Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.4

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 3 Chapter 5 Money Ex 5.4 Textbook Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 3 Chapter 5 Money Ex 5.4

Question 1.
Priya bought 20 balloons. If the cost of one balloon is ₹ 6, then find the cost of 20 balloons.
Answer:
Cost of one ballon = ₹ 6
Cost of 20 ballon = 20 × 6
= ₹ 120
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.4 1

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.4

Question 2.
Chinthamani bought 28 chocolate for her birthday. If the cost of a chocolate is ₹ 7 then find the total cost of 28 chocolates
Answer:
cost of a chocolate = ₹ 7
cost of 28 chocolates = 28 × 7
= ₹ 196
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.4 2

Question 3.
Ashok purchased 9 decorative papers at the cost of ₹ 450 for his town festival. Find the cost of a decorative paper?
Answer:
cost of 9 decorative papers = ₹ 450
cost of 1 decorative paper = 450 ÷ 9
= ₹ 50
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.4 3

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.4

Question 4.
Geethanjali bought 10 pencils at the cost of ₹ 70 from the supermarket. Find the cost of a pencil?
Answer:
cost of 10 pencils = ₹ 70
cost of 1 pencil = 70 ÷ 10
= ₹ 7
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.4 4

Question 5.
Kuppan bought pencil and pen for ₹ 24.50 and ₹ 6.50 from his total amount ₹ 50. Find the total cost of things that he bought. Also find the balance amount?
Answer:
Price of a pencil = ₹ 24.50
Price of a pen = ₹ 6.50
Sum = ₹ 24.50 + ₹ 6.50
= ₹ 31.00
Total amount = ₹ 50.00
Sum = ₹ 31.00
= ₹ 50.00 + ₹ 31.00
= ₹ 19.00
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.4 5

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.4

Question 6.
A teacher went to the science exhibition with their student. The entry fee is ₹ 250 and the teacher bought some materials for the
school for ₹ 320, she had the balance amount of ₹ 330, find the amount that she had?
Answer:
Entry fee = ₹ 250
Things = ₹ 320
Balance = ₹ 330
Amount = ₹ 250 + ₹ 320 + ₹ 330
= ₹ 900
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.4 6

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.3

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 3 Chapter 5 Money Ex 5.3 Textbook Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 3 Chapter 5 Money Ex 5.3

Question 1.
Subtract the following
(i)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.3 1
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.3 2

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.3

(ii)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.3 3
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.3 4

(iii)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.3 5
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.3 6

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.3

(iv)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.3 7
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.3 8

(v)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.3 9
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.3 10

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.3

Question 2.
Cost of a pen from shop A is ₹ 7.50 and from shop B is ₹ 5.50 What is the difference between the cost from two shops.
Answer:
shop A = ₹ 7.50
shop B = ₹ 5.50
Difference = ₹ 7.50 – ₹ 5.50
= ₹ 2.00

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.3 11

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.3

Question 3.
Mala went to textile shop and had bought chudithar for ₹ 58.70 and gave ₹ 100 to the shopkeeper. How much money did the shopkeeper return to Mala.
Answer:
Mala gave = ₹ 100
chudithar price = ₹ 58.70
Difference = ₹ 100 + ₹ 58.70
= ₹ 41.30

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.3 12

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.2

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 3 Chapter 5 Money Ex 5.2 Textbook Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 3 Chapter 5 Money Ex 5.2

I. Add the following Rupees (without conversion)

Question 1.
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.2 1
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.2 2

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.2

Question 2.
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.2 3
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.2 4

Question 3.
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.2 5
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.2 6

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.2

Question 4.
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.2 7
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.2 8

II. Add the following rupees (with conversion)

Question 1.
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.2 9
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.2 10

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.2

Question 2.
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.2 11
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.2 12

Question 3.
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.2 13
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.2 14

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.2

Question 4.
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.2 15
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.2 16

III.
Question 1.
Elaovan bought a bat for ₹ 105.15 and a boll for ₹ 24. How much money did he spend in all?
Answer:
Bat = ₹ 105.15
Boll = ₹ 24
Sum = ₹ 105.15 + ₹ 24
= ₹ 129.15

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.2 17

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.2

Question 2.
Sadham went to vegetable shop and bought 1 kg of brinjal for ₹ 28.50, 1 kg of ladies finger for ₹ 10.50, 1 kg of pumpkin for ₹ 11.50. Find the total amount he spent in all.
Answer:
Brinjal = ₹ 28.50
Ladies finger = ₹ 10.50
Pumpkin = ₹ 11.50
Sum = ₹ 28.50 + ₹ 10.50 + ₹ 11.50
= ₹ 50.50

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.2 18

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.2

Question 3.
Kanmani bought pad and pen for her daughter at the cost of ₹ 65.50 and ₹ 48.75. How much money did she pay for the things?
Answer:
Pad = ₹ 65.50
Pen = ₹ 48.75
Sum = ₹ 65.50 + ₹ 48.75
= ₹ 114.25

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.2 19

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.2

Question 4.
Ramya bought Vegetable rice, Idly and Dosai for ₹ 74.50, ₹ 28.50 and ₹ 60.50. Find the total amount he spent in all.
Answer:
Vegetable rice = ₹ 74.50
Idly = ₹ 28.50
Dosai = ₹ 60.50
Total Amount = ₹ 74.50 + ₹ 28.50 + ₹ 60.50
= ₹ 163.50
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.2 20

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 3 Chapter 5 Money Ex 5.1 Textbook Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 3 Chapter 5 Money Ex 5.1

Question 1.
In ₹ 1000 How many ₹ 500 notes are there? ________
Answer:
How many ₹ 500 notes are there?  2  

How many ₹ 200 notes are there? ________
Answer:
How many ₹ 200 notes are there?   5  

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1

How many ₹ 100 notes are there? ________
Answer:
How many ₹ 100 notes are there?   10  

How many ₹ 50 notes are there? ________
Answer:
How many ₹ 50 notes are there?   20  

Question 2.
Kamala had a change of ₹ 100, ₹ 50, ₹ 20 and ₹ 10 notes. How many rupees did she have in each to get the total of rupees 500?
Answer:
₹ 500 = ₹ 100 ₹ 100 ₹ 100 ₹ 100 ₹ 50 ₹ 20 ₹ 20 ₹ 10
₹ 100 Note = 4
₹ 50 Note = 1
₹ 20 Note = 2
₹ 10 Note = 1

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1

Question 3.
Convert the following rupees into paise
(i) ₹ 7.50
(ii) ₹ 18.75
(iii) ₹ 54.68
(iv) ₹ 102.50
(v) ₹ 129.45
(vi) ₹ 308.61
Answer:
(i) ₹ 7.50
₹ 7 = 7 × 100 = 700
50 paise
= 700 + 50
= 750
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1 1

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1

(ii) ₹ 18.75
₹ 18 = 18 × 100 = 1800
75 paise
= 1800 + 75
= 1875
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1 2

(iii) ₹ 54.68
₹ 54 = 54 × 100 = 5400
68 paise
= 5400 + 68
= 5468
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1 3

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1

(iv) ₹ 102.50
₹ 102 = 102 × 100 = 10200
50 paise
= 10200 + 50
= 10250
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1 4

(v) ₹ 129.45
₹ 129 = 129 × 100 = 12900
45 paise
= 12900 + 45
= 12945
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1 5

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1

(vi) ₹ 308.61
₹ 308 = 308 × 100 = 30800
61 paise
= 30800 + 61
= 30861
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1 6

Question 4.
(i) Write the denominator for the following amount.
₹ 466 = ₹ 200 ₹ 100 ₹ 100 ₹ 50 ₹ 10 ₹ 5 ₹ 1
₹ 200 × 1 = _____
₹ 100 × 2 = _____
₹ 50 × 1 = _____
₹ 10 × 1 = _____
₹ 5 × 1 = _____
₹ 1 × 1 = _____
Total = _____
Answer:
₹ 200 × 1 =   ₹ 200  
₹ 100 × 2 =  ₹ 200  
₹ 50 × 1 =   ₹ 50  
₹ 10 × 1 =   ₹ 10  
₹ 5 × 1 =   ₹ 5  
₹ 1 × 1 =   ₹ 1  
Total =   ₹ 466  

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1

(ii)
Use and fill in the boxes with the amounts given below, to get the given amount (₹ 845)
₹ 845 = ______ _______ _______ _______ _______
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1 7
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1 8
Answer:
₹ 845 = ₹ 500 ₹ 200 ₹ 100 ₹ 20 ₹ 20 ₹ 5

(iii)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1 9
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1 10

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1

(iv)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1 11
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1 12

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1

Question 5.
Convert the following poise into rupees.
i. 800 paise
ii. 500 paise
iii. 2075 paise
iv. 6860 paise
v. 200 paise
vi. 150 paise
vii. 1000 paise
viii. 2000 paise
Answer:
i. 800 paise
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1 13

ii. 500 paise
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1 14

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1

iii. 2075 paise
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1 15

iv. 6860 paise
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1 16

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1

v. 200 paise
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1 17

vi. 150 paise
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1 18

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1

vii. 1000 paise
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1 19

viii. 2000 paise
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 Money Ex 5.1 20

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 4 Time InText Questions

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 3 Chapter 4 Time InText Questions Textbook Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 3 Chapter 4 Time InText Questions

Try This (Text Book Page No. 31)

Question 1.
Calculate the number of days between Christmas and Republic day?
Answer:
Christmas = 25th December
Republic day = 26th January
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 4 Time InText Questions 1

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 4 Time InText Questions

Question 2.
Calculate the number of days between Pongal and May day?
Answer:
pongal = 14th January
May day = 1 May
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 4 Time InText Questions 2

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 4 Time InText Questions

Question 3.
Calculate the number of days between Teachers day and Children’s day?
Answer:
Teacher’s day = 5th September
Children’s day = 14th November
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 4 Time InText Questions 3

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 4 Time Ex 4.1

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 3 Chapter 4 Time Ex 4.1 Textbook Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 3 Chapter 4 Time Ex 4.1

Question 1.
Find out the days between manufacturing and expiry date of a medicine given below.
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 4 Time Ex 4.1 1
Answer:
Exp Date = 2016/07/08
Mfg Date = 2013 /07/09
Days between = 3 years.

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 4 Time Ex 4.1

Question 2.
Select a month in the calendar and find out any creative pattern of your own in the numbers.
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 4 Time Ex 4.1 2

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.3 நற்றிணை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 4.3 நற்றிணை Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 4.3 நற்றிணை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.3 நற்றிணை

குறுவினா

Question 1.
கொழஞ்சோறு – புணர்ச்சிவிதி கூறுக.
Answer:
கொழுஞ்சோறு – கொழுமை + சோறு – “ஈறுபோதல்” (கொழு + சோறு), “இனமிகல்” (கொழுஞ்சோறு)

கூடுதல் வினாக்கள்

Question 2.
செவிலியர் நடை தளர்ந்து நின்றது ஏன்?
Answer:
தலைவியின் குழந்தைப் பருவத்தில், உணவாக ஊட்டப் பொற்கிண்ணத்தில் பால் ஏந்திச் சென்றனர் செவிலியர். “நான் உண்ணேன்” என மறுத்து முத்துப்பரல் பொற்சிலம்பு ஒலிக்க, பந்தரைச் சுற்றிச் சுற்றி ஓடினாள். அவளைப் பின்தொடர முடியாமல் செவிலியர், நடை தளர்ந்தனர்.

Question 3.
“ஒழுகுநீர் நுணங்கறல் போலப்
பொழுது மறுத்து உண்ணும் சிறுமது கையளே” – பொருள் தருக.
Answer:
பெருகி ஓடும் நீரில் கிடக்கும் நுண்மணல் இடைவெளி விட்டு இருக்கும். அதுபோல் தலைவி தன் குடும்ப நிலைக்கேற்ப ஒரு பொழுது விட்டு இன்னொரு பொழுது உண்ணும் வன்மையைப் பெற்றிருந்தாள் என்பதாம்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.3 நற்றிணை

சிறுவினாக்கள்

Question 1.
“ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல்” – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம் : நற்றிணையில் தலைவியைக் கண்டுவந்த செவிலித்தாய், நற்றாயிடம் கூறுவதாக இவடிகள் அமைந்துள்ளன.

பொருள் : “நாம் உண்ணுமாறு கூறியதை மறுத்து விளையாட்டுக் காட்டி ஓடியவள், இல்லறம் நடத்துதற்கு உரிய அறிவையும் ஒழுக்கத்தையும் எவ்வாறு உணர்ந்தாளோ?” என்பது இக்கூற்றின் பொருள்.

விளக்கம் : மணம் முடிந்து, கணவன் வீட்டில் வசிக்கும் தலைவியைக் காணச் சென்ற செவிலித்தாய், தலைவி நடத்தும் செம்மையான இல்லற வாழ்வைக் கண்டு வியந்தாள். அதனைத் தலைவியைப் பெற்ற நற்றாயிடம் கூறும்போது, “நம் வீட்டில் உணவு ஊட்ட விடுக்கும் வேண்டுதலை மறுத்து விளையாட்டுக் காட்டியவள், கணவன் உற்ற வறுமையை வெளிக்காட்டாது, தன் வீட்டு வளமான வாழ்வை நினையாமல், ஒருபொழுது விட்டு ஒருபொழுது உண்ணும் மனவன்மையைப் பற்றுள்ளாள். இவள் இந்த அறிவையும் ஒழுக்கத்தையும் எங்குக் கற்றாளோ?” எனக் கூறிச் சொல்லி வியந்தாள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.3 நற்றிணை

Question 2.
சின்னதொரு துண்டைத்
திரும்பத் திரும்பக் கட்டி
அழகு பார்க்கிறாள் செல்லமகள்!
முந்தானையை இழுத்துப் போர்த்திக் கொள்கிறாள்
ஒரு குட்டி நாற்காலியே வீடாகிவிடுகிறது!
துண்டைக் கட்டிக்கொண்டு தாயாகவும்
மாறிக்கொள்ள முடிகிறது அவளால்)
துண்டு ஒன்றுதான்…..
அதுவே அவளது மகிழ்ச்சியம்
என் துக்கமும்
– இப்புதுக்கவிதையில் வெளிப்படும் கருத்தை ஆராய்ந்து எழுதுக.
Answer:
பெண் குழந்தை ஒன்று, துண்டு ஒன்றை எடுத்து, அதைத் திரும்பத் திரும்பத் தன்மேல் சுற்றிக் கொண்டு அழகு பார்க்கிறது. தன்னை ஒரு வளர்ந்த பெண்ணாக, தாயாகக் கருதிக்கொண்டு செயல்படுகிறது.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.3 நற்றிணை

அதனால் பெண்மைக்குரிய நாணத்தோடு முந்தானையை இழுத்துத் தன்னைப் போர்த்திக் கொள்கிறாள், பாதுகாப்பாக; விளையாட்டுப் பருவக் குழந்தை. எனவே, சிறியதொரு நாற்காலியைத் தன் வீடாக்கிக் கொள்கிறாள்; மனத்தில் கற்பித்துக் கொள்கிறாள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.3 நற்றிணை

துண்டைக் கட்டிக்கொண்டதால், அவளால் தாயாக மாற முடிகிறது. அச்செயலே அவளுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், பெற்றவர் என்ன நினைத்திருப்பார்? பெண்ணைப் படிக்க வைத்து மருத்துவ ராகவோ, ஆசிரியையாகவோ, அதிகாரியாகவோ உருவாக்க நினைத்திருப்பார்.

பெற்றவர் நினைக்கும் திட்டம் அது. ஆனால், பேதைப் பருவப் பெண்குழந்தை சமுதாயத்தில், சூழலில் காணும் காட்சிகளை வைத்துக்கொண்டு, தன் எதிர்காலத்திற்குத் திட்டமிடுகிறது. அதனால் மகிழ்ச்சி கொள்கிறது. பெண்குழந்தையின் மகிழ்ச்சிச் செயல், பெற்றவருக்குத் துன்பமாக மாறுகிறது.

கூடுதல் வினாக்கள்

Question 3.
நற்றிணை – குறிப்பெழுதுக.
Answer:
நற்றிணை என்பது, எட்டுத்தொகை நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது. ஒன்பது அடிகளைச் சிற்றெல்லையாகவும், பன்னிரண்டு அடிகளைப் பேரெல்லையாகவும் கொண்ட நானூறு பாடல்களின் தொகுப்பாகும். இப்பாடல்கள், இருநூற்று எழுபத்தைந்து புலவர்களால் பாடப்பட்டவையாகும்.

பாடமாக அமைந்த பாடலைப் பாடியவர், சங்ககாலத்தில் வாழ்ந்த போதனார்’ என்கிற புலவராவார். நற்றிணையைத் தொகுப்பித்தவன், பன்னாடுதந்த பாண்டியன் ‘மாறன்வழுதி’. இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் ‘பெருந்தேவனார்.’

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.3 நற்றிணை

Question 4.
பாலைத்திணை – விளக்குக.
Answer:

  • அகப்பொருள் பாடலுள் பாலைத்திணைக்குரிய உரிப்பொருள், ‘பிரிதலும் பிரிதல் நிமித்தமாகும்’. இது அக ஒழுக்கத்தின் நிகழ்வாகும்.
  • பாலைத்திணைக்குரிய முதற்பொருள்களுள் சுரமும் சுரம் சார்ந்த இடமும் நிலமாகும்.)
  • இந்நிலத்தின் அகஒழுக்கத்திற்குரிய பெரும்பொழுது இளவேனில், முதுவேனில், பின்பனிப் பருவங் களாகும்; சிறுபொழுது நண்பகலாகும்.
  • கொற்றவை (தெய்வம்), எயினர் – எயிற்றியர் (மக்கள்), வழிப்பறி செய்த பொருள் (உணவு), புறா -பருந்து (பறவை), வழிப்பறி செய்தல், நிரை கவர்தல் (தொழில்) முதலானவை கருப்பொருள்களாகும்.
  • இவற்றைப் பின்னணியாகக் கொண்டு, ‘பிரிதலும் பிரிதல் நிமித்தமும்’ என்னும் உரிப்பொருளை வெளிப்படுத்தும் அகப்பாடல் அமையும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.3 நற்றிணை

Question 5.
மகள்நிலை உரைத்தல் – துறை விளக்குக.
Answer:
திணையின் உட்பிரிவு துறை. மகள்நிலை உரைத்தல் என்பது, பாலைத்திணையின் உட்பிரிவாகும்.

தலைவனோடு உடன்போகிய (தலைவனை மணம்பு. யப் பிரிந்துபோன) விளையாட்டுப் பருவம் மாறாத மகள் நடத்தும் இல்லறச் சிறப்பைக் கண்ட செவிலித்தாய், அது குறித்து நற்றாயிடம் வியந்து கூறுவதாக அமைந்தது. இதனை மனைமருட்சி’ (மகள் நிலை உரைத்தல்) எனவும் கூறுவர்.

நெடுவினா

Question 1.
தலைவியின் இல்லறப் பாங்கினைப் பற்றிச் செவிலித்தாய் நற்றாயிடம் வியந்து கூறுவன யாவை?
Answer:

  • விளையாட்டுப் பருவம் மாறாதவள் தலைவி. அவள் தலைவனோடு உடன்போக்கிற்கு உட்பட்டாள்.
  • பின்னர் வரைந்து (மணம் பொடித்து) இல்லறத்தில் ஈடுபட்டாள்.
  • அந்நிலையில் அவளைக் காணச் சென்ற செவிலித்தாய், தலைவியான தன் வளர்ப்புமகள் நடத்தும் குடும்பப் பாங்கைக் கண்டாள். அதனை நற்றாயிடம் வியந்து பாராட்டினாள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.3 நற்றிணை

பிள்ளைப்பருவ விளையாட்டு :
“நம் வீட்டில் பொற்கிண்ணத்தில் தேன்கலந்த பாலை ஒரு கையிலேந்தி, அச்சுறுத்தி உண்ண வைப்ப தற்குப் பூச்சுற்றிய மென்மையான கோலை இன்னொரு கையிலேந்தி, ‘இதனை உண்’
என்று கூறினோம்.

அப்போது, வீட்டு முற்றத்தில் இருந்த பந்தரைச் சுற்றிச்சுற்றி ஓடி, ‘நான் உண்ணேன்’ என்று றுப்பாள். கால் சிலம்பு ஒலிக்க ஓடிய அவளைப் பின்தொடர முடியாமல், செவிலியர் களைத்துப் போவோம்.

வியப்புத் தரும் இல்லறப்பாங்கு :
இப்படி விளையாட்டுக் காட்டிய பெண்ணாகிய நம் மகள், இத்தகைய அறிவையும், ஒழுக்கத்தையும் எங்குக் கற்றாளோ என வியப்பாக உள்ளது!

தான் மணந்த கணவன் வீட்டில் வறுமையுற்ற நிலையிலும், தன் தந்தையின் வீட்டில் பெற்ற வளமான உணவினைப் பற்றி நினையாமல், ஓடும் நீரில் கிடக்கும் நுண்மணலில் இடைவெளி இருப்பதுபோல, ஒருபொழுது விட்டு ஒருபொழுது உண்ணும் மனவலிமையைப் பெற்றவளாக இருக்கிறாள்.

இது என்னே வியப்பு?” என்று, நற்றாயிடம் செவிலித்தாய் கூறினாள்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.3 நற்றிணை

இலக்கணக்குறிப்பு

வெண்சுவை, தீம்பால், சிறுகோல், முதுசெவிலி, சிறுவிளையாட்டு, கொடுஞ்சோறு – பண்புத் தொகைகள்
விரிகதிர், ஒழுகுநீர் – வினைத்தொகைகள்
பொற்கலம், பொற்சிலம்பு – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைகள்
கலந்த, கொண்ட, கொடுத்த – பெயரெச்சங்கள்
ஏந்தி, பிழைப்ப, ஒழிய, ஓடி, மெலிந்து, மறுத்து – வினையெச்சங்கள்
அறிவும் ஒழுக்கமும் – எண்ணும்மை
பந்தர் – (பந்தல்) ஈற்றுப்போலி அல்லது இறுதிப்போலி அல்லது கடைப்போலி.
உள்ளாள் – முற்றெச்சம்
தத்துற்று ஓடி – வினையெச்சம்
கொழுநன்குடி (கொழுநனது குடி) – ஆறாம் வேற்றுமைத்தொகை
உண் – முன்னிலை ஏவல் ஒருமை வினைமுற்று.
ஓக்குபு – ‘செய்பு’ என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.3 நற்றிணை

உறுப்பிலக்கணம்

1. மெலிந்து – மெலி + த் (ந்) + த் + உ
மெலி – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
உ – வினையெச்ச விகுதி.

2. மறுத்து – மறு + த் + த் + உ
மறு – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, உ – வினையெச்ச விகுதி.

3. பிழைப்ப – பிழை + ப் + ப் + அ
பிழை – பகுதி, ப் – சந்தி, ப் – எதிர்கால இடைநிலை, அ – வினையெச்ச விகுதி.

4. ஏந்தி – ஏந்து + இ
ஏந்து – பகுதி, இ – வினையெச்ச விகுதி.

5. உணர்ந்தனள் – உணர் + த் (நி) + த் + அன் + அள்
உணர் – பகுதி, த் – சந்தி ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
அன் – சாரியை, அள் பெண்பால் வினைமுற்று விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.3 நற்றிணை

6. கொண்ட – கொள் (ண்) + ட் + அ
கொள் – பகுதிள் பண்’ ஆனது விகாரம், ட் – இறந்தகால இடைநிலை,
அ – பெயரெச்ச விகுதி.

புணர்ச்சி விதிகள்

1. சிறுகோல் )- சிறுமை + கோல்
” போதல்” (சிறு = கோல்)

2. பொற்சிலம்பு – பொன் + சிலம்பு
கணன வல்லினம் வரடறவும் ஆகும்” (பொற் = சிலம்பு)

3. கொழுஞ்சோறு – கொழுமை + சோறு
“ஈறுபோதல்” (கொழு + சோறு), “இனமிகல்” (கொழுஞ்சோறு)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.3 நற்றிணை

4. பூந்தலை – பூ + தலை
“பூப்பெயர் முன் இனமென்மையும் தோன்றும்” (பூந்தலை)

5. யாண்டுணர்ந்தனள் – யாண்டு + உணர்ந்தனள்
“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” (யாண்ட் + உணர்ந்தனள்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (யாண்டுணர்ந்தனள்)

6. பொற்கலம் – பொன் + கலம்
“ணன வல்லினம் வரடறவும் ஆகும்’ (பொற் = கலம்)

7. தெண்ணீ ர் – தெள் + நீர்
“ணளமுன் டணவும் ஆகும் தநக்கள்” (தெள் + ணீர்)
“லள வேற்றுமையில் மெலிமேவின் னணவும் ஆகும்” (தெண்ணீர்)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.3 நற்றிணை

8. முத்தரி – முத்து + அரி
“உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” (முத்த் + அரி)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (முத்தரி)

9. நரைக்கூந்தல் – நரை + கூந்தல்
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (நரைக்கூந்தல்)

10. உற்றென – உறு + என
“முற்றும் அற்று ஒரோவழி” (உற் + என), “தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்” (உற்ற் + என)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (உற்றென )

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.3 நற்றிணை

11. வெண்சுவை – வெண்மை + சுவை “ஈறுபோதல்” (வெண்சுவை)

பலவுள் தெரிக

Question 1.
9 அடிச் சிற்றெல்லையும் 12 அடிப் பேரெல்லையும் கொண்ட நூல்…………….
அ) நற்றிணை
ஆ) குறுந்தொகை
இ) அகநானூறு
ஈ) ஐங்குறுநூறு
Answer:
அ) நற்றிணை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.3 நற்றிணை

கூடுதல் வினாக்கள்

Question 2.
எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்துப் பாடப்பட்டது……………..
அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ குறுந்தொகை
ஈ) நற்றிணை
Answer:
ஈ) நற்றிணை

Question 3.
‘நற்றிணை ‘ என்னும் தொடரைப் பிரித்தால்,…………….என அமையும்.
அ) நல் + திணை
ஆ) நற் பறிணை
இ) நன்மை + திணை
ஈ) நல்ல + திணை
Answer:
இ) நன்மை + திணை!

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.3 நற்றிணை

Question 4.
நற்றிணையைத் தொகுப்பித்தவன் …………….
அ) பூரிக்கோ ,
ஆ) பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
இ) பாண்டியன் பெருவழுதி
ஈ) பாரதம் பாடிய பெருந்தேவனார்
Answer:
ஆ) பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி

Question 5.
நற்றிணைக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் …………….
அ) நச்சினார்க்கினியர்
ஆ) பாரதம் பாடிய பெருந்தேவனார்
இ) பாண்டியன் இளம்பெருவழுதி
ஈ) தொல்காப்பியர்
Answer:
ஆ) பாரதம் பாடிய பெருந்தேவனார்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.3 நற்றிணை

Question 6.
மக நிலை உரைத்தல்’ என்னும் துறை,…………….எனவும் குறிப்பிடப்படும்.
அ) தலைவி ஆற்றுவித்தல்
ஆ) மகள் மறுத்து மொழிதல்
இ) செவிலி கண்டுரைத்தல்
ஈ) மனை மருட்சி
Answer:
ஈ) மனை மருட்சி

Question 7.
தலைவியின் இல்லறப் பாங்கை நற்றாயிடம் பாராட்டியது …………….
அ) தலைவன்
ஆ) தந்தை
இ) தோழி
ஈ) செவிலித்தாய்
Answer:
ஈ) செவிலித்தாய்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.3 நற்றிணை

Question 8.
“பொழுது மறுத்து உண்ணும் சிறுமது கையள்” எனப் போற்றப்பட்டவள் …………….
அ) செவிலித்தாய்
ஆ) நற்றாய்
இ) தலைவி
ஈ) தோழி
Answer:
இ) தலைவி

Question 9.
‘பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்’- இத்தொடரில் ‘தேன்’ என்பதைக் குறிக்கும் சொல்…………….
அ) கலந்த
ஆ) தீம்பால்
இ) பிரசம்
ஈ) வெண்சுவை
Answer:
இ) பிரசம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.3 நற்றிணை

Question 10.
முத்தரிப் பொற்சிலம் பொலிப்பத் தத்துற்று’ – இத்தொடரில் ‘பரல்’ என்னும் பொருளுடைய சொல்…………….
அ) முத்து
ஆ) அரி
இ) சிலம்பு
ஈ) ஒலிப்ப
Answer:
ஆ) அரி

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.3 நற்றிணை

Question 11.
பொழுது மறுத்து உண்ணும் சிறுமது கையளே – இத்தொடரில் ‘பெருமிதம்’ என்னும் பொருளுணர்த்தும் சொல் …………….
அ) மறுத்து
ஆ) சிறுமது
இ) மதுகை
ஈ) உண்ணும்
Answer:
இ) மதுகை

Question 12.
கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்ந்து வரிசைப்படுத்துக.
அ) செவிலியர், பொற்கலத்தில் பால் உணவை ஏந்தி வருவர்
ஆ) செவிலியர், மகளைப் பின்தொடர முடியாமல் நடை தளர்வர்
இ) ‘இதை உண்பாயாக’ எனச் செல்லமாக அடிப்பதுபோல் வேண்டுவா
ஈ) பூச்சுற்றிய கோலைச் செவிலியர், கையில் வைத்திருப்பர்
உ) ‘நான் உண்ணேன்’ என மறுத்து மகள் அங்கும் இங்கும் ஓடுவாள்
1) அ ஆ உ ஈ இ
2) ஈ அ இ உ ஆ
3) அ ஈ இ உ ஆ
4) ஈ உ ஆ இ
Answer:
3) அ ஈ இ உ ஆ

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.3 நற்றிணை

Question 13.
அடிக்கோடிட்ட சொற்களின் பொருளைத் தெரிவு செய்க.
பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்
கொண்ட கொழுநன் குடிவறன் உற்றென
அ) இனிப்பு, நன்மை
ஆ) தேன, வறுமை
இ) செல்வம், வீடு
ஈ) இனியபால், உணவு
Answer:
ஆ) தேன், வறுமை

Question 14.
சரியான விடையைத் தேர்ன செய்க.
நற்றிணைப் பாடல்களின் வடிவரையறை ………………
அ) 4முதல் 8வரை
ஆ) 9முதல் 12வரை
இ) அடிவரையயைகலை
ஈ) 13முதல் 31வரை
Answer:
ஆ) முதல் 12வரை

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.3 நற்றிணை

Question 15.
பொருத்து
1. பிரசம் – அ. வறுமை
2. உபாளாள் – ஆ. பெருமிதம்
3. வறன் – இ. ஓச்சுதல்
4. மதுகை – ஈ. நினையாள்
– உ. தேன்
Answer:
1-உ, 2-ஈ, 3-அ, 4-ஆ

Question 16.
சரியான விடை தேர்க
i. நற்றிணை – 9 அடிமுதல் 12 அடிவரை
ii. குறுந்தொகை – 4 அடிமுதல் 8 அடிவரை
iii. அகநானூறு – 11 அடிமுதல் 31 அடிவரை
iv. ஐங்குறுநூறு – 3 அடிமுதல் 6 அடிவரை
அ. i ii iii சரி
ஆ. i iii iv சரி
இ. ii iii iv சரி
ஈ . i ii iv சரி
Answer:
ஈ. i ii iv சரி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.4 முதல்கல்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 2.4 முதல்கல் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 2.4 முதல்கல்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.4 முதல்கல்

Question 1.
உங்கள் இல்லத்தில் நடைபெறும் திருமணவிழாவுக்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு மரக்கன்று ஒன்று தருவதாக முடிவு செய்துள்ளீர்கள். மரக்கன்று வாங்கும் நோக்கங்களையும் அதனைப் பயிரிடுவதால் ஏற்படும் பொது நன்மைகளையும் கொண்ட இருபக்கச் சிற்றேட்டை உருவாக்குக.
Answer:
மரக்கன்று வழங்குதன் நோக்கம் :

  • மரங்கள் அழிக்கப்பட்டு வரும் சூழல்களில் மரக்கன்றுகள் நடுவதற்கான ஏற்ற சூழலை உருவாக்குதல்.
  • பழம், பட்சணம், வெற்றிலை போன்றவற்றைப் பையிலே போட்டுக் கொடுப்பதைவிட மரக்கன்றுகள் கொடுப்பது சாலச்சிறந்தது.
  • சுற்றுச்சூழலை நல்லமுறையில் அமைக்கவே மரக்கன்றுகள் வழங்குதல்.

பொது நலன்கள் :

  • மரக்கன்றுகள் வளர்ப்பதால் நல்ல தூய காற்று கிடைக்கும்.
  • கோடையில் நிழல் உருவாகும்.
  • மரங்கள் மாசுக்களைக் கட்டுப்படுத்தும்
  • மரங்கள் குளிர்ச்சி தரும்
  • குளிர்ச்சியால் மழை உண்டாகும்.
  • மழை பொழிந்தால் மண் மகள் சிலிர்ப்பாள்.
  • மழையால் பயிர்வளம் பெருகும்.
  • பயிர்வளத்தால் விவசாயம் பெருகும்.
  • விவசாயம் பெருகினால் வீடு நலம் பெறும்.
  • வீடு நலம் பெற்றால் நாடு தானே வளம் பெறும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.4 முதல்கல்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்பு நலத்தை விவரிக்க.
Answer:
முன்னுரை :
உலக உயிர்களை வாழவைப்பது மழை. அந்த மழையை நாம் முறையாகப் பாதுகாக்காமல் சில உயிர்களையும், பயிர்களையும் நாசமாக்குகிறோம். அதைக் கண்டு மனம் நொந்து தனி மனிதனாக இருந்து தம் ஊரைப் பொறுப்புணர்ச்சியால் மாற்றிய மருதனின் பண்பு நலன்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மழையின் கோரம் :
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மணிக்கு நூறு கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்கிறது. நாற்றுப் பிடுங்கி, உரம் போட்டு நட்டு ஒரு வாரமே ஆன குழந்தை போல் காட்சியளித்த பயிர்கள் எல்லாம் மழையில் மூழ்கியது. உபரி நீர் வெளியேறவில்லை இப்படியே போனால் அழுகிவிடும் என்ன செய்வது என்று ஏங்கினான் மருதன்.

உபரிநீர் வெளியேற்றம் :
காற்றையும், மழையையும் பொருட்படுத்தாமல் கரை வழியே வந்தான். உபரித் தண்ணீர் வெளியேற வேண்டிய மதகை எட்டிப் பார்த்தான். மதகைச் சுற்றி மட்டுமல்லாமல் ஊரைச் சுற்றி எங்கு பார்த்தாலும் மண்டிக்கிடந்த நெய்வேலி காட்டாமணக்கு தண்ணீரைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கும்.

மருதனின் நல்யோசனை :
மருதன், பயிர்கள் மூழ்காமலும் மொத்த கிராமங்களும் தப்பிக்க நல்ல வழியை யோசித்தான். தன் உயிரைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் தண்ணீரில் இறங்கி செடியைப் பிடுங்கி அரிந்தான்.

மாரி வருதல் :
மாரி இந்தச் சனியன்பிடிச்ச செடியாலதான் தண்ணி வடிய மாட்டேங்குது; நீ வாடா கொஞ்ச உதவி செய் என்றான் மருதன். அவன் மறுத்ததை எண்ணி மருதன் கோபம் அடைந்தான்.

மருதனின் ஆக்கம் :
இப்படியே போனால் ஊரே நாற்றம் எடுத்து விடும் என்று ஏக்கத்தோடு செடிகளைப் பிடிங்கிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த கிழவன் காளியப்பனிடம் கூறினான். அவர் பெரிய நிலக்கிழார் என்பதால் வீட்டு ஒருவர் வந்து செடிகளைப் பிடிங்கி பயிரையும், உயிரையும் காப்பாற்ற முடியும் என்று எண்ணி அவரிடமும் கூறினான். அவரும் பின் வாங்கினார். பிறகு பிரேம்குமாரைச் சந்தித்தான்; அவனும் பல காரணம் கூறிவிட்டு நகர்ந்தான்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.4 முதல்கல்

மருதனின் புலம்பல் :
வீடு திரும்பிய மருதன் ஊருக்கு ஏற்படும் ஆபத்தை யாரிடமும் சொல்லி பலன் இல்லை. மன 112 வலியால் துடித்தான் உண்ணவில்லை, உறங்கவில்லை. கவலை தோய்ந்த முகத்தோடு மீண்டும் இரவோடு இரவாக காட்டாமணக்கு செடி பிடுங்க கிளம்பினான்.

அல்லி வருதல் :
முடியை அள்ளிச் சொருகிக் கொண்டு வாய்க்காலை நோக்கி நடந்தாள் அல்லி. தன்னந்தனியே தண்ணீரில் மருதன் படும்பாட்டைக் கண்டு திகைத்தாள். அவளை அறியாமலேயே புடவையை : வரிந்துக்கட்டி வாய்க்காலில் இறங்கினாள்.

மாமா நீ சொல்றது நிஜம்தான். ஊரு நல்லா இருந்தாதான் நாம நல்லா இருக்க முடியும். நீயும் நானும் சேர்ந்து செய்வோம் என்று செய்தாள்.

ஊர் மக்கள் வரல் :
நொடி நேரத்தில் ஊர் மிராசு காளியப்பன் வண்டியிலிருந்து குதித்து வேட்டியைக் கரையில் போட்டுவிட்டு வாய்க்காலில் இறங்கினார். வண்டிக்காரன் மூலம் செய்தி பரவியது. ஊரே கூடி வாய்க்காலை நோக்கி ஓடியது .

முடிவுரை :
”அழிவதூஉம் ஆவதூஉம் ஆரி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்”
என்பதற்கு ஏற்பவாழும் ஊருக்கு எவ்விதத்திலாவது நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணி ஆராய்ந்து செயல்பட்டு ஊரையே செயல்பட வைத்த மருதனின் பண்புநலன் பாராட்டத்தக்கது.

Question 2.
புயல் தாக்கத்தினால் குடியிருப்புகளுக்கு அருகில் அறுந்துகிடக்கும் மின் இணைப்புகளைச் சரிசெய்யக் கோரி உங்கள் ஊர் மின்வாரியப் பொறியாளர்களுக்குக் கடிதம் எழுதுக.
Answer:
அனுப்புநர்
ஊர்ப் பொது மக்கள்,
பாளையங்கோட்டை,
திருநெல்வேலி.

பெறுநர்
உயர்திரு மின்வாரியப் பொறியாளர்,
மின்வாரிய அலுவலகம்,
திருநெல்வேலி.

ஐயா,
பொருள் : மின் இணைப்புகளைச் சரி செய்ய வேண்டுவது தொடர்பாக.

வணக்கம்.
கடந்த மாதம் நான்காம் நாள் பாளையங்கோட்டையில் வீசிய தானே புயலால் மரங்கள் மின் கம்பங்கள் முற்றிலும் சாய்ந்தன. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மக்கள் மிகவும் துன்பத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இரவில் வெளியே செல்வதற்கு அச்சமாக இருக்கிறது. ஆதலால் அருள்கூர்ந்து அறுந்து கிடக்கும் மின்கம்பிகளைச் சரிசெய்து மின் இணைப்புத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி,

இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
ஊர்ப் பொது மக்கள்.
பாளையங்கோட்டை.

உறைமேல் முகவரி:
உயர்திரு மின்வாரியப் பொறியாளர்,
மின்வாரிய அலுவலகம்,
திருநெல்வேலி.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.4 முதல்கல்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘உத்தம சோழன்’ அவர்களின் இயற்பெயர்
அ) செல்வன்
ஆ) செயராஜ்
இ) செல்வராஜ்
ஈ) செல்லத்துரை
Answer:
இ) செல்வராஜ்

Question 2.
‘முதல்கல்’ சிறுகதை இடம் பெற்ற தொகுப்பு
அ) ஆரம்பம் இப்படித்தான்
ஆ) சிந்து டீச்சர்
இ) தஞ்சை சிறுகதைகள்
ஈ) குருவி மறந்த கூடு
Answer:
இ) தஞ்சை சிறுகதைகள்

Question 3.
‘முதல்கல்’ சிறுகதையின் ஆசிரியர்
அ) புதுமைப்பித்தன்
ஆ) உத்தம சோழன்
இ) ஜானகிராமன்
ஈ) சுஜாதா
Answer:
ஆ) உத்தம சோழன்

Question 4.
காளியப்பன் தன் மகளைத் திருமணம் முடித்துக் கொடுத்ததாகக் கூறிய ஊர்
அ) வானமாதேவி
ஆ) உலகளந்தாள் தேவி
இ) சூரப்பள்ளம்
ஈ) கிழக்குக்கரை
Answer:
அ) வானமாதேவி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.4 முதல்கல்

Question 5.
கூற்று 1 : வீட்டுக்கு ஒரு ஆள் அரிவாள், மண்வெட்டியுடன் வடிவாய்க்கால் கரைக்கு வர வேண்டும்.
கூற்று 2 : நீ சொல்வது நிஜம்தான் மாமா. ஊர் நன்றாக இருந்தால்தான் நாமும் நன்றாக இருக்கலாம்.

அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்று 1 சரி 2 தவறு
ஈ) கூற்று இரண்டும் சரி
Answer:
ஈ) கூற்று இரண்டும் சரி

Question 6.
கூற்று 1 : “இவ்வளவு நீளம் மண்டிக்கிடக்கும் செடிகளை அரிந்து எறிவது லேசான காரியமா ?”
கூற்று 2 : ஊர்க்காரர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்தால், ஒரே நாளில் வாய்க்காலும் தூய்மையாகிவிடும்.

அ) கூற்று 1 சரி 2 தவறு
ஆ) கூற்று இரண்டும் சரி
இ) கூற்று 1 தவறு 2 சரி
ஈ) கூற்று இரண்டும் தவறு
Answer:
ஆ) கூற்று இரண்டும் சரி

Question 7.
சரியானதைத் தேர்க.
அ) மருதன் – குமுதம்
ஆ) பிரேம்குமார் – நாகூர்பிச்சை
இ) காளியப்பன் – வேலையாள்
ஈ) மாரிமுத்து – விவசாயி
Answer:
ஆ) பிரேம்குமார் – நாகூர்பிச்சை

Question 8.
சரியானதைத் தேர்க.
அ) 60 வேலி – ஊரின் மொத்த நிலம்
ஆ) அல்லி – மருதனின் அம்மா
இ) முல்லையம்மா – காளிப்பனின் தாய்
ஈ) காளியப்பன் – வசதியற்றவர்
Answer:
அ) 60 வேலி – ஊரின் மொத்த நிலம்

Question 9.
பொருந்தாததைத் தேர்க.
அ) வடிவாய்க்கால் – காட்டாமணக்குச் செடி
ஆ) பூவரச தழை – மாட்டுக்கு உணவு
இ) காளியப்பன் – வில் வண்டி
ஈ) மருதன் – அல்லி
Answer:
இ) காளியப்பன் – வில் வண்டி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.4 முதல்கல்

Question 10.
பொருத்துக.
அ) முல்லையம்மா – 1. வலைபோடுபவர்
ஆ) நாகூர் பிச்சை – 2. அல்லி
இ) மாரிமுத்து – 3. காளியப்பன்
ஈ) மருதன் – 4. பிரேம்குமார்

அ) 3, 1, 2, 4
ஆ) 3, 4, 2, 1
இ) 3, 4, 1, 2
ஈ) 4, 3, 2, 1
Answer:
இ) 3, 4, 1, 2

Question 11.
தஞ்சைச் சிறுகதைகள் என்னும் தொகுப்பினுக்கு உரியவர்
அ) செல்வராஜ்
ஆ) சோலை சுந்தரப் பெருமாள்
இ) மேலாண்மை பொன்னுசாமி
ஈ) இவர்களில் எவருமிலர்
Answer:
ஆ) சோலை சுந்தரப் பெருமாள்

Question 12.
உத்தம சோழனின் ஊர்
அ) கும்பகோணம் அருகே சிவபுரம்
ஆ) திருத்துறைப்பூண்டி அருகே நீவாம்மாள்புரம்
இ) கடலூர் அருகே மஞ்சக்குப்பம்
ஈ) மயிலாடுதுறை அருகே தேரழந்தூர்
Answer:
ஆ) திருத்துறைப்பூண்டி அருகே நீவாம்மாள்புரம்

Question 13.
மனிதத்தீவுகள், குருவி மறந்த வீடு உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர்
அ) சோலை சுந்தரப் பெருமாள்
ஆ) உத்தமசோழன்
இ) மேலாண்மை பொன்னுச்சாமி
ஈ) ஜெயகாந்தன்
Answer:
ஆ) உத்தமசோழன்

Question 14.
உத்தமசோழன் எழுதாத சிறுகதையைக் கண்டறிக.
அ) தொலைதூர வெளிச்சம்
ஆ) கசக்கும் இனிமை
இ) கனல்பூக்கள்
ஈ) காவல்கோட்டம்
Answer:
ஈ) காவல்கோட்டம்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.4 முதல்கல்

Question 15.
உத்தமசோழன் கடந்த 12 ஆண்டுகளாக நடத்தி வரும் திங்களிதழ்
அ) கிழக்கு வாசல் உதயம்
ஆ) மேற்கு வாசல் மறைவு
இ) வடக்கு வாசல் வாடை
ஈ) தெற்குவாசல் தென்றல்
Answer:
அ) கிழக்கு வாசல் உதயம்

Question 16.
‘முதல் கல்’ கதையில் இடம்பெறும் கிழவி ………….. கிழவன் …………………..
அ) முல்லையம்மாள், காளியப்பன்
ஆ) காளியம்மாள், முல்லையப்பன்
இ) மாரியம்மாள், மருதன்
ஈ) பார்வதி, சிவக்கொழுந்து
Answer:
அ) முல்லையம்மாள், காளியப்பன்

Question 17.
‘முதல் கல்’ கதையில் கிராமத்தின் முதல் பட்டதாரியாகக் குறிப்பிடப்படுபவர்
அ) மருதன்
ஆ) மாரி
இ) பிரேம்குமார்
ஈ) அல்லி
Answer:
இ) பிரேம்குமார்

Question 18.
‘முதல் கல்’ கதையில் பிரேம்குமாருக்குப் பெற்றோர் இட்ட பெயர்
அ) அமாவாசை
ஆ) பிச்சைமுத்து
இ) மாரியம்மாள், மருதன்
ஈ) நாகூர்பிச்சை
Answer:
ஈ) நாகூர்பிச்சை

Question 19.
‘முதல் கல்’ கதையில் மருதன் தொடங்கிய பணி
அ) நெல் அறுவடை
ஆ) வடிவாய்க்கால் தூய்மை
இ) கல் அறுத்தல்
ஈ) குளம் வெட்டுதல்
Answer:
ஆ) வடிவாய்க்கால் தூய்மை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.4 முதல்கல்

Question 20.
‘முதல் கல்’ கதையின் நாயகன் மருதனின் மனைவி
அ) முல்லையம்மாள்
ஆ) மாரியம்மாள்
இ) அல்லி
ஈ) வள்ளி
Answer:
இ) அல்லி

நெடுவினா

Question 1.
‘ஊர்கூடித் தேர் இழுக்கும் போதும்’ தேர் வடத்தைப் பிடிக்கும் முதல்கரமான இருந்த மருதனின் பண்பு நலத்தை விவரி.
Answer:
முன்னுரை :
செல்வராஜ் என்னும் இயற்பெயருடைய உத்தம சோழன் எழுதிய முதல்கல்’ என்ற கதையில் வரும் மருதன் ஊர் மீது அதிக அக்கறை உடையவன். பெருமழை பொழிந்து வெள்ளமானது ஊரைச் சூழ்ந்து இருக்கும் நீரை வடிய வைத்து பயிர்களைக் காப்பாற்றும் முனைப்புடன் செயல்படும் மருதனின் பண்பு நலன்களை இக்கட்டுரை மூலம் அறிவோம்.

பயிர்களின் நேசன் :
பயிர் விளைச்சலுக்காக எந்த மழைக்காகக் காத்திருந்தார்களோ அந்த மழையே பயிர்களை மூழ்கடித்தால் எப்படி மனம் பொறுத்துக் கொள்ளும். பயிர்கள் வெள்ளத்தில் மூழ்குவதைக் கண் டதும் மருதன் வருத்தம் அடைகின்றான். ஊரில் உள்ள பல நபர்களிடம் உதவியும் கேட்கின்றான். எதுவுமே நடக்கவில்லை என்றதும் வேதனை அடைகின்றான். தண்ணீரில் தத்தளித்துக் கொண் டிருந்த நெற்பயிர்கள் அத்தனையும், “என்னைக் காப்பாத்து, என்னைக் காப்பாத்து” என்று அவனைப் பார்த்து வேண்டுவதாக உணர்கிறான். இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் தவிக்கிறான்.

ஊர் வளத்தைக் காப்பாற்றும் உயர்குணம் :
வடிவாய்க்கால் முழுவதும் இருபுறமும் சுவர்போல வளர்ந்திருந்த காட்டமாணக்குச் செடிகளை அப்புறப்படுத்தி விட்டால், பயிர்களைக் காப்பாற்றுவதுடன், ஊரையும் காப்பாற்றிவிடலாம் என்ற எண்ணம் அவன் மனதில் தோன்றியதும் மருதன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, வடிநீரை வடித்து ஊரைக்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.4 முதல்கல்

காப்பாற்றிவிடலாம் என்ற எண்ணம் வந்ததும், தான் தனியாகச் செய்து மதிப்பு அடையலாம் என்று எண்ணாமல் அனைவருடனும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற எண் ணம் மேலிட ஒவ்வொருவரிடமும் உதவியைக் கேட்கும் உத்தம உயர்குணம் கொண்டவனாக மருதன் விளங்குகிறான்.

கடமையை உயிராகக் கருதியவன்
மருதன் காட்டாமணக்குச் செடிகளை அப்புறப்படுத்த மாரியிடம் உதவி கேட்கும் போதும் ; பெரிய மிரசாக வலம் வரும் காளியப்பனிடம் இது பற்றிப் பேசும் போதும் ; கிராமத்தின் முதல் பட்டதாரியான பிரேம்குமாரிடம் பேசி விவரத்தை விளக்கி ஏமாற்றம் அடையும் போதும் ; தன் ஆற்றாமையை தன் மனைவி அல்லியிடம் கூறிப் புலம்பும் போதும் மனம் தளராமல் தன் கடமையை எப்படியாவது நிறைவேற்றிட வேண்டும் என்ற அவனது மன உறுதிப்பாடு கூறிப் புலனாகும். தனியாளாகச் செய்ய முடியாத இச்செயலுக்காக எல்லோரின் உதவியையும் மருதன் நாடுவது அவனது பொதுநலனை வெளிப்படுத்துகின்றது.

மருதனின் பொதுநலன்
அந்த ஊரில் இருந்த அறுபது வேலி நிலத்தில் ஒரு ‘சக்கரைக்குழி’ அளவு கூட நிலம் இல்லாத மருதன் பொதுநலனை மட்டுமே கருத்தில் கொண்டு, எப்படியாவது நீரை வடித்துவிட வேண் டும் என்ற எண்ணத்துடனே மருதன் இருக்கின்றான். மருதன் அவனுக்குப் புகழ் கிடைக்க வேண் டுமென்று செயல்படவில்லை. நீரில் மூழ்கும் அத்தனை பயிர்களையும் காப்பாற்ற வேண்டும்; ஊரினைச் சூழ்ந்திருக்கும் நீரினை வடிய விட வேண்டும் என்ற எண்ணமே அவனிடம் இருந்தது.

ஊருக்கு வழிகாட்டிய தலைமைப்பண்புடையவன் :
இரவு முழுவதும் தூக்கமில்லாமல் தவித்த மருதன் விடிவதற்குள் தனி ஒருவனாய் வடிவாய்க்காலில் இறங்கி இருபுறமும் சூழ்ந்திருந்த காட்டாமணக்குச் செடிகளை அரிந்து அப்புறப்படுத்தினான். இதனைக் கண்ட அவனது மனைவி அல்லியும் உதவிக்கு ஓடி வர,

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.4 முதல்கல்

வலைபோட்டுக் கொண்டிருந்த மாரிமுத்துவும் அவனுடன் இணைய, செலவு வந்திடுமே என்ற எண்ணத்தால் மகள் வீட்டிற்குச் செல்வதாகக் கூறி வில் வண்டியில் சென்று கொண்டிருந்த மிராசு 112 காளியப்பனும் வடிவாய்க்காலில் இறங்க ஊரே ஒன்றாகக் கூடிவந்து காட்டாமணக்குச் செடியை ஆர்வமாக அப்புறப்படுத்த மருதன், வழிகாட்டியாக விளங்கினான்.

முடிவுரை :
சுயநலம் இல்லாமல், பொதுநலனைக் கருத்தில் கொண்டு நாமே செயலில் இறங்கினால் வெற்றி பெறலாம் என்ற உயர்ந்த குணம் உடையவான மருதன் இருப்பதைக் காணலாம். நமக்கு :ஏன் வீண் வம்பு என்று ஒதுங்காமல் முதலில் நம்மால் முடிந்தததைச் செய்வோம் என்ற துணிவுடன் செயலில் இறங்கிய மருதன் தேர்வடத்தைப் பிடித்த முதல் கரமாக விளங்கினான்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.3 நெடுநல்வாடை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Tamil Guide Pdf Chapter 2.3 நெடுநல்வாடை Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 12th Tamil Solutions Chapter 2.3 நெடுநல்வாடை

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.3 நெடுநல்வாடை

Question 1.
தற்கால வாழ்க்கைமுறையில் மழை, குளிர் காலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவது குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
ஆசிரியர் : மாணவ – மாணவியருக்கு வணக்கம், இன்று, மழை மற்றும் குளிர்காலங்களில் ஏற்படும் பாதிப்புப் பற்றி உங்களோடு கலந்துரையாட வந்துள்ளேன்.

மாணவர்கள் : ஐயா! அறிந்துகொள்ள மிக ஆவலாக இருக்கிறோம்.

ஆசிரியர் : மிக்க மகிழ்ச்சி! சொல்கிறேன்.

மாணவர்கள் : உறுதியாக ஐயா! நாங்கள் உங்கள் அறிவுரைப்படியே நடந்து கொள்வோம் ஐயா!

ஆசிரியர் : நல்லது, அன்பு மாணவர்களே!

முதலாவதாக மழைக்காலப் பாதிப்பு :

  • மழைக்காலங்களில் மழை – ஆடை அணிந்து கொள்ளவில்லை என்றால் சளி, சுரம் இவைகளின் வாயிலாக உடல் பாதிப்புக்கு உள்ளாகும்.
  • வீட்டினைச் சுற்றி மேடான அமைப்பு இல்லை எனில் மழை நீர் தேங்கும். நீர்தேங்கினால் கொசுத்தொல்லை ஏற்படும் அபாயம் ஏற்படும்.
  • மழைக்காலத்தில் மின்கம்பங்களுக்கு அருகில் நிற்றல், மரங்களுக்குக் கீழே நிற்றல் போன்ற செயல்களாலும் பாதிப்பு மற்றும் ஆபத்து ஏற்படும்.
  • மொட்டை மாடியின் மேல் நீர்தேங்காமல் பாதுகாக்க வேண்டும், தேங்கினால் மேற்கூரை நீரினால் ஊறி வீடே இடிந்துவிழும் சூழல் ஏற்படும்.
  • குளிர்காலங்களில், தலைக்கு கம்பளி ஆடை, காதுக்கு அடைப்பானும் அணிய வேண்டும், இல்லையெனில் குளிர்க்காற்று காதில் புகுந்து காய்ச்சில், சளி தொந்தரவினை உண்டாக்கும். அதிகமான குளிர் சிறு குழந்தைகளுக்குச் சிறுசிறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.
  • எனவே, வருமுன்னர் காப்போம் என்னும் கூற்றுப்படி நம்மை நாமே காக்க முற்பட வேண்டும்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.3 நெடுநல்வாடை

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
பொருத்தக.
அ) குரங்குகள் – 1. கன்றுகளைத் தவிர்த்தன
ஆ) பசுக்கள் – 2. மரங்களிலிருந்து வீழ்ந்தன
இ) பறவைகள் – 3. குளிரால் நடுங்கின
ஈ) விலங்குகள் – 4. மேய்ச்சலை மறந்தன

அ) 1, 3, 4, 2
ஆ ) 3, 1, 2, 4
இ) 3, 2, 1, 4
ஈ) 2, 1, 3, 4
Answer:
ஆ ) 3, 1, 2, 4

Question 2.
‘பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென’ – தடித்த சொல்லின் இலக்கணக் குறிப்பு
அ) வினைத் தொகை
ஆ) உரிச்சொல் தொடர்
இ) இடைச்சொல் தொடர்
ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
Answer:
ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

குறுவினா

Question 1.
இனநிரை – பிரித்துப் புணர்ச்சி விதி எழுதுக.
Answer:
இனநிரை – இனம் + நிரை
‘மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் ஆகும்’ என்ற விதிப்படி, மவ்வீறு ஒற்றழிந்து ‘இனநிரை’ எனப் புணர்ந்தது.

சிறுவினா

Question 1.
வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?
Answer:

  1. வாடைக் காலத்தில் மேகம் மழையை வலப்பக்கமாகச் சூழ்ந்து பூமி குளிரும்படி மழைப் பெய்தது.
  2. தாழ்வான பகுதியில் வெள்ளம் பெருகிறது.
  3. கோவலர்கள் தாங்கள் மேயவிட்டிருந்த எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை மேடான நிலங்களுக்கு மாற்றினர்.
  4. பழகிய நிலத்தை விட்டுப் புது இடத்தை அடைந்ததால் வருந்தினர்.
  5. தண்ணீர் தாழ்வான பகுதியில் நிரம்பி விடும் என்பதால் பாதுகாப்பிற்காக மேடான பகுதிக்குச் சென்றனர். நீர்த்துளிகள் மேலே படுவதாலும், வாடைக்காற்றின் குளிர்ச்சி மிகுதியாலும் : உடலுக்குச் சூடேற்ற பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றினர்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.3 நெடுநல்வாடை

நெடுவினா

Question 1.
நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைச் சொல்லில் வடிக்க.
Answer:
(i) ஐப்பசி மாதம் அடை மழைக்காலம் என்பார்கள். பழந்தமிழர் ஐப்பசி, கார்த்திகை மாதங்களை கூதிர்ப்பருவம் என்று அழைத்தனர். பருவ மாற்றங்களால் உயிரினங்களின் இயல்பு வாழ்க்கை மாற்றம் பெறுகிறது.

(ii) முல்லை நில மக்கள், பறவைகள், விலங்குகள் இவற்றின் வாழ்வில் மழை குளிரால் ஏற்படும் தாக்கத்தினை நெடுநல்வாடை வருணனை செய்கிறது.

(iii) மேகம் தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாக சூழ்ந்து எழுந்தது. உலகம் குளிரும்படியாக மழைப் பொழிந்தது. மழை வெள்ளம் தாழ்வானப் பகுதியை நோக்கிச் சென்றது. வெள்ளத்தை வெறுத்த மக்கள் / வளைந்த கோலையுடைய ஆயர்கள் தம் நிரைகளை மேடான

(iv) பகுதியில் மேயவிட்டனர். மக்கள் தாம் பழகிய நிலத்தைவிட்டு வேறு இடம் சென்றதால் வருத்தம் அடைந்தனர். கோவலர்கள் சூடியிருந்த காந்தள் மாலை கசங்கியது. குளிரால் மக்கள் கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றினர், பற்கள் நடுங்கியது.

(v) விலங்குகள் குளிர் மிகுதியால் மேய்ச்சலை மறந்தன; குரங்குகள் நடுங்கின பறவைகள் நிலத்தில் விழுந்தன. பசுக்கள் பாலுண்ண வந்த கன்றுகளைத் தவிர்த்தன.

(vi) மலையையே குளிரச் செய்வன போன்று இருந்தது என்று நக்கீரர் மழைக்கால வருணனையினை நெடுநல்வாடையில் பதிவு செய்கிறார்.

இலக்கணக் குறிப்பு

வளைஇ – சொல்லிசை அளபெடை
பொய்யா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
புதுப்பெயல் – பண்புத்தொகை
கொடுங்கோல் – பண்புத்தொகை

உறுப்பிலக்கணம்

கலங்கி = கலங்கு + இ
கலங்கு – பகுதி
இ – வினையெச்ச விகுதி

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.3 நெடுநல்வாடை

புணர்ச்சி விதி

புதுப்பெயல் = புதுமை + பெயல்

  • ஈறுபோதல்’ என்ற விதிப்படி ‘மை’ கெட்டு புது + பெயல் என்றானது.
  • ‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதபமிகும்’ என்ற விதிப்படி ப் தோன்றி, புதுப்பெயல்’ எனப் புணர்ந்தது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
‘ஆர்கலி’ என்ற சொல்லின் பொருள்
அ) சூரியன்
ஆ) வெள்ளம்
இ) கடல்
ஈ) நிலா
Answer:
ஆ) வெள்ளம்

Question 2.
‘கலங்கி’ என்ற சொல்லின் சரியான பகுபத உறுப்பிலக்கண பிரிப்பு முறை
அ) கல+ங்+க்+இ
ஆ) கலங்கி +இ
இ) கலங்கு+க்+இ
ஈ) கலங்கு+இ
Answer:
ஈ) கலங்கு+இ

Question 3.
வாடைக்காற்று எந்தத் திசையில் இருந்து வீசும்?
அ) வடமேற்கு
ஆ) வடக்கு
இ) தென்கிழக்கு
ஈ) தெற்கு
Answer:
ஆ) வடக்கு

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.3 நெடுநல்வாடை

Question 4.
போர்மேற்சென்ற அரசன் குளிர்காலத்தில் தங்கும் படை வீடு
அ) கடவை
ஆ) சிவிரம்
இ) கூதிர்ப்பாசறை
ஈ) வீடாரம்
Answer:
இ) கூதிர்ப்பாசறை

Question 5.
ஆயர்கள் சூடியிருந்த மாலை
அ) குறிஞ்சி மாலை
ஆ) மல்லிகை மாலை
இ) வாகை மாலை
ஈ) காந்தள் மாலை
Answer:
ஈ) காந்தள் மாலை

Question 6.
‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ என்னும் விதிப்படி அமைந்த சொல்
அ) கொடுங்கோல்
ஆ) புதுப்பெயல்
இ) வலனேற்பு
ஈ) கண்ணுடைய
Answer:
இ) வலனேற்பு

Question 7.
‘மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்’ என்னும் விதிப்படி அமைந்த சொல்
அ) இனநிரை
ஆ) ஏறுடை
இ) புதுப்பெயல்
ஈ) கொடுங்கோல்
Answer:
அ) இனநிரை

Question 8.
‘வளைஇ’ – என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு
அ) மரூஉ
ஆ) சொல்லிசை அளபெடை
இ) இசைநிறையளபெடை
ஈ) இன்னிசையளபெடை
Answer:
ஆ) சொல்லிசை அளபெடை

Question 9.
வெற்றி பெற்ற அரசனும் வீரரும் சூடும் பூ
அ) காஞ்சி
ஆ) தும்பை
இ) வாகை
ஈ) வஞ்சி
Answer:
இ) வாகை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.3 நெடுநல்வாடை

Question 10.
கூற்று 1 : தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர்.
கூற்று 2 : கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றினர்.
அ) கூற்று இரண்டும் தவறு
ஆ) கூற்று 1 தவறு 2 சரி
இ) கூற்று இரண்டும் சரி
ஈ) கூற்று 1 சரி 2 தவறு
Answer:
இ) கூற்று இரண்டும் சரி

Question 11.
கூற்று : வளைந்த கோலையுடைய ஆயர் எருமை, பசு, ஆடு, ஆகிய நிரைகளை மேடான நிலங்களில் மேயவிட்டனர்.
விளக்கம் : உலகம் குளிருமாறு புதிய மழை பொழிந்ததால் தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தால் மேடான நிலம் சென்றனர்.
அ) கூற்று சரி விளக்கம் தவறு
ஆ) கூற்று தவறு விளக்கம் தவறு
இ) கூற்றும் விளக்கமும் சரி
ஈ) கூற்று தவறு விளக்கம் சரி
Answer:
இ) கூற்றும் விளக்கமும் சரி

Question 12.
சரியானதைத் தேர்க.
அ) வாகை – துறை
ஆ) கூதிர்ப்பாசறை – திணை
இ) கொடுங்கோல் – வளைந்த கோல்
ஈ) கண்ணி – கன்னம்
Answer:
இ) கொடுங்கோல் – வளைந்த கோல்

Question 13.
பொருந்தாததைத் தேர்க.
அ) புதுப்பெயல் – புதிய வயல்
ஆ) புலம்பு – தனிமை
இ) மா – விலங்கு
ஈ) கவுள் கன்னம்
Answer:
அ) புதுப்பெயல் – புதிய வயல்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.3 நெடுநல்வாடை

Question 14.
பொருந்தாததைக் தேர்க.
அ) புதுப்பெயல் – ஈறுபோதல், இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்.
ஆ) கொடுங்கோல் – ஈறுபோதல், இனமிகல்
இ) வலனேற்பு – உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்
ஈ) இனநிரை – மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்
Answer:
இ) வலனேற்பு – உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்

Question 15.
பொருத்துக.
அ) ஆர்கலி – 1. பெண் குரங்கு
ஆ) கவுள் – 2. தலையில் சூடும் மாலை
இ) மந்தி – 3. கன்ன ம்
ஈ) கண்ணி – 4. வெள்ளம்

அ) 3, 4, 1, 2
ஆ) 2, 1, 4,3
இ) 4, 3, 1, 2
ஈ) 4, 1, 3, 2
Answer:
இ) 4, 3, 1, 2

Question 16.
நெடுநல்வாடையை இயற்றியவர்
அ) கபிலர்
ஆ) பரணர்
இ) நக்கீரர்
ஈ) மோசிகீரனார்
Answer:
இ) நக்கீரர்

Question 17.
நெடுநல்வாடையின் பாட்டுடைத் தலைவன்
அ) சோழன் கரிகாலன்
ஆ) சேரன் செங்குட்டுவன்
இ) பாண்டியன் நெடுஞ்செழியன்
ஈ) பறம்புமலை பாரி
Answer:
இ) பாண்டியன் நெடுஞ்செழியன்

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.3 நெடுநல்வாடை

Question 18.
நக்கீரரின் தந்தை
அ) மதுரைக் கணக்காயனார்
ஆ) மாங்குடி மருதனார்
இ) வெள்ளைக்குடி நாகனார்
ஈ) இவர்களில் எவழருமிலர்
Answer:
அ) மதுரைக் கணக்காயனார்

Question 19.
நெடுநல்வாடை …………. நூல்ளுள் ஒன்று.
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) பதினெண்கீழ்க்கணக்கு
ஈ) நீதி
Answer:
ஆ) பத்துப்பாட்டு

Question 20.
நெடுநல்வாடை ……………. அடிகளைக் கொண்டது.
அ) 144
ஆ) 150
இ) 188
ஈ) 196
Answer:
இ) 188

Question 21.
நெடுநல்வாடை அமைந்துள்ள பா
அ) வெண்பா
ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா
ஈ) விருத்தப்பா
Answer:
ஆ) ஆசிரியப்பா

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.3 நெடுநல்வாடை

Question 22.
கலங்கி – இச்சொல்லைப் பிரிக்கும் முறை
அ) கல + ங் + க் + இ
ஆ) கலங்கு + இ
இ) கலங்கு + க் + இ
ஈ) கல + க் + க் + இ
Answer:
ஆ) கலங்கு + இ

Question 23.
புதுப்பெயர் – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி விதிகளைக் கண்டறிக.
i) ஈறுபோதல்
ii) முன்நின்ற மெய் திரிதல்
iii) இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்.

அ) i, ii சரி
ஆ) ii, iii சரி
இ) மூன்றும் சரி
ஈ) i, iii சரி
Answer:
ஈ) i, iii சரி

Question 24.
கூதிர்ப்பருவத்திற்குரிய மாதங்கள்
அ) தை, மாசி
ஆ) பங்குனி, சித்திரை
இ) ஐப்பசி, கார்த்திகை
ஈ) மார்கழி, தை
Answer:
இ) ஐப்பசி, கார்த்திகை

Question 25.
கண்ணி என்பது
அ) கழுத்தில் அணியும் மாலை
ஆ) தலையில் சூடும் மாலை
இ) கையில் அணியும் அணிகலன்
ஈ) காலில் அணியும் தழல்
Answer:
ஆ) தலையில் சூடும் மாலை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.3 நெடுநல்வாடை

Question 26.
கூதிர்ப் பாசறை என்பது
அ) போர்மேற் சென்ற அரசன் குளிர்காலத்தில் தங்கும் படைவீடு
ஆ) போர்மேற் சென்ற அரசன் தோற்றுப் பதுங்கும் படைவீடு
இ) தலைவனும் தலைவியும் குளிர்காலத்தில் தங்கும் வீடு
ஈ) போரில் காயம் அடைந்த மன்னன் சிகிச்சை பெறுமிடம்
Answer:
அ) போர்மேற் சென்ற அரசன் குளிர்காலத்தில் தங்கும் படைவீடு

Question 27.
ஆயர் ………… மாலையைத் தலையில் சூடியிருந்தனர்.
அ) அத்தி
ஆ) முல்லை
இ) காந்தள்
ஈ) குறிஞ்சி
Answer:
இ) காந்தள்

Question 28.
முல்லை நிலத்தில் குளிரால் நடுங்கியவை
அ) பறவைகள்
ஆ) குரங்குகள்
இ) பசுக்கள்
ஈ) எருதுகள்
Answer:
ஆ) குரங்குகள்

Question 29.
‘மா’ என்பதன் பொருள்
அ) பறவை
ஆ) விலங்கு
இ) வானம்
ஈ) பூமி
Answer:
ஆ) விலங்கு

Question 30.
கன்றுகோள் ஒழியக் கடிய வீசி
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள்
இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள இலக்கிய நயம்

அ) எதுகை
ஆ) இயைபு
இ) முரண்
ஈ) அந்தாதி
Answer:
அ) எதுகை

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.3 நெடுநல்வாடை

குறுவினா

Question 1.
‘நெடுநல்வாடை’ – பொருள் விளக்கம் தருக.
Answer:

  1. தலைவனைப் பிரிந்த தலைவிக்குத் துன்ப மிகுதியால் நெடுவாடை (நீண்ட வாடை)யாக இருந்தது.
  2. போர்ப்பாசறையில் இருந்த தலைவனுக்கு வெற்றி பெற ஏதுவான நல்வாடையாக இருந்தது.

Question 2.
நக்கீரர் பற்றிய சிறுகுறிப்பு வரைக.
Answer:

  • மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரர்.
  • அகநானூற்றில் 17 பாடல்கள், குறுந்தொகையில் 8 பாடல்கள், நற்றிணையில் 7 பாடல்கள், புறநானூற்றில் 3 பாடல்கள் பாடியுள்ளார்.
  • இறையனார் களவியலுக்குச் சிறந்த உரைதந்தவர்.
  • கபிலர், பரணர் காலத்தவர்.
  • 188 அடிகளை உடையை ‘நெடுநல்வாடை’ என்ற நூலை இயற்றியவர்.

Question 3.
‘வாகைத்திணை’ விளக்குக.
Answer:

  1. வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமாக வாகைப்பூவைச் சூடுவதாகும்.
  2. தாங்கள் பெற்ற வெற்றியைக் கொண்டது வாகைத்திணை.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.3 நெடுநல்வாடை

Question 4.
‘கூதிர்ப்பாசறை’ என்றால் என்ன?
Answer:
கூதிர்ப்பாசறை என்பது போர்மேற்கொண்ட அரசன் குளிர்காலத்தில் தாங்கும் படைவீடாகும்.

Question 5.
கூதிர்பருவம் என்பது யாது?
Answer:
ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் கூதிர்ப்பருவமாகும்.

Question 6.
குளிரினைப் போக்க கோவலர்கள் என்ன செய்தார்கள்?
Answer:
கோவலர்கள் பலரும் கூடிக் கொள்ளி நெருப்பினில் கைகளைக் காட்டி சூடாக்கி குளிரினைப் போக்க முயற்சித்தார்கள்.

சிறுவினா

Question 1.
கூதிர் காலத்தின் தன்மையான நெடுநல்வாடை குறிப்பிடுபவை யாவை?
Answer:

  • விலங்குகள் மேய்ச்சலை மறந்தன.
  • பெண் குரங்குகளின் உடல் குளிரால் கூனிப் போயின.
  • பறவைகள் குளிரால் நடுங்கி மரத்தின் மீதிருந்து கீழே விழுந்தன.
  • பால் குடிக்க வரும் கன்றுகளைப் பசுக்கள் உதைத்துத் தள்ளின.
  • குன்றே குளிர்ந்தது போல கூதிர்காலத்தின் தன்மை இருந்தது.

Question 2.
வாகைத் திணை சான்றுடன் விளக்குக.
Answer:
திணை விளக்கம்:
வெற்றிபெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமாக வாகைப் பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவது வாகைத் திணையாகும்.

சான்று:
வையகம் பணிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென….
– என்ற நெடுநல்வாடைப் பாடல்.

பொருத்தம்:
வாடைக் காலத்தில் மேகம் மழையை வலப்பக்கமாகச் சூழ்ந்து பூமி குளிரும்படி மழைப் பெய்தது. வாடைக்காற்றின் குளிர்ச்சி மிகுதியாலும் உடலுக்குச் சூடேற்ற பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றினர். அவர்களோடு மன்னனும் பாசறையில் குளிர்காலத்தில் வெற்றியைக் கொண்டாடினான்.

Samacheer Kalvi 12th Tamil Guide Chapter 2.3 நெடுநல்வாடை

Question 3.
‘கூதிர்ப்பாசறை’ துறையைச் சான்றுடன் விளக்குக.
Answer:
துறை விளக்கம்:
கூதிர்ப்பாசறை என்பது போர்மேற்கொண்ட அரசன் குளிர்காலத்தில் தாங்கும் படைவீடாகும்.

சான்று:
வையகம் பணிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென…
– என்ற நெடுநல்வாடைப் பாடல்.

பொருத்தம்:
வாடைக் காலத்தில் மேகம் மழையை வலப்பக்கமாகச் சூழ்ந்து பூமி குளிரும்படி மழைப் பெய்தது. வாடைக்காற்றின் குளிர்ச்சி மிகுதியாலும் உடலுக்குச் சூடேற்ற பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றினர். அவர்களோடு போர்மேற் சென்ற அரசன் குளிர்காலத்தில் தங்கும் படைவீடு கூதிர்ப்பாசறை.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.2 பிள்ளைக்கூடம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 4.2 பிள்ளைக்கூடம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 4.2 பிள்ளைக்கூடம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.2 பிள்ளைக்கூடம்

Question 1.
குறுவினா இங்கே ஐம்பதாண்டு வேம்பு
கோடையில் கொட்டும் பூக்களை
எண்ணச் சொல்கிறார்கள் – எண்ணச் சொல்கிறவர்கள் யார்? எண்ணுபவர்கள் யார்?
Answer:

  • எண்ணச் சொல்கிறவர்கள் : தாய்மொழியில் கற்பிப்போர்.
  • எண்ணுபவர்கள் : தாய்மொழியில் கற்போர்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.2 பிள்ளைக்கூடம்

கூடுதல் வினாக்கள்

Question 2.
இரா. மீனாட்சியின் கவிதைத் தொகுப்புகள் யாவை?
Answer:
நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளிப்பகல், மறுபயணம், வாசனைப்புல், உதய காலிருந்து, கொடிவிளக்கு என்பன, இரா. மீனாட்சியின் கவிதைத் தொகுப்புகளாகும்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.2 பிள்ளைக்கூடம்

Question 3.
பிள்ளைகள் எவற்றினைப்போல் நடக்க, இசைக்க, பறக்கவேண்டுமெனப் பிள்ளைக்கூடக் கவிதை கூறுகிறது?
Answer:
பிள்ளைகள், காலையில் மயிலுடன் நடக்க வேண்டும்; மாமன் குயிலுடன் கூவி இசைக்க வேண்டும். வண்ணத்துப் பூச்சிகளுடன் பறக்கவேண்டுமெனப் பிள்ளைள்க்கூடக் கவிதை கூறுகிறது.

சிறுவினா (கூடுதல்)

Question 1.
இரா. மீனாட்சி குறித்துக் குறிப்பெழுதுக.
Answer:
புதுச்சேரியில் ‘ஆரோவில்’ என்னும் இடத்தில் இரா. மீனாட்சி வாழ்கிறார். ஆசிரியப் பணியிலும், கிராம மேம்பாட்டிலும் ஈடுபட்டுள்ளார். நெருஞ்சி, சுடுபூக்கள், தீபாவளிப்பகல், மறுபயணம், வாசனைப் புல், உதயநகரிலிருந்து, கொடிவிளக்கு என்னும் கவிதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார்.

பாடமாக அமைந்த கவிதை, கொடிவிளக்கு’ நூலிலிருந்து தேர்வு செய்யப் பெற்றுள்ளது. இயற்கையோடு இயைந்த கல்வியை வரவேற்று, அதனால் கிடைக்கும் மகிழ்வைக் கவிதையாக்கி அளித்துள்ளார்.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.2 பிள்ளைக்கூடம்

இலக்கணக்குறிப்பு

கற்பிக்கும் – பெயரொம்
பறந்து, நடக்க, இசைக்க, வீழ்ந்து – வினையெச்சங்கள்

உறுப்பிலக்கணம்

1. விழந்து – வீழ் + த் (ந்) + த் + உ
ஓழ் – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
‘உ – வினையெச்ச விகுதி.

2. பறந்து – பற + த் (ந்) + த் + உ
பற – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
உ – வினையெச்ச விகுதி.

3. பயின்று – பயில் (ன்) + p + உ
பயில் – பகுதி, ‘ல்’ ‘ன்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
உ – வினையெச்ச விகுதி.

4. விரும்புகின்றேன் – விரும்பு + கின்று + ஏன்
விரும்பு – பகுதி, கின்று – நிகழ்கால இடைநிலை, ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.2 பிள்ளைக்கூடம்

புணர்ச்சி விதிகள்

1. பள்ளிக்கூடம் – பள்ளி + கூடம்
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (பள்ளிக்கூடம்)

2. ஐம்பதாண்டு – ஐம்பது + ஆண்டு
“உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” (ஐம்பத் + ஆண்டு)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (ஐம்பதாண்டு)

3. தட்டுக்கூடை – தட்டு + கூடை
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசபத மிகும்” (தட்டுக்கூடை)

4. சர்க்கரைப் பண்டம் – சர்க்கரை + பண்டம்
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (சர்க்கரைப்பண்டம்)

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.2 பிள்ளைக்கூடம்

5. குறுஞ்செடி – குறுமை + செடி
“ஈறுபோதல்” (குறு + செடி); “இனமிகல்” (குறுஞ்செடி)

பலவுள் தெரிக (கூடுதல்)

Question 1.
கீழ்உள்ளவற்றைப் பொருத்தி விடை காண்க.
அ. கொட்டும் பூக்களை – 1. குறிக்கச் சொல்கிறார்கள்,
ஆ. தியானிக்கும் நேரத்தை – 2. ஓவியமாகத் தீட்டச் செய்கிறார்கள்
இ. எறும்புகளின் வேகத்தை – 3. கவிதை எழுதச் சொல்கிறார்கள்
ஈ. மழைத்துளிகளின் வடிவத்தை – 4. எண்ணச் சொல்கிறார்கள்
– 5. அளக்கச் சொல்கிறார்கள்
1. அ – 2, ஆ – 1, இ – 4, ஈ – 3.
2. அ – 1 , ஆ – 3, இ – 5, ஈ – 2.
3. அ – 3, ஆ – 2, இ – 1, ஈ – 5.
4. அ – 4, ஆ – 1, இ – 5, ஈ – 2.
Answer:
அ – 2, ஆ – 1, இ – 4, ஈ – 3.

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 4.2 பிள்ளைக்கூடம்

Question 2.
சரியான விடையைத் தெரிவு செய்க
‘பிள்ளைக்கூடம்’ என்னும் கவிதை இடம்பெற்ற நூல்……………….
அ) சுடுபூக்கள்
ஆ) கொடிவிளக்கு
இ) மறு பயணம்
ஈ) வாசனைப்புல்
Answer:
ஆ) கொடிவிளத்து

Question 3.
பிள்ளைக்கூடம்’ என்னும் கவிதையை எழுதியவர் ………………..
அ) மீ. ராசேந்திரன்
ஆ) இரா. மீனாட்சி
இ) அழகிய பெரியவன்
ஈ) சு. வில்வரத்தினம்
Answer:
ஆ) இரம் மீனாட்சி