Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 6 முயல் அரசன் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 6 முயல் அரசன்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

Question 1.
இக்கதையை உனது சொந்த நடையில் கூறுக.
Answer:
ஒரு காட்டில் நிறைய மிருகங்கள் வாழ்ந்து கொண்டிருந்தன. அந்தக் காட்டிற்கு ஒரு புலி அரசனாக இருந்தது. அந்தப்புலி எல்லா மிருகங்களையும் அடித்துக் கொன்று சாப்பிட்டு வந்தது. ஒரு நாள், ஒரு விவசாயியின் தோட்டத்தில் விளைந்திருந்த கனிகளையும் காய்களையும் கிழங்குகளையும் வயிறாரத் தின்றது ஒரு முயல். ஆனாலும் அந்த முயலுக்கு மனதில் ஒரு கவலை இருந்தது.

புலிக்குக் கிடைக்கும் மரியாதை தனக்கும் கிடைக்க வேண்டும் என்றும் புலியை விட தானே சிறந்தவன் என்றும் புலிக்கும் காட்டில் உள்ள விலங்குகளுக்கும் நிரூபிக்க வேண்டுமென முயலுக்கு ஆசை தோன்றியது. உடனே முயல் சிந்தித்து செயல்படத் தொடங்கியது.

அதற்காக ஒரு திட்டம் தீட்டியது. புலி வரும் பாதையில் கால்மேல் கால்போட்டு அமர்ந்து இருந்தது. அந்த வழியாக வந்த புலி முயலைப் பார்த்து, ”உனக்கு எவ்வளவு தைரியம்……. இவ்வளவு காலம் என்னைக் கண்டாலே ஓட்டம் எடுப்பாய். இப்பொழுது கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து இருக்கிறாயா உன்னை … என்று புலி கூறியது. அதனைக் கேட்ட முயல், “ஓடினேனா…. நானா…. உன்னைக் கண்டா…..? உனக்குச் செய்தியே தெரியாதா?

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

உனக்கு எங்கே தெரியப்போகிறது, இங்குக்கூட்டம் நடந்தபோது நீதான் அப்பாவி விலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருந்தாயே…. அந்தக் கூட்டத்தில், நீ இந்தக் காட்டின் அரசனாக இனிமேலும் நீடிக்கக்கூடாது என்று எல்லா விலங்குகளும் ஒரே மனதாகத் தீர்மானம் நிறைவேற்றின்” என்றது.

முயல் சொன்னதைக் கேட்ட புலி, “நான் அரசனாக நீடிக்கக் கூடாதா? அப்படியானால் வேறு யார் அரசனாக இருக்கப் போகிறது என்று கேட்டது. அதற்கு முயல், “என்னைத்தான் எல்லா விலங்குகளும் புதிய அரசனாகத் தேர்ந்தெடுத்தன” என்று கூறியது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

புலி முயலிடம், “நீ அரசனா! இப்போதே உன்னைக் கொன்று சாப்பிடுகிறேன் பார்” என்று முயலின் அருகில் சென்றது. முயல், நீ நம்பவில்லையென்றால் என்னை உன் முதுகில் ஏற்றிக் கொண்டு போ உனக்கு நிரூபிக்கிறேன்” என்றது. புலியும் அதற்கு
ஒப்புக் கொண்டு முயலைத் தன் முதுகில் ஏற்றிக்கொண்டு காட்டிற்குள் வலம் வந்தது.

இவைகளைக் கண்ட எல்லா மிருகங்களும் ஆச்சரியத்துடனும் பயத்துடனும் பார்த்தன. இதனைக் கண்ட புலி , ”ஒரு வேளை முயல் சொன்னது சரியாகத்தான் இருக்குமோ என்று எண்ணியது. பிறகு முயலிடம், “அரசே நான் உங்களைத் தவறாகப் பேசியிருந்தால் மன்னித்து விட்டு விடுங்கள்” என்று மன்னிப்புக் கேட்டது புலி. அதற்கு முயல், “இப்போது சொல் இந்தக் காட்டிற்கு அரசன் யார்? என்று புலியிடம் கேட்டது. புலியும் நீங்கள் தான் என்றது.

பிறகு முயல் புலியைப் பார்த்து, உன்னை மன்னித்து விடுகிறேன் நீ இந்தக் காட்டிலேயே இருக்கக் கூடாது. எங்காவது ஓடிப்போய்விடு” என்று கட்டளையிட்டது. அதனைக் கேட்ட புலியும் அக்காட்டை விட்டு ஓடிச் சென்றது. பிறகு முயல் மகிழ்ச்சியாக அந்தக்காட்டைச் சுற்றி வந்தது. இப்போதெல்லாமல் முயல் வயிறாரத் தின்றுவிட்டு நிம்மதியாக, சுகமாகப் பகல் வேளைகளில் ஒரு குட்டித் துக்கம் போட்டுக் கொண்டிருந்தது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

Question 2.
காட்டில் அரசனாக நீ எந்த விலங்கை அமர்த்துவாய்? காரணம் என்ன? \
Answer:
காட்டின் அரசனாக நான் யானையை அமர்த்துவேன். ஏனென்றால், காட்டிலுள்ள விலங்குகளில் மிகவும் பலம் வாய்ந்த விலங்கு யானை. ஆனால், யானை தன் வலிமையால் எந்த விலங்குகளையும் துன்புறுத்துவது இல்லை. மிகவும் பாசமான விலங்கு யானை. மிகவும் சாதுவான நிலையிலேயே இருக்கும். விலங்குகளில் அறிவுமிக்கதும் யானையேயாகும். கூட்டம் கூட்டமாக வாழும் பண்பினை உடையது. குறிப்பு உணர்ந்து செயல்படும். ஆகவே யானையையே அரசனாக அமர்த்துவேன்.

Question 3.
புலி எதையும் ஆராயாமல் முயலின் பேச்சை உண்மை என ஏற்றுக் கொண்டது சரியானதா? கலந்துரையாடுக.
Answer:
விமல் : புலி எதையும் ஆராயாமல் முயலின் பேச்சை உண்மை என ஏற்றுக் கொண்டது சரியானதா?
சவிதா : புலி, முயலின் பேச்சை உண்மை என ஏற்றுக்கொண்டது தவறுதான்.
விமல் : தவறு என்றால் ஏன் அப்படிச் செய்தது?
சவிதா : சந்தர்ப்பமும் சூழ்நிலையும் முயலுக்குச் சாதகமாக அமைந்ததே புலி
நம்பியதற்குக் காரணம்.
விமல் : எப்படி சூழ்நிலை சாதகமாக அமைந்தது என்று கூறுகிறாய்?
சவிதா : முயல், புலியைப் பார்த்து ஓடும் விலங்கு. அப்படியிருக்கும் போது, முயல் புலி
வரும் வழியில் கால்மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தது முதல் காரணம்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

விமல் : அப்படியென்றால் முயல் செய்தது சரி என்கிறாயா?
சவிதா : சரியென்று சொல்லவில்லை. முயல் செய்த காரியத்தால் அனைத்து விலங்குகளும் புலியிடம் இருந்து காப்பாற்றப்பட்டனவே! அதனால் முயல் செய்தது நல்லதுதானே! என்றுதான் சொல்கிறேன். இருந்தாலும் புலி முயல்
சொன்னதை ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும்.
விமல் : சரி உன்னுடன் உரையாடியது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி! சவிதா : உனக்கும் நன்றி!

சிந்திக்கலாமா?

தவறு செய்தவர்களை என்ன செய்யலாம்? திருத்தலாமா? அப்படியே விட்டுவிடலாமா?
Answer:
தவறு செய்வது மனித இயல்பு. தவறே செய்யாத மனிதர்கள் இல்லை. ஆனால் தவறு, சிறிய தவறு, பெரிய தவறு என்று இருவகைகளில் அமைகிறது. சிறிய தவறு செய்தால் அவர்களை திருத்த முயற்சி செய்யலாம். ஆனால், பெரிய தவறு செய்தவர்களுக்குக் கட்டாயம் தண்டனை கொடுத்தாக வேண்டும். அப்படியே விட்டுவிடக்கூடாது. இல்லையென்றால் மனித சமுதாயத்தைக் காப்பாற்ற முடியாமல் போய்விடும். தண்டனை கூட திருந்துவதற்கு வாய்ப்பாக அமையும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
பல்லாண்டு இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………
அ) பல் + லாண்டு
ஆ) பல் + ஆண்டு
இ) பல + ஆண்டு
ஈ) பல + யாண்டு
Answer:
இ) பல + ஆண்டு

Question 2.
செயலாக்கம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………
அ) செய + லாக்கம்
ஆ) செயல் + ஆக்கம்
இ) செயலா + க்கம்
ஈ) செயல் + லாக்கம்
Answer:
ஆ) செயல் + ஆக்கம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

Question 3.
இப்போது + எல்லாம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்………………………
அ) இப்போதெல்லாம்
ஆ) இப்போது எல்லாம்
இ) இப்போல்லாம்
ஈ) இப்போ யெல்லாம்
Answer:
அ) இப்போதெல்லாம்

Question 4.
பேசி +இருந்தால் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………………
அ) பேசியிருந்தால்
ஆ) பேசியிரு
இ) பேசி இருந்தால்
ஈ) பேசவிருந்தால்
Answer:
அ) பேசியிருந்தால்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

Question 5.
வந்து + இருந்தது என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்………………………
அ) வந்து இருந்தது
ஆ) வந்திஇருந்தது
இ) வந்திருந்தது
ஈ) வந்தியிருந்தது
Answer:
இ) வந்திருந்தது

வினாக்களுக்கு விடையளி

Question 1.
முயலின் கவலைக்குக் காரணம் என்ன?
Answer:
தன் மூதாதையரைத் தன் பசிக்கு இரையாக்கிய புலி என்றாவது ஒரு நாள் தன்னையும் தின்று விடுமோ என்பதுதான் முயலின் கவலைக்குக் காரணம் ஆகும்.

Question 2.
விலங்குகளின் கூட்டத்தில் என்ன தீர்மானம் எடுக்கப்பட்டதாக முயல் கூறியது?
Answer:
முயல் புலியிடம், “நீ இந்தக் காட்டின் அரசனாக இனிமேலும் நீடிக்கக் கூடாது என்று எல்லா விலங்குகளும் ஒரே மனதாகத் தீர்மானம் நிறைவேற்றின” என்று கூறியது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

Question 3.
முயல், தான் அரசன் என்பதை நிரூபிக்க புலியை என்ன செய்யக் கூறியது?
Answer:
முயல், தான் அரசன் என்பதை நிரூபிக்க புலியிடம், தன்னை முதுகில் ஏற்றிக் கொண்டு போகச் சொன்னது.

Question 4.
புலியை மன்னித்து விட்டுவிட முயல் கூறிய கட்டுப்பாடு என்ன?
Answer:
புலியை மன்னித்து விட்டுவிட முயல், “உன்னை மன்னித்து விடுகிறேன். நீ இந்தக் காட்டிலேயே இருக்கக்கூடாது. எங்காவது ஓடிப்போய்விடு” என்ற கட்டுபாட்டினை விதித்தது.

Question 5.
விலங்குகள் உண்மையில் எதைக் கண்டு அஞ்சின?
Answer:
விலங்குகள் உண்மையில் புலியைக் கண்டு அஞ்சின

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

எதிர்ச்சொல்லால் சொற்றொடரை நிறைவு செய்க.

1. பருவ மழை பெய்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவர், பெய்யாவிட்டால் ……………………. அடைவர்.
2. எப்பொழுதும் உண்மை பேச வேண்டும், …………………….  பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
3. தோல்வி என்பது முடிவு அல்ல வெற்றியின் …………………….
4. கணினி மூலம் கல்வி கற்பது புதிய முறை. கரும்பலகை மூலம் கல்வி கற்றது …………………….  முறை.
5. பிறருக்குக் கொடுத்து உதவுவது உயர்ந்த குணம். பிறர் பொருளைத் திருடுவது ……………………. குணம்.
6. மருத்துவமனைகளில் சத்தமாகப் பேசாமல் …………………….  பேச வேண்டும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன் - 1
Answer:
1. பருவ மழை பெய்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவர், பெய்யாவிட்டால் கவலை அடைவர்.
2. எப்பொழுதும் உண்மை பேச வேண்டும், பொய் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
3. தோல்வி என்பது முடிவு அல்ல வெற்றியின் தொடக்கம்.
4. கணினி மூலம் கல்வி கற்பது புதிய முறை. கரும்பலகை மூலம் கல்வி கற்றது பழைய முறை.
5. பிறருக்குக் கொடுத்து உதவுவது உயர்ந்த குணம். பிறர் பொருளைத் திருடுவது தாழ்ந்த குணம்.
6. மருத்துவமனைகளில் சத்தமாகப் பேசாமல் மெதுவாக பேச வேண்டும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன் - 2
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன் - 3

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

சக்கரம் காட்டும் ஈரெழுத்துச் சொற்கள் என்ன என்பதை கீழ்க்காணும் குறிப்புகளைக் கொண்டு கண்டுபிடிக்க.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன் - 4
1. உலகம் என்பதன் வேறு சொல் – …………………..
2. திருவிழா என்றாலே இது இருக்கும் – ………………….
3. மக்கள் சேர்ந்து வாழுமிடம் – ………………….
4. இது இல்லாமல் உயிர்கள் இல்லை – ………………….
5. நீர் விட்டுத் தயிரைக் கடைந்தால் – ………………….
6. மரம், செடி, கொடி மண்ணில் ஊன்றி நிற்க உதவுவது – ………………….
7. மன்னர்கள் தம் நாட்டின் எல்லையை விரிவுப்படுத்த அண்டை நாடுகளோடு தொடுப்பது – ………………….
8. பூத்தொடுக்க உதவுவது -………………….
Answer:
1. உலகம் என்பதன் வேறு சொல் – பார்
2. திருவிழா என்றாலே இது இருக்கும் – தேர்
3. மக்கள் சேர்ந்து வாழுமிடம் – ஊர்
4. இது இல்லாமல் உயிர்கள் இல்லை – நீர்
5. நீர் விட்டுத் தயிரைக் கடைந்தால் – மோர்
6. மரம், செடி, கொடி மண்ணில் ஊன்றி நிற்க உதவுவது – வேர்
7. மன்னர்கள் தம் நாட்டின் எல்லையை விரிவுப்படுத்த அண்டை நாடுகளோடு தொடுப்பது – போர்
8. பூத்தொடுக்க உதவுவது – நார்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

எது முன்னே ? எது பின்னே ? அகர வரிசைப்படுத்துக.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன் - 5
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன் - 6

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

மொழியோடு விளையாடு

காலியிடங்களைக் கூடையில் உள்ள சொற்களைக் கொண்டு நிரப்புக.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன் - 7
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன் - 8\

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

செயல் திட்டம்

நூலகத்திற்குச் சென்று சிறுவர் இதழ்களில் உள்ள படக்கதைகளைப் படித்து வருக, அவற்றுள் மூன்று கதைகளை உனது குறிப்பேட்டில் எழுதிவந்து வகுப்பறையில் கூறுக.
Answer:
கடைசி ஆசை :
இரு அரசர்களுக்கு இடையே பயங்கரப் போர் நடக்கின்றது. இதில் தோல்வியுற்ற மன்னன் வெற்றி பெற்ற மன்னனால் கைது செய்யப்படுகின்றான். தோல்வியுற்ற மன்னன் அரசவையில் நிறுத்தப்படுகின்றான். வெற்றி பெற்ற மன்னர் “உனக்குத் தூக்கு தண்டனை உன் கடைசி ஆசை என்ன?” என்று கேட்கின்றார். அதற்கு தோற்ற மன்னர் கண்ணாடிப் பாத்திரத்தில் பருக நீர் வேண்டும் என்றார். அதன் படி மன்னர் ஆணையிட, பணியாள் தண்ணீரைக் கொடுத்தார்.

அதைக் குடிக்கமால் தோற்ற மன்னன் தயங்குகின்றான். மேலும், “இதைக் குடிப்பதற்குள் உன் வீரர்கள் கொன்று விடுவார்களோ என்று பயமாக உள்ளது” என்றார். இந்த நீரைக் குடிக்கும் வரை உன்னைக் கொல்ல மாட்டோம் என்றனர். கண்ணாடிப் பாத்திரத்தை உடைத்து, அந்தத் தண்ணீரை எடுத்துத் தாருங்கள் குடிக்கின்றேன் என்றார். மன்னர் கல்வியால் வந்த நுண்ணறிவு கண்டு அம்மன்னனை விடுதலை செய்து மீண்டும் நாட்டைக் கொடுத்தான்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

ஏமாற்றம் அடைந்த சிங்கம் :
காட்டில் சிங்கம் ஒன்று உணவு தேடி அலைந்தது எந்த விலங்கும் அதன் கண்களில் படவில்லை . பசியால் வாடிய அதன் கண்களுக்குப் புதர் அருகே இந்த சிறு முயல் ஒன்று தெரிந்தது. அந்த முயலைப் பிடித்து அது இந்தக் குட்டி முயல் என் பசியைப் போக்குமா? என்று நினைத்தது , அப்பொழுது சிறிது தொலைவில் மான் ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அதன் கண்களில் பட்டது. கொழுத்த மான் கிடைத்தது என்ற மகிழ்ச்சியில் முயலை விட்டு விட்டு மானிடம் ஓடியது அது.

சிங்கத்தைப் பார்த்து விட்ட மான் அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடத்தொடங்கியது. எவ்வளவோ முயன்றும் சிங்கத்தால் அதைப் பிடிக்க முடியவில்லை. சிங்கத்தின் பார்வையில் இருந்தே மான் மறைந்தது.
ஏமாற்றம் அடைந்த சிங்கம் அந்தக் குட்டி முயலையாவது உண்போம் என்று புதர் அருகே வந்தது. அங்கே முயலைக் காணவில்லை முயலும் தப்பித்து விட்டதை அறிந்து வருந்தியது அது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

பேராசைக்காரன் :
ஓர் ஊரில் அகிலன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவனது நண்பன் முகிலன். அகிலன் எதற்கெடுத்தாலும் பேராசை கொள்பவன். ஆனால், முகிலனோ பேராசை கொள்ளாதவன். இருவரும் ஒருநாள் காட்டிற்கு விறகு எடுக்கச் செல்கின்றனர். அங்கிருந்த செடி கொடி அழகை இரசித்துக் கொண்டு காய்ந்தக் குச்சிகளை மட்டும் முகிலன் எடுத்தான்.

காய்ந்த குச்சிகளை மட்டும் எடுக்காமல், பல மரக்கிளையை வெட்டி வீழ்த்தினான் அகிலன். ஏன் இப்படிப் பச்சை மரத்தை வெட்டுகின்றாய் என்று முகிலன் கேட்டான். அதற்கு அகிலன் அடுத்த முறை இந்த ஒடித்த பச்சைக் குச்சிகள் காய்ந்து எனக்கு நிறைய விறகுகள் கிடைக்கும் என்றான். திடீரென காட்டில் பயங்கர சத்தம் கேட்டது. இருவரும் சென்று பார்த்தனர்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

மயில் ஒன்று புதருக்குள் முள் வேலியில் சிக்கிக் கத்திக் கொண்டு இருந்தது. முகிலன் அதனைக் காப்பாற்றுகின்றான். இருவருக்கும் அந்த மயில் மரக்கன்றுகளைப் பரிசளித்தது. இது தங்கப்பூ தரும் என்று சொல்லிச் சென்றது. காட்டிற்குச் சென்று வந்த இருவரும் அதை வளர்க்கின்றனர். இருவரின் மரமும் வளர்ந்தது. ஆனால் முகிலன் மரம் பூக்கவில்லை .

அதற்காக அவன் கவலைப்படவும் இல்லை . அகிலன் ஒரு சில பூக்கள் பூத்ததும், பேராசை கொண்டு கிளையில் இத்தனைப் பூ என்றால், மரத்திற்குள் நிறைய பூக்கள் இருக்கும் என்று பேராசையில் மரத்தை வெட்டிவிட்டான். எதுவும் கிடைக்கவில்லை. ஏமாந்து போனான். காலந்தாழ்த்தினால் முகிலன் மரமோ ஏராளமான தங்கப் பூக்கள் பூத்துக் குலுங்கின.

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக

Question 1.
காலமாக இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) கால + மாக
ஆ) காலம் + ஆக
இ) கலம் + ஆக
ஈ) கல + மாக
Answer:
ஆ) காலம் + ஆக

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

Question 2.
கொண்டு + இருந்தாய் என்பதைச்சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) கொண்டு இருந்தாய்
ஆ) கொண்டஇருந்தாய்
இ) கொண்டிருந்தாய்
ஈ) குண்டுஇருந்தாய்
Answer:
இ) கொண்டிருந்தாய்

Question 3.
வயிறார இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
அ) வயி + றார
ஆ) வயிறு + ஆர
இ) வயிறு + ஏர
ஈ) வயிறு + றார
Answer:
ஆ) வயிறு + ஆர

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
முயலின் நாவில் நீர் ஊரியதற்கான காரணம் என்ன?
Answer:
நல்ல செழிப்பான தோட்டத்தில் சுவையான காரட்டைப் பார்த்ததும் முயலின் நாவில் நீர் ஊறியது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 6 முயல் அரசன்

Question 2.
பாறைமேல் அமர்ந்திருந்த முயலிடம் புலி என்ன கேட்டது?
Answer:
“முயலே! உனக்கு எவ்வளவு தைரியம். இவ்வளவு காலம் என்னைக் கண்டாலே ஓட்டம் எடுப்பாய். இப்பொழுது கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து இருக்கிறாயா?” என்று புலி முயலிடம் கேட்டது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள்

வாங்க பேசலாம்

Question 1.
பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள பழமொழிகளைக் கூறி அவற்றின் பொருளை உன் சொந்த நடையில் கூறுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும்.

Question 2.
பாடப்பகுதியை உரிய உச்சரிப்புடன் படித்துப் பழகுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே உரிய உச்சரிப்புடன் படித்துப் பழக வேண்டும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள்

Question 3.
உனக்குத் தெரிந்த பழமொழிகளையும் அவை உணர்த்தும் பொருளையும் வகுப்பில் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்க.
Answer:
(i) பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நம்பிக்கை, நோயின்மை , முயற்சி, வெற்றி ஆகிய 16 செல்வங்களை பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்று பொருள்.

(ii) மண் குதிரையை நம்பி ஆற்றில் இறக்கலாமா? மண்குதிரையில் ஆற்றைக் கடந்தால் உடமேன மண் கரைந்து, ஆற்றில் மாட்டிக் கொள்ள நேரிடும்.

(iii) ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான். ஐந்து பெண்களைப் பெற்றெடுத்தால், அவர்களுக்குத் திருமணம் செய்ய சீர்
போன்றவற்றைச் செய்து முடிப்பதற்குள் அரசனும் ஆண்டி ஆகி விடுவான்.

(iv) விருந்தும் மருந்தும் மூன்று நாள்.
விருந்துக்குச் சென்றால் மூன்று நாட்களுக்கு மேல் இருக்கக்கூடாது. மருந்து உட்கொண்டாலும் மூன்று நாட்களுக்கு மேல் உண்ணக்கூடாது.

(v) வீட்டுக்கு வீடு வாசப்படி
ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள்

சிந்திக்கலாமா?

பழமொழிகளின் பொருள் மாறுபட்டு வழங்கப்படுவதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?
Answer:
பழமொழிகளின் பொருள் மாறுபட்டு வழங்கப்படுவதற்குக் காரணம், பழமொழிகள் என்பது வாய்மொழி இலக்கியம். இது ஏட்டில் எழுதப்படாததே முதன்மையான காரணம் ஆகும். வாய்மொழி வழியாகவே கேட்டுக் கேட்டுச் சொல்வதால் ஓசையும் எழுத்தும் மாறுபட்டுப் போகிறது. சமுதாய மாற்றமும் ஒரு காரணமாகும். சமுதாயத்தில் மாற்றம் ஏற்படும் பொழுது புரிதல்களும் மாறுபடுகிறது. தங்களுக்கு ஏற்றார்போல் மாற்றிக் கொள்கின்றனர்.

மொழி வழக்கும் ஒரு காரணம். வட்டாரங்கள் தோறும் வட்டாரமொழி மாறுபடுவதால் பழமொழிகள் திரிந்து விடுகின்றன. அர்த்தமும் மாறுபாடு அடைகிறது. அர்த்தங்களை யாரும் அலசி ஆராய்ந்து பார்க்காததால் அப்படியே நிலைத்து விடுகின்றன. இன்று பழமொழிகள் அதிக பயன்பாட்டிற்குள் வராததும் ஒரு காரணம் ஆகும்.

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
அமுதவாணன், தன் தாத்தாவுடன் சென்ற இடம் …………………………
அ) கடைத்தெரு
ஆ) பக்கத்து ஊர்
இ) வாரச்சந்தை
ஈ) திருவிழா
Answer:
இ) வாரச்சந்தை

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள்

Question 2.
யானைக்கொரு இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………
அ) யானை + கொரு
ஆ) யானை + ஒரு
இ) யானைக்கு + ஒரு
ஈ) யானைக் + கொரு
Answer:
இ) யானைக்கு + ஒரு

Question 3.
பழச்சாறு இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………
அ) பழம் + சாறு
ஆ) பழச் + சாறு
இ) பழ + ச்சாறு
ஈ) பழ + சாறு
Answer:
அ) பழம் + சாறு

Question 4.
நாய் …………….
அ) குரைக்கும்
ஆ) குறைக்கும்
இ) குலைக்கும்
ஈ) கொலைக்கும்
Answer:
அ) குரைக்கும்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள்

Question 5.
ஆசி இச்சொல்லின் பொருள்
அ) புகழ்ந்து
ஆ) மகிழ்ந்து
இ) இகழ்ந்து
ஈ) வாழ்த்து
Answer:
ஈ) வாழ்த்து

Question 6.
கீழ்க்காணும் சொற்களைச் சேர்த்து எழுதுக
அ) வாரம் + சந்தை = …………………….
ஆ) பழைமை + மொழி = …………………..
Answer:
அ) வாரம் + சந்தை = வாரச்சந்தை
ஆ) பழைமை + மொழி = பழமொழி

வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
அமுதவாணன் யாரிடம் ஆசி வாங்கினான்?
Answer:
அமுதவாணன் யானையிடம் ஆசி வாங்கினான்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள்

Question 2.
‘ஆநெய் ‘பூநெய்’ ஆகியன எவற்றைக் குறிக்கின்றன?
Answer:
ஆநெய் என்பது பசுவின் நெய்யினையும், பூநெய் என்பது பூவில் ஊறும் தேனையும் குறிக்கின்றன.

Question 3.
“ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” – இப்பழமொழியின் பொருளைச் சொந்த நடையில் கூறுக.
Answer:
அகத்தில் போட்டாலும் அறிந்து போடணும் என்பதுதான் சரியான வாக்கியம். அதாவது புரியாமல் எதையும் மனப்பாடம் செய்து நினைவில் கொள்ளக்கூடாது. கற்கும்போதே தெளிவாகப் புரிந்து கொண்டு கற்க வேண்டும்.

பழமொழியை நிறைவு செய்க

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள் - 1
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள் - 2

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள்

படத்திற்கேற்ற பழமொழியைத் தேர்வு செய்க

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள் - 4
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள் - 3

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள்

முதலெழுத்து மாற்றினால் வேறுசொல்
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள் - 5
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள் - 6

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள்

செயல் திட்டம்

ஐந்து பழமொழிகளை எழுதி, அவை இன்று உணர்த்தும் பொருளையும் அதன் – உண்மையான பொருளையும் எழுதி வருக.
Answer:
1. கழுதைக்கு தெரியுமா? கற்பூர வாசனை?
பொருள் : கழுதைக்குக் கற்பூர வாசம் தெரியாது.
உண்மையான பொருள் : கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை கழு என்பது ஒரு வகை கோரைப்புல். அதில் பாய் தைத்துப் படுத்தால் கற்பூர வாசனை தெரியுமாம்
என்பதே சரியான விளக்கம்.

2. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும். :
பொருள் : மற்றவர்கள் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் உன் குழந்தை தானே வளர்ந்து விடும்.
உண்மையான பொருள் : ஊரான் வீட்டுப் பிள்ளையாகிய உன் கர்ப்பிணி மனைவியைப் பாசத்துடன் ஊட்டி வளர்த்தால், அவள் வயிற்றில் இருக்கும் உன் குழந்தையும், ஆரோக்கியமாகத் தானே வளரும் என்பதே உண்மையான பொருள்.

3. ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் ஆவான்.
பொருள் : ஆயிரம் மக்களைக் கொன்றவன் பாதி வைத்தியன்.
உண்மையான பொருள் : ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன் ஆவான். நோயைப் போக்க ஆயிரம் வேரைக் கொண்டு மருந்து கொடுப்பவன் அரை வைத்தியன் ஆவான்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள்

4. களவும் கற்று மற.
பொருள் : தீய பழக்கமான களவு (திருட்டை) நாம் கற்றுக் கொண்டு, மறந்து விட வேண்டும்.
உண்மையான பொருள் : ‘களவும், கத்தும் மற’ களவு – திருடுதல் ; கத்து – பொய் சொல்லுதல். தீய பழக்கமான திருடுதல், பொய் சொல்லுதல் இவற்றை ஒருவன் தன் வாழ்நாளில் மறந்து ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதே உண்மையான பொருளாகும்.

5. பந்திக்கு முந்து- படைக்குப் பிந்து
பொருள் : பந்திக்கு முதலில் போய் உட்கார்ந்து கொள்ள வேண்டும். இல்லாவிடில் பலகாரம் நமக்கு முழுமையாகக் கிடைக்காது. போருக்குச் செல்பவன் படைக்குப் பின்னால் நின்று கொள்ள வேண்டும். அப்படி செய்தால் உயிருக்கு ஆபத்து வராது.
உண்மையான பொருள் : பந்திக்கு முந்து என்பது சாப்பிட போகும் போது நமது வலது கை எப்படி முன்னோக்கிச் செல்கிறதோ, அது போல, போரில் எவ்வளவு தூரம் வலதுகை வில்லின் நாணைப் பிடித்து பின்னால் இழுக்கிறதோ, அந்த அளவுக்கு அம்பு வேகமாய்ப் பாயும். இது போருக்குப் போகும் வில் வீரருக்காகச் சொல்லியது.

இணைத்து மகிழ்வோம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள் - 7Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள் - 8

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள்

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக

Question 1.
நாயகனாக இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது……………………..
அ) நாயக+னாக
ஆ) நாயகன் + ஆக
இ) நாய் + கன்
ஈ) நாய + கனாக
Answer:
ஆ) நாயகன் + ஆக

Question 2.
கொண்டிருந்தது இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது…………………….
அ) கொண்டு + இருந்தது
ஆ) கொண்டு + யிருந்தது
இ) கொண்டு + உருந்தது
ஈ) கொண்டி + ருந்தது
Answer:
அ) கொண்டு + இருந்தது

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள்

Question 3.
வயது + ஆன என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………….
அ) வயதென
ஆ) வயதுயென
இ) வயதான
ஈ) வயது ஆன
Answer:
இ) வயதான

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
பண்படுத்தும் பழமொழிகள் – பாடத்தில் கூறப்பட்டுள்ள பழமொழிகள் யாவை?
Answer:
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்.
குரைக்கின்ற நாய் கடிக்காது.
யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்.
ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 5 பண்படுத்தும் பழமொழிகள்

Question 2.
அமுதவாணன் எதற்காகக் கல்லைத் தேடினான்?
Answer:
அமுதவாணன் தன் தாத்தாவுடன் வாரச் சந்தைக்குச் சென்றான். செல்லும் வழியில் நாய்கள் குரைத்து சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அதைப் பார்த்த அமுதவாணன் நாய்களை விரட்டக் கல்லைத் தேடினான்.

Question 3.
தமிழ்க்குடியின் சிறப்பினைக் கூறும் பழமொழி எது? அதன் பொருள் யாது?
Answer:
“கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்குடி” என்பதே தமிழ்க்குடியின் சிறப்பினைக் கூறும் பழமொழி ஆகும். “மண் என்றால் ஆட்சி” கல்வி அறிவும், மன்னர் ஆட்சியும் தோன்றாத காலத்திலேயே தமிழ்மொழி பேச்சு மொழியாக இருந்துள்ளது. இதுவே, இப்பழமொழியின் பொருளாகும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 4 முளைப்பாரி – பாடல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 4 முளைப்பாரி – பாடல் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 4 முளைப்பாரி – பாடல்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 4 முளைப்பாரி – பாடல்

வாங்க பேசலாம்

Question 1.
பாடலை ஓசை நயத்துடன் பாடிக்காட்டுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே பாடலை ஓசை நயத்துடன் பாடிக் காட்டுக.

Question 2.
முளைப்பாரி பற்றி அறிந்து வந்து வகுப்பறையில் பேசுக.
Answer:
ஒரு பானையில் மண் நிரப்பி அதில் நவதானியங்களை நெருக்கமாக தூவி, அதை வெயில் அதிகம் படாத ஒரு இடத்தில் நாலைந்து நாட்களுக்கு வைத்துவிடுவார்கள்.

தினமும் பானையில் இருக்கும் மண்ணிற்கு நீர் ஊற்றி வருவார்கள். எனவே, பயிர் வகை, விதைகள் நெருக்கமாக பானையில் முளைத்து, வளர்ந்து நிற்கும் பானையை நோன்பிருந்து கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள். இதையே முளைப்பாரி என்கிறோம். முளைப்பாரி இல்லாத மாரியம்மன் விழா இல்லை. முளைப்பாரி பல்லாயிரம் வருட விவசாய வாழ்க்கையின் தொடர்ச்சியான விவசாய சடங்கு.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 4 முளைப்பாரி – பாடல்

Question 3.
இது போன்று வேறு பாடல்களைக் கேட்டறிந்து வந்து வகுப்பறையில் பாடி மகிழ்க.
Answer:
மழையை நம்பி ஏலேலோ மண் இருக்க ஐலசா
மண்ணை நம்பி ஏலேலோ மரம் இருக்க ஐலசா
மரத்தை நம்பி ஏலேலோ கிளை இருக்க ஐலசா
கிளையை நம்பி ஏலேலோ இலைஇருக்க ஐலசா
இலையைநம்பி ஏலேலோ பூவிருக்க ஐலசா
பூவைநம்பி ஏலேலோ பிஞ்சிருக்க ஐலசா
பிஞ்சைநம்பி ஏலேலோ காயிருக்க ஐலசா
காயை நம்பி ஏலேலோ பழம் இருக்க ஐலசா
பழத்தைநம்பி ஏலேலோ மகன் இருக்க ஐலசா
மகனை நம்பி ஏலேலோ நீ இருக்க ஐலசா
உன்னைநம்பி ஏலேலோ நான் இருக்க ஐலசா
என்னைநம்பி ஏலேலோ எமன் இருக்க ஐலசா
எமனைநம்பி ஏலேலோ காடிருக்க ஐலசா
காட்டைநம்பி ஏலேலோ புல்லிருக்க ஐலசா

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 4 முளைப்பாரி – பாடல்

சிந்திக்கலாமா?

Question 1.
மாட்டு எருவையும், ஆட்டு எருவையும் வயலுக்கு இட வேண்டும் என்று தாத்தா கூறுகிறார். ஆனால் அப்பாவோ, உடனே பலன் தருவது செயற்கை உரம் தான் என்கிறார். யார் கூறுவது சரி?
Answer:
இருவரும் கூறுவது சரிதான். மாட்டு எருவையும், ஆட்டு எருவையும் வயலுக்கு இடுவதனால் அவைகள் இயற்கை உரமாக இருப்பதனால், இயற்கை வேளாண்மைக்கு உதவுகிறது. உடலுக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாத ஆரோக்கியமான உணவுப் பொருட்களை தருகிறது. மண் வளமும் பாதுகாக்கப்படுகிறது. மண்ணில் நுண்ணுயிரிகள் வாழவும் வழிவகை செய்கிறது.

செயற்கை உரம் இடுவதால் உடனே பலனைத்தரும். ஆனால், அதனால் வேதிப்பொருட்கள் மண்ணில் கலந்து மண் வளம் பாதிக்கப்படுகிறது. நுண்ணுயிரிகளும் அழிந்து விடுகிறது. மனித உடலுக்கு கெடுதலை விளைவிக்கும் வேதிப்பொருட்கள் கலந்த உணவையே தருகிறது. அதனால் மனிதன் தனது ஆரோக்கியத்தை இழந்து பல நோய்களுக்கு உட்படுகிறான். இருவர் கூறுவதும் சரியாக இருந்தாலும், இயற்கை உரங்களை வயலுக்கு இடுவதே நல்லது. அதுவே மனித ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகும்.
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 4 முளைப்பாரி – பாடல்

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்

பொருள் தருக.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 4 முளைப்பாரி – பாடல் - 1

Answer:

1. முளைப்பாரி = முளையிட்ட நவதானியங்கள் நிறைந்த சிறு மண்பாண்டம்
2. தையலர் = பெண்கள்
3. ஓலைக்கொட்டான் = ஓலையால் செய்யப்பட்ட சிறு கூடை
4. மாட்டாந்தொழு = மாடு கட்டும் இடம்
5. ஆட்டாந்தொழு = ஆடு கட்டும் இடம்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 4 முளைப்பாரி – பாடல்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
இரண்டெடுத்து இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….
அ) இரண் + டெடுத்து
ஆ) இரண்டு + எடுத்து
இ) இரண்டெ + டுத்து
ஈ) இரண்டெ + எடுத்து
Answer:
ஆ) இரண்டு + எடுத்து

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 4 முளைப்பாரி – பாடல்

Question 2.
பொங்கலிட்டு இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..
அ) பொங்கல் + இட்டு
ஆ) பொங்கல் + லிட்டு
இ) பொங்க + இட்டு
ஈ) பொங் + கலிட்டு
Answer:
அ) பொங்கல் + இட்டு

Question 3.
ஆடு + எரு என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………………….
அ) ஆடு எரு
ஆ) ஆடெரு
இ) ஆட்டெரு
ஈ) ஆடொரு
Answer:
ஈ) ஆடெரு

Question 4.
செவ்வாய் + கிழமை என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் …………….
அ) செவ்வாய்கிழமை
ஆ) செவ்வாய்க்கிழமை
இ) செவ்வாகிழமை
ஈ) செவ்வாக்கிழமை
Answer:
அ) செவ்வாய்க்கிழமை

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 4 முளைப்பாரி – பாடல்

Question 5.
கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக
அ) சோளத்தட்டை = …………………. + ……………………
ஆ) மாட்டெரு = …………………. + ……………………
Answer:
அ) சோளத்தட்டை = சோளம் + தட்டை ஆ) மாட்டெரு = மாடு + எரு

இப்பாடலில் ஒரே சொல் இரண்டு முறை அடுத்தடுத்து வருவதைக்
கண்டறிந்து எழுதுக – அடுக்குத்தொடர்

எ.கா. கணுக்கணுவா
………………………………………………
Answer:
எ.கா. கணுக்கணுவா
சுளை சுளையா

இப்பாடலில் இடம்பெற்றுள்ள ஒரே ஓசையில் முடியும் சொற்களை எடுத்து எழுதுக.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 4 முளைப்பாரி – பாடல் - 2
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 4 முளைப்பாரி – பாடல் - 3

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 4 முளைப்பாரி – பாடல்

இப்பாடலில் இடம்பெற்றுள்ள முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 4 முளைப்பாரி – பாடல் - 4
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 4 முளைப்பாரி – பாடல் - 5

மேகத்திலுள்ள பேச்சு வழக்குச் சொற்களைக் குடையிலுள்ள எழுத்து வழக்குச் சொற்களுடன் இணைத்துக் காட்டுக.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 4 முளைப்பாரி – பாடல் - 6
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 4 முளைப்பாரி – பாடல் - 7

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 4 முளைப்பாரி – பாடல்

1. ஒசந்த – உயர்ந்த
2. செவ்வா – செவ்வாய்
3. வாங்கியாந்த – வாங்கிவந்த
4, ஊற வச்சி – ஊற வைத்து
5. முறிச்சி – முறித்து
6. மொள்போட்ட – முளைக்க வைத்த

கலையும் கைவண்ணமும்

முளைப்பாரியை வண்ணமிட்டு மகிழ்க!…..
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 4 முளைப்பாரி – பாடல் - 8

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 4 முளைப்பாரி – பாடல்

முதல் பருவம்

Question 1.
பேச்சுவழக்குச் சொற்களுக்கு இணையான எழுத்துவழக்குச் சொற்களை எழுதுக.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 4 முளைப்பாரி – பாடல் - 9
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 4 முளைப்பாரி – பாடல் - 10

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 4 முளைப்பாரி – பாடல்

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக

Question 1.
ஆட்டு + எருவு என்பதை சேர்த்து எழுதக் கிடைப்பது ………………
அ) ஆஎருவு
ஆ) ஆட்டுருவு
இ) ஆட்டு எருவு
ஈ) ஆட்டெருவு
Answer:
ஈ) ஆட்டெருவு

Question 2.
மிளகு + உளயுஞ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………………….
அ) மிளகு விளயுஞ்
ஆ) மிளவுளயுஞ்
இ) மிளகு உளயுஞ்
ஈ) மிளகளயுஞ்
Answer:
ஈ) மிளகளயுஞ்

Question 3.
ஓலை + கொட்டான் என்பதை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………
அ) ஓலைக்கூட்டான்
ஆ) ஓலை கொட்டான்
இ) ஓலைக்கொட்டான்
ஈ) ஒலை கட்டான்
Answer:
இ) ஓலைக்கொட்டான்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 4 முளைப்பாரி – பாடல்

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
முளைப்பாரிப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள பயறு வகைகள் யாவை?
Answer:
கடுகுலயுஞ் பயறு, காராமணிப் பயறு, மிளகுளவும் சிறுபயறு, மணிப்பயறு

Question 2.
முளைப்பாரிப் பாடலில் கூறப்பட்டுள்ள எரு எவையெவை?
Answer:
மாட்டெரு, ஆட்டெரு.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 3 ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 3 ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 3 ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும்

வாங்க பேசலாம்

Question 1.
கதையை உம் சொந்த நடையில் கூறுக
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 3 ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும்

Question 2.
இதே போன்று தெனாலிராமனின் வேறு கதைகளை அறிந்து வந்து கூறுக.
Answer:
அரசவை விகடகவியாதல் :
அன்று கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர். தெனாலிராமனும் ஓர் ஆசனத்தில் அமர்ந்தான். மன்னர் கிருஷ்ணதேவராயர் வந்தவுடன் சபை கூடியது. வேற்றூரிலிருந்து வந்த தத்துவஞானியை விழாவைத் தொடங்கி வைத்து விவாத மன்றத்தை ஆரம்பிக்கச் சொன்னர்.

தத்துவ ஞானியும் ஏதேதோ சொன்னார். ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. அவர் பேச்சின் இறுதியில் மாய தத்துவம் பற்றி நீண்ட நேரம் பேசினார். அதாவது நாம் கண்ணால் காண்பதும் மாயை, உண்பதும் மாயை என்று சொன்னார்.

இதைக்கேட்ட அறிஞர்கள் முதல் அரசர்வரை எவருமே வாய் திறக்கவில்லை. ராஜகுரு மௌனமாகி விட்டார். சுற்றும் முற்றும் பார்த்த தெனாலிராமன் எழுந்து நின்றான்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 3 ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும்

தத்துவஞானியைப் பார்த்து, ஐயா தத்துவ ஞானியாரே ஏன் பிதற்றுகிறீர் நாம் உண்பதற்கும் உண்பதாக நினைப்பதற்கும் வித்தியாசமே இல்லையா? எனக் கேட்டான்.

அதற்கு தத்துவஞானி வித்தியாசம் இல்லை என்றான்.

அதை சோதிக்க தெனாலிராமன் அரசரிடம் ஒருவிருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். விருந்து ஏற்பாடு ஆயிற்று.

அனைவரும் பந்தியில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார். தத்துவஞானிக்கு உணவு பரிமாறியும் சாப்பிடக்கூடாது எனக் கட்டளை இட்டுவிட்டனர். அதனால் தத்துவஞானி தன் தவறை உணர்ந்தான். இதைப்பார்த்த அரசர் தெனாலிராமனின் திறமையைப் பாராட்டி பொன் பரிசளித்தது மட்டுமில்லாமல் அன்று முதல் அவரது அரசவை விகடகவியாக்கினார்.

Question 3.
நீ அறிவுக் கூர்மையுடன் நடந்து கொண்ட நிகழ்வுகளைக் கூறுக.
Answer:
நிகழ்வு – 1 :
பள்ளியில் என்னை எல்லா ஆசிரியர்களுக்கும் பிடிக்கும். காரணம், நான் நன்றாக படிப்பேன். ஆசிரியர் தரும் வீட்டுப் பாடங்களைச் சிறப்பாகச் செய்வேன். எல்லா ஆசிரியர்களுக்கும் உரிய மரியாதை கொடுப்பேன். அதனால் எல்லா ஆசிரியர்களும் என்னை விரும்புவர். இதைக் கண்டு பொறாமைப்பட்ட என் நண்பன் என்னிடம் வந்து, ”உன்னை எல்லா ஆசிரியர்களும் பாராட்டுகின்றனர். அந்த இரகசியத்தை எனக்கு மட்டும் கூறு.

அது எனக்கு பயன் மிகுந்ததாக இருக்கும்” என்றான். “அந்த இரகசியத்தை உன்னிடம் நான் கூறினால் அதனை நீ எவரிடமும் கூறக்கூடாது” என்று கூறினேன். அதற்கு அவன், “இரகசியத்தை எந்தச் சூழ்நிலையிலும் யாரிடமும் கூறமாட்டேன்” என்றான். “அப்படியா- மிக்க மகிழ்ச்சி. ஒரு இரகசியத்தைக் காப்பாற்றும் ஆற்றல் உனக்கு இருப்பது போல் எனக்கும் உண்டு. ஆதலால் இந்த இரகசியத்தை யாரிடம் எந்தச் சூழ்நிலையிலும் சொல்லமாட்டேன்”. என்று கூறினேன். என்னிடம் அவன் தந்திரம் பலிக்காததால் ஏமாற்றத்துடன் சென்று விட்டான்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 3 ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும்

நிகழ்வு -2 :
என் வகுப்பில் படிக்கும் மாணவன் நோட்டு வாங்குவதற்காக நுறு ரூபாய் கொண்டு வந்திருந்தான். அவன் வைத்திருந்த நுறு ரூபாயை ஏதோ ஒரு மாணவன் திருடி விட்டான்.

ணத்தை இழந்த மாணவன் மிகவும் வருத்தப்பட்டு அழுவதைக்கண்ட வகுப்பாசிரியர் திருடிய மாணவனைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று மிகவும் கோபத்துடன் இருந்தார். மாணவர்களிடம் பலமுறை கேட்டும், எந்த மாணவனும் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.

காரணம் திருடியது தான் என்று தெரிந்தால் எல்லோரும் தன்னைத் திருடன் என்று அழைப்பாளர்களே என்ற பயமும் ஒரு காரணமாக அமைந்தது. ஆசிரியரிடம் நான் கூறினேன், இப்படி ஒரு காரணம் இருப்பதால் திருடியவன் தயங்குகிறான் என்று நினைக்கிறேன். அதனால் அனைவரும் வகுப்பறைக்கு வெளியே சென்று நிற்போம்.

பிறகு ஒவ்வொரு மாணவனாக உள்ளே சென்று வரச் சொல்வோம். திருடியவன் எடுத்தப் புத்தகப் பையிலேயே வைத்துவிட வேண்டும். என்று நீங்கள் கட்டளை பிறப்பியுங்கள் என்றேன். ஆசிரியரும் எனது திட்டத்தை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தினார். இறுதியில் நுறு ரூபாய் அந்த மாணவனுக்குக் கிடைத்தது. திருடியவனும் பழியிலிருந்து தப்பித்துக்கொண்டான்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 3 ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும்

சிந்திக்கலாமா?

நீ தெனாலிராமனாக இருந்திருந்தால் விஜயவர்த்தன அரசரின் எதிர்பார்ப்பை எவ்வாறு நிறைவேற்றிருப்பாய்.
Answer:
நான் தெனாலிராமனாக இருந்திருந்தால், என் ஒரு கூண்டைக் கொண்டு வந்து அவையில் உள்ள விஜயவர்த்தனிடம் கொடுத்திருப்பேன். தாங்கள் கேட்ட அப்பறவை இக்கூண்டிற்குள் தான் இருக்கிறது. ஆனால், இப்பறவை எல்லோர் கண்களுக்கும் தெரியாது. ஒழுக்க நெறியில் வாழும் மனிதர்களின் கண்களுக்கு மட்டும்தான் தெரியும். உங்களுக்கு இப்பறவை தெரியும் என்று நான் நம்புகிறேன், என்று அரசரின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்திருப்பேன்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 3 ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும்

வினாக்களுக்கு விடையளி

Question 1.
விஜயநகர அரசின் அவைப்புலவர் யார்?
Answer:
விஜயநகர அரசின் அவைப்புலவர் தெனாலிராமன் ஆவார்.

Question 2.
விஜயவர்த்தன அரசர் எப்படிப்பட்ட குருவியைக் கொண்டு வரும்படி கேட்டார்?
Answer:
விஜயவர்த்தன அரசர் தெனாலிராமனிடம், தனக்குக் காலையில் தங்க மஞ்சள் நிறத்திலும், நடுப்பகலில் சிவப்பு நிறத்திலும், இரவில் ஏழு வர்ணங்களிலும் உருமாறும் அற்புதக்குருவி ஒன்றை கொண்டு வந்து தர வேண்டும். மேலும், அது சில சமயம் மூன்று கால்களாலும், சில சமயம் இரட்டை கால்காளாலும் நடக்க வேண்டும். பிறகு ஏழு இறக்கைகளைக் கொண்டு வானில் பறக்க வேண்டும் என்று கேட்டார்.

Question 3.
குருவி கூறியதாகத் தெனாலிராமன் அரசவையில் சொன்னது என்ன?
Answer:
“அரசரிடம் போய் சொல், காலைப் பொழுதாகவும் இருக்கக்கூடாது, நடுப்பகல் பொழுதாகவும் இருக்கக்கூடாது, மாலைப்பொழுதாகவும் இருக்கக்கூடாது, வெளிச்சமாகவும் இருக்கக்கூடாது, இருளாகவும் இருக்கக்கூடாது அந்த நேரத்தில் நானே எனது ஏழு இறக்கைகளால் பறந்து திரும்ப வந்து விடுவேன்” என்று குருவி கூறியதாக தெனாலிராமன் அரசவையில் சொன்னார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 3 ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும்

குறிப்புகளைக் கொண்டு கண்டுபிடி! மணிமகுடம் சூட்டிக்கொள்!

1. மணக்கும் எழுத்து.
Answer:
பூ

2. அரசரும், அமைச்சர்களும் கூடும் இடம்.
Answer:
அரசவை

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 3 ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும்

3. நிலவும், விண்மீன்களும் வானில் தெரியும் நேரம்.
Answer:
இரவு

4. பாகற்காயின் சுவை.
Answer:
கசக்கும்

5. சிக்கலைத் தீர்க்க உதவும் குணம்
Answer:
சாந்தம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 3 ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும்

சொல்லின் இடையில் ஓர் எழுத்தைச் சேர்த்து புதிய சொல்லை உருவாக்குக
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 3 ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும் - 1
Answer:

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 3 ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும் - 2

கலையும் கைவண்ணமும்

இக்கதையில் வருகின்ற ஏழு இறக்கைக் குருவியை உம் கற்பனைக்கேற்ப வண்ணம் தீட்டி மகிழ்க.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 3 ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும் - 3

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 3 ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும்

செயல் திட்டம்

Question 1.
உங்கள் பள்ளியிலுள்ள நூலகத்திலிருந்து தெனாலிராமன் கதைகள், மரியாதை ராமன் கதைகள், பீர்பால் கதைகள், அப்பாஜி கதைகள் முதலிய புத்தங்களை தேடிப் படித்து ஒவ்வொரு நூலிலும் உனக்குப் பிடித்த ஒரு கதையை எழுதி வருக.
Answer:
தெனாலி ராமன் கதை – ராஜகுருவின் நட்பு :
விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் அரண்மனையில் தாத்தாச்சாரியார் என்பவர் ராஜகுருவாக இருந்தார். தெனாலி கிராமத்துக்கு அருகில் உள்ள ஊர் மங்களகிரி அவ்வூருக்கு ராஜகுரு தாத்தாச்சாரியார் வந்திருந்தார்.

அவ்வூர் மக்கள் ராஜகுருவை வணங்கி ஆசி பெற்றுச் சென்றனர். இதையறிந்த தெனாலிராமன் ராஜகுருவை சந்தித்தான். தன்னுடைய விகடத் திறமையாலும் பேச்சாற்றலாலும் ராஜகுருவின் சிஷ்யன் ஆனான்.

ராஜகுருவின் நட்பு கிடைத்த பின் தன் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாகவும் அதனால் மன்னர் கிருஷ்ணதேவராயரிடம் சிபாரிசு செய்து அரண்மனையில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யுமாறும் வேண்டிக் கொண்டான். அவன் வேண்டுகோள்படியே ராஜகுருவும்  அரண்மனையில் வேலையில் சேர்த்து விடுவதாக வாக்களித்தார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 3 ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும்

“நான் போய் ஆள் அனுப்புகிறேன். அதன்பின் நீவா என்று சொல்லி விஜயநகரத்துக்குச் சென்று விட்டார். தெனாலிராமன் மிகக் கெட்டிக்காரனாக இருக்கிறான். இவனை மன்னரிடம் சொல்லி அரண்மனையில் விகடகவியாக சேர்த்துவிட்டால் நம் வேலை போய்விடும் என்று எண்ணிய ராஜகுரு தெனாலிராமனுக்கு ஆள் அனுப்பவே இல்லை.

தெனாலிராமனும் ராஜகுருவிடமிருந்து ஆள் வரும் வரும் என்று எதிர்பார்த்து பல மாதங்கள் ஓடிவிட்டன. எந்தத் தகவலும் அவனுக்குக்கிட்டவில்லை . ஆகையால் விஜயநகரம் சென்று ராஜகுருவை நேரில் பார்த்து அரண்மனையில் சேர்ந்து விட வேண்டுமென்று நகரம் வந்து சேர்ந்தான்.

பலவித இடையூறுகளுக்கிடையே தெனாலிராமன் ராஜகுருவை அவரது இல்லத்தில் சந்தித்தான். தெனாலிராமனைப் பார்த்ததும் ராஜகுரு அதிர்ச்சி அடைந்தார். யாரப்பா நீ? உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். இதைக் கேட்ட தெனாலிராமன் பதறினார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 3 ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும்

ராஜகுருவே நான்தான் தெனாலிராமன். தாங்கள் மங்களகிரிக்கு வந்த போது நண்பர்கள் ஆனோம். நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தாங்கள் அரசவையில் என்னைச் சேர்த்து விடுவதாகச் சொன்னீர்கள். ஆள் அனுப்பிய பின் வா என்றீர்கள். பல மாதங்களாக தங்களிடமிருந்து ஆள் வராததால் தான் நான் நேரில் வந்துள்ளேன். தயவு செய்து என்னை பற்றி மன்னரிடம் சொல்லி அரசபையில் சேர்த்து விடுங்கள் என்று வேண்டினான்.

உன்னை யாரென்றே எனக்குத் தெரியாதப்பா மரியாதையாக வெளியே போ, இல்லையேல் அவமானப்படுவாய் என்று விரட்டினார். வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட தெனாலிராமன் பழிக்குப்பழி வாங்கத் துடித்தான். காளி மகாதேவியைத் துதித்தான்.

பீர்பால் கதை – முட்டாள்களிடம் எப்படி பேசுவது?
அக்பர் ஒரு நாள் பீர்பாலிடம் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு புதுமையான கேள்வி ஒன்று எழுந்தது. உடனே பீர்பாலிடம் முட்டாள்களிடம் எப்படி பேசுவது? என்று அக்பர் கேட்டார். திடீரென்று அக்பர் இப்படி ஒரு கேள்வியைக் கேட்பார் என்று எதிர்பாராமையால், மன்னர் பெருமானே இதற்கான பதிலை நாளைக்குக் கூறுகிறேன் என்றார் பீர்பால்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 3 ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும்

மறுநாள் காலை – பீர்பால் டில்லிக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்திற்குச் சென்று ஒருவனிடம் நான் சொல்வது போன்று செய்தால் நூறு வெள்ளிக்காசுகள் தருகிறேன் என்றார்.அவனும் பீர்பால் சொல்வது போன்று செய்வதாகக் கூறினான். உன்னை நான் இப்போது மன்னரின் அரண்மனைக்கு அழைத்துச் சென்று மன்னரிடம் அறிமுகம் படுத்தி வைப்பேன்.

அச்சமயம் மன்னர் உன்னிடம் சில கேள்விகளைக் கேட்டார். மன்னர் என்ன கேள்விகள் கேட்டாலும் நீ வாய் திறந்து பதில் பேசாது மவுனமாக நின்று கொண்டிருக்க வேண்டும் என்றார். பீர்பால் கிராமத்தானை அரசவைக்கு அழைத்துச் சென்றார்.

மன்னர் பெருமானே! இவன் எனது உறவினன், படித்தவன், உலக அறிவு மிக்கவன், தாங்கள் என்ன கேள்விகள் கேட்டாலும் இவனால் உடனடியாகப் பதில் கூற மன்னர் அவனை நோக்கி, பீர்பாலிடம் கேட்ட அதே கேள்வியை, முட்டாள்களிடம் சில சமயம் பேச நேரிட்டால் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டார். கிராமத்துக்காரன் பீர்பாலிடம் சொல்லியபடி மன்னர் கேட்ட கேள்விக்கு பதில் ஒன்றும் பேசாது மவுனமாக நின்றிருந்தான். மன்னர் பலமுறை இதுபோன்று கேட்டும் அவன் பதில் கூறாது வாய்மூடி மவுனம் சாதித்தான்.

இதனால் அக்பர், பீர்பாலை நோக்கி, என்ன? உங்கள் உறவினரிடம் பலமுறை கேட்டும் இதற்குப் பதில் கூறாது மவுனம் சாதிக்கிறானே! நீங்கள் கூறியபடி இவன் அறிவாளியாக இருப்பான் என்று தெரியவில்லையே! என்றார்.பீர்பால், மன்னர் பெருமானே! தாங்கள் கேட்ட கேள்விக்குத்தான் பதில் கூறி விட்டானே என்றார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 3 ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும்

நான் கேட்ட கேள்விக்கு எங்கே பதில் கூறினான் மவுனமாக நின்று கொண்டிருக்கிறானே! என்றார் அக்பர். மன்னர் பெருமானே! நேற்றைய தினம் முட்டாள்களிடம் சில சமயம் பேச நேரிட்டால் என்ன செய்ய வேண்டும்? என்று தானே கேட்டீர்கள். அதற்கான விடையைத் தான் தன்னுடைய மவுனத்தின் மூலம் விடை கூறியுள்ளான். அதாவது முட்டாள்களிடம் சில சமயம் பேச நேரிட்டால் மவுனமாக இருக்க வேண்டும் என்பதை தான் பேசாது வாய்மூடி மவுனமாக இருந்தான் என்றார் பீர்பால்.

முட்டாள்களுக்கு உதாரணமாக தன்னைக் குறிப்பிட்டாலும், முட்டாள்களிடம் எதனைப் .. பற்றிப் பேசினாலும் அவர்களுக்கு தக்க பதில் கூற முடியாது. ஆகையினால் அவர்களிடம் a பேசாமல் இருப்பதே சிறந்ததாகும் என்பதை உணர்த்திய பீர்பாலின் நுண் அறிவைப் 9 பாராட்டினார் அக்பர்.

மரியாதை ராமன் கதை – யாருடைய முத்து? :
நீதிமன்றத்தில் ஒரு ஏழை தன் பணக்கார நண்பன் மீது வழக்குத் தொடுத்தான். “நீதிபதி அவர்களே என்னிடம் விலைமதிப்பற்ற நல்ல முத்துக்கள் இரண்டு உள்ளன. அவற்றை எனது நண்பனிடம் கொடுத்துவிட்டு வியாபார விசயமாக வெளியூர் சென்றுவிட்டேன்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 3 ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும்

திரும்பி வந்து நான் கேட்கும் பொழுது அவ்விரு முத்துக்களையும் திருப்பித் தரமால் நான் கொடுக்கவே இல்லை என்று மோசம் செய்தான்” என நண்பன் புகார் கூறினான்.

அதற்கு நண்பனே “நான் அம்முத்துக்களை வாங்கியதும் இல்லை, பார்த்ததும் இல்லை. அவை போன்ற முத்துக்கள் எதுவும் என்னிடம் இல்லை. நான் பணக்காரன் என்பதால் என்னிடம் பணம் பறிக்க பொய்சொல்லுகிறான் என்றான்.
அவனுடைய மோச கருத்தை முகக்குறிப்பினால் உணர்ந்த மரியாதை இராமன் “போதிய சாட்சியம் இல்லாததால் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன்” என்று கூறினான். ஏழை அழுதபடியே வீட்டிற்குச் சென்றான்.

இருவரையும் அனுப்பி விட்டு சில நாட்கள் கடந்ததும் ஏழையின் முத்துக்களைப் போன்று 98 முத்துக்களை அரண்மனையிலிருந்து வரவழைத்து, அவற்றை ஒரு நைந்த சரத்தில் கோர்த்து முத்துமாலையாக்கி அதை மாலை நேரத்தில் மோசக்காரனிடம் கொடுத்து, “நண்பனே நீ முத்துக்களைக் கோர்ப்பதில் கைதேர்ந்தவன் என்று கேள்விப்பட்டேன்.

என்னிடம் உள்ள இந்த முத்துமாலையில் நூறு முத்துக்கள் இருக்கின்றன. சரடு நைந்து போய் விட்டால், புதிய சரடில் கோர்த்து அழகான முத்துமாலையாக கட்டிக் கொண்டு வந்து தா” எனச் சொல்லி அனுப்பினான் இராமன்.

அதை வாங்கிச் சென்றவன் மறுநாள் பிரித்து எண்ணிப் பார்க்கும் போது 98 முத்துக்கள் மட்டுமே இருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். “தான் அவற்றைக் கைதவறுதலாக காணாமற் போக்கடித்துவிட்டோமோ” என்று குழம்பி திகிலுற்றான். பிறகு குறையும் இரண்டு முத்துக்களுக்குப் பதிலாக ஏற்கனவே தான் நண்பனிடம் மோசடி செய்து வைத்திருந்த இரண்டு முத்துக்களையும் சேர்த்து மாலையாக கட்டி நீதிபதியிடம் கொண்டு போய் கொடுத்தான்.

அந்த முத்துமாலையில் 100 முத்துக்கள் இருப்பதை எண்ணிப்பார்த்த மரியாதை இராமன் அவனை நீதிமன்றத்தில் நிறுத்தி கோபத்துடன் “நண்பனே நான் கொடுத்தது 98 முத்துக்கள் தான். அவற்றோடு நீ சேர்த்திருக்கும் இரண்டு முத்துக்களும் உனது சிநேகிதனிடமிருந்து சில காலத்திற்கு முன் நீ அபகரித்தவையாகும்” என்றான்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 3 ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும்

மோசடிகாரனுக்கு வேறு வழி தோன்றவில்லை. தனது திருட்டை ஒப்புக்கொண்டபின், பின்பு இராமன் அவ்விரு முத்துக்களையும் உரியவரிடம் ஒப்படைத்துவிட்டு மோசடி செய்தவனுக்கு 10 பவுன் அபராதம் விதித்தான்.

Question 2.
நூலகத்தைப் பயன்படுத்தி எவையேனும் ஐந்து கதைகளின் பெயர்களையும், அந்தக் கதைகளின் ஆசிரியர் பெயர்களையும் பட்டியலிடுக.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 3 ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும் - 4
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 3 ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும் - 5

கூடுதல் வினாக்கள்

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
தெனாலிராமனின் அறிவுக் கூர்மையைச் சோதிக்க யார் யாரிடம் அனுமதி பெற்றார்?
Answer:
அண்டை நாட்டு மன்னர் விஜயவர்த்தனர் கிருஷ்ணதேவராயரிடம் தெனாலிராமனின் அறிவுக்கூர்மையைச் சோதிக்க அனுமதி பெற்றார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 3 ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும்

Question 2.
பறவையைத் தேடிச் சென்ற தெனாலிராமன் அரசவைக்கு வந்தபோது எவ்வாறு காட்சியளித்தான்?
Answer:
தெனாலிராமனின் நிலை மோசமாக இருந்தது. உடை கிழிந்து இருந்ததுடன், அதில் முட்களும், மண்ணும் ஒட்டியிருந்தன. அவரது கையில் காலியான பறவைக் கூண்டு ஒன்று இருந்தது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 3 ஏழு இறக்கைக் குருவியும் தெனாலிராமனும்

Question 3.
விகடகவி என்றால் என்ன?
Answer:
விகடகவி என்றால் நகைச்சுவை தோன்ற பாடுபவர் என்பது பொருள்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 2 பனைமரச் சிறப்பு Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 2 பனைமரச் சிறப்பு

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு

வாங்க பேசலாம்

Question 1.
மரம் வளர்ப்பதனால் நாம் பெறும் பயன்கள் குறித்துக் கலந்துரையாடுக.
Answer:
அமலன் : மரம் வளர்ப்பதனால் நமக்கு என்னனென்ன பயன்கள் உள்ளன?
ராதா : மரம் வளர்ப்பதனால் நமக்கு நிறைய பயன்கள் உள்ளன.
அமலன் : அப்படியா! எங்கே? சொல்லு பார்ப்போம்.
ராதா : மரங்கள் கரியமில வாயுவை உள்வாங்கிக் கொண்டு நமக்குத் தேவையான உயிர் காற்றைக் கொடுக்கிறது.
அமலன் : மரங்களினால் வேறு என்ன பயன் உள்ளது?

ராதா : மரங்கள் நமக்குக் கனிகள், காய்கள், இலைகள், தண்டுகள், வேர்கள், பூக்கள்
என்று பலவற்றைத் தருகின்றன.
அமலன் : மரங்கள் மண் அரிப்பை எவ்வாறு தடுக்கிறது?
ராதா : மழைக்காலங்களில் அதிக நீர் பெருக்கெடுத்து ஓடும் போது நீருடன் மண்ணும்  சேர்ந்து அரித்துக்கொண்டு ஓடும் அந்த சமயங்களில் மரங்களின் வேர்கள்  மண்ணரிப்பைத் தடுத்து நிறுத்துகிறது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு

அமலன் : நன்றாகச் சொல்கிறாய். இன்னும் கூடுதலாக சொல்லேன்.
ராதா : மரங்கள் நமக்கு வாசனை பொருட்கள், மூலிகைப் பொருட்கள், தளவாடப் பொருட்கள், எரிபொருட்கள் என பலவகையான பொருட்களை தருகின்றன. அதுமட்டுமல்லாமல் மரம் வளர்ப்பதால் தான் மழை வரும். மரங்கள் நீராவி சுழற்சிக்கு அதிக பயனை நல்குவதால், மரம் வளர்த்தால் மழை கிடைப்பது உறுதியே. மரம் மனிதர்கள் மட்டுமல்லாமல் பறவைகள், விலங்குகள், ஊர்வன, சிறு உயிரினங்கள் என்று எல்லாவற்றிற்கும் பயன் கிடைக்கின்றன.

கூடுதல் வினாக்கள்

Question 1.
உனது ஊரில் 108 வாகனத்தைப் பார்த்திருக்கிறாயா?
Asnwer:
வளவன் : 108 வாகனத்தை பார்த்திருக்கிறாயா? நான் பார்த்திருக்கிறேன். தமிழ்செல்வி : நான் பார்த்ததில்லை? 108 வாகனம் என்றால் என்ன?
வளவன் : அவசர கால ஆம்புலன்ஸை அழைக்கும் எண் 108.
முத்து : எதற்கெல்லாம் 108 வாகனத்தை அழைக்கலாம்?
வளவன் : 24 மணிநேரமும் சேவை கட்டணமில்லாத சேவை. விபத்துகளின் போது அடிபட்டவரை காப்பாற்றவும், தீ விபத்தின் போது தீக்காயம் பட்டவரை காப்பாற்றவும் தமிழகத்தில் 6800 மருத்துவமனைகளில் 24 மணிநேர இலவச சிகிச்சை வழங்க 108 ஆம்புலன்ஸ் உதவுகிறது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு

சிந்திக்கலாமா?

கிளி வளர்த்தேன், பறந்து போனது அணில் வளர்த்தேன், ஓடிப்போனது, மரம் வளர்த்தேன்… இரண்டும் திரும்பி வந்தது…..
– டாக்டர் அப்துல்கலாம்

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
வல்லமை என்ற சொல்லின் பொருள் …………………….
அ) வலிமை
ஆ) எளிமை
இ) இனிமை
ஈ) புதுமை
Answer:
அ) வலிமை

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு

Question 2.
‘உயர என்ற சொல்லின் எதிர்ச்சொல் …………………….
அ) மேலே
ஆ) நிறைய
இ) தாழ
ஈ) அதிகம்
Answer:
இ) தாழ

Question 3.
விழுந்து என்ற சொல்லின் எதிர்ச்சொல்…………………….
அ) நடந்து
ஆ) பறந்து
இ) எழுந்து
ஈ) நின்று
Answer:
இ) எழுந்து

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு

Question 4.
கரையோரம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….
அ) கரை + ஓரம்
ஆ) கரை + யோரம்
இ) கரைய + ஓரம்
ஈ) கர + ஓரம்
Answer:
அ) கரை + ஓரம்

Question 5.
அங்கெல்லாம் – இச்சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது …………………….
அ) அங் + கெல்லாம்
ஆ) அங்கு + எல்லாம்
இ) அங்கு + கெல்லாம்
ஈ) அங்கெ + ல்லாம்
Answer:
ஆ) அங்கு + எல்லாம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு

Question 6.
கீழ்க்காணும் சொற்களைகளைப் பிரித்து எழுதுக.
அ) சாலையோரம் = …………… + ………………….
ஆ) குருத்தோலை = …………… + ………………….
Answer:
அ) சாலையோரம் = சாலை + ஓரம்
ஆ) குருத்தோலை = குருத்து + ஓலை

வினாக்களுக்கு விடையளி

Question 1.
பனைமரத்தில் இருந்து கிடக்கும் உணவுப் பொருள்கள் யாவை?
Answer:
நுங்கு, பனங்கிழங்கு, பனம்பழம், பதநீர், கற்கண்டு, கருப்பட்டி போன்ற உணவுப் பொருட்கள் பனை மரத்திலிருந்து கிடைக்கின்றன.

Question 2.
சிறுவர்கள் விளையாடுவதற்குப் பனைமரம் எவ்வாறு உதவுகிறது?
Answer:
பனங்காய் வண்டி, பனை ஓலைக் காற்றாடி, பனை ஓலை விசிறி, பொம்மைகள் ஆகியவற்றை செய்து சிறுவர்கள் விளையாடுவதற்குப் பனைமரம் உதவுகிறது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு

Question 3.
பனைமரத்தை நாம் எவ்வாறு பாதுகாக்கலாம்?
Answer:
“மரங்கள் இன்றி மனிதர்கள் இல்லை” இதனை உணர்ந்து நாம் அனைவரும் பனைமரம் வெட்டப்படுவதைத் தடுக்க வேண்டும். பனை மரத்தினைப் பற்றிய பல அரிய செய்திகளை அறிந்து கொண்டு, பனையின் சிறப்பினை நமது நண்பர்களுக்கும், மற்றவர்களுக்கும் எடுத்துக்கூற வேண்டும். பனங்கொட்டைகளைச் சேகரித்து குளம், ஆறு, குட்டை போன்றவற்றின் கரையோரங்களில் விதைகளை ஊன்றி பாதுகாக்கலாம்.

Question 4.
பனை மரத்தின் பயன்களாக நீ கருதுவனவற்றை உன் சொந்த நடையில் எழுதுக.
Answer:
(i) பனைமரம் நீண்டு வளரக்கூடியது. இது வேர், தூர்ப் பகுதி, நடுமரம், பத்தை மட்டை, உச்சிப் பகுதி, ஓலை, சில்லாட்டை, பாளைபீலி, பனங்காய், பச்சை மட்டை, சாரை ஓலை, குருத்தோலை என்ற பன்னிரண்டு உறுப்புகளை உடைய மரம். இப்பொருட்கள் அனைத்தும் மனிதர்களுக்குப் பயன்படுவன.

(ii) நுங்கும், பனங்கிழங்கும், பனம்பழமும் உணவாகப் பயன்படுகின்றன. ஓலை கூடைகள் முடையவும், கைவினைப்பொருட்கள் செய்யவும், கூரை வேயவும் பயன்படுகிறது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு

(iii) பனஞ்சாறு பதனீராகவும், கற்கண்டாகவும், கருப்பட்டியாகவும் பயன் தருகிறது. பனை மரம் புயலைத் தாங்கும் வல்லமை பெற்றது. பனை ஓலை ஓலைச்சுவடிக்காகவும் பயன்படுத்தப்பட்டது.

(iv) பனை மரத்தின் வேர் நீரைத் தக்க வைத்துக்கொள்ளும் இயல்பு கொண்டது. இது நிலத்தடி நீர் மட்டம் உயர் காரணமாக அமைகிறது.

(v) பனங்காய் வண்டி, பனைஓலை காற்றாடி, பனை ஓலை விசிறி, பொம்மைகள் ஆகியவற்றைச் செய்து விளையாட்டுக்கள் விளையாட பயன்படுகிறது. பறவைகளுக்கு வாழிடமாகவும் விளங்குகிறது.

உங்கள் வீட்டில் பயன்படுத்தப்படும் மரத்தாலான பொருள்களைப் பட்டியலிடுக
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு - 1
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு - 2

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு

இணைந்து செய்வோம்

சொற்களுக்கு உரிய படங்களைப் பொருத்துக .
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு - 3
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு - 4

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு

மொழியோடு விளையாடு

ஒரே பொருள் தரும் சொற்களைக் கண்டுபிடித்து வட்டமிடுக.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு - 5
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு - 6

இலக்கணம் – பால்

திணையின் உட்பிரிவே பால் ஆகும். பால் என்ற சொல்லிற்குப் பகுப்பு என்பது பொருள்.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு - 7
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு - 8

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு

கீழ்க்காணும் சொற்களை வகைப்படுத்துக

அவள், சென்றனர், படித்தான், வந்தது, பறந்தன, ஓடினர், எழுதினான், விளையாடினர், குயவன், நாட்டிய மங்கை , மேய்ந்தன, வகுப்பறை, கற்கள், ஆசிரியர், மாணவர்கள், வீடு, பெற்றோர், தங்கை , அண்ண ன், மரங்கள், செடி, மலர், பூக்கள்.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு - 9
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு - 10

பொருத்துக

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு - 11
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு - 12

1. அவன் வரைந்தான்.
2. அவள் ஆடினாள்.
3. அவர்கள் பாடினார்கள்.
4. அது ஓடியது.
5. அவைகள் பறந்தன.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக

Question 1.
பனை மரம் ………….. உறுப்புகளை உடைய மரம்.
அ) பன்னிரண்டு
ஆ) எட்டு
இ) பத்து
ஈ) ஏழு
Answer:
அ) பன்னிரண்டு

Question 2.
பனை மரத்திற்கு ……………… பெயரும் உண்டு
அ) பெருமரம்
ஆ) தண்ணீர் மரம்
இ) கற்பகத்தரு
ஈ) கற்பூரம்
Answer:
இ) கற்பகத்தரு

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு

Question 3.
கைவினைப் பொருட்கள் செய்யப் பயன்படுவது …………….. ஆகும்.
அ) ஓலை
ஆ) சில்லாட்டை
இ) நடுமரம்
ஈ) மட்டை
Answer:
அ) ஓலை

Question 4.
கற்கண்டாக பயன்படுவது …………….. ஆகும்.
அ) பனஞ்சாறு
ஆ) நுங்கு
இ) பாளைபீலி
ஈ) பனங்காய்
Answer:
இ) பாளைபீலி

Question 5.
பண்டைய இலக்கியங்களைப் பற்றி தெரிந்து கொள்ள நமக்கு உதவியது ……………..
முதல் பருவம்
அ) கல்வெட்டு
ஆ) ஓலைச்சுவடி
இ) ஓவியம்
ஈ) செப்பேடு
Answer:
ஆ) ஓலைச்சுவடி

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு

Question 6.
தமிழ்ச் சமூகத்தின் உயிர் சாட்சியாக விளங்கும் மரம்
அ) பலா மரம்
ஆ) புன்னை மரம்
இ) பனை மரம்
ஈ) வேப்ப மரம்
Answer:
இ) பனை மரம்

Question 7.
தமிழ்நாட்டின் மாநில சின்னம் …………………. ஆகும்.
அ) தஞ்சை பெரிய கோவில் கோபுரம்
ஆ) திருவில்லிப்புத்தூர் கோவில் கோபுரம்
இ) மதுரை மீனாட்சி கோவில் கோபுரம்
ஈ) தாராசுரம் கோவில் கோபுரம்
Answer:
ஆ) திருவில்லிப்புத்தூர் கோவில் கோபுரம்

Question 8.
தமிழக அரசின் மாநில மரம் ……………. ஆகும்.
அ) தாமரை
ஆ) கொன்றை
இ) ரோஜா
ஈ) செங்காந்தாள்
Answer:
ஈ) செங்காந்தாள்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு

Question 9.
தமிழக அரசின் மாநில விலங்கு ………………ஆகும்.
அ) சிங்கம்
ஆ) வரையாடு
இ) கரடி
ஈ) – புலி
Answer:
ஆ) வரையாடு

Question 10.
மரத்தினால் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………..
அ) மரம் + தினால்
ஆ) மரத்தின் + ஆல்
இ) மரத்து + ஆனால்
ஈ) மரத் + தினால்
Answer:
ஆ) மரத்தின் + ஆல்

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
பனைமரத்தின் வேறு பெயர் யாது?
Answer:
பனை மரத்தின் வேறு பெயர் கற்பகத்தரு.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு

Question 2.
பனை மரத்தின் உறுப்புகளை எழுதுக.
Answer:
வேர், தூர்ப்பகுதி, நடுமரம், பந்தைமட்டை, உச்சிப் பகுதி, ஓலை, சில்லாட்டை, பாளைப்பீலி, பனங்காய், பச்சைமட்டை, சாரை ஓலை, குருத்தோலை.

Question 3.
பழங்காலத்தில் பனை ஓலை எதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது?
Answer:
நமது முன்னோர்கள் பற்றியும் பண்டைய இலக்கியங்கள் பற்றியும் தெரிந்து கொள்ள நமக்குப் பெரிதும் உதவிய ஓலைச்சுவடிகளாகப் பனை ஓலை பயன்படுத்தப்பட்டுள்ளது.

Question 4.
நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்குப் பனை மரம் எவ்வாறு உதவுகிறது?
Answer:
பனை மரத்தின் வேர் நீரைத் தக்க வைத்துக் கொள்வதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 2 பனைமரச் சிறப்பு

Question 5.
பனை மரங்கள் வெட்டப்படுவதால் எந்தெந்தப் பறவைகளுக்கு இழப்பு?
Answer:
பனை மரங்கள் வெட்டப்படுவதால் அந்த மரத்தைச் சார்ந்து இருக்கும் பனங்காடை, பனை உழவரான் போன்ற பறவைகள் தம் வாழிடங்களை இழக்கின்றன.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 1 அன்னைத் தமிழே!

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 1 அன்னைத் தமிழே! Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 1 அன்னைத் தமிழே!

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 1 அன்னைத் தமிழே!

வாங்க பேசலாம்

Question 1.
பாடலை ஓசை நயத்துடன் பாடுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே பாடலை ஓசை நயத்துடன் பாட வேண்டும்.

Question 2.
பாடலைச் சரியான உச்சரிப்புடன் படித்து மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே சரியான உச்சரிப்புடன் படிக்க வேண்டும். ‘

Question 3.
மொழியின் சிறப்பினைக் கூறும் வேறு பாடலை அறிந்து வந்து பாடுக.
Answer:
இன்பத்தமிழ்
தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! – பாரதிதாசன்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 1 அன்னைத் தமிழே!

சிந்திக்கலாமா?

Question 1.
நாம் வளரும் போதே நம்முடன் சேர்ந்து வளர்வது தமிழ்மொழி எவ்வாறு?
கலந்துரையாடுக.
Answer:
மாறன் : நாம் பேசுவது என்ன மொழி?
கமலா : நாம் பேசுவது தமிழ்மொழி.
மாறன் : நாம் ஏன் தமிழ்மொழி பேசுகிறோம்?
கமலா : தமிழ் நம் தாய்மொழி அதனாலேயே பேசுகிறோம்.
மாறன் : ஏன் நாம் தமிழ்மொழியைப் பேச வேண்டும்?

கமலா : நாம் தமிழ்நாட்டில் பிறந்ததனால் நமக்குத் தமிழ்மொழி தாய்மொழியாக
விளங்குகிறது. ஒவ்வொருவருக்கும் தாய்மொழி என்பது உயிர் போன்றது. உயிரை யாராவது வெறுப்பார்களா? அதனாலயே தாய்மொழியாகிய தமிழ்மொழியைப் பேச வேண்டும்.
மாறன் : அப்படியானால் நாம் வளரும் போதே நம்முடன் சேர்ந்து வளருமா நம்முடைய தாய்மொழி?

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 1 அன்னைத் தமிழே!

கமலா : ஆம் கட்டாயமாக வளரும். எப்படியென்றால், நாம் முதலில் சொல்லிப்பழகிய எழுத்து ‘அ, ஆ’ சொல்லிப் பழகிய வார்த்தை ‘அம்மா, அப்பா’. ஆனால் இன்று தமிழ் எழுத்துகள் அனைத்தையும் அறிந்துள்ளோம், வாசிக்கின்றோம். அதைப்போல அதிகமான சொற்களைப் பேசுகின்றோம், எழுதுகின்றோம், வாசிக்கின்றோம். அப்படியென்றால் நம்முடன் சேர்ந்து தமிழ் மொழியும் வளர்ந்துள்ளது என்றுதானே அர்த்தம். அதுதான் உண்மையும் கூட என்பது புரியவில்லையா?
மாறன் : புரிந்து கொண்டேன். உண்மைதான் புரியவைத்ததற்கு நன்றி!

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
அன்னை + தமிழே – என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………….
அ) அன்னைந்தமிழே
ஆ) அன்னைத்தமிழே
இ) அன்னத்தமிழே
ஈ) அன்னைதமிழே
Answer:
ஆ) அன்னைத்தமிழே

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 1 அன்னைத் தமிழே!

Question 2.
பிறப்பெடுத்தேன் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது…………………….
அ) பிறப் + பெடுத்தேன்
ஆ) பிறப்பு + எடுத்தேன்
இ) பிறப் + எடுத்தேன்
ஈ) பிறப்ப + எடுத்தேன்
Answer:
ஆ) பிறப்பு + எடுத்தேன்

Question 3.
மறந்துன்னை – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது…………………….
அ) மறந்து + துன்னை
ஆ) மறந் + துன்னை
இ) மறந்து + உன்னை
ஈ) மறந் + உன்னை
Answer:
அ) மறந்து + துன்னை

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 1 அன்னைத் தமிழே!

Question 4.
சிறப்படைந்தேன் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது…………………….
அ) சிறப்பு + அடைந்தேன்
ஆ) சிறப்பு + அடைந்தேன்
இ) சிற + படைந்தேன்
ஈ) சிறப்ப + அடைந்தேன்
Answer:
அ) சிறப்பு + அடைந்தேன்

Question 5.
என்னில் என்ற சொல்லின் பொருள்…………………….
அ) உனக்குள்
ஆ) நமக்குள்
இ) உலகுக்குள்
ஈ) எனக்குள்
Answer:
ஈ) எனக்குள்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 1 அன்னைத் தமிழே!

வினாக்களுக்கு விடையளி

Question 1.
சொல்லில் விளையாடச் சொல்லித் தந்தவள் யார்?
Answer:
சொல்லில் விளையாட சொல்லித்தந்தவள் தமிழன்னை ஆவாள்.

Question 2.
எதைச் சொல்ல முடியவில்லை என்று இப்பாடலின் ஆசிரியர் குறிப்பிடுகிறார்?
Answer:
தமிழ்ச்சொல்லினால் தமிழன்னையின் புகழைச் சொல்ல முடியவில்லை என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 1 அன்னைத் தமிழே!

Question 3.
இப்பாடலின் ஆசிரியர் அன்னைத் தமிழை எவ்விதம் புகழ்கிறார்?

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 1 அன்னைத் தமிழே! - 1
Answer:
“என் அன்னையாகிய தமிழே! என் உயிரில் கலந்தவளே! என்னை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், என் உடன் சேர்ந்து வளர்பவளே! உன்னைப் புகழ்வதற்காகவே இவ்வுலகில் பிறந்துள்ளேன். சொல் கொண்டு விளையாடுவதற்குச் சொல்லிக் கொடுத்தவளே! அதே சொல்லினால் உனது புகழை என்னால் கூற முடியவில்லையே!” என்று ஆசிரியர் அன்னையாகிய தமிழைப் புகழ்கிறார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 1 அன்னைத் தமிழே! - 5

செயல் திட்டம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 1 அன்னைத் தமிழே! - 6

Question 1.
மொழியின் சிறப்பினைக் கூறும் இரண்டு பாடல்களை எழுதி வந்து படித்து/ பாடிக் காட்டுக.
Answer:
1. அன்னை மொழியே!
அழகான செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை
முகிந்த நறுங்கனியே!
– பாவலரேறு பெருசித்திரனார்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 1 அன்னைத் தமிழே!

2. எங்கள் தமிழ்
அருள்நெறி அறிவைத் தரலாகும்.
அதுவே தமிழன் குரலாகும்
பொருள்பெற யாரையும் புகழாது
போற்றா தாரையும் இகழாது.
அன்பும் அறமும் ஊக்கிவிடும்
அச்சம் என்பதைப் போக்கிவிடும்
இன்பம் பொழிகிற வானொலியாம்
எங்கள் தமிழெனும் தேன்மொழியாம். – நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

பாடலை நிறைவு செய்வோம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 1 அன்னைத் தமிழே! - 7

Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 1 அன்னைத் தமிழே! - 2

சொல் உருவாக்கலாமா?

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 1 அன்னைத் தமிழே! - 10

Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 1 அன்னைத் தமிழே! - 3

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 1 அன்னைத் தமிழே!

  • கவியரசர்
  • அன்னை
  • குழந்தை
  • தமிழ்மொழி

வண்ணம் தீட்டி மகிழ்வோம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 1 அன்னைத் தமிழே! - 9

Answer:

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 1 அன்னைத் தமிழே! - 4

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 1 அன்னைத் தமிழே!

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக

Question 1.
ஆவி என்ற சொல்லின் பொருள் ………….. ஆகும்.
அ) உயிர்
ஆ) மரம்
இ) குதிரை
ஈ) உடல்
Answer:
அ) உயிர்

Question 2.
வளர்ப்பு + அவளே – என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………………….
அ) வளர்ப்பு அவளே
ஆ) வளர்ப்பவளே
இ) வளர் அவளே
ஈ) வளர்த்தவளே
Answer:
ஆ) வளர்ப்பவளே

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 1 அன்னைத் தமிழே!

Question 3.
மட்டும் + அல்லாமல் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது…………………
அ) மட்டும் அல்லாமல்
ஆ) மட்டுமல்ல
இ) மட்டுமல்லாமல்
ஈ) மட்டில்லாமல்
Answer:
இ) மட்டுமல்லாமல்

Question 4.
அன்னையாகிய – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது………………….
அ) அன்னை + யாகிய
ஆ) அன்னைஏகிய
இ) அன்பாகிய
ஈ) அன்னை + ஆகிய
Answer:
ஈ) அன்னை + ஆகிய

Question 5.
பிறந்து + உள்ளேன் – இச்சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது………………….
அ) பிறந்து உள்ளேன்
ஆ) பிறந்துள்ளேன்
இ) பிறத்துள்ளேன்
ஈ) பிறந்தள்ளேன்
Answer:
ஆ) பிறந்துள்ளேன்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 1 அன்னைத் தமிழே!

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
தமிழ் அன்னை எதில் கலந்தவள் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்?
Answer:
தமிழ் அன்னை உயிரில் கலந்தவள் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

Question 2.
தான் எதற்காகப் பிறந்ததாக ஆசிரியர் கூறுகிறார்?
Answer:
தமிழன்னையைப் புகழ்வதற்காகவே இவ்வுலகில் பிறந்துள்ளதாக ஆசிரியர் கூறுகிறார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 1 அன்னைத் தமிழே!

Question 3.
தமிழன்னை எவ்வாறு வளர்கிறாள்? என நா. காமராசர் கூறுகிறார்?
Answer:
தமிழன்னை தன்னை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல் தன்னுடன் சேர்ந்து வளர்வதாக நா. காமராசர் கூறுகிறார்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Tamil Guide Pdf Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Tamil Solutions Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

வாங்க பேசலாம்

Question 1.
கல்லணை பற்றி உனக்குத் தெரிந்த செய்திகளை உன் சொந்த நடையில் கூறு.
Answer:
(i) கல்லணையின் நீளம் 1080 அடி, அகலம் 66 அடி, உயரம் 18 அடியாகும். இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது.

(ii) கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு. 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயம் ஆகும். 1839-இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது.

(iii) பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

(iv) இநத் அணையைக் கரிகாலன் என்ற சோழமன்னன் கட்டினான். தற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிக பழமையானது எனவும், தற்போது புழக்கத்தில் உள்ளது எனவும் அறியப்படுகிறது. இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத்திட்டம் என்றும் கூறப்படுகிறது.

(v) இவ்வணை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. பூதலூர் வட்டத்தில் உள்ள தோகூர் கோவிலடி கிராமத்தில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் மேலணை கட்டப்பட்டது. கல்லணையைப் பற்றிய செய்தி சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 8 விடியும் வேளை

Question 2.
உமது ஊரில் உள்ள மிகப் பழைமையான இடம் எது? அதுபற்றி வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
கலை :
பாண்டி! நமது ஊரில் உள்ள மிகப்பழமையான இடம் என்று எதை நினைக்கிறாய்?
விமல் : மதுரை மீனாட்சியம்மன் கோவில் தான் என்று நினைக்கின்றேன்.
கலை : சரி, கோவிலைப்பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா?
விமல் : தெரியுமே. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோயில் நகரமான மதுரையின் மத்தியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.

கலை : ஆமாம், இக்கோயிலே தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலகோயிலாக உள்ளது.
விமல் : இக்கோயில் திராவிடக் கட்டக்கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாவும் விளங்குகிறது. 2000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்ததாகவும் கருதப்படுகின்றது.

கலை : தேவலோகத்தின் அரசனான இந்திரனால் கட்டப்பட்டது என்பது நம்பிக்கையாக உள்ளது.
கலை : இக்கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும் 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.

விமல் : இக்கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோயிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது.
கலை : அவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடியாக இருக்கிறது.
விமல் : உண்மையிலேயே இக்கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. நன்றி பாண்டி!

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

சிந்திக்கலாமா?

கோடைக்காலங்களில் நீர்ப்பற்றாக்குறை ஏற்படக் காரணம் என்ன?
Answer:
கோடைக்காலங்களில் நீர்ப்பற்றாக்குறை ஏற்படக்காரணம், கோடைக் காலங்களில் மழை பொழிவது இல்லை. அதனால் நீர்நிலைகளில் நீர் வற்றி விடுகிறது வறண்டும் போய் விடுகிறது. இந்த நேரங்களில் தான் அதிகமாக நீர்ப்பற்றாக்குறை ஏற்படுகிறது. மனிதனின் பேராசையாலும் நீர் சுரண்டப்படுவதாலும் நீர்ப்பற்றாக்குறை ஏற்படுகிறது. பெரும்பாலான ஆறுகள், குளங்கள், ஏரிகள் தூர்வாரப்படாமல் இருப்பதும் காரணமாகும். இங்கு அதிகமான நீர்நிலைகள் இல்லாததும் இருப்பதை முறையாக பராமரிக்காமல் விட்டதாலும் பற்றாக்குறை ஏற்படுகிறது.

நீர்ப்பற்றாக்குறைறைப் போக்க என்ன செய்வாய்?
Answer:
நீர்ப்பற்றாக்குறையைப் போக்க பல அணைகள் கட்டலாம். ஆற்றின் குறுக்கே பல தடுப்பணைகளைக் கட்டலாம். நீர்நிலைகளைக் கோடைக்காலங்களில் முறையாக தூர்வாரி பராமரித்து, மழைக்காலங்களில் அதிக நீரை சேகரித்து வைக்கலாம். புதிய புதிய நீர்நிலைகளை உருவாக்கி நீரைச் சேமித்து நிலத்தடி நீரையும் உயர்த்தலாம். இருக்கின்ற நீரை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான பழத்தைத் தேர்ந்தெடுக்க

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை - 1
Answer:

1. துயரம் இச்சொல் குறிக்கும் பொருள் துன்பம்
2. வியத்தகு இச்சொல் குறிக்கும் பொருள் ஆச்சரியம் தரும்.
3. முறியடித்து இச்சொல் குறிக்கும் பொருள் தகர்த்து
4. சூழ்ச்சி இச்சொல் குறிக்கும் பொருள் தந்திரம்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா?

Question 1.
பெருவெள்ளம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………………
அ) பெருமை + வெள்ளம்
ஆ) பெரு + வெள்ளம்
இ) பெரு + வுள்ளம்
ஈ) பெரிய + வெள்ளம்
Answer:
அ) பெருமை + வெள்ளம்

Question 2.
தங்கியிருந்த இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………………
அ) தங்கி + இருந்த
ஆ) தங்கி + யிருந்த
இ) தங்கியி + ருந்த
ஈ) தங்கு + இருந்த
Answer:
அ) தங்கி + இருந்த

Question 3.
அமைந்துள்ளது இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………………
அ) அமைந் + துள்ளது
ஆ) அமைந்து + உள்ளது
இ) அமைந்து + ள்ளது
‘ஈ) அமைந் + உள்ளது
Answer:
ஆ) அமைந்து + உள்ளது

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Question 4.
அரசு + ஆட்சி என்பதைச் சேர்த்து கிடைக்கும் சொல் …………………………
அ) அரசஆட்சி
ஆ) அரசாட்சி
இ) அரசுசாட்சி
ஈ) அரசு ஆட்சி
Answer:
ஆ) அரசாட்சி

Question 5.
நீர் + பாசனம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………………
அ) நீர்பாசனம்
ஆ) நீர்ப்பாசனம்
இ) நீரப்பசனம்
ஈ) நீர்பாசனம்
Answer:
ஆ) நீர்ப்பாசனம்

பந்தை அதன் எதிர்ச்சொல் கூடையில் போடலாமா?
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை - 2
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை - 3

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

சரியானதை எடுத்து எழுதுக

1. கல்லணை அமைந்துள்ள மாவட்டம் ………………………… (திருச்சி/ தஞ்சாவூர்)
Answer:
தஞ்சாவூர்

2. தமிழ்நாட்டில் காவிரியின் முக்கிய துணையாறு ………………………… (வைகை / கொள்ளிடம்)
Answer:
கொள்ளிடம்

3. கல்லணையைக் கட்டிய அரசன் ………………………… . (கரிகாலன்/இராசராசன்)
Answer:
கரிகாலன்

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

4. கல்லணை ………………………… தொழில்நுட்பத்திற்குச் சிறந்த சான்றாகத் திகழ்கிறது. (பழந்தமிழர்/இன்றைய)
Answer:
பழந்தமிழர்

வினாக்களுக்கு ஏற்ற விடையளிக்க

Question 1.
கரிகாலனின் இயற்பெயர் என்ன?
Answer:
கரிகாலனின் இயற்பெயர் வளவன்.

Question 2.
கரிகாலன் என்று பெயர் வரக் காரணம் என்ன?
Answer:
கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவருக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவருக்கு வழங்கலாயிற்று.

Question 3.
கரிகாலன் கல்லணையைக் கட்ட காரணம் யாது?
Answer:
காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வரும். ஆனால் அந்த நீர் எதற்கும் பயன்படாமல் கடலுக்குச் சென்றுவிடும். மக்கள் மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்காலும், கோடைக்காலத்தில் நீர் இன்றியும் மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதனைத் தடுக்கும் பொருட்டு பெரியதோர் அணையைக் கட்டினான்.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Question 4.
கல்லணையின் சிறப்பாக நீ நினைப்பதை எழுதுக.
Answer:
தற்போது பயன்பாட்டில் உள்ள மிகப்பழமையான ஒரே அணை கல்லணை. இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத்திட்டம் எனவும் கூறப்படுகிறது. மணலில் அடித்தளம் அமைத்துக் கட்டியுள்ளார்கள். இது பழந்தமிழரின் தொழில் நுட்பத்திற்குச் சான்றாகும். இன்று வரை இது வியத்தகு சாதனையாக உள்ளது.

மொழியோடு விளையாடு

ஒரே எழுத்தைக் கண்டுபிடி, நான்கு சொல்லைப் பெறலாம்
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை - 4
Asnwer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை - 5

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

செயல் திட்டம்

Question 1.
நூலகத்திற்குச் சென்று வரலாற்று நூல்களைப் படித்து யாரேனும் ஐந்து அரசர்களின் பெயர்களையும், அவர்கள் செய்த நற்செயல்களையும் தெரிந்து கொண்டு அட்டவணையை நிரப்பி வருக.
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை - 6
Answer:
Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை - 7

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக

Question 1.
கல்லணை திருச்சியிலிருந்து ………………………… கி.மீ. தொலைவில் உள்ளது.
அ) 15
ஆ) 20
இ) 10
ஈ) 25
Answer:
ஆ) 20

Question 2.
மணிமொழியும், கனிமொழியும் ………………….. க்குச் சென்றனர்.
அ) திருச்சி
ஆ) பெரியகோவில்
இ) கல்லணை
ஈ) வேலூர்
Answer:
இ) கல்லணை

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Question 3.
கரிகாலன் ………………………… யின் மகன் ஆவான்
அ) வீரய்ய ன்
ஆ) பொம்மு நாயக்கர்
இ) இராஜராஜன்
ஈ) இளஞ்சேட் சென்னி
Answer:
ஈ) இளஞ்சேட் சென்னி

Question 4.
உலகின் மிகப் பழமையான ஆணை …………………..ஆகும்.
அ) மேட்டூர் அணை
ஆ) பவானி சாகர் அணை
இ) கல்லணை
ஈ) வைகை அணை
Answer:
இ) கல்லணை

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Question 5.
காவிரி ஆறு ………………….. ஆகப் பிரிகிறது.
அ) 3
ஆ) 5
இ) 4
ஈ) 6
Answer:
இ) 4

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
கல்லணை எங்கு உள்ளது?
Answer:
கல்லணை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. இது திருச்சியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Question 2.
கல்லணை கட்டப்பட்ட முறையை எழுதுக.
Answer:

  • காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டு வந்து போட்டனர். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாகக் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன.
  • அந்தப் பாறையின் மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கறையாத ஒரு வித ஒட்டும் களிமண்ணைப் பூசி, இரண்டும் ஒன்றோடும் ஒன்று ஒட்டிக் கொள்ளும்படி செய்தனர்.

Question 3.
கல்லணை எப்போது கட்டப்பட்டது?
Answer:
கல்லணை இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

Question 4.
காவிரி ஆறு எந்தெந்த ஆறுகளாகப் பிரிகிறது?
Answer:

  • காவிரி
  • கொள்ளிடம்
  • வெண்ணாறு
  • புது ஆறு.

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை

Question 5.
கல்லணை பயன்பெறும் மாவட்டங்கள் யாவை?
Answer:
திருச்சி, தஞ்சாவூர்.

அகர முதலி

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை - 8

Samacheer Kalvi 4th Tamil Guide Chapter 9 கரிகாலன் கட்டிய கல்லணை - 9

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.5

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 3 Chapter 6 Fraction Ex 6.5 Textbook Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 3 Chapter 6 Fraction Ex 6.5

I. Choose the appropriate picture given below for the fraction \(\frac { 2 }{ 4 }\)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.5 1
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.5 2
Hint:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.5 3

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.5

II. Choose the appropriate picture given below for the fraction \(\frac { 1 }{ 2 }\)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.5 5
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.5 6
Hint:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.5 7

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.5

III. choose the equivalence according to the fraction given against the pictures
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.5 8
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.5 9

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.4

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 3 Chapter 6 Fraction Ex 6.4 Textbook Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 3 Chapter 6 Fraction Ex 6.4

I. Write suitable fractions as \(\frac{1}{4} \cdot \frac{1}{2} \cdot \frac{3}{4}\) in the circle given below against the pictures.
(i)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.4 1
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.4 2

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.4

(ii)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.4 3
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.4 4

(iii)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.4 5
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.4 6

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.4

(iv)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.4 7
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.4 8

(v)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.4 9
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.4 10

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.4

(vi)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.4 11
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.4 12Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.4 12

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.3

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 3 Chapter 6 Fraction Ex 6.3 Textbook Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 3 Chapter 6 Fraction Ex 6.3

I. Colour three fourth of the following pictures
(i)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.3 1
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.3 2

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.3

(ii)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.3 3
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.3 4

(iii)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.3 5
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.3 6

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.3

(iv)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.3 7
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 Fraction Ex 6.3 8