Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2

Students can download 11th Business Maths Chapter 4 Trigonometry Ex 4.2 Questions and Answers, Notes, Samcheer Kalvi 11th Business Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 11th Business Maths Solutions Chapter 4 Trigonometry Ex 4.2

Samacheer Kalvi 11th Business Maths Trigonometry Ex 4.2 Text Book Back Questions and Answers

Question 1.
Find the values of the following:
(i) cosec 15°
(ii) sin (-105°)
(iii) cot 75°
Solution:
(i) cosec 15° = \(\frac{1}{\sin 15^{\circ}}\)
Consider sin 15° = sin(45° – 30°)
= sin 45° cos 30° – cos 45° sin 30°
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2 1
cosec 15° = \(\frac{1}{\sin 15^{\circ}}\) = \(\frac{2 \sqrt{2}}{\sqrt{3}-1}\)

(ii) sin (-105°) = -sin (105°) (∵ sin (-θ) = – sin θ)
= -[sin(60° + 45°)]
= -[sin 60° cos 45° + cos 60° sin 45°]
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2 2

(iii) cot 75° = \(\frac{1}{\tan 75^{\circ}}\)
Consider tan 75° = tan (30° + 45°)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2 3
cot 75° = \(\frac{1}{\tan 75^{\circ}}=\frac{\sqrt{3}-1}{\sqrt{3}+1}\)

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2

Question 2.
Find the values of the following:
(i) sin 76° cos 16° – cos 76° sin 16°
(ii) \(\sin \frac{\pi}{4} \cos \frac{\pi}{12}+\cos \frac{\pi}{4} \sin \frac{\pi}{12}\)
(iii) cos 70° cos 10° – sin 70° sin 10°
(iv) cos2 15° – sin2 15°
Solution:
(i) Given that, sin 76° cos 16° – cos 76° sin 16° (∴ This is of the form sin(A – B))
= sin(76° – 16°)
= sin 60°
= \(\frac{\sqrt{3}}{2}\)

(ii) This is of the form sin(A + B) = \(\sin \left(\frac{\pi}{4}+\frac{\pi}{12}\right)\)
= \(\sin \left(\frac{3 \pi+\pi}{12}\right)\)
= \(\sin \frac{4 \pi}{12}\)
= \(\sin \frac{\pi}{3}\)
= \(\frac{\sqrt{3}}{2}\) (∵ sin 60° = \(\frac{\sqrt{3}}{2}\))

(iii) Given that cos 70° cos 10° – sin 70° sin 10°
(This is of the form of cos (A + B), A = 70°, B = 10°)
= cos (70° + 10°)
= cos 80°

(iv) cos2 15° – sin2 15°
[∵ cos 2A = cos2 A – sin2 A, Here A = 15°]
= cos (2 × 15°)
= cos 30°
= \(\frac{\sqrt{3}}{2}\)

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2

Question 3.
If sin A = \(\frac{3}{5}\), 0 < A < \(\frac{\pi}{2}\) and cos B = \(\frac{-12}{13}\), π < B < \(\frac{3 \pi}{2}\), find the values of the following:
(i) cos(A + B)
(ii) sin(A – B)
(iii) tan(A – B)
Solution:
Given that sin A = \(\frac{3}{5}\), 0 < A < \(\frac{\pi}{2}\) (i.e., A lies in first quadrant)
Since A lies in first quadrant cos A is positive.
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2 4
cos A = \(\frac{\text { Adjacent side }}{\text { Hypotenuse }}=\frac{4}{5}\)
tan A = \(\frac{3}{4}\)
AB = \(\sqrt{5^{2}-3^{2}}\) = 4
Also given that cos B = \(\frac{-12}{13}\), π < B < \(\frac{3 \pi}{2}\) (i.e., B lies in third quadrant)
Now sin B lies in third quadrant. sin B is negative.
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2 5
CA = \(\sqrt{13^{2}-12^{2}}\) = 5
sin B = \(\frac{-\text { Opposite side }}{\text { Hypotenuse }}=\frac{-5}{13}\)
tan B = \(\frac{-\text { Opposite side }}{\text { Adjacent }}=\frac{5}{12}\) [B lies in 3rd quadrant. tan B is positive.]
(i) cos(A + B) = cos A cos B – sin A sin B
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2 6

(ii) sin(A – B) = sin A cos B – cos A sin B
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2 7

(iii) tan(A – B)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2 8

Question 4.
If cos A = \(\frac{13}{14}\) and cos B = \(\frac{1}{7}\) where A, B are acute angles prove that A – B = \(\frac{\pi}{3}\)
Solution:
cos A = \(\frac{13}{14}\), cos B = \(\frac{1}{7}\)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2 9
cos(A – B) = cos A cos B + sin A sin B
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2 33
cos(A – B) = cos 60°
A – B = 60° = \(\frac{\pi}{3}\)

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2

Question 5.
Prove that 2 tan 80° = tan 85° – tan 5°.
Solution:
Consider tan 80° = tan(85° – 5°)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2 10
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2 11
∴ 2 tan 80° = tan 85° – tan 5°
Hence Proved.

Question 6.
If cot α = \(\frac{1}{2}\), sec β = \(\frac{-5}{3}\), where π < α < \(\frac{3 \pi}{2}\) and \(\frac{\pi}{2}\) < β < π, find the value of tan(α + β). State the quadrant in which α + β terminates.
Solution:
Given that cot α = \(\frac{1}{2}\) where π < α < \(\frac{3 \pi}{2}\) (i.e,. α lies in third quadrant)
tan α = \(\frac{1}{\frac{1}{2}}\) = 2 [∵ In 3rd quadrant tan α is positive]
Also given that sec β = \(\frac{-5}{3}\) where \(\frac{\pi}{2}\) < β < π (i.e., β lies in second quadrant cos β and tan β are negative)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2 12
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2 13
tan (α + β) = \(\frac{2}{11}\) which is positive.
α + β terminates in first quandrant.

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2

Question 7.
If A + B = 45°, prove that (1 + tan A) (1 + tan B) = 2 and hence deduce the value of tan 22\(\frac{1}{2}\).
Solution:
Given A + B = 45°
tan (A + B) = tan 45°
\(\frac{\tan A+\tan B}{1-\tan A \tan B}=1\)
tan A + tan B = 1 – tan A . tan B
tan A + tan B + tan A tan B = 1
Add 1 on both sides we get,
(1 + tan A) + tan B + tan A tan B = 2
1(1+ tan A) + tan B (1 + tan A) = 2
(1 + tan A) (1 + tan B) = 2 ……. (1)
Put A = B = 22\(\frac{1}{2}\) in (1) we get
(1 + tan 22\(\frac{1}{2}\)) (1 + tan 22\(\frac{1}{2}\)) = 2
⇒ (1 + tan22\(\frac{1}{2}\))2 = 2
⇒ 1 + tan 22\(\frac{1}{2}\) = ±√2
⇒ tan 22\(\frac{1}{2}\) = ±√2 – 1
Since 22\(\frac{1}{2}\) is acute, tan 22\(\frac{1}{2}\) is positive and therefore tan 22\(\frac{1}{2}\) = √2 – 1

Question 8.
Prove that
(i) sin(A + 60°) + sin(A – 60°) = sin A.
(ii) tan 4A tan 3A tan A + tan 3A + tan A – tan 4A = 0
Solution:
(i) LHS = sin (A + 60°) + sin (A – 60°)
= sin A cos 60° + cos A sin 60° + sin A cos 60° – cos A sin 60°
= 2 sin A cos 60°
= 2 sin A \(\left(\frac{1}{2}\right)\)
= sin A
= RHS

(ii) 4A = 3A + A
tan 4A = tan (3A + A)
tan 4A = \(\frac{\tan 3 \mathrm{A}+\tan \mathrm{A}}{1-\tan 3 \mathrm{A} \tan \mathrm{A}}\)
on cross multiplication we get,
tan 3A + tan A = tan 4A (1 – tan 3A tan A) = tan 4A – tan 4A tan 3A tanA
i.e., tan 4A tan 3A tan A + tan 3A + tan A = tan 4A
(or) tan 4A tan 3A tan A + tan 3A + tan A – tan 4A = 0

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2

Question 9.
(i) If tan θ = 3 find tan 3θ
(ii) If sin A = \(\frac{12}{13}\), find sin 3A.
Solution:
(i) tan θ = 3
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2 14

(ii) If sin A = \(\frac{12}{13}\)
We know that sin 3A = 3 sin A – 4 sin3 A
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2 15

Question 10.
If sin A = \(\frac{3}{5}\), find the values of cos 3A and tan 3A.
Solution:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2 16
Given sin A = \(\frac{3}{5}\)
cos A = \(\frac{\text { Adjacent side }}{\text { Hypotenuse }}=\frac{4}{5}\)
and tan A = \(\frac{\text { Opposite side }}{\text { Adjacent side }}=\frac{3}{4}\)
We know that cos 3A = 4 cos3 A – 3 cos A
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2 17

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2

Question 11.
Prove that \(\frac{\sin (B-C)}{\cos B \cos C}+\frac{\sin (C-A)}{\cos C \cos A}+\frac{\sin (A-B)}{\cos A \cos B}=0\)
Solution:
Consider \(\frac{\sin (B-C)}{\cos B \cos C}\)
= \(\frac{\sin \mathrm{B} \cos \mathrm{C}-\cos \mathrm{B} \sin \mathrm{C}}{\cos \mathrm{B} \cos \mathrm{C}}\)
= \(\frac{\sin B \cos C}{\cos B \cos C}-\frac{\cos B \sin C}{\cos B \cos C}\)
= tan B – tan C ……… (1)
Similarly we can prove \(\frac{\sin (C-A)}{\cos C \cos A}\) = tan C – tan A …….(2)
and \(\frac{\sin (A-B)}{\cos A \cos B}\) = tan A – tan B …….. (3)
Add (1), (2) and (3) we get
\(\frac{\sin (B-C)}{\cos B \cos C}+\frac{\sin (C-A)}{\cos C \cos A}+\frac{\sin (A-B)}{\cos A \cos B}=0\)

Question 12.
If tan A – tan B = x and cot B – cot A = y prove that cot(A – B) = \(\frac{1}{x}+\frac{1}{y}\).
Solution:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2 18
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2 19
Hence proved.

Question 13.
If sin α + sin β = a and cos α + cos β = b, then prove that cos(α – β) = \(\frac{a^{2}+b^{2}-2}{2}\)
Solution:
Consider a2 + b2 = sin2α + sin2β + 2 sin α sin β + cos2α + cos2β + 2 cos α cos β
a2 + b2 = (sin2α + cos2α) + (sin2β + cos2β) + 2[cos α cos β + sin α sin β]
a2 + b2 = 1 + 1 + 2 cos(α – β)
∴ cos(α – β) = \(\frac{a^{2}+b^{2}-2}{2}\)

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2

Question 14.
Find the value of tan\(\frac{\pi}{8}\).
Solution:
Method 1:
\(\frac{\pi}{8}=\frac{180^{\circ}}{8}=\frac{45^{\circ}}{2}=22 \frac{1}{2}\)
We know that tan 2A = \(\frac{2 \tan A}{1-\tan ^{2} A}\)
Put A = 22\(\frac{1}{2}\) in the above formula
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2 20
On cross multiplication we get
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2 21
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2 22
Here a = 1, b = 2, c = -1
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2 23
Since 22\(\frac{1}{2}\) is acute tan 22\(\frac{1}{2}\) is positive tan 22\(\frac{1}{2}\) = tan \(\frac{\pi}{8}\)
= -1 + √2
= √2 – 1

Method 2:
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2 24
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2 25
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2 26
∴ \(\tan ^{2} 22 \frac{1}{2}=(\sqrt{2}-1)^{2}\)
Taking square root, \(\tan ^{2} 22 \frac{1}{2}\) = ±(√2 – 1)
But \(22 \frac{1}{2}\) lies in first quadrant, tan \(22 \frac{1}{2}\) is positive.
∴ tan 22\(\frac{1}{2}\) = √2 – 1

Method 3:
consider tan A = \(\frac{\sin 2 A}{1+\cos 2 A}\)
Put A = \(22 \frac{1}{2}\)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2 27
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2 28
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2 29
tan 22\(\frac{1}{2}\) = √2 – 1

Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2

Question 15.
If tan α = \(\frac{1}{7}\), sin β = \(\frac{1}{\sqrt{10}}\). Prove that α + 2β = \(\frac{\pi}{4}\) where 0 < α < \(\frac{\pi}{2}\) and 0 < β < \(\frac{\pi}{2}\).
Solution:
Given that tan α = \(\frac{1}{7}\)
We wish to find tan(α + 2β)
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2 30
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2 31
Samacheer Kalvi 11th Business Maths Guide Chapter 4 Trigonometry Ex 4.2 32

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.2 கண்மணியே கண்ணுறங்கு

Students can Download 6th Tamil Chapter 5.2 கண்மணியே கண்ணுறங்கு Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 5.2 கண்மணியே கண்ணுறங்கு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.2 கண்மணியே கண்ணுறங்கு

Question 1.
உங்கள் பகுதியில் பாடப்படும் தாலாட்டுப் பாடல் ஒன்றை அறிந்து வந்து பாடுக.
Answer:
உசந்த தலைப்பாவோ
‘உல்லாச வல்லவாட்டு’
நிறைந்த தலை வாசலிலே
வந்து நிற்பான் உன் மாமன்
தொட்டிலிட்ட நல்லம்மாள்
பட்டினியாப் போராண்டா
பட்டினியாய் போற மாமன் – உனக்கு
பரியம் கொண்டு வருவானோ?

Question 2.
உங்கள் பகுதியில் பேசப்படும் பழமொழிகளைத் தொகுக்க.
Answer:
(i) கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
(ii) குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்.
(iii) வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
(iv) கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
(v) வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
பாட்டிசைத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………..
அ) பாட்டி + சைத்து
ஆ) பாட்டி + இசைத்து
இ) பாட்டு + இசைத்து
ஈ) பாட்டு + சைத்து
Answer:
இ) பாட்டு + இசைத்து

Question 2.
கண்ணுறங்கு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………
அ) கண் + உறங்கு
ஆ) கண்ணு + உறங்கு
இ) கண் + றங்கு
ஈ) கண்ணு + றங்கு
Answer:
அ) கண் + உறங்கு

Question 3.
வாழை + இலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………
அ) வாழையிலை
ஆ) வாழை இலை
இ) வாழைலை
ஈ) வாழிலை
Answer:
அ) வாழையிலை

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.2 கண்மணியே கண்ணுறங்கு

Question 4.
கை + அமர்த்தி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………
அ) கைமர்த்தி
ஆ) கைஅமர்த்தி
இ) கையமர்த்தி
ஈ) கையைமர்த்தி
Answer:
இ) கையமர்த்தி

Question 5.
உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல் ……………..
அ) மறைந்த
ஆ) நிறைந்த
இ) குறைந்த
ஈ) தோன்றிய
Answer:
அ) மறைந்த

குறுவினா

Question 1.
இப்பாடலில் குறிப்பிடப்படும் மூன்று நாடுகள் யாவை?
Answer:
சேரநாடு, சோழ நாடு, பாண்டிய நாடு.

Question 2.
நமது வீட்டிற்கு வந்தவரை உபசரிக்கும் முறையாக நாட்டுப்புறப் பாடல் கூறுவது யாது?
Answer:
நமது வீட்டிற்கு வந்தவரை உபசரிக்கும் முறையாக நாட்டுப்புறப்பாடல் கூறுவன: வீட்டிற்கு வந்தவரை இன்முகத்தோடு வரவேற்று வாழை இலையில் அறுசுவையான உணவளித்து உபசரிப்பர்.

சிறுவினா

Question 1.
தாய் தன் குழந்தையை எவ்வாறெல்லாம் பாராட்டுகிறாள்?
Answer:
தாய் தன் குழந்தையைப் பாராட்டுதல் :
(i) தமிழ்ச் சோலையில் பூ எடுத்து, இசையுடன் பாடி உலகம் புகழ வந்தாயோ!
(ii) தங்கப் பூ பதித்த தந்தத்தால் ஆனத் தொட்டிலில் செல்லமாய் உறங்க வந்த சேரநாட்டின் முத்தேனோ!
(iii) இல்லம் வந்தவரை இன்முகத்தோடு வரவேற்று அறுசுவை உணவளிக்கும் சோழநாட்டின் முக்கனியோ.
(iv) குளம் வெட்டி, அணைகட்டிக் குடிமக்களின் பசியைப் போக்கும் பாண்டி நாட்டின் முத்தமிழோ! கண்ணே கண்மணியே கண்மூடி உறங்குவாயாக! என்று பாராட்டிக் குழந்தையைத் தாலாட்டுகிறாள்.

சிந்தனை வினா

Question 1.
வாய்மொழி இலக்கிய வகைகளின் பெயர்களைத் தொகுக்க.
Answer:
(i) நடவுப் பாட்டு
(ii) தாலாட்டுப் பாட்டு
(iii) வள்ளைப் பாட்டு
(iv) விடுகதைப் பாட்டு
(v) ஏற்றப் பாட்டு
(vi) பரிகாசப் பாட்டு
(vii) கும்மிப் பாட்டு
(viii) கண்ண ன் பாட்டு
(ix) ஏசல் பாட்டு
(x) ஒப்பாரிப் பாட்டு

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.2 கண்மணியே கண்ணுறங்கு

Question 2.
குழந்தைகளைக் கொஞ்சுவதற்குப் பயன்படுத்தப்படும் சொற்களைத் தொகுக்க.
Answer:
கண்ணே !
முத்தே !
செல்லம்!
பட்டு!
அம்முக்குட்டி!
ராஜா! தங்கம்!

கூடுதல் வினாக்கள்

Question 1.
தாலாட்டு – பெயர்க்காரணம் எழுதுக.
Answer:
(i) தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று.
(ii) தால் என்பதற்கு நாக்கு என்று பொருள். நாவை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு என்று பெயர் பெற்றது.
(iii) குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இனிய ஓசையுடன் பாடும் பாடல் தாலாட்டு.

Question 2.
தாலாட்டுப் பாடலில் குழந்தை எவ்வாறு வந்ததாகக் கூறப்பட்டுள்ளது?
Answer:
தமிழ்ச் சோலையில் பூ எடுத்து, இசையுடன் பாடி உலகம் புகழ வந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

Question 3.
தாலாட்டுப் பாடலில் குழந்தை எவ்வாறு பாடப்பட்டுள்ளது?
Answer:
தங்கப் பூ – பதித்த தந்தத்தால் ஆனத் தொட்டிலில் செல்லமாய் உறங்குவதாகப் பாடப்பட்டுள்ளது.

Question 4.
தாலாட்டுப் பாடலில் பாண்டிய நாட்டினைப் பற்றிக் கூறுவது யாது?
Answer:
பாண்டிய நாடு குளம் வெட்டி, அணை கட்டிக் குடிமக்களின் பசியைப் போக்கும் எனக் கூறுகிறது.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.2 கண்மணியே கண்ணுறங்கு

நூல் வெளி
தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று. தால் என்பதற்கு நாக்கு என்று பொருள். நாவை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு (தால்+ஆட்டு என்று பெயர் பெற்றது. குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இனிய ஓசையுடன் பாடும் பாடல் தாலாட்டு.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.3 நாச்சியார் திருமொழி

Students can Download 9th Tamil Chapter 6.3 நாச்சியார் திருமொழி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 6.3 நாச்சியார் திருமொழி

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.3 நாச்சியார் திருமொழி

Question 1.
திருப்பாவையில் இடம் பெற்றுள்ள தொடை நயம் மிக்க பாடல்களுள் எவையேனும், இரண்டினை இணையத்திலோ நூலகத்திலோ திரட்டி வகுப்பறையில் பாடுக.
Answer:

திருப்பாவைப்பாடல் (24)

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய்ப் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்

பாடல் – 15 (திருப்பாவை)

எல்லே இளங்கிளியே இன்னம் உறக்குதியோ
சில்லென்று அழையேன் மின் நங்கை மீர்போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக் கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.3 நாச்சியார் திருமொழி

Question 2.
கண்ணனைப் பல்வேறு உறவு நிலைகளில் வைத்துப் பாடிய பாரதியார் பாடல்களும் உங்களைக் கவர்ந்த பாடல்களைக் குறித்துக் கலந்துரையாடுக.
Answer:
மாணவர்களே, ஆண்டாள் கண்ணனைத் தன் நாயகனாக எண்ணியது போல்.
பாரதியாரும் கண்ணனை தோழனாக (கண்ணன் என் தோழன்)
தாயாக (கண்ணன் என் தாய்) தந்தையாக (கண்ணன் என் தந்தை)
சேவகனாக (கண்ணன் என் சேவகன்), விளையாட்டுப் பிள்ளை
(கண்ணன்-என் விளையாட்டுப் பிள்ளை), காதலனாக (கண்ணன் என் காதலன்)
என்று பல நிலைகளில் வைத்துப் பாடியுள்ளார்.

சான்று :

விளையாட்டுப்பிள்ளை

தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன்
தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை தீராத………………
புல்லாங்குழல் கொண்டு வருவான் – அமுது
பொங்கித் ததும்பும் நற் கீதம் படிப்பான்
கள்ளால் மயங்குவது போல – அதைக்
கண்மூடி வாய் திறந்தே கேட்டிருப்போமே……..
இப்பாடலில் குழலிசைத்து அனைவரையும் மயக்கும் குழந்தையாக எண்ணிப்பாடியுள்ளார் அல்லவா ……..

மாணவர் :

ஐயா ……. தோழனாக என்று சொன்னீர்கள் அதற்கு ஒரு சான்று சொல்லுங்கள் ஐயா!
“ பிழைக்கும் வழிசொல்ல வேண்டுமென்றால்” ஒரு
பேச்சினிலே சொல்லுவான்
உழைக்கும்வழிவினை ஆளும் வழி – பயன்
உண்ணும் வழியுரைப் பான்
அழைக்கும் பொழுதினில் போக்குச் சொல்லாமல்
அரைநொடிக்குள் வருவான்
மழைக்குக் குடை பசி நேரத்துணவு என்றன்
வாழ்வினுக் கெங்கள் கண்ணன்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.3 நாச்சியார் திருமொழி

தோழனாக கண்ணன் வாழ வழி சொல்வானாம். கூப்பிடும் போது அரை நொடிக்குள் வருவானாம். மழைக்குக் குடையாவான்; பசிக்கு உணவாவான்; என்றன் வாழ்வே என் கண்ணன் என்கிறார்.

மாணவர்களே இதன் மூலம் பாரதி கண்ணனைத் தோழனாய்க் கொண்டார் என்பதையும், நண்பன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் கூறுகிறார்.

நல்ல நண்பன்வாழவழிகாட்டவேண்டும், துன்பம் வரும் போது நம்மைத்தாங்குகிறவனாகவும்
இருக்க வேண்டும் என்கிறார்.

மாணவர்கள் : நன்றி ஐயா! …….

Question 3.
சங்க காலத்திலிருந்து தற்காலம் வரையுள்ள பெண்புலவர்களின் சில கவிதைகளைக் கொண்டு ஒரு கவிதைத் தொகுப்பு உருவாக்குக.
Asnwer:

ஔவையார் பாடல்

முட்டு வேன்கொல் தாக்குவேன் கொல்
ஓரேன் யானும் ஓர் பெற்ற மேலிட்டு
ஆஅஓல் எனக் கூவுவேன் கொல்
அலமரல் அசைவலி அலைப்பஎன்
உயவு நோய் அறியது துஞ்சும் ஊர்க்கே (குறுந்தொகை – 28)

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.3 நாச்சியார் திருமொழி

ஒக்கூர் மாசாத்தியார்

கெடுக சிந்தை கடிது இவள் துணிவே
மூதின் – மகளிர் ஆதல் தகுமே
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை
யானை எறிந்து களத்து ஒழிந் தன்னே
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழு நன்
பெரு நிரை விலக்கி ஆண்டுப்பட் டனனே
இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிது விரித்து உடீகிப்
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுக நோக்கிச் செல்க என விடுமே (புறநானூறு)
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.3 நாச்சியார் திருமொழி - 1

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘அதிரப் புகுதக் கனாக் கண்டேன்’ – யார் கனவில் யார் அதிரப் புகுந்தார்.
Answer:
அ) கண்ணனின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்
ஆ) தோழியின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்
இ) ஆண்டாளின் கனவில் தோழி புகுந்தாள்
ஈ) ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்
Answer:
ஈ) ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.3 நாச்சியார் திருமொழி

குறுவினா

Question 1.
கண்ண ன் புகுந்த பந்தல் எவ்வாறு இருந்தது?
Answer:

  • கண்ணன் புகுந்த பந்தலானது முத்துக்களையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்டதாக இருந்தது.
  • மத்தளம் முழங்கியதாகவும், வரிகளை உடைய சங்குகளைஊதுபவர்கள் நின்றுகொண்டிருந்தனர் என்று, கண்ணன் புகுந்த பந்தல் இருந்த நிலையை ஆண்டாள் கூறுகிறாள்.
    “மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத
    முத்துடை தாமம் நிரை தாழ்ந்த பந்தற்”

சிறுவினா

Question 1.
ஆண்டாளின் கனவுக் காட்சிகளை எழுதுக.
Answer:

  • சதிராடும் இளம்பெண்கள், தம் கைகளில் கதிரவன் போன்ற ஒளியையுடைய விளக்கையும் கலசத்தையும் ஏந்தியவாறு வந்து எதிர் கொண்டு அழைக்கிறார்கள்.
  • மதுராபுரியை ஆளும் மன்னனாம் கண்ணன், பாதங்களில் பாதுகை அணிந்து கொண்டு புவி அதிர மகிழ்ச்சியுடன் நடந்து வருகிறான்.
  • மத்தளம் முழங்க, வரி சங்கம் ஊத, முத்துக்களையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ் என்னைத் திருமணம் செய்து கொள்கிறான் என்று ஆண்டாள் கனவு கண்டதாகக் கூறுகிறாள்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.3 நாச்சியார் திருமொழி

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
அடுப்பிடு சாந்த மோடு அகிலின் நாற்றமும்
துடுப்பிடு மைவனச் சோற்றின் நாற்றமும் ……………. இவ் அடிகளில் உள்ள நயங்கள்.
அ) அடியெதுகை, அடிஇயைபு
ஆ) சீர்மோனை, சீர்எதுகை
இ) அடிமோனை, அடிஇயைபு
ஈ) சீர்மோனை, சீர்இயைபு
Answer:
அ) அடியெதுகை, அடிஇயைபு

Question 2.
திருமாலை வழிபட்டு சிறப்புநிலை எய்தியவர்கள் ……………..
அ) நாயன்மார்கள்
ஆ) ஆழ்வார்கள்
இ) சமணர்கள்
ஈ) தேவர்கள்
Answer:
ஆ) ஆழ்வார்கள்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.3 நாச்சியார் திருமொழி

Question 3.
ஆண்டாள் யாருடைய வளர்ப்பு மகள்?
அ) நம்மாழ்வார்
ஆ) பேயாழ்வார்
இ) பெரியாழ்வார்
ஈ) பூதத்தாழ்வார்
Answer:
இ) பெரியாழ்வார்

Question 4.
நாச்சியார் திருமொழியில் உள்ள பாடல்கள்
அ) 110
ஆ) 140
இ) 120
ஈ) 150
Answer:
ஆ) 140

Question 5.
ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு …………….. ஆகும்.
அ) பெரிய புராணம்
ஆ) நாலாயிரதிவ்ய பிரபந்தம்
இ) நளவெண்பா
ஈ) பூதத்தாழ்வார்
Answer:
ஆ) நாலாயிர திவ்ய பிரபந்தம்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.3 நாச்சியார் திருமொழி

Question 6.
நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் ஆண்டாள் பாடியவை யாவை?
அ) திருப்பாவை
ஆ) நாச்சியார் திருமொழி

i) அ – சரி
ii) ஆ – சரி
iii) இரண்டும் சரி
iv) இரண்டும் தவறு
Answer:
iii) இரண்டும் சரி

Question 7.
“மதுரையார் மன்னன் அடிநிலை” – மதுரையார் மன்னன் யார்?
அ) கண்ணன்
ஆ) கன்னன்
இ) கோவலன்
ஈ) நெடுஞ்செழியன்
Answer:
அ) கண்ண ன்.

Question 8.
கைத்தலம் இலக்கணக்குறிப்பு யாது?
அ) பண்புத்தொகை
ஆ) வினைத்தொகை
இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
ஈ) உவமைத்தொகை
Answer:
இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.3 நாச்சியார் திருமொழி

Question 9.
பொருத்துக.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.3 நாச்சியார் திருமொழி - 2
Answer:
அ) (iv)
ஆ) (i)
இ) (ii)
ஈ) (iii)

குறுவினா

Question 1.
ஆண்டாள் – குறிப்பு வரைக.
Answer:

  • திருமாலை வழிபட்டுச் சிறப்புநிலை எய்திய ஆழ்வார்களுள் ஆண்டாள் மட்டுமே பெண் ஆவார்.
  • இறைவனுக்குப் பாமாலை சூட்டியதோடு தான் அணிந்து மகிழ்ந்த பூமாலையையும் சூட்டியதால், “சூடிக் கொடுத்த சுடர்கொடி” என அழைக்கப் பெற்றார்.
  • இவரைப் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் என்பர்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.3 நாச்சியார் திருமொழி

Question 2.
ஆண்டாள் பாடியதாகக் குறிப்பிடப்படும் இரு தொகுதிகள் யாவை?
Answer:

  • திருப்பாவை
  • நாச்சியார் திருமொழி

நெடுவினா

Question 1.
]கண்ணனைக் கனவில் கண்டதாக ஆண்டாள் கூறுவனவற்றை விளக்குக.
Answer:
முன்னுரை:
பக்தி இலக்கியம் உணர்ச்சி நிறைந்த பாடல்களை உள்ளடக்கியது. இறையோடு ஒன்றுதலும் அதன்பால் அனைவரையும் சரணடையச் செய்வதும் பக்தி இலக்கியத்தின் பணியாக இருந்தது. திருமாலை நாயகனாக எண்ணி ஆண்டாள் பாடுவதாக அமைந்தது நாச்சியார் திருமொழி ஆகும்.

ஆண்டாளின் கனவும், கண்ணனும்
ஆடும் இளம் பெண்கள், கைகளில் கதிரவன் போன்ற ஒளியை உடைய விளக்கையும் கலசத்தையும் ஏந்தியவாறு வந்து எதிர்கொண்டு அழைக்கிறார்கள். வடமதுரையை ஆளும் மன்னன் கண்ணன் பாதுகைகளை அணிந்துகொண்டு புவி அதிர மகிழ்ச்சியுடன் நடந்து வருகிறான்’. இக்காட்சியைக் கனவில் கண்டதாக ஆண்டாள் கூறுகிறார்.

‘மத்தளம் முதலான இசைக்கருவிகள் முழங்குகின்றன. வரிகளையுடைய சங்குகளை நின்று ஊதுகின்றனர். அத்தை மகனும், மது என்ற அரக்கனை அழித்தவனுமான கண்ணன், முத்துகளையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ், என்னைத் திருமணம் செய்து கொள்கிறான்’ எனக் கனவில் கண்டதாக ஆண்டாள் கூறுகிறார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.3 நாச்சியார் திருமொழி

முடிவுரை :
கண்ணன் மீது ஆண்டாள் கொண்ட காதலின் வெளிப்பாடே கனவாக மலர்ந்திருக்கிறது என்பதை அறியமுடிகிறது.

பாடலின் பொருள்

நடனம் ஆடும் இளம்பெண்கள், கைகளில் கதிரவன் போன்ற ஒளியை உடைய விளக்கையும் கலசத்தையும் ஏந்தியவாறு வந்து எதிர்கொண்டு அழைக்கிறார்கள்.

வடமதுரையை (மதுராபுரி) ஆளும், மன்னன் கண்ணன் பாதுகைகளை அணிந்து கொண்டு, புவி அதிர மகிழ்ச்சியுடன் நடந்து வருகிறான்.
இவ்வாறு கண்ணன் வரும் காட்சியைத் தன் கனவில் கண்டதாக ஆண்டாள் கூறுகிறார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.3 நாச்சியார் திருமொழி

மத்தளம் முதலான இசைக் கருவிகள் முழங்குகின்றன. வரிகளையுடைய சங்குகளை நின்று ஊதுகின்றனர்.

அத்தை மகனும், மது என்ற அரக்கனை அழித்தவனுமான கண்ணன், முத்துகளையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ் என்னைத் திருமணம் செய்து கொள்கிறான். இக்காட்சியைத் தன் கனவில் கண்டதாக ஆண்டாள் கூறுகிறார்.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 5 Interconcept Ex 5.3

Students can download 5th Maths Term 2 Chapter 5 Interconcept Ex 5.3 Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 2 Chapter 5 Interconcept Ex 5.3

Question 1.
Answer the following
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 5 Interconcept Ex 5.3 1
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 5 Interconcept Ex 5.3 2

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 5 Interconcepts Ex 5.3

Question 2.
Sneha spent ₹ 7 per Km for a trip and she travelled 850km. How much is the total cost of the trip?
Answer:
Cost per kilometer is ₹ 7
Cost for 850 km = 850 × ₹ 7
= ₹ 5950

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 5 Interconcepts Ex 5.3

Question 3.
Prabhu spent ₹ 9 per Km for o trip and he travelled 580km. How much is the total cost of the trip?
Answer:
Cost per kilometer is ₹ 9
Cost for 850 km = 580 × ₹ 9
= ₹ 5220

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1

Students can download 5th Maths Term 2 Chapter 4 Measurements Ex 4.1 Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 2 Chapter 4 Measurements Ex 4.1

Question 1.
Fill in the blanks.

(i) 7 kg 400 g = ______ g
Answer:
7400

(ii) 5 g 50 mg = ______ mg
Answer:
5050

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1

(iii) 9500 mg = ______ g ______ mg
Answer:
9,500

(iv) 15 kg 350 g = ______ g
Answer:
15350

(v) 6250 g = ______ kg ______ g
Answer:
6,250

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1

Question 2.
Add the following:

(i) 4 kg 250 g + 3 kg 450 g
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1 1
4 kg 250 g + 3 kg 450 g = 7 kg 700 g

(ii) 75g 430 mg + 750 g
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1 2
75g 430 mg + 750 g = 825 g 430 mg

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1

(iii) 97 kg 45 g + 77 kg 450g + 33 kg 250 g
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1 3
97 kg 45 g + 77 kg 450g + 33 kg 250 g = 207 kg 745 g

(iv) 75 kg 400 g + 30 kg 250 g
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1 4
75 kg 400 g + 30 kg 250 g = 105 kg 650 g

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1

Question 3.
Subtract the following:

(i) 40 kg 350 g – 25 kg 200 g
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1 5
40 kg 350 g – 25 kg 200 g = 15 kg 150 g

(ii) 35 kg 850 g – 18 kg 500 g
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1 6
35 kg 850 g – 18 kg 500 g = 17 kg 350 g

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1

(iii) 985 kg 475 g – 275 kg 325 g
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1 7
985 kg 475 g – 275 kg 325 g = 710 kg 150 g

(iv) 700 kg – 300 kg 500 g
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1 8
700 kg – 300 kg 500 g = 399 kg 500 g

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1

Question 4.
Multiply the following:

(i) 4 kg 300 g × 7
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1 9
4 kg 300 g × 7 = 30 kg 100 g

(ii) 17kg 750 g × 8
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1 10
17kg 750 g × 8 = 142 kg

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1

(iii) 25 kg 550 g × 4
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1 11
25 kg 550 g × 4 = 102 kg 200 g

(iv) 72g 350 mg × 5
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1 12
72g 350 mg × 5 = 361 g 750 mg

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1

Question 5.
Divide the following:

(i) 99 kg 99 0g ÷ 3
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1 13
99 kg 99 0g ÷ 3 = 33 kg 330 g

(ii) 147 g 630 mg ÷ 7
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1 14
147 g 630 mg ÷ 7 = 21 g 90 mg

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1

(iii) 550 kg 220 g ÷ 11
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1 15
550 kg 220 g ÷ 11 = 50 kg 20 g

(iv) 484 g 384 mg ÷ 4
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1 16
484 g 384 mg ÷ 4 = 121 g 96 g

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1

Question 6.
What is the total weight of 7 kg 500 g of cashew nut and 3 kg 350 g of pista?
Answer:
cashew nut = 7 kg 500 g
pista = 3 kg 350 g
Total weight = 7 kg 500 g + 3 kg 350 g
= 10 kg 850 g
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1 17

Question 7.
Vimal had a sack of cotton seeds weighing 50 kg 350 g. He used 7 kg 300 g cotton seeds to feed his cow. How much cotton seed will be remaining after feeding his cow?
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1 18
Remaining cotton seeds = 43 kg 50 g

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1

Question 8.
A glass bottle can contain 25 g 125 mg of medicine, how much medicine can 7 such bottles contain?
Answer:
Samacheer Kalvi 5th Maths
7 bottles contain = 175 g 875 mg

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1

Question 9.
75 kg 750 g of groundnut seed is filled in five bags, how much groundnut seed can a bag contain?
Answer:
Total = 75 kg 750 g
One bag = 75 kg 750 g ÷ 5
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 4 Measurements Ex 4.1 20
one bag = 15 kg 150 g

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Students can Download 9th Tamil Chapter 6.2 இராவண காவியம் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 9th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 9th Tamil Solutions Chapter 6.2 இராவண காவியம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 1.
ஐவகை நிலங்களில் உங்கள் மாவட்டம்/ஊர் அமைந்த நிலவகை பற்றியும் அதன் கவின்மிகு காட்சியையும் படக் கட்டுரையாக்குக.
Answer:
என்னுடைய மாவட்டம் கன்னியாகுமரி. ஐவகை நிலங்களில் கடலும் கடல் சார்ந்த நிலமாக இருப்பது என் மாவட்டத்தின் பெருமை.

கன்னியாகுமரியின் கவின்மிகு காட்சிகள்

தமிழகத்திற்குத் தென் எல்லையாகத் திகழும் எம் மாவட்டம் இயற்கை அழகுக்குப் பெயர் பெற்றது. சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம்.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 1
அரபிக்கடல், வங்காளவிரிகுடா. இந்தியப் பெருங்கடல் ஆகிய முக்கடலும் சங்கமிக்கும் இடம் இது.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 2
இங்கு காணக் கிடைக்கும் சூரிய உதயமும், அஸ்தமனமும் வண்ணத் திருவிழாவாகவும், வானத்தில் பல வர்ணஜாலம் வாரியிறைக்கும் நிகழ்வுகளாகவும் அமைகின்றன. பல வண்ண மணல் நிரம்பிய குமரி கடற்கரை காணக் காண இன்பமே.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 3

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்
தமிழினம் செழிக்க இரண்டடி தந்த வள்ளுவரைப் பெருமைப்படுத்தும் மாவட்டம்.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 4
‘எழுமின் விழுமின்” என்று இளைய மனங்களில் எழுச்சித்தீபம் ஏற்றிய விவேகானந்தரைப் பெருமைப்படுத்தியுள்ளதும் எம் மாவட்டமே.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 5
காமராசர் நினைவாலயம், காந்தி மண்டபமும் இங்கு உண்டு.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 6
கடலில் நீராடும் துறை அருகே ஓர் அழகிய சித்திரம் போல் அமையப் பெற்றிருக்கும் குமரியம்மன் கோயில். பழமை வாய்ந்த தேவாலயங்களும் இங்கு இறையாசி வழங்கிக் கொண்டு இருக்கின்றன.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 7
இங்கு புலியை முறத்தால் கொன்ற வீரப் பெண்ணுக்கும், முல்லைக்குத் தேர் தந்த பாரி மன்னனுக்கும் வைக்கப்பட்டுள்ள சிலைகள் கண்ணைக் கவரும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளது.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 8
திற்பரப்பில் இருந்து, திருவட்டார் வந்த பின் மாத்தூர் என்ற சிற்றூருக்குச் செல்லும் சாலையில் தொட்டிப் பாலம் உள்ளது. ஆற்றுக்கு மேல் அமைந்துள்ள இப்பாலத்தில் விவசாயத்துக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய் அமைந்துள்ளது தனிச்சிறப்பு.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

செல்லும் வழியெங்கும் பசி தீர்க்க பழவகைகள் பலவும் கிடைக்கும். கன்னியாகுமரியை இப்படிச் சொல்லி, சொல்லி வர்ணனை செய்து கொண்டே போகலாம்.
எம் மாவட்டத்திற்கு நீங்களும் ஒருமுறை வாருங்கள். இயற்கை இன்பத்தை அனுபவியுங்கள்.

Question 2.
இப்பாடப் பகுதியில் உங்களை ஈர்த்த கவிதைக் காட்சியினை ஓவியமாகத் தீட்டுக.
Answer:
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 9
கல்லிடைப் பிறந்த ஆறும்
கரைபொரு குளனும் தோயும்
முல்லைஅம் புறவில் தோன்று
முருகுகான் யாறு பாயும்
நெல்லினைக் கரும்பு காக்கும்
நீரினைக் கால்வாய் தேக்கும்
மல்லல்அம் செறுவில் காஞ்சி
வஞ்சியும் மருதம் பூக்கும்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 3.
வைக்கோற் போர், நெற்கதிர், போரடிக்கும் களம் போன்ற உழவுத் தொழிலோடு தொடர்புடையவற்றின் விளக்கங்களைத் தொகுத்து வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:
மாணவர்களே! இராவண காவியத்தில் ஐவகை நில வளங்களைப் பற்றிக் கற்கும் போது, வைக்கோற் போர், நெற்கதிர் போரடிக்கும் களம் போன்ற வார்த்தைகளைக் கற்றீர்கள் அல்லவா! அதன் விளக்கங்கள் தெரிந்து கொள்ள ஒரு கலந்துரையாடல்

கலந்துரையாடுபவர்கள்: ஆசிரியர், புகழேந்தி, சுதா.

ஐயா : நெற்குதிர் பற்றிச் சொல்லுங்கள் ஐயா!
ஆசிரியர் : கூறுகிறேன் புகழேந்தி.
நெல் முதலிய தானியங்களைச் சேகரிக்கும் கூடு. பெரிய அளவில் இருக்கும் குதிரில் தானியத்தைச் சேமிப்பர். சிறிய அளவில் உள்ளவை விதை தானியங்களைச் சேகரித்து வைக்கவும் உதவும்.
புகழேந்தி : ஐயா! குதிர் பற்றி என் தாத்தா ஏதோ பழமொழி சொல்வாரே
ஆசிரியர் : ஆமாடா ………” எங்கப்பன் குதிருக்குள் இல்லை ”. “ஐயா!” கதிர் போல அம்மா குதிர் போல ” போன்ற பழமொழிகள் உள்ளன.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

சுதா :ஐயா போர் அடித்தல் என்றால் என்ன ஐயா!
ஆசிரியர் : அறுவடை செய்த நெல்லையும், வைக்கோலையும் பிரிக்கும் செயல். அகன்ற களத்திற்கு கொண்டு வந்து அடிப்பர். முதலில் அடிப்பதை தலையடி என்பர். பின் வைக்கோலைப் பரப்பி, மாட்டைச் சுற்றி வரச் செய்தும் நெல்லையும்,
வைக்கோலையும் தனித்தனியே பிரித்தெடுத்தலே போரடித்தல் ஆகும்.

சுதா : ஐயா வைக்கோற்போர் பற்றிச் சொல்லுங்களேன்.
ஆசிரியர் : நெல்லைப் பிரித்து எடுத்த பின் அதன் தாளை உலர்த்தி சேகரிப்பது வைக்கோல். அது கால்நடைகளுக்குக் குறிப்பாக மாடுகளுக்கு உணவாகும். வைக்கோலை ஈரம்படாமல் உலரவைத்து. அதனை அழகாக அடுக்கி குவித்து, காற்றில் பறக்காமல் இருக்க, வைக்கோலாலே பின்னப்பட்ட வைக்கோல் பிறியைக் கொண்டு சுற்றி வைத்துப் பாதுகாப்பதே வைக்கோற் போர் ஆகும்.
புகழேந்தி

சுதா : நன்றி ஐயா எங்கள் தலைமுறைக்குத் தெரியாத செய்திகள் இவை. விளக்கமாக புரிய வைத்து விட்டீர்கள் ஐயா!

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘பொதுவர்கள் பொலி உறப் போர் அடித்திடும்’ நிலப்பகுதி ……………….
அ) குறிஞ்சி
ஆ) நெய்தல்
இ) முல்லை
ஈ) கெடுதல்
Answer:
இ) முல்லை

குறுவினா

Question 1.
இடிகுரல், பெருங்கடல் – இலக்கணக் குறிப்புத் தருக.
Answer:
இடிகுரல் – உவமைத் தொகை
பெருங்கடல் – பண்புத் தொகை

Question 2.
பாலை நிலத்தில் பருந்துகள் பறந்ததன் காரணம் என்ன?
Answer:
மராமலர்களை மாலையாக அணிந்த சிறுவர்கள், எருதின் கொம்புகளைப் போல் இருந்த பாலைக்காயை நிலத்தில் விழுந்து வெடிக்குமாறு கோலினால் அடித்தனர். அவ்வோசையைக் கேட்ட பருந்துகள் அச்சத்துடன் பறந்து ஓடின.
“வெடிக்கவிட்டு ஆடிட விரும்பிக் கோலினால் அடிக்கும் ஓசையின் பருந்து அஞ்சி ஓடுமே”

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

சிறுவினா

Question 1.
இராவண காவியத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு உவமைகளை எடுத்துக் காட்டுக.
Answer:
குன்று போல:
முல்லை நிலத்தவர்கள், முதிரை. சாமை, கேழ்வரகு மணி போன்ற குதிரை வாலி ஆகியவற்றை கதிர் அடித்து களத்தில் குவித்து வைத்திருக்கும் காட்சியானது குன்று போல இருந்தது என்று தானியக் குவியலுக்கு குன்றினை உவமைப்படுத்தியுள்ளார்.

மதியம் தொடரும் மேகம் போல:
கடற்கரை மணலிடை உலவி தன் நீண்ட சிறகினை உலர்த்திய வண்டானது, தாமரை மலரை ஒத்த பெண்களின் முகத்தினை நோக்கி தொடர்ந்து செல்லும். அக்காட்சியானது வானில் முழுநிலவைத் தொடர்ந்து செல்லும் ஒரு மேகத்தின் காட்சி போல் உள்ளது என்று உவமைப்படுத்தியுள்ளார் புலவர் குழந்தை.

Question 2.
குறிஞ்சி மணப்பதற்கான நிகழ்வுகளைக் குறிப்பிடுக.
Answer:
தீயில் இட்ட சந்தன மரக் குச்சிகளின் மணமும், அகில் போன்ற வாசனைப் பொருட்களின் நறுமணமும், உலையில் இட்ட மலை நெல் அரிசி சோற்றின் மணமும், குறிஞ்சி நிலம் முழுவதும் பரவிக் கிடந்த காந்தள் மலரின் மணமும், எங்கும் பரவித் தோய்ந்து கிடந்ததனால் குறிஞ்சி நிலப்பகுதி முழுவதும் மணந்தது.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

நெடுவினா

Question 1.
இராவண காவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் காட்சிகளை விவரிக்க.
Answer:
முன்னுரை:
பூத்துக்குலுங்கும் பூஞ்சோலை, அடர்ந்து வளர்ந்த பசுமையான மரங்கள் நீர் நிறைந்த நதி, குளக்கரைகள், மயில்கள், குயில்கள், கிளிகள் எனப் பறந்து திரியும் பறவைகள் இத்தகு அழகு சூழலை இராவண காவியத்தில் ஐவகை நிலங்கள் பற்றிக் குறிப்பிடும் பாடல்களில் புலவர் குழந்தை குறிப்பிடுகிறார்.

பொன் மயில் ஆடும்:
அருவிகள் பறையைப் போல் ஆரவாரமாய் ஒலித்து விழும். பைங்கிளிகள் தாம் அறிந்த இசையினைப் பாடும். பொன் போன்ற அழகிய மயில் தன் அருமையான அகன்ற சிறகினை விரித்து ஆடும். பூக்கள் நிறைந்த மரக்கிளையில் அமர்ந்திருக்கும் குரங்கினமோ இவற்றையெல்லாம் மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கும்.

“………….. பொன் மயில்
அருகிய சிறைவிரித் தாடப் பூஞ்சினை
மருவிய குரக்கினம் மருண்டு நோக்குமால்”.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

குயிலும், வண்டும் இசைக்கும்:
அழகிய நாகணவாய்ப் பறவைகளும், குயில்களும் அழகுமிக்க சிறகினையுடைய வண்டு இனங்களும், பாவிசைத்துப் பாடின. புகழ்பெற்ற முல்லை நில ஆயர்கள் கொன்றை, ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆன முக்குழலை இசைத்து, மேயும் பசுக்கூட்டங்களை அருகருகே ஒன்றிணைக்கும் காட்சியும் இன்பம் தருவன.

“தேஇசை பெறும் கடறு இடையர் முக்குழல்
ஆவினம் ஒருங்குற அருகு அணைக்குமால்”

பூத்துக்குலுங்கும் காஞ்சி, வஞ்சி:
மலையிடைத் தோன்றும் ஆறும், கரையை மோதித் ததும்பி நிற்கும் குளமும் மனதைக் கொள்ளை கொள்ளும். முல்லை நிலத்தின் காட்டாற்று வெள்ளம் மருத நிலத்தில் பாய்ந்தோடும். நெற் பயிரினைக் காக்கும் பொருட்டு கரும்பு வளர்ந்து நிற்கும். பெருகி வரும் கால்வாய் வழி ஓடி வயலில் தேங்கி வளம் சேர்க்கும். இத்தகு வளம் நிறைந்த நிலத்திலே காஞ்சி மலர்களும் வஞ்சி மலர்களும் பூத்துக் குலுங்கி மனதைப் பரவசப்படுத்தும்.

“மல்லல்அம் செறுவில் காஞ்சி
வஞ்சியும் மருதம் பூக்கும்”

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

இளைப்பாற்றும் தாய் :
வெப்பத்தைத் தாங்க இயலாத தன் குட்டியின் களைப்பை இளைப்பாற்ற எண்ணிய தாய், எங்கும் நிழல் இன்றி தன் நிழலையே அதற்குத் தந்து குட்டியை இளைப்பாற்றும் தாயின் அன்பையும் இயற்கை மூலம் அறியலாம்.

“தன்னிழல் தங்கவே தாய்மை மீதுர ”

முடிவுரை:
மேற்கூறிய தன்மையில், இராவண காவியம் என்னும் இலக்கியமானது, எழிலோவியங்களை, தன் சொல் ஓவியங்களால் தீட்டி வைத்திருக்கிறது. இவற்றைக் கற்க கற்க இன்பமேயன்றி வேறில்ைைல யன்றோ!

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
இருபதாம் நூற்றாண்டின் தனித்தமிழ் பெருங்காப்பியம்.
அ) கம்பராமாயணம்
ஆ) இராவணகாவியம்
இ) தண்ணீர்த்தேசம்
ஈ) பொன்னியின் செல்வன்
Answer:
ஆ) இராவணகாவியம்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 2.
இராவண காவியத்தின் பாடல்கள்
அ) 2100
ஆ) 2500
இ) 3100
ஈ) 3500
Answer:
ஈ) 3100

Question 3.
இருபத்தைந்து நாளில் திருக்குறளுக்கு உரை எழுதியவர்.
அ) புலவர் குழந்தை
ஆ) மு. வரதராசனார்
இ) சாலமன் பாப்பையா
ஈ) பரிமேலழகர்
Answer:
அ) புலவர் குழந்தை

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 4.
யாப்பதிகாரம், தொடையதிகாரம் எழுதியவர்
அ) பெருந்தேவனார்
ஆ) வாணிதாசன்
இ) வரந்தருவார்
ஈ) புலவர் குழந்தை
Answer:
ஈ) புலவர் குழந்தை

Question 5.
“மன்னிய” – என்பதன் இலக்கணக்குறிப்பு.
அ) பெயரெச்சம்
ஆ) வினையெச்சம்
இ) தொழிற்பெயர்
ஈ) வியங்கோள் வினைமுற்று
Answer:
பெயரெச்சம்

Question 6.
பொருத்துக.
Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம் - 10
Answer:
அ. ii) ஆ. i) இ. iv) ஈ. ili)

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 7.
“பூவை” – என்பது எப்பறவையைக் குறிக்கும்.
அ) காகம்
ஆ) ஆறுமணிக்குருவி
இ) நாகணவாய்ப்பறவை
ஈ) நாரை
Answer:
இ) நாகணவாய்ப்பறவை.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 8.
எருதின் கொம்பினைப்போல் இருந்த காய் எது?
அ) பாலைக்காய்
ஆ) பாகற்காய்
இ) ஏலக்காய்
ஈ) வாழைக்காய்
Answer:
அ) பாலைக்காய்

Question 9.
காஞ்சியும், வஞ்சியும் பூக்கும் நிலம்
அ) குறிஞ்சி
ஆ) முல்லை
இ) மருதம்
ஈ) நெய்தல்
Answer:
இ) மருதம்

Question 10.
கொன்றை , ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆனது ……………..
அ) முக்கூடை
ஆ) முக்குழல்
இ) முத்தளிர்
ஈ) முக்கொம்பு
Answer:
ஆ) முக்குழல்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 11.
இராமாயணத்தில் எதிர்நிலை மாந்தராகப் படைக்கப்பட்டவன்
அ) இராமன்
ஆ) அனுமன்
இ) இராவணன்
ஈ) குகன்
Answer:
இ) இராவணன்

Question 12.
“மரை முகம்” – என்பதன் இலக்கணக் குறிப்பு
அ) உம்மைத்தொகை
ஆ) உவமைத்தொகை
இ) உருவகம்
ஈ) உரிச்சொற்றொடர்
Answer:
அ) உவமைத்தொகை

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 13.
புரைதபப் பறித்துக் காஞ்சிப் புனை நிழல் அருந்துவாரே – இதில் அமைந்துள்ள நயம்
அ) அடிமோனை
ஆ) சீர்மோனை
இ) அடிஎதுகை
ஈ) சீர்எதுகை
Answer:
அ) அடிமோனை

Question 14.
“வருமலை அளவி” – வருமலை என புலவர் எதனைக் குறிப்பிடுகிறார்.
அ) கடற்காகம்
ஆ) கடற்காளான்
இ) கடலாமை
ஈ) கடல் அலை
Answer:
ஈ) கடல் அலை

Question 15.
கரிக்குருத்து என்பதன் பொருள் யாது?
அ) சேவற்கொண்டை
ஆ) யானைத்தந்தம்
இ) மான்கொம்பு
ஈ) மயிற்தோகை
Answer:
ஆ) யானைத்தந்தம்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 16.
‘போர்’ அடிக்கும் குரலைக் கேட்டு அஞ்சி ஓடுவது எது?
அ) உழைமான்
ஆ) கவரிமான்
இ) கலைமான்
ஈ) செந்நாய்
Answer:
அ) உழைமான்

Question 17.
குருளைக்குத் தன் நிழல் தந்த விலங்கு எது?
அ) உழைமான்
ஆ) செந்நாய்
இ) மந்தி
ஈ) வானரம்
Answer:
ஆ) செந்நாய்

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

குறுவினா

Question 1.
இராவண காவியம் குறித்து அண்ணாவின் கருத்து யாது?
Answer:

  • இராவண காவியம் காலத்தின் விளைவு
  • ஆராய்ச்சியின் அறிகுறி
  •  புரட்சிப் பொறி

உண்மையை உணரவைக்கும் உன்னத நூல் என்பது பேரறிஞர் அண்ணாவின் கருத்தாகும்.

Question 2.
புலவர் குழந்தை – குறிப்பு வரைக.
Answer:

  • இராவணக் காவியத்தை இயற்றியவர் புலவர் குழந்தை ஆவார்.
  • தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் இவர் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 3.
புலவர் குழந்தையின் படைப்புகளில் ஏதேனும் இரண்டினைக் கூறுக.
Answer:

  • யாப்பதிகாரம்
  • தொடையதிகாரம்

Question 4.
குரக்கினம் மருண்டு நோக்குமால் – ஏன்?
Answer:

  • பறையின் ஒசையைப் போல் ஆரவாரமாய் விழும் அருவியோசை .
    பாடுகின்ற பைங்கிளிகள்
  • பொன் போன்ற அழகிய சிறகினை விரித்து ஆடும் மயில் இவற்றைக் கண்டு மரத்தில் அமர்ந்திருக்கும் குரங்கு மிரட்சியுடன் நோக்கியது என்று புலவர் குழந்தை குறிப்பிடுகிறார்.

Question 5.
குன்று போல் குவித்து வைக்கப்பட்டிருந்த தானியங்கள் யாவை? எந்நிலத்தில் வைக்கப்பட்டிருந்தது?
Answer:

  • முதிரை, சாமை, கேழ்வரகு, மணி போன்ற குதிரைவாலி நெல் ஆகியவை குன்று போல் குவித்து வைக்கப்பட்டிருந்தது.
  • முல்லை நிலத்தில்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 6.
கோர்வை / கோவை பற்றிய சொற்பொருள் விளக்கம் தருக.
Answer:
கோ என்பது வேர்ச்சொல்.

  • கோப்பு, கோவை, கோத்தல், கோத்தான், கோத்தாள் என்பதே சரி.
  • எ.கா : ஆசாரக்கோவை, ஊசியில் நூலைக் கோத்தான்.

Question 7.
மைவனம், முருகியம் – என்ற சொற்கள் உணர்த்தும் பொருள் யாவை?
Answer:
மலைநெல், குறிஞ்சிப்பறை.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

சிறுவினா

Question 1.
இராவண காவியத்தின் காண்டங்கள் எத்தனை? அவை யாவை?
Answer:
இராவண காவியத்தில் ஐந்து காண்டங்கள் உள்ளன. அவையாவன.

  • தமிழகக் காண்டம்,
  • இலங்கைக் காண்டம்
  • விந்தக் காண்டம்
  • பழிபுரிகாண்டம்
  • போர்க்காண்டம் என்பவையாகும்.

Question 2.
மருதநில சிறுவர்களின் மனமகிழ் செயல்பாடுகளை எடுத்தியம்புக.
Answer:
தாமரை மலர்கள் பூத்திருந்த குளத்தில் சிறுவர்கள் நீராடினர். அக்குளத்தில் நீந்தும் யானையின் தந்தங்களை அளந்து பார்த்து, அதன் வடிவழகு கண்டு மகிழந்தனர். சிறுகழல் அணிந்த சிறார்கள் வைக்கோற்போர் குலுங்கிடும்படி ஏறி, தென்னை இளநீர்க் காய்களைப் பறித்தனர். பின்னர்க் காஞ்சி மர நிழலில் அமர்ந்து அருந்தினர்.

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 இராவண காவியம்

Question 3.
நெய்தல் நில வண்டுகள் பற்றி எழுதுக.
Answer:
தும்பியானது கரையை நெருங்கி வருகின்ற மலை போன்ற அலையினைத் தடவி, கடற்கரை மணலிடை உலவி, காற்றிலே தன் நீண்ட சிறகினை உலர்த்தும். பின்னர்த் தாமரை மலரையொத்த பெண்களின் முகத்தினை நோக்கித் தொடர்ந்து செல்லும். அது வானில் முழு நிலவைத் தொடர்ந்து செல்லும் கருமேகத்தின் காட்சி போல் உள்ளது.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.4 ஒளி பிறந்தது

Students can Download 6th Tamil Chapter 3.4 ஒளி பிறந்தது Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 3.4 ஒளி பிறந்தது

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.4 ஒளி பிறந்தது

Question 1.
கனவு காணுங்கள் என்பது அப்துல் கலாமின் பொன்மொழி. உங்கள் கனவுகள் பற்றி வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:
வகுப்பில் மாணவர்கள் தங்கள் கனவுகளைப் பற்றிக் கலந்துரையாடுதல்)
மாணவர் 1 : வணக்கம். என் கனவு நன்றாகப் படித்து உலகமே என்னைப் பற்றி அறியும்படி சாதனை புரிய வேண்டும் என்பதுதான்.

மாணவர் 2 : நல்லது. எந்தத் துறையில் சாதிக்க விரும்புகிறாய்?

மாணவர் 1 : நான் அறிவியல் துறையில் சாதிக்க வேண்டும் என விரும்புகிறேன். எனக்கு அப்துல்கலாம் மாதிரி விஞ்ஞானி ஆக வேண்டும் என்பது என் வாழ்க்கை இலட்சியமாகவே எண்ணுகிறேன்.

மாணவர் 2 : நன்று! நன்று! அதுசரி எத்தனையோ விஞ்ஞானிகள் உள்ளனர். நீஎன்ன அப்துல்கலாம் மாதிரி என்று கூறுகிறாய்?

மாணவர் 1 : நன்றாகக் கேட்டாய். அவரை நான் என் முன்மாதிரியாக எண்ணுகிறேன். அவர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து சொந்த முயற்சியில் படித்து விஞ்ஞானி ஆனவர்.

மாணவர் 2 : ஆமாம். அவர் காட்சிக்கு எளிமையானவர். நம்மைப் போன்ற மாணவர்களிடம் உரையாடுவதை மிகவும் விரும்பியவர்.

மாணவர் 1 : அதுமட்டுமா? தம்முடைய கடுமையான உழைப்பால் முன்னேறியவர். அவர் சென்ற பணிகளுக்கெல்லாம் அவருடைய உழைப்பும் அவர் கற்ற கல்வியுமே பரிந்துரையாக இருந்துள்ளது.

மாணவர் 2 : அதுசரி. நீ எதிர்காலத்தில் எவற்றில் எல்லாம் மாற்றம் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்?

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.4 ஒளி பிறந்தது

மாணவர் 1 : நான் அறிவியல் துறையில் பல மாற்றங்களைக் கொண்டு வருவேன். அப்துல்கலாம் ஐயா கூறியதைப்போல் நான் கிராமங்களில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சி செய்வேன். ஐயா அவர்களின் கனவை நனவாக்க கிராமங்களில் உள்ள இளைஞர்களைக் கனவு காணச் செய்வேன்.

மாணவர் 2 : இளைஞர்கள் என்ன கனவு காண வேண்டும்.

மாணவர் 1 : சொல்கிறேன் கேள். இளைஞர்கள் வாய்மைக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். நல்லவற்றை எண்ண வேண்டும். அதன்வழி நடக்க வேண்டும். கடுமையாகவும் உண்மையாகவும் உழைக்க வேண்டும். தோல்விக்குத் தோல்வியைத் தர வேண்டும். துன்பத்திற்குத் துன்பத்தைத் தர வேண்டும். அவர்களுடைய கனவுகளாவன “அரும் பெரும் இலட்சியத்துடன் நாளைய வரலாற்றை உருவாக்குவோம்.

நாம் வசிக்கும் கிராமத்தை வளம் பொருந்தியதாக மாற்றுவோம். மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் வேளாண்துறையைத் தேர்ந்தெடுப்போம். வேளாண்மையில் புதுமைகள் செய்வோம். நாட்டின் உயிர் கிராமங்கள் என உணர்ந்து செயல்படுவோம். இடைத்தரகர்கள் இன்றி நேரடி விற்பனை முறையைக் கொண்டு வருவோம்” இளைஞர்கள் இக்கனவை நனவாக்கினால் கட்டாயம் நம் கிராமங்கள் முன்னேறும். அதனைத் தொடர்ந்து நாடும் முன்னேறும்.

மாணவர் 2 : நீ விஞ்ஞானியாக வேண்டும் என்று கூறினாயே. ஏதோ செயற்கைக்கோள், ஏவுகணை என்று கூறுவாய் என எதிர்பார்த்தேன்.

மாணவர் 1 : இதுவும் விஞ்ஞானம்தான். நிலம் விவசாயத்திற்கு ஏற்றார்போல் உள்ளதா எனச் சோதித்து அதற்கேற்றபடி மாற்றுவது, நிலத்தடி நீர் பெருகுவதற்குச் செய்ய வேண்டிய வழிமுறைகள், நல்ல விதைகளைத் தேர்ந்தெடுப்பது போன்றவற்றை ஆய்வு செய்து விவசாயம் மேம்படச் செய்ய வேண்டும். அம்முறையில் விவசாயம் செய்து பல மடங்கு விளைச்சல் பெறுவதற்கு ஆவன செய்தல் வேண்டும். இவையெல்லாம் அறிவியல் சார்ந்ததே. இயற்கை முறையில் வேளாண்மை செய்து மக்கள் நோய் நொடியின்றி வாழ வழி வகுப்பேன்.

மாணவர் 2 : உன்னுடைய கனவு நனவாக வாழ்த்துகள்.

மாணவர் 1 : நன்றி!

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.4 ஒளி பிறந்தது

Question 2.
நீங்கள் நேர்காணல் செய்ய விரும்பும் ஒருவரைக் குறிப்பிடுக. அவரிடம் கேட்க விரும்பும் ஐந்து வினாக்களைப் பட்டியலிடுக.
Answer:
நான் நேர்காணல் செய்ய விரும்பும் நபர் Dr.APJ அப்துல் கலாம் அவர்கள்.
வினாக்கள் :
(i) அறிவியல் மீது உங்களுக்கு ஆர்வம் ஏற்படக்காரணம் எது?
(ii) சிறு வயதில் என்னவாக வேண்டும் என விரும்பினீர்கள்?
(iii) உங்களுக்குப் பிடித்தத் துறை எது? (அறிவியல் தவிர)
(iv) உங்களுக்கு முன் மாதிரியாக யார் இருந்தனர்?
(v) வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிய சில யோசனைகள் கூறுங்கள் ஐயா?

Question 3.
நீங்கள் அப்துல் கலாமிடம் கேட்க விரும்பும் வினாக்களை ஒரு கடிதமாக எழுதுக.
Answer:

இடம் : செஞ்சி
நாள் : 09-03-2018

மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம், நான் செஞ்சியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறேன். உங்களைப் போல அறிவியல் விஞ்ஞானியாக வேண்டும் என்பதே என்னுடைய ஆசை, கனவு, விருப்பம் உங்களிடம் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள நினைக்கிறேன். அதற்காக உங்களிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். எனவே அதற்குத் தாங்கள் பதில் அளிக்குமாறு மிகவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கேள்விகள் :
(i) நீங்கள் சிறு வயதில் விஞ்ஞானியாக வருவேன் என்று நினைத்துப் பார்த்ததுண்டா?
(ii) உங்கள் ஆராய்ச்சியில் உங்களைக் கவர்ந்தது எது?
(iii) ஒரு சிறந்த குடிமகன் எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
(iv) நம்முடைய விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் தொழில் நுட்பங்கள் விவசாயத்திற்கு எந்த அளவு பயன்படுகிறது?
(v) நாட்டில் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிய வழி சொல்லுங்கள்?
(vi) உங்களுக்குப் பிடித்தத் தலைவர் யார்? ஏன்?
(vii) உங்க ளுக்குப் பிடித்தப் புத்தகம் எது? ஏன்?
(viii) “ஊழல் இல்லாத நாடு” சாத்தியப்படுமா?
(ix) இந்த உலகிலே மிகச் சிறந்த கண்டுபிடிப்பு எது?
(x) எதிர்காலத்தில் இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருக்குமென நீங்கள் நினைக்கிறீர்கள்?

இப்படிக்கு,
அன்புடன் – செந்தாழினி

உறைமேல் முகவரி :
மேதகு. ஆ.ப.ஜை. அப்துல்கலாம் அவர்கள்,
மேனாள் குடியரசுத் தலைவர்,
புதுடெல்லி.

மதிப்பீடு

Question 1.
சுதந்திர இந்தியா அடைந்த வெற்றிகளாக அப்துல் கலாம் எவற்றைக் குறிப்பிடுகிறார்?
Answer:
சுதத்திர இந்தியாவின் வெற்றிகள் :
(i) உணவு உற்பத்தியில் தன்னிறைவு.
(ii) தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகுதியான வளர்ச்சி.
(iii) எவ்வகையான செயற்கைக்கோளையும் ஏவும் திறன்.
(iv) அணு உலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பதில் முன்னணி. நவீன மருந்துகளும் பாரம்பரிய மருத்துவ முறைகளும் வளர்ச்சி.
(v) பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை ‘அக்னி’ மற்றும் பிரித்வி’ ஏவுகணைகளைச் செலுத்துவதில் வெற்றி. இவையெல்லாம் சுதந்திர இந்தியா அடைந்த வெற்றிகளாக அப்துல்கலாம் குறிப்பிடுகிறார்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.4 ஒளி பிறந்தது

Question 2.
தமக்குப் பெருமகிழ்வை அளித்ததாக அப்துல் கலாம் குறிப்பிடும் நிகழ்வு யாது?
Answer:
தமக்குப் பெருமகிழ்வை அளித்ததாக அப்துல் கலாம் குறிப்பிடும் நிகழ்வு : ‘போலியோவினால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று கிலோ எடையுள்ள செயற்கைக் கால்களைப் பொருத்திக்கொண்டு சிரமப்பட்டு நடப்பதைக் கண்டேன். பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுத்தப்படும் ‘கார்பன் இழையைக் கொண்டு முந்நூறு கிராம் எடையில் செயற்கைக் கால்கள் உருவாக்கப்பட்டன. அதனை அவர்கள் அணிந்து மகிழ்ந்த நிகழ்ச்சிதான் தனக்குப் பெருமகிழ்வை அளித்ததாகக் கலாம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.3 கணியனின் நண்பன்

Students can Download 6th Tamil Chapter 3.3 கணியனின் நண்பன் Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 3.3 கணியனின் நண்பன்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.3 கணியனின் நண்பன்

Question 1.
உங்களை ஓர் ரோபோவாகக் கற்பனை செய்துகொண்டு நண்பர்களுடன் உரையாடுக.
Answer:
மாணவன் 1 : இன்று நம் வகுப்பிற்கு ரோபோ வரப் போவதாக நம் ஆசிரியர் கூறினாரே? கண்டிப்பாக வருமா?

மாணவன் 2 : கண்டிப்பாக வரும். ரோபோ என்றால் என்ன? உனக்குத் தெரியுமா?

மாணவன் 1 : ரோபோ என்பதைத் தமிழில் தானியங்கி என்று கூறுவோம். இது நடைமுறையில் இயந்திர வடிவுடைய மெய்நிகர் முகவர் ஆகும். இதோ ரோபோ வந்துவிட்டதே. வா ரோபோ உன்னைத்தான் நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ரோபோ : வணக்கம். நான் வரும் வழியில் போக்குவரத்து நெரிசல் இருந்ததால் கொஞ்சம் காலதாமதமாகி விட்டது. தாமதமாக வந்ததற்கு மிகவும் வருந்துகிறேன். என்னை மன்னிக்கவும்.

மாணவன் 2 : அட்டா. இதென்ன நீ மன்னிப்பெல்லாம் கேட்கிறாய்? நீ ஒரு எந்திர மனிதன்தானே.

ரோபோ : நான் எந்திரமனிதன்தான். ஆனால் தவறு செய்தால் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது எங்களுக்குள் வடிவமைக்கப்பட்ட கட்டளைகளுள் ஒன்று.

மாணவன் 2 : அப்படியானால் நீயும் மனிதர்களைப் போல் எல்லாப் பணிகளையும் செய்வாயா?

ரோபோ : நான் உங்களைப் போல் இல்லை. உங்களை விட வேகமாகவும், நுட்பமான, கடினமான வேலைகளை மிக எளிதாகவும் செய்து முடிப்பேன். என்னுடன் ஒரு கணினி இணைந்திருக்கும். அது என்னுடைய செயல்களைக் கட்டுப்படுத்தும் நான் செயல்படும் இடத்திற்கு ஏற்ற வகையில் எந்திரக் கைகள், நகரும் கால்கள், சூழ்நிலைகளை உணர்வதற்கான நுண்ணுணர்வுக் கருவிகள் ஆகியவற்றுடன் உருவாக்கப்பட்டுள்ளேன்.

மாணவன் 1 : உன்னுடைய பணிகள் என்னென்ன?

ரோபோ : நான் உங்களால் செய்ய முடியாத கடினமான செயல்களையும் எளிதாகச் செய்வேன். தொழிற்சாலையில் உற்பத்தி செய்தல், பழுதுகளை நீக்குதல், உதிரிப் பாகங்களை இணைத்தல் ஆகிய பணிகளைச் செய்வேன்.

மாணவன் 2 : மருத்துவத் துறையில் கூட உன் வேலை மகத்தானது என என் அப்பா கூறினார். அங்கு உன்னுடைய வேலை என்ன?

ரோபோ : மருத்துவத்துறையில் நோயின் அறிகுறிகளைக் கண்டறியவும் மருத்துவம் பார்க்கவும் பயன்படுகின்றேன். மேலும் சிக்கலான அறுவை சிகிச்சைகளைச் செய்யவும் நான் பயன்படுகின்றேன்.

மாணவன் 1 : கேட்கவே வியப்பாக உள்ளதே. இன்னும் உன் பணிகள் என்னென்ன?

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.3 கணியனின் நண்பன்

ரோபோ : என்னால் உங்களுடன் சேர்ந்து விளையாட முடியும். என்னைப் போன்ற எந்திர மனிதர்கள் உணவகங்களில் உணவு பரிமாறுவர். 3 பொது இடங்களில் வழிகாட்டுவர். வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் 9 செய்யவும் எங்களால் முடியும். பிறகோள்களுக்குச் சென்று ஆய்வு 2 நடத்தவும் செயற்கைக் கோள்களை இயக்கவும் பயன்படுவேன். பெருங்கடலின் அடி ஆழம், வெப்பநிலை உறைநிலைக்கும் கீழே உள்ள துருவப் பகுதிகள் ஆகிய இடங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தவும் உதவுகின்றேன்.

மாணவன் 2 : நீ கூறுவதையெல்லாம் கேட்பதற்கே வியப்பாக உள்ளதே.

ரோபோ : நான் போர்க்களத்தில் இராணுவ வீரர்களுள் இணைந்து செயலாற்றுவேன். வங்கிகளில் வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பேன். இப்படி பலவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

மாணவன் 1 : உன்னுடைய பயன்பாட்டைப் பார்க்கும் போது மிகவும் வியப்பாக உள்ளது.

ரோபோ : எங்கள் வளர்ச்சி இத்துடன் நின்றுவிடாது. மனிதர்கள் எங்களை அவர்களின் பயன்பாட்டிற்கும் தேவைக்கும் ஏற்றபடி வடிவமைத்து செயல்படுத்திக் கொள்வார்கள். எங்களால் எந்த இடையூறுகளும் இருக்காது என்பதை உறுதியாகக் கூறுவேன். நீங்கள் நன்றாகப் படித்து எங்களைப் போல் பிறருக்கும் பயன்படுமாறு பணிபுரியுங்கள்.

மாணவர்கள் : நன்றி ரோபோ! இவ்வளவு நேரம் நீ பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.

ரோபோ : நன்றி மாணவர்களே! சென்று வருகிறேன்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
நுட்பமாகச் சிந்தித்து அறிவது …………..
அ) நூலறிவு
ஆ) நுண்ண றிவு
இ) சிற்றறிவு
ஈ) பட்டறிவு
Answer:
ஆ) நுண்ண றிவு

Question 2.
தானே இயங்கும் இயந்திரம் …………..
அ) கணினி
ஆ) தானியங்கி
இ) அலைபேசி
ஈ) தொலைக்காட்சி
Answer:
ஆ) தானியங்கி

Question 3.
‘நின்றிருந்த என்னும்’ சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..
அ) நின் + றிருந்த
ஆ) நின்று + இருந்த
இ) நின்றி + இருந்த
ஈ) நின்றி + ருந்த
Answer:
ஆ) நின்று + இருந்த

Question 4.
‘அவ்வுருவம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ) அவ்வு + ருவம்
ஆ) அ + உருவம்
இ) அவ் + வுருவம்
ஈ) அ + வுருவம்
Answer:
ஆ) அ + உருவம்

Question 5.
மருத்துவம் + துறை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………….
அ) மருத்துவம்துறை
ஆ) மருத்துவதுறை
இ) மருந்துதுறை
ஈ) மருத்துவத்துறை
Answer:
ஈ) மருத்துவத்துறை

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.3 கணியனின் நண்பன்

Question 6.
செயல் + இழக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………..
அ) செயலிழக்க
ஆ) செயல் இழக்க
இ) செய இழக்க
ஈ) செயலிலக்க
Answer:
அ) செயலிழக்க

Question 7.
நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல் ………….
அ) போக்குதல்
ஆ) தள்ளுதல்
இ) அழித்தல்
ஈ) சேர்த்தல்
Answer:
ஈ) சேர்த்தல்

Question 8.
எளிது என்னும் சொல்லின் எதிர்ச்சொல் …………..
அ) அரிது
ஆ) சிறிது
இ) பெரிது
ஈ) வறிது
Answer:
அ) அரிது

கோடிட்ட இடங்களை நிரப்புக

1. மனிதன் தன் வேலைகளை எளிதாக்கக் கண்டுபிடித்தவை ……………..
2. தானியங்கிகளுக்கும், எந்திரமனிதர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு ………………
3. உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின் பெயர் …………..
4. ‘சோபியா’ ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கிய நாடு …………..
Answer:
1. (விடை: எந்திரங்கள்)
2. (விடை: செயற்கை நுண்ணறிவு)
3. (விடை: டீப் புளூ)
4. (விடை: சவுதி அரேபியா)

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

1. தொழிற்சாலை …………………………………………….
விடை : எங்கள் பகுதியில் தொழிற்சாலை மூலம் வெளியேறும் கழிவுகள் மிகுந்து விட்டன.

2. உற்பத்தி ………………………………………………
விடை : நம் நாட்டில் விளையும் உணவு தானியங்களை மேலும் உற்பத்தி செய்து தன்னிறைவை அடையவேண்டும்.

3. ஆய்வு ……………………………………………………
விடை : அறிவியல் அறிஞர்கள் தங்கள் ஆய்வு தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணுவர்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.3 கணியனின் நண்பன்

4. செயற்கை ……………………………………………
விடை : நாம் நமது மண்ணில் இருந்தே செயற்கைக் கோள்களை அனுப்பும் திறனைப் பெற்றுள்ளோம்.

5. நுண்ண றிவு …………………………………………….
விடை : இயந்திர மனிதர்கள் தங்கள் நுண்ணறிவுத் திறனைப் பயன்படுத்தி வேலையை முடிக்கின்றன.

குறுவினா

Question 1.
‘ரோபோ’ என்னும் சொல் எவ்வாறு உருவானது?
Answer:
ரோபோ உருவாக அடிப்படை நிகழ்வு :
(i) செக் நாட்டைச் சேர்ந்த காரல் சேபெக் என்ற நாடக ஆசிரியர், 1920 ஆம் ஆண்டு நாடகம் ஒன்றை எழுதினார்.
(ii) அதில் ‘ரோபோ’ என்னும் சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தினார். ரோபோ என்ற சொல்லுக்கு அடிமை என்று பொருள்.
(iii) அந்நாடகத்தில் ஒரு தொழிற்சாலையில் ரோபோக்கள் வேலை செய்வதாகக் காட்சிகளை அமைத்திருந்தார். இந்நிகழ்வே, ரோபோ என்னும் சொல் என்ற சொல் உருவாக அடிப்படை நிகழ்வானது.

Question 2.
‘டீப் புளூ’ – மீத்திறன் கணினி பற்றி எழுதுக.
Answer:
‘டீப் ப்ளூ’ – ரோபோ :
(i) ஐ.பி.எம். என்னும் நிறுவனம் உருவாக்கிய மீத்திறன் கணினிதான் டீப் ப்ளூ’.
(ii) இது 1997 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த சதுரங்கப் போட்டியில் கேரி கேஸ்புரோவ் என்பவருடன் போட்டியிட்டு வெற்றி பெற்றது.

சிறுவினா

Question 1.
எந்திரமனிதனின் பயன்களை விளக்குக.
Answer:
எந்திர மனிதனின் பயன்கள் :
(i) தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்தல், பழுதுகளை நீக்குதல் போன்ற பணிகளைச் செய்தல்.
(ii) மருத்துவத்துறையில் நோயின் அறிகுறிகளைக் கண்டறிதல்.
(iii) சிக்கலான அறுவை சிகிச்சைகளைச் செய்தல்.

Question 2.
துருவப் பகுதிகளில் ஆய்வு செய்ய எந்திரமனிதர்களை அனுப்புவதன் காரணம் யாது?
Answer:
துருவப் பகுதிகளில் நிகழும் தட்ப வெப்ப நிலை, மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்றதல்ல. எனவே அப்பகுதிகளில் ஆய்வு செய்வதற்கு எந்திர மனிதர்களை அனுப்புகிறார்கள்.

சிந்தனை வினா

Question 1.
உங்களுக்கென்று ஒரு எந்திரமனிதன் இருந்தால் அதை எதற்கெல்லாம் பயன்படுத்துவீர்கள் எனச் சிந்தித்து எழுதுக.
Answer:
1. விண்வெளிக்கு என்னை அழைத்துச் செல்வதற்கும், ஆய்வு செய்வதற்கும்.
2. வாகனம் ஓட்டுவதற்கும்
3. இராணுவத்தில் உயிர் பலியாவதைத் தடுக்கும் பணிக்கு அனுப்புவேன்.
4. போக்குவரத்துக் காவல் துறைக்குப் பதிலாக ரோபோவைப் பயன்படுத்துவேன்.
5. கட்டிட வேலைகள் செய்வதற்கும்
6. உடற்பயிற்சி செய்வதற்கும்
7. வனவிலங்குகள் நடமாட்டங்களை அறிவதற்கும்
8. என்னோடு விளையாடுவதற்கும்
9. வீடு, அலுவலகம், நிறுவனங்களுக்குக் காவல் பணி செய்வதற்கும்
10. கல்வி கற்றுதருவதற்கும்
11. கழிவறையைச் சுத்தம் செய்வதற்கும்.
12. ஆழ்கடலில் மனிதன் செல்லாமல் ஆய்வு செய்வதற்கும் ரோபோக்களைப் பயன்படுத்துவேன்.

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.3 கணியனின் நண்பன்

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Additional Questions

Students can download 5th Maths Term 2 Chapter 3 Patterns Additional Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 2 Chapter 3 Patterns Additional Questions

Question 1.
Mention the time in the clock when the angle is

(i) 30°
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Additional Questions 1

(ii) 120°
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Additional Questions 2

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Additional Questions

(iii) 150°
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns Additional Questions 3

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns InText Questions

Students can download 5th Maths Term 2 Chapter 3 Patterns InText Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 2 Chapter 3 Patterns InText Questions

Activity:1 (Text Book Page No.16)

Continue the pattern as done in first to complete the tile.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns InText Questions 1
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns InText Questions 2

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns InText Questions

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns InText Questions 3
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns InText Questions 4

Activity:2 (Text Book Page No.16)

Continue the border stripe.
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns InText Questions 5
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns InText Questions 6

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns InText Questions

Activity:3 (Text Book Page No.16)

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns InText Questions 7
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns InText Questions 8

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 3 Patterns InText Questions

Activity:4 (Text Book Page No.22)

Arrange the given words to form a pattern
Depth, called, walked, mice, played, pulled, breadth, rice, length, width, price, voice
_______, _______, _______, _______,
_______, _______, _______, _______,
_______, _______, _______, _______,
Answer:
Depth, breadth, length, width
called, walked, played, pulled
nice, rice, price, voice