Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 5.2 தெய்வமணிமாலை Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 5.2 தெய்வமணிமாலை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

Question 1.
தெய்வமணிமாலைப் பாடல் கருத்துகளுக்கு இணையான திருக்குறள்களைத் தொகுத்துத் தருக.
Answer:
புறம்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும் (குறள் – 183)

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது (குறள் – 811)

பொறிவாயில் ஐந்து அவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். (குறள் – 6)

இனையர்இவர் எமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு. (குறள் – 790)

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் (குறள் 3)

அந்தணர் என்போர் அறவோர்மற்(று) எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான் (குறள் 30)

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று (குறள் 297)

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு (குறள் 350)

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்’ – இத்தொடர் உணர்த்தும் பண்பு
அ) நேர்மறைப் பண்பு
ஆ) எதிர்மறைப் பண்பு
இ) முரண்பண்பு
ஈ) இவை அனைத்தும்
Answer:
ஆ) எதிர்மறைப் பண்பு

குறுவினா

Question 1.
‘தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளே’ தொடருக்குப் பதவுரை எழுதுக.
Answer:
அறம் செய்வார் நிறைந்திருக்கும் சென்னையின் கந்தக்கோட்டத்துக் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே!

சிறுவினா

Question 1.
இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டுமெனக் கேட்கிறார்?
Answer:
(i) சென்னை கந்தகோட்டத்துத் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே! குளிர்ந்த முகத்தையுடைய தூய்மையான மாணிக்க மணியே! அருள் நிறைந்த சைவமணியே!

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

(ii) எனக்கு ஒரு நெறிப்பட்ட மனதுடன் உன் மலர் போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும். உள்ளத்தில் ஒன்றும், புறத்தில் ஒன்றும் பேசும் வஞ்சகர் உறவு என்னைப் பற்றாதவாறு காக்க வேண்டும்.

(iii) சிறந்த வாழ்வியல் நெறிகளைப் பின்பற்ற எனக்கு அருள்புரிய வேண்டும். மதமான பேய் என்னை அணுகாதிருக்க வேண்டும். பெண்ணாசையை என் மனம் துறக்க வேண்டும். என்றும் உன்னை மறவாதிருக்க வேண்டும்.

(iv) நின் கருணையாகிய நிதி, நோயற்ற வாழ்வு உடையவனாக இருக்க வேண்டும் என்று கந்தகோட்டத்துக் கந்தவேளிடம் இராமலிங்கர் வேண்டுகிறார்.

நெடுவினா

Question 1.
சென்னையில் உள்ள மயிலாப்பூர், கந்தக்கோட்டப்பகுதிகள் செய்யுளில் எவ்விதம் காட்சிப்படுத்தப் படுகின்றன?
Answer:
மயிலாப்பூர்:
(i) இளம்பெண்கள் ஆரவாரத்தோடு கொண்டாடும் திருவிழாக்கள் நிறைந்த வீதிகளையுடைய பெரிய ஊர் திருமயிலை.

(ii) அங்கு எழுச்சிமிக்க விழாக்கள் நிகழும் மயிலை கபாலீச்சரம் என்னும் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனுக்குப் பூசையிடும் பங்குனி உத்திர ஆரவார விழா அன்று முதல் இன்று வரை சிறப்பாக நடைபெறுகிறது. அவ்விழாவினைக் கண்குளிரக் காண வேண்டும்.

கந்தகோட்டம்:
(i) அறம் செய்வோர்கள் நிறைந்திருக்கும் சென்னையின் கந்தக்கோட்டத்துத் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே! குளிர்ந்த முகத்தோற்றத்தையுடைய தூய மாணிக்க மணியே! மணிகளுள் அருள் நிறைந்த சைவமணியே!

(ii) எனக்கு ஒரு நெறிப்பட்ட மனதுடன் உன்னுடைய மலர் போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்களின் உறவு வேண்டும். உள்ளத்தில் ஒன்றும் புறத்தில் ஒன்றும் பேசும் வஞ்சகரின் உறவு என்னைப் பற்றாதவாறு காக்க வேண்டும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

(iii) உனது புகழைப் பேச வேண்டும்; பொய் பேசாமல் இருக்க வேண்டும். சிறந்த வாழ்வியல் நெறியைப் பின்பற்ற எனக்கு அருள வேண்டும். மதப்பேய் என்னை அணுகாதிருக்க வேண்டும். பெண்ணாசையை என் மனம் மறக்க வேண்டும்.

(iv) நல்ல அறிவும், கருணையாகிய நிதியும் நோயற்ற வாழ்வும் உடையவனாக நான் இருக்க வேண்டும். ஆறுமுகங்கள் உடைய தெய்வமாகிய மணியே இத்தகைய சிறப்புகளை எனக்கு அருள்வாயாக என்று கந்தகோட்டத்தில் பெருமானிடம் வேண்டுகிறார்.

இலக்கணக் குறிப்பு

மலரடி – உவமைத்தொகை
மறவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
வளர்தலம் – வினைத்தொகை

உறுப்பிலக்கணம்

நினைக்கின்ற = நினை + க் + கின்று + அ
நினை – பகுதி
க் – சந்தி
கின்று – நிகழ்கால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி

பேசுவார் = பேசு + வ் + ஆர்
பேசு – பகுதி
வ் – எதிர்கால இடைநிலை
ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி

வைத்து = வை + த் + த் + உ
வை – பகுதி
த் – சந்தி
த் – இறந்தகால இடைநிலை
உ – வினையெச்ச விகுதி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

புணர்ச்சி விதி

1. உள்ளொன்று = உள் + ஒன்று

  • ‘தனிக்குறில் முன் உயிர்வரின் ஒற்று இரட்டும்’ என்ற விதிப்படி, உள்ள + ஒன்று என்றானது.
  • ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி (ள் + ஒ = ளொ) உள்ளொன்று எனப் புணர்ந்தது.

2. ஒருமையுடன் = ஒருமை + உடன்

  • ‘இஈஐ வழி யவ்வும்’ என்ற விதிப்படி, ஒருமை + ய் + உடன் என்றானது.
  • உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ (ய் + உ = யு) ஒருமையுடன் என்று புணர்ந்தது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சென்னையில் வாழ்ந்து வடலூர் சென்று ஆன்மிக மையத்தை ஏற்படுத்தியவர்
அ) வள்ளலார்
ஆ) ஞானியாரடிகள்
இ) கிருபானந்த அடிகள்
ஈ) இவர்களில் எவருமிலர்
Answer:
அ) வள்ளலார்

Question 2.
வள்ளலாரது சிந்தனைகளின் ஊற்றுக்களமாக இருந்தது
அ) வள்ளுவர் கோட்டம்
ஆ) கந்த கோட்டம்
இ) தில்லை கோட்டம்
ஈ) கணபதி கோட்டம்
Answer:
ஆ) கந்த கோட்டம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

Question 3.
ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் சமய ஒருமைப்பாட்டையும் ஒளி வழிபாட்டையும் முன்வைத்த சீர்திருத்தச் சிந்தனை உருவான இடம்
அ) சென்னை
ஆ) வடலூர்
இ) கடலூர்
ஈ) சிதம்பரம்
Answer:
அ) சென்னை

Question 4.
உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார்
உறவுகல வாமை வேண்டும் என்று பாடியவர்
அ) இராமலிங்க அடிகள்
ஆ) ஞானியாரடிகள்
இ) தாயுமானவர்
ஈ) திரு.வி.க.
Answer:
அ) இராமலிங்க அடிகள்

Question 5.
தெய்வமணிமாலையின் பாவகை
அ) கலி விருத்தம்
ஆ) எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
இ) அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
ஈ) பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Answer:
ஈ) பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

Question 6.
துறவுக்கு எதிரான ஆசை என்று வள்ளலார் குறிப்பிடுவது.
அ) மண்ணாசை
ஆ) பெண்ணாசை
இ) பொன்னாசை
ஈ) புகழாசை
Answer:
ஆ) பெண்ணாசை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

Question 7.
பொருத்திக் காட்டுக.
அ) மலரடி – 1. பெயரெச்சம்
ஆ) மறவா – 2. வினையெச்சம்
இ) வளர்தலம் – 3. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஈ) நினைக்கின்ற – 4. வினைத்தொகை
உ) வைத்து – 5. உவமைத்தொகை

அ) 5, 3, 4, 1, 2
ஆ) 4, 3, 5, 2, 1
இ) 2, 1, 3, 5, 4
ஈ) 5, 2, 1, 3, 4
Answer:
அ) 5, 3, 4, 1, 2

Question 8.
இராமலிங்க அடிகள் இயற்றிய திருவருட்பாவில் ……………. திருமுறையில் இடம்பெற்றுள்ளது தெய்வமணிமாலை.
அ) மூன்றாம்
ஆ) நான்காம்
இ) ஐந்தாம்
ஈ) ஆறாம்
Answer:
இ) ஐந்தாம்

Question 9.
இராமலிங்க அடிகள் பிறந்த ஊர்
அ) சிதம்பரத்தை அடுத்த மருதூர்
ஆ) கடலூரை அடுத்த வடலூர்
இ) தஞ்சையை அடுத்த வல்லம்
ஈ) மயிலாடுதுறையை அடுத்த தேரழந்தூர்
Answer:
அ) சிதம்பரத்தை அடுத்த மருதூர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

Question 10.
திருவருட்பா ………….. திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.
அ) நான்கு
ஆ) ஆறு
இ) பன்னிரு
ஈ) பதினாறு
Answer:
இ) பன்னிரு

Question 11.
மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் உரைநடை நூல்களின் ஆசிரியர்
அ) குமரகுருபரர்
ஆ) இராமலிங்க அடிகள்
இ) தாயுமானவர்
ஈ) திரு.வி.க.
Answer:
ஆ) இராமலிங்க அடிகள்

குறுவினா

Question 1.
இராமலிங்க அடிகளார் எழுதிய உரைநடை நூல்கள் யாவை?
Answer:
மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம்.

Question 2.
இராமலிங்க அடிகளாரின் சீர்த்திருத்த சிந்தனை யாவை?
Answer:
ஆன்ம நேயம், சமய ஒருமைப்பாடு, ஒளி வழிபாடு.

Question 3.
இராமலிங்க அடிகளார் திருவருட்பா மூலம் வெளிப்படுத்தும் செய்தி யாது?
Answer:

  • வாடிய பயிரைக் கண்டபோது வாடினேன்.
  • ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் தன்மையுடையன.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.2 தெய்வமணிமாலை

Question 4.
வள்ளலார் தெய்வமணிமாலை எங்கு வீற்றிருக்கும் இறைவன் மீது பாடியுள்ளாா?
Answer:
சென்னை கந்தகோட்டத்து முருகப்பெருமான் மீது பாடியுள்ளார்.

Question 5.
திருவருட்பா – குறிப்பு வரைக.
Answer:

  • திருவருட்பா என்பது வள்ளலார் பாடிய பாடல்களின் தொகுப்பு.
  • திருவருட்பா – 5818 பாடல்கள்.
  • பா – ஆசிரியவிருத்தம்.
  • தொகுப்பு – ஆறு திருமுறை.
  • பாடப்பகுதி – ஐந்தாம் திருமுறை – தெய்வமணிமாலை.

சிறுவினா

Question 1.
வள்ளலார் – குறிப்பு வரைக.
Answer:
பெயர் – இராமலிங்க அடிகளார்
பெற்றோர் – இராமையா – சின்னமை
உடன்பிறந்தோர் – சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை சுந்தராம்பாள்
பிறப்பு – அக்டோபர் 5, 1823
ஊர் – மருதூர் – சிதம்பரம்
சிறப்பு – ஆன்மீகவாதி, சத்திய ஞான சபையை நிறுவியவர்.
முழக்கம் – அருட்பெருஞ்ஜோதி-தனிபெருங்கருணை வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்.
நூல்கள் – மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 5.1 மதராசப்பட்டினம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 5.1 மதராசப்பட்டினம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 1.
ஒரு திட்டமிட்ட பெருநகரம் உருவாவதற்கு நீவிர் தரும் பரிந்துரைகளை, ‘கனவு நகரம்’ என்னும் தலைப்பில் ஒப்படைவாக உருவாக்குக.
Answer:
கனவு நகரம்

(i) தமிழகத்தின் திருச்சியை இரண்டாவது தலைநகரமாக மாற்றுவது. இதற்காக நாவல்பட்டு கிராமம் ஒன்றையும் உருவாக்கினர். ஆனால் அந்தக் கனவு திட்டம் இன்று காலாவதியாகிவிட்டது. அத்திட்டத்தைப் பரிந்துரை செய்து நிறைவேற்றுவதே என் கனவு.

(ii) திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்றி நாவல்பட்டு கிராமத்தில் 1000 ஏக்கரில் அண்ணா நகர் பகுதியைத் துணை நகரம் என்ற பெயரில் உருவாக்கினோம். பத்தாயிரம் குடும்பங்கள் வாழ்வதற்கு வசதி செய்யப்பட்டு அகலமான சாலைகள், ஆரம்ப சுகாதார திட்டம் உள்ளிட்ட பசுமை தொழிற்சாலைகள், தரமான கல்வி நிலையங்களின் பாதாள சாக்கடைகள் அமைக்க வேண்டும்.

(iii) பாதாள சாக்கடை நீரைச் சுத்தம் செய்ய தனி இயந்திரம், இயற்கை வேளாண் அங்காடி, குளிரூட்டப்பட்ட நூலகம் சிறாருக்கான தனி நூலகம் எனத் தனி தனியாக நூலகங்கள் அமைக்க வேண்டும்.

(iv) நெகிழி இல்லாத நகரமாகவும் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத நகரமாகவும் உருவாக்க வேண்டும்.
(v) வீட்டுக்கு ஒரு மரம் கண்டிப்பாக வளர்க்க வேண்டும் என்று சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
(vi) தடையற்ற மின்சாரம், தூய்மையான குடிநீர்; பாதுகாப்பு வசதி போன்ற வசதிகள் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்வேன்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
சென்னை வெறும் நகரம் மட்டுமல்ல. அது நம்பிக்கை மையம். காரணம் –
அ) நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளின் களம்
ஆ) மென்பொருள், வன்பொருள் வாகன உற்பத்தியில் பங்கு
இ) மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலை
ஈ) அ, ஆ, இ அனைத்தும்
Answer:
ஈ) அ, ஆ, இ அனைத்தும்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 2.
கூற்று: இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.
காரணம்: கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்ததாகவோ இருந்தது.

அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று தவறு, காரணம் தவறு
ஈ) கூற்று சரி காரணம் சரி
Answer:
ஈ) கூற்று சரி காரணம் சரி

Question 3.
பொருத்துக.
அ) திருவல்லிக்கேணி ஆறு – 1. மாவலிபுரச் செலவு
ஆ) பக்கிங்காம் கால்வாய் – 2. கல்கோடரி
இ) பல்லாவரம் – 3. அருங்காட்சியகம்
ஈ) எழும்பூர் – 4. கூவம்

அ) 1, 2, 4, 3
ஆ) 4, 2, 1, 3
இ) 4, 1, 2, 3
ஈ) 2, 4, 3, 1
Answer:
இ) 4, 1, 2, 3

குறுவினா

Question 1.
கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் குறித்து எழுதுக.
Answer:

  • காலின் மெக்கன்சியின் தொகுப்புகளைக் கொண்டு 1869இல் உருவாக்கப்பட்ட நூலகம்.
  • ஓலைச்சுவடிகள், தாள்சுவடிகள், புத்தகங்கள் எனப் பெரும் தொகுப்புகள் காணப்படுகிறது.

சிறுவினா

Question 1.
சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில் இன்றும் நிலைத்து இருப்பனவற்றைக் குறிப்பிடுக.
Answer:

  • சென்னை நகரின் ஒவ்வொரு பகுதிக்கும் வரலாறு உண்டு.
  • அந்தப் பண்பாட்டு அடையாளங்களை எண்ணிக்கையில் அடக்குதல் மிகக் கடினம்.
  • இந்திய சாரசனிக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்ட கட்டடங்கள் இன்று சென்னையின் பழமையைப் பறைசாற்றுகின்றன.
  • ஆவணங்களை முறையாகக் கையாளும் ஆவணக் காப்பகம் (மெட்ராஸ் ரெக்காட் ஆபிஸ்) சாரசனிக் கட்டட முறையில் அமைந்தது.
  • தென்னிந்திய வரலாற்றை, பண்பாட்டை அறிவதற்கு எழும்பூர் அருங்காட்சியகம், கோட்டை அருங்காட்சியகம் துணை நிற்கின்றன.
  • இந்தியாவின் பொதுநூலகம் கன்னிமாரா நூலகம் நவீனமாக வளர்ந்து வரும் பெரிய நூலகம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

நெடுவினா

Question 1.
‘ஒவ்வொரு நகரத்துக்கும் வரலாறும் வடிவழகும்’ நீங்கள் பார்த்த அல்லது வாழ்ந்த ஒரு நகரம் குறித்து இரு பக்க அளவில் கட்டுரை எழுதுக.
Answer:
முன்னுரை :
ஒவ்வொரு நகரத்துக்கும் வரலாறும் வடிவழகும் உண்டு என்பதில் நான் பார்த்து வளர்ந்த சென்னை நகரத்தைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சென்னை :
தென்னிந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படும் சென்னை இன்று தமிழகதெங்கும் பரவி வாழும் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம். சென்னை இந்தியாவின் முதன்மை நகரங்களுள் ஒன்று மற்றும் தமிழகத்தின் தலைநகரம். சென்னை என்று அழைக்கப்படும் பகுதியும் அதன் சுற்றுப்பகுதிகளும் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே வாழ்ந்ததற்கான தடயங்களைக் கொண்டுள்ளன.

மானுட எச்சம் :
பல்லாவரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்கோடரி இந்திய அகழ்வாய்வுத்துறை வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. கூடுவாஞ்சேரி, பல்லாவரம், புழல் போன்ற பகுதிகளில் இன்று கிடைக்கும் மானுட எச்சங்கள் நமது பழமையை உணர்த்துகின்றன. இன்று சென்னையின் ஒரு பகுதியாக விளங்கும் மயிலாப்பூர் 2ஆம் நூற்றாண்டில் தாலமி என்பவரால் ‘மல்லியர்பா’ எனும் துறைமுகமாகச் சுட்டப்பட்டுள்ளது.

பாடல் பெற்ற தலம் :
திருவொற்றியூர், திருவான்மியூர், மயிலாப்பூர் ஆகியவற்றில் உள்ள கோயில்கள் பாடல் பெற்ற, ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தலமாக உள்ளன.

நீர்நிலை – வடிகால் :
வடசென்னைக்குக் கொற்றலையாறு, மத்திய சென்னைக்குக் கூவம், தென் சென்னைக்கு அடையாறு கீழே பாலாறு இவை நான்கும் இணைக்கும் பக்கிங்காம் கால்வாய், காட்டன் கால்வாய் இருந்தன. 18 பெரிய ஓடைகள், 540க்கும் மேற்பட்ட சிறிய ஓடைகள் என இயற்கையாய் வடிகால் : பெற்றிருந்தது. ஆனால் அவை எங்கு போயின என்று தெரியவில்லை.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

நகரம் – உருவாக்கம் :
செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே உள்ள வீடுகள் இருந்த பகுதி வெள்ளை நகரம்’ என்றும் வெளியே இருந்த குடியிருப்பு ‘கருப்பர் நகரம்’ என்றும் அழைக்கப்பட்டது. கிழக்கிந்திய நிறுவனம் பெரும்பாலும் வணிகத்தையே செய்தது. இதனால் நெசவாளர்கள் சென்னையை நோக்கி வந்தனர். அவர்கள் வாழ்ந்த பகுதிதான் வண்ணத்துக்காரன் பேட்டை என்பது வண்ணாரப்பேட்டை என்றும் சின்னதறிப்பேட்டை சிந்தாதரிப் பேட்டை என்றும் தோன்றியது. வடசென்னையை மதராசப்பட்டினம் என்றும் தென்சென்னையை சென்னைப்பட்டினம் என்றனர். ஆங்கிலேயர் இரண்டையும் இணைத்து மதராஸ் என்று அழைத்தனர். அது இன்று சென்னையாக உள்ளது. ஆங்கிலேயரின் அதிகார மையமான இந்நகரம் ஆங்கிலேயரை எதிர்க்க முதல் தளமாக அமைந்த நகரமாக விளங்கியது.

கல்லூரிகள் – பள்ளிகள் :

  • 1715இல் உருவான புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி’.
  • 1812இல் உருவான சென்னைக் கோட்டைக் கல்லூரி.
  • 1837இல் உருவான கிறிஸ்துவக் கல்லூரி.
  • 1840இல் பிரசிடென்சி பள்ளி (மாநிலக் கல்லூரி).
  • 1857இல் சென்னைப் பல்கலைக்கழகம்.
  • 1914இல் உருவான இராணிமேரிக் கல்லூரி.

போன்ற கல்லூரி பழமை வாய்ந்து அறிவின் நகரமாக விளங்குகிறது.

பண்பாட்டு அடையாளங்கள் :
சென்னையின் ஒவ்வொரு பகுதிக்கும் வரலாறு உண்டு. பண்பாட்டு அடையாளங்களை எண்ணிக்கையில் அடக்குவது கடினம். இந்திய சாரசனிக் கட்டடக்கலை இன்றும் சென்னையின் பழமையைப் பறைசாற்றுகின்றது. அந்த வகையில் உருவாக்கப்பட்ட கட்டடங்களாகத் தமிழ்நாடு ஆவணக் காப்பகம், எழும்பூர் அருங்காட்சியகம், கோட்டை அருங்காட்சியகம், கன்னிமாரா நூலகம் போன்றவை விளங்குகின்றன.

நம் சென்னை (இன்றைய சென்னை:
இன்று சென்னை வெறும் நகரம் மட்டுமல்ல. அது நம்பிக்கை மையம். சென்னையை மையமிட்டு தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் ஏற்படுத்தி நேரடி, மறைமுக வாய்ப்புகள் உருவாகின்றன. கணினி மென்பொருள், வன்பொருள், வாகன உற்பத்தியில் இன்று சென்னை: முதலிடம் வகிக்கிறது. இந்திய அளவில் மென்பொருள் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது. : மின்னணுப் பொருள்கள் உருவாக்கும் மையமாகவும் திகழ்கிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

முடிவுரை:
இத்தகு பெருமைகொண்ட சென்னை நகரம் நான் பார்த்து வாழ்ந்த காலகட்டத்தில் :(203) பெருமைகொண்ட பழமையைப் பறைசாற்றும் நகரமாக விளங்குகிறது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு அடித்தளமாகவும் அதிகார மையமாகவும் விளங்கிய கடற்கரை நகரம்
அ) மதராசப்பட்டினம்
ஆ) காவிரிபூம்பட்டினம்
இ) புதுச்சேரி
ஈ) கொற்கை
Answer:
அ) மதராசப்பட்டினம்

Question 2.
தென்னிந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படுவது
அ) திருப்பதி
ஆ) சென்னை
இ) திருவனந்தபுரம்
ஈ) கன்னியாகுமரி
Answer:
ஆ) சென்னை

Question 3.
தமிழகத்தின் தலைநகரம்
அ) மதுரை
ஆ) கோயம்புத்தூர்
இ) திருச்சி
ஈ) சென்னை
Answer:
ஈ) சென்னை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 4.
சென்னைக்கு அருகேயுள்ள குடியம், அத்திரம்பாக்கம் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுப் பணி நிறுவுவது
அ) அப்பகுதியின் மனித நாகரிகத்தின் பழமையை ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பதை
ஆ) அப்பகுதியின் மனித நாகரிகத்தின் பழமையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பதை
இ) அப்பகுதிகளில் மனித வாழ்வு நடைபெறவில்லை என்பதை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) அப்பகுதியின் மனித நாகரிகத்தின் பழமையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பதை

Question 5.
சென்னையில் ஓடக்கூடிய ………….. படுகை மனித நாகரிகத்தின் முதன்மையான களங்களில் ஒன்று எனலாம்.
அ) அடையாற்றுப்
ஆ) பாலாற்றுப்
இ) கூவமாற்றுப்
ஈ) கொற்றலையாற்றுப்
Answer:
ஈ) கொற்றலையாற்றுப்

Question 6.
இந்திய அகழாய்வுத்துறை வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய கல்கோடரி கண்டுபிடிக்கப்பட்ட இடம்
அ) கூடுவாஞ்சேரி
ஆ) பல்லாவரம்
இ) புழல்
ஈ) மயிலாப்பூர்
Answer:
ஆ) பல்லாவரம்

Question 7.
கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தாலமி என்பவரால் ‘மல்லியர்பா’ என்னும் துறைமுகமாகச் சுட்டப்படும் சென்னையின் இன்றைய ஒரு பகுதி
அ) திருவல்லிக்கேணி
ஆ) மீனம்பாக்கம்
இ) மயிலாப்பூர்
ஈ) வடபழனி
Answer:
இ) மயிலாப்பூர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 8.
பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை …………… காலத்தில் அமைக்கப்பட்டது.
அ) முதலாம் மகேந்திரவர்மன்
ஆ) முதலாம் நரசிம்மவர்மன்
இ) முதலாம் நந்திவர்மன்
ஈ) மூன்றாம் நந்திர்வமன்
Answer:
அ) முதலாம் மகேந்திரவர்மன்

Question 9.
சென்னையில் கிடைத்தவற்றுள் மிகப் பழமையான கல்வெட்டு
அ) பல்லாவரம் கல்வெட்டு
ஆ) திருவல்லிக்கேணி கல்வெட்டு
இ) மயிலாப்பூர் கல்வெட்டு
ஈ) மாதவரம் கல்வெட்டு
Answer:
அ) பல்லாவரம் கல்வெட்டு

Question 10.
சென்னையில் நந்திவர்மன் கல்வெட்டு கிடைக்கப்பெற்றுள்ள இடம்
அ) பல்லாவரம்
ஆ) மாதவரம்
இ) திருவல்லிக்கேணி
ஈ) வடபழனி
Answer:
இ) திருவல்லிக்கேணி

Question 11.
வள்ளல் பச்சையப்பர் ……….. நதிக்கரையில் குளித்துவிட்டு அருகில் உள்ள கோவிலில் வழிபட்டதாக ஒரு குறிப்பு, அவரது நாட்குறிப்பில் உள்ளது.
அ) கூவம்
ஆ) அடையாறு
இ) கொற்றலையாற்று
ஈ) பாலாற்று
Answer:
அ) கூவம்

Question 12.
பக்கிங்காம் கால்வாயில் மயிலை சீனி. வேங்கடசாமி, ப. ஜீவானந்தம் உள்ளிட்ட நண்பர்களுடன் படகுப் பயணம் செய்தவர்
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கண்ண தாசன்
ஈ) காமராசர்
Answer:
ஆ) பாரதிதாசன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 13.
சென்னையிலே ஒருவாய்க்கால் புதுச்
சேரி நகர் வரை நீளும் – என்று ‘மாவலிபுரச் செலவு’ எனும் தலைப்பில் கவிதையாக்கியவர்
அ) மயிலை சீனி. வேங்கடசாமி
ஆ) ப. ஜீவானந்தம்
இ) கண்ண தாசன்
ஈ) பாரதிதாசன்
Answer:
ஈ) பாரதிதாசன்

Question 14.
கி.பி. 1647இல் எழுதப்பட்ட பத்திரம் ஒன்றில் ”தொண்டமண்டலத்துப் புழல் கோட்டத்து ஞாயிறு நாட்டுச் சென்னப்பட்டினம்’ என்று காணப்படும் குறிப்பால் அறியப்படும் செய்தி
அ) குப்பம் நகரமாக மாற்றம் பெற்ற வரலாறு
ஆ) வளமிகு சென்னையின் வணிக மேம்பாடு
இ) சென்னை மக்களின் செல்வ வாழ்க்கை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) குப்பம் நகரமாக மாற்றம் பெற்ற வரலாறு

Question 15.
மயிலாப்பூருக்கு வடக்கே சில குப்பங்கள் மட்டுமே இருந்த மணல்வெளியை ஆங்கிலேயர் குடியேற்றத்துக்கான இடமாகத் தேர்ந்தெடுத்தவர்
அ) பிரான்சிஸ் டே
ஆ) கால்பர்ட்
இ) இராபர்ட் கிளைவ்
ஈ) தாமஸ் பிட்
Answer:
அ) பிரான்சிஸ் டே

Question 16.
கூவம் ஆற்றை …………… என்றும் அழைத்தனர்.
அ) வடபழனி ஆறு
ஆ) திருவல்லிக்கேணி ஆறு
இ) மாதவரம் ஆறு
ஈ) பல்லாவரம் ஆறு
Answer:
ஆ) திருவல்லிக்கேணி ஆறு

Question 17.
பொருத்திக் காட்டுக.
அ) வடசென்னை – 1. பாலாறு
ஆ) தென்சென்னை – 2. கூவம்
இ) மத்திய சென்னை – 3. அடையாறு
ஈ) தென்சென்னைக்கும் கீழ் – 4. கொற்றலையாறு

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 2, 1, 4
இ) 1, 4, 3, 2
ஈ) 4, 1, 2, 3
Answer:
அ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 18.
பிரான்சிஸ் டே மயிலாப்பூருக்கு வடக்கே சில குப்பங்கள் மட்டுமே இருந்த மணல்வெளியைச் சென்னப்பரின் இருமகன்களிடமிருந்து வாங்கிய நாள்
அ) 22.08.1639
ஆ) 23.09.1739
இ) 23.08.1640
ஈ) 24.10.1642
Answer:
அ) 22.08.1639

Question 19.
செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே இருந்த பகுதி …………….. என்று அழைக்கப்பட்டது.
அ) வெள்ளையர் நகரம்
ஆ) கோட்டைநகரம்
இ) தமிழர் நகரம்
ஈ) கருப்பர் நகரம்
Answer:
அ) வெள்ளையர் நகரம்

Question 20.
செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியாளர்கள், வணிகர்கள் போன்றோருக்காக வெளியே அமைத்தகுடியிருப்புகள்…………..என அழைக்கப்பட்டது.
அ) வெள்ளையர் நகரம்
ஆ) கருப்பர் நகரம்
இ) கோட்டை நகரம்
ஈ) தமிழர் நகரம்
Answer:
அ) வெள்ளையர் நகரம்

Question 21.
பொருத்திக் காட்டுக.
அ) வடசென்னைப் பகுதிகள் – 1. மதராஸ்
ஆ) தென்சென்னைப் பகுதிகள் – 2. மதராசப்பட்டினம்
இ) ஆங்கிலேயர்கள் – 3. சென்னைப்பட்டினம்

அ) 2, 3, 1
ஆ) 2, 1, 3
இ) 1, 2, 3
ஈ) 3, 2, 1
Answer:
அ) 2, 3, 1

Question 22.
1646ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி சென்னைநகரின் மக்கள் தொகை
அ) 18,000
ஆ) 25,000
இ) 19,000
ஈ) 29,000
Answer:
இ) 19,000

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 23.
சென்னை நகராட்சி உருவாக்கபப்ட்ட ஆண்டு
அ) 1639
ஆ) 1646
இ) 1688
ஈ) 1768
Answer:
இ) 1688

Question 24.
ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதல் தலைவர்
அ) பிரான்சிஸ் டே
ஆ) எலி யேல்
இ) தாமஸ் பிட்
ஈ) தானியேல்
Answer:
ஆ) எலி யேல்

Question 25.
எலியேலைத் தொடர்ந்து சென்னை மாகாணத்தின் தலைவரானவர்
அ) பிரான்சிஸ் டே
ஆ) தாமஸ் பிட்
இ) இராபர்ட் கிளைவ்
ஈ) தாமஸ் மன்ரோ
Answer:
ஆ) தாமஸ் பிட்

Question 26.
……………… ஆட்சிக்காலத்தைச் சென்னையின் பொற்காலம் என்பர்.
அ) பிரான்சிஸ் டே
ஆ) எலி யேல்
இ) தாமஸ் பிட்
ஈ) இராபர்ட் கிளைவ்
Answer:
இ) தாமஸ் பிட்

Question 27.
சென்னையில் ஐரோப்பிய முறைக் கல்வி கற்பிக்கும் நிறுவனங்கள் தோன்றிய நூற்றாண்டு
அ) கி.பி. 17
ஆ) கி.பி. 16
இ) கி.பி. 18
ஈ) கி.பி. 19
Answer:
இ) கி.பி. 18

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 28.
ஆசியாவில் உருவான முதல் ஐரோப்பியக் கல்வி முறையிலான புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
அ) 1615
ஆ) 1635
இ) 1675
ஈ) 1715
Answer:
ஈ) 1715

Question 29.
பொருத்திக் காட்டுக.
அ) சென்னைக் கோட்டைக் கல்லூரி – 1) 1914
ஆ) கிறித்தவக் கல்லூரி – 2) 1857
இ) பிரசிடென்சி கல்லூரி – 3) 1840
ஈ) சென்னைப் பல்கலைக்கழகம் – 4) 1837
உ) இராணிமேரி கல்லூரி – 5) 1912

அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 3, 1
இ ) 2, 3, 1, 5, 4
ஈ) 2, 3, 4, 1, 5
Answer:
அ) 5, 4, 3, 2, 1

Question 30.
ஆங்கிலேயரின் நிதி உதவியின்றி இந்தியர் ஒருவரால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம்
அ) இராணிமேரிக் கல்லூரி
ஆ) பச்சையப்பன் கல்லூரி
இ) சென்னைக் கோட்டைக் கல்லூரி
ஈ) கிறித்துவக்கல்லூரி
Answer:
ஆ) பச்சையப்பன் கல்லூரி

Question 31.
இந்தோ -சாரசனிக் கட்டடப் பாணியில் 1768இல் கட்டி முடிக்கப்பட்ட முதல் கட்டடம்
அ) சேப்பாக்கம் அரண்மனை
ஆ) சென்னைப்பல்கலைக்கழகம்
இ) ரிப்பன் கட்டடம்
ஈ) விக்டோரியா அரங்கு
Answer:
அ) சேப்பாக்கம் அரண்மனை

Question 32.
இந்தியாவின் முதல் பொதுநூலகம்
அ) சரசுவதிமகால் நூலகம்
ஆ) கொல்கத்தா நூலகம்
இ) கன்னிமாரா நூலகம்
ஈ) திருவனந்தபுரம் நூலகம்
Answer:
இ) கன்னிமாரா நூலகம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 33.
அண்ணாசாலைக்கு (மவுண்ட் ரோடு) அடுத்ததாக மதராசப்பட்டினத்தின் மற்றொரு முக்கியமான சாலை ………………. நெடுஞ்சாலையாகும்.
அ) பூவிருந்தவல்லி
ஆ) திருவொற்றியூர்
இ) சிந்தாதிரிப்பேட்டை
ஈ) மவுலிவாக்கம்
Answer:
அ) பூவிருந்தவல்லி

Question 34.
1856இல் தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் அமைக்கப்பட்ட இடம்
அ) எழும்பூர்
ஆ) கிண்டி
இ) இராயபுரம்
ஈ) திருவான்மியூர்
Answer:
இ) இராயபுரம்

Question 35.
ஆங்கிலேயருக்கும் சென்னை மாநகருக்கும் ஏறத்தாழ 300 ஆண்டுகாலமாக இருந்த உறவு முடிவுக்கு வந்த நாள்
அ) 1942 அக்டோபர் 2
ஆ) 1945 ஜூன் 15
இ) 1947 ஆகஸ்ட் 15
ஈ) 1950 ஜனவரி 26
Answer:
இ) 1947 ஆகஸ்ட் 15

Question 36.
பொருத்திக் காட்டுக.
அ) சென்னை இலக்கியச் சங்கம் – 1) 1869
ஆ) கன்னிமாரா நூலகம் – 2) 1812
இ) கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் – 3) 1860
ஈ) அண்ணா நூற்றாண்டு நூலகம் – 4) 2010

அ) 2, 3, 1, 4
ஆ) 2, 1, 4, 3
இ) 1, 2, 3, 4
ஈ) 3, 1, 4, 2
Answer:
அ) 2, 3, 1, 4

Question 37.
காலின் மெக்கன்சியின் தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நூலகம்
அ) கன்னிமாரா நூலகம்
ஆ) சரசுவதி மகால் நூலகம்
இ) கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்
ஈ) சென்னை இலக்கியச் சங்கம்
Answer:
இ) கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 38.
ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகம்
அ) கன்னிமாரா நூலகம்
ஆ) திருவனந்தபுரம் நூலகம்
இ) சரசுவதிமகால் நூலகம்
ஈ) அண்ணாநூற்றாண்டு நூலகம்
Answer:
ஈ) அண்ணாநூற்றாண்டு நூலகம்

குறுவினா

Question 1.
சென்னை நகராட்சி, மாகாணம் உருவான அமைப்பை விளக்குக.
Answer:
நகராட்சி : 1646ஆம் ஆண்டின் நகரின் மக்கள் தொகை 19000. இதை அறிந்து 1688இல் நகராட்சி உருவாக்கப்பட்டது.

மாகாணம் :

  • ஆங்கிலேயர் ஆட்சி செய்வதற்கு வசதியாக தென்னிந்தியாவில் பல பகுதிகளை உள்ளடக்கிச் சென்னை மாகாணத்தை உருவாக்கினர்.
  • தலைவர் – எலி யேல் அவரைத் தொடர்ந்து தாமஸ் பிட். இவரது ஆட்சிக்காலம் சென்னையின் பொற்காலம் என்பர்.

Question 2.
மல்லியர்பா – விளக்குக.
Answer:
தொல் பழங்கால மானுட எச்சங்களை உணர்த்தும் பழமையான சென்னையின் ஒரு பகுதியாக விளங்கும் மயிலாப்பூர் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தாலமி என்பவரால் ‘மல்லியர்பா’ எனும் துறைமுகமாகச் சூட்டப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 3.
சென்னை – ஓர் காட்டுமரம் விளக்குக.
Answer:
(i) இந்தியாவில் மூன்று நூற்றாண்டுகளாக ஆங்கிலேயரின் ஆட்சிக்கு அடித்தளமாகவும், அதிகார மையமாகவும் விளங்கிய கடற்கரை நகரம் மதராசப்பட்டினம்.

(ii) அது இன்று பரப்பரப்பானசென்னைமாநகரமாக வளர்ந்திருக்கிறது. திட்டமிட்டு உருவாக்கப்படாத இந்நகரம் காட்டுமரம் போல் தன் மனம் போன போக்கில் வளர்கிறது.

(iii) அதனால் சென்னை ஓர் காட்டுமரம் என்பது சாலப் பொருந்தும்.

Question 4.
சென்னை நகரின் பழமையான கோயில்களை குறிப்பிடுக.
Answer:
திருவொற்றியூர், திருமுல்லைவாயில், திருவான்மியூர், மயிலாப்பூர் இவை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாடல் பெற்ற தளங்கள் ஆகும்.

Question 5.
சென்னை என்ற பெயர் வளர்ச்சி பெற்றதனை விளக்குக.
Answer:

  • வடசென்னைப் பகுதியை மதராசப்பட்டினம் என்றும், தென்சென்னைப் பகுதியை சென்னைப்பட்டினம் என்றும் அமைத்தனர்.
  • ஆங்கிலேயர் இரண்டையும் இணைத்து மதராஸ் என்று பெயர் சூட்டினர்.
  • மதராஸ் பின்பு மெட்ராஸ் ஆகியது.
  • இன்று சென்னை என்று பெருமையோடு விளங்குகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 6.
மெட்ராஸ் ரெக்காட் ஆபீஸ் – குறிப்பு வரைக.
Answer:
ஆவணங்களை முறையாகக் கையாளும் பழக்கம் கொண்ட ஆங்கிலேயர்களால் உருவாக்கப் பட்டது. சாரசனிக் கட்டட முறையில் அமைந்தது. இன்று தமிழ்நாடு ஆவணக் காப்பகம் என்று அழைக்கப்படுகிறது.

Question 7.
சென்னைக்கு இயற்கை கொடுத்த வடிகால்கள் சிலவற்றைக் கூறுக.
Answer:

  • வடசென்னை – கொற்றலையாறு, தென்சென்னை, அடையாறு.
  • மத்திய சென்னை – கூவம், பாலாறு.

இவை நான்கையும் இணைப்பது, பக்கிங்காம் கால்வாய்.

Question 8.
சென்னை நகரில் காணப்படும் சில கால்வாய்களைக் கூறுக.
Answer:
காட்டன் கால்வாய், பக்கிங்காம் கால்வாய், விருகம்பாக் கால்வாய்.

Question 9.
சென்னையில் அக்காலத்தில் வடிகால்களாக எத்தனை பெரிய ஓடைகள், சிறிய ஓடைகள் காணப்பட்டன?
Answer:

  • 18 பெரிய ஓடைகள், 540 சிறிய ஓடைகள்.
  • மழைநீர் சிறிய ஓடைகள் வழியாக பெரிய ஓடைகளை அடைந்து பிறகு ஆறுடன் சேர்ந்து கடலில் கலக்கிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 10.
பாரதிதாசன் பக்கிங்காம்கால்வாயில் படகுப் பயணம் செய்தவர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறார்?
Answer:
மயிலை சீனி. வேங்கடாசாமி, ப. ஜீவானந்தம்

Question 11.
கூவம் நதியில் குளித்துவிட்டு கோயிலில் வழிபட்டவர் யார்?
Answer:
வள்ளல் பச்சையப்பர் கூவம் நதியில் குளித்துவிட்டு அருகில் உள்ள கோயிலில் வழிபட்டவர் ஆவார்.

Question 12.
சென்னையில் கிழக்கிந்திய நிறுவனம் கால்பதிப்பதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்னர் புகழ்பெற்றிருந்த கிராமங்கள் யாவை?
Answer:
சேத்துப்பட்டு (சேற்றுப்பட்டு), நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, மாதவரம், கோயம்பேடு, தாம்பரம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 13.
செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதி, வெளியே குடியிருப்புகள் உள்ள பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?
Answer:

  • வெள்ளையர் நகரம் = உள்ளே வீடுகள் இருந்த பகுதி.
  • கருப்பர் நகரம் = வெளியே குடியிருப்புகள் இருந்த பகுதி.

Question 14.
மதராசப்பட்டினம் என்று அழைக்கப்படும் பகுதி எது?
Answer:
உள்ளே வீடுகள் இருந்த பகுதி வெள்ளையர் நகரமும், வெளியே உள்ள குடியிருப்பு பகுதி கருப்பர் நகரமும் இணைந்த பகுதி. மதராசப்பட்டினம் என்று அழைப்பர்.

Question 15.
கிழக்கிந்திய கம்பெனி முதன்முதலாக சென்னையில் செய்த வணிகம் யாது?
Answer:
கிழக்கிந்திய கம்பெனி முதன்முதலாக சென்னையில் செய்த வணிகம் துணி வணிகம் ஆகும்.

சிறுவினா

Question 1.
சென்னை தொன்மைய வாய்ந்த நகரம் என்பதுற்குச் சான்று தருக.
Answer:
(i) சென்னைக்கு அருகேயுள்ள குடியம், அத்திரம்பாக்கம் போன்ற பகுதியில் மேற்கொண்ட அகழாய்வு. கொற்றலையாற்றுப் படுகை. பல்லாவரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்கோடரி.

(ii) கூடுவாஞ்சேரி, பல்லாவரம், புழல் போன்ற பகுதிகளில் இன்னும் கிடைக்கும் மானுட எச்சம்.

(iii) மயிலாப்பூர் 2ஆம் நூற்றாண்டில் தாலமி என்பவரால் மல்லியர்பா எனும் துறைமுகமாகச் சுட்டப்பட்டது. திருநெல்வேலிக்கேணியில் கிடைத்த நந்திவர்மன் கல்வெட்டு
போன்றவை சென்னையின் தொன்மையை விளக்கும் சான்றாக அமைகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 2.
சென்னை அறிவின் நகரம் என்பதற்குச் சான்று தருக.
Answer:

  • 18ஆம் நூற்றாண்டிலேயே ஐரோப்பிய முறைக் கல்வி கற்பிக்கும் நிறுவனம் தோன்றின.
  • 1715இல் புனித மேரி தேவாலய தர்மப்பள்ளி
  • 1812 சென்னைக் கோட்டைக் கல்லூரி
  • 1840 மாநிலக் கல்லூரி (பிரசிடென்சி கல்லூரி)
  • 1857 சென்னைப் பல்கலைக்கழகம்
  • 1914 இராணிமேரி கல்லூரி

இவை மட்டுமல்லாமல் ஆங்கிலேயரின் உதவியின்றி இந்தியர் ஒருவரால் உருவாக்கப்பட்ட கல்லூரியாக பச்சையப்பன் கல்லூரி விளங்குகிறது. மருத்துவக் கல்லூரி, கவின்கலைக் கல்லூரி போன்ற பல்துறை சார்ந்த கல்லூரிகள் இங்குள்ளன.

Question 3.
இந்தோ -சாரசனிக் கட்டடக்கலை – விளக்குக.
Answer:
முகலாயக் கட்டடக்கலை, பிரித்தானியக் கட்டடக்கலை, இந்தியப் பாரம்பரிய பாணி. இவை மூன்றையும் கலந்து உருவாக்கப்பட்ட கட்டடக்கலை.
சான்று:

  • 1768இல் உருவான சேப்பாக்கம் அரண்மனை
  • மத்தியத் தொடர்வண்டி நிலையம்
  • எழும்பூர் தொடர்வண்டி நிலையம்
  • உயர்நீதிமன்றம்
  • ரிப்பன் கட்டடம்
  • விக்டோரியா அரங்கு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 5.1 மதராசப்பட்டினம்

Question 4.
மதராசப்பட்டினத்தின் போக்குவரத்துப் பற்றி சில சான்றுகள் தருக.
Answer:
நடந்து சென்றபாதை, மாட்டுவண்டிகள் சென்ற பாதை ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு சாலைகளாக மாறின.

  • சென்னை அண்ணாசாலை (மவுண்ட் ரோடு) அடுத்ததாக பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை.
  • 1856 உருவான இராயபுரத்தில் உருவான தொடர் வண்டி நிலையம்.
  • சென்னை மத்தியத் தொடர்வண்டி நிலையம்.
  • எழும்பூர் தொடர் வண்டி நிலையம்.

Question 5.
சென்னையின் பழமை, அறிவுப் புரட்சி போன்றவற்றை சான்றுடன் நிறுவுக.
Answer:

  • சென்னை இலக்கிய சங்கம் 1812ல் உருவான நூலகம்.
  • 1860இல் கன்னிமாரா நூலகம் அருகங்காட்சியகமாக தொடங்கப்பட்டு இந்தியாவின் முதல் பொது நூலகம் என்ற பெருமை பெறுகிறது.
  • 1869இல் உருவான கீழ்த்திசைச் சுவடி நூலகம்.2010இல் உருவான ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகம்.
  • தமிழாய்வு நூலகம்.
  • உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூலகம்.
  • ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்.
  • மறைமலையடிகள் நூலகம்.
  • செம்மொழித் தமிழாய்வு நூலகம்.
  • உ.வே.சா நூலகம் போன்றவை.

சென்னையின் பழமையையும் அறிவுப் புரட்சியையும் விளக்குவதாக அமைகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 4.6 பா இயற்றப் பழகலாம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

Question 1.
கீழ்க்காணும் ஈற்றடிகளைக் கொண்டு நேரிசை (அ) இன்னிசை வெண்பா எழுதுக.
Answer:
அ) என்றும் விரும்பியே கல்.
உலகில் உத்தமனாய் வாழ கல்வி
எத்திக்கும் உன் புகழை நாட்ட
ஏற்றமிகு கல்வியை கசடற கற்று
என்றும் விரும்பியே கல்

ஆ) ஒழுக்கம் உயர்வு தரும்.
உயிரை விட மேலானது ஒழுக்கம்
தயிரை விட மென்மையானது ஒழுக்கம்
பழகும் முறை அறிந்து வாழ்ந்தால்
ஒழுக்கமே உயர்வு தரும்.

இ) இன்னல் விலகி விடும்.
அன்பினால் அறம் பல செய்து
பண்பினால் பல புகழ் எய்து
உண்மை யினால் உழைத்துநீ வாழ்ந்தால்
இன்னல் விலகி விடும்.

ஈ) உழவின்றி உய்யா உலகு.
கோலும் குடையும் மன்னனுக்கு அவசியம்
எழுதும் கோலுக்கு கூர்முனை அவசியம்
உழும் விவசாயிக்கு ஏர்முனை அவசியம்
உழவின்றி உய்யா உலகு

உ) மொழியின் வழிய தறிவு.
வள்ளுவனின் வாய்மொழியை குற்றமறக் கற்று
கம்பனின் காவியத்தை கசடறக் கற்று
இளங்கோவின் சிலம்பை சீர்தூக்கிப் பார்த்து
மொழியின் வழிய தறிவு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

Question 2.
‘இயற்கை’ என்னும் பொருண்மையில் வெண்பா எழுதுக.
Answer:
தென்றல் வீச பூமணம் பரவும் குன்றம்
குளிர குளிரில் வாடும் மயிலும்
ஆட மழைமேகம் சொரியும்
மண்ணு லகைக் காண்.

இலக்கணத் தேர்ச்சி கொள்

Question 1.
வெண்பாவிற்கு ஏற்ப அடுத்த சீர் என்னவாக அமைக்கலாம்? பொருத்தமான சீரினைக் கொண்டு கோடிட்ட இடங்களை நிரப்புங்கள்.

அ) அன்பே தகளியாய்     (ஆர்வமாய் / தகளியாய்)
ஆ) வான்மழை தூறலில்    (தூறலில் / பொழிந்திடின்)
இ) கண்ணிரண்டும் இல்லார்     (இலாதார் / இல்லார்)
ஈ) வெண்ணிலவு காய்கிறது     (காய்கிறது / ஒளிர்கிறது)
உ) வெய்யோன் காய்ந்திட     (காய்ந்திட / ஒளிர்ந்திட)

Question 2.
மூன்றாவது சீர் அமைத்து எழுதுக.

அ) கல்வி கரையில கற்பவர்
ஆ) கல்லாரே ஆயினும் கேட்க (கற்க)
இ) நல்லவை செய்யின் நலமே
ஈ) அவமதிப்பும் ஆன்ற பொருள்
உ) உண்ணாது நோற்பார் சான்றோர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

Question 3.
பொருத்துக.
அ) மாச்சீர் – 1. கருவிளம், கூவிளம்
ஆ) காய்ச்சீர் – 2. நாள், மலர்
இ) விளச்சீர் – 3. தேமாங்காய், புளிமாங்காய்
ஈ) ஓரசைச்சீர் – 4. தேமா, புளிமா

அ) 1, 2, 4, 3
ஆ) 4, 3, 1, 2
இ) 2, 3, 1, 4
ஈ) 3, 4, 2, 1
Answer:
ஆ) 4, 3, 1, 2

Question 4.
கீழுள்ள சொற்களை ஈற்றுச் சீராகக் கொண்டு குறள் வெண்பா / நேரிசை வெண்பா / இன்னிசை வெண்பா எழுத முயற்சி செய்யவும்.
Answer:
கடல், வாள், மழை, தேன், மரம்.

கடல் : அலையென எழுந்து ஒலி யெழுப்பி
ஆர்ப்பரிக்கும் பெருங் கடல்.

வாள் : ஒளிவீசிக் கூர்மையொரு எதிரியை வீழ்த்த
பளிச்சிடும் வேந்தன் வாள்.

மழை : வானின்று பொழிந்து மண்ணை வளமாக்கும்
தேன்சுவை அன்ன தமிழ்

தேன் : மணம்தரும் பூவில் சுவைதரும் இனிய
அமுத மெனும் தேன்.

மரம் : இயற்கைத் தாய் உவந்து அளித்த
மறக்க வெண்ணா மரம்.

Question 5.
வெண்பாவிற்குரிய தளைகள் யாவை?
Answer:
இயற்சீர் வெண்டளையும், வெண் சீர் வெண்டளையும் வெண்பாவிற்குரிய தளைகள் ஆகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

Question 6.
ஒரு விகற்பம், பல விகற்பம் என்றால் என்ன?
Answer:

  • வெண்பாவில் நான்கடிகளும் ஓரெதுகையும் பெற்று வருவது ஒரு விகற்பம் ஆகும்.
  • வெண்பாவில் முதல் இரண்டடி ஓரெதுகையும், அடுத்த இரண்டடி ஓரெதுகையும் பெற்று வருவது பல விகற்பம் ஆகும்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
வெண்பா யாப்பு செல்வாக்குப் பெற்ற காலம்
அ) சங்ககாலம்
ஆ) சங்கம் மருவிய காலம்
இ) காப்பிய காலம்
ஈ) ஐரோப்பியர் காலம்
Answer:
ஆ) சங்கம் மருவிய காலம்

Question 2.
சங்கம் மருவிய காலத்தில் வலியுறுத்தப்பட்டது
அ) அறம்
ஆ) அரம்
இ) மரம்
ஈ) மறம்
Answer:
அ) அறம்

Question 3.
சொல்லுதலை அடிப்படையாகக் கொண்டு தோன்றியது
அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா
ஈ) விருத்தப்பா
Answer:
அ) வெண்பா

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

Question 4.
வெண்பாவின் ஓசை
அ) அகவலோசை
ஆ) செப்பலோசை
இ) துள்ளலோசை
ஈ) தூங்கலோசை
Answer:
ஆ) செப்பலோசை

Question 5.
வெண்பா ………….. அமைய வேண்டும் என்பது இன்றியமையாத விதி.
அ) வெண்டளையால்
ஆ) கலித்தளையால்
இ) ஒன்றிய வஞ்சித்தளையால்
ஈ) ஒன்றா வஞ்சித்தளையால்
Answer:
அ) வெண்டளையால்

Question 6.
வெண்ட ளை …………… வகைப்படும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
அ) இரண்டு

Question 7.
தளைத்தல் என்பதற்குப் பொருந்தாத பொருளைக் கண்டறி.
அ) கட்டுதல்
ஆ) பிணித்தல்
இ) பிரித்தல்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
இ) பிரித்தல்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

Question 8.
பொருத்திக் காட்டுக.
அ) நேர் நேர் – 1. புளிமா
ஆ) நிரை நேர் – 2. தேமா
இ) நிலை நிரை – 3. கூவிளம்
ஈ) நேர் நிரை – 4. கருவிளம்

அ) 2, 1, 4, 3
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 1, 3, 4
ஈ) 3, 1, 2, 4
Answer:
அ) 2, 1, 4, 3

Question 9.
பொருத்திக் காட்டுக.
அ) இரண்டடி வெண்பா – 1. கலிவெண்பா
ஆ) மூன்றடி வெண்பா – 2. பஃறொடை வெண்பா
இ) நான்கடி வெண்பா – 3. நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா
ஈ) நான்கடி முதல் பன்னிரண்டடி வரை – 4. நேரிசை, இன்னிசை சிந்தியல் வெண்பா
உ) பதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை – 5. குறள் வெண்பா

அ) 5, 4, 3, 2, 1
ஆ) 4, 5, 2, 3, 1
இ) 3, 2, 1, 4, 5
ஈ) 2, 1, 3, 4, 5
Answer:
அ) 5, 4, 3, 2, 1

Question 10.
வெண்பா …………….. வகைப்படும்.
அ) நான்கு
ஆ) ஐந்து
இ) ஆறு
ஈ) ஏழு
Answer:
ஈ) ஏழு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

Question 11.
நேரிசை வெண்பாவில் ………… அடியில் தனிச்சீர் வரும்
அ) முதலாம்
ஆ) இரண்டாம்
இ) மூன்றாம்
ஈ) நான்காம்
Answer:
ஆ) இரண்டாம்

Question 12.
தனிச்சீரில்லாமல் ……………. சீரோடு அமைக்கப்படுபவை இன்னிசை வெண்பா .
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஆறு
Answer:
ஆ) நான்கு

குறுவினா

Question 1.
தளைத்தல் என்பதன் பொருள் யாது?
Answer:
தளைத்தல் என்பதற்குக் கட்டுதல், பிணித்தல் என்று பொருள்.

Question 2.
ஈரசைச் சீர்களைக் குறிப்பிடுக.
Answer:

  • மாச்சீர் – தேமா, புளிமா
  • விளச்சீர் – கூவிளம், கருவிளம்.

Question 3.
மூவசைச்சீர்களைக் குறிப்பிடுக.
Answer:
காய்ச்சீர் – தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

Question 4.
வெண்பாவின் ஈற்றுச்சீர் எவ்வெவ் வாய்பாடுகளுள் ஒன்றைக் கொண்டு முடியும்?
Answer:
நாள், மலர், காசு, பிறப்பு.

Question 5.
வெண்பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:

  • வெண்பா ஏழு வகைப்படும். அவை:
    1. குறள் வெண்பா
    2. நேரிசை வெண்பா
    3. இன்னிசை வெண்பா
    4. நேரிசைச் சிந்தியல் வெண்பா
    5. இன்னிசைச் சிந்தியல் வெண்பா
    6. பஃறொடை வெண்பா
    7. கலிவெண்பா

Question 6.
பஃறொடை வெண்பா, கலிவெண்பா – குறிப்பு வரைக.
Answer:

  • நான்கடிச் சிற்றெல்லையாகவும் பன்னிரண்டடிப் பேரெல்லையாகவும் கொண்டது பஃறொடை வெண்பா ஆகும்.
  • பதின்மூன்றடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை கொண்டது ‘கலிவெண்பா’ ஆகும்.

Question 7.
வெண்பாவிற்கான இலக்கணத்தைக் கூறுக.
Answer:

  • இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை பிறழாது வரும்.
  • ஈற்றடி மூச்சீராகவும் ஏனைய அடி நாற்சீராகவும் வரும்.
  • ஈரசைச்சீர்கள் மாச்சீரும் விளச்சீரும் மூவசைச்சீரில் காய்ச்சீரும் வரும்.
  • செப்பலோசை பெற்று வரும்.
  • இரண்டடி முதல் பன்னிரெண்டு அடி வரை வரும்.
  • ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு ஆகிய வாய்பாடுகளுள் ஒன்றைக் கொண்டு முடியும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

Question 8.
இன்னிசை வெண்பா எவ்வாறு அமைக்கப்படும்?
Answer:
தனிச்சீரில்லாமல் நான்கு சீரோடு அமைக்கப்படுபவை இன்னிசை வெண்பா.

மொழியை ஆள்வோம்

பக்கம்: 102

சான்றோர் சித்திரம்
சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் பணிக்கு நேர்காணலுக்குச் சென்றார் ஒருவர். அந்தக் கல்லூரியின் பேராசிரியர் பரிதிமாற்கலைஞர். “குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டுச் சொல்லுங்கள்” என்று கேட்டார். அவர் “அஃது எனக்குத் தெரியாது” என்று பதிலளித்தார். ‘நீங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டீர்கள்’ என்றார் பரிதிமாற்கலைஞர். ‘தெரியாது’ என்று சொன்னவரை, “எப்படித் தேர்வு செய்யலாம்?” என்று பிறர் கேட்ட போது, ‘அஃது’ என்பது ஆய்தத் தொடர் குற்றியலுகரம், ‘எனக்கு’ என்பது வன்தொடர்க் குற்றியலுகரம், ‘தெரியாது’ என்பது உயிர்த்தொடர் குற்றியலுகரம் என்று விளக்கினார் பரிதிமாற்கலைஞர். இந்நிகழ்வில் பரிதிமாற்கலைஞரையே வியக்க வைத்தவர் மறைமலையடிகள்.
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 4.6 பா இயற்றப் பழகலாம் 1

பரிதிமாற்கலைஞருடனான அவருடனான நட்பு ‘தனித்தமிழ்’ மீதான அடிகளாரின் பற்றை மிகுதியாக்கியது. பிறமொழிக் கலப்பு இன்றி இனிய, எளிய தமிழ்ச் சொற்களைக் கொண்டே பேசவும் 112 எழுதவும் இயலும் என்று நடை முறைப்படுத்தினார். சுவாமி வேதாசலம்’ எனும் தன்பெயரை ‘மறைமலையடிகள்’ என மாற்றிக் கொண்டதோடு தம் மக்களின் பெயரையும் தூய தமிழ்ப் பெயர்களாக மாற்றினார்.

இளம் வயதில் பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதி வந்த அடிகளார் ஞானசாகரம் (1902), Oriental Mystic Myna (1908), Ocean Of Wisdom (1935) முலான இதழ்க ளை நடத்திச் சிறந்த இதழாளராகத் திகழ்ந்தார். முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை, பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை, சாகுந்தல நாடகம், மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் முதலான பல நூல்களை எழுதியுள்ளார்.

முறையான பள்ளிக் கல்வியை முடித்திராத மறைமலையடிகள் ஆக்கிய நூல்களும் ஆற்றிய சொற்பொழிவுகளும் அவர் ஓர் அறிவுக்கடல் என்பதை நமக்கு உணர்த்தும்.

வினாக்கள்:

1. ஒரு நேர்காணலில் குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டுத் தருக என்று கேட்டதற்குப் பதிலாக மறைமலை அடிகள் கூறியது என்ன?
2. சுவாமி வேதாசலம் என்பதன் தமிழாக்கம் என்ன?
3. மறைமலை அடிகள் நடத்திய இதழ் எது?
4. இப்பாடப் பகுதியில் இடம் பெற்றுள்ள எண்ணும்மையினை எடுத்து எழுதுக.
5. இப்பாடப்பகுதியின் இடம்பெற்றுள்ள உருவகத்தினை எடுத்து எழுதுக.
Answer:
1. அஃது எனக்குத் தெரியாது
2. மறைமலை அடிகள்
3. ஞானசாகரம்
4. வரலாறும் காலமும்
5. அறிவுக்கடல்

தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக.

எ.கா. நம் மானிலம் இந்த ஆண்டு வரட்சியால் பாதிக்கப்பட்டது.
நம் மாநிலம் இந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டது.

1. எங்கள் ஊரில் நூலகக் கட்டிடம் கட்ட அறசு நிதி ஒதுக்கியது.
எங்கள் ஊரில் நூலகம் கட்டடம் கட்ட அரசு நிதி ஒதுக்கியது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

2. ரங்கன் வெங்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார்.
ரங்கன் வெண்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார்.

3. மானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன.
வானம் பார்த்த பூமியில் பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன.

4. ஐப்பசி அடைமழையில் ஊருனி நிறைந்தது.
ஐப்பசி அடை மழையில் ஊருணி நிறைந்தது.

5. இன்னிக்கு சாயங்காலம் கபடி போட்டி நடைபெறும்.
இன்றைக்கு சாயுங்காலம் கபடி போட்டி நடைபெறும்.

தமிழாக்கம் தருக.

The Serious dearth of library facilities in this country is scarcely keeping with India’s status in the international community of nations or with her educational and social needs. In this matter. India compares unfavorably not only with other independent Dominions of the commonwealth but even with certain British colonies. She possesses only one public library on any considerable size, and even this institution is inadequate to serve the need of the capital city. Only a few towns can boast of possessing any library at all. The rural population is completely neglected; There are no traveling libraries to reach them of kind that are to be found even in some backward countries.

The growth of libraries has lagged. Far behind the increase in the number of schools and the rise in the rate of literacy. The great mass of the people in India do not have the means to buy books or even magazines and newspapers; in the absence of sufficient public libraries and reading room, most of them cannot attain regular reading habits.

இந்திய நாட்டில் நூலக வசதிகளின் பற்றாக்குறையால் கல்வி மற்றும் சமூக தேவைகளில் இந்தியாவின் நிலைப்பாடு சர்வதேச அரங்கில் மற்ற நாடுகளைக் காட்டிலும் குறைந்தே உள்ளது. இந்த விஷயத்தில் இந்தியா, சில பொதுவுடைமை நாடுகள் மற்றும் ஆங்கிலக் குடியேற்ற நாடுகளோடு எதிர்மறையாக ஒப்பிடப்படுகிறது. பெரிய அளவில் ஒரே ஒரு பொது நூலகத்ததை மட்டுமே இந்தியா வைத்திருக்கிறது.

மேலும், அது தலைநகரத்தின் தேவையை நிறைவு செய்ய போதுமானதாக இல்லை. இங்கு ஒரு சில நகரங்கள் மட்டுமே நூலகத்தால் பெருமை அடைய இயலும். கிராமப்புற மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்களை பயனடையச் செய்வதற்கு சில பின் தங்கிய நாடுகளில் உள்ளதைவிட நூலகங்கள் ஏதும் இங்கு இல்லை.

இந்தியாவில் நூலகங்களின் வளர்ச்சி தாமதமாகவே உள்ளது. பின்னாளில் பள்ளிகளின் எண்ணிக்கையில் ஏற்றம் இருந்தாலும், எழுத்தறிவில் பின்தங்கியே இருக்க நேரிடும். இந்தியாவில் பெருமளவு மக்களுக்குப் புத்தகங்கள், வார இதழ்கள், பத்திரிக்கைகள் வாங்குவதற்கு வழி இல்லை மற்றும் போதுமான பொது நூலகங்கள், வாசிப்பு அறை, இல்லாமையால் பெரும்பாலானவர்களுக்கு வாசிக்கும் பழக்கமே இல்லாமல் போகிறது.

பின்வரும் பழமொழிகளை வாழ்க்கை நிகழ்வோடு பொருத்தி எழுதுக.

Question 1.
யானைக்கும் அடிசறுக்கும்
Answer:
தன்னம்பிக்கையோடு வாழ்ந்த என் தந்தை தனியார் சீட்டுக் குழுமத்தின் பகட்டு விளம்பரத்தால் பணம் கட்டி, ஏமாந்தது “யானைக்கும் அடிசறுக்கும் போல ஆயிற்று.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

Question 2.
தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்
Answer:
வாழ்க்கையில் நாம் பிறருக்கு நன்மை செய்து வந்தோம் என்றால் நமக்கும் நன்மையே நடக்கும். வாழ்க்கையில் நாம் பிறருக்குத் தீமை செய்து வந்தோம் என்றால் நமக்குத் தீமையே நடக்கும் இதையேதான் தினை விதைத்தவன் தினை அறுப்பான். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பார்கள்.

Question 3.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
Answer:
நட்பு எனக்கொண்ட பிறகு குற்றம் இருப்பின் அதைப் பொறுக்கும் குணம் வேண்டும். அதை விடுத்து குற்றத்தைக் கடிந்துரைத்தால் (சுற்றம்) நட்பு தொடராது.

Question 4.
எறும்பு ஊரக் கல்லும் தேயும்
Answer:
வாழ்க்கையில் சின்னச் சின்ன தவறுகளை இழைத்துக் கொண்டே வருவதால் தன் புகழுக்குத் களங்கம் வராது என்று நினைக்கிறோம். மாறாக, எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்பது போல நம் புகழ் அழிவதற்கு நாம் செய்த சிறு தவறுகளே காரணமாகிவிடும்.

Question 5.
ஊழி பெயரினும் தாம் பெயரார்
Answer:
நற்பண்புகளைக் கைவரப் பெற்றவர்கள் வாழ்வில் உயர்வு தாழ்வு வந்தபோதும் தன்னிலையில் மாறமாட்டார்கள்.

கீழ்க்காணும் பத்திகளைப் படித்து மூன்றில் ஒரு பங்காகச் சுருக்குக.

இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஓய்வின்மை, காலம் தவறிய உணவு, உணவுப் பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவையே பல்வேறு உடல் நலப் பாதிப்புகளுக்கு மூல காரணமாகின்றன. மருத்துவம் சார்ந்த தேவைகளுக்கென்று குறிப்பிட்ட தொகையை ஒதுக்கும் அளவிற்கு உடல்நிலையைக் கவனத்தில் கொள்ளாமல், ஓர் இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

‘உணவே மருந்து மருந்தே உணவு’ என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ஒருவர் : உட்கொள்ளும் உணவில் புரதம், கொழுப்பு, மாச்சத்து, கனிமங்கள், நுண்ணூட்டச் சத்துகள் சேர்ந்ததே சமச்சீர் உணவு. எனவே அளவறிந்து உண்ண வேண்டியது அவசியமாகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

ருசிக்காக, சாப்பிடக்கூடாத பொருள்களைச் சாப்பிடுவதும், பசிக்காக அளவுக்கு மீறிச் சாப்பிடுவதும் தான் பிணிகளுக்குக் காரணம். சாதாரணமாக உண்ட உணவு செரிமானமாவதற்கு 4 மணி நேரம் ஆகிறது. பொதுவாகவே உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும். இதனால் மாவுப்பொருள் செரிமானமாவதற்கு உமிழ்நீர் சுரந்து உணவுடன் உட்செல்லும்.

உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள சத்துகள், அவற்றின் பயன்கள் ஆகியவற்றைப் பற்றிய தெளிந்த அறிவு, ஆரோக்கிய உணவினைத் தேர்வு செய்ய மிகவும் உதவியாய் இருக்கும்.

நமது எடை மற்றும் உயரத்தினை அவ்வப்போது சோதித்து நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியமானது. பிறகு தங்களது எடை மற்றும் உயரத்தினைப் பொறுத்து ஆரோக்கியமான உணவு முறையைத் தேர்ந்தெடுக்கவும் உடற்பயிற்சி செய்யவும் முடிவெடுக்க வேண்டும்.

ஒவ்வொரு மனிதருக்கும் அவரது வயது, பாலினம், உடல் உழைப்பு, உடல்நிலை, வாழும் இடம், பருவ நிலை ஆகியவற்றின் அடிப்படையில் ஊட்டச்சத்துக்களின் தேவை மாறுபடும்.

தேவையான தானியங்களுடன் பருப்பு மற்றும் பயறு வகைகளைச் சேர்த்து, அதிக : 2 காய்கறிகளுடனும் பழங்களுடனும் கூடிய உணவு முறையே நம் ஆரோக்கியத்திற்கான சரியான தீர்வு.

மூன்றில் ஒரு பங்காகச் சுருக்குக.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 4.6 பா இயற்றப் பழகலாம் 2

பத்தியின் சுருக்கம்:
இன்றைய சூழலில், ஓய்வின்மை , காலம் தவறிய உணவு, உணவில் மாற்றம் முதலானவை உடல் நலப் பாதிப்புக்குக் காரணம். மருத்துவத்திற்கென தொகை ஒதுக்கும் அளவுக்கு இயந்தரமாகிவிட்டோம். உணவே மருந்தாக உண்டு மகிழ்ந்தனர் முன்னோர். ஒவ்வொருவரும் சமச்சீர் உணவு உட்கொள்வது கட்டாயமாகிவிட்டது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

உணவுப் பொருளில் அடங்கியுள்ள சத்து பற்றி அறிவது நமது கடமை. ருசிக்காக அன்றி பசிக்காக மிகுதியாகச் சாப்பிடுவது பிணிக்குக் காரணமாயிற்று. நமது எடை மற்றும் உயரத்தைப் பொறுத்தே உணவு முறையும் உடற் பயிற்சியும் அமைதல் வேண்டும். வயது, பாலினம் மற்றும் உடலுழைப்பின் அடிப்படையில் ஊட்டச்சத்து தேவைப்படும். காய்கறி, தானியம், பயிறு இவற்றுடன் கூடிய உணவு முறையே சரியான தீர்ப்பு.

மொழியோடு விளையாடு

மறைந்திருக்கும் சொற்களைக் கண்டுபிடி.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 4.6 பா இயற்றப் பழகலாம் 3

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 4.6 பா இயற்றப் பழகலாம் 9
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 4.6 பா இயற்றப் பழகலாம் 10

எண்ணங்களை எழுத்தாக்குக

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 4.6 பா இயற்றப் பழகலாம் 6
கல்வி ஒருவரை அறிவினால் மேதையாக்கும்
கல்வி கற்றால் நீதியரசர ஆகலாம்.
கல்வியின் காரணமாக காவல்துறை அதிகாரி ஆகலாம்
கல்வி கற்பதால் மருத்துவர் ஆகலாம்
கல்வி ஒருவரை நல்லாசிரியனாக்கும்.
கல்வியே ஒருவர்க்குப் பெருமை சேர்க்கும்
கல்வி கற்றவரையே உலகம் போற்றும்.

சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க.

எ.கா. பலகை
பலகையால் ஆன மேசையில் உணவு உண்டனர்.
பல கைகள் ஒன்றிணைந்து வெற்றியைத் தமதாக்கின.

1. தாமரை
தடாகத்தில் தாமரை மலர்ந்திருந்தன.
தாவுகின்ற மானை(மரை)ப் பிடிக்க முடியாது.

2. கோவில்
கோவிலில் குடமுழுக்கு நடந்தேறியது.
அரசன் உறைவிடம் கோ இல் எனப்படும்.

3. வெங்காயம்
வெங்காயம் மருத்துவ குணம் நிறைந்தது.
வெம்மையால் உண்டான காயம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.6 பா இயற்றப் பழகலாம்

4. தலைமை பள்ளி
ஆண்டு விழாவிற்குத் தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார்.
தலையில் மை அடிப்பது பழக்கமாகிவிட்டது.

செய்து கற்போம்.

அருகிலுள்ள கல்லூரிக்குச் சென்று அங்குள்ள பாடப்பிரிவுகளை அட்டவணைப்படுத்துக.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 4.6 பா இயற்றப் பழகலாம் 7

நிற்க அதற்குத் தக

கீழ்க்கண்ட இடங்களில் உங்கள் செயல்பாடு எவ்வாறு இருக்கும்?
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 4.6 பா இயற்றப் பழகலாம் 8

படிப்போம் பயன்படுத்துவோம் (உணவகம்)

1. Arrival – வருகை
2. Departure – புறப்பாடு
3. Coaveyor Belt – ஊர்திப்பட்டை
4. Take off – வானூர்தி கிளம்புதல்
5. Passport – கடவுச்சீட்டு
6. Visa – நுழைவு இசைவு
7. Domestic Flight – உள்நாட்டு வானூர்தி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 6.5 இசைத்தமிழர் இருவர் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

Question 1.
‘சிம்பொனி’த் தமிழரும், ‘ஆஸ்கர்’ தமிழரும் இசைத்தமிழுக்கு ஆற்றிய பணிகளை, நும் பாடப்பகுதி கொண்டு தொகுத்தெழுதுக.
Answer:
சாதனை புரிந்த இளையராஜா

சிம்பொனித் தமிழர் :
“ஆசியக் கண்டத்தவர், ‘சிம்பொனி’ இசைக்கோவையை உருவாக்க முடியாது” என்னும் மேலை இசை வல்லுநர் கருத்தைச் சிதைத்தவர் இளையராஜா. இவர், தமிழ்நாட்டுத் தேனி மாவட்டத்து இராசையா ஆவார். தாலாட்டில் தொடங்கித் தமிழிசைவரை அனைத்தையும் அக் சபோட்ட இசை மேதை.

இசையைச் செவியுணர் கனியாக்கியவர் :
திரையுலகில் கால் பதித்த இளையராஜா, இசையல் சிலம்பம் சுழற்றி, மக்களை இசை வெள்ளத்தில் மிதக்க வைத்தவர். பழந்தமிழிசை, உழைப்போர் பாடல், கர்நாடக இசை எனப் பல இசை மெட்டுகளை அறிமுகப்படுத்தி, மெல்லிசையில் புது உயர் தொட்டவர். எழுபது எண்பதுகளில் இவர் இசை, இசை வல்லாரை மட்டுமன்றி, பாமர மக்களையும் கர்த்துத் தன்வசப் படுத்தியது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

இசையில் சாதனைப் படைப்புகள்:
ஐவகை நிலப்பரப்பைக் காட்சிப்படுத்தும் இளையராஜாவின் இசை மெட்டுகள், நெடுந்தூரப் பயணங்களுக்கு வழித்துணையாயின. இளையராஜாவின் இசையில், மண்ணின் மணத்தோடு, பண்ணின் மணமும் கலந்திருக்கும். எனவே, இசை மேதைகளால் மதிக்கப்பட்டார்.

‘எப்படிப் பெயரிவேன்?’, ‘காற்றைத் தவிர ஏதுமில்லை!’ என்னும் இசைத் தொகுப்புகள், இசையுலகின் புதிய முயற்சிகள் (இந்தியா 24 மணிநேரம்’ என்னும் குறும்படப் பின்னணி இசை, மனித உணர்வுகளான மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம், வலி என்பவற்றை உணர்த்துவன.

இலக்கியங்களை இசையாக்கியவர் :
மாணிக்கவாசகரின் பாடல்களுக்கு இசைவடிவம் கொடுத்த இளையராஜாவின் ‘இரமணமாலை’, ‘கீதகள்கள்’, மூகாம்பிகை பக்தித் தொகுப்பு, மீனாட்சி ஸ்தோத்திரம் என்றென்றும் நிலைத்து நிற்கும். ‘பஞ் சமுகி) என்னும் கர்நாடகச் செவ்வியல் இராகத்தை உருவாக்கியுள்ளார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

இசையில் இந்திய மொழிகளை இணைத்தவர் :
‘இசைஞானி’ எனப் போற்றப்படும் இளையராஜா, மேற்கத்திய இசையிலும், இந்துஸ்தானி இசையிலும் தம் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

இசைக் குறியீடுகளை மனத்தில் உருவாக்கிக் காகிதத்தில் எழுதிப் பயன்படுத்தினார். திரை இசைக்கு ஏற்ப உணர்வின் மொழியை மாற்றுவதில் வல்லவர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி என, இந்திய மொழிகள் அனைத்திலும் இசையை வாரி வழங்கிய சிறப்புடையவர்.

அரிய செயல் :
தேசத் தந்தை மகாத்மாகாந்தி எழுதிய ‘நம்ரதா கே சாகர்’ பாடலுக்கு இசை அமைத்து, ‘அஜொய் சக்கரபர்த்தி’யைப் பாடவைத்து வெளியிட்டார். ஆசியாவில் ‘முதல் சிம்பொனி’ இசைக்கோவையை உருவாக்கினார். இன்று இளையராஜாவின் இசை ஆட்சி, உலகு முழுவதும் பரவியுள்ளமை தமிழராகிய நமக்குப் பெருமை.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

பெற்ற விருதுகள் :
இளையராஜா, தமிழக அரசின் கலைமாமணி’ விருதைப் பெற்றார்; சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்குமுறை பெற்றார். மத்தியப்பிரதேச அரசு அளித்த ‘லதா மங்கேஷ்கர்’ விருதைப் பெற்றார்; கேரள நாட்டின் ‘நிஷாகந்தி சங்கீத விருதைப் பெற்றார்.

இந்திய அரசு, ‘பத்ம விபூஷண் விருது வழங்கிப் பெருமைப்படுத்தியது. இசையால் உலகளக்கும் இளையராஜாவின் புகழ், காலம் கடந்து நன்று பாராட்டைப் பெறும். வாழ்க இசை! வளர்க இளையராஜாவின் இசைப்பணி!

தமிழ் இசை உலகில் சாதனைபுரிந்த இரஹ்மான்

ஆஸ்கர் விருது வென்ற தமிழர் :
2009ஆம் ஆண்டு அமெரிக்க ‘கோடாக்’ அரங்கில், இசைக்கான ஆஸ்கர் பாந்துக்கு, ஐந்து பேர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் இரஹ்மான் பெயரும் இருந்தது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

ஏனைய நால்வர், பலமுறை பரிந்துரை பெற்றவர்கள். எனினும், முதன்முறை பரிந்துரைக்கப்பட்டவர் அரங்கில் ஏறி, இரு கைகளிலும் ஆஸ்கர் விருதுக்கான சிலைகளை ஏந்தி, இறைவனை வணங்கியபின், தன் தாய்மொழியில் உரை நிகழ்த்தித் தமிழுக்குப் பெருமை சேர்த்தார்.

இளமையில் இசையும் படிப்பும் :
மலையாளத் திரைப்பட உலகில் புகழுடன் விளங்கிய தம் தந்தை ஆர். கே. சேகரை எண்ணினார். நான்கு வயதில் தந்தையுடன் ஹார்மோனியம் வாசித்துத் திறமைகாட்டியதை எண்ணினார்.
தந்தையை இழந்த சூழலில் பள்ளிப் படிப்புக்கு இடைறு ஏற்படாவகையில், இரவெல்லாம் இசைக்குழுவில் பணி செய்து, காலையில் நேராகப் பள்ளி சென்று, வாயிலில் காத்திருக்கும் தாய் தந்த உணவை உண்டு, பள்ளிச் சீருடை அணிந்த காலத்தை நினைத்தார். பாழ்க்கைப் போராட்டம், பதினோராம் வகுப்போடு படிப்பை முடிக்க வைத்தது.

துள்ளல் இசைக்கு ஆட வைத்தவர்:
1992இல் ‘ரோஜா’ படத்திற்கு இசையமைத்துத் திரை இசைப் பயணத்தைத் தொடங்கினார். தம் இசையால் தமிழ்த் திரையுலகில் கதெழுச்சியை ஏற்படுத்தினார். இளைஞர்களிடையே இசை ஆளுமையை வளர்த்தார். இவரது தமிழிசையின் துள்ளல் ஓசைக்கு மயங்காதவர் இலர். இசையின் நுட்பமுணர்ந்து, செம்மையாகக் கையாண்டு இளைஞர்களைத் தம் பாடலுக்கு ஆடவும் பாடவும் வைத்தார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

இசையில் கணினித் தொழில்நுட்பம் :
கணினித் தொழில் நுட்ப உதவியுடன் நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசை முறைகளைக் கலந்து, உலகத்தரத்தில் இசை அமைத்தார். இளம் பாடகர்களை அறிமுகப்படுத்தினார்.

இசைப்பா லின் மெட்டை உருவாக்குமுன், தாளத்தைக் கட்டமைத்துப் பாடலுக்கான சூழலை உள்வாங்கி, அதன்பின் பாட்டை வெளிக்கொணர்வது இரஹ்மானின் தனிஆற்றல். பாடலின் பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையில் வரும் இசையை, மக்களை ஈர்க்கும் வகையில் அமைத்துத் தம் வல்லமையை வெளிப்படுத்துவார்.

உலகக் கலாசாரத்தை இசையில் இணைத்தல் :
இவர் இசையமைத்த ‘வந்தே மாதரம்’, ‘ஜனகணமன’ இசைத் தொகுதிகள், நாட்டுப் பற்றைத் தூண்டுவன. தென்னிந்திய மொழிப்படங்களுக்கும் இந்தித் திரைப்படங்களுக்கும் இசையமைத்ததோடு, மேலை நாட்டுப் படங்களுக்கும் நாடகங்களுக்கும் இசையமைத்து, இசையுலகில் தம்மை நிலைப்படுத்திக் கொண்டார். தம் இசையால் வெவ்வேறு கலாசார மக்களை ஒருங்கிணைக்கவும் செய்தார்.

பெற்ற விருதுகள் :
ஏ. ஆர். இரஹ்மானுக்குத் தமிழக அரசு, ‘கலைமாமணி’ விருது வழங்கியது. கேரள அரசு, ‘தங்கப்பதக்கம்’ வழங்கிப் பாராட்டியது. உத்தரப்பிரதேச அரசு, ‘ஆவாத் சம்மான்’ விருதும், மத்தியப் பிரதேச அரசு, ‘லதா மங்கேஷ்கர்’ விருதும் வழங்கின.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

மொரிஷியஸ் அரசும் மலேசியா அரசும், ‘தேசிய இசை விருது’ வழங்கிச் சிறப்பித்தன. ஸ்டான் ஃபோர்ட் பல்கலைக்கழகம், சர்வதேச இசை விருது’ வழங்கிப் பாராட்டியது.

இந்திய அரசு, பத்மபூஷண்’ விருது வழங்கிப் பெருமைப்படுத்தியது. ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்திற்கு இசையமைத்து, ‘கோல்டன் குளோப்’ விருதைப் பெற்று, உலகப் புகழ் பெற்றார்.

இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியராக வலம் வரும் இரஹ்மானின் வாழ்க்கை , சாதனை படைக்கத் துடிக்கும் இளைஞர்களுக்குப் பாடமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

கூடுதல் வினா

Question 2.
சிம்பொனித் தமிழர் இசைத் தமிழுக்கு ஆற்றிய பணிகளை நும் பாடப்பகுதி கொண்டு விளக்குக.
Answer:
சிம்பொனித் தமிழரின் சாதனைப் படைப்புகள் :
பழந்தமிழிசை, உழைப்போர் பாடல், கர்நாடக இசை எனப் பல இசை மெட்டுகளை அறிமுகப்படுத்தி மெல்லிசையில் புது உயரம் தொட்டவர் இளையராஜா.

இந்தியாவின் பஹார், பஹாடி இன மக்கள் தொடங்கி, மதுரைக் கிராமிய இசைவரை அனைத்தையும் தம் கைவண்ணத்தில் வழிந்தோடச் செய்கம் எப்படிப் பெயரிடுவேன்?’, ‘காற்றைத் தவிர எதுவுமில்லை !’ என்னும் இசைத் தொகுப்புகள், இசையுலகின் புதிய முயற்சிகள். இந்தியா 24 மணிநேரம்’ என்னும் குறும்படத்திற்குப் பின்னணி இசை அமைத்துள்ளார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

இலக்கியங்களை இசையாக்கியவர் :
மாணிக்கவாசகரின் பாடல்களுக்கு இசைவடிவம் கொடுத்த இளையராஜவின் ‘இரமண மாலை’, ‘கீதாஞ்சலி’, ‘மூகாம்பிகை பக்தித் தொகுப்பு’, ‘மீனாட்சி ஸ்தோத்திரம்’ என்றென்றும் நிலைத்து நிற்கும். ‘பஞ்சமுகி’ என்னும் கர்நாடகச் செவ்வியல் இராகத்தை உருவாக்கியுள்ளார்.

இசையில் இந்திய மொழிகளை இணைத்தவர் :
இசைக் குறியீடுகளை மனத்தில் உருவாக்கிக் காகிதத்தில் எழுதிப் பயன்படுத்தினார். மூன்றே சுரங்களோடு ஒரு தெலுங்குப் பாடலுக்கு இசை அமைத்தது சிப்பு. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி என, இந்திய மொழிகள் அனைத்திலும் இசையை வாரி வழங்கிய சிறப்புடையவர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 இசைத்தமிழர் இருவர்

அரிய செயல் :
மகாத்மா காந்தி எழுதிய ‘நம்ரதா கே சாகர்’ பாடலுக்கு இசை அமைத்து, அஜொய் சக்கரபர்த்தியைப் பாடவைத்து வெளியிட்டார். ஆசியாவில் முதல் சிம்பொனி இசைக்கோவையை இளையராஜா உருவாக்கினார். தமிழர் வாழ்வின் எல்லா நிலைகளிலும் இசைக்கென்று ஓர் இனிமையான இடமுண்டு. அதில், இளையராஜாவின் புகழ், மகுடமாக அனிர்கின்றது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 6.4 திருச்சாழல் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 6.4 திருச்சாழல்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

குறுவினாக்கள் – கூடுதல்

Question 1.
சாழல் – விளக்குக.
Answer:

  • சோழன் என்பது, மகளிர் விளையாட்டுகளுள் ஒருவகை.
  • இது ஒரு மொழி விளையாட்டு. ஒருத்தி ஒரு செய்தி குறித்து வினா எழுப்புவாள்; மற்றொருத்தி தோள் வீசி நின்று, விடை கூறுவதாகச் சாழல் விளையாட்டு அமையும்.
  • விடையைக் கூறும்போது இறைவன் செயல்களையும், அவற்றால் விளங்கும் உண்மைகளையும் விளக்குவது போல் அமைந்திருத்தலால், ‘திருச்சாழல்’ எனப்பட்டது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

Question 2.
‘சாழல்’ என்பதை எவ்வெவர் பயன்படுத்தியுள்ளனர்?
Answer:

  • மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தில், ‘திருச்சாழல்’ இடம் பெற்றுள்ளது.
  • திருமங்கையாழ்வார் தமது பெரிய திருமொழி’யில் இவ்வடியைப் பயன்படுத்தியுள்ளார்.

Question 3.
‘திருச்சாழல்’ எங்கு யாரால் பாடப்பட்டது?
Answer:
‘திருச்சாழல்’ என்பது, தில்லைக் கோவிலில், மாணிக்கவாசகரால் பாடப்பட்டது.

சிறுவினா

Question 1.
தமிழகப் பெண்கள் பாடிக்கொண்டே விளையாடும்போது, வெளிப்படுத்தும் மேன்மையான கருத்துகளாகத் திருச்சாழல் உணர்த்துவன யாவை?
Answer:
சாழல்’ என்பது, மகளிர் விளையாட்டு. இந்த விளையாட்டின்போது ஒருத்தி வினாக் கேட்க, மற்றொருத்தி விடை கூறுவதாக அமையும். இறைவன் செயலைப் பழிப்பதுபோல் அந்த வினா இருக்கும். இறைவன் செயலை நியாயப்படுத்துவதுபோல் அந்த விடை இருக்கும்.

எ – கா : “சுடுகாட்டைக் கோவிலாகவும், புலித்தோலை ஆடையாகவும் கொண்ட உங்கள் தலைவனுக்குத் தாய் தந்தை இல்லை. இத்தன்மையனோ உங்கள் கடவுள்?” என்பது பழிப்பான வினா!

“எங்கள் தலைவனுக்குத் தாய் தந்தை இல்லாவிடினும், அவன் சினத்தால் உலகம் அனைத்தும் கல்பொடியாகி விடும்” என்பது, செயலை நியாயப்படுத்தும் விடை.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

கூடுதல் வினாக்கள்

Question 2.
திருவாசகம் – குறிப்புத் தருக.
Answer:

  • சிவபெருமான் மீது மாணிக்கவாசகர் பாடிய பாடல்களின் தொகுப்பு திருத எசகம்.
  • பன்னிரு சைவத் திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்தில் 51 திருப்பதிகங்களும், 658 பாடல்களும் உள்ளன; 38 சிவத்தலங்கள் குறித்துப் பாடப்பெற்றுள்ளன.
  • திருவாசகப் பாடல்கள், பக்திச் சுவையோடு, மனத்தை உருக்கும் இயல்புடையவை.
  • ‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் நகார்’ என்னும் மூதுரை வழக்கைப் பெற்றுள்ளது. ஜி.யு.போப், திருவாசகம் முழுவதையும் இங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

Question 3.
மாணிக்கவாசகர் குறித்துக் குறிப்பெழுதுக.
Answer:

  • மாணிக்கவாசகர், சைவ சமயக் குரவர் நால்வரும் ஒருவர்.
  • இவர், திருவாதவூரைச் சேர்ந்தவர். எனவே திருவாதவூரார்’ எனவும் அழைக்கப் பெற்றார்.
  • அரிமர்த்தனப் பாண்டியனின் தலைமை அமைச்சராகப் பணியாற்றியவர்.
  • மாணிக்கவாசகர் பாடியவை, திருவாசகமும் திருக்கோவையாருமாகும்.

Question 4.
அந்தமிலான் செய்த புதுமை, மேன்மை குறித்துச் சாழலால் அறியப்படும் செய்தி யாது?
Answer:
“அழிவு இல்லாதவனாகிய அவன், தன்னை அடைந்த நாயினும் இழிந்தவனையும் எல்லை இல்லா ஆனந்த வெள்றுத்திய அழுத்தும் புதுமையை எவ்வாறு செய்தானடி?” என்று, ஒருத்தி இகழ்வதுபோல் வினா எழுப்பினாள்.

இன்னொருத்தி தன் தோள்களை அசைத்து ஆடியபடி, “அடைந்தவனை ஆனந்த வெள்ளத்தில் அழுந்தச் செய்த திருவடிகள், தேவர்களுக்கு மேன்மையான பொருளாகும் என்பதை அறிந்துகொள்!’ என, அவன் சிறப்பை விடையாகக் கூறினாள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

நெடுவினா (கூடுதல்)

Question 1.
இறைவனின் பெருமையைத் தெரிவிக்கும் திருச்சாழல்மூலம் மாணிக்கவாசகரின் மொழி விளையாட்டினை விவரிக்கவும்.
Answer:
(சாழல் என்னும் விளையாட்டு :
மகளிர் விளையாடும் ஒருவகை விளையாட்டு சாழல். இதில் ஒருத்தி வினா எழுப்புவாள். மற்றொருத்தி அதற்கு ஏற்ற விடை கூறுவாள். இறைவன் செயல்களையும் அச்செயல்களால் விளங்கும் உண்மைகளையும் விளக்குவதாக அமைந்தது திருச்சாழலாகும். ‘திருச்சாழல்’ என்னும் ஒருவகை மொழி விளையாட்டின்மூலம் இருபது பாடல்களில் இறைவனின் பெருமைகளை மாணிக்கவாசகர் பாடியுள்ளார்.

ஆற்றல் நிறைந்தவன் இறைவன்!
சாழல் ஆடும் ஒருத்தி, “சுடுகாட்டைக் கோவிலாகவும் புலித்தோலை ஆடையாகவும் கொண்டவனுக்குத் தாயுமில்லை; தந்தையுமில்லை! இத்தகையவரா உங்கள் கடவுள்?” எனக் கேள்வி எழுப்பினாள். அதற்கு, “எங்கள் கடவுளுக்குத் தாய் தந்தை இல்லையாயினும், அவன் சினந்தால் உலகு அனைத்தும் கல்பொடியாகிவிடும்” என்று மற்றொருத்தி விடை கூறி இறைவனின் ஆற்றலை நிலைப்படுத்தினாள்.

பிறரைக் காக்கவே நஞ்சை உண்டான் :
உடனே அவள், “பாற்கடலைக் கடைந்தபோது உண்டான நஞ்சைப் பருகினானே. அதற்குக் காரணம் என்ன?” என வினவினாள். அதற்கு மற்றொருத்தி, “அந்த நஞ்சை எங்கள் இறைவன் அன்று உண்டிருக்காவிட்டால் பிரமன், விஷ்ணு உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் அன்றே அழிந்திருப்பார்களே!” எனக் கூறி விளக்கினாள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

அனைவருக்கும் அவன் அடியே மேலானது :
“முடிவு இல்லாதவனாக இருக்கும் அவனை அடைந்த என்னை, ஆனந்த வெள்ளத்தில் அழுந்தச் செய்தது என்னே புதுமை” எனக் கேட்டாள். அதற்கு மற்றொருத்தி, “உன்னை ஆனந்த வெள்ளத்தில் அழுந்தச் செய்த அதே திருவடிகள் தேவர்களுக்கும் மேன்மையானதேயாகும்” என்று கூறி அமைந்தாள்.

சுவைக்கத்தக்க நயம் :
இவ்வகையில் திருச்சாழல் என்னும் விளையாட்டுப் பாடல் மூலம் ஒருத்தி இறைவனைப் பழிப்பதுபோலவும், இன்னொருத்தி இறைவனின் செயல்களை நியாயப்படுத்துவதுபோலவும் மாணிக்கவாசகர் சிவபெருமானின் பெருமைகளைப் புலப்படுத்தியுள்ள நயம் சுவைக்கத் தக்கதாகும்.

இலக்கணக்குறிப்பு

சுடுகாடு, கொல்புலி, குரைகடல் – வினைத்தொகைகள்
நல்லாடை – பண்புத்தொகை
அயன்மால் – உம்மைத்தொகை
கற்பொடி – ஆறாம் வேற்றுமைத்தொகை.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

உறுப்பிலக்கணம்

1. உண்டான் – உண் + ட் + ஆன்
உண் – பகுதி, ட் – இறந்தகால இடைநிலை, ஆன் படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி.

2. உண்டிலன் – உண் + ட் + இல் + அன்
உண் – பகுதி, ட் – இறந்தகால இடைநிலை இல் – எதிர்மறை இடைநிலை,
அன் – படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி.

3. அடைந்த – அடை + த் (ந்) + த் அ
அடை – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
அ – பெயரெச்ச விகுதி.

புணர்ச்சி விதிகள்

1. கற்பொடி – கல் + பொடி
“லள வேற்றுமையில் வலிவரின் றடவும் ஆகும்” (கற்பொடி)

2. உலகனைத்தும் – உலகு + அனைத்தும்
“உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” (உலக் + அனைத்தும்)
“உடல் பால் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (உலகனைத்தும்)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

3. திருவடி – திரு + அடி
ஏனை உயிர்வழி வவ்வும்” (திரு + வ் + அடி)
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (திருவடி)

4. தாயுமிலி – தாயும் + இலி
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தாயுமிலி)

5. தேவரெல்லாம் – தேவர் + எல்லாம்
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தேவரெல்லாம்)

6. தனையடைந்த – தனை + அடைந்த
“இ ஈ ஐ வழி யவ்வும்” (தனை + ய் + அடைந்த)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தனையடைந்த)

7. புலித்தோல் – புலி + தோல்
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (புலித்தோல்)

8. தனியன் – தனி + அன்
“இ ஈ ஐ வழி யவ்வும்” (தனி + ய் + அன்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தனியன்)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

9. நல்லாடை – நன்மை + ஆடை
“ஈறுபோதல்” (நன் + ஆடை), “முன்னின்ற மெய்திரிதல்” (நல் + ஆடை)
“தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்” (நல்ல் + ஆடை),
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (நல்லாடை)

பலவுள் தெரிக

Question 1.
பெண்கள் விளையாடும் விளையாட்டு வகைகளுள் ஒன்று ………………….
அ) சாழல்
ஆ) சிற்றில்
இ) சிறுதேர்
ஈ) சிறுபறை
Answer:
அ) சாழல்

கூடுதல் வினாக்கள்

Question 2.
திருவாசகம் முழுமையையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ………………….
அ) பெஸ்கி
ஆ) கால்டுவெல்
இ) வீரமாமுனிவர்
ஈ) ஜி.யு. போப்
Answer:
ஈ) ஜி.யு. போப்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

Question 3.
சைவத் திருமுறைகளில் திருவாசகம், ………………….திருமுறையாக உள்ளது.
அ) பன்னிரண்டாம்
ஆ) ஆறாம்
இ) எட்டாம்
ஈ) ஏழாம்
Answer:
இ) எட்டாம்

Question 4.
திருமங்கையாழ்வார் பாடியது………………….
அ) திருச்சாழல்
ஆ) நாட்டார் வழக்கியல்
இ) தேவாரம்
ஈ) பெரிய திருமொழி
Answer:
ஈ) பெரிய திருமொழி

Question 5.
திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள திருப்பதிகங்கள் ………………….
அ) 658
இ) 51
ஈ) 12
Answer:
இ) 51

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

Question 6.
சாழல் வடிவத்தைக் கையாண்ட ஆழ்வார் ………………….
அ) பெரியாழ்வார்
ஆ) திருமங்கை ஆழ்வார்
இ) ஆண்டாள்
ஈ) திருப்பாணாழ்வார்
Answer:
ஆ) திருமங்கை ஆழ்வார்

Question 7.
சைவத் திருமுறைகள் ………………….
அ) ஏட்டு
ஆ) பதினெட்டு
இ) பத்து
ஈ) பன்னிரண்டு
Answer:
பன்னிரண்டு

Question 8.
பைத் திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக அமைந்தது ………………….
அ) தேவாரம்
ஆ) திருவாய்மொழி
இ) திருவாசகம்
ஈ) திருக்குறள்
Answer:
இ) திருவாசகம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

Question 9.
மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள் ………………….
அ) திருவாசகம், தேவாரம்
ஆ) திருக்கோவையார், தேவாரம்
இ) திருவாசகம், திருக்கோவையார்
ஈ) திருவாசகம், திருப்புகழ்
Answer:
இ) திருவாசகம், திருக்கோவையார்

Question 10.
ஒருவர் வினா கேட்டு, அதற்கு மற்றொருவர் விடை கூறும் வகையில் இறைவனைப் போற்றிப் பாடப்பட்டவை ………………….
அ) திருச்சாழல், திருப்புகழ்
ஆ) பெரிய திருமொழி, திருவருட்பா
இ) திருப்புகழ், திருவருட்பா
ஈ) திருச்சாழல், பெரிய திருமொழி
Answer:
ஈ) திருச்சாழல், பெரிய திருமொழி

Question 11.
மாணிக்கவாசகர், ‘திருச்சாழலில்’………………….பாடல்களைப் பாடியுள்ளார்.
அ) பன்னிரண்டு
ஆ) எட்டு
இ) இருபது
ஈ) பத்து
Answer:
இ) இருபது

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.4 திருச்சாழல்

Question 12.
பொருத்துக.
1. காயில் – அ. திருமால்
2. அந்தம் – ஆ. நஞ்சு
3. அயன் – இ. வெகுண்டால்
4. ஆலாலம் – ஈ. முடிவு
– உ. பிரமன்
Answer:
1-இ, 2-ஈ, 3-உ, 4-ஆ

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

குறுவினாக்கள் (கூடுதல்)

Question 1.
திரிகூட ராசப்பக் கவிராயர் இயற்றிய நூல்கள் யாவை?
Answer:
குற்றாலக் குறவஞ்சி, குற்றால மாலை, குற்றாலச் சிலேடை, குற்றாலப் பிள்ளைத் தமிழ், குற்றால யமக அந்தாதி ஆகியன, திரிகூட ராசப்பக் கவிராயர் இயற்றிய நூல்கள் ஆகும்.

Question 2.
சிங்கிக்குப் பரிசளித்த நாடுகள் எவை?
Answer:
சேலத்து நாடு, கோலத்து நாடு, பாண்டி நாடு, கண்டி நாடு ஆகியவை, சிங்கிக்குப் பரிசளித்த நாடுகளாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

Question 3.
சிங்கி பெற்ற பரிசுப் பொருட்களுள் நான்கினைக் குறிப்பிடுக.
Answer:
சிலம்பு, தண்டை , பாடகம், காலாழி.

சிறுவினா

Question 1.
சிங்கி பெற்ற பரிசுப் பொருட்களாகக் குற்றாலக் குறவஞ்சி கூறுவன யாவை?
Answer:

  • சேலத்து நாட்டில் பெற்ற சிலம்பு;
  • கோலத்து நாட்டாரிடம் பெற்ற முறுக்கிட்ட தண்டை;
  • பாண்டியனார் மகள் கொடுத்த பாடகம்;
  • குற்றாலர் சந்நிதிப் பெண்கள் கொடுத்த அணிமணிக் கெச்சம்;
  • கண்டி தேசத்தில் பெற்ற காலாழி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

கூடுதல் வினாக்கள்

Question 2.
குறவஞ்சி – பெயர்க்காரணம் குறித்துக் குறிப்பெழுதுக.
Answer:

  • குறவஞ்சி, சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று; தமிழ்ப் பாடல் நாடக இலக்கிய வடிவாகும்.
  • பாட்டுடைத் தலைவன் உலாவரக் கண்ட தலைவி, அத் தலைவன்மீது காதல் கொள்வாள்.
  • அப்போது வரும் குறவர்குலப் பெண் ஒருத்தி, தலைவிக்கு நற்குறி கூறிப் பரிசில்களைப் பெறுவாள்.
  • இவ்வகையில் அமைவது, ‘குறவஞ்சி’ இலக்கியம். இதனைக் ‘குறத்திப் பாட்டு’ எனவும் கூறுவர்.

Question 3.
குற்றாலக் குறவஞ்சி – குறிப்புத் தருக.
Answer:
சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான குற்றாலக் குறவஞ்சி, நாடக இலக்கிய வடிவில் அமைந்ததாகும். இது இயற்றமிழின் செழுமையையும், இசைத்தமிழின் இனிமையையும், நாடகத்தமிழின் எழிலினையும் ஒருங்கே கொண்ட முத்தமிழ்க் காவியமாகத் திகழ்வது. உலா வந்த தலைவன்மீது காதல் கொண்ட தலைவிக்குக் குறத்தி குறி சொல்லிப் பரிசு பெறுவதுபோன்ற அமைப்புடையது.

தென்காசிக்கு அருகிலுள்ள குற்றாலத்தில் எழுந்தருளியுள்ள குற்றாலநாதரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, திரிகூட ராசப்பக் கவிராயர் பாடிய குறவஞ்சி, ‘திருக்குற்றாலக் குறவஞ்சி’ என வழங்கப்பெறுகிறது. இது ‘கவிதைக் கிரீடம்’ எனப் போற்றப்படுகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

Question 4.
திரிகூட ராசப்பக் கவிராயர் குறித்து அறிவன யாவை?
Answer:

  • திருநெல்வேலி விசய நாராயணம் என்னும் ஊரில் வாழ்ந்தவர், திரிகூட ராசப்பக் கவிராயர்.
  • திருக்குற்றால நாதர் கோவிலில் பணிபுரிந்தார்.
  • சைவசமயக் கல்வியிலும் இலக்கிய இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தவர்.
  • குற்றாலத் தலபுராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ், யமக அந்தாதி முதலிய நூல்களை இயற்றி யுள்ளார். திருக்குற்றாலநாதர் கோவிலின் ‘வித்துவான்’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்.
  • மதுரை முத்து விசயரங்க சொக்கலிங்கனார் வேண்டுதலின்படி, திருக்குற்றாலக் குறவஞ்சியைப் பாடி அரங்கேற்றினார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

நெடுவினா – கூடுதல் வினா

Question 1.
சிங்கன் சிங்கி – உரையாடலை விரித்துரைக்க.
Answer:
குறி சொல்லப் போன குறவஞ்சி :
குறி சொல்லிப் பரிசில்களைப் பெற்றுக்கொண்டு திரும்பிய குறத்தி சிங்கியை, அவள் கணவன் சிங்கன் சந்தித்தான். அவள் அணிந்திருந்த அணிவகைகளைக் கண்டு வியந்தான்.

“நெடுநாள் பிரிந்திருந்தமையால், “என்னிடம் சொல்லாமல் இத்தனை நாள்களாக எங்கே சென்றாய்?” என வினவினான்.

அதற்குச் சிங்கி :
“கொத்தான மலர்களால் அலங்கரித்த கூந்தலையுடைய பெண்களுக்குக் குறி சொல்லப் போனேன்” என்று கூறினாள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

சிங்கனின் வினா – சிங்கி விடை :

சிங்கன் : “உன்னைப் பார்க்க அதிசயமாகத் தோன்றுகிறது! ஆனால் அது பற்றிப் – இருக்கிறது!”.
சிங்கி : “எவர்க்கும் பயப்படாமல் தோன்றுவதை அஞ்சாமல் சொல்”,
சிங்கன் : “காலுக்கு மேல் பெரிய விரியன் பாம்புபோல் கடித்துக் கிடப்பது என்ன?”
சிங்கி : “சேலத்து நாட்டில் குறி சொல்லியதற்குப் பரிசாகப் பெற்ற சிலம்
சிங்கன் : “அதற்கு மேல் திருகு முருகாகக் கிடப்பது என்ன?”
சிங்கி : “கலிங்க நாட்டில் கொடுத்த முறுக்கிட்ட தண்டை”

சிங்கன் : “சரி, நாங்கூழ்ப் புழுபோல் நீண்டு நெளிந்து குறுதிக் கிடப்பது என்ன?”
சிங்கி : “பாண்டியனார் மகளுக்குச் சொன்ன குறிக்குப் பரிசாக அளித்த பாடகம்” என்றாள்.
சிங்கன் : “உன் காலிலே பெரிய தவளைபோல் கட்டியள்ளது என்னடி?”,
சிங்கி : “இறைவன் குற்றாலநாதர் சந்நிதிப் பெண்கள் கொடுத்த அணிமணிக் கெச்சம்”.
சிங்கன் : “அப்படியானால் சுண்டு விரலிலே கண்டலப் பூச்சிபோல் சுருண்டு கிடப்பது என்ன?”
சிங்கி : “கண்டி தேசத்தில் முன்பு நான் பெற்ற காலாழி”.
இப்படி உரையாடிக் கொண்டு, தம் உறைவிடம் நோக்கிச் சென்றனர்.

இலக்கணக்குறிப்பு

மாண்ட, பெற்ற, இட்ட, கொடுத்த கட்டிய – பெயரெச்சங்கள்
சொல்ல, கடித்து, சொல்லி நீண்டு, நெளிந்து, சுருண்டு – வினையெச்சங்கள்
சுண்டுவிரல் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
திருகுமுருகு – உம்மைத்தொகை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

உறுப்பிலக்கணம்

1. பெற்ற பெறு (பெற்று) + அ
பெறு பகுதி, ‘பெற்று’ என ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டியது, அ – பெயரெச்ச விகுதி.

2. நடந்தாய் – நட + த் (ந்) + த் + ஆய்
நட – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி.

3. சொல்ல – சொல் + ல் + அ
சொல் – பகுதி, ல் – சந்தி, அ – வினையெச்ச விகுதி.

4. கடித்து – கடி + த் + த் + உ
கடி – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, உ – வினையெச்ச விகுதி.

5. சொல்லி – சொல் + ல் + இ
சொல் – பகுதி, ல் – சந்தி, இ – வினையெச்ச விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

6. கொடுத்த – கொடு + த் + த் + அ
கொடு – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.

7. நெளிந்த – நெளி + த் (ந்) + த் + அ
நெளி – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
அ – பெயரெச்ச விகுதி.

புணர்ச்சி விதிகள்

1. பயமில்லை – பயம் + இல்லை
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (பயமில்லை)

2. காலாழி – கால் + ஆழி
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (காலாழி)

3. விரியன் – விரி + அன்
“இ ஈ ஐ வழி யவ்வும்” (விரி + ய் + அன் )
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (விரியன்)

4. குண்டலப் பூச்சி – குண்டலம் + பூச்சி
“மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்புவும் ஆகும்” (குண்டல + பூச்சி)
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (குண்டப்பூச்சி)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

பலவுள் தெரிக

Question 1.
கீழுள்ளவற்றைப் பொருத்தி விடை தேர்க.
அ) விரியன் – 1. தண்டை
ஆ) திருகுமுருகு – 2. காலாழி
இ) நாங்கூழ்ப்புழு – 3. சிலம்பு
ஈ) குண்டலப்பூச்சி – 4. பாடகம்
i – 3 4 2 1
ii – 3 1 4 2
iii – 4 3 2 1
iv – 4 1 3 2
Answer:
ii – 3 1 4 2

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

கூடுதல் வினாக்கள்

Question 2.
திரிகூட ராசப்பக் கவிராழரின் கவிதைக் கிரீடம்’ என்று போற்றப்பட்ட நூல் ………………
அ) குற்றால மாலை
ஆ) குற்றாலக் கோவை
இ) நன்னகர் வெண்பா
ஈ) குற்றாலக் குறவஞ்சி
Answer:
ஈ) தற்றாகக் குறவஞ்சி

Question 3.
முத்தமிழ்க் காப்பியமாகத் திகழும் சிற்றிலக்கியம் ………………
அ) காவடிச்சிந்து
ஆ) திருமலை முருகன் பள்ளு
இ) குற்றாலக் குறவஞ்சி
ஈ) திருச்சாழல்
Answer:
இ) குற்றாலக் குறவஞ்சி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

Question 4.
நாடக இலக்கிய வடிவத்தில் அமைந்தது ………………
அ) பரணி
ஆ) கலம்பகம்
இ) குறவஞ்சி
ஈ) காவடிச்சிந்து
Answer:
இ) குற்றாலக் குறவஞ்சி

Question 5.
‘குறத்திப்பாட்டு’ என வழங்கப் பெறுவது ………………
அ) பள்ளு
ஆ) காவடிச்சிந்து
இ) பரணி
ஈ) குறவஞ்சி
Answer:
ஈ) குறவஞ்சி

Question 6.
குற்றாலக் குறவஞ்சி பாடியவர் ………………
அ) வில்வரத்தினம்
ஆ) பெரியவன் கவிராயர்
இ) திரிகூட ராசப்பக் கவிராயர்
ஈ) அழகிய பெரியவன்
Answer:
இ) திரிகூட ராசப்பக் கவிராயர்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

Question 7.
குற்றாலக் குறவஞ்சி இயற்றி அரங்கேற்றக் காரணமானவர் ………………
அ) வள்ளல் சீதக்காதி
ஆ) சென்னிகுளம் அண்ணாமலையார்
இ) மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார்
ஈ) இராசராசசோழன்
Answer:
இ) மதுரை முத்துவிசயரங்க சொக்கலிங்கனார்

Question 8.
சிங்கிக்குச் சிலம்பைப் பரிசளித்த நாடு ………………
அ) கோலத்து நாடு
ஆ) பாண்டி நாடு
இ) சேலத்து நாடு
ஈ) கண்டிதேசம்
Answer:
இ) சேலத்து நாடு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

Question 9.
‘திருகுமுருகு’ என்று சிங்கன் குறிப்பிட்டது ………………
அ) காலாழி பீலி
ஆ) பாடகம்
இ) முறுக்கிட்ட தண்டை
ஈ) அணிமணிக்கெச்சம்
Answer:
இ) முறுக்கிட்ட தண்டை

Question 10.
அரசர்களையும், வள்ளல்களையும், வீரர்களையும், தனி மனிதர்களையும் பாடியவை………………
அ) சமய நூல்கள்
ஆ) சங்க இலக்கியங்கள்
இ) சிறுகாப்பியங்கள்
ஈ) சிற்றிலக்கியங்கள்
Answer:
ஆ) சங்க இலக்கியங்கள்

Question 11.
கடவுளோடு மனிதர்களைப் பாடியவை ………………
அ) சங்க இலக்கியங்கள்
ஆ) சிற்றிலக்கியங்கள்
இ) சமய இலக்கியங்கள்
ஈ) காப்பியங்கள்
Answer:
ஆ) சிற்றிலக்கியங்கள்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.3 குற்றாலக் குறவஞ்சி

Question 12.
பொருத்துக.
1. குழல் – அ. சன்மானம்
2. நாங்கூழ் – ஆ. பூமாலை
3. வரிசை – இ. கூந்தல்
4. கொத்து – ஈ. கோலம்
– உ. மண்புழு
Answer:
1-இ, 2-உ, 3-ஆ 4.ஆ

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

குறுவினாக்கள் (கூடுதல்)

Question 1.
ஆத்மாநாம் தம் கவிதைவழி தூண்டுவது யாது?
Answer:
விலங்குகளும் தாவர வகைகளும் இயற்கைவழி இன்ப வாழ்வு வாழ்வகை விளக்கித் தம் கவிதைவழி ஆத்மாநாம், சிந்தனையைத் தூண்டியுள்ளார்.

Question 2.
அணில் எங்கே உறங்கச் சென்றது? அதன் கனவு எதைக் குறித்தது?
Answer:
மலர்க்கிளைப் படுக்கையிலோ, ஆற்று மணல் சரிவிலோ, சதுர வட்ட கோண மயக்கச் சந்து பொந்துகளிலோ அணில் உறங்கச் சென்றது. உணவு, உறக்கம் குறித்தே அது கனவு கண்டது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

சிறுவினா

Question 1.
உணவும் உறக்கமும் அணில் கனவாம் – உங்கள் கனவை உங்கள் சொற்களில் விளக்குக.
Answer:

  • காலை எழுந்ததும் பள்ளிக்குச் செல்ல ஆயத்தமாக வெண்டும்.
  • அதற்குமுன் ஆசிரியர் கொடுத்த வீட்டுப்பாட வேலைகளை முடித்தோமா என்று பார்க்கவேண்டும்.
  • உணவூட்டக் காத்திருக்கும் அம்மாவுக்குப் பதில் சொல்லவேண்டும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

கூடுதல் வினாக்கள்

Question 2.
‘கேள்வி’ என்னும் தலைப்பில், ‘ஆத்மாநாம் உணர்த்தும் செய்திகளை எழுதுக.
Answer:

  • காலையில் எழுந்ததும் இரை தோத துள்ளி ஓடும் அணில், இரவு எங்கே உறங்குகிறது?
  • மலர்க்கிளையாகிய படுக்கையிலா ? ஆற்று மணல் சரிவிலா? சந்து பொந்துகளிலா?
  • ஒன்றல்ல, நூற்றுக்கணகம் இருக்கும் இந்த அணில்கள், நிச்சயம் தம் குழந்தைத்தனமான
  • முகங்களுடனும் சிஜியிள்ளைக் கைகளுடனும் அனுபவித்தே உண்ணும் !
  • இவை உணலையும் உறக்கத்தையும் தவிர, தங்களைப் பற்றி என்ன கனவு காணும்? என்பது, ஆத்மாநாமின் ‘கேள்வி’க் கவிதைச் செய்தியாகும்.

Question 3.
புளியமர நிழலில் கேட்டதாக ஆத்மாநாம் கூறுவன யாவை?
Answer:
சமீபத்தில் ஒரு புளியமரம் என் நண்பனாயிற்று! தற்செயலாக நான் அப்புறம் சென்றபோது, “என்னைத் தெரிகிறதா? நினைவு இருக்கிறதா? அன்று ஒரு நாள் நீ புளியம் பழங்கள் பொறுக்க வந்தபோது, என் தமக்கையின் மடியில் அயர்ந்து போனாய்!

அப்போது உன் முகம் உடல் எங்கும் குளிர்காற்றை வீசினேனே! எப்படியும் என் மடிக்கு வா!” என, நிழலிலிருந்து குரல் கேட்டதாக ஆத்மாநாம் கூறுகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

Question 4.
ஆத்மாநாம் – குறிப்பெழுதுக.
Answer:

  • மதுசூதனன் என்பது, ‘ஆத்மாநாம்’ என்பாரின் இயற்பெயர்.
  • முப்பத்திரண்டு ஆண்டுகளே வாழ்ந்தவர்.
  • 156 கவிதைகளை எழுதித் தமிழ்க்கவிதை உலகில் ஆளுமை மிக்கவராகத் திகழ்ந்தார்.
  • ‘காகிதத்தில் ஒரு கோடு’ என்பது இவருடைய கவிதைத் தொகுப்பு.
  • ‘ழ’ என்னும் சிற்றிதழைச் சில காலம் நடத்தினார்.
  • கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்னும் மூன்று தளங்களில் இயங்கினார்.

இலக்கணக்குறிப்பு

உணவையும், உறக்கத்தையும் – எண்ணும்மை
சதுர வட்டக் கோணம் – உம்மைத்தொகை

உறுப்பிலக்கணம்

1. சென்ற – செல் (ன்) + ற் + அ
செல் – பகுதி, ல் ‘ன்’ எனத் திரிந்தது விகாரம், ற் – இறந்தகால இடைநிலை,
அ – பெயரெச்ச விகுதி.

2. குளிர்ந்த – குளிர் + த் (ந்) + த் + அ
குளிர் – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
அ – பெயரெச்ச விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

புணர்ச்சி விதிகள்

Question 1.
நூற்றுக்கணக்கு – நூறு + கணக்கு
Answer:
“நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்களுள் டற ஒற்று இரட்டும்” (நற்று + கணக்கு) “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (நூற்றுக்கணக்கு)

Question 2.
நண்பனாயிற்று – நண்பன் + ஆயிற்று
Answer:
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (நண்பனரயினது)

Question 3.
நிழலிலிருந்து – நிழலில் + இருந்து
Answer:
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (நிலிருந்து)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

பலவுள் தெரிக

Question 1.
‘ழ’ என்னும் பெயரில் கவிஞர் ஆத்மருதமால் வெளியிடப்பட்டது; கவிதைக் கிரீடம்’ என்று போற்றப்படுவது…………………..
அ) சிற்றிதழ்; குற்றாலக்குறவஞ்.
ஆ) கவிதைநூல், திருச்சாழல்
இ) நாளிதழ், நன்னகர் வெல்டர்
ஈ) கட்டுரை நூல், குற்றாலக்கோவை
Answer:
அ) சிற்றிதழ், குஜாலக்குறவஞ்சி

Question 2.
‘ஆத்மாநாம்’ இயற்பெயர் யாது?
அ) ரங்கராஜன்
ஆ) மதுசூதனன்
இ) ராசேந்திரன்
ஈ) மீனாட்சி
Answer:
ஆது சூதனன்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

Question 3.
ஆத்மாநாமின் கவிதைத் தொகுப்பு ………………….
அ) ஒன்றே ஒன்று
ஆ) இரண்டு
இ) ஆறு
ஈ) எதுவும் இல்லை
Answer:
அ) ஒன்றே ஒன்று

Question 4.
அணிலையும் புளியமரத்தையும் காட்சிப்படுத்திக் கவிதை படைத்தவர்………………….
அ) வில்வரத்தினம்
ஆ) மீரா
இ) மீனாட்சி
ஈ) ஆத்மாநாம்
Answer:
ஈ) ஆத்மாநாம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.2 ஆத்மாநாம் கவிதைகள்

Question 5.
ஆத்மாநாம் அவர்களின் முக்கியமான கவிதைத் தொகுப்பு ………………….
அ) கொடி விளக்கு
ஆ) கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்
இ) காகிதத்தில் ஒரு கோடு
ஈ) உதயத்திலிருந்து
Answer:
இ) காகிதத்தில் ஒரு கோடு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 1.
சாலைப் பாதுகாப்பினை வலியுறுத்தும் முழக்கத் தொடர்கள் அடங்கிய பதாகைகள் சிலவற்றை உருவாக்கிப் பள்ளியில் காட்சிப்படுத்துக.
Answer:
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம் 1
Samacheer Kalvi 12th Tamil Guide Chapter Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம் 2

Question 2.
எதிர்பாராத சூழலில் ஏற்படும் சாலை விபத்தையும், அவற்றைத் தடுக்கும் முறைகளையும் உள்ளடக்கிய நாடகம் ஒன்றை நடத்திக் காட்டுக.
Answer:

பங்குபெறுவோர் : ராமு, சோமு, பீமு.

ராமு : எங்க அப்பாவிடம் கேட்டுத் தொந்தரவு பண்ணி வாங்கின இருசக்கர வாகனம் இதுடா!
சோமு : நல்லா இருக்குடா, பல்சரா?
ராமு : பல்சர்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்டா. சரி இன்றைக்கு மகாபலிபுரம் வரைக்கும் வண்டியில் போய் வருவோமா?
சோமு : நான் தயார். ஆனா பீமு நீ வர்றியா?
பீமு : நானும் வர்றேன். ஆனால் ஒரு வேண்டுகோள்.
ராமு : என்னன்னு சொல்லு.
பீமு : மூவரும் வண்டியில் போகனும்னா, தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
ராமு : மூன்று இருக்குடா. போகலாம் வா.

(மூவரும் செல்கின்றனர். எதிரே லாரி ஒன்று தடம் மாறி வேகமாக வருகிறது. எவ்வளவோ இருசக்கர வாகனத்தை வளைத்தும் முடியாமல் வண்டி கீழே விழுந்துவிட்டது. மூவருக்கும் காயம். மருத்துவமனை சென்று வீடு திரும்புதல்)

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

பீமு : தலைக்கவசம் அணிய சொன்னேன். அதனால்தான் தலையில் அடி படல.
ராமு : பீமு, நீ நல்லா சொன்னடா, நான் முதல்ல தலைக்கவசம் வேணான்னு நெனச்சேன். மூன்று பேரு உயிரையும் நீ காப்பித்திட்ட.
சோமு : ஆமாண்டா, பீமு நீ வற்புறுத்தலன்னா, தலைக்கவசம் அணிந்திருக்க மாட்டோம். வெறும் தலையோட போயிருப்போம். அதிகமாக அடி பட்டிருக்கும்.
பீமு : நான் காப்பத்தலடா, தலைக்கவசம் நம்மள காப்பாத்துச்சு.
மூவரும் : தலைக்குக் கவசம்! நம் உயிர் காக்கும் சுவாசம்!

பாடநூல் வினாக்கள்

நெடுவினா

Question 1.
‘சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு’ – இக்கூற்று நனவாக நாம் செய்ய வேண்டியன யாவை?
Answer:
இந்தியாவிலேயே மிகுந்த சாலை விபத்துகள் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. எனவே, சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு உருவாக்க நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இருசக்கர வாகன விபத்தினைத் தவிர்க்க வேண்டும் :

  • பதினெட்டு வயது நிறைந்தவர்கள் மட்டுமே முறையான பயிற்சிப் பெற்று, ஓட்டுநர் உரிமம் பெற்று இரு சக்கர ஊர்தியை இயக்க வேண்டும்.
  • தலைக்கவசம் அணிந்தே செல்ல வேண்டும்.
  • இரண்டு பேருக்கு மேல் இரு சக்கர வாகனத்தில் செல்லக் கூடாது.
  • கைபேசியை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
  • சாலையில் ஊர்தியைக் குறுக்கும் நெடுக்குமாக இயக்காமல் இருந்தல் வேண்டும்.
  • காதணி கேட்பிகள் பயன்படுத்தி இரண்டுச் சக்கர வாகனங்களை இயக்கக் கூடாது.

வாகன ஓட்டிகளின் அலட்சியம் :
அவசரம் என்ற ஆளுகைக்கு உட்பட்ட நாம் விபத்தில்லாத் தமிழ்நாடு உருவாக சில விழிப்புணர்வுகளைக் கட்டாயமாகக் கொடுத்தல் வேண்டும்.
விபத்துகள் மிகுதியாக நடைபெறுவதற்கான காரணங்கள் :

  • வாகன ஓட்டுநர்கள் கவனக்குறைவு.
  • பயிற்சியில்லாமல் வாகனம் ஓட்டுவது தவறு.
  • தவறான தட்பவெப்பநிலையும், தட்ப வெப்பநிலைக்கு ஏற்ப வாகனம் ஓட்டும் பயிற்சி பெறுவது.
  • இயந்திரக் கோளாறு, மிகுதியான ஆட்களை சரக்குகளை ஏற்றிச் செல்வது.
  • தொடர் வண்டி இருப்புப்பாதைகளைக் கவனிக்காமல் கடப்பது.
  • மது அருந்திவிட்டு ஊர்தி ஓட்டுவதால் நிறையவே விபத்துகள் நடக்கின்றன.
    விபத்துகள் மிகுதியாக நடைபெறுவதற்கான காரணங்களை அறிந்து விபத்துகளைத் தவிர்க்க வேண்டும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

விபத்துகளைத் தவிர்க்க :
(i) பள்ளி மாணவர்களிடம் சாலை விதிகள் மற்றும் விபத்துகளைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வுகளைக் கொடுத்தல் வேண்டும்.

(ii) சாலையில் எவ்வாறு செல்ல வேண்டும் என்ற சாலை விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

(iii) வேகமாகச் செல்லும் வண்டியின் பின்புறத்தைப் பிடித்துக் கொண்டு ஓடுவது, மிதிவண்டியில் ஓடுவது, தவறானது, முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

(iv) பேருந்தில் பயணம் செய்யும் போது எப்படிப் பயணிப்பது என்பதை அறிந்து அதன்படி நடப்பது.

(v) பாதுகாப்பாகப் பயணிக்க உதவுகின்ற உத்தரவுக் குறியீடுகள், எச்சரிக்கைக் குறியீடுகள், தகவல் குறியீடுகள் ஆகியவற்றை அறிந்து அதனைப் பின்பற்றிப் பயணித்தல் வேண்டும்.

(vi) இவ்வாறு வாகனம் ஓட்டும் போது அலட்சியத்தைத் தவிர்த்து விபத்துகள் நடைபெறுவதற்கான காரணங்களை அறிந்து, இருசக்கர வாகனங்களை முறையாக உபயோகித்து சாலை விதிகளைப் : – பின்பற்றி, விபத்துகளைத் தவிர்த்து வந்தோம் என்றால், சாலை விபத்தில்லாத தமிழ்நாடு’ உருவாகும்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
எத்தனை வயதிற்கு உட்பட்டவர்கள் வண்டி ஓட்ட அனுமதியில்லை?
அ) 17
ஆ) 21
இ) 18
ஈ) 25
Answer:
இ) 18

Question 2.
சராசரியாக நாளொன்றுக்கு எத்தனை விபத்துகள் நடப்பதாகக் குறிப்பிடப்படுகிறது?
அ) 1312
ஆ) 1317
இ) 1315
ஈ) 1318
Answer:
ஆ) 1317

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 3.
சராசரியாக நாளொன்றுக்கு நடக்கும் விபத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை
அ) 413
ஆ) 613
இ) 418
ஈ) 618
Answer:
அ) 413

Question 4.
தமிழ்நாட்டில் நடைபெறும் விபத்துகளில் இருசக்கர ஊர்தியால் ஏற்படும் விபத்தின் விழுக்காடு
அ) 38
ஆ) 33
இ) 37
ஈ) 35
Answer:
ஈ) 35

Question 5.
சாலைப் போக்குவரத்து உதவிக்கு உரிய தொலைபேசி எண்
அ) 108
ஆ) 101
இ) 103
ஈ) 109
Answer:
இ) 103

Question 6.
உரிய வயது நிறைவடையாத குழந்தைகள் ஊர்திய இயக்கினாலோ விபத்தினை ஏற்படுத்தினாலோ அக்குழந்தைகளின் பெற்றோர்களுக்கு எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை
அ) 3
ஆ) 5
இ) 2
ஈ) 1
Answer:
அ) 3

Question 7.
ஊர்திகளுக்கு உரிய காப்பீடு இல்லாமல் ஊர்தியை இயக்கினால் வசூலிக்கப்படும் தண்டத்தொகை
அ) ₹2,000
ஆ) ₹3,000
இ) ₹450
ஈ) ₹800
Answer:
அ) ₹2,000

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 8.
மது குடித்துவிட்டு ஊர்தியை இயக்கினால் விதிக்கப்படும் தண்டத்தொகை
அ) ₹1,000
ஆ) ₹ 10,000
இ) ₹5,000
ஈ) ₹2,000
Answer:
ஆ) ₹ 10,000

Question 9.
கூற்று 1 : சாலைச் சந்திப்புகளில் எச்சரிக்கையான அணுகுமுறை தேவை.
கூற்று 2 : இதர சாலைப் பயனாளிகளை நண்பராக எண்ண வேண்டும்.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 சரி 2 தவறு
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஈ) கூற்று இரண்டும் சரி

Question 10.
கூற்று 1 : சாலைப் போக்குவரத்து உதவிக்குத் தொலைபேசி எண் 109-ஐ தொடர்பு கொள்ளலாம்.
கூற்று 2 : எதிரில் வரும், கடந்து செல்ல முற்படும் ஊர்திகளுக்கு வழிவிட வேண்டும்.

அ) கூற்று இரண்டும் சரி
ஆ) கூற்று இரண்டும் தவறு
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
ஈ) கூற்று 1 தவறு 2 சரி

Question 11.
கூற்று : 18 வயது நிறைவடையாத குழந்தைகள் ஊர்தி இயக்குவது சட்டப்படித் தவறு.
காரணம் : இச்சட்டத்தை மீறி ஊர்தி இயக்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்குத் தண்டனை வழங்குவதில்லை .

அ) கூற்று சரி காரணம் சரி
ஆ) கூற்று தவறு காரணம் சரி
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்று தவறு காரணம் தவறு
Answer:
இ) கூற்று சரி காரணம் தவறு

Question 12.
கூற்று 1 : சாலைகளில் இடம்பெற்றிருக்கும் குறியீடுகள் போக்குவரத்தினைச் சீர் செய்யவும் பாதுகாப்பாகப் பயணிக்கவும் உதவுகின்றன.
கூற்று 2 : சாலையின் வகைகள் மைல் கற்களின் விவரங்கள் பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று இரண்டும் சரி
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று 1 சரி 2 தவறு
Answer:
ஆ) கூற்று இரண்டும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 13.
சரியானதைத் தேர்க.
அ) சாலையில் உத்தரவு குறியீடுகள் இடம் பெறாது.
ஆ) சாலைச் சந்திப்புகளில் பாதுகாப்பற்ற அணுகுமுறை தேவை.
இ) சாலைப்போக்குவரத்து உதவிக்குத் தொலைபேசி எண் 103-ஐ தொடர்பு கொள்ளவும்.
ஈ) 18 வயது நிறைவடையாத குழந்தைகள் ஊர்தி இயக்கலாம்.
Answer:
இ) சாலைப்போக்குவரத்து உதவிக்குத் தொலைபேசி எண் 103-ஐ தொடர்பு கொள்ளவும்.

Question 14.
சரியானதைத் தேர்க.
அ) காப்பீடு இல்லாமல் இயக்கினால் – ₹3,000 தண்டத்தொகை
ஆ) தலைகவசம் அணியாமல் பயணித்தால் – ₹2,000 தண்டத்தொகை
இ) மதுகுடித்துவிட்டு ஊர்தியை இயக்கினால் – ₹1,000 தண்டத்தொகை
ஈ) அபாயகரமான முறையில் வாகனம் இயக்கினால் – ₹5,000 தண்டத்தொகை
Answer:
ஈ) அபாயகரமான முறையில் வாகனம் இயக்கினால் – ₹5,000 தண்டத்தொகை

Question 15.
பொருந்தாததைத் தேர்க.
அ) மது குடித்துவிட்டு ஊர்தியை இயக்கினால் 10,000 தண்டத்தொகை
ஆ) காப்பீடு இல்லாமல் ஊர்தியை இயக்கினால் 2000 தண்டத்தொகை
இ) ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஊர்தியை இயக்கினால் ₹ 500 தண்டத்தொகையோ அல்லது 6 மாதச் சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ கிடைக்கும்.
ஈ) அபாயகரமான முறையில் ஊர்தியை ஓட்டினால் 15,000 தண்டத்தொகை.
Answer:
இ) ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஊர்தியை இயக்கினால் ₹ 500 தண்டத்தொகையோ அல்லது 6 மாதச் சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ கிடைக்கும்.

Question 16.
பொருந்தாததைத் தேர்க.
அ) பாரிஸ் நகரில் 1909-ஆம் ஆண்டு ‘பன்னாட்டுச் சாலை அமைப்பு உருவாக்கப்பட்டது.
ஆ) இதர சாலைப் பயனணிகளை நண்பராக எண்ண வேண்டும்.
இ) சாலைச் சந்திப்புகளில் எவ்வித எச்சரிக்க அணுகுமுறையும் தேவையில்லை.
ஈ) மொழிவேறுபாடற்ற குறியீடுகள் எளிதில் மக்களுக்குப் புரியும்.
Answer:
இ) சாலைச் சந்திப்புகளில் எவ்வித எச்சரிக்க அணுகுமுறையும் தேவையில்லை.

Question 17.
பொருத்துக.
அ) மது குடித்துவிட்டு – 1. ₹1,000
ஆ) இருசக்கர வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் பயணித்தால் – 2. ₹2,000
இ) ஓட்டுநர் உரிமம் இல்லாமல் – 3. ₹5,000
ஈ) தலைகவசம் அணியாமல் – 4. ₹10,000

அ) 4, 2, 3, 1
ஆ) 4, 3, 2, 1
இ) 4, 1, 2, 3
ஈ) 4, 1, 3, 2
Answer:
ஆ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 18.
உலகிலேயே அதிக சாலைப் போக்குவரத்து வசதிகளைக் கொண்ட இரண்டாவது பெரிய நாடு
அ) இந்தியா
ஆ) சீனா
இ) பாகிஸ்தான்
ஈ) அமெரிக்கா
Answer:
அ) இந்தியா

Question 19.
ஏறக்குறைய …………. இலட்சம் கி.மீ சாலைகள் நம் நாட்டில் உள்ளன.
அ) 25
ஆ) 35
இ) 45
ஈ) 55
Answer:
ஈ) 55

Question 20.
நம் நாட்டில் ……. கோடிக்கும் மேற்பட்ட ஊர்திகள் உள்ளன.
அ) 11
ஆ) 21
இ) 31
ஈ) 51
Answer:
ஆ) 21

Question 21.
நம் நாட்டில் ஓர் ஆண்டிற்கு ஏறக்குறைய …………. இலட்சம் விபத்துகள் நடக்கின்றன.
அ) 1
ஆ) 10
இ) 5
ஈ) 20
Answer:
இ) 5

Question 22.
நாளொன்றுக்கு நேரும் விபத்துகளில் உயிரிழப்போர்
அ) மூன்றில் ஒரு பங்கினர்
ஆ) நான்கில் ஒரு பங்கினர்
இ) ஐந்தில் ஒரு பங்கினர்
ஈ) ஆறில் ஒரு பங்கினர்
Answer:
அ) மூன்றில் ஒரு பங்கினர்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 23.
இந்தியாவில் அதிக சாலை விபத்துகள் நடக்கும் மாநிலம்
அ) கேரளா
ஆ) தமிழ்நாடு
இ) கர்நாடகா
ஈ) மத்திய பிரதேசம்
Answer:
ஆ) தமிழ்நாடு

Question 24.
தமிழ்நாட்டில் நடைபெறும் மொத்த விபத்துக்களில் இருசக்கர ஊர்திகளால் ஏற்படும் விபத்துகள் ……………. விழுக்காடு.
அ) 15
ஆ) 25
இ) 35
ஈ) 55
Answer:
இ) 35

Question 25.
பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவது
அ) சட்டப்படி சரியாகும்
ஆ) சட்டப்படி குற்றமாகும்
இ) சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
ஆ) சட்டப்படி குற்றமாகும்

Question 26.
முதல் பன்னாட்டுச் சாலை அமைப்பு மாநாடு நடைபெற்ற இடம், ஆண்டு
அ) பாரிஸ், 1909
ஆ) ரியோடி ஜெனிரோ, 1908
இ) ஹாமில்டன், 1907
ஈ) டர்பன், 1915
Answer:
அ) பாரிஸ், 1909

Question 27.
18 வயது நிறைவடையாத குழந்தைகள் ஊர்திகள் இயக்கினாலோ, விபத்தினை ஏற்படுத்தினாலோ அக்குழந்தைகளின் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கும் சட்டம்
அ) மோட்டார் வாகனச் சட்டம், 1988
ஆ) மோட்டார் வாகனச் சட்டம் 1965
இ) மோட்டார் வாகனச் சட்டம், 2017
ஈ) மோட்டார் வாகனச் சட்டம், 2016
Answer:
இ) மோட்டார் வாகனச் சட்டம், 2017

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

Question 28.
பொருத்திக் காட்டுக.
அ) அபாயகரமான முறையில் ஊர்தியை ஓட்டினால் தண்டனைத் தொகை – 1.₹ 10,000
ஆ) மது குடித்துவிட்டு ஊர்தியை இயக்கினால் தண்டனைத்தொகை – 2. ₹ 5,000
இ) தலைக்கவசம் அணியாமல் இருசக்கர ஊர்தியை இயக்கினால் தண்டனைத் தொகை – 3. ₹ 2, 000
ஈ) ஊர்திகளுக்குக் காப்பீடு இல்லாமல் இயக்கினால் தண்டனைத் தொகை – 4. ₹ 1,000

அ) 2, 1, 4, 3
ஆ) 3, 4, 2,1
இ) 4, 3, 2, 1
ஈ) 1, 2, 3, 4
Answer:
அ) 2, 1, 4, 3

Question 29.
சாலைகளில் இடம்பெற்றிருக்கும் குறியீடுகள்
i) உத்தரவுக் குறியீடுகள்
ii) எச்சரிக்கைக் குறியீடுகள்
iii) பன்மையை உணர்த்தும் ‘கள்’ விகுதி சேர்ந்த சொற்களைப் பிரிக்காமல் எழுத வேண்டும்.
iv) தகவல் குறியீடுகள்

அ) i, ii சரி
ஆ) ii, iii சரி
இ) ili மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

Question 30.
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஊர்தியை இயக்கினால் கிடைக்கும் தண்டனைகள்
i) ரூ. 5,000
ii) மூன்று மாதச் சிறைத்தண்டனை
iii) அல்லது இரண்டும்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.5 பாதுகாப்பாய் ஒரு பயணம்

அ) i சரி
ஆ) ii சரி
இ) ii) மட்டும் தவறு
ஈ) மூன்றும் சரி
Answer:
ஈ) மூன்றும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 4.4 புறநானூறு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 4.4 புறநானூறு

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 1.
கல்வியின் சிறப்பை உணர்த்தும் திருக்குறள், நாலடியார் பாடல்களைத் திரட்டி வகுப்பறையில் உரையாடுக.
Answer:
i) யாதானும் நாடாமால் ஊராமல் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.

  • யாதானும் நாடாமால் ………….. கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடு, எல்லா ஊரும்
    சொந்த ஊர், அவ்வாறு இருக்க ஒருவன் சாகும்வரை ஏன் கல்வி கற்கக் கூடாது என்கிறார் வள்ளுவர்.
  • சாகும் வரை கல்வியைத் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது வள்ளுவனின் வற்புறுத்தல்.

ii) ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.

  • ஒரு பிறவியில் ஒருவன் கற்கின்ற கல்வியானது எழுகின்ற ஏழு பிறவியிலும் அவனுக்குப் பாதுகாப்பினைத் தரவல்லது.
  • ஏழு பிறவியிலும் தொடர்ந்து வரவல்லது கல்வி ஒன்றேயாகும்.

iii) நாய்க்கால் சிறு விரல் போல் நன்கணியராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்
சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும் – செய் விளைக்கும்
வாய்க்கால் அனையர் தொடர்பு – நாலடியார்

  • நாலடியார் பாடலில், நாயின் கால் விரல்கள் நெருங்கி இருக்கும். அதுபோல நம்மை நெருங்கி இருப்பவர்கள் ஈயின் கால் அளவுகூட உதவமாட்டார்கள்.
  • வாய்க்காலின் தூரத்திலிருந்து வரும் தண்ணீர் பயிர் விளைச்சலுக்கு உதவும். அதுபோல தூரத்திலிருந்து உதவி செய்யும் நல்லவர்களை நாம் நெருங்கிச் சென்று நட்பு கொள்ள வேண்டும் என்கிறது.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
“காவினெம் கலனே ; சுருக்கினெம் கலப்பை” – இத்தொடரில் ‘கலன்’ உணர்த்தும் பொருள்
அ) போர்க்கருவி
ஆ) தச்சுக்கருவி
இ) இசைக்கருவி
ஈ) வேளாண்கருவி
Answer:
இ) இசைக்கருவி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

குறுவினா

Question 1.
‘எத்திசையிலும் சோறு தட்டாது கிட்டும்’ – யார்க்கு?
Answer:

  • கலைத்தொழில் செய்வோர்க்கு சோறு தட்டாது கிட்டும்.
  • கலைத்தொழிலில் இருக்கும் வல்லவர்களுக்கு இவ்வுலகில் எத்திசையில் சென்றாலும் உணவு தவறாமல் கிடைக்கும்.

சிறுவினா

Question 1.
வாயிலோயே எனத் தொடங்கும் ஔவையாரின் புறநானூற்றுப் பாடல் பாடாண் திணைக்கு உரியது என்பதை நிறுவுக.
Answer:
திணை விளக்கம்:
பாடாண் திணை என்பது பாடப்படும் ஆண் மகனின் புகழ், வலிமை, கொடை, அருள், கல்வி, ஒழுக்கம் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவதாகும்.

சான்று விளக்கம்:

  • வாயிலோயே எனத் தொடங்கும் ஔவையாரின் புறநானூற்றுப் பாடலில், ‘பரிசிலர்க்கு அடையா வாயிலோயே!’ என்ற வரி இடம் பெற்றுள்ளது.
  • அதாவது தன்னை நாடி வரும் பரிசிலர்க்கு வாயிலை அடைக்காத அரண்மனை அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை.
  • தன்னை நாடிவரும் புலவர்கள் முதற்கொண்டு அனைவருக்கும் வாரிவழங்கும் நல்ல உள்ளம் கொண்டவன் அதியமான் நெடுமான் அஞ்சி.
  • பரிசிலர் வரும்போது வாயிலை அடைக்காத குணம் உடையவன் என்றதால் அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைத்தன்மை புலனாகிறது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

பொருத்தம்:
தன்னை நாடி வருவோர்க்கு இல்லை என்று சொல்லாது தனது அரண்மனை வாயிலை வாயிற்காவலனைக் கொண்டு அடைக்காமல் பரிசிலர்க்கு உரிய பரிசினைப் பெற எப்போதும் திறந்திடும் வாயிலை உடையது அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை என்று கூறியதிலிருந்து அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைத்தன்மை வெளிப்படுவதால் இப்பாடல் பாடாண்திணைக்கு உரியது என்பதை அறியலாம்.

இலக்கணக் குறிப்பு

வயங்குமொழி – வினைத்தொகை
அடையா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
அறிவும் புகழும் – எண்ணும்மை
சிறாஅர் – இசைநிறை அளபெடை.

புணர்ச்சி விதி

1. எத்திசை = எ + திசை
இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் என்ற விதிப்படி எத்திசை என்று புணர்ந்தது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
கற்றோரது ‘செம்மாப்பு’ என்பதில் ‘செம்மாப்பு’ – பொருள்
அ) பெருமை
ஆ) புகழ்
இ) இறுமாப்பு
ஈ) வெற்றி
Answer:
இ) இறுமாப்பு

Question 2.
புறநானூற்றுக்கு வழங்கும் வேறு பெயர்
அ) புறம், புறப்பாட்டு
ஆ) புறம், புறப்பொருள்
இ) நானூறு, புறப்பாட்டு
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) புறம், புறப்பாட்டு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 3.
‘வயங்குமொழி வித்தித்தாம்’ – ‘வித்தி’ என்பதன் பொருள்
அ) விதி
ஆ) விதை
இ) புத்தி
ஈ) விதைத்து
Answer:
ஈ) விதைத்து

Question 4.
தாழும் நிலை வரினும் கலங்காதவர்
அ) கல்வி கற்றோர்
ஆ) செல்வம் உடையவர்
இ) ஞானம் பெற்றவர்
ஈ) செல்வாக்கு உடையவர்
Answer:
அ) கல்வி கற்றோர்

Question 5.
ஔவையார் அகநானூற்றில் பாடியுள்ள பாடல்கள்
அ) 5
ஆ) 15
இ) 4
ஈ) 7
Answer:
இ) 4

Question 6.
கூற்று 1 : இவ்வுலகில் அறிவும் புகழும் உடையோர் இன்னும் மாய்ந்துவிடவில்லை.
கூற்று 2 : கலைத்தொழில் வல்லவர்களுக்கு எத்திசை சென்றாலும் உணவு தவறாமல் கிடைக்கும்.

அ) கூற்று இரண்டும் சரி
ஆ) கூற்று இரண்டும் தவறு
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
அ) கூற்று இரண்டும் சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 7.
கூற்று 1 : அதியமானிடம் நட்பு பாராட்டிய ஔவை அவருக்காகப் போர்க்களம் சென்றார்.
கூற்று 2 : அதியமானின் அரசவைப் புலவராக இருந்தவர் ஔவையார்.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று இரண்டும் சரி
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று 1 தவறு 2 சரி
Answer:
ஈ) கூற்று 1 தவறு 2 சரி

Question 8.
சரியானதைத் தேர்க.
அ) எம் யாழினை எடுக்கவில்லை ; கருவிப்பையையும் எடுக்கவில்லை.
ஆ) கலைத்தொழில் வல்ல எங்களுக்கு எத்திசை சென்றாலும் ஒன்றும் கிடைப்பதில்லை.
இ) தச்சனின் பிள்ளைகள் காட்டுக்குச் சென்றால் வெட்ட மரம் கிடைக்காது.
ஈ) விரைந்து ஓடும் குதிரையைக் கொண்டவன் நெடுமான் அஞ்சி.
Answer:
ஈ) விரைந்து ஓடும் குதிரையைக் கொண்டவன் நெடுமான் அஞ்சி.

Question 9.
சரியானதைத் தேர்க.
அ) புறநானூற்றிற்குப் புறம், புறப்பாட்டு என்னும் பெயர்கள் உண்டு.
ஆ) புறநானூற்று பத்துப் பாட்டு நூல்களில் ஒன்று.
இ) அதியமானிடம் நட்பு பாராட்டும் குணம் இல்லாதவர் ஒளவையார்.
ஈ) ஔவையார் பாடியதாக நற்றிணையில் 8 பாடல்கள் உள்ளன.
Answer:
அ) புறநானூற்றிற்குப் புறம், புறப்பாட்டு என்னும் பெயர்கள் உண்டு.

Question 10.
பொருந்தியதைத் தேர்க.
அ) அறிவும் புகழும் – வினைத்தொகை
ஆ) சிறாஅர் – இசைநிறையளபெடை
இ) வயங்குமொழி – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஈ) அடையா – எண்ணும்மை
Answer:
ஆ) சிறாஅர் – இசைநிறையளபெடை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 11.
பொருந்தாததைத் தேர்க.
அ) தமிழரின் அகவாழ்வைப் பற்றி எடுத்துக் கூறுவது புறநானூறு.
ஆ) அதியமானிடம் நட்பு பாராட்டிய ஔவை அவருக்காகத் தூது சென்றவர்.
இ) ஒளவையார் பாடியதாக புறநானூற்றில் 33 பாடல்கள் உள்ளன.
ஈ) புறநானூறு பாடிய ஔவையார் அதியமானிடம் இருந்து நெல்லிகனியைப் பெற்றவர்.
Answer:
அ) தமிழரின் அகவாழ்வைப் பற்றி எடுத்துக் கூறுவது புறநானூறு.

Question 12.
புறநானூற்றில் பயின்று வரும் பா
அ) நேரிசை ஆசிரியப்பா
ஆ) குறள் வெண்பா
இ) சிந்தியல் வெண்பா
ஈ) கலிவிருத்தம்
Answer:
அ) நேரிசை ஆசிரியப்பா

Question 13.
பரிசில் துறை என்பது
அ) பரிசு வேண்டி வாயிலில் நிற்பது
ஆ) மன்னன் பரிசளித்துப் புலவரைப் பாராட்டுவது
இ) பரிசு பெற்ற புலவன் மகிழ்ச்சியாக இல்லறம் திரும்புவது
ஈ) இவற்றில் எதுவுமில்லை .
Answer:
அ) பரிசு வேண்டி வாயிலில் நிற்பது

Question 14.
பொருத்திக் காட்டுக.
அ) உரன் – 1. கோடரி
ஆ) கலன் – 2. கருவிகளை வைக்கும் பை
இ) கலப்பை – 3. யாழ்
ஈ) மழு – 4. வலிமை

அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 4, 1, 2, 3
ஈ) 2, 1, 3, 4
Answer:
அ) 4, 3, 2, 1

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 15.
பொருத்திக் காட்டுக.
அ) பரிசிலர் – 1. காடு
ஆ) கல்வி – 2. மரங்க ள்
இ) திசை – 3. சிறுவர்
ஈ) உணவு – 4. கோடரி

அ) 3, 4, 1, 2
ஆ) 3, 4, 2, 1
இ) 4, 3, 2, 1
ஈ) 4, 1, 2, 3
Answer:
அ) 3, 4, 1, 2

Question 16.
பொருத்திக் காட்டுக.
அ) வயங்குமொழி – 1. எண்ணும்மை
ஆ) அடையா – 2. இசைநிறை அளபெடை
இ) அறிவும் புகழும் – 3. வினைத்தொகை
ஈ) சிறாஅர் – 4. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

அ) 3, 4, 1, 2
ஆ) 4, 3, 2, 1
இ) 3, 2, 4, 1
ஈ) 2, 1, 4, 3
Answer:
அ) 3, 4, 1, 2

Question 17.
‘வாயிலோயே! வாயிலோயே!’ என்னும் புறநானூற்றுப் பாடல் பாடப்பட்டதன் காரணம்
அ) சிற்றரசனான அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் தராமல் காலம் நீட்டித்தமையால் பாடியது.
ஆ) பேகன் இரவலர்க்கு இரங்காமையால் பாடியது.
இ) பாரி முல்லைத் தேர் கொடுத்தமையால் பாடியது.
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) சிற்றரசனான அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் தராமல் காலம் நீட்டித்தமையால் பாடியது.

Question 18.
‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்’ என்னும் சொல்லுக்குரிய புணர்ச்சி விதிக்கு பொருத்தமானச் சொல்
அ) எத்திசை
ஆ) உரனுடை
இ) வலுந்தலை
ஈ) மாய்ந்தென
Answer:
அ) எத்திசை

Question 19.
புறநானூறு ………………. நூல்க ளுள் ஒன்று.
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) பதினெண்கீழ்க்கணக்கு
ஈ) நீதி
Answer:
அ) எட்டுத்தொகை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 20.
அதியமானிடம் நட்புப் பாராட்டியவர்
அ) ஓதலாந்தையார்
ஆ) ஔவையார்
இ) கபிலர்
ஈ) பரணர்
Answer:
ஆ) ஔவையார்

Question 21.
ஔவை யாருக்காகத் தூது சென்றார்?
அ) அதியமானுக்காக
ஆ) பேகனுக்காக
இ) பாரிக்காக
ஈ) தொண்டைமானுக்காக
Answer:
அ) அதியமானுக்காக

Question 22.
ஔவையார் பாடிய பாடல்களில் நமக்குக் கிடைத்துள்ளவை
அ) 22
ஆ) 36
இ) 59
ஈ) 65
Answer:
இ) 59

Question 23.
ஔவையார் பாடிய பாடல்களின் எண்ணிக்கையும் நூல்களும் (பொருத்திக் காட்டுக).
அ) அகநானூறு – 1) 7
ஆ) புறநானூறு – 2) 15
இ) குறுந்தொகை – 3) 04
ஈ) நற்றிணை – 4) 33

அ) 3, 4, 2, 1
ஆ) 4, 3, 2, 1
இ) 2, 1, 3, 4
ஈ) 4, 2, 1, 3
Answer:
அ) 3, 4, 2, 1

Question 24.
அதியமானின் அரசவைப் புலவர்
அ) கபிலர்
ஆ) பாணர்
இ) ஒளவையார்
ஈ) ஒக்கூர் மாசாத்தியார்
Answer:
இ) ஒளவையார்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

குறுவினா

Question 1.
புறநானூற்றுப் பாடல்களால் அறியப்படுபவை யாவை?
Answer:
தமிழரின் போர், வீரம், நாகரிகம், பண்பாடு, நெறிப்பட்ட வாழ்க்கை .

Question 2.
ஔவையார் பாடியதாக நமக்குக் கிடைத்துள்ள சங்க இலக்கிய பாடல்கள் எத்தனை?
Answer:

  • அகநானூற்றில் 4 பாடல்கள்.
  • குறுந்தொகையில் 15 பாடல்கள்.
  • நற்றிணையில் 7 பாடல்கள்.
  • புறநானூற்றில் 33 பாடல்கள் என மொத்தம் 59 பாடல்கள்.

Question 3.
பாடாண் திணை என்றால் என்ன?
Answer:

  • பாடு + ஆண் + திணை – பாடாண் திணை
  • பாடப்படும் ஆண் மகனின் புகழ், வலிமை, கொடை, அருள். கல்வி, ஒழுக்கம் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவதாகும்.
  • ஆண் மகனது ஒழுகலாற்றைக் கூறுவது பாடாண்திணையின் நோக்கமாகும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 4.
கல்வி கற்றோரின் சிறப்பு என்ன?
Answer:

  • கல்வி கற்றோர் எந்நிலையிலும் சிறந்தே இருப்பர்.
  • தாமும் எந்நிலை வந்தாலும் கலங்க மாட்டார்கள்.
  • அறிவால் உலகையே சொந்தமாக்கிக் கொள்வர்.
  • எங்கு சென்றாலும் மற்றவர் மதிப்பைப் பெறுவர்.

Question 5.
கற்றவர்க்கு எங்கு சென்றாலும் உணவு கிடைக்கும் என்பதற்கு ஔவையார் கூறும் உவமை யாது?
Answer:

  • மரம் வெட்டும் தச்சர் பெற்ற சிறுவர்கள் தங்கள் மழுவோடு (கோடாரி) காட்டுக்குச் சென்றால் அவர்கள் வெட்டுவதற்கு மரம் கிடைக்காமல் போகுமா? என்பதே உவமை.
  • பரிசிலருக்குச் சிறுவரும், கல்விக்குக் கோடரியும், போகும் திசைக்குக் காடும், உணவிற்குக் காட்டில் உள்ள மரங்களும் உவமைகளாகும்.

சிறுவினா

Question 1.
புறநானூறு – குறிப்பு வரைக.
Answer:

  • புறம் + நான்கு + நூறு
  • 400 பாடல்களைக் கொண்டது.
  • எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • இது புறப்பொருள் பற்றியது.
  • புறம், புறப்பாட்டு எனவும் அழைக்கப்படுகிறது.
  • தமிழரின் போர், வீரம், நாகரிகம், பண்பாடு, நெறிப்பட்ட வாழ்க்கை முதலியவற்றை விளக்கமாக எடுத்துரைக்கிறது.
  • சங்ககால மக்களின் வாழ்க்கையை அறிவதற்கு கருவூலமாகத் திகழ்கிறது.

Question 2.
‘அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென,
வறுத்தலை உலகமும் அன்றே ; அதனால்
காவினெம் கலனே ; சுருக்கினெம் கலப்பை’ – இடஞ்சுட்டி பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் :
இப்பாடல் அடிகளானது அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் தராமல் நீட்டித்தபோது ஔவையார் பாடியதாகும். இது புறநானூற்றின் 206 ஆம் பாடலில் இடம் பெற்றுள்ளது.

பொருள் :
இவ்வுலகில் அறிவும் புகழும் உடையவர்கள் இன்னும் மாய்ந்துவிடவில்லை . இந்த உலகமும் வெற்றிடமாகவில்லை. அதனால் எம் இசைக்கருவிகளைத் தோளில் சுமந்தோம். யாழ் முதலிய இசைக்கருவிகளையும் பைகளில் இட்டுக் கட்டிக் கொண்டோம்.

விளக்கம் :
அறிவு சார்ந்த கருத்துகளை எடுத்துக்கூறி அதியமான் நெடுமான் அஞ்சியிடம் பரிசு பெற சென்றார் ஔவையார். அதியமான் நெடுமான் அஞ்சி பரிசு தர காலம் தாழ்த்தியதால் கோபமடைந்த ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சி மட்டும்தான் இந்த உலகில் இருக்கிறானா, இவ்வுலகில் அறிவும் புகழும் உடையவர்கள் இன்னும் மாய்ந்துவிடவில்லை .

இந்த உலகமும் வெற்றிடமாகவில்லை உன் மன்னன் பரிசு தரவில்லை என்றால் என்ன ? கலைத்தொழிலில் வல்ல எங்களுக்கு எங்குச் சென்றாலும் உணவு கிடைக்கும். எனவே எங்கள் இசைக்கருவிகளைத் தோளில் எடுத்துவிட்டோம் இசைக்கருவிகளையும் பைகளில் இட்டுக்கட்டி விட்டோம் என்று கூறுமிடத்தில் இடம் பெற்றுள்ளது.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 3.
‘எத்திசை செல்லினும் அத்திசைச் சோறே’ என்ற ஔவையாரின் செம்மாப்பு கருத்தின் உண்மையை ஆராய்க.
Answer:
(i) கற்றவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பாகும்.
(ii) கற்றோரின் சொல்லைக் கேட்டு அவர்களுக்கு வாரி வாரி வழங்கினர் பண்டைய தமிழ் மன்னர்கள்.

(iii) நல்ல கருத்துகளைக் கூறி அரசின் நிர்வாகத்தையும், அரசாட்சியின் நடைமுறையையும் சீர்ப்படுத்தும் பணியைக் கற்றறிந்த புலவர்கள் மேற்கொண்டனர்.

(iv) அத்தகைய கற்றறிந்தோரை அரசர்கள் மிகவும் கௌரவித்துப் பரிசுகள் பலவும் வழங்கினர்.

(v) பரிசு தர காலதாமதம் ஆனதால் ஒளவையார் வாயில் காவலனிடம் உன் அரசன் ஒருவனை மட்டுமே நம்பி இந்த உலகம் உள்ளது என்று அவன் நினைத்துள்ளானோ?

(vi) மரம் வெட்டும் தச்சனின் மகன் கோடரியுடன் காட்டிற்குச் சென்றால் அவர்கள் வெட்ட காட்டில் ஏதாவது ஒரு மரம் கிடைக்காமல் போய்விடுமா?

(vii) ‘அதுபோலவே, கற்றவர்கள் எத்திசை செல்லினும் அத்திசையில் உணவு கிடைக்கும்.’

(viii) கற்றவர்களுக்கு அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் புகழ் உண்டாகும்.

(ix) கல்விக்கு அத்தகைய சிறப்புண்டு என்பதை அறிந்ததால் ஔவையார் செம்பாப்புடன் வாயிற்காவலனிடம் எத்திசை செல்லினும் அத்திசைச் சோறே என்று வாயிற்காவலனிடம் கூறினார்.

Question 4.
பாடாண் திணை சான்றுடன் விளக்குக.
Answer:
திணை விளக்கம்:
பாடு + ஆண் + திணை – பாடாண் திணை. பாடப்படும் ஆண் மகனின் புகழ், வலிமை, கொடை, அருள். கல்வி, ஒழுக்கம் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவதாகும். ஆண் மகனது ஒழுகலாற்றைக் கூறுவது பாடாண்திணையின் நோக்கமாகும்.

சான்று:
வாயி லோயே! வாயி லோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வத்தித் தாம் ……
என்ற புறநானூற்றுப் பாடல் அடிகள்.

பொருத்தம்:
தன்னை நாடி வருவோர்க்கு இல்லை என்று சொல்லாது தனது அரண்மனை வாயிலை வாயிற்காவலனைக் கொண்டு அடைக்காமல் பரிசிலர்க்கு உரிய பரிசினைப் பெற எப்போதும் திறந்திடும் வாயிலை உடையது அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை என்று கூறியதிலிருந்து அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைத்தன்மை வெளிப்படுவதால் இப்பாடல் 12 பாடாண்திணைக்கு உரியது என்பதை அறியலாம்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

Question 5.
பரிசில் துறை சான்றுடன் விளக்குக.
Answer:
துறை விளக்கம்:
பரிசு வேண்டி வாயிலில் நிற்பது பரிசில் துறையாகும்.

சான்று:
வாயி லோயே! வாயி லோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வத்தித் தாம் ……
என்ற புறநானூற்றுப் பாடல் அடிகள்.

பொருத்தம்:
தன்னை நாடி வருவோர்க்கு இல்லை என்று சொல்லாது தனது அரண்மனை வாயிலை வாயிற்காவலனைக் கொண்டு அடைக்காமல் பரிசிலர்க்கு உரிய பரிசினைப் பெற எப்போதும் திறந்திடும் வாயிலை உடையது அதியமான் நெடுமான் அஞ்சியின் அரண்மனை என்று கூறியதிலிருந்து அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைத்தன்மையை நோக்கி பரிசிலர் அரண்மனையின் வாயிலில் நிற்பது பரிசில் துறையாகும்.

Question 6.
“பரிசிலிர்க்கு அடையா வாயிலோயே” என்று வாயிற்காவலளிடம் தன் வருத்தத்தைப் பதியவும் புலவரின் மனக்குமுறல்களை எடுத்தியம்புக.
Answer:
பரிசிலர்க்கு வாயிலை அடைக்காத காவலனே!

  • விரைந்து ஓடும் குதிரையைக் கொண்ட நெடுமான் அஞ்சி, தன்னுடைய தகுதியை அறியானோ?
  • இவ்வுலகில், அறிவும் புகழும் உடையோர் இன்னும் மாய்ந்துவிடவில்லை, இந்த உலகமும் வெற்றிடமாகிவிடவில்லை.
  • ஆகவே, எம் யாழினை எடுத்துக் கொண்டோம்; கருவிப்பையையும் சுருக்கிட்டுக் கட்டிக் கொண்டோம்.
  • மரம் வெட்டும் தச்சனின் தொழில் வல்ல பிள்ளைகள், கோடரியுடன் காட்டுக்குச் சென்றால் அவர்கள் வெட்டுவதற்கு ஏதாவது ஒரு மரம் கிடைக்காமலா போகும்?
  • அதுபோல, கலைத்தொழில் வல்ல எங்களுக்கும் இவ்வுலகில் எத்திசையில் சென்றாலும் அத்திசையில் உணவு, தவறாமல் கிட்டும்.
  • என்று தன் மனக்குமுறலை வாயிற்காப்பானிடம் புலவர் எடுத்துரைக்கிறார்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 4.4 புறநானூறு

“அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென
வறுந்தலை உலகமும் அன்றே”

நெடுவினா

Question 1.
அதியமான் நெடுமான் அஞ்சியின் பரிசு நீட்டித்தல் குணம் தவறு என்பதை ஔவையாரின் புறநானூற்றுப் பரிசில் துறை பாடல் எங்ஙனம் உணர்த்துகிறது ?
Answer:
(i) வாயில் காவலனே ! வாயில் காவலனே ! புலவர்களாகிய எங்களைப் போன்றவர்களின் வாழ்நிலையானது வள்ளல்களை அணுகி அவர்தம் செவிகளிலே உரைப்பதாகும்.

(ii) அவர்களிடம் அறிவார்ந்த சொற்களைத் துணிச்சலுடன் விதைத்துத் தாம் எண்ணியதை முடிக்கும் வலிமையுடையது.

(iii) வள்ளல்கள் பற்றித் தாங்கள் எழுதிய கவிதையின் சிறப்பை அறிந்து பரிசளிக்க வேண்டும் என நினைத்து வருந்துவர்.

(iv) விரைந்து ஓடும் குதிரையைக் கொண்ட நெடுமான் அஞ்சி தன்னுடைய தகுதியை அறியாமல் இருக்கின்றான்.

(v) அவனை நம்பித்தான் இவ்வுலகில் வறுமை நிலையில் உள்ளோர் வாழ்கின்றனர் என்று நினைக்கின்றானோ ? காலம் நீட்டிப்பது சரியான முறையல்ல.

(vi) பரிசிலர் அரண்மனை வருவதை விரும்பும் அதியாமன் நெடுமான் அஞ்சி பரிசு தர நீட்டிப்பது முறையாகாது.

(vii) இவ்வுலகில் அறிவும் புகழும் உடையோர் இன்னும் அழிந்து போகவில்லை . இந்த உலகமும் வெற்றிடமாகி விடவில்லை.

(viii) பரிசு தரக் காலம் நீட்டித்தான் என்றால், எங்களை அறிந்து பரிசு தருவதற்குப் பல பேர் உள்ளனர்.

(ix) மரம் வெட்டும் தச்சனின் தொழில் வல்ல பிள்ளைகள் கோடரியுடன் காட்டுக்குச் சென்றால் அவர்கள் வெட்ட ஒரு மரம் கிடைக்கும்.

(x) அதியமான் நெடுமான் அஞ்சி பரிசு தர காலம் நீட்டித்தான் என்றால், நான் என் இசைக்கருவியைத் தோளில் சுமந்துக் கொண்டும், என் இசைக்கருவிகளைக் கருவிப்பைக்குள் சுருக்கிட்டுக் கொண் டும் புறப்படப் போகின்றேன்.

(xi) கலைத்தொழில் புரியும் எங்களைப் போன்றோரைக் காத்து வைக்க நினைக்கும் எண்ணம் சரியானது அன்று. ஏனெனில் இவ்வுலகின் எத்திசைச் சென்றாலும் அத்திசையில் உணவு தவறாமல் கிடைக்கும் என்று உணர்த்துகிறார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 6.1 காலத்தை வென்ற கலை Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

குறுவினாக்கள்

Question 1.
இந்தியக் கட்டடக் கலையின் மூன்று வகைகள் யாவை?
Answer:
நாகரம், வேசரம், திராவிடம்.

Question 2.
ஒலோகமாதேவீச்சுரம் கோவில் கல்வெட்டில் காணலாகும் பெண் அதிகாரிகளின் பெயர்களிலிருந்து நீங்கள் அறிவது யாவை?
Answer:
ஒலோகமாதேவீச்சுரம் கோவில் கல்வெட்டில் எருதந் குஞ்சர மல்லி’ என்ற பெண் அதிகாரி பற்றியும், இன்னொரு கல்வெட்டில் ‘சோமயன் அமிர்தவல்லி’ என்ற பெண் அதிகாரி பற்றியும் குறிப்புகள் உள்ளன.

இதனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பெண்கள் அதிகாரிகளாகப் படைரிந்தனர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

கூடுதல் வினாக்கள்

Question 4.
கோபுரம், விமானம் – வேறுபாடு என்ன?
Answer:

  • நுழைவு வாயிலின்மேல் அமைக்கப்படுவது கோபுரம். –
  • கருவறை’ என்னும் அகநாழிகையின்மேல் அமைக்கக் வெது விமானம்.

Question 5.
பிற்காலச் சோழர்களின் தனி அடையாளம் எது? .
Answer:
தஞ்சைப் பெரிய கோவிலில் முதலில் உள்ள கேரளாந்தகன் திருவாயில், அடுத்து உள்ள இராசராசன் திருவாயில் ஆகிய இரண்டு வாயில்களிலும் கோபுரங்கள் உள்ளன. இவை பிற்காலச் சோழர்களின் சிறப்பான தனி அடையாளங்கள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 6.
கற்றளிக் கோவில்கள் சிலவற்றைக் கூறுக.
Answer:
மகாபலிபுரம் கடற்கரைக் கோவில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், பனைமலைக் கோவில், தஞ்சைப் பெரிய கோவில் ஆகியன, கற்றளிக் கோவில்களாகும்.

Question 7.
‘கற்றளி’க் கோவிலை முதலில் உருவாக்கியவன் யார்?
Answer:
கருங்கற்களை ஒன் என் மேல் ஒன்றாக அடுக்கிக் ‘கற்றளி’க் கோவிலை கி.பி. ஏழாம் நூற்றாண்டில், இரண்டாம் நரசிம் வம் பல்லவ மன்னன் உருவாக்கினான்.

Question 8.
பழங்காலத்தில் கோவில்கள் எப்படிக் கட்டப்பட்டன?
Answer:

  • பழங்காலத்தில் கோவில்களை மண்ணால்கட்டி, மேலே மரத்தால் சட்டகம் இட்டனர்.
  • அவற்றின் மேல் செப்பு, பொன் தகடுகளைக் கூரையாக வேய்ந்தனர்.
  • அடுத்து, செங்கற்களை அடுக்கிக் கோவில்களைக் கட்டினர்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 9.
தடைவரைக் கோவில் என்பது யாது?
Answer:
செங்கல், சுண்ணாம்பு, மரம், உலோகம் முதலானவற்றைப் பயன்படுத்தாமல், மலைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட கோவில், குடைவரைக் கோவிலாகும்.

சிறுவினா

Question 1.
ஃப்ரெஸ்கோ ஓவியங்கள், கற்றளிக் கோவில்கள் குறித்து நீவிர் அறிவன யாவை?
Answer:

  • ஃபிரெஸ்கோ ஓவியங்கள் : * ‘ஃபிரெஸ்கோ’ என்னும் இத்தாலியச் சொல்லிற்குப் ‘புதுமை’ என்று பொருள். சுண்ணாம்புக் காரைப்பூச்சுமீது, அதன் ஈரம் காயும்முன் வரையப்படும் பழமையான ஓவியக் கலைநுட்பம்.
  • ஃபிரெஸ்கோ வகை ஓவியங்களை அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல் முதலான இடங்களில் காணலாம்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

கற்றளிக் கோவில்கள் :

செங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கோவில் கட்டுவதுபோல், கருங்கற்களை அடுக்கிக் கோவில் கட்டுவது ‘கற்றளி’ எனப்படும். மகாபலிபுரம் கடற்கரைக்கோவில், காஞ்சி கைலாச நாதர்கோவில், பனைமலைக்கோவில் ஆகியவை, கற்றளிக் கோவில்களுக்குச் சான்றுகளாகும்.

கூடுதல் வினாக்கள்

Question 2.
கற்றளிக் கோவில்கள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுகள் தருக.
Answer:
செங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டுவதைப்போல் கருங்கற்களை அடுக்கிக் கட்டுவதற்குக் ‘கற்றளி’ என்று பெயர். இவ்வடிவத்தை ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மன் உருவாக்கினான்.

மகாபலிபுரம் கடற்கரைக் கோவில், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், பனைமலைக்கோயில் ஆகியவற்றைக் கற்றளிக் கோவில்களுக்கு உதாரணங்களாகச் சொல்லலாம்.

அந்தவகையில் இராசராசசோழன் கட்டியது மிகப் பெரிய கற்றளிக் கோவிலாகும். தட்சிணமேரு’ என இராசராசனால் பெருமையுடன் அழைக்கப்பட்ட தஞ்சைப் பெரியகோவில் நம் நாட்டிலுள்ள கற்றளிக் கோவில்களில் பெரியதும் உயரமானதுமாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 3.
கோவில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல – நிறுவுக.
Answer:

  • பெரிதாகக் கட்டப்பட்ட தமிழகக் கோவில்கள், வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டும் இல்லை.
  • இசை, நடனம், நாடகம் முதலான அருங்கலைகள், அக்கோவில்களால் போற்றி வளர்க்கப்பட்டன.
  • மக்கள் ஒன்றுகூடும் இடங்களாகக் கோவில்கள் இருந்ததனால், மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய செய்திகள் அனைத்தையும் கல்வெட்டுகளாகப் பறித்தனர்.

பஞ்சம் ஏற்படும் காலத்தில், மக்களுக்கு உதவுவதற்காகத தானியக் கிடங்குகளையும் கோவில்களில் அமைத்திருந்தனர். கருவூலமாகவும், மருத்துவமனையாகவும், போர்க்காலங்களில் படைவீரர்கள் தங்கும் இடமாகவும் கோவில்கள் பயன்பட்டன.

Question 4.
தஞ்சைப் பெரிய கோவில் விமான அமைப்பின் ( சிலப்பினை விளக்குக.
Answer:

  • கற்றளிக் கோவில்களிலேயே மிகமிக உர மானதும் பெரியதும் தஞ்சைப் பெரிய கோவிலாகும். முழுவதும் கருங்கற்களை ஒன்றன் (மல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்பட்ட கோவில் இது.
  • ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் முயன்று, இராசராச சோழனால் இது கட்டி முடிக்கப்பட்டது.
  • இக்கோவில் கருவறை விமானம், 216 அடி உயரத்தையும், 13 தளங்களையும் கொண்டுள்ளது.
  • இதனை இராசராசன், தினைமேரு’ எனப் பெருமையுடன் அழைத்தான்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 5.
கோவில் கோபுரம் அமைக்கும் மரபு குறித்து எழுதுக.
Answer:
பழமையான கோவில்களில் கோபுரங்கள் சிறியனவாக இருந்தன. வெளிக்கோபுரம் உயரமாகவும், உள்கோபுரம் உயரம் குறைவாகவும் இரண்டு கோபுரம் அமைக்கும் மரபை இராசராசன் தோற்றுவித்தான்.

12ஆம் நூற்றாண்டில் கோபுரங்கள் அமைப்பு, தனிச்சிறப்புப் பெற்றது. நான்கு புறங்களில், நான்கு கோபுரங்கள் எழுப்பும் மரபு, இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் தொடங்கியது.

புகழ்பெற்ற கோவில்கள் பலவற்றில் மிக உயரமான கோபுரங்களை எழுப்பியது விஜயநகர அரசு. ‘கோபுரங்களின் கீழ்ப்பகுதி கருங்கல்லாலும், மேற்பகுதி செங்கற்களாலும் கட்டி இருப்பர்.

காஞ்சி, தில்லை, திருவண்ணாமலை, திருவரங்கம், மதுரை ஆகிய இடங்களிலுள்ள கோவில் கோபுரங்கள், நூற்றைம்பது அடி உயரத்திற்குமேல் இருக்கும்.

Question 6.
‘கலை’ என்பது குறித்து நீ அறிவன யாவை?
Answer:

  • மனிதனின் படைப்புத் திறனால் உருவானது கலை. கலை, நம் மனத்தில் அழகுணர்வைத் தூண்டி மகிழ்ச்சியைத் தருகிறது. நுண்கலை, பயன்கலை, பருண்மைக்கலை, கவின்கலை, நிகழ்த்துகலை எனப் பலவிதமாகப் பிரிப்பர்.
  • கலை என்பது, ஒரு சமூகத்தின் நாகரிகத்தையும் பண்பாட்டு மேன்மையையும் பிரதிபலிக்கிறது.
  • சிற்பம், கட்டடம், ஆடல், பாடல் முதலான கலைகளில், தமிழகம் பழங்காலத்திலேயே சிறப்புற்றிருந்தது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

நெடுவினா

Question 1.
‘கல்லும் கதை சொல்லும்’ – என்னும் தொடர், தஞ்சைப் பெரிய கோவிலுக்குப் பொருந்துவதை விளக்கி எழுதுக.
Answer:
காலத்தை வென்று நின்ற கலை :
ஒரு சமூகத்தின் நாகரிகம், பண்பாட்டு மேன்மைகளைப் பிரதிபலிப்பது கலை. தஞ்சைப் பெரிய கோவில், தமிழ்ச் சமுதாயத்தின் கலையாற்றலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அந்தக் கருங்கல் கலைச்செல்வம், தமிழரின் வரலாற்றுப் பெருமைகளை இன்றளவும் கதையாகக் கூறிக் கொண்டிருக்கிறது. தஞ்சையில் அமைந்துள்ள கோவில், இராசராச சோழனால் 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கருங்கற்களே இல்லாத நிலப்பரப்பில், கருங்கற் கொண்டு 216 அடி உயரம் உடையதாகவும், கருவறை விமானம், 13 தளங்களை உடையதாகவும் கட்டப்பட்டது.

கதை சொல்லும் கல்வெட்டு :
சுற்றுச்சுவரில் அமைந்துள்ள கல்வெட்டுச் செய்திகள், எண்ணற்ற பழமையான வரலாற்றைக் கூறுகின்றன. கதை சொல்லும் அந்தக் கல் இசை, நடனம், நாடகம் எனப் பல அருங்கலைகளைப் பேணி வளர்த்த செய்தியைத் தன்னுள் கொண்டுள்ளது. பஞ்ச காலத்தில் மக்களுக்கு உதவும் தானியக் கிடங்குகளைத் தன்னிடம் கொண்டிருந்ததை அறிய முடிகிறது. கருவூலமாக, மருத்துவமனையாக, படைவீரர் தங்கும் கூடமாகக் கோவில் பயன்பட்ட கதைகளைக் கேட்டறிய முடிகிறது.

கோவில் உருவான கதையைக் கூறுகிறது :
கோவிலை உருவாக்க மக்களும் அதிகாரிகளும் செயல்பட்டதைக் கதைபோல் எண்ணிப் பார்க்கச் செய்கிறது. இராசராசன் அமைத்த கோவிலின் முன்வாயில்கள் எண்ணற்ற வரலாற்றுக் கதைகளைக் கூறுகின்றன.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

ஓவியங்கள் கூறும் கதை :
கோவிலின் கருவறைத் தளங்களில் உள்ள சுற்றுக்கட்டம், சாந்தார நாழிகைப் பகுதிச் சுவர்களில், தட்சிணாமூர்த்தி ஓவியம், சுந்தரர் வரலாறு, திரிபுராந்தகர் ஓவியம் முதலியவற்றைப் பெரிய அளவில் வரைந்து வைத்துள்ளதை, இன்றளவும் காணமுடிகிறது. கோவல் கட்டுவதில் புதிய மரபு படைத்த இராசராசன் அமைத்த சிலைவடிவங்கள், வண்ண ஓவியங்கள் என யாவும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் கலை வளர்த்ததைக் கதைகதையாக இன்று இந்தப் பெரிய கோவில் நமக்குக் கூறுகிறது.

கல் சொல்லும் கதை :
ஆண்களே அன்றிப் பெண்களும் அதிகாரிகளாகப் பணி புரிந்த செய்தியைக் கல்வெட்டுகள் கதைபோல் பாதுகாத்து வைத்துள்ளன. தஞ்சை பெரிய கோவிலை ஒருமுறை காணும்போது, கல்லும் கதை சொல்லும்’ என்பது தெளிவாகப் புலப்படும்.

பலவுள் தெரிக

Question 1.
கூற்று 1 : தந்சைப் பெரியகோவிலிலுள்ள ஓவியங்களை எஸ். கே. கோவிந்தசாமி கண்டறிந்தார்.
கூற்று 2 : அங்குள்ள சோழர்காலத்து ஓவியங்கள், ஃப்ரெஸ்கோ வகையைச் சார்ந்தவை
அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
ஆ) கூற்று இரண்டும் தவறு
இ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஈ) கூற்று இரண்டும் சரி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

கூடுதல் வினாக்கள்

Question 2.
மனிதகுல வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்தவை
அ) கல்வியும் தொழிலும்
ஆ) கல்வியும் கலையும்
இ) கலையும் அறிவியலும்
ஈ) தொழிலும் அறிவியலும்
Answer:
இ) கலையும் அறிவியலும்

Question 3.
ஒரு சமூகத்தின் நாகரிகத்தையும் பண்பாட்டு மேம்பாட்டையும் பிரதிபலிப்பது ……………
அ) கல்வி
ஆ) அறிவியல்
இ) கோவில்
ஈ) கலை
Answer:
ஈ) கலை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 4.
கட்டடக் கலை என்பது, ‘உறைந்து போன இசை’ என்று கூறியவர் …………………
அ) எஸ். கே. கோவிந்தசாமி
ஆ) ஃப்ரெஸ்கோ
இ) ஷூல்ஸ்
ஈ) பிரடிரிகா வொன்ஸ்லீ விங்
Answer:
ஈ) பிரடிரிகா வொன்ஸ்லீ விங்

Question 5.
தஞ்சைப் பெரிய கோவில் கோபுரங்களில் உயரமானது………………
அ) இராசராசன் திருவாயில் கோபுரம்
ஆ) கேரளாந்தகன் திருவாயில் கோபுரம்
இ) மதுராந்தகன் கோபுரம்
ஈ) இராசராசன் கோபுரம்
Answer:
ஆ) கேரளாந்தகன் திருவாயில் கோபுரம்

Question 6.
‘தட்சிண மேரு’ என அழைக்கப்படுவது –
அ) காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்
ஆ) திருவில்லிபுத்தூர் கோவில்
இ) தஞ்சைப் பெரிய கோவில்
ஈ) ஓலோகமாதேவிச்சுரம் கோவில்
Answer:
இ) தஞ்சைப் பெரிய கோவில்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 7.
செங்கற்களாலான எழுபத்தெட்டுக் கோவில்களைக் கட்டியவன் ………….
அ) முதலாம் மகேந்திரவர்மன்
ஆ) இராசசிம்மன்
இ) இரண்டாம் குலோத்துங்க சோழன்
ஈ) சோழன் செங்கணான்
Answer:
ஈ) சோழன் செங்கணான்

Question 8.
‘இராசசிம்மேச்சுரம்’ என அழைக்கப்படும் கோவில் ……………
அ) திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில்
ஆ) தஞ்சைப் பெரிய கோவில்
இ) காஞ்சி கைலாசநாதர் கோவில்
ஈ) தாராசுரம் ஐராவதேசுவரர் கோவில்
Answer:
இ) காஞ்சி கைலாசநாதர் கோவில்

Question 9.
இராசராசனுக்குப் பெரியதொரு கோவிலைக் கட்ட வேன்டுமென்ற எண்ணத்தைத் தூண்டிய கோவில் ………….
அ) தில்லைக் கோவில்
ஆ) குற்றாலநாதர் கோவில்
இ) திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
ஈ) காஞ்சி கைலாசநாதர் கோவில்
Answer:
ஈ) காஞ்சி கைலாசநாதர் கோவில்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 10.
ஃப்ரெஸ்கோ வகை ஓவியங்கள் காணப்படும் இடம்……………
அ) காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவில்லிபுத்தூர்
ஆ) தஞ்சாவூர், அஜந்தா, திருவில்லிபுத்தூர்
இ) அஜந்தா, எல்லோரா. சித்தன்னவாசல்
ஈ) காஞ்சிபுரம், எல்லோரா, சித்தன்னவாசல்
Answer:
இ) அஜந்தா, எ மோரா, சித்தன்னவாசல்

Question 11.
தஞ்சைப் பெரிய கோவிலில் அமைந்த கட்டடக்கலைப் பாணி ……………
அ) நாகர கலைப்பாணி
ஆ) வேசர கலைப்பாணி
இ) திராவிட கலைப்பாணி
ஈ) மாயன் கலைப்பாணி
Answer:
இ) தராவிட கலைப்பாணி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 12.
தஞ்சை பெரிய கோவிலில் உள்ள ஓவியங்களைக் கண்டறிந்தவர் ……………
அ) எஸ்.கே.கோவிந்தசாமி
ஆ) பி. கே. கோவிந்தசாமி
12) வி. கே. கோவிந்தராஜன்
ஈ) எம். எஸ். கோவிந்தராஜன்
Answer:
அ) எஸ்.கே.கோவிந்தசாமி

Question 13.
‘கற்றளி’க் கோவிலை முதன்முதலில் உருவாக்கியவர்……………
அ) முதலாம் நரசிம்மவர்மன்
ஆ) இராசராசசோழன்
இ) இரண்டாம் நரசிம்மவர்மன்
ஈ) மகேந்திரவர்மன்
Answer:
இ) இரண்டாம் நரசிம்மவர்மன்

Question 14.
காஞ்சி கைலாசநாதர் கோவிலை அமைத்த மன்னன்……………
அ) மகேந்திரவர்மன்
ஆ) இராசசிம்மன்
இ) நரசிம்மவர்மன்
ஈ) இராசராசன்
Answer:
ஆ) இராசசிம்மன்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 15.
குடைவரைக் கோவில்களை அமைத்தவன் ……………
அ) இராசசிம்மன்
ஆ) முதலாம் மகேந்திரவர்மன்
இ) இரண்டாம் நரசிம்மன்
ஈ) இராசராச சோழன்
Answer:
ஆ) முதலாம் மகேந்திரவர்மன்

Question 16.
தஞ்சைப் பெரிய கோவிலை இராசராசன்தான் கட்டினான் என உறுதி செய்தவர் ……………
அ) இத்தாலி ஃப்ரெஸ்கோ
ஆ) ஜெர்மனி அறிஞர் ஷூல்ஸ்
இ) எஸ். கே. கோவிந்தசாமி
ஈ) கோவலூர் உடையான்
Answer:
ஆ) ஜெர்மனி அறிஞர் ஷூல்ஸ்

Question 17.
தமிழக அரசின் சின்னம்……………
அ) ஆலமரம்
ஆ) கோவில் நந்தி
இ) கோவில் கோபுரம்
ஈ) திருவாயில்
Answer:
இ) கோவில் கோபுரம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 18.
இரண்டு கோபுரங்களைக் கட்டும் புதிய மரபைத் தோற்றுவித்தவர் ……………
அ) நாயக்க மன்னர்
ஆ) பல்லவர்
இ) குலோத்துங்கன்
ஈ) இராசராசன்
Answer:
ஈ) இராசராசன்

Question 19.
நான்கு கோபுரங்கள் எழுப்பும் மரபைத் தொடங்கியவன் ……………
அ) இரண்டாம் நரசிம்மவர்மன்
ஆ) இரண்டாம் குலோத்துங்க சோழன்
இ) இரண்டாம் இராசராசன்
ஈ) இரண்டாம் மகேந்திரவர்மன்
Answer:
ஆ) இரண்டாம் குலோத்துங்க சோழன்

Question 20.
பெரிய கோவிலில் காணப்படும் பெரிய நந்தியும் மண்டபமும்,……………காலத்தில் கட்டப்பட்டவை.
அ) சோழர்
ஆ) சேரர்
இ) பல்லவர்
ஈ) நாயக்கர்
Answer:
ஈ) நாயக்கர்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 21.
புகழ்பெற்ற கோவில்களில் மிக உயர்ந்த கோபுரங்களை எழுப்பியது……………
அ) சோழ அரசு
ஆ) பல்லவ அரசு
இ) பாண்டிய அரசு
ஈ) விஜயநகர அரசு
Answer:
ஈ) விஜயநகர அரசு

Question 22.
‘ஒலோகமாதேவீச்சுரம்’ கோவிலைத் திருவையாற்றில் கட்டியவர் ……………
அ) எருதந் குஞ்சர மல்லி ,
ஆ) சோமயன் அமிர்தவல்லி
இ) ஒலோகமாதேவி
ஈ) குந்தவைதேவி
Answer:
இ) ஒலோகமாதேவி

Question 23.
‘ஒலோகமாதேவீச்சில் கோவில் கல்வெட்டால் அறியப்படும் பெண் அதிகாரிகள்……………
அ) குந்தவை, ருதஞ் குஞ்சர மல்லி
ஆ) சோமயின் அமிர்தவல்லி , குந்தவை
இ) எருதந் குஞ்சர மல்லி, சோமயன் அமிர்தவல்லி
ஈ) ஓவோகமாதேவி, எருதந் குஞ்சர மல்லி
Answer:
இ) எருதந் குஞ்சர மல்லி, சோமயன் அமிர்தவல்லி

Question 24.
சரியான விடையைத் தெரிவு செய்க.
இந்தியக் கட்டடக் கலையின் மூன்று வகை ……………
அ) நாகரம்
ஆ) வேசரம்
இ) தட்சிணம்
ஈ) திராவிடம்

1. அ, ஆ, இ
2. அ, ஆ, ஈ
3. ஆ, இ, ஈ
4. அ, இ, ஈ
Answer:
2. அ, ஆ, ஈ

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 25.
சரியான விடையைத் தெரிவு செய்க.
அ) தஞ்சாவூர் – 1. கடற்கரைக் கோவில்
ஆ) மகாபலிபுரம் – 2. ஒலோகமாதேவீச்சுரம்
இ) காஞ்சிபுரம் – 3. தட்சிண மேரு
ஈ) திருவையாறு – 4. கைலாசநாதர் கோவில்

அ) அ – 1, ஆ – 2, இ – 3, ஈ – 4
ஆ) அ – 3, ஆ – 1, இ – 4, ஈ – 2
இ) அ – 2, ஆ – 4, இ – 1, ஈ – 3
ஈ) அ – 4, ஆ – 3, இ – 2, ஈ – 1
Answer:
ஆ) அ – 3, ஆ – 1, இ – 4, ஈ – 2

Question 26.
சரியான விடையைத் தெரிவு செய்க.
1) ‘தட்சிண மேரு’ என்பது – அ. வாயில்களின்மேல் அமைவது
2) ‘விமானம் என்பது – ஆ. தானியக் கிடங்கு
3) ‘கோபுரம்’ என்பது – இ. தஞ்சைப் பெரிய கோவில்
4) ‘கற்றளி’ என்பது – ஈ. அகநாழிகைமேல் அமைக்கப்படுவது
உ. கருங்கற்களை அடுக்கிக் கட்டுவது

அ) 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – உ
ஆ) 1 – உ , 2 – இ, 3 – ஆ, 4 – ஈ
இ) 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – உ
ஈ) 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ
Answer:
இ) 1 – இ, 2 – ஈ, 3 – அ, 4 – உ

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

Question 27.
பொருத்துக.
1. வளர்க்கப்பட்ட அருங்கலைகள் – அ. பஞ்சகாலத்தில் மக்களுக்கு -வ.
2. கல்வெட்டுகளாகப் பொறிக்கப்பட்டவை – ஆ. போர்க்காலத்தில் படை பரர்களுக்கு.
3. தானியக் கிடங்குகள் – இ. மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய செய்திகள்.
4. தங்கும் இடம் – ஈ. மக்கள் ஒன்று டும் இடம்.
– உ. இசை, நடனம், நாடகம்.
Answer:
1 – உ, 2 – இ, 3 – அ, 4 – ஆ

விடைக்கேற்ற வினா அமைக்க.

1. கலை, ஒரு சமூகத்தின் நாகரிகம் மற்றும் பண்பாட்டு மேன்மையைப் பிரதிபலிக்கிறது.
வினா : கலை, எவற்றைப் பிரதிபலிக்கிறது?

2. தஞ்சைப் பெரிய கோவிலின் கட்டடக் கலைநுட்டம் நம்மை வியப்படையச் செய்கிறது.
வினா : எக்கோவிலின் கட்டடக் கலைநுட்பம், நம்மை வியப்படையச் செய்கிறது?

3. கருவறையை அகநாழிகை என்று அழைப்பார்கள்.
வினா : எதனை அகநாழிகை என் அழைப்பார்கள்?

4. தஞ்சைப் பெரிய கோவில், நம் நாட்டிலுள்ள கற்றளிக் கோவில்களிலேயே பெரியதும் உயரமானதும் ஆகும்.
வினா : நம் நாட்டிலுள்ள கறளிக் கோவில்களிலேயே பெரியதும் உயரமானதும் எது?

5. பஞ்ச காலத்தில் மக்களுக்கு உதவுவதற்காகத் தானியக் கிடங்குகளும் கோவிலுக்குள் அமைக்கப் பட்டிருந்தன.
வினா : கோவிலுக்குள் தானியக் கிடங்குகளும் எதற்காக அமைக்கப்பட்டிருந்தன?

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

6. தஞ்சைப் பெரிய கோவில் எண்பட்டை வடிவில் கட்டப்பட்ட திராவிடக் கலைப்பாணியாகும்.
வினா : (தஞ்சைப் பெரிய கோவில் எப்படிக் கட்டப்பட்ட வடிவு கலைப்பாணி எவை?

7. ஃப்ஸ்கோ என்ற இத்தாலியச் சொல்லுக்குப் ‘புதுமை’ என்று பொருள்.
விரை : எந்த இத்தாலியச் சொல்லுக்குப் புதுமை’ என்று பொருள்?

8. காலாற்றைப் படைத்த நமக்கு அதனைப் பாதுகாக்கத் தெரியவில்லை.
வினா : வரலாற்றைப் படைத்த நமக்கு, எது தெரியவில்லை?

9. கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், திரிபுவனம் ஆகிய இடங்களில் இரண்டு வாயில்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறோம்.
வினா : கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், திரிபுவனம் ஆகிய இடங்களில் எதனைப் பார்த்திருக்கிறோம்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 காலத்தை வென்ற கலை

10. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பெண்கள் அதிகாரிகளாகப் பணிபுரிந்திருக்கின்றனர் என்பது,
ஆச்சரியமாக இருக்கிறது. வினா : ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆச்சரியமாக இருக்கிறது என்பது எது?

11. தான் மட்டுமே பங்களிக்காமல், மற்றவர்களின் உதவியையும் பெற்றதோடு, அதனைக் கல்வெட்டாகவும் ஆவணப்படுத்தி இருக்கும் இராசராசனின் பாங்கு போற்றத்தக்கது.
வினா : இராசராசன், எதனை ஆவணப்படுத்திய பாங்கு போற்றத்தக்கதாகும்?