Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

மதிப்பீடு

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

Question 1.
சாலையில் பள்ளம் இருந்ததால், …………… பேருந்தை மெதுவாக ஓட்டிச் சென்றார்.
அ) ஓட்டுநர்
ஆ) ஓட்டுனர்
இ) ஓட்டுணர்
Answer:
அ) ஓட்டுநர்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

Question 2.
கடவூருக்குச் செல்ல எந்த ………….. ப்போக வேண்டும்?
அ) வலியாக
ஆ) வளியாக
இ) வழியாக
Answer:
இ) வழியாக

Question 3.
கூண்டிலிருந்த ………….. யைச் சுதந்திரமாகப் பறக்கவிட்டான் எழிலன்.
அ) கிலி
ஆ) கிளி
இ) கிழி
Answer:
ஆ) கிளி

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

Question 4.
நீரில் துள்ளி விளையாடுகிறது …………… மீன்.
அ) வாளை
ஆ) வாலை
இ) வாழை
Answer:
அ) வாளை

Question 5.
தாய்ப் பசு இல்லாமையால் நாளடைவில் கன்று ………….ப்போனது.
அ) இழைத்து
ஆ) இளைத்து
இ) இலைத்து
Answer:
ஆ) இளைத்து

Question 6.
கடல் …………….யில் கால் நனைத்து மகிழ்வது அனைவருக்குமே பிடிக்கும்.
அ) அளை
ஆ) அழை
இ) அலை
Answer:
இ) அலை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

ஆ. பொருத்தமான சொல்லை நிரப்பித் தொடர்களைப் படித்துக்காட்டுக.

1. நடனம் என்பது, ஒரு …………………… (களை /கலை/கழை)
Answer:
கலை

2. சோளம் என்பது, ஒரு ………………… (தினை /திணை )
Answer:
தினை

3. பெட்ரோல் என்பது, ஓர் …………………. (எரிபொருள்/எறிபொருள்)
Answer:
எரிபொருள்

4. ஒட்டகம் என்பது, ஒரு …. ……………… (விளங்கு/விலங்கு)
Answer:
விலங்கு

5. தென்னை என்பது, ஒரு ………………… (மறம்/மரம்)
Answer:
மரம்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

இ. வண்ண எழுத்துகளில் உள்ள சொற்களைச் சரியான ஒலிப்புடன் படித்துக் காட்டுக.

முல்லை : நிலா, நீ வரைந்த படம் மிகவும் அகாக உள்ளது. வெண்பஞ்சு போன்ற மேகங்கள் சூழ்ந்த மலை; அம்மலையினின்று வீழும் பாலாவி போன்ற அருவி; பசுமை மிகுந்த மம், செடி, கொடிகள்; துள்ளித் திரியும் புள்ளி மான்ள்; சிகடிக்கும் வண்ணப் பறவைகள்; மரக்கிளைளில் ஊஞ்சலாடும் குங்குக் குட்டிகள் அப்பப்பா! நீ எப்படி இவ்வாறு வரையக் கற்றுக் கொண்டாய்?

நிலா : இதிலென்ன புதுமை? முந்தைய வகுப்புத் தமிழ்ப் பாடநூல்ளில் வரைந்து பார்ப்போமா என்றொரு பயிற்சி இருந்ததே. நினைவிருக்கிதா? அந்தப் பயிற்சிகளை நான் மிகவும் ஆர்வத்துடன் செய்வேன். அதனால்தான் இப்போது நன்றாக வரைகிறேன்ன்று நினைக்கிறேன்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

ஈ. விடுபட்ட இடங்களில் உரிய சொற்களை எழுதுக.
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச் சொற்கள் - 5
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச் சொற்கள் - 1

கற்பவை கற்றபின்

Question 1.
மயங்கொலி எழுத்துகள் இடம்பெறும் சொற்களை அடையாளம் காண்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

Question 2.
மயங்கொலிச் சொற்களின் பொருள் வேறுபாடு அறிக.
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச் சொற்கள் - 2

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

கூடுதல் வினா

Question 1.
மயங்கொலி எழுத்துகள் யாவை?
Answer:
மயங்கொலி எழுத்துகள் – ணநன
ரற
– லழள.

மொழியை ஆள்வோம்

பேசுதல்

Question 1.
‘சிலம்பின் வெற்றி’ என்னும் தலைப்பில் பேசுவதற்கு ஏற்ற உரை தயாரிக்க.
Answer:
அவையோர்க்கு வணக்கம்! நான் ‘சிலம்பின் வெற்றி பற்றிப் பேச வந்துள்ளேன்.
கோவலன் தன் தீவினைப் பயனால் செல்வங்களை இழந்துவிட்டான். – பொருளீட்டுவதற்காக மதுரை நகருக்குக் கண்ணகியுடன் வந்தான். கோவலன் மட்டும் கண்ணகியின் ஒரு காற்சிலம்பை விற்பதற்காக எடுத்துக் கொண்டு சென்றான். ஆனால் அங்கு அவன் அரசியின் காற்சிலம்பைத் திருடிவிட்டான் என்று பொய்க் குற்றச்சாட்டுக்கு ஆளானான். அதனால் மரண தண்டனை பெற்றான்.

இதையறிந்த கண்ணகி அரண்மனைக்குச் சென்றாள். வாயிற்காவலன் அரசனிடம், “தலைவிரி கோலத்துடன் ஒரு பெண் வந்த நிற்பதாகவும், நீதி கேட்டு வந்திருப்பதாகவும்” கூறினான். மன்னன் “அவளை உள்ளே அனுப்பு” என்று கூறினான்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

ஆன்றோர்களும் சான்றோர்களும் நிறைந்திருக்கும் அவையிலே நடுநாயகமாய் மன்னர் வீற்றிருக்க அரசவைக்குள் நுழைந்தாள் கண்ணகி. மன்னன், “நீ யார்? உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்டான்.

கண்ணகி, “ஆராயாது நீதி வழங்கிய மன்னனே! ஒரு புறாவுக்காக தன் உடலையே தந்த சிபி மன்னனும், பசுவின் துயர் போக்க தன் மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் வாழ்ந்த புகார் நகரைச் சார்ந்தவள் நான். கண்ணகி என்பது என் பெயர். அவ்வூரில் பழியில்லாச் சிறப்பினையுடைய புகழ்மிக்க மாசாத்துவான் மகனாகிய கோவலன் என்பானின் மனைவி நான். மன்னன் ஏளனமாக “கோவலனின் மனைவியா நீ?” என்றான்.

கண்ணகி, “என் கணவனை இகழ்வதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது? ஊழ்வினைப் பயனால் உன் ஊருக்கு வந்து என் கால் சிலம்பை விற்பதற்காக வந்த என் கணவனைக் கொன்று விட்டாயே, நீ செய்தது தகுமா?” என்று மன்னனிடம் கேட்டாள்.

“கள்வனைக் கொல்வது கொடுங்கோலன்று. இதை அனைவரும் அறிவர்” என்று மன்னன் கூறினான். “என் கணவன் கள்வனல்லன்; அவனிடமிருந்த சிலம்பும் அரசிக்குரிய சிலம்பன்று; அதன் இணைச் சிலம்பு இதோ என்னிடம் உள்ளது. என் கால்சிலம்பின் பரல் மாணிக்கக் கற்களால் ஆனது” என்று கண்ணகி கூறினாள்.

மன்னன் “தன் அரசியின் காற்சிலம்பு முத்துப்பரல்களால் ஆனது” என்று கூறினான். பிறகு , கோவலனிடமிருந்து பெற்ற காற்சிலம்பை எடுத்து வரச் செய்தான். கண்ணகி அச்சிலம்பை எடுத்துத் தரையில் போட்டு உடைத்தாள். அதிலிருந்த மாணிக்க கல் ஒன்று அரசனின் முகத்தில் பட்டுத் தெறித்து விழுந்தது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

மன்னன் தன் தவற்றை உணர்ந்தான். “யானோ அரசன் யானே கள்வன்” என்று கூறித் தன்னால் தன் குலத்திற்கு இழுக்கு ஏற்பட்டதாக எண்ணி உயிர் துறந்தான்.

Question 2.
சிலப்பதிகார வழக்குரை நிகழ்ச்சியில் வரும் கண்ணகிபோல் பேசிக் காட்டுக.
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.
Answer:
1. சொல்லக்கேட்டு எழுதுக.

1. அன்னையும் தந்தையும் தெய்வம்.
2. கல்வியைக் கசடறக் கற்றிட வேண்டும்.
3. தவறிழைத்தவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும்.

2. சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
1. ஆயிரம் – ………………………….
2. உண்மை – ………………………….
3. புகார் நகரம் – ………………………….
4. ஆடுகள்- ………………………….
Answer:
1. ஆயிரம் – தற்பொழுது ஆயிரம் ரூபாய் நோட்டு வழக்கத்தில் இல்லை.
2. உண்மை – நாம் எப்போதும் உண்மையைப் பேச வேண்டும்.
3. புகார் நகரம் – கண்ண கி புகார் நகரில் வாழ்ந்தவள்.
4. ஆடுகள்- ஆடுகள் மந்தை மந்தையாய் செல்கின்றன.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

Question 3.
கீழ்க்காணும் சொற்றொடர்களைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.
கல்வி கண் போன்றது
நீதி தவறாதவன் அரசன்
சிலம்பின் பரல் முத்துகளால் ஆனது
ஏழைக்கிழவி பணப்பையுடன் வந்தாள்
தீங்கு செய்தால் தீமை விளையும்.

Question 1.
தீங்கு செய்தால் என்ன நேரிடும்?
Answer:
தீங்கு செய்தால் தீமை விளையும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

Question 2.
சிலம்பின் பரல் எவற்றால் ஆனது?
Answer:
சிலம்பின் பரல் முத்துகளால் ஆனது.

Question 3.
கல்வி எதனைப் போன்றது?
Answer:
கல்வி கண் போன்றது.

Question 4.
நீதி தவறாதவன் யார்?
Answer:
நீதி தவறாதவன் அரசன்.

Question 5.
பணப்பையுடன் வந்தது யார்?
Answer:
ஏழைக்கிழவி பணப்பையுடன் வந்தாள்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

4. உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

புறநானூறு என்னும் நூலில் அறப்போர் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. அரசன் ஒருவன் மற்றொரு நாட்டு அரசன்மீது போர் தொடுக்கும் முன்பு, பசுக்களையும், அறவோரையும், பெண்களையும், பிணியாளர்களையும் போர் நிகழும் இடத்தைவிட்டுப் புறத்தே போய்விடும்படி எச்சரித்த பின்னரே படையெடுப்பு நிகழும். இச்செய்தி முதுகுடுமிப்பெருவழுதியிடம் அமைந்திருந்ததாக நெட்டிமையார் என்னும் புலவர் பாராட்டுகிறார். மேலும், படையெடுத்து வரும் பகைவன் மீது, மறைந்து நின்று, அம்பு
எய்தும் நிலையங்கள் ஞாயில்கள்’ என்று அழைக்கப்பட்டன.

வினாக்கள் :

Question 1.
உரைப்பகுதியில் இடம்பெற்றுள்ள நூலின் பெயர் யாது?
Answer:
உரைப்பகுதியில் இடம்பெற்றுள்ள நூலின் பெயர் புறநானூறு.

Question 2.
நெட்டிமையாரால் பாராட்டப்படும் அரசர் யார்?
Answer:
நெட்டிமையாரால் பாராட்டப்படும் அரசர் முதுகுடுமிப் பெருவழுதி ஆவார்.

Question 3.
‘ஞாயில்கள்’ என்றால் என்ன?
Answer:
படையெடுத்து வரும் பகைவன் மீது மறைந்து நின்று, அம்பு எய்தும் நிலையங்கள் ‘ஞாயில்கள்’ என்று அழைக்கப்பட்டன.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

4. பகைவன் – இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்.
பகைவன் இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் – நண்பன்.

5. ‘பிணி’ என்பதன் பொருள்
‘பிணி’ என்பதன் பொருள் – நோய்.

Question 5.
பொருத்தமான சொற்களால் பாடலை நிறைவு செய்க.
(சொல்லி, மீனவன், கடலிலே, பார்த்ததே, வலையில், விட்டதே, செய்ததே)
துள்ளி குதிக்கும் மீன் ……………………….
வெள்ளியை வானத்தில் ……………………….
………………………. வலை போட்டானே
………………………. சிக்கிய மீனுமே
வெளியேற முயற்சி ……………………….
நண்டு நண்பன் வந்ததே
வலையை வெட்டி ……………………….
மீன் நன்றி ………………………. சென்றதே.
Asnwer:
துள்ளி குதிக்கும் மீன் கடலிலே
வெள்ளியை வானத்தில் பார்த்ததே
மீனவன் வலை போட்டானே
வலையில் சிக்கிய மீனுமே
வெளியேற முயற்சி செய்ததே
நண்டு நண்பன் வந்ததே
வலையை வெட்டி விட்டதே
மீன் நன்றி சொல்லி சென்றதே.

மொழியோடு விளையாடு

Question 1.
பாடலில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக.
im 6
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச் சொற்கள் - 3

2. ஒரு சொல்லில் இரு தொடரை உருவாக்குவோம்.

Question 1.
திங்கள் வாரத்தின் இரண்டாம் நாள் திங்கள்
Answer:
பௌர்ணமி அன்று வானில் முழு திங்களைப் பார்த்தேன்.

Question 2.
ஞாயிறு கிழக்கே உதிக்கும். ஞாயிறு
Answer:
வாரத்தின் முதல் நாள் ஞாயிறு.

3. முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்தித் தொடர் எழுதுக.

Question 1.
கல்விக் கண் திறந்தவர் போற்றப்படுகிறார் எனக் காமராசர்.
Answer:
கல்விக்கண் திறந்தவர் எனக் காமராசர் போற்றப்படுகிறார்.

Question 2.
கற்றிட வேண்டும் கல்வியைக் கசடறக்
Answer:
கல்வியைக் கசடறக் கற்றிட வேண்டும்.

Question 3.
மனுநீதிச் சோழன் மன்னர் சோழமன்னர்களுள் புகழ்வாய்ந்த
Answer:
சோழ மன்னர்களுள் புகழ் வாய்ந்த மன்னர் மனுநீதிச் சோழன்.

Question 4.
காற்சிலம்பு உடையது கண்ணகியின் மாணிக்கப்பரல்கள்
Answer:
கண்ணகியின் காற்சிலம்பு மாணிக்கப்பரல்கள் உடையது.

Question 5.
தந்தையும் தெய்வம் அன்னையும்
Answer:
அன்னையும் தந்தையும் தெய்வம்.

Question 4.
சொல்லிருந்து புதிய சொல் உருவாக்கலாமா?
E:\image\Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச் சொற்கள் - 7
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச் சொற்கள் - 4

நிற்க அதற்குத் தக

1. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று அறிந்து கொள்வேன்.
எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
என்ற குறளின் பொருளை நன்கு உணர்ந்து செயல்படுவேன்.

2. உண்மை, உழைப்பு, நேர்மை போன்றவை நம் வாழ்வை மேம்படுத்தும் என்பதைப் புரிந்துகொண்டேன்.

அறிந்து கொள்வோம்

1. உலகின் முதன் தத்துவ ஞானி சாக்ரடீஸ்.
2. கணிதத் தத்துவத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர் பிளாட்டோ.

கூட்டு விண்ணப்பம் எழுதுதல்

நூல் நிலையம்/ படிப்பகம் அமைக்க வேண்டி ஊர்ப் பொதுமக்களின் கூட்டு விண்ணப்ப
Answer:

(மாதிரி)

அனுப்புநர்
ஊர்ப் பொதுமக்கள்,
புலியூர் கிராமம்,
நீலகிரி மாவட்டம்.

பெறுநர்
மாவட்ட நூலக அலுவலர்,
நீலகிரி மாவட்டம்.
மதிப்பிற்குரிய ஐயா,

பொருள் : நூல்நிலையம்/படிப்பகம் அமைக்கவேண்டிவிண்ணப்பித்தல் – சார்பு.

வணக்கம். நீலகிரி மாவட்டம், புலியூர் கிராமத்தில் மூவாயிரம் மக்கள் வாழ்கின்றனர். பெரும்பாலானோர் எழுத்தறிவு உடையவர்கள். அதனால், தங்களின் ஓய்வு நேரத்தைப் பயனுள்ள வகையில் கழிப்பதற்கு நூலகம் அல்லது படிப்பகம் வேண்டும் என விரும்புகிறார்கள். நூலகம் அமைப்பதற்குத் தேவையான இடமும் கிராமத்தில் உள்ளது. ஆகவே, அறிவை விரிவு செய்யும் நூலகத்தை எங்களுக்கு விரைவில் அமைத்துத் தர வேண்டுகிறோம்.

தங்கள் உண்மையுள்ள,
ஊர்ப்பொது மக்கள்,
புலியூர் கிராமம், நீலகிரி.

Leave a Reply