Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.3 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

Students can Download 8th Tamil Chapter 5.3 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.3 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.3 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

Question 1.
உங்கள் பகுதியில் கிடைக்கும் களிமண், பனையோலை போன்ற பொருள்களைப் பயன்படுத்திக் கைவினைப்பொருள்களைச் செய்து காட்சிப்படுத்துக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

Question 2.
பனையோலையால், செய்யப்படும் பல்வேறு கைவினைப்பொருள்களின் படங்களைச் சேகரித்துப் படத்தொகுப்பு உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.3 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் 1

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை …………………
அ) கல்வெட்டுகள்
ஆ) செப்பேடுகள்
இ) பனையோலைகள்
ஈ) மண்பாண்டங்கள்
Answer:
இ) பனையோலைகள்

Question 2.
பானை ……………….. ஒரு சிறந்த கலையாகும்.
அ) செய்தல்
ஆ) வனைதல்
இ) முடைதல்
ஈ) சுடுதல்
Answer:
ஆ) வனைதல்

Question 3.
‘மட்டுமல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………
அ) மட்டு + மல்ல
ஆ) மட்டம் + அல்ல
இ) மட்டு + அல்ல
ஈ) மட்டும் + அல்ல
Answer:
ஈ) மட்டும் + அல்ல

Question 4.
கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………….
அ) கயிற்றுக்கட்டில்
ஆ) கயிர்க்க ட்டில்
இ) கயிறுக்கட்டில்
ஈ) கயிற்றுகட்டில்
Answer:
அ) கயிற்றுக்கட்டில்

பின்வரும் சொற்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக

1. முழுவதும் – தொழிலாளி நாள் முழுவதும் உழைப்பார்.

2. மட்டுமல்லாமல் – புயல் காற்று வீசியதில் செடிகொடிகள் மட்டுமல்லாமல் மரங்களும் வீழ்ந்தன.

3. அழகுக்காக – முகத்தின் அழகுக்காக இயற்கைக் களிம்புகளை மட்டும் பயன்படுத்தலாம்.

4. முன்பெல்லாம் – மாணவர்களுக்கு முன்பெல்லாம் ஓடியாடி விளையாடுவதற்கு நேரம் இருந்தது.

குறுவினா

Question 1.
எவற்றையெல்லாம் கைவினைக்கலைகள் எனக் கூறுகிறோம்?
Answer:
கைவினைக் கலைகள் :
(i) மண்பாண்டங்கள் செய்தல்.
(ii) மூங்கில் கொண்டு பொருள்கள் செய்தல்.
(iii) பனையோலையில் பொருள்கள் செய்தல்.
(iv) பிரம்பினால் பொருள்கள் செய்தல்.
(v) மண் பொம்மைகள் செய்தல்.
(vi) – மரபொம்மைகள் செய்தல்.
(vii) காகிதப் பொம்மைகள் செய்தல்.
(viii) தஞ்சாவூர்த்தட்டு செய்தல்.
(ix) சந்தன மாலையும், ஏலக்காய் மாலையும் செய்தல்.
(x) மாட்டுக்கொம்பு, சங்கு, கிளிஞ்சல் போன்றவற்றால் பொருள்களை உருவாக்குதல்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.3 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

Question 2.
மண்பாண்டம், சுடுமண் சிற்பம் – ஒப்பிடுக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.3 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் 2

Question 3.
பனையோலையால் உருவாக்கப்படும் பொருள்கள் யாவை?
Answer:
பனையோலையால் உருவாக்கப்படும் பொருள்கள் :
(i) குழந்தைகளுக்கான கிலுகிலுப்பை
(ii) பொம்மைகள்
(iii) பொருள்களை வைத்துக்கொள்ள உதவும் சிறிய கொட்டான்
(iv) பெரிய கூடை
(v) சுளகு
(vi) விசிறி
(vii) தொப்பி
(vii) ஓலைப்பாய்

சிறுவினா

Question 1.
பிரம்பினால் பொருள்கள் செய்யும் முறையைக் கூறுக.
Answer:
(i) முதலில் பிரம்பினை நெருப்பில் காட்டிச் சூடுபடுத்துவர்.
(ii) சூடான பிரம்பை நட்டு வைத்திருக்கும் இரண்டு கடப்பாரைகளுக்கு இடையே செலுத்தி – வளைப்பர்.
(iii) அது வேண்டிய வடிவத்தில் கம்பிபோல வளையும்.
(iv) பின்னர் அதனைத் தண்ணீரில் நனைத்துவிட்டால் அப்படியே நிலைத்துவிடும்.
(v) பிறகு அவற்றை இணைத்துச் சிறு ஆணிகளை அறைந்தும், சிறு பிரம்பு இழைகளைக் கொண்டு கட்டியும் தேவையான பொருள்களாக மாற்றுவர்.

Question 2.
மூங்கிலால் செய்யப்படும் பொருள்கள் குறித்து எழுதுக.
Answer:
(i) மூங்கிலைக் கொண்டு பலவகையான கைவினைப் பொருள்கள் செய்யப்படுகின்றன.

(ii) மட்டக்கூடை, தட்டுக்கூடை, கொட்டுக்கூடை, முறம், ஏணி, சதுரத்தட்டி, கூரைத்தட்டி, தெருக்கூட்டும் துடைப்பம், மாடுகளுக்கான மூஞ்சிப்பெட்டி, பழக்கூடை, பூக்கூடை, பூத்தட்டு, கட்டில், புல்லாங்குழல், புட்டுக் குழாய், கால்நடைகளுக்கு மருந்து புகட்டும் குழாய் எனப் பல பொருள்கள் மூங்கில் மூலம் உருவாகின்றன.

(iii) பிறந்த குழந்தைக்கு விளையாட்டுப் பொருள் முதல் இறந்தவரை எடுத்துச்செல்லும் பாடை வரை மூங்கிலால் செய்யப்படுகின்றன.

(iv) திருமணத்தின் போது துணிகள், பழங்கள், பலகாரங்களை வைத்துக் கொடுப்பதற்குச் சீர்க்கூடைகளாகப் பயன்படுகின்றது.

(v) கடவுள் வழிபாட்டின் போது வெற்றிலை, பாக்கு, பூ, பழம் போன்றவற்றை முறத்தில் வைத்துப் படைப்பர். அவையெல்லாம் இப்போது வழக்கொழிந்து விட்டன.

நெடுவினா

Question 1.
தமிழகக் கைவினைக் கலைகளைப் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
முன்னுரை :
அன்றாடப் பயன்பாட்டுக்காக அழகிய பொருள்களைத் தொழில் முறையில் உருவாக்கும் கலையைக் கைவினைக்கலை எனலாம். மண்பாண்டம்

செய்தல் :
குளங்கள், ஆற்றங்கரை, வயல்வெளிகள் ஆகிய இடங்களில் கிடைக்கும் களிமண்ணைப் பயன்படுத்தி மண்பாண்டங்கள் செய்யப்படுகின்றன. இப்பாண்டங்கள் சமையல் செய்வதற்கும், தண்ணீர் வைப்பதற்கும் பயன்படுகின்றன.

சுடுமண் சிற்பங்கள் :
மண்பாண்டங்களைப் போன்றே களிமண்ணால் செய்யப்பட்டுச் சூளையில் சுட்டு எடுக்கப்படுபவை சுடுமண் சிற்பங்கள் ஆகும். இதில் விலங்குகள், பறவைகள், பொம்மைகள், அலங்கார வடிவங்கள் எனப் பலவகையான சிற்பங்கள் செய்யப்படுகின்றன.

மூங்கில்கலை :
மூங்கிலைக் கொண்டு மட்டக்கூட்டை, தட்டுக் கூடை, கொட்டுக்கூடை, முறம், ஏணி, சதுரத்தட்டி, கூரைத் தட்டி, தெருக்கூட்டும் துடைப்பம், மாடுகளுக்கான மூஞ்சிப்பெட்டி, பழக்கூடை, பூக்கூடை, பூத்தட்டு, கட்டில், புல்லாங்குழல், புட்டுக்குழாய், கால்நடைகளுக்கு மருந்து புகட்டும் குழாய் எனப் பல பொருள்கள் செய்யப்படுகின்றன.

கோரைப்பாய் :
கோரைப்புல்லைப் பயன்படுத்தி பந்திப்பாய், தடுக்குப்பாய், திண்ணைப்பாய், பட்டுப்பாய், தொழுகைப்பாய் எனப் பலவகையான பாய்கள் செய்யப்படுகின்றன. பாய்களில் மயில், பூக்கள், குத்துவிளக்கு, வழிபாட்டுச் சின்னங்கள் போன்றவையும் இடம் பெறுகின்றன.

பனையோலை :
பனையோலைகளைப் பயன்படுத்திக் கிலுகிலுப்பை, பொம்மைகள், பொருள்களை வைத்துக் கொள்ள உதவும் சிறிய கொட்டான், பெரிய கூடை, சுளகு, விசிறி, தொப்பி, ஓலைப்பாய் போன்றவை செய்யப்படுகின்றன. பனைமட்டை நாரிலிருந்து கயிறு, கட்டில், கூடை போன்றவை செய்யப்படுகின்றன. பிரம்புக்கலை :
கட்டில், ஊஞ்சல், நாற்காலி, மேசை, பூக்கூடை, பழக்கூடை, இடியாப்பத்தட்டு, அருச்சனைத்தட்டு, வெற்றிலைப் பெட்டி எனப் பல பொருள்கள் பிரம்பினால் செய்யப்படுகின்றன.

பலவகைப் பொருள்கள் :
மண் பொம்மைகள், மரப்பொம்மைகள் செய்தல், காகிதப் பொம்மைகள் செய்தல், தஞ்சாவூர்த்தட்டு செய்தல், சந்தனமாலையும் ஏலக்காய் மாலையும் செய்தல், மாட்டுக் கொம்பினால் கலைப் பொருள்கள் செய்தல், சங்கு, கிளிஞ்சல் போன்றவற்றால் பொருள்களை உருவாக்குதல்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.3 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

முடிவுரை :
கைவினைக் கலை அழியாமல் இருக்க நாம் அப்பொருள்களை வாங்கிப் பயன்படுத்துவதன் மூலம் அவற்றை உருவாக்கும் கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும்.

சிந்தனை வினா

Question 1.
கைவினைக் கலைகளுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இடையேயுள்ள தொடர்பு குறித்து எழுதுக.
Answer:
(i) தமிழகக் கைவினைப் பொருட்கள் அனைத்தும் இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்பட்டவை.

(ii) பயன்பாட்டிற்குப் பின்னர் இவற்றை மண்ணில் போட்டாலும் நிலவளம் பாதிக்காது. . ஏனெனில் இவை மட்கும் தன்மையுடையவை.

(iii) இப்பொருட்களை செய்வதற்கு எவ்வித இரசாயனப் பொருள்களையும் * பயன்படுத்துவில்லை. ஆகையால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. .

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. சிந்து சமவெளி அகழாய்வில் கிடைத்தவை ……………….
2. ஆதிச்சநல்லூரில் கிடைத்தவை …………………. தாழிகள்.
3. செம்பியன் கண்டியூரில் கண்டுபிடிக்கப்பட்டவை ………………….
4. கீழடியில் கிடைத்தவை ……………. பொருள்கள்.
5. பானை செய்யும் சக்கரம் ……………. எனப்படும்.
6. பானை செய்தலைப் ……………….. என்று சொல்வது மரபு.
7. மண்பாண்டங்களில் வைத்த தண்ணீர் ……………… இருக்கும்.
8. மண்பாண்டக்கலையின் வளர்ச்சி நிலை …………………..
9. வேண்டுதல் நிறைவேறினால் வைக்கப்படும் சிற்பம் ……………………
10. ‘கூம்பொடு மீப்பாய் களையாது’ என்னும் பாடல் அடி இடம் பெற்றுள்ள நூல் ………………..
11. பிரம்பு …………… வகையைச் சேர்ந்த தாவரம்.
Answer:
1. பானை ஓடுகள்
2. முதுமக்கள்
3. மண்கலங்கள்
4. சுடுமண்
5. திருவை
6. பானை வனைதல்
7. குளிர்ச்சியாக
8. சுடுமண் சிற்பக்கலை
9. குதிரைச் சிற்பம்
10. புறநானூறு
11. கொடி

குறுவினா :

Question 1.
களிமண்ணால் செய்யப்பட்ட பொருள்கள் யாவை?
Answer:
குடம், தோண்டி, கலயம், கடம், மூடி, உழக்கு, அகல், உண்டியல், அடுப்பு, தொட்டி.

Question 2.
களிமண் எங்கெங்குக் கிடைக்கும்?
Answer:
களிமண் குளங்கள், ஆற்றங்கரைகள், வயல்வெளிகள் ஆகிய இடங்களில் கிடைக்கும்.

Question 3.
சுடுமண்ணில் செய்யப்படும் சிற்பங்கள் யாவை?
Answer:
மனித உருவங்கள், விலங்குகள், பறவைகள், பொம்மைகள், அலங்கார வடிவங்கள் எனப் பல வகையான சிற்பங்கள் சுடுமண்ணில் செய்யப்படுகின்றன.

Question 4.
பாயின் பயன்பாட்டினைப் பற்றிப் புறநானூறு கூறுவது யாது?
Answer:
முற்காலத்தில் பாய்மரக்கப்பல்களில் பாய் பயன்பட்டுள்ளது என்பதனைப் புறநானூறு ‘கூம்பொடு மீப்பாய் களையாது’ என்னும் அடியில் குறிப்பிடுகிறது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.3 நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

Question 5.
பாய்களில் எவ்வெவை இடம் பெறுகின்றன?
Answer:
(i) திருமணத்திற்குப் பயன்படுத்தும் பட்டுப்பாய்களில் மணமக்கள் பெயர்கள் இடம் பெற்றிருக்கும்.
(ii) குத்துவிளக்கு, மயில், பூக்கள், வழிபாட்டுச் சின்னங்கள் போன்றவைகளும் இடம் பெறும்.

Question 6.
பிரம்பில் செய்யப்படும் பொருள்கள் யாவை?
Answer:
கட்டில், ஊஞ்சல், நாற்காலி, மேசை, பூக்கூடை, பழக்கூடை, இடியாப்பத்தட்டு, அருச்சனைத் தட்டு, வெற்றிலைப்பெட்டி எனப் பலவகையான பொருள்கள் பிரம்பில் செய்யப்படுகின்றன.

சிறுவினா :

Question 1.
பலவகையான பாய்களின் பெயர்களை எழுதுக.
Answer:
(i) குழந்தைகளைப் படுக்கவைப்பது தடுக்குப்பாய்.
(ii) உட்கார்ந்து உண்ண உதவுவது பந்திப்பாய்.
(iii) உட்காரவும், படுக்கவும் உதவுவது திண்ணைப்பாய்.
(iv) திருமணத்துக்குப் பயன்படுத்துவது பட்டுப்பாய்.
(v) இசுலாமியர் தொழுகைக்குப் பயன்படுத்துவது தொழுகைப்பாய்.

Question 2.
நீ அறிந்த கைவினைக் கலைகள் யாவை?
Answer:
(i) மண் பொம்மைகள் செய்தல்
(ii) மரப் பொம்மைகள் செய்தல்
(ii) காகிதப் பொம்மைகள் செய்தல்
(iv) தஞ்சாவூர்த் தட்டு செய்தல்
(v) சந்தனமாலையும் ஏலக்காய் மாலையும் செய்தல்
(vi) மாட்டுக் கொம்பினால் கலைப்பொருள்கள் செய்தல்
(vii) சங்கு, கிளிஞ்சல் போன்றவற்றால் பொருள்களை உருவாக்குதல் ஆகியவையாகும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.2 பாடறித்து ஒழுகுதல்

Students can Download 8th Tamil Chapter 5.2 பாடறித்து ஒழுகுதல் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.2 பாடறித்து ஒழுகுதல்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.2 பாடறித்து ஒழுகுதல்

Question 1.
அன்பு, வாய்மை, நேர்மை போன்ற நற்பண்புகளின் பெயர்களைத் தொகுத்து பட்டியல் ஒன்று உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.2 பாடறித்து ஒழுகுதல் 1

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பசியால் வாடும் ……………. உணவளித்தல் நமது கடமை.
அ) பிரிந்தவர்க்கு
ஆ) அலந்தவர்க்கு
இ) சிறந்தவர்க்கு
ஈ) உயர்ந்தவருக்கு
Answer:
ஆ) அலந்தவர்க்கு

Question 2.
நம்மை …………..ப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
அ) இகழ்வாரை
ஆ) அகழ்வாரை
இ) புகழ்வாரை
ஈ) மகிழ்வாரை
Answer:
அ) இகழ்வாரை

Question 3.
மறைபொருளைக் காத்தல் …………….. எனப்படும்.
அ) சிறை
ஆ) அறை
இ) கறை
ஈ) நிறை
Answer:
ஈ) நிறை

Question 4.
‘பாடறிந்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..
அ) பாட் + அறிந்து
ஆ) பா + அறிந்து
இ) பாடு + அறிந்து
ஈ) பாட்டு + அறிந்து
Answer:
இ) பாடு + அறிந்து

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.2 பாடறித்து ஒழுகுதல்

Question 5.
முறை + எனப்படுவது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………..
அ) முறையப்படுவது
ஆ) முறையெனப்படுவது
இ) முறை எனப்படுவது
ஈ) முறைப்படுவது
Answer:
ஆ) முறையெனப்படுவது

குறுவினா

Question 1.
பண்பு, அன்பு ஆகியவை பற்றிக் கலித்தொகை கூறுவன யாவை?
Answer:
(i) பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.
(ii) அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல்.

Question 2.
முறை, பொறை என்பவற்றுக்குக் கலித்தொகை கூறும் விளக்கம் யாது?
Answer:
(i) நீதிமுறை எனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல்.
(ii) பொறுமை எனப்படுவது தம்மை இகழ்வாரையும் பொறுத்தல் ஆகும்.

சிறுவினா

Question 1.
நமக்கு இருக்க வேண்டிய பண்பு நலன்களாக நல்லந்துவனார் கூறும் விளக்கங்களைத் தொகுத்து எழுதுக.
Answer:
நமக்கு இருக்க வேண்டிய பண்பு நலன்களாக நல்லந்துவனார் கூறும் விளக்கங்கள்:
(i) இல்வாழ்வு என்பது வறியவர்களுக்கு உதவி செய்தல்.
(ii) பாதுகாத்தல் என்பது அன்புடையோரைப் பிரியாது வாழ்தல்.
(iii) பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.
(iv) அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல்.
(v) அறிவு எனப்படுவது அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல்.
(vi) செறிவு எனப்படுவது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்.
(vii) நிறை எனப்படுவது மறைபொருளைப் பிறர் அறியாமல் காத்தல்.
(viii) நீதிமுறை எனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல்.
(ix) பொறுமை எனப்படுவது தம்மை இகழ்வாரையும் பொறுத்தல். நாம் ஒவ்வொருவரும் இத்தகைய பண்புநலன்களைப் பின்பற்றி வாழவேண்டும்.

சிந்தனை வினா

Question 1.
வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பண்பு நலன்களாக நீங்கள் கருதுவன யாவை?
Answer:
வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பண்புநலன்கள் :
(i) பிறரிடம் அன்பு காட்டுதல்.
(ii) இனிமையாகப் பழகுதல்.
(iii) மறந்தும் கூட பிறருக்குக் கேடு நினையாமை
(iv) பெற்றோரை மதித்தல், பேணுதல்.
(v) தெய்வத்தை வழிபடுதல்.
(vi) ஒழுக்கத்துடன் வாழ்தல்.
(vii) பிற உயிர்களுக்குத் தீங்கு விளைவிக்காமை.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.2 பாடறித்து ஒழுகுதல்

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. அலந்தவர் – வறியவர்
2. செறாஅமை – வெறுக்காமை
3. நோன்றல் – பொறுத்தல்
4. போற்றார் – பகைவர்
5. கிளை – உறவினர்
6. பேதையார் – அறிவற்றவர்
7. மறாஅமை – மறவாமை
8. பொறை – பொறுமை

நிரப்புக :

1. கலித்தொகை …………….. நூல்களுள் ஒன்று.
2. கலிப்பா என்னும் பாவகையால் ஆன நூல் ………………
3. கலித்தொகை ………………. என்னும் பாவகையால் பாடப்பட்டது.
4. கலித்தொகையைத் தொகுத்தவர் ……………….
5. கலித்தொகையில் நல்லந்துவனார் இயற்றிய பிரிவு ……………….
6. சான்றோர் காட்டிய வழியில் நடத்தல் …………………
7. பாதுகாத்தல் என்பது ……………… பிரியாது வாழ்தல்.
8. வறியவர்களுக்கு உதவி செய்தல் என்பது ……………..
9. தம்மை இகழ்வாரையும் பொறுத்தல் …………….
10. அறிவு எனப்படுவது ………………. கூறும் சொற்களைப் பொறுத்துக் கொள்வது.
Answer:
1. எட்டுத்தொகை
2. கலித்தொகை
3. கலிப்பா
4. நல்லந்துவனார்
5. நெய்தற்கலி
6. பண்பு
7. அன்புடையோரைப்
8. இல்வாழ்வு
9. பொறுமை
10. அறிவற்றவர்

விடையளி :

Question 1.
கலித்தொகை – குறிப்பு எழுதுக.
Answer:
தொகுத்தவர் நல்லந்துவனார்
(i) கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
(ii) இது கலிப்பா என்னும் பாவகையால் ஆன நூல்.
(iii) நூற்று ஐம்பது பாடல்களைக் கொண்டது.
(iv) குறிஞ்சிக்கலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி, பாலைக்கலி என்னும் ஐந்து பிரிவுகளை உடையது.

Question 2.
நல்லந்துவனார் – குறிப்பு எழுதுக.
Answer:
(i) கலித்தொகையைத் தொகுத்தவர் நல்லந்துவனார்.
(ii) இவர் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்.
(iii) கலித்தொகையில் நெய்தற்கலிப் பாடல்களை இயற்றியுள்ளார்.

Question 3.
ஆற்றுதல், போற்றுதல் ஆகியவை பற்றிக் கலித்தொகை கூறுவன யாவை?
Answer:
(i) இல்வாழ்வு என்பது வறியவர்களுக்கு உதவி செய்தல்.
(ii) பாதுகாத்தல் என்பது அன்புடையோரைப் பிரியாது வாழ்தல்.

Question 4.
அறிவு, செறிவு என்பவற்றுக்குக் கலித்தொகை கூறும் விளக்கம் யாது?
Answer:
(i) அறிவு எனப்படுவது அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல்.
(ii) செறிவு எனப்படுவது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.2 பாடறித்து ஒழுகுதல்

நூல் வெளி
கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இது கலிப்பா என்னும் பாவகையால் ஆன நூல். நூற்று ஐம்பது பாடல்களைக் கொண்டது. குறிஞ்சிக்கலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி என்னும் ஐந்து பிரிவுகளை உடையது. கலித்தொகையைத் தொகுத்த நல்லந்துவனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். நெய்தற்கலிப் பாடல்களை இயற்றிவரும் இவரே.

பாடலின் பொருள்
இல்வாழ்வு என்பது வறியவர்க்கு உதவி செய்தல். பாதுகாத்தல் என்பது அன்புடையோரைப் பிரியாது வாழ்தல். பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல். அன்பு எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல். அறிவு எனப்படுவது அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல். செறிவு எனப்படுவது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்.

நிறை எனப்படுவது மறைபொருளைப் பிறர் அறியாமல் காத்தல். நீதிமுறை எனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல். பொறுமை எனப்படுவது தம்மை இகழ்வாரையும் பொறுத்தல். நாம் ஒவ்வொருவரும் இத்தகைய பண்புநலன்களைப் பின்பற்றி வாழவேண்டும்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.1 திருக்கேதாரம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Tamil Book Solutions Guide Pdf Chapter 5.1 திருக்கேதாரம் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.1 திருக்கேதாரம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.1 திருக்கேதாரம்

Question 1.
தேவாரம் பாடிய மூவர் பற்றிய செய்திகளைத் திரட்டுக.
Answer:
திருஞானசம்பந்தர் :

  • இயற்பெயர் – ஆளுடைய பிள்ளை
  • பெற்றோர் – சிவபாத இருதயர், பகவதி அம்மையார்.
  • ஊர் – சீர்காழி

தேவாரத்தின் முதல் நூலைப் பாடியவர். பன்னிரு திருமுறைகளில் ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் திருமுறை இவர் பாடியவை.

சிறு வயதில் மூன்று வயதுவரை பேசாதிருந்தார். உமையம்மை கொடுத்த ஞானப்பாலை உண்ணும்போது தோடுடைய செவியன் எனும் முதல் பாடலைப் பாடினார்.

திருநாவுக்கரசர் :

  • இயற்பெயர் – மருள்நீக்கியார்
  • சிறப்புப் பெயர்கள் – திருநாவுக்கரசர், வாகீசர், அப்பர், ஆளுடைய அரசு, தாண்டக வேந்தர், தருமசேனர்
  • பெற்றோர் – புகழனார், மாதினியார்.
  • தமக்கை – திலகவதியார்
  • பிறந்த ஊர் – திருவாமூர்

இவர் பாடிய பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் 4, 5, 6 ஆம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.1 திருக்கேதாரம்

சுந்தரர் :

  • பிறந்த ஊர் – திருநாவலூர்
  • பெற்றோர் – சடையனார், இசைஞானியார்.
  • இயற்பெயர் – நம்பியாரூரர்
  • சிறப்புப் பெயர்கள் – வன்தொண்டர், தம்பிரான் தோழர்.

இவருடைய பாடல்கள் ஏழாம் திருமுறையாகப் பன்னிரு திருமுறைகளுள் வைக்கப் பட்டுள்ளன.

பாடநூல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
காட்டிலிருந்து வந்த …………………… கரும்பைத் தின்றன.
அ) முகில்கள்
ஆ) முழவுகள்
இ) வேழங்கள்
ஈ) வேய்கள்
Answer:
இ) வேழங்கள்

Question 2.
‘கனகச்சுனை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………..
அ) கனகச் + சுனை
ஆ) கனக + சுனை
இ) கனகம் + சுனை
ஈ) கனம் + சுனை
Answer:
இ) கனகம் + சுனை

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.1 திருக்கேதாரம்

Question 3.
முழவு + அதிர என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………….
அ) முழவுதிர
ஆ) முழவுதிரை
இ) முழவதிர
ஈ) முழவு அதிர
Answer:
இ) முழவதிர

குறுவினா

Question 1.
தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக்கருவிகளாகச் சுந்தரர் கூறுவன யாவை?
Answer:
புல்லாங்குழல் மற்றும் முழவு ஆகியவற்றைத் தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக் கருவிகளாகச் சுந்தரர் கூறுகின்றார்.

சிறு வினா

Question 1.
திருக்கேதாரத்தைச் சுந்தரர் எவ்வாறு வருணனை செய்கிறார்?
Answer:

  • பண்ணோடு சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது, அதற்கு ஏற்றவாறு முதிர்ந்த மூங்கில்களால் ஆன புல்லாங்குழலும் முழவும் இணைந்து ஒலிக்கும்.
  • கண்களுக்கு இனிய குளிர்ச்சிதரும் ஒளியை உடைய பொன் வண்ண நீர் நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த் திவலைகளை வாரி இறைக்கும்.
  • நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் மத யானைகள் மணிகளை வாரி வாரி வீசும். இவற்றால் இடையறாது தோன்றும் ‘கிண்’ என்னும் ஒலியானது இசையாக முழங்கும்.
  • இத்தகைய சிறப்புகள் உடைய நகரம் திருக்கேதாரம் என்று சுந்தரர் வருணனை செய்கிறார்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.1 திருக்கேதாரம்

சிந்தனை வினா

Question 1.
விழாக்களின்போது இசைக்கருவிகளை இசைக்கும் வழக்கம் எவ்வாறு தோன்றியிருக்கும்
Answer:
என எழுதுக.
திருவிழாக் கூட்டத்தில் இரைச்சலைக் குறைக்கவும், திருவிழா நிகழ்வு நடக்கப் போகிறது என்பதை அறிவிக்கவும், இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை. அந்த உயிர்களைப் படைத்த இறைவன் இசையை விரும்புவான். அதனால் விழாக்களின்போது இசைக்கருவிகள் இசைக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கலாம்.

இசைக்கருவிகளை இசைக்கும் போது உணர்ச்சிப் பெருக்கும், பக்திப்பெருக்கும் ஏற்படுவதாலும் விழாக்களின் போது இசைக் கருவிகளை இசைக்கும் வழக்கம் தோன்றியிருக்கும்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
‘நம்பியாரூரர், தம்பிரான் தோழர்’ என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டவர்
அ) சுந்தரர்
ஆ) திருநாவுக்கரசர்
இ) மாணிக்கவாசகர்
ஈ) திருஞானசம்பந்தரர்
Answer:
அ) சுந்தரர்

Question 2.
தேவாரத்தைத் தொகுத்தவர் ……………………
அ) நம்பியாண்டார் நம்பி
ஆ) திருநாவுக்கரசர்
இ) சுந்தரர்
ஈ) திருஞானசம்பந்தர்
Answer:
அ) நம்பியாண்டார் நம்பி

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.1 திருக்கேதாரம்

Question 3.
பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையை இயற்றியவர் ……………………..
அ) திருஞானசம்பந்தர்
ஆ) சுந்த ரர்
இ) சேக்கிழார்
ஈ) நம்பியாண்டார் நம்பி
Answer:
ஆ) சுந்தரர்

Question 4.
‘திருக்கேதாரம்’ எனும் தலைப்பில் அமைந்த கவிதைப் பேழை பாடலை இயற்றியவர்
அ) நம்பியாண்டார் நம்பி
ஆ) சேக்கிழார்
இ) சுந்தரர்
ஈ) திருநாவுக்கரசர்
Answer:
இ) சுந்தரர்

Question 5.
பதிகம் என்பது ……………………. பாடல்களைக் கொண்டது.
அ) ஆறு
ஆ) நூறு
இ) பத்து
ஈ) இருபது
Answer:
இ) பத்து

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.1 திருக்கேதாரம்

Question 6.
பொன் வண்ண நிறமாக இருந்தவையாகச் சுந்தரர் குறிப்பிடுவன …………………….
அ) நீர்த்திவலைகள்
ஆ) நீர்நிலைகள்
இ) மணல்
ஈ) புல்லாங்குழல்
Answer:
ஆ) நீர்நிலைகள்

Question 7.
வைரங்களைப் போல இருந்தவையாகத் திருக்கேதாரம் குறிப்பிடுவன …………………
அ) புல்லாங்குழல்
ஆ) முழவு
இ) நீர்த்திவலைகள்
ஈ) நீர்நிலைகள்
Answer:
இ) நீர்த்திவலைகள்

குறுவினா

Question 1.
தேவாரம் பாடிய மூவர் யார்?
Answer:
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.1 திருக்கேதாரம்

Question 2.
தேவாரம் பெயர்க்காரணம் கூறுக.
Answer:

  • இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை (தே + ஆரம்)
  • இனிய இசை பொருந்திய பாடல் (தே + வாரம்)

Question 3.
கண்ணுக்குக் குளிர்ச்சி தருபவை என்று சுந்தரர் எவற்றைக் குறிப்பிடுகிறார்?
Answer:
பொன் வண்ண நீர்நிலைகள் கண்களுக்கு இனிய குளிர்ச்சி தரும் என்று சுந்தரர் குறிப்பிடுகிறார்.

Question 4.
நீர் நிலைகள் மற்றும் நீர்த் திவலைகள் ஆகியவற்றிற்குக் கூறப்பட்ட உவமை யாது?
Answer:

  • நீர் நிலைகள் – பொன்வண்ணம்
  • நீர்த்திவலைகள் – வைரம்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.1 திருக்கேதாரம்

Question 5.
மத யானைகளின் செயல்களாகச் சுந்தரர் குறிப்பிடுவன யாவை?
Answer:
நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் மத யானைகள் மணிகளை வாரி வாரி வீசும் என்று சுந்தரர் குறிப்பிடுகிறார்.

சிறுவினா

Question 1.
சுந்தரர் குறிப்பு வரைக.
Answer:
தேவாரம் பாடிய மூவரில் ஒருவர்.
சிறப்பு பெயர் : நம்பியாரூரர், தம்பிரான் தோழர்.
படைப்புகள் : பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறை.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.1 திருக்கேதாரம்

சொல்லும் பொருளும்

பண் – இசை
கனகச்சுனை – பொன் வண்ண நீர்நிலை
மதவேழங்கள் – மத யானைகள்
முரலும் – முழங்கும்
பழவெய் – முதிர்ந்த மூங்கில்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.5 வேற்றுமை

Students can Download 8th Tamil Chapter 4.5 வேற்றுமை Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.5 வேற்றுமை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.5 வேற்றுமை

Question 1.
பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஒரு பத்தியைத் தேர்ந்தெடுத்து, அதிலுள்ள வேற்றுமை உருபுகளை எடுத்து எழுதி வகைப்படுத்துக.
Answer:
அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது கல்வி எனப்படும். மனிதர்களது வாழ்வில் உடலோம்பலுடன் அறிவோம்பலும் நிகழ்ந்துவரல் வேண்டும். அறிவோம்பலுக்குக் கல்வி தேவை. அக்கல்விப்பயிற்சிக்கு உரிய பருவம் இளமை என்பதை விளக்க வேண்டியதில்லை. இது பற்றியே இளமையில் கல் என்னும் முதுமொழி பிறந்தது.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.5 வேற்றுமை 7

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது …………………… ஆகும்.
அ) எழுவாய்
ஆ) செயப்படுபொருள்
இ) பயனிலை
ஈ) வேற்றுமை
Answer:
ஈ) வேற்றுமை

Question 2.
எட்டாம் வேற்றுமை …………………… வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது.
அ) எழுவாய்
ஆ) செயப்படுபொருள்
இ) விளி
ஈ) பயனிலை
Answer:
இ) விளி

Question 3.
உடனிகழ்ச்சிப் பொருளில் ……………….. வேற்றுமை வரும்.
அ) மூன்றாம்
ஆ) நான்காம்
இ) ஐந்தாம்
ஈ) ஆறாம்
Answer:
அ) மூன்றாம்

Question 4.
‘அறத்தான் வருவதே இன்பம்’ – இத்தொடரில் ……………………… வேற்றுமை பயின்று வந்துள்ளது.
அ) இரண்டாம்
ஆ) மூன்றாம்
இ) ஆறாம்
ஈ) ‘ஏழாம்
Answer:
ஆ) மூன்றாம்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.5 வேற்றுமை

Question 5.
‘மலர் பானையை வனைந்தாள்’ – இத்தொடர் ……………….. பொருளைக் குறிக்கிறது.
அ) ஆக்கல்
ஆ) அழித்தல்
இ) கொடை
ஈ) அடைதல்
Answer:
அ) ஆக்கல்

பொருத்துக

1. மூன்றாம் வேற்றுமை – இராமனுக்குத் தம்பி இலக்குவன்.
2. நான்காம் வேற்றுமை – பாரியினது தேர்.
3. ஐந்தாம் வேற்றுமை – மண்ணால் குதிரை செய்தான்.
4. ஆறாம் வேற்றுமை – ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்.
Answer:
1. மூன்றாம் வேற்றுமை – மண்ணால் குதிரை செய்தான்.
2. நான்காம் வேற்றுமை – இராமனுக்குத் தம்பி இலக்குவன்.
3. ஐந்தாம் வேற்றுமை – ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்.
4. ஆறாம் வேற்றுமை – பாரியினது தேர்

சிறுவினா

Question 1.
எழுவாய் வேற்றுமையை விளக்குக.
Answer:
எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளைத் தருவது முதல் வேற்றுமை ஆகும். முதல் வேற்றுமை எழுவாய் வேற்றுமை எனப்படும். எ.கா: பாவை வந்தாள்.

Question 2.
நான்காம் வேற்றுமை உணர்த்தும் பொருள்கள் யாவை?
Answer:
(i) நான்காம் வேற்றுமை உருபு – ‘கு’
(ii) இது கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை என்ற பொருள்களில் வரும்.

Question 3.
உடனிகழ்ச்சிப் பொருள் என்றால் என்ன?
Answer:
(i) ஒடு, ஓடு ஆகிய மூன்றாம் வேற்றுமை உருபுகள் உடனிகழ்ச்சிப் பொருளில் வரும்.
எ.கா. தாயொடு குழந்தை சென்றது,
அமைச்சரோடு அலுவலர்கள் சென்றனர்.

(ii) இருவர் சேர்ந்து செய்கின்ற செயலைக் குறிப்பிடும் போது ஒடு, ஓடு என்ற சொற்களைப் பயன்படுத்துவர். இதுவே உடனிகழ்ச்சிப் பொருள் ஆகும்.

மொழியை ஆள்வோம்

கேட்க

Question 1.
கல்வியின் சிறப்புகளை விளக்கும் கதைகளைக் கேட்டு மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே கல்வியின் சிறப்புகளை விளக்கும் கதைகளைக் கேட்டு மகிழ வேண்டும்.

கீழ்க்காணும் தலைப்புகளில் இரண்டு நிமிடம் பேசுக.

Question 1.
கல்வியே அழியாச் செல்வம்
Answer:
அனைவருக்கும் வணக்கம்!

நான் கல்வியே அழியாச் செல்வம் என்ற தலைப்பில் பேசவிருக்கிறேன். கல்வி இன்றைய மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அத்தகைய கல்வியைக் கற்பதில் ஆண், பெண் என்ற பாகுபாடின்றி அனைவரும் சமம் என்ற நிலையில் உள்ளது.

கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்’ என்று பாரதிதாசன் பெண்களின் கல்வி பற்றிக் கூறுகிறார்.

‘கற்றவரைக் கண்ணுடையார்’ என்றும் கல்லாதவரை முகத்தில் இரண்டு புண்ணுடையவர்’ என்றும் இடித்துரைக்கிறார் வள்ளுவர். கற்றோர்க்கு அணிகலன் கல்வியே; கற்றோரே கண்ணுடையவர். ‘கற்றோரே தேவர் எனப் போற்றப்படத்தக்கவர்; கற்றோரே மேலானவர் என்பதை உணர வேண்டும்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.5 வேற்றுமை

கல்வி கற்றவன் நல்ல ஆளுமையைப் பெறுகிறான். எல்லா நாட்டுக்கும் சொந்தக்காரன் ஆகிறான். எல்லா மக்களுக்கும் உறவினராகிறான். அறியாமை இருளைப் போக்கி தெளிவுபெறுகிறான். உலகே போற்றும் உயர்வு பெறுகிறான். இக்கூற்றுகளுக்கே எத்தனையோ சான்றோர்களை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

கல்வியைக் கள்வரால் திருட இயலாது, வெந்தணலில் வேகாது, ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லாது, அள்ள அள்ளக் குறையாது.

மனிதன் தனது வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டிய ஒன்று உண்டு என்றால் அது கல்வி கற்பது ஒன்றுதான். இளமை முதல் இறக்கும் வரை இடைவிடாது கற்றாலும் ஒருவனால் கல்வியில் முழுமை அடைய முடியாது. எனவேதான் ‘கற்றது கைம்மண் அளவு. கல்லாதது உலகளவு’ என்று கூறப்படுகிறது.

“தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத்து ஊறும் அறிவு”

மணற்பாங்கான நிலத்தில் இறைக்க இறைக்க நீர் சுரக்கும். அதுபோல அறிவானது கொடுக்கக் கொடுக்க வளர்ந்து கொண்டே இருக்கும். இக்கல்வியை இளமையில் கற்றுத் தெளிய வேண்டும். இளமைப் பருவம் படிப்பதற்கே உரியது. இளவயதில் கற்கும் கல்வியானது பசு மரத்தணி போலவும்’, ‘கல்மேல் எழுத்து போலவும் அழியாமல் இருக்கும்.

சொல்லக் கேட்டு எழுதுக

தமிழ் மொழிக்கு வளம் சேர்த்த ஒரு நூல்; தமிழுக்கு வாழ்வியல் உண்மைகளை உணர்த்தும் ஒரு நூல்; தன் தோற்றத்தால் தமிழ்நாட்டுக்கு உலகப் பெரும் புகழைப் பெற்றுத் தந்த சிறந்த நூல் திருவள்ளுவரின் திருக்குறள். திருக்குறள் பற்றிப் பேசாத புலவர் இலர்; எழுதாத அறிஞர், எழுத்தாளர் இலர். பள்ளிப் பருவத்திலும் திருக்குறள் படிக்கப்படுகின்றது. பருவம் வளரவளர அதுவும் நுட்பமாகக் கற்கப்படுகின்றது. திருக்குறளுக்குரிய சிறப்பே அதுதான். அஃது எல்லாப் பருவத்தாருக்கும் வேண்டிய விழுமிய நூல். எனவே திருக்குறளில்லாத வீடும் இருக்கக்கூடாது. திருக்குறள் படிக்காத தமிழரும் இருக்கக் கூடாது.

கீழ்க்காண்பவற்றுள் ஒரு சொல்லை எடுத்து ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களுடன் இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.5 வேற்றுமை 2
Answer:
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.5 வேற்றுமை 3

அறிந்து பயன்படுத்துவோம்

நிறுத்தக்குறிகள்
காற்புள்ளி(,) :
1. பொருள்களை எண்ணும் இடங்களில் காற்புள்ளி வரும்.
(எ.கா.) குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல், பாலை ஆகியன ஐந்திணைகள்.

2. கடிதத்தில் விளி முன் காற்புள்ளி வரும்.
(எ.கா.) அன்புள்ள நண்பா ,

3. வினையெச்சங்களுக்குப் பின் காற்புள்ளி வரும்.
(எ.கா.) பொழிலன் தோட்டத்திற்குச் சென்று, வாழை இலை பறித்து வந்தான்.

4. மேற்கொள் குறிகளுக்கு (“) முன் காற்புள்ளி வரும்.
(எ.கா.) குழந்தை நிலவைப் பார்த்து, “நிலா நிலா ஓடி வா” என்று பாடியது.

5. முகவரியில் இறுதி வரி நீங்க ஏனைய வரிகளின் இறுதியில் காற்புள்ளி வரும்.
(எ.கா.) ச. ஆண்டாள், எண் 45, காமராசர் தெரு, திருவள்ளூர்.

அரைப்புள்ளி (;):
1. ஒரே எழுவாயில் பல வாக்கியங்கள் தொடரும் இடத்தில் அரைப்புள்ளி வரும்.
(எ.கா.) கரிகாலன் கங்கை வரை படையெடுத்துச் சென்றான் ; கனக விசயருடன் போரிட்டான்.

2. உடன்பாடு, எதிர்மறைக் கருத்துகளை ஒன்றாக் கூறும் இடத்தில் அரைப்புள்ளி வரும்.
(எ.கா.) நல்லவன் வாழ்வான் ; தீயவன் தாழ்வான்.

முக்காற்புள்ளி ( :’):
சிறு தலைப்பான தொகைச் சொல்லை விரித்துக் கூறும் இடத்தில் முக்காற் புள்ளி வரும். (எ.கா.) முத்தமிழ் : இயல், இசை , நாடகம்.

முற்றுப்புள்ளி (.):
1. சொற்றொடரின் இறுதியில் முற்றுப்புள்ளி வரும்.
(எ.கா.) கல்வியே மனிதனின் வாழ்வை உயர்த்தும்.

2. சொற்குறுக்கங்களை அடுத்து முற்றுப்புள்ளி வரும்.
(எ.கா.) திரு. வி. க., மா.க.அ., ஊ.ஒ.ந.நி. பள்ளி

3. பெயரின் தலைப்பெழுத்தை அடுத்து முற்றுப்புள்ளி வரும்.
(எ.கா.) நெ. து. சுந்தரவடிவேலு

வினாக்குறி ( ? ) :
வினாப் பொருளை உணர்த்தும் வாக்கியத்தின் இறுதியில் வினாக் குறி இட வேண்டும். (எ.கா.) சேக்கிழார் எழுதிய நூல் எது?

வியப்புக்குறி (!):
மகிழ்ச்சி, வியப்பு, அச்சம் அவலம் இரங்கல் முதலான உணர்ச்சியை வெளியிடும் இடங்களில் வியப்புக்குறி இட வேண்டும்.
(எ.கா.) தமிழின் இனிமை தான் என்னே ! வியப்பு
பாம்பு! பாம்பு! – அச்சம்
அந்தோ ! இயற்கை அழிகிறதே! – அவலம்

ஒற்றை மேற்கோள் குறி (‘ ‘):
தனிச் சொல்லையோ தனி எழுத்தையோ விளக்கிக் காட்டும் போதும், இரட்டை மேற்கோள் குறியில் இன்னொரு கூற்று உட்பட்டு வரும் போதும் ஒற்றை மேற்கோள் பயன்படும்.
(எ.கா.) ‘நல்ல ‘ என்பது குறிப்புப் பெயரெச்சம் ஆகும்.
கூட்டத்தின் தலைவர், அறிஞர் அண்ணா அவர்கள் இப்போது தலைப்பில்லை’ என்னும் தலைப்பில் பேசுவார்” என்று அறிவித்தார்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.5 வேற்றுமை

இரட்டை மேற்கோள் குறி (” “) :
நேர் கூற்றுகளிலும் செய்யுள் அடிகளையோ பொன்மொழிகளையோ குறிப்பிடும் இடங்களிலும் இரட்டை மேற்கோள் குறியைப் பயன்படுத்த வேண்டும்.
(எ.கால திரு.வி.க. மாணவர்களிடம், “தமிழ்க் காவியங்களைப் படியுங்கள். இன்பம் நுகருங்கள்” என்று கூறினார் .

பின்வரும் தொடர்களில் உரிய இடங்களில் நிறுத்தக்குறிகளை இடுக.

Question 1.
பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்
Answer:
பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்.

Question 2.
திருக்குறள் அறம் பொருள் இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது
Answer:
திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது.

Question 3.
தமிழ்மொழி செம்மையானது வலிமையானது இளமையானது
Answer:
தமிழ்மொழி செம்மையானது; வலிமையானது; இளமையானது.

Question 4.
கபிலன் தன் தந்தையிடம் இன்று மாலை விளையாடப் போகட்டுமா என்று கேட்டான்
Answer:
கபிலன் தன் தந்தையிடம், “இன்று மாலை விளையாடப் போகட்டுமா?” என்று கேட்டான்.

Question 5.
திரு வி க எழுதிய பெண்ணின் பெருமை என்னும் நூல் புகழ்பெற்றது.
Answer:
திரு.வி.க., எழுதிய பெண்ணின் பெருமை’ என்னும் நூல் புகழ்பெற்றது.

பின்வரும் பத்தியில் உரிய இடங்களில் நிறுத்தக்குறிகளை இடுக.

Question 1.
நூல் பல கல் என்பர் பெரியோர் அறிவை வளர்க்கும் நூல்கள் அனைத்தையும் நம்மால் விலைகொடுத்து வாங்க முடியுமா முடியாது நூலகங்கள் இக்குறையை நீக்க உதவுகின்றன பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைத்து நூல்களும் நிறைந்த இடம் நூலகம் ஆகும். நூலகத்தின் வகைகளாவன மைய நூலகம் மாவட்ட நூலகம் கிளை நூலகம் ஊர்ப்புற நூலகம் எனக்குப் பிடித்த நூல்களுடன் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் மகிழ்ச்சியடைவேன் என்றார் நேரு ஆகவே நூலகத்தின் பயன் அறிவோம் அறிவு வளம் பெறுவோம்
Answer:
நூல் பல கல்’ என்பர் பெரியோர். அறிவை வளர்க்கும் நூல்கள் அனைத்தையும் நம்மால் விலைகொடுத்து வாங்க முடியுமா? முடியாது. நூலகங்கள் இக்குறையை நீக்க உதவுகின்றன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைத்து நூல்களும் நிறைந்த இடம் நூலகம் ஆகும்.

நூலகத்தின் வகைகளாவன மைய நூலகம், மாவட்ட நூலகம், கிளை நூலகம், ஊர்ப்புற நூலகம். “எனக்குப் பிடித்த நூல்களுடன் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் மகிழ்ச்சியடைவேன்” என்றார் நேரு. ஆகவே, நூலகத்தின் பயன் அறிவோம்; அறிவு வளம் பெறுவோம்.

கீழ்க்காணும் விளம்பரத்தைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.5 வேற்றுமை 4
Question 1.
எந்த நாளை முன்னிட்டுப் புத்தகக் கண்காட்சி மாபெரும் புத்தகக் கா நடத்தப்படுகிறது?
Answer:
உலகப் புத்தக நாளை முன்னிட்டுப் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது.

Question 2.
புத்தகக் கண்காட்சி எங்கு நடைபெறுகிறது?
Answer:
இராயப்பேட்டை, YMCA மைதானம்.

Question 3.
புத்தகக் கண்காட்சி எத்தனை நாள்கள் நடைபெறுகிறது?
Answer:
ஏப்ரல் 13 முதல் 23 முடிய 11 நாள்கள் நடைபெறுகிறது.

Question 4.
புத்தகக் கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் எவ்வளவு?
Answer:
நுழைவுக் கட்டணம் இல்லை . அனுமதி இலவசம்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.5 வேற்றுமை

Question 5.
புத்தகம் வாங்குவோருக்கு வழங்கப்படும் சலுகை யாது?
Answer:
நூல்களுக்கான விலையில் 10 சதவீத கழிவு.

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

நூலகம்
முன்னுரை – நூலகத்தின் தேவை – வகைகள் – நூலகத்திலுள்ளவை – படிக்கும் முறை – முடிவுரை.

முன்னுரை:
கல்வி கரையில, கற்பவர் நாள் சில’ என்பர் சான்றோர். கற்க கசடற என்று வள்ளுவரும் கூறியுள்ளார். அவ்வாறு கற்பதற்குத் துணைபுரிபவை நூல்கள். அந்நூல்கள் உள்ள இடம் நூலகம். சான்றோர்கள் பலரையும், பேச்சாளர்கள் பலரையும் உருவாக்கிய நூலகம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நூலகத்தின் தேவை :
பாடப் புத்தகத்தை மட்டும் படித்து அறிவு பெற்றால் போதும் என்றில்லாமல் உலக அறிவை வளர்த்துக் கொள்ளலாம். வாழ்வியலுக்கான நற்பண்புகளை நூல்களின் கருத்து வழியே வலுப்படுத்திக் கொள்ளலாம். பலதுறை சார்ந்த நூல்களைக் கற்றுத் தெளிவு பெறலாம்.

பேச்சாளர்கள் பலரின் கருத்துகளையும், சாதனையாளர்களின் சாதனைகளையும் படித்து அறியலாம். அவற்றை நமக்கு முன்மாதிரியாக நினைத்து நாமும் நம்மைப் பண்படுத்திக் கொள்ளலாம். ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றலாம். இக்காரணங்களுக்காக நூலகம் தேவைப்படுகிறது.

நூலகத்தின் வகைகள் :
பள்ளி நூலகம், பொது நூலகம், ஆராய்ச்சி நூலகம், சிறப்பு நூலகம், தேசிய நூலகம் எனப் பல வகைகளில் நூலகம் உள்ளது. இவை மட்டுமன்றி பொது நூலகத்தின் கீழ் மாநில மைய நூலகம், மாவட்ட நூலகம், வட்டார நூலகம், பகுதி நேர நூலகம், நடமாடும் நூலகம் போன்றவையும் மக்களுக்கு உதவுகின்றன.

நூலகத்திலுள்ளவை :
நூலகத்தில் கதை, கட்டுரை போன்ற இயல்களில் நூல்கள் நிரம்பியிருக்கும். சிறுகதை, நாவல், கவிதை, கல்வி, பொருளியல், வரலாறு, மருத்துவம், ஆன்மிகம், உளவியல், பொறியியல், பயன்படு கலைகள் போன்ற தலைப்புகளில் துறைசார்ந்த நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். மேலும், நாளேடுகள், பருவ இதழ்கள் நூலகத்தில் படிக்கக் கிடைக்கும்.

படிக்கும் முறை :
நூலகத்தில் சத்தம் போட்டுப் படிக்கக்கூடாது. நூல்களைப் படித்துக் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். நூல்களில் எவ்விதக் குறிப்பையும், கிறுக்குதலையும் செய்யக்கூடாது. படிக்க விரும்பும் நூல்களை நூல்களின் அனுமதி பெற்று எடுத்துப் படிக்க வேண்டும். படித்து முடித்துவிட்டு நூலகரிடம் கொடுக்க வேண்டும். நூல்களைச் சேதப்படுத்தாமல் படிக்க வேண்டும். நூலக விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

முடிவுரை :
நம் சான்றோர்கள் கூறியபடி வீட்டிற்கொரு நூலகம் அமைத்து பயன்பெறுவோம். நல்ல நூல்களை நாளும் கற்று, நல்லறிவு பெறுவோம். வருங்கால சமுதாயம் அறியாமை என்ற இருள் நீங்கி கல்வி என்ற ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற முயல்வோம்.

மொழியோடு விளையாடு

கீழ்க்காணும் வினாக்களுக்கு விடைகளைக் கட்டத்தில் நிரப்புக. வட்டத்தில் சிக்கிய எழுத்துகளை எடுத்து எழுதுக. எழுத்துகளை முறைப்படுத்திக் கல்வி பற்றிய பழமொழியைக் கண்டறிக.

1. திரைப்படப் பாடலாசிரியர் சோமுவின் ஊர்
2. கேடில் விழுச்செல்வம் ……………..
3. குமர குருபரர் எழுதிய நூல்களுள் ஒன்று
4. ‘கலன்’ என்னும் சொல்லின் பொருள்.
5. ஏட்டுக்கல்வியுடன் …………….. கல்வியும் பயில வேண்டும்.
6. திரு.வி.க. எழுதிய நூல்களுள் ஒன்று.
7. மா + பழம் என்பது ……………. விவகாரம்.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.5 வேற்றுமை 5
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.5 வேற்றுமை 6

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள்….
1. நாள்தோறும் ஒரு திருக்குறள் கற்பேன்.
2. அனைவரிடமும் அன்பு கொண்டு வாழ்வேன்.

கலைச்சொல் அறிவோம்

1. நிறுத்தக்குறி – Punctuation
2. அணிகலன் – Ornament
3. திறமை – Talent
4. மொழிபெயர்ப்பு – Translation
5. விழிப்புணர்வு – Awareness
6. சீர்திருத்தம் – Reform

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.5 வேற்றுமை

கூடுதல் வினாக்கள்

நீரப்புக.
1. பெயர்ச்சொல்லுடன் இணைக்கப்படும் அசைகள் ……………….. ஆகும்.
2. வேற்றுமை ……………….. வகைப்படும்.
3. முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் …………….. இல்லை.
4. முதல் வேற்றுமையை …………………. என்றும் கூறுவர்.
5. எட்டாம் வேற்றுமையை …………………. என்றும் கூறுவர்.
6. இரண்டாம் வேற்றுமையைச் ……………………. வேற்றுமை என்றும் கூறுவர்.
7. கருவிப் பொருள், கருத்தாப்பொருள் ஆகிய இரண்டு வகையான பொருள்களில் வரும் வேற்றுமை …………………
8. ஆக’ என்னும் அசை சேர்ந்து வரும் வேற்றுமை …………………… வேற்றுமை.
9. உடனிகழ்ச்சிப் பொருளில் வரும் மூன்றாம் வேற்றுமை உருபுகள் ……………….
10. கிழமைப்பொருளில் வரும் வேற்றுமை ………………… வேற்றுமை.
11. படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக மாற்றி அழைப்பது ……………….. எனப்படும்.
12. ஐந்தாம் வேற்றுமையிலும் ஏழாம் வேற்றுமையிலும் வரும் வேற்றுமை உருபு ………………
13. ‘செங்குட்டுவனுக்குத் தம்பி இளங்கோ’ – இத்தொடரில் உள்ள வேற்றுமை …………………
14. ஓவியர் தூரிகை கொண்டு ஓவியம் தீட்டினார். இத்தொடரில் உள்ள வேற்றுமை உருபு – ……………….
Answer:
1. வேற்றுமை உருபுகள்
2. எட்டு
3. உருபுகள்
4. எழுவாய் வேற்றுமை
5. விளிவேற்றுமை
6. செயப்படுபொருள்
7. மூன்றாம் வேற்றுமை
8. நான்காம்
9. ஒடு, ஓடு
10. ஆறாம்
11. விளிவேற்றுமை
12. இல்
13. கு – நான்காம் வேற்றுமை
14. கொண்டு

விடையளி :

Question 1.
வேற்றுமை என்பது யாது?
Answer:
பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறை வேற்றுமை எனப்படும்.

Question 2.
வேற்றுமை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
வேற்றுமை எட்டு வகைப்படும். அவை முதல் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.5 வேற்றுமை

Question 3.
முதல் வேற்றுமை – விளக்குக.
Answer:
(i) எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளைத் தருவது முதல் வேற்றுமை ஆகும்.
(ii) முதல் வேற்றுமை எழுவாய் வேற்றுமை என்றும் அழைக்கப்படும்.
(iii) எ.கா. பாவை வந்தாள்.

Question 4.
இரண்டாம் வேற்றுமை உருபு யாது? இரண்டாம் வேற்றுமையை விளக்குக.
Answer:
(i) இரண்டாம் வேற்றுமை உருபு ‘ஐ’.
(ii) இது ஒரு பெயரைச் செயப்படுபொருளாக வேறுபடுத்திக் காட்டும். அதனால் இதனைச் செயப்படுபொருள் வேற்றுமை என்றும் கூறுவர்.
(iii) எ.கா. – கபிலர் பரணரைப் புகழ்ந்தார்.

Question 5.
இரண்டாம் வேற்றுமை எவ்வெவப் பொருள்களில் வரும்?
Answer:
இரண்டாம் வேற்றுமை ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை ஆகிய ஆறுவகையான பொருள்களில் வரும்.

Question 6.
இரண்டாம் வேற்றுமை உருபு – சான்றுகள் தருக.
Answer:
(i) ஆக்கல் – கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.
(ii) அழித்தல் – பெரியார் மூட நம்பிக்கைகளை ஒழித்தார்.
(iii) அடைதல் – கோவலன் மதுரையை அடைந்தான்.
(iv) நீத்தல் – காமராசர் பதவியைத் துறந்தார்.
(v) ஒத்தல் – தமிழ் நமக்கு உயிரைப் போன்றது.
(vi) உடைமை – வள்ளுவர் பெரும் புகழை உடையவர்.

Question 7.
மூன்றாம் வேற்றுமை உருபுகள் யாவை?
Answer:
மூன்றாம் வேற்றுமை உருபுகள் : ஆல், ஆன், ஒடு, ஓடு ஆகியவை.

Question 8.
கருத்தாப் பொருள் விளக்குக.
Answer:
(i) கருத்தாப் பொருள் ஏவுதல் கருத்தா, இயற்றுதல் கருத்தா என இரு வகைப்படும்.

(ii) ஏவுதல் கருத்தா – பிறரைச் செய்ய வைப்பது.
எ.கா. கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது.

(iii) இயற்றுதல் கருத்தா – தானே செய்வது.
எ.கா. சேக்கிழாரால் பெரிய புராணம் இயற்றப்பட்டது.

Question 9.
மூன்றாம் வேற்றுமை உருபுகளுக்கான எடுத்துக்காட்டுகள் தருக. .
Answer:
(i) ஆல் – மரத்தால் சிலை செய்தான்.
(ii) ஆன் – புறந்தூய்மை நீரான் அமையும்.
(iii) ஒடு – தாயொடு குழந்தை சென்றது.
(iv) ஓடு – அமைச்சரோடு அலுவலர்கள் சென்றனர்.

Question 10.
நான்காம் வேற்றுமை உருபு யாது? அது எவ்வெவப் பொருள்களில் வரும்?
Answer:
(i) நான்காம் வேற்றுமை உருபு – கு.
(ii). இது கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவதால், பொருட்டு, முறை, எல்லை ஆகிய பொருள்களில் வரும்.

Question 11.
ஐந்தாம் வேற்றுமை உருபுகள் யாவை? அவை எவ்வெவப் பொருள்களில் வரும்?
Answer:
(i) ஐந்தாம் வேற்றுமை உருபுகள் இன், இல்.
(ii) அவை நீங்கல், ஒப்பு, எல்லை , எது ஆகிய பொருள்களில் வரும்.

Question 12.
ஆறாம் வேற்றுமை உருபுகள் யாவை?
Answer:
(i) ஆறாம் வேற்றுமை உருபுகள் அது, ஆது, அ என்பன. இவ்வேற்றுமை உரிமைப் பொருளில் வரும்.
(ii) எ.கா. இராமனது வில், நண்ப னது கை.

Question 13.
ஏழாம் வேற்றுமை உருபு யாது?
Answer:
ஏழாம் வேற்றுமை உருபு – கண்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.5 வேற்றுமை

Question 14.
ஏழாம் வேற்றுமை சான்றுடன் விளக்குக.
Answer:
(i) ஏழாம் வேற்றுமை உருபு – கண்
(ii) மேல், கீழ், கால், இல், இடம் போன்ற உருபுகளும் உண்டு .
(iii) ஏழாம் வேற்றுமை உருபு இடம், காலம் ஆகியவற்றைக் குறிக்கும் சொற்களில் இடம்பெறும். எ.கா. எங்கள் ஊரின்கண் மழை பெய்தது, இரவின்கண் மழை பெய்தது.

Question 15.
எட்டாம் வேற்றுமை சான்றுடன் விளக்குக.
Answer:
(i) விளிப் பொருளில் வரும்.
(ii) படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக மாற்றி அழைப்பதால் விளி வேற்றுமை’ எனப்படுகிறது.
(iii) இவ்வேற்றுமைக்கு என்று தனியே உருபு கிடையாது.
எ.கா. அண்ணா வா!

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.4 அன்று குடிப்பிறத்தல்

Students can Download 8th Tamil Chapter 4.4 அன்று குடிப்பிறத்தல் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.4 அன்று குடிப்பிறத்தல்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.4 அன்று குடிப்பிறத்தல்

Question 1.
திருக்குறள் கருத்துகளை உணர்த்தும் கதைகளை அறிந்து வந்து வகுப்பில் பகிர்க.
Answer:
குறள் :
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.

உணர்த்தும் கதை :
“சின்னச்சாமி… யாரோ மரத்தோரமா நிற்கிறாங்க… யாராய் இருக்கும்…. மாட்டு வண்டியை ஓட்டிக்கிட்டே அப்பா கேட்டார்.
“தெரியலப்பா…”
“இறங்கி யாருன்னு பாரு…”
“வாட்ட சாட்டமாய், கண்ணாடியும் அலைபேசியும் கையுமாய் சாலையோரத்தில் வண்டியுடன் ஒருவர் நின்றிருந்தார்.
“ஐயா… நீங்க…”
“வெளியூருப்பா… வண்டி நின்னு போச்சு….!”
“அப்படியா…. வண்டியத் தூக்கி மாட்டு வண்டியில வச்சுட்டு வாங்க மழை வர்ற மாதிரியிருக்கு ஊரு ரொம்ப தூரம்… வேற வண்டியும் வராது…”

அவர் உடையையும் உழைத்துக் களைத்த வியர்வை பொங்கிய உடலையும் பார்த்து வரலைன்னுட்டார். மூன்று நான்கு பேர்தான் வண்டியில் இருந்தோம்… சிறிது தூரம் போறதுக்குள்ள மழை கொட்டு கொட்டுன்னு கொட்டிருச்சு… நாங்க வீட்டுக்குப் போயிட்டோம்.

இரவுல தூங்கப் போறப்ப…. அப்பா சொன்னார். தம்பி… அந்த சூட்டுக்காரர் மழை தாங்காம நடந்திருக்காரு. தேங்கா விழுந்து மண்ட உடைஞ்சு… வேற யாரோ தூக்கிட்டு வந்திருக்காங்க. நம்ம ஊரு ஆசுபத்திரியில… கட்டுப் போட்டுக்கிட்டு இருந்தாங்க…. பாவம் படிச்சவரா இருக்காரு… சூழ்நிலை புரியாம… வரமாட்டேன்னு சொன்னாரு, இப்ப வேதனைப்படுகிறாரே…

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.4 அன்று குடிப்பிறத்தல்

மதிப்பீடு

Question 1.
திருக்குறளின் கருத்தைப் பின்பற்றி நடந்த சகாதேவன் கதையைச் சுருக்கி எழுதுக.
Answer:
முன்னுரை :
குறள் வழிக் கதை மூலம் மாணவன் ஒருவன் நடந்து கொண்ட விதமும் ஊராரின் எண்ணங்களும் ஆசிரியரின் நல்ல முடிவு பற்றியும் இக்கட்டுரையில் காண்போம்.

ஆசிரியரின் வேட்டி :
ஆசிரியர் ஒருநாள் தனது வேட்டியைத் துவைத்து கொடிக்கயிற்றில் காயப் போட்டுவிட்டுப் பள்ளிக்குச் சென்றார். பிறகு வந்து பார்த்தபோது வேட்டியைக் காணவில்லை. ஊராரில் சிலர் சிகாமணிதான் எடுத்திருப்பார் என்று சந்தேகத்துடனும் சிலர் உறுதியுடனும் கூறினர். சிகாமணியின் தந்தையும் பிறர் பொருளை எடுத்துக் கொள்ளும் குணம் கொண்டவர். அதனால் அவரது பழக்கம் இவரைத் தொற்றிக் கொண்டது என்றனர்.

வகுப்பறையில் ஆசிரியர் :
ஆசிரியருக்கு வேட்டியின் மர்மம் விளங்கவில்லை. அன்று வகுப்பறையில் பண்புடைமை’ என்ற அதிகாரத்திலுள்ள குறட்பாவை நடத்தத் தொடங்கினார். ‘ஆன்ற குடிபிறத்தல்’ என்ற தொடருக்குப் பொருள் கூறும்போது வகுப்பிலிருந்த சிகாமணியின் மகன் சகாதேவன் ஆசிரியரை கூர்ந்து நோக்கினான். ஆசிரியரும் அவனை அடிக்கடி பார்த்தார்.

குறள்வழி அறிவுரை :
“ஆன்ற குடிப்பிறத்தல்’ என்றால் சிறந்த குடி உன்னிடமிருந்து தொடங்கட்டும். அப்பன் திருடனாயிருக்கலாம். மகன் நல்லவனாக இருப்பான். அவங்க அப்பனைச் சொல், திருடன்தான்! அவன் பையனைச் சொல்லாதே, அவன் மிக நல்லவன் என்று உலகோர் பேசுவர். அதுபோல் கெட்டப்பழக்கங்கள் தந்தையுடன் செல்லட்டும். உன்னிலிருந்து நல்ல புதிய குடி உதிக்கட்டும்” என்றார். மேலும் “ஒழுக்கம் இல்லாத பரம்பரையில் நீ வந்திருந்தாலும் ஒழுக்கத்தின் உறைவிடமாக நீ இருக்கவேண்டும்” என்று கூறினார்.

உணவு இடைவேளை :
உணவு இடைவேளையில் ஆசிரியர் வீட்டிற்குச் சென்றார். அப்போது கிருஷ்ணமூர்த்தி என்ற மாணவன் சகாதேவன் கொடுக்கச் சொன்னதாக வேட்டியைக் கொடுத்தான். பிறகு ‘வேட்டியைச் சிகாமணிதான் எடுத்தார் என்றும் தானே ஆசிரியரிடம் கொடுப்பதற்கு வெட்கப்படுவதாகவும், சகாதேவன் கூறியதாகக் கூறினான்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.4 அன்று குடிப்பிறத்தல்

உண்மை அறிந்த ஊரார் :
சிகாமணிதான் திருடன் என அறிந்ததும் ஊரார் அவரைத் தண்டிக்கத் தொடங்கினர். ஆசிரியர் தடுத்துவிட்டார். சிகாமணியைத் தண்டித்தால் அவன் அவனுடைய மகனான சகாதேவனைத் தண்டிப்பான். அதனை சகாதேவன் நேர்மைக்குக் கிடைத்த பலனாகக் கருதி வருந்துவான்” என்று தடுத்தமைக்குக் காரணம் கூறினார்.

மறுத்த ஊரார் :
“அவனைவிடக்கூடாது சார்!” என்று கடைசிவரை ஒருவர் சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால் ஆசிரியர் இறுதியில் “நீங்கள் தண்டனைதான் கொடுக்க வேண்டுமெனில், நான் என் வேட்டியே திருடு போகவில்லை என்று கூறுவேன்” என்றார்.

முடிவுரை :
ஒருவிதமாக ஊரார் ஆசிரியரின் கருத்தைப் புரிந்து கொண்டனர். சிகாமணி, சகாதேவன், ஆசிரியர் மூவரும் தப்பித்தனர்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.3 பல்துறைக் கல்வி

Students can Download 8th Tamil Chapter 4.3 பல்துறைக் கல்வி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.3 பல்துறைக் கல்வி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.3 பல்துறைக் கல்வி

Question 1.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் ஆகிய தொகுப்புகளில் இடம்பெறும் நூல்களின் பெயர்களைத் திரட்டி எழுதுக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.3 பல்துறைக் கல்வி 1
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.3 பல்துறைக் கல்வி 2

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது …………..
அ) விளக்கு
ஆ) கல்வி
இ) விளையாட்டு
ஈ) பாட்டு
Answer:
ஆ) கல்வி

Question 2.
கல்விப் பயிற்சிக்குரிய பருவம் …………..
அ) இளமை
ஆ) முதுமை
இ) நேர்மை
ஈ) வாய்மை
Answer:
அ) இளமை

Question 3.
இன்றைய கல்வி …………………… நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.
அ) வீட்டில்
ஆ) நாட்டில்
இ) பள்ளியில்
ஈ) தொழிலில்
Answer:
ஈ) தொழிலில்

நிரப்புக

1. கவப்பில் …………. உண்டென்பது இயற்கை நுட்பம்.
2. புற உலக ஆராய்ச்சிக்கு …………… கொழுகொம்பு போன்றது.
3. வாழ்விற்குரிய இன்பத்துறைகளில் தலையாயது ……………. இன்பம் ஆகும்.
Answer:
1. வளர்ச்சி
2. அறிவியல்
3. காவிய

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.3 பல்துறைக் கல்வி

பொருத்துக

1. இயற்கை ஓவியம் – சிந்தாமணி
2. இயற்கைத் தவம் – பெரியபுராணம்
3. இயற்கைப் பரிணாமம் — பத்துப்பாட்டு
4. இயற்கை அன்பு – கம்பராமாயணம்
Answer:
1. இயற்கை ஓவியம் –  பத்துப்பாட்டு
2.. இயற்கைத் தவம் – சிந்தாமணி
3. இயற்கைப் பரிணாமம் – கம்பராமாயணம்
4. இயற்கை அன்பு – பெரிய புராணம்

குறுவினா

Question 1.
இன்றைய கல்வியின் நிலை பற்றித் திரு.வி.க. கூறுவன யாவை?
Answer:
இன்றைய கல்வியின் நிலை :
(i) இந்நாளில் கல்வியென்பது பொருளற்றுக் கிடக்கிறது.

(ii) குறிப்பிட்ட பாடங்களை நெட்டுருச் செய்து, தேர்வில் தேறிப் பட்டம் பெற்று, ஒரு தொழிலில் நுழைவதற்குக் கல்வி ஒரு கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.

(iii) நாளடைவில் அக்கல்விக்கும் வாழ்விற்கும் தொடர்பில்லாமல் போகும் என்று இன்றைய கல்வியின் நிலை பற்றித் திரு.வி.க. கூறுகிறார்.

Question 2.
தாய்நாடு என்னும் பெயர் எவ்வாறு பிறக்கிறது?
Answer:
நாம் தமிழ் மக்கள். நாம் நமது தாய்மொழி வாயிலாகக் கல்வி பெறலே சிறப்பு. அதுவே இயற்கை முறை. முதலில் தாய்மொழி வாயிலாகவே கல்வி பயிலுதல் வேண்டும். தாய்நாடு என்னும் பெயர் தாய்மொழியைக் கொண்டே பிறக்கிறது.

Question 3.
திரு.வி.க. சங்கப் புலவர்களாகக் குறிப்பிடுபவர்களின் பெயர்களை எழுதுக.
Answer:
இளங்கோ, திருத்தக்கத்தேவர், திருஞானசம்பந்தர், ஆண்டாள், சேக்கிழார், கம்பர், பரஞ்சோதி.

சிறுவினா

Question 1.
தமிழ்வழிக் கல்வி பற்றித் திரு.வி.க. கூறுவனவற்றை எழுதுக்.
Ans;
(i) தமிழிலேயே கல்வி போதிக்கத் தமிழில் போதிய கலைகளில்லையே; சிறப்பான அறிவியல் கலைகளில்லையே என்று சிலர் கூக்குரலிடுகிறார். அவரவர் தாம் கண்ட புதுமைகளை முதல் முதல் தம் தாய்மொழியில் வரைந்து விடுகிறார். அவை பின்னே பல மொழிகளில் பெயர்த்து எழுதப்படுகின்றன.

(ii) அம்மொழிபெயர்ப்பு முறையைத் தமிழர் கொண்டு ஏன் தாய்மொழியை வளர்த்தல் கூடாது? குறியீடுகளுக்குப் பல மொழிகளினின்றும் கடன் வாங்குவது தமிழுக்கு இழுக்காகாது. கலப்பில் வளர்ச்சியுண்டென்பது இயற்கை நுட்பம்.

(iii) தமிழை வளர்க்கும் முறையிலும் அளவிலும் கலப்பைக் கொள்வது சிறப்பு. ஆகவே, தமிழ்மொழியில் அறிவுக் கலைகள் இல்லை என்னும் பழம்பாட்டை நிறுத்தி, அக்கலைகளைத் தமிழில் பெயர்த்து எழுதித் தாய்மொழிக்கு ஆக்கந்தேடுவோம் என்னும் புதுப்பாட்டைப் பாடுமாறு சகோதரர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

(iv) கலைகள் யாவும் தாய்மொழி வழி மாணாக்கர்க்கு அறிவுறுத்தப் பெறுங்காலமே, தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம் ஏறும் காலமாகும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.3 பல்துறைக் கல்வி

Question 2.
அறிவியல் கல்வி பற்றித் திரு.வி.க. கூறுவன யாவை?
Answer:
(i) உலக வாழ்விற்கு மிக மிக இன்றியமையாதது ‘அறிவியல்’ என்னும் அறிவுக்கலை.

(ii) உடற்கூறு, உடலோம்பு முறை, பூதபௌதிகம், மின்சாரம், நம்மைச் சூழ்ந்துள்ள செடி, கொடி, பறவை, விலங்கு முதலியவற்றினியல், கோளியக்கம், கணிதம், அகத்திணை முதலியன வேண்டும். இந்நாளில் இவைகளைப் பற்றிய பொது அறிவாதல் பெற்றே தீரல் வேண்டும்.

(iii) புற உலக ஆராய்ச்சிக்கு அறிவியல் கொழுகொம்பு போன்றது. நம் முன்னோர் கண்ட பல உண்மைகள் அறிவியல் அரணின்றி இந்நாளில் உறுதிபெறல் அரிது.

(iv) இக்கால உலகத்தோடு உறவு கொள்வதற்கும் அறிவியல் தேவை. ஆதலின் அறிவியல் என்னும் அறிவுக்கலை இளைஞருலகில் பரவல் வேண்டும்.

நெடுவினா

Question 1.
காப்பியக் கல்வி குறித்துத் திரு.வி.க. கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
காப்பியக் கல்வி குறித்துத் திரு.வி.க. கூறும் செய்திகள் :
(i) வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள் காவிய இன்பமும் ஒன்று. அதைத் தலையாயது என்றும் கூறலாம்.

(ii) நாம் தமிழர்கள். நாம் பாட்டின்பத்தை நுகர வேண்டுமேல் நாம் தமிழ் இலக்கியங்களுக்கிடையே அன்றோ செல்ல வேண்டும்.

(iii) தமிழில் இலக்கியங்கள் பலப்பல இருக்கின்றன. இயற்கை ஓவியம் பத்துப்பாட்டு, இயற்கை இன்பக்கலம் கலித்தொகை, இயற்கை வாழ்வில்லம் திருக்குறள், இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும், இயற்கைத் தவம் சிந்தாமணி, இயற்கைப் பரிணாமம் கம்பராமாயணம், இயற்கை அன்பு பெரிய புராணம், இயற்கை இறையுறையுள் தேவார திருவாசக திருவாய் மொழிகள்.

(iv) இத்தமிழ்க் கருவூலங்களை உன்ன உன்ன உள்ளத்தெழும் இன்ப அன்பைச் சொல்லால் சொல்ல இயலாது.

(v) இளைஞர்களே! தமிழ் இளைஞர்களே! பெறற்கரிய இன்ப நாட்டில் பிறக்கும் பேறு பெற்றிருக்கிறீர்கள்! தமிழ் இன்பத்திலுஞ் சிறந்த இன்பம் இவ்வுலகிலுண்டோ ? தமிழ்க் காப்பியங்களைப் படியுங்கள். இன்பம் நுகருங்கள்.

சிந்தனை வினா

Question 1.
திரு.வி.க. குறிப்பிடும் பல்துறைக் கல்வியில் நீங்கள் எதனைக் கற்க விரும்புகிறீர்கள்?
Answer:
(i) நான் கற்க விரும்புவது இசைக்கல்வி.

(ii) இசைக்கு மயங்காதவர் எவருமில்லை . இறைவனிடம் நாம் பேசுவது இசைமொழியில்தான்.

(iii) ஆழ்வார்களும் நாயன்மார்களும் தங்களுடைய பாடல்களை இசைத்தே இறைவனை மகிழ்வித்துள்ளனர். இசையானது, கவலை என்ற நோயைத் தீர்க்கும் மருந்தாகும். எனவே நான் இசைக்கல்வியைக் கற்க விரும்புகிறேன்.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. அறிவே ………………… என்பது ஆன்றோர் கூற்று.
2. ஒரு மனிதனை வாழ்வில் உயரச் செய்பவை ……………………
3. கேடில் விழுச்செல்வம் ………………..
4. அறியாமையை நீக்கி அறிவை வளர்ப்பது ……………… எனப்படும்.
5. ……………… மட்டும் கல்வி ஆகாது.
6. கல்வி என்பது …………………… தேடும் வழிமுறையன்று.
7. ஒவ்வொருவரும் அவரவர் ……………… வாயிலாகக் கல்வி பெறுவதே சிறப்பு.
8. வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள் ………………. ஒன்று.
9. இயற்கை ஓவியம் ……………………
10. இயற்கை இன்பக்கலம் …………………….
11. இயற்கை வாழ்வில்லம் ……………….
12. இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் ……………………
13. இயற்கைத் தவம் …………………
14. இயற்கைப் பரிணாமம் …………………..
15. இயற்கை அன்பு ………………..
16. , இயற்கை இறையுறையுள் …………………….
17. இன்றைய சூழலில் ………………….. இன்றியமையாதது.
18. நாடகத்துக்கு நல்வழியில் ………………… வழங்க வேண்டும்.
19. உலக வாழ்விற்கு மிக மிக இன்றியமையாதது …………………. என்னும் அறிவுக்கலை.
20. புற உலக ஆராய்ச்சிக்கு அறிவியல் …………………… போன்றது.
21. திரு.வி.க. …………………. என்று அழைக்கப்படுகிறார்.
22. பல்துறைக்கல்வி’ என்ற பாடப்பகுதி ……………….. என்னும் நூலிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது.
23. ஐ.நா. அவையின் முதல் பெண் தலைவர் ………………….

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.3 பல்துறைக் கல்வி
Answer:
1. ஆற்றல்
2. அறிவும் உழைப்பும்.
3. கல்வி
4. கல்வி
5. ஏட்டுக்கல்வி
6. வருவாய்
7. தாய்மொழி
8. காவிய இன்பமும்
9. பத்துப்பாட்டு
10. கலித்தொகை
11. திருக்குறள்
12. சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
13. சிந்தாமணி
14. கம்பராமாயணம்
15. பெரியபுராணம்
16. தேவார, திருவாசக திருவாய் மொழிகள்
17. இசைப் பயிற்சியும்
18. புத்துயிர்
19. அறிவியல்
20. கொழுகொம்பு
21. தமிழ்த்தென்றல்
22. இளமைவிருந்து
23. விஜயலட்சுமி பண்டிட்

விடையளி :

Question 1.
நாடகக்கல்வி பற்றி திரு.வி.க.வின் கருத்து யாது?
Answer:
நாடகக்கல்வி வாழ்விற்கு வேண்டா என்று யான் கூறேன். இடைக்காலத்தில் நாடகக் கலையால் தீமை விளைந்தபோது அதைச் சிலர் அழிக்க முயன்றதுண்டு. இப்போதைய நாடகம் நன்னிலையில்லை என்பதை ஈண்டு விளக்க வேண்டுவதில்லை. நாடகத்துக்கு நல்வழியில் புத்துயிர் வழங்க வேண்டும். நாடகத்தை நல்வழிப்படுத்தி மாணாக்கரை அதன்கண் தலைப்படுமாறு செய்யத் தமிழ்ப் பெரியோர் முயல்வாராக.

Question 2.
திரு.வி.க. – சிறுகுறிப்பு வரைக.
Answer:
(i) திரு.வி.க. என்று அனைவராலும் குறிப்பிடப்படும் திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தரனார் அரசியல், சமுதாயம், சமயம், தொழிலாளர் நலன் எனப் பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர்; சிறந்த மேடைப் பேச்சாளர்; தமிழ்த்தென்றல் என்றும் அழைக்கப்படுகிறார்.

(ii) இவர், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்ச்சோலை, பொதுமை வேட்டல், முருகன் அல்லது அழகு, இளமை விருந்து உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

Question 3.
எது கல்வியாகாது என்று திரு.வி.க. கூறுகிறார்?
Answer:
(i) இந்நாளில் ஏட்டுக் கல்வியே கல்வி என்னும் ஒரு கொள்கை எங்கும் நிலவி வருகிறது. ஏட்டுக் கல்வி மட்டும் கல்வி ஆகாது.

(ii) இந்நாளில் கல்வியென்பது பொருளற்றுக் கிடக்கிறது.

(iii) குறிப்பிட்ட பாடங்களை நெட்டுருச் செய்து, தேர்வில் தேறிப் பட்டம் பெற்று, ஒரு தொழிலில் நுழைவதற்குக் கல்வி ஒரு கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.

(iv) நாளடைவில் அக்கல்விக்கும் வாழ்விற்கும் தொடர்பில்லாமல் போகிறது. இது கல்வியாகாது என்று திரு.வி.க. கூறுகிறார்.

Question 4.
இசைக்கல்வி பற்றித் திரு.வி.க. கூறுவன யாவை?
Answer:
(i) இன்றைய சூழலில் இசைப்பயிற்சியும் இன்றியமையாதது. இசை பாட இயற்கை சிலருக்குத் துணை செய்யும்; சிலருக்கு துணை செய்வதில்லை. அத்துணை பெறாதார் இசை இன்பத்தையாதல் நுகரப் பயில்வாராக.

(ii) பழைய தமிழர் இசைத்துறையின் நிலை கண்டவர் என்று ஈண்டு இறுமாந்து கூறுகிறேன்.

(iii) தமிழ் யாழையும் குழலையும் என்னென்று சொல்வது? அந்த ழகரங்களை நினைக்கும் போதே அமிழ்தூறுகிறது. கொடிய காட்டு வேழங்களையும் பாணர் தம் யாழ் மயக்குறச் செய்யுமாம்.

(iv) அந்த யாழ் எங்கே? இனி இசைப் புலவர்தொகை நாட்டிற் பெருகப் பெருக நாடு பல வழியிலும் ஒழுங்கு பெறுதல் ஒருதலை. ஆகவே அத்துறை மீதும் மாணவர் கருத்துச் செலுத்த வேண்டும்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.3 பல்துறைக் கல்வி

Question 5.
திரு.வி.க. இயற்றிய நூல்கள் யாவை?
Answer:
(i) மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
(ii) பெண்ணின் பெருமை
(iii) தமிழ்ச்சோலை
(iv) பொதுமை வேட்டல்
(v) முருகன் அல்லது அழகு
(vi) இளமை விருந்து.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.2 புத்தியைத் தீட்டு

Students can Download 8th Tamil Chapter 4.2 புத்தியைத் தீட்டு Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.2 புத்தியைத் தீட்டு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.2 புத்தியைத் தீட்டு

Question 1.
அறிவின் பெருமையை விளக்கும் பழமொழிகளைத் திரட்டுக.
Answer:
(i), அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.
(ii) அறிய அறியக் கெடுவார் உண்டா ?
(iii) அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
(iv) அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
(v) அற்ப அறிவு அல்லற் கிடம்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் …………………. இன்றி வாழ்ந்தார்.
அ) சோம்பல்
ஆ) அகம்பாவம்
இ) வருத்தம்
ஈ) வெகுளி
Answer:
ஆ) அகம்பாவம்

Question 2.
‘கோயிலப்பா’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………
அ), கோ + அப்பா
ஆ) கோயில் + லப்பா
இ) கோயில் + அப்பா
ஈ) கோ + இல்லப்பா
Answer:
இ) கோயில் + அப்பா

Question 3.
பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………
அ) பகைவென்றாலும்
ஆ) பகைவனென்றாலும்
இ) பகைவன்வென்றாலும்
ஈ) பகைவனின்றாலும்
Answer:
ஆ) பகைவனென்றாலும்

குறுவினா

Question 1.
யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது?
Answer:
பிறரை மன்னிக்கத் தெரிந்தவரின் உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.2 புத்தியைத் தீட்டு

Question 2.
பகைவர்களிடம் நாம் நடந்துகொள்ள வேண்டிய முறை யாது?
Answer:
பகைவர்களிடம் நாம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

சிறுவினா

Question 1.
புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய முறைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?
Answer:
புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய முறைகள் :
(i) கத்தியைக் கூர்மையாக்குவதைத் தவிர்த்து விட்டு அறிவைச் கூர்மையாக்க வேண்டும்.

(ii) கோபம் நம் கண்ணை மறைத்துவிடும். அப்போது அறிவுடன் செயல்பட்டு சரியான முடிவெடுக்க வேண்டும்.

(iii) நம்மை அழிக்க நினைக்கும் பகைவர்களிடமும் அன்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

(iv) பிறருடைய குறைகளை மன்னிக்கத் தெரிந்தவர்களின் உள்ளம் மாணிக்கக் கோயிலைப் போன்றது. இதை மறந்தவர்களின் வாழ்வு அடையாளம் தெரியாமல் மறைந்து போய்விடும்.

(v) நாம் செருக்கின்றி வாழ வேண்டும். செருக்குடன் வாழ்வதால் நமக்கு எந்த லாபமும் இல்லை என்பதை எண்ணிப் பார்த்தால் நம் வாழ்வு தெளிவாகும். இவையே புத்தியைத் தீட்டி வாழவேண்டிய முறைகளாகக் கவிஞர் கூறுவனவாகும்.

சிந்தனை வினா

Question 1.
உங்கள் மீது பிறர் வெறுப்புக் காட்டினால் அவர்களை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?
Answer:
(i) என் மீது பிறர் வெறுப்புக் காட்டினால் நான் என் பொறுமையால் அவரை வெல்வேன்.
(ii) அன்போடு பழகுவேன்.
(iii) வெறுப்பதற்கான காரணம் அறிந்து அதைச் சரி செய்வேன்.
(iv) அவருடைய மனதில் உள்ள குழப்பத்தை நீக்குவேன்.
(v) விட்டுக் கொடுத்துப் பழகும் என்னுடைய செயல்பாட்டை அறிந்து அவர் தன்னை மாற்றிக் கொள்ளும்படிச் செய்வேன்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.2 புத்தியைத் தீட்டு

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :
1. தடம் – அடையாளம்
2. அகம்பாவம் – செருக்கு

நிரப்புக :

1. ஆலங்குடி சோமு ………………………… ஆசிரியராகப் புகழ் பெற்றவர்.
2. ஆலங்குடி சோமு தமிழ்நாடு அரசின் ………………….. விருது பெற்றவர்.
3. தீட்ட வேண்டியது ……………………
4. …………………… கண்ணை மறைத்துவிடும்.
5. மன்னிக்கத் தெரிந்தவனின் உள்ளம் ……………………..
6. அகம்பாவத்தினால் ஒரு …………………….. இல்லை.
7. பகைவனிடமும் ……………….. காட்ட வேண்டும்.
Answer:
1. திரைப்படப் பாடல்
2. கலைமாமணி
3. புத்தி
4. ஆத்திரம்
5. மாணிக்கக் கோயில்
6. லாபமும்
7. அன்பு

விடையளி:

Question 1.
ஆலங்குடி சோமு – குறிப்பு வரைக.
Answer:
(i) ஆலங்குடி சோமு திரைப்படப் பாடல் ஆசிரியராகப் புகழ்பெற்றவர்.
(ii) சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி என்னும் ஊரில் பிறந்தவர்.
(iii) தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.2 புத்தியைத் தீட்டு

நூல் வெளி
ஆலங்குடி சோமு திரைப்படப் பாடல் ஆசிரியராகப் புகழ்பெற்றவர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி என்னும் ஊரில் பிறந்தவர். தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.2 புத்தியைத் தீட்டு 1
இவரது திரையிசைப் பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.1 கல்வி அழகே அழகு

Students can Download 8th Tamil Chapter 4.1 கல்வி அழகே அழகு Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.1 கல்வி அழகே அழகு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.1 கல்வி அழகே அழகு

Question 1.
கல்வி குறித்து வழங்கப்படும் பழமொழிகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
(i) அறிய அறியக் கெடுவார் உண்டா ?
(ii) இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
(iii) கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை
(iv) கல்லாதவரே கண்ணில்லாதவர்.
(v) கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.

Question 2.
கற்றோரின் சிறப்புகளைப் பற்றிப் பிற நூல்களில் இடம்பெற்ற பாடல்களைத் தொகுத்து எழுதுக.
Answer:
அறிவுடையார் தாமே உணர்வர்
பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,
மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,
விதையாமை நாறுவ வித்து உள; மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு. – காரியாசான்

Question 3.
பின்வரும் நாலடியார் பாடலைப் படித்துச் சுவைக்க.
Answer:
கல்வி கரையில கற்பவர் நாள் சில
மெல்ல நினைக்கின் பிணி பல – தெள்ளிதின்
ஆராய்ந்தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
கற்றவருக்கு அழகு தருவது ……………….
அ) தங்கம்
ஆ) வெள்ளி
இ) வைரம்
ஈ) கல்வி
Answer:
ஈ) கல்வி

Question 2.
‘கலனல்லால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………..
அ) கலன் + லல்லால்
ஆ) கலம் + அல்லால்
இ) கலன் + அல்லால்
ஈ) கலன் + னல்லால்
Answer:
இ) கலன் + அல்லால்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.1 கல்வி அழகே அழகு

சொற்றொடரில் அமைத்து எழுதுக

1. அழகு – பெண்களுக்கு அணிகலன்களை விட புன்னகையே அழகு தரும்.
2. கற்றவர் – கற்றவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு கிடைக்கும்.
3. அணிகலன் – ஐம்பெருங்காப்பியங்கள் தமிழன்னைக்கு அணிகலன்களாகத் திகழ்கின்றன.

குறுவினா

Question 1.
யாருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை?
Answer:
கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும். ஆகையால் அவருக்கு அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் தேவையில்லை.

சிறுவினா

Question 1.
நீதிநெறி விளக்கப்பாடல் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
நீதிநெறி விளக்கப்பாடல் கூறும் கருத்துகள் :
(i) ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலனுக்கு மேலும் அழகூட்ட வேறு அணிகலன்கள் தேவையில்லை.
(ii) அதுபோலக் கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும்.
(iii) ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை

சிந்தனை வினா

Question 1.
கல்வியின் பயன்களாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.
Answer:
(i) அறியாமையைப் போக்கி அறிவை விரிவாக்கும்.
(ii) அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நால்வகைப் பயனையும் பெறலாம்.
(iii) கவலையின்றி வாழத் துணைபுரியும்.
(iv) கல்வி கற்பதனால் வாழ்க்கையில் எதிர்ப்படும் இடர்களை விரட்ட முடியும்.
(v) கல்வியால் நாட்டில் நன்னெறி படரும்.
(vi) கல்வியால் மக்கள் மாண்புறுவர்.

கூடுதல் வினாக்கள

சொல்லும் பொருளும் :

1. கலன் – அணிகலன்
2. முற்ற – ஒளிர

நிரப்புக :

1. ஒளிரும் மணிகளால் செய்யப்பட்டது ………………………
2. குமரகுருபரர் ………………….. நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
3. கந்தர் கலிவெண்பாவை இயற்றியவர் ……………………
4. குமரகுருபரர் இயற்றிய பிள்ளைத்தமிழ் நூல்கள் ………………………………
5. நீதிநெறி விளக்கம் ……………….. வெண்பாக்களை உடையது.
6. மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளைச் சுட்டிக்காட்டும் குமரகுருபரரின் நூல் ……………………….
7. கற்றவருக்கு அழகு சேர்க்க …………………….. தேவையில்லை.
Answer:
1. அணிகலன்
2. பதினேழாம்
3. குமரகுருபரர்
4. மீனாட்சியம்மை பிள்ளைத்த முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
5. 102
6. நீதிநெறி விளக்கம்
7. அணிகலன்கள்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.1 கல்வி அழகே அழகு

விடையளி :

Question 1.
குமரகுருபரர் பற்றி எழுதுக.
Answer:
(i) குமரகுருபரர் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
(ii) இவர் தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் பல சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளார்.

Question 2.
குமரகுருபரர் இயற்றிய நூல்கள் யாவை?
Answer:
இயற்றிய நூல்கள் :
(i) கந்தர் கலிவெண்பா
(ii) கயிலைக் கலம்பகம்
(iii) சகலகலாவல்லி மாலை
(iv) மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
(v) முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

Question 3.
நீதிநெறி விளக்கம் – பெயர்க்காரணம் எழுதுக.
Answer:
மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளைச் சுட்டிக்காட்டுவதால் இந்நூல் ‘நீதி நெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது. இந்நூலில் கடவுள் வாழ்த்து உட்பட 102 வெண்பாக்கள் உள்ளன.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.1 கல்வி அழகே அழகு

ஆசிரியர் குறிப்பு
குமரகுருபரர் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவர் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கும் பல சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளார். கந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஆகியன அவற்றுள் சிலவாகும்.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.1 கல்வி அழகே அழகு 1
மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளைச் சுட்டிக்காட்டுவதால் இந்நூல் நீதிநெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது. கடவுள் வாழ்த்து உட்பட 102 வெண்பாக்கள் இந்நூலில் உள்ளன. இந்நூலின் பதின்மூன்றாம் பாடல் நமக்குப் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளது.

பாடலின் பொருள்
ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலனுக்கு மேலும் அழகூட்ட வேறு அணிகலன்கள் தேவையில்லை; அதுபோலக் கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும். ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம்

Students can Download 8th Tamil Chapter 3.5 எச்சம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.5 எச்சம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம்

Question 1.
‘வந்த’ என்னும் சொல்லைப் பயன்படுத்தி வெவ்வேறு தொடர்களை எழுதுக.
(எ.கா.) வந்த மாணவன்.
வந்த மாடு.
Answer:
(i) வந்த குழந்தை
(ii) வந்த சிறுவன்
(iii) வந்த தாத்தா
(iv) வந்த மாணவர்கள்
(v) வந்த மழை
(vi) வந்த திரைப்படம்
(vii) வந்த அம்மா .

Question 2.
‘வரைந்து’ என்னும் சொல்லைப் பயன்படுத்தி வெவ்வேறு தொடர்களை எழுதுக.
(எ.கா.) வரைந்து வந்தான்.
வரைந்து முடித்தான்.
Answer:
(i) வரைந்து பார்த்தான்.
(ii) வரைந்து வைத்தான்.
(iii) வரைந்து கொடுத்தான்.
(iv) வரைந்து வியந்தான்.
(v) வரைந்து மகிழ்ந்தான்.
(vi) வரைந்து கற்றான்.
(vii) வரைந்து தெளிந்தான்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் …………… எனப்படும்.
அ) முற்று
ஆ) எச்சம்
இ) முற்றெச்சம்
ஈ) வினையெச்சம்
Answer:
ஆ) எச்சம்

Question 2.
கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் …………………
அ) படித்து
ஆ) எழுதி
இ) வந்து
ஈ) பார்த்த
Answer:
ஈ) பார்த்த

Question 3.
குறிப்பு வினையெச்சம் ……………….. வெளிப்படையாகக் காட்டாது.
அ) காலத்தை
ஆ) வினையை
இ) பண்பினை
ஈ) பெயரை
Answer:
அ) காலத்தை

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம்

பொருத்துக

1. நடந்து – முற்றெச்சம்
2. பேசிய – குறிப்புப் பெயரெச்சம்
3. எடுத்தனன் உண்டான் – பெயரெச்சம்
4. பெரிய – வினையெச்சம்
Answer:
1. நடந்து – வினையெச்சம்
2. பேசிய – பெயரெச்சம்
3. எடுத்தனன் உண்டான் – முற்றெச்சம்
4. பெரிய – குறிப்புப்

பெயரெச்சம் கீழ்க்காணும் சொற்களைப் பெயரெச்சம் வினையெச்சம் என வகைப்படுத்துக

நல்ல, படுத்து, பாய்ந்து, எறிந்த, கடந்து, வீழ்ந்த, மாட்டிய , பிடித்து, அழைத்த, பார்த்து.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம் 4

சிறுவினா

Question 1.
எச்சம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
Answer:
(i) பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும்.
(ii) இது பெயரெச்சம் , வினையெச்சம் என்று இருவகைப்படும்.
(எ.கா.) படித்த மாணவன்.
படித்த பள்ளி.

Question 2.
அழகிய மரம்’ – எச்ச வகையை விளக்குக.
Answer:
(i) அழகிய மரம் – பெயரெச்சம்.
(ii) பெயரைக் கொண்டு முடியும் எச்சம் ஆகும்.
(iii) இத்தொடரில் ‘அழகிய’ என்ற மரம் பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிந்ததால் பெயரெச்சமாயிற்று.

Question 3.
முற்றெச்சத்தைச் சான்றுடன் விளக்குக.
Answer:
ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும்.

(எ.கா.) வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள். இத்தொடரில் படித்தனள் என்னும் வினைமுற்றுச் சொல் படித்து என்னும் வினையெச்சப் பொருளைத் தருகிறது. எனவே இது முற்றெச்சம் ஆகும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம்

Question 4.
வினையெச்சத்தின் வகைகளை விளக்குக.
Answer:
வினையெச்சத்தின் வகைகள் : வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இரு வகைப்படும்.

(i) தெரிநிலை வினையெச்சம் :
செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.

(எ.கா.) எழுதி வந்தான். இத்தொடரில் எழுதி என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலையும் இறந்த காலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது.

(ii) குறிப்பு வினையெச்சம் :
காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்தி வரும் வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் எனப்படும்.

(எ.கா.) மெல்ல வந்தான். இத்தொடரில் மெல்ல என்னும் சொல் காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல், மெதுவாக என்னும் பண்பை மட்டும் உணர்த்துகிறது.

மொழியை ஆள்வோம்

கேட்க :

Question 1.
உடல்நலம் குறித்த விழிப்புணர்வு உரைகளின் ஒலிப்பதிவுகளைக் கேட்டு மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

கீழ்க்காணும் தலைப்புகளில் இரண்டு நிமிடம் பேசுக

உணவே மருந்து
அனைவருக்கும் வணக்கம்!

மக்கள் அனைவரும் நெடுநாள் வாழவே விரும்புவர். நெடுநாள் வாழ நல்ல உடல் வேண்டும். எனவேதான் திருமூலர், ‘உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே’ என்று பாடியுள்ளார். உடல் வளர்ச்சிக்குத் தேவையான உணவு, உடலைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும்.

உயிர் வாழ்வதற்கு உணவு இன்றியமையாதது. நாம் உண்ணும் உணவு உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றது. தேய்ந்து போகும் திசுக்களைப் புதுப்பிக்கின்றது. மூளை, இதயம், நுரையீரல் முதலான உடல் உறுப்புகள் தத்தம் தொழிலைத் தவறாது செய்து வர நமக்குப் பல்வேறு சத்துகள் தேவைப்படுகின்றன. அவற்றையெல்லாம் நாம் உணவின் வழியாகத்தான் பெற வேண்டும்.

எல்லாச் சத்துகளும் கிடைக்கும்படியாக நம் உணவுப் பழக்கம் அமைய வேண்டும். ஆனால் நாம் நாகரிகம் என்னும் பெயரால் பின்பற்றும் மேற்கத்திய உணவு முறைகள் பெருமளவு கொழுப்புச் சத்தையே கொண்டவையாகும். மேற்கத்திய உணவு வகைகளில் நமக்குத் தேவையான நார்ச்சத்துகளும் நீர்ச்சத்துகளும் கிடைக்காது.

மேற்கத்திய உணவுகளை உண்ணுவதால் நோய்கள் நம்மிடம் ஓடோடி வந்து ஒட்டிக் கொள்ளும். விரைவு உணவகங்களுக்குச் சென்று சாப்பிடுவது, பொட்டலப்படுத்தப்பட்ட தின்பண்டங்களை வாங்கிக் கொறிப்பது, புட்டிகளில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை அருந்துவது தவறு. இவற்றில் உள்ள கொழுப்புச் சத்தும் சுவையூட்டச் சேர்க்கப்படும் வேதிப் பொருள்களும் உடலுக்கு ஊறு செய்பவையாகும். இவற்றை உண்பது காசைக் கொடுத்து நோயை வாங்குவதற்கு இணையாகும்.

நம் ஊரில் கிடைக்கும் எல்லாக் காய்கறிகளையும் பழ வகைகளையும் வாங்கிக் சாப்பிடுவதுதான் சிறந்தது. நாம் உண்ணும் அனைத்திலும் ஏதேனும் ஒன்று அல்லது பலச்சத்துகள் மலிந்துள்ளன. நம் உடல்நிலைக்கு ஏற்ற நமக்குத் தேவையான சத்துகளைத் தரக்கூடிய உணவுகளை போதுமான அளவிற்கு உண்பதுதான் ஆரோக்கிய உணவு என்பதாகும். நாம் விரும்பி உண்ணும் உணவினையே அதில் சேர்க்கப்படும் பொருட்களின் அளவினை கூட்டுதல் அல்லது குறைத்தல் மூலம் ஆரோக்கிய உணவாய் மாற்றிக் கொள்ள இயலும்.

நாச்சுவை கருதி உண்ணாமல், உடல் நலங்கருதி உண்ணுதலே நல்லது. உணவை விரைவாக விழுங்குதல் கூடாது. நன்றாக மென்று விழுங்குதல் வேண்டும். அப்போதுதான் வாயிலுள்ள உமிழ்நீர் வேண்டிய அளவு சுரந்து உணவுடன் கலக்கும்.

உமிழ்நீர் கலக்காத உணவு உள்ளே சென்றாலும் அது செரிக்காது. குடலும் தன் செரிமான ஆற்றலை இழந்து விடும். உணவின் சத்துகள் வீணாகாமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். காய்கறிகளை முக்கால் வேக்காட்டில் வேகவைத்து உண்ணுதல் வேண்டும்.

தண்ணீ ரும் மருந்தே. ‘நீரின்றியமையாது உலகு’ என்பது வள்ளுவம். இயற்கை உணவுப் பொருள்களில் நீரில்லாத உணவுப் பொருள்களே இல்லை. எல்லா வகையான உணவுப் பொருள்களும் விளைவதற்கு நீர் காரணமாக அமைகிறது.

வெப்பம் மிகுந்த கோடைக்காலத்தில் வெள்ளரிக்காய், பப்பாளிப் பழம், முலாப்பழம் முதலானவற்றைச் சாப்பிடலாம். இளநீர் பருகலாம். நீர்மோர் அருந்தலாம். இவை கோடைக்காலத்தில் நம் உடலை வெப்புநோய் முதலானவை அணுகாமல் காப்பாற்றும். கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நாம் அன்றாடம் உண்ணும் உணவில் மருத்துவக் குணமும் இருப்பதால் உணவே மருந்து என்று கூறுவது பொருத்தமாகிறதல்லவா?

‘பசித்துப் புசி’ என்பதனை மனதில் வைத்து பசித்தப் பின் உண்ணுவதனையும் அளவோடு உண்ணுதலையும் வழக்கமாகக் கொள்ள வேண்டும். அவ்வாறு இருந்தால் நாம் நோயற்ற வாழ்வை வாழலாம்.

சொல்லக்கேட்டு எழுதுக

நலமான உடலுக்கு இரண்டுவேளை சிற்றுண்டியும் ஒருவேளை பேருண்டியும் போதுமானது. காலை உணவைத் தவிர்த்தல் கூடாது. இரவெல்லாம் வெற்றுக் குடலுடன் இருந்த உடலுக்குக் குளிர்ச்சியான உணவு மிகவும் நல்லது. மதிய உணவில் காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றை அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம்

அரிசி உணவை அளவாக உண்ண வேண்டும். மிகுதியான காரத்தையும் உப்பையும் தவிர்க்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவை உட்கொள்ள வேண்டும். இரவு எளிமையான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இவையே உடல்நலம் பேணும் வழிமுறைகளாகும்.

அறிந்து பயன்படுத்துவோம்

உவமைத் தொடர்கள்

நாம் பேச்சிலும் எழுத்திலும் கருத்துகளை எளிதாக விளக்குவதற்காகச் சில தொடர்களைப் பயன்படுத்துவோம். அவை உவமைத் தொடர்கள் எனப்படும். ஒவ்வொரு உவமைத் தொடருக்கும் தனிப் பொருள் உண்டு.

(எ.கா.) 1. மடை திறந்த வெள்ளம் போல – தடையின்றி மிகுதியாக.
திருவிழாவைக் காண மடை திறந்த வெள்ளம் போல மக்கள் வந்தனர்.

2. உள்ளங்கை நெல்லிக்கனி போல – வெளிப்படைத் தன்மை
பாரதியின் பாடல்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல அனைவருக்கும் விளங்கும்.

பொருத்துக:

1. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல – ஒற்றுமையின்மை
2. கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல – பயனற்ற செயல்
3. பசு மரத்து ஆணி போல – தற்செயல் நிகழ்வு
4. விழலுக்கு இறைத்த நீர் போல – எதிர்பாரா நிகழ்வு
5. நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல – எளிதில் மனத்தில் பதிதல்
Answer:
1. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல ‘ – தற்செயல் நிகழ்வு
2. கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல – எதிர்பாரா நிகழ்வு
3. பசு மரத்து ஆணி போல – எளிதில் மனத்தில் பதிதல்
4. விழலுக்கு இறைத்த நீர் போல – பயனற்ற செயல்
5. நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல – ஒற்றுமையின்மை

உவமைத் தொடர்களைப் பயன்படுத்தித் தொடர் அமைக்க.

Question 1.
குன்றின் மேலிட்ட விளக்கைப் போல
Answer:
காந்தியடிகளின் புகழ், குன்றின் மேலிட்ட விளக்குப் போல் உலகெங்கும் ஒளிவீசுகின்றது.

Question 2.
வேலியே பயிரை மேய்ந்தது போல
Answer:
வேலியே பயிரை மேய்ந்தது போல் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களே தவறு செய்கிறார்கள்.

Question 3.
பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல
Answer:
பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் நான் எதிர்பார்க்காமலேயே என் பிறந்த நாளுக்கு எனக்குப் புத்தாடை வாங்கித் தந்தார் என் அப்பா, என் மாமா மிதிவண்டி வாங்கித் தந்தார்.

Question 4.
உடலும் உயிரும் போல
Answer:
கந்தனும் குமரனும் உடலும் உயிரும் போல எப்போதும் ஒருவரை ஒருவர் பிரியாமல் இணைந்தே இருப்பார்கள்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம்

Question 5.
கிணற்றுத் தவளை போல
Answer:
கந்தன் கிணற்றுத் தவளை போல நாட்டு நடப்புகளை அறியாமல் இருந்தான்.

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

முன்னுரை – நோய் வரக் காரணங்கள் – நோய் தீர்க்கும் வழிமுறைகள் – வருமுன் காத்தல் – உணவும் மருந்தும் – உடற்பயிற்சியின் தேவை – முடிவுரை

முன்னுரை :
நம்மிடம் என்னதான் கல்வி, செல்வம் முதலியவை இருந்தாலும் உடல் நலத்தோடு நீண்ட ஆயுளுடன் வாழ்வது முக்கியமாகும். உடல் நலத்துடன் கூடிய வாழ்வு பல கோடி மதிப்புடைய சொத்துக்குச் சமமானதாகும். அவ்விதம் நோயற்ற வாழ்வினை வாழ நாம் செய்ய வேண்டியனவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நோய் வரக் காரணங்கள் :
இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஓய்வின்மை, காலம் தவறிய உணவு. உணவுப் பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவையே பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்குக் காரணமாகும். துரித உணவுக் கலாச்சாரத்தில் மூழ்கியதே பல நோய்கள் வருவதற்குக் காரணம்.

மாசு நிறைந்த சுற்றுச்சூழலும் நோய்க்குக் காரணமாகின்றது. இயற்கை வேளாண்மையை மறந்து, நல்ல விளைச்சல் வேண்டி நவீன உரங்களையும் பூச்சிக் கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தி நிலத்தையும் மாசுபடுத்திவிட்டோம். இவ்வகை உணவினால் நோய்கள் அணுகுவதற்கு நாமே காரணமாகிவிட்டோம்.

நோய் தீர்க்கும் வழிமுறைகள் :
நாம் உண்ணும் உணவின் அளவை அறிந்து உண்ணுவது, சரியான உடற்பயிற்சி – மேற்கொள்வது, நம் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் திட்டமிட்டுச் செயல்களைச் செய்வது, நோயின் நிலை அறிந்து அதற்கேற்ற உணவையும் மருந்துகளையும் உட்கொள்ளுதல் போன்றவை நோயைத் தீர்க்கும் வழிமுறைகள் ஆகும்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது அவசியம். அப்போதுதான் நோய்கள் நம்மை அணுகாது. வீட்டின் உள்ளேயும் வீட்டைச் சுற்றியும் சுத்தத்தைப் பேண வேண்டும். ஈ, கொசு போன்றவை நம் வீட்டை அண்டாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

வருமுன் காத்தல் :
பருவநிலைகள் மாறும்போது அதற்கேற்ற உணவுகளை உண்ணுதல் அவசியம். கோடைக்காலத்தில் பழச்சாறுகளை அருந்துதல், மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்கவும், காய்ச்சல் வராமல் இருக்கவும் நம் தமிழ் மருத்துவ முறைகளை அறிந்து அவற்றை பின்பற்றுதல் வேண்டும்.

சிறுவர்களுக்கான ஆரோக்கிய உணவுகளை அறிந்து அவற்றை கொடுக்க வேண்டும். “நோய்நாடி நோய்முதல் நாடி” என்ற வள்ளுவரின் வாக்கின்படி நோயை அறிந்து அவை முதிர்ந்து நம்மைத் துன்பப்படுத்துவதற்கு முன் அந்நோயை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும். இவையே வருமுன் காத்தல் ஆகும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம்

உணவும் மருந்தும் :
உணவு வகைகளே நமது உடல் நலத்திற்கு அடிப்படை என்று கூறினால் அது மிகையாகாது. உணவைத் தகுந்த நேரத்தில் ஏற்ற அளவில் உட்கொள்ள வேண்டும். காலை உணவைத் தவிர்த்தல் கூடாது. இரவெல்லாம் வெற்றுக் குடலுடன் இருந்த உடலுக்குக் குளிர்ச்சியான உணவு மிகவும் நல்லது.

மதிய உணவில் காய்கறிகள் கீரைகள் ஆகியவற்றை அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசி உணவை அளவாக உண்ண வேண்டும். மிகுதியான காரத்தையும் உப்பையும் தவிர்க்க வேண்டும். இரவு எளிமையான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இவையே உடல் நலம் பேணும் வழிமுறைகளாகும்.

உடற்பயிற்சியின் தேவை :
நாம் நோயின்றி வாழ உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. ‘ஓடி விளையாடு பாப்பா… நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா’ என்று பாடிய பாரதியார், உடற்பயிற்சியைச் சிறுவயது முதலே அனைவரும் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். நாம் தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால் உடல் சுறுசுறுப்புடனும், மூளை புத்துணர்ச்சியுடனும் காணப்படும். தவிர உடற்பயிற்சி பல நோய்களிலிருந்து விடுவிக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது என்பதே அறிவியல் கண்ட உணவாகும். இதனைக் கவிமணி,

“காலை மாலை உலாவிநிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஓடிப் போவனே!
என்கிறார்.

முடிவுரை :
நோயற்ற வாழ்விற்குச் சுகாதாரம் அவசியம். ‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்ற ஔவையின் வாக்குப்படி நமக்குக் கிடைத்த இவ்வுடலை நோயின்றி வைத்திருப்பது நம் கடமையாகும்.

மொழியோடு விளையாடு

கீழ்க்காணும் படம் சார்ந்த சொற்களை எழுதுக.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம் 2
1. பட்டை
2. வசம்பு
3. இலவங்கம்
4. அன்னாசிப்பூ
5. மிளகு
6. ஓமம்
7. சீரகம்
8. கருஞ்சீரகம்
9. சோம்பு
10. பெருங்காயம்
11. சித்தரத்தை

வட்டத்திலுள்ள பழமொழிகளைக் கண்டுபிடித்து எழுதுக

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம் 3
1. முயற்சி திருவினை ஆக்கும்.
2. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
3. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
4. சுத்தம் சோறு போடும்.
5. வருமுன் காப்போம்.
6. அறிவே ஆற்றல்
7. பருவத்தே பயிர்செய்.
8. பசித்துப் புசி.
9. சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்.
10. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள்…
1. காலை மாலை உடற்பயிற்சி செய்வேன்.
2. உரிய நேரத்தில் உறங்கச் செல்வேன்; உரிய நேரத்தில் விழித்தெழுவேன்.

கலைச்சொல் அறிவோம்

1. நோய் – Disease
2. மூலிகை – Herbs
3. சிறுதானியங்கள் – Millets
4. பட்டயக் கணக்கர் – Auditor
5. பக்கவிளைவு – Side Effect
6. நுண்ணுயிர் முறி – Antibiotic
7. மரபணு – Gene
8. ஒவ்வாமை – Allergy

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம்

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் …………….. எனப்படும்.
2. எச்சம் ……………… வகைப்படும்.
3. பெயரைக் கொண்டு முடியும் எச்சம் ………………..
4. பெயரெச்சம் ……………….. காலத்திலும் வரும்.
5. செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் ………………… பெயரெச்சம்.
6. பெயரெச்சம் ………………. வகைப்படும்.
7. செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் ……………….. பெயரெச்சம்.
8. வினையைக் கொண்டு முடியும் எச்சம் ………………….
9. செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் ……………….. வினையெச்சம்.
10. காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்தி வரும் வினையெச்சம் …………………..
Answer:
1. எச்சம்
2. இரண்டு
3. பெயரெச்சம்
4. மூன்று
5. தெரிநிலை
6. இரண்டு
7. குறிப்புப்
8. வினையெச்சம்
9. தெரிநிலை
10. குறிப்பு வினையெச்சம்

விடையளி :

Question 1.
எச்சம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
எச்சம் இரண்டு வகைப்படும். அவை பெயரெச்சம், வினையெச்சம் என்பனவாம்.

Question 2.
பெயரெச்சம் சான்றுடன் விளக்குக.
Answer:
பொருளைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் ஆகும். பெயரெச்சம் மூன்று காலத்திலும் வரும்.
(எ.கா) பாடிய பாடல் – இறந்தகாலப் பெயரெச்சம்
பாடுகின்ற பாடல் – நிகழ்காலப் பெயரெச்சம்
பாடும் பாடல் – எதிர்காலப் பெயரெச்சம்

Question 3.
தெரிநிலை பெயரெச்சம் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் தெரிநிலைப் பெயரெச்சம் எனப்படும்.
(எ.கா) எழுதிய கடிதம்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம்

Question 4.
குறிப்புப் பெயரெச்சம் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.
(எ.கா) சிறிய கடிதம்.

Question 5.
வினையெச்சம் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் எனப்படும்.
(எ.கா) படித்து முடித்தான்.

Question 6.
தெரிநிலை வினையெச்சம் என்றால் என்ன?
Answer:
செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.
(எ.கா) எழுதி வந்தான்.

Question 7.
குறிப்பு வினையெச்சம் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்தி வரும் வினையெச்சம் குறிப்பு வினையெச்சம் எனப்படும்.
(எ.கா) மெல்ல வந்தான்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.4 தலைக்குள் ஒர் உலகம்

Students can Download 8th Tamil Chapter 3.4 தலைக்குள் ஒர் உலகம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.4 தலைக்குள் ஒர் உலகம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.4 தலைக்குள் ஒர் உலகம்

Question 1.
மூளையின் செயல்கள் குறித்துப் பிற நூல்களிலிருந்து தகவல்களைத் திரட்டி எழுதுக.
Answer:
மனித உடல் இருபுறமும் சமமாக உள்ளது. அதாவது இடது, வலது பாகங்கள் கண்ணாடி பிரதிபலிப்பாக உள்ளன. நமக்கு காதுகள், கண்கள், மூக்கு துவாரங்கள், புஜங்கள், கால்கள், நுரையீரல்கள், சிறுநீரகங்கள் என அனைத்தும் இரண்டிரண்டு உள்ளன. மூக்கு, வாய், தாடை, மார்புக்கூடு, முதுகெலும்பு இவை ஒன்றுதான் உள்ளது. இவை உடம்பின் நடுப்பகுதியில் உள்ளது.

மூளையைப் பொறுத்தமட்டில் இடது, வலது என இரு பாதிகளாக உள்ளன. ஒரு நரம்புக் குவியல் இரண்டையும் இணைக்கிறது. இந்த இணைப்பு “Corpus Callosum” எனப்படும். வால்நட் பருப்பு இணைந்துள்ளது போலவே காணப்படும். செரிபெரம் இரு பகுதிகளை கொண்டது. இடது பாகம் உடலின் வலது புறத்தையும் வலது பாகம் உடலின் இடது புறத்தையும் கவனித்துக் கொள்கிறது.

“Corpus Callosum” பகுதியைச் சமமாக வெட்டினால் இரு பாகங்களான மூளைக்குத் தொடர்பே இருக்காது. ஒரு பாகம் செயல்படுவது மற்றொரு பாகத்துக்குத் தெரியாது. இரு பகுதிகளும் சமமானதா? ஒரு பாகம் செய்ய முடியாததை மற்றது செய்யுமா? அல்லது செயல்படுத்துவதில் வித்தியாசம் உள்ளதா? என்ற வினா எழுப்பப்பட்டது. 1861இல் இரண்டும் வெவ்வேறானவை எனப்பட்டது.

1950களின் ஆரம்பங்களில் தூக்கம் பற்றி ஆராயப்பட்டது. தூங்கும்போது விழிக்கரு மெதுவாக நகரும். விழித்திருக்கும் போது ஒளி பட்டவுடன் வேகமாக நகரும். இதற்கு “Rem Sleep” எனப் பெயர். தூங்கும் போது இந்த ‘ரெம் ஸ்லீப்’ நேரத்தில்தான் கனவுகள் தோன்றுகின்றன. இந்த நேரத்தில் விழிப்பு ஏற்பட்டால் அவர்கள் தாம் கண்ட கனவை நினைப்பர்.

தூக்கம் எதற்கு அவசியம்? ஓய்வுக்கு என அறிவோம். கண்களைத் திறந்து கொண்டு சிறிது நேரம் அமைதியாய்ப் படுத்தாலே போதும். ஆனால் இதைவிட தூங்கி எழுந்தால் தான் அதிக புத்துணர்ச்சி இருக்கும். தூங்கும் போது புரண்டு படுத்தல், நிலை மாறுதல் எனப் பல நடக்கின்றன. சும்மா ஓய்வு எடுப்பது நமக்கு நிம்மதி தராது. தூக்கம் மிக மிக அவசியம். தண்ணீர் இல்லாமல் இருப்பதைவிட தூக்கம் இல்லாமல் இருந்தால் ஒருவர் விரைவில் இறந்து விடுவார்.

ஆக ரெம் ஸ்லீப் மிக மிக அவசியம். ஒருவன் அடிக்கடி விழித்தெழுந்தால் அதன் விளைவை மறுநாள் இரவில் அவன் அறிவான். மனித மூளை அதிக சிக்கல்கள் நிறைந்தது. அவன் விழித்திருக்கும் போது அவனது குழப்பங்கள் நினைப்புகள் முதலியவற்றால் மிகவும் களைப்படைந்திருப்பதால் தூக்கம் மிக மிக அவசியம்.

வீட்டைக் கூட்டிப் பெருக்குவது போல் மூளையின் குப்பைகளை நீக்கிப் புத்துணர்ச்சி அளிக்க தூக்கம் தேவைப்படுகிறது. ஒருவரும் மூளையைப் பற்றி முழுவதும் அறிந்தவர் இல்லை . ஏனெனில் மிகவும் சிக்கல்கள் நிறைந்தது.

மூளை புத்தகங்கள் எழுதுகிறது, பாட்டு கேட்கிறது. கலைகள் புரிகிறது. இரக்கப்படுகிறது. மகிழ்ச்சியடைகிறது. அன்பு செலுத்துகிறது. அனைத்து விதமான குழப்பங்களுக்கும் தீர்வு சொல்கிறது. இந்த மூளையே சில கெட்ட செயல்களைச் செய்யவும் உதவுகிறது.

பயப்படுகிறது, வெறுக்கிறது, சந்தேகப்படுகிறது, போர் புரிகிறது, மூளை பற்றிய படிப்படியான ஆராய்ச்சி ஆக்க சக்திகளுக்குப் பயன்பட்டு கெட்ட சக்திகளுக்கு உடன்படாமல் இருந்தால் சரிதான். அப்போதுதான் நாம் அழகிய பாதுகாப்பான அமைதியான உலகைக் காணலாம்.

– (நூல் – மனித மூளையின் பாகங்களும் அவைகளின் இயக்கங்களும்)

மதிப்பீடு

Question 1.
மூளையின் வலது, இடது பாகங்களின் செயல்பாடுகள் பற்றித் தொகுத்து எழுதுக.
Answer:
முன்னுரை :
உலகத்திலேயே மிக மிக வியப்பானது மனித மூளை. அதன் செயல்பாடுகள் விந்தையானவை மட்டுமல்ல, புதிரானவை. மருத்துவ மேதைகளும் அறிவியலாளர்களும் இதனைத் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். நமது உடல் இயக்கத்திற்கும் மன இயக்கத்திற்கும் காரணமான மூளையின் வலது, இடது பாகங்களின் செயல்பாடுகள் பற்றி அறிவோம்.

மூளைக்குச் செல்லும் நரம்புகளில் இட – வல மாற்றம் ஒன்று நிகழ்கிறது. அதாவது வலப்பக்கச் செய்திகள் மூளையின் இடப்பக்கப் பகுதிக்கும், இடப்பக்கச் செய்திகள் வலப்பக்கப் பகுதிக்கும் செல்கின்றன. நம்மில் பெரும்பாலானவர்கள் வலது கைக்காரர்களாக இருப்பதற்குக் காரணம் நம் மூளையின் இடது பகுதியின் அதிகப்படியான பாதிப்பினால்தான் என்று சொல்கிறார்கள்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.4 தலைக்குள் ஒர் உலகம்

இடது பாதிதான் பேச, எழுத, கணக்கிட, தர்க்கரீதியில் சிந்திக்க உதவுகிறது. அறிவாற்றல், பிரச்சனைகளை அலசுதல், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளில் சிறப்பது இவற்றையெல்லாம் இடது பகுதி பார்த்துக் கொள்கிறது. நம் மொழி அறிவுகூட இடது பகுதியில்தான் நிகழ்கிறது.

இடதுபாதி :
இடதுபாதி அண்ண ன் என்றால் வலது பாதி தம்பி. இந்தப் பாதியால்தான் நாம் வடிவங்களை உணர்கிறோம். கவிதை எழுதுவது, படம் போடுவது, நடனம் ஆடுவது, நடிப்பது போன்ற கலை தொடர்பானவை எல்லாம் வலது பாதியில்தான், வலது பாதி 9 சரியில்லையெனில் வீட்டுக்குப் போக வழி தெரியாமல் திண்டாடுவோம்.

வலது பாதி :
வலது பகுதி ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பவர்கள் நடிகர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், இசைக் கருவிகளைக் கையாளுபவர்கள் இன்ன பிறர். இடது பகுதி ஆக்கிரமிப்பு அதிகம் இருப்பவர்கள் பட்டயக் கணக்கர்கள், கணக்கு ஆசிரியர்கள், இந்திய ஆட்சிப் பணிக்குப் படித்தவர்கள் போன்றோர். இடதும் வலதும் சரியான அளவில் கலந்து இருப்பவர்களும் உண்டு.

முடிவுரை :
நம் மனதில் தோன்றும் உணர்வுகள், நம்மிடம் உள்ள நினைவாற்றல், நாம் என்கிற தன்னுணர்வு, கற்றல் திறம், செயல்பாடுகள் இவையெல்லாம் மூளையின் செயல்பாடுகளுடன் தொடர்புடையதாகும்.