Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 18 வேலைக்கேற்ற கூலி Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 18 வேலைக்கேற்ற கூலி

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி

வாங்க பேசலாம்

Question 1.
கதையை உம் சொந்த நடையில் கூறுக.
Answer:
அழகாபுரி மன்னர் நல்லமுறையில் ஆட்சி செய்து வந்தார். அவரை எல்லோரும் புகழ்ந்து பேசுவர். இரத்தினபுரி மன்னர் இதனைக் கேள்விப்பட்டார். அவர் தன்னுடைய அமைச்சர்களிடம் “நானும் நன்றாக ஆட்சி புரிகிறேன். நம் நாட்டு மக்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறேன். ஆனால், என்னை யாரும் புகழவில்லையே” என்று கேட்டார்.

அமைச்சர் ஒருவர் கொஞ்சம் தயக்கத்துடன் பேச ஆரம்பித்தார். “நான் சொல்வதைத் தவறாக நினைக்காதீர்கள். நீங்கள் அழகாபுரி மன்னருடன் ஒருநாள் முழுவதும் இருந்து அவர் குடிமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை அறிந்து கொண்டால் அதனை நாமும் பின்பற்றலாம்” என்று கூறினார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி

அதன்படி இரத்தினபுரி மன்னர் அழகாபுரி நாட்டுச் சென்றார். இருமன்னர்களும் நலம் விசாரித்துக் கொண்டனர். பிறகு இருவரும் அரசவைக்குச் சென்றனர். அழகாபுரி மன்னர் தனக்குச் சமமான இருக்கையில் அம்மன்னரை அமரச் செய்தார்.

அப்போது விறகுவெட்டி ஒருவன் அரசவைக்கு வந்து தன் குறையைத் தீர்க்கும்படிக் கேட்டான். “ஐயா, விறகு வெட்டுபவரே, உங்கள் மனக்குறையைச் சொல்லுங்கள். என்னால் முடிந்த அளவு தீர்த்து வைக்கிறேன்” என்றார் மன்னர்.

விறகுவெட்டி “தன்னைப் போன்றோர்க்கு நாள்தோறும் இரண்டு ரூபாய் கூலியும், மன்னரிடம் பணிபுரிபவருக்கு மட்டும் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகவும் குற்றம் சாட்டினான். மன்னர் “இதுபோல் எக்குறையும் வரக்கூடாது என்பதில் நான் கவனமாகத்தான் இருக்கிறேன். கொஞ்சம் பொறுங்கள், உங்கள் ஐயத்தைத் தீர்த்து வைக்கிறேன்” என்றார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி

மன்னர் அமைச்சர்களுள் ஒருவரையும் விறகு வெட்டியையும் பார்த்து “அரண்மனைக்கு வெளியே ஏதாவது வண்டி செல்கிறதா? என்று பார்த்துவிட்டு வாருங்கள்” என்று கூறினார். விறகுவெட்டி வெளியில் சென்று உடனே திரும்பி வந்து “ஒரு வண்டி செல்கிறது” என்று கூறினான்.

அந்த வண்டியில் என்ன இருக்கிறது? எந்த ஊரிலிருந்து வருகிறது? என்று மன்னர் கேட்ட கேள்விகளுக்கு ஒவ்வொரு முறையும் வெளியில் சென்று வந்து அவன் பதிலளித்தான். அப்போது அமைச்சர் உள்ளே நுழைந்தார். “நீங்கள் என்ன பார்த்தீர்கள்?” என்று அமைச்சரிடம் மன்னர் கேட்டார்.

அமைச்சர் ஒரு கேள்விக்கு பல பதில்களைக் கூறி முடித்தார். விறகு வெட்டியோ மன்னர் கேட்ட ஒவ்வொரு வினாவிற்கும் வெளியே சென்று வந்து பதிலளித்தான். அமைச்சர் கூறியதைக் கேட்டு விறகுவெட்டி தன் தவற்றை உணர்ந்தான்.
மன்னரிடம் விறகுவெட்டி, “அமைச்சரின் அறிவுக்கூர்மையையும் என்னுடைய அறியாமையையும் புரிந்து கொண்டேன். அவரவர் திறமைக்கேற்ற வேலைக்கேற்ற கூலி கொடுப்பதுதான் நியாயம் என்பதைப் புரிந்து கொண்டேன்” என்றான்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி

இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த இரத்தினபுரி மன்னரும் ‘இவருடைய புகழைக் கண்டு பொறாமை கொண்டோமே, உண்மையை உணர்ந்து கொள்ள நல்ல வாய்ப்பு கிடைத்தது’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டார். தம் குடிமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அவர் அறிந்து கொண்டார்.

சிந்திக்கலாமா?

அமைச்சர் வண்டிக்காரரரிடம் எல்லாத் தகவல்களையும் பெறுவதற்கு என்னென்ன கேள்விகளைக் கேட்டிருப்பார்? எழுதுங்கள்.
……………………………………………………………………………………….
……………………………………………………………………………………….
……………………………………………………………………………………….
……………………………………………………………………………………….
Answer:

  • வண்டியில் என்ன இருக்கிறது?
  • எந்த ஊரிலிருந்து வருகிறது?
  • வண்டியில் என்ன எடுத்துச் செல்கின்றார்?
  • வண்டியில் எத்தனை மூட்டைகள் உள்ளன?
  • வண்டியில் உள்ள மூட்டைகளில் என்ன இருக்கிறது?
  • வண்டி எங்கிருந்து எங்கு செல்கின்றது?
  • வண்டியில் யார்யார் பயணம் செய்கிறார்கள்?
  • வண்டி எப்போது திரும்பி வரும்?
  • வண்டி விரைந்து செல்வதற்கான காரணம் யாது?

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி

வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
அழகாபுரி மன்னர் தம் குடிமக்களை எவ்வாறு நடத்தினார்?
Answer:
அழகாபுரி மன்னர், அமைச்சர், விறகு வெட்டி என்ற வேறுபாடின்றி அனைவரையும் சமமாக நடத்தினார்.

Question 2.
விறகுவெட்டி, மன்னரிடம் தம் மனக்குறையாக என்ன கூறினார்?
Answer:
‘மன்னர், விறகு வெட்டியான தனக்கு நாள்தோறும் இரண்டு ரூபாய் கூலியும் அமைச்சருக்கு மாதத்திற்கு ஆயிரம் ரூபாயும் கொடுப்பதாகவும் அதுவே தம் மனக்குறை என்று விறகு வெட்டி மன்னரிடம் கூறினார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி

Question 3.
மன்னர் அமைச்சரிடமும் விறகுவெட்டியிடமும் என்ன வேலை அளித்தார்?
Answer:
“அரண்மனைக்கு வெளியே ஏதாவது வண்டி செல்கிறதா?” என்று பார்த்து வரும்படி மன்னர் அமைச்சரிடமும் விறகு வெட்டியிடமும் கூறினார். அதற்கு அமைச்சர் ஒருமுறையே வெளியே சென்று வந்து பல பதில்களைக் கூறினார். ஆனால் விறகு வெட்டியோ ஒவ்வொரு முறையும் சென்று வந்து மன்னரிடம் பதில் அளித்தான்.

படத்தைப் பார்ப்போம் வினாக்கள் உருவாக்குவோம்

எ.கா. படத்தில் எத்தனை விலங்குகள் உள்ளன?
1. ………………………………………………………………………………………………………………..
2. ………………………………………………………………………………………………………………..
3. ………………………………………………………………………………………………………………..
4. ………………………………………………………………………………………………………………..
5. ………………………………………………………………………………………………………………..
6. ………………………………………………………………………………………………………………..
Answer:

  1. யானை என்ன செய்கிறது?
  2. வரிக்குதிரை ஏன் சோகமாக உள்ளது?
  3. சீறி பாயும் விலங்கு எது?
  4. புலி சண்டை போடுகிறதா?
  5. நடனமாடும் விலங்கு எது?
  6. படத்தில் எத்தனை பறவைகள் உள்ளன?

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி

மொழியோடு விளையாடு

சொல் உருவாக்கப் புதிர்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி 1
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி 2

சொல் எழுதுக சொற்றொடர் அமைக்க
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி 3
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி 4

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி

விடுபட்ட எழுத்துகளை நிரப்பி விடுகதைக்கு விடையைக் கண்டுபிடிக்க
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி 5
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி 6

செயல் திட்டம்

பல்வேறு தொழில் செய்பவர்களின் படங்களை ஒட்டித் தொகுப்பு ஏடு தயாரித்து வருக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி

கூடுதல் வினாக்கள்

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
இரத்தினபுரி மன்னர் ஆலோசனையின் போது அமைச்சர்களிடம் என்ன வினவினார்?
Answer:
“நானும் சிறந்த முறையில்தானே ஆட்சி நடத்துகிறேன். ஆனால், என்னை மட்டும் ஏன் யாரும் புகழவில்லை ” என்று அமைச்சர்களிடம் வினவினார்.

Question 2.
இரத்தினபுரி மன்னருக்கு அமைச்சர் கூறிய பதில் என்ன?
Answer:
“நான் சொல்வதைத் தவறாக நினைக்காதீர்கள். அழகாபுரி நாட்டுக்குச் சென்று, ஒருநாள் முழுவதும் அந்த நாட்டு மன்னருடன் நீங்கள் உடனிருக்க வேண்டும். அவர் தம் நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமக்களிடமும் எப்படி நடந்து கொள்கின்றார் என்று அறிந்து கொண்டால், நாமும் அவற்றுள் சிலவற்றையாவது பின்பற்றலாம் மன்னா” என்று அமைச்சர் மன்னரிடம் கூறினார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 18 வேலைக்கேற்ற கூலி

Question 3.
விறகுவெட்டி தன் தவற்றை உணர்ந்த பிறகு மன்னரிடம் என்ன கூறினான்?
Answer:
“மன்னா, என் மனக்குறை நீங்கிவிட்டது. உங்களைப் பற்றித் தவறாக எண்ணிவிட்டேன். அமைச்சரின் அறிவுக் கூர்மையையும் அவருடைய திறமையையும் கண்டுவியக்கிறேன். அவருடன் ஒப்பிடும்போது என் அறியாமையையும் நான் உணர்ந்து கொண்டேன். நான், நான்தான். அமைச்சர், அமைச்சர்தாம். அவரவர் திறமைக்கேற்ற வேலைக்கேற்ற கூலி கொடுப்பதுதான் நியாயம் என்பதைப் புரிந்து கொண்டேன்” என்றான் அந்த விறகுவெட்டி.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 15 ஆராய்ந்திட வேண்டும் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 15 ஆராய்ந்திட வேண்டும்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும்

வாங்க பேசலாம்

Question 1.
கதையை உம் சொந்த நடையில் கூறுக.
Answer:
மன்னர் ஒருவர் தம் நாட்டு மக்களின் நிலையை அறிய குதிரையில் பயணம் செய்தார். குதிரையும் மன்னரைப் போன்று இரக்கக் குணம் கொண்டது. அக்குதிரை சாலையை நோட்டமிட்டுக் கொண்டே சென்றது.

அப்போது காலில் அடிபட்ட நாய் ஒன்று நடக்க முடியாமல் நொண்டி நொண்டி வருவதைப் பார்த்தது. மன்னரின் அனுமதி பெற்று அந்த நாயை மன்னருக்கு முன் அமரச் செய்தது. மன்னர் முன்னே அமர்ந்து குதிரைச்சவாரி செய்து கொண்டிருந்த அந்த நாயானது மிகவும் மகிழ்ச்சியடைந்தது.

குதிரையின் மீது அமர்ந்து வரும் மன்னரைப் பார்த்து மக்கள் அனைவரும் வணக்கம் தெரிவித்தனர். நாய், குதிரையையும் மன்னரையும் வணங்காமல் மக்கள் தன்னை வணங்குவதாக எண்ணி மகிழ்ச்சியில் தன்னை மறந்தது. தன் தலையைத் தூக்கியபடி ‘லொள் லொள்’ என்று குரைத்தது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும்

நாயின் இச்செயலைக் கண்ட குதிரை “நாயே, அமைதியாக இருந்து கொள்! நீE குரைத்துக் கொண்டே வந்தால் எல்லாரும் உன்மீது வெறுப்படைவார்கள். அதன் பின்னர், நீ என்மீது சவாரி செய்ய முடியாது” என்றது குதிரை. நாய், “மக்கள் என்னை வணங்குவது உனக்குப் பொறாமையாக உள்ளது. அதனால்தான் என்னை மட்டம் தட்டுகிறாய்” என்றது.

குதிரை, நாயிடம் “அவர்கள் மன்னருக்குத்தான் மரியாதை கொடுக்கின்றனர். உனக்கு இல்லை” என்று கூறியது. ஆனால் நாய் அதனை ஏற்கவில்லை. குதிரையின் விளக்கத்தைக் கேட்கத் தயாராக இல்லாமல் மேலும் சத்தமாகக் குரைத்தது.
மன்னரின் அருகில் வந்து கொண்டிருந்த காவலர்கள் அந்த நாயைக் கீழே இறக்கிவிட்டு அடித்து விரட்டினர். அங்கிருந்து சென்ற நாய் சற்றுத் தொலைவில் போய் நின்றுகொண்டு திரும்பிப் பார்த்தது. தான் இல்லாத போதும் மக்கள் மன்னரை வணங்க, மன்னரும் அவர்களுக்குப் பதில் வணக்கம் தெரிவித்துக் கொண்டிருந்தார். இக்காட்சியைப் பார்த்தபோது நாய்க்கு உண்மை புரிந்தது. தன் தவற்றினை உணர்ந்தது. ஆராயாமல் முடிவு எடுத்ததை எண்ணி வருந்தியது.

Question 2.
ஆராய்ந்து செயல்படுவதால் கிடைக்கும் நன்மைகளைக் கூறுக.
Answer:
நாம் செய்யும் செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும். அவையே நன்மைகளைத் தரும்.

  • நம்மால் ஆராய்ந்து செயல்படும்போது, பிழைகளைத் தவிர்க்க முடியும்.
  • நம்மால் துன்பத்திலிருந்து விடுபட இயலும்.
  • நாம் எல்லோராலும் பாராட்டப்படுவோம்.
  • பிறரைச் சார்ந்து இல்லாமல் தனித்துவமாக நம்மால் இயங்க முடியும்.
  • நல்லது கெட்டதைப் பகுத்தறியும் வாய்ப்பு நமக்கு கிடைக்கும்.
  • நாம் தலைமைத் தாங்கிச் செயலாற்ற முடியும்.
  • மன்னரைப் போன்று நமக்கு மரியாதை கிடைக்கும்.

சிந்திக்கலாமா?

நீ செய்யாத செயலுக்கு உனக்கு ஒருவர் நன்றி கூறினால் அல்லது பரிசு அளித்தால் அவ்வேளையில் நீ என்ன செய்வாய்?
Answer:
ஒருவர் எனக்கு நன்றி கூறியதற்கு எதிர் நன்றி கூறிவிட்டு நான் அச்செயலைச் செய்யவில்லை என்று அவரிடம் உண்மையைக் கூறுவேன். அவர் ஏதேனும் பரிசு அளித்தால் ‘பரவாயில்லை வேண்டாம்’ என்று சொல்லி விடுவேன்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும்

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
குதிரை ஏன் நாய்க்கு உதவி செய்ய நினைத்தது?
Answer:
காலில் அடிபட்டதால் நாய் நொண்டி நொண்டி நடந்து கொண்டிருந்தது. அதனால் குதிரை நாய்க்கு உதவி செய்தது.

Question 2.
காவலர்கள், குதிரைமீது இருந்த நாயை ஏன் கீழே இறக்கிவிட்டனர்?
Answer:
நாய், குதிரையின் மேலே அமர்ந்துகொண்டு குதிரையிடம் விவாதம் செய்து கொண்டு சத்தமாகக் குரைத்தது. ஆதலால் காவலர்கள் நாயைக் கீழே இறக்கிவிட்டனர்.

சொல்லக் கேட்டு எழுதுக

குதிரை, இரக்கம், நிலைமை, பேராசை, குடிமக்கள்

நிறுத்தக் குறியிடுக

“அரசே, அதோ ஒரு நாயானது நடக்க முடியாமல் தத்தித்தத்திச் சென்று கொண்டிருக்கிறது. அந்த நாயை என் முதுகில் ஏற்றிக் கொண்டு, அது எங்கு செல்ல வேண்டுமோ அந்த இடத்தில் விட்டுவிடலாமா?” என்று கேட்டது.

ஒரே சொல் இரண்டுமுறை அடுத்தடுத்து வருமாறு சொற்றொடர் அமைத்து எழுதுக.

(எ.கா.) நாய் ஒன்று நொண்டி, நொண்டி நடந்தது.

1. தத்தித் தத்தி = குழந்தை தத்தித் தத்தி நடந்தது.
2. எழுதி எழுதி = கந்தன் எழுதி எழுதி பார்த்தான்.
3. திரும்பித் திரும்பி = குழந்தை திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே சென்றது.
4. குனிந்து குனிந்து = குனிந்து குனிந்து புத்தகத்தை எடுத்து அடுக்கியதால் முதுகு மிகவும் வலிக்கிறது என்றான் கந்தன்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும்

குறிப்பைப் படி! விடையைக் கொடு!

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும் 01

அகரமுதலி பார்த்துப் பொருள் அறிக

  1. போலி – ஒன்றைப்போல இருத்தல்
  2. பொறாமை – காழ்ப்பு
  3. சவாரி – பயணம்
  4. வருந்தியது – துன்படைந்தது
  5. மரியாதை – நேர்மையான ஒழுக்கம்

சொற்களிலுள்ள பிழைகளை நீக்குக

  1. மண்னர் – மன்னர்
  2. குதிறைச் சவாரி – குதிரைச் சவாரி
  3. உர்சாகம் – உற்சாகம்
  4. சிறந்தவண் – சிறந்தவன்
  5. மக்கலெள்ளாம் – மக்களெல்லாம்
  6. கனைப்பொளி – கனைப்பொலி
  7. இறக்கக் குணம் – இரக்கக் குணம்
  8. கிராமங்கல் – கிராமங்கள்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும்

கலையும் கைவண்ணமும்

பயன்படுத்திய காகிதத்தில், உறை தயாரிக்கலாமா?
Answer:
தேவையான பொருள்கள்
பயன்படுத்திய தாள்கள், பசை
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும் 1

விலங்குகளுக்குரிய ஒலிப்புகளை வட்டமிடுக.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும் 2

Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும் 001

1. குதிரை கனைக்கும்
2. சிங்கம் முழங்கும்
3. நாய் குரைக்கும்
4. புலி உறுமும்
5. யானை பிளிறும்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும்

அறிந்து கொள்வோம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும் 3

செயல் திட்டம்

பிறர் பாராட்டுவதற்குரிய நல்ல செயல்கள் எவையெவை என உன் வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டு எழுதி வருக.
Answer:

  1. விடியற்காலையில் துயிலெழுதல்.
  2. தினமும் இறைவனை வழிபடுதல்
  3. பள்ளிக்கு நேரத்திற்குச் செல்லுதல்.
  4. வாரம் ஒருமுறை நகம் வெட்டுதல்.
  5. தலைமுடியைச் சீராக வெட்டுதல்.
  6. பிறருக்கு உதவி செய்தல்.
  7. அன்புடன் திகழுதல்.
  8. பெரியோரை மதித்தல்
  9. இனிமையாகப் பேசுதல்
  10. பணிவுடன் இருத்தல்.
  11. ஒழுக்கத்தைக் கடைபிடித்தல்.
  12. வாய்மையைப் போற்றுதல்.
  13. அடக்கமாக இருத்தல்.

முக்காலம் அறிவோமா?
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும் 6
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும் 5

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும்

கீழ்க்காணும் எடுத்துக்காட்டைப் போல எழுதுக.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும் 7
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும் 8

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும்

அட்டவணையில் விடுபட்ட இடங்களை நிரப்புக

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும் 9
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும் 10

படங்களுக்குப் பொருத்தமான காலங்களைப் பயன்படுத்தித் தொடர் எழுதுக

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும் 11
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும் 12

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும்

கூடுதல் வினாக்கள்

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
மன்னர் எதற்காகக் குதிரையில் பயணம் மேற்கொண்டார்?
Answer:
கிராமங்களின் முன்னேற்றத்தையும், மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டியும், மன்னர் தமது குதிரையில் பயணம் மேற்கொண்டார்.

Question 2.
குதிரை அரசரிடம் என்ன கேட்டது?
Answer:
ஒரு நாய் நடக்க முடியாமல் தத்தித் தத்திச் சென்று நடந்து கொண்டிருந்தது. நாயை தன் முதுகில் ஏற்றிக் கொண்டு, அது செல்ல வேண்டிய இடத்தில் விட்டுவிடலாமா என்று குதிரை அனுமதி கேட்டது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும்

Question 3.
குதிரையின் இரக்கக் குணத்தைப் பார்த்து மன்னர் என்ன கூறினார்?
Answer:
“குதிரையே! என்னைப் போலவே நீயும் இரக்கத்துடன் செயல்படுகிறாய்! அந்த நாய்க்கு உதவுவதில் உனக்கு இருக்கின்ற மகிழ்ச்சியைப் போன்றே எனக்கும் இருக்கின்றது” என்று மன்னர் குதிரையிடம் கூறினார்.

Question 4.
நாயின் செயலைக் கண்டு குதிரை என்ன கூறியது?
Answer:
“நாயே! அமைதியாக இருந்துகொள்! நீ குரைத்துக் கொண்டே வந்தால் எல்லாரும் உன்மீது வெறுப்படைவார்கள். அதன் பின்னர், நீ என்மீது சவாரி செய்ய முடியாது” என்றது குதிரை.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 15 ஆராய்ந்திட வேண்டும்

Question 5.
நாய் தன் தவறினை எப்போது உணர்ந்தது?
Answer:
“நாய்! குரைத்துக் கொண்டே வந்ததால் காவலர்கள் அதனை இறக்கிவிட்டனர். சற்றுத் தொலைவில் போய் நின்றுகொண்டு நாய் திரும்பிப் பார்த்தது; தான் இல்லாதபோதும் குடிமக்கள் எல்லாரும் மன்னரை வணங்க, மன்னரும் அவர்களுக்குப் பதில் வணக்கம் தெரிவித்தார். இக்காட்சியைப் பார்த்த நாய்க்கு அப்போதுதான் உண்மை புரிந்தது. தன்னுடைய தவற்றினை நினைத்து வருந்தியது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 14 பனிமலைப் பயணம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 14 பனிமலைப் பயணம் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 14 பனிமலைப் பயணம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 14 பனிமலைப் பயணம்

வாங்க பேசலாம்

Question 1.
உமது நண்பரிடம் உமக்குப் பிடித்த, பிடிக்காத பண்புகளைப் பற்றி வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
மாணவன் 1 – : எனது நண்பன் கிருஷ்ணன். அவனிடம் எனக்குப் பிடித்தவை நிறைய குணங்கள் உள்ளன.
மாணவன் 2 : பிடிக்காதவையென்று ஏதேனும் உள்ளதா?
மாணவன் 1 : ஏன் இல்லை? பிடிக்காத அக்குணத்தை மாற்றிக் கொள்ளும்படி நான் கூறுகிறேன். அவன் சரி என்று கூறுவான். ஆனாலும் சில நேரங்களில் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை .

மாணவன் 2 : பிடிக்காத குணம் என்ன? பிடித்த குணங்கள் எவை?
மாணவன் 1 : பிடித்த குணங்கள் என்று ஒரு பெரிய பட்டியலே உள்ளது. அவை பிறர் மனம் புண்படாதபடிப் பேசுவான். யாரிடமும் சண்டை போட மாட்டான். தன்னைவிடச் சிறியவருக்கும் மரியாதை கொடுப்பான். பெற்றோர், ஆசிரியர் கூறும் வார்த்தைகளை மீறமாட்டான்.

மாணவன் 2 : இவ்வாறு இருந்தால் யாருக்குத்தான் பிடிக்காது?
மாணவன் 1 : சரியாகச் சொன்னாய்! அவனைப் பிடிக்காதவர் எவருமில்லை. ஆனால் தன்னை யாராவது ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தால் அவர்களிடம் பேசவே மாட்டான். கோபம் வந்தால் உச்சக்கட்டத்திற்குச் சென்றுவிடுவான். அவனை அடக்குவது எல்லோருக்கும் மிகவும் கடினமாக இருக்கும். அவன் அப்படி கோபம் கொள்வது எனக்கு பிடிக்காத ஒன்று.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 14 பனிமலைப் பயணம்

மாணவன் 2 : பரவாயில்லையே, உன் நண்பனைப் பற்றி நன்றாகப் புரிந்து கொண்டுள்ளாயே?
மாணவன் 1 : குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்கக் கொளல் என்று வள்ளுவர் கூறியுள்ளார். அதன்படி என் நண்பனிடம் ஒரு சில பிடிக்காத குணங்கள் இருந்தாலும் பல நல்ல குணங்கள் அதாவது எனக்குப் பிடித்த குணங்கள் இருக்கின்றன.

சிந்திக்கலாமா?

பக்கத்து ஊருக்குச் செல்ல படகிலும் செல்லலாம், பேருந்திலும் செல்லலாம்… எதில் பயணம் செய்ய நீ விரும்புவாய், காரணம் என்ன?
Answer:
நான் படகில் பயணம் செய்ய விரும்புவேன்.
காரணம் :
சாலை வழிப் பயணம் என்பது எப்போதும் எளிதானது. வழக்கமாக நிகழும் ஒன்று. ஆனால் படகில் பயணம் செய்வது அரிதானது.
சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம். மேலும், மாசடைந்த காற்றைச் சுவாசித்துக் கொண்டே செல்ல வேண்டியுள்ளது.

படகில் பயணம் செய்யும்போது மிகவும் குளிர்ச்சியான சூழல் நிலவும். பயணம் செய்வதற்கான சோர்வு இல்லாமல் இருக்கும். இவையே நான் படகில் பயணம் செய்வதற்கான காரணங்கள் ஆகும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 14 பனிமலைப் பயணம்

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
பனிமலைக்காட்டிற்கு விரைவாகச் சென்றுவிட முடியாது. அடிக்கோடிட்ட சொல்லின் எதிர்ச்சொல் எது?
அ) மெதுவாக
ஆ) எளிதாக
இ) கடினமாக
ஈ) வேகமாக
Answer:
அ) மெதுவாக

Question 2.
“என்ன + என்று” இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது……………..
அ) என்ன என்று
ஆ) என்னென்று
இ) என்னவென்று
ஈ) என்னவ்வென்று
Answer:
இ) என்னவென்று

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 14 பனிமலைப் பயணம்

Question 3.
“அக்காட்டில்” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………
அ) அந்த + காட்டில்
ஆ) அ + காட்டில்
இ) அக் + காட்டில்
ஈ) அந்தக் + காட்டில்
Answer:
ஆ) அ + காட்டில்

Question 4.
“என்னவாயிற்று” இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..
அ) என்ன + ஆயிற்று
ஆ) என்னவா + ஆயிற்று
இ) என்ன + வாயிற்று
ஈ) என்னவோ + ஆயிற்று
Answer:
அ) என்ன + ஆயிற்று

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 14 பனிமலைப் பயணம்

வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
படகில் செல்லும்போது, விலங்குகள் ஏன் திடீரென அலறின?
Answer:
விலங்குகள் படகில் செல்லும்போது, திடீரென்று ஆற்றில் நீரின் வேகம் அதிகரித்தது. அதனால் படகு ஒரு பக்கமாகச் சாய்ந்ததனால் விலங்குகள் அலறின.

Question 2.
நரி, முதலையிடம் என்ன கூறியது?
Answer:
“இதற்கு முன் ஒரு முதலை, விலங்குகளைச் சாப்பிட்டதால் செரிமானம் ஆகாமல் இறந்துவிட்டது.”
“விஷ முறிவுச் செடிகளை நாங்கள் தின்றுள்ளதால், எங்களை யார் கடித்தாலும் அவர்கள் இறந்துவிடுவர்” என்று நரி முதலையிடம் கூறியது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 14 பனிமலைப் பயணம்

Question 3.
இக்கதையில் உனக்குப் பிடித்த விலங்கு எது? ஏன்?
Answer:
எனக்குப் பிடித்த விலங்கு நரி. ஏனெனில் நரி தன் தந்திரத்தால் உடனிருந்த அனைத்து விலங்குகளையும் காப்பாற்றியது.

உரிய பெட்டியுடன் பாராசூட்டை இணைப்போமா?
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 14 பனிமலைப் பயணம் 1
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 14 பனிமலைப் பயணம் 2

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 14 பனிமலைப் பயணம்

விடுபட்ட இடங்களில் உரிய சொற்களை நிரப்பிப் புதிய சொற்றொடர்கள் உருவாக்குக

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 14 பனிமலைப் பயணம் 3
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 14 பனிமலைப் பயணம் 4
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 14 பனிமலைப் பயணம்

மொழியோடு விளையாடு

கட்டத்திலுள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக. உருவாக்கிய ஒவ்வொரு சொல்லையும் கீழே எழுதி, விண்மீனுக்கு வண்ணம் தீட்டுக.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 14 பனிமலைப் பயணம் 5
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 14 பனிமலைப் பயணம் 6

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 14 பனிமலைப் பயணம்

சொல்லக்கேட்டு எழுதுக

1. அடர்ந்த காடு
2. பயணம்
3. பனிமலைக்காடு
4. விலங்குகள்
5. திருவிழா

அகர வரிசைப்படுத்துக

மகிழ்ச்சியாய்த் தாவத் தொடங்கு, மௌவல் என்னும் அழகிய மலரைச் சென்றடைவாய்.

மைதானம், முறுக்கு, மோப்பம், மகிழ்ச்சி, மௌவல், மாதம், மொழி, மீன், மேகம், மெத்தை, மிளகு, மூட்டை
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 14 பனிமலைப் பயணம் 7
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 14 பனிமலைப் பயணம் 8

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 14 பனிமலைப் பயணம்

கலையும் கைவண்ணமும்

வண்ணம் தீட்டுவோமா!
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 14 பனிமலைப் பயணம் 9

செயல் திட்டம்

“அறிவே துணை” என்னும் நீதியை அறிவுறுத்தக்கூடிய கதைகளுள் இரண்டு எழுதி வருக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
காட்டில் வாழ்ந்த விலங்குகள் யாவை?
Answer:
நரி, மான், ஓநாய், வரிக்குதிரை.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 14 பனிமலைப் பயணம்

Question 2.
விலங்குகளைச் சிறுத்தை எங்கு வரும்படிக் கூறியது?
Answer:
பனிமலைக் காட்டில் நடைபெறும் திருவிழாவிற்கு வரும்படி விலங்குகளை அழைத்தது சிறுத்தை .

Question 3.
முதலையிடமிருந்து தப்பிக்க நரி கூறிய தந்திர மொழிகள் யாவை?
Answer:
1. “சென்றவாரம் விலங்குகளைச் சாப்பிட்ட ஒரு முதலை செரிமானம் ஆகாமல் இறந்து போய்விட்டது. அதற்குத் தயார் என்றால் நீங்கள் சாப்பிடுங்கள்” என்றது நரி.

2. “வழியில் பாம்பு கடித்தால் எங்களுக்கு விஷம் ஏறாமல் இருக்க நாங்கள் விஷமுறிவுச் செடிகளைத் தின்று வந்திருக்கிறோம். அதனால் எங்களை யார் கடித்தாலும் அல்லது நாங்கள் யாரைக் கடித்தாலும் அவர்கள் இறப்பது உறுதி” என்று கூறிக் கொண்டே ஒரு மீனைக் கடித்தது. மீன் இறந்து விட்டது.

3. இதனால் முதலையிடமிருந்து விலங்குகள் உயிர் பிழைத்தன.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 13 நன்னெறி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 13 நன்னெறி Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 13 நன்னெறி

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 13 நன்னெறி

வாங்க பேசலாம்

Question 1.
பாடலை உரிய ஒலிப்புடன் படித்து மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே பாடலை உரிய ஒலிப்புடன் படித்து மகிழ வேண்டும்.

Question 2.
உன்னிடம் பிறர் எப்படிப் பேச வேண்டும் என எண்ணுகிறாய்? ஏன்?
Answer:
என்னிடம் பிறர் இன்சொல் பேச வேண்டும் என்று எண்ணுகிறேன்.
ஏனெனில் நாம் பேசும் இன்சொற்களால் அனைவரும் மகிழ்வர். பிறர் நம்மிடம் எவ்வாறு பேச வேண்டும் என்று எண்ணுகிறோமா அதேபோல் நாமும் பிறரிடம் பேசவேண்டும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 13 நன்னெறி

சிந்திக்கலாமா?

இன்சொற்களைப் பேசுவதால் நன்மையே விளையும் என்பதைப் பிறருக்கு எப்படி உணர்த்தலாம்?
Answer:
பிறர் மனதைப் புண்படுத்தாத சொற்களே இன்சொற்கள். நாம் எதிர்நோக்குபவர்களில் புதியவர், சிறியவர், பெரியவர், நண்பர், உறவினர் என எவராக இருந்தாலும் இனிமையாகப் பேசுதல் சிறப்பு. நலம் விசாரித்தல், உபசரித்தல் போன்றவையும் இன்சொல்லாகும்.
இன்சொல் பேசுவதனால் ஏற்படும் நன்மைகளை உணர்த்தும் கதைகளை, நிகழ்வுகளை நாம் பிறருக்குக் கூறலாம்.

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
‘இன்சொல்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) இன் + சொல்
ஆ) இனிமை + சொல்
இ) இன்மை + சொல்
ஈ) இனிய + சொல்
Answer:
ஆ) இனிமை + சொல்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 13 நன்னெறி

Question 2.
‘அதிர்கின்ற வளை’ – இச்சொற்களில் அதிர்கின்ற என்னும் சொல்லின் பொருள்……………
அ) உடைகின்ற
ஆ) ஒலிக்கின்ற
இ) ஒளிர்கின்ற
ஈ) வளைகின்ற
Answer:
ஆ) ஒலிக்கின்ற

Question 3.
வியனுலகம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
அ) வியன் + உலகம்
ஆ) வியல் + உலகம்
இ) விய + உலகம்
ஈ) வியன் + னுலகம்
Answer:
அ) வியன் + உலகம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 13 நன்னெறி

வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
உலகம் எப்போது மகிழும்? – நன்னெறிப் பாடல் மூலம் உணர்த்துக.
Answer:
உலகம் மக்கள் பேசும் இன்சொற்களைக் கேட்டு மகிழும்.

Question 2.
கடலின் அலைகள் எப்போது பொங்கி எழும்?
குளிர்ச்சி பொருந்திய நிலவின் ஒளியைக் கண்டு கடலின் அலைகள் பொங்கி எழும்.
1. இன்சொல் – கதிரவனின் ஒளி
2. வன்சொல் – நிலவின் ஒளி
3. அழல்கதிர் – கடுஞ்சொல்
4. தண்ணென் கதிர் – இனிய சொல்
Answer:
1. இன்சொல் – இனிய சொல்
2. வன்சொல் – கடுஞ்சொல்
3. அழல்கதிர் – கதிரவனின் ஒளி
4. தண்ணென் கதிர் – நிலவின் ஒளி

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 13 நன்னெறி

குறிப்புகளைக் கொண்டு கட்டத்தை நிரப்புக

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 13 நன்னெறி 1
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 13 நன்னெறி 2

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 13 நன்னெறி

சிறு வட்டத்தில் உள்ள எழுத்தை முதலாகக் கொண்டு சொல் உருவாக்குக

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 13 நன்னெறி 3
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 13 நன்னெறி 4

அறிந்து கொள்வோம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 13 நன்னெறி 5

செயல் திட்டம்

இனியவை கூறல் என்னும் திருக்குறள் அதிகாரத்திலுள்ள குறட்பாக்களை எழுதி வருக.
Answer:
1. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
2. அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
3. முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.
4. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு
5.பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற.
6. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
7. நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
8. சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
9. இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.
10. இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 13 நன்னெறி

கூடுதல் வினாக்கள்

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
நன்னெறி நூல் பற்றி எழுதுக.
Answer:

  • நீதி நூல்களுள் ஒன்று நன்னெறி.
  • இந்நூலைத் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றினார். நாற்பது நேரிசை வெண்பாக்கள் இந்நூலில் உள்ளன.
  • ஒவ்வொரு வெண்பாவும் ஒவ்வோர் உவமை மூலம் ஒவ்வொரு நீதிக்கருத்தை விளக்குவது இந்நூலின் சிறப்பாகும்.

Question 2.
இன்சொல் – வன்சொல், நன்னெறிப் பாடல் மூலம் விளக்குக.
Answer:

  • கடலானது கதிரவனின் வெப்பத்தைக் கண்டு பொங்காது. குளிர்ச்சி பொருந்திய நிலவின் ஒளி கண்டுதான் பொங்கும்.
  • அதுபோலக் கடலால் சூழப்பட்ட இப்பெரிய உலகில் வாழும் மக்கள் இன்சொற்களைக் கேட்டு மகிழ்வார்களே அன்றி, வன்சொற்களைக் கேட்டு மகிழ மாட்டார்கள் என்று நன்னெறி கூறுகிறது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 13 நன்னெறி

பாடல் பொருள்

பொன்னாலான ஒலிக்கும் வளையல்களை அணிந்த பெண்ணே, கடலானது கதிரவனின் வெப்பத்தைக் கண்டு பொங்காது. குளிர்ச்சி பொருந்திய நிலவின் ஒளி கண்டுதான் பொங்கும். அதுபோலக் கடலால் சூழப்பட்ட இப்பெரிய உலகில் வாழும் மக்கள் இன்சொற்களைக் கேட்டு மகிழ்வார்களே அன்றி, வன்சொற்களைக் கேட்டு மகிழ மாட்டார்கள் என்பதைப் புரிந்து செயல்படுக.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 12 யானைக்கும் பானைக்கும் சரி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 12 யானைக்கும் பானைக்கும் சரி Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 12 யானைக்கும் பானைக்கும் சரி

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 12 யானைக்கும் பானைக்கும் சரி

வாங்க பேசலாம்

Question 1.
யானைக்கும் பானைக்கும் சரி என்ற கதையை உம் சொந்தநடையில் கூறுக.
Asnwer:
மரியாதை இராமனிடம் வந்த விசித்திரமான வழக்கு இது.
உழவரின் மீது அரபு வணிகர் தொடுத்த வழக்கு.

ஓர் உழவர் தம் மகன் திருமண விழாவில் ஊர்வலம் விடுவதற்காக அரபு வணிகர் ஒருவரிடம் யானையை இரவல் கேட்டார். அவரும் கொடுத்தார். ஊர்வலத்தின்போது யானை இறந்துவிட்டது.

அரபு வணிகர் யானையைத் திருப்பித் தரும்படி கேட்கிறார்.
உழவரோ, “யானை ஊர்வலத்தில் தற்செயலாக இறந்துவிட்டதாகவும், மாற்றாக வேறு யானை வாங்கித் தருவதாகவும் அல்லது யானைக்குரிய விலையைத் தருவதாகவும் நான் கூறினேன். ஆனால் வணிகர் ஏற்றுக் கொள்ளாமல் அடம்பிடிக்கிறார்,” என்று கூறினார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 12 யானைக்கும் பானைக்கும் சரி

உண்மையை அறிந்த மரியாதை இராமன், இருவரையும் பார்த்து, “நீங்கள் இருவரும் நாளை நீதிமன்றத்திற்கு வாருங்கள்” என்று கூறி அனுப்பினார். பின்னர் உழவரைத் தனியாக அழைத்து, தான் ஆள் அனுப்பும்போது வந்தால் போதும் என்றார். பிறகு அவரிடம், “வீட்டுக் கதவிற்குப் பின் பழைய பானைகளை அடுக்கி வைத்து, கதவைத் தாழ்ப்பாள் போடாமல் வைத்திருங்கள்” என்று கூறி அனுப்பி விட்டார்.

மரியாதை இராமன் கூறியபடி உழவர் செய்தார். வணிகர் உழவரை நீதிமன்றத்திற்கு அழைப்பதற்காக வேகமாக வந்து கதவைத் திறந்தார். பானைகள் விழுந்து உடைந்தன. உழவர் வணிகரிடம், “அப்பானைகள் காலங்காலமாக வைத்திருந்த பழம் பானைகள். இவற்றை உடைத்துவிட்டீரே, எனக்கு இதே பானைகளைத் திருப்பித் தாருங்கள்,” என்று சத்தமிட்டார். வணிகர் செய்வதறியாமல் திகைத்தார்.

வணிகர் நடந்ததை மரியாதை இராமனிடம் கூறினார். மரியாதை ராமன் வணிகரிடம் “நீங்கள் இறந்துபோன யானையை உயிருடன் திருப்பிக் கேட்கிறீர். அவர் உடைந்த பழம்பானைகள் வேண்டும் என்று கேட்கிறார். நீங்கள் பானையைக் கொடுத்தால் அவர் யானையைக் கொடுத்துவிடுவார்” என்று கூறினார். வணிகர் தன்னால் பழைய பானைகளைத் தரமுடியாது என்றார்.

மரியாதை இராமன் ”உங்களால் திருப்பித் தர முடியாது என்றால் அவரால் மட்டும் எப்படித் திருப்பித் தர முடியும்” என்றார். ஆதலால் யானைக்கும் பானைக்கும் சரியாகப் போய்விட்டது’ என்று தீர்ப்பளித்தார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 12 யானைக்கும் பானைக்கும் சரி

சிந்திக்கலாமா?

உன் நண்பன் உன்னைத் தவறாகப் புரிந்துகொண்டு உன்மீது சினம் கொண்டால் நீ என்ன செய்வாய்?
Answer:
நான் அவனைச் சமாதானப்படுத்துவேன். என்ன நடந்திருந்தாலும் அவனிடம் உண்மை கூறிப் புரிய வைப்பேன். சினம் கொள்வதற்கான அவசியமில்லை என்று கூறுவேன். சினத்தை விடுத்து சிந்திக்க முயற்சி செய்யும்படி கூறுவேன்.

வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
உழவர் யானையை எதற்காக இரவல் கேட்டார்?
Answer:
உழவர், தம் மகன் திருமண விழாவில் ஊர்வலம் விடுவதற்காக யானையை இரவல் கேட்டார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 12 யானைக்கும் பானைக்கும் சரி

Question 2.
ஊர்வலம் சென்ற யானைக்கு என்ன நேர்ந்தது?
Answer:
ஊர்வலம் சென்ற யானை இறந்துவிட்டது.

Question 3.
மரியாதை இராமன் உழவரைத் தனியே அழைத்து என்ன கூறினார்?
Answer:
மரியாதை இராமன் உழவரை தனியாக அழைத்து “நாளை நீங்களாகவே நீதிமன்றத்திற்கு வரவேண்டாம். அந்த வணிகரை உங்கள் வீட்டிற்கு அனுப்புகிறேன். அவர் வரும்போது உங்கள் வீட்டுக் கதவிற்குப் பின் பழைய பானைகளை அடுக்கி வைத்து, கதவைத் தாழ்ப்பாள் போடாமல் வைத்திருங்கள். பின்னர், நடப்பதை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறினார்.

Question 4.
யானைக்கும் பானைக்கும் சரி என்ற கதை உணர்த்தும் நீதி என்ன?
Answer:
ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டு.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 12 யானைக்கும் பானைக்கும் சரி

பூக்களில் உள்ள எழுத்துகளைக் கொண்டு கோடிட்ட இடங்களை நிரப்புக

1. வணிகர் ………………. நாட்டைச் சேர்ந்த வர்.
Answer:
அரபு

2. உழவர், வணிகர் இருவரின் வழக்கை எதிர்கொண்டவர்………….
Answer:
மரியாதை ராமன்

3. திருமண ஊர்வலத்தில் …………….. இறந்து விட்டது.
Answer:
யானை

4. பழைய …………. கீழே விழுந்து நொறுங்கின.
Answer:
பானைகள்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 12 யானைக்கும் பானைக்கும் சரி

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 12 யானைக்கும் பானைக்கும் சரி - 1

சொல்லிப் பழகுவோம்

1. பட்டம் விட்ட பட்டாபி, பெட்டிக் கடையில் பொட்டலம் போட்டான்.
2. கன்று மென்று தின்றது.
3. வாழைப்பழத் தோலால் வழுக்கி விழுந்தான்.

சொற்களை முறைப்படுத்திச் சரியான தொடரமைத்து எழுதுக.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 12 யானைக்கும் பானைக்கும் சரி - 2
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 12 யானைக்கும் பானைக்கும் சரி - 3
1. மரியாதை இராமன் விசித்திரமான வழக்கை எதிர்கொண்டார்.
2. ஊர்வலத்தில் யானை தற்செயலாக இறந்துவிட்டது.
3. கதவின் பின்னால் பானைகள் அடுக்கி வைக்கப்பட்டன.
4. பானைகள் கீழே விழுந்து உடைந்து விட்டன.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 12 யானைக்கும் பானைக்கும் சரி

குறிப்புகளைப் பயன்படுத்திக் கதை உருவாக்குக. பொருத்தமான தலைப்பிடுக.

நான்கு எருதுகள் – ஒற்றுமையாக வாழ்தல் – சிங்கம் – பிரிக்க நினைத்தல் – எருதுகள் எதிர்த்தல் – சிங்கத்தின் சூழ்ச்சி – எருதுகள் பிரிதல் – சிங்கம் வேட்டையாடுதல்.
Answer:
ஒற்றுமையே பலம்
ஒரு காட்டில் நான்கு எருதுகள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தன. அவை நான்கும் வலிமையுடன் இருந்தன. அக்காட்டில் வாழ்ந்த சிங்கம் இவர்களின் ஒற்றுமையைப் பார்த்து, எப்படியாவது இவைகளைப் பிரித்துவிட வேண்டும் என்று எண்ணியது. முதலில் ஒரு எருதைக் கொல்லலாம் என்று சிங்கம் சீறிப் பாய்ந்தது.

ஆனால் மற்ற எருதுகள் சேர்ந்து சிங்கத்தைத் தம் கொம்புகளால் குத்தித் தாக்கின. வலியால் துன்புற்ற சிங்கத்திடம் நரி வந்து பேசியது. தந்திரமாக எப்படியாவது நான்கு எருதுகளையும் பிரிப்பதாகக் நரி கூறியது. அதேபோல் ஓர் எருதிடம் சென்று “உன் வலிமையால்தான் சிங்கம் பயந்து ஓடியது.

மற்ற எருதுகளால் இல்லை ” என்று கூறியது. இதேபோல் ஒவ்வொரு எருதிடமும் கூறியது. எருதுகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுப் பிரிந்தன. அச்சமயம் பார்த்து சிங்கம் ஒவ்வொரு எருதாய்க் கொன்றது. எருதுகள் ஒற்றுமையாய் இல்லாததால் கொல்லப்பட்டன.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 12 யானைக்கும் பானைக்கும் சரி

குறிப்புகளைக் கொண்டு கட்டத்திலிருந்து விடை காண்போமா?
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 12 யானைக்கும் பானைக்கும் சரி - 4
Answer:
இடமிருந்து வலம்
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 12 யானைக்கும் பானைக்கும் சரி - 5

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 12 யானைக்கும் பானைக்கும் சரி

செயல் திட்டம்

வார இதழ்கள், செய்தித்தாள்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் கிடைக்கும் யானை பற்றிய செய்திகளைத் தொகுத்து, செய்தித் தொகுப்பு உருவாக்குக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
உழவர், மரியாதை இராமனிடம் என்ன கூறினார்?
Answer:
“ஐயா, இரவலாக வாங்கிய யானை ஊர்வலத்தில் தற்செயலாக இறந்துபோய்விட்டது. அதற்குரிய விலையையாவது, மாற்றாக வேறு யானையையாவது, வாங்கித் தருகிறேன் என்று எத்தனையோ முறை கூறிவிட்டேன். ஆனால், இந்த வணிகர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். இறந்துபோன அதே யானைதான் வேண்டுமென அடம்பிடித்தால் நான் என்ன செய்வேன்?” என்று வருத்தத்துடன் உழவர் கூறினார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 12 யானைக்கும் பானைக்கும் சரி

Question 2.
உழவருக்கு மரியாதை இராமன் சொன்ன யோசனை யாது?
Answer:

  • வீட்டுக் கதவிற்குப் பின் பழைய பானைகளை அடுக்கி வைத்தல்.
  • கதவைத் தாழ்ப்பாள் போடாமல் வைத்தல். இவற்றைச் செய்தால் போதும் என்று உழவருக்கு மரியாதை இராமன் கூறினார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 12 யானைக்கும் பானைக்கும் சரி

Question 3.
மரியாதை இராமன் என்ன தீர்ப்பு அளித்தார்?
Answer:

  • வணிகர் இறந்துபோன தனது யானையைக் கேட்டார். உழவர் உடைந்துபோன பானைகளைக் கேட்டார்.
  • இரண்டுமே திரும்பப் பெற முடியாதவை. இறந்துபோன யானை மீண்டும் உயிர்பெற்று வர இயலாது என்பதை மரியாதை இராமன் உணர வைத்தார்.
  • யானைக்கும் பானைக்கும் சரியாகப் போய்விட்டது என்று அவர் தீர்ப்பு அளித்தார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்!

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்!

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

வாங்க பேசலாம்

Question 1.
“பணத்தையா சாப்பிடமுடியும்?” என்ற இளமாறனுக்கு நீங்களாக இருந்தால் என்ன விடை சொல்வீர்கள்?
Answer:
நான் கூறும் விடை :
பணத்தைச் சாப்பிட முடியாது. ஆனால் விவசாயத்தை மேம்படுத்த முடியும். உழவுத்தொழில் சிறப்பதற்கான பணியைச் செய்வேன். வீட்டில் கால்நடைகளை வளர்த்து இயற்கை உரத்தைப் பயன்படுத்துவேன். செயற்கை உரம், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்தமாட்டேன் என்று உறுதிமொழியேற்பேன்.

சிந்திக்கலாமா?

நம் நாட்டில் பல தொழில்கள் நடைபெறுகின்றன. உழவுத்தொழில் செய்ய யாரும் விரும்பவில்லையெனில், உலகம் என்னவாகும்?
Answer:
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்று திருவள்ளுவரே கூறியுள்ளார். பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும், உழவுத்தொழிலே சிறந்தது. அத்தகைய உழவுத்தொழில் நடைபெறவில்லையெனில் நம் அனைவருக்கும் உண்ண உணவு இருக்காது. உணவுக்குப் பதிலாக காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளுக்கும் மாத்திரையை விழுங்கி உயிர் வாழ வேண்டிய நிலைதான் ஏற்படும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
‘பாய்ந்தோடும்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது…………………
அ) பாய் + தோடும்
ஆ) பாய்ந்து + ஓடும்
இ) பயந்து + ஓடும்
ஈ) பாய் + ஓடும்
Answer:
ஆ) பாய்ந்து + ஓடும்

Question 2.
காலை + பொழுது – இச்சொற்களைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது……………….
அ) காலைப்பொழுது
ஆ) காலைபொழுது
இ) காலபொழுது
ஈ) காலப்பொழுது
Answer:
அ) காலைப்பொழுது

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Question 3.
பின்வருவனவற்றுள் எது இயற்கை இல்லை?……………………..
அ) மலை
ஆ) காடு
இ) நெகிழி
ஈ) நிலம்
Answer:
இ) நெகிழி

Question 4.
குனிந்து – இச்சொல் குறிக்கும் பொருள்……………………
அ) வியந்து
ஆ) விரைந்து
இ) துணிந்து
ஈ) வளைந்து
Answer:
ஈ) வளைந்து

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Question 5.
தன் + உடைய இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது……………………………………..
அ) தன்னுடைய
ஆ) தன்உடைய
இ) தன்னுடைய
ஈ) தன்உடையை
Answer:
அ) தன்னுடைய

வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
செயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
Answer:

  • நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்து நோய்கள் வருகின்றன.
  • உணவுகள் உயிர்ச்சத்தின்றி இருக்கின்றன.
  • மண் வளம் அழிக்கப்படுகிறது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Question 2.
நிலத்தைத் தெய்வமாக வணங்கவேண்டும் எனத் தாத்தா கூறக் காரணம் என்ன?
Answer:
நெல், கம்பு, கேழ்வரகு, உளுந்து, துவரம்பருப்பு, எண்ணெய் வித்துகள், காய்கள், பழங்கள் எனப் பலவகையான உணவுப் பொருள்களை நிலம் கொடுப்பதால், நிலத்தைத் தெய்வமாக வணங்க வேண்டும்.

Question 3.
‘எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்’ என இளமாறன் ஏன் கூறினான்?
Answer:
இளமாறன் தன் தாத்தா கூறியவற்றைச் சிந்தித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனுடைய அப்பா ”வயலுக்குச் சென்று வந்தாயா? உன் தாத்தாவை வயலுக்குப் போக வேண்டாம் என்று சொன்னால் அவர் எங்கே கேட்கிறார்?” என்று கூறினார்.

அதற்கு இளமாறன் “யாருமே வயலுக்குப் போகவில்லை என்றால் என்னவாகும்?” என்று கேட்டான். “எல்லாரும் இப்படியே இருந்து விட்டால் விவசாயத்தை யார் செய்வது?” என்று கேட்டுத் தன் தந்தையின் தவற்றைச் சுட்டிக் காட்டினான்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

சொந்த நடையில் கூறுக

உமக்குப் பிடித்த காய்கள், பழங்கள் எவை? ஏன்?
Answer:
எனக்குப் பிடித்த காய்கள், பழங்கள் : கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், பாகற்காய், முள்ளங்கி, காரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பீட்ரூட், பூசணிக்காய், எல்லா வகையான கீரைகள், அன்னாசிப்பழம், கொய்யாப்பழம், மாம்பழம், திராட்சைப்பழம், பப்பாளிப்பழம் ஆகிய அனைத்தும் எனக்குப் பிடித்தவை.

இவற்றை உண்பதற்கான தனித்தனிக் காரணங்கள் ஏதும் இல்லை. காய்கறிகளிலும் பழங்களிலும் தனித்தனி மருத்துவக்குணம் உள்ளது.

பொதுவாகக் காய்கறிகளையும் பழங்களையும் உண்பதால் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. உயிர்ச்சத்து மற்றும் தாது உப்புகள் கிடைக்கும். நோய் எதிர்ப்புச் சக்தி கூடுகிறது. அதனால் நோயற்ற வாழ்வு வாழ இயலும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

அகரமுதலிப் பார்த்துப் பொருளறிக

மாசு – ………………………..
வேளாண்மை – ……………………
Answer:
மாசு – அழுக்கு, குற்றம், மாறுபாடு
வேளாண்மை – உழவு

சொற்களை இணைத்துத் தொடரை நீடித்து எழுதுக
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! - 1
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! - 2

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

நிறுத்தக் குறியிடுக

Question 1.
நெல் கம்பு கேழ்வரகு போன்றவை தானியங்கள்
Answer:
நெல், கம்பு, கேழ்வரகு போன்றவை தானியங்கள்.

Question 2.
வெண்டைக்காய் உடலுக்கு நல்லது
Answer:
‘வெண்டைக்காய் உடலுக்கு நல்லது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Question 3.
ஆகா பயிர் அழகாக உள்ளதே
Answer:
ஆகா, பயிர் அழகாக உள்ளதே!

Question 4.
அடப்பாவமே அப்படின்னா நாம எதைத்தான் சாப்பிடுவது
Answer:
அடப்பாவமே! அப்படின்னா, நாம எதைத்தான் சாப்பிடுவது?

புதிய சொற்களை உருவாக்கலாமா?
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! - 3
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! - 4

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

படத்தைப் பார்த்து விடுகதைகள் உருவாக்குக.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! - 5
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! - 6

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

அகர வரிசைப்படுத்துக

தேன், தாளம், தௌவை, துடுப்பு, தென்னை , தையல், தோழமை, தீ, தூய்மை, தொகை, திட்பம், தளிர்.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! - 7
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! - 8

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

சொல்லக்கேட்டு எழுதுக

1. இயற்கை வேளாண்மை
2. உயிர்ச்சத்துகள்
3. செயற்கை உரங்கள்
4. நெல் மணிகள்
5. நண்டுகள்

கலையும் கைவண்ணமும்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! - 9
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! - 10

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

செயல் திட்டம்

உங்கள் வீட்டில் உருவாகும் காய்கறிக் கழிவுகளையும் மட்கும் குப்பைகளையும் பயன்படுத்தி, இயற்கை உரம் தயார் செய்க. அந்த உரத்தை வீட்டிலோ பள்ளியிலோ உள்ள தாவரங்களுக்குப் பயன்படுத்துக.

குழுவாக விளையாடலாமா?

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 11 எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! - 11

(i) படத்தில் உள்ளதுபோல் அட்டைகளைத் தயார் செய்து கொள்க.
(ii) முதல் அட்டையை அசையாமல் இருக்குமாறு வைத்துக்கொள்க.
(iii) இரண்டாவது அட்டை மட்டும் சுழலுவதற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். மேல் பக்கமாகக் கடிகார முள் போன்று செய்துவைத்துக் கொள்க.

(iv) மாணவர் ஒருவரை அழைத்து, முதல் அட்டையிலிருந்து ஏதாவது ஒரு படத்தின் பெயரைக் கூறச் சொல்லவேண்டும். அந்த மாணவரையே இரண்டாவது அட்டையையும் சுழற்றச் சொல்ல வேண்டும். கடிகார முள்ளிற்கு நேராக முதல் அட்டையில் கூறிய படத்திற்குப் பொருத்தமான படம் வந்தால் அவர் வெற்றி பெற்றதாகவும், இல்லையெனில் அடுத்தடுத்த சுற்றுக்கு வாய்ப்பு வழங்கியும் விளையாட்டைத் தொடரலாம்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

அறிந்து கொள்வோம்

திருக்குறள்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
– உழவு, குறள் 1033

கூடுதல் வினாக்கள்

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
இளமாறன் மாடியிலிருந்து பார்த்தக் காட்சிகள் யாவை?
Answer:

  • மாமரத்திலிருந்த கிளிகள் கீச் கீச் எனக் குரலெழுப்பி அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன.
  • வைக்கோல்போரின் மீது சேவலொன்று மெதுவாக நடைபயின்று கொண்டிருந்தது.
  • தோட்டத்தில் துள்ளிக்குதித்துக் கொண்டிருந்த கன்றைக் கண்டு பசு, “ம்மா…” எனக் குரலெழுப்பியது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Question 2.
இளமாறன் வயலுக்கு ஏன் சென்றான்?
Answer:
இளமாறன் தன் தாத்தாவிற்கு சாப்பாடு கொடுப்பதற்காக வயலுக்குச் சென்றான்.

Question 3.
நெல்மணிகள் எவ்வாறு இருந்தன?
Answer:
நெல்மணிகள் கற்றறிந்த சான்றோர் போலக் குனிந்து நின்றன.

Question 4.
இளமாறன் எதைப் பார்த்து வியப்படைந்தான்?
Answer:
வளையிலிருந்து நண்டுகள் எட்டிப் பார்த்து, தம் கொடுக்குகளை மேலும் கீழுமாக அசைத்து நகர்ந்தன. அதைப் பார்த்து இளமாறன் வியப்படைந்தான்.

Question 5.
நிலத்தில் வேலை செய்வது பற்றி இளமாறன் கேட்ட கேள்விக்குத் தாத்தா என்ன பதில் கூறினார்?
Answer:
வயலில் வேலை செய்ததால்தான் தன் உடல் வலிமையாக உள்ளது என்றும், வலிமையாக இருப்பதால் நோய்நொடியின்றி இருப்பதாகவும் கூறினார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Question 6.
வயலைப் பற்றி இளமாறனின் தாத்தா கூறியது யாது?
Answer:
வயல்தான் தமக்குச் சொத்து. இங்கு விளைகின்ற பயிர்கள் மக்களை வாழவைக்கின்றன. உண்ணுகின்ற உணவுப் பொருள்களெல்லாம் தம்மைப் போன்ற உழவர்களின் உழைப்பின் மூலமாகவே கிடைப்பதாக தாத்தா கூறினார்.

Question 7.
உழவர்கள் விளைவிப்பவை யாவை?
Answer:
நெல், கம்பு, கேழ்வரகு, உளுந்து, துவரம்பருப்பு, எண்ணெய்வித்துகள், காய்கள், பழங்கள்.

Question 8.
ஈடு இணை இல்லாதது என்று தாத்தா குறிப்பிட்டது என்ன?
Answer:
உழவர்களின் தேவைக்குப் போக விளைந்ததைப் பிறருக்குக் கொடுக்கும் போது கிடைக்கிற மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை என தாத்தா குறிப்பிட்டார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

சிறுவினா:

Question 1.
தாத்தா இயற்கை உரம், செயற்கை உரம் பற்றிக் கூறியனவற்றை எழுதுக.
Answer:
இயற்கை உரம்:

  • ஆடு மாடுகளின் சாணத்தை ஒன்று சேர்த்து எருவாக்கி, நிலத்தில் போடுதல்.
  • தாவரங்களின் தழைகளை மண்ணிலிட்டு மட்கச் செய்தல்.
  • இந்த இயற்கை உரங்களைப் பயன்படுத்தினால் நல்ல விளைச்சல் கிடைக்கும். நாம் நல்ல உடல் நலத்தோடும் நோய் எதிர்ப்புச் சக்தியோடும் வாழலாம்.

செயற்கை உரம்:

  • செயற்கை உரங்களைத் தெளிப்பதனால் தேனீ, வண்ணத்துப்பூச்சி, மண்புழு போன்றவை அழிந்து விடுகிறது. அதனால் மண் மாசடைகிறது.
  • செயற்கை உரம், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை மண்ணில் தெளிப்பதனால் தண்ணீர் மாசடைகிறது. தொழிற்சாலைக் கழிவுகளை அப்படியே நிலத்தில் விடுவதால் நிலத்தடிநீர் மாசடைகிறது.
  • இவற்றைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவுகளை உண்பதால் நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்து புதிய புதிய நோய்கள் வருகின்றன.

Samacheer Kalvi 4th English Guide Term 1 Prose Chapter 3 Robinson Crusoe

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th English Guide Pdf Term 1 Prose Chapter 3 Robinson Crusoe Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th English Solutions Term 1 Prose Chapter 3 Robinson Crusoe

4th English Guide Robinson Crusoe Text Book Back Questions and Answers

Let us understand

Samacheer Kalvi 4th English Guide Term 1 Prose Chapter 3 Robinson Crusoe

A. Match the words with the pictures.

Question 1.
Samacheer Kalvi 4th English Guide Term 1 Prose Chapter 3 Robinson crusoe 1
Answer:
Samacheer Kalvi 4th English Guide Term 1 Prose Chapter 3 Robinson crusoe 2

Samacheer Kalvi 4th English Guide Term 1 Prose Chapter 3 Robinson Crusoe

B. Answer using Yes or No and pick sentences from the story to support your answer.

Question 1.
Was Robinson interested in sea adventures?
Answer:
Yes, Robinson was interested in sea adventures.

Question 2.
Did Robinson’s ship sink?
Answer:
Yes, Robinson’s ship sink.

Question 3.
Was Robinson alone in the island?
Answer:
Yes, Robinson was alone in the island,with a dog.

Question 4.
Did Robinson kill Friday?
Answer:
No, Robinson did not kill Friday.

Question 5.
Do cannibals eat people ?
Answer:
Yes, cannibals eat people.

Samacheer Kalvi 4th English Guide Term 1 Prose Chapter 3 Robinson Crusoe

C. Arrange the actions of Robinson by numbering from 1 to 10.

Question 1.
Samacheer Kalvi 4th English Guide Term 1 Prose Chapter 3 Robinson crusoe 3
Answer:
Samacheer Kalvi 4th English Guide Term 1 Prose Chapter 3 Robinson crusoe 4

Samacheer Kalvi 4th English Guide Term 1 Prose Chapter 3 Robinson Crusoe

D. Short answers

Question 1.
Who is the hero of this story?
Answer:
Robinson is the hero of the story.

Question 2.
What was the age of Robinson Crusoe when he left for sea?
Answer:
Robinson was nineteen years old when he left for sea.

Question 3.
Why did he grow crops?
Answer:
He grew crops for his food.

Question 4.
What made him frightened?
Answer:
When he found a foot print of a human on the other side of island, he was frightened.

Question 5.
Why did Robinson name the tribe Friday?
Answer:
Robinson named him Friday as the met him on Friday.

Samacheer Kalvi 4th English Guide Term 1 Prose Chapter 3 Robinson Crusoe

Short Additional Questions and Answers

Question 1.
Why did Robinson’s ship sink?
Answer:
Robinson’s ship sank because of a great storm.

Question 2.
How did Robinson count the days?
Answer:
Robinson counted the days on a wooden cross.

Question 3.
How many years did Robinson live in fear?
Answer:
Robinson lived in fear for two years.

Samacheer Kalvi 4th English Guide Term 1 Prose Chapter 3 Robinson Crusoe

Choose the best answer.

Question 1.
Robinson taught Friday to speak in _____________
(a) French
(b) Germany
(c) Spanish
(d) English
Answer:
(d) English

Question 2.
The ship’s men had rebelled against _____________.
(a) Cannibals
(b) Friday
(c) The captain
(d) Robinson
Answer:
(c) The captain

Question 3.
Robinson sailed from the island to ___________ with Friday.
(a) Spain
(b) England
(c) France
(d) Holland
Answer:
(b) England

Question 4.
When Robinson was ______________ years old, he left his home.
(a) Seventeen
(b) Eighteen
(c) Nineteen.
(d) Twenty
Answer:
(c) Nineteen

Question 5.
When Robinson woke up, he found a little _____________ next to him.
(a) Boy
(b) Hare
(c) Goat
(d) Dog
Answer:
(d) Dog

Samacheer Kalvi 4th English Guide Term 1 Prose Chapter 3 Robinson Crusoe

Let us build

Circle the vowel letters.

Question 1.
Letter ‘u’ sounds like consonant as in “university”
a       c      d     i        f      o     e      h
Answer:
Samacheer Kalvi 4th English Guide Term 1 Prose Chapter 3 Robinson crusoe 7

Circle the consonant letters.

Question 1.
A syllable is marked by the symbol (/)
p        r       l       o      j      s       a      k         i        y       d        q
Answer:
Samacheer Kalvi 4th English Guide Term 1 Prose Chapter 3 Robinson crusoe 8

Samacheer Kalvi 4th English Guide Term 1 Prose Chapter 3 Robinson Crusoe

A. Divide the words that have same pattern as the rabbit.

Question 1.
Samacheer Kalvi 4th English Guide Term 1 Prose Chapter 3 Robinson crusoe 9
Answer:

  1. Dog
  2. But/ton
  3. Sun/set
  4. Sky/blue
  5. Kit/ten
  6. tur/tle

Additional divide the words that have same pattern as the rabbit 

Question 1.
Samacheer Kalvi 4th English Guide Term 1 Prose Chapter 3 Robinson crusoe 9
Answer:

  1. as/set
  2. oc/cur
  3. at/tack
  4. al/lot
  5. ad/dict
  6. cot/tage
  7. driz/zled
  8. af/fect
  9. al/lot cof
  10. ad/dict

Question 2.
Samacheer Kalvi 4th English Guide Term 1 Prose Chapter 3 Robinson crusoe 13
Answer:

  1. u/nit
  2. e/vil
  3. o/mit
  4. bo/nus
  5. mu/sic
  6. mo/tel
  7. mi/nus
  8. i/tem
  9. ba/sic

Question 3.
Samacheer Kalvi 4th English Guide Term 1 Prose Chapter 3 Robinson crusoe 14
Answer:

  1. no/ble
  2. ti/tle
  3. rum/ble
  4. un/cle
  5. an/gle
  6. ri/fle
  7. ca/ble
  8. sam/ple
  9. cy/cle
  10. nee/dle

Samacheer Kalvi 4th English Guide Term 1 Prose Chapter 3 Robinson Crusoe

B. Write the word under the correct group’and divide it.

muffin purple raven cow dinner marble man tennis dog sample recent hotel table hammer boy
Question 1.
Samacheer Kalvi 4th English Guide Term 1 Prose Chapter 3 Robinson crusoe 10
Answer:
Samacheer Kalvi 4th English Guide Term 1 Prose Chapter 3 Robinson crusoe 11

Samacheer Kalvi 4th English Guide Term 1 Prose Chapter 3 Robinson Crusoe

Robinson Crusoe Summary in English and Tamil

Robinson Crusoe was a brave young man. He loved adventures. When he was nineteen years old, he left his home and took travel in the sea. One day, his ship started to sink because of a great storm. Robinson managed to swim to an island. When he reached the island, he was so tired that he just slept on the sand. When he woke up, he found a little dog next to him. They both were all alone in that place.

ராபின்சன் குருசோ ராபின்சன் குருசோ ஒரு தைரியமான இளைஞர். அவர் சாகசங்களைச் செய்வதில் விருப்பம் கொண்டார். அவருக்கு வயதான போது, அவர் வீட்டை விட்டுக் கிளம்பி, கடற்பயணம் மேற்கொண்டார். ஒருநாள் ஒரு பெரிய புயல் காரணமாக அவரது கப்பல் மூழ்கத் தொடங்கியது. ராபின்சன் நீந்திச் சென்று ஒரு தீவை அடைந்தார்.

இதனால் மிகவும் களைப்படைந்து அங்கு மணலின் மேலேயே படுத்து உறங்கிவிட்டார். அவர் விழித்து எழுந்தபோது, ஒரு நாய்க்குட்டி அவரது அருகில் இருப்பதைக் கண்டார். அந்த இடத்தில் அவர்கள் இருவரும் தனியாக இருந்தனர்.

Robinson explored the island, and he found the broken ship. He took some food, guns, clothing and tools from it. He made a tent and lived in it. He counted days on a wooden cross. From then on, he was able to keep a calendar. On the island, he found many kinds of goats and hares which he shot and ate.

ராபின்சன் அந்த தீவை ஆய்வு செய்து, அங்கு ஒரு உடைந்த கப்பலைக் கண்டார். அதிலிருந்து கொஞ்சம் உணவு, துப்பாக்கிகள், உடைகள் மற்றும் சில கருவிகளை எடுத்துக் கொண்டார். ஒரு கூடாரம் உண்டாக்கி அதில் வாழ்ந்தார். ஒரு மரச்சிலுவையில் அவர் நாட்களை குறித்துவைத்து வந்தார். அதன் பிறகு, ஒரு நாட்காட்டியை அவரால் பராமரிக்க முடிந்தது. அந்த தீவில் பலவகை ஆடுகளையும் முயல்களையும் அவர் கண்டு அவற்றை சுட்டு, சாப்பிட்டு வந்தார்.

Then, he made a small boat.

பிறகு, ஒரு சிறிய படகை அவர் தயாரித்தார்.

One day, Robinson found a footprint of a human, on the other side of the island. He was frightened. For two years he lived in fear. Then, one day he saw some tribal men chasing a young fellow. Robinson took out his gun and shot twice. The tribal men got scared and ran away. He named him Friday as he met him on Friday. At last, he had a human friend in the island. Robinson taught Friday to speak in English, to shoot and eat like a human.

ஒருநாள், தீவின் மற்றொருபக்கம் ஒரு மனிதனின் காலடிச்சுவட்டைக் கண்டார். அவர் பயந்துபோனார். இரண்டு ஆண்டுகள் பயத்துடன் வாழ்ந்தார். பிறகு, ஒருநாள் ஒரு இளைஞனை சில பழங்குடி மக்கள் துரத்திச் செல்வதை அவர் கண்டார். ராபின்சன் தன் துப்பாக்கியை எடுத்து இருமுறை சுட்டார்.

அந்த பழங்குடி மக்கள் பயந்து ஓடிவிட்டனர். அந்த இளைஞனை அவர் வெள்ளிக்கிழமை சந்தித்ததால், அவனுக்கு ஃப்ரை டே என பெயரிட்டார். கடைசியில், அந்தத் தீவில் மனித இனத்தைச் சேர்ந்த நண்பன் ஒருவன் அவருக்கு கிடைத்துவிட்டான். ஆங்கிலத்தில் பேசவும், துப்பாக்கியால் சுடவும், மனிதனைப்போல சாப்பிடவும், ஃப்ரைடேவுக்கு ராபின்சன் சொல்லிக்கொடுத்தார்.

One day, they both saved some people from the cannibals. Among them, they found Friday’s father and his friends. They stayed with Robinson and Friday for a few days and left the island. Another day, Friday informed Robinson about a ship. They both hid and watched the ship. Robinson learnt that the ship’s men had rebelled against the captain. After killing some of the rebels, Robinson, Friday and the captain retook the ship. At last, Robinson sailed from the island to England with Friday, after twenty-eight years, two months and nineteen days.

ஒருநாள், இருவரும் சேர்ந்து, நரமாமிசம் சாப்பிடும் ஆட்களிடமிருந்து சிலரைக் காப்பாற்றினார்கள். அவர்களிடையே ஃப்ரைடேவின் அப்பாவையும், அவரது நண்பர்களையும் அவர்கள் கண்டனர். அவர்கள் ராபின்சன் மற்றும் ஃப்ரைடே ஆகியோருடன் சில நாட்கள் தங்கிவிட்டு, தீவை விட்டு வெளியேறினர். மற்றொரு நாள், ஒரு கப்பலைப் பற்றி ஃப்ரைடே ராபின்சனுக்குத் தெரிவித்தான்.

அவர்கள் இருவரும் மறைந்திருந்து, அந்தக் கப்பலை கவனித்தார்கள். கப்பலின் கேப்டனை எதிர்த்து கப்பலின் ஆட்கள் கலவரம் செய்ததை ராபின்சன் அறிந்தார். கலகம் செய்த சிலரைக் கொன்றுவிட்டு, ராபின்சனும், ஃப்ரைடேவும், கேப்டனும் அந்தக் கப்பலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கடைசியில், 28 ஆண்டுகள் 2 மாதங்கள் 19 நாட்களுக்குப் பிறகு, ஃப்ரைடேவுடன் ராபின்சன் அந்தத் தீவிலிருந்து இங்கிலாந்துக்குப் பயணித்தார்.

Samacheer Kalvi 4th English Guide Term 1 Prose Chapter 3 Robinson Crusoe

Robinson Crusoe Glossary 

Adventure – risky or unexpected undertaking  (சாகசம்)
Explore – travel through an unknown area to learn more about it (ஆய்வு செய்தல்)
Tent – portable canvas shelter  (கூடாரம்)
Tribal – racial, ethnical  (பழங்குடி இனத்தவர்)
Cannibals – humans who eat other humans  (மனிதமாமிசம் சாப்பிடும் மனிதர்கள்)
Rebels – people who protest authority  (கலகக்காரர்கள்)
Frightened – afraid  (பயப்படுதல்)
Alone – lonely  (யாருமின்றி, தனியாக)
Brave – courageous  (தைரியமிக்க)
Chasing – pursuing  (துரத்துதல்)
Fear – dread, fright  (பயம்)
Hid – concealed  (மறைந்திருத்தல்)
Informed – reported  (தெரிவித்தல்)
Retook – took back  (திரும்ப எடுத்துக்கொள்ளல்)
Sink – plunge  (மூழ்குதல்)
Tired – exhausted  (களைத்துப் போய்விடுதல்)
Woke up – awoke  (விழித்தெழுதல்)

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 10 காவல்காரர் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 10 காவல்காரர்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

வாங்க பேசலாம்

Question 1
கதைப்பாடலை ஓசைநயத்துடன் பாடி மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே கதைப் பாடலை ஓசை நயத்துடன் பாட வேண்டும்.

Question 2.
பாடலின் பொருளைப் புரிந்து கொண்டு பாடுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே பாடலின் பொருள் புரிந்து பாட வேண்டும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

Question 3.
பாடல் பொருளை உமது சொந்த நடையில் கூறுக.
Answer:
தோட்டத்தின் நடுவில் மேலே கோட்டுடனும் சரிகை வேட்டியுடனும் காவல்காரர் நின்றிருந்தார். இரவும் பகலும் காவல் காத்து வந்தார். காக்கை குருவிகள் அங்குள்ள காவல்காரரைப் பார்த்து பயந்து கொண்டு திரும்பி ஓடிவிடும். ஒருமுறை பலத்த மழை பெய்தபோது காவல்காரரின் ஆடைகள் கிழிந்திருந்தது.

காவல்காரருக்கு உதவி செய்தால் தான் அச்சமின்றி உலா வரலாம் என எண்ணிய காகம் அருகில் இருந்த வீட்டிற்குச் சென்று கறுப்புக் கோட்டு, வெள்ளைச் சட்டை, கட்டிக் கொள்ள சரிகை வேட்டி எடுத்து வந்து காவல்காரரிடம் கொடுத்து உடுத்திக் கொள்ளச் சொன்னது.

காவல்காரர் புதிய ஆடையை ஆவலோடு பார்க்கவில்லை, பழைய ஆடையைக் கழற்றிப் போடவில்லை. கொஞ்சம்கூட அசையவில்லை. காகம் அருகில் சென்று உற்றுப் பார்த்தவுடன்தான் அங்கிருந்தது சோளக்கொல்லை பொம்மை என்று அப்போது தெரிந்தது. வைக்கோலினால் ஆன பொம்மை என்பதைத் தன் நண்பர்களிடம் சொல்வதாகக் கூறிப் பொம்மையின் தலையில் நின்று மற்ற பறவைகளையும் கூவி அழைக்கிறது.

சிந்திக்கலாமா?

சூழல் -1 மீனாவின் அம்மா மீனாவுக்கு மட்டுமின்றி மீனாவின் நண்பர்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவிக்கிறார்.
சூழல் – 2 வளவனின் அப்பா யார் எந்த உதவி கேட்டாலும் நீ செய்யக் கூடாது என்று கூறுகிறார். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
Answer:
சூழல் ஒன்றுதான் போற்றத்தக்கது. மீனாவின் அம்மாவைப் போல் நாமும் அனைவரிடமும் அன்புடனும் நட்புடனும்பழகவேண்டும். அப்போதுதான் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழும் பண்பைப் பெறுவர். வளரும் குழந்தைகளுக்கு நற்பண்புகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

சூழல் இரண்டு யாரும் பின்பற்றக் கூடாத குணம். உதவி செய்து வாழ்வதைப் பற்றி முதலில் வளவனின் அப்பா அறிய வேண்டும்.

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
‘பெயரில்லாத’ – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது………………….
அ) பெயர் + இலாத
ஆ) பெயர் + இல்லாத
இ) பெயரில் + இல்லாத
ஈ) பெயரே + இல்லாத
Answer:
ஆ) பெயர் + இல்லாத

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

Question 2.
வைக்கோல் மேலே துணியைச் சுற்றி வைத்திருக்கும் பொம்மை இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் எதிர்ச்சொல்…………………
அ) கீழே
ஆ) அருகில்
இ) தொலைவில்
ஈ) வளைவில்
Answer:
அ) கீழே

Question 3.
‘சோளக்கொல்லைப் பொம்மை’ என்பது……………………
அ) உயிருள்ள பொருள்
ஆ) உயிரற்ற பொருள்
இ) இயற்கையானது
ஈ) மனிதன் செய்ய இயலாதது
Answer:
ஆ) உயிரற்ற பொருள்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

Question 4.
அசைய + இல்லை – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது……………….
அ) அசைய இல்லை
ஆ) அசைவில்லை
இ) அசையவில்லை
ஈ) அசையில்லை
Answer:
இ) அசையவில்லை

Question 5.
நித்தம் – இச்சொல்லுக்குரிய பொருள்…………………….
அ) நாளும்
ஆ) இப்பொழுதும்
இ) நேற்றும்
ஈ) எப்பொழுதும்
Answer:
அ) நாளும்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
தோட்டத்தின் நடுவே ராஜா போல் நின்றவர் யார்?
Answer:
தோட்டத்தின் நடுவே ராஜா போல் நின்றவர் சோளக்கொல்லைப் பொம்மையாகிய காவல்காரர்.

Question 2.
காவல்காரருக்குத் தோட்டத்தில் உள்ள பணி யாது?
Answer:
காவல்காரருக்குத் தோட்டத்தில் உள்ள பணி, இரவும் பகலும் வயலில் நின்று காவல் காப்பதாகும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

Question 3.
பொம்மைக்குக் கறுப்புக்கோட்டு, வெள்ளைச்சட்டை கொடுத்தது யார்?
Answer:
பொம்மைக்குக் கறுப்புக்கோட்டு, வெள்ளைச்சட்டை கொடுத்தது காகம்.

Question 4.
காகம் கொடுத்த ஆடைகளைக் காவல்காரர் ஏன் அணியவில்லை?
Answer:
காவல்காரர் உயிரற்ற பொருள் என்பதால் காகம் கொடுத்த ஆடைகளைக் காவல்காரர் அணியவில்லை.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

முதலெழுத்து ஒன்று போல் வரும் சொற்களை எழுதுக
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர் - 1
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர் - 2

மேகங்களுக்குப் பொருத்தமான மழைத்துளிகளை இணைக்க
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர் - 3
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர் - 4

இணைத்த சொற்களைக் கீழே எழுதுக.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர் - 5
Answer:
1. சரிகை வேட்டை
2. கறுப்புக் கோட்டு
3. வெள்ளைச் சட்டை
4. சோளக் கொல்லைப் பொம்மை
5. கனத்த மழை.

பாடலைத் தொடர்ந்து பாடுவோமா?
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர் - 6
Answer:
மக்கள் ஒன்று கூடியே
மகிழ விரும்பும் திருவிழா
குழந்தைச் செல்வம் யாவுமே
கூடிஆடும் திருவிழா
குமரிப் பெண்கள் யாவரும்
கூடிமகிழும் திருவிழா
கடைத் தெருக்கள் முழுவதும்
கலைகட்டும் திருவிழா.

உரைப் பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக

நமக்குப் பயன்தரும் பல மரங்களுள் வாழையும் ஒன்று. வாழையின் பூ, காய், கனி, தண்டு ஆகியவற்றை நாம் சமைத்து உண்கிறோம். வாழைநாரைக் கொண்டு பூக்களைத் தொடுக்கிறோம். திருமண விழாக்களிலும் வீட்டில் நடைபெறும் விழாக்களிலும் வாழையிலையில் விருந்து படைக்கின்றனர். வாழையில் செவ்வாழை, பூவன் வாழை, மலை வாழை எனப் பலவகைகள் உள்ளன.

வினாக்கள் :
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர் - 7

Question 1.
வாழையின் எப்பகுதிகள் உணவாகப் பயன்படுகின்றன?
Answer:
பூ, காய், கனி, தண்டு

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

Question 2.
வாழைநார் எதற்குப் பயன்படுகிறது?
Answer:
வாழைநார் பூத்தொடுக்கப் பயன்படுகிறது.

Question 3.
வாழையின் வகைகளுள் இரண்டை எழுதுக.
Answer:
செவ்வாழை, பூவன் வாழை

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

Question 4.
வாழையிலை – இச்சொல்லைப் பிரித்து எழுதுக.
Answer:
வாழை + இலை

Question 5.
பலவகை – இச்சொல்லுக்கு எதிர்ச்சொல் எழுதுக.
Answer:
சிலவகை.

செயல் திட்டம்

உங்கள் இருப்பிடத்திற்கு அருகிலிருந்து கீழ்க்காணும் செய்திகளைத் திரட்டுக.

Question 1.
தோட்டத்தின் பெயர்
Answer:
இயற்கைத் தோட்டம்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

Question 2.
உரிமையாளர் பெயர்.
Answer:
சிவராமன்.

Question 3.
தோட்டம் அமைந்திருக்கும் ஊர்
Answer:
பருத்திப்பட்டு

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

Question 4.
நீர்வசதி: கிணறு /அடிகுழாய்/ ஆறு/குளம்.
Answer:
கிணறு.

Question 5.
தோட்டத்தில் விளையும் காய்கறி/பழம் பெயரைக் குறிப்பிடுக.
Answer:
கீரை வகை, கத்தரிக்காய், வெண்டைக்காய், மாதுளம் பழம், சப்போட்டாப் பழம்.

Question 6.
தோட்டம் பற்றிய உனது கருத்து நன்றாக உள்ளது/ஓரளவு/ வளர்ச்சி தேவை.
Answer:
நன்றாக உள்ளது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

அறிந்து கொள்வோம்

  1. தோட்டத்தில் பூச்சி தாக்குதலைத் தடுக்க முட்டை ஓட்டுத் தூளுடன், சிறிது உப்பைக் கலந்து செடியைச் சுற்றிலும் வளையம் போட வேண்டும்.
    2. வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைகொல்லிகள் தாவரங்களின் கனிம வளங்களைக் குறைக்கின்றன.
    3. மண் அரிப்பைத் தடுக்க மரங்கள் நட்டு வளர்த்தல் இன்றியமையாதது.

கூடுதல் வினாக்கள்

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
தோட்டத்தில் இருந்த பொம்மையைக் காகம் என்ன என்று நினைத்தது?
Answer:
தோட்டத்தின் நடுவில் நின்றிருந்த சோளக்கொல்லைப் பொம்மையை காவல் காக்கும் உயிருள்ள மனிதர்’ என்று காகம் நினைத்தது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

Question 2.
காகம் பொம்மைக்கு ஏன் புதிய ஆடைகளைக் கொடுத்தது?
Answer:
பொம்மை அணிந்திருந்த ஆடைகள் கனத்த மழையால் கிழிந்திருந்தன. அதனால் காகம் பொம்மைக்குப் புதிய ஆடைகளைக் கொடுத்தது.

Question 3.
காகம், மற்ற பறவைகளை ஏன் கூவி அழைத்தது?
Answer:
தோட்டத்தில் இருந்த பொம்மை ‘உயிருள்ள மனிதர்’ என்று எண்ணி பறவைகள் அங்கு வராமலிருந்தன. அது உயிரற்ற பொருள் என்பதை உணர்ந்ததால் காகம், மற்ற பறவைகளையும் கூவி அழைத்தது.

Question 4.
அழ.வள்ளியப்பா, குழந்தைக்கவிஞர் என அழைக்கப்படுவதன் காரணம் என்ன?
Answer:
அழ.வள்ளியப்பா அவர்கள் குழந்தைகளுக்கான கதைகளையும் பாடல்களையும் மிகுதியாகப் பாடியுள்ளமையால், குழந்தைக்கவிஞர் என அழைக்கப்படுகிறார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 10 காவல்காரர்

Question 5.
‘மலரும் உள்ளம்’ நூலை எழுதியவர் யார்?
Answer:
‘மலரும் உள்ளம்’ நூலை எழுதியவர் குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பா ஆவார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 8 விடியும் வேளை Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 8 விடியும் வேளை

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை

வாங்க பேசலாம்

Question 1.
மன்னவனூர் கிராம வருணனையை உன் சொந்த நடையில் கூறுக.
Answer:
மன்னவனூர் ஓரு அழகான மலைக்கிராமம். எங்குப் பார்த்தாலும் பச்சை பட்டு உடுத்தியது போல் பச்சைப்சேலேன காட்சியளிக்கும். பஞ்சுப் பொதிகள் போன்ற மேகக்கூட்டங்கள் வளைந்து நெளிந்து சொல்லும் பாதைகள். பனைஓலை வேய்ந்த குடிசைகள், மரங்களும் செடிகளும் சூழ்ந்த இடத்தில் பசுங்கன்றென ஓடியாடிக் கொண்டிருக்கும் பிள்ளைகள் இதுப் போன்ற காட்சிகள் மன்னவனூர் கிராமத்தில் நாம் காணலாம்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை

Question 2.
உமது ஊரின் மாலை நேரக் காட்சிகளை வருணித்துக் கூறுக.
Answer:
மாலை நேரத்தில் சூரியன் தன் சிவந்த கதிர்களை வீசிக்கொண்டிருந்தான். அந்தக் கதிர்கள் குளத்து நீரில் படவே, குளத்து நீர் தகதகவெனதங்கம் போல் மிளிர்ந்தன. சூரியனை மறைக்க கருமேகங்கள் படையெடுத்து வந்தன. சூரியனும் தன் கதிர்களை மறைத்துக் கொண்டிருந்தான். பறவைகள் தங்கள் இருப்பிடம் தேடி பறந்த வண்ணமாய் இருந்தன. பறவைகளின் கூச்சல் பழைய இசைகளை எழுப்பின.

வண்டுகள் ரீங்காரமிட்டு பறந்தன. இளந்தென்றல் வீசிக்கொண்டிருந்தன. மக்களும் மாக்களும் தம் இருப்பிடங்களை நோக்கி நகர ஆரம்பித்தன. நிலவும் கண்ணில் பட தொடங்கியது. ஊரே அமைதி காத்தது. மலைகள் கரு நிறத்தில் தோன்ற ஆரம்பித்தது. மரங்கள், செடிகள், கொடிகள், பூக்கள் தென்றலின் போக்கிற்கு ஏற்ப நடனமாடின. இப்படியாக இனிய இரவும் வந்து சேர்ந்தது.

Question 3.
பாடப் பகுதியை வாய்விட்டுச் சரியான உச்சரிப்புடன் படித்துக் காட்டுக.
Answer:
மாணவர்களே தாங்களாகவே பாடப் பகுதியை வாய்விட்டுச் சரியான உச்சரிப்புடன் படித்து காட்ட வேண்டும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை

சிந்திக்கலாமா?

படத்திலுள்ள எந்தக் கிராமத்தில் நீ வாழ விரும்புகிறாய் ஏன்? உனது ஊரைச் சுத்தமாக்க என்ன செய்யலாம்? திட்டமிடுக.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை - 1
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை - 2

இவற்றில் பசுமையான கிராமத்தில் வாழ விரும்புகிறேன்.
நம் முன்னோர்கள் பசுமையான கிராமத்தில் வாழ்ந்ததனால், இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்தனர். பருவமாற்றங்களையும் முன்கூட்டியே அறிந்து கொண்டு எச்சரிக்கையுடன் செயல்பட்டனர். ஆரோக்கியமாகவும் வாழ்ந்தனர். நீண்ட ஆயுளோடும் வாழ்ந்தனர். சுத்தமான காற்றையே சுவாசித்தனர். இயற்கையை மிகவும் நேசித்தனர். இயற்கையும் அவர்களை நேசித்தது. கூட்டு வாழ்வு வாழ்ந்தனர். இல்லங்களிலும், ஊர்களிலும் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவின. சத்தான உணவுகளையே உண்டனர். இயற்கை உரங்களையே பயன்படுத்தினர். மரங்களையும் செடி கொடிகளையும் அதிகம் வளர்த்தனர். இத்தகைய கிராமத்தில் வாழவே நான் விரும்புகிறேன்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை

எனது ஊரைச் சுத்தமாக்க மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வை முதலில் கொடுக்க வேண்டும். சுத்தத்தின் மேன்மையை உணர்த்த வேண்டும். சுத்தம் உள்ள இடத்தில் தான் சுகம் இருக்கும் என்பதைக் கடைப்பிடிக்க வழி வகை செய்ய வேண்டும். தெருக்கள் தோறும் குப்பைத்தொட்டிகளை வைக்க வேண்டும். அதிலேயே குப்பைகளைப் போட அறிவுறுத்த வேண்டும். மக்களை ஊரை நேசிக்கச்செய்தாலே ஊர் சுத்தமாகி விடும்.

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான பலூன்களை எடுத்துப் பொருத்துக.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை - 3
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை - 4

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
சாலையெங்கும் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………..
அ) சாலை + யெங்கும்
ஆ) சாலை + எங்கும்
இ) சால + எங்கும்
ஈ) சால + யெங்கும்
Answer:
ஆ) சாலை + எங்கும்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை

Question 2.
சுண்டியிழுக்கும் இச்சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ………………………..
அ) சுண்டி + யிழுக்கும்
ஆ) சுண் + டியிழுக்கும்
இ) சுண்டு + இழுக்கும்
ஈ) சுண்டி + இழுக்கும்
Answer:
ஈ) சுண்டி + இழுக்கும்

Question 3.
ஓடி + ஆடி என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………………
அ) ஓடிஆடி
ஆ) ஓடியோடி
இ) ஓடியாடி
ஈ) ஓடியாடி
Answer:
இ) ஓடியாடி

Question 4.
காலை + பொழுது என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………………
அ) காலை பொழுது
ஆ) கால்பொழுது
இ) காலைப்பொழுது
ஈ) காலப்பொழுது
Answer:
இ) காலைப்பொழுது

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை

Question 5.
வரகு + அரிசி என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………..
அ) வரகரிசி
ஆ) வரகு அரிசி
இ) வரக்கரிசி
ஈ) வரகுகரிசி
Answer:
அ) வரகரிசி

Question 6.
உணவு + அளிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………………
அ) உணவு அளிக்க
ஆ) உணவளிக்க
இ) உணவுவளிக்க
ஈ) உணவ்வளிக்க
Answer:
ஆ) உணவளிக்க

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை

வினாக்களுக்கு விடையளி

Question 1.
அழகிய மலைக் கிராமத்தின் பெயர் என்ன?
Answer:
அழகிய மலைக்கிராமத்தின் பெயர் மன்னவனூர் ஆகும்.

Question 2.
கிராமத்தில் உனக்குப் பிடித்த இயற்கைக் காட்சிகளை எழுதுக.
Answer:
மழை பெய்து ஓய்ந்திருந்தது, சாலையெங்கும் தண்ணீர் நிறைந்திருந்தது. மரங்கள் நனைந்து கிளைகள் இலைகள் முழுக்க நீர்த்திவலைகள் தெரிந்தன. பச்சைப்பசேல் என்ற வயல்வெளிகள்.

Question 3.
பிள்ளைகள் காலை உணவாக என்ன உண்டார்கள்?
Answer:
பிள்ளைகள் காலை உணவாக, வரகரிசிச் சோறும் பருப்புக் கடையலும் பிரண்டைத் துவையலும் சாப்பிட்டனர்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை

பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள வருணனைச் சொற்களை எடுத்து எழுதுக

எ.கா:
பச்சைப்பசேல் என்ற வயல்வெளி
சிலுசிலுப்பான காற்று கூடவே எழுந்தது.
வாய்க்காலும் வரப்பும் நிறைந்த வயல்
கருத்த மண்சட்டியில் வெள்ளை வெளேரென வரகரிசிக்சோறு கொதித்துக் கொண்டிருந்தது.

உரைப்பகுதியை படித்து வினாக்களுக்கு விடையளிக்க

சிறு தானிய உணவுகளே நம் உடல் நலத்திற்கு ஏற்றவை. குதிரை வாலி அரிசி, தினை, வரகரிசி, கேழ்வரகு, கம்பு, சோளம், பனிவரகு அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, போன்றவை சிறு தானியங்கள் ஆகும். இந்தச் சிறு தானியங்களைக் கொண்டு பல உணவு வகைகளை மண் பானைகளில் சமைத்துப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. நாம் உண்ட உணவு முழுமையாகச் செரித்தபிறகுதான் அடுத்த வேளை உணவை உண்ண வேண்டும். இதைத் தான் நம் முன்னோர் “பசித்துப் புசி” என்றனர். இவற்றைத் தவிர்த்துவிட்டுத் துரித உணவுகளைச் சாப்பிடத் தொடங்கியதே பல்வேறு நோய்கள் ஏற்படக் காரணமாகிறது. சிறு தானிய உணவுகளை உண்போம்!
வளமான வாழ்வைப் பெறுவோம்!
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை - 5

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை

Question 1.
எவ்வகை உணவு முறை நமக்கு ஏற்புடையது?
Answer:
சிறுதானிய உணவுகளே நமக்கு ஏற்புடையது.

Question 2.
சிறு தானியங்களுள் எவையேனும் நான்கு எழுதுக.
Answer:
தினை, வரகரசி, கேழ்வரகு, கம்பு.

Question 3.
துரித உணவு வகைகளை உண்ணக் கூடாது, ஏன்?
Answer:
துரித உணவு வகைகள் பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைவதால் அவைகளை உண்ணக் கூடாது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக

Question 1.
அறிவுமதி அரைத்த துவையல் …………….. துவையலாகும்.
அ) கடலை
ஆ) பிரண்டை
இ) தேங்காய்
ஈ) தக்காளி
Answer:
ஆ) பிரண்டை

Question 2.
கொடியடுப்பில் பருப்புடன் ……………….. வெந்து கொண்டிருந்தது.
அ) வெங்காயம்
ஆ) தக்காளி
இ) பூண்டு
ஈ) காயம்
Answer:
இ) பூண்டு

Question 3.
பிள்ளைகள் ……………………..செல்ல தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டனர்.
அ) கோவிலுக்கு
ஆ) பள்ளிக்கு
இ) வீட்டிற்கு
ஈ) வயலுக்கு
Answer:
ஆ) பள்ளிக்கு

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
அம்மாவின் பொட்டு எதைப் போல் இருந்தது?
Answer:
அம்மாவின் நெற்றியில் சிவப்பாக குங்குமப் பொட்டு வட்ட நிலா போல இருந்தது.

Question 2.
பிள்ளைகள் எதில் அமர்ந்து உணவு உண்டனர்?
Answer:
பிள்ளைகள், பசுஞ்சாணம் மெழுகிய தரையில் மனைப் பலகையில் அமர்ந்து உணவு உண்ட னர்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை

Question 3.
அறிவுமதி எப்பாத்திரத்தில் சமைத்தாள்?
Answer:
அறிவுமதி விறகு அடுப்பில் கருத்த மண்சட்டியில் சமைத்தாள்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 7 வெற்றி வேற்கை Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 7 வெற்றி வேற்கை

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை

வாங்க பேசலாம்

Question 1.
பாடலின் பொருளை உமது சொந்த நடையில் கூறுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே பாடலின் பொருளை தன் சொந்த நடையில் கூற வேண்டும்.

Question 2.
உனக்கு உனது நண்பன் செய்த சிறிய உதவி, அந்த நேரத்தில் பெரியதாக இருந்த அனுபவத்தைப் பற்றிப் பேசு.
Answer:
ஒருமுறை நான் பேருந்து நிறுத்தத்தில் ஒரு முதியவரைப் பார்த்தேன். அவர் வெகு நேரமாய் ஒவ்வொரு நபரிடமும் ஏதோ கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு எந்தப் பதிலும் யாரும் சரியாக தராததைப் பார்த்து, அவர் அருகில் சென்று காரணம் கேட்டேன். அவர் அருகில் உள்ள ஊருக்குச் செல்ல வேண்டுமாம். பையில் வைத்திருந்த காசு எங்கேயோ விழுந்து விட்டதாம்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை

அதனால் ஊருக்குச் செல்லக் காசு கேட்டுக்கொண்டிருப்பதாகக் கூறினார். நான் எவ்வளவு தேவை என்று கேட்டபோது, ரூபாய் 15 என்று கூறினார் வருத்தத்துடன். நான் வேகமாக வீட்டிற்குச் சென்று என் அம்மாவிடம் செய்தியைச் சொல்லி 15 ரூபாய் வாங்கி வந்து அந்த முதியவரிடம் கொடுத்தேன்.

அவர் கண் கலங்கியபடியே வாங்கிக் கொண்டு, எனக்கு நன்றி கூறி வாழ்த்தியும் சென்றார். நான் செய்தது சிறிய உதவியாக இருந்தாலும், அது அவருக்குப் பெரியதாக தோன்றியது.

சிந்திக்கலாமா?

சிறு சிறு உதவிகளை பிறருக்குச் செய்வது பற்றி உனது கருத்து என்ன? வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:
கமலன் : ராமு! சிறு சிறு உதவிகளைப் பிறருக்குச் செய்வது பற்றி நீ என்ன நினைக்கிறாய்?
மாறன் : கட்டாயம் நாம் அவற்றை நாம் செய்ய வேண்டும். நீ என்ன நினைக்கிறாய்?
கமலன் : செய்ய வேண்டும் என்று தான் நினைக்கிறேன்.
மாறன் : சரி, அப்படி நீ செய்யும் போது உன் மனநிலை எப்படியிருக்கும்?
கமலன் : அப்படி உதவி செய்யும் போது மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்கும். ஏதோ பெரிய சாதனை புரிந்தது போல மனதில் தோன்றும். உனக்கு எப்படியிருக்கும்?

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை

மாறன் : ராமு எனக்கும் அதே மனநிலைதான் இருக்கும். நமக்குள் பல ஒற்றுமை இருக்கிறதே!
கமலன் : நமக்கு மட்டுமல்ல, நம்மைப்போல உதவி செய்கின்ற அனைவருக்குள்ளும் இதே ஒற்றுமையிருக்கும். இப்படி உதவி செய்கிறவர்களால்தான் இன்றளவும் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
மாறன் : ஆமாம், ராஜா! சரியாகச் சொன்னாய். மனிதர்கள் மனிதருக்கு உதவி செய்வதுதான் மானுடத்தின் மாண்பு. ஆனால் இதைப் புரிந்து எல்லோரும் நடந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்.

கமலன் : ஆமாம்பா சரியாக சொல்கிறாய். நாம் செய்கிற சிறிய உதவிகூட பலருக்குப் பேருதவியாக அமைந்து விடுகிறது.
மாறன் : நாம் இருவரும் இணைந்து செயல்பட நான் விரும்புகிறேன். நீ என்ன நினைக்கிறாய்?
கமலன் : நல்லது செய்ய இணைவது தப்பேயில்லை நண்பா- இணைவோம் – செயல்படுவோம் – நன்றி நண்பா!

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
தெள்ளிய – இச்சொல்லின் பொருள்
அ) மெல்லி
ஆ) இளகிய
இ) முதிர்ந்த
ஈ) அழகிய
Answer:
இ) முதிர்ந்த

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை

Question 2.
ஆல் இச்சொல்லின் பொருள் ……
அ) வேல மரம்
ஆ) ஆல மரம்
இ) அரச மரம்
ஈ) வேப்ப மரம்
Answer:
ஆ) ஆல மரம்

Question 3.
கயம் இச்சொல்லின் பொருள் ….
அ) நீர் நிலை
ஆ) பயம்
இ) வானிலை
ஈ) பருவநிலை
Answer:
அ) நீர்நிலை

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை

Question 4.
புரவி இச்சொல்லின் பொருள் ……………
அ) யானை
ஆ) பூனை
இ) ஆள்
ஈ) குதிரை
Answer:
ஈ) குதிரை

Question 5.
பெரும்படை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) பெருமை + படை
ஆ) பெரும் + படை
இ) பெரு + படை
ஈ) பெரிய + படை
Answer:
அ) பெருமை + படை

Question 6.
நிழல் + ஆகும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………
அ) நிழல் ஆகும்
ஆ) நிழலாகும்
இ) நிழல்லாகும்
ஈ) நிழலாஆகும்
Answer:
ஆ) நிழலாகும்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை

வினாக்களுக்கு விடையளி

Question 1.
ஆலமரத்தின் விதை எவ்வாறு இருக்கும் என்று அதிவீரராம பாண்டியர் குறிப்பிடுகிறார்?
Answer:
ஆலமரத்தின் விதை தெரிந்த நீர் கொண்ட குளத்தின் சிறிய மீனின் முட்டையை விடவும் சிறியதாக இருக்கும் என்று அதிவீரராம பாண்டியர் குறிப்பிடுகிறார்.

Question 2.
ஆலமரத்தின் நிழலில் தங்கும் படைகள் யாவை?
Answer:
ஆலமரத்தின் நிழலில் யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை போன்ற படைகள் தங்கும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை

Question 3.
இப்பாடலின் பொருள் எதனுடன் ஒப்பிட்டுக் கூறப்படுகிறது?
Answer:
இப்பாடலின் பொருள் பிறருக்குச் செய்யும் உதவியுடன் ஒப்பிட்டுக் கூறப்படுகிறது.

பொருத்தமான நிறுத்தக்குறி இடுக

Question 1.
ஆகா என்ன சுகம் தெரியுமா
Answer:
ஆகா! என்ன சுகம் தெரியுமா!

Question 2.
என்னைக் கட்டிப் போடுகிறார்கள்
Answer:
என்னைக் கட்டிப் போடுகிறார்கள்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை

Question 3.
ஆகா இது என்ன பிரமாதம்
Answer:
ஆகா! இது என்ன பிரமாதம்!

Question 4.
நான் என்ன வேலை செய்ய வேண்டும்
Answer:
நான் என்ன வேலை செய்ய வேண்டும்?

Question 5.
காய்கறிக்கடையில் வேண்டிய தக்காளி கத்தாரி புடலை ஆகியவற்றை வாங்கி வந்தேன்.
Answer:
காய்கறிக்கடையில் வேண்டிய தக்காளி, கத்தரி, புடலை ஆகியவற்றை வாங்கி வந்தேன்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை

மொழியோடு விளையாடு

சொல் ஒன்று, பொருள் இரண்டு – கண்டுபிடி.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை - 1
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை - 2

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை

கலையும், கைவண்ண மும்
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை - 3

இணைந்து செய்வோம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை - 4
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை - 5

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை

இணைப்புச் சொற்களை அறிவோமா?

இரண்டு தொடர்களை இணைக்கப் பயன்படும் சொற்கள் இணைப்புச் சொற்கள் ஆகும். சில இணைப்புச் சொற்களையும், அவற்றைப் பயன்படுத்தும் முறைகளையும் அறிவோம்.

அதனால், ஆகவே, ஆனால், எனினும், ஆகையால், எனவே போன்றவை.

1. பருவ மழை பெய்தது …………………… ஏரி, குளங்கள் நிரம்பின.
2. காற்று பலமாக வீசியது ……………………  மரங்கள் வேரோடு சாய்ந்தன.
3. அப்பா விரைவாக வந்துவிடுகிறேன் என்றார் ஆனால் வரவில்லை.
4. பூக்கள் அழகாகப் பூத்திருந்தன ……………………  பறிக்க மனமில்லை .
5. நான் தாய் நாட்டிலேயே பணிபுரிய விரும்புகிறேன்  ……………………  வெளிநாடு செல்ல மாட்டேன்.
6. தினமும் காலையில் எழுந்து நன்றாகப் படித்தேன்  …………………… நான் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றேன்.
Answer:
1. பருவ மழை பெய்தது அதனால் ஏரி, குளங்கள் நிரம்பின.
2. காற்று பலமாக வீசியது ஆகவே மரங்கள் வேரோடு சாய்ந்தன.
3. அப்பா விரைவாக வந்துவிடுகிறேன் என்றார் ஆனால் வரவில்லை.
4. பூக்கள் அழகாகப் பூத்திருந்தன எனினும் பறிக்க மனமில்லை .
5. நான் தாய் நாட்டிலேயே பணிபுரிய விரும்புகிறேன் ஆகையால் வெளிநாடு செல்ல மாட்டேன்.
6. தினமும் காலையில் எழுந்து நன்றாகப் படித்தேன் எனவே நான் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றேன்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை

பயிற்சி

ஆகவே, எனவே, ஆகையால், ஆனால் ஆகிய இணைப்புச் சொற்களைப் பயன்படுத்திச் சொற்றொடர்களை உருவாக்குக.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை - 6
Answer:
1. அரசுத் தேர்வுகள் கடினமாக இருக்கும் ஆகவே விடாமுயற்சியுடன் படித்து வெற்றி பெற வேண்டும்.
2. தீண்டாமை தீயைப் போன்றது எனவே அதனை உலகைவிட்டே ஓட்டுவது நம் கடமை.
3. நான் நல்லவனாக வாழ விரும்புகிறேன், ஆகையால் தீயோரிடம் நட்பு பாராட்ட மாட்டேன்.
4. காந்தியடிகள் லண்டனில் படித்தார் ஆனால் ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்து போகவில்லை

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக

Question 1.
சின்ன இச்சொல்லின் பொருள்
அ) தட்டை
ஆ) கட்டை
இ) முட்டை
ஈ) காய்
Answer:
இ) முட்டை

Question 2.
வெற்றி வேற்கையின் ஆசிரியர்
அ) கபிலர்
ஆ) அதிவீரராம பாண்டியன்
இ) ஔவையார்
ஈ) பாரதியார்
Answer:
ஆ) அதிவீரராம பாண்டியன்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 7 வெற்றி வேற்கை

Question 3.
அண்ணல் இச்சொல்லின் பொருள்
அ) கருணையுடையவர்
ஆ) பாசமுடையவர்
இ) அன்புடையவர்
ஈ) கோபமுடையவர்
Answer:
அ) கருணையுடையவர்

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
வெற்றி வேற்கை நூலின் ஆசிரியர் யார்? இந்நூலின் பெயர் என்ன?
Answer:
வெற்றி வேற்கை நூலின் ஆசிரியர் அதிவீரராமபாண்டியர் இந்நூலின் வேறு பெயர் நறுந்தொகை.