Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.2 ஒவ்வொரு புல்லையும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 8.2 ஒவ்வொரு புல்லையும் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 8.2 ஒவ்வொரு புல்லையும்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.2 ஒவ்வொரு புல்லையும்

குறுவினா

Question 1.
“நீளும் கைகளில் தோழமை தொடரும்
நீளாத கைகளிலும் நெஞ்சம் படரும்” – தொடைநயங்களை எடுத்தெழுதுக.
Answer:

  • அடிதோறும் முதற்சீரில் முதலெழுத்து ஒன்றி வருவது, மோனை. – (நீளும், நீளாத)
  • இரண்டாம் அடியில் ‘நீளாத – நெஞ்சம்’ எனச் சீர்மோனை அமைந்துள்ளது.
  • அடி இயைபு (தொடரும், படரும்) என்னும் தொடைகள், இவ்வடிகளில் நயம்பட அமைந்துள்ளன.

கூடுதல் வினாக்கள்

Question 2.
யாருடைய என்ன தொடர், இன்குலாபின் நீட்சிக்குரலாக ஒலிக்கிறது?
Answer:
மகாகவியின் “காக்கை குருவி எங்கள் ஜாதி” என்னும் தொடரே, “கூவும் குயிலும் கரையும் காகமும் விரியும் எனது கிளைகளில் அடையும்” என்னும் இன்குலாபின் நீட்சிக்குரலாக ஒலிக்கிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.2 ஒவ்வொரு புல்லையும்

Question 3.
இன்குலாப் எவ்வாறு வாழ்ந்தார்?
Answer:
‘தம் எழுத்துகள், எளிய மக்களுக்கானவை’ என்னும் உறுதியுடன் எண்ணம், சொல், செயல் ஆகிய மூவகைகளிலும் நின்று, இன்குலாப் வாழ்ந்தார்.

Question 4.
‘இன்குலாப்’ இயங்கிய தளங்கள் யாவை?
Answer:
கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு ஆகிய இலக்கியத்தின் விரிவான தளங்களில் இன்குலாப் இயங்கினார்.

சிறுவினா

Question 1.
இன்குலாப், “உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்” எனக் கூறுவதன் நயத்தை விளக்குக.
Answer:

  • கைகள் நீளும்போது, தோழமை தொடர வாய்ப்பு உண்டு.
  • ஆனால், நீளாத கைகளிலும், நெஞ்சத்தைப் படரவிட வேண்டும்.
  • இந்த உலகம், பெருங்கடல் போன்றது.
  • அது, எனக்கு முழுமையாகத் தேவைப்படுகிறது.
  • அந்த உலகக் கடலில் நானும் ஒரு துளியாக இருப்பதால், உலகிற்கு நானும் தேவைப்பட்டவனாவேன்.
  • “மனிதக் கடலில் நானும் ஒரு துளியாக இருக்கிறேன்” என்பதை, இன்குலாப் நயம்படக் கூறுகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.2 ஒவ்வொரு புல்லையும்

கூடுதல் வினாக்கள்

Question 2.
தாம் எவற்றை எல்லாம் அழைக்க விரும்புவதாக இன்குலாப் கூறுகிறார்?
Answer:

  • இன்குலாப், ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைக்க விரும்புகிறார்.
  • பறவைகளோடு சேர்ந்து, எல்லைகளைக் கடந்து பறக்க ஆசைப்படுகிறார்.
  • பெயர் தெரியாத கல்லையும், மண்ணையும்கூடப் பெயர்களைச் சொல்லி அழைக்க விருப்பப்படுகிறார்.

Question 3.
சமயம் கடந்து மானுடம் கூடவேண்டுமென்பதை இன்குலாப்வழி விளக்குக.
Answer:
போதி மரத்தின் நிழல், சிலுவை , பிறை ஆகியவை சமத்துவம் என்னும் பெருவெள்ளத்தில் கலந்திட வேண்டும். உலகின் எம்மூலையில் விசும்பல் கேட்டாலும், எல்லார் செவிகளிலும் எதிரொலிக்க வேண்டும். கூண்டில் அடைபட்ட பறவை, சிறகு ஒடிந்தால், நம் சிறகிலும் குருதி வடிய வேண்டும்.

இவ்வகையில் சமயம் கடந்து மனித இனம் சேர்ந்திட வழி ஏற்பட வேண்டும். மூடி மறைக்காத முகங்களில் விழித்து, ‘மனிதம்’ என்னும் பொதுத்தன்மையைப் பாடவேண்டும் என, இன்குலாப் விரும்புகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.2 ஒவ்வொரு புல்லையும்

Question 4.
கவிஞர் இன்குலாப் குறித்து அறிவன யாவை?
Answer:
‘இன்குலாப்’ என்னும் புனைபெயரில் ‘சாகுல் அமீது’, கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியுள்ளார்.

இன்குலாப் கவிதைகள், ‘ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்’ என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. இவர் மரணத்திற்குப்பின், இவர் விரும்பியபடி, செங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு இவருடைய உடல்,  கொடையாக அளிக்கப்பட்டது.

இலக்கணக்குறிப்பு

கல்லையும் மண்ணையும் – எண்ணும்மை
சொல்லி – வினையெச்சம்
விளிப்பேன் – தன்மை ஒருமை வினைமுற்று
சமத்துவப்புனல் – உருவகம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.2 ஒவ்வொரு புல்லையும்

உறுப்பிலக்கணம்

1. தெரிந்த – தெரி + த் (ந்) + த் + அ
தெரி – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.

2. அழைப்பேன் – அழை + ப் + ப் + ஏன்
அழை – பகுதி, ப் – சந்தி, ப் – எதிர்கால இடைநிலை, ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.

3. கடந்து – கட + த் (ந்) + த் + உ
கட – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை, உ – வினையெச்ச விகுதி.

4. கடப்பேன் – கட + ப் + ப் + ஏன்
கட – பகுதி, ப் – சந்தி, ப் – எதிர்கால இடைநிலை, ஏன் தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.2 ஒவ்வொரு புல்லையும்

புணர்ச்சி விதிகள்

1. பறவைகளோடு – பறவைகள் + ஓடு
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (டவைகளோடு)

2. சுவரில்லாத – சுவர் + இல்லாத
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயலாத (சுவரில்லாத)

3. சமத்துவப்புனல் – சமத்துவம் + புனல்
“மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒரு வும் ஆகும்” (சமத்துவ + புனல்)
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (சமத்துவப்புனல்)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.2 ஒவ்வொரு புல்லையும்

பலவுள் தெரிக

Question 1.
கூவும் குயிலும், களையும் காகமும் – தொடரில் இடம்பெற்ற மரபு ……………….
அ) பெயர்மரபு
ஆ) வினைமரபு
இ) ஒலிமரபு
ஈ) இவை மூன்றும்
Answer:
ஆ) வினைமரபு

கூடுதல் வினாக்கள்

Question 2.
சாகுல் அமீது) என்னும் இயற்பெயரை உடையவர் ………………..
அ) ருதேவ்
ஆ) மீரான் சாகிப்
இ) இன்குலாப்
ஈ) அப்துல் வகாப்
Answer:
இ) இன்குலாப்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.2 ஒவ்வொரு புல்லையும்

Question 3.
இன்குலாபின் கவிதைகள், முழுமையாக ……………….. என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது.
அ) உயிர்த்தெழும் காலத்துக்காக
ஆ) கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்
இ) ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்
ஈ) நேயர் விருப்பம்
Answer:
இ) ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்

Question 4.
மரணத்திற்குப்பின் இன்குலாப் உடலை அவர் விருப்பப்படி ……………….. அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கினர்.
அ) சென்னை
ஆ) தஞ்சை
இ) மதுரை
ஈ) செங்கை
Answer:
ஈ) செங்கை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

Question 1.
உங்கள் பகுதியில் உள்ள பழங்காலக் கல்வெட்டுகள் பற்றிய செய்திகளைத் தொகுத்து வகுப்பில் கலந்துரையாடுக.
Answer:
ஆசிரியர் : இன்று நான் கல்வெட்டுகள் பற்றி உங்களுக்குக் கூறப்போகிறேன்.

மாணவர்கள் : எந்தக் கல்வெட்டுகள் பற்றி கூறப்போகிறீர்கள் ஐயா?

ஆசிரியர் : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சந்திரசவுடேஸ்வரர் கோயில் பற்றி கூற இருக்கிறேன்.

மாணவர்கள் : அக்கோவிலில் எத்தனை கல்வெட்டுகள் உள்ளன ஐயா?

ஆசிரியர் : அக்கோவிலில் 26 கல்வெட்டுகள் உள்ளன.

மாணவர்கள் : மன்னர்கள் பற்றி ஏதேனும் குறிப்புகள் காணப்படுகின்றதா ஐயா?

ஆசிரியர் : ஆமாம் மாணவர்களே! முதலாம் இராஜேந்திரனின் பெயர்க்குறிப்பு காணப்படுகிறது.

மாணவர்கள் : அந்தக் கல்வெட்டுகள் எந்த நூற்றாண்டைச் சோர்ந்தவை ஐயா?

ஆசிரியர் : காலம் 12 ஆம் நூற்றாண்டு என கணிக்கப்படுகிறது மாணவர்களே!

மாணவர்கள் : அக்கல்வெட்டின் பற்றி வேறு ஏதேனும் செய்திகளைக் கூறமுடியுமா ஐயா?

ஆசிரியர் : அக்கல்வெட்டுகள் பராமரிப்பு இன்றி அழிவுப் பாதையில் செல்கிறது.
மாணவர்கள் : நன்றி ஐயா!

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

பாடநூல் வினாக்கள்

நெடுவினா

Question 1.
சங்ககால வரலாற்றை அறிந்துகொள்ள, புகளூர்க் கல்வெட்டு எவ்வகையில் துணைபுரிகிறது? விளக்குக.
Answer:
முன்னுரை :
இலக்கியங்கள் அவை உருவானகாலக்கட்டத்தில் அந்த நிலப்பகுதியில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்வியலையும், பண்பாட்டையும் காலம் தாண்டி நினைக்கும் வகையில் பதிவு செய்பவை கல்வெட்டுகள். இப்பகுதியில் புகளூர் கல்வெட்டுகள் மூலம் சங்ககால வரலாற்றை அறிந்துகொள்ளலாம்.

எழுத்து வடிவம் :
கல்வெட்டுகள் மூலம் சங்ககால வரலாற்றை அறிய முடிகிறது. பொதுவாகக் கல்வெட்டுகள் தமிழ்மொழியில் சங்ககால எழுத்து வடிவமான ‘தமிழ் பிராமி எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன.

புகளூர் கல்வெட்டு :
சங்ககாலத்தில் சேரர்களின் தலைநகரமான கரூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆறு நாட்டான்குன்றின் மீதுள்ள குகைகளில் காணமுடிகிறது.

ஆறுநாட்டான் குன்று :
ஆறுநாட்டான் குன்றின் மீதுள்ள குகைகளுள் ஒன்றில் நான்கு வரிகளில் எழுதப்பட்டுள்ள பிராமி கல்வெட்டின் வரிகள்:
‘யாற்றூர் செங்காயபன் உறைய
கோ ஆதன் செல்லிரும் பொறை
மகன் பெருங்கடுங்கோ மகன்
இளங்கடுங்கோ ஆக அறுத்த கல்’

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

என்று பொறிக்கப்பட்டுள்ளன. ‘கோ அதல் செல் இரும்பொறை’ என்னும் பெயரில் உள்ள சில பெயர்ப்பகுதிகள் ‘செல்வக் கடுங்கோ வாழி அதன்’ என்றும் 7ஆம் பதிற்றுப்பத்துத் தலைவன் பெயரினூடே பொதிந்து கிடைப்பதைக் காணமுடிகிறது. இவர் மகன் பெயர் ‘பெருங்கடுங்கோ ‘ பாலை. பாலை பாடிய பெருங்கடுங்கோவையும், இவன் மகன்

‘இளங்கடுங்கோ’ என்னும் பெயர் மருதம் பாடிய இளங்கடுங்கோவையும் நினைவூட்டுகின்றன. இளங்கடுங்கோ சமணத்துறவிக்கு மலைக்குகையில் படுக்கை அமைத்துக் கொடுத்தான். அவை சிதைந்த நிலையில் உள்ளது. பிட்டன்’ ‘கொற்றன்’ என்னும் பெயர்கள் படிக்கக்கூடிய நிலையில் தெளிவாக உள்ளன.

கல்வெட்டு மூலம் அறிந்த செய்தி:
சேரன் செங்குட்டுவனின் தமையன் நார்முடிச் சேரல் பாலை பாடிய பெருங்கடுங்கோ’. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் காலத்தில் வாழ்ந்த படைத்தலைவன் நன்னன். நன்னனைப் பாடிய பொறையர் ‘நன்னன் நன்னாட்டு எழிற்குன்றம்’ (நற்றிணை. 391) போன்றவர்களைப் பற்றி அறியமுடிகிறது. புகளூர் கல்வெட்டு மூலம் மூன்று தலைமுறை மன்னர்கள் முறையே
பதிற்றுப்பத்தின் 6.7.8 வது பாட்டுடைத் தலைவர்களை அறிய முடிகிறது என்று ஐராவதம் மகாதேவன் ஆய்வு மூலம் அறியமுடிகிறது.

முடிவுரை :
புகளூர் கல்வெட்டு மூலம் சேரமன்னர்களின் வாழ்க்கை , பாலை, மருதம் பாடியவர்கள், பதிற்றுப்பத்தில் பாடிய புலவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிய உதவுகிறது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘சங்ககாலக் கல்வெட்டுகளும் என் நினைவுகளும்’ என்ற ஐராவதம் மகாதேவன் எழுதிய கட்டுரை வெளிவந்த இதழ்
அ) எழுத்து
ஆ) கணையாழி
இ) கல்வெட்டு
ஈ) தென்றல்
Answer:
ஆ) கணையாழி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

Question 2.
ஐராவதம் மகாதேவன் கல்வெட்டு ஆய்வில் ஈடுபட்ட ஆண்டுகள்
அ) 20
ஆ) 30
இ) 40
ஈ) 25
Answer:
ஆ) 30

Question 3.
…………….. எழுத்துருவை ஆய்ந்து திராவிட எழுத்து என்று ஐராவதம் மகாதேவன் கண்ட முடிவு வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்தியது.
அ) பிராகிருத
ஆ) சிந்துவெளி
இ) கல்வெட்டு
ஈ) பாரசீக
Answer:
ஆ) சிந்துவெளி

Question 4.
ஐராவதம் மகாதேவன் பெற்ற விருதுகளையும் ஆண்டுகளையும் பொருத்திக் காட்டுக.
அ) ஜவகர்கலால் நேரு ஆய்வறிஞர் விருது – 1) 2009
ஆ) இந்திய வரலாற்று ஆராய்ச்சி மைய விருது – 2) 1970
இ) தாமரைத்திரு விருது – 3) 1992

அ) 2, 1, 3
ஆ) 3, 1, 2
இ) 2, 3,1
ஈ) 1, 2, 3
Answer:
அ) 2, 1, 3

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

Question 5.
ஐராவதம் மகாதேவன் பணிகளில் குறிப்பிடத்தக்கன
i) பதிற்றுப்பத்தில் இடம் பெற்ற சேர அரசர்களின் பெயர்கள் புகளூர் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளதைக் கண்டுபிடித்தது.
ii) இலக்கியத்தையும் கல்வெட்டாய்வையும் ஒருங்கிணைத்தது
iii) பாறைகளிலிருந்து பழங்கல்வெட்டுகளைப் படியெடுத்து ஆய்வு நூலாக்கியது

அ) i, ii – சரி
ஆ) ii, iii – சரி
இ) iii – மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

Question 6.
மதுரைக்கு அருகில் உள்ள மாங்குளம் குகைக்கல்வெட்டுகள் யாருடையவை, எந்நூற்றாண்டைச் சார்ந்தவை என்று குறிப்பிடுகிறார் ஐராவதம் மகாதேவன்?
அ) பாண்டியன் நெடுஞ்செழியன், 2 ஆம் நூற்றாண்டு
ஆ) பாண்டியன் அறிவுடைநம்பி, 2ஆம் நூற்றாண்டு
இ) சோழன் நலங்கிள்ளி, 2ஆம் நூற்றாண்டு
ஈ) சோழன் நெடுங்கிள்ளி, முதலாம் நூற்றாண்டு
Answer:
அ) பாண்டியன் நெடுஞ்செழியன், 2 ஆம் நூற்றாண்டு

Question 7.
1965 நவம்பர் 3ஆம் நாளன்று மதுரை மாங்குளம் குகைக் கல்வெட்டினை ஐராவதம் மகாதேவன் ஆய்ந்ததைப் பற்றிக் கூறும் நூல்
அ) நூற்றாண்டு மாணிக்கம்
ஆ) தமிழக கல்வெட்டியல்
இ) கல்வெட்டு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) நூற்றாண்டு மாணிக்கம்

Question 8.
சங்கக் காலத்தை அறிய இலக்கியங்கள் மட்டுமே துணை என்று இருந்த நிலையில் கல்வெட்டுகளும் துணையாக இருப்பதைக் கண்டறிந்த ஆய்வு முன்னோடி
அ) தி.வை. சதாசிவ பண்டாரத்தார்
ஆ) ஐராவதம் மகாதேவன்
இ) வி. கிருஷ்ண மூர்த்தி
ஈ) தேனுகா
Answer:
ஆ) ஐராவதம் மகாதேவன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

Question 9.
தமிழ்மொழியை எழுதப் பயன்படுத்தப்பட்ட பழந்தமிழ் வரி வடிவத்தைத் தமிழ்ப் பிராம்மி என்றழைக்காமல் ‘தமிழி’ என்றோ அல்லது பழந்தமிழ் என்றோ அழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தவர்
அ) ஐராவதம் மகாதேவன்
ஆ) தி.வை. சதாசிவ பண்டாரத்தார்
இ) வி. கருஷ்ண மூர்த்தி
ஈ) கே.வி. சுப்பிரமணியனார்
Answer:
அ) ஐராவதம் மகாதேவன்

Question 10.
‘எர்லி தமிழ் எபிகிராபி’ என்னும் நூலின் ஆசிரியர்
அ) ஐராவதம் மகாதேவன்
ஆ) ஜி.யு. போப்
இ) ஜார்ஜ் எல். ஹார்ட்
ஈ) கே.வி. சுப்பிரமணியனார்
Answer:
அ) ஐராவதம் மகாதேவன்

Question 11.
ஆற்றூர் என்னும் இடத்தைச் சேர்ந்த செங்காய்பன் …………. ஆவார்.
அ) சமணத்துறவி
ஆ) பௌத்தத்துறவி
இ) அமைச்சர்
ஈ) புலவர்
Answer:
அ) சமணத்துறவி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

Question 12.
கரூரை அடுத்த புகளூர் ஆறு நாட்டான் குன்றின் மீது பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் குறிக்கப்பெறும் மன்னர்கள்
i) கோ ஆதன் செல்லிரும்பொறை
ii) பெருங்கடுங்கோன்
iii) இளங்கடுங்கோ
iv) இளங்கோ

அ) i – சரி
ஆ) ii, iii – சரி
இ) i, i, ii – சரி
ஈ) நான்கும் சரி
Answer:
ஈ) நான்கும் சரி

Question 13.
பதிற்றுப்பத்தில் குறிக்கப்பெறும் மன்னர்களில் புகளூர் கல்வெட்டால் அறியப்படுபவர்கள்
i) 6, 7, 8 ஆவது பாட்டுடைத் தலைவர்கள் என்ற ஐராவதம் மகாதேவனின் கூற்று சரியானது
ii) 7, 8, 9 ஆவது பாட்டுடைத் தலைவர்கள் என்ற ஒரு மாணவரின் கூற்று சரியானது

அ) i – சரி
ஆ) ii – சரி
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
Answer:
ஆ) ii – சரி

Question 14.
புகளூர் கல்வெட்டின் காலம் …………. நூற்றாண்டு.
அ) முதலாம்
ஆ) இரண்டாம்
இ) மூன்றாம்
ஈ) நான்காம்
Answer:
ஆ) இரண்டாம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்

Question 15.
தமிழ்நாட்டிலுள்ள பிராம்மிக் கல்வெட்டுகளின் ஆராய்ச்சிக்கு அடிகோலியவர்
அ) கே.வி. சுப்பிரமணியனார்
ஆ) ஐராவதம் மகாதேவன்
இ) தி.வை. சதாசிவ பண்டாரத்தார்
ஈ) இவர்களில் எவருமில்லை
Answer:
அ) கே.வி. சுப்பிரமணியனார்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.4 புறநானூறு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 7.4 புறநானூறு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 7.4 புறநானூறு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.4 புறநானூறு

Question 1.
சிறந்த அரசு நிர்வாகத்திற்கு நீவிர் அளிக்கும் பரிந்துரைகளை நாளிதழ்த் தலையங்கமாக எழுதுக.
Answer:
நாட்டிற்கு வேண்டிய நல்லமைச்சு :

  • நாடோறும் நாடி முறை செய்யா மன்னன் நாள்தோறும் நாடு கெடும்.
  • நாள்தோறும் மக்களின் தேவையைப் புரிந்து அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.
  • காட்சிக்கு எளியன் கடுஞ்சொல் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்.
  • காட்சிக்கு எளியவனாக, கடுஞ்சொல் பேசாதவனாக மன்னன் இருக்க வேண்டும்.
  • அரசின் எல்லாத்துறைகளும் போர்க்கால அடிப்படையில் இயக்க வேண்டும்.
  • தண்ணீ ர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி, பேருந்து வசதி போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.
  • கல்வியில் காமராசராக விளங்க வேண்டும்.
  • நியாய விலைக் கடைகளில் முறையான வர்த்தகம் நடைபெற வேண்டும்.
  • எரிபொருட்கள் விலையைப் போல ஒரே விலை ஒரு நாளைக்கு என எல்லா பொருள்களுக்கும் நிர்ணயம் செய்ய வேண்டும்.
  • விலையெல்லாம் பொருட்கள் தவிர்த்து வரி விதிப்பில் குறைவாக வசூலிக்க வேண்டும்.
  • தொழில், தொழில்நுட்பக் கல்லூரிகளில் பாடத்திறனை வெளிநாட்டினர் போல் மேம்படுத்த வேண்டும்.
  • விவசாயத்திற்குத் தட்டுப்பாடில்லாமல் பாசனத் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
  • சிறுபான்மையினருக்கும், மகளிருக்கும் உரிய நலன்களைப் பெற்றுத்தர வேண்டும்.
  • பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்ததே என்பதை மறத்தல் கூடாது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.4 புறநானூறு

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
யானை புக்க புலம்போலத் – இவ்வுவமைக்குப் பொருத்தமான தொடர்
அ) தனக்குப் பயன்படும் பிறருக்குப் பயன்படாது
ஆ) தனக்கும் பயன்படாது பிறருக்கும் பயன்படாது
இ) பிறருக்குப் பயன்படும் தனக்குப் பயன்படாது
ஈ) தனக்கும் பயன்படும் பிறருக்கும் பயன்படும்
Answer:
அ) தனக்குப் பயன்படும் பிறருக்குப் பயன்படாது

குறுவினா

Question 1.
அறிவுடை வேந்தனின் நெறி குறித்து, பிசிராந்தையார் கூறுவன யாவை?
Answer:

  • அறிவுடை அரசன் வரிதிரட்டும் முறை அறிந்து மக்களிடம் வரி திரட்டினால், நாடு கோடிக்கணக்கில் செல்வம் பெற்று செழிப்படையும்.
  • அறிவில் குறைந்து முறை தெரியாது வரி திரட்டினால் யானை புகுந்த நிலம் போல் ஆகிவிடும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.4 புறநானூறு

Question 2.
செவியறிவுறூஉ துறையை விளக்குக.
Answer:
அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறை தவறாமல் செய்யுமாறு அவன் கேட்குமாறு அறிவுறுத்தல் செவியறிவுறூஉ துறையாகும்.

சிறுவினா

Question 1.
யானை புக்க புலம்போலத் தானும் உண்ணான் உலகமும் கெடுமே – உவமையையும் பொருளையும் பொருத்தி விளக்குக.
Answer:
உவமை :
சிறிய நிலத்தில் விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கிக் கவளமாகக் கொடுத்தால் யானைக்குப் பல நாட்கள் உணவாகும்.

பொருள் :
அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடம் வரிதிரட்டினால் நாடு கோடிக்கணக்கில் செல்வத்தைப் பெற்றுச் செழிப்படையும்.

உவமை :
பெரிய வயலில் யானை புகுந்து உண்ணுமாயின் வாயில் புகுந்த நெல்லைவிடக் காலில் மிதிப்பட்ட நெல்தான் அளவு அதிகமாகும்.

பொருள் :
அறிவில்லா அரசன் முறை தெரியாமல் வரிதிரட்டுவானாயின் நாடு விரைவில் கெட்டொழியும், யானை புகுந்த நிலம் போல ஆகிவிடும். அரசன் தானும் பயன்படமாட்டான் நாட்டு மக்களும் துன்புறுவர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.4 புறநானூறு

இலக்கணக் குறிப்பு

காய்நெல் – வினைத்தொகை
புக்க – பெயரெச்சம்
அறியா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

உறுப்பிலக்கணம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.4 புறநானூறு 1

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘காய்நெல் அறுத்து’ என வரும் புறநானூற்றுப் பாடலின் பாவகை
அ) கலி விருத்தம்
ஆ) அறுச்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
இ) நேரிசை ஆசிரியப்பா
ஈ) சிந்தியல் வெண்பா
Answer:
இ) நேரிசை ஆசிரியப்பா

Question 2.
பொருத்திக் காட்டுக.
அ) மா – 1. முறைமை
ஆ) கல் – 2. வரி
இ) பிண்ட ம் – 3. ஒலிக்குறிப்பு
ஈ) வரிசை – 4. ஒருநில அளவு

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 2, 1, 4
இ) 1, 4, 3, 2
ஈ) 3, 2, 4, 1
Answer:
அ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.4 புறநானூறு

Question 3.
பொருத்திக் காட்டுக.
அ) காய்நெல் – 1. வினையெச்சம்
ஆ) புக்க – 2. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
இ) அறியா – 3. பெயரெச்சம்
ஈ) அறுத்து – 4. வினைத்தொகை

அ) 4, 3, 2, 1
ஆ) 2, 1, 3, 4
இ) 3, 4, 2, 1
ஈ) 4, 2, 3, 1
Answer:
அ) 4, 3, 2, 1

Question 4.
‘காய்நெல் அறுத்து’ எனத் தொடங்கும் பாடல் புறநானூற்றில் …………….. ஆவது பாடல் ஆகும்.
அ) 154
ஆ) 184
இ) 204
ஈ) 214
Answer:
ஆ) 184

Question 5.
புறநானூற்றை உ.வே.சா. அச்சில் பதிப்பித்த ஆண்டு
அ) 1884
ஆ) 1894
இ) 1896
ஈ) 1910
Answer:
ஆ) 1894

Question 6.
ஜார்ஜ். எல். ஹார்ட் …………… பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார்.
அ) கொலம்பியா
ஆ) ஆக்ஸ்போர்டு
இ) கலிபோர்னியா
ஈ) கேம்பிரிட்ஜ்
Answer:
இ) கலிபோர்னியா

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.4 புறநானூறு

Question 7.
ஜார்ஜ். எல். ஹார்ட் புறநானூற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஆண்டு
அ) 1988
ஆ) 1990
இ) 1999
ஈ) 2000
Answer:
இ) 1999

Question 8.
‘காய்நெல் அறுத்து’ என்னும் புறநானூற்றுப் பாடலின்வழி மக்களிடம் அதிக வரியைத் திரட்டக் கூடாது என அறிவுறத்தியவர் ……………. அறிவுறுத்தப்பட்டவர் …………….
அ) பிசிராந்தையார், அறிவுடைநம்பி
ஆ) கபிலர், பாரி
இ) கோவூர்கிழார், கிள்ளிவளவன்
ஈ) வெள்ளக்குடி நாகனார், நலங்கிள்ளி
Answer:
அ) பிசிராந்தையார், அறிவுடைநம்பி

Question 9.
பிசிர் என்பது
அ) எஞ்சிய வாழ்க்கை
ஆ) பாண்டிய நாட்டில் இருந்த ஓர் ஊர்
இ) சோழநாட்டில் கிடைத்த பொருள்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) பாண்டிய நாட்டில் இருந்த ஓர் ஊர்

Question 10.
ஆந்தையார் என்பது
அ) இயற்பெயர்
ஆ) காரணப்பெயர்
இ) பட்டப்பெயர்
ஈ) குலப்பெயர்
Answer:
அ) இயற்பெயர்

Question 11.
அறிவுடை நம்பி ஆண்ட நாடு
அ) சேரநாடு
ஆ) சோழநாடு
இ) பாண்டிய நாடு
ஈ) பல்லவ நாடு
Answer:
இ) பாண்டிய நாடு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.4 புறநானூறு

Question 12.
பொருத்திக் காட்டுக.
அ) தமித்து – 1. கெட
ஆ) புக்கு – 2. சேர்த்து
இ) யாத்து – 3. புகுந்து
ஈ) தப – 4. தனித்து

அ) 4, 3, 2, 1
ஆ) 3. 4. 1. 2
இ) 1. 2. 3. 4
ஈ) 3.2.1.4
Answer:
அ) 4, 3, 2, 1

Question 13.
‘பரிவுதப எடுக்கம் பிண்டம் நச்சின்’ என்னும் அடிகளில் வரும் ‘நச்சின்’ என்பதன் பொருள்
அ) குலைந்தால்
ஆ) இழந்தால்
இ) விரும்பினால்
ஈ) அலைந்தால்
Answer:
இ) விரும்பினால்

குறுவினா

Question 1.
பிசிராந்தையார் குறிப்பு வரைக.
Answer:
ஆசிரியர் – பிசிராந்தையார்
பிசிர் என்பது பாண்டிய நாட்டில் ஓர் ஊர்

இயற்பெயர் – ஆந்தையார்
பாண்டிய மன்னர் அறிவுடை நம்பியின் அரசவைச் சான்றோர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.4 புறநானூறு

Question 2.
சங்க காலத்தில் மன்னன் எவ்வாறு திகழ்ந்தான்?
Answer:
நல்வழிப்படுத்தும் புலவர்கள் அரசவையில் இருந்தனர். புலவர்களின் அறிவுரைகளைத் தலைமேற் கொண்டு குடிமக்களின் உளப்பாங்கை அறிந்து ஆட்சி செய்தனர்.

Question 3.
பாடாண் திணை விளக்குக.
Answer:
ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண் திணையாகும்.

சிறுவினா

Question 1.
புறநானூறு குறிப்பு வரைக.
Answer:

  • புறம் + நான்கு + நூறு = புறநானூறு.
  • 400 பாடல்கள் கொண்டது.
  • பண்டையத் தமிழ்களின் அரசியல் சமூக வரலாற்றின் அரியக் கருத்துக் கருவூலமாகத் திகழ்கிறது.
  • முடியுடை வேந்தர், குறுநில மன்னர், வேளிர் முதலிய சிறப்புடை மக்கள் போர்ச் செய்திகள், கையறு நிலை, நடுகல் போன்ற பல்வேறு பொருண்மைகளை வெளிப்படுத்துகிறது.
  • உ.வே.சா. 1894இல் பதிப்பித்தார்.
  • 1999இல் ஜார்ஜ் எல் ஹார்ட் என்ற கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர்.
  • The Four hundred songs of war and wisdom. An Anthology of poems from classical Tamil, the Purananuru என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.4 புறநானூறு

Question 2.
புறநானூற்றுப் பாடல் வாயிலாக மன்னனின் நிருவாக சீர்மையை விளக்குக.
Answer:

  • குடிமக்களின் உளம் அறிந்து ஆட்சி செய்பவனே சிறந்த அரசன்.
  • மக்களின் விருப்பத்திற்கு மாறாக அரசன் செயல்பட்டால் நாடும் மக்களும் வீழ்வர் என்பதைப் : புறநானூற்று பாடல் மூலம் பிசிராந்தையார் கூறினார்.
  • ஒரு ஏக்கரில் மூன்றில் ஒரு பங்கு குறைந்த நிலத்தில் விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கிக் கவளமாக யானைக்குப் பல நாட்கள் கொடுக்கலாம்.
  • இதைவிட நூறு மடங்கு பெரிய வயலில் யானை தனித்துச் சென்று வயலில் உண்ணுமாயின் உண்ணும் அளவைவிட காலில் மிதிபட்டு அழிந்ததே அதிகம் ஆகும்.
  • அறிவுடைய அரசன் வரிதிரட்டும் முறை அறிந்து வரிதிரட்டினால் நாடு கோடிக்கணக்கில் செல்வத்தைப் பெற்றுச் செழிப்படையும்.
  • அரசன் அறிவில் குறைந்து முறை தவறி, ஆரவாரமாக மக்களின் அன்பு கெடுமாறு வரிதிரட்டினால் யானை புகுந்த நிலம் போல தானும் உண்ணாமல் பிறருக்கும் பயன்படாமல் வீணாக்குவது போன்றது ஆகும்.
  • அரசன் தானும் பயன்படமாட்டான். நாட்டு மக்களையும் துன்புறுத்துவான் என்பதை என்னும் நிர்வாக சீர்மையை விளங்குகிறது.

Question 3.
பாடாண் திணையை சான்றுடன் விளக்குக. திணை
Answer:
விளக்கம்:
ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண் திணையாகும்.

சான்று:
காய்நெல் அறுத்துக் கவனம் கொளினே;
மனநிறைவு இல்லதும், பல்நாட்கு ஆகும்.” எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடல்.

பொருத்தம்:
சிறிய நிலத்தில் விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கிக் கவளமாகக் கொடுத்தால் யானைக்குப் பல நாட்கள் உணவாகும். அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடம் : வரிதிரட்டினால் நாடு கோடிக்கணக்கில் செல்வத்தைப் பெற்றுச் செழிப்படையும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.4 புறநானூறு

பெரிய வயலில் யானை புகுந்து உண்ணுமாயின் வாயில் புகுந்த நெல்லைவிடக் காலில் மிதிப்பட்ட நெல்தான் அளவு அதிகமாகும். அறிவில்லா அரசன் முறை தெரியாமல் வரி திரட்டுவானாயின் நாடு விரைவில் கெட்டொழியும், யானை புகுந்த நிலம் போல ஆகிவிடும். அரசன் தானும் பயன்படமாட்டான் நாட்டு மக்களும் துன்புறுவர்.

Question 4.
செவியறிவுறூஉ துறையைச் சான்றுடன் விளக்கு.
Answer:
துறைவிளக்கம்:
அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறை தவறாமல் செய்யுமாறு அவன் கேட்குமாறு அறிவுறுத்தல் செவியறிவுறூஉ துறையாகும்.

சான்று:
காய்நெல் அறுத்துக் கவனம் கொளினே;
மனநிறைவு இல்லதும், பல்நாட்கு ஆகும்.” எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடல்.

பொருத்தம் :
சிறிய நிலத்தில் விளைந்த நெல்லை அறுத்து உணவாக்கிக் கவளமாகக் கொடுத்தால் யானைக்குப் பல நாட்கள் உணவாகும். அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடம் வரிதிரட்டினால் நாடு கோடிக்கணக்கில் செல்வத்தைப் பெற்றுச் செழிப்படையும்.

பெரிய வயலில் யானை புகுந்து உண்ணுமாயின் வாயில் புகுந்த நெல்லைவிடக் காலில் மிதிப்பட்ட நெல்தான் அளவு அதிகமாகும். அறிவில்லா அரசன் முறை தெரியாமல் வரி திரட்டுவானாயின் நாடு விரைவில் கெட்டொழியும், யானை புகுந்த நிலம் போல ஆகிவிடும். அரசன் தானும் பயன்படமாட்டான் நாட்டு மக்களும் துன்புறுவர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு

Question 1.
உங்கள் பகுதியில் உள்ள வாய்மொழி இலக்கியங்களைத் தொகுத்து, சிறப்பு மலர் உருவாக்குக.
Answer:
தாலாட்டு பாட்டு :
மாமன் அடிச்சானோ மல்லிகப்பூச் செண்டால
மன்னவனே அழலாமோ தேம்பித்தேம்பி அழலாமோ
ஆராரோ ஆராரோ…..
அம்மா அடிச்சாளோ அல்லிப்பூ செண்டால
ஆனந்த பொன்மணியே தேம்பித் தேம்பி அழலாமோ
பாட்டி அடிச்சாளோ பாலூட்டும் சங்கால
பாராளும் மன்னவனே தேம்பித் தேம்பி அழலாமோ
அத்தை அடித்தாளோ அரளிப்பூ செண்டால
ஆடி வரும் மயிலழகே தேம்பித் தேம்பி அழலாமோ
ஆராரோ ஆராரோ
நீ அழுத கண்ணீரு நெல்லுக்கும் இஞ்சிக்கும்
நீராய்ப்பாயுதடா
ஆராரோ ஆராரோ.

ஏற்றப்பாட்டு :
மழையை நம்பி ஏலேலோ மண்
இருக்க ஐலசா
மண்ணை நம்பி ஏலேலோ
மரம் இருக்க ஐலசா
மரத்தை நம்பி ஏலேலோ
கிளை இருக்க ஐலசா
கிளையை நம்பி ஏலேலோ
இலை இருக்க ஐலசா
இலையை நம்பி ஏலேலோ
பூவிருக்க ஐலசா
பூவைநம்பி ஏலேலோ
பிஞ்சிருக்க ஐலசா
பிஞ்சை நம்பி ஏலேலோ

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு

காயிருக்க ஐலசா
காயை நம்பி ஏலேலோ
பழம் இருக்க ஐலசா
பழ்தை நம்பி ஏலேலோ
மகன் இருக்க ஐலசா
மகனை நம்பி ஏலேலோ
நீ இருக்க ஐலசா
உன்னை நம்பி ஏலேலோ
நான் இருக்க ஐலசா
என்னை நம்பி ஏலேலோ
எமன் இருக்க ஐலசா
எமனை நம்பி ஏலேலோ
காடிருக்க ஐலசா
காட்டை நம்பி ஏலேலோ
புல்லிருக்க ஐலசா.

ஒப்பாரிப் பாட்டு :
ஆலமரபோல அன்னாந்து நிப்பேனு
நான் ஒய்யாரமா வந்தேனே
இப்ப நீ பட்ட மரம்போல
பட்டு போயிட்டியே.

பொட்டு இல்ல பூவில்லை
பூச மஞ்சலும் இல்ல
நான் கட்டன ராசாவே
என்ன விட்டுத்தான் போனிங்க

பட்டு இல்லை தங்கம் இல்லை
பரிமார பந்தல் இல்ல
படையெடுத்து வந்த ராசா
பாதியில் போரிங்கலே

நான் முன்னே போரேன்
நீங்க பின்னே வாருங்கோ
எனச் சொல்லிட்டு
இடம் பிடிக்கப் போயிதிங்களா

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு

நான் காக்காவாட்டும் கத்தரனே,
உங்க காதுக்குக் கேக்கலையா
கொண்டு வந்த ராசாவே
உங்களுக்குக் காதும் கேக்கலையா.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
முச்சந்தி இலக்கியம் என்பது
கூற்று 1: கதை வடிவிலான வடிவம் உடையது
கூற்று 2: பெரிய எழுத்துப் புத்தகம் என்று அழைக்கப்படுவது

அ) கூற்று 1 சரி கூற்று 2 தவறு
ஆ) கூற்று 1, 2 சரி
இ) கூற்று 1, 2 தவறு
ஈ) கூற்று 1 தவறு கூற்று 2 சரி
Answer:
ஆ) கூற்று 1, 2 சரி

Question 2.
உண்டு பிறந்து வளர்ந்த இடந்தனில் – இத்தொடரில் பெயரெச்சம்
அ) உண்டு
ஆ) பிறந்து
இ) வளர்ந்த
ஈ) இடந்தனில்
Answer:
இ) வளர்ந்த

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு

குறுவினா

Question 1.
எந்தவொரு பொருளைப் பயன்படுத்தும்போதும் அதற்குப் பின்னால் உள்ள மனிதர்களின் உழைப்பை நாம் சிந்திப்பதில்லை. ஒரு தேநீரைப் பருகும்போது அதற்குப் பின்னால் உள்ள மனித உழைப்பைச் சிந்தித்து உங்கள் கருத்தை எழுதுக.
Answer:

  • நாம் உழைக்கின்றபோது உழைப்பின் சுவையை ‘நா’ அறியாது.
  • ஆனால் தேநீரைப் பருகும்போது அதன் சுவையை ‘நா’ உணர்வது மட்டுமல்லாமல் உடல் புத்துணஒர்ச்சி பெற்று நம்மனதை சிந்திக்கத் தூண்டுகிறது.
  • அதாவது நம் தாய் நமக்கு முன்னர் காலையில் எழுந்து தேநீருக்குத் தேவையானவற்றைத் தயார் செய்து கொடுக்கும் தாயாரின் உழைப்பை நாம் சிந்திக்கிறோம்.

நெடுவினா

Question 1.
எளிய மக்களின் வலிகளை நாட்டுப்புற இலக்கிய வடிவங்களே முழுமையாகப் பிரதிபலிக்கின்றன – நிறுவுக.
Answer:
முன்னுரை:
நாட்டுப்புற இலக்கிய வடிவங்கள் கதைப் பாடல்கள் வாயிலாக விளிம்புநிலை மக்களின் வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளை எதார்த்தமாக வடிக்கின்றனர். அந்த வகையில் தேயிலைத் தோட்டப் பாட்டு’ என்ற பாடல்களின் பாயிலாக மக்களின் வலிகளை இங்குப் பதிவு செய்யப்படுகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு

துயரங்கள்:

  • விளிம்புநிலை மக்களின் வாழ்வு துயரம் தோய்ந்தது.
  • அவர்களின் விம்மி விம்மி அழுதக் குரலைக் காற்று கேட்டிருக்கலாம்.
  • அவை வெகுசனங்களிடையே நாட்டுப்புற இலக்கிய வடிவில் கும்மிப்பாடலாக அவர்களின் துயரம் போக்கின. அப்பாடல்களுள் தேயிலைத் தோட்டப்பாட்டு வாயிலாக அறியலாம்.
  • பழங்காலத்தில் நம் தேசத்தில் பலவிதக் கைத்தொழில்கள் சிறப்புப் பெற்று விளங்கியது.
  • நாகரீகத்திலும் ராஜரீகத்திலும் நாடெங்கும் எந்நாளும் கொண்டாடினர்.
  • இத்தகு சீரும் சிறப்பும் கொண்ட நம் தேசத்தில் அன்னியர்கள் புகுந்தனர்.
  • நம்பண்பாட்டையும், நாகரிகத்தையும் கைத்தொழிலையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொள்ளை அடித்து நம்மை அற்ப பிராணி போல் செய்தனர்.
  • உண்டு பிறந்து வளர்ந்த இடங்களில் பலவேலை செய்த நாம் இன்று மனைவி குழந்தைகளோடு நாயினும் கீழாகினோம்.

கங்கானியின் செயல்:

  • விளம்பர சுவரொட்டி ஒட்டி வேலைக்கு அழைத்தனர்.
  • ஆலைக் கரும்பு போல நம் உழைப்பைப் பிழிந்தும் குரங்கைப் போல் நம்மை ஆட்டிப் படைத்தும் ஒன்றுக்குப் பத்தாகப் பொய் கணக்கெழுதினர்.
  • தயவு ஏதுமில்லாமல் கூலித் தொழிலாளிகளைக் கப்பலில் ஏற்றி இலங்கை, அந்தமான் தீவுக்குக் கொண்டு சென்றனர்.
  • உண்ண உணவுக்கும், கைப்பிடிச் செலவுக்கும் துன்பப்பட்டு மண்ணுளிப் பாம்புப் போல மனைவி மக்களோடு வாழ்ந்தனர்.
  • சகோதர, சகோதரிகளே கண்காணிப்பவர் கூறும் பொய்யுரைகளை கண்டு மயங்காதீர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு

முடிவுரை:
வறுமை, பினி, ஏமாற்றம் போன்றவை எளிய மக்களின் வாழ்க்கை வழிகளை பிரதிபலிக்கின்றன. இப்படியே இவர்கள் கூலித்தொழிலாளியாய்த் தேயிலைத் தோட்டத்தில் (இந்தியர்) நாம் துன்பப்படுவதற்குக் கல்வி, ஒழுக்கம், நாகரிகம் இல்லாத குறையே. இன்றே உணருங்கள் நம் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைக் கற்றுக் கொடுத்து, குறையில்லாமல் ஒற்றுமையாய் ஊரில் கட்டுப்பாட்டோடு வாழ்வோம்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
நம் பாடப்பகுதியின் கும்மிப்பாடல்கள் இடம்பெற்றுள்ள நூல்
அ) ‘பாரத மக்களின் பரிதாபச் சிந்து’ என்ற தேயிலைத் தோட்டப் பாட்டு
ஆ) பாரத மக்களின் விவசாய நிலைப் பாட்டு
இ) மலேசிய மண்ணில் தமிழ்க்கண்ணீர்
ஈ) பால்மரக்காட்டினிலே
Answer:
அ) ‘பாரத மக்களின் பரிதாபச் சிந்து’ என்ற தேயிலைத் தோட்டப் பாட்டு

Question 2.
ஆங்கிலேயரின் குடியேற்ற நாடுகளில் தமிழர்கள் பல்வேறு தோட்டக் கூலிகளாகப் புலம்பெயர்ந்த நூற்றாண்டு
அ) கி.பி. 18
ஆ) கி.பி. 19
இ) கி.பி. 17
ஈ) கி.பி. 16
Answer:
அ) கி.பி. 18

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு

Question 3.
தோட்டக் கூலிகளாகத் தமிழர்களை வெள்ளையர் சேர்க்குமிடங்கள்
அ) இலங்கைத் தீவு, அந்தமான் தீவு
ஆ) மலேசியா, சிங்கப்பூர்
இ) ஆஸ்திரேலியா, இங்கிலாந்து
ஈ) அமெரிக்கா, கனடா
Answer:
அ) இலங்கைத் தீவு, அந்தமான் தீவு

Question 4.
யாருடைய பொய்யுரை கண்டு மயங்காதீர் என்று தேயிலைத் தோட்டப் பாட்டுக் கூறுகிறது?
அ) கங்காணி
ஆ) வெள்ளையர்
இ) நாட்டாமை
ஈ) இவர்களில் எவருமிலர்
Answer:
அ) கங்காணி

Question 5.
தேயிலைத் தோட்டத்தில் இந்தியர் துன்பப்படுவதற்குக் காரணம்
அ) கல்வியொழுக்கம் நாகரீகம் இல்லாமை
ஆ) வெள்ளையரின் ஏகாதிபத்திய உணர்வு
இ) கங்காணிகளின் கருணையுணர்வு
ஈ) உழைத்து வாழ வேண்டும் என்ற வேட்கை
Answer:
அ) கல்வியொழுக்கம் நாகரீகம் இல்லாமை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு

Question 6.
தோட்டக்கூலிகளை ஆலைக் கரும்பு போலாட்டிக் குரங்காட்டுபவர்கள்
அ) கங்காணிகள்
ஆ) நாட்டாமைகள்
இ) அரசர்கள்
ஈ) இவர்களில் எவருமிலர்
Answer:
அ) கங்காணிகள்

குறுவினா

Question 1.
தேயிலைத் தோட்டத்தில் மக்கள் துன்பப்படுவதற்கு முகம்மது இராவுத்தர் கூறும் காரணங்கள் யாவை?
Answer:
கல்வி, ஒழுக்கம், நாகரீகம், ஒற்றுமை இவை நான்கும் குறைவதால் தேயிலைத் தோட்டத்தில் துன்பப்படுவதற்கான காரணங்களாக முகம்மது இராவுத்தர் குறிப்பிடுகிறார்.

Question 2.
தமிழர்கள் கூலித்தொழிலாளிகளாக எங்கு அழைத்துச் செல்லப்பட்டனர்?
Answer:
இலங்கை மற்றும் அந்தமான் தீவு.

Question 3.
நாட்டுப்புற இலக்கியங்களின் பாடுபொருள்கள் யாவை?
Answer:
செவ்வியல் இலக்கிய மரபைப் பாடாத, சொல்லாத அல்லது புறக்கணித்த கருப்பொருள்களைப் பாடு பொருளாகக் கொண்டு பாடப்பட்டது நாட்டுப்புற இலக்கியங்கள்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு

Question 4.
நாட்டுப்புற இலக்கியங்கள் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?
Answer:

  • வெகுசன இலக்கியம்
  • தெருப் பாடல்கள்
  • முச்சந்தி இலக்கியம்
  • காலணா அரையணா பாட்டுப் புத்தகங்கள்
  • குஜிலி நூல்கள்
  • பெரிய பட்டுப்புத்தகங்கள்

Question 5.
தேயிலைத் தோட்டப்பாட்டில் காண்ப்படும் இலக்கிய வடிவங்கள் யாவை?
Answer:
மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் தாக்கங்களைப் பாடல்கள், கதைப்பாடல்கள் உள்ளிட்ட இலக்கிய வடிவங்களில் வெளிப்படுகின்றன.

Question 6.
நமது பாடப்பகுதியில் தேயிலைத் தோட்டப்பாட்டு எந்த நூலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது?
Answer:
முகம்மது இராவுத்தர் எழுதிய கும்மி பாடல்கள் பாரத மக்களின் பரிதாபச் சிந்து’ என்ற தேயிலைத் தோட்டப்பாட்டு நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு

Question 7.
தேயிலைத் தோட்டப்பாட்டு அக்காலக்கட்டங்களில் எவ்வடிவில் வெளியாயின?
Answer:
19ஆம் நூற்றாண்டு இறுதிலும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சிறு சிறு நூல்களாக மெல்லிய தாளில் பெரிய எழுத்தில் வெளியாயின.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.2 அதிசயமலர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 7.2 அதிசயமலர் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 7.2 அதிசயமலர்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.2 அதிசயமலர்

Question 1.
போர்களுக்கு எதிரான குரல்கள் வெளிப்படும் புதுக்கவிதைகளைத் தொகுத்து வகுப்பறையில் படிக்க.
Answer:
போருக்கு எதிராக குரல்கள்…….
இன்று காலையும் போர் விமானங்கள் எங்கள் கிராமத்தின் மேல் சுற்றின. சிலர் பதுங்கு குழிக்குள் அடைக்கலம் சிலர் வெளியே நின்று வெறுத்துப் பார்த்தனர்.

குண்டுகள் வீழ்ந்தன
கிராமத்தின் மத்தியில் புகை மண்டலம்
சிலருக்குக் காயம்; சிலர் மாயம்
எத்தனை பேர் மாண்டனர்
பலருக்கு அந்தக் கணக்குதான் தேவை
பாழும் உலகம் பரிதாபப்படவில்லை .
எங்கள் மேல் விழுமோ கிழக்கில் வெள்ளி வருமோ!

மனிதம் விற்று மதி போற்றும்
மக்கள் வேடத்தில் மாக்கள் கூட்டம்
மதம் தன்னை ஆயுதமாய் ஏந்தி
பகுத்தறியாமல் பகை கொள்வதா
படைகொண்டு தாக்கினால் பாவம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.2 அதிசயமலர்

நாங்கள் என்ன செய்வோம்
பாதி பேர் கைது பாதி பேர் காணோம்
பக்கத்து வீட்டில் அப்பா இல்லை
என் வீட்டில் என் அண்ணன் இல்லை
எதிர் வீட்டில் என் நண்பன் இல்லை
எங்கே போனார்கள் ஆண்டு
இரண்டாயிற்று சேதி இல்லை
இறைவனும் எங்கள் முன் வரவில்லை
ஏதேனும் கேட்கலாம் என்றால்
எதைக் கேட்பது எதை விடுவது
மீண்டு வருமா மாண்ட உயிர்கள்
மறு பிறவியிலாவது ஆண்டவா
என்னை படைப்பதை நீ மறந்து விடு.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
அதிசய மலரின் புன்னகையைப் பிடித்தவாறு தமிழ்நதி கடக்க சொல்வது
அ) கடந்தகால துயரங்களை
ஆ) ஆட்களற்ற பொழுதை
இ) பச்சயம் இழந்த நிலத்தை
ஈ) அனைத்தையும்
Answer:
ஈ) அனைத்தையும்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.2 அதிசயமலர்

சிறுவினா

Question 1.
அதிசய மலரின் பூச்செடி எவ்வாறு முளைத்ததாக தமிழ்நதி கூறுகிறார்?
Answer:
(i) புலம் பெயர்ந்த மக்களின் எண்ணத்தில் மீதமிருக்கும் மரங்களில், நீரில்லா பொட்டல் வெளிப் பகுதியில், போருக்குப் பின் பிறந்த குழந்தை போல முகை (மொட்டு) அவிழ்ந்து மலர்ந்து சிரிக்கிறது அதிசய மலர் ஒன்று.

(ii) ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில், உலாவிய யானையின் எச்சத்திலிருந்து வளர்ந்திருக்கலாம் இச்செடி.

(iii) எவரோ ஒருவருடைய கால் சப்பாத்தின் (காலுறை) பின்புறம் விதை ஒட்டிக்கொண்டு இங்கு வந்து உயிர் பெற்றிருக்கலாம் – என்று தமிழ்நதி கூறுகிறார்.

Question 2.
‘எங்கிருந்தோ வருகிறது
வண்ணத்துப் பூச்சியொன்று
பறவைகளும் வரக்கூடும் நாளை’ – இடம்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம் :
தமிழ்நதியின் அதன் பிறகு எஞ்சும்’ கவிதைத் தொகுப்பில் அதிசய மலர்’ என்ற தலைப்பில் இப்பாடல் இடம்பெற்றுள்ளன.

பொருள் :
மலரைத் தேடி வண்ணத்துப் பூச்சியும், பறவையும் வரக்கூடும் என்பது பொருள்.

விளக்கம்:
மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் உலவிய யானையின் எச்சத்திலோ அல்லது காலனியின் பின்புறம் ஒட்டிக்கிடந்து முளைத்தது அதிசய மலர். அப்பூச்செடியின் அடையாளத்தைக் கண்டு எங்கிருந்தோ வண்ணத்துப்பூச்சியும், பறவையும் நாளை வரக்கூடும் என்று தமிழ்நதி கூறுகிறார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.2 அதிசயமலர்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘அதிசய மலர்’ என்னும் கவிதையின் ஆசிரியர்
அ) ஆத்மாநாம்
ஆ) நாகூர்ரூமி
இ) தமிழ்நதி
ஈ) இரா. மீனாட்சி
Answer:
இ) தமிழ்நதி

Question 2.
‘அதிசய மலர்’ என்னும் கவிதை இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு
அ) அதன் பிறகும் எஞ்சும்
ஆ) கானல்வரி
இ) சூரியன் தனித்தலையும் பகல், இரவுகளில் பொழியும் துயரப்பணி
ஈ) கைவிட்ட தேசம்
Answer:
அ) அதன் பிறகும் எஞ்சும்

Question 3.
கவிஞர் தமிழ்நதியின் இயற்பெயர்
அ) கலைச்செல்வி
ஆ) தமிழ்ச்செல்வி
இ) கலைவாணி
ஈ) வாணி
Answer:
இ) கலைவாணி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.2 அதிசயமலர்

Question 4.
கவிஞர் தமிழ்நதியின் பிறப்பிடம்
அ) ஈழத்தின் திருகோணமலை
ஆ) கேரளத்தின் திருவனந்தபுரம்
இ) கர்நாடகாவின் மாண்டியா
ஈ) தமிழகத்தின் திருச்செந்தூர்
Answer:
அ) ஈழத்தின் திருகோணமலை

Question 5.
கவிஞர் தமிழ்நதி கலைத்துறையில் பட்டம் பெற்ற பல்கலைக்கழகம்
அ) சென்னை
ஆ) கொலம்பியா
இ) யாழ்ப்பாணம்
ஈ) அண்ணாமலை
Answer:
இ) யாழ்ப்பாணம்

Question 6.
கவிஞர் தமிழ்நதி புலம்பெயர்ந்து சென்றுள்ள நாடு
அ) சிங்கப்பூர்
ஆ) மலேசியா
இ) கனடா
ஈ) ஆஸ்திரேலியா
Answer:
இ) கனடா

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.2 அதிசயமலர்

Question 7.
பொருத்துக.
அ) நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது – 1. நாவல்
ஆ) சூரியன் தனித்தலையும் பகல், இரவுகளில் பொழியும் துயரப்பணி – 2. குறுநாவல்
இ) கானல்வரி – 3. கவிதைகள்
ஈ) பார்த்தீ னியம் – 4. சிறுகதைகள்

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 2, 1, 4
இ) 4, 1, 2, 3
ஈ) 2, 1, 4, 3
Answer:
அ) 4, 3, 2, 1

Question 8.
தமிழ்நதி எழுதிய ‘ஈழம்: கைவிட்ட தேசம்’ என்பது
அ) சிறுகதைகள்
ஆ) கவிதைகள்
இ) குறுநாவல்
ஈ) நாவல்
Answer:
ஈ) நாவல்

Question 9.
பச்சையம் இழந்த சாம்பல் நிலத்தில் மலரை அடையாளம் கண்டு வருவது.
அ) யானை
ஆ) வண்ணத்துப்பூச்சி
இ) எறும்பு
ஈ) ஈ
Answer:
ஆ) வண்ணத்துப்பூச்சி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.2 அதிசயமலர்

குறுவினா

Question 1.
அதிசய மலர் என்ற கவிதை தமிழ்நதியின் எத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன?
Answer:
‘அதன் பிறகு எஞ்சும்’ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

Question 2.
தமிழ்நதியின் மொழிநடை எதனை அடிப்படையாகக் கொண்டது?
Answer:
புலம் பெயர்ந்து வாழும் இருப்புகளையும், வலிகளையும் சொல்லும் காத்திரமான மொழி இவருடையது.

Question 3.
அதிசிய மலரின் புன்னகை எங்கிருந்து தொடங்குகிறது?
Answer:
இதழ்களிலிருந்து தொடங்குகிறது.

Question 4.
அதிசய மலர் எப்போது சிரித்தது?
Answer:
போருக்குப் பிறகு முகையை அவிழ்த்துச் சிரித்தது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.2 அதிசயமலர்

Question 5.
‘எவருடையவோ
சப்பாத்தின் பின்புறம்
விதையாக ஒட்டிக்கிடந்து
உயிர் தரித்திருக்கலாம்’ – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம் :
தமிழ்நதியின் ‘அதன் பிறகு எஞ்சும்’ கவிதைத் தொகுப்பில் ‘அதிசய மலர்’ என்ற தலைப்பில் இப்பாடல் இடம் பெற்றுள்ளன.

விளக்கம் :
யாருடைய செருப்பின் பின்புறமாக விதையாக ஒட்டிக் கொண்டு வந்து தன் வாழ்வை உருவாக்கிக் கொண்டிருக்கலாம்.

சிறுவினா

Question 1.
கவிஞர் தமிழ்நதி குறிப்பு வரைக.
Answer:
பெயர் : கலைவாணி
பிறப்பு : ஈழம், திருகோணமலை.
வசிப்பு : கனடா
படிப்பு : யாழ்ப்பாணத்தில் கலைத்துறையில் பட்டம்
நூல்கள் : சிறுகதை – நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது
நாவல் – ஈழம், கைவிட்ட தேசம், பார்த்தீனியம்
குறுநாவல் – சாலை வரி
கவிதை – சூரியன் தனித்தலையும் பகல், இரவுகளில் பொழியும் துயரப்பனி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 8.1 தாகூரின் கடிதங்கள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

குறுவினாக்கள்

Question 1.
நாட்டுப்புறத்திலும் பட்டணத்திலும் சிறந்து விளங்குவதாகத் தாகூர் எவற்றைக் கூறுகிறார்?
Answer:

  • நாட்டுப்புறங்களில் இருக்கும்போது, இயற்கையே சிறந்து விளங்குகிறது.
  • பட்டணத்திலோ, மனித சமுதாயமே முக்கியமானதாகத் தலைதூக்கி நிற்கிறது.

Question 2.
பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர் என்றும் கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி என்றும் அழைக்கப்பட்ட தாகூர் தமது 16ஆம் வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார் – நிறுத்தக்குறியிடுக.
Answer:
‘பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர்’ என்றும். ‘கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி’ என்றும் அழைக்கப்பட்ட தாகூர், தமது 16ஆம் வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

கூடுதல் வினாக்கள்

Question 3.
ஒரு பறவையின் வாழ்க்கை பற்றித் தம்மால் எதனால் சிந்திக்காமல் இருக்க முடிவதில்லை எனத் தாகூர் கூறுகிறார்?
Answer:
ஒரு பறவையின் சின்னஞ்சிறு இதயத்துக்குள்ளும் வாழ்க்கையின் களிப்பு. எத்துணை அதிகமாக இருக்கும் என்பது பற்றித் தம்மால் சிந்திக்காமல் இருக்க முடிவதில்லை எனத் தாகூர் குறிப்பிடுகிறார்.

Question 4.
அலட்சிய மனப்பான்மை (தோல்விகளுக்கான மூலகாரணம்) குறித்துத் தாகூர் கூறியுள்ளதென்ன?
Answer:

  • நம் தோல்விகள் அனைத்திற்கும் மூலகாரணம், இயற்கையிடம் நாம் காட்டும் அலட்சிய மனப்பான்மைதான்.
  • இந்தச் சுபாவம் காரணமாகத்தான், நம் அலட்சிய மனப்பான்மை நாட்டு மக்களிடமும் தீவிரமாகத்
  • தலை தூக்குகிறது எனத் தாகூர், அலட்சிய மனப்பான்மை குறித்துக் கூறுகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

Question 5.
விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை ஏன் தாகூர் நிறுவினார்?
Answer:

  • குழந்தைகள், இயற்கையின் மடியில் எளிமையாக வளர்க்கப்பட வேண்டும்.
  • தங்கள் வேலைகளைத் தாங்களே கவனித்துக்கொண்டு, மற்றவர்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தால், விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தைத் தாகூர் நிறுவினார்.

Question 6.
விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவியர் யார்?
Answer:
விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவியவர் தாகூர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

சிறுவினா

Question 1.
‘தாமஸிகம்’ என்றால் என்ன?
Answer:
நாகரிக வழக்கத்தில் காலத்துக்கு ஏற்றபடி சீக்கிரம் வாடிவிடும் மலர்களுடன் தொடர்பு உண்டு. தோட்டக்காரன் கைகளில் அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு இருக்கும். மலர்ச்செப்பினுள் வழக்கம்போல் போவதும் வருவதும் தான் அவற்றின் வேலை. இதனைத் ‘தாமஸிகம்’ என்பர்.

ஸ்தூலப் பொருளுக்கு அப்பால் செல்ல இயலாமல், நம் மனம் திகைப்படைந்து நின்றுவிடுகின்ற நிலை. அதாவது, பூஜைக்குத் தேவையான மலர்களைத் தவிர, வேறு எந்தப் பூக்களுடனும் நமக்கு அவசியம் எதுவும் இல்லை என்பதாம்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

கூடுதல் வினாக்கள்

Question 2.
கடித இலக்கியம் குறித்து எழுதுக.
Answer:
‘கடிதம்’ என்பது. குறிப்பிட்ட செய்தியை உரியவருக்குத் தெரிவிக்க எழுதி அனுப்புவதாகும்.

உரிய வடிவுடன் அமைந்த கடிதம். பொருள் செறிவாலும், கற்பனை நயத்தாலும், மொழி வளத்தாலும் இலக்கிய வடிவம் பெறுகிறது.

கடித இலக்கியத்தின் காலத் தொன்மையைக் காப்பியங்களிலும் சிற்றிலக்கியங்களிலும் காணப்பெறும் கடிதங்கள் விளக்கும். தாகூரின் கடிதங்கள். கற்பனை, நகைச்சுவை, ஆழ்ந்த சிந்தனை முதலானவற்றை உள்ளடக்கிய கவித்துவ இயல்பு கொண்டவை.

Question 4.
ஆற்றில் செத்து மிதந்து வந்த பறவையின் வரலாறாகத் தாகூர் கூறியது என்ன?
Answer:
எங்கோ ஓர் ஊரின் எல்லையில் அமைந்த தோப்பின் மரக்கிளையில் பறவையின் கூடு இருந்திருக்கும். இருளுக்குப்பின் கூடு திரும்பித் தன் துணையுடன், விரித்த சிறகுகளின் வெம்மை தணிய, உடல் சோர்ந்து உறங்கி இருக்கலாம்.

இரவில் மாமரத்தின் கீழிருந்த மண் சரிந்து விழ, கூட்டைவிட்டுப் பறவை சிதறி விழுந்திருக்கும்.

அதன்பின், ஒரு கணம் கண்விழித்த பறவை, மீண்டும் விழிக்க அவசியம் இல்லாமல் போய்விட்டது என, ஆற்றில் செத்து மிதந்து வந்த பறவையின் வரலாற்றைத் தாகூர் கூறியுள்ளார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

Question 5.
நம் நாட்டில் மரங்களில் மலரும் பூக்களை மனிதன் எவ்வாறு ஏற்கிறான்?
Answer:

  • மரத்தின் கிளையில் பூ மலர்கிறது. அதற்குப் புகலிடம் மரக்கிளைதான்.
  • மனிதன் அதற்குப் பெயரிட்டுத் தன் உள்ளத்தில் இடம் அளிக்கிறான்.
  • நம் நாட்டில் மரங்களில் மலரும் பூக்கள் பல உள்ளன.
  • அவை அனைத்தையும் மனிதன் மனத்தினுள் ஏற்றுக் கொள்வதில்லை.
  • மலரிடம் இவ்வளவு அலட்சிய மனப்பான்மை, வேறு எந்த நாட்டிலும் காணப்படுவதில்லை எனத் தாகூர் கூறுகிறார்.

Question 8.
தாகூர் எதனை நினைத்துப் பார்க்கச் சொல்கிறார்?
Answer:

  • தேர்வில் தேர்ச்சி பெறச் சரித்திரப் பாடத்தைப் புறக்கணிக்க முடியாது.
  • நம் தேசப்பற்று என்பது அப்புத்தக மூட்டைகளால் உருவானது.
  • தேசத்து மக்களிடம் கொண்டுள்ள பற்றுதலால் உண்டானதன்று.
  • சிந்தித்துப் பார்த்தால், நம் உலகம் எத்தனை குறுகலானது என்பது புலப்படும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

Question 9.
தாகூர், குறித்து நீ அறிவன யாவை?
Answer:
தாகூர், தம் 16ஆம் வயதில் கவிதைகள் எழுதினார். இகைப்பாடல்கள், கவிதைகள், நாடகங்கள், குறு நாடகங்கள், பெருநாவல்கள், சிறுகதைகள் எனப் பல எழுதி, இலக்கியப் பணியாற்றினார்.

பயணக் கட்டுரைகள் எழுதினார். ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் பல எழுதினார். ஓவியங்கள் தீட்டுவதிலும் சிறந்து விளங்கினார்.

‘கீதாஞ்சலி’ கவிதை நூலுக்கு 1913ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார். பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர்’ என்றும், கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி’ என்றும் போற்றப்பட்டார்.

‘ஜாலியன் வாலாபாக் (1919) படு கொலையால் மனம் வருந்தி, ஆங்கில அரசைக் கண்டித்துத் தமக்கு அளித்த ‘சர்’ பட்டதில் தத் துறந்தார். 1921இல் ‘விஸ்வபாரதி’ பல்கலைக்கழகத்தை நிறுவினார்.

‘குருதேவ்’ என அனை மகலும் அழைக்கப்பட்டார். இவரது ‘ஜனகணமன’ பாடல், இந்தியாவிலும், ‘அமர் சோனார் பங்களா பாடல், வங்க தேசத்திலும், நாட்டுப் பண்களாகப் போற்றப்படுகின்றன.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

Question 10.
த. நா. குமாரசுவாமி பற்றி அறிவன யாவை?
Answer:
த. நா. குமாரசுவால், தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, வங்கம், பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றுத் சேர்ந்தவர்! ‘தாகூரின் கடிதங்கள்’ என்னும் நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்தவர்.

அதனைச் சாதித்திய அகாதெமி வெளியிட்டுள்ளது. தமிழ் – வங்க மொழிகளுக்கு அவர் ஆற்றிய தொன்மைப் பாராட்டி, வங்க அரசு, ‘நேதாஜி இலக்கிய விருது’ அளித்துச் சிறப்பித்துள்ளது.

நெடுவினா

Question 1.
சிதறிய கடிதங்கள்’ உணர்த்தும் கருத்துகளைச் சிதறாது விளக்குக.
Answer:
சிதறிய கடிதங்கள்’ உணர்த்தும் கருத்துகள் :
தாகூரின் சிதறிய கடிதங்கள், ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டும் அரிய செய்திகளை உணர்த்துகின்றன. ஆற்று வெள்ளத்தில் இறந்து மிதந்துவந்த பறவையை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால், தாகூர் அதன் இறப்பு எப்படி நிகழ்ந்திருக்கும் என்பதை ஊகித்துத் தம் சிதறிய கடிதத்தில் கூறுகிறார்.

பறவை மரணம் :
எதிர்க்கரை புலப்படாதவகையில் தளும்பிய நீரோடு பெருக்கெடுத்த ‘பத்மா’ ஆறு ஒருபுறமாகப் புரண்டதால் சாய்ந்து, சரிந்த மரத்தில் கூடுகட்டி வாழ்ந்த சிறுபறவை கீழே விழுந்து, ஆற்றில் வெற்று உடலாக மிதந்து வந்ததாகத் தாகூர் குறிப்பிடுகிறார். சிறு பறவையின் அழகு , கூட்டின் அழகு , உழைப்பின் சிறப்பு, ஓய்வு எடுக்கும் நிலை ஆகியவற்றை அந்தப் பறவையின் வரலாறாகச் சுட்டி, அதன் மரணத்தில் முடிக்கிறார்.

தம் சிந்தனைக்கான காரணம் :
மனிதன் தன் சுகத்திற்குமுன், பிற உயிர்களின் சுகதுக்கங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறார். மற்றப் பிராணிகளை அற்பமாக நினைப்பதையும் காட்டுகிறார். பிற உயிர்களிடம் கருணை காட்டுவதை, நடக்க முடியாத அதிசயமாக நம் சரித்திரம் விட்டுவிடவில்லை . அதனால், ஒரு பறவையின் சின்னஞ்சிறு வாழ்க்கைக் களிப்பு, எத்துணை அளவு இருக்கும் என்பதைத் தம்மால் சிந்திக்க முடிவதாகத் தாகூர் கூறுகிறார்.

அலட்சிய மனப்பான்மை : மரங்களில் மலரும் பூக்கள் பல, நம் நாட்டில் உள்ளன. அவற்றின் அனைத்துப் பெயர்களையும், மனிதன் அறிந்திருக்கவில்லை. இலக்கியங்களில் கூறப்பட்ட பல மலர்களின் பெயர்களை மட்டுமே அறிவோம். அவை, எவை எனத் தெரிந்துகொள்ள முயற்சி செய்வதில்லை. சில மலர்களின் பெயர்களை அறிவோம். ஆனால், அப்பெயருக்குரிய மலர் எது என அறியோம். பறவைகள், மரங்கள், பூக்கள் விஷயத்தில் அலட்சியம் காட்டுவோர், ஆறுகளை மட்டும் நினைவில் கொள்கின்றனர்.

தோல்விகளுக்குக் காரணம் :
நாகரிக வாழ்க்கையில் சீக்கிரம் வாடும் மலர்களுடன் மனிதனுக்குத் தொடர்பு உண்டு. நம் மனம் ஸ்தூலப் (போகப்) பொருளுக்கு அப்பால் செல்ல இயலாமல் திகைத்து நின்று வருகிறது. இதனைத் ‘தாமஸிகம்’ என்பர். அதாவது ‘மெடீரியலிஸம்’; உலகில் எத்தனையோ நேர்த்தியா – புட்கள் (பறவைகள்) உள்ளன. அவற்றின் பெயர்களை அறியோம். இயற்கையிடம் அலட்சிய மனப்பான்மை வளர்வதே, நம் தோல்விகளுக்குக் காரணம்.

இயற்கையை அலட்சியப்படுத்தாமல், இயற்கையோடு இணைந்து வாழவும், இயற்கையை நேசித்து வாழவும் கற்றுக்கொள்ள வேண்டும். அதனால் வாழ்வில் உயரலாம் என்னும் கருத்துகளை எல்லாம் உணர்த்துவனவாகத் தாகூரின் கடிதங்கள் உள்ளன.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

கூடுதல் வினா

Question 2.
நம் தோல்விகளுக்கு எல்லாம் மூலக்காரணமாகத் தாகூர் சுட்டுவன யாவை?
Answer:
சிதறிய கடிதங்கள் உணர்த்துவன :
தாகூரின் சிதறிய கடிதங்கள், ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டுவன. பத்மா ஆற்றின் கரை தெரியா வெள்ளத்தால் மரம் சாய, பறவை ஒன்று உயிரிழந்து தந்து வந்தது. நாட்டுப்புறங்களில் மாபெரும் இயற்கை, எல்லாவற்றையும் விழுங்கும் இயல்புடையதாக விளங்குகிறது. பட்டணங்களில் இயற்கையின் வளங்களான பிற உயிரினங்கள் மதிக்கப்படுவதில்லை பாரத நாட்டின் பண்பு, எல்லா உயிர்களிடத்தும் கருணை காட்டுவதாகும்.

அலட்சிய மனப்பான்மை :
மரங்களில் மலரும் பூக்கள் பல, நம் நாட்டில் உள்ளன. அவற்றின் அனைத்துப் பெயர்களையும், மனிதன் அறிந்திருக்கவில்லை. சால மலர்கள், தம் மணத்தால் மனிதனைத் திரும்பிப் பார்க்க வைக்கின்றன. இலக்கியங்களில் கூறப்பட்ட ல மலர்களின் பெயர்களை அறிவோம். அவை எவை எனத் தெரிந்துகொள்ள, முயற்சி செய்வதில்லை . அவ்வளவு அலட்சியம்.

தோல்விகளுக்குக் காரணம் :
நாகரிக வாழ்க்கையில் சீக்கிரம் வாடும் மலர்களுடன் மனிதனுக்குத் தொடர்பு உண்டு. நம் மனம் ஸ்தூலப் (போடிப்) பொருளுக்கு அப்பால் செல்ல இயலாமல், திகைத்து நின்று விடுகிறது. இதனைத் ‘தாமலிகம் என்பர். அதாவது ‘மெடீரியலிஸம்’. உலகில் எத்தனையோ நேர்த்தியான புட்கள் (பறவைகள்) உள்ளன. அவற்றின் பெயர்களை அறியோம். இயற்கையிடம் அலட்சிய மனப்பான்மை வளர்வதே, நம் தோல்விகளுக்குக் காரணம்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

வாழ்வில் உயர வழி :
மக்களிடம் கொண்ட பற்றுதல் காரணமாக உண்டானதில்லை தேசப்பற்று. அது தேர்வுக்குப் படிக்கும் பாடநூல்களால் உருவானது. நாம் அறிந்த உலகம் குறுகலானது. அதில் அதிகமான பொருள்கள் இடம்பெற வாய்ப்பு இல்லை. இயற்கையை அலட்சியப்படுத்தாமல், இயற்கையோடு இணைந்து வாழவும், இயற்கையை நேசித்து வாழவும் கற்றுக்கொள்ள வேண்டும். அதனால் வாழ்வில் உயரலாம் எனக் கருத்துகளை எல்லாம் உணர்த்துவனவாகத் தாகூரின் கடிதங்கள் உள்ளன.

பலவுள் தெரிக

Question 1.
பூஜை, விஷயம், உபயோகம் – என்பவை முறையே ……………. என்று தமிழில் வழங்கப்படும்.
அ) வழிபாடு, செய்தி, பயன்பாடு
ஆ) பயன்பாடு, வழிபாடு, செய்தி
இ) வழிபாடு, பயன்பாடு, செய்தி
ஈ) வழிபாடு, பயன்பாடு, செய்தி
Answer:
அ) வழிபாடு, செய்தி, பயன்பாடு

கூடுதல் வினாக்கள்

Question 2.
செய்தியை உரியவருக்குத் தெரிவிப்பதற்காக எழுதி அனுப்பப்படுவது ………………..
அ) செய்தித்தாள்
ஆ) குறுஞ்செய்தி
இ) தொலைபேசி
ஈ) கடிதம்
Answer:
ஈ) கடிதம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

Question 3.
தாகூரின் கடிதங்கள், …………….. என்பர்.
அ) கற்பனையானவை
ஆ) நகைச்சுவையானவை
இ) அறிவுரை வழங்குபவை
ஈ) கவித்துவ இயல்பு கொண்டவை
Answer:
ஈ) கவித்துவ இயல்பு கொண்டவை

Question 4.
“பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர்” /“கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி” – என்று குறிப்பிடப்படுபவர் …………….
அ) த. நா. குமாரசுவாமி
ஆ) தேவேந்திரநாத் தாகூர்
இ) இரவீந்திரநாத தாகூர்
ஈ) பூபேந்திரநாத தாகூர்
Answer:
இ) இரவீந்திரநாத தாகூர்

Question 5.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற தாகூரின் கீதாஞ்சலி என்பது ………………
அ) நாடக நூல்
ஆ) சிறுகதை நூல்
இ) நாவல்
ஈ) கவிதை நூல்
Answer:
ஈ) கவிதை நூல்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

Question 6.
தாகூர் நிறுவிய பல்கலைக்கழகம் …………………..
அ) கல்கத்தா பல்கலைக்கழகம்
ஆ) சாந்திநிகேதன் பல்கலைக்கழகம்
இ) வங்க பல்கலைக்கழகம் ,
ஈ) விஸ்வபாரதி பல்கலைக்கழகம்
Answer:
ஈ) விஸ்வபாரதி பல்கலைக்கழகம்

Question 7.
தாகூரின் கடிதங்களைத் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டது …………….
அ) தமிழ்நாடு அரசு
ஆ) மேற்கு வங்க அரசு
இ) மியூசிக் அகாதெமி
ஈ) சாகித்திய அகாதெமி
Answer:
ஈ) சாகித்திய அகாதெமி

Question 8.
த. நா. குமாரகாரமிக்கு வங்க அரசு செய்த சிறப்பு …………………….
அ) தாகூர் இலக்கிய விருது
ஆ) நேதாஜி இலக்கிய விருது
இ) நேரு இலக்கிய விருது
ஈ) ஜோதிபாசு இலக்கிய விருது
Answer:
ஆ) நேதாஜி இலக்கிய விருது

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

Question 9.
‘பத்மா’ என்பது, ………………
அ) இறந்துபோன பறவையின் பெயர்
ஆ) ஒருவகை மலரின் பெயர்
இ) பௌ – கதா – கவோ என்னும் புறா இனம்
ஈ) கிழக்கு வங்காளத்தின் பெரிய நதி
Answer:
ஈ) கிழக்கு வங்காளத்தின் பெரிய நதி

Question 10.
‘தாமஸிகம்’ என்பது
அ) ஒருவகைப் பறவை
ஆ) ஒரு நதி
இ) ஒருவகை மலர்
ஈ) மெடீரியலிஸம்
Answer:
ஈ) மெடீரியலிஸம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

Question 11.
‘பௌ – கதா – கவோ’ என்பது ……………………
அ) ஒருவகை மலர்
ஆ) ஒரு புறா இனம்
இ) மைனா
ஈ) ஒரு நதி
Answer:
ஆ) ஒரு புறா இனம்

Question 12.
சாந்தி நிகேதனத்திலுள்ள காவியப் புகழ்பெற்ற மரம்……………..
அ) ஸேவுந்தி
ஆ) தாமஸிகம்
இ) பௌ-கதா-கவோ
ஈ) பியால
Answer:
ஈ) பியால

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

Question 13.
‘விருப்புடையவள்’ என்பதைக் குறிக்கும் சொல்……………..
அ) ஸேவுந்தி
ஆ) கபோதாக்ஷி
இ) மயூராக்ஷி
ஈ) இச்சாமதி
Answer:
ஈ) இச்சாமதி

Question 14.
‘பத்மா’, சற்று ஒருபுறமாகப் புரண்டாள். இதில் ‘பத்மா’ என்பது……………..
அ) மாமரக்கிளை
ஆ) பெரிய நதி
இ) பறவைக்கூடு
ஈ) மண் சரிவு
Answer:
ஆ) பெரிய நதி

Question 15.
‘விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவியவர் ……………..
அ) மகாத்மா காந்தியடிகள்
ஆ) இரவீந்திரநாத தாகூர்
இ) த. நா. குமாரசாமி
ஈ) ஜவகர்லால் நேரு
Answer:
ஆ) இரவீந்திரநாத தாகூர்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. பொருட்செறிவாலும், கற்பனை நயத்தாலும், மொழி வளத்தாலும், கடிதம், இலக்கியமாக உருப்பெறுகின்றது.
வினா : கடிதம் இலக்கியமாக எப்போது உருப்பெறுகின்றது எவ்வாறு?)

2. இறந்துபோன ஒரு சின்னஞ்சிறு பறவை, ஆற்று வெள்ளத்தில் மிதந்து வருவதை இன்று கண்டேன்.
வினா : ஆற்று வெள்ளத்தில் இன்று கண்டது என்ன? –

3. தன் சுகதுக்கத்திற்குமுன் மற்ற உயிர்களின் சுகதுக்கங்களைப் பற்றி மனிதன் எண்ணுவதுகூட இல்லை .
வினா : எப்போது, எதை மனிதன் எண்ணுவது இல்லை?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

4. நமது சாத்திரங்கள் எல்லா உயிர்களிடத்தும் கருணை காட்டுவதை நடக்க முடியாத ஓர் அதிசயம் என்று விட்டுவிடவில்லை.
வினா : நடக்க முடியாத ஓர் அதிசயம் என்று நமது சாத்திரங்கள் எதை விட்டுவிடவில்லை ?

5. மலரிடம் இவ்வளவு அலட்சிய மன பான்மை வேறு எந்த நாட்டிலும் காணப்படுவதில்லை.
வினா : வேறு எந்த நாட்டிலும் காணப்படாத அலட்சிய மனப்பான்மை எது?

6. ஸ்தூலப் பொருளுக்கு அப்பால் செல்ல இயலாமல் நம் மனம் திகைப்படைந்து நின்று விடுகிறது.
வினா : நம் மனம் எதற்கு அப்பால் செல்ல இயலாமல் எவ்வாறு நின்று விடுகிறது?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

7. இயற்கையிடம் இந்த அலட்சிய மனப்பான்மைதான் நம்முடைய தோல்விகளுக்கெல்லாம் மூலகாரணம்.
வினா : நம்முடைய தோல்விகளுக்கெல்லாம் எம் மனப்பான்மை மூலகாரணம்?

8. பரிட்சையில் தெற வேண்டின் சரித்திரப் பாடத்தைப் புறக்கணிக்க முடியாது.
வினா : சரித்திரப் பாடத்தை ஏன் புறக்கணிக்க முடியாது?

9. தாய் மொழிக் கல்வி வழியாகப் பிற பாடங்களைப் படிப்பது, மாணவர்களிடம் புரிதலை மேம்படுத்தும்.
வினா : பிற பாடங்களை எம் மொழி வழியாகப் படிப்பது, மாணவர்களிடம் புரிதலை மேம்படுத்தும்?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 8.1 தாகூரின் கடிதங்கள்

10. மாற்றுத் திறனாளிகளுக்குக் குறைந்த எடையுள்ள செயற்கைக் காலை உருவாக்கிக் கொடுத்த பெருமை அப்துல்கலாமைச் சாரும்.
வினா : மாற்றுத் திறனாளிகளுக்குக் குறைந்த எடையுள்ள செயற்கைக் காலை உருவாக்கிக் கொடுத்த பெருமை யாரைச் சாரும்?

11. தகவல் தொழில் நுட்ப உலகில் கணினிப் புரட்சி இன்றியமையாதது.
வினா : கணினிப் புரட்சி எவ்வுலகில் இன்றியமையாதது?

12. சொற்களை இணைத்துப் பேசும் திறனை நாம் குழந்தைப் பருவம் முதலே பெற்று வந்திருக்கிறோம்.
வினா : எத்தகு திறனை நாம் குழந்தைப் பருவம்முதலே பெற்று வந்திருக்கிறோம்?

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை

Question 1.
புறச்சூழல்களுக்கு ஏற்ப உங்கள் நேர மேலாண்மையைப் பயன்படுத்திக் கல்வியில் கவனம் செலுத்துவதற்கான வழிமுறைகள் குறித்துக் கலந்துரையாடுக.
Answer:
(நேசனும், வாசனும் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள், பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் வாசன் வகுப்பில் நல்ல மதிப்பெண் வாங்குவான். நேசன் குறைவான மதிப்பெண்களே வாங்குவான். ஒருநாள் கல்வி பற்றி இருவரும் உரையாடுகின்றனர்)

நேசன் : வாசன் நீ எப்படியோ நல்ல மதிப்பெண் பெற்று விடுகிறாய். என்னால் அது முடியவில்லையே என்ன காரணம் கூற முடியுமா.

வாசன் : வகுப்பில் ஆசிரியர் பாடத்தை நடத்தும் போது நன்றாகப் படிப்பேன். வீட்டிற்கு வந்தபின் இரண்டு முறை படிப்பேன்.

நேசன் : வீட்டிற்கு வந்து இரண்டு முறை படிப்பாயா? எப்படி உனக்கு நேரம் கிடைக்கிறது! வாசன் : ஏன் நேரம் கிடைக்காது! மாலை 5 மணிக்கு வீடு திரும்புவேன். ஒரு தேநீர் அருந்துவேன்.
அறை மணி ஓய்வெடுப்பேன். சரியாக 6 மணிக்கு படிக்க ஆரம்பித்துவிடுவேன்.

நேசன் : அப்படியாநான் 5-6 பள்ளியிலேயே கிரிக்கெட்விளையாடுவேன். 6-8தொலைக்காட்சி பார்ப்பேன். 9 மணிக்குச் சாப்பிடுவேன். 9 – 10 க்குள் தூங்க ஆரம்பித்து விடுவேன்.

வாசன் : தயவுசெய்து நான் சொல்வதைக்கேள். இனிமேல் என்னைப் பின்பற்று. என் அறிவுரைகளைக் கேள்.

நேசன் : சரி அப்படியே செய்கிறேன் சொல்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை

வாசன் : காலை 5 மணிக்குள் எழுந்திரு.
முகம் கழுவி, பல் துலக்கி, 5.15க்குள் புத்தகத்தைக் கையில் எடு.
1.30 மணி நேரம் தொடர்ந்து படி.
7.30 க்குள் குளி, பள்ளிக்குத் தயாராகு.
8 மணிக்குச் சாப்பாடு
8.30 மணிக்குப் பள்ளி
5 – 6 மணிக்கு வீடு திரும்பு
6 – 8 வரை தொலைக்காட்சி, விளையாட்டுகளைத் தவிர்த்துப் படி. நிச்சயம் முன்னேற்றம் கிட்டும்.

நேசன் : நன்றி நண்பா, நிச்சயம் உன் பேச்சைக் கேட்பேன், வெற்றி பெறுவேன்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘பலர் துஞ்சவும் தாம் துஞ்சான்’ விழித்திருந்தவரும் அவரைப் பாடியவரும்
அ) சோழன் நெடுங்கிள்ளியை – பாணர்
ஆ) சோழன் நலங்கின்னியை – கோவூர் கிழார்
இ) கணைக்கால் இரும்பொறையை – கபிலர்
ஈ) கரிகாலனை – உருத்திரங்கண்ணனார்
Answer:
ஆ) சோழன் நலங்கின்னியை – கோவூர் கிழார்

குறுவினா

Question 1.
பருவத்தே பயிர் செய் – நேர மேலாண்மையோடு பொருத்தி எழுதுக.
Answer:

  • சரியான காலத்தில் விதைப்பது தான் பட்டம் என்பதைப் பருவம் என்பர்.
  • ‘பருவத்தே பயிர் செய்’ என்பது அனுபவச் சொல்.
  • ஆழ்ந்து யோசித்தால் பயிருக்கு மட்டுமன்று; பயிர் செய்யும் மனிதகுலத்துக்கும் பொருந்தும்.
  • பருவத்தே செய்ய வேண்டிய செயல்களில் முக்கியமானது பள்ளிக்குச் செல்வது – கற்க வேண்டிய பருவத்தில் கற்று வாழ்க்கையைச் செம்மைப்படுத்தல் வேண்டும்.

சிறுவினா

Question 1.
வேளாண்மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரைப்பனவற்றை எழுதுக.
Answer:
(i) வேளாண்மைக்குள்ளும் மேலாண்மை கூறுகள் உண்டு. சரியான பயிர், உரிய நேரத்தில் விதைத்தல் நீர் மேலாண்மை, அறுவடைக்குப் பின் பாதுகாத்தல் நல்ல விலைவரும் வரை இருப்பு வைத்தல்.

(ii) ஒவ்வொரு கட்டத்திலும் விழிப்போடும், பொறுப்போடும் செயல்பட்டால் வேளாண்மை செழிக்கும்.

(iii) மனமே ஒரு வேளாண்மைக்குட்பட்ட மேலாண்மை.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை

Question 2.
எந்தவொரு பொருளைப் பயன்படுத்தும்போதும் அதற்குப் பின்னால் உள்ள மனிதர்களின் உழைப்பை நாம் சிந்திப்பதில்லை. ஒரு தேநீரைப் பருகும்போது அதற்குப் பின்னால் உள்ள மனித உழைப்பைச் சிந்தித்து உங்கள் கருத்தை எழுதுக.
Answer:
(i) நாம் உழைக்கின்றபோது உழைப்பின் சுவையை ‘நா’ அறியாது.

(ii) ஆனால் தேநீரைப் பருகும்போது அதன் சுவையை ‘நா’ உணர்வது மட்டுமல்லாமல் உடல் புத்துணர்ச்சி பெற்று நம்மனதைச் சிந்திக்கத் தூண்டுகிறது.

(iii) அதாவது நம் தாய் நமக்கு முன்னர் காலையில் எழுந்து தேநீருக்குத் தேவையானவற்றைத் தயார் செய்து கொடுக்கும் தாயாரின் உழைப்பை நாம் சிந்திக்கிறோம்.

நெடுவினா

Question 1.
நிருவாக மேலாண்மை குறித்து வெ. இறையன்பு கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
நாலடியார் கூறும் நிருவாக மேலாண்மை :

  • உயர் பதவிகளில் இருப்பவர்கள் எல்லாவற்றிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பதில்லை.
  • யார் திறமைசாலிகள் என்று அறிந்து அவர்களை அருகில் வைத்துக் கொண்டால் போதும்.
  • தெரிந்திருப்பது ஒரு வகை அறிவு என்றால் யாருக்குத் தெரியும் எனத் தெரிந்திருப்பது மற்றோர் அறிவு.

இதையே நாலடியார்,
“கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தாழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர் – தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்ந்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு” என்று பக்குவமாகக் கூறுகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை

  • நிருவாகத்தில் வரவே செலவைத் தீர்மானிக்க வேண்டும்.
  • வரவைத் தாண்டி நிறையச் செலவு செய்பவன். அடுத்தவரிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்படுவான்

ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் நிதி மேலாண்மை :

  • டைமன் என்பவன் ஏதேன்ஸ் நகரில் இருந்தன். அவன் வரவு குறைந்தாலும் செலவு அதிகம் செய்தான்.
  • அவன் உதவியாளர் நிதி நிலைமையைப் பேசும் பொழுதெல்லாம் கேட்க மறுத்தான்.
  • கடன் ஒரு நேரத்தில் கழுத்தை நெறித்தது. அப்போதும் அவன் வருந்தவில்லை.
  • அவன் தான் அளித்த விருந்தை உண்பவர் உதவி செய்வார்கள் என்று பொய்க்கணக்குப் போட்டான்.
  • சேவகர்கள் நான்கு திசைகளிலும் சென்று வெறும் கையோடும் வெளிரிய முகத்தோடும் திரும்பினார்கள்.
  • டைமன் ஊருக்கு ஒதுக்குப்புறமாகச் செல்கிறான். மனித இனத்தையே வெறுக்கிறான்.

ஔவையாரின் நிருவாக மேலாண்மை :
தாம் ஈட்டும் பொருளினைவிட அதிகமாகச் செலவு செய்பவர்கள் பிற்காலத்தில் தங்கள் மானத்தையும், அறிவினையும் உணர்வையும் இழப்பார்கள். அவர்கள் எவ்வழி நடந்தாலும் திருடர்கள் போல நடத்தப்படுவார்கள். எத்துணைப் பிறப்பு பிறந்தாலும் எவ்வித மரியாதையும் கொடுக்கப்படாமல் தீயவர் போலவே நடத்தப்படுவர்.

“ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு”

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை

என்ற பாடல் மூலம் ஒளவையார் நிதி நிருவாக மேலாண்மையை விளக்குகிறார்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
ஒர் அரசன் ஒரு நாளை எவ்வாறு ஒதுக்கிப் பணியாற்ற வேண்டும் என்பதற்குத் திருவள்ளுவர் அட்டவணையைத் தருவதாக அமையும் அதிகாரம்
அ) மடியின்மை
ஆ) வெஃகாமை
இ) ஊழ்
ஈ) வெகுளாமை
Answer:
அ) மடியின்மை

Question 2.
‘பலர் துஞ்சவும் தான் துஞ்சான்
உலகு காக்கும் உயர் கொள்கை
கேட்டோன், எந்தை என் தெண்கிணைக் குரலே”
– என்னும் அடிகள் இடம்பெறும் நூல் ………………… பாடப்பட்ட வன் … அடிலை கடமபறும் நூல் ……………… பாடியோன

அ) புறநானூறு, கோவூர்கிழர், சோழன் நலங்கிள்ளி
ஆ) பதிற்றுப்பத்து, கபிலர், சேரன் செங்குட்டுவன்
இ) புறநானூறு, பரணர், பேகன்
ஈ) மனோன்மணியம், சுந்தரனார், ஜீவகன்
Answer:
அ) புறநானூறு, கோவூர்கிழர், சோழன் நலங்கிள்ளி

Question 3.
சீனத்தில் வழங்கும் யாங்சௌ கதை ………….. பற்றியது.
அ) இவ்வுலக வாழ்வை
ஆ) நேர மேலாண்மையை
இ) கொல்லாமையை
ஈ) சொர்க்கத்தை
Answer:
ஆ) நேர மேலாண்மையை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை

Question 4.
வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்
செய் எனக் காத்து இனிது அரசு செய்கின்றான் – என்று தன் நாட்டை மிகவும் செப்பமாகவும்
நுணுக்கமாகவும் ஆட்சி செய்த யாரைப் பற்றி யார் எந்நூலில் பாடியுள்ளார்?

அ) தசரதனைப், கம்பர், கம்பராமாயணம் – பாலகாண்டத்தில்
ஆ) நெடுஞ்செழியனைப், இளங்கோவடிகள், சிலப்பதிகாரம் – மதுரைக்காண்டத்தில்
இ) நலங்கிள்ளியைப், கோவூர்கிழார் – புறநானூற்றில்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) தசரதனைப், கம்பர், கம்பராமாயணம் – பாலகாண்டத்தில்

Question 5.
‘இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக… என்று கூறுவது
அ) மூதுரை
ஆ) ஆத்திசூடி
இ) அறநெறிச்சாரம்
ஈ) நளவெண்பா
Answer:
இ) அறநெறிச்சாரம்

Question 6.
உரோமபுரிச் சிப்பாய்கள் பாண்டியப் போர்ப்படையில் இடம் பெற்றிருந்தர்கள் என்ற குறிப்பினை உடைய நூல்
அ) கம்பராமாயணம்
ஆ) சிலப்பதிகாரம்
இ) மதுரைக்காஞ்சி
ஈ) பட்டினப்பாலை
Answer:
ஆ) சிலப்பதிகாரம்

Question 7.
‘நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்’ என்று குதிரைகள் இறக்குமதி பற்றிக் குறிப்பிடும் நூல்
அ) பரிபாடல்
ஆ) பட்டினப்பாலை
இ) பதிற்றுப்பத்து
ஈ) புறநானூறு
Answer:
ஆ) பட்டினப்பாலை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை

Question 8.
‘வான் முகந்த நீர் மலைப் பொழியவும்…’ எனக் காவிரிப்பூம்பட்டினத்தில் மாரிக்காலத்து மழைமேகம் போல, கணக்கிட இயலாத பொருள்கள் பண்டசாலை முற்றத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்ததனைக் குறிப்பிடும் நூல்
அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) பட்டினப்பாலை
ஈ) அகநானூறு
Answer:
இ) பட்டினப்பாலை

Question 9.
காவிரிப்பூம்பட்டினத்துக்கு வந்த பொருள்களுக்குச் சுங்கம் வசூலித்தபின் அவற்றின்மீது சுங்க அதிகாரிகள் பொறித்த சின்னம்
அ) வில்
ஆ) மீன்
இ) புலி
ஈ) சிங்கம்
Answer:
இ) புலி

Question 10.
சங்க இலக்கியங்களின் வாயிலாக மிகப் பெரிய துறைமுகமாகவும், யவனர்களின் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்படும் இடமாகவும் அறியப்படுவது
அ) கொற்கை
ஆ) முசிறி
இ) தொண்டி
ஈ) வஞ்சி
Answer:
ஆ) முசிறி

Question 11.
அகஸ்டஸ் சீசரைப் பாண்டிய நாட்டுத் தூதுக்குழு ஒன்று கி.மு. 20ஆம் ஆண்டு சந்தித்ததைப் பற்றிக் கூறுபவர்
அ) ஸ்ட்ரேபோ
ஆ) யுவான்சுவாங்
இ) பாகியான்
ஈ) மெகஸ்தனிஸ்
Answer:
அ) ஸ்ட்ரேபோ

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை

Question 12.
யவனரது கப்பல்கள் பற்றிய குறிப்பு இடம்பெறும் பாடல்
அ) புறநானூற்றில் 56ஆம் பாடல்
ஆ) புறநானூற்றில் 86ஆம் பாடல்
இ) அகநானூற்றில் 56ஆம் பாடல்
ஈ) அகநானுற்றில் 86ஆம் பாடல்
Answer:
அ) புறநானூற்றில் 56ஆம் பாடல்

Question 13.
யவனரை அரண்மனைத் தொழிலாளர்களாக்கிக் கட்டுப்படுத்தியவன் என்று பதிற்றுப்பத்து இரண்டாம் பத்தில் குறிக்கப்படுபவன்
அ) சேரன் செங்குட்டுவன்
ஆ) உதியஞ் சேரலாதன்
இ) இமயவரம்பன் நெடுஞ்சோலாதன்
ஈ) இவற்றில் எவருமிலர்
Answer:
இ) இமயவரம்பன் நெடுஞ்சோலாதன்

Question 14.
‘உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்’ என்ற குறட்பா உணர்த்தும் செய்தி

அ) தன்னுடைய வலிமையின் அளவை மீறிச்செயல்படுவோர் அழிவர்
ஆ) எந்தச் செயலையும் முடிக்க இயலும் என்பதை நம்ப வேண்டும்
இ) முடியாதது என்ற ஒன்று எவருக்குமே இல்லை
ஈ) தான் என்ற சர்வம் வெற்றியுடையவனாக்கும்
Answer:
அ) தன்னுடைய வலிமையின் அளவை மீறிச்செயல்படுவோர் அழிவர்

Question 15.
கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின் நல்லறிவு நாளுந் தலைப்படுவர்’ – என்று கூறும் நூல்
அ) திருக்குறள்
ஆ) நாலடியார்
இ) நன்மணிக்கடிகை
ஈ) ஏலாதி
Answer:
ஆ) நாலடியார்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை

Question 16.
‘டைமன்’ பற்றிய ……………. நாடகம் நிதி மேலாண்மை பற்றிய மிகச் சிறந்த வாழ்வியல் விளக்கமாக அமைகிறது.
அ) வேர்ட்ஸ்வொர்த்தின்
ஆ) பெர்னாட்ஷாவின்
இ) ஷேக்ஸ்பியரின்
ஈ) டெமாஸ்தனிஸின்
Answer:
இ) ஷேக்ஸ்பியரின்

Question 17.
“ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப்…”
– என நிதியைக் கண்டபடி கையாள்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் கவிஞர்

அ) கோவூர்கிழார்
ஆ) ஒளவையார்
இ) ஒக்கூர் மாசாத்தியார்
ஈ) கபிலர்
Answer:
ஆ) ஒளவையார்

Question 18.
ஹிராக்ளிடஸ் என்பவர் ……………. நாட்டவர் ஆவார்.
அ) கிரேக்க
ஆ) இத்தாலி
இ) அமெரிக்க
ஈ) ஆப்கானிய
Answer:
அ) கிரேக்க

Question 19.
ஹிராக்ளிடஸ் என்பார் எழுதிய உலகப் புகழ்பெற்ற ‘துளிகள்’ என்னும் நூல் ……….. ஒற்றை வரிகளை உடையது.
அ) 124
ஆ) 126
இ) 154
ஈ) 224
Answer:
ஆ) 126

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை

Question 20.
‘இரண்டு முறை ஒருவன் ஒரே நதியில் இறங்க முடியாது’ என்று எழுதியவர்
அ) ஹிராக்ளிடஸ்
ஆ) ஷேக்ஸ்பியர்
இ) பெர்னாட்ஷா
ஈ) அரிஸ்டாட்டில்
Answer:
அ) ஹிராக்ளிடஸ்

Question 21.
‘ஒவ்வொரு நாளும் சூரியன் புதிது’ என்று கூறியவர்
அ) ஹிராக்ளிடஸ்
ஆ) ஷேக்ஸ்பியர்
இ) பெர்னாட்ஷா
ஈ) அரிஸ்டாட்டில்
Answer:
அ) ஹிராக்ளிடஸ்

Question 22.
அவ்வைக்கு நெல்லிக்கனியைத் தந்தவன்
அ) பேகன்
ஆ) அதியன்
இ) பாரி
ஈ) ஓரி
Answer:
ஆ) அதியன்

Question 23.
‘இலக்கியத்தில் மேலாண்மை ‘ என்னும் நூலை எழுதியவர்
அ) சகாயம்
ஆ) வெ. இறையன்பு
இ) இந்திரா பார்த்தசாரதி
ஈ) மேலாண்மை பொன்னுசாமி
Answer:
ஆ) வெ. இறையன்பு

Question 24.
இ.ஆ.ப. தேர்வுக்குத் தமிழை ஒரு விருப்பப் பாடமாகப் படித்து வெற்றி பெற்றவர்
அ) இராதாகிருஷ்ணன்
ஆ) வெ. இறையன்பு
இ) ரோகினி
ஈ) இவர்களில் எவருமிலர்
Answer:
ஆ) வெ. இறையன்பு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை

Question 25.
வெ. இறையன்புவின் எந்த நூல் 1995ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசைப் பெற்றது?
அ) வாய்க்கால் மீன்கள்
ஆ) ஏழாவது அறிவு
இ) உள்ளொளிப்பயணம்
ஈ) மூளைக்குள் சுற்றுலா
Answer:
அ) வாய்க்கால் மீன்கள்

குறுவினா

Question 1.
நேர மேலாண்மையை வள்ளுவர் வழி நின்று விளக்குக.
Answer:
செயல் செய்வதற்கு ஏற்ற காலத்தையும் ஏற்ற இடத்தையும் அறிந்து செயல்பட்டால் உலகத்தையே அடைய நினைத்தாலும் கைகூடும் என்பதை.
“ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின் ” என்ற குறள் தெளிவுபடுத்துகிறது.

Question 2.
மடியின்மை என்னும் அதிகாரத்தின் வாயிலாக ஓர் அரசன் ஒரு நாளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்கிறார்?
Answer:
“மடிஇலா மன்னவன் அய்தும் அடிஅளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு”
என்ற குறளில் உலகம் அனைத்தையும் அளந்த இறைவன் சோம்பல் இன்றி பாதுகாப்பது போல அரசனும் சோம்பல் இல்லாமல் தன் பெரு முயற்சியால் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்கிறார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை

Question 3.
கடலைக் குறிக்கும் வேறு பெயர்களைக் குறிப்பிடுக.
Answer:
அரலை, அலை, அழுவம், அளம், அளக்கர், ஆர்கலி, அரி, உவரி, திரை, பானல், பெருநீர், சுழி, நீராழி, புணர்ப்பு, ஆழி, ஈண்டு நீர், தென்நீர், பௌவம், முந்நீர், வரி, ஓதம், வலயம்.

Question 4.
சங்க இலக்கியங்கள் காட்டும் மிகப்பெரிய துறைமுகம் எது? யாருடைய கப்பல்கள் அங்கு இருந்தது?
Answer:
முசிறி, யவணர்களின் கப்பல்கள்.

Question 5.
பதிற்றுப்பத்து காட்டும் வணிக மேலாண்மை விளக்குக.
Answer:
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் யவனரை அரண்மனைத் தொழிலாளர்களாக வைத்திருந்தான். பகை நாட்டுச் செல்வங்களைத் தன் நாட்டு மக்களுக்கு வழங்கினான் என்று பதிற்றுப்பத்து இரண்டாம் பத்தின் மூலம் அறிய முடிகிறது.

Question 6.
வணிக மேலாண்மை விதி யாது?
Answer:

  • யாருடனும் போட்டி போடக்கூடாது.
  • போட்டிக்கு வருபவரை அழிக்க வேண்டும் என்று எண்ணக் கூடாது.
  • போட்டியாளர்கள் நமக்குள் உந்து சக்தியை உற்பத்திச் செய்கிறார்கள்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை

Question 7.
மனமே ஒரு வேளாண்மைக்குட்பட்ட மேலாண்மை விளக்குக.
Answer:
இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக
வன்சொல் களைக்கட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர்…..
என்ற பாடலடிகளில் விளை நிலமாக இன்சொல்லும், விதையாக ஈதலும், வன்மையான சொல் களையாகவும் உண்மை என்ற எருவை விட்டு அன்பு நீர் பாய்ச்சி வேளாண்மை செய்ய வேண்டும் அறநெறிச்சாரம் விளக்குகிறது.

Question 8.
மேலாண்மையில் புலி – பூனை ஒப்பிடுக.
Answer:
பழமொழி :
புலியைப் பூனையைப் போல தொடர்ந்து நடத்தினால் அது பூனையாகவே ஆகிவிடும். புத்திசாலிகள் பூனைகளையும் புலியாக்குவார்கள் அவசரக்காரர்கள் புலிகளையும் எலியாக்குவார்கள் என்பதே புலி – பூனை மேலாண்மைக் கருத்தாகும்.

Question 9.
நாலடியார் கூறும் நிர்வாக மேலாண்மையை விளக்குக.
Answer:
கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர்…… என்கிறார் நாலடியார்.

Question 10.
வெ. இறையன்புவின் படைப்புக்களம் எதனை அடிப்படையாகக் கொண்டது?
Answer:
சிறுகதை, புதினம், தன்முன்னேற்ற நூல்,

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை

Question 11.
நம்பிக்கை நூல். வெ. இறையன்புவின் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசினைப் பெற்ற நூல் ஆண்டு கூறுக.
Answer:
நூல் – வாய்க்கால் மீன்கள்
ஆண்டு – 1995

Question 12.
சங்க இலக்கியம் காட்டும் நிர்வாக மேலாண்மைக்குச் சான்றுகள் சில குறிப்பிடுக.
Answer:
அடுத்தவர் நலனுக்காக வாழ்பவரே தலைமைப்பண்பு உள்ளவர். இந்திரர்க்குரிய அமுதம் கிடைத்தாலும் தனித்து உண்ணார். அப்படித்தான் அதியன் அவ்வைக்கு நெல்லிக்கனியைத் தந்தான் என்பதை அறிய முடிகிறது.

சிறுவினா

Question 1.
சீனக்கதை வாயிலாக நேர மேலாண்மையை விளக்குக.
Answer:

  • சீனத்தில் யாங்சௌ என்ற பகுதி.
  • பல இளைஞர்கள் நீச்சல் வீரர்கள்.
  • நீச்சல் தன்னம்பிக்கை தருவதோடு எதிர்நீச்சல் போடவும் கற்றுத் தருகிறது.
  • ஒரு நாள் படகில் ஆழமான நதியில் பல இளைஞர்கள் பயணம் செய்கிறார்கள்.
  • வெள்ளம் ஏற்பட்டுப் படகு கவிழ்ந்தது.
  • அனைவரும் நதியில் விழுந்து நீச்சல் அடிக்க ஆரம்பித்தனர்.
  • ஒருவன் மட்டும் சரியாக நீந்தாமல் தத்தளித்தான்.
  • அவன் மற்ற வீரர்களைவிட சிறந்த வீரனும் கூட.
  • எல்லோரும் ஏன் பின் தங்குகிறாய்? என்று கேட்கிறார்கள். நீ சிறந்த வீரனே என்கிறார்.
  • அவன் என்னுடைய கச்சையில் ஆயிரம் பொற்காசுகள் உள்ளது. அதனால் என்னால் நீந்த முடியவில்லை என்றான்.

அவன் அவற்றை விடுவதற்கு மனமில்லாமல் தன் அரிய உயிரை நீத்தான்.
எது எந்த நேரத்தில் முக்கியம் என்று சரியான முடிவெடுப்பதில்தான் வாழ்வின் வெற்றி அடங்கி உள்ளது என்பது இக்கதை மூலம் அறிய முடிகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை

Question 2.
வணிக மேலாண்மையைப் பற்றி பட்டினப்பாலை கூறுவனவற்றை விளக்குக.
Answer:
(i) காவிரிப்பூம்பட்டினத்தில் மாரி காலத்து மழை மேகம் போல், கடல் வழியே வேற்று நாட்டு மரக்கலங்கள் வந்தன.

(ii) மரக்கலங்களில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்தும், வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாக அனுப்பவும் கணக்கிட இயலாத பொருட்கள் பண்டகசாலை முற்றத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

“வான் முகந்த நீர் மலைப் பொழியவும்
மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்” – பட்டினப்பாலை 126 – 132
என்ற பாடலடிகள் மூலம் அறிய முடிகிறது.

Question 3.
காவிரிப் பூம்பட்டினத்து துறைமுகம் பற்றிக் குறிப்பு வரைக.
Answer:

  • பல நாடுகளில் இருந்து மரக்கலங்கள் வந்தன.
  • ஏற்றுமதி, இறக்குமதிப் பொருட்கள் முற்றத்தில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தது.
  • சுங்க வரி வசூலிக்கப்பட்டன.
  • வரி வசூலித்த பின் புலிச்சின்னம் பொறித்தனர்.
  • வரி ஏய்ப்பவர்களை கண்காணிக்க வலிமை மிக்கவர்கள் இருந்தனர்.

Question 4.
ஷேக்ஸ்பியரின் நாடகம் வழி ஔவையாரின் நல்வழியை ஒப்பிட்டு நிதி மேலாண்மையை விளக்குக.
Answer:

  • டைமன் என்பவன் ஏதென்ஸ் நகரில் இருந்தான்.
  • வரவு குறைவு செலவு அதிகம் நீடித்தது.
  • உதவியாளர் எவ்வளவு சொல்லியும் கேட்க மறுத்தான்.
  • கடன் கொடுத்தவர்கள் கழுத்தை நெரித்தார்கள்.
  • அதற்கும் அவன் வருந்தவில்லை .
  • தன்னிடம் விருந்து உண்டவர்கள் உதவுவார்கள் என்று எண்ணினான். அதுவும் பொய்யானது.
  • சேவகர்கள் நான்கு திசை சென்றும் வெறும் கையோடு திரும்பினர்.
  • டைமன் ஊருக்கு ஒதுக்குப்புறமாகச் செல்கிறான்.
  • மனித இனத்தையே வெறுக்கிறான்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 7.1 இலக்கியத்தில் மேலாண்மை

இதையே ஔவையார் ஆன முதலில் அதிகம் செலவானால் மானம் அழிந்து மதிகெட்டுப் – போன திசை எல்லார்க்கும் கள்ளனாய் ஏழி பிறப்புக்கும் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு. வரவுக்கு அதிகம் செலவு செய்து, மானம் அழிந்து மதிக்கெட்டு, எந்தத் திசை போனோம் என்று தெரியாமல் திருடனாய், தீயவனாய் வாழும் நிலை ஏற்படும் என்று ஷேக்ஸ்பியர் நாடகத்தோடு ஒப்பிடுகிறார்.

Question 5.
மேலான மேலாண்மை என்பது என்ன?
Answer:

  • மேலாண்மை என்பது வெறும் புத்தக அறிவுடன் முடிவதன்று.
  • நொடிக்கு நொடி சூழல்கள் மாறிக் கொண்டே இருப்பது.
  • ஏற்கனவே தயாரித்த அறிவுரைகளை வைத்து புதிய நெருக்கடியை நேர்கொள்ள முடியாது.
  • முன் அனுபவம் என்பது எதிர்மறை ஆகிவிட்டது.
  • அனுபவசாலிகள் செக்குமாடாகத்தான் இருப்பார்கள்.
  • நமக்குத் தேவை ஜல்லிக்கட்டுக் காளைகள்.

Question 6.
வெ. இறையன்பு குறிப்பு வரைக.
Answer:
பெயர் : வெ.இறையண்பு
பதவி : இந்தி ஆட்சிப்பணி (தமிழ்நாடு)
சிறப்பு : ஐ.ஏ.எஸ். தேர்வு தமிழில் எழுதி வெற்றிப் பெற்றவர்
நூல்கள் : வாய்க்கால் மீன்கள், ஐ.ஏ.எஸ். வெற்றிப்படிக்கட்டுகள், ஏழாவது அறிவு, உள்ளொளிப்பயணம், மூளைக்குள் சுற்றுலா
சிறப்புகள் : வாய்க்கால் மீன்கள் : 1995 – தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்ற நூல் மற்றும் பட்டிமன்ற நடுவர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 6.7 திருக்குறள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 6.7 திருக்குறள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

Question 1.
படத்திற்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 6.7 திருக்குறள் 1
அ) எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்

ஆ) உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.

இ) வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்டம்
மற்றைய எல்லாம் பிற.
Answer:
ஆ) உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.

Question 2.
கவிதைக்குப் பொருந்தும் திருக்குறளைக் கண்டறிக. மனமோ மாட்டுவண்டி
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 6.7 திருக்குறள் 2
Answer:
ஆ) சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.

Question 3.
பின்வரும் நாலடியார் பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக. சீரியர் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய்
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 6.7 திருக்குறள் 3
Answer:
இ) நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை தீயினத்தின்
அல்லல் படுப்பதூஉம் இல்.

Question 4.
அல்லல் படுப்பதூம் இல் – எவரோடு பழகினால்?
அ) வான்போல் பகைவர்
ஆ) மெய்ப்பொருள் காண்பவர்
இ) எண்ணியாங்கு எய்துபவர்
ஈ) தீயினத்தார்
Answer:
ஈ) தீயினத்தார்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

Question 5.
திண்ணியர் என்பதன் பொருள் தருக.
அ) அறிவுடையார்
ஆ) மன உறுதியுடையவர்
இ) தீக்காய்வார்
ஈ) அறிவினார்
Answer:
ஆ) மன உறுதியுடையவர்

Question 6.
ஆராய்ந்து சொல்கிறவர்
அ) அரசர்
ஆ) சொல்லியபடி செய்பவர்
இ) தூதுவர்
ஈ) உறவினர்
Answer:
இ) தூதுவர்

Question 7.
பொருத்துக.
அ) பாம்போடு உடன் உறைந்தற்று – (i) தீக்காய்வார்
ஆ) செத்தார் – (ii) சீர் அழிக்கும் சூது
இ) வறுமை தருவது – (iii) கள் உண்ப வர்
ஈ) இகல் வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் – (iv) உடன்பாடு இல்லாதவர்

அ) 1, 2, 3, 4
ஆ) 2, 3, 4, 1
இ) 4, 1, 3, 2
ஈ) 4, 3, 2, 1
Answer:
ஈ) 4, 3, 2, 1

Question 8.
நடுங்கும்படியான துன்பம் யாருக்கில்லை?
அ) வரப்போவதை முன்னரே அறிந்து காத்துக் கொள்ள கூடியவர்
ஆ) மனத்திட்பம் உடையவர்
இ) அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர்
ஈ) சூதாடுமிடத்தில் காலம் கழிப்பவர்
Answer:
அ) வரப்போவதை முன்னரே அறிந்து காத்துக் கொள்ள கூடியவர்

Question 9.
எளியது, அரியது எது?
அ) தீயினத்தின் துணை – நல்லினத்தின் துணை
ஆ) சொல்வது – சொல்லியபடி செய்வது
இ) சிறுமை பல செய்வது – பகைவர் தொடர்பு
ஈ) மெய்ப்பொருள் காண்பது – உருவுகண்டு எள்ளாதது
Answer:
ஆ) சொல்வது – சொல்லியபடி செய்வது

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

குறுவினா

Question 1.
மனத்தை அதன் போக்கில் செல்லவிடக்கூடாது என்று வள்ளுவம் கூறுவது ஏன்?
Answer:

  • “சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ” ,,,,,,,,,,,
  • மனத்தை, அது போகும் போக்கில் செல்லவிடக் கூடாது.
  • மேலும் மனத்தினைத் தீமை வழியிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவது அறிவாகும்.

Question 2.
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து – இக்குறட்பாவின் உவமையைப் பொருளோடு பொருத்துக.
Answer:
உவமை : ஒருவரின் எளிய தோற்றத்தைக் கண்டு இகழக் கூடாது.
உவமேயம் : பெரிய தேருக்குச் சிறிய அச்சாணி இன்றியமையாதது.
பொருத்தம் : சிறிய அச்சாணிதான் என்று எளிமையாக எண்ணக் கூடாது. அதுபோல ஒருவரின் தோற்றத்தை வைத்து எளிமையாக எண்ணக்கூடாது.

Question 3.
மன உறுதியின் தேவை பற்றித் திருக்குறள் யாது கூறுகிறது ?
Answer:
“வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்” ,,,

  • நல்ல செயல்பாட்டிற்கு மன உறுதியே வேண்டும்.
  • மற்றவை எல்லாம் பயன்படாது.

Question 4.
நஞ்சுண்பவர் என வள்ளுவர் யாரை இடித்துரைக்கிறார் ?
Answer:
“நஞ்சு உண்பார் கள் உண்பவர்”
கள் உண்பவர் நஞ்சு உண்பவரே என வள்ளுவர் கள்ளுண்பவரை இடித்துரைக்கிறார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

Question 5.
அரசரோடு நட்புப் பாராட்டினாலும் செய்யத்தகாதன யாவை?
Answer:

  • “பழையம் எனக் கருதி பண்பு அல்ல செய்யும்” நான் அரசருடன் பழமையான நட்பு உடைவராய் உள்ளேன்.
  • இத்தகைய எண்ணத்துடன் தகுதி அல்லாதவற்றைச் செய்தால் அந்த உரிமையானது துன்பத்தைத் (289) தரும்.

Question 6.
அஞ்சத் தகுந்தன, அஞ்சத் தகாதன என வள்ளுவம் குறிப்பிடுவது யாது?
Answer:
“வாள்போல் பகைவரை அஞ்சற்க”
அஞ்சத்தகாதன :
வாளைப் போல வெளிப்படையாகத் துன்பம் செய்யும் பகைவருக்கு அஞ்சத் தேவையில்லை.

அஞ்சத்தகுந்தன :
அறிவுடையார் போல் நடித்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.

Question 7.
வறுமையும் சிறுமையும் தருவது எது?
Answer:
ஒருவருக்கு துன்பம் பல உண்டாக்கி அவருடைய புகழையும் கெடுக்கின்ற சூதுதான் வறுமையும் சிறுமையும் ஆகும்.

Question 8.
நீங்கள் படித்ததில் பிடித்த குறளை எழுதி, காரணத்தைக் குறிப்பிடவும்.
Answer:
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.”

பிடித்தற்குக் காரணம் :
ஒருவனுக்கு மூன்று காலத்திலும் உதவக்கூடிய கல்வியினை செய்ந்நன்றி என்ற வினைத்தொகையால் குறிப்பிட்டு, மறந்தவனுக்கு தப்பிப்பிழைக்க வழியில்லை என்று வள்ளுவன் வார்த்த வடிவம் அதிசயத்தக்கது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

Question 9.
உலகத்தில் சிறந்த துணையாகவும், பகையாகவும் வள்ளுவர் எவற்றைக் குறிப்பிடுகிறார்?
Answer:

  • நல்ல இனத்தைவிடச் சிறந்த துணை உலகத்தில் இல்லை.
  • தீய இனத்தைவிடத் துன்பத்தைத் தரும் பகையும் இல்லை.

Question 10.
இலக்கணக் குறிப்பு தருக.
Answer:
ஒரீஇ – சொல்லிசை அளபெடை
படுப்பதூஉம் – இன்னிசை அளபெடை
சொல்லுதல் – தொழிற்பெயர்

Question 11.
கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ யற்று – பொருள் கூறுக.
Answer:
நீரில் மூழ்கியவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றது.

Question 12.
பெருந்தேர் – புணர்ச்சி விதி கூறுக
Answer:
பெருந்தேர் – பெருமை + தேர்
ஈறுபோதல் என்ற விதிப்படி, மை விகுதி கெட்டு பெரு + தேர் என்றானது.
இனமிகல் என்ற விதிப்படி, பெருந்தேர் எனப் புணர்ந்தது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

சிறுவினா

Question 1.
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார் – இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
Answer:
அணி விளக்கம் :
ஒரு பொருளின் தொழில் அல்லது செயல் காரணமாக அமையும் உவமை தொழில் உவமை எனப்படும்.

சான்று :
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார் – குறட்பா.

உவமை : தீயில் குளிர் காய்பவர் போல.
உவமேயம் : அரசனைச் சார்ந்திருப்பவர் விலகாமலும் நெருங்காமலும் நடந்துகொள்ள வேண்டும்.

அணிப்பொருத்தம்:
அரசனைச் சார்ந்து இருப்பவர் குளிர்காய்பவர்களைப் போல தீயிலிருந்து அகலாது அணுகாது இருத்தல் வேண்டும். இதில் அகழுதல், அணுகுதல் போன்ற தொழில் ஒப்புமை எதிர்மறையில் வந்துள்ளதால் தொழில் உவமை எனப்படும்.

Question 2.
அறிவின் மேன்மை பற்றித் திருக்குறள் கருதுவன யாவை?
Answer:
“அறிவற்றம் காக்கும் கருவி செறுவாருக்கு
உள் அழிக்கல் ஆகா அரண்.”

  • அறிவு ஒருவனுக்கு அழிவு வராமல் காக்கும் கருவி.
  • மேலும் பகைவரால் அழிக்க முடியாத பாதுகாப்பு அரணும் ஆகும்.

“சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.”

  • மனத்தினை, அது போகும் போக்கில் செல்ல விடாமல் தடுப்பது அறிவு.
  • மேலும் தீமையிலிருந்து விலக்கி நல்வழியில் செலுத்துவதும் அறிவு.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”
ஒரு பொருளைப் பற்றி யார் சொல்லக் கேட்டாலும் அப்பொருளின் உண்மைத் தன்மையைக் கண்டறிவதே அறிவாகும். இவையாவும் வள்ளுவன் வகுத்த அறிவின் மேன்மைகள் ஆகும்.

Question 3.
எடுத்துக்காட்டு உவமை அணியை விளக்கிக் கீழ்க்காணும் குறளுக்கு இவ்வணியைப் பொருத்தி எழுதுக.
Answer:
துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுஉண்பார் கள்உண் பவர்.

அணிவிளக்கம் :
உவமை ஒரு வாக்கியமாகவும் உவமேயம் ஒரு வாக்கியமாகவும் உவம உருபு மறைந்து வருவதால் எடுத்துக்காட்டு உவமை அணி எனப்படும்.
உவமை : துஞ்சினார் செத்தாரின் வேறு
உவமேயம் : நஞ்சுஉண்பார் கள்உண் பவர்
உருபு : மறைந்துள்ளது.

பொருத்தம்:
உறங்கியவர், இறந்தவரைவிட வேறுபட்டவர் அல்லர். அதுபோல கள் உண்பவரும் நஞ்சு உண்பவருக்குச் சமமே என்பதை விளக்குவதால் இப்பாடல் எடுத்துக்காட்டு உவமை அணி ஆகும்.

Question 4.
மனத்திட்பம் அவசியமான பண்பு என்பதைக் குறள்நெறி நின்று விளக்குக.
Answer:
“வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.”

மனவலிமை :
செயலினது வலிமை என்பது அதனைச் செய்பவனின் மனவலிமையே ஆகும். ஏனைய வலிமைகள் எல்லாம் மனவலிமையிலிருந்து வேறுபட்டவை.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

”சொல்லுதல் யார்க்கும் எளிய அறியவாம்
சொல்லிய வண்ணம் செயல்”
எளிது – அரிது : ஒரு செயலை இவ்வாறு செய்யலாம் என்று சொல்வது எளிது. ஆனால், சொல்லியபடிச் செய்து முடிப்பது அரிது.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெரின்”

எண்ணத்தில் வலிமை :
ஒரு செயலை எண்ணியவர் எண்ணத்தில் வலிமை உடையவராக இருந்தால், எண்ணியதை எண்ணியபடியே செய்து முடிப்பர்.

“உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.”

உருவம் பொருட்டல்ல :
ஒருவரது உருவத்தைப் பார்த்து இகழ்ந்துரைக்கக் கூடாது. உருண்டு ஓடும் பெரிய தேருக்குச் சிறிய அச்சாணி போல இன்றியமையாதவராக அவர் இருக்கலாம்.

Question 5.
சிற்றினம் சேராமையும் நல்லினத்தின் துணையுமாக வள்ளுவர் உரைப்பன பற்றி நீவிர் அறிவனவற்றை எழுதுக.
Answer:
“மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான் ஆம்
இன்னான் எனப்படும் சொல்”

இனத்தால்தான் தகுதி :
மக்களுக்கு உணர்ச்சி மனத்தின் வழி உண்டாகும். இவன் இப்படிப்பட்டவன் என்று அவன் சார்ந்திருக்கும் இனத்தை வைத்தே உலகம் சொல்லும்.
”நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை தீயினத்தின்
அல்லர் படுப்பதூஉம் இல்.”

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

நல்லவர் தீயவர் நட்பு :
நல்லவர் நட்பு போல சிறந்த துணை இல்லை; தீயவர் நட்புபோல் துன்பம் தருவதும் இல்லை.

Question 6.
வாளையும் பாம்பையும் எவ்வகைப் பகைமைக்குச் சான்றாக வள்ளுவர் கூறுகிறார்?
Answer:
“வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு”

வாள்போலும் பாம்பு போலும் பகை :
வாளினைப் போல் வெளிப்படையாகத் துன்பம் செய்யும் பகைவரிடம் அஞ்ச வேண்டியது இல்லை. ஆனால் உறவினர் போலப் பழகும் பகைவருக்குப் பயப்பட வேண்டும்.

Question 7.
சூதும் கள்ளும் கேடு தரும் – திருக்குறள் வழி விவரிக்க.
Answer:
“சிறுமை பல செய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவது ஒன்று இல்”

சூதின் சிறுமை :
இழிவைத் தந்து சிறப்பை அழிக்கும் சூது போல வறுமை தரத்தக்கது வேறு இல்லை.
“பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்”

சூதால் செல்வம் அழியும் :
தொடர்ந்து சூதாடும் இடத்திற்குச் சென்று வந்தால் நீண்டநாள் சம்பாதித்த செல்வமும் பண் பும் கெட்டழியும்.

கள்ளும் விஷமும் ஒன்றே :
உறங்கினவர் இறந்தாரோடு வேறுபாடு உடையவர் அல்லர். அதுபோல எப்போதும் கள் உண் 11 பவர் விஷம் உண்பவர் ஆவார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

திருத்தமுடியாது :
கள்ளுண்டு மயங்கியவனை நல்லன சொல்லித் திருத்த முடியாது. அது நீரில் மூழ்கிய ஒருவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போலாகும்.

நெடுவினா

Question 1.
“அறிவுடைமை வாழ்வின் உயர்வுக்குத் துணை நிற்கும்” என்பதை வள்ளுவம் வழிநின்று நிறுவுக.
Answer:
அறிவுடைமை வாழ்வின் உயர்விற்கு துணை நிற்கும் :
”அறிவுற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள் அழிக்கல் ஆகா அரண்.”
அறிவானது உயிர்க்கு அழிவு வராமல் பாதுகாக்கும் கருவியாகும். மேலும் அறிவானது, பகைவரால் அழிக்க முடியாத பாதுகாப்பு அரணும் அதுவே ஆகும்.

“சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.”
மனத்தினை, அது போகும் போக்கில் போகவிடக் கூடாது. தீமையிலிருந்து விலக்கி நல்ல வழியில் செலுத்துவதே அறிவாகும்.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”
எந்தப் பொருளை யார் வாயிலாகக் கேட்டாலும் அந்தப் பொருளின் உண்மைத் தன்மையைக் கண்டறிவதே அறிவு ஆகும்.

“எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு”
உலகம் எத்தகைய உயர்ந்த நெறியில் செல்கிறதோ அந்நெறியில் தாமும் உலகத்தாடு இணைந்து செல்வதே அறிவாகும்.

“எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்”
பின்னால் வரப்போவதை முன்பே அறிந்து காத்துக் கொள்ளும் வல்லமை கொண்ட அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றில்லை.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

இறுதியாக, அறிவு பாதுகாப்புத் தரும் கருவி, நல்வழியில் செலுத்தக்கூடியது அறிவு, உண் மையைக் கண்டறிய உதவும் அறிவு, வருமுன் காப்பது அறிவு என்று மனித வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் வாழ்க்கையின் உயர்வுக்குத் துணையாய் நிற்பது அறிவே என்பதை வள்ளுவன் வழியில் கண்டோம்.

Question 2.
திருக்குறள் ஒரு வாழ்வியல் இலக்கியம் – நிறுவுக.
Answer:
தொடக்கமாக,
வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை ஒருங்கே தொகுத்து மானுடத்திற்கு அளித்து மங்காப் புகழ்பெற்றவன் மாதானுபாங்கி. வள்ளுவனின் கோட்பாடுகளுள் யாதானும் ஒன்றைக் கடைப்பிடித்து ஒழுகினாலும் வையத்துள் வாழ்வாங்கு வாழலாம்.

அறிவுடைமை :

  • இந்த அதிகாரத்தில் அறிவானது ஒருவனுக்கு அழிவு வராமல் காக்கும் கருவி என்றும், பகைவராலும் அழிக்க முடியாத அரண் என்றும் வள்ளுவர் கூறுகிறார்.
  • மனதைப் போகும் போக்கில் விடாமல், தீமையிலிருந்து நம்மை விலக்குவதும் அறிவு ஆகும்.
  • ஒரு பொருளைப் பற்றி எவர் கூறக் கேட்டாலும் அப்பொருளின் உண்மைத் தன்மையை ஆராய்வதே அறிவு என்கிறார் வள்ளுவர்.

மன உறுதி வேண்டும் :
அதிகாரத்தில் ஒரு செயலைச் செய்ய எண்ணியவர் மனவுறுதியுடையவராக இருந்தால், எண்ணியவாறே நடக்கும் என்று மனதில் உறுதி வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

மன்னரைச் சார்ந்து ஒழுகுதல் என்னுமிடத்தில், நான் அரசரிடம் நட்பு கொண்டவன் என்று தகுதி அல்லாதவற்றைச் செய்தால் கேடு உண்டாகும் என்றும் நல்லது அல்லாதவற்றைச் செய்தல் துன்பம் என்று வள்ளுவர் கண்டிக்கிறார்.

உட்பகை என்ற நிலையில் வெளிப்படையாகத் துன்பம் செய்பவரை விட உறவு போல் நடித்து உட்பகையாடுவார் தொடர்புக்கு அஞ்ச வேண்டும் என்று தெளிவுப்படுத்துகிறார் வள்ளுவர்.

கள்உண்ணாமையைக் கூறும் போது கள் உண்பவர் நஞ்சு உண்பரே என்றும் கள் உண் பவனைத் திருத்துவது என்பது நீரில் மூழ்கியவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றதாகும் என்கிறார் வள்ளுவர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

இறுதியாக ஒரு மனிதன், பின்னால் வரப்போவதை முன்னால் அறியக்கூடிய அறிவுடையவனாகவும், சிற்றினம் சேராமலும் திண்ணிய மனமுடையவராகவும், தீயில் குளிர் காய்பவர் போல மன்னனோடு சார்ந்திருக்க வேண்டும் என்றும், உட்பகை இன்றி, கள்ளுண் ணாமலும் வாழ்வதே வாழ்க்கை என்று வள்ளுவர் நம்மை வழிப்படுத்துகிறார்.

இலக்கணக் குறிப்பு

யார் யார் – அடுக்குத்தொடர்
சொல்லுதல் – தொழிற்பெயர்
அஞ்சுக – வியங்கோள் வினைமுற்று
ஒரீஇ – சொல்லிசை அளபெடை
தீத்துரீஇ – சொல்லிசை அளபெடை
செல்வமும் பண்பும் – எண்ணும்மை
படுப்பதூஉம் – இன்னிசை அளபெடை

பகுபத உறுப்பிலக்கணம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 6.7 திருக்குறள் 4

புணர்ச்சி விதி

1. துணையில்லை – துணை + இல்லை

  • இஈஐ வழியவ்வும் என்ற விதிப்படி, துணை + ய் + இல்லை என்றானது.
  • உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (ய் + இ = யி) துணையில்லை என்று புணர்ந்தது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

2. உறைந்தற்று – உறைந்து + அற்று

  • உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் என்ற விதிப்படி, உறைந்த் + அற்று என்றானது.
  • உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (த் + அ = த) உறைந்தற்று என்று புணர்ந்தது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு’ – என்னும் குறட்பாவில் இடம்பெறும் அணி
அ) சொல்பின்வருநிலையணி
ஆ) பொருள்பின்வருநிலையணி
இ) சொற்பொருள் பின்வரும் நிலையணி
ஈ) உவமையணி
Answer:
இ) சொற்பொருள் பின்வரும் நிலையணி

Question 2.
‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆனப் பெறின்’ – இக்குறட்பாவில் இடம்பெறும் அணி
அ) சொல்பின்வருநிலையணி
ஆ) பொருள்பின்வருநிலையணி
இ) சொற்பொருள் பின்வரும்நிலையணி
ஈ) உவமையணி
Answer:
இ) சொற்பொருள் பின்வரும்நிலையணி

Question 3.
‘அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார்’ – என்னும் குறட்பாவில் இடம்பெறும் அணி
அ) இல்பொருள் உவமையணி
ஆ) தொழில் உவமை அணி
இ) எடுத்துக்காட்டு உவமையணி
ஈ) உருவக அணி
Answer:
ஆ) தொழில் உவமை அணி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

Question 4.
‘உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடன்உறைந் தற்று’ – இக்குறட்பாவில் இடம்பெறும் அணி
அ) உவமை அணி
ஆ) உருவக அணி
இ) வேற்றுமை அணி
ஈ) பிறிதுமொழிதல் அணி
Answer:
அ) உவமை அணி

Question 5.
கள் உண்பவர் …………… உண்ப வர் என்கிறார் வள்ளுவர்.
அ) அமுது
ஆ) நஞ்சு
இ) பழங்கஞ்சி
ஈ) ஊன்
Answer:
ஆ) நஞ்சு

சிறுவினா

Question 1.
சொற்பொருள் பின்வரு நிலையணியை சான்றுடன் விளக்குக.
Answer:
அணி விளக்கம் :
செய்யுளில் முன்னர் வந்தச் சொல் அதேப் பொருளில் பின்னர் பலமுறை வருவது சொற்பொருள் பின்வரு நிலையணியாகும்.

சான்று :
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

விளக்கம் :
இக்குறட்பாவில் பொருள் என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளைத் தருவதால் சொல்பொருள் பின்வரும் நிலையணி ஆகும். எந்த ஒரு பொருள் பற்றி எவர் கூறினாலும் அதனை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், அந்தப் பொருளில் உள்ள உண்மையை ஆராய்ந்து எடுத்துக் கொள்வதே அறிவுடைமை ஆகும்.

Question 2.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியாற்
திண்ணியர் ஆகப் பெறின். – இப்பாடலில் பயின்று வரும் அணியை விளக்குக.
Answer:
இக்குறட்பாவில் சொற்பொருள் பின்வரும் நிலையணி பயின்று வந்துள்ளது.

அணி விளக்கம் :
செய்யுளில் முன்னர் வந்த சொல் அதே பொருளில் பின்னர் பலமுறை வருவது சொற்பொருள் பின்வரு நிலையணி ஆகும்.

விளக்கம் :
இப்பாடலில் ‘எண்ணிய’ என்றச் சொல் ‘நினைப்பது’ என்ற பொருளில் பலமுறையில் வந்துள்ளது. எண்ணியவர் மனவுறுதியுடையவராக இருந்தால் எண்ணியதை எண்ணியவாறே அடைவர் என்று ஆகும்.

Question 3.
உவமையணியை சான்றுடன் விளக்குக.
Answer:
அணி இலக்கணம் :
உவமை ஒரு வாக்கியமாகவும், உவமேயம் ஒரு வாக்கியமாகவும் உரும உருபு வெளிப்படையாகவும் வந்தால் உவமையணி ஆகும்.
சான்று :
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடன்உறைந் தற்று

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 6.7 திருக்குறள்

உவமை : உடம்பாடு இலாதவர் வாழ்க்கை
உவமேயம் : குடங்களுள் பாம்போடு
உருபு : அற்று (வெளிப்படை)

பொருத்தம் :
உள்ளத்தில் உடன்பாடு இல்லாதவருடன் கூடி வாழும் வாழ்க்கை ஒரு குடிசையில் பாம்புடன் வாழ்வது போன்றதாகும்.

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 2 Measurements Ex 2.2

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Maths Guide Pdf Chapter 2 Measurements Ex 2.2 Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 8th Maths Solutions Chapter 2 Measurements Ex 2.2

Question 1.
Find the perimeter and area of the figures given below. (π = \(\frac{22}{7}\))
(i)
Samacheer Kalvi 8th Maths Guide Answers Chapter 2 Measurements Ex 2.2 1
Answer:
Samacheer Kalvi 8th Maths Guide Answers Chapter 2 Measurements Ex 2.2 3
Length of the arc of the semicircle = \(\frac{1}{2}\) × 2πr units
= \(\frac{22}{7} \times \frac{7}{2}\) m =11 m
∴ Perimeter = Sum of all lengths of sides that form the closed boundary
P = 11 + 10 + 7 + 10 m
Perimeter = 38 m
Area = Area of the rectangle – Area of semicircle
= (l × b) – \(\frac{1}{2}\) πr2 sq. units
Samacheer Kalvi 8th Maths Guide Answers Chapter 2 Measurements Ex 2.2 2
= 50.75 m2 (approx)
Area of the figure = 50.75 m2 approx.

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 2 Measurements Ex 2.2

(ii)
Samacheer Kalvi 8th Maths Guide Answers Chapter 2 Measurements Ex 2.2 4
Answer:
Samacheer Kalvi 8th Maths Guide Answers Chapter 2 Measurements Ex 2.2 5
Perimeter = sum of outside lengths
Length of the arc of quadrant circle = \(\frac{1}{4}\) × 2πr units
= \(\frac{1}{2} \times \frac{22}{7}\) × 3.5cm
= 11 × 0.5 cm = 5.5cm
∴ Length of arc of 2 sectors 2 × 5.5 cm
= 11 cm
∴ Perimeter P = 11 + 6 + 3.5 + 6 + 35 cm
P = 30 cm
Area Area of 2 quadrant circle + Area of a rectangle.
= 2 × \(\frac{1}{4}\)πr2 + lb sq. units
= (\(\frac{1}{2} \times \frac{22}{7}\) × 3.5 × 3.5) + (6 × 3.5) cm2
= (11 × 3.5 × 0.5) + 21 cm2
= (19.25 + 21) cm2 = 40.25 cm2
∴ Area = 40.25 cm2 approx

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 2 Measurements Ex 2.2

Question 2.
Find the area of the shaded part in the following figures. (π = 3.14)
(i)
Samacheer Kalvi 8th Maths Guide Answers Chapter 2 Measurements Ex 2.2 6
Answer:
Area of the shaded part = Area of 4 quadrant circles of radius \(\frac { 10 }{ 2 }\) cm
= 4 × \(\frac { 1 }{ 4 }\) × πr2 = 3.14 × \(\frac { 10 }{ 2 }\) × \(\frac { 10 }{ 2 }\) cm2
= \(\frac { 314 }{ 4 }\) cm2 = 78.5 cm2
Area of the shaded part = 78.5 cm2
Area of the unshaded part = Area of the square – Area of shaded part
= a2 – 78.5 cm2 = (10 × 10) – 78.5 cm2
= 100 – 78.5cm2 = 21.5cm2
Area of the unshaded part = 21.5 cm2 (approximately)

(ii)
Samacheer Kalvi 8th Maths Guide Answers Chapter 2 Measurements Ex 2.2 7
Answer:
Area of the shaded part = Area of semicircle – Area of the triangle
Samacheer Kalvi 8th Maths Guide Answers Chapter 2 Measurements Ex 2.2 8
= \(\frac { 1 }{ 2 }\) × 3.14 × 7 × 7 – \(\frac { 1 }{ 2 }\) × 14 × 7cm2
= \(\frac{153.86}{2}\) – 49 cm2 = 76.93 – 49 cm2
= 27.3 cm2
∴ Area of the shaded part = 27.93 cm2 (approximately)

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 2 Measurements Ex 2.2

Question 3.
Find the area of the combined figure given which is got by joining of two parallelograms
Samacheer Kalvi 8th Maths Guide Answers Chapter 2 Measurements Ex 2.2 9
Answer:
Area of the figure = Area of 2 parallelograms with base 8 cm and height 3 cm
= 2 × (bh) sq. units
= 2 × 8 × 3cm2 = 48 cm2
∴ Area of the given figure = 48 cm2

Question 4.
Find the area of the combined figure given, formed by joining a semicircle of diameter 6 cm with a triangle of base 6 cm and height 9 cm. (π = 3.14)
Samacheer Kalvi 8th Maths Guide Answers Chapter 2 Measurements Ex 2.2 10Samacheer Kalvi 8th Maths Guide Answers Chapter 2 Measurements Ex 2.2 10
Answer:
Area of the figure = Area of the semicircle of radius 3 cm + 2 (Area of triangle with b = 9 cm and h = 3 cm)
= \(\left(\frac{1}{2} \pi r^{2}\right)+\left(2 \times \frac{1}{2} b h\right)\) sq. units
= \(\frac { 1 }{ 2 }\) × 3.14 × 3 × 3 + (2 × \(\frac { 1 }{ 2 }\) × 9 × 3)cm2
= \(\frac{28.26}{2}\) + 27 cm2 = 14.13 + 27 cm2 = 41.13 cm2
∴ Area of the figure = 41.13 cm2 (approximately)

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 2 Measurements Ex 2.2

Question 5.
The door mat which is in a hexagonal shape has the following measures as given in the figure. Find its area.
Samacheer Kalvi 8th Maths Guide Answers Chapter 2 Measurements Ex 2.2 11
Answer:
Area of the doormat = Area of 2 trapezium
Height of the trapezium h =\(\frac { 70 }{ 2 }\) cm: a = 90 cm; b = 70 cm
∴ Area of the trapezium = \(\frac { 1 }{ 2 }\) h (a + b) sq. units
Area of the door mat = 2 × \(\frac { 1 }{ 2 }\) × 35 (90 + 70)cm2
= 35 × 160 cm2 = 5600 cm2
∴ Area of the door mat = 5600 cm2

Question 6.
A rocket drawing has the measures as given in the figure. Find its area.
Samacheer Kalvi 8th Maths Guide Answers Chapter 2 Measurements Ex 2.2 12
Answer:
Area = Area of a rectangle + Area of a triangle + Area of a trapezium
For rectangle length l = 120 – 20 – 20 cm = 80 cm
Breadth b = 30 cm
For the triangle base = 30 cm
Height = 20 cm
For the trapezium height h = 20 cm
Parallel sided a = 50 cm
b = 30cm
∴ Area of the figure (l × b) + (\(\frac { 1 }{ 2 }\) × base × height) + \(\frac { 1 }{ 2 }\) × h × (a + b)sq. units
= (80 × 30) + (\(\frac { 1 }{ 2 }\) × 30 × 20) + \(\frac { 1 }{ 2 }\) × 20 × (50 + 30) cm2
= 2400 + 300 + 800 cm2 = 3500 cm2
Area of the figure = 3500 cm2

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 2 Measurements Ex 2.2

Question 7.
Find the area of the irregular polygon shaped fields given below.
Samacheer Kalvi 8th Maths Guide Answers Chapter 2 Measurements Ex 2.2 13
Answer:
Area of the field = Area of trapezium FBCH + Area of ∆DHC + Area of ∆EGD + Area of ∆EGA + Area of ∆BFA
Area of the triangle = \(\frac { 1 }{ 2 }\) bhsq.units
Area of the trapezium = \(\frac { 1 }{ 2 }\) × h × (a + b) sq.units
Area of the trapezium FBCH = \(\frac { 1 }{ 2 }\) × (10 + 8) × (8 + 3)m2 = 9 × 11 = 99 m2 ….. (1)
Area of the ∆DHC = \(\frac { 1 }{ 2 }\) × 8 × 5 m2 = 20 m2 ….. (2)
Area of ∆EGD = \(\frac { 1 }{ 2 }\) × 8 × 15m2 = 60 m2 …….. (3)
Area of ∆EGA = \(\frac { 1 }{ 2 }\) × 8 × (8 + 6)m2 = 4 × 14 m2
= 56m2
Area of ∆BFA = \(\frac { 1 }{ 2 }\) × 3 × 6m2 = 9 m2
∴ Area of the field = 99 + 20 + 60 + 56 + 9 m2
= 244 m2
Area of the field = 244 m2

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 2 Measurements Ex 2.1

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Maths Guide Pdf Chapter 2 Measurements Ex 2.1 Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 8th Maths Solutions Chapter 2 Measurements Ex 2.1

Question 1.
Fill in the blanks:
(i) The ratio between the circumference and diameter of any circle is _______ .
Answer:
π

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 2 Measurements Ex 2.1

(ii) A line segment which joins any two points on a circle is a _______ .
Answer:
Chord

(iii) The longest chord of a circle is _______ .
Answer:
Diameter

(iv) The radius of a circle of diameter 24 cm is _______ .
Answer:
12 cm

(v) A part of circumference of a circle is called as _______ .
Answer:
an arc

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 2 Measurements Ex 2.1

Question 2.
Match the following
Samacheer Kalvi 8th Maths Guide Answers Chapter 2 Measurements Ex 2.1 1
Answer:
(i) – c
(ii) – d
(iii) – e
(iv) – b
(v) – a

Question 3.
Find the central angle of the shaded sectors (each circle is divided into equal sectors).
Samacheer Kalvi 8th Maths Guide Answers Chapter 2 Measurements Ex 2.1 2
Answer:
Samacheer Kalvi 8th Maths Guide Answers Chapter 2 Measurements Ex 2.1 3
Samacheer Kalvi 8th Maths Guide Answers Chapter 2 Measurements Ex 2.1 4

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 2 Measurements Ex 2.1

Question 4.
For the sectors with given measures, find the length of the arc, area and perimeter.
(π = 3. 14)
(i) central angle 45° r = 16 cm
Answer:
(i) central angle 45° r = 16 cm
Length of the arc l = \(\frac{\theta^{\circ}}{360^{\circ}}\) × 2πr units
l = \(\frac{45^{\circ}}{360^{\circ}}\) × 2 × 3.14 × 16 cm
l = \(\frac{1}{8}\) × 2 × 3.14 × 16 cm
l = 12.56 cm
Area of the sector = \(\frac{\theta^{\circ}}{360^{\circ}}\) × πr2 sq. units
A = \(\frac{45^{\circ}}{360^{\circ}}\) × 3.14 × 16 × 16
A = 100.48 cm2
Perimeter of the sector P = l + 2r units
P = 12.56 + 2(16) cm
p = 44.56 cm

(ii) central angle 120°, d = 12.6 cm
Answer:
∴ r = \(\frac{12.6}{2}\) cm
r = 6.3cm
Length of the arc l = \(\frac{\theta^{\circ}}{360^{\circ}}\) × 2πr units
l = \(\frac{120^{\circ}}{360^{\circ}}\) × 2 × 3.14 × 63 cm
l = 13.188cm
I = 13.19cm
Area of the sector A = \(\frac{\theta^{\circ}}{360^{\circ}}\) × πr2 sq. units
A = \(\frac{120^{\circ}}{360^{\circ}}\) × 3 14 × 6.3 × 6.3 cm2
A = 3.14 × 6.3 × 2.1 cm2
A = 41.54 cm2
Perimeter of the sector P = l + 2r cm
P = 13.19 + 2(6.3) cm
= 13.19 + 1.2.6 cm
P = 25.79 cm

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 2 Measurements Ex 2.1

Question 5.
From the measures given below, find the area of the sectors.
(i) Length of the arc = 48 m, r = 10 m
Answer:
Area of the sector A = \(\frac{l r}{2}\) sq. units
l = 48m
r = 10m
= \(\frac{48 \times 10}{2}\) m2
= 24 × 10m2
= 240 m2
Area of the sector = 240 m2

(ii) length of the arc = 50 cm, r = 13.5 cm
Answer:
Length of the arc l = 12.5 cm
Radius r = 6 cm
Area of the sector A = \(\frac{l r}{2}\) sq. units
A = \(\frac{12.5 \times 6}{2}\)
A = 12.5 × 3cm2
A = 37.5 cm2
Area of the sector A = 37.5 cm2

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 2 Measurements Ex 2.1

Question 6.
Find the central angle of each of the sectors whose measures are given below. (π = \(\frac{22}{7}\))
(i) area = 462 cm2, r = 21 cm
Answer:
area = 462 cm2, r = 21 cm
Radius of the Sector = 21 cm
Area of the sector = 462 cm2
\(\frac{l r}{2}\) = 462
\(\frac{l \times 21}{2}\) = 462
l = \(\frac{462 \times 2}{21}\)
l = 22 × 2
Length of the arc l = 44 cm
Samacheer Kalvi 8th Maths Guide Answers Chapter 2 Measurements Ex 2.1 5
θ° = 120°
∴ Central angle of the sector = 120°

(ii) length of the arc = 44 m, r = 35 m
Answer:
Radius of the sector = 8.4cm
Area of the sector = 18.48 cm2
\(\frac{l r}{2}\) = 18.48
\(\frac{1 \times 8.4}{2}\) = 18.48
l = \(\frac{18.48 \times 2}{8.4}\)
Hint:
Samacheer Kalvi 8th Maths Guide Answers Chapter 2 Measurements Ex 2.1 6
Length of the arc l = 4.4 cm
Samacheer Kalvi 8th Maths Guide Answers Chapter 2 Measurements Ex 2.1 7
Hint:
Samacheer Kalvi 8th Maths Guide Answers Chapter 2 Measurements Ex 2.1 8
θ° = 30°
Central angle = 30°

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 2 Measurements Ex 2.1

Question 7.
A circle of radius 120 m is divided into 8 equal sectors. Find the length of the arc of each of the sectors.
Answer:
Radius of the circle r = 120 m
Number of equal sectors = 8
∴ Central angle of each sector = \(\frac{360^{\circ}}{n}\)
θ° = \(\frac{360^{\circ}}{8}\)
θ° = 45°
Length of the arc l = \(\frac{\theta^{\circ}}{360^{\circ}}\) × 2πr units
= \(\frac{45^{\circ}}{360^{\circ}}\) × 2π × 120 m
Length of the arc = 30 × πm

Another method:
l = \(\frac{1}{n}\) × 2πr = \(\frac{1}{8}\) × 2 × π × 120 = 30 π m
Length of the arc = 30 π m

Question 8.
A circle of radius 70 cm is divided into 5 equal sectors. Find the area of each of the sectors.
Answer:
Radius of the sector r = 70 cm
Number of equal sectors = 5
∴ Central angle of each sector = \(\frac{360^{\circ}}{n}\)
θ° = 360°
θ° = 72°
Area of the sector = \(\frac{\theta^{\circ}}{360^{\circ}}\) × πr2 sq.units
= \(\frac{72^{\circ}}{360^{\circ}}\) × π × 70 × 70cm2
Hint:
Samacheer Kalvi 8th Maths Guide Answers Chapter 2 Measurements Ex 2.1 9
= 14 × 70 × πcm2
= 980 πcm2
Note: We can solve this problem using A = \(\frac{1}{n}\) πr2 sq. units also.

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 2 Measurements Ex 2.1

Question 9.
Dhamu fixes a square tile of 30cm on the floor. The tile has a sector design on it as shown in the figure. Find the area of the sector. (π = 3.14).
Samacheer Kalvi 8th Maths Guide Answers Chapter 2 Measurements Ex 2.1 10
Answer:
Side of the square = 30 cm
∴ Radius of the sector design = 30 cm
Given the design of a circular quadrant.
Area of the quadrant = \(\frac{1}{4}\) πr2 sq.units
= \(\frac{1}{4}\) × 3.14 × 30 × 30cm2
= 3.14 × 15 × 15cm2
∴ Area of the sector design = 706.5 cm2 (approximately)

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 2 Measurements Ex 2.1

Question 10.
A circle is formed with 8 equal granite stones as shown in the figure each of radius 56 cm and whose central angle is 45°. Find the area of each of the granite stones. (π = \(\frac { 22 }{ 7 }\))
Samacheer Kalvi 8th Maths Guide Answers Chapter 2 Measurements Ex 2.1 11
Answer:
Number of equal sectors ‘n’ = 8
Radius of the sector ‘r’ = 56 cm
Area of each sector = \(\frac{1}{n}\) πr2 sq. units
= \(\frac{1}{8} \times \frac{22}{7}\) × 56 × 56cm2 =1232 cm2
Area of each sector = 1232 cm2 (approximately)