபுரங்கள்

Question 14.
அனலன்கள் அழகு சேர்ப்பது………………..
அ) குழந்தைகளுக்கு
ஆ) அங்காடிகளுக்கு
இ) மகளிருக்கு
ஈ) சிலைகளுக்கு
Answer:
இ) மகளிருக்கு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

Question 15.
ஆயிரம் முகத்தான் அகன்றது ஆயினும்
பாயிரம் இல்லது பனுவல் அன்றே – அடி எதுகையைத் தெரிவு செய்க.
அ) ஆயிரம் முகத்தான் – அகன்றது ஆயிரம்
ஆ) ஆயிரம் முகத்தான் – பாயிரம் இல்லது
இ) பாயிரம் இல்லது – பனுவல் அன்றே
ஈ) அகன்றது ஆயினும் – பனுவல் அன்றே
Answer:
ஆ) ஆயிரம் முகத்தான் – பாயிரம் இல்லது

Question 16.
நன்னூலுக்குத் தொடர்பில்லாதது ……………..
அ) முகவுரை, பதிகம், அணிந்துரை
ஆ) நூன்முகம், புறவுரை, தந்துரை
இ) வேற்றுமையணி, வேற்றுப்பொருள்வைப்பணி
ஈ) பொதுப் பாயிரம், சிறப்புப் பாயிரம்
Answer:
இ) வேற்றுமையணி, வேற்றுப்பொருள்வைப்பணி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

Question 17.
பொருத்துக.
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம் - 1
Answer:
i – ஈ,
ii – இ,
iii – ஆ,
iv – அ.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

Question 18.
பொருத்துக.
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம் - 2
Answer:
i – ஆ,
ii – ஈ ,
iii – அ,
iv – இ.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 1.1 யுகத்தின் பாடல் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 1.1 யுகத்தின் பாடல்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

குறுவினாக்கள்

Question 1.
என் அம்மை ஒற்றியெடுத்த
நெற்றிமண் அழகே!
வழிவழி நினதடி தொழுதவர்,
உழுதவர், விதைத்தவர்,
வியர்த்தவர்க்கெல்லாம்
நிறைமணி தந்தவளே! – இக்கவிதை அடிகளில் உள்ள வினையாலணையும் பெயர்களை எழுதுக.
Answer:
தொழுதவர், உழுதவர், விதைத்தவர், வியர்த்தவர்.

Question 2.
இனம், மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையைக் குறிப்பிடுக.
Answer:
“தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம் கூடில்லாத பறவை”

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

கூடுதல் வினா

Question 3.
கவிஞர் சு. வில்வரத்தினம் குறித்து எழுதுக.
Answer:

  • கவிஞர் சு. வில்வரத்தினம், யாழ்ப்பாணம் புங்குடுத் தன் பிறந்தவர்.
  • கவிதைகள் இயற்றுவதிலும் சிறப்பாகப் பாடுவதிலும் திறனுடையவர்.
  • இவர் கவிதைகள், ‘உயிர்த்தெழும் காலத்துக்கள் என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.

சிறுவினா

Question 1.
சு. வில்வரத்தினம் பாடத்தான் வேண்டும் என எவற்றைக் குறிப்பிடுகிறார்?
Answer:
பல தலைமுறை கடந்தும் தனது திவடிகளைத் தொழச் செய்தவள். தமிழ்ப்பயிர் தழைத்தோங்க காலந்தோறும் வியர்வை சிந்த உழைத்து, கலைச் செல்வங்களைப் படைக்கச் செய்து, நிறைமணி தந்தவள். தமிழ் மொழியாகிய யலினை அறிவு கொண்டு உழுது, நற்கருத்துகளை விளைவித்துத் தமிழ் நிலத்தில் ஊன்ற உருவியவள்.

ஒலிக்கும் கடலையும் நெருப்பாற்றையும், மலை உச்சிகளையும் காற்றில் ஏறிக் கடந்துசெல் என்னும் பாடலை தொன்மையான கபாடபுரங்களைப் பலிகொண்ட பிறகும், காலத்தால் அழியாத செல்வங்களின் வலிமை சேரச் செய்தவள். ஏடு தொடக்கி வைத்து, விரலால் மண்ணில் தீட்டித்தீட்டி
எழுதக் தற்பாத்தவள்.

ஆதலால் தமிழன்னை பல்லாயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் எனப் பாடத்தான் வேண்டும் என் கபார் சு. வில்வரத்தினம்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

கூடுதல் வினாக்கள்

Question 2.
வில்வரத்தினம் தமிழ்த்தாய்க்கு எவ்வாறு பல்லாண்டு பாடுகிறார் ?
Answer:
“என் அம்மையே” எனத் தமிழ்த்தாயை அழைத்து, “வழிவழி உனது அடியைத் தொழுதவர், உழுதவர், விதைத்தவர், உழைத்து வியர்த்தவர் என அனைவர்க்கும் நிறைமணி தந்தவளே, உனக்குப் பல்லாண்டு பாடத்தான் வேண்டும்” என்று, சு. வில்வரத்தினம் பாடுகிறார்.

Question 3.
சு. வில்வரத்தினம் தமிழன்னையை எவ்வாறு பாடவேண்டுமென்கிறார்?
Answer:
சுழன்றடிக்கும் காற்றையும், வீசும் அலைகடலையும், எழும் நெருப்பையும், மலையளவு எழும் பகை யையும் வென்று, தமிழ்த்தாயின் தொன்மத்தைக் காலத்தால் அழியாவகையில் வலிமை சேர்க்கப் பாட வேண்டுமென சு. வில்வரத்தினம் வேண்டுகிறார்.

இலக்கணக் குறிப்பு

வழிவழி, தீட்டித்தீட்டி – அடுக்குத்தொடர்கள்
தொழுதவர், உழுதவர், விதைத்தவர், வியர்த்தவர் – வினையாலணையும் பெயர்கள்
நிறைமணி, கனைகடல் – வினைத்தொகைகள்
சாகாத, எழுகின்ற – பெயரெச்சங்கள்
உரமெலாம் (உரமெல்லாம்) – தொகுத்தல் விகாரம்
மலைமுகடு (மலையின்கண் உள்ள முகடு) – ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
விரல்முனை (விரலினது முனை) – ஆறாம் வேற்றுமைத் தொகை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

உறுப்பிலக்கணம்

1. தீட்டி – தீட்டு + இ
தீட்டு – பகுதி, இ – வினையெச்ச விகுதி.

2. எழுகின்ற – எழு + கின்று + அ
எழு – பகுதி, கின்று – நிகழ்கால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி

புணர்ச்சி விதிகள்

1. ஒற்றியெடுத்த – ஒற்றி + எடுத்த
“இ ஈ ஐ வழி யவ்வும்” (ஒற்றி + ய் + எடுத்த )
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (ஒற்றியெடுத்து)

2. காற்றிலேறி – காற்றில் + ஏறி
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (காற் லேறி)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

3. பல்லாண்டு – பல + ஆண்டு
“பல சில எனும் இவைமுன் பிறவரின் அகரம் ஏகலும்” (பல் + ஆண்டு )
“தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இருட்டும் (பல்ல் + ஆண்டு)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (பல்லாண்டு)

4. உரமெலாம் – உரம் + எலாம்
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (உரமெலாம்)

5. சுவரெலாம் – சுவர் + எலாம்
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (சுவரெலாம்)

பலவுள் தெரிக

Question 1.
“கபாடபுரங்களைக் காவுகொண்டபின்னும்
காலத்தால் சாகாத தொல் கனிமங்கள்” – அடிமோனையைத் தெரிவு செய்க.
அ) கபாடபுரங்களை – காவுகொண்ட
ஆ) காலத்தால் – கனிமங்கள்
இ) கபாடபுரங்களை – காலத்தால்
ஈ) காலத்தால் – சாகாத
AnsweR:
இ) கபாடபுரங்களை – காலத்தால்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

கூடுதல் வினாக்கள்

Question 2.
கவிஞர் சு. வில்வரத்தினத்தின் கவிதைத் தொகுப்பு………………..
அ) பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்
ஆ) தமிழனின் கவிதை இயல்
இ) புல்லின் இதழ்கள்
ஈ) உயிர்த்தெழும் காலத்துக்காக
Answer:
ஈ) உயிர்த்தெழும் காலத்துக்காக

Question 3.
கவிஞர் சு. வில்வரத்தினம் பிறந்த புங்குடுத்தீவு, …………………உள்ளது.
அ) அமெரிக்காவில்
ஆ) கனடாவில்
இ) இந்தியாவில்
ஈ) யாழ்ப்பாணத்தில்
Answer:
ஈ) யாழ்ப்பாணத்தில்

உரைநடை உலகம்
பேச்சுமொழியும் கவிதைமொழியும்
இந்திரன்
நம்மை அளப்போம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

குறுவினாக்கள்

Question 1.
பேச்சுமொழி எழுத்துமொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கது ஏன்?
Answer:
எழுத்துமொழி, பேச்சுமொழிக்குத் திரும்பும்போது வெளிப்பாட்டுச் சக்தி அதிகம் கொண்டதாக மாறி விடுகிறது. எழுத்துமொழி உணர்ச்சி வெளிப்பாட்டைத் தெரிவிப்பதில்லை. எனவே, எழுத்து மொழியைக் காட்டிலும் பேச்சுமொழி, உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கதாக உள்ளது.

கூடுதல் வினாக்கள்

Question 2.
இந்திரனின் பிற நூல்கள் யாவை ?
Answer:
இந்திரனின் பிற நூல்கள் : முப்படை நகரம், சாம்பல் வார்த்தைகள், தம் அழகியல், நவீன ஓவியம்.

Question 3.
வால்ட்விட்மனின் உலகப்புகழ் பெற்ற கவிதைநூல் எது?
Answer:
‘புல்லின் இதழ்கள், வால்ட் விட்மனின் உலகப்புகழ் பெற்ற கவிதை நூல்.

Question 4.
‘நான்’ உதயமானது எப்போது என இந்திரன் கூறுகிறார்?
Answer:
*உலகம்’ என்பது மொழியினால் கட்டமைக்கப்பட்டபிற்கு உலகத்திலிருந்து நான்’ என்பது தனித்துப் பிரிந்து உதயமானதாக இந்திரன் கூறுகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

Question 5.
சொற்கள் எதற்கு உதவும் ?
Answer:
உணர்ச்சியினால் நிரம்பி இருக்கிறபோது, அந்த வேகத்தைப் பதிவு செய்வதற்குச் சொற்கள் உதவும்.

Question 6.
புதுக்கவிதை என்பது எது?
Answer:
மரபு சார்ந்த செய்யுள்களின் இலக்கணக் கட்டுப்பாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட கவிதையே, புதுக்கவிதையாகும்.

Question 7.
குறியீட்டுக்கவிதை என்பது எது?
Answer:
குறியீட்டுக் கவிதை என்பது பொருளைப் பதிவு செய்வது அன்று; நினைவுகூரத்தக்க தருணங்களைப் பதிவு செய்வதாகும்.

Question 8.
புதுக்கவிதையின் இருப்பு யாது?
Asnwer:

  • புதுக்கவிதை, தன்னைப் படிப்பவரின் ஆழ்மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • படிப்போரின் சிந்தனைக்கு ஏற்ப, விரிவடையும் பன்முகத் தன்மையும் கொண்டிருக்கும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

Question 9.
பேச்சுமொழி எழுத்துமொழிக் கவிதை குறித்து இந்திரன் கூறுவது யாது?
Answer:

  • “பேச்சுமொழியில் செய்யப்படுகிற கவிதைச் சொற்கள், உடம்பின் மேல்தோல் போல் இயங்குகின்றன.
  • எழுத்துமொழியில் அதே சொற்கள் கவிதையின் உணர்வை, உணர்ச்சியற்ற ஆடைபோல் மூடிப் போர்த்தி விடுகின்றன’ என, இந்திரன் கூறுகிறார்.

Question 10.
எது கவிஞனின் கடமையாகிறது?
Answer:
கவிதைக்குள் உலவும் மொழியின் தாக்கம், கவிதைக்கான உலகத்தைத் தட்டி எழுப்புகிறது. எனவே, எத்தகைய மொழியைக் கவிதைக்குப் பயன்படுத்துகிறோமோ, அதன் குணாம்சங்களையும், பேச்சு வழக்குகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியது கவிஞனின் கடமையாகிறது.

Question 11.
‘வால்ட்விட்மன்’ குறித்து எழுதுக.
Answer:

  • ‘வால்ட்விட்மன்’, அமெரிக்காவைச் சேர்ந்தவர்; ஆங்கிலக் கவிஞர்; இதழாளர்; கட்டுரையாளர்; ‘புதுக்கவிதை’ இயக்கத்தைத் தோற்றுவித்தவர்.
  • இவர் படைத்த ‘புல்லின் இதழ்கள்’ (Leaves of Grass) உலகப் புகழ்பெற்ற நூல்.

Question 12.
‘ஸ்டெஃபான் மல்லார்மே’ குறித்து நீ அறிந்தன யாவை?
Answer:

  • கவிஞர் ‘ஸ்டெஃபான் மல்லார்மே’, பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர்.
  • ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர்; பிரெஞ்சுக் கவிஞர். இவர் கவிதைகளைப் புரிந்து கொள்வதன்மூலம், ‘சிம்பலிஸம்’ என்கிற ‘குறியீட்டியத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

Question 13.
‘பாப்லோ நெரூடா’ குறித்து நீ அறிவன யாவை?
Answer:
கவிஞர் பாப்லோ நெரூடா’, தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் பிறந்தவர். இலத்தீன் அமெரிக்காவின் மிகச் சிறந்த ஆங்கிலக் கவிஞர். தம் கவிதைகளுக்காக, 1971ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவர்.

சிறுவினாக்கள்

Question 1.
‘என்னுயிர் தமிழ்மொழி என்பேன்’ என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள மொழிப்பற்றினை எழுதுக.
Answer:
எனக்கு உயிர் தந்தவள் தாய். தான் ஊட்டிய பாலோடு, உலகை அறிமுகம் செய்ய மாட்டி வளர்த்த மொழி தமிழ். என் உயிரோடு கலந்து உடலோடு வளர்ந்தது. வளர்ந்தபின் வளிமான மொழியைக் கற்றபோது, அதன் வளத்தோடு வீச்சும், ஆழமும் புரிந்தது.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்று, என் பாட்டன் பாரதி சொன்னதன் பொருளைப் புரிந்துகொண்டேன். “தமிழுக்கு அமுதென்று பேர்” என்று பாரதிதாசன் கூறியதைத் தெளிந்தேன். “தமிழன் என்றோர் இனமுண்டு! தனியே அவர்க்கோர் குணமுண்டு” என்று, நாமக்கல் கவிஞர் சொன்னதன் ஆழ்பொரும் அறிந்தேன். அதனால், என் தமிழை உயிரினும் மேலானதாக மதிக்கிறேன்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

Question 2.
கூற்று : குறியீட்டுக் கவிதை என்பது பொருளைப் பதிவு செய்வதன்று; நினைவுகூரத்தக்க தருணங்களைப் பதிவு செய்வதாகும்.
கவிதை : கூண்டு திறந்தது
சிறகடிக்கவா?
இல்லை! சீட்டெடுக்க
கூற்றில் ‘குறியீடு’ எனக் குறிப்பிடுவது கவிதையில் எப்பொருளாக வந்துள்ளது?
Answer:

  • குறியீட்டுக் கவிதை என்பது அந்த வேளையில் கண்டதன் நுண்பொருளைச் சிந்திக்கத் தூண்டும் எண்ணத்தைப் பதிவு செய்வதாகும்)
  • பறவைகளைக் கூட்டில் அடைத்து வைத்துச் சோதிடம் பார்ப்பதை அனைவரும் அறிவர். கூட்டைத் திறப்பது பறவைக்குச் சுதந்தரம் தருவதற்காகவா? அன்று.
  • அது சிறகசைத்துப் புறதை மறக்க அடித்து அடிமைப்படுத்தி விடுகிறார்கள். அதற்கென ஒரு கொத்தடிமைத் தொழிலை முடிவு செய்கிறார்கள். இந்தக் குறியீடு, சமூக அவலத்தை வெளி ப்படுத்தும்; சுருக்கமாகச் சுட்டிக்காட்ட உதவும்.

கூடுதல் வினாக்கள்

Question 3.
மொழி அளித்த திறன்களாக இந்திரன் கூறுவனவற்றை எழுதுக.
Answer:

  • மொழி தோன்றியவுடன், உலகம் கவனிப்புக்கு உரியதாக மாறியது. மொழி என்னும் சாவியால் திறந்தபோதெல்லாம், பெயர் சூட்டப்படாத பலவற்றைக் காணவும், அவற்றிற்குத் தாம் விரும்பும் பெயரைச் சூட்டவும் முடிந்தது.
  • அவற்றை விதவிதமான அடுக்குகளில், அவற்றின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப ஒருமை, பன்மை ‘ பிரித்து அடுக்கும் திறனையும் மொழி வழங்கியதாக இந்திரன் கூறியுள்ளார்.

Question 4.
‘மொழி அதிகாரத்தை உருவாக்கிக் கொடுத்தது எப்போது என இந்திரன் கூறுகிறார்?
Answer:

  • வேலையில் மூழ்கியுள்ள தாயைக் குழந்தை ‘அம்மா’ என அழைத்தபோது கவனியாதவர், அவர் பெயரைச் சொல்லி அழைத்ததும் திடுக்கிட்டுத் திரும்பி வருகிறார்.
  • அப்போதுதான், பெயர்களிட்டு அழைக்கும்போது அவற்றின் மீது, ஓர் அதிகாரத்தை மொழி உருவாக்கிக் கொடுப்பதை உணரத் தலைப்பட்டதாக இந்திரன் கூறுகிறார்.

Question 5.
‘கவிதை என்பது எது’ என்பதற்கு இந்திரன் தரும் விளக்கம் யாது ?
Answer:

  • மொழிக்குள் உலகையும், உலகிற்குள் மொழியையும் முழுமையாக நுழைத்துவிட முயலும் தொடர் படைப்புச் செயல்பாடே கவிதை! எனவே, கவிதை என்பதே மொழிதான்.
  • கவிதைக்குள் உலவும் மொழியின் தாக்கமே, கவிதைக்கான உலகத்தைக் கட்டி எழுப்புகிறது” என்பதே, ‘எது கவிதை’ என்பதற்கு, இந்திரன் தரும் விளக்கமாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

Question 6.
பாடத்துள் இடம்பெற்ற ‘வால்ட் விட்மன்’ கவிதையின் கருத்து யாது?
Answer:

  • என் கனவில் ‘நண்பர்கள் நகரம்’ என்றொரு புது நகரம் வந்தது! அந்த நகரத்தில் அன்பைவிடப் பெரியது என்று ஒன்றும் இல்லை.
  • அன்பு என்னும் வழித்தடத்தில் எல்லாமும் சென்றன. அதன்பின்னே மக்கள் எந்நேரமும் செய்வன எவை என்றாலும், அவற்றில் எல்லாம் அன்புதான் தெரிந்தது. மக்கள் தோற்றத்திலும், அவர் பேசிய மொழியிலும் அன்பு ஒன்றே புலப்பட்டது” என்பது, வால்ட் விட்மன் கவிதையின் கருத்தாகும்.

Question 7.
கவிஞர் ‘ஸ்டெஃபான் மல்லார்மே’ கவிதை கூறும் செய்தி யாது?
Answer:
பாய்மரங்களைத் தூக்கி எறிந்துவிட்டிருக்கும் நீராவிக் கப்பலே, தொலைவான தேசத்திலுள்ள இயற்கையை நோக்கிப் புறப்படு! இரக்கம் இல்லாத எதிர்பார்ப்புகளில் மனம் உடைந்து ஆடும் கைக்குட்டைகளின் மகத்தான வழியனுப்புதலுக்கான அசைவை நம்பிக் கொண்டிருப்பது வேதனையே தரும்!

பாய்மரமும் இல்லாமல், போய்ச் சேர்வதற்குத் தீவுகளும் இல்லாமல் மூழ்கிவிட்ட கப்பல்களின்மேல் சாய்ந்து, புயலை அழைக்கும் பாய்மரங்கள்தாமே அவை? ஆனால், என் நெஞ்சே, மாலுமிகளின் பாடலை இதோ கேள்!” என்பது, கவிஞர் ‘ஸ்டெஃபான் மல்லார்மே’ கவிதை றும் செய்தியாகும்.

Question 8.
‘பாப்லோ நெரூடா’ கவிதையால் பெறப்படும் செய்தி யாது?
Answer:

  • “திங்கள், செவ்வாய்க் கிழமைகளுடனும் ஆண்டு முழுவதுடன் வார மம் சிக்கிக்கொண்டு உள்ளன. உமது களைத்துப் போன கத்தரிக்கோலால் காலத்தை வெட்டித் துண்டுபோட முடியாது.
  • பகலின் பெயர்கள் அனைத்தையும் இரவின் நீர் அழைக்கிறது. இரவில் உறங்கும்போது என்ன பெயர் சொல்லி அழைக்கின்றனர்? அல்லது, என்னவென்று அழைப்பதில்லை?
  • கண்மூடித் தூங்கும்போது நான் நானாக இல்லை என்றால், விழித்து எழுந்தபின் நான் யார்?” என்பது, கவிஞர் பாப்லோ நெரூடாவின் கவிதையால் பெறப்படும் செய்தியாகும்.

நெடுவினர்

Question 1.
நீங்கள் மொழியை வெளிப்படுத்தும் நிலையில் பேச்சுமொழியையும் எழுத்து மொழியையும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை விவரிக்க.
பேச்சு மொழி என்பது, திரவநிலையில் இருந்து நம் விருப்பத்திற்குக் கையாளவும், உணர்வுகளை வெளிப்படுத்தவும், பிறரை உணரச் செய்யவும் துணைபுரிகிறது. எழுத்தாகப் பதிவு செய்யப்படும் மொழி, உறைந்துபோன பனிக்கட்டி போன்று, திடநிலை பெற்றுவிடுகிறது. ஆகவே, கையாள எளிதாக இருப்பதில்லை .
Answer:
பேச்சுமொழிச் சிறப்பு :
எழுத்தை மனிதனின் கை எழுதினாலும், அந்த எழுத்தின் உணர்ச்சியை முகத்திலுள்ள வாயினால் மட்டுமே வெளிப் படுத்த முடியும். அதனால் எழுத்துமொழியைவிடவும் பேச்சுமொழிக்கு ஆற்றல் அதிகம் உள்ளது. எழுத்து மொழியில், அதனைக் கேட்க எதிராளி என, ஒருவரும் இருப்பதில்லை. பேச்சுமொழி அப்படியன்று. எழுத்து மொழியைவிடவும் பேச்சு மொழிக்கு உணர்ச்சியை வெளிப்படுத்தும் ஆற்றல் மிகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

எழுத்து மொழி இயல்பு :
எழுத்து பொழி என்பது, ஒருவகையில் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் மொழிபோல் தோன்றும்; உறைந்த பாக்கட்டி போன்ற திடநிலை அடைந்துவிடும். எழுத்துமொழி, விருப்பம்போல் கையாள முடியாததாகி விடுகிறது. எழுத்துமொழி, நேரடிப் பயன்பாட்டிற்கு உதவாததால், வேற்றுமொழி போலாகிவிடுகிறது.

பேச்சுமொழிக் கவிதை :
பேச்சுமொழியே ஒரு கவிஞனை நிகழ்காலத்தவனா, இறந்தகாலத்தவனா என, நிர்ணயம் செய்யும் ஆற்றலுடையது. பேச்சுமொழியில் ஒரு கவிதையைப் படைக்கின்றபோது, அது உடம்பின் ஒரு மேல்தோல்போல் உயர்வுடன் இயங்குகிறது. ஆனால், எழுத்துமொழியில் அதே சொற்கள் அழகுடையதானாலும், உணர்ச்சி இல்லாத ஆடைபோல் போர்த்திக்கொள்ள உதவுகிறது. பேச்சுமொழியை உடனே தாகம் போக்கும் நீர் என்றும், எழுத்துமொழி உறைந்த பனிக்கட்டியானாலும், என்றேனும் ஒருநாள் பயன்தரும் எனவும் நான் உணர்கிறேன்.

பலவுள் தெரிக

Question 1.
பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க.
அ) அ. முத்துலிங்கம் – யுகத்தின் பாடல்
ஆ) பவணந்தி முனிவர் – நன்னூல்
இ) சு. வில்வரத்தினம் – ஆறாம் திணை
ஈ) இந்திரன் – பேச்சுமொழியும் எழுத்துமொழியும்
i. அ, ஆ
ii. அ, ஈ
iii. ஆ, ஈ
iv. அ, இ
Answer:
iii. ஆ, ஈ

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

Question 2.
“ஒரு திரவநிலையில், நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்ப்படிந்து நடந்துகொள்ளும் எனது மொழி, எழுத்து மொழியாகப் பதிவு செய்யப்படுகிறபோது, உறைந்துபோன பனிக்கட்டியைப் போன்ற திடநிலையை அடைகிறது.” – இவ்வரிகள் உணர்த்தும் கருத்து.
அ) மொழி என்பது திட, திரவ நிலைகளில் இருக்கும்.
ஆ) பேச்சுமொழி, எழுத்துமொழியைத் திட, திரவப் பொருள்களாக உருவகப்படுத்தவில்லை.
இ) எழுத்துமொழியைவிடப் பேச்சுமொழி எளிமையானது.
ஈ) பேச்சுமொழியைக் காட்டிலும் எழுத்துமொழி எளிமையானது.
Answer:
இ) எழுத்துமொழியைவிடப் பேச்சுமொழி எளிமையானது.

கூடுதல் வினாக்கள்

Question 3.
“கவிதையினை இயன்றவரை பேசுவதுபோல் எழுதுவதுதான் உத்தமம்” என்றும், அதுவே, “மானுடத்துக்கு எழுத்தாளர்கள் செய்யும் கடமை” என்றும் கூறியவர் ……………
அ) இராசேந்திரன் (இந்திரன்)
ஆ) கா. சிவத்தம்பி
இ) மகாகவி பாரதியார்
ஈ) ஆற்றூர் ரவிவர்மா
Answer:
இ) மகாகவி பாரதியார்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

Question 4.
“மொழி என்ற ஒன்று பிறந்தவுடன் ‘உலகம்’ என்பதும் ‘நான்’ என்பதும், தனித்தனியாகப் பிரிந்து தங்களைத் தனித்துவமாக நிலைநிறுத்திக் கொள்கின்றன” எனக் கூறியவர் ………..
அ) இந்திரன்
ஆ) மனோரமா பிஸ்வாஸ்
இ) எர்னஸ்ட் காசிரர்
ஈ) ஸ்டெஃபான் மல்லார்மே
Answer:
இ) எர்னஸ்ட் காசிரர்

Question 5.
இந்திரனின் இயற்பெயர் -…………….
அ) முத்துலிங்கம்
ஆ) இராசேந்திரன்
இ) ஜெயபாலன்
ஈ) வில்வரத்தினம்
Answer:
ஆ) இராசேந்திரன்

Question 6.
உணர்ச்சிக்கு மிக அருகில் இருக்கும் மொழி …………….
அ) இலக்கியபொழி
ஆ) கவிதைமொழி
இ) பேச்சுமொழி
ஈ) எழுத்துமொழி
Answer:
இ) பேச்சுமொழி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

Question 7.
“பறவைகளை ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்” – கவிதை ஆசிரியர்.
அ) டைஃபான் மல்லார்மே
ஆ) வால்ட் விட்மன்
இ. பாபலோ நெரூடா
ஈ) மனோரமா பிஸ்வாஸ்
Answer:
ஈ) மனோரமா பிஸ்வாஸ்

Question 8.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் …………….
அ) பாப்லோ நெரூடா
ஆ) ஸ்டெஃபான் மல்லார்மே
இ) சிவத்தம்பி
ஈ) வால்ட் விட்மன்
Answer:
ஈ) வால்ட் விட்மன்

Question 9.
‘வால்ட் விட்மன்’, ………. நாட்டைச் சேர்ந்தவர்.
அ) பிரான்சு
ஆ) அமெரிக்கா
இ) சிலி
ஈ) இங்கிலாந்து
Answer:
ஆ) அமெரிக்கா

Question 10.
‘ஸ்டெஃபான் மல்லார்மே’,…………………நாட்டவர்.
அ) அமெரிக்கா
ஆ) சிலி
இ) பிரான்சு
ஈ) நார்வே
Answer:
இ) பிரான்சு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

Question 11.
‘பாப்லோ நெரூடா’, ……………. நாட்டைச் சேர்ந்தவர்.
அ) அமெரிக்கா
ஆ) சிலி
இ) பிரான்சு
ஈ) இங்கிலாந்து
Answer:
ஆ) சிலி

Question 12.
இலத்தீன் அமெரிக்காவின் மிகச்சிறந்த கவிஞர் …………….
அ) ஸ்டெஃபான் மல்லார்மே
ஆ) வால்ட் விட்மன்
இ) பாப்லோ நெரூடா
ஈ) சிவத்தம்பி
Answer:
இ) பாப்லோ நெரூடா

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

Question 13.
‘தமிழின் கவிதையியல்’ நூலின் ஆசிரியர் …………….
அ) இந்திரன்
ஆ) பாரதியார்
இ) கா. சிவத்தம்பி
ஈ) ரவிவர்மா
Answer:
இ) கா. சிவத்தம்பி

Question 14.
1971ஆம் ஆண்டு ‘நோபல் பரிசு’ பெற்ற கவிஞர் …………….
அ) வால்ட் விட்மன்
ஆ) பாப்லோ நெரூடா
இ) ஸ்டெஃபான் மல்லார்மே
ஈ) கா. சிவத்தம்பி
Answer:
ஆ) பாப்லோ நெரூடா

Question 15.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற “பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்” என்பது,………. மொழி பெயர்க்கப்பட்டது.
அ) ஆங்கில மொழியிலிருந்து
ஆ) பிரெஞ்சு மொழியிலிருந்து
இ) இலத்தீன் மொழியிலிருந்து
ஈ) ஒரிய மொழியிலருந்து
Answer:
ஈ) ஒரிய மொழியிலிருந்து

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

Question 16.
2011ஆம் ஆண்டு ‘சாகித்திய அகாதெமி’யின் விருது பெ நூல் …………….
அ) முப்பட்டை நகரம்
ஆ) சாம்பல் வார்த்தைகள்
இ) தமிழ் அழகியல்
ஈ) பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்
Answer:
ஈ) பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்

Question 17.
புதுக்கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர்……………..
அ) ஸ்டெஃபான் மல்லார்மே
ஆ) பாப்லோ நெரூடா
இ) வால்ட் விட்மன்
ஈ) இந்திரன்
Answer:
இ) வால்ட் விட்மன்

Question 18.
குறியீட்டுக் கவிதையை இருவ,க்கியர் …………….
அ) பாப்லோ நெரூடா
ஆ) மனோரமா பிஸ்வாஸ்
இ) வால்ட் விட்மன் V
ஈ) ஸ்டெஃபான் மல்லார்மே
Answer:
ஈ) ஸ்டெபான் மல்லார்மே

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

Question 19.
வாழ்க்கையின் வடிவமற்ற தன்மையைப் பற்றிப் பேசும் கவிதை படைப்பவர் …………….
அ) ஸ்டெஃபான் மல்லார்மே
ஆ) மனோரமா பிஸ்வாஸ்
இ) பாடலோ நெரூடா
ஈ) வால்ட் விட்மன்
Answer:
இ) பாப்லோ நெரூடா பாம்)

Question 20.
missing உள்ளவற்றைப் பொருத்தி விடை காண்க.
அ) புதுக்கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர்
ஆ) குறியீட்டுக் கவிதையைப் பதிவு செய்தவர்
இ) தேசியக் கவியாகப் போற்றப்படுகிறவர்
ஈ) இலக்கியத்திற்கு நோபல் பரிசுபெற்றவர்
1) வால்ட் விட்மன்
2) மகாகவி பாரதியார்
3) பாப்லோ நெரூடா
4) ஸ்டெஃபான் மல்லார்மே
அ) 1 3 4 2
ஆ) 1 4 2 3
இ) 4 3 2 1
ஈ) 2 143
Answer:
ஆ) 1 4 2 3

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

Question 21.
பொருத்துக
im
Answer:
i – ஆ, ii – ஈ, iii – அ, iv – இ.

Question 22.
பொருத்துக.
im
Answer:
i – இ, ii – ஈ, iii – அ, iv – ஆ.

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. மொழி என்ற ஒன்று பிறந்தவுடன் ‘உலகம்’ என்பதும், ‘நான்’ என்பதும் தனித்தனியாகப் பிரிந்து, தங்களைத் தனித்துவமாக நிலைநிறுத்திக் கொள்கின்றன.
வினா : ‘உலகம்’ என்பதும் ‘நான்’ என்பதும் தனித்தனியாகப் பிரிந்து, தங்களைத் தனித்துவமாக நிலைநிறுத்திக் கொள்வது எப்போது?

2. வால்ட் விட்மனைப் போன்றவருடைய கவிதைகளில், ஒரு சொல்லும் மற்றொரு சொல்லைவிட முக்கியமானதாகி விடுவதில்லை.
வினா : எவர் போன்றவருடைய கவிதைகளில் எந்த ஒரு சொல்லும் மற்றொரு சொல்லைவிட முக்கிய மானதாகி விடுவதில்லை ?

3. குறியீட்டுக் கவிதை என்பது பொருளைப் பதிவு செய்வதன்று; நினைவு கூரத்தக்க தருணங்களைப்
பதிவு செய்வதாகும்.
வினா : குறியீட்டுக் கவிதை என்பது எதைப் பதிவு செய்வதன்று? எவற்றைப் பதிவு செய்வது?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.1 யுகத்தின் பாடல்

4. கவிதைக்குள் உலவும் மொழியில் தாக்கம், கவிதைக்கான உலகத்தைக் கட்டியெழுப்புகிறது.
வினா : கவிதைக்குள் உலவும் மொழியின் தாக்கம், எதற்கான உலகத்தைக் கட்டியெழுப்புகிறது?

5. மொழி என்ற ஒன்று எனுள் தோன்றியவுடன்தான் உலகம் எனது கவனிப்புக்குரிய ஒன்றாக மாறியது.
வினா : எந்த என்று என்னுடன் தோன்றியவுடன், உலகம் எனது கவனிப்புக்குரிய ஒன்றாக மாறியது?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

குறுவினாக்கள்

Question 1.
பேச்சுமொழி எழுத்துமொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கது ஏன்?
Answer:
எழுத்துமொழி, பேச்சுமொழிக்குத் திரும்பும்போது வெளிப்பாட்டுச் சக்தி அதிகம் கொண்டதாக மாறி விடுகிறது. எழுத்துமொழி உணர்ச்சி வெளிப்பாட்டைத் தெரிவிப்பதில்லை. எனவே, எழுத்து மொழியைக் காட்டிலும் பேச்சுமொழி, உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கதாக உள்ளது.

கூடுதல் வினாக்கள்

Question 2.
இந்திரனின் பிற நூல்கள் யாவை ?
Answer:
இந்திரனின் பிற நூல்கள் : முப்படை நகரம், சாம்பல் வார்த்தைகள், தம் அழகியல், நவீன ஓவியம்.

Question 3.
வால்ட்விட்மனின் உலகப்புகழ் பெற்ற கவிதைநூல் எது?
Answer:
‘புல்லின் இதழ்கள், வால்ட் விட்மனின் உலகப்புகழ் பெற்ற கவிதை நூல்.

Question 4.
‘நான்’ உதயமானது எப்போது என இந்திரன் கூறுகிறார்?
Answer:
*உலகம்’ என்பது மொழியினால் கட்டமைக்கப்பட்டபிற்கு உலகத்திலிருந்து நான்’ என்பது தனித்துப் பிரிந்து உதயமானதாக இந்திரன் கூறுகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

Question 5.
சொற்கள் எதற்கு உதவும் ?
Answer:
உணர்ச்சியினால் நிரம்பி இருக்கிறபோது, அந்த வேகத்தைப் பதிவு செய்வதற்குச் சொற்கள் உதவும்.

Question 6.
புதுக்கவிதை என்பது எது?
Answer:
மரபு சார்ந்த செய்யுள்களின் இலக்கணக் கட்டுப்பாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட கவிதையே, புதுக்கவிதையாகும்.

Question 7.
குறியீட்டுக்கவிதை என்பது எது?
Answer:
குறியீட்டுக் கவிதை என்பது பொருளைப் பதிவு செய்வது அன்று; நினைவுகூரத்தக்க தருணங்களைப் பதிவு செய்வதாகும்.

Question 8.
புதுக்கவிதையின் இருப்பு யாது?
Asnwer:

  • புதுக்கவிதை, தன்னைப் படிப்பவரின் ஆழ்மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • படிப்போரின் சிந்தனைக்கு ஏற்ப, விரிவடையும் பன்முகத் தன்மையும் கொண்டிருக்கும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

Question 9.
பேச்சுமொழி எழுத்துமொழிக் கவிதை குறித்து இந்திரன் கூறுவது யாது?
Answer:

  • “பேச்சுமொழியில் செய்யப்படுகிற கவிதைச் சொற்கள், உடம்பின் மேல்தோல் போல் இயங்குகின்றன.
  • எழுத்துமொழியில் அதே சொற்கள் கவிதையின் உணர்வை, உணர்ச்சியற்ற ஆடைபோல் மூடிப் போர்த்தி விடுகின்றன’ என, இந்திரன் கூறுகிறார்.

Question 10.
எது கவிஞனின் கடமையாகிறது?
Answer:
கவிதைக்குள் உலவும் மொழியின் தாக்கம், கவிதைக்கான உலகத்தைத் தட்டி எழுப்புகிறது. எனவே, எத்தகைய மொழியைக் கவிதைக்குப் பயன்படுத்துகிறோமோ, அதன் குணாம்சங்களையும், பேச்சு வழக்குகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியது கவிஞனின் கடமையாகிறது.

Question 11.
‘வால்ட்விட்மன்’ குறித்து எழுதுக.
Answer:

  • ‘வால்ட்விட்மன்’, அமெரிக்காவைச் சேர்ந்தவர்; ஆங்கிலக் கவிஞர்; இதழாளர்; கட்டுரையாளர்; ‘புதுக்கவிதை’ இயக்கத்தைத் தோற்றுவித்தவர்.
  • இவர் படைத்த ‘புல்லின் இதழ்கள்’ (Leaves of Grass) உலகப் புகழ்பெற்ற நூல்.

Question 12.
‘ஸ்டெஃபான் மல்லார்மே’ குறித்து நீ அறிந்தன யாவை?
Answer:

  • கவிஞர் ‘ஸ்டெஃபான் மல்லார்மே’, பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர்.
  • ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர்; பிரெஞ்சுக் கவிஞர். இவர் கவிதைகளைப் புரிந்து கொள்வதன்மூலம், ‘சிம்பலிஸம்’ என்கிற ‘குறியீட்டியத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

Question 13.
‘பாப்லோ நெரூடா’ குறித்து நீ அறிவன யாவை?
Answer:
கவிஞர் பாப்லோ நெரூடா’, தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் பிறந்தவர். இலத்தீன் அமெரிக்காவின் மிகச் சிறந்த ஆங்கிலக் கவிஞர். தம் கவிதைகளுக்காக, 1971ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவர்.

சிறுவினாக்கள்

Question 1.
‘என்னுயிர் தமிழ்மொழி என்பேன்’ என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள மொழிப்பற்றினை எழுதுக.
Answer:
எனக்கு உயிர் தந்தவள் தாய். தான் ஊட்டிய பாலோடு, உலகை அறிமுகம் செய்ய மாட்டி வளர்த்த மொழி தமிழ். என் உயிரோடு கலந்து உடலோடு வளர்ந்தது. வளர்ந்தபின் வளிமான மொழியைக் கற்றபோது, அதன் வளத்தோடு வீச்சும், ஆழமும் புரிந்தது.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்று, என் பாட்டன் பாரதி சொன்னதன் பொருளைப் புரிந்துகொண்டேன். “தமிழுக்கு அமுதென்று பேர்” என்று பாரதிதாசன் கூறியதைத் தெளிந்தேன். “தமிழன் என்றோர் இனமுண்டு! தனியே அவர்க்கோர் குணமுண்டு” என்று, நாமக்கல் கவிஞர் சொன்னதன் ஆழ்பொரும் அறிந்தேன். அதனால், என் தமிழை உயிரினும் மேலானதாக மதிக்கிறேன்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

Question 2.
கூற்று : குறியீட்டுக் கவிதை என்பது பொருளைப் பதிவு செய்வதன்று; நினைவுகூரத்தக்க தருணங்களைப் பதிவு செய்வதாகும்.
கவிதை : கூண்டு திறந்தது
சிறகடிக்கவா?
இல்லை! சீட்டெடுக்க
கூற்றில் ‘குறியீடு’ எனக் குறிப்பிடுவது கவிதையில் எப்பொருளாக வந்துள்ளது?
Answer:

  • குறியீட்டுக் கவிதை என்பது அந்த வேளையில் கண்டதன் நுண்பொருளைச் சிந்திக்கத் தூண்டும் எண்ணத்தைப் பதிவு செய்வதாகும்)
  • பறவைகளைக் கூட்டில் அடைத்து வைத்துச் சோதிடம் பார்ப்பதை அனைவரும் அறிவர். கூட்டைத் திறப்பது பறவைக்குச் சுதந்தரம் தருவதற்காகவா? அன்று.
  • அது சிறகசைத்துப் புறதை மறக்க அடித்து அடிமைப்படுத்தி விடுகிறார்கள். அதற்கென ஒரு கொத்தடிமைத் தொழிலை முடிவு செய்கிறார்கள். இந்தக் குறியீடு, சமூக அவலத்தை வெளி ப்படுத்தும்; சுருக்கமாகச் சுட்டிக்காட்ட உதவும்.

கூடுதல் வினாக்கள்

Question 3.
மொழி அளித்த திறன்களாக இந்திரன் கூறுவனவற்றை எழுதுக.
Answer:

  • மொழி தோன்றியவுடன், உலகம் கவனிப்புக்கு உரியதாக மாறியது. மொழி என்னும் சாவியால் திறந்தபோதெல்லாம், பெயர் சூட்டப்படாத பலவற்றைக் காணவும், அவற்றிற்குத் தாம் விரும்பும் பெயரைச் சூட்டவும் முடிந்தது.
  • அவற்றை விதவிதமான அடுக்குகளில், அவற்றின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப ஒருமை, பன்மை ‘ பிரித்து அடுக்கும் திறனையும் மொழி வழங்கியதாக இந்திரன் கூறியுள்ளார்.

Question 4.
‘மொழி அதிகாரத்தை உருவாக்கிக் கொடுத்தது எப்போது என இந்திரன் கூறுகிறார்?
Answer:

  • வேலையில் மூழ்கியுள்ள தாயைக் குழந்தை ‘அம்மா’ என அழைத்தபோது கவனியாதவர், அவர் பெயரைச் சொல்லி அழைத்ததும் திடுக்கிட்டுத் திரும்பி வருகிறார்.
  • அப்போதுதான், பெயர்களிட்டு அழைக்கும்போது அவற்றின் மீது, ஓர் அதிகாரத்தை மொழி உருவாக்கிக் கொடுப்பதை உணரத் தலைப்பட்டதாக இந்திரன் கூறுகிறார்.

Question 5.
‘கவிதை என்பது எது’ என்பதற்கு இந்திரன் தரும் விளக்கம் யாது ?
Answer:

  • மொழிக்குள் உலகையும், உலகிற்குள் மொழியையும் முழுமையாக நுழைத்துவிட முயலும் தொடர் படைப்புச் செயல்பாடே கவிதை! எனவே, கவிதை என்பதே மொழிதான்.
  • கவிதைக்குள் உலவும் மொழியின் தாக்கமே, கவிதைக்கான உலகத்தைக் கட்டி எழுப்புகிறது” என்பதே, ‘எது கவிதை’ என்பதற்கு, இந்திரன் தரும் விளக்கமாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

Question 6.
பாடத்துள் இடம்பெற்ற ‘வால்ட் விட்மன்’ கவிதையின் கருத்து யாது?
Answer:

  • என் கனவில் ‘நண்பர்கள் நகரம்’ என்றொரு புது நகரம் வந்தது! அந்த நகரத்தில் அன்பைவிடப் பெரியது என்று ஒன்றும் இல்லை.
  • அன்பு என்னும் வழித்தடத்தில் எல்லாமும் சென்றன. அதன்பின்னே மக்கள் எந்நேரமும் செய்வன எவை என்றாலும், அவற்றில் எல்லாம் அன்புதான் தெரிந்தது. மக்கள் தோற்றத்திலும், அவர் பேசிய மொழியிலும் அன்பு ஒன்றே புலப்பட்டது” என்பது, வால்ட் விட்மன் கவிதையின் கருத்தாகும்.

Question 7.
கவிஞர் ‘ஸ்டெஃபான் மல்லார்மே’ கவிதை கூறும் செய்தி யாது?
Answer:
பாய்மரங்களைத் தூக்கி எறிந்துவிட்டிருக்கும் நீராவிக் கப்பலே, தொலைவான தேசத்திலுள்ள இயற்கையை நோக்கிப் புறப்படு! இரக்கம் இல்லாத எதிர்பார்ப்புகளில் மனம் உடைந்து ஆடும் கைக்குட்டைகளின் மகத்தான வழியனுப்புதலுக்கான அசைவை நம்பிக் கொண்டிருப்பது வேதனையே தரும்!

பாய்மரமும் இல்லாமல், போய்ச் சேர்வதற்குத் தீவுகளும் இல்லாமல் மூழ்கிவிட்ட கப்பல்களின்மேல் சாய்ந்து, புயலை அழைக்கும் பாய்மரங்கள்தாமே அவை? ஆனால், என் நெஞ்சே, மாலுமிகளின் பாடலை இதோ கேள்!” என்பது, கவிஞர் ‘ஸ்டெஃபான் மல்லார்மே’ கவிதை றும் செய்தியாகும்.

Question 8.
‘பாப்லோ நெரூடா’ கவிதையால் பெறப்படும் செய்தி யாது?
Answer:

  • “திங்கள், செவ்வாய்க் கிழமைகளுடனும் ஆண்டு முழுவதுடன் வார மம் சிக்கிக்கொண்டு உள்ளன. உமது களைத்துப் போன கத்தரிக்கோலால் காலத்தை வெட்டித் துண்டுபோட முடியாது.
  • பகலின் பெயர்கள் அனைத்தையும் இரவின் நீர் அழைக்கிறது. இரவில் உறங்கும்போது என்ன பெயர் சொல்லி அழைக்கின்றனர்? அல்லது, என்னவென்று அழைப்பதில்லை?
  • கண்மூடித் தூங்கும்போது நான் நானாக இல்லை என்றால், விழித்து எழுந்தபின் நான் யார்?” என்பது, கவிஞர் பாப்லோ நெரூடாவின் கவிதையால் பெறப்படும் செய்தியாகும்.

நெடுவினர்

Question 1.
நீங்கள் மொழியை வெளிப்படுத்தும் நிலையில் பேச்சுமொழியையும் எழுத்து மொழியையும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை விவரிக்க.
பேச்சு மொழி என்பது, திரவநிலையில் இருந்து நம் விருப்பத்திற்குக் கையாளவும், உணர்வுகளை வெளிப்படுத்தவும், பிறரை உணரச் செய்யவும் துணைபுரிகிறது. எழுத்தாகப் பதிவு செய்யப்படும் மொழி, உறைந்துபோன பனிக்கட்டி போன்று, திடநிலை பெற்றுவிடுகிறது. ஆகவே, கையாள எளிதாக இருப்பதில்லை .
AnsweR:
பேச்சுமொழிச் சிறப்பு :
எழுத்தை மனிதனின் கை எழுதினாலும், அந்த எழுத்தின் உணர்ச்சியை முகத்திலுள்ள வாயினால் மட்டுமே வெளிப் படுத்த முடியும். அதனால் எழுத்துமொழியைவிடவும் பேச்சுமொழிக்கு ஆற்றல் அதிகம் உள்ளது. எழுத்து மொழியில், அதனைக் கேட்க எதிராளி என, ஒருவரும் இருப்பதில்லை. பேச்சுமொழி அப்படியன்று. எழுத்து மொழியைவிடவும் பேச்சு மொழிக்கு உணர்ச்சியை வெளிப்படுத்தும் ஆற்றல் மிகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

எழுத்து மொழி இயல்பு :
எழுத்து பொழி என்பது, ஒருவகையில் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் மொழிபோல் தோன்றும்; உறைந்த பாக்கட்டி போன்ற திடநிலை அடைந்துவிடும். எழுத்துமொழி, விருப்பம்போல் கையாள முடியாததாகி விடுகிறது. எழுத்துமொழி, நேரடிப் பயன்பாட்டிற்கு உதவாததால், வேற்றுமொழி போலாகிவிடுகிறது.

பேச்சுமொழிக் கவிதை :
பேச்சுமொழியே ஒரு கவிஞனை நிகழ்காலத்தவனா, இறந்தகாலத்தவனா என, நிர்ணயம் செய்யும் ஆற்றலுடையது. பேச்சுமொழியில் ஒரு கவிதையைப் படைக்கின்றபோது, அது உடம்பின் ஒரு மேல்தோல்போல் உயர்வுடன் இயங்குகிறது. ஆனால், எழுத்துமொழியில் அதே சொற்கள் அழகுடையதானாலும், உணர்ச்சி இல்லாத ஆடைபோல் போர்த்திக்கொள்ள உதவுகிறது. பேச்சுமொழியை உடனே தாகம் போக்கும் நீர் என்றும், எழுத்துமொழி உறைந்த பனிக்கட்டியானாலும், என்றேனும் ஒருநாள் பயன்தரும் எனவும் நான் உணர்கிறேன்.

பலவுள் தெரிக

Question 1.
பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க.
அ) அ. முத்துலிங்கம் – யுகத்தின் பாடல்
ஆ) பவணந்தி முனிவர் – நன்னூல்
இ) சு. வில்வரத்தினம் – ஆறாம் திணை
ஈ) இந்திரன் – பேச்சுமொழியும் எழுத்துமொழியும்
i. அ, ஆ
ii. அ, ஈ
iii. ஆ, ஈ
iv. அ, இ
Answer:
iii. ஆ, ஈ

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

Question 2.
“ஒரு திரவநிலையில், நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்ப்படிந்து நடந்துகொள்ளும் எனது மொழி, எழுத்து மொழியாகப் பதிவு செய்யப்படுகிறபோது, உறைந்துபோன பனிக்கட்டியைப் போன்ற திடநிலையை அடைகிறது.” – இவ்வரிகள் உணர்த்தும் கருத்து.
அ) மொழி என்பது திட, திரவ நிலைகளில் இருக்கும்.
ஆ) பேச்சுமொழி, எழுத்துமொழியைத் திட, திரவப் பொருள்களாக உருவகப்படுத்தவில்லை.
இ) எழுத்துமொழியைவிடப் பேச்சுமொழி எளிமையானது.
ஈ) பேச்சுமொழியைக் காட்டிலும் எழுத்துமொழி எளிமையானது.
Answer:
இ) எழுத்துமொழியைவிடப் பேச்சுமொழி எளிமையானது.

கூடுதல் வினாக்கள்

Question 3.
“கவிதையினை இயன்றவரை பேசுவதுபோல் எழுதுவதுதான் உத்தமம்” என்றும், அதுவே, “மானுடத்துக்கு எழுத்தாளர்கள் செய்யும் கடமை” என்றும் கூறியவர் ……………
அ) இராசேந்திரன் (இந்திரன்)
ஆ) கா. சிவத்தம்பி
இ) மகாகவி பாரதியார்
ஈ) ஆற்றூர் ரவிவர்மா
Answer:
இ) மகாகவி பாரதியார்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

Question 4.
“மொழி என்ற ஒன்று பிறந்தவுடன் ‘உலகம்’ என்பதும் ‘நான்’ என்பதும், தனித்தனியாகப் பிரிந்து தங்களைத் தனித்துவமாக நிலைநிறுத்திக் கொள்கின்றன” எனக் கூறியவர் ………..
அ) இந்திரன்
ஆ) மனோரமா பிஸ்வாஸ்
இ) எர்னஸ்ட் காசிரர்
ஈ) ஸ்டெஃபான் மல்லார்மே
Answer:
இ) எர்னஸ்ட் காசிரர்

Question 5.
இந்திரனின் இயற்பெயர் -…………….
அ) முத்துலிங்கம்
ஆ) இராசேந்திரன்
இ) ஜெயபாலன்
ஈ) வில்வரத்தினம்
Answer:
ஆ) இராசேந்திரன்

Question 6.
உணர்ச்சிக்கு மிக அருகில் இருக்கும் மொழி …………….
அ) இலக்கியபொழி
ஆ) கவிதைமொழி
இ) பேச்சுமொழி
ஈ) எழுத்துமொழி
Answer:
இ) பேச்சுமொழி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

Question 7.
“பறவைகளை ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்” – கவிதை ஆசிரியர்.
அ) டைஃபான் மல்லார்மே
ஆ) வால்ட் விட்மன்
இ. பாபலோ நெரூடா
ஈ) மனோரமா பிஸ்வாஸ்
Answer:
ஈ) மனோரமா பிஸ்வாஸ்

Question 8.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் …………….
அ) பாப்லோ நெரூடா
ஆ) ஸ்டெஃபான் மல்லார்மே
இ) சிவத்தம்பி
ஈ) வால்ட் விட்மன்
Answer:
ஈ) வால்ட் விட்மன்

Question 9.
‘வால்ட் விட்மன்’, ………. நாட்டைச் சேர்ந்தவர்.
அ) பிரான்சு
ஆ) அமெரிக்கா
இ) சிலி
ஈ) இங்கிலாந்து
Answer:
ஆ) அமெரிக்கா

Question 10.
‘ஸ்டெஃபான் மல்லார்மே’,…………………நாட்டவர்.
அ) அமெரிக்கா
ஆ) சிலி
இ) பிரான்சு
ஈ) நார்வே
Answer:
இ) பிரான்சு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

Question 11.
‘பாப்லோ நெரூடா’, ……………. நாட்டைச் சேர்ந்தவர்.
அ) அமெரிக்கா
ஆ) சிலி
இ) பிரான்சு
ஈ) இங்கிலாந்து
Answer:
ஆ) சிலி

Question 12.
இலத்தீன் அமெரிக்காவின் மிகச்சிறந்த கவிஞர் …………….
அ) ஸ்டெஃபான் மல்லார்மே
ஆ) வால்ட் விட்மன்
இ) பாப்லோ நெரூடா
ஈ) சிவத்தம்பி
Answer:
இ) பாப்லோ நெரூடா

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

Question 13.
‘தமிழின் கவிதையியல்’ நூலின் ஆசிரியர் …………….
அ) இந்திரன்
ஆ) பாரதியார்
இ) கா. சிவத்தம்பி
ஈ) ரவிவர்மா
Answer:
இ) கா. சிவத்தம்பி

Question 14.
1971ஆம் ஆண்டு ‘நோபல் பரிசு’ பெற்ற கவிஞர் …………….
அ) வால்ட் விட்மன்
ஆ) பாப்லோ நெரூடா
இ) ஸ்டெஃபான் மல்லார்மே
ஈ) கா. சிவத்தம்பி
Answer:
ஆ) பாப்லோ நெரூடா

Question 15.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற “பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்” என்பது,………. மொழி பெயர்க்கப்பட்டது.
அ) ஆங்கில மொழியிலிருந்து
ஆ) பிரெஞ்சு மொழியிலிருந்து
இ) இலத்தீன் மொழியிலிருந்து
ஈ) ஒரிய மொழியிலருந்து
Answer:
ஈ) ஒரிய மொழியிலிருந்து

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

Question 16.
2011ஆம் ஆண்டு ‘சாகித்திய அகாதெமி’யின் விருது பெ நூல் …………….
அ) முப்பட்டை நகரம்
ஆ) சாம்பல் வார்த்தைகள்
இ) தமிழ் அழகியல்
ஈ) பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்
Answer:
ஈ) பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்

Question 17.
புதுக்கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர்……………..
அ) ஸ்டெஃபான் மல்லார்மே
ஆ) பாப்லோ நெரூடா
இ) வால்ட் விட்மன்
ஈ) இந்திரன்
Answer:
இ) வால்ட் விட்மன்

Question 18.
குறியீட்டுக் கவிதையை இருவ,க்கியர் …………….
அ) பாப்லோ நெரூடா
ஆ) மனோரமா பிஸ்வாஸ்
இ) வால்ட் விட்மன் V
ஈ) ஸ்டெஃபான் மல்லார்மே
Answer:
ஈ) ஸ்டெபான் மல்லார்மே

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

Question 19.
வாழ்க்கையின் வடிவமற்ற தன்மையைப் பற்றிப் பேசும் கவிதை படைப்பவர் …………….
அ) ஸ்டெஃபான் மல்லார்மே
ஆ) மனோரமா பிஸ்வாஸ்
இ) பாடலோ நெரூடா
ஈ) வால்ட் விட்மன்
Answer:
இ) பாப்லோ நெரூடா பாம்)

Question 20.
கீழ் உள்ளவற்றைப் பொருத்தி விடை காண்க.
அ) புதுக்கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர்
ஆ) குறியீட்டுக் கவிதையைப் பதிவு செய்தவர்
இ) தேசியக் கவியாகப் போற்றப்படுகிறவர்
ஈ) இலக்கியத்திற்கு நோபல் பரிசுபெற்றவர்
1) வால்ட் விட்மன்
2) மகாகவி பாரதியார்
3) பாப்லோ நெரூடா
4) ஸ்டெஃபான் மல்லார்மே
அ) 1 3 4 2
ஆ) 1 4 2 3
இ) 4 3 2 1
ஈ) 2 143
Answer:
ஆ) 1 4 2 3

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

Question 21.
பொருத்துக
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும் - 1
Answer:
i – ஆ, ii – ஈ, iii – அ, iv – இ.

Question 22.
பொருத்துக.
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும் - 2
Answer:
i – இ, ii – ஈ, iii – அ, iv – ஆ.

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. மொழி என்ற ஒன்று பிறந்தவுடன் ‘உலகம்’ என்பதும், ‘நான்’ என்பதும் தனித்தனியாகப் பிரிந்து, தங்களைத் தனித்துவமாக நிலைநிறுத்திக் கொள்கின்றன.
வினா : ‘உலகம்’ என்பதும் ‘நான்’ என்பதும் தனித்தனியாகப் பிரிந்து, தங்களைத் தனித்துவமாக நிலைநிறுத்திக் கொள்வது எப்போது?

2. வால்ட் விட்மனைப் போன்றவருடைய கவிதைகளில், ஒரு சொல்லும் மற்றொரு சொல்லைவிட முக்கியமானதாகி விடுவதில்லை.
வினா : எவர் போன்றவருடைய கவிதைகளில் எந்த ஒரு சொல்லும் மற்றொரு சொல்லைவிட முக்கிய மானதாகி விடுவதில்லை ?

3. குறியீட்டுக் கவிதை என்பது பொருளைப் பதிவு செய்வதன்று; நினைவு கூரத்தக்க தருணங்களைப்
பதிவு செய்வதாகும்.
வினா : குறியீட்டுக் கவிதை என்பது எதைப் பதிவு செய்வதன்று? எவற்றைப் பதிவு செய்வது?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.2 பேச்சுமொழியும் கவிதைமொழியும்

4. கவிதைக்குள் உலவும் மொழியில் தாக்கம், கவிதைக்கான உலகத்தைக் கட்டியெழுப்புகிறது.
வினா : கவிதைக்குள் உலவும் மொழியின் தாக்கம், எதற்கான உலகத்தைக் கட்டியெழுப்புகிறது?

5. மொழி என்ற ஒன்று எனுள் தோன்றியவுடன்தான் உலகம் எனது கவனிப்புக்குரிய ஒன்றாக மாறியது.
வினா : எந்த என்று என்னுடன் தோன்றியவுடன், உலகம் எனது கவனிப்புக்குரிய ஒன்றாக மாறியது?

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.9

Students can download 11th Business Maths Chapter 5 Differential Calculus Ex 5.9 Questions and Answers, Notes, Samcheer Kalvi 11th Business Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 11th Business Maths Solutions Chapter 5 Differential Calculus Ex 5.9

Samacheer Kalvi 11th Business Maths Differential Calculus Ex 5.9 Text Book Back Questions and Answers

Question 1.
Find y2 for the following functions:
(i) y = e3x+2
(ii) y = log x + ax
(iii) x = a cosθ, y = a sinθ
Solution:
(i) y = e3x+2
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.9 Q1

(ii) y = log x + ax
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.9 Q1.1

(iii) x = a cosθ, y = a sinθ
\(\frac{d x}{d \theta}\) = a(-sinθ) = -a sinθ …….. (i)
\(\frac{d y}{d \theta}\) = a(cosθ)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.9 Q1.2
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.9 Q1.3

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.9

Question 2.
If y = 500e7x + 600e-7x, then show that y2 – 49y = 0.
Solution:
y = 500e7x + 600e-7x
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.9 Q2
(or) y2 – 49y = 0

Question 3.
If y = 2 + log x, then show that xy2 + y1 = 0.
Solution:
y = 2 + log x
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.9 Q3

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.9

Question 4.
If = a cos mx + b sin mx, then show that y2 + m2y = 0.
Solution:
y = a cos mx + b sin mx
y1 = a \(\frac{d}{d x}\) (cos mx) + b \(\frac{d}{d x}\) (sin mx)
[∵ \(\frac{d}{d x}\) (sin mx) = cos mx \(\frac{d}{d x}\) (mx) = (cos mx) . m]
= a(-sin mx) . m + b(cos mx) . m
= -am sin mx + bm cos mx
y2 = -am(cos mx) . m + bm(-sin mx) . m
= -am2 cos mx – bm2 sin mx
= -m2 [a cos mx + b sin mx]
= -m2y
∴ y2 + m2y = 0

Question 5.
If y = \(\left(x+\sqrt{1+x^{2}}\right)^{m}\), then show that (1 + x2) y2 + xy1 – m2y = 0
Solution:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.9 Q5
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.9 Q5.1
\(y_{1}=\frac{m y}{\sqrt{1+x^{2}}}\)
Squaring both sides we get,
\(y_{1}^{2}=\frac{m^{2} y^{2}}{\left(1+x^{2}\right)}\)
(1 + x2) (\(y_{1}^{2}\)) = m2y2
Differentiating with respect to x, we get
(1 + x2) . 2(y1) (y2) + (y1)2 (2x) = 2m2yy1
Dividing both sides by 2y1 we get,
(1 + x2) y2 + xy1 = m2y
⇒ (1 + x2) y2 + xy1 – m2y = 0

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.9

Question 6.
If y = sin(log x), then show that x2y2 + xy1 + y = 0.
Solution:
y = sin(log x)
y1 = cos(log x) \(\frac{d}{d x}\) (log x)
y1 = cos(log x) . \(\frac{1}{x}\)
∴ xy1 = cos(log x)
Differentiating both sides with respect to x, we get
xy2 + y1(1) = -sin(log x) . \(\frac{1}{x}\)
⇒ x[xy2 + y1] = -sin(log x)
⇒ x2y2 + xy1 = -y
⇒ x2y2 + xy1 + y = 0

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.8

Students can download 11th Business Maths Chapter 5 Differential Calculus Ex 5.8 Questions and Answers, Notes, Samcheer Kalvi 11th Business Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 11th Business Maths Solutions Chapter 5 Differential Calculus Ex 5.8

Samacheer Kalvi 11th Business Maths Differential Calculus Ex 5.8 Text Book Back Questions and Answers

Question 1.
Find \(\frac{d y}{d x}\) of the following functions:
(i) x = ct, y = \(\frac{c}{t}\)
(ii) x = log t, y = sin t
(iii) x = a cos3θ, y = a sin3θ
(iv) x = a(θ – sin θ), y = a(1 – cos θ)
Solution:
(i) x = ct, y = \(\frac{c}{t}\)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.8 Q1

(ii) x = log t, y = sin t
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.8 Q1.1

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.8

(iii) x = a cos3θ, y = a sin3θ
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.8 Q1.2

(iv) x = a(θ – sin θ), y = a(1 – cos θ)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.8 Q1.3
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.8 Q1.4
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.8 Q1.5

Question 2.
Differentiate sin3x with respect to cos3x.
Solution:
Let u = sin3x = (sin x)3 ; v = cos3x = (cos x)3
\(\frac{d u}{d x}\) = 3(sin x) cos x ; \(\frac{d v}{d x}\) = 3(cos x)2 (-sin x)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.8 Q2

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.8

Question 3.
Differentiate sin2x with respect to x2.
Solution:
Let u = (sin x)2 ; v = x2
\(\frac{d u}{d x}\) = (2 sin x) (cos x) = sin 2x ; \(\frac{d v}{d x}\) = 2x
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.8 Q3

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.7

Students can download 11th Business Maths Chapter 5 Differential Calculus Ex 5.7 Questions and Answers, Notes, Samcheer Kalvi 11th Business Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 11th Business Maths Solutions Chapter 5 Differential Calculus Ex 5.7

Samacheer Kalvi 11th Business Maths Differential Calculus Ex 5.7 Text Book Back Questions and Answers

Question 1.
Differentiate the following with respect to x.
(i) xsin x
(ii) (sin x)x
(iii) (sin x)tan x
(iv) \(\sqrt{\frac{(x-1)(x-2)}{(x-3)\left(x^{2}+x+1\right)}}\)
Solution:
(i) Let y = xsin x
Taking logarithm on both sides we get,
log y = log(xsin x)
log y = sin x log x
Differentiating with respect to x,
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.7 Q1

(ii) Let y = (sin x)x
Taking logarithm on both sides we get,
log y = x log(sin x)
Differentiating with respect to x,
\(\frac{1}{y} \cdot \frac{d y}{d x}\) = x \(\frac{d}{d x}\) log(sin x) + log(sin x) \(\frac{d}{d x}\) (x)
\(\frac{1}{y} \cdot \frac{d y}{d x}\) = x \(\frac{1}{\sin x}\) (cos x) + log(sin x) (1)
\(\frac{1}{y} \cdot \frac{d y}{d x}\) = x cot x + log(sin x)
\(\frac{d y}{d x}\) = y[x cot x + log(sin x)]
\(\frac{d y}{d x}\) = (sin x)x [x cot x + log(sin x)]

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.7

(iii) Let y = (sin x)tan x
Taking logarithm on both sides we get,
log y = tan x log(sin x)
Differentiating with respect to x,
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.7 Q1.1

(iv) Let y = \(\sqrt{\frac{(x-1)(x-2)}{(x-3)\left(x^{2}+x+1\right)}}\)
y = \(\left(\frac{(x-1)(x-2)}{(x-3)\left(x^{2}+x+1\right)}\right)^{\frac{1}{2}}\)
Taking logarithm on both sides we get,
log y = \(\frac{1}{2}\) {[log(x – 1) + log(x – 2)] – [(log(x – 3) + log(x2 + x + 1)]}
log y = \(\frac{1}{2}\) [log(x – 1) + log(x – 2) – log(x – 3) – log(x2 + x + 1)]
Differentiating with respect to x,
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.7 Q1.2

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.7

Question 2.
If xm . yn = (x + y)m+n, then show that \(\frac{d y}{d x}=\frac{y}{x}\)
Solution:
xm . yn = (x + y)m+n
Taking logarithm on both sides we get,
m log x + n log y = (m + n) log(x + y)
Differentiating with respect to x,
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 5 Differential Calculus Ex 5.7 Q2
Hence proved.