Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.5 வேற்றுமை

Students can Download 8th Tamil Chapter 4.5 வேற்றுமை Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.5 வேற்றுமை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.5 வேற்றுமை

Question 1.
பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஒரு பத்தியைத் தேர்ந்தெடுத்து, அதிலுள்ள வேற்றுமை உருபுகளை எடுத்து எழுதி வகைப்படுத்துக.
Answer:
அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது கல்வி எனப்படும். மனிதர்களது வாழ்வில் உடலோம்பலுடன் அறிவோம்பலும் நிகழ்ந்துவரல் வேண்டும். அறிவோம்பலுக்குக் கல்வி தேவை. அக்கல்விப்பயிற்சிக்கு உரிய பருவம் இளமை என்பதை விளக்க வேண்டியதில்லை. இது பற்றியே இளமையில் கல் என்னும் முதுமொழி பிறந்தது.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.5 வேற்றுமை 7

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது …………………… ஆகும்.
அ) எழுவாய்
ஆ) செயப்படுபொருள்
இ) பயனிலை
ஈ) வேற்றுமை
Answer:
ஈ) வேற்றுமை

Question 2.
எட்டாம் வேற்றுமை …………………… வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது.
அ) எழுவாய்
ஆ) செயப்படுபொருள்
இ) விளி
ஈ) பயனிலை
Answer:
இ) விளி

Question 3.
உடனிகழ்ச்சிப் பொருளில் ……………….. வேற்றுமை வரும்.
அ) மூன்றாம்
ஆ) நான்காம்
இ) ஐந்தாம்
ஈ) ஆறாம்
Answer:
அ) மூன்றாம்

Question 4.
‘அறத்தான் வருவதே இன்பம்’ – இத்தொடரில் ……………………… வேற்றுமை பயின்று வந்துள்ளது.
அ) இரண்டாம்
ஆ) மூன்றாம்
இ) ஆறாம்
ஈ) ‘ஏழாம்
Answer:
ஆ) மூன்றாம்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.5 வேற்றுமை

Question 5.
‘மலர் பானையை வனைந்தாள்’ – இத்தொடர் ……………….. பொருளைக் குறிக்கிறது.
அ) ஆக்கல்
ஆ) அழித்தல்
இ) கொடை
ஈ) அடைதல்
Answer:
அ) ஆக்கல்

பொருத்துக

1. மூன்றாம் வேற்றுமை – இராமனுக்குத் தம்பி இலக்குவன்.
2. நான்காம் வேற்றுமை – பாரியினது தேர்.
3. ஐந்தாம் வேற்றுமை – மண்ணால் குதிரை செய்தான்.
4. ஆறாம் வேற்றுமை – ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்.
Answer:
1. மூன்றாம் வேற்றுமை – மண்ணால் குதிரை செய்தான்.
2. நான்காம் வேற்றுமை – இராமனுக்குத் தம்பி இலக்குவன்.
3. ஐந்தாம் வேற்றுமை – ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்.
4. ஆறாம் வேற்றுமை – பாரியினது தேர்

சிறுவினா

Question 1.
எழுவாய் வேற்றுமையை விளக்குக.
Answer:
எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளைத் தருவது முதல் வேற்றுமை ஆகும். முதல் வேற்றுமை எழுவாய் வேற்றுமை எனப்படும். எ.கா: பாவை வந்தாள்.

Question 2.
நான்காம் வேற்றுமை உணர்த்தும் பொருள்கள் யாவை?
Answer:
(i) நான்காம் வேற்றுமை உருபு – ‘கு’
(ii) இது கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை என்ற பொருள்களில் வரும்.

Question 3.
உடனிகழ்ச்சிப் பொருள் என்றால் என்ன?
Answer:
(i) ஒடு, ஓடு ஆகிய மூன்றாம் வேற்றுமை உருபுகள் உடனிகழ்ச்சிப் பொருளில் வரும்.
எ.கா. தாயொடு குழந்தை சென்றது,
அமைச்சரோடு அலுவலர்கள் சென்றனர்.

(ii) இருவர் சேர்ந்து செய்கின்ற செயலைக் குறிப்பிடும் போது ஒடு, ஓடு என்ற சொற்களைப் பயன்படுத்துவர். இதுவே உடனிகழ்ச்சிப் பொருள் ஆகும்.

மொழியை ஆள்வோம்

கேட்க

Question 1.
கல்வியின் சிறப்புகளை விளக்கும் கதைகளைக் கேட்டு மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே கல்வியின் சிறப்புகளை விளக்கும் கதைகளைக் கேட்டு மகிழ வேண்டும்.

கீழ்க்காணும் தலைப்புகளில் இரண்டு நிமிடம் பேசுக.

Question 1.
கல்வியே அழியாச் செல்வம்
Answer:
அனைவருக்கும் வணக்கம்!

நான் கல்வியே அழியாச் செல்வம் என்ற தலைப்பில் பேசவிருக்கிறேன். கல்வி இன்றைய மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அத்தகைய கல்வியைக் கற்பதில் ஆண், பெண் என்ற பாகுபாடின்றி அனைவரும் சமம் என்ற நிலையில் உள்ளது.

கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்’ என்று பாரதிதாசன் பெண்களின் கல்வி பற்றிக் கூறுகிறார்.

‘கற்றவரைக் கண்ணுடையார்’ என்றும் கல்லாதவரை முகத்தில் இரண்டு புண்ணுடையவர்’ என்றும் இடித்துரைக்கிறார் வள்ளுவர். கற்றோர்க்கு அணிகலன் கல்வியே; கற்றோரே கண்ணுடையவர். ‘கற்றோரே தேவர் எனப் போற்றப்படத்தக்கவர்; கற்றோரே மேலானவர் என்பதை உணர வேண்டும்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.5 வேற்றுமை

கல்வி கற்றவன் நல்ல ஆளுமையைப் பெறுகிறான். எல்லா நாட்டுக்கும் சொந்தக்காரன் ஆகிறான். எல்லா மக்களுக்கும் உறவினராகிறான். அறியாமை இருளைப் போக்கி தெளிவுபெறுகிறான். உலகே போற்றும் உயர்வு பெறுகிறான். இக்கூற்றுகளுக்கே எத்தனையோ சான்றோர்களை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

கல்வியைக் கள்வரால் திருட இயலாது, வெந்தணலில் வேகாது, ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லாது, அள்ள அள்ளக் குறையாது.

மனிதன் தனது வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டிய ஒன்று உண்டு என்றால் அது கல்வி கற்பது ஒன்றுதான். இளமை முதல் இறக்கும் வரை இடைவிடாது கற்றாலும் ஒருவனால் கல்வியில் முழுமை அடைய முடியாது. எனவேதான் ‘கற்றது கைம்மண் அளவு. கல்லாதது உலகளவு’ என்று கூறப்படுகிறது.

“தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத்து ஊறும் அறிவு”

மணற்பாங்கான நிலத்தில் இறைக்க இறைக்க நீர் சுரக்கும். அதுபோல அறிவானது கொடுக்கக் கொடுக்க வளர்ந்து கொண்டே இருக்கும். இக்கல்வியை இளமையில் கற்றுத் தெளிய வேண்டும். இளமைப் பருவம் படிப்பதற்கே உரியது. இளவயதில் கற்கும் கல்வியானது பசு மரத்தணி போலவும்’, ‘கல்மேல் எழுத்து போலவும் அழியாமல் இருக்கும்.

சொல்லக் கேட்டு எழுதுக

தமிழ் மொழிக்கு வளம் சேர்த்த ஒரு நூல்; தமிழுக்கு வாழ்வியல் உண்மைகளை உணர்த்தும் ஒரு நூல்; தன் தோற்றத்தால் தமிழ்நாட்டுக்கு உலகப் பெரும் புகழைப் பெற்றுத் தந்த சிறந்த நூல் திருவள்ளுவரின் திருக்குறள். திருக்குறள் பற்றிப் பேசாத புலவர் இலர்; எழுதாத அறிஞர், எழுத்தாளர் இலர். பள்ளிப் பருவத்திலும் திருக்குறள் படிக்கப்படுகின்றது. பருவம் வளரவளர அதுவும் நுட்பமாகக் கற்கப்படுகின்றது. திருக்குறளுக்குரிய சிறப்பே அதுதான். அஃது எல்லாப் பருவத்தாருக்கும் வேண்டிய விழுமிய நூல். எனவே திருக்குறளில்லாத வீடும் இருக்கக்கூடாது. திருக்குறள் படிக்காத தமிழரும் இருக்கக் கூடாது.

கீழ்க்காண்பவற்றுள் ஒரு சொல்லை எடுத்து ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களுடன் இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.5 வேற்றுமை 2
Answer:
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.5 வேற்றுமை 3

அறிந்து பயன்படுத்துவோம்

நிறுத்தக்குறிகள்
காற்புள்ளி(,) :
1. பொருள்களை எண்ணும் இடங்களில் காற்புள்ளி வரும்.
(எ.கா.) குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல், பாலை ஆகியன ஐந்திணைகள்.

2. கடிதத்தில் விளி முன் காற்புள்ளி வரும்.
(எ.கா.) அன்புள்ள நண்பா ,

3. வினையெச்சங்களுக்குப் பின் காற்புள்ளி வரும்.
(எ.கா.) பொழிலன் தோட்டத்திற்குச் சென்று, வாழை இலை பறித்து வந்தான்.

4. மேற்கொள் குறிகளுக்கு (“) முன் காற்புள்ளி வரும்.
(எ.கா.) குழந்தை நிலவைப் பார்த்து, “நிலா நிலா ஓடி வா” என்று பாடியது.

5. முகவரியில் இறுதி வரி நீங்க ஏனைய வரிகளின் இறுதியில் காற்புள்ளி வரும்.
(எ.கா.) ச. ஆண்டாள், எண் 45, காமராசர் தெரு, திருவள்ளூர்.

அரைப்புள்ளி (;):
1. ஒரே எழுவாயில் பல வாக்கியங்கள் தொடரும் இடத்தில் அரைப்புள்ளி வரும்.
(எ.கா.) கரிகாலன் கங்கை வரை படையெடுத்துச் சென்றான் ; கனக விசயருடன் போரிட்டான்.

2. உடன்பாடு, எதிர்மறைக் கருத்துகளை ஒன்றாக் கூறும் இடத்தில் அரைப்புள்ளி வரும்.
(எ.கா.) நல்லவன் வாழ்வான் ; தீயவன் தாழ்வான்.

முக்காற்புள்ளி ( :’):
சிறு தலைப்பான தொகைச் சொல்லை விரித்துக் கூறும் இடத்தில் முக்காற் புள்ளி வரும். (எ.கா.) முத்தமிழ் : இயல், இசை , நாடகம்.

முற்றுப்புள்ளி (.):
1. சொற்றொடரின் இறுதியில் முற்றுப்புள்ளி வரும்.
(எ.கா.) கல்வியே மனிதனின் வாழ்வை உயர்த்தும்.

2. சொற்குறுக்கங்களை அடுத்து முற்றுப்புள்ளி வரும்.
(எ.கா.) திரு. வி. க., மா.க.அ., ஊ.ஒ.ந.நி. பள்ளி

3. பெயரின் தலைப்பெழுத்தை அடுத்து முற்றுப்புள்ளி வரும்.
(எ.கா.) நெ. து. சுந்தரவடிவேலு

வினாக்குறி ( ? ) :
வினாப் பொருளை உணர்த்தும் வாக்கியத்தின் இறுதியில் வினாக் குறி இட வேண்டும். (எ.கா.) சேக்கிழார் எழுதிய நூல் எது?

வியப்புக்குறி (!):
மகிழ்ச்சி, வியப்பு, அச்சம் அவலம் இரங்கல் முதலான உணர்ச்சியை வெளியிடும் இடங்களில் வியப்புக்குறி இட வேண்டும்.
(எ.கா.) தமிழின் இனிமை தான் என்னே ! வியப்பு
பாம்பு! பாம்பு! – அச்சம்
அந்தோ ! இயற்கை அழிகிறதே! – அவலம்

ஒற்றை மேற்கோள் குறி (‘ ‘):
தனிச் சொல்லையோ தனி எழுத்தையோ விளக்கிக் காட்டும் போதும், இரட்டை மேற்கோள் குறியில் இன்னொரு கூற்று உட்பட்டு வரும் போதும் ஒற்றை மேற்கோள் பயன்படும்.
(எ.கா.) ‘நல்ல ‘ என்பது குறிப்புப் பெயரெச்சம் ஆகும்.
கூட்டத்தின் தலைவர், அறிஞர் அண்ணா அவர்கள் இப்போது தலைப்பில்லை’ என்னும் தலைப்பில் பேசுவார்” என்று அறிவித்தார்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.5 வேற்றுமை

இரட்டை மேற்கோள் குறி (” “) :
நேர் கூற்றுகளிலும் செய்யுள் அடிகளையோ பொன்மொழிகளையோ குறிப்பிடும் இடங்களிலும் இரட்டை மேற்கோள் குறியைப் பயன்படுத்த வேண்டும்.
(எ.கால திரு.வி.க. மாணவர்களிடம், “தமிழ்க் காவியங்களைப் படியுங்கள். இன்பம் நுகருங்கள்” என்று கூறினார் .

பின்வரும் தொடர்களில் உரிய இடங்களில் நிறுத்தக்குறிகளை இடுக.

Question 1.
பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்
Answer:
பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்.

Question 2.
திருக்குறள் அறம் பொருள் இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது
Answer:
திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது.

Question 3.
தமிழ்மொழி செம்மையானது வலிமையானது இளமையானது
Answer:
தமிழ்மொழி செம்மையானது; வலிமையானது; இளமையானது.

Question 4.
கபிலன் தன் தந்தையிடம் இன்று மாலை விளையாடப் போகட்டுமா என்று கேட்டான்
Answer:
கபிலன் தன் தந்தையிடம், “இன்று மாலை விளையாடப் போகட்டுமா?” என்று கேட்டான்.

Question 5.
திரு வி க எழுதிய பெண்ணின் பெருமை என்னும் நூல் புகழ்பெற்றது.
Answer:
திரு.வி.க., எழுதிய பெண்ணின் பெருமை’ என்னும் நூல் புகழ்பெற்றது.

பின்வரும் பத்தியில் உரிய இடங்களில் நிறுத்தக்குறிகளை இடுக.

Question 1.
நூல் பல கல் என்பர் பெரியோர் அறிவை வளர்க்கும் நூல்கள் அனைத்தையும் நம்மால் விலைகொடுத்து வாங்க முடியுமா முடியாது நூலகங்கள் இக்குறையை நீக்க உதவுகின்றன பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைத்து நூல்களும் நிறைந்த இடம் நூலகம் ஆகும். நூலகத்தின் வகைகளாவன மைய நூலகம் மாவட்ட நூலகம் கிளை நூலகம் ஊர்ப்புற நூலகம் எனக்குப் பிடித்த நூல்களுடன் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் மகிழ்ச்சியடைவேன் என்றார் நேரு ஆகவே நூலகத்தின் பயன் அறிவோம் அறிவு வளம் பெறுவோம்
Answer:
நூல் பல கல்’ என்பர் பெரியோர். அறிவை வளர்க்கும் நூல்கள் அனைத்தையும் நம்மால் விலைகொடுத்து வாங்க முடியுமா? முடியாது. நூலகங்கள் இக்குறையை நீக்க உதவுகின்றன. பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைத்து நூல்களும் நிறைந்த இடம் நூலகம் ஆகும்.

நூலகத்தின் வகைகளாவன மைய நூலகம், மாவட்ட நூலகம், கிளை நூலகம், ஊர்ப்புற நூலகம். “எனக்குப் பிடித்த நூல்களுடன் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் மகிழ்ச்சியடைவேன்” என்றார் நேரு. ஆகவே, நூலகத்தின் பயன் அறிவோம்; அறிவு வளம் பெறுவோம்.

கீழ்க்காணும் விளம்பரத்தைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.5 வேற்றுமை 4
Question 1.
எந்த நாளை முன்னிட்டுப் புத்தகக் கண்காட்சி மாபெரும் புத்தகக் கா நடத்தப்படுகிறது?
Answer:
உலகப் புத்தக நாளை முன்னிட்டுப் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது.

Question 2.
புத்தகக் கண்காட்சி எங்கு நடைபெறுகிறது?
Answer:
இராயப்பேட்டை, YMCA மைதானம்.

Question 3.
புத்தகக் கண்காட்சி எத்தனை நாள்கள் நடைபெறுகிறது?
Answer:
ஏப்ரல் 13 முதல் 23 முடிய 11 நாள்கள் நடைபெறுகிறது.

Question 4.
புத்தகக் கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் எவ்வளவு?
Answer:
நுழைவுக் கட்டணம் இல்லை . அனுமதி இலவசம்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.5 வேற்றுமை

Question 5.
புத்தகம் வாங்குவோருக்கு வழங்கப்படும் சலுகை யாது?
Answer:
நூல்களுக்கான விலையில் 10 சதவீத கழிவு.

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

நூலகம்
முன்னுரை – நூலகத்தின் தேவை – வகைகள் – நூலகத்திலுள்ளவை – படிக்கும் முறை – முடிவுரை.

முன்னுரை:
கல்வி கரையில, கற்பவர் நாள் சில’ என்பர் சான்றோர். கற்க கசடற என்று வள்ளுவரும் கூறியுள்ளார். அவ்வாறு கற்பதற்குத் துணைபுரிபவை நூல்கள். அந்நூல்கள் உள்ள இடம் நூலகம். சான்றோர்கள் பலரையும், பேச்சாளர்கள் பலரையும் உருவாக்கிய நூலகம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நூலகத்தின் தேவை :
பாடப் புத்தகத்தை மட்டும் படித்து அறிவு பெற்றால் போதும் என்றில்லாமல் உலக அறிவை வளர்த்துக் கொள்ளலாம். வாழ்வியலுக்கான நற்பண்புகளை நூல்களின் கருத்து வழியே வலுப்படுத்திக் கொள்ளலாம். பலதுறை சார்ந்த நூல்களைக் கற்றுத் தெளிவு பெறலாம்.

பேச்சாளர்கள் பலரின் கருத்துகளையும், சாதனையாளர்களின் சாதனைகளையும் படித்து அறியலாம். அவற்றை நமக்கு முன்மாதிரியாக நினைத்து நாமும் நம்மைப் பண்படுத்திக் கொள்ளலாம். ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றலாம். இக்காரணங்களுக்காக நூலகம் தேவைப்படுகிறது.

நூலகத்தின் வகைகள் :
பள்ளி நூலகம், பொது நூலகம், ஆராய்ச்சி நூலகம், சிறப்பு நூலகம், தேசிய நூலகம் எனப் பல வகைகளில் நூலகம் உள்ளது. இவை மட்டுமன்றி பொது நூலகத்தின் கீழ் மாநில மைய நூலகம், மாவட்ட நூலகம், வட்டார நூலகம், பகுதி நேர நூலகம், நடமாடும் நூலகம் போன்றவையும் மக்களுக்கு உதவுகின்றன.

நூலகத்திலுள்ளவை :
நூலகத்தில் கதை, கட்டுரை போன்ற இயல்களில் நூல்கள் நிரம்பியிருக்கும். சிறுகதை, நாவல், கவிதை, கல்வி, பொருளியல், வரலாறு, மருத்துவம், ஆன்மிகம், உளவியல், பொறியியல், பயன்படு கலைகள் போன்ற தலைப்புகளில் துறைசார்ந்த நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். மேலும், நாளேடுகள், பருவ இதழ்கள் நூலகத்தில் படிக்கக் கிடைக்கும்.

படிக்கும் முறை :
நூலகத்தில் சத்தம் போட்டுப் படிக்கக்கூடாது. நூல்களைப் படித்துக் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். நூல்களில் எவ்விதக் குறிப்பையும், கிறுக்குதலையும் செய்யக்கூடாது. படிக்க விரும்பும் நூல்களை நூல்களின் அனுமதி பெற்று எடுத்துப் படிக்க வேண்டும். படித்து முடித்துவிட்டு நூலகரிடம் கொடுக்க வேண்டும். நூல்களைச் சேதப்படுத்தாமல் படிக்க வேண்டும். நூலக விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

முடிவுரை :
நம் சான்றோர்கள் கூறியபடி வீட்டிற்கொரு நூலகம் அமைத்து பயன்பெறுவோம். நல்ல நூல்களை நாளும் கற்று, நல்லறிவு பெறுவோம். வருங்கால சமுதாயம் அறியாமை என்ற இருள் நீங்கி கல்வி என்ற ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற முயல்வோம்.

மொழியோடு விளையாடு

கீழ்க்காணும் வினாக்களுக்கு விடைகளைக் கட்டத்தில் நிரப்புக. வட்டத்தில் சிக்கிய எழுத்துகளை எடுத்து எழுதுக. எழுத்துகளை முறைப்படுத்திக் கல்வி பற்றிய பழமொழியைக் கண்டறிக.

1. திரைப்படப் பாடலாசிரியர் சோமுவின் ஊர்
2. கேடில் விழுச்செல்வம் ……………..
3. குமர குருபரர் எழுதிய நூல்களுள் ஒன்று
4. ‘கலன்’ என்னும் சொல்லின் பொருள்.
5. ஏட்டுக்கல்வியுடன் …………….. கல்வியும் பயில வேண்டும்.
6. திரு.வி.க. எழுதிய நூல்களுள் ஒன்று.
7. மா + பழம் என்பது ……………. விவகாரம்.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.5 வேற்றுமை 5
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.5 வேற்றுமை 6

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள்….
1. நாள்தோறும் ஒரு திருக்குறள் கற்பேன்.
2. அனைவரிடமும் அன்பு கொண்டு வாழ்வேன்.

கலைச்சொல் அறிவோம்

1. நிறுத்தக்குறி – Punctuation
2. அணிகலன் – Ornament
3. திறமை – Talent
4. மொழிபெயர்ப்பு – Translation
5. விழிப்புணர்வு – Awareness
6. சீர்திருத்தம் – Reform

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.5 வேற்றுமை

கூடுதல் வினாக்கள்

நீரப்புக.
1. பெயர்ச்சொல்லுடன் இணைக்கப்படும் அசைகள் ……………….. ஆகும்.
2. வேற்றுமை ……………….. வகைப்படும்.
3. முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் …………….. இல்லை.
4. முதல் வேற்றுமையை …………………. என்றும் கூறுவர்.
5. எட்டாம் வேற்றுமையை …………………. என்றும் கூறுவர்.
6. இரண்டாம் வேற்றுமையைச் ……………………. வேற்றுமை என்றும் கூறுவர்.
7. கருவிப் பொருள், கருத்தாப்பொருள் ஆகிய இரண்டு வகையான பொருள்களில் வரும் வேற்றுமை …………………
8. ஆக’ என்னும் அசை சேர்ந்து வரும் வேற்றுமை …………………… வேற்றுமை.
9. உடனிகழ்ச்சிப் பொருளில் வரும் மூன்றாம் வேற்றுமை உருபுகள் ……………….
10. கிழமைப்பொருளில் வரும் வேற்றுமை ………………… வேற்றுமை.
11. படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக மாற்றி அழைப்பது ……………….. எனப்படும்.
12. ஐந்தாம் வேற்றுமையிலும் ஏழாம் வேற்றுமையிலும் வரும் வேற்றுமை உருபு ………………
13. ‘செங்குட்டுவனுக்குத் தம்பி இளங்கோ’ – இத்தொடரில் உள்ள வேற்றுமை …………………
14. ஓவியர் தூரிகை கொண்டு ஓவியம் தீட்டினார். இத்தொடரில் உள்ள வேற்றுமை உருபு – ……………….
Answer:
1. வேற்றுமை உருபுகள்
2. எட்டு
3. உருபுகள்
4. எழுவாய் வேற்றுமை
5. விளிவேற்றுமை
6. செயப்படுபொருள்
7. மூன்றாம் வேற்றுமை
8. நான்காம்
9. ஒடு, ஓடு
10. ஆறாம்
11. விளிவேற்றுமை
12. இல்
13. கு – நான்காம் வேற்றுமை
14. கொண்டு

விடையளி :

Question 1.
வேற்றுமை என்பது யாது?
Answer:
பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறை வேற்றுமை எனப்படும்.

Question 2.
வேற்றுமை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
வேற்றுமை எட்டு வகைப்படும். அவை முதல் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.5 வேற்றுமை

Question 3.
முதல் வேற்றுமை – விளக்குக.
Answer:
(i) எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல் எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளைத் தருவது முதல் வேற்றுமை ஆகும்.
(ii) முதல் வேற்றுமை எழுவாய் வேற்றுமை என்றும் அழைக்கப்படும்.
(iii) எ.கா. பாவை வந்தாள்.

Question 4.
இரண்டாம் வேற்றுமை உருபு யாது? இரண்டாம் வேற்றுமையை விளக்குக.
Answer:
(i) இரண்டாம் வேற்றுமை உருபு ‘ஐ’.
(ii) இது ஒரு பெயரைச் செயப்படுபொருளாக வேறுபடுத்திக் காட்டும். அதனால் இதனைச் செயப்படுபொருள் வேற்றுமை என்றும் கூறுவர்.
(iii) எ.கா. – கபிலர் பரணரைப் புகழ்ந்தார்.

Question 5.
இரண்டாம் வேற்றுமை எவ்வெவப் பொருள்களில் வரும்?
Answer:
இரண்டாம் வேற்றுமை ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை ஆகிய ஆறுவகையான பொருள்களில் வரும்.

Question 6.
இரண்டாம் வேற்றுமை உருபு – சான்றுகள் தருக.
Answer:
(i) ஆக்கல் – கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.
(ii) அழித்தல் – பெரியார் மூட நம்பிக்கைகளை ஒழித்தார்.
(iii) அடைதல் – கோவலன் மதுரையை அடைந்தான்.
(iv) நீத்தல் – காமராசர் பதவியைத் துறந்தார்.
(v) ஒத்தல் – தமிழ் நமக்கு உயிரைப் போன்றது.
(vi) உடைமை – வள்ளுவர் பெரும் புகழை உடையவர்.

Question 7.
மூன்றாம் வேற்றுமை உருபுகள் யாவை?
Answer:
மூன்றாம் வேற்றுமை உருபுகள் : ஆல், ஆன், ஒடு, ஓடு ஆகியவை.

Question 8.
கருத்தாப் பொருள் விளக்குக.
Answer:
(i) கருத்தாப் பொருள் ஏவுதல் கருத்தா, இயற்றுதல் கருத்தா என இரு வகைப்படும்.

(ii) ஏவுதல் கருத்தா – பிறரைச் செய்ய வைப்பது.
எ.கா. கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது.

(iii) இயற்றுதல் கருத்தா – தானே செய்வது.
எ.கா. சேக்கிழாரால் பெரிய புராணம் இயற்றப்பட்டது.

Question 9.
மூன்றாம் வேற்றுமை உருபுகளுக்கான எடுத்துக்காட்டுகள் தருக. .
Answer:
(i) ஆல் – மரத்தால் சிலை செய்தான்.
(ii) ஆன் – புறந்தூய்மை நீரான் அமையும்.
(iii) ஒடு – தாயொடு குழந்தை சென்றது.
(iv) ஓடு – அமைச்சரோடு அலுவலர்கள் சென்றனர்.

Question 10.
நான்காம் வேற்றுமை உருபு யாது? அது எவ்வெவப் பொருள்களில் வரும்?
Answer:
(i) நான்காம் வேற்றுமை உருபு – கு.
(ii). இது கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவதால், பொருட்டு, முறை, எல்லை ஆகிய பொருள்களில் வரும்.

Question 11.
ஐந்தாம் வேற்றுமை உருபுகள் யாவை? அவை எவ்வெவப் பொருள்களில் வரும்?
Answer:
(i) ஐந்தாம் வேற்றுமை உருபுகள் இன், இல்.
(ii) அவை நீங்கல், ஒப்பு, எல்லை , எது ஆகிய பொருள்களில் வரும்.

Question 12.
ஆறாம் வேற்றுமை உருபுகள் யாவை?
Answer:
(i) ஆறாம் வேற்றுமை உருபுகள் அது, ஆது, அ என்பன. இவ்வேற்றுமை உரிமைப் பொருளில் வரும்.
(ii) எ.கா. இராமனது வில், நண்ப னது கை.

Question 13.
ஏழாம் வேற்றுமை உருபு யாது?
Answer:
ஏழாம் வேற்றுமை உருபு – கண்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.5 வேற்றுமை

Question 14.
ஏழாம் வேற்றுமை சான்றுடன் விளக்குக.
Answer:
(i) ஏழாம் வேற்றுமை உருபு – கண்
(ii) மேல், கீழ், கால், இல், இடம் போன்ற உருபுகளும் உண்டு .
(iii) ஏழாம் வேற்றுமை உருபு இடம், காலம் ஆகியவற்றைக் குறிக்கும் சொற்களில் இடம்பெறும். எ.கா. எங்கள் ஊரின்கண் மழை பெய்தது, இரவின்கண் மழை பெய்தது.

Question 15.
எட்டாம் வேற்றுமை சான்றுடன் விளக்குக.
Answer:
(i) விளிப் பொருளில் வரும்.
(ii) படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக மாற்றி அழைப்பதால் விளி வேற்றுமை’ எனப்படுகிறது.
(iii) இவ்வேற்றுமைக்கு என்று தனியே உருபு கிடையாது.
எ.கா. அண்ணா வா!

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.4 அன்று குடிப்பிறத்தல்

Students can Download 8th Tamil Chapter 4.4 அன்று குடிப்பிறத்தல் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.4 அன்று குடிப்பிறத்தல்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.4 அன்று குடிப்பிறத்தல்

Question 1.
திருக்குறள் கருத்துகளை உணர்த்தும் கதைகளை அறிந்து வந்து வகுப்பில் பகிர்க.
Answer:
குறள் :
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.

உணர்த்தும் கதை :
“சின்னச்சாமி… யாரோ மரத்தோரமா நிற்கிறாங்க… யாராய் இருக்கும்…. மாட்டு வண்டியை ஓட்டிக்கிட்டே அப்பா கேட்டார்.
“தெரியலப்பா…”
“இறங்கி யாருன்னு பாரு…”
“வாட்ட சாட்டமாய், கண்ணாடியும் அலைபேசியும் கையுமாய் சாலையோரத்தில் வண்டியுடன் ஒருவர் நின்றிருந்தார்.
“ஐயா… நீங்க…”
“வெளியூருப்பா… வண்டி நின்னு போச்சு….!”
“அப்படியா…. வண்டியத் தூக்கி மாட்டு வண்டியில வச்சுட்டு வாங்க மழை வர்ற மாதிரியிருக்கு ஊரு ரொம்ப தூரம்… வேற வண்டியும் வராது…”

அவர் உடையையும் உழைத்துக் களைத்த வியர்வை பொங்கிய உடலையும் பார்த்து வரலைன்னுட்டார். மூன்று நான்கு பேர்தான் வண்டியில் இருந்தோம்… சிறிது தூரம் போறதுக்குள்ள மழை கொட்டு கொட்டுன்னு கொட்டிருச்சு… நாங்க வீட்டுக்குப் போயிட்டோம்.

இரவுல தூங்கப் போறப்ப…. அப்பா சொன்னார். தம்பி… அந்த சூட்டுக்காரர் மழை தாங்காம நடந்திருக்காரு. தேங்கா விழுந்து மண்ட உடைஞ்சு… வேற யாரோ தூக்கிட்டு வந்திருக்காங்க. நம்ம ஊரு ஆசுபத்திரியில… கட்டுப் போட்டுக்கிட்டு இருந்தாங்க…. பாவம் படிச்சவரா இருக்காரு… சூழ்நிலை புரியாம… வரமாட்டேன்னு சொன்னாரு, இப்ப வேதனைப்படுகிறாரே…

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.4 அன்று குடிப்பிறத்தல்

மதிப்பீடு

Question 1.
திருக்குறளின் கருத்தைப் பின்பற்றி நடந்த சகாதேவன் கதையைச் சுருக்கி எழுதுக.
Answer:
முன்னுரை :
குறள் வழிக் கதை மூலம் மாணவன் ஒருவன் நடந்து கொண்ட விதமும் ஊராரின் எண்ணங்களும் ஆசிரியரின் நல்ல முடிவு பற்றியும் இக்கட்டுரையில் காண்போம்.

ஆசிரியரின் வேட்டி :
ஆசிரியர் ஒருநாள் தனது வேட்டியைத் துவைத்து கொடிக்கயிற்றில் காயப் போட்டுவிட்டுப் பள்ளிக்குச் சென்றார். பிறகு வந்து பார்த்தபோது வேட்டியைக் காணவில்லை. ஊராரில் சிலர் சிகாமணிதான் எடுத்திருப்பார் என்று சந்தேகத்துடனும் சிலர் உறுதியுடனும் கூறினர். சிகாமணியின் தந்தையும் பிறர் பொருளை எடுத்துக் கொள்ளும் குணம் கொண்டவர். அதனால் அவரது பழக்கம் இவரைத் தொற்றிக் கொண்டது என்றனர்.

வகுப்பறையில் ஆசிரியர் :
ஆசிரியருக்கு வேட்டியின் மர்மம் விளங்கவில்லை. அன்று வகுப்பறையில் பண்புடைமை’ என்ற அதிகாரத்திலுள்ள குறட்பாவை நடத்தத் தொடங்கினார். ‘ஆன்ற குடிபிறத்தல்’ என்ற தொடருக்குப் பொருள் கூறும்போது வகுப்பிலிருந்த சிகாமணியின் மகன் சகாதேவன் ஆசிரியரை கூர்ந்து நோக்கினான். ஆசிரியரும் அவனை அடிக்கடி பார்த்தார்.

குறள்வழி அறிவுரை :
“ஆன்ற குடிப்பிறத்தல்’ என்றால் சிறந்த குடி உன்னிடமிருந்து தொடங்கட்டும். அப்பன் திருடனாயிருக்கலாம். மகன் நல்லவனாக இருப்பான். அவங்க அப்பனைச் சொல், திருடன்தான்! அவன் பையனைச் சொல்லாதே, அவன் மிக நல்லவன் என்று உலகோர் பேசுவர். அதுபோல் கெட்டப்பழக்கங்கள் தந்தையுடன் செல்லட்டும். உன்னிலிருந்து நல்ல புதிய குடி உதிக்கட்டும்” என்றார். மேலும் “ஒழுக்கம் இல்லாத பரம்பரையில் நீ வந்திருந்தாலும் ஒழுக்கத்தின் உறைவிடமாக நீ இருக்கவேண்டும்” என்று கூறினார்.

உணவு இடைவேளை :
உணவு இடைவேளையில் ஆசிரியர் வீட்டிற்குச் சென்றார். அப்போது கிருஷ்ணமூர்த்தி என்ற மாணவன் சகாதேவன் கொடுக்கச் சொன்னதாக வேட்டியைக் கொடுத்தான். பிறகு ‘வேட்டியைச் சிகாமணிதான் எடுத்தார் என்றும் தானே ஆசிரியரிடம் கொடுப்பதற்கு வெட்கப்படுவதாகவும், சகாதேவன் கூறியதாகக் கூறினான்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.4 அன்று குடிப்பிறத்தல்

உண்மை அறிந்த ஊரார் :
சிகாமணிதான் திருடன் என அறிந்ததும் ஊரார் அவரைத் தண்டிக்கத் தொடங்கினர். ஆசிரியர் தடுத்துவிட்டார். சிகாமணியைத் தண்டித்தால் அவன் அவனுடைய மகனான சகாதேவனைத் தண்டிப்பான். அதனை சகாதேவன் நேர்மைக்குக் கிடைத்த பலனாகக் கருதி வருந்துவான்” என்று தடுத்தமைக்குக் காரணம் கூறினார்.

மறுத்த ஊரார் :
“அவனைவிடக்கூடாது சார்!” என்று கடைசிவரை ஒருவர் சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால் ஆசிரியர் இறுதியில் “நீங்கள் தண்டனைதான் கொடுக்க வேண்டுமெனில், நான் என் வேட்டியே திருடு போகவில்லை என்று கூறுவேன்” என்றார்.

முடிவுரை :
ஒருவிதமாக ஊரார் ஆசிரியரின் கருத்தைப் புரிந்து கொண்டனர். சிகாமணி, சகாதேவன், ஆசிரியர் மூவரும் தப்பித்தனர்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.3 பல்துறைக் கல்வி

Students can Download 8th Tamil Chapter 4.3 பல்துறைக் கல்வி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.3 பல்துறைக் கல்வி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.3 பல்துறைக் கல்வி

Question 1.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் ஆகிய தொகுப்புகளில் இடம்பெறும் நூல்களின் பெயர்களைத் திரட்டி எழுதுக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.3 பல்துறைக் கல்வி 1
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.3 பல்துறைக் கல்வி 2

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது …………..
அ) விளக்கு
ஆ) கல்வி
இ) விளையாட்டு
ஈ) பாட்டு
Answer:
ஆ) கல்வி

Question 2.
கல்விப் பயிற்சிக்குரிய பருவம் …………..
அ) இளமை
ஆ) முதுமை
இ) நேர்மை
ஈ) வாய்மை
Answer:
அ) இளமை

Question 3.
இன்றைய கல்வி …………………… நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.
அ) வீட்டில்
ஆ) நாட்டில்
இ) பள்ளியில்
ஈ) தொழிலில்
Answer:
ஈ) தொழிலில்

நிரப்புக

1. கவப்பில் …………. உண்டென்பது இயற்கை நுட்பம்.
2. புற உலக ஆராய்ச்சிக்கு …………… கொழுகொம்பு போன்றது.
3. வாழ்விற்குரிய இன்பத்துறைகளில் தலையாயது ……………. இன்பம் ஆகும்.
Answer:
1. வளர்ச்சி
2. அறிவியல்
3. காவிய

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.3 பல்துறைக் கல்வி

பொருத்துக

1. இயற்கை ஓவியம் – சிந்தாமணி
2. இயற்கைத் தவம் – பெரியபுராணம்
3. இயற்கைப் பரிணாமம் — பத்துப்பாட்டு
4. இயற்கை அன்பு – கம்பராமாயணம்
Answer:
1. இயற்கை ஓவியம் –  பத்துப்பாட்டு
2.. இயற்கைத் தவம் – சிந்தாமணி
3. இயற்கைப் பரிணாமம் – கம்பராமாயணம்
4. இயற்கை அன்பு – பெரிய புராணம்

குறுவினா

Question 1.
இன்றைய கல்வியின் நிலை பற்றித் திரு.வி.க. கூறுவன யாவை?
Answer:
இன்றைய கல்வியின் நிலை :
(i) இந்நாளில் கல்வியென்பது பொருளற்றுக் கிடக்கிறது.

(ii) குறிப்பிட்ட பாடங்களை நெட்டுருச் செய்து, தேர்வில் தேறிப் பட்டம் பெற்று, ஒரு தொழிலில் நுழைவதற்குக் கல்வி ஒரு கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.

(iii) நாளடைவில் அக்கல்விக்கும் வாழ்விற்கும் தொடர்பில்லாமல் போகும் என்று இன்றைய கல்வியின் நிலை பற்றித் திரு.வி.க. கூறுகிறார்.

Question 2.
தாய்நாடு என்னும் பெயர் எவ்வாறு பிறக்கிறது?
Answer:
நாம் தமிழ் மக்கள். நாம் நமது தாய்மொழி வாயிலாகக் கல்வி பெறலே சிறப்பு. அதுவே இயற்கை முறை. முதலில் தாய்மொழி வாயிலாகவே கல்வி பயிலுதல் வேண்டும். தாய்நாடு என்னும் பெயர் தாய்மொழியைக் கொண்டே பிறக்கிறது.

Question 3.
திரு.வி.க. சங்கப் புலவர்களாகக் குறிப்பிடுபவர்களின் பெயர்களை எழுதுக.
Answer:
இளங்கோ, திருத்தக்கத்தேவர், திருஞானசம்பந்தர், ஆண்டாள், சேக்கிழார், கம்பர், பரஞ்சோதி.

சிறுவினா

Question 1.
தமிழ்வழிக் கல்வி பற்றித் திரு.வி.க. கூறுவனவற்றை எழுதுக்.
Ans;
(i) தமிழிலேயே கல்வி போதிக்கத் தமிழில் போதிய கலைகளில்லையே; சிறப்பான அறிவியல் கலைகளில்லையே என்று சிலர் கூக்குரலிடுகிறார். அவரவர் தாம் கண்ட புதுமைகளை முதல் முதல் தம் தாய்மொழியில் வரைந்து விடுகிறார். அவை பின்னே பல மொழிகளில் பெயர்த்து எழுதப்படுகின்றன.

(ii) அம்மொழிபெயர்ப்பு முறையைத் தமிழர் கொண்டு ஏன் தாய்மொழியை வளர்த்தல் கூடாது? குறியீடுகளுக்குப் பல மொழிகளினின்றும் கடன் வாங்குவது தமிழுக்கு இழுக்காகாது. கலப்பில் வளர்ச்சியுண்டென்பது இயற்கை நுட்பம்.

(iii) தமிழை வளர்க்கும் முறையிலும் அளவிலும் கலப்பைக் கொள்வது சிறப்பு. ஆகவே, தமிழ்மொழியில் அறிவுக் கலைகள் இல்லை என்னும் பழம்பாட்டை நிறுத்தி, அக்கலைகளைத் தமிழில் பெயர்த்து எழுதித் தாய்மொழிக்கு ஆக்கந்தேடுவோம் என்னும் புதுப்பாட்டைப் பாடுமாறு சகோதரர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

(iv) கலைகள் யாவும் தாய்மொழி வழி மாணாக்கர்க்கு அறிவுறுத்தப் பெறுங்காலமே, தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம் ஏறும் காலமாகும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.3 பல்துறைக் கல்வி

Question 2.
அறிவியல் கல்வி பற்றித் திரு.வி.க. கூறுவன யாவை?
Answer:
(i) உலக வாழ்விற்கு மிக மிக இன்றியமையாதது ‘அறிவியல்’ என்னும் அறிவுக்கலை.

(ii) உடற்கூறு, உடலோம்பு முறை, பூதபௌதிகம், மின்சாரம், நம்மைச் சூழ்ந்துள்ள செடி, கொடி, பறவை, விலங்கு முதலியவற்றினியல், கோளியக்கம், கணிதம், அகத்திணை முதலியன வேண்டும். இந்நாளில் இவைகளைப் பற்றிய பொது அறிவாதல் பெற்றே தீரல் வேண்டும்.

(iii) புற உலக ஆராய்ச்சிக்கு அறிவியல் கொழுகொம்பு போன்றது. நம் முன்னோர் கண்ட பல உண்மைகள் அறிவியல் அரணின்றி இந்நாளில் உறுதிபெறல் அரிது.

(iv) இக்கால உலகத்தோடு உறவு கொள்வதற்கும் அறிவியல் தேவை. ஆதலின் அறிவியல் என்னும் அறிவுக்கலை இளைஞருலகில் பரவல் வேண்டும்.

நெடுவினா

Question 1.
காப்பியக் கல்வி குறித்துத் திரு.வி.க. கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
காப்பியக் கல்வி குறித்துத் திரு.வி.க. கூறும் செய்திகள் :
(i) வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள் காவிய இன்பமும் ஒன்று. அதைத் தலையாயது என்றும் கூறலாம்.

(ii) நாம் தமிழர்கள். நாம் பாட்டின்பத்தை நுகர வேண்டுமேல் நாம் தமிழ் இலக்கியங்களுக்கிடையே அன்றோ செல்ல வேண்டும்.

(iii) தமிழில் இலக்கியங்கள் பலப்பல இருக்கின்றன. இயற்கை ஓவியம் பத்துப்பாட்டு, இயற்கை இன்பக்கலம் கலித்தொகை, இயற்கை வாழ்வில்லம் திருக்குறள், இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும், இயற்கைத் தவம் சிந்தாமணி, இயற்கைப் பரிணாமம் கம்பராமாயணம், இயற்கை அன்பு பெரிய புராணம், இயற்கை இறையுறையுள் தேவார திருவாசக திருவாய் மொழிகள்.

(iv) இத்தமிழ்க் கருவூலங்களை உன்ன உன்ன உள்ளத்தெழும் இன்ப அன்பைச் சொல்லால் சொல்ல இயலாது.

(v) இளைஞர்களே! தமிழ் இளைஞர்களே! பெறற்கரிய இன்ப நாட்டில் பிறக்கும் பேறு பெற்றிருக்கிறீர்கள்! தமிழ் இன்பத்திலுஞ் சிறந்த இன்பம் இவ்வுலகிலுண்டோ ? தமிழ்க் காப்பியங்களைப் படியுங்கள். இன்பம் நுகருங்கள்.

சிந்தனை வினா

Question 1.
திரு.வி.க. குறிப்பிடும் பல்துறைக் கல்வியில் நீங்கள் எதனைக் கற்க விரும்புகிறீர்கள்?
Answer:
(i) நான் கற்க விரும்புவது இசைக்கல்வி.

(ii) இசைக்கு மயங்காதவர் எவருமில்லை . இறைவனிடம் நாம் பேசுவது இசைமொழியில்தான்.

(iii) ஆழ்வார்களும் நாயன்மார்களும் தங்களுடைய பாடல்களை இசைத்தே இறைவனை மகிழ்வித்துள்ளனர். இசையானது, கவலை என்ற நோயைத் தீர்க்கும் மருந்தாகும். எனவே நான் இசைக்கல்வியைக் கற்க விரும்புகிறேன்.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. அறிவே ………………… என்பது ஆன்றோர் கூற்று.
2. ஒரு மனிதனை வாழ்வில் உயரச் செய்பவை ……………………
3. கேடில் விழுச்செல்வம் ………………..
4. அறியாமையை நீக்கி அறிவை வளர்ப்பது ……………… எனப்படும்.
5. ……………… மட்டும் கல்வி ஆகாது.
6. கல்வி என்பது …………………… தேடும் வழிமுறையன்று.
7. ஒவ்வொருவரும் அவரவர் ……………… வாயிலாகக் கல்வி பெறுவதே சிறப்பு.
8. வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள் ………………. ஒன்று.
9. இயற்கை ஓவியம் ……………………
10. இயற்கை இன்பக்கலம் …………………….
11. இயற்கை வாழ்வில்லம் ……………….
12. இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் ……………………
13. இயற்கைத் தவம் …………………
14. இயற்கைப் பரிணாமம் …………………..
15. இயற்கை அன்பு ………………..
16. , இயற்கை இறையுறையுள் …………………….
17. இன்றைய சூழலில் ………………….. இன்றியமையாதது.
18. நாடகத்துக்கு நல்வழியில் ………………… வழங்க வேண்டும்.
19. உலக வாழ்விற்கு மிக மிக இன்றியமையாதது …………………. என்னும் அறிவுக்கலை.
20. புற உலக ஆராய்ச்சிக்கு அறிவியல் …………………… போன்றது.
21. திரு.வி.க. …………………. என்று அழைக்கப்படுகிறார்.
22. பல்துறைக்கல்வி’ என்ற பாடப்பகுதி ……………….. என்னும் நூலிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது.
23. ஐ.நா. அவையின் முதல் பெண் தலைவர் ………………….

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.3 பல்துறைக் கல்வி
Answer:
1. ஆற்றல்
2. அறிவும் உழைப்பும்.
3. கல்வி
4. கல்வி
5. ஏட்டுக்கல்வி
6. வருவாய்
7. தாய்மொழி
8. காவிய இன்பமும்
9. பத்துப்பாட்டு
10. கலித்தொகை
11. திருக்குறள்
12. சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
13. சிந்தாமணி
14. கம்பராமாயணம்
15. பெரியபுராணம்
16. தேவார, திருவாசக திருவாய் மொழிகள்
17. இசைப் பயிற்சியும்
18. புத்துயிர்
19. அறிவியல்
20. கொழுகொம்பு
21. தமிழ்த்தென்றல்
22. இளமைவிருந்து
23. விஜயலட்சுமி பண்டிட்

விடையளி :

Question 1.
நாடகக்கல்வி பற்றி திரு.வி.க.வின் கருத்து யாது?
Answer:
நாடகக்கல்வி வாழ்விற்கு வேண்டா என்று யான் கூறேன். இடைக்காலத்தில் நாடகக் கலையால் தீமை விளைந்தபோது அதைச் சிலர் அழிக்க முயன்றதுண்டு. இப்போதைய நாடகம் நன்னிலையில்லை என்பதை ஈண்டு விளக்க வேண்டுவதில்லை. நாடகத்துக்கு நல்வழியில் புத்துயிர் வழங்க வேண்டும். நாடகத்தை நல்வழிப்படுத்தி மாணாக்கரை அதன்கண் தலைப்படுமாறு செய்யத் தமிழ்ப் பெரியோர் முயல்வாராக.

Question 2.
திரு.வி.க. – சிறுகுறிப்பு வரைக.
Answer:
(i) திரு.வி.க. என்று அனைவராலும் குறிப்பிடப்படும் திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தரனார் அரசியல், சமுதாயம், சமயம், தொழிலாளர் நலன் எனப் பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர்; சிறந்த மேடைப் பேச்சாளர்; தமிழ்த்தென்றல் என்றும் அழைக்கப்படுகிறார்.

(ii) இவர், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்ச்சோலை, பொதுமை வேட்டல், முருகன் அல்லது அழகு, இளமை விருந்து உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

Question 3.
எது கல்வியாகாது என்று திரு.வி.க. கூறுகிறார்?
Answer:
(i) இந்நாளில் ஏட்டுக் கல்வியே கல்வி என்னும் ஒரு கொள்கை எங்கும் நிலவி வருகிறது. ஏட்டுக் கல்வி மட்டும் கல்வி ஆகாது.

(ii) இந்நாளில் கல்வியென்பது பொருளற்றுக் கிடக்கிறது.

(iii) குறிப்பிட்ட பாடங்களை நெட்டுருச் செய்து, தேர்வில் தேறிப் பட்டம் பெற்று, ஒரு தொழிலில் நுழைவதற்குக் கல்வி ஒரு கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.

(iv) நாளடைவில் அக்கல்விக்கும் வாழ்விற்கும் தொடர்பில்லாமல் போகிறது. இது கல்வியாகாது என்று திரு.வி.க. கூறுகிறார்.

Question 4.
இசைக்கல்வி பற்றித் திரு.வி.க. கூறுவன யாவை?
Answer:
(i) இன்றைய சூழலில் இசைப்பயிற்சியும் இன்றியமையாதது. இசை பாட இயற்கை சிலருக்குத் துணை செய்யும்; சிலருக்கு துணை செய்வதில்லை. அத்துணை பெறாதார் இசை இன்பத்தையாதல் நுகரப் பயில்வாராக.

(ii) பழைய தமிழர் இசைத்துறையின் நிலை கண்டவர் என்று ஈண்டு இறுமாந்து கூறுகிறேன்.

(iii) தமிழ் யாழையும் குழலையும் என்னென்று சொல்வது? அந்த ழகரங்களை நினைக்கும் போதே அமிழ்தூறுகிறது. கொடிய காட்டு வேழங்களையும் பாணர் தம் யாழ் மயக்குறச் செய்யுமாம்.

(iv) அந்த யாழ் எங்கே? இனி இசைப் புலவர்தொகை நாட்டிற் பெருகப் பெருக நாடு பல வழியிலும் ஒழுங்கு பெறுதல் ஒருதலை. ஆகவே அத்துறை மீதும் மாணவர் கருத்துச் செலுத்த வேண்டும்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.3 பல்துறைக் கல்வி

Question 5.
திரு.வி.க. இயற்றிய நூல்கள் யாவை?
Answer:
(i) மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
(ii) பெண்ணின் பெருமை
(iii) தமிழ்ச்சோலை
(iv) பொதுமை வேட்டல்
(v) முருகன் அல்லது அழகு
(vi) இளமை விருந்து.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.2 புத்தியைத் தீட்டு

Students can Download 8th Tamil Chapter 4.2 புத்தியைத் தீட்டு Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.2 புத்தியைத் தீட்டு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.2 புத்தியைத் தீட்டு

Question 1.
அறிவின் பெருமையை விளக்கும் பழமொழிகளைத் திரட்டுக.
Answer:
(i), அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.
(ii) அறிய அறியக் கெடுவார் உண்டா ?
(iii) அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
(iv) அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
(v) அற்ப அறிவு அல்லற் கிடம்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் …………………. இன்றி வாழ்ந்தார்.
அ) சோம்பல்
ஆ) அகம்பாவம்
இ) வருத்தம்
ஈ) வெகுளி
Answer:
ஆ) அகம்பாவம்

Question 2.
‘கோயிலப்பா’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………
அ), கோ + அப்பா
ஆ) கோயில் + லப்பா
இ) கோயில் + அப்பா
ஈ) கோ + இல்லப்பா
Answer:
இ) கோயில் + அப்பா

Question 3.
பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………
அ) பகைவென்றாலும்
ஆ) பகைவனென்றாலும்
இ) பகைவன்வென்றாலும்
ஈ) பகைவனின்றாலும்
Answer:
ஆ) பகைவனென்றாலும்

குறுவினா

Question 1.
யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது?
Answer:
பிறரை மன்னிக்கத் தெரிந்தவரின் உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.2 புத்தியைத் தீட்டு

Question 2.
பகைவர்களிடம் நாம் நடந்துகொள்ள வேண்டிய முறை யாது?
Answer:
பகைவர்களிடம் நாம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

சிறுவினா

Question 1.
புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய முறைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?
Answer:
புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய முறைகள் :
(i) கத்தியைக் கூர்மையாக்குவதைத் தவிர்த்து விட்டு அறிவைச் கூர்மையாக்க வேண்டும்.

(ii) கோபம் நம் கண்ணை மறைத்துவிடும். அப்போது அறிவுடன் செயல்பட்டு சரியான முடிவெடுக்க வேண்டும்.

(iii) நம்மை அழிக்க நினைக்கும் பகைவர்களிடமும் அன்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

(iv) பிறருடைய குறைகளை மன்னிக்கத் தெரிந்தவர்களின் உள்ளம் மாணிக்கக் கோயிலைப் போன்றது. இதை மறந்தவர்களின் வாழ்வு அடையாளம் தெரியாமல் மறைந்து போய்விடும்.

(v) நாம் செருக்கின்றி வாழ வேண்டும். செருக்குடன் வாழ்வதால் நமக்கு எந்த லாபமும் இல்லை என்பதை எண்ணிப் பார்த்தால் நம் வாழ்வு தெளிவாகும். இவையே புத்தியைத் தீட்டி வாழவேண்டிய முறைகளாகக் கவிஞர் கூறுவனவாகும்.

சிந்தனை வினா

Question 1.
உங்கள் மீது பிறர் வெறுப்புக் காட்டினால் அவர்களை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?
Answer:
(i) என் மீது பிறர் வெறுப்புக் காட்டினால் நான் என் பொறுமையால் அவரை வெல்வேன்.
(ii) அன்போடு பழகுவேன்.
(iii) வெறுப்பதற்கான காரணம் அறிந்து அதைச் சரி செய்வேன்.
(iv) அவருடைய மனதில் உள்ள குழப்பத்தை நீக்குவேன்.
(v) விட்டுக் கொடுத்துப் பழகும் என்னுடைய செயல்பாட்டை அறிந்து அவர் தன்னை மாற்றிக் கொள்ளும்படிச் செய்வேன்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.2 புத்தியைத் தீட்டு

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :
1. தடம் – அடையாளம்
2. அகம்பாவம் – செருக்கு

நிரப்புக :

1. ஆலங்குடி சோமு ………………………… ஆசிரியராகப் புகழ் பெற்றவர்.
2. ஆலங்குடி சோமு தமிழ்நாடு அரசின் ………………….. விருது பெற்றவர்.
3. தீட்ட வேண்டியது ……………………
4. …………………… கண்ணை மறைத்துவிடும்.
5. மன்னிக்கத் தெரிந்தவனின் உள்ளம் ……………………..
6. அகம்பாவத்தினால் ஒரு …………………….. இல்லை.
7. பகைவனிடமும் ……………….. காட்ட வேண்டும்.
Answer:
1. திரைப்படப் பாடல்
2. கலைமாமணி
3. புத்தி
4. ஆத்திரம்
5. மாணிக்கக் கோயில்
6. லாபமும்
7. அன்பு

விடையளி:

Question 1.
ஆலங்குடி சோமு – குறிப்பு வரைக.
Answer:
(i) ஆலங்குடி சோமு திரைப்படப் பாடல் ஆசிரியராகப் புகழ்பெற்றவர்.
(ii) சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி என்னும் ஊரில் பிறந்தவர்.
(iii) தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.2 புத்தியைத் தீட்டு

நூல் வெளி
ஆலங்குடி சோமு திரைப்படப் பாடல் ஆசிரியராகப் புகழ்பெற்றவர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி என்னும் ஊரில் பிறந்தவர். தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.2 புத்தியைத் தீட்டு 1
இவரது திரையிசைப் பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.2 விடுதலைத் திருநாள்

Students can Download 8th Tamil Chapter 7.2 விடுதலைத் திருநாள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 7.2 விடுதலைத் திருநாள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.2 விடுதலைத் திருநாள்

Question 1.
நீங்கள் விரும்பும் விழா ஒன்றனைப் பற்றி ஒரு பத்தி அளவில் எழுதுக.
Answer:
நான் விரும்பும் விழா குடியரசு நாள் விழா.

குடியரசு நாள் அன்று பள்ளியில் காலையில் கொடியேற்றுவார்கள். நான் காலையில் பள்ளிக்குச் செல்வேன். பள்ளியில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளைக் கண்டுகளிப்பேன். விழாத் தலைவர், பள்ளி முதல்வர் மற்றும் என் நண்பர்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆற்றும் உரையைக் கேட்பேன்.

பிறகு விழா முடிவில் நாட்டுப்பண் பாடியதும் இனிப்புகள் வழங்கப்படும். இனிப்புகளைப் பெற்றுக் கெண்டு வீட்டிற்குச் செல்வேன். அங்கு தொலைகாட்சியில் மாநில ஆளுநர் கொடியேற்றுவதையும் மெரினா கடற்கரை சாலையில் காவல்துறையினரின் அணிவகுப்பையும் கலை நிகழ்ச்சிகளையும் கண்டு களிப்பேன்.

அந்நன்னாளில் வீரதீர செயல்கள் செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இந்நிகழ்ச்சியை பார்த்துவிட்டு அன்று மாலை மெரினா கடற்கரைக்குச் சென்று நீரில் விளையாடிவிட்டு வருவேன். இக்காரணங்களால் எனக்குக் குடியரசு நாள் மிகவும் பிடிக்கும்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வானில் முழுநிலவு அழகாகத் ……………… அளித்தது.
அ) தயவு
ஆ) தரிசனம்
இ) துணிவு
ஈ) தயக்கம்
Answer:
ஆ) தரிசனம்

Question 2.
இந்த ……………. முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு.
அ) வையம்
ஆ) வானம்
இ) ஆழி
ஈ) கானகம்
Answer:
அ) வையம்

Question 3.
‘சீவனில்லாமல் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ) சீவ + நில்லாமல்
ஆ) சீவன் + நில்லாமல்
இ) சீவன் + இல்லாமல்
ஈ) சீவ + இல்லாமல்
Answer:
இ) சீவன் + இல்லாமல்

Question 4.
‘விலங்கொடித்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ) விலம் + கொடித்து
ஆ) விலம் + ஒடித்து
இ) விலன் + ஒடித்து
ஈ) விலங்கு + ஒடித்து
Answer:
ஈ) விலங்கு + ஒடித்து

Question 5.
காட்டை + எரித்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………….
அ) காட்டை எரித்து
ஆ) காட்டையெரித்து
இ) காடுஎரித்து
ஈ) காடுயெரித்து
Answer:
ஆ) காட்டையெரித்து

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.2 விடுதலைத் திருநாள்

Question 6.
இதம் + தரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………
அ) இதந்தரும்
ஆ) இதம்தரும்
இ) இதத்தரும்
ஈ) இதைத்தரும்
Answer:
அ) இதந்தரும்

குறுவினா

Question 1.
பகத்சிங் கண்ட கனவு யாது?
Answer:
இந்தியா அந்நியரின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதே பகத்சிங் கண்ட கனவு ஆகும்.

Question 2.
இருண்ட ஆட்சி என எதனை மீரா குறிப்பிடுகிறார்?
Answer:
முந்நூறு ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட அரக்கராகிய அந்நியரின் ஆட்சியை இருண்ட ஆட்சி என மீரா குறிப்பிடுகிறார்.

சிறுவினா

Question 1.
இந்தியத்தாய் எவ்வாறு காட்சியளிக்கிறாள்?
Answer:
(i) முந்நூறு ஆண்டுகள் அந்நியரின் இருண்ட ஆட்சி முடிந்தது. உயிரற்ற பிணங்களைப் போலக் கிடந்த நாட்டு மக்கள் அனைவரையும் பற்றியிருந்த அறியாமை என்னும் உறக்கத்தை ஓட ஓட விரட்டினோம்.

(ii) அடிமையாய்த் தவித்துக் கொண்டிருந்த இந்தியத்தாய் சினந்து எழுந்து தன் கைவிலங்கை உடைத்துப் பகைவரை அழித்து, அவிழ்ந்த கூந்தலை முடித்து நெற்றியில் திலகமிட்டு இந்தியருக்கு மகிழ்வான காட்சியை அளிக்கின்றாள்.

சிந்தனை வினா

Question 1.
நாட்டுப்பற்றை வளர்க்கும் வகையில் விடுதலை நாளை எவ்வாறு கொண்டாடலாம்?
Answer:
(i) நாட்டுப்பற்றை வளர்க்கும் வகையில் விடுதலை நாள் விழாவில் பலகலை நிகழ்ச்சிகளை நிகழ்த்த வேண்டும்.

(ii) நம்மைப் பெற்றெடுத்த தாயை எவ்வாறு போற்றுவோமோ, அதேபோல் நம் தாய்நாட்டின் பெருமையையும் பழமையையும் மாணவர்கள் அறியும்படி உரையாற்ற வேண்டும்.

(iii) நாம் அடிமைகளாய் இருந்ததைக் கூறி அடிமைத்தளையை நீக்கியவர்களின் தியாகத்தைக் கூறும் வகையில் சிறு நாடகம் நடத்த வேண்டும்.

(iv) சாதி, மத பேதங்களினால் நாம் சண்டை சச்சரவுகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.2 விடுதலைத் திருநாள்

(v) நாட்டின் பாரம்பரியம் கலாச்சாரத்தை மதித்து நடக்க வேண்டும். தேசிய சின்னங்கள், தேசியக் கொடி, தேசியப்பாடல் ஆகியவற்றிற்கு மதிப்பளிக்க வேண்டும். நாட்டிற்குச் சேவை செய்ய எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஊர்க்காவல் படை, மாணவர் தேசியப்படை ஆகியவற்றில் பங்காற்றல் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு விடுதலை நாளைக் கொண்டாடலாம்.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. கவிஞர் மீராவின் இயற்பெயர் ………………………
2. மீரா அவர்கள் நடத்திய இதழ் ……………………….
3. விடுதலைத் திருநாள் என்ற பாடல் …………………… என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
4. தாய்நாட்டைத் ………………………. வணங்குவோம்.
5. பகத்சிங்கிற்கு சதி வழக்கில் …………………… விதிக்கப்பட்டது.
Answer:
1. மீ. இராசேந்திரன்
2. அன்னம் விடு தூது
3. கோடையும் வசந்தமும்
4. தமிழால்
5. தூக்குத்தண்டனை

குறுவினா :

Question 1.
மீரா – குறிப்பு வரைக.
Answer:
(i) கவிஞர் மீரா அவர்களின் இயற்பெயர் மீ. இராசேந்திரன். இவர் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
(ii) அன்னம் விடு தூது என்னும் இதழை நடத்தியவர்.
(iii) ஊசிகள், குக்கூ , மூன்றும் ஆறும், வா இந்தப் பக்கம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

Question 2.
அந்நியர் ஆட்சியில் மக்கள் எவ்வாறு இருந்தனர்?
Answer:
முந்நூறு ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட அரக்கராகிய அந்நியரின் இருண்ட ஆட்சியில் மக்கள் உயிரற்ற பிணங்களைப் போலக் கிடந்தனர்.

நெடுவினா :

Question 1.
‘விடுதலைத் திருநாள்’ பாடல் மூலம் கவிஞர் கூறியவற்றைத் தொகுத்து எழுதுக.
Answer:
முந்நூறு ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட அரக்கராகிய அந்நியரின் இருண்ட ஆட்சி முடிந்தது என்பதைக் கூறும் நாள் இன்று. உயிரற்ற பிணங்களைப் போலக் கிடந்த நாட்டு மக்கள் அனைவரையும் பற்றியிருந்த அறியாமை என்னும் உறக்கத்தை ஓட ஓட விரட்டிய நாள் இன்று.

அடிமையாய்த் தவித்துக் கொண்டிருந்த இந்தியத் தாய் சினந்து எழுந்து தன் கைவிலங்கை உடைத்துப் பகைவரை அழித்து, அவிழ்ந்த கூந்தலை முடித்து நெற்றியில் திலகமிட்டு, இந்தியருக்கு மகிழ்வான காட்சியை அளித்த நாள் இன்று.

சதி வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங், தூக்கிலிடப்படும் கடைசி நேரத்திலும் தன் மனக்கண்ணில் கனவுகண்ட இந்தியாவின் விடியல் தோன்றிய நாள் இன்று. பகைமை என்னும் முள்காட்டினை அழித்து, அங்கு விளைந்த மூங்கிலைப் புரட்சி என்னும் புல்லாங்குழல் ஆக்கி மூச்சுக்காற்றால் பூபாள இசை பாடும் இனிய நாள் இன்று.

இன்பம் தரும் இந்த விடுதலைத் திருநாளைக் கொண்டாட வாய்ப்பளித்த நம் தாய்நாட்டை தமிழால் வணங்குவோம்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.2 விடுதலைத் திருநாள்

பாடல்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.2 விடுதலைத் திருநாள் 1
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 7.2 விடுதலைத் திருநாள் 2

சொல்லும் பொருளும்

1. சீவன் – உயிர்
2. சத்தியம் – உண்மை
3. ஆனந்த தரிசனம் – மகிழ்வான காட்சி
4. வையம் – உலகம்
5. சபதம் – சூளுரை
6. மோகித்து – விரும்பி

பாடலின் பொருள்
முந்நூறு ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட அரக்கராகிய அந்நியரின் இருண்ட ஆட்சி முடிந்தது என்பதைக் கூறும் நாள் இன்று. உயிரற்ற பிணங்களைப் போலக் கிடந்த நாட்டு மக்கள் அனைவரையும் பற்றியிருந்த அறியாமை என்னும் உறக்கத்தை ஓட ஓட விரட்டிய நாள் இன்று.

அடிமையாய்த் தவித்துக் கொண்டிருந்த இந்தியத் தாய் சினந்து எழுந்து தன் கைவிலங்கை உடைத்துப் பகைவரை அழித்து, அவிழ்ந்த கூந்தலை முடித்து நெற்றியில் திலகமிட்டு, இந்தியருக்கு மகிழ்வான காட்சியை அளித்த நாள் இன்று.

சதி வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங், தூக்கிலிடப்படும் கடைசி நேரத்திலும் தன் மனக்கண்ணில் கனவுகண்ட இந்தியாவின் விடியல் தோன்றிய நாள் இன்று. பகைமை என்னும் முள்காட்டினை அழித்து, அங்கு விளைந்த மூங்கிலைப் புரட்சி என்னும் புல்லாங்குழல் ஆக்கி மூச்சுக்காற்றால் பூபாள இசை பாடும் இனிய நாள் இன்று.

இன்பம் தரும் இந்த விடுதலைத் திருநாளைக் கொண்டாட வாய்ப்பளித்த நம் தாய்நாட்டை தமிழால் வணங்குவோம்.

ஆசிரியர் குறிப்பு
மீ. இராசேந்திரன் என்னும் இயற்பெயரை உடைய மீரா கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியவர். அன்னம் விடு தூது என்னும் இதழை நடத்தியவர். ஊசிகள், குக்கூ, மூன்றும் ஆறும், வா இந்தப் பக்கம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய கோடையும் வசந்தமும் என்னும் நூலிலிருந்து ஒரு கவிதை இங்குத் தரப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம்

Students can Download 8th Tamil Chapter 3.5 எச்சம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.5 எச்சம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம்

Question 1.
‘வந்த’ என்னும் சொல்லைப் பயன்படுத்தி வெவ்வேறு தொடர்களை எழுதுக.
(எ.கா.) வந்த மாணவன்.
வந்த மாடு.
Answer:
(i) வந்த குழந்தை
(ii) வந்த சிறுவன்
(iii) வந்த தாத்தா
(iv) வந்த மாணவர்கள்
(v) வந்த மழை
(vi) வந்த திரைப்படம்
(vii) வந்த அம்மா .

Question 2.
‘வரைந்து’ என்னும் சொல்லைப் பயன்படுத்தி வெவ்வேறு தொடர்களை எழுதுக.
(எ.கா.) வரைந்து வந்தான்.
வரைந்து முடித்தான்.
Answer:
(i) வரைந்து பார்த்தான்.
(ii) வரைந்து வைத்தான்.
(iii) வரைந்து கொடுத்தான்.
(iv) வரைந்து வியந்தான்.
(v) வரைந்து மகிழ்ந்தான்.
(vi) வரைந்து கற்றான்.
(vii) வரைந்து தெளிந்தான்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் …………… எனப்படும்.
அ) முற்று
ஆ) எச்சம்
இ) முற்றெச்சம்
ஈ) வினையெச்சம்
Answer:
ஆ) எச்சம்

Question 2.
கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் …………………
அ) படித்து
ஆ) எழுதி
இ) வந்து
ஈ) பார்த்த
Answer:
ஈ) பார்த்த

Question 3.
குறிப்பு வினையெச்சம் ……………….. வெளிப்படையாகக் காட்டாது.
அ) காலத்தை
ஆ) வினையை
இ) பண்பினை
ஈ) பெயரை
Answer:
அ) காலத்தை

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம்

பொருத்துக

1. நடந்து – முற்றெச்சம்
2. பேசிய – குறிப்புப் பெயரெச்சம்
3. எடுத்தனன் உண்டான் – பெயரெச்சம்
4. பெரிய – வினையெச்சம்
Answer:
1. நடந்து – வினையெச்சம்
2. பேசிய – பெயரெச்சம்
3. எடுத்தனன் உண்டான் – முற்றெச்சம்
4. பெரிய – குறிப்புப்

பெயரெச்சம் கீழ்க்காணும் சொற்களைப் பெயரெச்சம் வினையெச்சம் என வகைப்படுத்துக

நல்ல, படுத்து, பாய்ந்து, எறிந்த, கடந்து, வீழ்ந்த, மாட்டிய , பிடித்து, அழைத்த, பார்த்து.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம் 4

சிறுவினா

Question 1.
எச்சம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
Answer:
(i) பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும்.
(ii) இது பெயரெச்சம் , வினையெச்சம் என்று இருவகைப்படும்.
(எ.கா.) படித்த மாணவன்.
படித்த பள்ளி.

Question 2.
அழகிய மரம்’ – எச்ச வகையை விளக்குக.
Answer:
(i) அழகிய மரம் – பெயரெச்சம்.
(ii) பெயரைக் கொண்டு முடியும் எச்சம் ஆகும்.
(iii) இத்தொடரில் ‘அழகிய’ என்ற மரம் பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிந்ததால் பெயரெச்சமாயிற்று.

Question 3.
முற்றெச்சத்தைச் சான்றுடன் விளக்குக.
Answer:
ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும்.

(எ.கா.) வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள். இத்தொடரில் படித்தனள் என்னும் வினைமுற்றுச் சொல் படித்து என்னும் வினையெச்சப் பொருளைத் தருகிறது. எனவே இது முற்றெச்சம் ஆகும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம்

Question 4.
வினையெச்சத்தின் வகைகளை விளக்குக.
Answer:
வினையெச்சத்தின் வகைகள் : வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இரு வகைப்படும்.

(i) தெரிநிலை வினையெச்சம் :
செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.

(எ.கா.) எழுதி வந்தான். இத்தொடரில் எழுதி என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலையும் இறந்த காலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது.

(ii) குறிப்பு வினையெச்சம் :
காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்தி வரும் வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் எனப்படும்.

(எ.கா.) மெல்ல வந்தான். இத்தொடரில் மெல்ல என்னும் சொல் காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல், மெதுவாக என்னும் பண்பை மட்டும் உணர்த்துகிறது.

மொழியை ஆள்வோம்

கேட்க :

Question 1.
உடல்நலம் குறித்த விழிப்புணர்வு உரைகளின் ஒலிப்பதிவுகளைக் கேட்டு மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

கீழ்க்காணும் தலைப்புகளில் இரண்டு நிமிடம் பேசுக

உணவே மருந்து
அனைவருக்கும் வணக்கம்!

மக்கள் அனைவரும் நெடுநாள் வாழவே விரும்புவர். நெடுநாள் வாழ நல்ல உடல் வேண்டும். எனவேதான் திருமூலர், ‘உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே’ என்று பாடியுள்ளார். உடல் வளர்ச்சிக்குத் தேவையான உணவு, உடலைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும்.

உயிர் வாழ்வதற்கு உணவு இன்றியமையாதது. நாம் உண்ணும் உணவு உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றது. தேய்ந்து போகும் திசுக்களைப் புதுப்பிக்கின்றது. மூளை, இதயம், நுரையீரல் முதலான உடல் உறுப்புகள் தத்தம் தொழிலைத் தவறாது செய்து வர நமக்குப் பல்வேறு சத்துகள் தேவைப்படுகின்றன. அவற்றையெல்லாம் நாம் உணவின் வழியாகத்தான் பெற வேண்டும்.

எல்லாச் சத்துகளும் கிடைக்கும்படியாக நம் உணவுப் பழக்கம் அமைய வேண்டும். ஆனால் நாம் நாகரிகம் என்னும் பெயரால் பின்பற்றும் மேற்கத்திய உணவு முறைகள் பெருமளவு கொழுப்புச் சத்தையே கொண்டவையாகும். மேற்கத்திய உணவு வகைகளில் நமக்குத் தேவையான நார்ச்சத்துகளும் நீர்ச்சத்துகளும் கிடைக்காது.

மேற்கத்திய உணவுகளை உண்ணுவதால் நோய்கள் நம்மிடம் ஓடோடி வந்து ஒட்டிக் கொள்ளும். விரைவு உணவகங்களுக்குச் சென்று சாப்பிடுவது, பொட்டலப்படுத்தப்பட்ட தின்பண்டங்களை வாங்கிக் கொறிப்பது, புட்டிகளில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை அருந்துவது தவறு. இவற்றில் உள்ள கொழுப்புச் சத்தும் சுவையூட்டச் சேர்க்கப்படும் வேதிப் பொருள்களும் உடலுக்கு ஊறு செய்பவையாகும். இவற்றை உண்பது காசைக் கொடுத்து நோயை வாங்குவதற்கு இணையாகும்.

நம் ஊரில் கிடைக்கும் எல்லாக் காய்கறிகளையும் பழ வகைகளையும் வாங்கிக் சாப்பிடுவதுதான் சிறந்தது. நாம் உண்ணும் அனைத்திலும் ஏதேனும் ஒன்று அல்லது பலச்சத்துகள் மலிந்துள்ளன. நம் உடல்நிலைக்கு ஏற்ற நமக்குத் தேவையான சத்துகளைத் தரக்கூடிய உணவுகளை போதுமான அளவிற்கு உண்பதுதான் ஆரோக்கிய உணவு என்பதாகும். நாம் விரும்பி உண்ணும் உணவினையே அதில் சேர்க்கப்படும் பொருட்களின் அளவினை கூட்டுதல் அல்லது குறைத்தல் மூலம் ஆரோக்கிய உணவாய் மாற்றிக் கொள்ள இயலும்.

நாச்சுவை கருதி உண்ணாமல், உடல் நலங்கருதி உண்ணுதலே நல்லது. உணவை விரைவாக விழுங்குதல் கூடாது. நன்றாக மென்று விழுங்குதல் வேண்டும். அப்போதுதான் வாயிலுள்ள உமிழ்நீர் வேண்டிய அளவு சுரந்து உணவுடன் கலக்கும்.

உமிழ்நீர் கலக்காத உணவு உள்ளே சென்றாலும் அது செரிக்காது. குடலும் தன் செரிமான ஆற்றலை இழந்து விடும். உணவின் சத்துகள் வீணாகாமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். காய்கறிகளை முக்கால் வேக்காட்டில் வேகவைத்து உண்ணுதல் வேண்டும்.

தண்ணீ ரும் மருந்தே. ‘நீரின்றியமையாது உலகு’ என்பது வள்ளுவம். இயற்கை உணவுப் பொருள்களில் நீரில்லாத உணவுப் பொருள்களே இல்லை. எல்லா வகையான உணவுப் பொருள்களும் விளைவதற்கு நீர் காரணமாக அமைகிறது.

வெப்பம் மிகுந்த கோடைக்காலத்தில் வெள்ளரிக்காய், பப்பாளிப் பழம், முலாப்பழம் முதலானவற்றைச் சாப்பிடலாம். இளநீர் பருகலாம். நீர்மோர் அருந்தலாம். இவை கோடைக்காலத்தில் நம் உடலை வெப்புநோய் முதலானவை அணுகாமல் காப்பாற்றும். கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நாம் அன்றாடம் உண்ணும் உணவில் மருத்துவக் குணமும் இருப்பதால் உணவே மருந்து என்று கூறுவது பொருத்தமாகிறதல்லவா?

‘பசித்துப் புசி’ என்பதனை மனதில் வைத்து பசித்தப் பின் உண்ணுவதனையும் அளவோடு உண்ணுதலையும் வழக்கமாகக் கொள்ள வேண்டும். அவ்வாறு இருந்தால் நாம் நோயற்ற வாழ்வை வாழலாம்.

சொல்லக்கேட்டு எழுதுக

நலமான உடலுக்கு இரண்டுவேளை சிற்றுண்டியும் ஒருவேளை பேருண்டியும் போதுமானது. காலை உணவைத் தவிர்த்தல் கூடாது. இரவெல்லாம் வெற்றுக் குடலுடன் இருந்த உடலுக்குக் குளிர்ச்சியான உணவு மிகவும் நல்லது. மதிய உணவில் காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றை அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம்

அரிசி உணவை அளவாக உண்ண வேண்டும். மிகுதியான காரத்தையும் உப்பையும் தவிர்க்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவை உட்கொள்ள வேண்டும். இரவு எளிமையான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இவையே உடல்நலம் பேணும் வழிமுறைகளாகும்.

அறிந்து பயன்படுத்துவோம்

உவமைத் தொடர்கள்

நாம் பேச்சிலும் எழுத்திலும் கருத்துகளை எளிதாக விளக்குவதற்காகச் சில தொடர்களைப் பயன்படுத்துவோம். அவை உவமைத் தொடர்கள் எனப்படும். ஒவ்வொரு உவமைத் தொடருக்கும் தனிப் பொருள் உண்டு.

(எ.கா.) 1. மடை திறந்த வெள்ளம் போல – தடையின்றி மிகுதியாக.
திருவிழாவைக் காண மடை திறந்த வெள்ளம் போல மக்கள் வந்தனர்.

2. உள்ளங்கை நெல்லிக்கனி போல – வெளிப்படைத் தன்மை
பாரதியின் பாடல்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல அனைவருக்கும் விளங்கும்.

பொருத்துக:

1. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல – ஒற்றுமையின்மை
2. கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல – பயனற்ற செயல்
3. பசு மரத்து ஆணி போல – தற்செயல் நிகழ்வு
4. விழலுக்கு இறைத்த நீர் போல – எதிர்பாரா நிகழ்வு
5. நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல – எளிதில் மனத்தில் பதிதல்
Answer:
1. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல ‘ – தற்செயல் நிகழ்வு
2. கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல – எதிர்பாரா நிகழ்வு
3. பசு மரத்து ஆணி போல – எளிதில் மனத்தில் பதிதல்
4. விழலுக்கு இறைத்த நீர் போல – பயனற்ற செயல்
5. நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல – ஒற்றுமையின்மை

உவமைத் தொடர்களைப் பயன்படுத்தித் தொடர் அமைக்க.

Question 1.
குன்றின் மேலிட்ட விளக்கைப் போல
Answer:
காந்தியடிகளின் புகழ், குன்றின் மேலிட்ட விளக்குப் போல் உலகெங்கும் ஒளிவீசுகின்றது.

Question 2.
வேலியே பயிரை மேய்ந்தது போல
Answer:
வேலியே பயிரை மேய்ந்தது போல் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களே தவறு செய்கிறார்கள்.

Question 3.
பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல
Answer:
பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் நான் எதிர்பார்க்காமலேயே என் பிறந்த நாளுக்கு எனக்குப் புத்தாடை வாங்கித் தந்தார் என் அப்பா, என் மாமா மிதிவண்டி வாங்கித் தந்தார்.

Question 4.
உடலும் உயிரும் போல
Answer:
கந்தனும் குமரனும் உடலும் உயிரும் போல எப்போதும் ஒருவரை ஒருவர் பிரியாமல் இணைந்தே இருப்பார்கள்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம்

Question 5.
கிணற்றுத் தவளை போல
Answer:
கந்தன் கிணற்றுத் தவளை போல நாட்டு நடப்புகளை அறியாமல் இருந்தான்.

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

முன்னுரை – நோய் வரக் காரணங்கள் – நோய் தீர்க்கும் வழிமுறைகள் – வருமுன் காத்தல் – உணவும் மருந்தும் – உடற்பயிற்சியின் தேவை – முடிவுரை

முன்னுரை :
நம்மிடம் என்னதான் கல்வி, செல்வம் முதலியவை இருந்தாலும் உடல் நலத்தோடு நீண்ட ஆயுளுடன் வாழ்வது முக்கியமாகும். உடல் நலத்துடன் கூடிய வாழ்வு பல கோடி மதிப்புடைய சொத்துக்குச் சமமானதாகும். அவ்விதம் நோயற்ற வாழ்வினை வாழ நாம் செய்ய வேண்டியனவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நோய் வரக் காரணங்கள் :
இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஓய்வின்மை, காலம் தவறிய உணவு. உணவுப் பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவையே பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்குக் காரணமாகும். துரித உணவுக் கலாச்சாரத்தில் மூழ்கியதே பல நோய்கள் வருவதற்குக் காரணம்.

மாசு நிறைந்த சுற்றுச்சூழலும் நோய்க்குக் காரணமாகின்றது. இயற்கை வேளாண்மையை மறந்து, நல்ல விளைச்சல் வேண்டி நவீன உரங்களையும் பூச்சிக் கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தி நிலத்தையும் மாசுபடுத்திவிட்டோம். இவ்வகை உணவினால் நோய்கள் அணுகுவதற்கு நாமே காரணமாகிவிட்டோம்.

நோய் தீர்க்கும் வழிமுறைகள் :
நாம் உண்ணும் உணவின் அளவை அறிந்து உண்ணுவது, சரியான உடற்பயிற்சி – மேற்கொள்வது, நம் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் திட்டமிட்டுச் செயல்களைச் செய்வது, நோயின் நிலை அறிந்து அதற்கேற்ற உணவையும் மருந்துகளையும் உட்கொள்ளுதல் போன்றவை நோயைத் தீர்க்கும் வழிமுறைகள் ஆகும்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது அவசியம். அப்போதுதான் நோய்கள் நம்மை அணுகாது. வீட்டின் உள்ளேயும் வீட்டைச் சுற்றியும் சுத்தத்தைப் பேண வேண்டும். ஈ, கொசு போன்றவை நம் வீட்டை அண்டாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

வருமுன் காத்தல் :
பருவநிலைகள் மாறும்போது அதற்கேற்ற உணவுகளை உண்ணுதல் அவசியம். கோடைக்காலத்தில் பழச்சாறுகளை அருந்துதல், மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்கவும், காய்ச்சல் வராமல் இருக்கவும் நம் தமிழ் மருத்துவ முறைகளை அறிந்து அவற்றை பின்பற்றுதல் வேண்டும்.

சிறுவர்களுக்கான ஆரோக்கிய உணவுகளை அறிந்து அவற்றை கொடுக்க வேண்டும். “நோய்நாடி நோய்முதல் நாடி” என்ற வள்ளுவரின் வாக்கின்படி நோயை அறிந்து அவை முதிர்ந்து நம்மைத் துன்பப்படுத்துவதற்கு முன் அந்நோயை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும். இவையே வருமுன் காத்தல் ஆகும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம்

உணவும் மருந்தும் :
உணவு வகைகளே நமது உடல் நலத்திற்கு அடிப்படை என்று கூறினால் அது மிகையாகாது. உணவைத் தகுந்த நேரத்தில் ஏற்ற அளவில் உட்கொள்ள வேண்டும். காலை உணவைத் தவிர்த்தல் கூடாது. இரவெல்லாம் வெற்றுக் குடலுடன் இருந்த உடலுக்குக் குளிர்ச்சியான உணவு மிகவும் நல்லது.

மதிய உணவில் காய்கறிகள் கீரைகள் ஆகியவற்றை அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசி உணவை அளவாக உண்ண வேண்டும். மிகுதியான காரத்தையும் உப்பையும் தவிர்க்க வேண்டும். இரவு எளிமையான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இவையே உடல் நலம் பேணும் வழிமுறைகளாகும்.

உடற்பயிற்சியின் தேவை :
நாம் நோயின்றி வாழ உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. ‘ஓடி விளையாடு பாப்பா… நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா’ என்று பாடிய பாரதியார், உடற்பயிற்சியைச் சிறுவயது முதலே அனைவரும் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். நாம் தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால் உடல் சுறுசுறுப்புடனும், மூளை புத்துணர்ச்சியுடனும் காணப்படும். தவிர உடற்பயிற்சி பல நோய்களிலிருந்து விடுவிக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது என்பதே அறிவியல் கண்ட உணவாகும். இதனைக் கவிமணி,

“காலை மாலை உலாவிநிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஓடிப் போவனே!
என்கிறார்.

முடிவுரை :
நோயற்ற வாழ்விற்குச் சுகாதாரம் அவசியம். ‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்ற ஔவையின் வாக்குப்படி நமக்குக் கிடைத்த இவ்வுடலை நோயின்றி வைத்திருப்பது நம் கடமையாகும்.

மொழியோடு விளையாடு

கீழ்க்காணும் படம் சார்ந்த சொற்களை எழுதுக.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம் 2
1. பட்டை
2. வசம்பு
3. இலவங்கம்
4. அன்னாசிப்பூ
5. மிளகு
6. ஓமம்
7. சீரகம்
8. கருஞ்சீரகம்
9. சோம்பு
10. பெருங்காயம்
11. சித்தரத்தை

வட்டத்திலுள்ள பழமொழிகளைக் கண்டுபிடித்து எழுதுக

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம் 3
1. முயற்சி திருவினை ஆக்கும்.
2. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
3. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
4. சுத்தம் சோறு போடும்.
5. வருமுன் காப்போம்.
6. அறிவே ஆற்றல்
7. பருவத்தே பயிர்செய்.
8. பசித்துப் புசி.
9. சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்.
10. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

நிற்க அதற்குத் தக

என் பொறுப்புகள்…
1. காலை மாலை உடற்பயிற்சி செய்வேன்.
2. உரிய நேரத்தில் உறங்கச் செல்வேன்; உரிய நேரத்தில் விழித்தெழுவேன்.

கலைச்சொல் அறிவோம்

1. நோய் – Disease
2. மூலிகை – Herbs
3. சிறுதானியங்கள் – Millets
4. பட்டயக் கணக்கர் – Auditor
5. பக்கவிளைவு – Side Effect
6. நுண்ணுயிர் முறி – Antibiotic
7. மரபணு – Gene
8. ஒவ்வாமை – Allergy

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம்

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் …………….. எனப்படும்.
2. எச்சம் ……………… வகைப்படும்.
3. பெயரைக் கொண்டு முடியும் எச்சம் ………………..
4. பெயரெச்சம் ……………….. காலத்திலும் வரும்.
5. செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் ………………… பெயரெச்சம்.
6. பெயரெச்சம் ………………. வகைப்படும்.
7. செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் ……………….. பெயரெச்சம்.
8. வினையைக் கொண்டு முடியும் எச்சம் ………………….
9. செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் ……………….. வினையெச்சம்.
10. காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்தி வரும் வினையெச்சம் …………………..
Answer:
1. எச்சம்
2. இரண்டு
3. பெயரெச்சம்
4. மூன்று
5. தெரிநிலை
6. இரண்டு
7. குறிப்புப்
8. வினையெச்சம்
9. தெரிநிலை
10. குறிப்பு வினையெச்சம்

விடையளி :

Question 1.
எச்சம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
எச்சம் இரண்டு வகைப்படும். அவை பெயரெச்சம், வினையெச்சம் என்பனவாம்.

Question 2.
பெயரெச்சம் சான்றுடன் விளக்குக.
Answer:
பொருளைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் ஆகும். பெயரெச்சம் மூன்று காலத்திலும் வரும்.
(எ.கா) பாடிய பாடல் – இறந்தகாலப் பெயரெச்சம்
பாடுகின்ற பாடல் – நிகழ்காலப் பெயரெச்சம்
பாடும் பாடல் – எதிர்காலப் பெயரெச்சம்

Question 3.
தெரிநிலை பெயரெச்சம் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் தெரிநிலைப் பெயரெச்சம் எனப்படும்.
(எ.கா) எழுதிய கடிதம்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.5 எச்சம்

Question 4.
குறிப்புப் பெயரெச்சம் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
செயலையோ காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.
(எ.கா) சிறிய கடிதம்.

Question 5.
வினையெச்சம் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் எனப்படும்.
(எ.கா) படித்து முடித்தான்.

Question 6.
தெரிநிலை வினையெச்சம் என்றால் என்ன?
Answer:
செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.
(எ.கா) எழுதி வந்தான்.

Question 7.
குறிப்பு வினையெச்சம் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்தி வரும் வினையெச்சம் குறிப்பு வினையெச்சம் எனப்படும்.
(எ.கா) மெல்ல வந்தான்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.1 கல்வி அழகே அழகு

Students can Download 8th Tamil Chapter 4.1 கல்வி அழகே அழகு Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.1 கல்வி அழகே அழகு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.1 கல்வி அழகே அழகு

Question 1.
கல்வி குறித்து வழங்கப்படும் பழமொழிகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
(i) அறிய அறியக் கெடுவார் உண்டா ?
(ii) இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
(iii) கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை
(iv) கல்லாதவரே கண்ணில்லாதவர்.
(v) கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.

Question 2.
கற்றோரின் சிறப்புகளைப் பற்றிப் பிற நூல்களில் இடம்பெற்ற பாடல்களைத் தொகுத்து எழுதுக.
Answer:
அறிவுடையார் தாமே உணர்வர்
பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,
மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,
விதையாமை நாறுவ வித்து உள; மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு. – காரியாசான்

Question 3.
பின்வரும் நாலடியார் பாடலைப் படித்துச் சுவைக்க.
Answer:
கல்வி கரையில கற்பவர் நாள் சில
மெல்ல நினைக்கின் பிணி பல – தெள்ளிதின்
ஆராய்ந்தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
கற்றவருக்கு அழகு தருவது ……………….
அ) தங்கம்
ஆ) வெள்ளி
இ) வைரம்
ஈ) கல்வி
Answer:
ஈ) கல்வி

Question 2.
‘கலனல்லால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………..
அ) கலன் + லல்லால்
ஆ) கலம் + அல்லால்
இ) கலன் + அல்லால்
ஈ) கலன் + னல்லால்
Answer:
இ) கலன் + அல்லால்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.1 கல்வி அழகே அழகு

சொற்றொடரில் அமைத்து எழுதுக

1. அழகு – பெண்களுக்கு அணிகலன்களை விட புன்னகையே அழகு தரும்.
2. கற்றவர் – கற்றவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு கிடைக்கும்.
3. அணிகலன் – ஐம்பெருங்காப்பியங்கள் தமிழன்னைக்கு அணிகலன்களாகத் திகழ்கின்றன.

குறுவினா

Question 1.
யாருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை?
Answer:
கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும். ஆகையால் அவருக்கு அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் தேவையில்லை.

சிறுவினா

Question 1.
நீதிநெறி விளக்கப்பாடல் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
நீதிநெறி விளக்கப்பாடல் கூறும் கருத்துகள் :
(i) ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலனுக்கு மேலும் அழகூட்ட வேறு அணிகலன்கள் தேவையில்லை.
(ii) அதுபோலக் கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும்.
(iii) ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை

சிந்தனை வினா

Question 1.
கல்வியின் பயன்களாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.
Answer:
(i) அறியாமையைப் போக்கி அறிவை விரிவாக்கும்.
(ii) அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நால்வகைப் பயனையும் பெறலாம்.
(iii) கவலையின்றி வாழத் துணைபுரியும்.
(iv) கல்வி கற்பதனால் வாழ்க்கையில் எதிர்ப்படும் இடர்களை விரட்ட முடியும்.
(v) கல்வியால் நாட்டில் நன்னெறி படரும்.
(vi) கல்வியால் மக்கள் மாண்புறுவர்.

கூடுதல் வினாக்கள

சொல்லும் பொருளும் :

1. கலன் – அணிகலன்
2. முற்ற – ஒளிர

நிரப்புக :

1. ஒளிரும் மணிகளால் செய்யப்பட்டது ………………………
2. குமரகுருபரர் ………………….. நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
3. கந்தர் கலிவெண்பாவை இயற்றியவர் ……………………
4. குமரகுருபரர் இயற்றிய பிள்ளைத்தமிழ் நூல்கள் ………………………………
5. நீதிநெறி விளக்கம் ……………….. வெண்பாக்களை உடையது.
6. மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளைச் சுட்டிக்காட்டும் குமரகுருபரரின் நூல் ……………………….
7. கற்றவருக்கு அழகு சேர்க்க …………………….. தேவையில்லை.
Answer:
1. அணிகலன்
2. பதினேழாம்
3. குமரகுருபரர்
4. மீனாட்சியம்மை பிள்ளைத்த முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
5. 102
6. நீதிநெறி விளக்கம்
7. அணிகலன்கள்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.1 கல்வி அழகே அழகு

விடையளி :

Question 1.
குமரகுருபரர் பற்றி எழுதுக.
Answer:
(i) குமரகுருபரர் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
(ii) இவர் தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் பல சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளார்.

Question 2.
குமரகுருபரர் இயற்றிய நூல்கள் யாவை?
Answer:
இயற்றிய நூல்கள் :
(i) கந்தர் கலிவெண்பா
(ii) கயிலைக் கலம்பகம்
(iii) சகலகலாவல்லி மாலை
(iv) மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
(v) முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

Question 3.
நீதிநெறி விளக்கம் – பெயர்க்காரணம் எழுதுக.
Answer:
மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளைச் சுட்டிக்காட்டுவதால் இந்நூல் ‘நீதி நெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது. இந்நூலில் கடவுள் வாழ்த்து உட்பட 102 வெண்பாக்கள் உள்ளன.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.1 கல்வி அழகே அழகு

ஆசிரியர் குறிப்பு
குமரகுருபரர் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவர் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கும் பல சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளார். கந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஆகியன அவற்றுள் சிலவாகும்.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 4.1 கல்வி அழகே அழகு 1
மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளைச் சுட்டிக்காட்டுவதால் இந்நூல் நீதிநெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது. கடவுள் வாழ்த்து உட்பட 102 வெண்பாக்கள் இந்நூலில் உள்ளன. இந்நூலின் பதின்மூன்றாம் பாடல் நமக்குப் பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளது.

பாடலின் பொருள்
ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலனுக்கு மேலும் அழகூட்ட வேறு அணிகலன்கள் தேவையில்லை; அதுபோலக் கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும். ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.3 தமிழ்ர் மருந்தும்

Students can Download 8th Tamil Chapter 3.3 தமிழ்ர் மருந்தும் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.3 தமிழ்ர் மருந்தும்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.3 தமிழ்ர் மருந்தும்

Question 1.
நீங்கள் மருத்துவரிடம் கேட்க விரும்பும் ஐந்து வினாக்களை எழுதுக.
Answer:
(i) சிறு வயதிலேயே இரத்த அழுத்தம், தலைவலி போன்ற நோய்களால் அவதிப்படுகிறார்கள். அதற்குக் காரணம் என்ன?

(ii) மாணவர்களுள் சிலரால் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து செயல்களைச் செய்ய இயலவில்லை. அதற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டும்?

(iii) நம் உடலிலுள்ள எலும்புகள் வலுவடைய நாம் செய்ய வேண்டுவன யாவை?
(iv) நோய்கள் நம்மை அணுகாமல் இருக்க யாது செய்ய வேண்டும்?
(v) சூரிய ஒளியைப் பெறுவதற்கு உகந்த நேரம் எது?

Question 2.
உங்கள் பகுதிகளில் கிடைக்கும் மூலிகைகளின் மாதிரிகளைத் திரட்டி அவற்றின் பயன்களை எழுதிக் காட்சிப்படுத்துக.
Answer:
(i) வல்லாரை :
வல்லாரை பல மருத்துவக் குணங்களைப் பெற்றுள்ளது. இதில் கால்சியம், பாஸ்பரஸ், நீர்ச்சத்து, புரதச்சத்து, தாது உப்புகள் போன்ற சத்துகள் அடங்கியுள்ளன. சிறந்த நினைவாற்றலைத் தரக்கூடியது. வாயுத் தொல்லையை நீக்கும். சர்க்கரை நோய், இதயக்கோளாறுகள் உள்ளிட்ட முக்கிய நோய்களைத் தடுக்கும்.

(ii) கறிவேப்பிலை :
கறிவேப்பிலை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. இதில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, ஃபோலிக் அமிலம், நீர்ச்சத்து, மாவுச் சத்து போன்ற பல சத்துகள் உள்ளன. கறிவேப்பிலை கண்களுக்கு வலுவூட்டக்கூடியது. பார்வைக் கோளாறைப் போக்கும். தலைமுடி கருகருவென்று வளரும். உடலில் உள்ள பித்தத்தைக் குறைக்கும்.

(iii) கரிசலாங்கண்ணி :
இதில் வெள்ளை , மஞ்சள் என இரண்டு வகைகள் உள்ளன. காமாலை நோயை போக்கும். கல்லீரலைப் பலப்படுத்தும். இரத்தச் சோகையைப் போக்கும்.

(iv) முருங்கைக்கீரை :
முருங்கைக்கீரையை வேகவைத்து அதன் சாற்றைக் குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய் இவற்றை நீக்கும்.

(v) பொன்னாங்கண்ணிக் கீரை :
இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் கண்பார்வை தெளிவாக இருக்கும். கண் எரிச்சல், கண் மங்கல், கண்கட்டி, கண்ணில் நீர் வடிதல், பீளை தள்ளுதல் போன்ற கண் நோய்கள் குணமாகும். வாய்நாற்றம், வாய்ப்புண் ஆகியவையும் நீங்கும்.

(vi) அகத்திக்கீரை :
அகத்திக்கீரையை உணவில் அவ்வப்போது சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி, பி, புரதச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து போன்ற சத்துகள் உள்ளன. அதிகப்படியான பித்தத்தைக் குறைக்கும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். குடல் புண், வாய்ப்புண் ஆகியவற்றை ஆற்றும். பார்வைக் கோளாறுகள் வராது. எலும்பைப் பலப்படுத்தும்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு ……………… பயன்படுத்தினர்.
அ) தாவரங்களை
ஆ) விலங்குகளை
இ) உலோகங்களை
ஈ) மருந்துகளை
Answer:
அ) தாவரங்களை

Question 2.
தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது ………………. நீட்சியாகவே உள்ளது.
அ) மருந்தின்
ஆ) உடற்பயிற்சியின்
இ) உணவின்
ஈ) வாழ்வின்
Answer:
இ) உணவின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.3 தமிழ்ர் மருந்தும்

Question 3.
உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று ………….
அ) தலைவலி
ஆ) காய்ச்சல்
இ) புற்றுநோய்
ஈ) இரத்தக்கொதிப்பு
Answer:
ஈ) இரத்தக்கொதிப்பு

Question 4.
சமையலறையில் செலவிடும் நேரம் ………… செலவிடும் நேரமாகும்.
அ) சுவைக்காக
ஆ) சிக்கனத்திற்காக
இ) நல்வாழ்வுக்காக
ஈ) உணவுக்காக
Answer:
இ) நல்வாழ்வுக்காக

குறுவினா

Question 1.
மருத்துவம் எப்போது தொடங்கியது?
Answer:
மருத்துவத்தின் தொடக்கம் :
தொடக்க காலத்தில் மனிதனுக்கு நோய் வந்தபோது இயற்கையாக வளர்ந்த தாவரங்களைக் கொண்டும் அவனுக்கு அருகில் கிடைத்த பொருள்களைக் கொண்டும் நோயைத் தீர்க்க முயன்றிருப்பான்.

தாவரங்களின் வேர், பட்டை, இலை, பூ, கனி முதலியவற்றை மருந்தாகப் பயன்படுத்தியிருப்பான். இவ்வாறுதான் மனிதர்களுக்கும் மருத்துவத்திற்குமான தொடர்பு தொடங்கியது.

Question 2.
நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை யாவை?
Answer:
நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை :
தினமும் நாற்பத்தைந்து நிமிடத்தில் மூன்று கி.மீ. நடைப்பயணம், பதினைந்து நிமிடம் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி, ஏழு மணி நேர தூக்கம், மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துதல் ஆகியன அவசியம்.

எங்கோ விளையும் ஆப்பிளைச் சாப்பிடுவதை விட, நமது ஊரில் விளையும் கொய்யா, இலந்தை, நாவல், பப்பாளி, நெல்லி, வாழைப்பழங்கள் ஆகியவற்றைக் காலை உணவுக்கு முன் சாப்பிடலாம்.

Question 3.
தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?
Answer:
வேர், தழை போன்ற தாவர உறுப்புகளும் தாதுப் பொருட்களும் உலோகமும் தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவனவாகும்.

சிறுவினா

Question 1.
நோய்கள் பெருகக் காரணம் என்ன?
Answer:
நோய்கள் பெருகியிருப்பதற்குக் காரணம் :
மனிதன் இயற்கையை விட்டு விலகி வந்ததுதான் முதன்மைக் காரணம்.
மாறிப்போன உணவு, மாசு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் இவை மூன்றும் குறிப்பிடத்தக்க காரணங்கள்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.3 தமிழ்ர் மருந்தும்

சுற்றுச்சூழல் மாசு மற்றொரு காரணம்.

தன் உணவுக்காக வேறு எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல், நிலத்தை உரங்களாலும், பூச்சிக்கொல்லிகளாலும் நச்சுப்படுத்தலாம் என்ற அலட்சியமான எண்ண மும் மனஅழுத்தமும் எது கேளிக்கை, எது குதூகலம், எது படிப்பு, எது சிந்தனை என்ற புரிதல் இல்லாமையும் கூடுதல் காரணங்கள் ஆகும்.

நம்முடைய வாழ்வியலைச் செம்மைப்படுத்துவதற்காக அறிவியல் அறிவை, மேம்பட்ட அறிவை வளர்த்தோம். ஆனால் நுண்ணறிவைத் தொலைத்துவிட்டோம். இயற்கையோடு இயைந்து வாழலாம் என்கிற அறிவை நாம் மறந்துவிட்டோம். இதுவே இன்றைக்குப் பல நோய்கள் பெருக மிக முக்கியமான காரணம் ஆகும்.

Question 2.
பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் யாவை?
Answer:
பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் :
(i) நோய் வந்த பின்பு மருத்துவமனைக்குச் செல்வதைவிட வருமுன் காக்கும் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

(ii) சரியான உணவு, சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம் ஆகிய மூன்றும் உங்களை நலமாக வாழவைக்கும்.

(iii) விலை உயர்ந்த உணவுதான் சரியான உணவு என்று எண்ணாதீர்கள்.

(iv) எளிமையாகக் கிடைக்கக்கூடிய காய்கறிகள், கீரைகள், பழங்கள், சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

(v) கணினித்திரையிலும் கைபேசியிலும் விளையாடுவதைத் தவிர்த்து நாள்தோறும் ஓடியாடி விளையாடுங்கள்.

(vi) இரவுத் தூக்கம் மிகவும் இன்றியமையாதது.

(vii) உரிய நேரத்தில் உறங்கச் செல்லுங்கள்; அதிகாலையில் விழித்தெழுங்கள். உங்களை எந்த நோயும் அண்டாது.

நெடுவினா

Question 1.
தமிழர் மருத்துவத்தின் சிறப்புகளாக மருத்துவர் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
முன்னுரை :
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.”

என்றார் திருவள்ளுவர். அருந்தும் உணவே அருமருந்தென அறிந்தவர் நம் தமிழ் மக்கள். தமிழ் மக்கள் உடற்கூறுகள் பற்றிய அறிவிலும், மருத்துவம் பற்றிய புரிதலிலும் சிறந்த விளங்கினர். உலகில் பல்வேறு மருத்துவ முறைகள் இருந்தாலும் தமக்கென மரபு சார்ந்த மருத்துவ முறைகளை உருவாக்கிப் பின்பற்றி வந்தனர். அத்தகைய மருத்துவ முறைகள் பற்றிய செய்திகளை இக்கட்டுரை மூலம் அறியலாம்.

தொடக்கக் காலத்தில் தாவரங்களின் வேர், பட்டை, இலை, பூ, கனி முதலியவற்றை மருந்தாகப் பயன்படுத்தினர். தமிழர் மூலிகை மருத்துவம், அறுவை மருத்துவம், மருந்தில்லா மருத்துவம் போன்றவற்றையும் உடலை வளப்படுத்தி உள்ளத்தைச் சீராக்கும் யோகம் முதலிய கலைகளையும் அறிந்திருந்தார்கள்.

மருத்துவ முறைகள் :
சித்த மருத்துவம், ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், நாட்டு மருத்துவம் என்றெல்லாம் மருத்துவமுறைகள் பல இருந்தாலும் இவற்றுக்கெல்லாம் அடிப்படை ஒன்றுதான். இயற்கையில் கிடைக்கும் பொருள்கள், அப்பொருள்களின் தன்மை, சுவை இவற்றைக் கொண்டே நோயைக் குணப்படுத்த முடியும் என்ற உண்மையை மிகத் தெளிவாக விளக்கினர். தமிழர் மருத்துவம் நாட்டு வைத்தியமாகவும் பாட்டி வைத்தியமாகவும் மரபு சார்ந்த சித்த வைத்தியமாகவும் உணவு சார்ந்த மருத்துவமாகவும், பண்பாடு சார்ந்த மருத்துவமாகவும் விரிந்துள்ளது.

தமிழர் மருத்துவம் பின்தங்கியதும் மறுமலர்ச்சி அடைந்ததும் :
ஆங்கிலேயரின் வருகையால் நவீன மருத்துவம் தலை தூக்கியது. இம்மருத்துவம் துரிதமாகச் சில நோய்களைத் தீர்த்தன. அதனால் தமிழர் மருத்துவம் பின்தங்கியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு சர்க்கரை, இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், மாரடைப்பு முதலிய நோய்களுக்குத் தீர்வு காண இரசாயன மருந்துகள் போதாது என்றும், இதனுடன் உணவு, வாழ்வியல், உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றையும் கூட்டாக மேற்கொள்ள வேண்டும் என்றும் உணர்ந்தனர். மேலும் இம்மருத்துவமுறை பக்கவிளைவுகள் அற்றது என்பதாலும் மறுமலர்ச்சி அடைந்தது.

சித்த மருத்துவ மருந்துப் பொருள்கள் :
வேர், தழையால் குணமாகாதபோது சில நாட்பட்ட நோய்களுக்கு, தாவரங்கள் மட்டும் அல்லாமல் உலோகங்களையும் பாஷாணங்களையும் சித்த மருந்துகளாகப் பயன்படுத்தினர். மேலும் ஒவ்வொருவருடைய உடல் அமைப்பிற்கு ஏற்றவாறு மருத்துவம் மாறுபடும். நோயாளியின் வாழ்வியல், சமூகச் சிக்கல், எண்ணப் போக்கு மரபுவழி எப்படிப்பட்டது என்பனவற்றை ஆராய்ந்து சிகிச்சை அளித்தது தமிழர் மருத்துவம்.

மருத்துவத்தில் பக்க விளைவுகள் :
ஒரு மருந்தை எடுத்துக் கொண்டால் அதற்கு விளைவும் இருக்கும். பக்க விளைவும் இருக்கும். ஆனால் தமிழர் மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை. அதற்குக் காரணம் மருந்து என்பதே உணவின் நீட்சியாக இருக்கிறது. சித்த மருத்துவத்தின் மீது தற்போது நடக்கும் பல அறிவியல் ஆய்வுகள் மூலம் அவற்றைத் தர நிர்ணயம் செய்து யாருக்கு எந்த மருந்து, எந்த அளவில், எந்தத் துணை மருந்துடன் கொடுத்தால் பக்க விளைவு இருக்காது என்று பட்டியலிட்டுள்ளனர்.

தமிழர் மருத்துவத்தின் சிறப்பு :
தனித்துவமான பார்வை தமிழர் மருத்துவத்தின் முதல் சிறப்பு. சூழலுக்கு இசைந்த மருத்துவம் இது. இந்த மருத்துவத்தின் பயன்பாடோ, மூலக்கூறுகளோ, மருந்துகளோ சுற்றுச்சூழலைச் சிதைக்காது. நோய்க்கான சிகிச்சையை மட்டும் சொல்லாமல், நோய் மீண்டும் வராமலிருப்பதற்கான வாழ்வியலையும் சொல்கிறது.

முடிவுரை :
நோய் நாடி நோய் முதல் நாடி என்ற திருக்குறளின்படி நோயை மட்டுமன்றி அதன் காரணிகளையும் கண்டறிந்து ஒருவரை நோயில்லாத மனிதராக்கும் தமிழ்
மருத்துவமுறையை நாமும் பின்பற்றி நோயின்றி வாழலாம்.

சிந்தனை வினா

Question 1.
நோயின்றி வாழ நாம் என்னென்ன வழிகளைக் கையாளலாம்?
Answer:
(i) அலட்சியம், முரண்பாடு இன்றி அளவோடு உணவு உண்ண வேண்டும்.

(ii) உணவை மென்று, மெதுவாக, உமிழ்நீர் நன்றாக சுரக்க, ரசித்து, ருசித்து சாப்பிட வேண்டும்.

(iii) நீண்ட காலம் வாழவும் நோயின்றி வாழவும் உடற்பயிற்சி மிகவும் அவசியம்.

(iv) யோகாசனங்கள் செய்வதால் உடலும் மனதும் எப்பொழுதும் புத்துணர்வோடு இருக்கும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.3 தமிழ்ர் மருந்தும்

(v) ஒவ்வாத உணவுகளைத் தவிர்த்தல் வேண்டும்.
(vi) நல்ல பழக்க வழக்கங்களை மேற்கொள்ளுதல்.
(vii) நாள்தோறும் அரைமணி நேரம் நல்ல வேகமாக நடக்க வேண்டும்.
(viii) எளிமையாக வாழ விரும்புதல்.
(ix) கோபத்தைக் குறைத்துக் கொள்ளுதல்.
(x) அளவான உணவு, அளவான ஆசை, அளவான உறக்கம் இம்மூன்றும் அடிப்படை வழிகளாகும்.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. அருந்தும் உணவே ……………………. அறிந்தவர்கள் நம் தமிழ் மக்கள்.
2. ‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு எனக் கூறும் நூல் ……………….. கூறியவர் ……………….
3. தமிழர்கள் பின்பற்றிய மருத்துவமுறை ……………. சார்ந்த மருத்துவமுறை.
Answer:
1. அருமருந்தென
2. திருக்குறள், திருவள்ளுவர்
3. மரபு

குறுவினாக்கள் :

Question 1.
சித்த மருத்துவதில் தாவரங்களின்றி மருந்தாகப் பயன்படுத்தப்பட்டவை எவை?
Answer:
சித்த மருத்துவத்தில் வேர், தழை ஆகியவற்றை மருந்துகளாகப் பயன்படுத்தினர். அவை மட்டும் அல்லாமல் உலோகங்களையும் பாஷாணங்களையும் சித்த மருந்துகளாகப் பயன்படுத்தினார்கள். தாதுப் பொருட்களையும் உலோகத்தையும் மருந்துகளாக மாற்றும் வல்லமை பெற்றது சித்த மருத்துவம்.

Question 2.
எல்லோருடைய உடல்நலனுக்கும் உடல் அமைப்பிற்கும் ஒரே வகையான மருந்து ஏற்றதாக இருக்குமா?
Answer:
(i) ஒரே அளவு எடை கொண்ட பலர் வெவ்வேறு இடங்களில் இருக்கும்போது அவர்களுக்கு ஒரே வகையான மருந்து கொடுக்க முடியாது.

(ii) வாழ்வியல், சமூகச் சிக்கல், எண்ணப்போக்கு, உணவுமுறை, மரபுவழி என்பன ஒவ்வொருக்கும் வேறுபடும். அதனால் அவரவர்களுக்கு ஏற்ற வகையில் மருந்துகள் அளிக்க வேண்டும்.

Question 3.
தமிழர் மருத்துவத்தின் சிறப்பு யாது?
Answer:
(i) தமிழர் மருத்துவம் தனித்துவமான பார்வை மற்றும் சூழலுக்கு இசைந்த மருத்துவம் ஆகும். இந்த மருத்துவத்தின் பயன்பாடோ, மூலக்கூறுகளோ, மருந்துகளோ
சுற்றுச்சூழலைச் சிதைக்காது.

(ii) மிக முக்கியமான சிறப்பு என்னவென்றால், நோய்க்கான சிகிச்சையை மட்டும் சொல்லாமல் நோய் மீண்டும் வராமலிருப்பதற்கான வாழ்வியலையும் சொல்கிறது.

(iii) ‘நோய்நாடி நோய் முதல் நாடி’ என்ற திருக்குறளின்படி ஒருவரை நோயில்லாத மனிதராக்குகிறது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.3 தமிழ்ர் மருந்தும்

Question 4.
உடல் நலத்துக்காக உடலுக்கு நாள்தோறும் நாம் என்ன செய்ய வேண்டும்?
Answer:
(i) தினமும் நாற்பத்தைந்து நிமிடத்தில் மூன்று கி.மீ. நடைப்பயணம், பதினைந்து நிமிடம் யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி, ஏழு மணி நேர தூக்கம், மூன்று லிட்டர் தண்ணீ ர் அருந்துதல் ஆகியன அவசியம்.

(ii) எங்கோ விளையும் ஆப்பிளைச் சாப்பிடுவதைவிட, நமது ஊரில் விளையும் கொய்யா, இலந்தை, நாவல், பப்பாளி, நெல்லி, வாழைப்பழங்கள் ஆகியவற்றைக் காலை உணவுக்கு முன்பு சாப்பிடலாம்.

சிறுவினாக்கள்

Question 1.
பழந்தமிழர்களின் மருத்துவமுறைகளின் அடிப்படை யாது?
Answer:
பழந்தமிழர்களின் மருத்துவ முறைகளாவன சித்த மருத்துவம், ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், நாட்டு மருத்துவம் ஆகியனவாகும்.

இவற்றுக்கெல்லாம் அடிப்படை ஒன்றுதான். தமிழரது நிலம், நிறைந்த பண்பாடுகளும் தத்துவங்களும் அடங்கியது. நோய்கள் எல்லாம் பேய், பிசாசுகளால் வருகின்றன. பாவ புண்ணியத்தால் வருகின்றன என்று உலகத்தின் பல பகுதிகளில் சொல்லிக் கொண்டிருந்த காலத்தில், தமிழர் தத்துவங்களான சாங்கியம், ஆசீவகம் போன்றவை உடலுக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள ஒற்றுமையைக் கண்டறிந்து, உடலில் ஐம்பூதங்களினால் ஏற்படும் மாற்றங்களை விளக்கின.

நோயை இயற்கையில் கிடைக்கும் பொருள்கள், அப்பொருள்களின் தன்மை, சுவை இவற்றைக் கொண்டே குணப்படுத்த முடியும் என்ற உண்மையை மிகத் தெளிவாக விளக்கினர். தமிழர் மருத்துவம் பண்பாட்டுக் கூறாக ஆகும்போது நாட்டு வைத்தியமாகவும் பாட்டி வைத்தியமாகவும் மரபு சார்ந்த சித்த வைத்தியமாகவும் உணவு சார்ந்த மருத்துவமாகவும் பண்பாடு சார்ந்த மருத்துவமாகவும் விரிந்திருக்கிறது.

Question 2.
தமிழர் மருத்துவமுறை பின்தங்கிப் போனதற்குக் காரணம் என்ன?
Answer:
(i) நம்மீது நிகழ்ந்த படையெடுப்புகள் தாக்கத்தை ஏற்படுத்தின.

(ii) தமிழர் மருத்துவம் அவரவர் வாழ்வியலுடனும் தத்துவங்களுடனும் பிணைந்துதான் வந்துகொண்டிருந்தது.

(iii) சமண, பௌத்தர் காலத்தில் அந்தந்த மதங்களின் கூறுகள் நம் மருத்துவத்தில் இருந்தன.

(iv) பிறகு சைவம் ஓங்கியபோது சைவ சித்தாந்தத்தின் கூறுகள் கலந்தன. இறுதியில் ஆங்கிலேயர்கள் வந்தனர்.

(v) அவர்களுடைய நவீன அறிவியல் பார்வை நம்மீது தாக்கத்தை ஏற்படுத்தியது.

(vi) சித்த மருத்துவம் என்பது மரபு வழி மருத்துவமாகவும் நாட்டு மருத்துவமாகவும் சுருங்கியது.

(vii) இறுதியில் கிராமம் சார்ந்த மருத்துவமாக மாறிப்போனது. நவீன மருத்துவத்தில் துரிதமாகச் சில நோய்களுக்குக் கிடைத்த தீர்வுகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இக்காரணங்களால் தமிழர் மருத்துவமுறை பின்தங்கிப் போனது.

Question 3.
வாழ்வியல் நோய்களும் அவற்றைத் தீர்க்கும் தமிழ் மருத்துவம் பற்றிக் கூறுக.
Answer:
(i) சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், மாரடைப்பு நோய் முதலியவை வாழ்வியல் நோய்கள் ஆகும்.

(ii) இந்நோய்கள் பரவலாக பெருகியது. இவற்றைத் தீர்க்க வெறும் இரசாயன மருந்துகள் மட்டும் போதாது. கூடவே உணவு, வாழ்வியல், உடற்பயிற்சி, யோகா இவையும் கூட்டாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

(iii) தொடர் சிகிச்சைக்குப் பிறகு பக்கவிளைவுகள் இல்லா மருந்துகளை அளிக்கும் மரபு சார்ந்த மருத்துவ முறைகளை நவீன அறிவியல் கண்டறிந்தது.

(iv) அதனால் சித்த மருத்துவத்தின் தொன்மையையும் தமிழர்களின் தொன்மையையும் அறிந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது நாட்பட்ட நோய்களுக்கு மட்டுமல்லாமல் புதிய தொற்று நோய்களுக்கும் இம்மருத்துவமுறை பயன்படுகிறது.

Question 4.
மருத்துவத்தில் பக்கவிளைவுகள் பற்றி மருத்துவர் கூறிய கருத்துகளை எழுதுக.
Answer:
ஒரு மருந்தை எடுத்துக் கொண்டால் அதற்கு விளைவும் இருக்கும் பக்க விளைவும் இருக்கும். ஆனால் தமிழர் மருத்துவத்தில் பக்கவிளைவுகள் இல்லை . அதற்குக் காரணம் மருந்து என்பதே உணவின் நீட்சியாக இருக்கிறது.

நம் உடல் உணவை எப்படி எடுத்துக் கொள்கிறதோ அப்படியேதான் சித்த மருத்துவத்தின் இலேகியத்தையும் சூரணத்தையும் எடுத்துக் கொள்ளும். அதனால் இம்மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை.

இருந்த போதிலும் சித்த மருத்துவத்தின் மீது தற்போது நடக்கும் பல அறிவியல் ஆய்வுகள் மூலம் அவற்றைத் தர நிர்ணயம் செய்து யாருக்கு எந்த மருந்து, எந்த அளவு, எந்தத் துணைமருந்துடன் கொடுத்தால் பக்கவிளைவு இருக்காது என்று பட்டியலிட்டுள்ளனர் என்று மருத்துவர் பக்கவிளைவுகள் பற்றிக் கூறியுள்ளனர்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.3 தமிழ்ர் மருந்தும்

Question 5.
உடல் எடையைப் பற்றி பாடத்தின் மூலம் நீ அறிந்தவற்றை எழுதுக.
Answer:
உடல் எடை :
அழகுக்காக உடல் எடையைக் குறைப்பதும் மிகவும் மெலிவதும் நல்லதன்று. மரபு ரீதியாக ஒருவர் உடல் எடை அதிகமாக இருந்து, அவருக்கு எந்த நோயும் இல்லையென்றால் அவர் எடையைக் குறைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் எடை அதிகரிப்பால் சர்க்கரைநோய், இரத்தக் கொதிப்பு வர வாய்ப்புள்ளது என்றால் அவர் குறைத்துத்தான் ஆக வேண்டும்.

இன்றைக்குள்ள உணவுக் கட்டுப்பாட்டு முறைகள் நம் உடலுக்கு ஏற்றவையாக இருக்கிறதா என்பதை மருத்துவரிடம் கேட்டு முடிவெடுக்க வேண்டும். இணையத்தைப் பார்த்து ஒரே அடியாக எடையைக் குறைக்காமல் ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளில் எடையைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.

உணவுக்காகச் சமையலறையில் செலவிடும் நேரத்தை, நல்வாழ்விற்காகச் செலவிடும் நேரம் என நினைத்து, உணவு உண்பதில் சில ஒழுக்கங்களைக் கடைப்பிடித்து வாழ வேண்டும்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.2 வருமுன் காப்போம்

Students can Download 8th Tamil Chapter 3.2 வருமுன் காப்போம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.2 வருமுன் காப்போம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.2 வருமுன் காப்போம்

Question 1.
‘தன் சுத்தம்’ என்னும் தலைப்பில் படத்தொகுப்பு ஒன்று உருவாக்குக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

Question 2.
சுகாதாரம் பற்றிய பழமொழிகளைத் தொகுத்து எழுதுக.
(எ.கா) சுத்தம் சோறு போடும்.
Answer:
(i) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
(ii) சுத்தம் சுகம் தரும்; சுகாதாரம் நாட்டைக் காக்கும்.
(iii) கூழானாலும் குளித்துக்குடி; கந்தையானாலும் கசக்கிக் கட்டு.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
காந்தியடிகள் ………………… போற்ற வாழ்ந்தார்
அ) நிலம்
ஆ) வையம்
இ) களம்
ஈ) வானம்
Answer:
ஆ) வையம்

Question 2.
‘நலமெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………..
அ) நலம் + எல்லாம்
ஆ) நலன் + எல்லாம்
இ) நலம் + எலாம்
ஈ) நலன் + எலாம்
Answer:
அ) நலம் + எல்லாம்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.2 வருமுன் காப்போம்

Question 3.
இடம் + எங்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………….
அ) இடவெங்கும்
ஆ) இடம்எங்கும்
இ) இடமெங்கும்
ஈ) இடம்மெங்கும்
Answer:
இ) இடமெங்கும்

வருமுன் காப்போம் – இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனை, எதுகை, இயைபுச் சொற்களை எடுத்தெழுதுக.

மோனை(சீர்) :
உடலின் – இடமும் – சுத்தமுற்ற
உலகில் – இனிய – சுகமும்
நித்தம். – காலை – காலை
நீண்ட – காற்று – காலன்
கூழை – திட்டு – நோயை
குளித்த – தினமும் – நூறு

எதுகை (அடி) :
உடலின் – காலை – மட்டு
இடமும் – காலை – திட்டு
சுத்தமுள்ள – கூழை – தூய
நித்தம் – ஏழை – நோயை

இயைபு :
குடித்தாலும் – குடியப்பா – உண்ணாமல்
ஆனாலும் – உறங்கப்பா – தின்பாயேல்
பட்டிடுவாய் – நன்னீரும் – விடும்அப்பா
விழுந்திடுவாய் – உணவும் – தரும் அப்பா

குறுவினா

Question 1.
நம்மை நோய் அணுகாமல் காப்பவை யாவை?
Answer:
நம்மை நோய் அணுகாமல் காப்பவை :
(i) காலையும் மாலையும் நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
(ii) தூய்மையான காற்றைச் சுவாசிக்க வேண்டும்.
(iii) நல்ல குடிநீரைக் குடிக்க வேண்டும்.
(iv) நன்கு பசித்த பிறகு உண்ண வேண்டும். இவற்றைச் செய்தால் நோய் நம்மை அணுகாது.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.2 வருமுன் காப்போம்

Question 2.
அதிகமாக உண்பதால் ஏற்படும் தீமையாகக் கவிமணி குறிப்பிடுவன யாவை?
Answer:
அதிகமாக உண்பதால் ஏற்படும் தீமைகள் :
அளவாக உண்ணாமல் அதிகமாக உண்டால் செரிமானம் ஆகாது. அதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு நாள்தோறும் நோய்வாய்ப்பட்டுப் பாயில் விழும் நிலைக்கு ஆளாவோம்.

சிறுவினா

Question 1.
உடல் நலத்துடன் வாழக் கவிமணி கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
உடல் நலத்துடன் வாழக் கவிமணி கூறும் கருத்துகள்:
(i) உடலில் உறுதி கொண்டவர், உலகில் மகிழ்ச்சி உடையவர்.
(ii) எல்லா இடங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
(iii) நாள்தோறும் தூய்மையைப் போற்றிப் பாதுகாத்தல் வேண்டும்.
(iv) காலையும் மாலையும் நடைப்பயிற்சி மேற்கொண்டு நல்ல காற்றைச் சுவாசிக்க வேண்டும். அவ்வாறு செய்பவர்களை எமனும் அணுகமாட்டான்.
(v) கூழைக் குடித்தாலும் குளித்த பிறகு குடித்தல் வேண்டும்.
(vi) வறுமையில் வாழ்ந்தாலும் இரவில் நன்றாக உறங்க வேண்டும்.
(vii) அளவாக உண்ண வேண்டும். அதிகமாக உண்டால் செரிமானம் தடுமாறி நாள்தோறும் நோய்வாய்ப்பட்டுப் பாயில் விழும்படி ஆகிவிடும்.
(viii) தூய்மையான காற்றைச் சுவாசித்து நல்ல குடிநீரைக் குடித்து நன்கு பசித்த பிறகு உண்ண வேண்டும்.
(ix) இவைகளை மேற்கொண்டால் நோய் நம்மை அணுகாது. நூறாண்டு வாழலாம்.
(x) இவையாவும் அரிய நம் உடலில் நலமோடு இருப்பதற்கான வழிகள் எனக் கூறுகிறார்.

சிந்தனை வினா

Question 1.
நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளாக நீங்கள் கருதுவன யாவை?
Answer:
நோய்கள் வராமல் தடுக்கும் வழிமுறைகள் :
(i) நாள்தோறும் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல்.

(ii) தியானம், யோகா போன்ற பயிற்சிகளை நாள்தோறும் செய்தல். உடலும் மனமும் பயன்பெறும்.

(iii) உணவு உண்ணும்போது செயல்படுத்த வேண்டியவை :

  • மெதுவாக மென்று ருசித்து சாப்பிட வேண்டும்.
  • அப்போதுதான் உமிழ்நீர் நன்கு சுரக்கும்.
  • இவ்வாறு சாப்பிட்டால் நோயின்றி வாழலாம்.
  • உணவை அளவாக உண்ண வேண்டும்.
  • இரவு நேரங்களில் மாமிச உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • இரவில் நேரங்கடந்து உண்ணக்கூடாது.

(iv) படுக்கைக்குப் போகும் வரை தொலைக்காட்சியைப் பார்க்கக் கூடாது. நீண்ட நேரம் செல்பேசி, கணினி போன்றவற்றைப் பார்க்கக்கூடாது.

(v) ஆசைகளைக் குறைத்து தேவைக்கு மட்டுமே பொருள்தேட வேண்டும். ஆசைக்குப் பொருள் சேர்ப்பதன் பொருட்டு செல்வத்தின் பின் ஓடக்கூடாது. மேற்கூறியவற்றை நடைமுறைபடுத்தினால் நோய்கள் வாரா.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.2 வருமுன் காப்போம்

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. நித்தம் நித்தம் – நாள்தோறும்
2. மட்டு – அளவு
3. சுண்ட – நன்கு
4. வையம் – உலகம்
5. பேணுவையேல் – பாதுகாத்தால்
6. திட்டுமுட்டு – தடுமாற்றம்

நிரப்புக :

1. கவிமணி எனப் போற்றப்படுபவர் …………………
2. தேசிக விநாயகனார் பிறந்த ஊர் ……………
3. கவிமணி ஆசிரியராகப் பணியாற்றிய ஆண்டுகள் ……………….
4. அதிகமாக உண்டால் ………………. தடுமாறும்.
5. நாள்தோறும் போற்றிப் பாதுகாக்க வேண்டியது ………………..
6. உடலில் …………… உடையவர், உலகில் இன்பம் உடையவர்.
7. நோய் வந்தபின் தீர்க்க முயல்வதைவிட வருமுன் காப்பதே ………………
Answer:
1. தேசிக விநாயகனார்
2. தேரூர்
3. முப்பத்தாறு
4. செரிமானம்
5. தூய்மை
6. உறுதி
7. அறிவுடைமை

விடையளி :

Question 1.
கவிமணி தேசிக விநாயகனார் குறிப்பு எழுதுக.
Answer:
(i) தேசிக விநாயகனார் குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர்.
(ii) இவர் கவிமணி’ எனப் போற்றப்படுகிறார். ஆசிரியராகப் பணியாற்றியவர்.
(iii) இயற்றிய நூல்கள் – ஆசியஜோதி, மருமக்கள் வழிமான்மியம், கதர் பிறந்த கதை, உமர்கய்யாம் பாடல்கள் (மொழிபெயர்ப்பு நூல்).

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.2 வருமுன் காப்போம்

ஆசிரியர் குறிப்பு
கவிமணி எனப் போற்றப்படும் தேசிக விநாயகனார், குமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர்; முப்பத்தாறு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர்; இவர், ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை ஆகிய கவிதை நூல்களையும் உமர்கய்யாம் பாடல்கள் என்னும் மொழிபெயர்ப்பு நூலையும் படைத்துள்ளார். ‘மலரும் மாலையும்’ என்னும் நூலிலிருந்து ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.2 வருமுன் காப்போம் 1

பாடலின் பொருள்
உடலில் உறுதி கொண்டவரே, உலகில் மகிழ்ச்சி உடையவராவார். உடல் உறுதியற்ற நோயாளர்க்கு வாழும் இடமும் செல்வமும் இனிய வாழ்வு தராது. சுத்தம் நிறைந்துள்ள எல்லா இடங்களிலும் சுகம் உண்டு. நாள்தோறும் நீங்கள் தூய்மையைப் போற்றிப் பாதுகாத்தால் நீடித்த வாழ்நாளைப் பெறலாம்.
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.2 வருமுன் காப்போம் 2
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.2 வருமுன் காப்போம் 3
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.2 வருமுன் காப்போம் 4
காலையும் மாலையும் நடைப்பயிற்சி மேற்கொண்டு, நல்ல காற்றைச் சுவாசித்து வருவோரை நோய் அணுகாது. அவர் உயிரைக் கவர எமனும் அணுகமட்டான். எனவே, நீங்கள் கூழைக் குடித்தாலும் குளித்தபிறகே குடித்தல் வேண்டும்! நீங்கள் வறுமையில் வாழ்ந்தாலும் இரவில் நன்றாக உறங்குதல் வேண்டும். ‘ அளவாக உண்ணாமல் அதிகமாக உண்டால் செரிமானம் தடுமாறி நாள்தோறும் நோய்வாய்ப்பட்டுப் பாயில் விழுவீர்கள். தூய்மையான காற்றும் நல்ல குடிநீரும் நன்கு பசித்த பிறகு உண்பதும் நம்மை நோய் அணுகாமல் காப்பாற்றும்! நூறாண்டு வாழ வைக்கும். அரிய நம் உடல் நலமோடு இருப்பதற்கான வழிகள் இவை என்பதை அறிவீர்களாக! ஆகவே நோய் வருமுன் காப்போம்! உலகம் புகழ வாழ்வோம்!.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.1 நோயும் மருந்தும்

Students can Download 8th Tamil Chapter 3.1 நோயும் மருந்தும் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 8th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.1 நோயும் மருந்தும்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.1 நோயும் மருந்தும்

Question 1.
ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் ஆகியவற்றின் பெயர்களைத் தொகுத்து எழுதுக.
Answer:
ஐம்பெருங்காப்பியங்கள் :
(i) சிலப்பதிகாரம்
(ii) மணிமேகலை
(iii) வளையாபதி
(iv) குண்ட லகேசி
(v) சீவகசிந்தாமணி

ஐஞ்சிறுகாப்பியங்கள் :
(i) உதயண குமார காவியம்
(ii) நாக குமார காவியம்
(iii) யாசோதர காவியம்
(iv) சூளாமணி
(v) நீலகேசி.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
உடல்நலம் என்பது …………….. இல்லாமல் வாழ்தல் ஆகும்.
அ) அணி
ஆ) பணி
இ) பிணி
ஈ) மணி
Answer:
இ) பிணி

Question 2.
நீலகேசி கூறும் நோயின் வகைகள் ……….
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நன்கு
ஈ) ஐந்து
Answer:
ஆ) மூன்று

Question 3.
‘இவையுண்டார்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ) இ + யுண்டார்
ஆ) இவ் + உண்டார்
இ) இவை + உண்டார்
ஈ) இவை + யுண்டார்
Answer:
இ) இவை + உண்டார்

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.1 நோயும் மருந்தும்

Question 4.
தாம் + இனி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………….
அ) தாம் இனி
ஆ) தாம்மினி
இ) தாமினி
ஈ) தாமனி
Answer:
இ) தாமினி

குறுவினா

Question 1.
நோயின் மூன்று வகைகள் யாவை?
Answer:
நோயின் மூன்று வகைகள் :
(i) மருந்தினால் நீங்கும் நோய்கள்.
(ii) எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள்.
(iii) வெளித்தோற்றத்தில் அடங்கி இருப்பனபோல தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன.

Question 2.
நீலகேசியில் பிறவித்துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகளாகக் கூறப்படுவன யாவை?
Answer:
பிறவித்துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகள் :
(i) நல்லறிவு
(ii) நற்காட்சி
(iii) நல்லொழுக்கம்.

சிறுவினா

Question 1.
நோயின் வகைகள், அவற்றைத் தீர்க்கும் வழிகள் பற்றி நீலகேசி கூறுவன யாவை?
Answer:
நோயின் மூன்று வகைகள் :
(i) மருந்தினால் நீங்கும் நோய்கள்
(ii) எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள்.
(iii) வெளித்தோற்றத்தில் அடங்கி இருப்பனபோல தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன.

நோயைத் தீர்க்கும் வழிகள் : அகற்றுவதற்கு அரியவை பிறவித்துன்பங்கள் ஆகும். இவற்றைத் தீர்க்கும் மருந்துகள் மூன்று. அவை நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் என்பவையாகும். இவற்றை ஏற்றோர் பிறவித் துன்பத்திலிருந்து நீங்கி உயரிய இன்பத்தை அடைவர்.

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.1 நோயும் மருந்தும்

சிந்தனை வினா

Question 1.
துன்பமின்றி வாழ நாம் கைக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் யாவை?
Answer:
(i) கருணையுடன் வாழ்தல்.
(ii) இரக்கத்துடன் இருத்தல்.
(iii) துணிச்சலுடன் செயல்படுதல்.
(iv) நல்ல செயல்களைச் செய்தல்.
(v) கோபத்தை தவிர்த்தல்.
(vi) பிறர் துயர் களைதல்.
(vii) பிறர் துயர் பேணுதல்.
(viii) அறச் செயல்களை செய்தல்.
(ix) பிறர் குற்றத்தை மன்னித்தல்
(x) இனிமையாகப் பேசுதல்
(xi) உண்மையை மட்டும் பேசுதல்.
(xii) விழிப்புணர்வுடன் இருத்தல்.

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. தீர்வன – நீங்குபவை
2. உவசமம் – அடங்கி இருத்தல்
3. நிழல் இகழும் – ஒளிபொருந்திய
4. பேர்தற்கு – அகற்றுவதற்கு
5. திரியோகமருந்து – மூன்று யோகமருந்து
6. தெளிவு – நற்காட்சி
7. திறத்தன – தன்மையுடையன
8. கூற்றவா – பிரிவுகளாக
9. பூணாய் – அணிகலன்களை அணிந்தவளே
10. பிணி – துன்பம்
11. ஓர்தல் – நல்லறிவு
12. பிறவார் – பிறக்கமாட்டார்

நிரப்புக :

1. மக்களின் உடலுக்கும் உள்ளத்திற்கும் துன்பம் தருவன ……………………
2. உள்ளத்தில் தோன்றும் ………………….. ஏற்படும் துன்பங்களையும் நோய்கள் என்று நம் முன்னோர் கூறினர்.
3. உள்ள நோயை நீக்குபவை ……………………..
4. ‘தீர்வனவும் தீராத் திறத்தனவும்’ என்ற பாடலடி இடம்பெறும் நூல் ………………. சருக்கம் …………………..
5. நீலகேசி …………………….. ஒன்று.
6. சமண சமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்கும் நூல் …………….
7. நீலகேசியில் உள்ள சருக்கங்கள் …………………..
Answer:
1. நோய்கள்
2. தீய எண்ணங்களால்
3. அறக்கருத்துகள்
4. நீலகேசி, தருவுரைச் சருக்கம்
5. ஐஞ்சிறுகாப்பியங்களுள்
6. நீலகேசி
7. பத்து

விடையளி :

Question 1.
நீலகேசி – குறிப்பு எழுதுக.
Answer:
(i) நீலகேசி ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று.
(ii) இந்நூல் சமண சமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது.
(iii) கடவுள் வாழ்த்து நீங்கலாகப் பத்துச் சருக்கங்களைக் கொண்டது.
(iv) சமயத் தத்துவங்களை விவாதிக்கும் தருக்க நூலான இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை .

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 3.1 நோயும் மருந்தும்

நூல் வெளி
நீலகேசி ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று. இந்நூல் சமண சமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது. கடவுள் வாழ்த்து நீங்கலாகப் பத்துச் சருக்கங்களைக் கொண்டது. சமயத் தத்துவங்களை விவாதிக்கும் தருக்க நூலான இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை . நீலகேசிக் காப்பியத்தின் தருவுரைச் சருக்கத்திலிருந்து இரண்டு பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.

பாடலின் பொருள்
ஒளிபொருந்திய அணிகலன்களை அணிந்த பெண்ணே! நோயின் தன்மை பற்றி யார் வினவினாலும் அது மூன்று வகைப்படும் என அறிவாயாக. மருந்தினால் நீங்கும் நோய்கள் ஒரு வகை. எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள் மற்றொரு வகை. அடங்கி இருப்பனபோல வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன இன்னொரு வகை.
அகற்றுவதற்கு அரியவை பிறவித் துன்பங்கள் ஆகும். இவற்றைத் தீர்க்கும் மருந்துகள் மூன்று. நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் என்பவையே அம்மருந்துகள். இவற்றை ஏற்றோர் பிறவித் துன்பத்திலிருந்து நீங்கி உயரிய இன்பத்தை அடைவர்.