Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.2 அறிவியலால் ஆள்வோம்

Students can Download 6th Tamil Chapter 3.2 அறிவியலால் ஆள்வோம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 3.2 அறிவியலால் ஆள்வோம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.2 அறிவியலால் ஆள்வோம்

Question 1.
‘அறிவியலால் ஆள்வோம்’ கவிதையை உரிய ஓசையுடன் படிக்க.
Answer:
ஆழக் கடலின் அடியில் மூழ்கி
ஆய்வுகள் செய்து பார்க்கின்றான்
நீல வானின் மேலே பறந்து
நிலவில் வாழ நினைக்கின்றான்
செயற்கைக் கோளை விண்ணில் ஏவி
செய்தித் தொடர்பில் சிறக்கின்றான்
இயற்கை வளமும் புயலும் மழையும்
எங்கே என்று உரைக்கின்றான்
எலும்பும் தசையும் இல்லாது இயங்கும்
எந்திர மனிதனைப் படைக்கின்றான்
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.2 அறிவியலால் ஆள்வோம் 1
இணைய வலையால் உலகம் முழுமையும்
உள்ளங் கையில் கொடுக்கின்றான்
உறுப்பை மாற்றும் மருத்துவம் கண்டு
உடலும் உயிரும் காக்கின்றான்.
அணுவைப் பிளந்து ஆற்றலை எடுத்து
அனைத்தும் செய்து பார்க்கின்றான்.
நாளை மனிதன் கோள்களில் எல்லாம்
நகரம் அமைத்து வாழ்ந்திடுவான்
வேளை தோறும் பயணம் செய்ய
விண்வெளிப் பாதை அமைத்திடுவான்.

Question 2.
உங்களைக் கவர்ந்த அறிவியல் சாதனங்கள் நான்கினை எழுதுக.
Answer:
துணி துவைக்கும் இயந்திரம், மாவு அரைக்கும் இயந்திரம், கைப்பேசி, வானொலி, மின்விசிறி, விமானம், கணினி, மின் அடுப்பு, இயந்திர மனிதன்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.2 அறிவியலால் ஆள்வோம்

Question 3.
‘அலைபேசியால் நன்மையே’ என்னும் தலைப்பில் வகுப்பில் கலந்துரையாடல் செய்க.
Answer:
மாணவன் 1 : வணக்கம். மனிதன் தோன்றிய காலத்திலேயே தகவல் பரிமாற்றம் தோன்றிவிட்டது. தீ, ஒலி, சைகை என்பவற்றின் மூலம் தகவல் தொடர்பை ஆரம்பித்தான் மனிதன். பின்பு வளர்ந்து அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப தபால், தந்தி, வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி என்றுவளர்ந்துள்ளது. மின்னணுவியலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள கருவியே அலைபேசியாகும். இதனை ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் இன்று எல்லோர் கையிலும் அலைபேசி நடனமாடுகிறது இதன் நன்மைகள் ஏராளம்.

மாணவன் 2 : செல் பேசி, செல்லிடப்பேசி எனப் பல பெயர்களில் அழைக்கப்படும். அலைபேசியின் நன்மைகளைப் பற்றி எனக்குத் தெரிந்தவற்றைக் – கூறுகிறேன் கேள். முன்பெல்லாம் ஒரு செய்தியை உறவினர்க்கோ , நண்பர்களுக்கோ தெரிவிக்க வேண்டுமெனில், அது மிகவும் கடினம். கடிதம் மூலமாகத் தெரிவிக்க வேண்டுமெனில் ஒரு வாரக்காலம் ஆகும். ஆனால் இன்று ஒரு நொடியில் செல்பேசியின் மூலம் தெரிவித்து விடுகின்றோம்.

மாணவன் 1 : ஆமாம்! சரியாகச் சொன்னாய். இப்போது செல்பேசி இல்லாதவர்களே
இல்லை என்ற நிலை வந்துவிட்டது. தத்துவமேதையான தந்தை பெரியார் “இனி எதிர்காலத்தில் ஒவ்வொருவரின் சட்டைப் பையிலும் ஒரு தந்திக் கருவி இருக்கும்” என்று எண்பது ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளதுதான் நினைவிற்கு வருகிறது. ஒரு வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை ஐந்து பேர் எனில் செல்பேசியின் எண்ணிக்கை ஏழு, எட்டு என்று உள்ளது.

மாணவன் 2 : நீ கூறுவதிலிருந்து தெளிவாக தெரிவது என்னவெனில் பல நன்மைகள் இருப்பதால்தான் மக்கள் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். செய்தியை உடனுக்குடன் தெரிவிக்கப் பயன்படுகிறது. பல குற்றச் செயல்களைக் கண்டறியவும் குற்றவாளிகளின் இருப்பிடத்தைக் கண்டறியவும் காவல்துறைக்கு மிகவும் உறுதுணையாகவும் உள்ளது. விபத்து நேர்ந்தாலோ பயணங்களில் இடையூறுகள் ஏற்பட்டாலோ அவற்றிற்குத் தீர்வு காண முடிகின்றது. வெளிநாடுகளில் உள்ள நம் உறவினர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள முடிகின்றது.

மாணவன் 1 : அது மட்டுமா… பள்ளிப் பருவத்தோடு பிரிந்த மாணவ நண்பர்களுடனும், கல்லூரி நண்பர்களுடனும் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று சேர்ந்து விழா எடுக்கவும் செல்பேசி பயன்படுகிறது. இதுபோலதொலைந்து போன நட்பை மீட்டுக் கொள்ளவும் செல்பேசி பயன்படுகிறது. இதுமட்டுமின்றி நண்பர்கள், உறவினர்கள் என அனைவரின் செல்பேசி எண்களைப் பதிவு செய்து வைத்துள்ளோம். திடீரென நேரும் விபத்துகளில் ஆபத்தான நிலையில் உள்ளவர்களின் மருத்துவச் செலவிற்கு உதவி கேட்டல் பொருட்டு செய்தியைப் பகிர்வதன் மூலம் அவர்களுக்கு உதவி கிடைக்கிறது.

மாணவன் 2 : சரியாகச் சொன்னாய்! ஆனால் செல்பேசியினால் நன்மைகள் மட்டுமா
உள்ளன? தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது.

மாணவன் 1: நம்மால் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து அறிவியல் சாதனங்களினாலும் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. நாம்தான் அதை நன்மைக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும்.
நன்றி!

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
அவன் எப்போதும் உண்மையையே ………………
அ) உரைக்கின்றான்
ஆ) உழைக்கின்றான்
இ) உறைக்கின்றான்
ஈ) உரைகின்றான்
Answer:
அ) உரைக்கின்றான்

Question 2.
ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..
அ) ஆழமான + கடல்
ஆ) ஆழ் + கடல்
இ) ஆழ + கடல்
ஈ) ஆழம் + கடல்
Answer:
ஈ) ஆழம் + கடல்

Question 3.
விண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) விண் + வளி
ஆ) விண் + வெளி
இ) விண் + ஒளி
ஈ) விண் + வொளி
Answer:
ஆ) விண் + வெளி

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.2 அறிவியலால் ஆள்வோம்

Question 4.
நீலம் + வான் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………
அ) நீலம்வான்
ஆ) நீளம்வான்
இ) நீலவான்
ஈ) நீலவ்வான்
Answer:
இ) நீலவான்

Question 5.
இல்லாது + இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………..
அ) இல்லாது இயங்கும்
ஆ) இல்லாஇயங்கும்
இ) இல்லாதியங்கும்
ஈ) இல்லதியங்கும்
Answer:
இ) இல்லாதியங்கும்

நயம் அறிக

Question 1.
பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எழுதுக.
Answer:
ழ்க்கடல் – ய்வுகள்
நீல – நிலவில்
லும்பு – ந்திர மனிதன்
றுப்பை – யிரும்
ணுவை –  அகிலம்
லகம் – ள்ளங்கை
செயற்கை – செய்தி
நாளை – கரம்
வேளை – விண்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.2 அறிவியலால் ஆள்வோம்

Question 2.
பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எழுதுக.
Answer:
நீ – நிவில்
கம் – உள்ளங்கையில்
செற்கை – செய்தி – இற்கை

Question 3.
பாடலில் இடம்பெற்றுள்ள இயைபுச் சொற்களை எழுதுக.
Answer:
பார்க்கின்றான், பதிக்கின்றான், படைக்கின்றான்
காக்கின்றான், இயக்குகிறான், அடக்குகிறான்
சிறக்கின்றான், சொல்கின்றான்,
வாழ்ந்திடுவான், அமைத்திடுவான்

சிறுவினா

Question 1.
செயற்கைக்கோள் எவற்றுக்கு எல்லாம் பயன்படுகிறது?
Answer:
(i) செயற்கைக் கோள்களின் உதவியுடன் செய்தித் தொடர்பு மிகவும் எளிமையடைந்துள்ளது. விரைவில் செய்திகளை அறிய முடிகிறது.
(ii) இயற்கை வளங்களையும், புயல், மழை ஆகியவற்றையும் கண்டறிய முடிகிறது.

Question 2.
நாளைய மனிதனின் வாழ்வு எவ்வாறு இருக்கும்?
Answer:
நாளைய மனிதன் விண்ணிலுள்ள கோள்களில் எல்லாம் நகரங்கள் அமைத்து வாழ்ந்திடுவான். அங்கு சென்று வருவதற்கான விண்வெளிப் பாதைகளையும் அமைத்திடுவான்.

சிந்தனை வினா

Question 1.
எவற்றுக்குப் புதிய கண்டுபிடிப்புகள் தேவை என்பது பற்றிச் சிந்தித்து எழுதுக.
Answer:
1. மருத்துவம்
2. விவசாயம்
3. கல்வி
4. இராணுவம்
5. போக்குவரத்து நெரிசல்
6. மீட்புப் பணிகள்
7. வனவிலங்குகள் நடமாட்டங்களை அறிய
8. இயற்கை முறையில் மின்சார உற்பத்தி
9. கட்டிட வேலைபாடுகளில் மனிதன் இல்லாமல் இயந்திரம் செய்ய புதிய கண்டுபிடிப்புகள் தேவை.
10. விண்வெளியில் மனிதன் வாழ விண்வெளி ஆய்வு
11. ஆழ்கடலில் மனிதன் செல்லாமல் ஆய்வு செய்ய வேண்டும்.
12. விண்ணில் உள்ள கோள்கள் ஆய்வு.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.2 அறிவியலால் ஆள்வோம்

Question 2.
இதுவரை எத்தனை கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன? அவை யாவை?
Answer:
விண்ணில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கோள்களின் எண்ணிக்கை – 9
அவை:
1. செவ்வாய்,
2. புதன்,
3. வியாழன்,
4. வெள்ளி,
5. சனி,
6. பூமி,
7. யுரேனஸ்,
8. நெப்டியூன்,
9. புளூட்டோ .

Question 3.
இந்தியா அண்மையில் நிலவுக்கு அனுப்பிய செயற்கைக்கோளின் பெயர் யாது?
Answer:
இந்தியா அண்மையில் நிலவுக்கு அனுப்பிய செயற்கைக்கோள் சந்திராயன் – 2.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.2 அறிவியலால் ஆள்வோம்

அறிவியல் ஆய்வுக்கு எல்லை இல்லை. மண்ணில் விண்ணில் கடலில் காற்றில் என எங்கும் ஆய்வு நிகழ்கிறது. மனிதனின் நகலாக எந்திர மனிதனை மனிதரே படைக்கின்றனர். மனித உடலின் பாகங்களையும் இயந்திரத்தின் பாகங்கள் போல் மாற்றுகின்றனர். கோள்கள் இனி நமக்குத் தொலைவு இல்லை. நேற்றைய மனிதன் நினைத்துப் பார்க்காத பலவற்றை இன்றைய மனிதன் நிகழ்த்திக் காட்டுகிறான். இன்றைய மனிதனின் கனவுகளை நாளை நாம் நனவாக்குவோம் வாருங்கள்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.1 அறிவியல் ஆத்திசூடி

Students can Download 6th Tamil Chapter 3.1 அறிவியல் ஆத்திசூடி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 3.1 அறிவியல் ஆத்திசூடி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.1 அறிவியல் ஆத்திசூடி

Question 1.
அறிவியல் ஆத்திசூடி’ பகுதியில் உங்களுக்குப் பிடித்த அடியை எழுதி அதன் காரணத்தைக் கூறுக.
Answer:
அறிவியல் ஆத்திசூடி பகுதியில் எனக்குப் பிடித்த அடிகள் :
1. ஈடுபாட்டுடன் அணுகு
2. ஏன் என்று கேள்

ஈடுபாட்டுடன் அணுகு : நாம் செய்யும் செயல்களை ஈடுபாட்டுடன் செய்தால் மட்டும் தான் சிறப்பாகச் செய்ய இயலும். எனவே ஒரு செயலைச் செய்வதற்கு ஈடுபாடு மிகவும் இன்றியமையாததாகும்.

ஏன் என்று கேள் : யார் எதைச் சொன்னாலும் கண்மூடித்தனமாகச் செம்மறியாட்டுக் கூட்டம் போல் எச்செயலையும் செய்யக்கூடாது. எதற்காகச் செய்கிறோம் என்பதை அறிந்து செய்ய வேண்டும்.

Question 2.
அறிவியல் சிந்தனையைத் தூண்டும் முழக்கத் தொடர்கள் ஐந்து உருவாக்குக.
எ.கா. அறிவியலை வளர்ப்போம்!
உலகை வெல்வோம்!
Answer:
அறிவியல் சிந்தனையைத் தூண்டும் முழக்கங்கள்
இயற்கையை அழிக்காமலே !
அறிவியலாய்வு செய்வோம்!
அவசியத்திற்குப் பயன்படுத்துவோம்!
நன்மைக்கு வழிகாட்டுவோம்!
அளவுடன் அனுபவிப்போம்!
தீமையை விட்டொழிப்போம்!
அணு ஆராய்ச்சி செய்வோம்!
அமைதியைக் காப்போம்!
மருத்துவத்தில் புதுமை காண்போம்!
நோய் நொடியின்றி வாழ்வோம்!

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
உடல் நோய்க்கு ……….. தேவை
அ) ஔடதம்
ஆ) இனிப்பு
இ) உணவு
ஈ) உடை
Answer:
அ) ஔடதம்

Question 2.
நண்பர்களுடன் ………….. விளையாடு
அ) ஒருமித்து
ஆ) மாறுபட்டு
இ) தனித்து
ஈ) பகைத்து
Answer:
அ) ஒருமித்து

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.1 அறிவியல் ஆத்திசூடி

Question 3.
‘கண்டறி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
அ) கண் + அறி
ஆ) கண்டு + அறி
இ) கண்ட + அறி
ஈ) கண் + டறி
Answer:
ஆ) கண்டு + அறி

Question 4.
‘ஓய்வற’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) ஓய்வு + அற
ஆ) ஓய் + அற
இ) ஓய் + வற
ஈ) ஓய்வு + வற
Answer:
அ) ஓய்வு + அற

Question 5.
ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………….
அ) ஏன்என்று
ஆ) ஏனென்று
இ) ஏன்னென்று
ஈ) ஏனன்று
Answer:
ஆ) ஏனென்று

Question 6.
ஔடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………….
அ) ஒளடதமாம்
ஆ) ஔடதம் ஆம்
இ) ஓளடதாம்
ஈ) ஔடத ஆம்
Answer:
அ) ஔடதமாம்

எதிர்ச்சொற்களைப் பொருத்துக

அணுகு × தெளிவு
ஐயம் × சோர்வு
உண்மை × பொய்மை
உண்மை × விலகு

விடை :
அணுகு × விலகு
ஐயம் × தெளிவு
ஊக்கம் × சோர்வு
ஊக்கம் × பொய்மை

பாடல் வரிகளுக்கேற்றவாறு முறைப்படுத்துக

1. சிந்தனை கொள் அறிவியல் ……………………..
விடை : அறிவியல் சிந்தனை கொள்.

2. சொல் தெளிந்து ஐயம் …………………………….
விடை : ஐயம் தெளிந்து சொல்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.1 அறிவியல் ஆத்திசூடி

3. கேள் ஏன் என்று ……………………….
விடை : ஏன் என்று கேள்.

4. வெல்லும் என்றும் அறிவியலே ………………………..
விடை : அறிவியலே என்றும் வெல்லும்.

குறுவினா

Question 1.
மனிதர்களுக்கு மருந்தாக விளங்குவது எது?
Answer:
மனிதர்களுக்கு மருந்தாக விளங்குவது அனுபவம்.

சிறுவினா

Question 1.
பாடலின் கருத்தை உனது சொந்த நடையில் எழுதுக.
Answer:
(i) அறிவியல் பற்றிய சிந்தனைகளை மேற்கொள்ள வேண்டும்.
(ii) ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.
(iii) தெளிவாக நம்மால் முடிந்தவரை புரிந்துகொள்ள வேண்டும்.
(iv) அனைத்து செயல்களையும் ஆர்வத்துடன் அணுகிச் செய்ய வேண்டும்.
(v) உண்மைத் தன்மையைக் கண்டறிய வேண்டும். முயற்சியே வெற்றி தரும் என்பதை உணர வேண்டும்.
(vi) அறிவியல் எப்போதும் வெல்லும். எதனையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் ஏன்? என்று வினா எழுப்பி புரிந்துகொள்ள வேண்டும்.
(vii) சந்தேகமின்றி தெளிவாகப் பேச வேண்டும். அனைவருடனும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். இடைவிடாமல் உழைக்க வேண்டும்.
(viii) மனிதர்களுக்கு அவரவர் அனுபவமே மருந்தாகும்.

சிந்தனை வினா

Question 1.
உங்களுக்குத் தெரிந்த மருத்துவ முறைகள் யாவை?
Answer:
(i) சித்த மருத்துவம்
(ii) ஓமியோபதி
(iii) ஆயுர்வேதம்
(iv) யுனானி
(v) அலோபதி
(vi) அக்குபஞ்சர்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.1 அறிவியல் ஆத்திசூடி

நூல் வெளி
‘தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்’ என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் நெல்லை சு.முத்து. இவர் அறிவியல் அறிஞர் மற்றும் கவிஞர். விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், சதிஷ்தவான் விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அறிவியல் கவிதைகள், கட்டுரைகள் பலவறைப் படைத்துள்ளார். எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.

சொல்லும் பொருளும்

1. இயன்றவரை – முடிந்தவரை
2. ஒருமித்து – ஒன்றுபட்டு
3. ஔடதம் – மருந்து

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 4.2 துன்பம் வெல்லும் கல்வி

Students can Download 6th Tamil Chapter 4.2 துன்பம் வெல்லும் கல்வி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 4.2 துன்பம் வெல்லும் கல்வி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 4.2 துன்பம் வெல்லும் கல்வி

Question 1.
பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள பாடலை இசையுடன் பாடி மகிழ்க்.
Answer:
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே – நீ
ஏன்படித்தோம் என்பதையும் மறந்து விடாதே
நாட்டின் நெறிதவறி நடந்து விடாதே – நம்
நல்லவர்கள் தூற்றும்படி வளர்ந்து விடாதே.

Question 2.
நூலகத்திற்குச் சென்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய வேறு பாடல் ஒன்றை எழுதி வருக.
Answer:
மனித சக்தி
சந்திரனைத் தொட்டதின்று
மனித சக்தி
சரித்திரத்தை மீறியது
மனித சக்தி
இந்திரன்தான் விண்ணாட்டின்
அரசனென்ற
இலக்கணத்தை மாற்றியது
மனித சக்தி
இந்திரனும் முடியரசாய்
இருக்கொணாது
எனும் குறிப்பைக் காட்டியது
மனித சக்தி
மந்திரமா வெறுங்கதையா
இல்லை ; இல்லை
மனித சக்தி.

Question 3.
‘ஏட்டுக் கல்வி மட்டும் கல்வி இல்லை ‘ என்னும் தலைப்பில் பேசுக.
Answer:
வணக்கம்! ‘ஏட்டுக் கல்வி மட்டும் கல்வி இல்லை’ என்ற தலைப்பில் பேச வந்துள்ளேன்.
ஏட்டுக் கல்வி மாணவர்களை ஒரு வகுப்பிலிருந்து அடுத்த வகுப்பிற்குச் செல்வதற்கான சோதனைப் பணிதான். முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களால் தனியாக ஓரிடத்திற்குச் செல்லவியலாது. சக மாணவர்களுடன் பழகுவதற்குக்கூடத் தெரியாது. பொது இடங்களில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று தெரியாது. பூட்டிய வீட்டைத் திறப்பதற்கு ஒரு திறவுகோல் எவ்வாறு பயன்படுகிறதோ அதே போன்று வாழ்க்கை என்ற வீட்டைத் திறப்பதற்கு ஏட்டுக்கல்வி பயன்படுகிறது. ஒருவன் படித்து மருத்துவராகவோ, பொறியாளராகவோ ஆவதற்கு மட்டும் கல்வி உறுதுணையாக இருக்கக் கூடாது. அவன் கற்ற கல்வி சமூக சிந்தனையை வளர்க்கும் விதமாக இருக்க வேண்டும். வாழ்க்கைக்குத் தேவையான திறன்களை வளர்க்கும் அனுபவக் கல்விதான் தேவை.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 4.2 துன்பம் வெல்லும் கல்வி

ஏட்டுக் கல்வியில் முதலிடம் பெற்ற மாணவன் வேலைக்குச் செல்ல வேண்டுமெனில் பல நேர்முகத் தேர்வுகளைச் சந்திக்கிறான். அவ்வாறு சந்திக்கும்போது அவனுக்குத் தேவை தகவல் பரிமாறும் திறன் (Communication Skill). அவனிடம் அத்திறன் இல்லையெனில் சுராவின் – தமிழ் உரைநூல் 1 6 ஆம் வகுப்பு ) இரண்டாம் பருவம் அவனுக்கு வேலை கிடைக்காது. அதனால் அதற்கென்று தனி வகுப்பு செல்கிறான். மாணவர்களின் திறமையைச் சோதிக்கும் தேர்வுகள் (aptitude test) இதற்கென்று தனிவகுப்புகள் செல்ல வேண்டியுள்ளது. அவன் படித்தக் கல்வியினால் ஒன்றும் செய்ய முடியவில்லை . அறுபது சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவன் பெரிய அலுவலங்களில் மிக எளிமையாகச் செல்கிறான். இவற்றால் நாம் அறிவது ஏட்டுக்கல்வியால் மட்டும் மாணவர்கள் முழுமையான கல்வியைப் பெறவியலாது.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
மாணவர் பிறர் …………. நடக்கக் கூடாது.
அ) போற்றும்படி
ஆ) தூற்றும்படி
இ) பார்க்கும்படி
ஈ) வியக்கும்படி
Answer:
ஆ) தூற்றும்படி

Question 2.
நாம் …………… சொல்படி நடக்க வேண்டும்.
அ) இளையோர்
ஆ) ஊரார்
இ) மூத்தோர்
ஈ) வழிப்போக்கர்
Answer:
இ) மூத்தோர்

Question 3.
கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) கையில் + பொருள்
ஆ) கைப்+பொருள்
இ) கை + பொருள்
ஈ) கைப்பு + பொருள்
Answer:
இ) கை + பொருள்

Question 4.
மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) மானம் இல்லா
ஆ) மானமில்லா
இ) மானமல்லா
ஈ) மானம்மில்லா
Answer:
ஆ) மானம்மில்லா

சொற்றொடரில் அமைத்து எழுதுக

1. மனமாற்றம் – பெற்றோர் கூறிய அறிவுரையைக் கேட்டு கந்தன் மனமாற்றம் அடைந்தான்.
2. ஏட்டுக் கல்வி – ஏட்டுக் கல்வியுடன் தொழிற்கல்வியும் பெறுதல் சிறப்பானது.
3. நல்லவர்கள் – நல்லவர்களுடன் சேர்ந்து பழகுதல் இன்பம் தரும்.
4. சோம்பல் – மாணவர்கள் சோம்பலின்றி சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும்.

குறுவினா

Question 1.
நாம் யாருடன் சேரக் கூடாது?
Answer:
நாம் தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக் கூடாது.

Question 2.
எதை நம்பி வாழக் கூடாது?
Answer:
பிறருடைய உழைப்பை நம்பி வாழக்கூடாது.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 4.2 துன்பம் வெல்லும் கல்வி

Question 3.
இந்தப் பாடலின் முதல் இரு வரிகள் நினைவூட்டும் திருக்குறள் எது?
Answer:
இந்தப் பாடலின் முதல் இரு வரிகள் நினைவூட்டும் திருக்குறள்.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

Question 4.
நாம் எவ்வாறு வாழ்ந்தால் பெருமை பெறலாம்?
Answer:
மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின்படி வாழ்ந்தால், அதன் மூலம் வெற்றிகளையும் விருதுகளையும் பெருமையையும் பெறலாம்.

சிறுவினா

Question 1.
நாம் எவ்வாறு வாழவேண்டும் எனப் பட்டுக்கோட்டையார் கூறுகிறார்?
Answer:
(i) நாம் நூல்களைக் கற்றதோடு இருந்துவிடக்கூடாது; கற்றதன் பயனை மறக்கக்கூடாது.
(ii) நம் நாட்டின் நெறி தவறி நடக்கக்கூடாது. நல்லவர்கள் குறை சொல்லும்படி வளரக்கூடாது.
(iii) பெரியோர் கூறும் அறிவுரைகளை மீறக்கூடாது. பிறரிடம் பழகும் முறையிலும் பேசும் முறையிலும் பண்பு நெறி மாறக்கூடாது.

(iv) பிறருடைய உழைப்பில் வாழக்கூடாது. தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக்கூடாது. துன்பத்தை நீக்கும் கல்வியினைக் கற்க வேண்டும். சோம்பலைப் போக்கிட வேண்டும்.

(v) பிறருடன் வம்பு செய்யும் வழக்கம் இருந்தால் அதை விட்டுவிட வேண்டும். வானைத் தொடும் அளவுக்கு அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

(vi) மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின்படி வாழ வேண்டும். அதன் மூலம் வெற்றிகளையும் விருதுகளையும் பெருமையையும் பெற வேண்டும்.

(vii) பெற்ற தாயின் புகழும் நம் தாய்நாட்டின் புகழும் அழியாத வகையில் வாழ வேண்டும். நாம் இவ்வாறு வாழ வேண்டும் எனப் பட்டுக்கோட்யைார் கூறுகிறார்.

சிந்தனை வினா

Question 1.
நீங்கள் படித்து என்னவாக விரும்புகிறீர்கள்? ஏன்?
Answer:
நான் படித்து மாவட்ட ஆட்சியராக விரும்புகிறேன். ஏனெனில் மாவட்ட ஆட்சியரின் பணி ஒரு மாவட்டத்தையே பாதுகாக்கும் பணியாகும். அவருடைய அனுமதியின்றி பொது இடங்களைப் பயன்படுத்த முடியாது. எந்த அரசியல் கட்சிகளும் அவரை வழிநடத்த முடியாது. மக்கள் வாழும் இருப்பிடங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வது முதல் ஏரி, குளங்கள் போன்ற நீர் நிலைகளைத் தூர்வாருதல் வரை அவருடைய இன்றியமையாதப் பணியாகும். அரசாங்கத்தின் கீழ் உள்ள அனைத்துத் துறைகளின் குறைகளை அவர் நினைத்தால் சரி செய்ய இயலும். அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்தும் அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கும்.

நான் மாவட்ட ஆட்சியரானால் அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர் மற்றும் செவிலியர்களை அழைத்து வாரம் ஒருமுறை அல்லது மாதம் இருமுறை நோய்களின் தன்மை குறித்தும் அவற்றிலிருந்து நாம் நம்மைப் பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தச் செய்வேன். பள்ளிகளில் தூய்மையாக இருப்பதின் அவசியத்தைக் கூறி பள்ளிகள் மூலம் மாணவர்களை அழைத்துக் கொண்டு சுத்தம் செய்ய வைப்பேன். நெகிழிப் பொருட்களைப் பற்றி விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவேன்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 4.2 துன்பம் வெல்லும் கல்வி

நிலம் கையகப்படுத்துதல், வரிப் பணம் நிலுவை, வேளாண் கடன்கள் நிலுவை இவையெல்லாம் இல்லாமல் செய்வேன். பஞ்சம் அல்லது தொற்று நோய்கள், இயற்கை அழிவுகளின் போது மருத்துவ முகாம் அமைத்து மக்களை நோய்கள் அணுகாமல் இருக்க வகை செய்வேன். சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் பாதுகாப்பேன். இந்தியாவிலேயே என் ஆட்சியின் கீழ் உள்ள மாவட்டம் முதலிடம் பெறுவதற்கு என்னால் ஆன எல்லாப் பணிகளையும் செய்வேன்.

கூடுதல் வினாக்கள்

பிரித்து எழுதுக.

1. கைப்பொருள் – கை + பொருள்
2. மானமில்லா – மானம் + இல்லா
3. குணமிருந்தால் – குணம் + இருந்தால்
4. வான்முகடு – வான் + முகடு

எதிர்சொல் எழுதுக.

1. மறந்து × நினைத்து
2. வளர்ந்து × தளர்ந்து
3. தூற்றும் × போற்றும்
4. கோழை × வீரன்
5. வெல்லும் × தோற்கும்
6. துன்பம் × இன்பம்
7. சோம்பல் × சுறுசுறுப்பு
8. வளர்ச்சி × வீழ்ச்சி
9. மேதை × பேதை

வினாக்கள் :

Question 1.
எவை வற்றாமல் வாழ்ந்திட வேண்டும்?
Answer:
பெற்ற தாயின் புகழும் நம் தாய்நாட்டின் புகழும் அழியாத வகையில் வாழ்ந்திட வேண்டும்.

Question 2.
மீறக்கூடாது, மாறக்கூடாது – எனப் பாடல் கூறுபவை எவை?
Answer:
(i) பெரியோர் கூறும் அறிவுரைகளை மீறக் கூடாது.
(ii) பிறரிடம் பழகும் முறையிலும் பேசும் முறையிலும் பண்புநெறி மாறக்கூடாது.

Question 3.
அறிவை எந்த அளவுக்கு வளர்த்துக் கொள்ள வேண்டும்?
Answer:
அறிவை வானைத் தொடும் அளவுக்கு வளர்த்துக் கொள்ள வேண்டும்.

Question 4.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – குறிப்பு எழுதுக.
Answer:
(i) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எளிய தமிழ் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர்.
(ii) திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர்.
(iii) மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 4.2 துன்பம் வெல்லும் கல்வி

நூல் வெளி
எளிய தமிழில் சமூகச் சீர்திருத்த கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் பட்டுக்கோட்டை கல்யணசுந்தரம். திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர். மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 4.1 மூதுரை

Students can Download 6th Tamil Chapter 4.1 மூதுரை Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 4.1 மூதுரை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 4.1 மூதுரை

Question 1.
கல்வியே அழியாச் செல்வம் என்னும் தலைப்பில் பேசுக.
Answer:
வணக்கம்! கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கு ஒப்பான சிறந்த செல்வம் வேறு எதுவுமில்லை. கல்வியை யாராலும் அழிக்க முடியாத செல்வமாகும். இளமையில் கல்’ என்பதை உணர்ந்திருக்க வேண்டும். இளம்வயதில் படிப்பது நம் மனதில் அப்படியே பசுமரத்தாணி போல் பதிந்துவிடும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கல்விதான் ஒருவனை அறிவாளி ஆக்குகிறது. அறியாமை எனும் இருட்டைக் கல்வி எனும் ஒளிதான் போக்குகிறது. நல்ல புத்தகங்கள் அறிவு கண்ணைத் திறக்கும் ஒரு திறவுகோல். கல்வி ஒருவனை மட்டும் மேம்படுத்தாது. அவனைச் சார்ந்தவர்களையும், சமுதாயத்தையும், ஏன் நாட்டையுமே அது உயர்த்த உதவும்.
சுராவின் – தமிழ் – 6 ஆம் வகுப்பு 7 இயல் 10 கண்ணெனத் தகும்

கல்வியின் பெருமையைப் பழம் பாடல் ஒன்று அழகாகப் பேசும். கல்வி என்பது அழியாத செல்வம். அது காலத்தால் அழியாது. கள்வராலும் கவர முடியாதது. வெள்ளத்தால் போகாது. தீயினாலும் வேகாது. கல்விச் செல்வம் தவிர ஏனைய செல்வங்களைக் கள்வர்கள் திருடிச் சென்றுவிட முடியும்; வெள்ளம் அடித்துக் கொண்டு போகும். தீ தனது செந்நிற ஒளியாய் பொசுக்க முடியும்.

ஒரு முறை பாரதியார் எட்டயபுர அரச சபையில் இருந்து தன் ஊருக்குத் திரும்பிச் சென்றார். அரசர் கொடுத்த பணத்தில் நல்ல நல்ல நூல்களை வாங்கி வந்தார். பாரதியின் மனைவி செல்லம்மா தன் கணவர் தமக்குப் பிடித்ததாய் வாங்கி வருவார் என்று ஆசையாக வாசலில் நின்றவாறு அவரது வரவை எதிர்நோக்கிப் பார்த்திருந்தார். ஆனால், தன் கணவரோ புத்தகங்களாக வாங்கி வந்ததைக் கண்டு சினம் கொள்கிறாள். சினம் கொண்ட மனைவியைப் பாரதியார் சமாதானப்படுத்துகிறார்.

கல்விச் செல்வம் அள்ள அள்ளக் குறையாது. கொடுத்தாலும் குறையாது. எடுத்தாலும் குறையாது.
“தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு”

இறைக்க இறைக்கச் சுரக்கும் நீர் போல அறிவானது கொடுக்கக் கொடுக்க வளர்ந்து கொண்டே இருக்கும். பெற்றோர்களுக்கு ஒரு வார்த்தை! உங்கள் குழந்தைக்குக் கல்வியின் – அவசியத்தைப் புரிய வையுங்கள். கற்பதில் விருப்பத்தை உண்டாக்குங்கள். “ஒரு பெண் கல்வி கற்றால் அது அவளது குடும்பத்துக்கே கற்பிப்பதுபோல்” என்பார் பாரதிதாசன்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 4.1 மூதுரை

கல்விதான் எது நல்லது? எது கெட்டது? எனப் பகுத்தறியக் கற்றுக் கொடுக்கும். ஒரு நாணயத்துக்கு இரு பக்கம் உண்டு என்பதையும் உணர வைக்கும். எந்த விஷயத்தையும் உற்று நோக்கக் கற்றுக் கொடுக்கும். சமயோசிதமாக நடந்து கொள்ளவும் கல்வியறிவே கைக் கொடுக்கிறது. இத்துடன் என் உரையை முடித்துக் கொள்கிறேன் நன்றி! வணக்கம்.

Question 2.
கல்வி பற்றிய பழமொழிகள் அல்லது பாடல் அடிகள் எவையேனும் இரண்டனைப் பெரியோர்களிடம் கேட்டு எழுதி வருக.
Answer:
(i) ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்.
(ii) ஓதுவது ஒழியேல்.
(iii) அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
(iv) இளமையில் கல்வி, கல் மேல் எழுத்து.
(v) எண் இல்லாதவர் கண் இல்லாதவர். எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
(vi) ஓதார்க்கு இல்லை. உணர்வோடு ஒழுக்கம்.
(vii) கல்வி அழகே அழகு.
(viii) கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
(ix) கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
மாணவர்கள் நூல்களை ………….. கற்க வேண்டும்.
அ) மேலோட்டமாக
ஆ) மாசுற
இ) மாசற
ஈ) மயக்கமுற
Answer:
இ) மாசற

Question 2.
இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) இடம் + மெல்லாம்
ஆ) இடம் + எல்லாம்
இ) இட + எல்லாம்
ஈ) இட + மெல்லாம்
Answer:
ஆ) இடம் + எல்லாம்

Question 3.
மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) மாச + அற
ஆ) மாசு + அற
இ) மாச + உற
ஈ) மாசு + உற
Answer:
ஆ) மாசு + அற

Question 4.
குற்றம் + இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) குற்றமில்லாதவர்
ஆ) குற்றம் இல்லாதவர்
இ) குற்றமல்லாதவர்
ஈ) குற்றம் அல்லாதவர்
Answer:
அ) குற்றமில்லாதவர்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 4.1 மூதுரை

Question 5.
சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) சிறப்பு உடையார்
ஆ) சிறப்புடையார்
இ) சிறப்படையார் –
ஈ) சிறப்பிடையார்
Answer:
ஆ) சிறப்புடையார்

குறுவினா

Question 1.
கற்றவரின் பெருமைகளாக மூதுரை கூறுவன யாவை?
Answer:
(i) மன்னனோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது கற்றவரே சிறந்தவர்.
(ii) மன்னனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு. ஆனால் கற்றவர்க்குச் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு.

சிறுவினா

Question 1.
கல்வியின் சிறப்பாக நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்?
Answer:
(i) கல்வி மனிதனை உயர்த்துகிறது. கல்வியும் செல்வமாகக் கருதத்தக்கது.
(ii) கல்வி பிறருக்குத் தந்தாலும் குறையாமல் வளரும்.
(iii) கல்வியைப் பிறரால் கைப்பற்றவோ அழிக்கவோ முடியாது.
(iv) அழியாச் செல்வமாகிய கல்வியைக் கற்றவன் எங்கும் எப்போதும் சிறப்புப் பெறுவான். மன்னனையும் குறை இல்லாமல் கற்றவரையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தால் மன்னனைவிடக் கற்றவரே சிறந்தவராகக் கருதப்படுவர்.
(v) மன்னனாக இருந்தாலும் அவனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு கிடைக்கும். ஆனால் கல்வி கற்றவர்க்குச் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு கிடைக்கும்.

சிந்தனை வினா

Question 1.
கல்லாதவருக்கு ஏற்படும் இழப்புகளைப் பட்டியலிடுக.
Answer:
கல்லாதவருக்கு ஏற்படும் இழப்புகள் :
(i) கல்லாதவர் எவராலும் மதிக்கப்பட மாட்டார். வீட்டில் பெரிய பிள்ளையாக இருந்தாலும் கற்கவில்லையெனில் பெற்றோர் அவனை
ஒரு பொருட்டாக நினைக்கமாட்டார்கள்.
(ii) நன்மை தீமைகளைப் பகுத்தறிய இயலாது. எல்லோராலும் இகழப்படுவான்.

கூடுதல் வினாக்கள்

Question 1.
மூதுரை – பெயர்க்காரணம் எழுதுக.
Answer:
மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள். சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது.

Question 2.
ஔவையார் இயற்றிய நூல்கள் யாவை?
Answer:
ஒளவையார் இயற்றிய நூல்கள் :
ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை.

Question 3.
ஔவையார் குறிப்பு எழுதுக.
Answer:
ஔவையார் என்ற பெயரில் பல பெண்பாற் புலவர்கள் இருந்துள்ளனர். சங்க காலம், இடைக்காலம், சோழர் காலம், பிற்காலம் எனப் பல காலங்களில் ஒளவையார் என்ற பெயரில் பலர் வாழ்ந்துள்ளனர். அதியமானுக்கு நெல்லிக்கனி கொடுத்த ஔவையாரும் மூதுரை பாடிய ஔவையாரும் வெவ்வேறு காலத்தவர் ஆவர்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 4.1 மூதுரை

நூல் வெளி
இந்நூலின் ஆசிரியர் ஔவையார். இவர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள். சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெற்றது. இந்நூலில் முப்பத்தொரு பாடல்கள் உள்ளன.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

Students can Download 6th Tamil Chapter 2.6 திருக்குறள் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 2.6 திருக்குறள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
மக்களுக்கு மகிழ்ச்சி தருவது ………
அ) ஊக்கமின்மை
ஆ) அறிவுடைய மக்கள்
இ) வன்சொல்
ஈ) சிறிய செயல்
Answer:
ஆ அறிவுடைய மக்கள்

Question 2.
ஒருவர்க்குச் சிறந்த அணி ..
அ) மாலை
ஆ) காதணி
இ) இன்சொல்
ஈ) வன்சொல்
Answer:
இ) இன்சொல்

பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக

Question 1.
இனிய …………….. இன்னாத கூறல்
கனியிருப்பக் ……………… கவர்ந் தற்று.
Answer:
உளவாக, காய்க்

Question 2.
அன்பிலார் …………….. தமக்குரியர் அன்புடையார்
………………. உரியர் பிறர்க்கு .
Answer:
எல்லாம், என்பும்

நயம் அறிக

Question 1.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
இந்தக் குறளில் உள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
மோனை சொற்கள் :
செயற்கரிய செய்வார்
செயற்கரிய செய்கலா

எதுகை சொற்கள் :
செயற்கரிய செய்வார்
செயற்கரிய செய்கலா
இந்தக் குறளில் அடி மோனை, அடி எதுகை சொற்கள் வந்துள்ளது.

பின்வரும் செய்திக்குப் பொருத்தமான திருக்குறள் எது எனக் கண்டறிந்து எழுதுக

2016 ஆம் ஆண்டு ரியோ நகரில் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் கலந்துகொண்டார். உயரம் தாண்டுதல் போட்டியில் அவர் தங்கப் பதக்கம் பெற்றார். செய்தியாளர்கள் அவருடைய தாயிடம் நேர்காணல் செய்தனர். “என் மகனின் வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி பி அளிக்கிறது. அவனைப் பெற்ற பொழுதைவிட இப்போது அதிகமாக மகிழ்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
அ) செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

ஆ) ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

இ) இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

விடை: ஆ) ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

குறுவினாக்கள்

Question 1.
உயிருள்ள உடல் எது?
Answer:
அன்பு இருப்பது தான் உயிருள்ள உடல், அன்பு இல்லாதவர்களின் உடல் வெறும் எலும்பும் தோலும்தான் என வள்ளுவர் கூறுகிறார்.

Question 2.
எழுத்துகளுக்குத் தொடக்கமாக அமைவது எது?
Answer:
அகரமே எழுத்துகளுக்குத் தொடக்கமாக அமையும் என வள்ளுவர் கூறுகிறார். அன்பிலார்,

Question 3.
அன்புடையார் செயல்கள் யாவை?
Answer:
அன்பிலார் : அன்பு இல்லாதவர்கள் உலகில் உள்ள எல்லா பொருள்களும் தனக்கே சொந்தம் எனக் கூறுவார்கள்.
அன்புடையார் : அன்பு உடையவர்கள் தம் உடம்பும் பிறர்க்கே சொந்தமென கூறுவார்கள்.

மொழியை ஆள்வோம்

கேட்டும் கண்டும் அறிந்தும் மகிழ்க.

Question 1.
இயற்கை சார்ந்த பாடல்கள், கதைகள், உரைகளைக் கேட்டு மகிழ்க.
Answer:
இயற்கை சார்ந்த பாடல்கள், கதைகள், உரைகளை மாணவர்கள் தாங்களாகவே கேட்டு அறிந்துகொள்ளுதல் வேண்டும்.

Question 2.
பறவைகள், விலங்குகளின் வாழ்க்கை முறை பற்றிய காணொலிக் காட்சிகளைக் கண்டு மகிழ்க.
Answer:
மாணவர்கள் பறவைகள், விலங்குகளின் வாழ்க்கை முறை பற்றி காணொலிக் காட்சிகளை தாங்களாகவே கண்டு அறிந்து கொள்ள வேண்டும்.

கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக

இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் அனைத்தும் ஒன்றிணைந்ததே இயற்கை என்கிறோம். பனிபடர்ந்த நீலமலைகள், பாடித்திரியும் பறவைகள், தன்னிச்சையாகச் சுற்றித்திரியும் விலங்குகள், சலசலக்கும் ஓடைகள், ஆர்ப்பரித்து வீழும் அருவிகள், நீந்தும் மீன்கள், அலைவீசும் அழகிய கடல், கண்சிமிட்டும் விண்மீன்கள், தங்க ஓடமாய்த்தவழ்ந்து வரும் வெண்ணிலா இவையெல்லாம் இயற்கை நமக்குத் தந்த பரிசு.

இயற்கையின் அழகைக் கண்டு இன்புற்றால் மட்டும் பேர்தாது. அந்த அழகை நாம் பாதுகாக்க வேண்டும். நாம் தமது தேவைக்காக மலைகள், காடுகள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை அழித்து வருகிறோம். மேலும் நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தி வருகிறோம். அதனால் இயற்கைச் சமநிலை மாறி புவி வெப்பமயமாகிறது. புவி வெப்பமடையாமல் காப்பது நமது கடமை. இயற்கையைப் பாதுகாத்தால் நாம் நம்மையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

Question 1.
எதனை இயற்கை என்கிறோம்?
Answer:
இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் அனைத்தும் ஒன்றிணைந்ததே இயற்கை என்கிறோம்.

Question 2.
இப்பத்தியில் உள்ள இயற்கையை வருணிக்கும் சொற்கள் யாவை?
Answer:
பனி படர்ந்த நீலமலைகள், பாடித்திரியும் பறவைகள், தன்னிச்சையாகச் சுற்றித்திரியும் விலங்குகள், சலசலக்கும் ஓடைகள், ஆர்ப்பரித்து வீழும் அருவிகள், நீந்தும் மீன்கள், அலைவீசும் அழகிய கடல், கண்சிமிட்டும் விண்மீன்கள், தங்க ஓடமாய்த் தவழ்ந்து வரும் வெண்ணிலா போன்றவை இயற்கையை வருணிக்கும் சொற்கள் ஆகும்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

Question 3.
இயற்கையை ஏன் பாதுகாக்க வேண்டும்?
Answer:
நாம் தமது தேவைக்காக மலைகள், காடுகள் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை அழித்து வருகிறோம். மேலும் நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தி வருகிறோம். அதனால் இயற்கைச் சமநிலை மாறி புவி வெப்பமயமாகிறது. புவி வெப்பமடையாமல் காப்பது நமது கடமை. இயற்கையைப் பாதுகாத்தால் நாம் நம்மையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

Question 4.
பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக.
Answer:
இயற்கை வளம்.

ஆசிரியர் கூறக்கேட்டு எழுதுக

1. மாமழை
2. வான் சிறப்பு
3. முரல் மீன்
4. வலசை போதல்
5. பறவை இனங்கள்
6 சார்பு எழுத்துகள்
7. சாண்டியாகோ
8. தோற்கடிக்க முடியாது
9. காணிநிலம்

கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரை எழுதுக

இயற்கையைக் காப்போம்
முன்னுரை:
இயற்கை என்பதே இயல்பாகவே உருவானவை. அவை இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள். அவற்றின் இயக்கம், அவை இயங்குகின்ற இடம், இயங்குகின்ற காலம் ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்து காட்சியளிப்பதே இயற்கையாகும். இயற்கையாய் உருவான நிலம், நீர், தீ, காற்று, வானம் என ஐம்பூதங்களால் ஆனது இவ்வுலகம்.

இயற்கை இன்பம் :
இயற்கை அன்னையின் அழகைக் காணக் கண் கோடி வேண்டும். பனிபடர்ந்த மலைகள், பச்சைப் பட்டாடை போர்த்தியும் அதில் வெள்ளிச் சரிகையாய் அருவிகளும் காண்போரைக் கவரும். பல விலங்கினங்களின் உறைவிடமாகத் திகழும் காடுகள், நீர்வாழ் விலங்கினங்களை வளர்க்கும் கடல், பல கோடி விண்மீன்களையும் சூரிய சந்திரனையும் தன்னகத்தே வைத்துள்ள வானத்தின் அதிசயத்தையும் கூறவியலாது.

இயற்கை இன்பத்தை இழக்கிறோம் :
இன்றைய நவீன வாழ்க்கை முறைகளால் இயற்கை மாற்றமடைகின்றது. மலைகளின் சரிவு, இயற்கைச் சீற்றங்களால் ஏற்பட்ட மாற்றங்கள் ஒரு பக்கம். மக்கள் தொகைப் பெருக்கத்தால் காடுகளையும், விளைநிலங்களையும் அழித்து வீடுகளாக்கினோம். தொழிற்சாலைக் கழிவுகளினால் நீரை மாசுபடுத்தினோம். நெகிழிப் பொருட்களை அளவுக்கதிகமாகப் பயன்படுத்தி நிலத்தை மாசுபடுத்தினோம். போக்குவரத்துச் சாதனங்களால் காற்றும் மாசுபட்டது. இவற்றால் புதிய நோய்கள் உருவாகிவிட்டன. வளரும் பிள்ளைகள் நோய்களோடு வளர்வதற்கு நாமே காரணமாகின்றோம்.

இயற்கைச் சூழல் :
வாழ்வின் அனைத்து அம்சங்களுமே ஒன்றொடொன்று தொடர்புடையவை ஆகும். மனிதர் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் ஒருவரையொருவர் சார்ந்தும் அனைவரையும் காத்துக் கொண்டிருக்கும் உயிர்ச்சூழலைச் சார்ந்துமே வாழ்கிறோம். அனைத்து உயிர்களும் அவற்றைக் காக்கின்ற உயிர்ச் சூழலும் மதிப்புமிக்கவையாக கருதப்படுகிறது. எனவே அவற்றை மதித்து அவற்றைக் காப்பது அவசியமாகும். வாழ்வின் அனைத்து நிலைகளிலும் இயற்கை வேண்டும். இயற்கை மருத்துவம், இயற்கை வேளாண்மை, இயற்கை உணவு என வாழ வேண்டும். இயற்கையான வழிகளில் நிலவளத்தைப் பெருக்கி வேளாண்மை செய்வதை அனைவரும் பின்பற்ற வேண்டும். பக்கவிளைவுகள், ஆபத்தான பின்விளைவுகள் உண்டாக்குகின்ற வேதிப்பொருட்களைத் தவிர்த்து விட வேண்டும். இயற்கையான மூலிகைகள், காய்கறிகள், பழங்களை விளைவிப்போம்.

முடிவுரை :
பொய்யாகவும் துன்பமாகவும் இருக்கும் செயற்கையைப் புறந்தள்ளிவிட்டு, மெய்யாகவும் இன்பமாகவும் இருக்கும் இயற்கையை ஏற்று நடப்போம். அணுத்தீமை, நீர்நிலை அழிப்பு, சுற்றுச்சூழல் கேடு எனப் பல்வேறு தீமைகளைத் தவிர்த்துவிட்டு, பசுமையான மாற்றுகளைக் கண்டறிந்து எதிர்காலத்தைத் தக்க வழிகளில் மாற்றியமைப்போம்.

மொழியோடு விளையாடு

திரட்டுக :
கடல் என்னும் பொருள் தரும் வேறு சொற்களைத் திரட்டுக.
1. அரி
2. அலை
3. ஆர்கலி
4. ஆழி
5. திரை
6. விரிநீர்
7. முந்நீர்
8. பரவை
9. சமுத்திரம்
10. அழவம்
11. பெருநீர்
12. பௌவம்

தொடர்களைப் பிரித்து இரண்டு தொடர்களாக எழுதுக

(எ.கா) பல நாள்களாக மழை பெய்யாததால் பயிர்கள் வாடின.
விடை : பல நாள்களாக மழை பெய்யவில்லை. பயிர்கள் வாடின.

Question 1.
கபிலன் வேலை செய்ததால் களைப்பாக இருக்கிறார்.
Answer:
கபிலன் வேலை செய்தார். களைப்பாக இருக்கிறார்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

Question 2.
இலக்கியா இனிமையாகப் பாடியதால் பரிசு பெற்றாள்.
Answer:
இலக்கியா இனிமையாகப் பாடினாள். பரிசு பெற்றாள்.

பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்குப் …………. என்று பெயர். (பறவை / பரவை)
2. இலக்கிய மன்ற விழாவில் முகிலன் சிறப்பாக ……….. ஆற்றினார். (உரை/ உறை
3. முத்து தம் ………… காரணமாக ஊருக்குச் சென்றார். (பனி / பணி)
4. கலைமகள் தன் வீட்டுத் தோட்டத்தைப் பார்க்க வருமாறு தோழியை ……… (அலைத்தாள் / அழைத்தாள்)
Answer:
1. பரவை
2. உரை
3. பணி
4. அழைத்தாள்

பொருத்தமான சொற்களால் கட்டங்களை நிரப்புக

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.6 திருக்குறள் 1

வரிசை மாறியுள்ள சொற்களைச் சரியான வரிசையில் அமைத்து எழுதுக)

Question 1.
இளங்கோவடிகள் காப்பியத்தை என்னும் இயற்றியவர் சிலப்பதிகாரம்.
Answer:
சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்.

Question 2.
மனிதன் உலகில் இல்லாத பறவை வாழ முடியாது.
Answer:
பறவை இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது.

Question 3.
மிகப்பெரிய சாண்டியாகோ மீனைப் பிடித்தார்.
Answer:
சாண்டியாகோ மிகப்பெரிய மீனைப் பிடித்தார்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

Question 4.
மனிதர் இந்தியாவின் டாக்டர் சலீம் அலி பறவை.
Answer:
இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி.

கட்டங்களில் சில சொற்கள் மறைந்துள்ளன. குறிப்புகளைக் கொண்டு அவற்றைக் கண்டுபிடித்து எழுதுக.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.6 திருக்குறள் 2
Questions.
1. இரட்டைக் காப்பியங்களில் ஒன்று……………..
2. முதலெழுத்துகளின் எண்ணிக்கை…………….
3. திங்கள் என்பதன் பொருள்……………….
4. சத்திமுத்தப் புலவரால் பாடப்பட்ட பறவை. ………………
5. பாரதியார் …………………. வேண்டும் என்று பாடுகிறார்.
6. ஆய்த எழுத்தின் வேறு பெயர்…………….
Answers:
1. மணிமேகலை
2. முப்பது
3. நிலவு
4. செங்கால் நாரை
5. காணி நிலம்
6. தனிநிலை

ஆய்ந்தறிக

Question 1.
பெருகிவரும் மக்களின் தேவைக்காக இயற்கையை அழிப்பது சரியா? இயற்கையைச் சுரண்டாமல், மக்களின் தேவைகளை நிறைவேற்ற மாற்று வழிகள் உண்டா?
Answer:
பெருகிவரும் மக்கள் தொகையின் காரணத்தினால் நமது தேவைகளும் பெருகிக் கொண்டே இருக்கின்றன. மனிதன் தோன்றியபோது அவன் கண்ட இயற்கைச் சூழலைக் கண்டு வியந்தான். அவற்றின் உதவியோடு வாழத் தொடங்கினான். காலப்போக்கில் நாகரிகம், பண்பாட்டு வளர்ச்சி எனப் பல படிநிலைகளில் மாற்றங்களைக் கண்டான்.

அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்சாதனப் பொருட்கள், நெகிழிப் பொருட்கள் இவற்றால் நம் சுற்றுச்சூழலை மாசுபடுத்திவிட்டோம். இயற்கையாக அமைந்த நிலம், நீர், காடு, காற்று என எல்லாவற்றையும் மாசுபடுத்தி விட்டோம்.

காடுகளை அழித்து வீடுகள் கட்டினோம். தொழிற்சாலைகளை வளர்த்து நீர், காற்று ஆகியவற்றைச் சீர் கேடாக்கினோம். நிலத்தையும் விட்டுவைக்கவில்லை. இவையெல்லாம் சீர் அழிந்ததால் தேனீ, சிட்டுக்குருவி போன்ற பல உயிரினங்கள் அழிவதற்குக் காரணமாகி விட்டோம். தேனீக்கள் வளர்வதற்கான காட்டுப் பகுதிகள் அழிக்கப்பட்டன. ஆறுகளில் மணல் எடுக்கப்பட்டுவதால் நீரின் அளவும் சுவையும் நாளுக்கு நாள் மாறி வருகிறது.

நம் முன்னோர்கள் இயற்கையின் முக்கியத்துவம் உணர்ந்தனர். அதனால் அவற்றைத் தெய்வமாக எண்ணி வழிபட்டனர். இயற்கைக்கு மாறாக நாம் பல வழிகளில் இயற்கை வளங்களைக் குறைத்து விட்டோம்.

இயற்கை வளங்கள் என்பது ஒன்றோடொன்றுதொடர்புடைய சங்கிலித்தொடர் போன்றது. காடுகள் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தும், மண் அரிப்பைத் தடுத்து நிறுத்தும், தட்ப வெப்பநிலையைச் சமமாக வைத்துக் கொள்ளும். காடுகள் அழிக்கப்படுவதால் தட்ப வெப்பநிலை மாற்றம் அடைகிறது. புவி வெப்பமயமாகிறது. பல்லுயிர்ப் பெருக்கம் அழிந்து வருகிறது. மழை வளம் குறைந்து விட்டது.

இவற்றை முற்றழிவிலிருந்து காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். நெகிழிப் பொருட்கள் உருவாக்குவதைத் தடுக்க வேண்டும். சுகாதாரத்திற்குக் கேடு விளைவிக்கும் மேம்பாடுகள், தொழிற்சாலைகள் போன்றவற்றுக்கு அரசு முடக்கம் தெரிவிக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் இயற்கையை நேசிக்க வேண்டும். இயற்கையைப் பாதுகாக்க, பசுமை அமைப்பு தோற்றுவிக்கப்பட வேண்டும். இந்தப் பசுமை அமைப்பு செழுமை, வளமை, தூய்மை என்ற அடிப்படையில் தனது திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

அவ்வப்போது இயற்கை பற்றிய விழிப்புணர்வைத் தூண்டுமாறு பிரச்சாரங்கள், கருத்தரங்குகள் நிகழ்த்த வேண்டும். காடுகளை அழிக்காமல், மலைகளைத் தகர்க்காமல், மண் வளத்தைச் சுரண்டாமல் செயற்கைக் கருவிகளால் கரியமிலவாயுவைப் பெருக்காமல் புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்து நீர்நிலைகளைப் பாதுகாத்து நிலங்களை வளப்படுத்துவோம். குறைந்து வரும் வேளாண் தொழிலை புதுமுறைக் கல்வித் துறைகளால் மேம்படுத்தி பூமியைக் காப்போம் என்று ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும்.

நாம் இல்லங்களில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மின் விளக்குகள், மின்விசிறிகள் போன்றவற்றைத் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை

அதிர வருவதோர் நோய்” என்ற வள்ளுவத்திற்கேற்ப எதிர்காலத் தலைமுறையினரின் சிறப்பான வாழ்க்கைக்கு வழிகாட்டுவோம். இயற்கையைப் போற்றி வாழ்வோம்.

கவிதை படைக்க

கீழே காணப்படும் மழை பற்றிய கவிதையைச் சொந்தத் தொடர்களால் நிரப்புக.
வானில் இருந்து வந்திடும்
மனதில் மகிழ்ச்சி தந்திடும்
…………………………………
………………………………..
………………………………..
விடை :
வானில் இருந்து வந்திடும்
மனதில் மகிழ்ச்சி தந்திடும்
ஆற்றில் வெள்ளம் பெருகிடும்
அணைகள் நிரம்பி வழிந்திடும்
நிலத்தடி நீரும் ஊறிடும்
பயிர்கள் செழிக்க உதவிடும்
இயற்கை எல்லாம் சிரித்திடும்
இன்பக் கடலில் ஆழ்த்திடும்
பட்ட மரங்கள் துளிர்த்திடும்
பாரே உன்னைப் போற்றிடும்.

நிற்க அதற்குத் தக….

என் பொறுப்புகள்…
அ) சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வேன்.
ஆ) இயற்கைப் பாதுகாப்பேன்.

கலைச்சொல் அறிவோம்

1. கண்ட ம் – Continent
2. தட்பவெப்பநிலை – Climate
3. வானிலை – Weather
4. வலசை – Migration
5. புகலிடம் – Sanctuary
6. புவிஈர்ப்புப்புலம் – Gravitational Field

கடவுள் வாழ்த்து

Question 1.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
Answer:
தெளிவுரை : அகரமே எழுத்துகளுக்குத் தொடக்கம். ஆதிபகவனே உலகுக்குத் தொடக்கம்.
விளக்கவுரை : தமிழ் எழுத்துகள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. அதுபோல இந்த உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.

வான் சிறப்பு

Question 2.
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி
Answer:
தெளிவுரை : மழை உரியகாலத்தில் பெய்யாது போனால், உலகத்து உயிர்களை எல்லாம் பசி துன்புறுத்தும்.
விளக்கவுரை : மழையானது தொடர்ந்து பெய்யப்படாமல் இருக்குமேயானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தமடையச் செய்யும்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

Question 3.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
Answer:
தெளிவுரை : உரிய காலத்தில் பெய்யாது கெடுப்பதும் மழைதான். உரிய காலத்தில் பெய்து காப்பதும் மழைதான்.
விளக்கவுரை : மழையானது பெய்யாமல் வாழ்வைக்கெடுக்க வல்லது; மழையில்லாமல் இருக்கும் காலங்களில் நம்முடைய இயற்கை வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் இருந்துக் காக்கக் கூடியதும் மழைதான். நீத்தார் பெருமை

Question 4.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
Answer:
தெளிவுரை : முடியாத செயலையும் முடித்துக் காட்டுபவர் பெரியோர்; முடியாத என்பவர் சிறியோர்.
விளக்கவுரை : மனிதனுக்குச் செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்ய வல்லவரே பெரியோர்களாகும். செய்வதற்கரிய செயல்களைச் செய்ய இயலாதவர்கள் எல்லாம் சிறியோர்கள் என்பர்.

மக்கட்பேறு

Question 5.
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது.
Answer:
தெளிவுரை : தம்மைவிடத் தம் பிள்ளைகள் அறிவுடையோர் என்றால் மக்களுக்கு அதுதான் மகிழ்ச்சி.
விளக்கவுரை : தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதைவிட உலகத்து.. உயிர்களுக்கு எல்லாம் மிகுந்த இன்பத்தைத் தரக்கூடியது ஆகும்.

Question 6.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
Answer:
தெளிவுரை : தன் பிள்ளையின் புகழைக் கேட்ட தாய் பெற்றெடுத்தபோது அடைந்த மகிழ்ச்சியைவிடப் பெருமகிழ்ச்சி அடைவாள்.
விளக்கவுரை : தன் மகனை நற்பண்புகள் நிறைந்தவன் என ஊரார் போற்றுவதைத் தன் காதால் கேட்டத் தாயானவள் தன்னுடைய மகனைப் பெற்ற நேரத்தில் மகிழ்ச்சி அடைந்ததைவிட இப்பொழுது பெரிதும் மகிழ்ச்சி அடைவாள்.

அன்புடைமை

Question 7.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு .
Answer:
தெளிவுரை : அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளும் எனக்கே என்பார்கள். அன்பு உடையவர்கள் தம் உடம்பும் பிறர்க்கே என்பார்கள்.
விளக்கவுரை : தன்னுடைய உள்ளத்தில் அன்பு இல்லாதவர்கள் எல்லாப் பொருள்களையும் தமக்கே சொந்தம் எனக் கொண்டு வாழ்வார்கள். உள்ளத்தில் அன்பு உடையவர்கள் தம் உடமையையும் மற்றவர்களுக்குச் சொந்தம் என வாழ்வார்கள்.

Question 8.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
Answer:
தெளிவுரை : அன்பு இருப்பதுதான் உயிருள்ள உடல். அன்பு இல்லாதது வெறும் எலும்பும் தோலும் தான்.
விளக்கவுரை : உள்ளமானது அன்பின் வழியாக இயங்குகின்ற உடம்பே உயிர்நின்ற உடம்பாகும். உள்ளத்தில் அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல் போர்த்திய வெற்று உடம்பே ஆகும்.

இனியவை கூறல்

Question 9.
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
Answer:
தெளிவுரை : பணிவும் இன்சொல்லுமே ஒருவருக்கு மிகச்சிறந்த அணி.
விளக்கவுரை : பணிவு மிக்கவர்களாகவும் இன்பம் தரும் சொல் வழங்குவோனாகவும் இருப்பதுவே ஒருவருக்கு மிகச் சிறந்த அணிகலனாகும். மற்ற உடம்பில் அணியும் அணிகலன்கள் அணிகலன்கள் ஆகாது.

Question 10.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
Answer:
தெளிவுரை : இனிய சொல் இருக்கும் போது இன்னாச்சொல் பேசுவது கனி இருக்கும்போது காயை உண்பதைப் போன்றது.
விளக்கவுரை : இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றைத் தவிர்த்துவிட்டுத் தீயச் சொற்களைக் கூறுதல் என்பது கனிகள் இருக்கும் போது அவற்றை விடுத்துக் காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றதாகும்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

நூல் வெளி
இந்நூல் மூன்று பிரிவுகளைக் கொண்டது அவை :
1. அறத்துப்பால் : இயல்-4 பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் 38 அதிகாரம் – 380 குறள்பாக்கள்
2. பொருட்பால் : இயல் 3 – அரசியல், அங்கவியல், ஒழிபியல் 70 அதிகாரம் – 700 குறட்பாக்கள்
3. இன்பத்துப்பால் : இயல் 2 – களவியல், கற்பியல் 25 அதிகாரம் – 250 குறள்
4. வேறுபெயர்கள் : முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், உலகப்பொதுமறை, வாயுறை வாழ்த்து.

 

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.5 முதலெழுத்தும் சார்பெழுத்தும்

Students can Download 6th Tamil Chapter 2.5 முதலெழுத்தும் சார்பெழுத்தும் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 2.5 முதலெழுத்தும் சார்பெழுத்தும்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.5 முதலெழுத்தும் சார்பெழுத்தும்

Question 1.
முதல் எழுத்துகள், சார்பு எழுத்துகள் தொடர்பைப் பற்றி விவாதிக்க.
Answer:
மாணவன் 1 : வணக்கம்! இன்று வகுப்பில் ஆசிரியர் இலக்கணம் கற்பித்ததில் எனக்கு 3 ஓர் ஐயம் உள்ளது. அதனைக் கொஞ்சம் தீர்த்து வைக்க இயலுமா.

மாணவன் 2 : உன்னுடைய ஐயம் என்னவென்று கூறு. என்னால் இயன்றவரை கூறுகிறேன். முதலெழுத்து, சார்பெழுத்து பற்றித்தானே!

மாணவன் 1 : ஆமாம்… ஆமாம்… முதலெழுத்து என்பது முப்பது. அவை உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மெய்யெழுத்துகள் பதினெட்டும் ஆகும்.

மாணவன் 2 : சரிதான். எழுதப்படுவதால் எழுத்து எனக் கூறப்படுகிறது. எழுத்துக்கள் ஒலி வடிவம், வரி வடிவம் என்ற இருவகை வடிவினை உடையன. இதில் வரி வடிவ எழுத்துகளையே நாம் முதலெழுத்து, சார்பெழுத்து என இருவகையாகப் பகுத்துக் கூறுகிறோம்.

மாணவன் 1 : முதலெழுத்து எனக் கூறக் காரணம் என்ன?

மாணவன் 2 : இம்முப்பது எழுத்துகள் இல்லாமல் தமிழ்மொழி இல்லை. ஆதலாலும் இவ்வெழுத்துகள் ஏனைய உயிர் மெய்யெழுத்துகள் பிறப்பதற்கு முதன்மையாய் இருப்பதாலும் இவை முதல் எழுத்துகள் எனப்பட்டன.

மாணவன் 1 : சார்பெழுத்து என்பது காரணப் பெயராகும். சார்ந்து வருதலாலே இப்பெயர் பெற்றுள்ளது. எழுத்துகள் ஒலி வடிவில் ஒன்றையொன்று சார்ந்து வருவதால் சார்பெழுத்தாயிற்று. சார்பெழுத்துகள் பத்து வகைப்படும். அவை உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக் குறுக்கம், ஔகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் என்பனவாகும்.

மாணவன் 2 : சரியாகக் கூறியுள்ளாய். மெய்யெழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன. உயிர்மெய் எழுத்தின் ஒலிவடிவம் மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும். வரிவடிவம் மெய்யெழுத்தை ஒத்திருக்கும். ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்திருக்கும். இவ்வாறு முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதால் இவை சார்பெழுத்து வகையுள் அடங்குகிறது. உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் 216 ஆகும்.

மாணவன் 1 : அடுத்ததாக உள்ள சார்பெழுத்து ஆய்த எழுத்து. இது மூன்று புள்ளிகளை உடையது. தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும். தனித்து இயங்காது. முதல் எழுத்துகளாகிய உயிரையும் மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆயிற்று.

மாணவன் 2 : இதேபோன்று உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக் குறுக்கம், ஔகாரக்குறுக்கம், மகரக் குறுக்கம் முதலியவை பிற எழுத்துகளின் சார்பினாலேயே ஓசையில் நீண்டும், ஓசையில் குறைந்தும் ஒலிக்கும். ஆதலால் இவை சார்பெழுத்துகள் எனப்பட்டன.

மாணவன் 1 : ஓசையில் நீண்டும், குறைந்தும் என்கிறாயா? அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்.

மாணவன் 2 : உயிரளபெடையும் ஒற்றளபெடையும் மாத்திரையளவில் நீண்டு
ஒலிக்கும். (எ.கா.) 1. உயிரளபெடை – தொழாஅர், கெடுப்பதூஉம்
2. ஒற்றளபெடை – கலங்கு.

மாணவன் 1 : ஓசை குறைதல் என்றாயே?

மாணவன் 2 : ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம், மகரக் குறுக்கம் ஆகியவை தன் மாத்திரை அளவில் குறைந்து ஒலிக்கும்.
(எ.கா.) ஐகாரக் குறுக்கம் – தலைவன்
ஔகாரக் குறுக்கம் – ஔவையார்
மகரக்குறுக்கம் – வரும் வண்டி
ஆய்தக் குறுக்கம் – அஃறிணை

இதேபோன்று குற்றியலுகரம், குற்றியலிகரம், இவையிரண்டும் தன் மாத்திரையளவில் குறைந்து ஒலிக்கும்.
(எ.கா.) குற்றியலுகரம் – காது, அஃது, பாக்கு
குற்றியலிகரம் – வீடு + யாது – வீடியாது, கேண்மியா,
சென்மியா.

மாணவன் 1 : முதலெழுத்து, சார்பெழுத்தைப் பற்றி இனிமேல் மறக்கவே முடியாது. அதுபோல நன்கு விளங்கும்படிக் கூறியுள்ளாய் மிக்க நன்றி.

Question 2.
முதல் எழுத்துகள் மட்டும் இடம்பெறும் சொற்களை எழுதுக
(எ.கா.) ஆம்
Answer:
முதல் எழுத்துகள் மட்டும் இடம்பெறும் சொற்கள் :
ஆம்
ஆள், ஆல், ஆண், ஆன், ஆய், ஆர்
உன், உண்,ஊழ், ஊண், ஊன், ஊர்
என், எண், எள், ஏன், ஏர், ஏண், ஏம், ஏல்
ஈர், ஓர்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.5 முதலெழுத்தும் சார்பெழுத்தும்

Question 3.
முதல் எழுத்துகள் இடம்பெறாத சொற்களை எழுதுக.
(எ.கா.) குருவி
Answer:
குருவி
கருவி, கனவு, கனி, கதை
மருவி, பணிவு, தனிமை, கவிதை
தருவி, கனிவு, பொதுமறை, பெருமை
தருக, வருக, தீமை, கருமை

மதிப்பீடு

Question 1.
முதல் எழுத்துகள் என்பவை யாவை? அவை எதனால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Answer:
உயிர் எழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும். பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே இவை முதல் எழுத்துகள் என்று அழைக்கப்படுகிறது.

Question 2.
சார்பெழுத்துகள் எத்தனை? அவை யாவை?
Answer:
சார்பெழுத்துகள் பத்து வகைப்படும். அவை.
1. உயிர்மெய்
2. ஆய்தம்
3. உயிரளபெடை
4. ஒற்றளபெடை
5. குற்றியலிகரம்
6. குற்றியலுகரம்
7. ஐகாரக்குறுக்கம்
8. ஒளகாரக்குறுக்கம்
9 மகரக்குறுக்கம்
10. ஆய்தக்குறுக்கம்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.5 முதலெழுத்தும் சார்பெழுத்தும்

Question 3.
சொற்களில் ஆய்த எழுத்து எவ்வாறு இடம்பெறும்?
Answer:
தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும், தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும். இது தனித்து இயங்காது. (எ.கா) : அஃது, இஃது

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.4 கிழவனும் கடலும்

Students can Download 6th Tamil Chapter 2.4 கிழவனும் கடலும் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 2.4 கிழவனும் கடலும்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.4 கிழவனும் கடலும்

Question 1.
கடல் காட்சி ஒன்றைப் படம் வரைந்து வண்ணம் தீட்டுக. அப்படத்திற்குப் பொருத்தமாக நான்கு வரிகளுக்குள் குறிப்பு எழுதுக.
Answer:
மாணவர்கள் கடல் காட்சி ஒன்றைப் படம் வரைந்து வண்ணம் தீட்டுதல்.
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.4 கிழவனும் கடலும் 1
படத்திற்கு பொருத்தமான தலைப்பு : கடல் வாழ் உயிரினங்கள்.
குறிப்பு : கடல் அலை – நண்டுகள் – மணல்வீடு – கடற்கரை மணல் – சூரியன் மறைதல்.

Question 2.
இக்கதையின் வழியாக நீங்கள் உணர்ந்தவற்றை வகுப்பில் பகிர்க.
Answer:
(i) முயற்சி செய்வதற்கு வயது வேறுபாடு இல்லை. எவ்வயதினராக இருந்தாலும் விடா முயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம் என்பதை இக்கதை மூலம் உணரலாம்.

(ii) எண்பத்து நான்கு நாட்கள் கிழவர் தினமும் கடலுக்குச் சென்று மீன் பிடிக்காமல் வந்தார். எண்பத்தைந்தாவது நாள் ஒரு பெரிய மீன் கிடைத்தது. அதனையும் எளிதில் அவரால் பிடிக்க இயலவில்லை. பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின்புதான் அதனையும் பிடிக்க முடிந்தது.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.4 கிழவனும் கடலும்

(iii) அந்த மீனையும் அவரால் முழுமையாக காப்பாற்ற முடியவில்லை சுறாமீன்களுக்கு இரையாக்கிவிட்டு தலையும் எலும்பும்தான் மிஞ்சியது. இவ்வளவு இடையூறுகள் ஏற்பட்டாலும் மனம் தளராமல் இருந்தார்.

(iv) இனிமேல் தன்னைப் பழித்துப் பேசமுடியாது என்று கூறினார். முயற்சி செய்து பயன் கிடைக்கவில்லை என்றாலும் உலகம் குறை கூறாது. ஆனால் முயற்சியே செய்யாமல் இருந்தால் பழிச் சொற்களைக் கேட்கும்படியதான சூழல் உண்டாகும்.

Question 3.
சாண்டியாகோ குறித்து உங்கள் கருத்து யாது?
Answer:
(i) சாண்டிய கோவயதில் முதிர்ந்தவர். பல நாட்கள் மீன்பிடிக்கச்சென்று மீன் கிடைக்காமல் கரையை அடைந்தவர். ஆனால் எண்பத்தைந்தாவது நாளில் ஒரு பெரிய மீன் கிடைக்கிறது. பலமணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அதனைப் பிடிக்கிறார். அதையும் சுறாமீன்களிடமிருந்து காப்பாற்ற முடியாமல் தலையும் எலும்பும் மட்டுமே எஞ்சியது.

(ii) இவ்வளவு இடையூறுகள் ஏற்பட்டும் தன்னை யாரும் பழித்துப் பேசக்கூடாது என்பதில் உறுதியுடன் இருந்தார். தன்மானம் மிக்கவராகத் திகழ்ந்தார்.
(iii) சாண்டியாகோ விடா முயற்சியும், ஊக்கமும் ஒருங்கே பெற்றவர். தன்மானம்மிக்கவர்.

மதிப்பீடு

Question 1.
கிழவனும் கடலும் படக்கதையை உங்கள் சொந்த நடையில் கதையாக எழுதுக.
Answer:
சாண்டியாகோ என்பவர் வயது முதிர்ந்த மீனவர். அவர் கடலுக்குச் சென்றால் மீன் இல்லாமல், திரும்ப மாட்டார். ஆனால் கடந்த எண்பத்து நான்கு நாள்களாக அவருக்கு ஒரு மீனும் கிடைக்கவில்லை . மனோலின் என்னும் சிறுவன் மீன் பிடிக்கக் கற்றுக் கொள்வதற்காக முதல் நாற்பது நாள்களும் அவருடன் கடலுக்கு வந்தான்.

அவன் அவருக்கு வேண்டிய உதவிகள் செய்ததோடு பேச்சுத் துணையாகவும் இருந்தான். அவரோடு கடலுக்குச் சென்றால் ஒரு மீனும் கிடைப்பதில்லை என்று அவனை அவனது பெற்றோர் வேறு படகிற்கு அனுப்பிவிட்டனர். அதிலிருந்து சாண்டியாகோ தனியாகவே மீன் பிடிக்கச் செல்கிறார்.

எண்பத்தைந்தாவது நாள் தனக்கு மீன்கள் கிடைக்கவே கிடைக்காது என்று எல்லோரும் சொல்கிறார்கள். அதை எப்படியாவது மாற்றிக் காட்ட வேண்டும் என எண்ணியபடி கடலில் தூண்டிலைப் போட்டுவிட்டுக் காத்துக் கொண்டிருந்தார். தூண்டிலில் சூரைமீனை மாட்டி வைத்திருந்தார். இரவு முழுவதும் காத்திருந்தார். மறுநாள் காலையிலும் மீன் இல்லாமல் திரும்பப் போவதில்லை என்ற முடிவுடன் இருந்தார்.

மதிய வேளையில் தூண்டில் கயிற்றை ஏதோ இழுப்பது போல் தெரிந்தது. மீன்தான் வந்திருக்கும் என நினைத்து மகிழ்ந்தார். தூண்டலில் சிக்கிய தூண்டிலை மீன் வேகமாக இழுத்தது. சாண்டியாகோவும் விடாமல் இழுக்கிறார். மீனோ சாண்டியாகோவைக் கடலுக்குள் இழுத்துத் தள்ளிவிடுவது போல் இழுத்தது. இப்படியாக நாலுமணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு களைத்துப் போய் சற்று கண்ணயர்ந்து விட்டார் சாண்டியாகோ.

மீன் மீண்டும் தூண்டிலை இழுத்தபோது சாண்டியாகோவின் உறக்கம் கலைந்தது. மீண்டும் சுறுசுறுப்பாக தூண்டிலை இழுத்தார். நீண்ட நேரம் போராடி ஒருவழியாக மீனைப் பிடிக்க முடியாமல் அதனை ஈட்டியில் குத்திக் கொன்று விடுகிறார். பிறகு பெரிய மீனாக இருந்ததனால் படகுக்குள் போட இயலாமல் படகின் பக்கவாட்டில் இழுத்துக் கட்டினார். தன்னுடைய விடாமுயற்சியின் பயனை உணர்ந்தார். படகைக் கரையை நோக்கிச் செலுத்தினார். அப்போது சுறாமீன்கள் இவர் படகில் கட்டி வைக்க மீனைச் சாப்பிடுவதற்காகச் சூழ்ந்தன. அவற்றைத் தன் ஈட்டியால் வீழ்த்தினார்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.4 கிழவனும் கடலும்

ஒரு வழியாகக் கரை சேர்ந்தார். இன்று நடந்த எல்லாவற்றையும் மனோலினுக்குச் சொல்ல வேண்டும் என்று எண்ணியபடி படகை இழுத்துக் கட்டினார். பிறகு படகோடு கட்டிய மீனைப் பார்த்தார். அது சுறாமீன்களால் உண்ணப்பட்டு அதன் தலையும் எலும்பும் தாம் மிஞ்சியிருந்தன.

சாண்டியாகோவைப் பார்க்க மனோலின் வந்தார். “அடேயப்பா! எவ்வளவு பெரிய மீன் அது! மீன் பிடிப்பதில் பெரிய வீரன் தாத்தா நீ!” என்றான் மனோலின். கிழவர் “நான் பிடித்த மீனைப் பார்த்தாயா?” கடைசியில் எலும்பும் தலையும்தான் மிச்சம்!” என்றார்.

மனோலின் “அதனால் என்ன தாத்தா? உன் திறமையும் விடாமுயற்சியும் வென்றுவிட்டதே! .9 இனி உன்னை யாரும் பழித்துப் பேச முடியாது தாத்தா! உன்னிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. இனி நான் உன்னோடுதான் மீன் பிடிக்க வருவேன்” 9 என்று கூறினான். இக்கதை மூலம் நாம் உணர்வது ‘விடாமுயற்சி வெற்றியைத் தரும்’ என்பதாகும்.
முதல் பருவம்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.3 சிறகின் ஓசை

Students can Download 6th Tamil Chapter 2.3 சிறகின் ஓசை Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 2.3 சிறகின் ஓசை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.3 சிறகின் ஓசை

Question 1.
உங்கள் பகுதியில் காணப்படும் பறவைகளின் பெயர்களைப் பட்டியலிடுக.
Answer:
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.3 சிறகின் ஓசை 1
1. காகம்
2. சிட்டுக்குருவி
3. குயில்
4. மைனா
5. இட்டைவால் குருவி
6. கொக்கு
7. நாரை
8. பருந்து
9. கழுகு
10. மயில்
11. மரங்கொத்தி
12. பச்சைக் கிளி

Question 2.
உங்கள் வீட்டுக்கு அருகில் பறவைகள் வருவதற்கு என்னென்ன செய்யலாம் என்பது பற்றி வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
குமரன் : முகிலா! இன்று எங்கள் வீட்டு மொட்டைமாடியில் நான்கைந்து குருவிகள் இருந்தன. பார்க்கவே அழகாக இருந்தன.

முகிலன் : அப்படியா? இப்போதெல்லாம் பறவைகளைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. முன்பெல்லாம் எங்கள் வீட்டிற்கருகில் பெரிய மரம் ஒன்று இருந்தது. அதனால் நிறைய பறவைகள் இருக்கும். இப்போதெல்லாம் வருவதே இல்லை. மரத்தையும் வெட்டிவிட்டார்கள். பெரிய தொழிற்சாலை கட்டிவிட்டார்கள். அந்த இரைச்சலுக்குப் பறவைகள் அச்சப்படுவதால் வருவதில்லை .

குமரன் : நீ சொல்வதும் சரிதான். நகரங்களின் வளர்ச்சியினால் இயற்கைச்சூழல் மாறிவிட்டது. இயற்கையை விற்று செயற்கையை வாங்கிவிட்டோம். அதன் விளைவுதான் இந்நிலைக்குக் காரணம்.

முகிலன் : பறவைகள் நமது நண்பன் என்பதை மறந்துவிட்டோம். அதை நாம் மாற்ற வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் எனச் சிந்திக்க வேண்டும்.

குமரன் : மாடிகளில் தானியங்களைத் தூவி விட வேண்டும். அருகில் சிறு சிறு து பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கலாம். வீட்டிற்கு ஒரு மரம் என்ற தொடரை மெய்ப்பிக்கும் படி மரம் நடுவோம். மாடியில் செயற்கையாகக் கூடுகள் அமைப்போம். அட்டைப் பெட்டிகளைப் பறவைகள் தங்குவதற்கு ஏதுவாகப் பயன்படுத்தலாம். குடியிருப்புகளின் நடுவில் உள்ள செல்பேசி கோபுரங்களை அகற்றுவதற்கு வழி செய்யலாம்.

முகிலன் : கோவில் திருவிழாக்கள், திருமண நிகழ்வுகள் போன்றவற்றில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்கலாம். கேழ்வரகு, நெல், கம்பு போன்ற சிறுதானியங்களை மாடிகளில் போட்டு வைக்கலாம். இவற்றைச் செய்தால் பறவைகள் தினமும் வரும். செயற்கைக் கூடுகள் இருப்பதால் இரவில் தங்குவதற்கும் வரும்.

குமரன் : இனிமேல் நாம் பேசியபடி செய்து பறவைகளின் வரவை அதிகரிக்கச் செய்வோம். நம் நண்பர்களிடம் கூறி அவர்களை இவ்வாறு செய்யச் சொல்லலாம்.

Question 3.
பறவைகள் தொடர்பான பழமொழிகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
பறவைகள் தொடர்பான பழமொழிகள் :
(i) கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?
(ii) காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
(iii) உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
(iv) எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
(v) எருது நோய் காக்கைக்குத் தெரியுமா?
(vi) கூரை மேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
(vii) சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.
(viii) சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை .

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.3 சிறகின் ஓசை

Question 4.
இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் முழக்கத் தொடர்களை எழுதுக.
எ.கா. காப்போம் காப்போம்! பறவைகளைக் காப்போம்!
Answer:
இயற்கையைப் பாதுகாக்கும் முழக்கங்கள் :
(i) காப்போம்! காப்போம் ! பறவைகளைக் காப்போம்!
(ii) காப்போம் ! காப்போம் ! விளைநிலங்களைக் காப்போம்!
(iii) சேமிப்போம் ! சேமிப்போம்! மழைநீரைச் சேமிப்போம்!
(iv) செய்வோம்! செய்வோம்! இயற்கை விவசாயம் செய்வோம்!
(v) தவிர்ப்போம் ! தவிர்ப்போம் ! நெகிழியைத் தவிர்ப்போம்!
(vi) மரங்களை நடுவோம்! இயற்கையை பாதுகாப்போம்!

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
‘தட்பவெப்பம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………
அ) தட்பம் + வெப்பம்
ஆ) தட்ப + வெப்பம்
இ) தட் + வெப்பம்
ஈ) தட்பு + வெப்பம்
Answer:
அ) தட்பம் + வெப்பம்

Question 2.
வேதியுரங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..
அ) வேதி + யுரங்கள்
ஆ) வேதி + உரங்கள்
இ) வேத் + உரங்கள்
ஈ) வேதியு + ரங்கள்
Answer:
ஆ) வேதி + உரங்கள்

Question 3.
தரை + இறங்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………….
அ) தரையிறங்கும்
ஆ) தரை இறங்கும்
இ) தரையுறங்கும்
ஈ) தரைய்றங்கும்
Answer:
அ) தரையிறங்கும்

Question 4.
வழி + தடம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………….
அ) வழிதடம்
ஆ) வழித்தடம்
இ) வழிதிடம்
ஈ) வழித்திடம்
Answer:
ஆ) வழித்தடம்

Question 5.
சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி ……………….
அ) துருவப்பகுதி
ஆ) இமயமலை
இ) இந்தியா
ஈ) தமிழ்நாடு
Answer:
அ) துருவப்பகுதி

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. மிக நீண்ட தொலைவு பறக்கும் பறவை ………
2. பறவைகள் வலசை போவதைப் பற்றிப் பாடிய தமிழ்ப்புலவர் ………..
3. பறவைகள் இடம்பெயர்வதற்கு ……………. என்று பெயர்.
4. இந்தியாவின் பறவை மனிதர் ………….
5. பறவைகள் வலசை போகக் காரணங்களுள் ஒன்று …….
Answer:
[விடை: ஆர்டிக் ஆலா]
(விடை: சத்தி முத்தப் புலவர்)
(விடை: வலசை போதல்)
(விடை: டாக்டர். சலீம் அலி)
(விடை: தட்ப வெப்ப நிலை மாற்றம்)

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.3 சிறகின் ஓசை

சொற்றொடர் அமைத்து எழுதுக

1. வெளிநாடு …………………
விடை : நம் நாட்டில் படித்துவிட்டு வெளிநாடு சென்று வேலை செய்வது நல்லது அன்று.
2. வாழ்நாள் …………………
விடை : வாழ்நாள் முழுவதும் உண்மை மட்டுமே பேசி வாழ்ந்தவன் அரிச்சந்திரன்.
3. செயற்கை ……………….
விடை : விவசாயத்தில் செயற்கை உரங்களை இடுவது மண்ணிற்குக் கேடு.

பொருத்தமான சொல்லைக் கொண்டு நிரப்புக

1. மரங்களை வளர்த்து ………… யைக் காப்போம் ………. உரங்களைத் தவிர்த்து நிலவளம் காப்போம் (செயற்கை / இயற்கை)
2. வலசைப் பறவைகள் வருகை தமிழகத்தில் ……… தற்போது சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை …………….. (குறைந்துள்ளது / மிகுந்துள்ளது)
Answer:
1. (விடை: இயற்கை, செயற்கை)
2. (விடை: மிகுந்துள்ளது, குறைந்துள்ளது)

குறுவினா

Question 1.
பறவைகள் எக்காரணங்களுக்காக இடம் பெயர்கின்றன?
Answer:
பறவைகள் இடம் பெயர்வதற்கான காரணங்கள் :
பறவைகள் உணவு, இருப்பிடம், தட்பவெப்பநிலை மாற்றம், இனப்பெருக்கம்
போன்றவற்றிற்காக இடம்பெயர்கின்றனள.

Question 2.
வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் யாவை?
Answer:
வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் :
(i) தலையில் சிறகுகள் வளர்தல்.
(ii) இறகுகளின் நிறம் மாறுதல்.
(iii) உடலில் கற்றையாக முடி வளர்தல்.

சிறுவினா

Question 1.
சிட்டுக் குருவியின் வாழ்க்கை பற்றிச் சிறு குறிப்பு எழுதுக.
Answer:
(i) சிட்டுக்குருவி கூடுகட்டி வாழும் பறவையினத்தைச் சார்ந்தது. கூடுகட்டும் காலங்களில் சத்தமிட்டுக் கொண்டே இருக்கும்.

(ii) கூடுகட்டிய பின் மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும். பதினான்கு நாள்கள் அடைகாக்கும். பதினைந்தாம் நாளில் குஞ்சுகள் வெளிவரும்.

(iii) துருவப் பகுதிகள் தவிர மனிதன் வாழும் இடங்களில் எல்லாம் சிட்டுக்குருவிகளும் வாழ்கின்றன. இந்தியா முழுவதும் சிட்டுக்குருவிகளைக் காணலாம். இமயமலைத் தொடரில் 4000 மீட்டர் உயரத்தில் கூட இவை வாழ்கின்றன.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.3 சிறகின் ஓசை

Question 2.
வலசைப் பறவைகளின் பயணம் பற்றி நீங்கள் அறிந்தவை யாவை?
Answer:
(i) பறவைகள் கண்டம் விட்டுக் கண்டம் பறக்கின்றன. அவை பெருங்கடல்களையும் மலைகளையும் கடந்து போகின்றன. குறிப்பிட்ட காலத்திற்குப் பிற்கு புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்கின்றன. பறவைகள் தங்களுக்கென ஒரு வழித்தடத்தைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பாதையிலேயே பறக்கின்றன.

(ii) சில பறவை இனங்கள் அதே பாதையில் தாய்நிலங்களுக்குத் திரும்புகின்றன. சில பறவை இனங்கள் போவதற்கும் வருவதற்கும் இருவேறு பாதைகளைப் பயன்படுத்துகின்றன.

சிந்தனை வினா

Question 1.
பறவை இனங்கள் அழியாமல் காப்பாற்றப்பட நாம் செய்ய வேண்டியவை பற்றிச் சிந்தித்து எழுதுக.
Answer:
(i) அழியும் நிலையில் உள்ள பறவைகளை அறிந்து அவற்றிற்குத் தேவையான உணவு, மருத்துவ உதவி செய்து இனப்பெருக்கத்தை அதிகப்படுத்த வேண்டும்
(ii) ஆல், அரசு போன்ற மரங்களையும் அவரை, புடலை போன்ற செடி, கொடிகளையும் வளர்க்கலாம்.
(iii) நமது மண்ணுக்கேற்ற பிறவகை உள்ளூர் தாவரங்களையும் வளர்க்கலாம்.
(iv) தோட்டங்களிலும் வயல்வெளிகளிலும் செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றைத் தெளிப்பதைத் தவிர்க்கலாம்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.2 காணி நிலம்

Students can Download 6th Tamil Chapter 2.2 காணி நிலம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 2.2 காணி நிலம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.2 காணி நிலம்
Question 1.
பாடலை ஓசைநயத்துடன் படித்து மகிழ்க.
Answer:
காணி நிலம் வேண்டும் – பராசக்தி
காணி நிலம் வேண்டும் – அங்குத்
தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் – அந்தக்
காணி நிலத்திடையே – ஓர் மாளிகை
கட்டித் தரவேண்டும் – அங்குக்
கேணி அருகினிலே – தென்னைமரம்
கீற்றும் இளநீரும்
பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும் – நல்ல
முத்துச் சுடர் போலே – நிலாவொளி
முன்பு வரவேணும் – அங்கு
கத்துங் குயிலோசை – சற்றே வந்து
காதில் படவேணும் – என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாய் இளம்
தென்றல் வரவேணும். – பாரதியார்

Question 2.
காணி என்பது நில அளவைக் குறிக்கும் சொல். இதுபோல நிலத்தை அளக்கப் பயன்படும் சொற்களைப் பட்டியலிடுக.
Answer:
நிலத்தை அளக்கப் பயன்படும் சொற்கள் : சென்ட், ஏக்கர், ஹெக்டேர், ஏர்ஸ், மர, குழி, வேலி.

Question 3.
என் கனவு இல்லம் என்னும் தலைப்பில் பேசுக.
Answer:
(i) ஒரு ஏக்கர் அளவில் இடம் வேண்டும். அங்கு மிகவும் அழகான ஒரு மாளிகை கட்ட வேண்டும். ஒவ்வொரு தூண்களும் மிகவும் அழகாக இருக்க வேண்டும்,
தூய்மையான நிறமுடைய மாடங்களையும் கொண்டிருக்க வேண்டும்.

(ii) நல்ல நீரையுடைய கிணறும் அங்கே இருக்க வேண்டும்.

(iii) மனிதனுக்குப் பயன் தரும் பல பழ மரங்களும், மூலிகைத் தாவரங்களும் இருக்க வேண்டும். காலையில் எழுந்ததும் சூரியனைப் பார்க்கும்படி வாசற்படி இருக்க வேண்டும். அங்கே முத்துபோன்ற நிலவொளி வீச வேண்டும்.

(iv) காதுக்கு இனிய குயிலோசையும். மற்ற பறவைகளின் ஓசையும் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
(v) மிக அழகாக மின்னும்படி மாளிகை போல் இருக்க வேண்டும். இதுவே என் கனவு இல்லமாகும்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
‘கிணறு’ என்பதைக் குறிக்கும் சொல் ………..
அ) ஏரி
ஆ) கேணி
இ) குளம்
ஈ) ஆறு
Answer:
ஆ) கேணி

Question 2.
‘சித்தம்’ என்பதன் பொருள் . ………..
அ) உள்ளம்
ஆ) மணம்
இ) குணம்
ஈ) வனம்
Answer:
அ) உள்ளம்

Question 3.
மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் ………….
அ) அடுக்குகள்
ஆ) கூரை
இ) சாளரம்
ஈ) வாயில்
Answer:
அ) அடுக்குகள்

Question 4.
நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) நன் + மாடங்கள்
ஆ) நற் + மாடங்கள்
இ) நன்மை + மாடங்கள்
ஈ) நல் + மாடங்கள்
Answer:
இ) நன்மை + மாடங்கள்

Question 5.
நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) நிலம் + இடையே
ஆ) நிலத்தின் + இடையே
இ) நிலத்து + இடையே
ஈ) நிலத் + திடையே
Answer:
ஆ) நிலத்தின் + இடையே

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.2 காணி நிலம்

Question 6.
முத்து + சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………….
அ) முத்துசுடர்
ஆ) முச்சுடர்
இ) முத்துடர்
ஈ) முத்துச்சுடர்
Answer:
ஈ) முத்துச்சுடர்

Question 7.
நிலா + ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………
அ) நிலாஒளி
ஆ) நிலஒளி
இ) நிலாவொளி
ஈ) நிலவுஒளி
Answer:
இ) நிலாவொளி

பொருத்துக

1. முத்துச்சுடர்போல – மாடங்கள்
2. தூய நிறத்தில் – மாடங்கள்
3. சித்தம் மகிழ்ந்திட – நிலாஒளி
விடை :
1. முத்துச்சுடர்போல – நிலாஒளி
2. தூய நிறத்தில் – தென்றல்
3. சித்தம் மகிழ்ந்திட – தென்றல்

நயம் அறிக

Question 1.
காணி நிலம் பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
காணி – ட்டி
த்தும் – காதில்
கேணி – கீற்று
த்து – க்கத்திலே
முத்துச்சுடர் – முன்பு

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.2 காணி நிலம்

Question 2.
காணி நிலம் பாடலில் இடம்பெற்ற எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
காணி – கேணி – தூணில்
தென்றல் – முன்பு
முத்து – கத்து
சித்தம் – பத்து

குறுவினா

Question 1.
காணி நிலம் பாடலில் பாரதியார் வேண்டுவன யாவை?
Answer:
பாரதியார் விரும்பும் மாளிகை :
(i) அழகான தூண்களையும், தூய்மையான நிறமுடைய மாடங்களையும் கொண்டிருக்க வேண்டும்.
(ii) அங்கே நல்ல நீரையுடைய கிணறு இருக்க வேண்டும்.
(iii) அதனருகில் இளநீரையும், கீற்றுகளையும் தரும் பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்கள் இருக்க வேண்டும் என்று பாரதியார் விரும்புகிறார்.

Question 2.
பாரதியார் இயற்கையின் மீது கொண்டுள்ள விருப்பம் குறித்து எழுதுக.
Answer:
இயற்கையின் மீது அதிக விருப்பம் கொண்டு தன்னுடைய மாளிகையின் அருகில் கிணற்றையும், அதனருகில் இளந்தென்றல் விழக்கூடிய பத்துப் பன்னிரெண்டு தென்னை மரங்ளையும் வளர்க்க வேண்டும் எனவும், முத்துச்சுடர் போல நிலாவொளி வீசவேண்டும் எனவும், குயில்களின் குரலோசைகளைக் கேட்கவேண்டும் எனவும், பாரதியார் பெரிதும் விரும்புகிறார்.

சிந்தனை வினா

Question 1.
பாரதியார் வீட்டின் அருகில் தென்னை மரங்கள் வேண்டும் என்கிறார். நீங்கள் எந்தெந்த மரங்களை வளர்ப்பீர்கள் என எழுதுக.
Answer:
எங்கள் வீட்டில் கொய்யாமரம், மாமரம், வாழைமரம், பலாமரம், வேப்பமரம், தேக்கு, பூவரசு மரங்களை வளர்ப்பேன். மேலும் நிறைய பூச்செடிகள் வளர்ப்பேன்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.2 காணி நிலம்

நூல் வெளி
இப்பாடல் பாரதியார் கவிதைகள் தொகுப்பில் காணி நிலம்’ என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது.

பொருளுரை
காணி அளவு நிலம் வேண்டும். அந்நிலத்தில் ஒரு மாளிகை கட்டித் தர வேண்டும். அது அழகான தூண்களையும், தூய்மையான நிறமுடைய மாடங்களையும் கொண்டிருக்க வேண்டும். அங்கே நல்ல நீரையுடைய கிணறு இருக்க வேண்டும். அதனருகில் இளநீரையும், கீற்றுகளையும் தரும் பத்து, பன்னிரண்டு தென்னை மரங்களும் வேண்டும்.

அவ்விடத்தில் முத்தின் ஒளிபோல நிலவொளி வீச வேண்டும். காதுக்கு இனிய குயிலின் குரலோசை கேட்க வேண்டும். உள்ளம் மகிழுமாறு இளந்தென்றல் தவழ வேண்டும்.

விளக்கவுரை
காணி அளவு நிலத்தில், ஒரு பெரிய மாளிகை கட்ட வேண்டும். அந்த மாளிகை மிக அழகான தூண்கள் இருக்கும்படியும், தூய்மையான வெண்மை நிறமுடைய மாடங்களையும் கொண்டிருக்க வேண்டும். அங்கே நல்ல சுவையான நீரையுடைய கிணறு இருக்க வேண்டும். அந்த மாளிகையின் அருகில் குளிர்ச்சியான தென்றல் காற்றை வீசக்கூடிய மரங்களையும் மற்றும் நல்ல இளநீரையும் கீற்றுகளையும் தரும் பத்து பன்னிரண்டு தென்னை மரங்களையும் கொண்டிருக்க வேண்டும்.

அந்த மாளிகையின் அருகில் இரவு நேரத்தில் முத்து போன்ற வெளிச்சத்தைத் தரக்கூடிய நிலவொளி வீச வேண்டும். காதுக்கு இனிமையான குயில்களின் குரலோசை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்க வேண்டும். குளிர்ந்த இளந்தென்றல் தவழ வேண்டும் எனப் பாரதியார் கூறுகிறார்.

சொல்லும் பொருளும்
1. காணி – நில அளவைக் குறிக்கும் சொல்
2. மாடங்கள் – மாளிகையின் அடுக்குகள்
3. சித்தம் – உள்ளம்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.1 சிலப்பதிகாரம்

Students can Download 6th Tamil Chapter 2.1 சிலப்பதிகாரம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 2.1 சிலப்பதிகாரம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.1 சிலப்பதிகாரம்
Question 1.
‘வளர்பிறையும் தேய்பிறையும்’ என்னும் தலைப்பில் பேசுக.
Answer:
மாணவர்கள் வளர்பிறையும், தேய்பிறையும் பற்றி அறிந்து கொள்ளச் செய்தல்.
அவையோர்க்கு வணக்கம்! நான் வளர்பிறை, தேய்பிறை பற்றிப் பேசப் போகிறேன். வானில் நட்சத்திரக் கூட்டங்கள், நிலா, சூரியன், வியாழன், புதன், செவ்வாய் போன்ற பல கோள்களும் உள்ளன. கோள்கள் அனைத்தும் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இவற்றைச் சூரியக் குடும்பம் என்பர்.

நிலவானது அமாவாசை தினத்தன்று வானில் தெரியாது. பௌர்ணமி தினத்தன்று முழுநிலவாகக் காட்சியளிக்கும். அமாவாசைக்குப் பிறகு நிலவானது கொஞ்சம்கொஞ்சமாக வளர்ந்து முழுநிலவாகும். இவ்வாறு வளர்வதை வளர்பிறை என்போம். பின்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒருநாள் கண்ணுக்கே தெரியாது. இவ்வாறு குறைவதைத் தேய்பிறை என்போம்.

சுப நிகழ்ச்சிகள் செய்வதற்கு வளர்பிறை நாட்களே உகந்தது என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை. இதனையே நாமும் பின்பற்றுகிறோம். பழங்காலத்தில் மின்சார விளக்குகள் இல்லாததால் சந்திரனின் ஒளியையே முதன்மையாகக் கொண்டு வாழ்ந்தனர். வளர்பிறை நாட்களில் செய்யும் செயல்கள் நிலவு வளர்வதைப் போல் வளரும் என்று நம்பினர்.
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.1 சிலப்பதிகாரம் 1
நிலவானது எப்போதும் ஒரே மாதிரிதான் இருக்கும். அது தேய்வதும் இல்லை. வளர்வதும் இல்லை. இதுவே அறிவியல் உண்மை. பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டும் சூரியனைச் சுற்றுவதற்கும் 365 நாட்கள் சூரியன் ஆகின்றன. சந்திரன் பூமியைச் சுற்றி வருவதற்கு 29 நாட்கள் ஆகின்றன. இவ்வாறு சுற்றும்போது சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் ஒரே நேர்க்கோட்டில் உள்ளபோது பௌர்ணமி என்று குறிப்பிடும் முழுநிலவு தோன்றும். பின்பு இது நாளுக்கு நாள் நகர்ந்துகொண்டே செல்லும் போது சந்திரனின் உருவம் நமக்கு மறைந்து கொண்டே வரும். இதனைத் தேய்பிறை என்கிறோம்.

இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து செல்லும் போது ஒருநாள் சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் ஒரே நேர்க்கோட்டில் பூமி இருக்கும். சூரியனின் ஒளி பூமி இடையில் இருப்பதால், மறைக்கப்படுகிறது. அதனால் நிலவு தெரியாது. அந்நாளே அமாவாசை என்று குறிப்பிடுவோம்.

நிலவுக்கு இயல்பாக ஒளிவிடும் தன்மை இல்லை. ஒளியின் ஆதாரமே சூரியன்தான். சூரியனிடமிருந்து பெரும் ஒளியையே சந்திரன் பெற்று ஒளி வீசுகிறது. அதனால்தான் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் இருக்கும் போது முழு நிலவைக் காண முடிகிறது. அமாவாசை தினத்தன்று சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி இருப்பதால் சூரிய ஒளி முழுமையாக மறைக்கப்படுகிறது. இச்சுழற்சியினால்தான் வளர்பிறையும் தேய்பிறையும் உருவாகிறது. நிலவு தேய்வதும் இல்லை. வளர்வதும் இல்லை.

Question 2.
நீங்கள் விரும்பும் இயற்கைப் பொருள்களின் பெயர்களைப் பட்டியலிடுக.
Answer:
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.1 சிலப்பதிகாரம் 2

Question 3.
‘நிலா’ என்னும் தலைப்பில் நான்கு அடிகளில் கவிதை படைத்திடுக.
Answer:
நீ பகலெல்லாம்
எங்கு செல்கிறாயோ?
இருளில் மட்டும் ஒளி வீசுகிறாய்!
உன் பெயரை உச்சரித்தாலே
மனதில் இன்பம் தவழ்கிறது
உன்னைப் பார்த்து வளர்ந்தவன் – நான்
உன்னைப் பார்க்கவே வளர்ந்தவன்
வா நிலவே வா ! கொஞ்சி விளையாட.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
கழுத்தில் சூடுவது …….
அ) தார்
ஆ) கணையாழி
இ) தண்டை
ஈ) மேகலை
Answer:
அ) தார்

Question 2.
கதிரவனின் மற்றொரு பெயர் ………………
அ) புதன்
ஆ) ஞாயிறு
இ) சந்திரன்
ஈ) செவ்வாய்
Answer:
ஆ) ஞாயிறு

Question 3.
‘வெண்குடை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….
அ) வெண் + குடை
ஆ) வெண்மை + குடை
இ) வெம் + குடை
ஈ) வெம்மை + குடை
Answer:
ஆ) வெண்மை + குடை

Question 4.
‘பொற்கோட்டு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) பொன் + கோட்டு
ஆ) பொற் + கோட்டு
இ) பொண் + கோட்டு
‘ஈ) பொற்கோ + இட்டு
Answer:
அ) பொன் + கோட்டு

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.1 சிலப்பதிகாரம்

Question 5.
கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………
அ) கொங்கு அலர்
ஆ) கொங்அலர்
இ) கொங்கலர்
ஈ) கொங்குலர்
Answer:
இ) கொங்கலர்

Question 6.
அவன் + அளிபோல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………
அ) அவன்அளிபோல்
ஆ) அவனளிபோல்
இ) அவன்வளிபோல்
ஈ) அவனாளிபோல்
Answer:
ஆ) அவனளிபோல்

நயம் அறிக

Question 1.
பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
மாமழை – மேரு – மேல்
கொங்கு – காவேரி

Question 2.
பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
திங்கள் – கொங்கு
மாமழை – நாம

குறுவினா

Question 1.
சிலப்பதிகாரக் காப்பியம் எவ்வெவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது?
Answer:
சிலப்பதிகாரக் காப்பியம் திங்கள், ஞாயிறு, மாமழை ஆகியவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.1 சிலப்பதிகாரம்

Question 2.
இயற்கை போற்றத்தக்கது ஏன்?
Answer:
(i) நாம் இயற்கையோடு இயைந்து வாழ்கிறோம். இயற்கை என்று சொல்லக்கூடிய சூரியன், சந்திரன், மழை இவையெல்லாம் நாம் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகளைக் கொடுத்து உதவுகிறது.
(ii) சூரியன் ஒளியைத் தருவதால்தான் மரங்கள் வளர்கின்றது. இதனால் நமக்கு மழை பொழிகிறது. மழை நமக்கு உணவைக் கொடுக்கும்.
(iii) உணவாகவும் அமையும். இவையெல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. எனவே இயற்கை போற்றத்தக்கதாகும்.

சிந்தனை வினா

Question 1.
இயற்கையைப் போற்றும் வழக்கம் ஏற்படக் காரணமாக எவற்றைக் கருதுகிறீர்கள்?
Answer:
‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே,

முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி’
என்பது தமிழர்களின் நம்பிக்கையாகும். உண்மையில் கல்லும் மண்ணும் தோன்றிய பிறகே உயிரினங்கள் தோன்றின. யாராலும் தோற்றுவிக்கப்படாத இயற்கையோடு இணைந்த சமயமாகத் தமிழர் சமயம் விளங்கியது.
மாந்தர் தோன்றிய காலந்தொட்டு தன்னை விஞ்சும் ஆற்றல் இயற்கைக்கு இருந்ததை அறிந்திருந்தனர். இந்த ஆற்றல் தன்னை மீறி செயல்பட்டதை உணர்ந்தனர். அப்பேராற்றலைத் தனக்குத் துணையாகக் கொள்ள முயன்றனர்.

அதற்கான வழிமுறைகளே வழிபாட்டு முறைகள் ஆகும். அவ்வாற்றலைக் கடவுள் என்றோ இறைவன் என்றோ அழைக்கவில்லை. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளாக இப்பேராற்றலான இயற்கையை வழிபட்டனர். தான் விரும்பும் அனைத்தையும் அவ்வாற்றலுக்குப் படைத்து மகிழ்வுற்றனர். படைக்கும் போது, தனக்கு உள்ள இடையூறுகளைக் கூறி அவைகளைக் களைந்தெறியுமாறு கேட்டுக்கொண்டனர்.

நாடோடிகளாய் வாழ்ந்திருந்த மக்களுக்குக் காளை, பசு, ஆடு, கோழி, நாய், பூனை ஆகிய நட்பு விலங்குகளைக் கடவுளுக்கு உதவியாளர்களாக இருப்பதாக நம்பினார்கள். கடவுளே இவ்வுலகைப் படைத்தார் என்றும் மாந்தர், உயிரினங்கள், விலங்குகள், வானம், வானத்திலுள்ள விண்மீன்கள், அண்டவெளி அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டவை என்றும் எண்ணி அவற்றை வழிபடலாயினர். இவ்வுலகமானது நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் என்ற ஐந்தும் உள்ளடக்கியது என உறுதிகொண்டனர்.

இயற்கையாய்த் தோன்றிய கதிரவனை முழுமுதற்கடவுளாக எண்ணி வழிபட்டனர் பிற்காலத்தில் தோன்றிய சமயங்கள் பலவும் கதிரவனையோ அல்லது அதன் உருவத்தையோ மையமாகக் கொண்டே தங்களது கடவுளைக் கண்டனர்.

மக்கள் தோன்றிய இடங்களானவை மலையும் மலைசார்ந்த இடமான குறிஞ்சி, காடும் காடு சார்ந்த இடமான முல்லை , வயலும் வயல் சார்ந்த இடமான மருதம், கடலும் கடல் சார்ந்த இடமான நெய்தல். இந்த நானிலங்களில் இருந்த மக்கள் அங்கங்கிருந்த உயிரினங்களையும் இயற்கையையும் வணங்கினர்.

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்தொழிலுக்கு அரசனாக விளங்கும் இறைவன். தொழிலுக்கு ஒன்றாக இந்த ஐம்பூதங்களையே ஊர்தியாகக் கொண்டு உலவுகிறான் என்றும் நம்பினர். இவ்வாறு இயற்கையைப் போற்றும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.

இறைவனும் இயற்கையும் வேறுவேறு அல்ல. இரண்டுமே ஒன்றுதான். ஒன்றோடு ஒன்றாகவும் ஒன்றுக்குள் ஒன்றாகவும் இருப்பவைதான் அவை. இறைவன் என்பது இயற்கையின் தாய் இயற்கை என்பது இறைவனின் வடிவங்களுள் ஒன்று என்பதை மெய்ப்பிக்கும் விதமாகவே நாம் இன்றும் சூரியன், சந்திரன், மழை நீர், போன்ற இயற்கையை வழிபடுகின்றோம்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.1 சிலப்பதிகாரம்

நூல் வெளி
சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம். சிலம்பின் செயலை மையமாகக் கொண்டு கதையைக் கூறுவதால் சிலப்பதிகாரம் என்னும் பெயர் பெற்றது. மூன்று காண்டங்கள் முப்பது காதைகளைக் கொண்டது. புகார் காண்டம் – 10 காதைகள், மதுரைக் காண்டம் -13 காதைகள், வஞ்சிக் காண்டம் – 7 காதைகள். காண்டம் – பெரும் பிரிவு, காதை – கதை தழுவியப்பாட்டு காண்டத்தின் உட்பிரிவு – காதை. தொடர்நிலைச் செய்யுள், முத்தமிழ்க்காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், நாடகக் காப்பியம், குடிமக்கள் காப்பியம் ஆகியவை இவற்றின் வேறு பெயர்களாகும். திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாக இந்நூல் தொடங்குகிறது.

பொருளுரை
தேன் நிறைந்த அத்திமலர் மாலையை அணிந்தவன் சோழ மன்னன். அவனுடைய வெண்கொற்றக்குடை குளிர்ச்சி பொருந்தியது. அதைப் போல வெண்ணிலவும் தன் ஒளியால் உலகுக்கு இன்பம் அளிக்கிறது. அதனால் வெண்ணிலவைப் போற்றுவோம்.

காவிரி ஆறு பாய்ந்து வளம் செய்யும் நாட்டை ஆட்சி செய்பவன் சோழ மன்னன். அவனது ஆணைச் சக்கரம் போல, கதிரவனும் பொன் போன்ற சிகரங்களையுடைய இமயமலையை வலப்புறமாகச் சுற்றி வருகிறது. அதனால் கதிரவனைப் போற்றுவோம்!

அச்சம் தரும் கடலை எல்லையாகக் கொண்ட உலகிற்கு மன்னன் அருள் செய்கிறான். அதுபோல, மழை, வானிலிருந்து பொழிந்து மக்களைக் காக்கிறது. அதனால் மழையைப் போற்றுவோம்!

விளக்கவுரை
உலகத்தில் உள்ளவர்களுக்கு எக்காலத்திலும் பொதுவாக விளங்கி நலன்களைப் புரிந்து வரும் சந்திரன், சூரியன், மாமழை ஆகியவற்றைப் போற்றியுள்ளார். இது தனிப்பெருஞ்சிறப்புடையதாகும்.

சோழனின் வெண்கொற்றக் குடையானது வணக்கத்திற்குரியது, தண்மை நிறைந்தது. அது வெயிலை மறைப்பதற்கு என்று அமைவது அன்று. அதனைப் போன்று சந்திரனும் குளிர்ச்சித் தன்மையுடையது. அதனால் திங்களைப் போற்றி வணங்குவோம்.

காவிரி ஆறு பாய்ந்து வளம் செய்யும் நாட்டை ஆட்சி செய்பவன் சோழ மன்னன். அவனது ஆணைச் சக்கரமானது எல்லா இடங்களிலும் பரந்து விரிந்துள்ளது அதனைப்போல கதிரவனும் உலகம் முழுவதிலும் பரந்து விரிந்து தனது ஒளியைத் தருகிறது. அதனால் கதிரவனைப் போற்றி வணங்குவோம்.

அச்சம் தருகின்ற கடலால் சூழப்பட்ட உலகில் வாழும் மக்களுக்கு மன்னன் கருணை அளிக்கின்றான். அதனைப்போல மழை என்பது உலகத்தில் தன்மையினை விளங்கச் செய்கிறது. அமுத மழையாகப் பொழிந்து மக்களைக் காக்கின்றது. இதனை அன்பின் தன்மையினைக் குறிக்கும் வகையில் அளி எனக் கூறியுள்ளார். இதன் சிறப்பினை உணர்த்தவே மாமழையைப் போற்றுகிறார்.

சொல்லும் பொருளும்
1. திங்கள் – நிலவு
2. கொங்கு – மகரந்தம்
3. அலர் – மலர்தல்
4. திகிரி – ஆணைச்சக்கரம்
5. பொற்கோட்டு – பொன்மயமானசிகரத்தில்
6. மேரு – இமயமலை
7. நாமநீர் – அச்சம் தரும் கடல்
8. அளி – கருணை