Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.2 விடுதலைத் திருநாள்

Students can Download 8th Tamil Chapter 7.2 விடுதலைத் திருநாள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 7.2 விடுதலைத் திருநாள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.2 விடுதலைத் திருநாள்

Question 1.
நீங்கள் விரும்பும் விழா ஒன்றனைப் பற்றி ஒரு பத்தி அளவில் எழுதுக.
Answer:
நான் விரும்பும் விழா குடியரசு நாள் விழா.

குடியரசு நாள் அன்று பள்ளியில் காலையில் கொடியேற்றுவார்கள். நான் காலையில் பள்ளிக்குச் செல்வேன். பள்ளியில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளைக் கண்டுகளிப்பேன். விழாத் தலைவர், பள்ளி முதல்வர் மற்றும் என் நண்பர்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆற்றும் உரையைக் கேட்பேன்.

பிறகு விழா முடிவில் நாட்டுப்பண் பாடியதும் இனிப்புகள் வழங்கப்படும். இனிப்புகளைப் பெற்றுக் கெண்டு வீட்டிற்குச் செல்வேன். அங்கு தொலைகாட்சியில் மாநில ஆளுநர் கொடியேற்றுவதையும் மெரினா கடற்கரை சாலையில் காவல்துறையினரின் அணிவகுப்பையும் கலை நிகழ்ச்சிகளையும் கண்டு களிப்பேன்.

அந்நன்னாளில் வீரதீர செயல்கள் செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இந்நிகழ்ச்சியை பார்த்துவிட்டு அன்று மாலை மெரினா கடற்கரைக்குச் சென்று நீரில் விளையாடிவிட்டு வருவேன். இக்காரணங்களால் எனக்குக் குடியரசு நாள் மிகவும் பிடிக்கும்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வானில் முழுநிலவு அழகாகத் ……………… அளித்தது.
அ) தயவு
ஆ) தரிசனம்
இ) துணிவு
ஈ) தயக்கம்
Answer:
ஆ) தரிசனம்

Question 2.
இந்த ……………. முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு.
அ) வையம்
ஆ) வானம்
இ) ஆழி
ஈ) கானகம்
Answer:
அ) வையம்

Question 3.
‘சீவனில்லாமல் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ) சீவ + நில்லாமல்
ஆ) சீவன் + நில்லாமல்
இ) சீவன் + இல்லாமல்
ஈ) சீவ + இல்லாமல்
Answer:
இ) சீவன் + இல்லாமல்

Question 4.
‘விலங்கொடித்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ) விலம் + கொடித்து
ஆ) விலம் + ஒடித்து
இ) விலன் + ஒடித்து
ஈ) விலங்கு + ஒடித்து
Answer:
ஈ) விலங்கு + ஒடித்து

Question 5.
காட்டை + எரித்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………….
அ) காட்டை எரித்து
ஆ) காட்டையெரித்து
இ) காடுஎரித்து
ஈ) காடுயெரித்து
Answer:
ஆ) காட்டையெரித்து

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.2 விடுதலைத் திருநாள்

Question 6.
இதம் + தரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………
அ) இதந்தரும்
ஆ) இதம்தரும்
இ) இதத்தரும்
ஈ) இதைத்தரும்
Answer:
அ) இதந்தரும்

குறுவினா

Question 1.
பகத்சிங் கண்ட கனவு யாது?
Answer:
இந்தியா அந்நியரின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதே பகத்சிங் கண்ட கனவு ஆகும்.

Question 2.
இருண்ட ஆட்சி என எதனை மீரா குறிப்பிடுகிறார்?
Answer:
முந்நூறு ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட அரக்கராகிய அந்நியரின் ஆட்சியை இருண்ட ஆட்சி என மீரா குறிப்பிடுகிறார்.

சிறுவினா

Question 1.
இந்தியத்தாய் எவ்வாறு காட்சியளிக்கிறாள்?
Answer:
(i) முந்நூறு ஆண்டுகள் அந்நியரின் இருண்ட ஆட்சி முடிந்தது. உயிரற்ற பிணங்களைப் போலக் கிடந்த நாட்டு மக்கள் அனைவரையும் பற்றியிருந்த அறியாமை என்னும் உறக்கத்தை ஓட ஓட விரட்டினோம்.

(ii) அடிமையாய்த் தவித்துக் கொண்டிருந்த இந்தியத்தாய் சினந்து எழுந்து தன் கைவிலங்கை உடைத்துப் பகைவரை அழித்து, அவிழ்ந்த கூந்தலை முடித்து நெற்றியில் திலகமிட்டு இந்தியருக்கு மகிழ்வான காட்சியை அளிக்கின்றாள்.

சிந்தனை வினா

Question 1.
நாட்டுப்பற்றை வளர்க்கும் வகையில் விடுதலை நாளை எவ்வாறு கொண்டாடலாம்?
Answer:
(i) நாட்டுப்பற்றை வளர்க்கும் வகையில் விடுதலை நாள் விழாவில் பலகலை நிகழ்ச்சிகளை நிகழ்த்த வேண்டும்.

(ii) நம்மைப் பெற்றெடுத்த தாயை எவ்வாறு போற்றுவோமோ, அதேபோல் நம் தாய்நாட்டின் பெருமையையும் பழமையையும் மாணவர்கள் அறியும்படி உரையாற்ற வேண்டும்.

(iii) நாம் அடிமைகளாய் இருந்ததைக் கூறி அடிமைத்தளையை நீக்கியவர்களின் தியாகத்தைக் கூறும் வகையில் சிறு நாடகம் நடத்த வேண்டும்.

(iv) சாதி, மத பேதங்களினால் நாம் சண்டை சச்சரவுகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.2 விடுதலைத் திருநாள்

(v) நாட்டின் பாரம்பரியம் கலாச்சாரத்தை மதித்து நடக்க வேண்டும். தேசிய சின்னங்கள், தேசியக் கொடி, தேசியப்பாடல் ஆகியவற்றிற்கு மதிப்பளிக்க வேண்டும். நாட்டிற்குச் சேவை செய்ய எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஊர்க்காவல் படை, மாணவர் தேசியப்படை ஆகியவற்றில் பங்காற்றல் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு விடுதலை நாளைக் கொண்டாடலாம்.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. கவிஞர் மீராவின் இயற்பெயர் ………………………
2. மீரா அவர்கள் நடத்திய இதழ் ……………………….
3. விடுதலைத் திருநாள் என்ற பாடல் …………………… என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
4. தாய்நாட்டைத் ………………………. வணங்குவோம்.
5. பகத்சிங்கிற்கு சதி வழக்கில் …………………… விதிக்கப்பட்டது.
Answer:
1. மீ. இராசேந்திரன்
2. அன்னம் விடு தூது
3. கோடையும் வசந்தமும்
4. தமிழால்
5. தூக்குத்தண்டனை

குறுவினா :

Question 1.
மீரா – குறிப்பு வரைக.
Answer:
(i) கவிஞர் மீரா அவர்களின் இயற்பெயர் மீ. இராசேந்திரன். இவர் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
(ii) அன்னம் விடு தூது என்னும் இதழை நடத்தியவர்.
(iii) ஊசிகள், குக்கூ , மூன்றும் ஆறும், வா இந்தப் பக்கம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

Question 2.
அந்நியர் ஆட்சியில் மக்கள் எவ்வாறு இருந்தனர்?
Answer:
முந்நூறு ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட அரக்கராகிய அந்நியரின் இருண்ட ஆட்சியில் மக்கள் உயிரற்ற பிணங்களைப் போலக் கிடந்தனர்.

நெடுவினா :

Question 1.
‘விடுதலைத் திருநாள்’ பாடல் மூலம் கவிஞர் கூறியவற்றைத் தொகுத்து எழுதுக.
Answer:
முந்நூறு ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட அரக்கராகிய அந்நியரின் இருண்ட ஆட்சி முடிந்தது என்பதைக் கூறும் நாள் இன்று. உயிரற்ற பிணங்களைப் போலக் கிடந்த நாட்டு மக்கள் அனைவரையும் பற்றியிருந்த அறியாமை என்னும் உறக்கத்தை ஓட ஓட விரட்டிய நாள் இன்று.

அடிமையாய்த் தவித்துக் கொண்டிருந்த இந்தியத் தாய் சினந்து எழுந்து தன் கைவிலங்கை உடைத்துப் பகைவரை அழித்து, அவிழ்ந்த கூந்தலை முடித்து நெற்றியில் திலகமிட்டு, இந்தியருக்கு மகிழ்வான காட்சியை அளித்த நாள் இன்று.

சதி வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங், தூக்கிலிடப்படும் கடைசி நேரத்திலும் தன் மனக்கண்ணில் கனவுகண்ட இந்தியாவின் விடியல் தோன்றிய நாள் இன்று. பகைமை என்னும் முள்காட்டினை அழித்து, அங்கு விளைந்த மூங்கிலைப் புரட்சி என்னும் புல்லாங்குழல் ஆக்கி மூச்சுக்காற்றால் பூபாள இசை பாடும் இனிய நாள் இன்று.

இன்பம் தரும் இந்த விடுதலைத் திருநாளைக் கொண்டாட வாய்ப்பளித்த நம் தாய்நாட்டை தமிழால் வணங்குவோம்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.2 விடுதலைத் திருநாள்

பாடல்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.2 விடுதலைத் திருநாள் 1
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.2 விடுதலைத் திருநாள் 2

சொல்லும் பொருளும்

1. சீவன் – உயிர்
2. சத்தியம் – உண்மை
3. ஆனந்த தரிசனம் – மகிழ்வான காட்சி
4. வையம் – உலகம்
5. சபதம் – சூளுரை
6. மோகித்து – விரும்பி

பாடலின் பொருள்
முந்நூறு ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட அரக்கராகிய அந்நியரின் இருண்ட ஆட்சி முடிந்தது என்பதைக் கூறும் நாள் இன்று. உயிரற்ற பிணங்களைப் போலக் கிடந்த நாட்டு மக்கள் அனைவரையும் பற்றியிருந்த அறியாமை என்னும் உறக்கத்தை ஓட ஓட விரட்டிய நாள் இன்று.

அடிமையாய்த் தவித்துக் கொண்டிருந்த இந்தியத் தாய் சினந்து எழுந்து தன் கைவிலங்கை உடைத்துப் பகைவரை அழித்து, அவிழ்ந்த கூந்தலை முடித்து நெற்றியில் திலகமிட்டு, இந்தியருக்கு மகிழ்வான காட்சியை அளித்த நாள் இன்று.

சதி வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங், தூக்கிலிடப்படும் கடைசி நேரத்திலும் தன் மனக்கண்ணில் கனவுகண்ட இந்தியாவின் விடியல் தோன்றிய நாள் இன்று. பகைமை என்னும் முள்காட்டினை அழித்து, அங்கு விளைந்த மூங்கிலைப் புரட்சி என்னும் புல்லாங்குழல் ஆக்கி மூச்சுக்காற்றால் பூபாள இசை பாடும் இனிய நாள் இன்று.

இன்பம் தரும் இந்த விடுதலைத் திருநாளைக் கொண்டாட வாய்ப்பளித்த நம் தாய்நாட்டை தமிழால் வணங்குவோம்.

ஆசிரியர் குறிப்பு
மீ. இராசேந்திரன் என்னும் இயற்பெயரை உடைய மீரா கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியவர். அன்னம் விடு தூது என்னும் இதழை நடத்தியவர். ஊசிகள், குக்கூ, மூன்றும் ஆறும், வா இந்தப் பக்கம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய கோடையும் வசந்தமும் என்னும் நூலிலிருந்து ஒரு கவிதை இங்குத் தரப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.1 படை வேழம்

Students can Download 8th Tamil Chapter 7.1 படை வேழம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 7.1 படை வேழம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.1 படை வேழம்

Question 1.
உங்களுக்குத் தெரிந்த சிற்றிலக்கிய வகைகளின் பெயர்களைத் தொகுத்து எழுதுக.
Answer:
சிற்றிலக்கிய வகைகளின் பெயர்கள் : சிற்றிலக்கியங்கள் தொண்ணூற்றாறு வகைப்படும். அவற்றுள் எனக்குத் தெரிந்தவை.

1. உலா
2. ஊசல்
3. ஒருபா ஒருபது
4. குறவஞ்சி
5. சதகம்
6. தாண்டகம்
7. தூது
8. நவமணிமாலை
9. நான்மணிமாலை
10. பதிகம்
11. அந்தாதி
12. பரணி
13. கலம்பகம்
14. பள்ளு
15. குறம்

Question 2.
போர்க்கருவிகளின் படங்களைத் திரட்டிப் படத்தொகுப்பு உருவாக்குக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சிங்க ம் ……………….. யில் வாழும்.
அ) மாயை
ஆ) ஊழி
இ) முழை
ஈ) அலை
Answer:
இ) முழை

Question 2.
கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு …………
அ) வீரம்
ஆ) அச்சம்
இ) நாணம்
ஈ) மகிழ்ச்சி
Answer:
ஆ) அச்சம்

Question 3.
வெங்கரி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..
அ) வெம் + கரி
ஆ) வெம்மை + கரி
இ) வெண் + கரி
ஈ) வெங் + கரி
Answer:
ஆ) வெம்மை + கரி

Question 4.
‘என்றிருள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) என் + இருள்
ஆ) எட்டு + இருள்
இ) என்ற + இருள்
ஈ) என்று + இருள்
Answer:
ஈ) என்ற + இருள்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.1 படை வேழம்

Question 5.
போல் + உடன்றன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………..
அ) போன்றன
ஆ) போலன்றன
இ) போலுடன்றன
ஈ) போல் உடன்றன
Answer:
இ) போலுடன்றன

குறுவினா

Question 1.
சோழ வீரர்களைக் கண்டு கலிங்கர் எவ்வாறு நடுங்கினர்?
Answer:
சோழ வீரர்களைக் கண்டு கலிங்கர் நடுங்கியமை :
(i) சோழ வீரர்களைக் கண்ட கலிங்கர் இஃது என்ன மாய வித்தையா என வியந்தனர்.
(ii) தம்மை எரிக்க வந்த தீயோ என அஞ்சினர்.
(iii) சோழர் படை தம் உயிரைப் பறிக்கும் காலனோ என அஞ்சினர்.
(iv) தமது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதோ என எண்ணி, அலைந்து குலைந்து நடுங்கினர்.

Question 2.
கலிங்க வீரர்கள் எவ்வாறு அஞ்சி ஓடினர்?
Answer:
கலிங்க வீரர்கள் அஞ்சி ஓடியமை :
(i) சோழர் படையைக் கண்டு அஞ்சி நடுங்கிய கலிங்கப்படையினர் படைக்கூட்டத்திலிருந்து விலகி ஓடினர்.
(ii) சிலர் கடலில் தாவிக் குதித்துத் தப்பினர்.
(iii) சிலர் யானைகளின் பின்னே மறைந்து கொண்டனர்.
(iv) எத்திசையில் செல்வது எனத் தெரியாமல் செல்வதற்கு அரிதான மலைக் குகைகளினுள்ளும் புதர்களுக்குள்ளும் தப்பி ஓடினர்.

Question 3.
சோழனின் யானைப் படையைக் கண்ட வீரர்களின் செயல்கள் யாவை?
Answer:
சோழனின் யானைப் படையைக் கண்ட வீரர்களின் செயல்கள் :
(i) சோழ மன்னனின் படையிலுள்ள யானைகள் சினமுற்று இடியைப் போலப் பிளறின.

(ii) அவ்வோசையைக் கேட்டு அஞ்சிய வீரர்கள் இருள் நிறைந்த குகைக்குள் சென்று மறைந்தனர்.

(iii) ஏனையோர் புறமுதுகு காட்டி ஓடிப்பிழைத்தனர்.

சிறுவினா

Question 1.
சோழவீரர்களைக் கண்ட கலிங்கப்படை வீரர்களின் செயல்களாகக்கலிங்கத்துப்பரணி கூறுவன யாவை?
Answer:
சோழ வீரர்களைக் கண்ட கலிங்கப்படை வீரர்களின் செயல்கள் :
(i) சோழர் படையின் தாக்குதலைக் கண்ட கலிங்கர், இஃது என்ன மாய வித்தையா என வியந்தனர். தம்மை எரிக்கவந்த தீயோ என அஞ்சினர். சோழர் படை தம் உயிரைப் பறிக்கும் காலனோ என அஞ்சினர். தமது இறுதிக்காலம் நெருங்கி விட்டதோ என எண்ணி அலைந்து குலைந்து நடுங்கினர்.

(ii) அப்படி நடுங்கிய கலிங்கப் படையினர் படைக்கூட்டத்திலிருந்து விலகி ஓடினர். சிலர் கடலில் தாவிக் குதித்துத் தப்பினர். சிலர் யானைகளின் பின்னே மறைந்து கொண்டனர். எத்திசையில் செல்வது எனத் தெரியாமல், செல்வதற்கு அரிதான மலைக் குகைகளினுள்ளும் புதர்களுக்குள்ளும் தப்பி ஓடினர்.

(iii) கலிங்க வீரர்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓடினர். தம் நிழலையும் மற்றவர் நிழலையும் கண்டு தமிழர்கள் துரத்தி வருதாக எண்ணி அஞ்சினர் தஞ்சம் வேண்டி வணங்கினர்.

(iv) சோழ மன்னனின் படையிலுள்ள யானைகள் சினமுற்று இடியைப்போலப் பிளிறின. அவ்வோசையைக் கேட்டு அஞ்சிய வீரர்கள் இருள் நிறைந்த குகைக்குள் சென்று மறைந்தனர்; ஏனையோர் புறமுதுகு காட்டி ஓடிப் பிழைத்தனர்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.1 படை வேழம்

சிந்தனை வினா

Question 1.
ஒரு நாட்டின் பாதுகாப்பிற்குத் தேவையானவை எவை எனக் கருதுகிறீர்கள்?
Answer:
ஒரு நாட்டின் பாதுகாப்பிற்குத் தேவையானவை :
ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு இயற்கை அரண்களாக மலைவளம், வனவளம், நீர்வளம் அவசியம். தற்போது வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தால் நாம் இயற்கையை மறந்து செயற்கையை வாழ வைக்கிறோம். அதனை முற்றிலும் கைவிடவேண்டும். நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து அதற்கு மாறாக துணிப்பைகளைப் பயன்படுத்த வேண்டும். நீர்வளம் பெருக வனவளம் காக்க வேண்டும்.

நாட்டில் நல்லறங்கள் பெருக வேண்டும். இதனால் சண்டை சச்சரவுகள் நீங்கி அமைதி காக்கப்படும். அண்டை நாடுகளுடன் பிணக்கின்றி இருக்கலாம். எல்லையில் உள்ள வீரர்களின் குடும்பங்கள் பாதுகாக்கப்பட்டால் அவர்கள் குடும்பத்தைப் பற்றிய கவலையின்றி நாட்டைப் பாதுகாப்பர். இதனால் தீவிரவாதமும் ஒடுக்கப்படும். அண்டை நாட்டினரிடமிருந்து நாட்டையும் பாதுகாக்கலாம்.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. தமிழர்கள் தமது உடைகளாகக் கொண்டவை …………………
2. கலிங்கத்துப்பரணி …………………. வகைகளுள் ஒன்று.
3. சோழமன்னனின் படையிலுள்ள யானைகள் ………………. போல் பிளிறின.
4. கலிங்கத்துப்பரணியை இயற்றியவர் ……………………
5. செயங்கொண்டார் ………………… என்னும் ஊரினைச் சேர்ந்தவர் என்பர்.
6. செயங்கொண்டார் ………………….. அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர்.
7. செயங்கொண்டாரைப் பரணிக்கோர் செயங்கொண்டார் என்று புகழ்ந்தவர் பலபட்டடைச் ………………………
8. தமிழில் முதன்முதலில் எழுந்த பரணி நூல் …………………..
9. கலிங்கத்துப்பரணியைத் …………………… என்று ஒட்டக்கூத்தர் புகழ்ந்துள்ளார்.
10. கலிங்கத்துப்பரணி ………………….. பாடப்பெற்றது.
11. கலிங்கத்துப்பரணியில் மொத்த தாழிசைகள் …………….
12. சோழர் படையின் தாக்குதலைக் கண்டு ஓடியவர்கள் ………………
13. சிற்றிலக்கியங்கள் …………….. வகைப்படும்.
Answer:
1. அறம், வீரம்
2. சிற்றிலக்கிய
3. இடியைப்
4. செயங்கொண்டார்
5. தீபங்குடி
6. முதற்குலோத்துங்கச் சோழனுடைய
7. சொக்கநாதப் புலவர்
8. கலிங்கத்துப்பரணி
9. தென்தமிழ்த் தெய்வப்பரணி
10. கலித்தாழிசையால்
11. 599
12. கலிங்கர்
13. தொண்ணூற்றாறு

விடையளி :

Question 1.
செயங்கொண்டார் குறிப்பு வரைக.
Answer:
(i) கலிங்கத்துப் பரணியின் ஆசிரியர் செயங்கொண்டார்.
(ii) இவர் தீபங்குடி என்னும் ஊரினைச் சேர்ந்தவர்.
(iii) இவர் முதற்குலோத்துங்கச் சோழனுடைய அவைக்களப் புலவராகத் திகழ்ந்தார்.
(iv) இவரைப் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பரணிக்கோர் செயங்கொண்டார் என்று புகழ்ந்துள்ளார்.

Question 2.
பரணி – குறிப்பு எழுதுக.
Answer:
போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் பரணி ஆகும்.

Question 3.
கலிங்கத்துப்பரணி – குறிப்பு வரைக.
Answer:
(i) கலிங்கத்துப்பரணி தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பரணி வகையைச் சார்ந்த நூல். இந்நூலே தமிழில் முதல் முதலில் எழுந்த பரணி ஆகும்.

(ii) இது முதலாம் குலோத்துங்க சோழன் அவருடைய படைத் தலைவர் கருணாகரத் தொண்டைமான் ஆகியோரின் கலிங்கப்போர் வெற்றியைப் பேசுகிறது. இந்நூலைத் தென்தமிழ்த் தெய்வப்பரணி என்று ஒட்டக்கூத்தர் புகழ்ந்துள்ளார்.

(iii) கலிங்கத்துப்பரணி கலித்தாழிசையால் பாடப்பெற்றது. 599 தாழிசைகள் கொண்டது. போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிகொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் பரணி ஆகும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.1 படை வேழம்

பாடல்
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.1 படை வேழம் 1

சொல்லும் பொருளும்

1. மறலி – காலன்
2. கரி – யானை
3. தூறு — புதர்
4. அருவர் – தமிழர்
5. உடன்றன – சினந்த எழுந்தன
6. வழிவர் – நழுவி ஓடுவர்
7. பிலம் – மலைக்குகை
8. மண்டுதல் – நெருங்குதல்
9. இறைஞ்சினர் – வணங்கினர்
10. முழை – மலைக்குகை

பாடலின் பொருள்

சோழர் படையின் தாக்குதலைக் கண்ட கலிங்கர், இஃது என்ன மாய வித்தையா என வியந்தனர். தம்மை எரிக்க வந்த தீயோ என அஞ்சினர். சோழர்படை தம் உயிரைப் பறிக்கும் காலனோ என அஞ்சினர்; தமது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதோ என எண்ணி, அலைந்து குலைந்து நடுங்கினர்.

அப்படி நடுங்கிய கலிங்கப் படையினர் படைக் கூட்டத்திலிருந்து விலகி ஓடினர். சிலர் கடலில் தாவிக் குதித்துத் தப்பினர். சிலர் யானைகளின் பின்னே மறைந்துகொண்டனர். எத்திசையில் செல்வது எனத் தெரியாமல், செல்வதற்கு அரிதான மலைக் குகைகளினுள்ளும் புதர்களுக்குள்ளும் தப்பி ஓடினர்.

கலிங்க வீரர்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓடினர். தம் நிழலையும் மற்றவர் நிழலையும் கண்டு தமிழர்கள் துரத்தி வருவதாக எண்ணி அஞ்சினர்; தஞ்சம் வேண்டி வணங்கினர்.

சோழ மன்னனின் படையிலுள்ள யானைகள் சினமுற்று இடியைப் போலப் பிளிறின; அவ்வோசையைக் கேட்டு அஞ்சிய வீரர்கள் இருள் நிறைந்த குகைக்குள் சென்று மறைந்தனர்; ஏனையோர் புறமுதுகுகாட்டி ஓடிப் பிழைத்தனர்.

நூற்குறிப்பு
கலிங்கத்துப்பரணி தொண்ணூற்று வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பரணி வகையைச் சார்ந்த நூல். தமிழில் முதல் முதலில் எழுந்த பரணி இந்நூலே ஆகும். இது முதலாம் குலோத்துங்க சோழன், அவருடைய படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான் ஆகியோரின் கலிங்கப்போர் வெற்றியைப் பேசுகிறது. இந்நூலைத் தென் தமிழ்த் தெய்வப்பரணி என்று ஒட்டக்கூத்தர் புகழ்ந்துள்ளார். கலிங்கத்துப் பரணி கலித்தாழிசையால் பாடப்பெற்றது; 599 தாழிசைகள் கொண்டது. போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் பரணி ஆகும்.

ஆசிரியர் குறிப்பு
செயங்கொண்டார் தீபங்குடி என்னும் ஊரினைச் சேர்ந்தவர் என்பர். இவர் முதற்குலோத்துங்கச் சோழனுடைய அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர். இவரைப் பரணிக்கோர் செயங்கொண்டார் என்று பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் புகழ்ந்துள்ளார்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

Students can Download 8th Tamil Chapter 6.5 புணர்ச்சி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 6.5 புணர்ச்சி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

Question 1.
இயல்பு, தோன்றல், திரிதல், கெடுதல் ஆகிய புணர்ச்சிகளுக்குரிய எடுத்துக்காட்டுகளைக் கொண்டு பட்டியல் ஒன்று உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி 1

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
விகாரப் புணர்ச்சி …………. வகைப்படும்.
அ) ஐந்து
ஆ) நான்கு
இ) மூன்று
ஈ) இரண்டு
Answer:
இ) மூன்ற

Question 2.
‘பாலாடை’ – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி …………………..
அ) இயல்பு
ஆ) தோன்றல்
இ) திரிதல்
ஈ) கெடுதல்
Answer:
அ) இயல்பு

பொருத்துக

1. மட்பாண்டம் – தோன்றல் விகாரம்
2. மரவேர் – இயல்புப் புணர்ச்சி
3. மணிமுடி – கெடுதல் விகாரம்
4. கடைத்தெரு – திரிதல் விகாரம்
Answer:
1. மட்பாண்டம் – திரிதல் விகாரம்
2. மரவேர் – கெடுதல் விகாரம்
3. மணிமுடி – இயல்புப் புணர்ச்சி
4. கடைத்தெரு – தோன்றல் விகாரம்

சிறுவினா

Question 1.
இயல்பு புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answer:
நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது இயல்பு புணர்ச்சி ஆகும்.
எ.கா. தாய் + மொழி = தாய்மொழி
உடல் + ஓம்பல் = உடலோம்பல்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

Question 2.
மரக்கட்டில் – இச்சொல்லைப் பிரித்து எழுதிப் புணர்ச்சியை விளக்குக.
Answer:
மரக்கட்டில் = மரம் + கட்டில்
நிலைமொழி ஈற்றில் உள்ள மகர மெய் மறைந்து மர + கட்டில் என்றானது. தோன்றல் விகாரத்தின் படி ‘க்’ தோன்றி மரக்கட்டில் என்றானது.

மொழியை ஆள்வோம்

கேட்க

Question 1.
நெசவுத்தொழில் குறித்த நாட்டுப்புறப் பாடல்களைக் கேட்டு மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே நெசவுத்தொழில் குறித்த நாட்டுப்புறப் பாடல்களை கேட்டு மகிழ வேண்டும்.

கீழ்க்காணும் தலைப்புகளுள் ஒன்று பற்றி இரண்டு நிமிடம் பேசுக.

1. உழவும் நெசவும்

அவையோர்க்கு வணக்கம்!
நமக்கெல்லாம் இன்றியமையாத தேவைகளான உணவும், உடையும் பற்றிப் பேச வந்துள்ளேன். முதலில் உழவுத்தொழில் பற்றிக் கூறுகிறேன். ‘சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்’ என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். உலகமே உழவர்களின் பின்தான் செல்கிறது. உலகில் ஆண்டி முதல் அரசன் வரை அனைவருக்கும் பசி என்ற ஒன்று உள்ளது.

‘பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்’ என்றெல்லாம் கூறுகிறோம். அப்பசியைப் ‘பசிப்பிணி’ என்று இலக்கியம் கூறுகிறது. அப்பசிப் பிணியைப் போக்கும் மருத்துவர்கள் யார்? வேளாண்மை செய்யும் உழவர்கள்தானே!

உழவர்கள் நிலத்தை உழுது, பயிர்செய்து, விளைகின்ற பொருளால்தான் வாழ்க்கை நடத்துகின்றனர். அவர்கள் தாம் வாழ்வதோடு உலகையே வாழ வைக்கின்றனர். உலக மக்களுக்கு உணவாகிய அமுதத்தையே அளிக்கின்றனர். இதனையே வள்ளுவப் பெருந்தகை “உழுது உண்டு வாழ்வார்” என்று கூறியுள்ளார்.

இத்தகு பெருமையுடைய வேளாண்மை தமிழரின் முதன்மையான தொழிலாகவும் மிகுந்த மதிப்பிற்குரிய தொழிலாகவும் இருந்தது. நம் முன்னோர்கள் மண் வகைகளைப் பற்றியும் வெவ்வேறு நிலப்பகுதியில் விளையக்கூடிய பயிர்களைப் பற்றியும் நீர் பாய்ச்சும் முறைகளைப் பற்றியும் அறிந்திருந்தனர். ஐவகை நிலங்களில் மருத நிலமே வேளாண்மைக்கு உகந்த நிலமாகக் கருதப்பட்டது.

வேளாண்மைக்குத் தேவையான நீரை கிணறுகளில் ஏற்றம் அமைத்து இறைத்தனர். கண்மாய்கள், குளங்கள், அணைகள் ஆகியவற்றில் தேக்கி வாய்க்கால் வழியாகப் பாய்ச்சிப் பயிர்களை வளர்த்தனர். இவ்வளவு தொன்மை வாய்ந்ததும் மக்களுக்கு உயிராய் விளங்குவதுமான உழவுத்தொழில் தற்போது நலிவுறுவது மனதிற்கு வருத்தத்தை அளிக்கிறது.

அடுத்த அடிப்படைத் தேவை உடை. இவ்வுடையை நமக்களிப்பது நெசவுத்தொழில். ‘ஆடைபாதி ஆள்பாதி”, “ஆடையில்லா மனிதன் அரைமனிதன்” என்ற பழமொழிகள் ஆடையின் அவசியத்தை உணர்த்துகின்றன. நாகரிகத்தின் உச்சத்தைத் தொட்டவன் மனிதன். மனித இனத்தின் வாழ்வுக்கு உணவு துணை புரிகிறது என்றால் நாகரிக நடமாட்டத்திற்கு உடை துணை புரிகிறது.

நம் பழந்தமிழர்கள் பண்டைக்காலம் முதற்கொண்டு பருத்தி, பட்டு, கம்பளி ஆடைகளை அணிந்தும் சரிகைகள் இணைத்த ஆடைகளைப் புனைந்தும் வந்துள்ளனர். ஆடை நெசவுக்கலை 5000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது என்பது வரலாற்று உண்மை.

இலை தழைகளையும் மரப்பட்டைகளையும், விலங்குகளின் தோல்களையும், பறவைகளின் இறகுகளையும் ஆடையாக உடுத்திய மனிதன் நாகரிக வளர்ச்சியில் பல வகையான ஆடைகளை உற்பத்தி செய்து நெசவுத்தொழிலில் புதுமைப் படைத்துள்ளான்.

நம் நாட்டில் உழவுத்தொழிலுக்கு அடுத்ததாகச் செய்யப்பட்ட தொழில் நெசவுத்தொழில் என்பது அனைவரும் அறிந்ததே. நம் நாட்டு பருத்தி ஆடைக்கும் பட்டாடைக்கும் வெளிநாடுகளில் மிகுந்த வரவேற்பு உண்டு. கடல் கடந்து வணிகம் செய்த தமிழர்களும் ஆடைகளையும், தானியங்களையும் ஏற்றுமதி செய்துள்ளனர்.

நெசவுத் தொழிலுக்குத் தேவையான மூலப் பொருளை உற்பத்திச் செய்வது உழவுத்தொழிலே.

உழவும் நெசவும் இருகண்கள் போன்றவை. இவற்றை அழியாமல் பாதுகாத்து மேலும் மேலும் வளரச் செய்து நாட்டின் பொருளாதார நிலையில் நாம் முன்னேறுவோம் என்று கூறிப்பேச வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி நவின்று விடைபெறுகிறேன்.

2. தொழில்கள் பலவிதம்

அவையோர்க்கு வணக்கம்!

நான் பலவகையான தொழில்கள் பற்றியும் அவற்றின் பயன்கள் பற்றியும் பேச வந்துள்ளேன். மனிதன் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தேவையான பொருள்களை உற்பத்தி செய்யவும் முனைகின்றான். இதுவே தொழில் எனப்படுகிறது. இத்தொழிலானது மக்கள் வாழும் புவியியல் அமைப்பிற்கு ஏற்றபடியே அமைகிறது.

அகப்பொருளில் ஐவகை நிலங்களுக்கான தொழில்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றைக் குறிப்பிட நான் கடமைப்பட்டிருக்கிறேன். உணவு சேகரித்தல், வேட்டையாடுதல், மீன்பிடித்தல், நிரை மேய்த்தல், உழவுத்தொழில் போன்றவைகளாகும்.

நாம் நாகரிக வளர்ச்சி பெற்றது போலவே தொழில்களும் பல புதிய புதிய பெயர்களில் வகைகளில் வடிவம் பெற்றுள்ளன. தொன்மையான தொழில்கள் உழவுத்தொழில், நெசவுத்தொழில். இவை தற்காலத்தில் நவீன மயமாக்கப்பட்டு உற்பத்தியைப் பல மடங்காகப் பெருக்கியுள்ளன.

காகிதம் தயாரித்தல், சோப்பு மற்றும் சலவைப் பொருள்கள் தயாரிப்பு, எண்ணெய் தயாரிப்பு, விளையாட்டுப் பொருள்கள் தயாரிப்பு, பிஸ்கட் தயாரிப்பு, மெழுகுவர்த்தித் தயாரிப்பு, பந்துமுனைப் பேனா, மைக்குழாய் தயாரிப்பு, தேன் தயாரிப்பு, ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, பொம்மைகள் தயாரிப்பு எனப் பல வகையான சுய தொழில்கள் உள்ளன.

மின்சாரத்தையும் இயந்திரங்களையும் பயன்படுத்தாமல் வீட்டிலேயே செய்யப்படும். சிறுதொழில் குடிசைத்தொழில் எனப்படுகிறது. இதில் முதலிடத்தில் இருப்பது ஊறுகாய் – தயாரித்தல், ஜாம் தயாரித்தல், மூலிகைப் பொருட்களைவைத்து குளியல் பொடி தயாரித்தல், கற்பூரம், ஊதுபத்தி தயாரித்தல் போன்ற பல தொழில்கள் குடிசைத் தொழில்களாக நடைபெறுகின்றன.

‘உள்ளங்கையில் உலகம்’ என்ற தொடருக்கு ஏற்ப இணைய வணிகம் கொடிகட்டிப் பறக்கிறது. இல்லை என்று சொல்ல இயலாத அளவிற்குப் பல வகையான விற்பனை பொருள்கள் இணைய வணிகத்தில் விற்கப்படுகின்றன.

குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பள்ளிகள், குழந்தைகளுக்கான சாகச விளையாட்டு மையம். இவை பெற்றோருக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. ரெடிமேட் பொருட்கள் தயாரித்தல், பரிசுப் பொருள்கள் விற்பனை செய்தல் போன்றவை முன்னிலையில் உள்ளன.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

இயந்திர உலகில் பணத்தைத் தேடி அலையும் மக்களுக்கு உணவு சமைத்துக் கொடுக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலும் நல்ல இலாபத்தை ஈட்டிக் கொடுக்கின்றது. சிறிய அளவில் செய்தாலும் போதுமான வருவாயை ஈட்ட முடியும்.

இவ்வாறு நம் நாட்டில் பல வகையான தொழில்கள் உள்ளன. ஒவ்வொருவரும் அவரவர் செய்யும் தொழிலில் நேர்மையைக் கடைபிடித்து முன்னேற வேண்டும்.

பேச வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

சொல்லக் கேட்டு எழுதுக

பூமிக்குள் புதைந்த தாவர இனங்களும் விலங்கினங்களும் அழுகி, மட்கிப் பழுப்பு நிலக்கரியாக மாறுகின்றன. இது மின் உலைகளிலும் ஊது உலைகளிலும் எரிபொருளாகப் பயன்படுகின்றது. உலோக உருக்குத் தொழிலிலும் பயன்படுகின்றது. தமிழ்நாட்டில் கடலூர் – மாவட்டம் நெய்வேலியிலும் புதுச்சேரியின் சில பகுதிகளிலும் பழுப்பு நிலக்கரி கிடைக்கிறது.

இது தஞ்சை, பெரம்பலூர், சிவகங்கை, நீலகிரி, திண்டுக்கல், திருவள்ளூர், கன்னியாகுமரி மாவட்டங்களிலும் குறைந்த அளவு காணப்படுகிறது. நெய்வேலியில் பழுப்பு நிலக்கரிச் a சுரங்கம் உள்ளது. இங்குக் கிடைக்கும் நிலக்கரி அனல்மின்சாரம் தயாரிக்க உதவுகின்றது.

அறிந்து பயன்படுத்துவோம்

மரபுத்தொடர்கள்
நாம் பேச்சிலும் எழுத்திலும் சில மரபுத்தொடர்களைப் பயன்படுத்துகிறோம். அத்தொடர்கள் நம்முடைய கருத்துகளுக்கு வலுசேர்கின்றன. சில மரபுத்தொடர்களுக்கு நேரடிப் பொருள்கொள்ளாமல், அவற்றின் உட்பொருளை அறிந்து பயன்படுத்த வேண்டும்.

(எ.கா.)
1. திண்டுக்கல், பூக்கள் உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் நகரமாக விளங்குகிறது.
கொடிகட்டிப் பறத்தல் – புகழ்பெற்று விளங்குதல்

2. அவர் ஓர் அவசரக்குடுக்கை
அவசரக்குடுக்கை – எண்ணிச் செயல்படாமை

பின்வரும் மரபுத்தொடர்களைப் பொருளோடு பொருத்துக.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி 6
Answer:
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி 7

பின்வரும் மரபுத்தொடர்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

Question 1.
வாழையடி வாழையாக
Answer:
வாழையடி வாழையாக குமரனுடைய குடும்பம் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறது.

Question 2.
முதலைக்கண்ணீர்
Answer:
மாறன் எப்போதும் முதலைக்கண்ணீர் வடித்து நினைத்தகாரியத்தை முடித்துக்கொள்வான்.

Question 3.
எடுப்பார் கைப்பிள்ளை
Answer:
எடுப்பார் கைப்பிள்ளையாய் இல்லாமல் சொந்தமாகச் சிந்தித்து செயல்பட வேண்டும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

கட்டுரை எழுதுக.

Question 1.
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்.
Answer:
முன்னுரை :
“கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்.”

என்றார் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்கள். இன்றைய இயந்திர வாழ்க்கையில் மக்கள் பொருள் வேண்டி, வேலையைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கின்றனர்.

கைத்தொழிலின் அவசியம் :
இன்று நாம் கற்கும் ஏட்டுக்கல்வி பின்னர் நமக்கு ஏதாவது ஒரு வேலையினைப் பெற்றுத் தரலாம். அல்லது வேலையே கிடைக்காத நிலையும் ஏற்படலாம். படித்துவிட்டு வேலையின்றித் தவிப்போர் ஏதேனும் ஒரு கைத்தொழில் செய்யத் தெரிந்தவராக இருந்தால் கவலைப்படத் தேவையில்லை.

எதிர்கால வாழ்வு குறித்தும் கவலையோ வருத்தமோ கொள்ள வேண்டியதில்லை. ஆகையால் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு கைத்தொழிலைத் தெரிந்து வைத்துக் கொள்ளுதல் நல்லது.

கைத்தொழில்கள் :
கைத்தறி நெசவு, செக்காடுதல், பாய் பின்னுதல், கூடைப் பின்னுதல், தச்சு வேலை செய்தல், கயிறு திரித்தல், மட்பாண்டம் செய்தல், தீப்பெட்டி செய்தல், மரவேலை செய்தல், தேனீ வளர்த்தல், தச்சுவேலை செய்தல் போன்ற கைத்தொழில்களை எளிதாகக் கற்றுக் கொண்டு பயன் பெறலாம்.

கைத்தொழிலின் பயன்கள் :
“கைத்தொழிலைக் கற்றுக் கொள்வதால் தனிமனித வருவாய் பெருகி வளம் பெறலாம். அனைத்து மக்களுக்கும் வேலைவாய்ப்புக் கிடைக்கின்றது. கிராம மக்கள் வேலை தேடி நகரை நோக்கிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவரவர் ஊர்களில் இருந்தே வேலை செய்யலாம். தொழில் வளம் பெருகுவதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பெருகும்.

இன்றைய கைத்தொழில்கள் :
கால மாற்றம், இட வேறுபாடுகளுக்கேற்ப வாழ்க்கை முறையில் பயன்பாட்டுப் பொருள்கள் மாறுகின்றன. புதிய நாகரிகம், புதிய விருப்பங்கள் என எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே உள்ளன. இம்மாற்றங்களுக்கேற்ப கணினி பழுதுபார்த்தல், செல்பேசி பழுது பார்த்தல், ரப்பர் ஸ்டாம்ப் தயாரித்தல், எம்ப்ராய்டிங், சிறுசிறு உணவகங்கள் வைத்தல். இவையெல்லாம் இன்றைய சிறந்த கைத்தொழில்கள் ஆகும்.

முடிவுரை :
நம் வாழ்வை உயர்த்துவது உழைப்புதான். இவ்வுழைப்பை மூலதனமாக வைத்து ஏதேனும் ஒரு கைத்தொழிலைக் கற்றுக் கொண்டு முன்னேறுவோம். படித்த படிப்பிற்கு வேலை தேடி அலையாமல் கைத்தொழில் மூலம் பொருள் ஈட்டி வளம் பெறுவோம்.

மொழியோடு விளையாடு

குறுக்கெழுத்துப் புதிர்.

ஊர்களையும் அவற்றின் சிறப்புகளையும் அறிவோம்!
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி 4
இடமிருந்து வலம்
1. சிவகாசி
5. திருபாச்சி
7. திருநெல்வேலி
12. கோவில்பட்டி

மேலிருந்து கீழ்
1. காஞ்சிபுரம்
2. சேலம்
4. பழனி

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

வலமிருந்து இடம்
3. மதுரை
4. பண்ருட்டி
9. தஞ்சாவூர்
10. மணப்பாறை

கீழிருந்து மேல்
6. தூத்துக்குடி
8. ஸ்ரீவில்லிப்புத்தூர்
11. திண்டுக்கல்

விடைகள்
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி 5

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள்…
1. கைத்தொழில் ஒன்றைக் கற்றுத் தெளிவேன்.
2. நெசவுத் தொழிலின் சிறப்பை அறிந்து போற்றுவேன்.

கலைச்சொல் அறிவோம்

1. நூல் – Thread
2. தறி – Loom
3. பால்பண்ணை – Dairy farm
4. தோல் பதனிடுதல் – Tanning
5. தையல் – Stitch
6. ஆலை – Factory
7. சாயம் ஏற்றுதல் – Dyeing
8. ஆயத்த ஆடை – Readymade Dress

கூடுதல் வினாக்கள்

நிரப்புக.

1. நிலைமொழி ஈறும், வருமொழி முதலும் இணைவது …………………. எனப்படும்.
2. நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அஃது ………………….  புணர்ச்சி .
3. நிலைமொழியின் இறுதி எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அஃது …………….. புணர்ச்சி.
4. வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அஃது ………………….  புணர்ச்சி.
5. வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அஃது ……………………..  புணர்ச்சி.
6. நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது …………………..  புணர்ச்சி.
7. இரண்டு சொற்கள் இணையும் போது நிலைமொழி, வருமொழியில் மாற்றங்கள் நிகழுமாயின் அது ……………………. புணர்ச்சி.
8. விகாரப்புணர்ச்சி …………………. வகைப்படும்.
9. வாழைமரம் ……………………… புணர்ச்சி.
10. தமிழ்ப்பசி ………………….. விகாரம்.
11. பற்பசை ………………….. விகாரம்.
12. மரவேர் …………………….. விகாரம்.
13. உடல் + ஓம்பல் = …………………………
14. பொற்சிலை பிரித்து எழுதக் கிடைப்பது ……………………..
Answer:
1. புணர்ச்சி
2. உயிரீற்றுப்
3. மெய்யீற்றுப்
4. உயிர்முதல்
5. மெய்முதல்
6. இயல்பு
7. விகாரப்
8. மூன்று
9. இயல்பு
10. தோன்றல்
11. திரிதல்
12. கெடுதல்
13. உடலோம்பல்
14. பொன் + சிலை

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

விடையளி :

Question 1.
புணர்ச்சி என்றால் என்ன?
Answer:
நிலைமொழியின் இறுதி எழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் இணைவது புணர்ச்சி எனப்படும். எ.கா. வாழை + மரம் = வாழைமரம்.

Question 2.
புணர்ச்சி எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
புணர்ச்சி இரண்டு வகைப்படும். அவை (i) இயல்பு புணர்ச்சி (ii) விகாரப் புணர்ச்சி

Question 3.
விகாரப் புணர்ச்சி என்றால் என்ன?
Answer:
இரண்டு சொற்கள் இணையும்போது நிலைமொழியிலோ வருமொழியிலோ அல்லது இரண்டிலுமோ மாற்றங்கள் நிகழுமாயின் அது விகாரப் புணர்ச்சி எனப்படும்.
எ.கா. தமிழ் + பசி = தமிழ்ப்பசி.

Question 4.
விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
விகாரப் புணர்ச்சி மூன்று வகைப்படும். அவை தோன்றல், திரிதல், கெடுதல்.

Question 5.
விகாரப் புணர்ச்சிக்கான எடுத்துக்காட்டுகளை எழுதுக.
Answer:
(i) தோன்றல்
தமிழ் + தாய் = தமிழ்த்தாய்
எட்டு + தொகை = எட்டுத்தொகை

(ii) திரிதல்
வில் + கொடி = விற்கொடி
பல் + பசை = பற்பசை

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.5 புணர்ச்சி

(iii) கெடுதல்
மரம் + வேர் = மரவேர்
மனம் + மகிழ்ச்சி = மனமகிழ்ச்சி

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.4 காலம் உடன் வரும்

Students can Download 8th Tamil Chapter 6.4 காலம் உடன் வரும் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 6.4 காலம் உடன் வரும்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.4 காலம் உடன் வரும்

Question 1.
காலம் உடன் வரும் – கதையை வகுப்பில் நாடகமாக நடித்துக் காட்டுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

Question 2.
காலம் உடன் வரும் கதையில் இடம்பெற்றுள்ள ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை எழுதுக.
Answer:
(i) லாரி – சரக்குந்து
(ii) போன் – தொலைபேசி
(iii) கார் – மகிழுந்து
(iv) டீ – தேநீர்
(v) டெக்ஸ்ட் – ஜவுளி
(vi) நம்ப ர் – எண்
(vi) ஷிஃப்ட் – பணிவேளை
(viii) பீம் – தூலம்
(ix) டேப் – ஒலி நாடா
(x) டிஸைன் – வடிவமைப்பு
(xi) கார்டு – அட்டை
(xii) பெட்ஷீ ட் – படுக்கை விரிப்பு

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.4 காலம் உடன் வரும்

மதிப்பீடு

Question 1.
‘காலம் உடன் வரும்’ – கதையைச் சுருக்கி எழுதுக.
Answer:
முன்னுரை :
துணிகளை நெய்து துறைமுகத்தில் சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் அனந்திகா நிறுவனம் சிக்கிக் கொண்டது. இச்சிக்கலை சுப்பிரமணி எவ்வாறு தீர்த்து வைத்தான் என்பதனையும் அதற்கு உதவிய நெசவுத் தொழிலாளரின் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் கதையைப் பார்க்கலாம்.

சுப்பிரமணியனின் கவலை :
தறியில் பாவு தீர்ந்துவிட்டால், அடுத்த பாவு பிணைக்க ஆளில்லை. ரங்கன் என்பவர் ஊரில் இல்லை. என்ன செய்வதென்று தெரியாமல் சுப்பிரமணி நண்பன் ரகுவைப் பார்க்கச் சென்றார். அவருடைய தறியில் வேலை செய்கிறவர்களை உதவிக்கு அனுப்புமாறு கேட்டார். அங்கும் ஆள் இல்லை என அறிந்ததும் கவலை அதிகமானது.

ரகுவின் ஆலோசனை :
சுப்பிரமணியின் கவலையை உணர்ந்த ரகு, மாயழகு என்பவரைப் போய்ப் பார்த்து, அவரது மனைவியை அழைத்துப் போகச் சொன்னார். இரவு நேரத்தில் செல்வதற்குத் தி தயங்கியவன் பிறகு வேறுவழியின்றி அப்பெண்மணியை அழைத்துச் சென்றார்.

ஒச்சம்மா :
சுப்பிரமணி பாவு பிணைக்க ஒச்சம்மாவைப் பட்டறைக்குக் காரில் அழைத்துச் சென்றார். குழந்தையைத் தூங்க வைத்துவிட்டு பாவு பிணைக்கத் தொடங்கினாள். அவள் உசிலம்பட்டி பக்கமுள்ள கிருஷ்ணாபுரத்தைச் சார்ந்தவள். மாயழகு கோம்பைத்தொழுவு என்ற ஊரைச் சார்ந்தவன். எதிர்கால நலன் கருதி வெள்ளக்கோயிலில் குடியேறினர். புதிய இடத்தில் அவளுக்கு உணவு, காற்று, நீர், ஒப்பனை எல்லாமும் மாற வேண்டியிருந்தது.

நெசவுத் தொழிலில் ஓச்சம்மா :
இயந்திர நேர்த்தி அதிகம் கொண்ட தறித்தொழிலில் பாவு பிணைத்தல், ஒடி எடுத்தல், கோன் போடுதல், எல்லாவற்றையும் சில மாதங்களில் கற்றுக்கொண்டாள். தன் குழந்தையின் கல்வியைப் பற்றி சிந்தித்து இடம் விட்டு இடம் எங்கும் மாறக்கூடாது என்று தீர்மானித்தாள்.

பாவு பிணைத்தல் :
மனதில் பலவற்றை எண்ணியபடியே பாவு பிணைந்து கொண்டிருந்தாள். இடையில் அழுத குழந்தைக்குப் பாலூட்டித் தூங்க வைத்தாள். பாவு பிணைப்பின் வேகம் குறைந்ததைப் பார்த்த சுப்பிரமணி தேநீர் வாங்கிவரச் சொல்லிக் கொடுத்தார். தறியில் பணி செய்ய மாணிக்கத்தையும் துரிதப்படுத்தினார் சுப்பிரமணி. ஒச்சம்மாவும் தேநீர் அருந்திவிட்டு சுறுசுறுப்பாக பாவு பிணைந்து முடிந்தாள்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.4 காலம் உடன் வரும்

வீட்டிற்குத் திரும்பினாள் ஓச்சம்மா :
வேலை முடிந்ததும் ஒச்சம்மாவிற்கு இரட்டைச் சம்பளம் வழங்கப்பட்டது. அவளது கண்கள் திளைப்பிலும் திகைப்பிலும் ஒரு கணம் ஒளிர்ந்தன. தனது எதிர்காலம் போல் அந்த ரூபாய்த் தாள்களை வலது கையில் இறுக்கிக் கொண்டாள். சுப்பிரமணி அவளை வீட்டில் கொண்டுபோய் விட்டான். மாயழகு வெளியே வந்து பார்த்தான். சுப்பிரமணியைத் தேநீர் குடித்துவிட்டுப் போகுமாறு கூறிவிட்டு, கடையில் வாங்கி வந்த தேநீரைக் கொடுத்தான்.

முடிவுரை :
தேநீர் குடித்துக் கொண்டே “ரொம்ப கஷ்டந்தான் நம் தொழிலு” என்றான். மாயழகு “அப்படித்தாண்ணே இருக்கும் எல்லாமும் …… உங்கள நம்பித்தான் இருக்கோம். இப்படி ஏதும் அவசரம்னா சொல்லுங்கண்ணே …… எங்களால முடிஞ்சதச் செய்யறம்” என்று கூறினான். சுப்பிரமணியும் விடை பெற்றுச் சென்றார்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.3 கொங்குநாட்டு வணிகம்

Students can Download 8th Tamil Chapter 6.3 கொங்குநாட்டு வணிகம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 6.3 கொங்குநாட்டு வணிகம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.3 கொங்குநாட்டு வணிகம்

Question 1.
உங்கள் மாவட்டம் பற்றிய செய்திகளைத் திரட்டி எழுதுக.
Answer:
எங்கள் மாவட்டம் தூத்துக்குடி. அதன் சிறப்புகள் :
தூத்துக்குடி பல நூற்றாண்டுகளாகக் கடல் வணிகத்தின் வளர்ச்சிக்குத் துணைபுரிந்தது. முத்துக்குளிப்புச் சிறந்து விளங்குவதால் முத்துநகரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

கி.பி. 7ஆம் நூற்றாண்டு, 9 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களின் காலத்தில் இங்கு துறைமுகம் நிறுவப்பட்டது. வ.உ.சி. இத்துறைமுகத்தில்தான் சுதேசி கப்பலை இயக்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டிய கட்டபொம்மன், மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரனார் போன்ற சிறந்த தலைவர்கள் பலரை நாட்டுக்கு அளித்துள்ளது.

இங்கிருந்து உப்பு, பருத்திநூல், பனை பொருள்கள், நார், கருவாடு போன்றவையும் உள்நாட்டு மருந்துகளும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் நிலக்கரி, கொப்பரை, பருப்பு வகைகள், தானிய வகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

புகழ்பெற்ற முருகர் கோயில் அமைந்துள்ள திருச்செந்தூர் இங்குதான் உள்ளது. எட்டயபுரம், கழுகுமலை, ஒட்டபிடாரம், ஆதிச்சநல்லூர், வாஞ்சி மணியாச்சி, பாஞ்சாலங் குறிச்சி, நவதிருப்பதி, சமணர் படுகை போன்றவை புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்கள் ஆகும்.

துறைமுகக் கடற்கரை, ராஜாஜி பூங்கா, கக்கன் பூங்கா, எம்.ஜி.ஆர். பூங்கா, முயல் தீவு, தெப்பக்குளம் போன்றவை பொழுதுபோக்கு இடங்களாகும்.

திருச்செந்தூரில் சூரசம்காரத் திருவிழா, வெள்ளப்பட்டி அதிசய கடல் மாதா கோவில் திருவிழா, தூத்துக்குடி பனிமய மாதா கோயில் திருவிழா, வீரபாண்டிய கட்டபொம்மன் விழா, பாரதியார் விழா, கைலாசநாதர் கோயில் சித்திரை தேரோட்டம் ஆகியவை எங்கள் மாவட்டத்தில் நடைபெறும் திருவிழாக்களாகும்.

உப்புக் காய்ச்சுதல், கைத்தறி நெசவு, பாய் பின்னுதல், மட்பாண்டங்கள் செய்தல், முத்துக் குளித்தல், சங்கு எடுத்தல் ஆகியவை இங்கு வழிவழியாக நடந்து வரும் தொழில்கள் ஆகும்.

ஜிப்சம், அல்லனைட், கார்னர்டு மணல், கிராபைட், மோனசைட், சுண்ணாம்புக்கல், நுரைக்கல், பாஸ்டேட், கெட்டி மண் போன்ற கனிமங்கள் நிறைந்தது தூத்துக்குடி மாவட்டம்.

இவ்வளவு சிறப்புகளைப் பெற்றுள்ள தூத்துக்குடி அனைவராலும் விரும்பப்படும் மாவட்டமாக விளங்குகின்றது என்பதைக் கூறுவதில் பெருமிதமடைகிறேன்.

Question 2.
பல்வகைத் தொழில்கள் என்னும் தலைப்பில் படத்தொகுப்பு உருவாக்குக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ என்று குறிப்பிடும் நூல் ………………
அ) தொல்காப்பியம்
ஆ) அகநானூறு
இ) புறநானூறு
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
அ) தொல்காப்பியம்

Question 2.
சேரர்களின் தலைநகரம் …………….
அ) காஞ்சி
ஆ) வஞ்சி
இ) தொண்டி
ஈ) முசிறி
Answer:
ஆ) வஞ்சி

Question 3.
பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது …………
அ) புல்
நெல்
இ) உப்பு
ஈ) மிளகு
Answer:
ஆ) நெல்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.3 கொங்குநாட்டு வணிகம்

Question 4.
ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு ……………..
அ)’ காவிரி
ஆ) பவானி
இ) நொய்யல்
ஈ) அமராவதி
Answer:
ஈ) அமராவதி

Question 5.
வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் ………………..
அ) நீலகிரி
ஆ) கரூர்
இ) கோயம்புத்தூர்
ஈ) திண்டுக்கல்
Answer:
இ) கோயம்புத்தூர்

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ‘மாங்கனி நகரம்’ என்று அழைக்கப்படும் நகரம்.
2. சுங்குடிச் சேலைகளுக்குப் புகழ்பெற்ற ஊர் …………………
3. சேரர்களின் நாடு …………… எனப்பட்டது.
4. பின்ன லாடை நகரமாக ………… விளங்குகிறது.
Answer:
1. சேலம்
2. சின்னாளபட்டி
3. குடகு
4. திருப்பூர்

குறுவினா

Question 1.
மூவேந்தர்களின் காலம் குறித்து எழுதுக.
Answer:
மூவேந்தர்களின் காலம்:
(i) தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டியர்களுக்கு உரியதாகக் கூறுகின்றன.

(ii) வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு என்று தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.

(iii) மூவேந்தர்களின் காலத்தை வரையறுத்துக் கூற முடியவில்லை .

(iv) வால்மீகி இராமாயணம், மகாபாரதம், அர்த்தசாத்திரம், அசோகர் கல்வெட்டு ஆகியவற்றில் மூவேந்தர்கள் குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளதனால் இவர்கள் பன்னெடுங்காலத்திற்கு முற்பட்டவர்கள் என்பதை அறியலாம்.

Question 2.
கொங்கு நாட்டில் பாயும் ஆறுகள் யாவை?
Answer:
கொங்கு நாட்டில் பாயும் ஆறுகள் :
(i) காவிரி
(ii) பவானி
(iii) நொய்யல்
(iv) அமராவதி (ஆன்பொருநை)

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.3 கொங்குநாட்டு வணிகம்

Question 3.
‘தமிழ்நாட்டின் ஹாலந்து’ என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?
Answer:
தமிழ்நாட்டின் ஹாலந்து என்று அழைக்கப்படும் ஊர் திண்டுக்கல்.
காரணம் : இங்கு நெல், சோளம், தினை வகைகள், வாழைப்பழம், காய்கறிகள் போன்றவை விளைவிக்கப்படுகின்றன. மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கின்றது.

சிறுவினா

Question 1.
கொங்கு மண்டலச் சதகம் கூறும் கொங்கு மண்டலத்தின் எல்லைகள் யாவை?
Answer:
கொங்கு மண்டலச் சதகம் கூறும் கொங்கு மண்டலத்தின் எல்லைகள் :
(i) கொங்கு மண்டலச் சதகம், கார்மேகக் கவிஞரால் இயற்றப்பட்டது.

(ii) அந்நூலில் வடக்கே பெரும்பாலை, தெற்கே பழனிமலை, மேற்கே வெள்ளிமலை, கிழக்கே மதிற்கரை என இந்நான்கு எல்லைகளுக்குட்பட்ட பகுதியாகக் கொங்கு மண்டலம் விளங்கியதாகக் கூறப்படுகிறது.

(iii) இன்றைய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களையும் சேலம், கரூர் மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியதாகக் கொங்கு மண்டலம் விளங்கியது என்பர்.
இங்கு பாயும் ஆறுகள் : காவிரி, பவானி, நொய்யல், அமராவதி

Question 2.
கரூர் மாவட்டம் பற்றிய செய்திகளைச் சுருக்கி எழுதுக.
Answer:
கரூர் மாவட்டச் செய்திகள் :
(i) கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய இப்பகுதிக்கு ‘வஞ்சி மாநகரம்’ என்னும் பெயரும் உண்டு.

(ii) கிரேக்க அறிஞர் தாலமி, கரூரைத் தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாகக் குறிப்பிட்டுள்ளார்.

(iii) நெல், சோளம், கேழ்வரகு, கம்பு, கரும்பு போன்றவை இங்குப் பயிரிடப்படுகின்றன.

(iv) கல்குவாரித் தொழிற்சாலைகள் இங்கு உள்ளன. கைத்தறி நெசவு ஆடைகளுக்குப் பெயர் பெற்ற மாவட்டமாகக் கரூர் விளங்குகிறது.

(v) தோல் பதனிடுதல், சாயமேற்றுதல், கற்சிற்ப வேலைகள் போன்ற தொழில்களும் நடைபெறுகின்றன.

(vi) பேருந்துக் கட்டுமானத் தொழிலின் சிகரமாகக் கரூர் விளங்குகிறது.

நெடுவினா

Question 1.
கொங்கு நாட்டின் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகம் குறித்து எழுதுக.
Answer:
கொங்கு நாட்டின் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகம் :
உழவு, கைத்தொழில், வணிகம் என்னும் மூன்றும் ஒரு நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு அடிப்படைகளாகும் என்பர். உள்நாட்டு, வெளிநாட்டு வணிகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியுள்ளனர்.

வெளிநாட்டு வணிகம் :
(i) கடல் வணிகத்தில் சேரநாடு சிறப்புற்றிருந்தது. அதற்கு அந்நாட்டின் இயற்கை அமைப்பே காரணமாக அமைந்தது. சேரர்கள் வலிமை மிகுந்த கப்பல் படையை வைத்திருந்தனர்.

(ii) முசிறி சேரர்களின் சிறந்த துறைமுகங்களுள் ஒன்றாக விளங்கியது.
(iii) இங்கிருந்துதான் மற்ற நாடுகளுக்கு மிளகு, முத்து, யானைத் தந்தங்கள், பட்டு, மணி போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன.
(iv) பொன், மென்மைமிக்க புடவைகள், சித்திர வேலைப்பாடமைந்த ஆடைகள், பவளம், செம்பு, கோதுமை ஆகியன இறக்குமதி செய்யப்பட்டன.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.3 கொங்குநாட்டு வணிகம்

இச்செய்தியை,
மீனோடு நெற்குவைஇ
மிசையம்பியின் மனைமறுக்குந்து
…………..
கலந்தந்த பொற்பரிசம்
கழித்தோணியால் கரைசேர்க்குந்து (புறநானூறு)
என்னும் பாடல் விளக்குகிறது.

உள்நாட்டு வணிகம் :
சேரநாட்டில் உள்நாட்டு வணிகமும் நன்கு வளர்ச்சியுற்றிருந்தது. மக்கள் தத்தம் பொருள்களைத் தந்து தமக்குத் தேவையான பொருளைப் பெற்றனர். நெல்லே விலையைக் கணக்கிட அடிப்படையாக இருந்தது என்பர். உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையனவாக இருந்தன என்பதை,

நெல்லும் உப்பும் நேரே ஊரீர்
கொள்ளீ ரோவெனச் சேரிதொறும் நுவலும்

என்னும் அகப்பாடல் மூலம் அறியலாம்.

கொங்கு மண்டலப் பகுதியில் இன்றைய வணிகம் :
நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு தொழில்களும் வணிகமும் சிறப்பாக நடைபெறுகின்றன.

சிந்தனை வினா

Question 1.
நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு வணிகம் தவிர்த்து வேறு எவையெல்லாம் உதவும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
Answer:
நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு உதவி செய்வன :
(i) வேளாண்மை முன்னேற்றம்
(ii) அறிவியல் வளர்ச்சி
(iii) தொழில் வளர்ச்சி
(iv) தொலைதொடர்பு வசதி
(v) சமூக ஒற்றுமை
(vi) நாட்டின் உற்பத்தியைப் பெருக்குதல்
(vii) கல்வி முன்னேற்றம்
(viii) போக்குவரத்து வசதிகள்
(ix) பண்பாட்டுக் கூறுகளைப் பாதுகாத்தல் போன்றவை நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு உதவி புரிகின்றன.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. மூவேந்தர்களின் பழமையானவர்கள் ………………..
2. சேரர்களின் நாடு ………………… எனப்பட்டது.
3. சேரர்களின் தலைநகரம் …………….
4. வஞ்சி நகர் …………………. தொடரில் தோன்றி அரபிக்கடலில் கலக்கும் ………………….. இருந்தது.
5. பேரியாறு …………….. கடலில் கலக்கிறது.
6. வஞ்சி நகரைக் ………………. என்றும் அழைப்பர்.
7. சேரர்களின் கொடி …………………..
8. சேரர்களின் பூ ……………… .
9. சேலம் கோவைப் பகுதிகள் ……………… எனப் பெயர் பெற்றன.
10. சேரர்களின் உறவினர்கள் ஆட்சி செய்த பகுதி ……………….
11. கொங்கு மண்டலச் சதகம் இயற்றியவர் …………………
12. சேரமன்னர்களால் அடக்கப்பட்ட கடற்கொள்ளையர்கள் ………………
13. செங்குட்டுவனின் கடற்போர் வெற்றியால் அவன் …………………. என்று அழைக்கப்பட்டான்.
14. சேரர்களின் துறைமுகம் ……………
15. விலையைக் கணக்கிட அடிப்படையாக இருந்தது ……………
16. நீலகிரி மாவட்டம் ………………… தொழிற்சாலைகள் நிறைந்தது.
17. தமிழ்நாட்டின் ஹாலந்து என்று சிறப்பிக்கப்படும் ஊர் …………………….,
18. அரிசி, தோல், பூட்டுத் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் ……………….
19. திண்டுக்கல்லில் புகழ்பெற்ற சேலையின் பெயர் ………………………
20. பரப்பளவில் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் …………….
21. தமிழகத்திலேயே ஈரோட்டில்தான் …………………. சந்தை நடைபெறுகின்றது.
22. இந்தியாவின் முதல் ஆயத்த ஆடைப் பூங்கா …………………. அமைந்துள்ள மாவட்டம் ……………………
23. தேசிய அளவில் புகழ்பெற்ற காளைகள் …………………..
24. நாமக்கல் …………………. வளர்ப்பிலும் முட்டை உற்பத்தியிலும் முதலிடம் வகிக்கின்றது.
25. தமிழ்நாட்டில் கைத்தறி நெசவு அதிகமாக உள்ள மாவட்டம் …………….
26. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஊர் ………………
27. கரூரைத் தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாகக் குறிப்பிட்டவர் …………………..
28. பேருந்துக் கட்டுமானத் தொழிலின் சிகரமாக விளங்குவது …………………

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.3 கொங்குநாட்டு வணிகம்
Answer:
1. சேரர்கள்
2. குடநாடு
3. வஞ்சி
4. மேற்குமலைத், பேரியாற்றங்கரையில்
5. அரபிக்
6. கருவூர்
7. விற்கொடி
8. பனம்பூ
9. கொங்குநாடு
10. கொங்குநாடு
11. கார்மேகக் கவிஞர்
12. கடம்பர்
13. கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
14. முசிறி
15. நெல்
16. தேயிலைத்
17. திண்டுக்கல்
18. திண்டுக்கல்
19. சின்னாளபட்டிச் சுங்குடிச் சேலைகள்
20. ஈரோடு
21. மஞ்சள்
22. நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, திருப்பூர்
23. காங்கேயம்
24. முட்டைக்கோழி
25. சேலம்
26. ஏற்காடு
27. கிரேக்க அறிஞர் தாலமி
28. கரூர்

குறுவினா :

Question 1.
மூவேந்தர்கள் பற்றிய தொன்மையான சான்றுகள் யாவை?
Answer:
(i) தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டியர்களுக்கு -‘, உரியதாகக் கூறுகின்றன.

(ii) வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ என்று தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.

(iii) வால்மீகி இராமாயணம், மகாபாரதம், அர்த்தசாத்திரம், அசோகர் கல்வெட்டு ஆகியவற்றில் மூவேந்தர்கள் குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன.

Question 2.
சேரர்கள் பற்றியும், சேரநாடு பற்றியும் எழுதுக.
Answer:
(i) மூவேந்தர்களில் சேரர்களே பழமையானவர்கள்.
(ii) சேர, சோழ, பாண்டியர் என்னும் தொடர் இதுக்குச் சான்றாகும்.
(iii) தொல்காப்பியமும் “போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்” எனச் சேரரை முன் வைக்கின்றது.
(iv) சேரர்களின் நாடு குட நாடு. தலைநகர் வஞ்சி.
(v) இந்நகர் மேற்கு மலைத்தொடரில் தோன்றி அரபிக்கடலில் கலக்கும் பேரியாற்றங்கரையில் இருந்தது. இதனைக் கருவூர் என்றழைப்பர்.
(vi) துறைமுகப் பட்டினங்கள் – தொண்டி, முசிறி, காந்தளூர்.
(vii) கொடி – விற்கொடி, பூ – பனம்பூ.

Question 3.
சேர நாட்டின் எல்லைகள் யாவை?
Answer:
(i) பண்டைய சேரநாடு என்பது இன்றைய கேரளப் பகுதிகளும் தமிழ்நாட்டின் சேலம், கோவை மாவட்டங்களின் பகுதிகளும் இணைந்த பகுதியாக விளங்கியது என்பர்.

(ii) சேலம், கோவைப் பகுதிகள் கொங்கு நாடு என்று பெயர்பெற்றன. இப்பகுதிகளைச் சேரர்களின் உறவினர்கள் ஆட்சி செய்து வந்தனர்.

Question 4.
நீலகிரி மாவட்டம் பற்றிய செய்திகளை எழுதுக.
Answer:
(i) கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடமே நீலகிரி மாவட்டம்.
(ii) இம்மாவட்டம் முழுவதும் மலைப் பகுதியாலானது.
(iii) தோட்டப்பயிர்கள் – காப்பி, தேயிலை, உருளைக்கிழங்கு, கேரட், முட்டைக்கோசு.
(iv) தைலமரம் வளர்க்க ப்படுகிறது.
(v) தொழிற்சாலை – புகைப்படச் சுருள் தயாரிப்புத் தொழிற்சாலை, துப்பாக்கி வெடிமருந்துத் தொழிற்சாலை, தைலமரம் எண்ணெய்த் தொழிற்சாலை.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.3 கொங்குநாட்டு வணிகம்

Question 5.
கோயம்புத்தூர் மாவட்டம் பற்றிய செய்திகளை எழுதுக.
Answer:
(i) கோவன்புத்தூர் என்னும் பெயரே கோயம்புத்தூர் என்று மருவி வழங்கப்பட்டு வருகிறது.

(ii) பயிர்கள் – நெல், வாழை, கரும்பு, காய்கறிகள், பூக்கள்.

(iii) தொழிற்சாலைகள் – பஞ்சாலைகள், நூற்பாலைகள், மின்சாரப் பொருள்கள், எந்திரங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன.

Question 6.
ஈரோடு மாவட்டம் பற்றிய செய்திகளை எழுதுக.
Answer:
(i) பரப்பளவில் ஈரோடு தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம்.
(ii) பயிர்கள் – நெல், நிலக்கடலை, மஞ்சள், கரும்பு, பருத்தி, எள்.
(iii) தமிழகத்திலேயே மஞ்சள் சந்தை ஈரோட்டில்தான் நடைபெறுகின்றது.
(iv) ஆலைகள் – துணி நூற்பாலைகள், எண்ணெய் ஆலைகள், சர்க்கரை ஆலைகள்
(v) தொழில்கள் – நூல்நூற்பு, துணிகளுக்குச் சாயம் ஏற்றுதல், அச்சிடுதல், தோல் பதனிடுதல்.

Question 7.
திருப்பூர் மாவட்டம் பற்றிய செய்திகள் யாவை?
Answer:
(i) மிகச்சிறந்த பின்னலாடை நகரம்.
(ii) பயிர்கள் – நெல், கரும்பு, பருத்தி, வாழை.

(iii) இம்மாவட்டம் பின்னலாடைகள், ஆயத்த ஆடைகள் மூலம் தமிழ்நாட்டிற்குப் பெரும் வருவாயை ஈட்டித் தருகிறது.

(iv) இந்தியாவின் முதல் ஆயத்த ஆடை பூங்காவான நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.

(v) தேசிய அளவில் புகழ்பெற்ற காங்கேயம் காளைகள் இம்மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கின்றன.

Question 8.
நாமக்கல் மாவட்டம் பற்றிய செய்திகளை எழுதுக.
Answer:
(i) இங்குள்ள மலைகள் – பச்சைமலை, கொல்லிமலை, சேர்வராயன் மலை.
(ii) பயிர்க ள் – நெல், கரும்பு, சோளம், நிலக்கடலை, பருத்தி.
(iii) மலைப்பயிர்கள் – திராட்சை, ஆரஞ்சு, காப்பி, பாக்கு, ஏலம்.
(iv) முட்டைக்கோழி வளர்ப்பிலும் முட்டை உற்பத்தியிலும் தென்னிந்தியாவிலேயே நாமக்கல் முதன்மையான இடம் வகிக்கின்றது.
(v) தொழில்கள்- சிமெண்ட், காகிதத் தொழிற்சாலை.
(vi) தொழில் – கைத்தறி நெசவு, வெண்கலப்பொருள்கள் செய்தல்.
(vii) சிற்றுந்து, சரக்குந்து ஆகியவை அதிக அளவில் இயங்கும் மாவட்டமாக விளங்குகிறது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.3 கொங்குநாட்டு வணிகம்

Question 9.
சேலம் மாவட்டம் பற்றிய செய்திகளை எழுதுக.
Answer:
(i) மாங்கனி நகரம் என்னும் சிறப்புப் பெயர் கொண்டது.
(ii) பயிர்கள் – நெல், பருப்பு வகைகள், பருத்தி, கரும்பு, மாம்பழம், காப்பி, பாக்கு.
(iii) இந்தியாவிலேயே இங்குதான் ஜவ்வரிசி அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது.
(iv) தொழில் – பால் பண்ணைத் தொழில், முலாம் பூசும் தொழில்.

(v) ஆலைகள் – இரசாயனப் பொருள், அலுமினியம், சந்தன எண்ணெய், வனஸ்பதி ஆகியவை தயாரிக்கும் ஆலைகள் உள்ளன

(vi) ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.

(vii) தமிழ்நாட்டில் இம்மாவட்டத்தில்தான் கைத்தறி நெசவு அதிகமாக நடைபெறுகிறது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.2 மழைச்சோறு

Students can Download 8th Tamil Chapter 6.2 மழைச்சோறு Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 6.2 மழைச்சோறு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.2 மழைச்சோறு

Question 1.
உங்கள் பகுதியில் பாடப்படும் மழை தொடர்பான நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து எழுதுக.
Answer:
(i) மழையை நம்பி ஏலேலோ மண் இருக்க ஐலசா
மண்ணை நம்பி ஏலேலோ மரம் இருக்க ஐலசா
மரத்தை நம்பி ஏலேலோ கிளை இருக்க ஐலசா
கிளையை நம்பி ஏலேலோ இலை இருக்க ஐலசா
இலையை நம்பி ஏலேலோ பூவிருக்க ஐலசா
பூவை நம்பி ஏலேலோ பிஞ்சிருக்க ஐலசா
பிஞ்சை நம்பி ஏலேலோ காயிருக்க ஐலசா
காயை நம்பி ஏலேலோ பழம் இருக்க ஐலசா
பழத்தை நம்பி ஏலேலோ மகன் இருக்க ஐலசா
மகனை நம்பி ஏலேலோ நீ இருக்க ஐலசா
உன்னை நம்பி ஏலேலோ நான் இருக்க ஐலசா
என்னை நம்பி ஏலேலோ எமன் இருக்க ஐலசா
எமனை நம்பி ஏலேலோ காடிருக்க ஐலசா
காட்டை நம்பி ஏலேலோ புல்லிருக்க ஐலசா.

(ii) நாடு செழித்திடவே
நல்ல மழை பெய்ய வேணும்
தேசம் செழித்திடவே
செல்ல மழை பெய்ய வேணும்.

(iii) பட்டி பெருகவேணும்
தம்பிரானே
பால்பானை பொங்க வேணும்
தம்பிரானே
மேழி பெருகவேணும்
தம்பிரானே
மாரிமழை பெய்ய வேணும்
தம்பிரானே.

(iv) வானத்து ராசாவே! மழை வழங்கும் இன்னுயிரே!
கூழு குடிச்சறியோம்! கூப்பிட்டா சத்தமில்லே!
சட்டியிலே மாவரைத்துச் சந்தியெல்லாம் கோலமிட்டு
கோலம் அழியுமுன்னே ஒருகொள்ளை மழை பெய்யாதோ!
நாடு செழிக்க நல்ல மழை பெய்யாதோ!
காடு செழிக்க கனத்த மழை பெய்யாதோ!
ஏத்து மீனும் ஏறாதோ?
எங்க பஞ்சம் தீராதோ?

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
கனத்த மழை என்னும் சொல்லின் பொருள் ……………….
அ) பெருமழை
ஆ) சிறு மழை
இ) எடைமிகுந்த மழை
ஈ) எடை குறைந்த மழை
Answer:
அ) பெருமழை

Question 2.
‘வாசலெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ) வாசல் + எல்லாம்
ஆ) வாசல் + எலாம்
இ) வாசம் + எல்லாம்
ஈ) வாசு + எல்லாம்
Answer:
அ) வாசல் + எல்லாம்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.2 மழைச்சோறு

Question 3.
‘பெற்றெடுத்தோம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) பெறு + எடுத்தோம்
ஆ) பேறு + எடுத்தோம்
இ) பெற்ற + எடுத்தோம்
ஈ) பெற்று + எடுத்தோம்
Answer:
ஈ) பெற்று + எடுத்தோம்.

Question 4.
கால் + இறங்கி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………..
அ) கால்லிறங்கி
ஆ) காலிறங்கி
இ) கால் இறங்கி
ஈ) கால்றங்கி
Answer:
ஆ) காலிறங்கி

குறுவினா

Question 1.
மழைச்சோறு பாடலில் உழவர் படும் வேதனை எவ்வாறு கூறப்படுகிறது?
Answer:
மழைச்சோறு பாடலில் உழவர் படும் வேதனை :
மழை பெய்யாததால் செடி, கொடிகள் வளரவில்லை. உழவர்களின் பசி தீரவில்லை. மழை இல்லாததால் கலப்பையைப் பிடிக்க இயலவில்லை. ஏற்றம் இறைக்க இயலவில்லை. இவற்றையெண்ணி உழவர்கள் மனம் சோர்ந்து மனம் ஏங்கி வேதனையுற்றனர்.

Question 2.
மக்கள் ஊரைவிட்டு வெளியேறக் காரணம் என்ன?
Answer:
உழவர்கள் மழையை வேண்டி வழிபாடு செய்கின்றனர். அதன் பிறகும் மழைபெய்யாததால் ஊரைவிட்டுச் செல்ல முடிவெடுக்கின்றனர்.

சிறுவினா

Question 1.
கோலம் கரையாத நிலையை மழைச்சோறு பாடல் எவ்வாறு விளக்குகிறது?
Answer:
கோலம் கரையாத நிலை:
(i) வாளியில் பச்சரிசி மாவைக் கரைத்து வாசல் முழுவதும் கோலம் போட்டனர். கொள்ளை மழை பெய்யாததால் கோலம் கரையவில்லை.

(ii) பானையில் மாவைக் கரைத்து பாதையெல்லாம் கோலம் போட்டனர். கொள்ளை மழை பெய்யாததால் கோலம் கரையவில்லை.

Question 2.
மழையின்மையால் செடிகள் வாடிய நிலையை விளக்குக.
Answer:
(i) கல் இல்லாத காட்டில் கடலைச்செடி போட்டனர்.
(ii) முள் இல்லாத காட்டில் முருங்கைச் செடி நட்டனர்.
(iii) முத்து போன்ற மழை பெய்யாததால் அவையெல்லாம் வாடின என்று பாடுகின்றனர் உழவர்கள்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.2 மழைச்சோறு

Question 3.
மழைச்சோறு எடுத்தபின் எவ்வாறு மழை பெய்தது?
Answer:
மழைச்சோறு எடுத்தபின் பேய்மழை பெய்தது. ஊசிபோல நிலத்தில் இறங்கி உலகம் முழுவதிலும் மழை பெய்தது. சிட்டுபோல் மின்னல் மின்னி உலகெங்கும் பொழிந்தது. உலகெங்கும் செல்ல மழை பெய்தது. .

சிந்தனை வினா

Question 1.
மழை வளம் பெருக நாம் செய்ய வேண்டுவன யாவை?
Answer:
மழை வளம் பெருக நாம் செய்ய வேண்டுவன :
(i) மரங்கள் வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
(ii) வெட்டும் மரங்களுக்கு ஈடாக மரக்கன்றுகள் நட வேண்டும்.
(iii) ஆற்று மணலை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
(iv) நிலத்தடி நீரைத் தேக்கி வைக்க வேண்டும்.
(v) குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் ஆகிய நீர்நிலைகளைக் கோடைக் காலங்களில் தூர்வாரி வைத்து மழைக் காலங்களில் நீரைத் தேக்கி வைக்க வேண்டும்.
(vi) சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. மன்பதை காக்கும் மாபெரும் சிறப்பு ………………….. உண்டு.
2. ‘கொங்குநாட்டு மழைச்சோற்று வழிபாடு’ என்னும் கட்டுரை …………………. என்னும் நூலில் உள்ளது.
3. பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள்’ என்னும் நூலின் பதிப்பாசிரியர் ………………….
Answer:
1. மாமழைக்கு
2. பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள்
3. அ. கௌரன்

விடையளி :

Question 1.
‘மழைச்சோறு’ பாடலில் மழை பெய்யாததால் மக்கள் என்ன செய்தனர்?
Answer:
(i) மழை பொய்த்ததால் மக்கள் மூன்று அல்லது ஐந்து நாள்கள் பாடி வழிபாடு செய்தனர். அதன் பிறகும் மழை பெய்யாததால் காட்டிற்குச் செல்ல முடிவெடுக்கின்றனர்.

(ii) பாடலைப் பாடிக்கொண்டே சோறு வாங்கிய பானை, அகப்பை, பழைய முறம் போன்றவற்றைத் தலையில் வைத்தவாறு ஊரைவிட்டு வெளியேறுகின்றனர்.

Question 2.
‘மழைச்சோற்று நோன்பு’ என்பது யாது?
Answer:
(i) மழை பெய்யாமல் ஊரில் பஞ்சம் ஏற்படும் காலங்களில் சிற்றூர் மக்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று உப்பில்லாச் சோற்றை ஒரு பானையில் வாங்குவர்.

(ii) ஊர்ப் பொது இடத்தில் வைத்து அச்சோற்றை அனைவரும் பகிர்ந்து உண்பர்.

(iii) கொடிய பஞ்சத்தைக் காட்டும் அடையாளமாக நிகழும் இதனைக் கண்டு வானம் மனமிரங்கி மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்நிகழ்வு மழைச்சோற்று நோன்பு எனப்படுகிறது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.2 மழைச்சோறு

நூல் வெளி
பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலில் உள்ள கொங்குநாட்டு ‘மழைச்சோற்று வழிபாடு’ என்னும் கட்டுரையிலிருந்து இப்பாடல் எடுக்கப்பட்டுள்ளது. இந்நூலின் பதிப்பாசிரியர் அ. கௌரன்.

தெரிந்து தெளிவோம்
மழை பெய்யாமல் ஊரில் பஞ்சம் ஏற்படும் காலங்களில், சிற்றூர் மக்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று உப்பில்லாச் சோற்றை ஒரு பானையில் வாங்குவர். ஊர்ப் பொது இடத்தில் வைத்து அச்சோற்றை அனைவரும் பகிர்ந்து உண்பர்.

கொடிய பஞ்சத்தைக் காட்டும் அடையாளமாக நிகழும் இதனைக் கண்டு வானம் மனமிரங்கி மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்நிகழ்வை மழைச்சோற்று நோன்பு என்பர்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.1 வளம் பெருகுக

Students can Download 8th Tamil Chapter 6.1 வளம் பெருகுக Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 6.1 வளம் பெருகுக

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.1 வளம் பெருகுக

Question 1.
உமது பகுதியில் நடைபெறும் ஏதேனும் ஒரு தொழிலின் பல செயல்களை வரிசைப்படுத்தி எழுதுக.
Answer:
நெசவுத்தொழிலின் பல செயல்கள் :
(i) சாயம் போடுதல்.
(ii) பாவு சரி செய்தல்.
(iii) இழைச் சிக்கெடுத்தல்.
(iv) கஞ்சி போடுதல்.
(v) மழைக்காலமாயின் அனல் காட்டுதல்.
(vi) தறியேற்றுதல்.
(vii) சரிகை வடிவமைப்புச் செய்தல்.
(viii) நெய்தல்.
(ix) மடித்தல்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
தோட்டத்தில் தம்பி ஊன்றிய ……………… எல்லாம் முளைத்தன.
அ) சத்துகள்
ஆ) பித்துகள்
இ) முத்துகள்
ஈ) வித்துகள்
Answer:
ஈ) வித்துகள்

Question 2.
என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு ………………….. பெருகிற்று.
அ) காரி
ஆ) ஓரி
இ) வாரி
ஈ) பாரி
Answer:
இ) வாரி

Question 3.
‘அக்களத்து’ என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..
அ) அ + களத்து
ஆ) அக் + களத்து
இ) அக்க + அளத்து
ஈ) அம் + களத்து
Answer:
அ) அ + களத்து

Question 4.
கதிர் + ஈன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………..
அ) கதிரென
ஆ) கதியீன
இ) கதிரீன
ஈ) கதிரின்ன
Answer:
இ) கதிரீன

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.1 வளம் பெருகுக

குறுவினா

Question 1.
பயிர்கள் வாட்டமின்றிக் கிளைத்து வளரத் தேவையானது யாது?
Answer:
பயிர்கள் வாட்டமின்றிக் கிளைத்து வளரத் தேவையானது தகுந்த காலத்தில் பொழியும் மழை ஆகும்.

Question 2.
உழவர்கள் எப்போது ஆர்வார ஒலி எழுப்புவர்?
Answer:
நெற்போரினை அடித்து நெல்லினைத் கொள்ளும் காலத்தில் உழவர்கள் ஆரவார ஒலி எழுப்புவர்.

சிறுவினா

Question 1.
உழவுத்தொழில் பற்றித் தகடூர் யாத்திரை கூறுவன யாவை?
Answer:
(i) சேர மன்னரின் அகன்ற பெரிய நாட்டில் பெருகிய மழைநீரால் வருவாய் சிறந்து விளங்கியது.

(ii) அகன்ற நிலப்பகுதியில் விதைகள் குறைவின்றி முளைவிட்டன.

(iii) முளைத்த விதைகள் செழிப்புடன் வளரத் தட்டுப்பாடின்றி மழை பொழிந்தது.

(iv) தகுந்த காலத்தில் மழை பொழிவதால் பயிர்கள் வாட்டமின்றிக் கிளைத்து வளர்ந்தன.

(v) கிளைத்துச் செழித்த பயிர்கள் பால்முற்றிக் கதிர்களை ஈன்றன.

(vi) அக்கதிர்கள் அறுவடை செய்யப்பெற்று ஏரினால் வளம் சிறக்கும் செல்வர்களின் களத்தில் வந்து நிறைந்தன.

(vi) அக்களத்தில் வந்து நிறைந்துள்ள நெற்போர் காவல் இன்றியே விளங்குகிறது.

(vii) போரினை அடித்து நெல்லினைக் கொள்ளும் காலத்தில் உழவர்கள் ஆரவார ஒலி எழுப்புவர். இவையே உழவுத்தொழில் பற்றித் தகடூர் யாத்திரை கூறுவனவாகும்.

சிந்தனை வினா

Question 1.
உழவுத்தொழில் சிறக்க இன்றியமையாதனவாக நீங்கள் கருதுவன யாவை?
Answer:
உழவுத்தொழில் சிறக்க இன்றியமையாதன :
(i) மாறும் சூழலுக்கு ஏற்ப விவசாய முறையை மாற்றுதல்.

(ii) இயற்கை வேளாண்மையில் கிடைக்கும் பொருள்களுக்கு ஏற்ற விலையை நிர்ணயித்தல்.

(iii) விளைநிலங்களை வீடுகளாக மாற்ற அனுமதிக்கக் கூடாது.

(iv) உழவர்களுக்கும் நுகர்வோருக்கும் நேரடித் தொடர்பு இருந்தால் உழவர்களின் பொருளுக்கேற்ற விலை அவர்களுக்குக் கிடைக்கும்.

(v) இளைஞர்கள் விவசாயத்திற்கு வந்து, புதிய அணுகுமுறைகளைக் கொண்டு வர வேண்டும்.

(vi) இதற்கும் மேலாக சுற்றுச்சூழல் மாசுபடாமல் பாதுகாத்து மழையின் அளவு பெருகுவதற்கு வழி வகை செய்ய வேண்டும். பொழிகின்ற மழைநீரைச் சேமித்து நிலத்தடிநீர் உயர்வதற்கான பணியைச் செய்ய வேண்டும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.1 வளம் பெருகுக

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. வாரி – வருவாய்
2. எஞ்சாமை – குறைவின்றி
3. முட்டாது – தட்டுப்பாடின்றி
4. ஒட்டாது – வாட்டம் இன்றி
5. வைகுக – தங்குக
6. ஓதை – ஓசை
7. வெரீஇ – அஞ்சி
8. யாணர் – புதுவருவாய்

நீரப்புக :

1. யாணர் என்பதன் பொருள் …………… .
2. தகுந்த காலத்தில் மழை பொழிவதால் பயிர்கள் ……………… கிளத்து வளரும்.
3. உழவர்கள் எழுப்பும் ஆரவார ஒலியால் அஞ்சிப் பறப்பவை ………………..
4. தகடூர் இன்று ………………. என்று அழைக்கப்படுகிறது.
5. தகடூர் யாத்திரையின் சில பாடல்கள் ………………….. என்னும் தொகுப்பு நூலில் கிடைக்கின்றன.
Answer:
1. புது வருவாய்
2. வாட்டமின்றி
3. நாரை இனங்கள்
4. தர்மபுரி
5. புறத்திரட்டு

விடையளி :

Question 1.
தகடூர் யாத்திரை பற்றி நீ அறிந்தவற்றை எழுதுக.
Answer:
(i) ஆசிரியர் பெயர் அறிய முடியாத நூல்களுள் ஒன்று தகடூர் யாத்திரை.
(ii) இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை .
(iii) இந்நூலில் சில பாடல்கள் புறத்திரட்டு என்னும் தொகுப்பு நூலில் கிடைக்கின்றன.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 6.1 வளம் பெருகுக

ஆசிரியர் குறிப்பு
ஆசிரியர் பெயர் அறிய முடியாத நூல்களுள் ஒன்று தகடூர் யாத்திரை. தகடூர் இன்று தர்மபுரி என்று அழைக்கப்படுகிறது. இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலின் சில பாடல்கள் புறத்திரட்டு என்னும் தொகுப்பு நூலில் கிடைக்கின்றன.

பாடலின் பொருள்
சேர மன்னரின் அகன்ற பெரிய நாட்டில் பெருகிய மழைநீரால் வருவாய் சிறந்து விளங்குக. அகன்ற நிலப்பகுதியில் இவ்விதைகள் குறைவின்றி முளைவிடுக. முளைத்த விதைகள் செழிப்புடன் வளரத் தட்டுப்பாடின்றி மழை பொழிக. தகுந்த காலத்தில் மழை பொழிவதால் பயிர்கள் வாட்டமின்றிக் கிளைத்து வளர்க.

கிளைத்துச் செழித்த பயிர்கள் பால்முற்றிக் கதிர்களை ஈனுக. அக்கதிர்கள் அறுவடை செய்யப் பெற்று ஏரினால் வளம் சிறக்கும் செல்வர்களின் களத்தில் வந்து நிறைக. அக்களத்தில் வந்து நிறைந்துள்ள நெற்போர் காவல் இன்றியே விளங்குக.

போரினை அடித்து நெல்லினைக் கொள்ளும் காலத்தில் உழவர்கள் எழுப்பும் ஆரவார ஒலியால் நாரை இனங்கள் அஞ்சித் தம் பெண் பறவைகளோடு பிரிந்து செல்லும் சிறப்புடைய சேர மன்னரின் அகன்ற பெரிய நாடு புதுவருவாயுடன் சிறந்து விளங்குக.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Students can Download 8th Tamil Chapter 5.6 திருக்குறள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.6 திருக்குறள்

மதிப்பீடு

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
அரசரை அவரது …………………….. காப்பாற்றும்.
அ) செங்கோல்
ஆ) வெண்கொற்றக்குடை
இ) குற்றமற்ற ஆட்சி
ஈ) படை வலிமை
Answer:
இ) குற்றமற்ற ஆட்சி

Question 2.
சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் ………………. தகுதி அறிந்து பேச வேண்டும்.
அ) சொல்லின்
ஆ) அவையின்
இ) பொருளின்
ஈ) பாடலின்
Answer:
ஆ) அவையின்

Question 3.
‘கண்ணோடாது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
அ) கண் + ஓடாது
ஆ) கண் + ணோடாது
இ) க + ஓடாது
ஈ) கண்ணோ + ஆடாது
Answer:
அ) கண் + ஓடாது

Question 4.
‘கசடற’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….
அ) கச + டற
ஆ) கசட + அற
இ) கசடு + உற
ஈ) கசடு + அற
Answer:
ஈ) கசடு + அற

Question 5.
என்ற + ஆய்ந்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………..
அ) என்றாய்ந்து
ஆ), என்று ஆய்ந்து
இ) என்றய்ந்து
ஈ) என் ஆய்ந்து
Answer:
அ) என்றாய்ந்து

குறுவினா

Question 1.
நன்மையைத் தரும் செயலை ஒருவரிடம் ஒப்படைக்கும் வழி யாது?
Answer:
இச்செயலை இந்த வகையால் இவர் செய்து முடிப்பார் என்று ஆராய்ந்து அச்செயலை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

Question 2.
சிறந்த ஆட்சியின் பண்பாகத் திருக்குறள் கூறுவது யாது?
Answer:
எதையும் நன்கு ஆராய்ந்து ஒரு பக்கம் சாயாது நடுவுநிலையில் நின்று நடத்துவதே சிறந்த ஆட்சியாகும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 3.
அரசன் தண்டிக்கும் முறை யாது?
Answer:
ஒருவர் செய்த குற்றத்தை முறையாக ஆராய்ந்து அவர் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தண்டிப்பது அரசனின் கடமையாகும். இதுவே அரசன் தண்டிக்கும் முறை ஆகும்.

Question 4.
சிறந்த சொல்லாற்றலின் இயல்பு என்ன?
Answer:
கேட்பவரைத் தன்வயப்படுத்துவதும் கேளாதவரைக் கேட்கத் தூண்டுவதும் சிறந்த சொல்லாற்றலின் இயல்பாகும்.

பின்வரும் நிகழ்வுக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுக்க.

பள்ளி ஆண்டுவிழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலைக்குழுத் தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்று பேசப்பட்டது. ஆசிரியர்கள் பள்ளி மாணவர் தலைவன் செழியனை பரிந்துரைத்தனர். தலைமை ஆசிரியர் செழியன் மாணவர் தலைவனாக இருக்கிறான். ஆனால் இது கலைக்குழுவிற்கான தலைவர் பதவி. நடனம், இசை, நாடகம் என அனைத்துத் துறைகளிலும் ஆர்வமுள்ள ஒருவரே இதற்குத் தகுதியானவர். எனவே என்னுடைய தேர்வு கலையரசன்’ என்று நன்கு ஆராய்ந்து கூறினார். ஆசிரியர்கள் அனைவரும் சிறந்த தேர்வு’ என்று மகிழ்ந்தனர்.

1. அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகை அறிந்த தூய்மை யவர்.

2. இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்கண் விடல்.

3. ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
Answer:
2. இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்கண் விடல்.

தெரிந்து வினையாடல்

1. செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.
தெளிவுரை : செயலாற்றும் திறன் உடையவரையும் செய்ய வேண்டிய செயலையும் செய்வதற்குரிய காலத்தையும் ஆராய்ந்து அச்செயலை நிறைவேற்ற வேண்டும்.

2. இதனை இதனால் இவன்முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்கண் விடல்.
தெளிவுரை : இச்செயலை இந்த வகையால் இவர் செய்து முடிப்பார் என்று ஆராய்ந்து அச்செயலை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

செங்கோன்மை

3. ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
தெளிவுரை : எதையும் நன்கு ஆராய்ந்து ஒரு பக்கம் சாயாது நடுவுநிலையில் நின்று நடத்துவதே சிறந்த ஆட்சியாகும்.

4. இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்
தெளிவுரை : உலகத்து உயிர்களை எல்லாம் அரசர் காப்பாற்றுவார். அவரை அவரது குற்றமற்ற ஆட்சி காப்பற்றும்.

வெருவந்த செய்யாமை

5. தக்காங்கு நாடித் தலைசெல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
தெளிவுரை : ஒருவர் செய்த குற்றத்தை முறையாக ஆராய்ந்து அவர் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தண்டிப்பது அரசனின் கடமையாகும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

6. இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.
தெளிவுரை : நம் அரசர் கடுமையானவர் என்று குடிமக்களால் தூற்றப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசர், தன் வாழ்நாள் குறைந்து விரைவில் அழிவார்.

சொல்வன்மை

7. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவாதம் சொல்.
தெளிவுரை : கேட்பவரைத் தன்வயப்படுத்துவதும் கேளாதவரைக் கேட்கத் தூண்டுவதும் சிறந்த சொற்றலாற்றலின் இயல்பாகும்.

8. சொல்லுக சொல்லைப் பிறர்ஓர்சொல் அச்சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து.
தெளிவுரை : நாம் சொல்லும் சொல்லை வேறு சொல்லால் வெல்ல இயலாதவாறு சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேச வேண்டும்.

அவையறிதல்

9. அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகை அறிந்த தூய்மை யவர்.
தெளிவுரை : சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் அவையின் தகுதி அறிந்து பேசுதல் வேண்டும்.

10. கற்று அறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து.
தெளிவுரை : சொற்களை ஆராயும் அறிஞர் நிறைந்த அவையில் பேசும்போதுதான் பல நூல்களைக் கற்றவரின் கல்வி பெருமையடையும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

நூல் வெளி
பெருநாவலர், முதற்பாவலர், நாயனார் முதலிய பல சிறப்புப் பெயர்களால் குறிக்கப்படும் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பர்.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.6 திருக்குறள் 1

திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல் ஆகும். இந்நூல் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது. அறத்துப்பால் பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்னும் நான்கு இயல்களைக் கொண்டது. பொருட்பால் அரசியல், அமைச்சியல், ஒழிபியல் என்னும் மூன்று இயல்களைக் கொண்டது. இன்பத்துப்பால் களவியல், கற்பியல் என்னும் இரண்டு இயல்களைக் கொண்டது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.5 தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்

Students can Download 8th Tamil Chapter 5.5 தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.5 தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.5 தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்

Question 1.
பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள தொகைநிலைத் தொடர், தொகாநிலைத் தொடர்களைக் கண்டறிந்து தனித்தனியே தொகுக்க.
Answer:
தொகைநிலைத் தொடர் :
(i) ஆற்றல் உடையது – வேற்றுமைத்தொகை
(ii) சுடுமண் – வினைத்தொகை
(iii) சிற்றூர் – பண்புத்தொகை
(iv) வெற்றிலை பாக்கு – உம்மைத்தொகை
(v) மலர்விழி – உவமைத்தொகை
(vi) மலர்விழி வந்தாள் – அன்மொழித்தொகை

தொகாநிலைத் தொடர் :
(i) கல்லூரி மாணவி மலர்விழி – எழுவாய்த் தொடர்
(ii) இளைஞர்களே! தமிழ் இளைஞர்களே! – விளித்தொடர்
(iii) என்கிறார் அடியார்க்கு நல்லார் – வினைமுற்றுத் தொடர்
(iv) கட்டிய – பெயரெச்சத் தொடர்
(v) தோன்றிக் கிளைத்தன – வினையெச்சத் தொடர்
(vi) தொடர்பைக் காட்டும் – வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
(vii) மற்றொன்று – இடைச்சொல் தொடர்
(viii) மாநிலம் – உரிச்சொல் தொடர்
(ix) ஓடி ஓடி – அடுக்குத் தொடர்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது ………………….
அ) வேற்றுமைத்தொகை
ஆ) உம்மைத்தொகை
இ) உவமைத்தொகை
ஈ) அன்மொழித்தொகை
Answer:
அ) வேற்றுமைத்தொகை

Question 2.
‘செம்மரம்’ என்னும் சொல் …………….. த்தொகை.
அ) வினை
ஆ) பண்பு
இ) அன்மொழி
ஈ) உம்மை
Answer:
ஆ) பண்பு

Question 3.
‘கண்ணா வா!’ – என்பது ………………….த் தொடர்.
அ) எழுவாய்
ஆ) விளி
இ) வினைமுற்று
ஈ) வேற்றுமை
Answer:
ஆ) விளி

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.5 தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்

பொருத்துக

1. பெயரெச்சத் தொடர் – கார்குழலி படித்தாள்.
2. வினையெச்சத் தொடர் – புலவரே வருக.
3. வினைமுற்றுத் தொடர் – பாடி முடித்தான்.
4. எழுவாய்த் தொடர் – எழுதிய பாடல்.
5. விளித் தொடர் – வென்றான் சோழன்.
Answer:
1. பெயரெச்சத் தொடர் – எழுதிய பாடல்.
2. வினையெச்சத் தொடர் – பாடி முடித்தான்.
3. வினைமுற்றுத் தொடர் – வென்றான் சோழன்.
4. எழுவாய்த் தொடர் – கார்குழலி படித்தாள்.
5. விளித் தொடர் – புலவரே வருக.

சிறுவினா

Question 1.
தொகைநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
தொகைநிலைத் தொடர் ஆறுவகைப்படும். அவை
(i) வேற்றுமைத்தொகை
(ii) வினைத்தொகை
(iii) பண்புத்தொகை
(iv) உவமைத்தொகை .
(v) உம்மைத்தொகை
(vi) அன்மொழித்தொகை

Question 2.
இரவுபகல் என்பது எவ்வகைத் தொடர் என விளக்குக.
Answer:
(i) இரவுபகல் – உம்மைத்தொகை
(ii) இத்தொடர் இரவும் பகலும் என விரிந்து பொருள் தருகின்றது.
(iii) இதில் சொற்களின் இடையிலும் இறுதியிலும் ‘உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவதால் உம்மைத்தொகை ஆயிற்று.

Question 3.
அன்மொழித்தொகையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answer:
அன்மொழித்தொகை :
(i) வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களுள் அவை அல்லாத வேறு பிற சொற்களும் மறைந்து வருவது அன்மொழித்தொகை (அல் + மொழி + தொகை) எனப்படும்.
எ.கா. பொற்றொடி வந்தாள் பொற்றொடி – பொன்னாலான வளையல் என்பது பொருள்.

(ii) வந்தாள் என்னும் வினைச்சொல்லைத் தழுவி நிற்கும் போது ‘பொன்னாலாகிய வளையலை அணிந்த பெண்’ என்னும் பொருளைத் தருகிறது.

(iii) இதில் ஆல்’ என்னும் மூன்றாம் வேற்றுமை உருபும் ஆகிய’ என்னும் அதன் பயனும் மறைந்து வந்துள்ளது.

(iv) ஆதலால் இது மூன்றாம் வேற்றுமைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை எனப்படும்.

மொழியை ஆள்வோம்

கேட்க

Question 1.
கைவினைக் கலைகளின் சிறப்புகள் குறித்த ஒலிப்பதிவைக் கேட்டு மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே கைவினைக் கலைகளின் சிறப்புகள் குறித்த ஒலிப்பதிவைக் கேட்டு மகிழ வேண்டும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.5 தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்

கீழ்க்காணும் தலைப்புகளில் இரண்டு நிமிடம் பேசுக.

Question 1.
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்
Answer:
அவையோர்க்கு வணக்கம்!
மனிதன் அறிவைப் பெற்றபோது உண்டான தொழில்தான் கைத்தொழில். மனிதத் தேவைகளை முதன் முதலில் நிறைவு செய்த தொழில் கைத்தொழிலே ஆகும். அத்தகைய சிறப்புடைய கைத்தொழிலைப் பற்றிப் பேசுவதற்கு வந்துள்ளேன்.

“கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்.”
என்று நாமக்கல் கவிஞர் பாடியுள்ளார்..

இவ்வரிகள் எவ்வளவு ஆழம் பொருந்தியவை. இன்றைய இளைஞர்கள் ஏட்டுக் கல்வியை மட்டுமே பெற்றுவிட்டு, அதற்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்று அரசாங்கத்தையும் சமூகத்தையும் வெறுக்கிறார்கள். இவர்கள் ஏட்டுக் கல்வியோடு ஏதேனும் ஒரு கைத்தொழிலைக் கற்றுக் கொண்டிருந்தால் இந்நிலை அவர்களுக்கு ஏற்பட்டிருக்காது.

வாழ்க்கை என்று வருகிறபோது கண்முன் பல பிரச்சினைகள் தோன்றுகின்றன. அதனைத் தீர்க்க அடிப்படைத் தேவை பெரும்பாலும் பணமாகவே இருக்கும். அப்பணத்தை ஈட்டுவதற்கு நாம் வேலையைத் தேடி அலைகிறோம். குறைந்த வருவாய்க்கு அதிகமான உடல் உழைப்பை இழக்கிறோம். ஆனால் கைத்தொழில் ஒன்றினை அறிந்திருந்தால், நாம் பலருக்கு கொடுக்கும் நிலையினைப் பெறலாம்.

நமது இன்றியமையாத தேவைகள் உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்றும் ஆகும். இத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் பல வேலைகளை நாம் செய்யலாம்.
நெசவு நெய்தல், செக்காட்டுதல், தீப்பெட்டி செய்தல், காகிதம் தயாரித்தல், கூடை முடைதல், பாய் பின்னுதல், பொம்மை செய்தல், கயிறு திரித்தல், மரவேலை செய்தல், ஓவியங்கள் வரைதல், சிற்பங்கள் செதுக்குதல் போன்ற தொழில்கள் கைத்தொழில்கள் ஆகும். இவற்றுள் ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொள்வது அவசியமாகும்.

இன்றைய நவீன யுகத்தில் பல்வேறு வகையான வேலைக்குச் சென்றாலும் கைத்தொழில் மூலம் சிறு வருவாய் ஈட்டினாலும் நமக்கு இலாபம்தான். இரண்டாம் உலகப்போரில் பெரும் பாதிப்புக்குள்ளான நாடு ஜப்பான். ஆனால் இன்று உலக அரங்கில் பணக்கார நாடுகள் பட்டியலில் அங்கம் வகித்துக் கொண்டு இருக்கிறது.

இதற்குக் காரணம் அந்நாட்டு மக்களின் கடும் உழைப்புதான். சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரியதாய் வளங்கள் இல்லையென்றாலும் அவர்களுடைய கைத்தொழிலினால் நாட்டை முன்னிலையில் வைத்துள்ளனர் ஜப்பானியர். ஒவ்வொருவரும் பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ அவரவர் அறிந்த கைத்தொழிலைச் செய்து நாட்டை முன்னேற்றலாம்.

கைத்தொழில் என்றதும் நான் நூலகத்தில் படித்த ஒரு கதை என் நினைவில் வருகிறது. ஒரு மன்னர் தன் மகன் அதாவது இளவரசன் முகவாட்டத்துடன் இருப்பதைப் பார்த்தார். இளவரசனை அழைத்து முகவாட்டத்திற்கான காரணத்தைக் கேட்டார். இளவரசனும் முதலில் தயங்கினார். பிறகு, தான் மாடு மேய்க்கும் பெண்ணொருத்தியை விரும்புவதாகவும், அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

மன்னன் “நாமோ நாட்டிற்கே அரசர், போயும் போயும் ஓர் ஏழைக் குடும்பத்து பெண்ணை எப்படி திருமணம் செய்வது?” என்று கேட்டார். இளவரசர் அவருடைய எண்ணத்தில் உறுதியாக இருந்ததால் அந்தப் பெண் வீட்டிற்குச் சென்று பெண் கேட்டார். அப்பெண்ணின் தந்தை சம்மதித்தார். ஆனால் பெண் சம்மதிக்கவில்லை . காரணம் கேட்டார்.

அதற்கு அப்பெண் “இளவரசருக்கு என்ன வேலை தெரியும்? வேலை செய்யத் தெரியாத ஒருவரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” என்று கூறி விட்டாள். இதனையறிந்த இளவரசர் பாய் பின்னும் தொழிலைக் கற்றுக் கொண்டார். திருமணமும் நடந்தது.

சில மாதங்களுக்குப் பிறகு இளவரசர் வேட்டையாடச் சென்றார். காட்டுவாசிகளிடம் சிறைபட்டார். என்ன செய்வதென்று தெரியவில்லை. தப்பிக்க வழி தேடினார். பிறகு காட்டுவாசிகளிடம் “கோரைப் புல் கொண்டு வந்து கொடுங்கள். நான் பாய் பின்னிக் கொடுக்கிறேன். நகரத்தில் கொண்டு போய் மன்னரிடம் விற்றுவிடுங்கள். உங்களுக்குத் தேவையான பொருள்கள் வாங்குவதற்குப் பணம் கிடைக்கும் என்றார்.

அவர்களும் அதேபோல் செய்தனர். இளவரசர் பின்னிக் கொடுத்த பாயில், தான் காட்டுவாசிகளின் சிறையில் இருப்பதைப் படமாக வரைந்திருந்தார். படத்தின் குறிப்பை அறிந்து மன்னர் தங்கள் படையுடன் சென்று இளவரசரை மீட்டார். இளவரசர் அரண்மனைக்கு வந்ததும் தன் மனைவிக்கு நன்றி கூறினார்.

இக்கதையில் இளவரசன் தன்னைக் காப்பாற்றி கொள்வதற்கு உதவியது அவரறிந்த கைத்தொழில்தான். எனவே, கைத்தொழில் நம்மை வளப்படுத்தும்; முன்னேற்றும் என்று கூறி வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.5 தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்

Question 2.
இதயம் கவரும் இசை
Answer:
அவையோர்க்கு வணக்கம்!
நான் இதயம் கவரும் இசை என்ற தலைப்பில் பேசவிருக்கின்றேன். இசைக்கு மயங்காதவர் உண்டோ ? ஏன்? பாம்புகூட மகுடி இசைக்கு ஆடும் அல்லவா? அப்படி இருக்க நாம் மட்டும் விதிவிலக்கா?

இசை என்றாலே இசைய வைப்பது என்பது பொருள். அதனால்தான் நாம் அனைவருக்கும் இசைக்கு இசைந்து விட்டோம். இசை பல்வேறு பயன்களைத் தருகிறது. இன்றைய அறிவியல் வளர்ச்சியின் மூலம் இசையானது அனைவரையும் சென்றடைகின்றது. வானொலி, தொலைக்காட்சி, இசைத்தட்டுகள், செல்பேசி என அனைத்து ஊடகங்களின் வாயிலாக இசை நம்மை மகிழ்விக்கிறது.

தாய், குழந்தையைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுப் பாடிய காலம் போய் செல்பேசியில் அதற்கென்று ஒரு செயலி. அதனைப் போட்டுவிட்டால் குழந்தை தூங்கும். பல வீட்டில் குழந்தைகளை உண்ணச் செய்வதற்கே செல்பேசி பாட்டுதான் பயன்படுகிறது. அப்பாடலில் இசையோ, குரலொலியோ குழந்தைகளை மயங்கச் செய்கிறது.

இசையானது நோய் தீர்க்கும் ஒரு மருந்து என்று கூறினால் அது மிகையாகாது. ஓர் ஆராய்ச்சியாளர் தனது ஆராய்ச்சியின் முடிவாக – இசை உறவுகளை மேம்படுத்தும், மகிழ்ச்சியைத் தரும், நோய்களைக் குணப்படுத்தும், படைப்பாற்றலை ஊக்குவிக்கும், உடலுக்கு வலிமையையும் ஆற்றலையும் தரும் என்று விவரித்துள்ளார்.

வாழ்க்கைச் சுழற்சியில் நாம் அனைவரும் மன அழுத்தம் மிக்கவர்களாக இருக்கிறோம். இதனைப் போக்க நமக்கு இசை உதவும். இந்த இசைக்கு மொழி தேவையில்லை. இசையை நாம் உணர்ந்தால் அது நமக்கு இன்பத்தைத் தரும். ‘இசை கேட்பது நல்லது. அதனை வாசிப்பது அதைவிட நல்லது’ என்பது உளவியல் நிபுணர்களின் கூற்று.

இசை மனிதனின் ஆன்மா, மனம், உடல் ஆகியவற்றுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கிறது. இசையால் கோபம், சோகம், வீரம், நம்பிக்கை, நகைச்சுவை போன்ற உணர்வுகளை உருவாக்க முடியும். உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் மனமும் உடலும் ஒரே நிலையில் இருக்க வேண்டும். இந்நிலை பாதிக்கப்படும் போதுதான் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இசை கேட்பவரின் மனதை ஈர்ந்து அவரை – தன்வயப்படுத்துகிறது. இதுவே இசையின் இயல்பாகும்.

இசைக்கு வசமாகாத இதயம் இல்லை. இசை, மனத்தொய்வு ஏற்படும்போது நமக்கு உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. மென்மையான இசைநம்மனதுக்கு அமைதியைத் தருகிறது. – இசை மனக்கட்டுப்பாட்டைத் தரவல்லது. விலங்குகளும் பறவைகளும் கூட இசையால் கவரப்படுகின்றன. கிருஷ்ண பரமாத்மாவின் குழலோசைக்குப் பறவைகளும் பசுக்களும் கட்டுண்டு கிடந்ததைப் புராணங்கள் கூறுகின்றன. ஆகையால் இசை நம் அனைவரின் இதயங்களையும் கவரும் என்பதில் ஐயமில்லை என்று கூறி விடை பெறுகிறேன்.

சொல்லக் கேட்டு எழுதுக

முல்லை நில மக்களாகிய ஆயர்கள் குழல் ஊதுவதில் வல்லவர்கள். இதனைச் சம்பந்தர் திருப்பதிகத்தில் அமைந்த நிகழ்ச்சி ஒன்று விளங்குகிறது. திருவண்ணாமலைச் சாரலில் ஆயர் ஒருவர் ஆநிரைகளையும் எருமையினங்களையும் மேய்த்துக் கொண்டிருந்தார். மாலையில் அவற்றையெல்லாம் ஒன்று திரட்டினார்.

அப்போது எருமை ஒன்று காணாமல் ‘ போனதை அறிந்தார். தம் கையிலிருந்த குழலை எடுத்து இனிய இசையை எழுப்பினார். இன்னிசை கேட்ட எருமை அவரை வந்தடைந்தது. இவ்வாறு ஆயர்களின் இசைத் திறத்தைத் திருப்பதிகம் விளக்குகிறது.

கோடிட்ட இடங்களில் பொருத்தமான சொல்லுருபுகளை இட்டு நிரப்புக

(கொண்டு, இருந்து, உடைய, காட்டிலும், ஆக, நின்று, உடன், விட, பொருட்டு)

1. இடி ………….. மழை வந்தது.
2. மலர்விழி தேர்வின் …………….. ஆயத்தமானாள்.
3. அருவி மலையில் …………… வீழ்ந்தது.
4. தமிழைக் ……………. சுவையான மொழியுண்டோ!
5. யாழ், தமிழர் …………….. இசைக் கருவிகளுள் ஒன்று.
Answer:
1. உடன்
2. பொருட்டு
3. இருந்து
4. காட்டிலும்
5. உடைய

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.5 தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்

பின்வரும் இசைக்கருவிகளின் பெயர்களை அகரவரிசைப்படுத்துக

படகம், தவில், கணப்பறை, பேரியாழ், உறுமி, உடுக்கை, தவண்டை , பிடில், நாகசுரம், மகுடி.

அகரவரிசை :
1. உடுக்கை
2. உறுமி
3. கணப்பாறை
4. தவண்டை
5. தவில்
6. நாகசுரம் .
7. படகம்
8. பிடில்
9. பேரியாழ்
10. மகுடி

அறிந்து பயன்படுத்துவோம்

இணைச்சொற்கள்
தொடர்களில் சில சொற்கள் இணையாக இடம்பெற்று, பொருளுக்கு வலுவூட்டும். அவற்றை இணைச்சொற்கள் என்கிறோம்.
(எ.கா.) தாய் குழந்தையைப் பாராட்டிச் சீராட்டி வளர்த்தாள்.
இணைச் சொற்கள் மூன்று வகைப்படும். அவை,

1. நேரிணை, 2. எதிரிணை, 3. செறியிணை

அ) ஒரே பொருளைத் தரும் இணை நேரிணை எனப்படும்.
(எ.கா.) சீரும் சிறப்பும், பேரும் புகழும்.

ஆ) எதிரெதிர்ப் பொருளைத் தரும் இணை எதிரிணை எனப்படும்.
(எ.கா.) இரவுபகல், உயர்வுதாழ்வு

இ) பொருளின் செறிவைக் குறித்து வருவன செறியிணை எனப்படும்.
(எ.கா.) பச்சைப்பசேல், வெள்ளைவெளேர்.

பின்வரும் இணைச் சொற்களை வகைப்படுத்துக.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.5 தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள் 4

சரியான இணைச் சொற்களை இட்டு நிரப்புக

(மேடுபள்ளம், ஈடுஇணை, கல்விகேள்வி, போற்றிப்புகழப்பட, வாழ்வுதாழ்வு, ஆடி அசைந்து)

1. சான்றோர் எனப்படுபவர் …………….. களில் சிறந்தவர் ஆவர்.
2. ஆற்று வெள்ளம் ……………… பாராமல் ஓடியது.
3. இசைக்கலைஞர்கள் ……………… வேண்டியவர்கள்.
4. தமிழ் இலக்கியங்களின் பெருமைக்கு ………………. இல்லை.
5.. திருவிழாவில் யானை வந்தது.
Answer:
1. கல்விகேள்வி
2. மேடுபள்ளம்
3. போற்றிப்புகழப்பட
4. வாழ்வுதாழ்வு
5. ஆடி அசைந்து

இருப்பிடச் சான்று வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பம் எழுதுக.

விடுநர் :
கவிதா ம.
எண். 15, முத்தம்மன் கோவில் தெரு,
சாய்நாதபுரம்,
வேலூர்.

பெறுநர் :
உயர்திரு வட்டாட்சியர் அவர்கள்,
வட்டாட்சியர் அலுவலகம்,
வேலூர்.
மதிப்பிற்குரிய ஐயா,

பொருள் : இருப்பிடச் சான்று வேண்டி.

வணக்கம். நான் மேலே குறிப்பிட்ட முகவரியில் பத்து ஆண்டுகளாகக் குடும்பத்துடன் இருக்கிறேன். நான் படிக்கும் பள்ளியில் என் இருப்பிடம் பற்றிய விவரத்தைக் கேட்கின்றனர். ஆதலால் நான் இம்முகவரியில்தான் வசிக்கிறேன் என்பதற்கான இருப்பிடச் சான்றிதழ் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!
இணைப்பு :
1. ‘குடும்ப அட்டை நகல்

இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள
கவிதா ம.

உறைமேல் முகவரி
அஞ்சல் தலை
பெறுநர்
உயர்திரு வட்டாட்சியர் அலுவலகம்,
வட்டாட்சியர் அலுவலகம்,
வேலூர்.

மொழியோடு விளையாடு

குறுக்கெழுத்துப் புதிர்.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.5 தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள் 2
இடமிருந்து வலம்
1. முதற்கருவி எனப் பெயர் பெற்றது.
2. யாழிலிருந்து உருவான பிற்காலக் கருவி
7. இயற்கைக் கருவி
12. விலங்கின் உறுப்பைப் பெயராகக் கொண்ட

வலமிருந்து இடம்
4. வட்டமான மணி போன்ற கருவி
8. ஐந்து வாய்களைக் கொண்ட கருவி
9. இசைக்கருவிகளை இசைத்துப் பாடல் பாடுவோர்

மேலிருந்து கீழ்
1. 19 நரம்புகளைக் கொண்ட யாழ்
3. ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுபவை …………க் கருவி
5. சிறியவகை உடுக்கை.
6. பறை ஒரு ……………. கருவி

கீழிருந்து மேல்
8. மூங்கிலால் செய்யப்படும் காற்றுக் கருவி
10. வீணையில் உள்ள நரம்புகளின் எண்ணிக்கை.
11. திருமணத்தின் போது கொட்டும் முரசு.
விடைகள்
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.5 தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள் 3

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள்…
1. கைவினைக்கலைகளுள் ஒன்றைக் கற்றுக் கொள்வேன்.
2. இசைக் கலையை வளர்த்த சான்றார்களைப் பற்றி அறிந்து போற்றுவேன்.

கலைச்சொல் அறிவோம்

1. கைவினைப் பொருள்கள் – Crafts
2. புல்லாங்குழல் Flute
3. முரசு – Drum
4. கூடைமுடைதல் – Basketry
5. பின்னுதல் – Knitting
6. கொம்பு – Horn
7. கைவினைஞர் – Artisan
8. சடங்கு – Rite

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.5 தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்

கூடுதல் வினாக்கள்

நிரப்புக.

1. சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது ……………….. அல்லது …………….. எனப்படும்.
2. தொகைநிலைத் தொடர் ………………. வகைப்படும்.
3. இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபு மறைந்து வந்து பொருள் தருவது …………………..
4. காலம் கரந்த பெயரெச்சம் …………………….
5. உவம உருபு மறைந்து வருவது …………………
6. தொகாநிலைத் தொடர் ……………….. வகைப்படும்.
7. இடைச்சொல் வெளிப்படையாக வருவது …………… தொடர்.
8. ‘நனி நின்று’ என்பது ……………… தொடர்.
9. ‘நன்று நன்று நன்று’ ……………… தொடர்.
10. வந்த மாணவன் ……………….. தொடர்.
11. ‘புழு பூச்சி’ ……………………..
Answer:
1. சொற்றொடர், தொடர்
2. ஆறு
3. வேற்றுமைத்தொகை
4. வினைத்தொகை
5. உவமைத்தொகை
6. ஒன்பது
7. இடைச்சொல்
8. உரிச்சொல்
9. அடுக்குத்
10. பெயரெச்சத்
11. உம்மைத்தொகை

விடையளி :

Question 1.
சொற்றொடர் என்றால் என்ன?
Answer:
சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது சொற்றொடர் அல்லது தொடர் எனப்படும்.

Question 2.
வேற்றுமைத்தொகை – விளக்குக.
Answer:
இரு சொற்களுக்கிடையில் வேற்றுமை உருபு மறைந்து வந்து பொருள் தருவது வேற்றுமைத்தொகை எனப்படும்.
எ.கா. திருவாசகம் படித்தான் – (ஐ) இரண்டாம் வேற்றுமைத் தொகை.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.5 தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்

Question 3.
வினைத்தொகையை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
Answer:
காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம் வினைத்தொகை எனப்படும்.
எ.கா. ஆடுகொடி (ஆடிய கொடி, ஆடுகின்ற கொடி, ஆடும் கொடி)

Question 4.
பண்புத்தொகையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answer:
பண்புப் பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையே ஆன, ஆகிய என்னும் பண்புருபுகள் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.
எ.கா. வெண்ணிலவு (வெண்மையான நிலவு)

Question 5.
இரு பெயரொட்டுப் பண்புத் தொகை – விளக்குக.
Answer:
சிறப்புப் பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நிற்க, இடையில் ஆகிய என்றும் பண்புருபு மறைந்து வருவது இருபெயரொட்டுப் பண்புத் தொகை எனப்படும்.
எ.கா. பனை மரம் (மரம் – பொதுப் பெயர், பனை – சிறப்புப் பெயர்)

Question 6.
உவமைத்தொகை – விளக்குக.
Answer:
உவமைக்கும் உவமேயத்துக்கும் இடையில் போல, போன்ற, நிகர, அன்ன முதலிய உவம உருபுகளுள் ஒன்று மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.
எ.கா. மலர்விழி (மலர் போன்ற விழி)

Question 7.
தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
தொகாநிலைத் தொடர் ஒன்பது வகைப்படும். அவை
(i) எழுவாய்த் தொடர்
(ii) விளித் தொடர்
(iii) வினைமுற்றுத் தொடர்
(iv) பெயரெச்சத் தொடர்
(v) வினையெச்சத் தொடர்
(vi) வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
(vii) இடைச்சொல் தொடர்
(viii) உரிச்சொல் தொடர்
(ix) அடுக்குத் தொடர்

Question 8.
எழுவாய்த் தொடர் விளக்குக.
Answer:
எழுவாயைத் தொடர்ந்து பயனிலை அமைந்து இடையில் எச்சொல்லும் மறையாமல் வருவது எழுவாய்த் தொடர் ஆகும். எ.கா, மல்லிகை மலர்ந்தது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.5 தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்

Question 9.
வினையெச்சத் தொடர் – விளக்குக.
Answer:
வினையெச்சச் சொல் வினைமுற்றுச் சொல் கொண்டு முடிந்து இடையில்  எச்சொல்லும் மறையாமல் வருவது வினையெச்சத் தொடர் ஆகும். எ.கா. தேடிப் பார்த்தேன்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.4 தமிழர் இசைக்கருவிகள்

Students can Download 8th Tamil Chapter 5.4 தமிழர் இசைக்கருவிகள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.4 தமிழர் இசைக்கருவிகள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.4 தமிழர் இசைக்கருவிகள்

Question 1.
இசைக்கருவிகளின் படங்களைத் திரட்டிப் படத்தொகுப்பு உருவாக்குக.
Answer:
குடமுழா
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.4 தமிழர் இசைக்கருவிகள் 1

உடுக்கை
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.4 தமிழர் இசைக்கருவிகள் 2

மத்தளம்
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.4 தமிழர் இசைக்கருவிகள் 3

வீணை
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.4 தமிழர் இசைக்கருவிகள் 4

Question 2.
இக்கால இசைக்கருவிகள் குறித்துக் கலைக்களஞ்சிய வடிவில் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
கித்தார் அல்லது கிட்டார் :
இது அதிர்கம்பிகள் கொண்ட ஒரு , நரம்பு இசைக்கருவி ஆகும். கித்தார் மிகவும் பிரபலமான இசைக்கருவி. இதில் உள்ள வெவ்வேறான தடிமன் கொண்ட நரம்புகளை மீட்டுவதன் மூலம் இசை பிறக்கும். பொதுவான கித்தார் ஆறு தந்திகள் உடையது. அடித்தொனிக் கித்தார்கள் நான்கு தந்திகளைக் கொண்டவை.

பியானோ – கின்னரப்பெட்டி :
பியானோ என்பது வதிப்பலகையால் வாசிக்கப்படும் இசைக்கருவி. பெரிதாக மேற்கத்திய இசையில் தனித்து வாசிப்பதற்கும் அறையிசையில் வாசிப்பதற்கும், துணைக் கருவியாக வாசிப்பதற்குமே பயன்படுத்தப்படுகிறது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.4 தமிழர் இசைக்கருவிகள்

தபேலா (கைம்முரசு இணை) :
இது இந்துஸ்தானி இசையில் மிக முக்கியமான தாள வாத்தியம். தற்போது தென்னிந்தியாவில் பக்திப் பாடல், மெல்லிசைப் பாடல், பஜனைப் பாடல் ஆகியவற்றில் கைம்முரசு இணை பக்கவாத்தியமாக வாசிக்கப்படுகிறது.

மதிப்பீடு

Question 1.
காற்றுக் கருவிகள் குறித்த செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
முன்னுரை :
இசைக்கு மயங்காதவர் எவருமில்லை . இதனை அனைவரும் அறிவர். அந்த இசையின் இனிமைக்குத் துணை செய்பவை இசைக்கருவிகள். இவை தோல் கருவி, நரம்புக் கருவி, காற்றுக்கருவி, கஞ்சக்கருவி என நான்கு வகைப்படும். இவற்றுள் காற்றுக்கருவியைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

குழல் :
காடுகளில் வளரும் மூங்கில்களில் வண்டுகள் ஏற்படுத்திய துளைகள் வழியாக காற்று வீசும் போது. இனிய இசை எழும்பும். இதனால் மகிழ்ந்த நம் முன்னோர் வேய்ங்குழல், புல்லாங்குழல் போன்றவற்றை உருவாக்கினர். குழல் ஏழு சுரங்களை உண்டாக்குவதற்கு உரிய ஏழு துளைகளை உடையது. இது சுமார் இருபது விரல் நீளம் உடையதாக இருக்கும்.

மூங்கில் மட்டுமன்றிச் சந்தனம், செங்காலி, கருங்காலி ஆகிய மரங்களாலும் குழல்கள் செய்யப்படுகின்றன. கொன்றைக்குழல், முல்லைக்குழல், ஆம்பல் குழல் எனப் பலவகையான குழல்கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. குழல் இனிது யாழ்இனிது என்பர்தம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர். (திருக்குறள்)

கொம்பு :
மனிதர்கள் தொடக்க காலத்தில் இறந்த மாடுகளின் கொம்புகளைப் பயன்படுத்தி ஒலி எழுப்பினர். அதுவே பிற்காலத்தில் கொம்பு என்னும் இசைக்கருவிக்கு அடிப்படையாயிற்று. இக்காலத்தில் பித்தளை அல்லது வெண்கலத்தில் கொம்புகள் செய்யப்படுகின்றன. இதனை வேடர் வேட்டையின் போது ஊதுவர்.

கழனி மேடுகளில் காவல் புரிபவர்கள் விலங்குகள், கள்வரை விரட்டவும் மற்ற காவல்காரர்களை விழித்திருக்கச் செய்யவும் கொம்பினை ஊதுவர். ஊதுகொம்பு, எக்காளம், சிங்கநாதம், துத்தரி போன்ற பலவகையான கொம்புகள் இக்காலத்தில் திருவிழா ஊர்வலங்களின் போது இசைக்கப்படுகின்றன.

சங்கு :
இஃது ஓர் இயற்கைக் கருவி. கடலில் இருந்து எடுக்கப்படுவது. வலமாகச் சுழிந்து இருக்கும் சங்கை வலம்புரிச்சங்கு என்பர். சங்கின் ஒலியைச் சங்கநாதம் என்பர். இலக்கியங்களில் இதனைப் பணிலம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். கோயில் திருவிழாக்களின் போதும் சமயச் சடங்குகளின்போதும் சங்கு முழங்கும் வழக்கம் உண்டு.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.4 தமிழர் இசைக்கருவிகள்

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய். – என்று திருப்பாவை கூறுகிறது.

முடிவுரை :
இவ்வாறு இசைக் கருவிகள் நம் வாழ்வோடு இணைந்துள்ளன என்பதை உணர்ந்து மகிழலாம்.